Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 6

எஸ்பிஎம் தமிழ் மொழி 2022

மொழியணிகள் படிவம் 4 & 5


வாக்கியத்தில் அமைத்தல்
(மாணவர்களுக்கு வாழ்த்துகளுடன் – திருமதி விக்னேஸ்வரி
சாம்பசிவம், நூலாசிரியர், எஸ்பிஎம் தேர்வு வழிகாட்டி)
இணைமொழி (படிவம் 4)
 தங்கள் வீட்டின் அக்கம் பக்கம் குப்பைக் கூளங்களுடன்
தூய்மையற்று இருந்ததைப் பலமுறை நகராண்மைக் கழகத்திடம்
முறையிட்டும் பயனில்லாததால் மல்லிகா குடும்பத்தினர் தாங்களே
தூய்மைப்படுத்தினர்.
 திரு. நலன் தம் குடியிருப்புப் பகுதியில் அக்கம் பக்கம் உள்ள
அனைவரிடமும் இன்முகத்துடன் பழகியதால் அவர்
துன்பப்படும்போது அனைவரும் ஓடிவந்து உதவி செய்தனர்.

 தமிழர்களின் அரிய பெரிய சாதனைகளுள் அனைவரையும்


பிரமிக்கவைப்பது இன்றளவும் முழுமையாக கண்டறியமுடியாத
நுட்பங்களால் ஆன அவர்களது சிற்பக்கலையும்,
கட்டடக்கலையுமாகும்.
 அக்கால தமிழ் அரசர்களின் அரிய பெரிய சாதனைகளைப் பற்றித்
தெரிந்துகொண்ட அகழ்வாராய்ச்சியாளர் திரு. நாதன் அக்கால
கட்டிடக்கலையைப் பற்றி மேலும் ஆய்வு செய்கிறார்
 நமது இன்ப துன்பங்களில் நமக்குக் கைக்கொடுப்பவர்களே
உண்மையான நண்பர்கள் ஆவர்.
 வாழ்க்கையில் இன்ப துன்பம் வருவது இயல்புதான் என்பதனைப்
புரிந்து கொண்ட பார்வதி தமக்குக் கஷ்டம் ஏற்படும்போது
சோர்ந்து விடாமல், மகிழ்ச்சியாக தம் வாழ்க்கையை நகர்த்துகிறார்.
 கால நேரம் வரும்போது மட்டும் தம் முயற்சியைக் கொண்டு
சம்பாதிக்கலாம் என்று வெறுமனே காத்திருந்த முகிலன் இறுதிவரை
வேலை ஏதும் செய்யாமல் வாழ்க்கையில் துன்பப்படுகிறார்.
 பள்ளி முடிந்து தாமதமாக வீடு திரும்பிய வள்ளி பல சாக்குப்
போக்குகளைச் சொல்லியும் தன் அம்மா நம்பாததால் தான்
1
தோழியுடன் பேரங்காடிக்குச் சென்று வந்ததை ஒப்புக்கொண்டு
மன்னிப்புக் கேட்டாள்.
 கடையில் அம்மாவுக்குப் பொருள்கள் வாங்கி வந்த சங்கர்
சில்லறைக் காசைத் தவற விட்டதால் சாக்குப் போக்குச் சொல்லி
சமாளித்தும், அம்மாவை ஏமாற்ற முடியாததால் உண்மையை
ஒப்புக்கொண்டான்.
 பாலு வீட்டுப் பாடம் செய்யாமல், மறதியாக புத்தகத்தை
வீட்டிலேயே விட்டுவிட்டதாகச் சாக்குப் போக்கு கூறினாலும்
ஆசிரியர் அவன் கூறியதை நம்பாமல் அவன் புத்தகப்
பையிலிருந்து அந்தப் புத்தகத்தை எடுத்தார்.

இணைமொழி படிவம் 5
 இளவயதில் தங்களைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்த
பெற்றோர்களைப் பிள்ளைகள் அவர்களது வயதான காலத்தில்
மனம் நோகாமல் பார்த்துக்கொள்வது மிகவும்
இன்றியமையாததாகும்.

