Professional Documents
Culture Documents
Ka 14 Uc
Ka 14 Uc
http://groups.yahoo.com/group/santhavasantham/
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவியரங்கம் :14
தலைப்பு: இப்படி நானிருந்தால்.....
செப்டெம்பெர் , 2004
தலைவர்: கவிஞர் N. சுவாமிநாதன்
============
1.
அன்பர்களே,
நெருப்பாக நானிருந்தால்....
பெண்ணாக நானிருந்தால்...
ஆணாக நானிருந்தால்..
நீராக நானிருந்தால்...
குழந்தையாய் நானிருந்தால்...
கடவுளாய் நானிருந்தால்...
பறவையாய் நானிருந்தால்..
காற்றாக நானிருந்தால்...
ஊமையாய் நானிருந்தால்..
சர்வாதிகாரியாய் நானிருந்தால்..
காலமாய் நானிருந்தால்...
நானாக நானிருந்தால்..
பூவாக நானிருந்தால்...
இளைஞனாய் நானிருந்தால்..
போஜனாய் நானிருந்தால்..
நா னின்றி நானிருந்தால்
எண்ணம்போல் நானிருந்தால்
நிலவாக நானிருந்தால்
சித்தனாய் நானிருந்தால்
அன்புடன்
இலந்தை
===========
2.
கடவுள் வாழ்த்து
இரு வேண்டுகோள்கள்
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
3.
முன்னுரை
=======
ஒவ்வொரு கவியரங்கமும் ஒவ்வொரு புதுமையாய்த் தொடங்குகிறது.
எ.கா
இலந்தை
===============
கலகலக்கும் சொல்கொடுத்து மனம் நகைக்க வைக்கிற
கலைபலத்தில் கவிசிரிக்கும்,பொருள்விரிக்கும் அற்புதம்
இலையிவர்க்கும் இணையெனப்பேர் எடுத்திருக்கும் சாமியே
நலமுயிர்க்கும் அரங்குயிர்க்க நகையுதிர்த்து வெல்கவே!
ஊமையாய் நானிருந்தால்?
பேசா அநுபூதி-நாம்
பெற்றால் இலை பீதி
ஏசாத நல்லவன்நான் - உளத்தில்
எட்டிடும் வல்லவன்நான் (ஊமையாய்)
வாயாடி என்றெனையே-எவரும்
வார்த்தை சொலப்போமோ?
ஓயாது பேசுவதும் - ஒரு
ஊனம் அறிவீரோ? (ஊமையாய்)
ஆற்றல் புலன்களையே-நானும்
ஆண்டு புகழ்பெறுவேன்
ஊற்றம் உளத்தினுள்ளே- நாளும்
ஓடவிட்டுப் பார்ப்பேன் (ஊமையாய்)
இலந்தை
4-9-2004
=======
ஊமை குறையிலையே -என்ற
. உண்மை எடுத்துரைத்தீர்
தீமை பெயரிலன்று -- நமது
. சிந்தை தளத்தினிலே
பசுபதி
=============
வாயால் ஊமையானாலே
இவ்வளவு நன்மைகளென்றால்
கையும் ஊமையானால் - என்
எழுத்தின் உளரல் நிற்கும்!
அன்புடன்,
ஆர்.எஸ்.மணி
==========
சொத்தென் றுரைத்தவரே சோகத்தைச் சொல்லாம(ல்)
உத்தமமாய் வந்தகவி; உள்ளம் உறைந்ததே
அன்புடன்
கஜன்
==========
நாவலர் என்றிருந்தேன் - பேசா
நல்லவன் என்றுசொல்லி
பாவன்மை காட்டிவிட்டீர் - வாழ்க!
பன்முறை போற்றுகிறேன்.
அன்புடன்
மதுரபாரதி
===========
சும்மா இருந்தே
அம்மா தவரும்
தம்முள் அறிவார்
பெம்மான் இறையை
..அனந்த்
=============
இலந்தை சொல்லழகு- என்னை
இங்கு மயக்கியது
கலங்கரை விளக்கம் -அவர்
கவி இலக்கணமே!
ராஜரங்கன்
==========
பூட்டைப் போடென்றால் - இந்த
நாவும் கேட்கிறதா
வேட்டை கிடைத்ததுவாய் - பேய்
ஆடிக் களிக்கிறதே
அன்புடன்
ஆசாத்
===============
இருள் என்பது குறைந்த ஒளி - பாரதியின் வரிகளைப் போல்
'எல்லொரும் பாதி ஊமைதான் அறிவீரா ' இலந்தையாரின் கவிதை
வரிகள் எனக்குள் தொடர்ந்து பல சிந்தைனைகளைத் தூண்டி
வருகின்றன.
பா வீரராகவன்
============
4.
சந்த வசந்தக் கவியரங்கம் - 14
கவிமாமணியாச்சே.
இதை எப்படி எல்லாம் பாடலாம் என்றும் அழகாக சொன்னார்.
அட்டேங்கப்பா. நாலு சீர், ஆறு சீர், எட்டு சீர் விருத்தம், இரட்டை
சமநிலை, கண்ணி....எவ்வளவு சமாசாரம்.
(பார்வையாளர்கள் மரபுப்பாடல் பற்றிய தங்கள் சந்தேகங்களை
இங்கேயே எழுப்பலாம். பதில் கிடைக்கும்.)
*******************
**************************************
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
*******************************************************************
பார்வையாளர் 1: : எனக்கு ஒரு சந்தேகம். கவிஞர்கள் தாங்கள் பாடும் பாடல் வகை
என்னனு சொன்னா, 'பார்வையாளர்க்கு' உதவியா இருக்கும்னாரே, தலைவருக்கு எல்லாப்
பாவகையும் தெரியுமாமா?
5.
கவியரங்கம்-14
+++/\/\++++
இறைவணக்கம்
===========
வெண்பா
<><><>
நானாரோ? நீயாரோ? நானறியேன்; நீயறிவாய்;
ஆனாலுன் பந்தம் அறிகின்றேன் -- வாழ்நாளில்
மண்ணில் வழியொன்று காட்டு! விடையவனே* ,
உண்மையொளி என்னுள் உணர்த்து.
தலைவர்,அவை வணக்கம்
===================
வெண்பா
<><><>
தோமிலா ஆசத்தில் தோய்ந்தகவி அம்பெய்யும்
சாமிநா தப்பேர்ஆ சாமியே! சந்தக்
கவிஞர்காள்! வையக் கலைஞர்காள்! இங்குச்
செவிமடுப்பீர் என்பாச் சிறிது.
ஆசம்= நகைச்சுவை
*********************
நானின்றி நானிருந்தால்
<><><><><><><><>
எண்சீர் விருத்தம்
^^^^^^^^^^^^^^^
நான்:
மயில்:
===========
வெண்பா
*******
"யானென்(று) எனதென்(று) இருந்தஎனை ஆறுமுகன்
வானமயில் சேவலென மாற்றினான் -- ஞான
சுகந்தரும் புத்திமதி சூரன்நான் சொல்வேன்:
அகந்தையை இன்றே அகற்று . (2)
நான்:
=============
எண்சீர் விருத்தம்
^^^^^^^^^^^^^^^
தருக்கெனுமோர் பெரும்படியைத் தாண்டிச் செல்வேன்,
. சரவணனின் தொண்டனெனும் பதவி வெல்வேன்;
குருவெனக்குச் சூரனென முடிவெ டுப்பேன் ,
. குக்குடமாய்க் காலையிலே குரல்கொ டுப்பேன்;
சுருதிமுடி ஒலியெழுப்பச் சூரச் சேவல்;
. சோம்பேறி உலகெழுப்ப என்றன் ஆவல்;
பரிதியொளி பரவுமுன்னர் பாலர் காதில்
. பதித்திடுவேன் பாரதியின் 'பாப்பா'ப் பாடல். (4)
சுருதிமுடி=பிரணவம்
பசுபதி
~*~o0O0o~*~
============
கடினமான தலைப்புத்தான் ஆனால் என்ன
கவிதையினைப் பசுபதியார் செதுக்கி விட்டார்
வடிவத்தில் முதலாக சேவற் பின்னே
வடிவோடு நடமாடும் மயிலும் ஆனார்
கடிதாக நானுமொரு புள்ளாய் மாறி
காற்றினிலே கலந்துதான் கனடா சென்று
தடியாக ஒருமாலை போட்டு என்றன்
தமிழாசான் தாளினையே பணிந்து நிற்பேன்..
அன்புடன்
சி.க.
============
> <pas_jaya@y...> wrote:
> எண்சீர் விருத்தம்
அன்புடன்
ஆசாத்
==========
நானின்றி நானிருந்தால் என்பதற்கும் நானின்றி இருந்தால் என்பதற்கும் பெருத்த
வேறுபாடு. நானின்றி இருந்தால் என்ற தலைப்பிருந்தால்
செல்வேன் கொடுப்பேன் என்று சொல்வதுகூடப் பிழையாகிவிடும்.
நானின்றி நானிருந்தால் என்ற
தலைப்பிற்குச் சூரனை பசுபதி எடுத்துக் கொண்டது வெகு பொருத்தம்.
தான் அழிந்தாலும் தனியாக நின்றவன். அழிந்து வாழ்பவன்.
புள்ளியே இல்லாமல் புள்ளி இருப்பதில்லையா?
பரிமாணம் இல்லாததற்குப் பரிமாணம் கொடுப்பதில்லையா?
நானின்றி நானாக இருப்பதும் அதில் ஒன்று
ஊமையாக நானிருந்தால்
நானின்றி நானிருந்தால்
சௌந்தர்
==============
பசுபதி: அற்புதக் கருத்து! அருமைப் படைப்பு!
சூரன் மாய்வின்
சாரம் தனைநீர்
கூறும் அழகில்
ஏறும் மகிழ்வே!
... அனந்த்
========
வானுலக சூரமயில் கந்தனுக்கு
பசுபதியாம் இந்தமயில் எங்களுக்கு! - உயிர்
போனபின் பார்த்திடுவோம் அந்த மயில் - நம்மை
காத்திடுமே இன்றைக்கு இந்த மயில்!
அன்புடன்,
ஆர்.எஸ்.மணி
=========
6.
சந்த வசந்தக் கவியரங்கம் - 14.
இலந்தயாருக்கு பாராட்டு
மோனமொரு சாதகமாமே
வானமருகில் வருமாமே
சோதியுமதில் தோன்றுமாமே
வாயாடி என்றேசாராம்
புகன்றதைப் பொறுக்கவேண்டாம்
நுணல்போல் கெடவேண்டாம்
ஊமையொரு ஊனமல்லவாம்
உண்மையிலது சொத்தாம்
உலகிலுயரும் வழியேயாம்
வீணாயினி வாய்திறவேன்
வன்சொல் தவிர்ப்பேன்
வளம்பெற உயர்வேன்
{முனைவர் பசுபதியின் அவை, தலைவர் வாழ்த்து வெண்பாவின் மூன்றாம் அடியில் " கவிஞர்காள்! வையக்
கலைஞர்காள்!" என்று வருவதைச்சுட்டி,
"நின்றசீர் கவிஞர்காள் = நிரைநேர்நேர் = புளிமாங்காய்
வர வேண்டியது நேர், ஆனால் வரும் சீரோ 'வையக்' என்றுள்ளது. இது
நிரையல்லவா, தளை தட்டியதே " என்று அவைத்தலைவர் கேட்டதும்,
கவிஞர், தலைவரின் தலையைத்தட்டி, "யோவ். ஐகாரக்குறுக்கம் என்று கேள்விப் பட்டதுண்டா?
சீரின்
தொடக்கத்தில் 'ஐ' நெடிலாக ஒலிக்கும்.
அதனால்... வையக் = நேர்நேர் = தேமா" என்று சொன்னதும்,
"ஓ அப்படி ஒன்று உண்டோ, பள்ளியில் தமிழாசிரியர் இதுபற்றி
காலை நாலாவது பிரிவில் சொன்னபோது அவர்குரல் பசிமயக்கத்தில்
தன் காதில் குற்றியலுகரமாய்க் குறுகி ஒலித்து விழாமல் போனதைத் தலைவர் நினைவு
கூர்ந்ததும், இங்கே அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுகின்றன}
In English
. 'The making of a god' was among the top 3 poems
selected for Prize in the All India Poetry Contest jointly
held by the Poetry Society, India and
The British Council Division in India in 1990.
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
***********************************************************
7.
காற்றாக நான் இருந்தால்...
*****************
*****************
இறைவணக்கம்
-----
குருவணக்கம்
-----
அவை வணக்கம்
-----
கற்றவர் கவிவரம்
பெற்றவர் பெரியவர்
முற்றிய சபையினில்
உற்றனன் வணங்கினேன்!
காற்றாக நானிருந்தால்...
-----
இளமையில்:
பருவத்தில்:
இன்றைக்கோ...
ooxOxoo
அன்புடன்
மதுரபாரதி
===========
இளமையில், பருவத்தில், இன்றைக் கென்றெல்லாம்
வளமான கற்பனையில் வந்ததொரு தென்றல் !
பசுபதி
==========
ஐயா மதுர பாரதியாரே,
அன்புடன் புகாரி
===========
மெல்லமெல்ல ஆரம்பிச்சு சூறாவளி ஆக ஆன
மடிப்பாக்கம் காத்ததுவும் மனசை மயக்கிடுதே..
ஆதியோ டந்தமாய் எல்லா விஷயமும்
காதில் ஒலிக்கவைத்த காற்று
ஊற்றுப்போல் பொங்கி உணர்வுகளைத் தீண்டிமன
மா ற்றிய தென்றலிக் காற்று
குறுகுறுத்த கண்கொண்ட காரிகையர் மேலே
குறும்பினைச் செய்ததிக் காற்று.
அன்புடன்,
ஆர்.எஸ்.மணி
==========
காற்றைப் பிடித்துக் காவியமாக்கிக்
காலம் வென்றாய் நீ!
