Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 2

எனக்கு உருமாறும் சக்தி கிடைத்தால்

இவ்வுலகத்தில் பிறந்த ஒவ்வொருக்கும் பல கனவுகளும் ஆசையும்

இருக்கும். அதுபோல எனக்கும் நெடுங்காலமாய் ஓர் ஆசை உண்டு. அதுதான்

உருமாறும் சக்தி. இது என்னுடைய பலநாள் தவம் என்றே கூறலாம்.


இப்படியொரு சக்தி கிடைத்தால் நான் மக்களுக்கும் எனக்கும் பல

நன்மைகளை செய்வேன்.

தொடக்கமாக, இன்றைய நாளில் ஆங்காங்கே இயற்கை பேரிடர்களின்


சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதை நாம் செய்தியின் வழி அறிந்து

கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், நம்மால் அவற்றை தடுக்கவும்

முடியாது; நிறுத்தவும் முடியாது. இதனால், நம்மால் உயிர்களையும்

பொருளையும் காப்பாற்ற முடியாமலே போகின்றது. அதுவே, எனக்கு


உருமாறும் சக்தி கிடைத்தால் நான் ஒரு தடுப்பு சுவராக மாறி இயற்கை

பேரிடர்களான சுனாமி, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றை வராமல்

தடுப்பேன். உயிர்களையும் பொருட்களையும் அழிவிலிருந்து காப்பாற்றுவேன்.

தொடர்ந்து, இன்று வாகன நெரிசலால் எவ்வளவு தாமதம், சாலை

விபத்து ஆகியவற்றைக் கண்கூடாக பார்க்கத்தான் முடிகின்றது. இதனால்,


செல்ல வேண்டிய நேரத்திற்கு வேலைக்குச் செல்ல முடியாமல்

முதலாளியின் மார்களால் அவல பெயர் ஏற்படுகின்றது. மேலும், சாலை

விபத்தினால் உயிர் பலியும் ஏற்படுகின்றது. அதுவே, எனக்கு உருமாறும் சக்தி


கிடைத்தால் ஒரு பறவையாக உருமாறி செல்ல வேண்டிய இடத்திற்கு

விரைந்து பறந்து செல்வேன். மேலும், சாலை விபத்தில் பலியான

மக்களையும் உடனே தூக்கி கொண்டு மருத்துவமனைக்குப் பறந்து செல்வேன்.

அவர்களின் உயிர்களையும் உடனடியாக காப்பாற்றுவேன். அதுமட்டுமின்றி,


நான் சுற்றிப் பார்க்க வேண்டிய இடத்திற்குப் பறந்து சென்றே எல்லா

இடத்தையும் சுற்றிப் பார்த்து விட்ட திருப்தியில் பறந்து வருவேன்.

இன்னும், நம் நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணமாகவே

இருக்கின்றது. காரணம், குற்றச்செயல்கள் புரியும் குற்றவாளிகள் காவல்


துறையினரின் பிடியிலிருந்து கம்பி நீட்டுவதால்தான் என்றால் அது

மிகையாகாது. அதுமட்டுமின்றி அவர்களின் பார்வையிலிருந்து தலை

மறைவாக இருந்து காவல் துறையினருக்கு மிரட்டலாக இருக்கின்றனர்.

அதுவே, நான் ஒரு நிழலாக உருமாறும் சக்தி கிடைத்தால் குற்றம் புரியும்


குற்றவாளிகளை நிழலாக பின்தொடர்ந்து அவர்களை செய்யும் ஒவ்வொரு

கெட்டச் செயலையும் காவல் துறையினருக்கு அவ்வபோது தெரிவிப்பேன்.


காவல் துறை நம் நண்பன் என்பதுபோல அவர்களுக்கு நான் உற்ற தோழனாக

இருந்து குற்றச்செயல்கள் நாட்டில் நடக்காமல் பார்த்துக் கொள்வேன்.

மேலும், கொடிய விலங்கான புலி, சிங்கம், கரடி, யானை, பாம்பு

போன்ற விலங்குகளைக் கண்டாலே கால்கள் நடுங்கும்; ஓட்டம் பிடிக்கும்.

அவ்விலங்குகளின் தன்மை, குணம் எப்படியாக இருக்கும் என்ற ஆசை பல

நாட்களாகவே எனக்கு இருக்கின்றது. எனக்கு உருமாறும் சக்தி கிடைத்தால்


நிச்சயமாக மேற்சொன்ன விலங்குகளாக உருமாறி அவைகளிடம் சென்று

அதன் மொழிகளில் பேசி விளையாடுவேன்; அவற்றின் குணநலன்களை

அறிந்து கொள்வேன். மக்களுக்கும் அவற்றின் குணநலன்களை தெரிவிப்பேன்.


எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொள்ள வேண்டும் என்ற கொள்கையை

மக்களிடையே பரப்புவேன்.

இறுதியாக, மேற்சொன்ன அனைத்தும் எனக்கு உருமாறும் சக்தி


கிடைத்தால் மட்டுமே சாத்தியம் என்பதால் இந்த ஆசை கூடிய சீக்கிரத்தில்

நிறைவெற எல்லா வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

You might also like