ஸ்ரீ சுஸ்வாணி மாதா ஜெயின் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி
இரண்டாம் பருவம் _ தமிழ் (006)
திருப்புதல் தேர்வு – SET A
நாள்: 07/03/2022 மதிப்பெண்: 40
வகுப்பு: 10 காலளவு: 2,மணிநேரம்
I.பின்வரும் இலக்கண வினாக்களுள் நான்கனுக்கு மட்டும் விடையளிக்க
4×2=8
1.அகத்திணை என்றால் என்ன? எத்தனை வகைப்படும்?
2.ஐந்திணைக்குரிய பொழுதுகளை எழுதுக?
3. வினா எத்தனை வகைப்படும் ? அவை யாவை?
4.பொருள்கோள் என்றால் என்ன? எத்தனை வகைப்படும்?
5.பால் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
6. வழு என்றால் என்ன? எத்தனை வகைப்படும்?
7.மருதத்திற்குரிய கருப்பொருள் நான்கினை எழுதுக
II.பின்வரும் செய்யுள் வினாக்களுள் மூன்றனுக்கு மட்டும் விடையளிக்க: 3×3=9
8. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக பாவித்து செங்கீ ரை பாடிய நயத்தை
விளக்குக?
9. சரயு ஆறு எங்கெல்லாம் பரவி பாய்கிறது?
10.;குலசேகராழ்வார் வித்துவக்கோட்டம்மாவிடம் என்ன வேண்டுகிறார்?
11.பேரண்டத் தோற்றத்தினை பரிபாடல் வழி விளக்குக?
12.அமைச்சர்க்குரிய இலக்கணங்கள் யாவை?
III.பின்வரும் உரைநடை வினாக்ளுள் இரண்டுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:
2×2=4
13. கரகாட்டம் என்றால் என்ன?அது எவ்வாறு செய்யப்படுகிறது?
14.நிகழ்கலை என்றால் என்ன? அதன் வடிவங்கள் யாவை?
15. மெய்நிகர் உதவியாளரின் பயன்கள் யாவை?
16.மொழிபெயர்ப்பு குறித்து மு.கு. ஜகந்நாத ராஜா கூறுவது யாது?
IV.பின்வரும் உரைநடை வினாக்களுள் ஒன்றனுக்கு மட்டும் விரிவாக விடையளிக்க:
1×5=5
17. எதிர்காலத்தில் ரோபோக்களின் செயல்பாடுகள் யாவை?
18. மொழிபெயர்ப்பு கல்வி விளக்குக?
V.பின்வரும் துணைப்பாடத் தலைப்புகளுள் ஒன்றனுக்கு மட்டும் விடையளிக்க: 1×5=5
19. புதிய நம்பிக்கை
(அல்லது)
20.விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை
VI.பின்வரும் பத்தியை மூன்றில் ஒரு பகுதியாக சுருக்கி எழுதுக : 1×4=4
1876, 1877, 1878 ஆகிய ஆண்டுகளில் தென்னிந்தியப் பகுதிகளில் ஏற்பட்ட மிகக்
கொடிய பஞ்சத்தை தாதுவருடப் பஞ்சம் என்று இன்றும் நினைவு கூறுவர். ஒரு கோடி மக்கள் பஞ்சத்தின் பிடியில் சிக்கி இறந்திருக்கலாம் எனப் பதிவுகள் கூறுகின்றன. இதைக் கண்டு
மனம் பொறுக்காத தமிழர் ஒருவர் மனமுவந்து தமது சொத்துகள் அனைத்தையும்
கொடையளித்தார். இதனைப் போற்றும் விதமாக கோபால கிருஷ்ண பாரதியார் “ நீயே புருஷமேரு....” என்ற பாடலை இயற்றி அவரைப் பெருமைப்படுத்தினார். அவர்தான் நீதிபதி மாயூரம் வேதநாயகம். அவர் மொழிபெயர்ப்பாளராகவும் நாவலாசிரியராகவும் பெயர்பெற்றவர். தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தை இயற்றியவர். மாயவரத்தின் நகர்மன்றத் தலைவராகவும் பணியாற்றிய அவர் தமது சமகாலத் தமிழறிஞர்களான மகாவித்வான் மீ னாட்சி சுந்தரனார் , இராமலிங்க வள்ளலார்
முதலான தமிழறிஞர்களிடம் நட்பு பாராட்டினார். 1826 முதல் 1889 வரை வாழ்ந்த
மாயூரம் வேதநாயகம் கி.பி. 1805 முதல் 1861 ஆம் ஆண்டு வரை ஆங்கிலத்தில் இருந்த நீதிமன்றத் தீர்ப்புகளை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்தது. “ சித்தாந்த சங்கிரகம்” என்ற நூலாக வெளியிட்டார். மேலும் பெண் கல்விக்கு குரல் கொடுத்த பெண்மதி மாலை என்ற நூலை வெளியிட்டார். இசையிலும் வணை ீ வாசிப்பதிலும் வல்லவராக திகழ்ந்த இவர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கீ ர்த்தனைகளை இயற்றியிருக்கிறார். அவர் பெண்கல்விக்கு குரல்கொடுத்த மிக முக்கிய ஆளுமையாக அறியப்படுகிறார்.
VII.பின்வரும் கடிதங்களும் ஒன்றனுக்கு மட்டும் விடையளிக்க: 1×5=5
உங்கள் பகுதிக்கு பேருந்து நிறுத்தம் அமைத்து தரும்படி மாவட்ட ஆணையருக்கு
விண்ணப்பம் எழுதுக?
(அல்லது)
விடுதியில் தங்கி படிக்கும் உனது கல்வி கட்டணத்தை அனுப்பி வைக்குமாறு உனது
பெற்றோருக்கு கடிதம் எழுதுக?
# கண்ணன்/ கண்மணி, எண் 15 ,காவேரி நகர் மந்தைவெளி சென்னை _13 எனக்