எபிரேய வேதாகமத்தில் இதன் தலைப்பு” சாலமோனின் நீ திமொழிகள்” -
கிரேக்க செப்டுவாஜிண்ட்(LXX) தலைப்பும் ”சாலமோனின் நீதிமொழிகள்”(1:1). சாலமோன் பேசிய 3000 க்கும் (1 ராஜா.4:32; பிரசங்கி 12:9) மேற்பட்ட நீதிமொழிகளில் இருந்தும் சாலமோனின் செல்வாக்கு பெற்ற வேறுசிலரின் நீதிமொழிகளில் இருந்தும் அதிமுக்கியமான 513 நீதிமொழிகளை ஒன்று சேர்த்தது – இந்த நீதிமொழிகள் புத்தகம். நீதிமொழி என்றால்” போல் இருக்க வேண்டும்” என்பது. ”பொதுவானவற்றுக்கும், உறுதியான காட்சிகளுக்கும் மற்றும் வாழ்க்கையின் ஆழ்ந்த சத்தியங்களுக்கும் இடையில் ஒப்பீடு செய்யும் புத்தகமே நீதிமொழிகள். வாழ்க்கையின் அடிப்படைச் சத்தியங்களை மேம்படுத்திக் காட்டி அவைகளை கற்றுக் கொடுக்கும் எளிய, நீதி நிறைந்த- சொல்லப்பட்ட வார்த்தைகள் (விளக்கங்கள்) தான் நீதிமொழிகள். 2 நாளா.1:8-12 ல் சாலமோன் தேவனுடைய ஞானத்தை தேடினார் மனுஷர்களை சிந்திக்க வைக்கும் ”சுருக்கமும் ஆற்றலும் கொண்ட” வார்த்தைகளைப் பேசினார் எனக் காண்கிறோம். 1) தேவனுக்கு பயப்படும் பயம் 2) அவருடைய ஞானத்தின்படி வாழுதல் (1:7; 9:10). இந்த ஞானத்தின் தொகுப்பே- நமக்காக மனிதனாக வந்த இயேசு.
புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி
”சாலமோனின் நீதிமொழிகள்” (1:1) என்ற சொற்றொடர் - ஆசிரியரைக் குறித்துச்
சொல்லும் முழுமையான அறிக்கையாக எடுத்துக் கொள்ளாமல், ”தலைப்பு “ என்ற அளவிலேயே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.இஸ்ரவேலை 971-931 கி.மு. வரை சாலமோன் ராஜா ஆண்டபோது, தேவன் அவருக்கு சிறப்பான ஞானத்தை தந்தார் (1 ராஜா. 4:29-34) உபதேச பகுதிகள் (அதிகாரங்கள் 1-9) மற்றும் நீதிமொழிகள் 10:1 -22:16 ல் காணப்படும் நீதிமொழிகள் எழுதின ஆசிரியர். 22:17 - 24:34 ல் காணப்படும் ”ஞானிகளுடைய வார்த்தைகள்” அவை சாலமோனின் அரசாட்சிக்கு முன் -தேதி அறியப்பட முடியாதனவற்றினை சாலமோன் தொகுத்து எழுதினார். ….2