Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 19

É#aghuj«

Ä‹dQ âd ïjœ (jÅ¢R‰W) VIJAYABHARATHAM DAILY


Rg»UJ, kh®fÊ - 02 rÅ 17.12.2022 ky® - 3, ïjœ - 255

அய�ோத்தி மெகா திட்டம் 2031


அய�ோத்தியில் பிரமாண்டமாக
ஸ்ரீராமர் க�ோயிலின் கட்டுமானப்
பணிகள் வேகமாக நடந்து
வருகின்றன.இந்த க�ோயிலை
சுற்றி 500 மீட்டர் சுற்றளவை
தடை செய்யப்பட்ட பகுதியாக
அய�ோத்தி மேம்பாட்டு ஆணையம்
vijayabharatham.org
அறிவித்து உள்ளது. இதுகுறித்து
பேசிய அய�ோத்தி மேம்பாட்டு ஆணையத்தின் துணைத்தலைவர்
விஷால் சிங், "அய�ோத்தி மெகா திட்டம் 2031'ன்படி ஸ்ரீராமர்
க�ோயிலை சுற்றியுள்ள 500 மீட்டர் சுற்றளவு பகுதிகள் ஹிந்து மத
சடங்குகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். வர்த்தகம் உள்ளிட்ட
பிற நடவடிக்கைகளுக்கு அனுமதியில்லை.ஸ்ரீராம ஜென்மபூமியின்
பாதுகாப்பு மற்றும் ஸ்ரீராமர் க�ோயிலின் புனிதத்தன்மையை கருத்தில்
க�ொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த பகுதியில்
கட்டப்படும் கட்டடங்களின் அதிகபட்ச உயரம் 7.5 மீட்டராக
மட்டுமே இருக்க வேண்டும்.நீர்த்தேக்கங்கள், குளங்கள், பிற நீர்
ஆதாரங்கள், வடிகால் ஆதாரங்களின் பாதுகாப்பும் இந்த மெகா
திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.எனவே, அத்தகைய இடங்களில்
ஆறு மீட்டர் சுற்றளவில் எந்த கட்டுமானத்துக்கும் அனுமதியில்லை"
என்று தெரிவித்தார்.

நமாமி கங்கேவுக்கு ஐ.நா அங்கீகாரம்


கங்கை நதியை புதுப்பிக்கும்
பாரதத்தின் 'நமாமி கங்கை'
முன்முயற்சியை ஐ.நா அங்கீகரித்துள்ளது
இயற்கை உலகத்தை புதுப்பிக்கும்
உலகின் முதல் பத்து மறுசீரமைப்பு
செயல்பாடுகளில் ஒன்றாக இதனை vijayabharatham.org
ஐ.நா சபை அங்கீகரித்துள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள 70
நாடுகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட இத்தகைய முயற்சிகளில்
இருந்து நமாமி கங்கே முதல் 10 செயல்பாடுகளில் ஒன்றாக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 14 அன்று கனடாவின்
மாண்ட்ரீலில் நடந்த பல்லுயிர் பெருக்கத்திற்கான மாநாட்டின் (சி.
பி.டி) விழாவில் நமாமி கங்கே திட்டத்தின் இயக்குநர் ஜி அச�ோக்
இந்த விருதைப் பெற்றார். ஐ.நா சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) மற்றும்
ஐ.நா உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆகியவற்றால்
ஒருங்கிணைக்கப்பட்ட உலகளாவிய இயக்கமான சுற்றுச்சூழல்
அமைப்பு, மறுசீரமைப்புக்கான ஐ.நா தசாப்தத்தின் பதாகையின் கீழ்
இந்த முயற்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதனையடுத்து, நமாமி
கங்கே உட்பட அங்கீகரிக்கப்பட்ட இந்த முன்முயற்சிகள், ஐ.நா.
வின் ஆதரவு, நிதி, த�ொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பெற தகுதி
பெறுகின்றன.
1
ஆயுதப்படையினருக்கு மரியாதை
1971ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு
எதிரான ப�ோரில் பாரதம் மகத்தான
வெற்றியை அடைந்ததை
குறிக்கும் 'விஜய் திவஸ்' என்ற
வெற்றி தினம் நேற்று பாரதம்
எங்கும் க�ொண்டாடப்பட்டது.நமது
vijayabharatham.org
ராணுவ வீரர்களின் துணிச்சல்,
வீரம், நாட்டுப்பற்று, தியாகம் ப�ோன்றவை நினைவு கூரப்பட்டன.
இந்நிலையில், வெற்றி தினத்தை முன்னிட்டு துணிச்சல் மிக்க
நமது தெசத்தின் அனைத்து ஆயுதப்படையினருக்கும் பிரதமர்
நரேந்திர ம�ோடி மரியாதை செலுத்தியுள்ளார். இது குறித்து பிரதமர்
வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “விஜய் திவஸ் தினத்தைய�ொட்டி,
1971ம் ஆண்டு ப�ோரில் பாரதம் மகத்தான வெற்றியை அடைவதை
உறுதி செய்த துணிச்சல் மிக்க அனைத்து ஆயுதப்படையினருக்கும்
நான் மரியாதை செலுத்துகிறேன். நமது நாட்டை பாதுகாப்பாக
வைத்திருப்பதற்காக ஆயுதப்படையினருக்கு நாடு எப்போதும்
நன்றிக்கடன் பட்டிருக்கும்” என தெரிவித்துள்ளார்.

ப�ொன். மாணிக்கவேல் புகார்


காஞ்சிபுரம் அருகே உள்ள
பாலுசெட்டிசத்திரம் காவல்
நிலையத்துக்கு ஸேண்ரா
ஓய்வுபெற்ற சிலை கடத்தல் தடுப்பு
பிரிவு சிறப்பு அதிகாரி ப�ொன்.
மாணிக்கவேல்,“காஞ்சிபுரம் அருகே
க�ோவிந்தவாடி திருமால்புரத்தில் vijayabharatham.org

இருந்த கிபி 1,071ம் வருட பழமையான நின்று அருளிய பெருமாள்


உய்யக்கொண்ட ஆழ்வார் க�ோயிலை காணவில்லை” என்று புகார்
தெரிவித்துள்ளார்.
பிறகு இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"காஞ்சிபுரம் அருகே ஒரு பெருமாள் க�ோயிலே திடுடு ப�ோயுள்ளது.
அது நமது மண்ணில் இருந்தே காணாமல் ப�ோய்விட்டது.1071ம்
ஆண்டு கட்டப்பட்ட பராந்தகத் தேவர் என்ற ச�ோழர்காலத்தை
சேர்ந்த இந்த க�ோயி ல், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை
வழிபாட்டில் இருந்துள்ளது.பின்னர் க�ோயில் சீரமைப்பு என்ற
பெயரில் அந்தக் க�ோயில் முழுவதுமாக களவாடப்பட்டுள்ளது.
சீரமைப்பு என்ற பெயரில் இந்தக் க�ோயிலில் இருந்த கல்வெட்டுகள்,
சிலைகள் எல்லாம் வெளியே க�ொண்டு செல்லப்பட்டன.அதன்
பின்னர் அவை திரும்பி வரவில்லை என்று இங்குள்ள பெரியவர்கள்
தெரிவிக்கின்றனர்.இந்தக் க�ோயில் த�ொடர்பான கல்வெட்டு 1906ல்
ஐர�ோப்பிய கிறிஸ்தவ ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு
ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இப்படி, திருப்பணி என்ற பெயரில் க�ோயில் களவாடப்பட்டதை
அதிகாரிகள் காவல் நிலையத்துக்கு தெரிவிக்காமல் இருப்பது
தண்டனைக்குரிய குற்றம்.எனவே இது குறித்து சிலை திருட்டு
தடுப்பு பிரிவு பிரிவை சேர்ந்த உயர் அதிகாரிகள் விசாரணை செய்து
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறினார்.
2
மலேசியா பறக்கும் நாமக்கல் முட்டைகள்
மலேசியாவில் நிலவி வரும் முட்டை
தட்டுப்பாட்டை சமாளிக்க உதவுமாறு
க�ோலாலம்பூரில் உள்ள பாரதத் தூதரகத்திடம்
மலேசிய விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு
அமைச்சர் க�ோரிக்கை விடுத்திருந்தார். இந்த
க�ோரிக்கையின் அடிப்படையில், மலேசியாவில்
முட்டை தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதமாக
பாரதத்தில் இருந்து முட்டை இறக்குமதி
செய்யும் மலேசிய அரசின் வேண்டுக�ோளை
க�ோலாலம்பூரில் உள்ள பாரதத் துணைத்
தூதர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார்.
vijayabharatham.org
இதையடுத்து வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்
ப�ொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (அபேடா) மற்றும்
விலங்குத் தனிமைப்படுத்தல் மற்றும் சான்றிதழ் சேவைகள்
(ஏ.கியு.சி.எஸ்) சான்றிதழ் செயல்முறையை விரைவுபடுத்தியது.
இதையடுத்து நாமக்கல்லில் இருந்து மலேசியாவிற்கு
முதன்முறையாக முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டது.திருச்சி விமான
நிலையத்திலிருந்து சுமார் 90 ஆயிரம் முட்டைகள் விமானத்தில்
ஏற்றப்பட்டுமலேசியாவில் தரையிறங்கியது.இந்த முட்டைகள்
மலேசியாவில் ச�ோதனைக்கு பிறகு அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுமதி
த�ொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரியலூரில் விவசாயி பலியான வழக்கு


அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம்
காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட
ஒரு வழக்கு த�ொடர்பாக அருண்குமார்
என்பவரை தேடி, கடந்த நவம்பர் 25ம் தேதி
காசங்கோட்டையைச் சேர்ந்த விவசாயி
vijayabharatham.org
செம்புலிங்கத்தின் வீட்டுக்குள் அத்துமீறி
நுழைந்த காவலர்கள், அங்கு செம்புலிங்கம் மற்றும் அவரது
குடும்பத்தினரை கடுமையாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த
செம்புலிங்கம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,
சிகிச்சை பலனின்றி டிசம்பர் 8ம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து
செம்புலிங்கத்தின் உறவினர் கார்த்திகேயன் சென்னை உயர்
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.அதில், "மாநில
காவல்துறை சம்பந்தப்பட்டுள்ள இந்த வழக்கை அவர்களே
விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே உண்மையை
வெளிச்சத்துக்கு க�ொண்டு வர இந்த விசாரணையை சி.பி.ஐக்கு
மாற்ற வேண்டும்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தப�ோது
செம்புலிங்கத்திடம் பெற்ற வாக்குமூலத்துக்கு முரணாக வேறு
வாக்குமூலத்தை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.இதேப�ோல
அவர்கள் பிரேதப் பரிச�ோதனை அறிக்கையையும் திரிக்கும்
வாய்ப்புள்ளதால் தடயவியல் மருத்துவ துறை நிபுணர்கள் மூலம்
பிரேத பரிச�ோதனை செய்ய வேண்டும்.அதை வீடிய�ோ பதிவு
செய்யவும் உத்தரவிட வேண்டும்" என்று க�ோரியிருந்தார்.இந்த
வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில்
ஆஜரான வழக்கறிஞர், "சந்தேக மரணம் என்ற பிரிவில்தான் வழக்குப்
பதிவு செய்யப்பட்டுள்ளது.உதவி ஆய்வாளர்தான் விசாரணையை
3
நடத்தி வருகிறார்" என்று தெரிவித்தார்.ஆனால் காவல் துறை தரப்பு
வழக்கறிஞர், "விசாரணையில் முன்னேற்றம் உள்ளது.உரிய முறையில்
விசாரணை நடத்தப்படும்" என உறுதியளித்தார்.செம்புலிங்த்தின்
பிரேதப் பரிச�ோதனை அறிக்கையையும் தாக்கல் செய்தார்.
இதையடுத்து நீதிபதி, "இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள
காவலர்கள் விசாரணை குழுவில் இடம் பெறக்கூடாது என்ப உறுதி
செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

ஆவின் நெய் விலை உயர்வு


ஆவின் பால் விலையை
சமீபத்தில் உயர்த்திய தமிழக அரசு,
தற்போது நெய்யின் விலையையும்
லிட்டருக்கு ரூ.50 உயர்த்தியுள்ளது.
புதிய விலை உயர்வின் படி, ஒரு
லிட்டர் நெய் ரூ.580ல் இருந்து,
vijayabharatham.org
ரூ.630 ஆக உயர்ந்துள்ளது.
அதேப�ோல 100 மி.லி, 200 மி.லி, 500 மி.லி, 5 லிட்டர் என அனைத்தின்
விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு
தான் நெய் விலை உயர்த்தப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில்
இரண்டாவது முறையாக நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது.இந்த
விலையேற்றம் நேர்று முதல் அமலுக்கு வந்தது.இது மக்களை
அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

திருமதிகார்ட் செயலி பயிற்சி


திருமதிகார்ட் (ThirumathiKart), திருமதிகார்ட் விற்பனையாளர்,
திருமதிகார்ட் வாங்குபவர் மற்றும் திருமதிகார்ட் லாஜிஸ்டிக்ஸ்
ப�ோன்ற மின் வணிக ம�ொபைல் பயன்பாடுகளின் மேம்படுத்தப்பட்ட
ப தி ப் பு க ளை தி ரு ச் சி ர ாப்ப ள் ளி
என்.ஐ.டி கல்வி நிறுவனம்
உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின்
முக்கிய ந�ோக்கம் வாடிக்கையாளரை,
சுயஉதவி குழுக்கள்மற்றும் பெண்
த�ொழில் முனைவ�ோர்களுடன்
இணைப்பது. தனிப்பயனாக்கப்பட்ட
அ ல ை பே சி ப யன்பா டு , vijayabharatham.org
கைவினைப்பொருட்கள், ஆடைகள், அழகுசாதனப் ப�ொருட்கள்
மற்றும் வீட்டுப் ப�ொருட்கள் ப�ோன்ற வளர்ந்த தயாரிப்புகளை
வாடிக்கையாளருக்கு எளிதாகவும் திறமையாகவும் வழங்குகிறது.
மேலும், திருமதிகார்ட் டெலிவரி செயலி மூலம், சுய உதவி பெண்கள்
மற்றும் பெண் த�ொழில்முனைவ�ோர், வாடிக்கையாளர்களுக்கு
தயாரிப்புகளை வழங்குவதற்கான வேலைவாய்ப்பைப்
பெறுகின்றனர். பதிவுசெய்யப்பட்ட சுயஉதவி குழு மற்றும்
பெண் த�ொழில்முனைவ�ோர் திருமதிகார்ட் விற்பனையாளர்
விண்ணப்பத்தின் மூலம் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதன்
மூலம் தங்கள் நிறுவனங்களை நிறுவுவார்கள். சுய உதவிக்குழுக்கள்
மற்றும் பெண் த�ொழில்முனைவ�ோர் இதனை திறம்பட பயன்படுத்த
ஏதுவாக திருச்சிராப்பள்ளி மகளிர் திட்ட அலுவலகத்தில்
பதிவு செய்யப்பட்ட சுயஉதவிக்குழுக்கள் மற்றும் பெண்
த�ொழில்முனைவ�ோருக்கு, "திருமதிகார்ட் (இ-வீட்) மூலம்
4
பெண்களின் ப�ொருளாதார மேம்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தல்"
என்ற தலைப்பில் டிசம்பர் 19 முத்ல் 23 வரை, ஜனவரி 23 முதல்
27 வரை, பிப்ரவரி 13 முதல் 17 வரை என ஐந்து நாள் நிர்வாக
மேம்பாட்டு நிகழ்ச்சிகள்இலவசமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு: https://forms.gle/YHCKnJu497qXMHkK9 /
9944429848 / 7708413472 என்ற எண்களை த�ொடர்பு க�ொள்ளலாம்.