சோற்றைத் தின்றே சோர்பவருக்கு
சொர்க்கத் தழுவல் இது!
காற்றில் வருமாம் தீங்குழல் நாதம்
காதில் ஒலிக்க வைத்தாய்!
போற்றுவம் உந்தன் பொற்கவியிங்கு
பொலிவதைக் கண்ணுற்றே!
ராஜரங்கன்
==============
சார்லி, ஃபிரான்செஸ், இவான் என்றெல்லாம் சூறாவளியில் அவதியுறும் இந்தப்
பகுதி மக்களுக்குச்
சந்தம் வீசும்
மந்த மாருதம்
சௌந்தர்
===========
வாக்குக் கெட்டா மனோலயத்தின்
.... வகையினை உணர்ந்த ரமணரைக்கை
தூக்கி வணங்கித் தொழுதவிதம்
.... தொட்டது மனத்தை; காற்றினைநீர்
நோக்கும் பற்பல வகைகளினால்
... நூதன மான நூலிழைகள்
ஆக்கும் எழிலார் ஆடையொன்றை
... அழகுற அணிந்தாள் தமிழணங்கு!
அன்புடன்
அனந்த்
=============
8.
சந்த வசந்தக் கவியரங்கம் - 14
1)-காயத்ரியின் காதல்(கவிநூல்)
இது போட்டியில் முதற்பரிசு வாங்கித்தந்தது( அமுதசுரபி குறுங்காவியப்போட்டி)
2)-எளிய யோகாசனங்கள் எனும்யோக நூல் இதுவரை 11 பதிப்பு கண்டுள்ளது.
3)-ஆதிசங்கரரின் ஆறு மதங்கள்-64 பக்க சிறு நூல்..கண்ணதாசன் பதிப்பகம்
4)- தற்போதைய ஸ்ரீகாஞ்சிமாமுனிவர் கவி நூல்..இது
5)-வது-பெண்களுக்கான யோகாசனங்கள் -நூல்- 2 பதிப்பு கண்டது.
காஞ்சி மாமுனியைப் பற்றி இவர் எழுதிய பாடலை நம்ம கனடா மணி சார்
இசையமைத்துப் பாடியிருக்கிறார்.
'சித்தனாக நானிருந்தால்".
அல்லாமல்,
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
*************************************************
பார்வையாளர் 1: தலைவர் தூங்கலோசைனா குறட்டை விடறதுனு
நெனச்சிட்டார். தனக்கு சித்தர்களைப் பத்தி தெரியும்போல பெரிசா
அலட்டிக்கறார்..
சித்தம் சீராயிருப்போர்க்கே சித்தி கிடைக்கும்
சித்தமில்லாதோர் வித்தை யெல்லாம் சிரிப்பேங்கறது இவருக்கு எங்க
தெரியப்போறது?
9.
சித்தனாய் நானிருந்தால்..?
&&&&&&&&&&&(கவியோகி வேதம்)
நகைச்சுவையில் தேர்ந்துள்ள-எம்
..நல்ல தலைவருக்கு
குகைக்குள் குனிவதுபோல்-யான்
..குனிந்துவணக் கம்சொன்னேன்;
..
அரங்கைக் கலக்குகின்ற-கவி
..அற்புதச்சிங் கங்களே!
திரும்பவும் உங்களுக்கும்-இத்
..திசையில்வ ணக்கங்கள்!
..
"சித்தனாய் நானிருந்தால்"-ஓ!
..செகமுருட்டும் நற்தலைப்பு!
பித்தனாய் மாறிவிட்டேன்!-கனல்
.பீறிடத், தொடங்கிவிட்டேன்!
..
வானவில் நிறங்களைப்போல்-உங்கள்
..மன எண்ணம் மாறிடலாம்!
ஆனஎன் ஆசைகளை-யான்
..அப்படியே சொல்லிடுவேன்!
..
திருப்பம் விளைவித்த-கூனியைத்
..திட்டுவ தில்லையன்றோ?(அதுபோல்)
கருப்பம் புதுமைகொண்ட-என்
..கவிக்காய்நீர் திட்டவேண்டா!
..
சித்தனாய் யானிருந்தால்?,-என் தாய்
..தேசத்தை மாற்றிடுவேன்!
எத்தர்கள் கையிலவள்-படுதுன்பம்
..யானேதான் நன்கறிவேன்!
..
தாயின் வளங்களெல்லாம்-பல
..தருக்கர் திருடுகின்றார்!
மாயப்போர் வையில்சென்(று)-அவரை
..மாய்க்க வழிசெய்வேன்!
..
கொஞ்சமும் நேசமின்றி-பலர்
..கொடூரம் விளைக்கின்றார்!
நஞ்சென மாறிடுவேன்-சித்தால்
..நயமாக வென்றிடுவேன்!
..
மரங்களை வெட்டிநின்று-தாயின்
..மழைக்கருணை தடுப்போரின்
கரங்களைச் சாய்த்துநின்று-அவர்தம்
..கண்ணை நடுங்கவைப்பேன்!
..
காமம்தம் கண்ணில்மின்ன-பல
..கன்னியரைக் கெடுப்போரின்
தீமை உறுப்பினையே-நொடியில்
..தீய்க்க வழிவகுப்பேன்!
.
சாதிசாதி என்றுசொல்லி-நல்
..சமுதாயம் தேய்ப்போரை
பாதிவாய் கிழித்துநின்று-(இ)ச்சித்தன்
..பயங்கரியாய் மாறிடுவேன்!
..
ஆட்களைக் கடத்திநின்று-பல
..அநியாயம் செய்பவரை
வாட்டியே தீயிலிட்டு--கடும்
..மனப்பயம் வரச்செய்வேன்!
..
சட்டசபை தன்னைதினம்-ஒரு
..சண்டைசபை யாக்குவோரை
இட்டப்படி முடியுலுக்கி-அவரை
..எளிதில்மா றச்செய்வேன்!
..
"வீரப்பனை"த் தேடிநிதம்-சொத்தை
..வீணாக்கு கின்றனரே!(அவனை)
ஈரமுள்ள பசுவாக-மாற்றி
..எஞ்சிய சொத்துகாப்பேன்!
..
பிஞ்சுகளின் கல்விமுறை-மாற்றப்
..பெரிசுகளைப் படுத்திடுவேன்!
அஞ்சிடா(து) அனைவர்க்கும்-மூளையில்
..அறிவுஎழ விதிவகுப்பேன்!..
..
சாராயப் போத்தல்களை-எங்கும்
..சட்டென மறைத்திடுவேன்!
மாறாகக் குடியர்நெஞ்சில்-த்யானம்
..மலர வழிவகுப்பேன்!
..
தண்ணீர் வளமிலையென்(று)-இனித்
..தள்ளாட்டப் பேச்சுவேண்டா!
எண்ணிலாக் கிராமத்திலும்-நதிகளை
..இணங்கி வரச்செய்வேன்!
..
சித்தனிங்கு வந்துவிட்டேன்!!-யாரும்
..தீமைகள் எண்ணமாட்டார்!
சுத்திடும்-என் மனக்கண்ணில்-அவை
..சுருக்கெனத் தெரிந்துவிடும்!
..
கள்ளம் பிறக்குமுன்பே-என்கை
..காத்துத் தடுத்துவிடும்!
பள்ளங்கள் தோன்றுமுன்பே-என் கண்
..பாய்ந்து தடுத்துவிடும்!
..
பூட்டே இனிவேண்டா!-வீடுகள்
..பொழுதும் திறந்திருக்கும்!
கூட்டுக் குடும்பங்கள்-இனிக்
..குலவி மகிழ்ந்திருக்கும்!
..
என்தாய்மண் மீதினிலே-மலர்கள்
.. எங்கும் கொலுவிருக்கும்!
என்தாய் கண்களிலோ-மகிழ்ச்சி
..என்றும் ததும்பிநிற்கும்!
..
மேடெலாம் வயல்வெளியாய்-ஆனால்
..மேன்மை பொலியாதோ?
காடெலாம் வரம்கொடுத்தால்,-தங்கக்
..கருணையிங்கு மேவாதோ?
..
மேகங்கள் சூல்கொண்டால்-இந்த
..மேதினி செழிக்காதோ?
ஊகங்கள் உண்மையென்றால்-என்றன்
..ஓர் சித்து பலிக்காதோ?
..
சித்தன்'என யான்'உலவ-காளி
,,சீக்கிரம் வரம்தருவாள்!
பத்தரைமாற் றுப்பொன்,என்-பாரதம்
..பாரிலென மாறிடும்,பார்!
&&&&&&&&&&&&&&(கவியோகி வேதம்)
..
அன்புள்ள கவியோகி வேதம்: அருமையான நடையில் அழகுக் கவிதை!
அனந்த்
==========
வேதமொரு சித்தனானார் -- அழகு
. மிளிருமொரு கவிபடைத்தார்
மாதமொரு கவியிதுபோல் -- செய்ய
. வரமெனக்க ளிப்பாரோ ?
பசுபதி
===========
சித்தர்கள் யாவையுமே- தங்கள்
சித்தி வலிமையினால்
முத்தி அடைவதற்கே- பல
முயற்சி செய்கின்றார்
ராஜரங்கன்
==========
ஆக்கம் பெருக்கவே ஆலோசித்து
ஊக்கம் உயர்த்தவே உத்தேசித்து
ஏக்கம் தீரவே எமைநேசித்து
நோக்கம் சிறந்ததே நும்தம் சித்து
சௌந்தர்
============
வித்தைகளை வார்த்தைகளில் காட்டுகின்ற
விற்பன்னர் யோகியார்தாம் இங்குவந்து
சித்தனாக மாறுவதால் செய்பவற்றைச்
சிறப்ப்பாகக் கவிதையிலே வார்த்துவிட்டார்
நித்தநித்தம் ஒவ்வொருவர் காணுகின்ற
நிறைவேறா கனவுகள்தான் ஆனால் என்ன
வித்தகர்கள் மனதுவைத்தால் மாயையெல்லாம்
விரைவாக நனவாக மாறுமன்றோ..
அன்புடன்
சி.க
==========
சித்தனாய் இவர் இருந்தால்
தேசத்தையே மாற்றிடுவார்.
கொடியவரை மாற்றிடுவார் - சாதி
வெறியர்களை வீழ்த்திடுவார்.
அன்புடன்,
ஆர்.எஸ்.மணி
===========
சந்த வசந்தக் கவியரங்கம் - 14.
கவியோகிக்கு பாராட்டு
வே.ச. அனந்தநாராயணன்
காவடி சிந்து, நாக பந்தம், இன்னும் சில கடின பாடல் வகைகள் இயற்றியுள்ளார்.
இவருடைய இணையத்தளம்:
http://www.science.mcmaster.ca/biochem/profs/ananth.html.
'நெருப்பாய் நீரிருந்தால்'
சுள்ளிகளைக் கொளுத்தும்
பள்ளிகளைத் தவிரும்
குழம்பைக் காய்ச்சும்
குழந்தைகளை விடும்
எட்டியே நிற்கிறோம்
இதமான சூட்டுக்கு
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
****************************************************
பார்வையாளர் 1: என்னவோ 'கடின பாடல்' வகைன்னாரே அது என்னவாம்?
10.
'சந்தவசந்தம்' கவியரங்கம் - 14 - அனந்த்
தலைப்பு: "நெருப்பாக நான் இருந்தால்"
(தலைவர் முன்பு கேட்டவாறு பாடல்களின் இனங்களைக் குறிப்பிட்டிருக்கிறேன்)
===================================================
<0> இறை வணக்கம் <0>
பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்:
<0> பாடுபொருள்:
வஞ்சித் துறை:
நெருப்பென உருக்கொளும்
விருப்பினை மனத்தினில்
இருத்திய விதத்திலென்
கருத்தினை உரைப்பனே
=============================
<> நெருப்பாக நான் இருந்தால் <>
=============================
குறள் வெண்செந்துறை:
மேலும்:
***********
இப்படிப் பெருமைப்படுவது ஒருபுறமிருக்க ......
(சமனிலைச் சிந்து)
<0><0><0><0>
தீயென்று சொல்லுமுன்-தலைவர்
தீக்குச்சி உரசுமுன் - மின்னியது
தீப்பற்றிக் 'கலம்பகம்' -இங்கோர்
தீங்கவியாம் பெட்டகம் !
பசுபதி
========
"ஒருக்காலும் தீவழியில் - செல்லா
உத்தம னாயிருப்பேன்"
இலந்தை
===========
அன்பர் அனந்தர்
அன்புடன்,
ஆர்.எஸ்.மணி
===========
எம்.எஸ் ' மீரா ' படத்தில் வரும் 'அரங்கா உன் மஹிமையை ' மெட்டில்
பாடவும்:
அனந்தா உன் மஹிமையை அறிந்தவர் யார்?
அறிந்தவர் யார் எல்லாம் அறிந்தவனே!
ராஜரங்கன்
=========
அன்பின் அனந்தருக்கு
தீயாய் நீரிருந்தால் நந்தலாலா - தமிழ்த்
தீஞ்சுவையும் கூடிடுதே நந்தலாலா...
களிப்புடன்
சி.க
=====================
நெருப்பு,
ஆடலரசன் கைச்சட்டியிலாம்
அரனாரின் விழியிலுமாம்
அண்டமெல்லாம் தோற்றுமாம்
அதிலுள்ளதைக் காக்குமாம்
ஆங்கே குண்டலினியாய் உறங்குமாம்
அருந்ததவத்தால் ஆத்ம ஒளியாகுமாம்
துப்பார்க்கு துப்பாயவை துப்பாக்குமாம்
தீயவை பொசுக்குமாம்
அறிஞரிடம் அணையாதாம்
ஆற்றல் பெருக்குமாம் !
அகந்தையும் நானே
செருக்கும் நானே ன்னு விவகாரமா ஆயிடுமா?
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
*******************************************************
பார்வையாளர் 1: அதென்ன பிட் நோட்டிசு ?
