நான் ஒரு ஆசிரியர் ஆனால்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

நான் ஒரு ஆசிரியர் ஆனால்

நான் ஒரு ஆசரியரானால் என்னை நம்பி வருகின்ற மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய
அவர்களுக்கு கற்பிப்பேன். ஒரு மனிதனுடைய தலை எழுத்தை மாற்ற கூடியது கல்வி ஆகும். அதனை
கற்பிக்கின்ற ஆசிரியர் தெய்வத்துக்கு நிகரானவர் ஆவார்.

ஆகவே நான் இந்த ஆசிரிய தொழிலுக்கு பெருமை சேர்க்கின்ற ஒரு ஆசிரியனாக மாணவர்களுக்கு
கல்வி போதிப்பேன். பணம் சம்பாதிக்கின்ற ஒரு தொழிலாக ஆசிரிய தொழிலை பார்க்கின்ற இந்த
காலகட்டத்தில் நான் ஏழை மாணவர்களுக்கும் தரமான கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என்று
கருதுகின்றேன்.

ஒரு ஏழை மாணவனுக்கு கல்வியை வழங்குவது ஒரு பாலைவனத்துக்கு மழை கிடைத்து பசுமை
நிலமாகுவதற்கு சமனாகும் என்பதை நான் அறிவேன். என்னிடம் வருகின்ற மாணவர்களுடைய அறியாமை
எனும் இருளை விரட்டி அவர்களுக்க நல்லறிவினை புகட்டி அவர்களை நல்வழிப்படுத்துவேன்.

தவறு செய்கின்ற மாணவர்களை கண்டித்து அவர்களை திருத்துவேன். மாணவர்களுக்கு கல்வியை


விடவும் நான் ஒழுக்கத்தை அதிகம் போதிப்பேன். அவர்களிடத்து உண்மை, நேர்மை, கருணை,
விட்டுக்கொடுப்பு, சகோதரத்துவம் போன்ற நற்பண்புகளை வளர்க்க உதவுவேன்.

மாணவர்களுக்கு தேவையான கல்வியினை பல வழிகளிலும் தேடி சேர்த்து அவர்களுக்கு நான்


வழங்குவேன். என்னால் முடிந்த வரைக்கும் அவர்களுக்கு கல்வியை மட்டுமன்றி அவர்களுது வாழ்க்கைக்கு
தேவையான ஆலோசனைகளையும் வழங்குவேன்.

எனது மாணவர்களுக்கு வாழ்வனைத்தும் கடமை உணர்வு, கடின உழைப்பு, மனவலிமை போன்ற


விடயங்களது அவசியத்தை நான் அவர்களுக்கு கற்பிப்பேன். அவை தான் அவர்களை வாழ்வில் வெற்றி
பெற செய்ய உதவும். இவ்வாறு என்னால் முடிந்த வரையில் ஒரு நல்ல ஆசிரயனாக எனது பணியை நான்
செய்வேன்.

எழுதியர்,

ஹர்வின் நாயர் த/பெ கிருஷ்ணன் ( HARVEN NAIR A/L KRISHNAN 3 SIGMA )

[ சுல்தான் சுலைமான் ஷா இடைநிலைப்பள்ளியின் மாணவர் ]

( KARANGAN TENTANG IDAMAN UNTUK MENJADI SEORANG GURU )

You might also like