வாட் வரியை குறைக்காத மாநிலங்கள்


நாடாளுமன்றத்தில் பேசிய
மத்திய பெட்ரோலியத்துறை
அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி,
"மத்திய அரசு பெட்ரோலியப்
ப�ொருட்கள் மீதான கலால்
வரியைக் குறைத்துள்ளது.
இதனையடுத்து பல
vijayabharatham.org
மாநிலங்கள் மதிப்பு
கூட்டப்பட்ட வரியை (வாட்) குறைத்துள்ளன. ஆனால், தமிழகம்,
மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா மற்றும்
ஜார்கண்ட் ஆகிய பாஜக அல்லாத ஆறு மாநிலங்கள் பெட்ரோலியப்
ப�ொருட்கள் மீதான வாட் வரியைக் குறைக்காததால், அங்கு பெட்ரோல்,
டீசல் விலை உயர்ந்துள்ளது. அதில் சில மாநிலங்கள் வாட் வரியை
17 ரூபாயாக நிர்ணயித்துள்ளன.ஆனால், மற்ற பா.ஜ.க அல்லாத
மாநிலங்களில் 32 ரூபாய் வாட் வரி வசூலிக்கின்றன.அதனால்
விலை அதிகமாக் உள்ளது.இன்று சில மாநிலங்களில் பெட்ரோல்
விலை லிட்டருக்கு 100 ரூபாய்க்கும் அதிகம் என்று உறுப்பினர்
கூறுகின்றனர்.ஆனால் மற்ற மாநிலங்களில், 8 முதல் 10 ரூபாய் வரி
விலை மலிவாக கிடைக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் தங்கள் மாநில அரசுகளுக்கு
அழுத்தம் க�ொடுத்து வாட் வரியைக் குறைக்க வேண்டும் என்று நான்
பரிந்துரைக்கிறேன்.மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பாரதத்தில்
தற்போது பெட்ரோல் விலை மிகக் குறைந்த விலையில் உள்ளது.
பாரதம் தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்திற்கும்
அதிகமாக இறக்குமதி செய்கிறது.நாட்டின் பெட்ரோல் மற்றும்
டீசல் விலை சர்வதேச சந்தையில் அந்தந்த விலைகளுடன்
இணைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2020 மற்றும் நவம்பர் 2022க்கு
இடையில் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் சராசரி விலை
102 சதவீதம் வரை அதிகரித்திருந்தாலும் இந்த காலகட்டத்தில்
பாரதத்தில் பெட்ரோல், டீசல் சில்லறை விலைகள் 18.95 முதல் 26.5
சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் வரலாறு
காணாத விலை உயர்ந்த ப�ோதிலும், 2022 ஏப்ரல் 6 முதல் பெட்ரோல்
மற்றும் டீசல் விலையை ப�ொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தும்
நிறுவனங்கள் உயர்த்தவில்லை. இதன் விளைவாக, 2021ம்
நிதியாண்டின் முதல் அரையண்டில் 28,360 க�ோடி ரூபாய் வரிக்கு
முந்தைய லாபம் சம்பாதித்த அரசு எண்ணெய் நிறுவனங்கள், நடப்பு
நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ரூ. 27,276 க�ோடி நஷ்டத்தை
பதிவு செய்துள்ளன. சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வின்
தாக்கத்தில் இருந்து நமது மக்களை காப்பற்றுவதற்காக, மத்திய அரசு
நவம்பர் 21, 2021 மற்றும் மே 22, 2022 ஆகிய தேதிகளில் மத்திய
கலால் வரியை இரண்டு முறை குறைத்துள்ளது.
5
பாரதம் தனது உள்நாட்டு எல்.பி.ஜி நுகர்வில் 60 சதவீதத்திற்கும்
அதிகமாக இறக்குமதி செய்கிறது.இது சர்வதேச அளவில் ச�ௌதி
ஒப்பந்த விலையை அடிப்படையாகக் க�ொண்டது.ச�ௌதியில் ஏப்ரல்
2020ல் 236 டாலராக இருந்த எரிவாயு விலை 2022 ஏப்ரலில் 952
டாலர்களாக உயர்ந்துள்ளது.தற்போதும் உயர்ந்த நிலையிலேயே
த�ொடர்கிறது.இருப்பினும், உள்நாட்டு எல்.பி.ஜிக்கான விலையை
நுகர்வோருக்கு அரசு த�ொடர்ந்து மாற்றியமைத்து வருகிறது.
இதனால் ப�ொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் பெரும்
இழப்பை சந்தித்துள்ளன.இந்த இழப்பை ஈடுகட்ட அவர்களுக்கு
ரூ.22,000 க�ோடி இழப்பீடு வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது"
என தெரிவித்தார்.எனினும், அமைச்சரின் பதிலில் திருப்தி அடையாத
காங்கிரஸ், தி.மு.க, திமுக, தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள்
அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இனியாவது திருந்துங்கள்
ஐ.நா சபையில் நடைபெற்ற
‘சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு
அணுகுமுறை க�ொள்கைகள் மற்றும்
முன்னோக்கிய பாதை’ என்ற
தலைப்பிலான விவாதத்திற்கு
vijayabharatham.org தலைமை தாங்கிய மத்திய
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிறகு செய்தியாளர்களை
சந்தித்து பேசினார். அப்போது, 'பாரதத்தை விட வேறு எந்த நாடும்
பயங்கரவாதத்தை சிறப்பாக பயன்படுத்தியதில்லை' என்று
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஹினா ரபானி
ஹர் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், "ஹினா
ரபானி பேசியதை நான் பார்த்தேன். அதுகுறித்த செய்திகளையும்
படித்தேன்.இந்த உலகமே பாகிஸ்தானை தான் பயங்கரவாதத்தின்
மையப்புள்ளியாகப் பார்க்கிறது.இந்த பயங்கரவாதம் எங்கிருந்து
உருவாகிறது என்பதையும் சர்வதேச சமூகம் நன்றாகவே தெரிந்து
வைத்துள்ளது. இரண்டரை ஆண்டுகளாக க�ொர�ோனா த�ொற்று
பாதிப்பில் இருந்த நம் அனைவருக்கும் மூளை மந்தநிலை கூட
சற்று ஏற்பட்டிருக்கலாம் ஆனாலும் அது பயங்கரவாதத்தை
தூண்டுபவர்களை சிறிதும் மறக்கவில்லை. பயங்கரவாதத்தை
துண்டுபவர்கள் அதனை மேலும் த�ொடரும் முன் இதனை புரிந்து
க�ொள்ள வேண்டும்.
2011ல் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த
ஹிலாரி கிளின்டன், 'நீங்கள் உங்கள் வீட்டின் க�ொல்லைப்புறத்தில்
விஷப் பாம்புகளை வைத்துக் க�ொண்டு அது உங்கள் அண்டை
வீட்டாரை மட்டுமே கடிக்க வேண்டும் என்று ஒருப�ோதும் எதிர்பார்க்க
முடியாது. அந்த பாம்பு அதை அங்கே விட்டவர்களையும் சேர்த்தே
கடிக்கும்.எனினும், பாகிஸ்தான் இதுப�ோன்ற அறிவுரைகளை
ஏற்காது என்று தெரியும்' என தனது பாகிஸ்தான் பயணத்தின் ப�ோது
ச�ொல்லியிருந்தார் என்பதை நான் இங்கு நினைவு கூர்கிறேன்.
பாகிஸ்தான் திருந்தி ஒரு நல்ல அண்டை நாடாக இருக்க முயற்சிக்க
வேண்டும்" என்றார்.
அப்போது பாகிஸ்தானிய பத்திரிகையாளர் ஒருவர், "பாரதம்
இன்னும் எத்தனை காலம் தான் பயங்கரவாதம் பாகிஸ்தானிலும்
ஆப்கனிலும் இருந்து உருவாகிறது என்று ச�ொல்லப்போகிறது?" என்று
கேட்டார். அதற்கு பதிலளித்த ஜெய்சங்கர் "இந்தக் கேள்வியை நீங்கள்
6
தவறாக என்னிடம் கேட்டுள்ளீர்கள்.இதனை நீங்கள் பாகிஸ்தானிடம்
தான் கேட்க வேண்டும்.அவர்கள் தான் இன்னும் எத்தனை காலம்
தாங்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எண்ணத்தில் உள்ளார்கள்
என்ற சரியான பதில் ச�ொல்வார்கள்.சரவதேச சமூகத்தை முட்டாள்
என்று நினைக்க வேண்டாம்.அது எதையும் மறக்காது.நிச்சயமாக
பயஙகரவாதத்தை தூண்டும் தேசங்களை விட்டுவைக்காது.நீங்கள்
யாரையும் குழப்ப முடியாது.மக்களுக்கு எல்லாம் தெரிந்துள்ளது.
அதனால், இனியாவது திருந்துங்கள்.ஒரு நல்ல அண்டை நாடாக
இருக்க முயலுங்கள்" என கூறினார்.

ஐ.நா சபையில் மகாத்மா காந்தி சிலை


நியூயார்க்கில் உள்ள ஐ.நா
சபையின் தலைமையகத்தில்
மகாத்மா காந்தியின் சிலையை
மத்திய வெளியுறவுத்துறை
அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து
வைத்தார். ஐ.நா சபையின்
vijayabharatham.org ப�ொதுச்செயலாளர் அன்டோனிய�ோ
குட்டெரஸ் மற்றும் 77வது ஐநா ப�ொதுச் சபையின் தலைவர் சபா
க�ொர�ோசி மற்றும் பாரதத்தின் நிரந்தர பிரதிநிதி தூதர் ருசிரா காம்போஜ்
உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து க�ொண்டு காந்தியின்
சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மகாத்மா
காந்தியின் விருப்பமான ‘வைஷ்ணவ் ஜன் த�ோ’ என்ற பஜனையும்
வாசிக்கப்பட்டது.மத்திய அரசால் பரிசாக அளிக்கப்பட்ட மகாத்மா
காந்தி சிலை, ஐ.நா சபையின் வடக்கு புல்வெளி த�ோட்டத்தில்
நிரந்தரமாக அமைக்கப்படும் காந்தியின் முதல் சிற்பமாக இருக்கும்.
ஐ.நா சபையின் ப�ொதுச்செயலாளர் அன்டோனிய�ோ குட்டெரஸ்,
மகாத்மாவின் சிலையின் படத்தைப் பகிர்ந்துக�ொண்டு, "மகாத்மா
காந்தி அமைதியான சகவாழ்வு, பாகுபாடு இல்லாமை மற்றும்
பன்மைத்துவத்திற்காக சமரசம் செய்யாத வக்கீலாக இருந்தார்.
ஐ.நா தலைமயகத்தில் அமைந்துள்ள இந்த புதிய சிலை
காந்தியிங்கொள்கைகளை மதிப்புகளை நினைவூட்டுவதாக இருக்கும்.
அதற்கு நாம் உறுதியாக இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர ம�ோடி வெளியிட்டுள்ள டுவிட்டர்
பதிவில், “ஐ.நா தலைமைச் செயலகத்தில் மகாத்மா காந்தியின்
மார்பளவுச் சிலையைக் காண்பது ஒவ்வொரு பாரத தேசத்தவருக்கும்
பெருமை அளிக்கிறது. காந்தியின் சிந்தனைகளும், க�ொள்கைகளும்
நமது பூமியை மேலும் முன்னேற்றமடையவும் நீடித்த வளர்ச்சியை
அடையவும் செய்யட்டும்” என தெரிவித்தார்.