கவியரங்கத் தலைவருக்கு
----------------
அவையோர்க்கு
----------
கவிதை
-----
அன்புடன்
ஆசாத்
=========
ஆசாத் கவிதை தந்த சிந்தனை:
பசுபதி
===============
அன்புள்ள ஆசாத்
தனக்குள் தன்னைத் தேடும் ஒருவன்
தவிக்கும் வகையைத் தரமாய்த் தெருட்டி
மனக்கு கைக்குள் வருடி என்றன்
வடிவம் அறிய வைத்தீர் நன்றி!
அனந்த்
=============
' நாவும் ருசியும் காதல் கொண்டதும்
நாடித்தாடியில் 'நான்' ( ரொட்டி?) தொலைந்ததுவே'
முடிபுகள்:
1 தாடி அவ்ளோ பெரிசு
2 தொலஞ்சு போற அளவுக்கு நான் ரொட்டி அவ்ளோ சின்னது. நாவால் தேட
முடியாது.
விரல் தேவை.
எம்மாரார்
===========
அழகான கவிதைகளை ஆசாத் தந்தார்
அகவலெனும் விதமென்றே இங்கு சொல்லி
இளகுமனம் கொண்டதுதான் நானாய் நானும்
இருப்பதுவா என்றொன்று எழுந்ததென்னுள்
தமிழில் ஆர்வம்
மயிலாடுதுறையில்- தருமை ஆதீனம், அன்பநாதபுரம் அறக்கட்டளை, சமரச சன்மார்க்கம்-முதலிய
அமைப்புக்கள் நடத்திவந்த தமிழரங்குகள், வாரியார், கீரன் (முனிசிபல் உயர்நிலைப் பள்ளி-
எங்கள் பள்ளி
மாணவர்), கி.வா.ஜ, கிரிதாரி ப்ரஸாத் முதலிய பெரியவர்களின் சொற்பொழிவுகளில் ஈடுபாடு;
கல்லூரிப் பேராசிரியர்கள், மற்றும் அறிஞர்கள் பங்கேற்கும் பட்டி மன்றம் முதலிய தமிழ்
ஆர்வத்தை! த்
தூண்டின.
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
*******************************************************
12.
சந்தவசந்தக் கவியரங்கம்-14
[இதுவாக நானிருந்தால் என்ற வரிசையில்]
பறவையாக நானிருந்தால்
பட்சிராஜன் வாழ்த்து
தலைவர் வணக்கம்
அவை வணக்கம்
[குருகு- நாரை]
சௌந்தர்
========
திருக்குருகூர் நம்பியென தெய்வமாக் கவி எழுதி
திருக்குருகூர்த் தம்பியெனப் பெயர் பெற்றீர் சௌந்தரரே!
திருக்குருகூர்தவிர பெரும் திருவடியை வாகனமாய்த்
திருக்குருகூர்ப் பெருமாளும் ஏன் உகந்தான்? தெரிகிறது!
ராஜரங்கன்
==============
தானொரு பறவை என்ற
. தலைப்பில் பாடச் சொன்னால்
கானடா கவிதை வானைக்
. கலக்கினார் குயிலாய்ச் சௌந்தர் !
பசுபதி
==========
அன்புள்ள சௌந்தர்,
வெண்பாவிலும் விருத்தத்திலும் நல்ல ஆளுமை பெற்றிருக்கிறீர்கள்.
அறுசீர் விருத்தம் தங்குதடையின்றிச் செல்கிறது.
"தோரணக் கூடு வேயும்
. . தூக்கணாங் குருவி ஆக?."
மிக அருமை.
இலந்தை
===========
அன்புள்ள சௌந்தர்: வழக்கம்போல உங்கள் கவிதையில் காணும் கருத்தழகும்
ஆற்றொழுக்கான நடையும் நெஞ்சை அள்ளுகின்றன.
பறவையாய் நானிருந்தால்
இசைநயம் தப்பாமல்
சிந்தனைச் சிறகடிப்பேன் என்று
சத்தமாய்ச் சொல்கிறது கவிதை
அன்புடன் புகாரி
===========
ஆடிடும் மயில்நீரென்றால் ஆங்கொரு மங்கை யாக
அன்புடன்
சி.க.
=========
இன்றைய ஸ்பெஷல்,
இறா, புறா, சுறா, விறா னு மிலிடரி ஓட்டல் மெனு மாதிரி
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
**************************************************
பார்வையாளர் 1: பாவிலக்கணத்துல தலிவர் தேறிட்டார் போல இருக்கே/
அடிமறி மண்டிலமாமே...பலே..பலே
13.
கவி அரங்கம் -14 நான் இளைஞனாக இருந்தால் -ராஜரங்கன்
இறை வணக்கம்
இளைஞனாக இருந்தாலாவது?
இன்னா இன்ஸல்ட்! அதுவும் எனக்கு!
இளையவனே நான். இளைத்தவன் இல்லை.
இல்லாள் சான்றை வாங்கித் தரவா?
( பழைய சந்தம்)
ராஜரங்கன்
==================
ஊன்று கோலிலும்
சான்று தருகிற
ஆன்ற புலவர்
தோன்றும் இளைஞர்
இலந்தை
==========
கருமால் மருகன் கடைக்கண் வீச்சோ?
சரளத் தமிழில் சரமாம் சொற்கள்
நரம்பில் இளமை; நடனச் சந்தம் ;
அரங்கில் தந்தார் அரச ரங்கர்
பசுபதி
=====
ராஜரங்க அறிஞரே,
சில சமயங்களிலே எனக்கு என் உடல் இளமையாக இருக்கக்
கூடாதா என்ற ஏக்கம் வரும்.
இனிமேல் வராது!
சிரிப்புக் கவிதை கொடுத்து என்னை சிந்திக்கவும் வைத்தீர். நன்றி!
அன்புடன்,
ஆர்.எஸ்.மணி
===========
அரசரங்கர் அவிழ்த்துவிட்டார் பாட்டு
அதனுள்நல்ல சரக்கையெல்லாம் போட்டு
... சரசமொன்றே இளமையென்று
... விரசம்விலை விற்பவர்க்குப்
பரிசளித்தார் பாரும்ஒரு 'வேட்டு'!
..அனந்த்
=
சந்த வசந்தக் கவியரங்கம் 14
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
**************************************************************
பார்வையாளர் 1: அடுத்து எல்லே ராம்னா வந்திருக்கணும்...
14.
அவை வணக்கம்.
பெண்ணாக நானிருந்தால்...
அட...
நினைத்தே பார்த்ததில்லையே
பெண்ணாக நானிருந்தால்
சலூனுக்குள் புறங்காலால்
புறக்கணித்துத் தள்ளியக்
கால்நூற்றாண்டுத்
தலைமயிரைத்
தைலத்தால் தாலாட்டியிருப்பேனோ ?
என்
ஐந்து நிமிட ஆடைத்தேர்வை
அரை நாள் என்றாக்கி,
நான்கு நிமிட ஒப்பனையை
நாள்கணக்கில் நீட்டித்திருப்பேனோ ?
அழகுமீசை ஆண்களையெல்லாம்
புருவத்தால் புரட்டிப் போட்டு
பொழுதெல்லாம் புன்னகைத்து
வாலிபரிடம் வாலாட்டியிருப்பேனோ ?
இல்லை,
கனவுகளுக்குத் தாழ்ப்பாள் போடும்
என்
நிறத்துக்காகவே
நிராகரிக்கப் பட்டிருப்பேனோ ?
இப்படியெல்லாம்
நான் நினைத்தே பார்த்ததேயில்லையே !
வயிற்று வாழ்க்கையை
ஓர் அழுகையுடன் முடித்து வைக்கும்
மழலையை,
வயிற்றுப் பிழைப்பைக் காரணம் காட்டி
மரணப் பள்ளத்தாக்கில்
எறிந்து விடும் நிகழ்வுகளும்,
மோகத்தீயின் வெப்பத்தை
ஓலைப்பாயின் முதுகில் விரித்து
தவறிப்போகும் நாளில்
மொட்டுக்கு மலர்வளையம் செய்ய
கருக்கலைப்புக் கூடத்தில்
ஒப்பந்தம் இடும் நிகழ்வுகளும்,
உடலின் வளர்ச்சிக்கும்
மனதின் கிளர்ச்சிக்கும்
காதலென்னும் பெயரைச் சூட்டி
தனியறைகளில்
தூக்கிட்டுக் கொள்ளும் நிகழ்வுகளும்
வரவேற்பறையில் எறியப்படும்
நாளேடுகளில்
ஈரமாய் பிசிபிசுக்கையில்
இப்படி இருந்திருக்க மாட்டேனென்று
நினைத்ததுண்டு.
நகர இடமில்லாத
நகரப் பேருந்தில்
நகரும் கைகளை ஒடிக்கத்
திராணியின்றித் தவிக்கின்ற,
புத்தாடை போட்டுவரும்
கைம்பெண்களின் காதுகளுக்குள்
'யாரைப்பிடிக்கவோ'
என்று குரலெறியும்
குரல்வளைகளைக் குதறும்
வலிமையின்றிக் குனிகின்ற,
துப்பவும் முடியாமல்
தப்பவும் முடியாமல்
தொண்டையில் மாட்டிய தூண்டில்களாகும்
ஆசிரியர்களின்
சில்மிசச் சீண்டல்களை
அவ?தைப் புன்னகையுடன்
எதிர்கொள்கின்ற,
அகிலத்து வாழ்க்கை
அமிலத்து வாழ்க்கையாகாமல்
தடுக்க வேண்டுமென
நினைத்ததுண்டு.
எண்ணியதை விடுத்து
இப்போது எண்ணுகிறேன்.
கவிதைகளை
மரியாதைப் பீடத்தில் வைத்துக்
கிரீடம் சூட்டிக்
கெளரவிக்கும் நான்,
அங்கக் கவிதைகளே
தங்கக் கவிதைகளெனும்,
சமீபத்தியப்
பெண்கவிகள் பட்டியலில்
நிச்சயமாய்
இருந்திருக்க மாட்டேன்.
ஃ
அன்புடன்
சேவியர்
15.
முதற்பாதி நகைச்சுவையோடும் பிற்பாதி துயரச்சுவையோடும் அமைந்த நல்ல கவிதை.
ஸாரிகாக்களும் ஸ்டீஃபானிகளும் பெண்களாகப் பிறந்து எதை எதிர்கொண்டார்கள்?
என்ன பாவம் செய்தார்கள்?
ராஜரங்கன்
==========
சிரிப்பு ஊட்டி, சோகம் தந்து, சிந்திக்க வைக்கும் உன்னதமான
கவிதை!
பாராட்டுகள்!!
அன்புடன்,
ஆர்.எஸ்.மணி
=============
பெண்ணாக நானிருந்தால்
அன்புடன்
அனந்த்
============
'மங்கை'யாய்ச் சேவியர் வந்தார்
அங்கதம் சீற்றம் கலந்தார்
'அங்கப்பா' வழியில் போகாமல்
'தங்கப்பா' ஒன்று தந்தார் !
பசுபதி
==============
சந்த வசந்தக் கவியரங்கம் - 14
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
*******************************************************
பார்வையாளர் 1: தஞ்சை சரஸ்வதி மகால் பழஞ்சுவடி காப்பகத்துல
கண்ணனை சுவடியப் பார்க்கவே விடலியாமே?
16.
கடவுளாய் நானிருந்தால்...
சந்த வசந்த 14 கவிரங்கில் நா.கண்ணன்
வாழ்த்து
திரளும் கூட்டமதில்*
திம்மென்று படுத்துறங்கும்
விண்ணளந்த பெருமாள் வந்திங்கு
கண்ணளக்க வேண்டுமய்யா
கருத்துடனே கவி சமைக்க!
[* நாராயணன் =
நீதான் நித்ய வஸ்துக்களின்
திரளுக்கு ஆதாரம்
நீயே நித்ய வஸ்துக்களில்
நிரந்தரமாய் வாழ்பவன்]
அவை வணக்கம்:
செஞ்சொற் கவிகாள்!
செவ்விய மனத்தாள்!
வஞ்சிப்பா கலிப்பா
வகையான இலக்கணம்
கிஞ்சித்தும் அறிந்தேனில்லை.
எஞ்சிய பா வகையுள்
இன்னும் இடம் பெறா வசனகவிதை
உரைவீச்சு என்னுமோர் சொற்கட்டு கொண்டு
மிஞ்சிய பொழுதில் சஞ்சாரம் செய்ய
விஞ்சும் வித்தகர்க்கு
விநயமுடன் விண்ணப்பம்.
தலைவா போற்றி!
*****************************
பா(b)வம்
முண்டாசு தலைக்கட்டி
முகத்தில்கரிக்கோடிட்டு
நெஞ்சை நிமிர்த்திப் பாடும்
சின்னஞ்சிறார் போன்றே
கண்ணன் கடவுளாய் பாவித்து
கவி செய்வதிங்கே!
*******************************
கடவுளாய் நானிருந்தால்
கடுகுக்குள் காரம் போல்
சொல்லுக்குள் சுவை கூட்டி
வானவில்லின் வளைவிற்குள்
வண்ணம் இரண்டு சேர்க்கலாம்.
எட்டுக்கால் பூச்சியின்
எட்டில் இரண்டு கழிக்கலாம்.
தாய்மையின் அழகைத்
தரமுடனே கூட்டலாம்.
ஆழ்வார்கள் பன்னிரண்டை
ஆயிரத்து மூவராக்கி
அறுபத்துமூவரை
அறுபதினாயிரமாக்கலாம்!
கள்ளமில்லாப் பிஞ்சு உள்ளம்
கனியாமல் காக்கலாம்.
பூக்களின் கூட்டதைப் பெருக்கி
பட்டாம்பூச்சிக்கு பரத்துவம் தரலாம்.