முடிவுக்கு வந்த நிரவ் ம�ோடியின் முயற்சிகள்


பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல
ஆயிரம் க�ோடி ரூபாய் கடன் பெற்று
ம�ோசடி செய்த வைர வியாபாரி நிரவ்
ம�ோடி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார்.
சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அங்கு
கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகளாக
லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் vijayabharatham.org

அடைக்கப்பட்டுள்ளார்.அவரை பாரதம் அழைத்துவரும்


7
முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.இதுத�ொடர்பான
வழக்கு விசாரணை லண்டன் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அதில், அவரை பாரதத்துக்கு நாடு கடத்தலாம் என நீதிமன்றம்
உத்தரவிட்டது.இந்த நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து நிரவ்
ம�ோடி மேல்முறையீட்டு மனு ஒன்றை இங்கிலாந்து உச்ச
நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.அதனை விசாரித்த நீதிமன்றம்,
அவரது மேல்முறையீடு க�ோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது.
இதன்மூலம், நீரவ் ம�ோடிக்கு அனைத்து சட்ட வாய்ப்புகளும்
முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.எனவே, அவர் விரைவில்
பாரதத்துக்கு நாடு கடத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

பயங்கரவாதத்தை மறைக்கும் காங்கிரஸ்


மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு
குற்றவாளியான ஷாரிக் என்ற
பயங்கரவாதிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்
பயங்கரவாதத் த�ொடர்புகள்
நிரூபிக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது
அவனது பல பயங்கரவாத செயல்கள்,
அவனிடம் கைப்பற்றப்பட்ட vijayabharatham.org

ஜிஹாதி குறிப்புகள், தமிழகம், கேரளா என நாடு முழுவதும்


உள்ள அவனது த�ொடர்புகள் குறித்த பல்வேறு செய்திகள்
வெளிவந்துக�ொண்டுள்ளன. இந்த சூழலில், இது குறித்து பேசிய
கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே.சிவக்குமார், இதனை
மூடி மறைக்கும் விதத்தில் பேசியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் பேசுகையில், "குண்டுவெடிப்பு தவறுதலாக
நடந்திருக்கலாம். ஷாரிக்கின் இந்த செயல் புல்வாமா அல்லது
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் ப�ோன்ற பெரிய விஷயமல்ல.
எந்த விசாரணையும் இல்லாமல் ஒருவரை எப்படி தீவிரவாதி
என்று கூற முடியும், யார் பயங்கரவாதிகள், என்ன நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது, விசாரணை இல்லாமல் எப்படி ஒருவரை
பயங்கரவாதி என்று அழைப்பது? இது மும்பை, டெல்லி,
புல்வாமாவில் நடந்தது ப�ோன்ற பயங்கரவாத செயலா?இதில்
ஒன்றுமேயில்லை.சில த�ோழர்கள் சில தவறுகளைச்
செய்திருக்கலாம்.
அதை வேறு க�ோணத்தில் முன்வைக்க உங்களுக்கு எப்படி
உரிமை இருக்கிறது?அவர்கள் அதை வாக்குகளுக்காக செய்தார்கள்.
அவர்கள் வாக்குகளைத் திருட விரும்பினர் அவ்வளவு தான்.
பா.ஜ.க அரசால் வாக்காளர்களுக்குக் வெளிக்காட்டுவதற்கு
குறிப்பிடத்தக்க சாதனைக்கள் என்று எதுவும் இல்லை.எனவே,
இந்த குண்டுவெடிப்பைப் பெரிதாகக் காட்டி வாக்குகளைத்
திருட நினைக்கிறது அரசு" என கூறியுள்ளார்.பா.ஜ.க செய்தித்
த�ொடர்பாளர் எஸ்.பிரகாஷ், காங்கிரஸ் கட்சித் தலைவரின் இந்த
கருத்தை கடுமையாக சாடினார்.சிவகுமார் இதற்கு மன்னிப்பு கேட்க
வேண்டும் என்று வலியுறுத்தினார்.
காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பயங்கரவாதிகளைக் காப்பாற்ற
முயற்சிப்பது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த க�ோபாலகிருஷ்ண
காந்தி, 2015ல் பயங்கரவாதக் குற்றவாளி யாகூப் மேமனை மரண

8
தண்டனையில் இருந்து காப்பாற்ற முயன்றார்.1993 மும்பை த�ொடர்
குண்டுவெடிப்பு குற்றவாளியின் கருணை மனுவை பரிசீலுக்குமாறு
அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம்
எழுதியிருந்தார். பாகிஸ்தானில் புகுந்து பயங்கரவாதிகளை க�ொன்ற
நமது இந்திய ராணுவத்தின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து சந்தேகம்
எழுப்பியவர்களும் இதே காங்கிரஸ்காரர்கள் தான் என்பது நினைவு
கூரத்தக்கது.

எம்.எஸ்.எம்.இ சாம்பியன் திட்டம்


மத்திய குறு, சிறு மற்றும்
நடுத்தர த�ொழில் நிறுவனங்கள்
துறை அமைச்சகம் ‘எம்.எஸ்.எம்.இ
சாம்பியன்’ என்ற திட்டத்தை
செயல்படுத்தி வருகிறது. குறு,
சிறு மற்றும் நடுத்தர த�ொழில்
நிறுவனங்கள், தங்களது உற்பத்தி
செயல்முறைகளை நவீனப்படுத்துதல்,
vijayabharatham.org கழிவுகளை குறைத்தல், புதுமைகளை
ஊக்குவித்தல், வணிகப் ப�ோட்டித் தன்மையை அதிகரித்தல்
மற்றும் தேசிய உலகளவில் உயர் சிறப்பை அடைதல் ப�ோன்ற
ந�ோக்கங்கள�ோடு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பல்வேறு நிதி உதவிகளும் வழங்கப்படுகின்றன.
எம்.எஸ்.எம்.இ நீடித்த வளர்ச்சி (குறைபாடற்ற மற்றும் விளைவுகள்
அற்ற தன்மை), எம்.எஸ்.எம்.இ ப�ோட்டித்தன்மை (லீன்), எம்.எஸ்.எம்.இ
புதுமைத் தன்மை(த�ொழில் பாதுகாப்பகம், ஐ.பி.ஆர் வடிவமைப்பு
மற்றும் டிஜிட்டல் எம்.எஸ்.எம்.இ) ஆகிய 3 அம்சங்கள் எம்.எஸ்.எம்.இ
சாம்பியன் திட்டத்தில் உள்ளன.குறைபாடற்ற மற்றும் விளைவுகள்
அற்ற தன்மை என்ற அடிப்படையில், பதிவு செய்யப்பட்ட குறு,
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பல்வேறு அம்சங்களில்
ஆராயப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.2022 ஏப்ரல் 28ம்
தேதி த�ொடங்கப்பட்ட இந்தத்திட்டத்தில் 22 ஆயிரம் நிறுவனங்கள்
பதிவு செய்யப்பட்டுள்ளன. மதிப்பீட்டின் அடிப்படையில், 734
நிறுவனங்கள் வெண்கலம் தகுதிச் சான்றிதழையும், 32 நிறுவனங்கள்
வெள்ளி தகுதிச் சான்றிதழையும், 25 நிறுவனங்கள் தங்கத் தகுதி
சான்றிதழையும் பெற்றுள்ளன என மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு
இணையமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா பதில் அளித்துள்ளார்.

மீண்டும் துவங்கிய ஏவுகணை ச�ோதனை


கடந்த இரண்டு மாதங்களாக
இந்தியப் பெருங்கடலில்
சுற்றிவந்த சீன உளவுக் கப்பல்கள்
காரணமாக தற்காலிகமாக நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த அணு
ஆயுதங்களை சுமந்து சென்று
vijayabharatham.org
5 ஆயிரம் கி.மீ தூரத்தில் உள்ள
இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி 5 பெலாஸ்டிக் ஏவுகணை
ச�ோதனை, சீன கப்பல்கள் அங்கிருந்து சென்றதை அடுத்து
வெற்றிகரமாக பரிச�ோதிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவம் மற்றும்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இணைந்து
9
ஒடிசாவில் உள்ள ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தீவில் இருந்து இந்த
ச�ோதனையை நடத்தியது. கண்டம் விட்டு கண்டம் சென்று, 5,500
கில�ோ மீட்டர்க்ள் த�ொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும்
திறன் படைத்த இந்த ஏவுகணை, 1,100 கில�ோ அணு ஆயுதங்களை
சுமந்து செல்லும் தன்மை க�ொண்டது. ஏற்கனவே, கடந்த 2012,
2013, 2015ம் ஆண்டுகளில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி
5 ஏவுகணை ச�ோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.
அருணாச்சலப் பிரதேசத்தில் பாரத சீன வீரர்கள் ம�ோதிக் க�ொண்ட
இந்த சூழ்நிலையில் இந்த ஏவுகணையை இந்திய ராணுவம் ச�ோதனை
செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த அக்னி 5 ஏவுகணை தாக்குதல்
தூரத்தை 8,000 கி.மீ த�ொலைவுக்கு மேம்படுத்தும் முயற்சிகள்
நடப்பதாகவும் கூறப்படுகிறது.

பாரத்மாலா சாலைத் திட்டம்


பாரத்மாலா சாலைத் திட்டத்தின் முதல்
கட்டத்தில் 24,800 கி.மீ.தூரத்திற்கு பல்வேறு
வகையான சாலைகள் மற்றும் சுமார்
10,000 கி.மீ.மீதமுள்ள தேசிய சாலைகள்
மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ.5.35
லட்சம் க�ோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
vijayabharatham.org இதில் 23,500 கி.மீ. தூர சாலைகளுக்கு
ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்டுள்ளன. 11,400 கி.மீ.தூர சாலைப்பணிகள்
முடிந்துள்ளன.எஞ்சியுள்ள திட்டங்களுக்கு 2024ம் நிதியாண்டுக்குள்
ஒப்பந்தங்கள் அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதில்,
ப�ொருளாதார வழித்தடங்களின் ம�ொத்த தூரம் 12,002 கி.மீ.ஒப்பந்தம்
அளிக்கப்பட்ட தூரம் 7,029 கி.மீ.பணி முடிக்கப்பட்ட தூரம் 3,019 கி.மீ.
இதேப�ோல, கடல�ோர, துறைமுகத் த�ொடர்பு சாலைகளின் ம�ொத்த
தூரம் 1,079 கி.மீ.ஒப்பந்தம் அளிக்கப்பட்ட தூரம் 269 கி.மீ.பணி
முடிக்கப்பட்ட தூரம் 90 கி.மீ.இந்தத் தகவலை மத்திய அமைச்சர்
நிதின் கட்கரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்
தெரிவித்தார்.

ராணுவ இல்ல வரவேற்பில் பிரதமர்

vijayabharatham.org
விஜய் திவஸ் வெற்றி தினத்தைய�ொட்டி ராணுவ இல்லத்தில்
நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர ம�ோடி பங்கேற்றார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வெற்றி
தினத்தைய�ொட்டி ராணுவ இல்லத்தில் நடைபெற்ற வரவேற்பு
நிகழ்ச்சியில் கலந்து க�ொண்டேன்.1971ம் ஆண்டு ப�ோரின்போது
வெற்றிக்கு வழிவகுத்த நமது ராணுவத்தினரின் வீரத்தையும்,
தீரத்தையும் பாரதம் ஒருப�ோதும் மறக்காது” என கூறியுள்ளார்.
10
தேசிய த�ொழில்நுட்ப விருதுகளுக்கு
விண்ணப்பிக்கலாம்
1998ம் ஆண்டு மே 11ம்
தேதி ப�ொக்ரானில் அணு ஆயுத
ச�ோதனையை பாரதம் வெற்றிகரமாக
நடத்தியது.முன்னாள் பிரதமர்
மறைந்த அடல் பிகாரி வாஜ்பாய்,
பாரதம் அணு ஆயுத ஆற்றல் படைத்த
vijayabharatham.org
நாடு என அறிவித்தார்.அது முதல் மே
11ம் தேதி தேசிய த�ொழில்நுட்ப தினமாக கடைப்பிடிக்கப்பட்டு
வருகிறது. இந்த சிறப்பான தினத்தைக் க�ொண்டாடும் வகையில்
மத்திய அரசின் அறிவியல் மற்றும் த�ொழில்நுட்பத்துறையின்,
த�ொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், த�ொழில்நுட்பப் புத்தாக்க
கண்டுபிடிப்புகளுக்கு 1999ம் ஆண்டு முதல் தேசிய த�ொழில்நுட்ப
விருதுகளை வழங்கிவருகிறது. அவ்வகையில், 2023ம் ஆண்டுக்கான
இந்த விருதுகளை 5 பிரிவுகளில் பெறுவதற்கு விண்ணப்பங்களை
த�ொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் வரவேற்கிறது.பாரதத்தின்
த�ொழில்துறை மற்றும் அவற்றின் த�ொழில்நுட்பத்திற்கு
அங்கீகாரம் வழங்கும் வகையில், இந்த பெருமைக்குரிய விருது
அளிக்கப்படுகிறது.
முக்கிய பிரிவில், உள்நாட்டுத் த�ொழில்நுட்பத்தை வெற்றிகரமாக
வணிகப் பயன்பாட்டிற்குக் க�ொண்டுவரும் நிறுவனங்களுக்காக
2017ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. ரூ.25 லட்சம்
ர�ொக்கப் பரிசும், கேடயமும் இதில் வழங்கப்படும்.இந்தப் பிரிவில்
ஒரு விருது வழங்கப்படுகிறது.தேசிய த�ொழில்நுட்ப விருதுகள்
எம்.எஸ்.எம்.இ பிரிவில், 3 விருதுகள் வழங்கப்படுகிறது.இதில் ஒரு
விருது பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் ர�ொக்கப்பரிசு
ரூ.15 லட்சமாகும்.உள்நாட்டுத் த�ொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி
வெற்றிகரமாக வணிக ரீதியில் செயல்படுத்தும் எம்.எஸ்.எம்.
இக்களுக்கு 2017 முதல் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஸ்டார்ட் அப்புகளுக்கான விருதில் ரூ.15 லட்சம் ர�ொக்கப்பரிசு
வழங்கப்படும். ஒரு பெண் ஸ்டார்ட் அப் உட்பட 5 பேருக்கு இது
வழங்கப்படும். வணிக ரீதியில் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புள்ள
புதிய த�ொழில்நுட்பத்திற்கு இது வழங்கப்படுகிறது. ம�ொழிபெயர்ப்பு
ஆராய்ச்சியில் வழங்கப்படும் தேசிய த�ொழில்நுட்ப விருதில்
ரூ.5 லட்சம் ர�ொக்கப்பரிசு இடம் பெறும்.ஒரு பெண் விஞ்ஞானி
உட்பட 2 பேருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.புதுமையான
உள்நாட்டுத் த�ொழில்நுட்பங்களை வெற்றிகரமாக வணிகரீதியில்
க�ொண்டு வரும் விஞ்ஞானிகளின் சிறப்பான பங்களிப்பிற்கு
விருது வழங்கப்படுகிறது.த�ொழில்நுட்ப வர்த்தக த�ொழிற்
பாதுகாப்பக விருது பிரிவில் ஒருவருக்கு வழங்கப்படுகிறது.ரூ.
5 லட்சம் ர�ொக்கப்பரிசு க�ொண்ட இந்த விருது, த�ொழில்நுட்ப
த�ொழில் முனைவ�ோர்“ மேம்பாட்டிற்கு சிறப்பான பங்களிப்பை
அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள்
தேசிய த�ொழில்நுட்பத் தினமான 2023ம் ஆண்டு மே 11ம் தேதி
வழங்கப்படும். விருதுகளுக்கு விண்ணப்பிக்க https://awards.gov.
in/ என்ற தளத்தை அணுகவும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்
2023 ஜனவரி 15ம் தேதியாகும்.

11
உலக தெற்கின் குரலாக பாரதம்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின்
பாரதத்தின் தற்போதைய
தலைமைத்துவத்தின் கீழ்
நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு
மற்றும் சீர்திருத்தப்பட்ட பலதரப்பு
த�ொடர்பான இரண்டு நிகழ்வுகளுக்கு
vijayabharatham.org தலைமை தாங்க நியூயார்க்
சென்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,
செய்தியாளர்களிடம் பேசுகையில், "2028 மற்றும் 2029ம்
ஆண்டுக்கான கவுன்சிலில் எங்கள் அடுத்த பதவிக்காலத்திற்கான
எங்கள் வேட்புமனுவை நாங்கள் அறிவித்துள்ளோம் என்பதை
தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் திரும்பி வருவதை
எதிர்நோக்குகிற�ோம்.ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தற்போதைய
தலைமை பதவி டிசம்பர் 31 அன்றுடன் நிறைவுபெறும்.பாரதம் இந்த
சக்திவாய்ந்த பதவியை எட்டாவது முறையாக வகிக்கிறது. எங்களின்
இந்த எட்டாவது இன்னிங்ஸின் ப�ோது, கடல்சார் பாதுகாப்பு, ஐ.நா
அமைதிப்படையில் த�ொழில்நுட்பம், ஐ.நா.வின் சீர்திருத்தங்கள்,
பயங்கரவாத எதிர்ப்பு ப�ோன்ற சமகாலத் த�ொடர்புடைய பல
கருப்பொருள்களை நிகழ்ச்சி நிரல்களை ஐ.நா.வில் விவாதத்தின்
மையத்திற்கு க�ொண்டு வர முயற்சித்தோம். நாங்கள் கவலைக்குரிய
பல பிரச்சனைகளில் உலகளாவிய தெற்கின் குரலாக இருக்க
முயன்றோம்.நாங்கள் அவர்களின் நலன்கள் மற்றும் கவலைகளை
வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், கவுன்சிலில் ஒரு பாலமாக
செயல்பட முடியுமா என்பதைப் பார்க்கவும் முயற்சித்தோம்.ஐ.நா
பாதுகாப்பு கவுன்சில், அதன் தற்போதைய வடிவத்தில், இன்றைய
புவி அரசியல் யதார்த்தங்களைப் பிரதிபலிக்கவில்லை.பாரதம்
ப�ோன்ற வளரும் சக்திகளுக்கு ஐ.நா அவையில் நிரந்தர இடம்
இல்லை என்றால் அதன் நம்பகத்தன்மைக்கு ஆபத்து ஏற்படும்" என
தெரிவித்தார்.

1,000 மெகாவாட் சூரிய மின்சக்தித் திட்டம்


ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் 1,000
மெகாவாட் சூரிய மின்சக்தித் திட்டத்தை
அமைப்பதற்காக, எஸ்.ஜே.வி.என் கிரீன் எனர்ஜி
நிறுவனத்துடன் ரூ.4,444.71 க�ோடிக்கு இந்திய
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை vijayabharatham.org
லிமிடெட் (ஐ.ஆர்.இ.டி.ஏ) கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த நிதியுதவி திட்டமானது 40 0/ 220 க�ொலிய வ�ோல்ட் துணை
மின்நிலையமான பிகானிர் 2ல் இணைக்கப்படும்.நிகழ்ச்சியில் பேசிய
ஐ.ஆர்.இ.டி.ஏ தலைவர், "1,000 மெகாவாட் ச�ோலார் திட்டத்தை
மேம்படுத்த ஐ.ஆர்.இ.டி.ஏவின் அதிகபட்ச கடன் த�ொகையை
அனுமதிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிற�ோம். இந்த வகையான
ஒத்துழைப்பு மூலம் 2030ம் ஆண்டுக்குள் புதைபடிவமற்ற
எரிப�ொருட்களிலிருந்து 50 சதவீத எரிசக்தி தயாரிக்கும் மத்திய
அரசின் இலக்கை அடைய நாங்கள் ஆதரவளிக்க முடியும். இந்தக்
கூட்டாண்மை பசுமை முதலீட்டை ஊக்குவிக்கும். நேரடி மற்றும்
மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும்" என தெரிவித்தார்.