கடவுளாய் நானிருந்தால்
சக்கரையின் சுவை கூட்டி
சக்கரை வியாதி ஒழிக்கலாம்.
கல்லுக்குள் தேரை போல்
சொல்லுக்குள் சுரம் வைத்து
சுந்தரமாயக் குரல் தரலாம்.
கணக்கு எல்லோருக்கும் வரவைத்து
கணக்கு வாத்தியார் கூட்டதை ஒழிக்கலாம்:-)
ஓவியத்தைப் பேச வைக்கலாம்
ஒழியாத வயதைக் குறைத்து
ஓடியாட வைக்கலாம்.
கடவுளாய் நானிருந்தால்
செல்பேசி வழியாய் ஒலி, ஒளி மட்டுமேன்?
ஒட்டு மொத்த உடம்பையே அனுப்பலாமென விதி வைப்பேன்.
வரவின்றிச் செலவு செய்யும்
வயதைக் கொஞ்சம் கூட்டுவேன்.
வாலிப, வயோதிக நண்பர்களே! எனக்கூவும்
காளிமுத்து கோஷ்டியை சலாம் கொடுத்து அனுப்பிவிட்டு
கஷாயமில்லாமலே கன்னிப்பெண் சுகம் கூட்டுவேன்.
யயாதிக்கு தந்த வரம்
யாவருக்கும் தந்துவிட்டு
கற்பைக் கழட்டிவைத்து
கண்ணன் கண்ட சுகம்
அண்டத்தில் அனைவருக்கும்
பொதுவென வைப்பேன்.
காதல் சுகமெனக் காட்டும்
கனவுத்தொழிற்சாலை சினிமா வாழ்வை
சாஸ்வதமாக்கி கன்னிப்பெண்களை
கனவுடன் உலவ வைப்பேன்.
பிரிதலைத்தவிற்கலாம்
பிரிந்தவர் கூடலாம்
மறைந்தவர் மறுபடி
மண்மீது தோன்றலாம்
வேறு....
கடவுளாய் நானிருந்தால்
பூமியைச் சமன் செய்யலாம்
கோணலைத்திருத்தி
நட்டக்குத்தாய் ஓட வைக்கலாம்.
பின் பருவ காலங்கள் மாறும்
வசந்தருது நிலவும்
கார்கால மேகமும்
இலையுதிர் நிறமும்
பனியின் சருக்கலும்
இல்லாமலே போகும்.
பூமி கொஞ்சம் கோணலாய்
ஓடினால் என்ன வந்ததது?
நிமிர்த்தி வைத்து
இழப்பதென்ன?
ஹைகூ கவிதை போய்விடும்
எனும் போது
சீர்மையில் இல்லை
ஆக்கம்
சிறிது பிறழ்வு பட்டு
வாழ்வதிலும்
வளமையுண்டு காண்.
கடவுளாய் நானிருந்தால்
கொல்லும் கொடுமையை நிறுத்தி
அன்பில் செழித்திடும் வையமென ஆக்கலாம்.
கொல்லுதல் இல்லையெனில்
மன்னுயிர் பெருகுமே?
வையம் நிறைந்து
வான் வெளி தேடுமே?
கொன்றால் பாவம்தான்..ஆனால்
அதைத் தின்றால் தீரும்!
தின்னும் வெற்றிலை பருகு நீர்
உண்ணும் சோறென உள்ளுள்
புகுந்து உரு மாற்றம் செய்வது
எவ்வளவோ தேவலைதான்.
அண்டத்தின் சூட்சுமங்கள்
அதிகமாய் அறிந்ததில்லை.
தேனுக்குள் சுவையில்லை
சுவைக்கும் மூளைக்குள் தானுண்டு
என்பது போல் பல சூட்சுமங்கள்.
வெளியும் வளையும், காலமும் வளையும்
என்பது போல் சூட்சுமங்கள்.
ஆயிரம் அணுவுலைச் சூரியன்
அண்ட பிரம்மாண்டத்தில்
அடிபடும் சுட்டைக்காய் என்பது போல் சூட்சுமங்கள்.
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத்தருவதுபோல்
உயிர் வேதிமத்தின் பிளவில் சூடுதரும் சுகத்தை வைத்து...
பிரம்ம இரகசியங்கள் பலப்பலவாய் விரியும்
வேறு.....
கடவுளாய் நானிருந்தால்?
கிளுகிளுப்பூட்டும் தலைப்பு!
இரணிய கசிபுவாக நானிந்திருந்தால்.
ஆம்.
ஆசையூட்டும் தலைப்பு
மாபலியாய் நானிருந்தால்.
ஆம்.
மகிழ்வூட்டும் தலைப்பு
மாமன்னன் இராவணணாய் நானிருந்தால்.
ஆனால்..
அதிகாரத்துவம் தொலைந்து
உலகின் கடைசி மையம் சுருங்கிக் குறையும்
வரை தவமிருக்கக் காத்திருக்கும்
வேறொரு ஆசாமி.
ஆளும் சக்தி
அதற்கொரு பெயர்
ஆண்டவன்
என்று
அறிவிலியொருவன்
சொல்லிப்போக
நாடெல்லாம்
மாபலியாய்
இரணியணாய்
இராவணனாய்
பல்கிப் பெருகி
பரிதவித்துச்
செத்தனர்
பண்டை
முன்னோர்
பலர்.
இல்லை!
நான் வேறொரு ஆசாமி.
வேறு....
அடடா!
நான் கடவுளானால்?
கடவுளை வைத்துக் கொள்ளவா?
இல்லை வைத்துக் கொல்லவா?
நான் கடவுளானால்?
கேள்விக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும்
முரண்பாடு எது?
நான் முதன் மந்திரியானால்
இது செய்வேன், அது செய்வேன்!
என்பது போல்தான் இதுவுமா?
குறையிருக்கும் இடத்தில்தானே
ஒரு புதுத்தேவை வருகிறது!
கடவுள் ஏன் குறையுடையவனானான்?
மானுட வாழ்வின் புதிர்களில் இதுவுமொன்று.
காதல் வைத்தான்
காதலில் தோல்வி வைத்தான்
மணம் வைத்தான்
மண(ன)முறிவு வைத்தான்
உறவு வைத்தான்
உறவில் பிரிவு வைத்தான்.
வாழ்வு வைத்தான்
வாழ்வில் மரணம் வைத்தான்.
நெஞ்சு வைத்தான்
நெஞ்சு நிறைய நேசம் வைத்தான்
ஆனால் நெஞ்சிலே குறை வைத்தான்
குறை வழியே முறிவு வைத்தான்.
வேறு....
அப்படியே இருந்திருக்கக்கூடாதா?
இருந்திருந்தால்
இந்தக் கன்மம் ஏன்?
யோகம் ஏன்?
பகவான் ஏன்?
பாகவதன் ஏன்?
நாயகன் ஏன்?
நாயகி ஏன்?
கடவுளாய் நானானால்?
விடலாம்...
அதனால்?
கவியரங்கம் நடத்தலாம்
சும்மா இருக்கும் சங்கை
சுகமாக ஊதலாம்.
கவிதை இயற்றலாம்
களிதட்டுச் செய்யலாம்.
கேளிக்கை முடிந்தவுடன்
கேள்வி நேரம் முடிந்தவுடன்
பாதித்தூக்கத்தில்
பரிதவித்து விழித்து நின்றால்
பௌயமாய் வந்து நிற்கும்
பதில் தெரியாக் கேள்வி
ஒன்று
.....
எற்றைக்கும்
ஏழேழ் பிறவிக்கும்.
......
எம் உற்றம் யார்?
உறவு யார்?
அப்பன் யார்?
அம்மா யார்?
அடிமடியை அரவணைத்து
அழுந்தத்தூங்கும்
அவள்(ன்) யார்?
பரவஸ்து
கேள்வியாய்
கேள்விக்குள் பதிலாய்
கற்பப்பை முட்டையாய்
முடங்கிக் கிடக்கும்
முதலும் முடிவுமாய்
முடிவுறும்
இம்
முற்றுப்
புள்ளி
போ
ல்
.
========
கேள்விமேல் கேள்வி கேட்டு
பதிலைத் தேடி நாமெல்லாம்
நம்மையே தின்ன வைத்தீர்
கலியுக கண்ணனாரே!
அன்புடன்,
ஆர்.எஸ்.மணி
=======
எத்தனை கேள்விகள்?, எத்தனை விடைகள்
எத்தனை எத்தனை முரண்களின் தொகுதி
வித்தக மாகவே விளம்பின சிலவாம்
வேதனை பொங்கிட விடுத்தன சிலவாம்
அத்தனின் நாடகம் அறிபவர் யாரே
ஆடலின் இடையொரு அசைவரு நிலைபோல்
அவனெனும் பாவனை அவனிலை எனவோ?
மத்தினை எடுத்துயர் தயிரினைக் கடைந்தால்
வருகிற வெண்ணையாய் வந்தது பாடல்.
வாழ்க!
இலந்தை
==========
கண்ணக் கடவுளே!
அனந்த்
=========
சந்த வசந்தக் கவியரங்கம் - 14
பாடி அசத்திவிட்டீர்கள்.
ம்..ம்..
மென்மையான தலைப்பு....
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
===============
17.
கடவுள் வாழ்த்து
தலைவர் வணக்கம்
அவை வணக்கம்
*****************
பூவாக நானிருந்தால்
*****************
**
மல்லிகைப் பூவாய் நானிருந்தால் - எழில்
மங்கையர் தலையில் வீற்றிருப்பேன்.- மணம்
கொள்ளையாய் வீசி வாலிபர்தம் - நெஞ்சம்
கொந்தளிக்க வைத்தே நின்றிருப்பேன்.- ஆனால்
இந்தப் பூவினில் குறையுமுண்டு - மதன்
உற்சவத்தில் அது நசுங்கிவிடும் - எனில்
மல்லிகைப் பூவா வேண்டாமே - வேறு
நல்ல பூவினைப் பார்த்திடலாம்...
**
**
குண்டுகுண்டுக் காய்களாய் மாற்றங்களைக்
கொள்கின்ற இந்தப்பூ பரவாயில்லை
கண்நிறைக்கும் கோலங்கள் கொண்ட பெண்கள்
கண்நிறையும் கோலங்கள் தெருவில் இட்டு
**
எப்போதோ பூப்பூக்கும் அத்தி என்று
ஏற்றமுடன் எனையுரைத்தார் அறிஞர் அன்று
தப்பில்லை என்றாலும் தயக்கம் உண்டு
தரமான பூதானா அந்தப் பூவும்
**
அன்புடன்
சின்னக் கண்ணன்..
===========
தரமிகு மலர்கள் எடுத்தார்;
. சாற்றினார் நிறைகள் குறைகள்;
பரமனை மனதில் வைத்தார்
. பாமாலை தொடுத்து முடித்தார்.
பசுபதி
========
குறையே இல்லாப் பூ உண்டா?
கொட்டாத் தேனி தானுண்டா?
கறையே இல்லா நிலவுண்டா
கண்ணீர் இல்லா விழி உண்டா?
நிறையே வேண்டின் ஏதோ ஓர்
நெருடல் இன்றிக் கிட்டாது
உறையைப் பார்த்து மயங்காமல்
உள்ளே பார்த்தால் உயர்வுண்டு.
இலந்தை
=============
'பூ..ஈதென்ன?' என யார் சொல்வார்? வாசப்
பூத்தொடுத்து வழங்கிட்ட பொலிவு! இங்கு
பூந்தோட்டமாய் சந்த வசந்தக் கூட்டம்
பூசிக்கும் கலைமகளின் மார்பில் ஆரம்!
வாழ்த்துகள்!
ராஜரங்கன்
========
அன்புள்ள சி.க
சௌந்தர்
======
கள்ளமிலா மலர்களில்நாம் காணுகின்ற குறைகள்நம்
உள்ளமதன் ஊனமன்றோ? உள்ளபடிப் பார்க்கையிலே
புல்லையும்தன் அடியாரின் பூசைக்கு ஏற்குமந்த
நல்லவனின் நோக்கினிலே நம்குறைகள் நிறைவாமே!
இறைவனின் காலடியில் இருப்பதற்கு விரும்பிஇந்த
குறையில்லாத் தத்துவத்தைக் கூறிவிட்டீர் குறிப்பாக!
அனந்த்
===========
18.
நடந்தும் நடக்காத ஒரு பேட்டி
நான்: (மௌனம்)
சவநி: ஆஹாங்!
நிதானமாய் ஆறு மாதம், ஒரு வருஷம் வேண்டுமானாலும் தங்கி விட்டு வாங்க.
நீங்க வரலையேன்னு இங்கே யாரும் கவலைப் பட மாட்டாங்க!
-----------------------------------------------------------
பாம்பாட்டி பையினுள்ளே
சுகமாய் நான் படுத்திருப்பேன்.
அன்புடன்,
ஆர்.எஸ்.மணி
=================
அன்புள்ள மணியவர்களே,
உங்கள் இசையிலும், நகைச்சுவையிலும் மகுடி கேட்ட நாகம் போல் மயங்கிக்
கிடக்கிறோம். எப்படியோ மகுடிக்கவிதை வந்துவிட்டது.
மகுடி என்பது இசையின் ஸ்தூல வடிவம்.
பெட்டிக்குள் அடங்கிக் கிடக்கும். எடுத்துவிட்டால் இசை பொழியும்.
அடிவயிற்றிலிருந்து எழுந்து வரும் உயிர்மூச்சல்லாவா அதில் இசையாகப் பொழிகிறது.
அதை ரசிக்கவும் தூண்டுதல் வேண்டும். இல்லையென்றால் எல்லோரும் பாதி செவிடர்கள்
தான். தூண்டப்பட்டு அந்த இசையைக் கேட்டால் பாம்பு மட்டுமா ஆடும்..
பாம்பின் ஆட்டம் அந்த இசைக்குக் கிடைக்கும் பாராட்டு. அதை
விலை மதிப்பிட்டுக் காசுகளைப் போடும் போது மகுடி பெட்டிக்குள் அடங்கி விடுகிறது.
கருத்து நிறைந்த கவிதை .
இலந்தை
========
மகுடிக்கும் பாம்பிற்கும் ஒரு காதல்
மணிக்கும் இசைக்கும் ஒரு காதல்
நமக்கும் மணிக்கும் ஒரு காதல்.
நான்கு மாதம் கழித்துத் தொடர்வோம்.
ச.வ.-வில் அன்று ,
சா.வா.ச் சந்த வசந்தத்தில்.
பசுபதி
===========
செவியில்லாப் பாம்பதுவே சீறுவதை விட்டொழித்து
செவிமடுத்துக் கேட்குங்கால் சிறகடித்துப் பறப்போமே
கவியுன்றன் மகுடிவழி காதருகே ஒலித்திட்டால்
புவியினிலே ஒருபாடல் புதுவிதமாய்ச் சொன்னீர்கள்!
சௌந்தர்
==============
மணி;
சவனி நிருபர் புடைசூழ
...சந்த வசந்தக் கவியரங்கில்
பவனி வரும்உம் அழகினைநான்
..படித்தேன், பார்த்தேன், பயனுற்றேன்!
************************************************************
அடுத்து யாரைக்கூப்பிடலாம். தலைவர் சுற்றும் முற்றும் பார்க்க
மேடையில் இருந்த கூடையின் மூடி திறக்க மகுடியொன்று
எழுந்தது.
**********************************************
கவிஞர் கஜனுக்கு சந்தவசந்தக் கவியரங்கின் இனிய திருமண வாழ்த்துகள்.
அவர் இப்பொழுது தேனிலவில் இருக்கிறார் என்று எண்ணுகிறேன்
(அவருடைய கவியரங்கத் தலைப்பு 'நிலவாக நானிருந்தால்' (:-)
'வாராயோ வெண்ணிலாவே' பாடிட்டு, ஒரு பொடி நடையா நிலவுக்கே போய்
பார்த்து அப்புறமா கவியரங்குக்கு வருவாரா தெரியாது).
ஆனால் தன் பெயருக்கு முன்னால் கவி, கவிஞர் என்ற அடைமொழி வேண்டாம் என்று
குழந்தை போல் அடம் பிடிக்கிறார். (:-)
குழந்தை கவிதானே?
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
*************************************************************
பார்வையாளர் 1: ஏன் தலிவரு வெண்பால தப்பு இருக்குனு கவிஞர்கள்
சொல்றதில்ல? மரியாதையினாலா, பயத்திலயா?
19.
உலகிற் கருள்வான் உண்மைகளில் வாழ்வான்
நலமே தருவான் நாராயணா போற்றி
=============================================
கடந்தஎன் வாழ்ககை
் யில் கூடாமல் போன
தடங்களைத் தேடியும் தோண்டியும் மீட்டு
வடம்பிடிக்கப் போகிறதிக் குஞ்சு, கனவின்
படம்பிடிக்கப் போகிறதிப் பிஞ்சு
==============================================
கனவு அம்மா
=============
கனவு அப்பா
============
கனவு நண்பர்கள்
================
(ஆனாலும்...)
கனவு ஆசிரியர்கள்
==================
அன்புடன்
பிரசன்னா
============
கண்ணன் கட்டுண்டான் கல்லுரலில் - பிர
சன்னன் கட்டுண்டார் வெண்டளையில் ! :-))
பசுபதி
========
குழந்தையின் கனவுகள் கொள்ளை அழகுகள்!
அனந்த்
=========
பெற்றோர்க்கும் மற்றோர்க்கும் பிள்ளை அறிவுரைகள்
கற்றாய்ந்து சொன்ன கவி
இலந்தை
===========
அன்பின் பிரசன்னா,
=============================================
கடந்தஎன் வாழ்ககை
் யில் கூடாமல் போன
தடங்களைத் தேடியும் தோண்டியும் மீட்டு
வடம்பிடிக்கப் போகிறதிக் குஞ்சு, கனவின்
படம்பிடிக்கப் போகிறதிப் பிஞ்சு
==============================================
அன்புடன் புகாரி
===========
கவிஞர் ஹரப்பிரசன்னாவுக்கு பாராட்டுகள்
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
******************************************
பார்வையாளர் 1: கவிஞர்களை வரிசை மாத்தி அழைக்கிறாங்க போல இருக்கே..
20.
சந்த வசந்தக் கவியரங்கம் ('மந்திரவாதியாய் நானிருந்தால்')
எழுதியவர் கவிஞர் முனைவர் வாசுதேவன்:
அவைக்கு வணக்கம்:
முகத்தை மறைத்தாலும்
மதியின் தண்ணொளியை
அகத்தால் உணர்வோரே!
அயலில் இருந்தாலும்
சுகத்திற் கிதமான
சொந்த பந்தங்களே!
வகைத்தத் தமிழ்க்கவியாய்
வானின் வழி வருவேன்! 1.
சுவைத்தே உள்வாங்கிச்
சுவையில் திளைப்போரே!
அவைக்குத் தலைமையாய்
அமர்ந்தே இருப்போரே!
துவைத்து வெளுப்பாக்கிப்
பிழிந்து கிழிப்போரே!
நகைத்துச் சுவைப்போரே!
வணங்கி மகிழ்கின்றேன்! 2.
கட்டி வைத்திட்ட
கனக மலர்க்கொம்பு!
தொட்டால் துவண்டுவிடும்
தோகைக் கொடி இடுப்பு!
பட்டுப் பள பளப்பு!
பசுமைத் தள தளப்பு!
எட்டி நின்றாலும்
இழுக்கும் மணத்தொகுப்பு! 4
காற்றின் அலைபோல
அசையும் பருவக் கொடி!
நூற்கும் கவிதையும்
நுகரும் மனத்தின் நெடி!
போற்றும் குலத்தின் கொடி
புகழும் தமிழின் செடி!
ஆற்றுப் படையின் படி
அவளின் வனப்பு, அப்படி! 5.
ஏட்டில் எழுதாத
இதயத் துடி துடிப்பு!
பூட்டும் மனச் சிறையில்
புலர்ந்த புது வடிவம்!
வாட்டும் இளந்தென்றல்
வதைக்கும் பனிச் சாரல்!
காட்டு மலர்க் குன்றைக்
கண்டேன், மனம் துடித்தேன்! 7.
நான், அவளிடம்:
எட்டி நிற்கின்றாய்
இமையின் குளிர்ச் சாரல்!
கட்டிக் கரும்பே! நீ, என்,
கவிதைப் பூச்சரமே!
அட்டி எனக்கில்லை,
சை தடையில்லை!
கிட்ட வேண்டும்! நீ, தமிழாய்க்
கிளைக்க வேண்டும்! என்றேன்.8
அவள்:
இமைக்கப் பட படத்தாள்!
இதயம் துளைத்திட்டாள்!
இமையா விழியால் என்
எழிலை அளவெடுத்தாள்!
அமைதி ஓவியமாய்
அறிவைச் சோதித்தாள்!
சமையா பொற்கோயில்
சிலையாய் நின்றிட்டாள்! 9.
வெட்டிச் சிதையாமல்,
வீழ்ந்து சிதராமல்,
ஒட்டி உறவாடி
ஓடும் நதி யாளைத்
தொட்டு அரவணைத்தேன்!
தோகை இதழ் நனைத்தேன்!
தொட்ட விரலுக்குள்
தோயும் இசையானாள்! 10.
அவள் சொன்னாள்:
வானை வளைப்பானை
மணலைத் திரிப்பானை
மானக் கடல் நீரைக்
குடிப்பேன் என்பானை
வானச் சந்திரனை
வாட்டி உதைப்பானை
நானும் விரும்பேனே!
நனவில் நினையேனே! 14.
புகழை அறியாத
புலையந்தனை விரும்பேன்!
இகழும் தொழிலுடைய
இறைவன் தனை வேண்டேன்!
அகழும் குணத்தானை
அருளும் மனத்தானை
இகத்தில் பரத்தி லுந்தான்
என்றும் நினையேனே! 15.
குட்டிச் சுவரோரம்
குந்தி அழுகின்ற
மட்டிப் பயலை நான்
மறந்தும் நினையேனே!
சட்டிச் சோற்றுக்காய்
சாகும் பிண்டத்தை
எட்டி நில்லென்பேன்!
என்றும் நினைத்திடேன்! 16.
மந்தை மாடுகளாய்
மனிதப் பிணங்களாய்
சொந்த அறிவில்லாச்
சோம்பல் சொரி நாயை
எந்தத் தமிழச்சி
இசைந்து விரும்பிடுவாள்?
கந்தல் புராணத்தைக்
காதல் புரிந்திடுவாள்? 17.
நான்:
இந்த உறுதியுடன்
இதயம் புகுந்தாளை
சொந்த உயிராளைச்
சூழ்ந்து, குறைகேட்டேன்!
எந்த மாதிரி நான்
இருக்க! சொல்லென்றேன்!
அந்த மாதிரி நான்
ஆக அருள்! என்றேன்! 19.
மேடு பள்ளத்தில்
மேதினியின் கள்ளத்தில்
காடு மேடுகளாய்க்
கவிழ்ந்த உலகத்தில்
வீடு மனை யெங்கும்
விளங்கும் பேதத்தில்
பீடு நடை யுடையப்
பெண்ணாள் கிடைப்பாளோ?
வண்டி இழுத்தாலும்
வயலில் உழுதாலும்
குன்றின் மலை உடைத்துக்
கூழில் உழன்றாலும்
நொண்டிக் குதிரை போல்
நொடிந்து மடிந்தாலும்
ஒண்டி உயிரோம்பி
உயிரில் இணைந்திடுவேன்! 21.
வானக் கூரையிலும்
வாய்க்கால் வரப்பிலும்
நாணிக் குறுகுறுத்து
நடக்கும் பாதையிலும்
வீணாய்ப் பிறப்பொடுத்து
விழலாய் இருந்தாலும்
மானமுடன் வாழ்ந்தால்
மன்னி கரம் பிடிப்பேன்! 22.
முள்ளாய் முளைத்தாலும்
முசுடு விளைந்தாலும்
செல்லாக் காசான
சீலம் மிகுந்தாலும்
எல்லா இகழ்ந்தாலும்
இகழ்வு நிகழ்ந்தாலும்
சொல்லச் சுகமாகும்
சுகந்த மணம் நுகர்வேன்! 23.
என்றே என்மனத்தின்
எண்ணம் உரைத்திட்டேன்!
அன்ன நடையாளும்
அமுத மொழியாளும்
சொன்ன மொழி கேட்டுச்
சுருண்டு விழுந்திட்டேன்!
கன்னல் மொழியாளும்
கணையாய்ச் சுட்டாளே! 24.
அவள் சொன்னாள்:
குறள் வெண்பா
வெண்பா:
நான்:
என்றும் அவளுடனே
இருக்கத் துடிக்கின்றேன்!
கண்ட கணம் முதலாய்க்
கலங்கித் தவிக்கின்றேன்!
என்றும் காணாத
இனிய மொழியமுதை
வென்றால் வாழ்வுண்டு,
வீழ்ந்தால் விடிவில்லை! 42.
வானம் அழைக்கிறது!
வையம் எரிக்கிறது!
கான மழை காணா
கழனி போலானேன்!
தேனும் கசப்பாச்சே!
திங்கள் சுடலாச்சே!
போனால் போகட்டும்
போடா, என்பேனே? 43.
உலகம் கிடைத்தாலும்
ஒன்றும் பயனில்லை!
பலபேர் உறவானார்
பாசம் பயனில்லை!
நிலையா அன்பாலே
நிலைத்தது தான் என்ன?
மலையாய் இருந்தேனே!
மண்ணாய்ப் போனேனோ? 44.
மனத்தின் தவிப்புக்கு
மருந்தும் தருவார் யார்?
கனத்த மனத்துக்கு
கனிவைப் தருவார் யார்?
வினைக்கு வினை போல
விளக்கின் ஒளி போல
எனக்கும் அருள் செய்ய
ஏந்தல் வரக் கண்டேன்! 45.
மந்திரவாதி சொன்னார்:
வானை வளைக்கலாம்!
வையம் படைக்கலாம்!
தேனைச் சுவைப்பது போல்
தீயைச் சுவைக்கலாம்!
பானை இல்லாமல்
பந்தி வைக்கலாம்!
வீணை இல்லாமல்
விரலால் இசைக்கலாம்! 49.
நதியை இணைக்கவும்
நாட்டைப் பிடிக்கவும்
மதியே இல்லாத
இரவைப் படைக்கலாம்!
விதிக்கும் விதியாக
விண்ணில் பறக்கலாம்!
அதிரும் உலகத்தை
ஆட்டிப் படைக்கலாம்! 50.
நெஞ்சத் தவிப்பெல்லாம்
நிற்க! மனத்துக் குள்ளே
கொஞ்சம் நம்பிக்கை
குருத்து வளர்ந்தது!
வஞ்சிக் கொடியாளை
வாழ்க்கைத் துணையாக்கப்
பஞ்சாய்ப் பறந்து நான்,
படிக்கத்தான் வேண்டும்! 52.
எனது முடிவு:
மயங்காத மனிதரை
மயங்கச் செய்தாலும்
முயங்கா தமிழ் முரசை
முழங்கச் செய்தாலும்,
தயக்கந் தானுண்டு!
தானைத் தமிழ்க் குலத்தின்
இயக்கக் கொள்கைக்கு
இழுக்கே மந்திரமும். 56.
மந்திரமுங் காலே!
மதியோ முக்காலே!
தந்திரத்தால் எல்லாம்
சாதித்தால் கூட
தன் + திறத்தால் செய்யும்
சாதனையே நிலைக்கும்!