12
சூர்ய கிரண் 16
பாரதம் மற்றும் நேபாளம்
இடையிலான கூட்டு ராணுவப்
பயிற்சியான “சூர்ய கிரண்”
16வது முறையாக நேபாள
ராணுவப் ப�ோர்ப் பள்ளி
அமைந்துள்ள சல்ஜாண்டியில்
vijayabharatham.org நேர்று துவங்கியது. இது வரும்
டிசம்பர் 29 வரை நடைபெறவுள்ளது.“சூர்ய கிரண்” பயிற்சி
ஆண்டுத�ோறும் நடத்தப்படுகிறது.பாரதமும் நேபாளமும்
காடு மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் இணைந்து
பயிற்சி மேற்கொள்கின்றன. நேபாளத்தின் ஸ்ரீ பவானி பக்ஷ்
படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்களும், பாரதத்தின் 5வது க�ோர்க்கா
ரைபிள் படைப்பிரிவினரும் இந்த கூட்டுப் ப�ோர் பயிற்சியில்
பங்கேற்கின்றனர். இரண்டு ராணுவங்களும் தங்களது
அனுபவங்களை இந்த பயிற்சியின்போது பகிர்ந்துக�ொள்ளும்.
பயங்கரவாதத் தடுப்பு, பேரிடர் நிவாரணப் பணிகளின் ப�ோது
மனிதாபிமான நடவடிவக்கைகள் ப�ோன்றவற்றில் இரு நாடுகளும்
அனுபவங்களை பகிர்ந்துக�ொள்வதுடன், இணைந்து செயல்படும்
ந�ோக்கில் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

விரைவு சக்தி திட்டங்கள் ஆய்வு


பிரதமரின் விரைவு சக்தி அடிப்படையிலான புவிசார்
தகவல்தளத்தில் கிடைக்கும் அம்சங்களுடன் விண்வெளிப்
பயன்பாடு மற்றும் புவிசார்
தகவல்களுக்காக பாஸ்கராச்சார்யா தேசிய
கல்விநிறுவனத்தின் மூலம் விரிவான
திட்ட அறிக்கை த�ொகுப்புக் கருவி
அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு
உள்ளது. இது புவிசார் அம்சங்கள், vijayabharatham.org

வனப்பகுதிகள், சூழல் பதற்றப் பகுதிகள் த�ொடர்பான தகவல்களைப்


பரிசீலித்து தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்தை ஒருங்கிணைக்க
உதவும். தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாடும், பராமரிப்பும்
மத்திய சாலைப் ப�ோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்
துறையின் முதன்மைப் ப�ொறுப்பு. சுமார் ரூ. 6,68,808 க�ோடி
மதிப்பில், 13,858 கி.மீ தூரத்திற்கு 61 தேசிய நெடுஞ்சாலைகள்,
சாலைகள், சிறப்பு சாலைத்திட்டங்கள் தேசியப் பெருந்திட்டமான
பிரதமரின் விரைவு சக்தியின்கீழ் இணையப் பக்கத்தில் ஆய்வு
செய்யப்பட்டன. இதுகுறித்து த�ொழில், வர்த்தக அமைச்சகத்தின்
தலைமையிலான வலைப்பின்னல் திட்டமிடல் குழுமத்துடனும்
கலந்தால�ோசிக்கப்பட்டது. என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
தெரிவித்தார்.

பருப்பு வகைகள் தடையின்றி


கிடைக்க ஏற்பாடு
நாட்டில்கூடுதலாக பருப்பு உற்பத்தி செய்வதற்காக
நமது விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்பதற்கான அனைத்து
நடவடிக்கைகளையும் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை

13
மேற்கொள்ளும். 2023ம் ஆண்டு
முழுவதும் நுகர்வோருக்கு
நியாயமான விலையில் பருப்பு
வகைகள் கிடைப்பதற்கும்,
அதனை தடையின்றி இறக்குமதி
செய்ய இறக்குமதியாளர்களுக்கு
ஆதரவளிக்கப்படும் என்று நுகர்வோர்
vijayabharatham.org விவகாரத்துறை செயலாளர் ர�ோகித்
குமார் சிங், இந்திய பருப்பு வகைகள் சங்கக் கூட்டத்தில் தெரிவித்தார்.
மியான்மரில் உற்பத்தி அதிகரிப்பதன் மூலம், வரும் ஆண்டுகளில்
உலகளவில் பருப்பு வகைகள் அதிகளவில் கிடைக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.ஆப்பிரிக்க நாடுகளில் பருப்பு சாகுபடி
அதிகரிப்பதன் காரணமாக ஆகஸ்ட் 2023ம் ஆண்டு முதல் அவைகள்
இறக்குமதி செய்யப்படவுள்ளன என தெரிவித்தார்.மேலும், துவரம்
பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் மசூர் பருப்பு ஆகியவற்றின்
உள்நாட்டு உற்பத்தி மற்றும் இறக்குமதிகளின் முக்கியத்துவம்
குறித்து அவர் எடுத்துரைத்தார்.

விண்ட்பால் வரி குறைப்பு


சர்வதேச சந்தையில் கச்சா
எண்ணெய் விலை குறைந்து வரும்
நிலையில், மத்திய அரசு உள்நாட்டு
கச்சா எண்ணெய் உற்பத்தி
மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு
விதிக்கப்படும் விண்ட்பால் வரியை
(windfall tax) குறைத்துள்ளது. vijayabharatham.org

அவ்வகையில், இந்த விண்ட்பால் வரி டன்னுக்கு 4,900 ரூபாயில்


இருந்து, 1,700 ரூபாயாக குறைத்துள்ளது.விமானத்திற்கு
பயன்படுத்தப்படும் ஏவியேஷன் டர்பைன் எரிப�ொருளுக்கான வரியை
லிட்டருக்கு 5 ரூபாயில் இருந்து 1.5 ரூபாயாக குறைத்துள்ளது.இது
எரிப�ொருள் ஏற்றுமதியையும் அதிகரிக்க உதவும் என்பதுடன், விமான
நிறுவனங்கள் அவற்றின் கட்டணங்களை குறைக்க வழி வகுக்கும்.
இந்த ஒரு மாதத்திலேயே இரு முறை இந்த வரி குறைப்பு அமலுக்கு
வந்துள்ளது.முன்னதாக டிசம்பர் 1ம் தேதி, டன்னுக்கு 10,200 ரூபாயில்
இருந்து 4,900 ரூபாயாக இந்த வரியை குறைத்திருந்தது.விண்ட்பால் வரி
என்பது, அரசு எதிர்பாராத வகையில் கிடைக்கும் பெரிய அளவிலான
லாபத்தின் மீது விதிக்கும் வரியாகும். நாட்டில் எரிப�ொருள் விலை
மேற்கொண்டு அதிகரிக்காமல் இருக்கவும் பெட்ரோல், டீசலுக்கு
தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும் மத்திய அரசு, அவ்வப்போது
இதுப�ோன்ற நடவடிக்கைகளை எடுக்கும். வரியை அதிகரிப்பதால்
எண்ணெய் உற்பத்தியாளர்கள் உள்நாட்டு தேவைகளுக்குகு அதிக
முக்கியத்துவம் அளிப்பார்கள் என்பதால் தட்டுபாடு ஏற்படாது.ரஷ்யா
உக்ரைன் பிரச்சனைக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை வரலாறு
காணாத உச்சத்தில் இருந்தது.இதன் காராணமாக ஏற்றுமதி வரியாக
பெட்ரோல் மற்றும் விமான எரிப�ொருளுக்கு லிட்டருக்கு 6 ரூபாயும்,
டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 10 ரூபாயும் விதிக்கப்பட்டது.விண்ட்பால்
வரியாக டன்னுக்கு 23,250 ரூபாய் விதிக்கப்பட்டது.மத்திய அரசின்
இந்த அறிவிப்பால் ப�ொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும்
தனியார் எண்ணெய் ஏற்றுமதியாளார்கள் பலனடைவார்கள்.
14
ஹூவாய்க்கு எதிரான தடை
அமெரிக்க நாடாளுமன்றம்,
சீன த�ொழில்நுட்ப நிறுவனமான
ஹூவாய் டெக்னாலஜிஸ்
லிமிடெட் மற்றும் சீனா 5ஜி
சேவைகளை வழங்கி வரும்
நிறுவனங்களுக்கு தடை
vijayabharatham.org விதிக்கும் மச�ோதாவை
அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மச�ோதா மூலம் இந்த நிறுவனங்கள்
அனைத்தும் தடைப் பட்டியலில் சேர்க்கப்படலாம்.இதன் மூலம்
இந்நிறுவனங்கள் அமெரிக்க நிதித் துறையை அணுகுவதை
தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூவாய் சீன
உளவுத்துறையின் ஒரு அங்கம் என கூறிவரும் அமெரிக்கா,
அமெரிக்கர்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் நாட்டின் மிக
முக்கியமான பாதுகாப்பு அமைப்புகளின் தரவுகளையும் அணுக
அது அனுமதிக்கிறது. சீன நிறுவனங்கள் அமெரிகாவின் தேசிய
பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துபவை, மிகவும்
அபாயகரமானவை.இதனை தடுப்பதன் மூலம் நாட்டின்
பாதுகாப்பினை வலுப்படுத்த முடியும் என கருதுகிறது.
முன்னாள் அமெரிக்க அதிபர் ட�ொனால்ட் ட்ரம்ப் காலத்திலேயே
இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. நாம் அன்றாடம்
பயன்படுத்தப்படும் அலைபேசி, மடிக்கணி உள்ளிட்டவற்றில்
பயன்படுத்தப்படும் சிப்புகளை பயன்படுத்தி, சீனா அமெரிக்காவின்
த�ொழில் நுட்பங்களை களவாடுவதாகவும், அமெரிக்காவினை உளவு
பார்ப்பதாகவும் ட�ொனால்டு டிரம்ப் த�ொடர்ந்து குற்றம் சாட்டினார்.
அமெரிக்காவைத் த�ொடர்ந்து இங்கிலாந்து உள்ளிட்ட பல
நாடுகளும் சீனாவின் சந்தேகத்திற்கிடமான தகவல் த�ொழில்நுட்ப
சாதனங்களுக்கு தடை விதித்தன.ஜ�ோ பைடன் பதவிக்கு வந்தால்
இது சரியாகும் என்று சீனா பெரிதும் எதிர்பார்த்து வந்தது.ஆனால்
தற்போது ஜ�ோ பைடன் அரசும் சீனாவின் மீதான தடைகள்
அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