மந்திரத்தால் பழுக்கும்
மாங்காய் சுவைத்திடுமோ? 57.
drvasudevan@vsnl.net
erava_kabilan@yahoo.com
=========
மந்திர வாதி கபிலர்
. மறைவாய் அரங்கினில் நுழைந்தார்!;-))
சுந்தரச் சொற்கள் தூவிச்
. சுகமாய் நெடுங்கவி தந்தார் !
பசுபதி
=======
அன்பின் டாக்டர் வாசுதேவன்,
அன்புடன் புகாரி
========
கரவா அன்பே
உரமாய் அமைய
இரவா- கபிலன்
வரவால் மகிழ்வோம்!
சுந்தரி அணைப்பைத்
தந்திடும் வழிதான்
மந்திர மில்லை
தன்திறம் என்றார்!
அன்புடன்
அனந்த்
==========
கவிஞர் கபிலனுக்குக் கனிவான வரவேற்பு
இலந்தை
==========
எல்லேவில்லோன் பற்றி
எதுவுமே தெரியாதவர்கள்
இனிமேல் தெரிந்துகொண்டு
ஆகப்போவது ஏதுமில்லை
இதுவரை தெரிந்தவர்களைத்
தேடித்தேடிப் பிடித்தாவது
தெரிந்து கொள்ளுங்கள்
தெளிவு பெறுங்கள்
என்றெல்லாம் இறுமாப்பாக
ஏதேனும் இவன் சொல்வானோ
என்று எதிர்பார்ப்பவர்கள்
ஏமாந்தே போவார்கள்
ஏனென்றால், நான்
கொஞ்சம் சித்தன்
கொஞ்சம் பித்தன்
கொஞ்சம் கவிஞன்
கொஞ்சம் ரசிகன்
கொஞ்சம் நடிகன்
கொஞ்சம் நாடகன்
கொஞ்சம் கணிஞன்
கொஞ்சம் வணிகன்
கொஞ்சம் பக்தன்
கொஞ்சம் புத்தன்
கொஞ்சம் சூரியன்
கொஞ்சம் சந்திரன்
மொத்தத்தில்...
வணங்குகிறேன் சபையோரே!
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
***************************************
21.
'சர்வாதிகாரியாக நானிருந்தால்?'
-------------------------------------------
(லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்)
அழுக்குக்கரை வேட்டியில்
அரைக்கிலோ எண்ணெய்ச்சிக்கோடு
அக்குளில் சிவப்புத்துண்டால்
ஆனந்தமாய் நான் சொறிந்தபடி
தூணில் சாய்ந்திருந்தால்
கானம் இசைத்திருந்தால்
வீணே படுத்திருந்தால்
ஆஹா பொறுக்குமோ சந்தவசந்தம்?
ஃபாஸ்டஃ
் பூட் காலமய்யா
நளபாகம் என்ன செய்யும்?
தலைப்பை அவர்களே
தருவார்களாம்
கலப்பையை மட்டும்
நான் ஓட்டினால் போதுமாம்
அடுப்பில்
அண்டா கொதிக்கிறது
ரசம் பதைக்கிறது
ஆங்காங்கே அரிக்கிறது
சொறியவும் நேரமில்லை
செப்புகிறேன் அவசரமாய்
----------------------------
மூத்தோனுக்கும்
மூப்பில்லா
வசந்த இளைஞருக்கும்
முதற்கண்
என் வணக்கம்
---------------------------
'சர்வாதிகாரியாக நானிருந்தால்?'
பணியகத்தில் கேட்டால்தான்
பதில் கிடைக்கும் இதற்கென்று
பகர்ந்தேன் பண்பான
பல தொழிலாளிகளிடமும்
உண்மை தெரிய
ஒரே வழிதான் இருக்கிறது
கண்ணாடி நண்பன்
கண்சிமிட்டிச் சொல்வான்:
சர்வாதிகாரியாக நீயிருந்தால்
ஐம்பதாயிரம் கோடிச்செலவில்
அணைகளோடு நதியிணைப்போ
வெளிநாட்டு மருமகளோ
உள்நாட்டு தாடிச்சிங்கமோ
ஊர்வலமோ வெடிகுண்டோ
அரசியலோ அடிதடியோ
ஒன்றுமே இருக்காதப்பா
பசியோ பட்டினியோ
ஜாதிச் சண்டைகளோ
சாலைகளில் நெரிசலோ
மறந்தே போகுமப்பா
சாலையில் துப்பினால்
நீ கசையடிப்பாய்
ஜிப்பைத் திறந்தாலே
கத்திரி போடுவாய்
சாயங்காலவேளைகளில்
ஊரெங்கும்
உற்சாகம் ஊற்றெடுக்க
உடனே நீ வழி செய்வாய்
சிங்காரச் சென்னையில்
சிருங்காரமும் ரீங்காரமிடும்
... அனந்த்
==========
ராமா! உன்ராஜ்யக் கதைஅன்று -- எல்லே
. ராமின்அதி காரக் கவியின்று !
ஆமாம், நகைச்சுவை இருவருக்கும் - வீட்டில்
. அகப்பட்ட குடும்பச் சொத்தாமோ?
பசுபதி
==========
நகைச்சுவை இழைந்தோட பாரதியின்
நன்று
இலந்தை
=========
( ப்ரேம முதித ..... ராம ராம ராம் என்ற ஸத்யசாயீ பாபா குழுவினரின் பஜனை
மெட்டில் பாடவும்)
சிரிக்கவைத்தாய்! வயத்து வலி! ராம ராம ராம்! எல்லே ராம ராம ராம்!
சின்னக் காசித் துண்டணிந்தாய்! ராம ராம ராம்! எல்லே ராம ராம ராம்!
சொரியும் சுகம் யாரறிவார்? ராம ராம ராம்! எல்லே ராம ராம ராம்!
சொர்க்கமல்லோ அந்தக் கணம் ! ராம ராம ராம்! எல்லே ராம ராம ராம்!
குடும்பத்தலைப் பதவி கொள்ள ராம ராம ராம்! எல்லே ராம ராம ராம்!
கொடுத்தாள் ஆத்துக்காரி சாவி ராம ராம ராம்! எல்லே ராம ராம ராம்!
அடுப்பு ஏத்து! அப்பம் சுடு! ராம ராம ராம்! எல்லே ராம ராம ராம்!
ஆண்கள் கதி இதுதானப்பா ராம ராம ராம்! எல்லே ராம ராம ராம்!
ராஜரங்கன்
==============
னு கத்தியிருப்பார்.
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
*****************************************************************
பார்வையாளர் 1: கவிஞர் எல்லே ராம், தலிவரோட தம்பியாமே.
22.
இறைவணக்கம்
இணையற்ற இறைவனின்
திருவடி தொழுது
இதயத்து எண்ணங்ககளை
இறைவனிடம் கொடுத்து
கவலையற்ற மனதுடன்
களத்தில் இறங்குகின்றேன்
தலைவர் வணக்கம்
நகைச்சுவையை
நலம் விசாரித்து
கவிதையுலகில்
காவியம் படைக்க
படைத்தலைவனாகப்
பொறுப்பேற்று
பண்போடு அழைத்திட்ட
அன்பான தலைவர்க்கு
சின்னவள் இவளின்
சிரம்கவிழ்ந்த வணக்கங்கள்
அவை வணக்கம்
தாளாத தலைவலி
என்றாலும் சந்தவசந்த
சொந்தத்தில் சங்கமிக்க
இந்தக் கவியரங்கில்
பிந்தி வந்து நுழைகின்றேன்
கனிவுடன் உங்கள் முன்
என் கவி சமர்ப்பிக்கின்றேன்
களை களைந்து பிழை பொறுத்து
கவி ஏற்றிடுவீர் கவிஞர்களே1
ஆணாக நானிருந்தால்.....
ஆண்குழந்தை என்றவுடன்
பெருமை கொள்ளும் பெற்றோரும்
சாண்பிள்ளை என்றதும்
ஆண்பிள்ளை என்ற பெருமை பெற்று
வலம் வந்திருப்பேன் பலம் பெற்றிருப்பேன்
தலைப்பிள்ளை ஆணென்றால்,
வரவேற்குமிடங்களில், திருமணவீட்டில்,
சாமத்திய வீட்டில்,
அம்மாவுக்கும் முதலிடம் என்னால்.....
விளையாட்டை வாழ்வாக்கி,
விளையாடி மகிழ்வேன்.
காலைத் தூக்கி, ஆடிக் களித்து
நடனம் புரிவேன்
பெண்களை ரசித்திடுவேன்
எண்களை சுழற்றியே,
தொல்லைபேசி, தொல்லைப்படுத்திடுவேன்...
கோபத்தைக் குறைத்திடுவேன்
பாவத்தைக் குறைத்திடுவேன்
மகளுக்குக் காட்டும் மலையளவு அன்பில்
மகனுக்கும் ஒரு கடுகளவு தந்திடுவேன்
என் பெயர் சொல்ல வந்த பெருமகனென்றவனைப்
பேணி வளர்த்திடுவேன், அவன் பெருமை பேசிடுவேன்
அடிக்கடி அடித்து, திட்டி துன்புறுத்த மாட்டேன்
படிக்கும் மனைவியைப் பார்த்துப் பார்த்து
(பொறாமைப்பட்டாவது)
நானும் படித்து என் அறிவைக் கூட்டிடுவேன்
மனைவி, மக்கள் பிறந்த தேதி முக்கிய நாட்கள்( என் வீட்டு விலாசம் போன்ற)
அத்தனையும் என் ஞாபகத்தில் சேகரித்து வைத்து
அடிக்கடி அவர்களுக்கு பரிசு கொடுப்பேன்..
புஷ்பா கிறிஸ்ரி
=============
இதோ மகள் செசிலின் கவிதை..
ஆணாகப் பிறந்தால்...
ஆடிப் பாடி
காலைத்தூக்கி
ஓடியாடி விளையாடி
உலகைச் சுற்றி வலம் வருவேன்
நீளமுடியைத் தூக்கி எறிந்து விட்டு
கட்டை முடியுடன்,
கட்டை உடையுடன்
பெட்டைகளை கேலி செய்து
சட்டைகளைத் துறந்து போட்டு
இஷ்டத்துக்கு ஊரைச் சுற்றி
காரை வேகமாக செலுத்தி
படிப்பை விட்டு
பட்டம் விடுவேன்....
அப்பாவின் பெயரோடு
என் பெயர் மாறாமல்
என்றென்றும் வாழ்ந்திடுவேன்
பெண்ணாக நானிருந்தால்...
அம்மாவை விடவும்
தங்கையையும்
அப்பாவையும் கொஞ்சிமகிழ்வேன்..
அப்பாவின் இராட்சியத்தில்
நானே மகாராணி
நீள முடிவைத்து
விதம் விதமாய் உடை மாற்றி
பாவாடை சட்டை போட்டு
அழகான நகை போட்டு
இதமாக அழகு காட்டி
அம்மாவிடம் சமையல் கற்று
அப்பாவுக்கு உணவு தருவேன்
நடனம் கற்றிடுவேன்
நல்ல பெண்ணென்று பேரெடுப்பேன்
தினமும் பாடம் படித்து
பல்கலைக் கழகம் புகுந்து
நல்லவளாய் வாழ்ந்திடுவேன்..
கல்யாணத்தன்று என்
அப்பாவைப் பிரிவதை
எண்ணியெண்ணி
இப்போது அழுதிடுவேன்
வரப்போகும் கணவனிடம்
என் கனவுகளை அடகு வைத்து
அழுது வடித்திடுவேன்
சௌந்தர்
===========
புஷ்பா க்ரிஸ்டியின் கவிதையின் கருத்து,அவர்தம் சிந்தனை நன்று.
யோகியார்
==========
:" ஆணாக நானிருந்தால்" கிடைக்கும் சுதந்திரமும், கிடைக்காத பேறுகளும்
கூறிக் கவிதை செய்திருந்தார் சகோதரி. துடிப்பான அவரது குழந்தைகளைத்
தொரோந்தோவில் பார்த்தேன்
அவர்கள் சிந்தனைகள் புஷ்பாவின் எழுத்தில் சுடர்கின்றன.
வாழ்க!
இலந்தை
======
ஒரு துரட்டியில் மூன்று மாம்பழங்கள்! புஷ்பாவினால் மட்டுமே சாத்தியமாகும் மந்திரக்
காட்சி!
குடும்பப் படையல் சுவையாய் உள்ளது! வாழ்த்துகள்!
ராஜரங்கன்
================
23.
கவிஞர் புஷ்பா கிறிஸ்டிக்கும் அவர் குழந்தைகளுக்கும்
பாராட்டு
**********************************************************
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
*********************************************************
பார்வையாளர் 1: கவிஞர் தன் தலைவலிக்கு மாத்திரை சாப்பிடலாமே.
இராசேந்திர சோழன்!
==============
24.
அழைப்பு விடுத்த அவைத்தலைருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
இங்கே துவே என் முதல் முயற்சி அதனால் பேரியோர்கள்
பிழை பொறுத்துத் திருத்த வேண்டுகிறேன்.பாவகைகளைக் குறித்திருக்கிறேன்.அதிலும்
தவறுகள் இருந்தால் இரண்டு தட்டுத் தட்டி (கீபோர்டில் ) திருத்துங்கள்..
நன்றி.
வித்யா.
நதியாக நானிருந்தால் :
கடவுள் வாழ்த்து
(கலிவிருத்தம்)
மூலனை சீலனை முப்புர மூர்தத
் ியாம்
காலனைக் காலினால் காத்தவன் பாலனை
வேலனை வெப்பமாய் வெற்பதைக் கொன்றதோர்
பாலனைப் பார்தனில் போற்றியே வாழ்த்துவோம்
அவைவணக்கம்:
(வெண்பா)
அவைத்தலைவர் வணக்கம்:
இவ்வளவு எழுதவே
இந்த முறை திண்டாட்டம்
அவைத்தலைவர் வணக்கம்
அடுத்தமுறை வரும்.
அதுவரை சொல்வேன்
ஆயிரம் வணக்கங்கள்.