கடன் ப�ொறியில் மியன்மார்


சீனாவின்
கடன் ப�ொறி
க�ொள்கைக்கு இரையாகும்
அடுத்த இலக்காக மியன்மார்
இருப்பதாக பர்மிய ஊடகங்கள்
தெரிவிக்கின்றன. ராணூவ ஆட்சி
நடைபெறும் மியான்மர் நாட்டின்
vijayabharatham.org ராணுவ ஜெனரல்கள், சீனாவின்
தூதரக ஆதரவு மற்றும் முதலீடுகளுக்காக எரிவாயு, மரங்கள்,
மரகத கற்கள் உள்ளிட்ட கனிம சுரங்கங்கள், தாமிரம் உள்ளிட்ட
இயற்கை வளங்களை பண்டமாற்று செய்துள்ளனர். மேலும்,
ராக்கைன் மாநிலத்தில் உள்ள கியாக்ஃபியு துறைமுகம் மற்றும்
சிறப்புப் ப�ொருளாதார மண்டலம் ஆகியவை சீனாவுக்கு இலவசமாக
வழங்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 2021 ராணுவப் புரட்சிக்குப்
பிறகு மியான்மரை தூதரக ரீதியாக தனிமைப்படுத்திக்கொண்டு
சீனா அதனை நன்றாக பயன்படுத்துகிறது, நாட்டின் வளமான
இயற்கை வளங்களை க�ொள்ளையடித்து வருகிறது. மியான்மரில்
15
ராணுவ சதிப்புரட்சி அரசியல் மற்றும் ப�ொருளாதார நெருக்கடிக்கு
வழிவகுத்துள்ளன.வறுமை மற்றும் வேலை வாய்ப்பின்மை
அதிகரித்துள்ளது.இதனை சீனா தனக்கு சாதகமாக மிகச் சரியாக
பயன்படுத்துகிறது.ராணுவ ஆட்சிக்குழு மிகவும் தேவையான
உதவிகளை வழங்குகிறது.சீனா, இந்தியப் பெருங்கடலில்
ப�ொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தை நிலைநாட்ட மியான்மர்
வழியாக பெல்ட் அண்ட் ர�ோடு முயற்சியை (பி.ஆர்.ஐ) ஊக்குவித்து
வருகிறது.தென் சீனக் கடலில் உள்ள குவாங்சி மாகாணத்தில் உள்ள
புதிய பெய்பு வளைகுடா துறைமுகத்தை யாங்கோனுடன் இணைக்கும்
ஒரு கப்பல் வழியை சீனா சமீபத்தில் நிறுவியுள்ளது.இதனுடன்,
ஷான் மாநிலம் மற்றும் கச்சின் மாநில எல்லையில் த�ொழில்துறை
மண்டலத்தை மேம்படுத்த சீனா வலியுறுத்தி வருகிறது.இந்த
பாதையானது மியான்மர் நாட்டில் 80 சதவீத எண்ணெய் மற்றும்
எரிவாயு இறக்குமதிக்கான ஒரே வழியாகும். இப்பகுதி விரைவில்
சீன கடற்படையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என பர்மிய
மல்டிமீடியா செய்தி நிறுவனம் மிஸ்ஸிமா நியூஸ் ப�ோன்ற மியான்மர்
செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ரசிகர்களை மதம் மாற அழைப்பு


உலகக் கால்பந்து க�ோப்பை
துவங்குவதர்கு முன்பில்
இருந்தே, அதனை தற்போது
நடத்தி வரும் கத்தார் நாடு உலகக்
கால்பந்து விளையாட்டை தனது
மதமாற்ற நிகழ்ச்சி நிரலுக்காக
vijayabharatham.org பயன்படுத்தி வருகிறது.
இதற்காகவே சர்ச்சைக்குரிய பேச்சாளர் ஜாகீர் நாயக் ப�ோன்றோரை
அங்கு மதப்ப்பிரசங்கம் செய்ய அழைத்தது என்ற குற்றச்சாட்டுகள்
முன்வைக்கப்பட்டன. மேலும், யூத பார்வையாளர்களுக்கு அவர்களது
பாரம்பரிய உணவு வகைகளை வழங்கமுடியாது, அவர்கள் கத்தாரில்
தங்கள் மத வழிபாடுகளை செய்யக்கூடாது எனவும் தெரிவித்தது
கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் தற்போது இந்த
வரிசையில் ம�ொராக்கோ நாடும் சேர்ந்துள்ளது. ஸ்பெயினைத்
த�ோற்கடித்து ம�ொராக்கோ அணி உலகக் க�ோப்பை காலிறுதிக்குத்
தகுதி பெற்றது, அந்த அணியை சேர்ந்த ஜகாரியா அபுகல் மற்றும்
அப்தெல்ஹமிட் சபிரி ஆகிய இரண்டு விளையாட்டு வீரர்கள்
தங்களுடைய ஹ�ோட்டலுக்குத் திரும்பிய பின் ஒரு நேரடி
ஒளிபரப்பை ஒளிபரப்பினர். அதில், கால்பந்து ரசிகர்களையும், ப�ொது
மக்களையும் முஸ்லிம் மதத்தை தழுவுமாறு கேட்டுக் க�ொண்டனர்.
மேலும், உலகக் க�ோப்பை கால்பந்து ப�ோட்டியில் பிரான்சுக்கு
எதிரான அரையிறுதிப் ப�ோட்டியில் த�ோல்வியடைந்த ப�ோதிலும்,
ம�ொராக்கோ கால்பந்து வீரர்கள் விலையாட்டு மைதானத்திலேயே
சஜ்தா அல் ஷுகர் (நன்றியின் வணக்கம்) என்று பிரார்த்தனையில்
ஈடுபட்டனர். ம�ொராக�ோ வீரர்களின் இந்த இரண்டு செயல்பாடுகளும்
கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.இதைத்தவிர ம�ொராக்கோ
கால்பந்தாட்டத்தில் வேறு சில விஷயங்களிலும் செய்தியில்
அடிபடுகிறது.உதாரணமாக, ஸ்பெயினுக்கு எதிராக ம�ொராக்கோ
வென்றது.இதனையடுத்து ஸ்பெயினில் கலவரங்கள் நடைபெற்றன.
ப�ோர்ச்சுகலுக்கு எதிராக ம�ொராக்கோ வென்றது, ப�ோர்ச்சுகலிலும்
16
கலவரம் வெடித்தது.ம�ொராக்கோ பிரான்சிடம் த�ோற்றது, பிரான்சில்
கலவரம் ஏற்பட்டது. இவ்வகையில் ம�ொராக்கோ வெற்றி அல்லது
த�ோல்வி என எதை பெற்றிருந்தாலும் அதற்கு எதிராக விளையாடும்
மற்ற நாடுகளில் வாழும் முஸ்லிம் அடிப்படைவாதிகள்
திட்டமிட்ட வகையில் கலவரங்களை ஏற்படுத்தியுள்ளனர் என்பது
சிந்திக்கத்தக்கது.