நதியாக நானிருந்தால்
--------------------
(நிலை மண்டில ஆசிரியப்பா)
சமுத்திரம்:
நான்:
இலந்தை
=============
உள்ளப் பா உணர்ச்சிப் பா உண்மை நிறுவும் பா
உங்கள் பா உவப்பை ஊரெங்கும் பரப்பும் பா
பள்ளத்தை மேடாக்கிப் பார்க்கிறேன் என்னும் பா
பாகுப் பா. வெல்லம்மா! பாசமாய் வாழ்த்துகிறேன்!
ராஜரங்கன்
===========
வித்யா:
கழிவை ஏற்கும் நதியைக் காட்டி,
விழியில் தன்னுடல் வெள்ளம் பாயப்
பழியைச் சுமந்தேன் பார்எனும் கடலின்
அழுகை நிறுத்திய அழகை ரசித்தேன்!
அன்புடன் புகாரி
==============
வித்யா,
சௌந்தர்
=======
வயிறு பசிக்குது
வட்டிலில் சோறிட்டு
வஞ்சனையின்றி நெய்யூற்றி
வதக்கிய கறிகாய்களுடன்
வெங்காயத் துவையலுடன்
வெண்டைப் பொறியலிட்டு
வேகவைத்த முட்டையுடன்
வெந்தியக்கீரை பருப்புடன்
வத்தல் குழம்போடு
வட்டக்கிண்ணியில் பாயசம்
விரா,சுறா,இறா,புறாக் கறியுடன்
வெள்ளாட்டு வறுவலுடன்
வெண்ணிறத் தயிரோடு
பொன்னிறப் பூரிகள்
வாட்டிய சப்பாத்திகளோடு
வடைகளும் குவித்து
வேகமாய்வா முறுவலோடு,
வைத்தியன் எடையைக்குறையென
வேண்டினதால் வேறேதும்
வேண்டவே வேண்டாமெனக்கு
விடியும் வரைக்கும் !
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
25.
(தமிழ்த்தாய்க்கு)
.
விற்பனர்க்கும் அற்புதமே
முற்றுமுதற் கற்பகமே
சிற்றருவிச் சொற்பதமே
சுற்றுலக முற்றுகையே
வெற்றிநிறைக் கற்றறிவே
நெற்றிவளர் பொற்றழலே
உற்றதுணைப் பெற்றுயரப்
பற்றுகிறேன் நற்றமிழே
(கவியரங்கத் தலைவருக்கு)
.
உடம்புக் கடலடியில்
தேனமுதம் ஆட்டி
நரம்பு ஓடைகளில்
ஆயுளலை கூட்டி
மனதின் மாளிகையில்
ஒட்டடையும் ஓட்டி
உயிரின் காற்றுக்குள்
பேரடர்வை ஊட்டி
பூத்தூவிப் பூத்தாடும்
சிரிப்பென்ற நர்த்தனம்
பூத்தவிடம் முடங்காமல்
மணம்வீசும் அற்புதம்
வீடெங்கும் துயரமுட்கள்
விழுந்தே இறைந்திருக்க
வீதியெங்கும் மயக்கநெடி
விசமாய் நிறைந்திருக்க
நகைச்சுவைத் தேன்தீபம்
நகக்காம்பில் ஏற்றி
பகைக்கின்ற நெஞ்சினிலும்
பதமாய்க் குளிரூட்டி
நாளுக்கும் பொழுதுக்கும்
நிறமேற்றும் கலைஞர்கள்
வாழ்வளிக்கும் சிகரங்கள்
தாய்ப்பால் போன்றவர்கள்
.
(கவிதை)
நீராக நானிருந்தால்
.
நீராக நானிருந்தால்
நீண்டதோர் கவிபொழிவேன்
வேரோடு உயிராகும்
உயர்வினைப் பாடிவைப்பேன்
வேறென்ன சாதிப்பேன்
வேறெவர்தான் சாதிப்பர்
நீராக நானிருந்தால்
வேறென்ன சாதிப்பேன்
விதையோடு முளையாகும்
உயர்வினையே பாடிவைப்பேன்
நீராக நானிருந்தால்
வேறென்ன சாதிப்பேன்
வானேறி தலைமுட்டும்
உயர்வினையே பாடிவைப்பேன்
என்னுயிர் காக்கவே
எனக்குத் திராணியில்லை
மண்ணுயிர் அனைத்தையும்
மடியிட்டுக் காக்கின்ற
நீராக நானிருந்தால்
வேறென்ன சாதிப்பேன்
வளம்பேணி நிலம்பாயும்
உயிர்வினையே பாடிவைப்பேன்
.
உயிர் மூலக்கூர்
பரிணாம வேர்
மரணமற்ற நீர்
உறைந்தாலும் உருகும்
ஆவியாகிக்
கரைந்தாலும் சேரும்
நானோ
மரணமுத்திரை குத்தப்பட்ட
சின்னஞ்சிறு காற்றுக் குமிழ்
எப்பானமும் நிராகரித்து
நிறமில்லா நீர்ப்பானம் பருகத்தானே
தாகமாகித் தவிப்பேன் பொழுதும்
அடடா இன்று
நானே நீராகிப் போனால்...
மிதப்பேனோ எனக்குள் நானே
பருகுவேனோ என்னை நானே
தாகமாவேனோ எனக்காக நானே
ஓ....
அது ஓர்
ஞானக் கீர்த்தியல்லவா
எனில் நான் ஞானியாகிறேனா?
நீராக நானிருந்தால்
நீண்டதோர் கவிபொழிவேன்
வேரோடு உயிராகும்
உயர்வினையே பாடிவைப்பேன்
.
நிலத்தோடு நின்று
நெருப்பைக் காதலிக்கும்
உண்மையை...
நிலத்தோடும்
நெருப்போடும் சேர்ந்து
காற்றைக் காதலிக்கும்
நிரந்தரத்தை...
நெஞ்சு நீர்பொழியச்
சொல்லிவைப்பேன்
ஆம் மானிடா
பொறாமையில்லா இதயக் காதல்
பொய்மையில்லாப் புனிதக் காதல்
பஞ்சபூதக் காதல்
எங்களுக்குள் பிறப்பாகி
ஏங்கி அலைந்தாடும் மானிடா
சற்றும் தாமதியாமல்
உண்மைக் காதல்வளர்
எல்லோரையும் எந்நாளும்
இன்பமாய்க் காதலி
எனக்கே சொந்தமென்று
சுருங்கிச் சாகாமல்
சுதந்திரமாய்க் காதலி
நீரென்ற நானன்றோ
உயிர்களின் பிறப்புப்பை
தாயின் கர்ப்பப்பையும் - கடலைச்
சுருக்கியதோர் வடிவல்லவா
அதுவரைக்கும் நீயோர்
நிலவாழ்ப் பிணம்தானே
.
எத்தனைக் கூர்வாளால்
எப்படி வகுந்தாலும்
விலகுவதில்லை நீர்
கலைவதில்லை நெருப்பு
அகலுவதில்லை காற்று
பிரிவதில்லை ஆகாயம்
ஆகையினாலேயே மனிதன்
நிலம் வாழ்கிறான் - என்றும்
விலகிச் சாகிறான்
பழந்தமிழ் திருடிய
திருடனாம் நான்
பரிகாசம் செய்கிறார் தமிழர்
அந்தத் தீந்தமிழை
பழந்தமிழ்த் தித்திப்பை
தழுவிப் பார்க்கும் ஆசை
எனக்கும் இருக்காதோ
கிறுக்கர்களே
அள்ளிக்கொண்டுபோய்
ஆழத்தில் வைத்து
ஆழமாய் வாசிக்கிறேன்
ஓலைத் தமிழை
அவ்வமுதத் தமிழ்போல்
இன்னுமின்னும் படைக்காமல்
தொலைந்ததே தொலைந்ததே என்றே
புலம்புகிறார் வக்கற்ற இளந்தமிழர்
கர்னாடகாவில் துளிவளர்க்காமல்
இனி தஞ்சாவூரில் வேர்விட்டு
ஒவ்வோர் தமிழனின் வீட்டுக்குள்ளும்
ஓடிவரலாம்தான் நான்
உன் சோம்பேறித்தனத்தைச்
சொறிந்துவிட்டு மேலும்
சரிந்துபோகச் செய்ய
சம்மதமில்லை தமிழா எனக்கு
உன் தமிங்கிலம் விட்டுத்
தமிழ்பாடு - நான்
தானாய் வருவேன் தாளகதியோடு
என்று பாடிவைப்பேன்
.
உப்பை உதறிவிட்டு
ஒவ்வோர் முறையும் நான்
உன் மண்தேடி வரும்போதெல்லாம்
எது உன் வீடென்ற அடையாளத்தை
வெட்டிச் சாய்த்துவிட்டு - நீ
மொட்டையாய் நிற்கிறாயே
நானென்ன செய்வதாம் நீயே சொல்
கும்பகோணக் கொடுமையில்
பசித்திருந்தது நெருப்பல்லடா
ஊழல்
உறங்கிப்போனது நானல்லடா
நேர்மை
குடையென்ற குத்தீட்டிகளால்
குதறிக்கிழிக்காதிருந்தால்
உழவனின்
ஒவ்வோர் குரலுக்கும் பொழிவேனே
சந்திரனில் குடியேறி
மனிதா நீ இங்கேயும் வாழவாவென்றே
வரவேற்றிருப்பேனே
நானில்லா முத்தமுண்டா
சேர்க்கையுண்டா இல்லை
உயிர்க்கும் கருதானுண்டா
நானே நானாகி
நானுள் நான் வார்த்து
நீந்துகிறேன் நான் நீயாய்
இன்னும் போதாமனமா
பாழும் மானிடா கேள்
இனி...
உடலழுக்கைக் கழுவவரும்
உயிர்களின்
உள்ளழுக்கையும் கழுவுவேன்
எனக்குள் மூழ்கி
என்னையே சுவாசிக்க
உயிர்கள் அத்தனைக்கும்
நீர்ச்சுவாசம் வழங்குவேன்
கண்ணீர்ச் சந்துகளில்
ஓடுவது தவிர்த்து
வேறு எங்கும் நான்
ஓடிவருவேன்
உயிர்கள் அனைத்தும்
என் பிள்ளைகளே என்பதால்
என் தாய்மை துறவாமல்
செல்லமாய்த் தலாட்டி
நிம்மதிக்குள் பாதுகாப்பேன்
ஆம் மானிடா
உதயத்தையே நீ நாடு
உன் தாயிடமே வந்து சேரு
அன்புடன் புகாரி
பி.கு:
======
புகா ரிடையே பொழியும் தமிழில்
புகாரியை கணடுள்ள போது - ஆகா
உரைப்பேன் அவர்தந்த ஒப்பற்ற காட்டல்
தரத்தில் முன் நிக்கத் தகும்.
கஜன்
========
>ஓ....
அது ஓர்
ஞானக் கீர்த்தியல்லவா
எனில் நான் ஞானியாகிறேனா?
>நானோ
மரணமுத்திரை குத்தப்பட்ட
சின்னஞ்சிறு காற்றுக் குமிழ்
வித்யா
======
அடடா இன்று
நானே நீராகிப் போனால்...
மிதப்பேனோ எனக்குள் நானே
பருகுவேனோ என்னை நானே
தாகமாவேனோ எனக்காக நானே
A thirst for the best
நானோ
மரணமுத்திரை குத்தப்பட்ட
சின்னஞ்சிறு காற்றுக் குமிழ்
muthirai
மண்ணில் கொளுத்திவிட்டு
நீருக்குள் வா
நீ நீராக வா என்றே
செல்லிவைப்பேன்
That is why ashes are immersed in water. The ultimate is mixing with
water.
அள்ளிக்கொண்டுபோய்
ஆழத்தில் வைத்து
ஆழமாய் வாசிக்கிறேன்
ஓலைத் தமிழை
அவ்வமுதத் தமிழ்போல்
இன்னுமின்னும் படைக்காமல்
தொலைந்ததே தொலைந்ததே என்றே
புலம்புகிறார் வக்கற்ற இளந்தமிழர்
a good thiught
.உயிர் தந்தேன் உடல் தந்தேன்
உணவும் தந்தேன் - வேறு
என்னதான் தரவில்லை நான்
நானில்லா முத்தமுண்டா
சேர்க்கையுண்டா இல்லை
உயிர்க்கும் கருதானுண்டா
நானே நானாகி
நானுள் நான் வார்த்து
நீந்துகிறேன் நான் நீயாய்
niirillai enRal 'niirillai"
any thing done without a paticipation of water is incomplete.
a "dhanam" given with sprinkling of water is only accepted.
கண்ணீர்ச் சந்துகளில்
ஓடுவது தவிர்த்து
வேறு எங்கும் நான்
ஓடிவருவேன்
If water does not dwell inside the eyes it is a disease.
Tear is a boon. water should not leave it.
Perhaps it may not be a cause to ooze out as an expression of sorrow.
.நீ எனக்குள் இறங்கு!
that is the ultimate.
ராஜரங்கன்
=======================
அடடே! என்ன கவி வீச்சு!என்ன ஒரிஜினாலிடி!
சொற்கள் அத்தனையும்,சிந்தனைத் தேனில் முக்கி,கவி வானை நிறைத்து,
சொற்பந்தலாகத் தூவி விட்டிருக்கிறார் எம் அன்பு புஹாரி.
எல்லா வரிகளும் அழகிய வரிகளே!வாழ்க!
யோகியார்
=============
அன்புள்ள புகாரி: இன்றுதான் நேரம் கிட்டியது. உங்கள் 'நீரைப் பருகி மகிழ்ச்சி
வெள்ளத்தில் பாதி மிதந்தும் பாதி மூழ்கியும் 'ஊஞ்சலிக்கிறேன்'. நீர் ஒரு கவிமழை,
பழையதை அடித்துக்கொண்டு போகாத புது வெள்ளம், கற்பனை ஊற்று என்ற'வாறு'
கூறிக்கொண்டே போகலாம்.....