சம்ஸ்கிருத இலக்கணப் புதிருக்கு தீர்வு


கி.மு 5ம் நூற்றாண்டிலிருந்து
சுமார் 2,500 ஆண்டுகளாக
சமஸ்கிருத அறிஞர்களைத்
திணறடித்த உலகின் மிகப் பெரிய
இலக்கணப் புதிர்' இறுதியாக
கேம்பிரிட்ஜ் பல்கலைக்
கழகத்தில் பயிலும் பாரதத்தை
சேர்ந்த ரிஷி ராஜ்போபட் என்ற
vijayabharatham.org
முனைவர் பட்டதாரி மாணவர்
மூலம் தீர்க்கப்பட்டுள்ளது.
"ம�ொழியியலின் தந்தை" என அழைக்கப்படும் பாணினி கற்பித்த
விதியை டிக�ோட் செய்வதன் மூலம் ரிஷி ராஜ்போபட் இதற்கு
தீர்வு கண்டுள்ளார். இது "நாங்கள் பாணினியை நம்புகிற�ோம்:
அஸ்தத்யாயீயில் விதி ம�ோதல் தீர்வுக்கான வழிமுறையைக்
கண்டறிதல்' என்ற தலைப்பில் அவரது ஆய்வறிக்கையில்
இணைக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் மிகப் பெரிய அறிவார்ந்த சாதனைகளில் ஒன்றாக
இது கருதப்படுகிறது. பாணினியின் 'ம�ொழி இயந்திரத்தைப்'
பயன்படுத்தி, 'மந்திரம்' மற்றும் 'குரு' உள்ளிட்ட எந்த சம்ஸ்கிருதச்
ச�ொல்லையும் லட்சக்கணக்கான இலக்கணச் சரியான ச�ொற்களை
உருவாக்குவதற்கு இந்தக் கண்டுபிடிப்பு உதவுகிறது. முன்னணி
சம்ஸ்கிருத வல்லுநர்கள், ராஜ்போபாட்டின் இந்த கண்டுபிடிப்பை
‘புரட்சிகரமானது’ என்று வர்ணித்துள்ளனர், மேலும் இப்போது
பானினியின் இலக்கணத்தை முதன்முறையாக கணினிகளுக்கு
கற்பிக்க முடியும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் ஒரு
அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கி.மு 500ல் எழுதப்பட்டதாகக் கருதப்படும் பாணினியின்
புகழ்பெற்ற படைப்பான அஷ்டாத்யாயியில் விவரிக்கப்பட்டுள்ள
4,000 விதிகள் ஒரு இயந்திரம் ப�ோல செயல்படும். ஒரு வார்த்தையின்
அடிப்படை மற்றும் உள்ளீடுகளை அதில் அமைத்து ஒரு படிப்படியான
செயல்முறையின் மூலம் இலக்கணப்படி சரியான ச�ொற்களாகவும்
வாக்கியங்களாகவும் மாற்ற வேண்டும். இருப்பினும் அதில் ஒரு
பெரிய சிக்கல் உள்ளது.பெரும்பாலும், பாணினியின் இரண்டு
அல்லது அதற்கு மேற்பட்ட விதிகள் ஒரே நேரத்தில் ஒரே நேரத்தில்
ப�ொருந்தும்.அவற்றில் எந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பது என்று
அறிஞர்கள் குழம்புவார்கள். 'மந்திரம்' மற்றும் 'குரு' ப�ோன்ற சில
வடிவங்கள் உட்பட பல லட்சக் கணக்காக சம்ஸ்கிருத வார்த்தைகளை
பாதிக்கும் 'விதி ம�ோதல்கள்' என்று அழைக்கப்படுவதைத் தீர்ப்பதற்கு
ஒரு வழிமுறை தேவைப்படுகிறது.
ராஜ்போபத் '1.4.2 விப்ரதிஷேதே பரம் காரியம்' எனப்
பெயரிடப்பட்ட பாணினி ஒரு மெட்டாரூலை இதற்குக் கற்பித்தார்
17
- 'விதி ம�ோதல்' ஏற்பட்டால்
எந்த விதியைப் பயன்படுத்த
வேண்டும் என்பதைத்
தீர்மானிக்க இது உதவுகிறது.
ஆனால் கடந்த 2,500
ஆண்டுகளாக அறிஞர்கள்
இந்த மெட்டாரூலை தவறாகப்
பு ரிந் து க�ொண் டு ள்ள ன ர் .
vijayabharatham.org இதனால் இந்த
இலக்கணப்புதிர் தவறான முடிவுடன் முடிந்தது.இந்த சிக்கலை
சரிசெய்யும் முயற்சியில், பல அறிஞர்கள் நூற்றுக்கணக்கான
பிற மெட்டாரூல்களை கடினமாக உருவாக்கினர்.ஆனால் டாக்டர்
ராஜ்போபட் இவை சிக்கலை தீர்க்கும் திறன் க�ொண்டவை அல்ல.
அவை அனைத்தும் பல விதிவிலக்குகளை உருவாக்கியது.
அது முற்றிலும் தேவையற்றது.பாணினியின் ‘ம�ொழி இயந்திரம்’
தன்னிறைவு க�ொண்டது என வெளிப்படுத்தினார்.
“பாணினிக்கு ஒரு அசாதாரண மனம் இருந்தது, அவர் மனித
வரலாற்றில் நிகரற்ற ஒரு இயந்திரத்தை உருவாக்கினார்.அவருடைய
விதிகளில் புதிய ய�ோசனைகளைச் சேர்ப்போம் என்று அவர்
எதிர்பார்க்கவில்லை.பாணினியின் இலக்கணத்தை நாம் எவ்வளவு
அதிகமாகப் படிக்கிற�ோம�ோ, அவ்வளவு அதிகமாக அது நம்மைத்
தவிர்க்கிறது" என்று ராஜ்போபட் கூறுகிறார்.
பாரம்பரியமாக, அறிஞர்கள் பாணினியின் மெட்டாரூலை 'சம
பலம் க�ொண்ட இரண்டு விதிகளுக்கு இடையே ம�ோதல் ஏற்பட்டால்,
இலக்கணத்தின் வரிசையில் கடைசியாக வரும் விதி வெற்றி
பெறுகிறது' என்று விளக்கியுள்ளனர். ஆனால், ராஜ்போபட் இதை
நிராகரிக்கிறார், அதற்குப் பதிலாக, ஒரு வார்த்தையின் இடது மற்றும்
வலது பக்கங்களுக்குப் ப�ொருந்தக்கூடிய விதிகளுக்கு இடையில்,
வலது பக்கத்திற்குப் ப�ொருந்தக்கூடிய விதியைத் தேர்ந்தெடுக்க
வேண்டும் என்று பாணினி விரும்பினார் என கூறுகிறார். இந்த
விளக்கத்தைப் பயன்படுத்தியே ராஜ்போபட் பாணினியின் ம�ொழி
இயந்திரம் இலக்கணப்படி சரியான ச�ொற்களை விதிவிலக்குகள்
இல்லாமல் உருவாக்கியதாக கூறியுள்ளார்.

மின்னணுவியல் மற்றும் ஐ.டி துறை


செயல்பாடுகள்
பாரதத்தில் டிஜிட்டல் த�ொழில்நுட்பங்கள் அனைவரையும்
உள்ளடக்கியதாகவும் சமூக மாற்றங்களை சிறப்பாக
ஏற்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளன.டிஜிட்டல் இந்தியா
திட்டம் நாட்டை டிஜிட்டல் மயமாக்கியிருப்பதுடன், அறிவுசார்
ப�ொருளாதார அணுகுமுறையை உறுதி செய்துள்ளது. இந்த ஆண்டில்
மின்னணுவியல் மற்றும் தகவல் த�ொழில்நுட்ப அமைச்சகத்தின்
செயல்பாடுகளால் எட்டப்பட்ட சில
சாதனைகளின் சுருக்கம்:
நாடு முழுவதும் தனித்துவ
அடையாள ஆணையம் 88 ஆதார்
சேவை மையங்களை 72 நகரங்களில்
ஏற்படுத்தியுள்ளது.இதுவரை 5 லட்சத்து
49 ஆயிரம் ப�ொதுச் சேவை மையங்கள்,
18
அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுள் 4 லட்சத்து 37 ஆயிரம்
மையங்கள், கிராம ஊராட்சி அளவில் செயல்பட்டு வருகின்றன.
கிளவுட் எனப்படும் மேகக் கணினி அடிப்படையில் உருவாக்கப்பட்ட
டிஜி லாக்கர் தளத்தில் ப�ொதுமக்கள் தங்களது ஆவணங்கள்,
சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் முறையில் சேமிக்கும்
வகையில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் ம�ொத்த
மின்னணுப் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 5,554 க�ோடியாக
அதிகரித்துள்ளது.உள்நாட்டு மின்னணுப் ப�ொருட்கள் உற்பத்தி
த�ொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2017ம் நிதியாண்டில் 3 லட்சத்து
17 ஆயிரம் க�ோடி ரூபாய் மதிப்பில் மின்னணுப் ப�ொருட்கள் உற்பத்தி
செய்யப்பட்ட நிலையில், கடந்த நிதியாண்டில் இது 6 லட்சத்து
40 ஆயிரம் க�ோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது. உலகின்
மிகப்பெரிய டிஜிட்டல் அடையாள திட்டமான ஆதாரின் கீழ் 2022
நவம்பர் 31 வரை 129 க�ோடியே 41 லட்சம் ஆதார் வழங்கப்பட்டுள்ளன.
மின்னணுப் ப�ொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க உற்பத்தியுடன்
கூடிய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
அடுத்த தலைமுறை த�ொழில் பாதுகாப்பு திட்டத்தின் (என்.
ஜி.ஐ.எஸ்) கீழ் ஸ்டார்ட்டப் நிறுவனங்களை ஊக்குவிக்க சிறப்பு
ஆதரவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.பாரத மென்பொருட்கள்
த�ொழில்நுட்ப பூங்காக்ககள் மென்பொருள் ஏற்றுமதியை ஊக்குவிக்க
பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.மின்சாரத்தில்
இயங்கும் வாகனத்தின் உற்பத்தியை உள்நாட்டிலேயே அதிகளவில்
மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
இணையதள பாதுகாப்புக்காக தேசிய உயர்திறன் சைபர் பாதுகாப்பு
மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதைத்தவிர உமங், ஆர�ோக்கிய சேது, கி.எஸ்.டி பிரைம், வி.எல்.
டி.எஸ் என பல நூறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இதனால், டிஜிட்டல் நடைமுறைகளுக்கு வேகமாக மாறிவரும்
நாடாக பாரதம் திகழ்கிறது. மின்னணுவியல் மற்றும் தகவல்
த�ொழில்நுட்ப அமைச்சகத்தின் பல்வேறு நடவடிக்கைகள் மக்களின்
வாழ்க்கையை எளிமைப்படுத்தியுள்ளத�ோடு, மின்னணுவியல்
ப�ொருட்கள் உற்பத்தியில் பாரதம் தன்னிறைவை அடைவதற்கான
சூழலையும் இவை மேம்படுத்தியுள்ளன. இதுகுறித்த விரிவான
தகவல்களை https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1883839 என்ற
இணையமுகவரியில் பெறலாம்.

É#aghuj« njáa thu ïjœ


rªjh brY¤j / òJ¥ã¡f
www.vijayabharatham.org
v‹w ïizajs« mšyJ
044 - 26420870 v‹w bjhiyngá
v©Âš bjhl®ò bfhŸsî« .
93613 99006
19

You might also like