அனந்த்
================
புகாரி,
எளிதான* சொற்கொண்டே
. . ஏற்றங்கள் சொன்னீர்
களிப்புடனே நீரேதான்
. . கவிதையொன்று தந்தீர்
ஒளிமுதலாம் ஐம்பூதம்
. . உயர்வுகளும் சொன்னீர்
உளிவைத்துச் செதுக்காமல்
. . உன்னதமாய்த் தந்தீர்
சௌந்தர்
===========
நிலாக் கவிஞரே
நில்லாமல் ஓடி வாரும்,
உலாப்போய் ஒளியாது
உடனே வாரும்
கவியரங்கக் குழந்தைகள்
கண்ணுக்கு மை வேண்டாம்
காதுக்கு கவிதை தாரும்
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
=================
26.
கணபதி துணை
========
தமிழ் வணக்கம்
===========
மண்ணினது மைந்தர்நாம் மண்ணவர் *யாரிங்கே ?
விண்தானும் வீழும் எம் வெற்றியிலே - விந்தையின்றி
அங்கும் அரங்கேறும் நல்லகவி ஆற்றலில்
தங்கும் *தரமாய்த் தமிழ்
தலைவர் வணக்கம்
===========
தட்டும் எழுத்தில் தரமான கேலியால்
பட்ட மரமும் பளிக்குமே - பட்டியிலும்
சொட்டுகள் சிந்தும் சுவாமித் தலைவரே
வட்டியுடன் வந்தனம் இங்கு
அவை வணக்கம்
==========
மணவாழ்வு என்றுரைக்க வாழ்த்தும் அவையே
*கனமாக்கி விட்டீர் களிப்பில் - கணணியிலே
அண்ணணாய் நண்பனாய் ஆசானாய் உள்ளோரே
எண்திசையில் வந்தனம் இங்கு
நிலவாக நானிருந்தால்
==============
முற்றும்
கவிவடிவம் பற்றி :
அமாவாசை, வள்ர்பிறை,பௌர்னமி, தேய்பிறை என்பதை
விளக்க கண்ணி அடிகள் எனண்ணிக்கையில் 10, 8,6,4,2,0,2,4,6,8,10
என்றமைத்தேன்
சுழற்சியைக் காட்ட கிட்ட என்று தொடங்கி கிட்டிட என்று
முடித்தேன்
சில விளக்கங்கள் :
அன்புடன்
கஜன்
============
அன்பின் கஜன்,
கவிதைக்குப் பாராட்டுகள்
சௌந்தர்
============
அன்பு கஜன்:
"..விந்தைமிகு சுந்தரியை சந்திக்கத் தந்துவிட்ட சந்திரனாய் வந்தால் ..."
..அனந்த்
===============
சந்திரானம்(இந்தச் சொல் சரிதானா என்று தெரிந்தவர்கள் சொல்லவேண்டும்) என்று ஒரு
உணவு உண்ணும் முறை உண்டு.அமாவாசை அன்று பட்டினி. அடுத்தநாள் ஒரு கவளம்.
இரண்டாவதுநாள் இரண்டு கவளம். இப்படிக்கூட்டிக் கொண்டேபோய்
பௌர்ணமி அன்று 15 கவளங்கள். அடுத்தநாள் 14 இப்படிக்குறைந்துகொண்டே வந்து
அமாவாசை அன்று பட்டினி .
இப்படி விரதம் இருப்பவர்கள் இருக்கிறார்கள்
அதைப்போலப் பாடலை அமைத்திருக்கிறார் கஜன்.
தொடக்கம் முழுநிலவைப் போல அழகு.
நல்ல உத்தி.
தமிழ் இலக்கியத்தில் இதை ஒரு புது முயற்சியாகக் கொள்ளலாம்.
இந்த அமைப்புக்கு 'மதிப்பா' என்ற பெயர் மதிப்பாகக் கொடுக்கலாம்.
இலந்தை
=======
அன்புடன் புகாரி
=============
சந்த வசந்தக் கவியரங்கம் 14
-----------------------------------------------------------------------------------
------------------------
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
=================
சாமியாரின் சீடனெனில் சவுரியங்கள் பல உண்டு
மாமிகள் முன் வந்து மண்டியிட்டால் ஆனந்தம்.
சாமியெல்லே பாராட்டில் சத் சீடனாய் இணைந்தேன்
சந்தக் கஜன் அரிக்குச் சன்மான வாழ்த்துகளாம்!
கஜன்பாடல் கனியென்றால் சர்க்கரை தர வருவார்
நிஜயோகி அரியென்பார். நிச்சயம் அவர் இளைய
புஜத்தில் புறப்பட்டு விரலோடி வரப்போகும்
கஜலான கவிதையினை அனுபவிக்கக் காத்திருப்போம்!
ராஜரங்கன்
==================
27.
அனுமனை எழுப்பிய ஜாம்பவானின் மொழிகளை அப்படியே எனக்கு வரவேற்பாக்கிய எல்லே சாம்பனே!
வணக்கம். நீர் ஜாம்பவான்தான். நான்தான் அனுமனில்லை. :-)
அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
===============
ஹரி:
அற்புதமாய்க் கவிசமைத்தீர் அசர வைத்தீர்!
... அலையில்லாக் காலநதி அதனுள் சென்று
முற்பிறவி வேண்டுமெனக் கேளா(து) என்றன்
.. முதல்கணங்கள் வேண்டுமெனக் கேட்ட பாங்கும்
கற்சிலையுள் மறைந்திட்ட கடவுள் போலக்
... காலத்துள் ஒளிந்திருக்கும் காட்சியெல்லாம்
விற்பனமாய் உம்கவியில் விண்டபாங்கும்
... விந்தைஅதைப் படித்திட்ட நேரம் பொன்னாம்!
.....அனந்த்
(அத்தனையுமே அழகு வரிகள் என்பதால் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல
இயலாமல் ஆக்கியது பற்றிச் சற்று கோபத்துடன்!:)
==========
அன்புள்ள ஹரி !
ராஜரங்கன்
===============
பற்றுதமிழ் பௌர்ணமியாய் பொலிவு காட்டி
. . படைக்கின்ற கவியினிலே அழகு கூட்டி
அற்புதமாய் அதனிடையே கருத்து மாலை
. . அச்சடித்த சொல்லாலே சிறகு கொண்டு
கற்றறிய வேண்டுமந்தக் காலத் திற்கும்
. . கடந்துவிட்ட சிறந்த அந்தக் கணங்க ளிற்கும்
நிற்குமொரு எழிலான சித்தி ரத்தை
. . நெஞ்சத்தில் ஏற்றிவிட்டீர் நிலையாய் இங்கு
சௌந்தர்
===========
காலச் சிறகு தாம்பெற்றுக்
கதித்துச் சென்று பின்னோக்கி
ஆல வட்டம் போடுகையில்
யாது காண வேண்டுமெனக்
கோல மாக ஓர்கவிதை
கொடுத்தார் கவிஞர் ஹரிகிருஷ்ணன்
சால நல்ல கவிதையினைத்
தந்த கவிஞர் வாழியவே!
இலந்தை
======
அன்பு ஹரியாரே,
அடடா அபாரம்!!!
அன்புடன் புகாரி
==========
'முதல்வராய் நானிருந்தால்'
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
===============
28.
அன்பிற்குரிய சந்தவசந்தத்தாருக்கும், தலைவருக்கும்
...................................................................................
.........
இந்தக் கதைதான் பத்துநாளைக்கி இராத்திரி முழுக்க விடிய விடியக் கூத்தா நடக்கும் . பார்க்கணும்னா
சினேகிதக் காரங்களோட நீயும் போய்ப் பாரேன்."
என்றாள் என் ஆயாள். முதன்முதல் சிறிய அகவையில் இதைக் கேட்ட எனக்கு, எங்கள்
ஆயாளின் மூக்கோசைப் பேச்சில், கதை சற்றும் விளங்கவில்லை தான். இருந்தாலும்
நண்பர்களோடு போனேன். அரசியற் கூத்தின் ஆரம்பக் காட்சி, திமிகிட.....திமிகிட என்ற
சத்தத்தோடு, இறைப்பாட்டு முழங்க, சந்திர சூரியர்களையும், மழையையும் வணங்கித்
தொடங்கியது.
"சோழ மகராசா ஆட்சியிலே மழைக்கு என்ன குறை ராசா, மழை நல்லாவே பொழியுது?"
இய்யதாகு முதலமைச்சன்
நீர்வளம்
சேமுறுத்திய குடிநீரும்,
சாக்கடை மாசெடுப்பும்:
வேளாண்மை / மர வளர்ப்பு:
அடிக் கட்டுமானம்(18):
கல்வி:
மருத்துவம்:
அரசு நிர்வாகம்:
அரசுச் சீரமைப்பு:
..........................
அன்புடன்,
இராம.கி.
1. பலக்குறுத்தல் = complication
2. தடந்தகை = strategy
3. வழிதகை = tactics
4. செயல்தகை = operationality
5. கோடலன்>கௌடில்யன் = சாணக்கியன்
6. நுணுத்தம் = minute
7. சேமுற்ற குடிநீர் = safe drinking water
8. தூம்பு = tube
9. மூன்றாட்டு இழுத்துவைப்பு = tertiary treatment
10. விழுத்துறுத்தல் = filtration
11. உயிர்வேதிச் செய்ம்முறை = biochemical process
12. எதிர் ஊட்டு, எதிர் ஊடுகை = reverse osmosis
13. மின்னிளக்கி எடுவித்தல் = electro - dialysis
14. துளித்தெடுத்தல் = distillation
15. கருவை மரம்; இங்கு வேலிக்கருவை = Julia Flora; மேற்கு ஆத்திரேலியாவில் இருந்து
கொண்டுவந்த இந்தமரம் இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் மரபு சார்ந்த மரங்களை
வளரவிடாமல் தான்வளர்ந்து சீரழிக்கிறது. இதை ஒழித்தால் தான் மரவளம் திரும்பக்
கிடைக்கும்.
16. தாளடிக்குக் கோதுமைப் பயிரீடு என்பது தஞ்சைத் தரணியில் இப்பொழுது
சொல்லப்பட்டுவரும் பரிந்துரை. தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் காரணத்தால் இது
நல்லது என்று வேளாணியலார் சொல்லுகிறார்கள்.
17. நீர்வளம் குறைந்த காரணத்தால் புழுதி பறக்கிறது. தமிழ்நாடு சிறக்க இது
மாறவேண்டும். செடி,கொடி,புதர்கள் மண்டினால், மண்வளம் கூடி இந்தநிலை மாறும்.
18. அடிக்கட்டுமானம் = infrastructure
19. நாலிரண்டு ஒழுங்கை = எட்டு ஒழுங்கை = eight lane
20. அடர் துரக்கு = heavy traffic
21. குமுனேற்ற ஏந்துகள் = communication facilities.
22. மடிக்குழை = matriculation
23. ஈர் அயிர மாத்திரி = 2 kilo meter
24. கட்டுறுத்தல் = control
25. அய்ந்து அயிர மாத்திரி = 5 kilo meter
26. குழுமாக்கல் = corporatization; this does not mean privatization
27. அரசுத் துறைகள் மாநிலத்தின் மற்றநகர்களுக்கு இடம் மாற்றப் பட்டு, சென்னைநகர்
அரசாங்கநகர் என்ற பெயர் மாறவேண்டும். நெதர்லாந்தில் இப்படித்தான் நடக்கிறது.
ஒவ்வொரு துறையும் ஒவ்வொரு நகரில் இருக்கும். நுட்பியல் பெருகிப் போன இந்தக்
காலத்தில் இது எந்த வாய்ப்புக் குறைச்சலையும் ஏற்படுத்தாது. ஆனால் அதிகாரம் என்பது
அகலப் படுத்தப்படும். சென்னைநகர் அளவிற்கு மீறி வளராது.
28. பத்தாண்டிற்கு மேல் யாரும் அரசில் பங்கு பெறமுடியாது.
29. புயவு = power
30. சிலநாட்களாய் கணியின்முன் அமர்ந்து தட்டச்சுவது சரவலாய் இருக்கிறது.
தலைச்சுற்று, கிறுகிறுப்பு போன்றவை கூடுதலாய் இருக்கின்றன. சிந்தனை நகர
மறுக்கிறது. இருந்தாலும் முனைவர் சுவாமிநாதனின் தூண்டுதல் இந்தப் பாவரங்கில்
பங்குகொள்ள வைத்தது.
=================
இலந்தை
=============
இராமகியை முதல்வரென எம்மவர் ஏற்பாரேல்
வராதோ 'இராம'ராஜ்யம் ? வாழ்வுவளம் பெருகாதோ?
பசுபதி
==============
சந்த வசந்தக் கவியரங்கம் 14
என்னது ? மிருகமாவா?
****************************************************
பார்வையாளர் 1: சந்த வசந்தக் கவியரங்கக் கவிதைகளை
கவிஞர்களை விட்டு வாசிக்க சொல்லி ஒலிநாடாவில் பதிய
வைத்து இணையத்தில் போடலாம்னு முனைவர் கண்ணன்
யோசனை சொல்லியிருக்காரே..
***************************************************
Santhavasantham@yahoogroups.com
SVKA. - 14. Vote of Thanks
சந்த வசந்தக் கவியரங்கம் - 14. தலைவர் நன்றியுரை
வணக்கம்.
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
******************************************************************
பார்வையாளர் 1: அப்பாடா...ஒரு வழியா முடிச்சாரு..இன்னும் போயிக்கிட்டே
இருக்குமோனு பயந்தேன்... ஜார்ஜ் புஷ், டோனி ப்ளேர், வீரப்பன், ராமதாஸ்,
காடுவெட்டி குரு எல்லாம் இதுல பங்கேற்க வரதா இருந்தாங்களாமே..
~*~o0O0o~*~