 இளம் வயதில் தங்களைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்த


பெற்றோரைப் பிள்ளைகள் பெரியவர்களானவுடன் அனாதை
இல்லத்தில் விட்டுவிடாமல் நன்றாகப் பார்த்துக்கொள்ளவேண்டும்.

 இராணி சிறுவயதிலேயே பெற்றோரை இழந்ததால், தன்னைச்


சீராட்டிப் பாராட்டி அன்பாக வளர்த்த மாமா அத்தையை
அவர்களது இறுதிக்காலம் வரை தன்னுடனேயே வைத்திருந்தாள்.

 விருப்பு வெறுப்பு இல்லாத மனநிலை அமைந்து விட்டால்


மக்களுக்கு வாழ்வில் பிரச்சினைகள் இருக்காது.

 விருப்பு வெறுப்பு இல்லாமல் மாணவர் அனைவரிடமும் நன்றாகப்


பழகும் ஆசிரியர் திரு.செல்வாவை ஆசிரியர்கள் அனைவரும்
பாராட்டினார்.

 ஆனந்தன், தன் உறவினர்கள் துன்ப காலத்தில் தனக்கு


உதவாதபோதும், அதை மனதில் வைக்காது, அனைவரிடமும்
விருப்பு வெறுப்பு இல்லாமல் பழகும் பண்பாளர்.

2
 தம்மைத் தூற்றிப்பேசிய உறவினர் அனைவரிடமும் திலகா விருப்பு
வெறுப்புக் காட்டாமல் சகஜமாகப் பழகியதால் உறவினர்
அனைவரும் தம் செயலை எண்ணி வெட்கித் தலைகுனிந்தனர்.

 நாம் அண்டை அயலாருடன் சண்டைச் சச்சரவு இல்லாமல்


நல்லுறவை வளர்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

 பள்ளிக்கூடத்தில் எப்பொழுதும் சண்டைச் சச்சரவுகளில்


மாட்டிக்கொள்ளும் பாலுவை கட்டொழுங்கு ஆசிரியர் கண்டித்தார்.

 தான் வளர்க்கும் நாயிடம் சிக்கிக்கொண்டு பயத்தில் கத்திய


பூனையை சிறிதும் தயவு தாட்சண்யம் இல்லாமல் ரசித்துப் பார்த்துக்
கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து எனக்கு ஆத்திரம்
வந்தது.

 தம் தோட்டத்தில் நுழைந்து பயிர்களை மேய்ந்த ஆட்டைச் சிறிதும்


தயவு தாட்சண்யம் இல்லாமல் அத்தோட்டக்காரர் கட்டி வைத்து
அடித்தார்.

 ஆதி அந்தம் இல்லாத இறைவனே உலகின் எல்லா உயிர்களையும்


காப்பதாக என் அம்மா கூறுவார்.
 திரையரங்கில் நுழைந்தவுடனேயே அசதியால் கண்ணயர்ந்துவிட்ட
கோபி அப்படத்தின் ஆதியும் அந்தமும் புரியாமல் வாய்மூடி
அமைதியாக இருந்தார்.

உவமைத்தொடர் படிவம் 4
 வெள்ளத்தால் வீடு முற்றிலும் சேதமடைந்து பரிதவித்துக்
கொண்டிருந்த இரகு குடும்பத்தினர் தொடர்ந்து கொரோனா
நச்சுயிரி பெருந்தொற்றால் பாதிப்புற்ற போது வெந்த புண்ணில்
வேல் பாய்ச்சியது போல் பெருந்துன்பத்துக்கு ஆளாகினர்.
 தமது நெருங்கிய நண்பர் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு
அவர்கள் இருவருமே தம்மிடம் முறையிட்டபோது இராமன்
இருதலைக்கொள்ளி எறும்பு போல் எவர் பக்கமும் சாரமுடியாது
அமைதியானார்.

3
 மது அருந்திவிட்டு வாக்குறுதி கொடுப்பவர்களின் வாக்கு, நீர்
மேல் எழுத்துப் போல் நிலையில்லாதது என்பதால் அந்த
நேரத்தில் அவர்களது பேச்சுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது.
 மிகவும் வறுமையில் வாடிய திரு.வேந்தன் தாம் கடினமாக
உழைத்தால் எல்லா துன்பங்களும் நீர் மேல் எழுத்துப் போல
நீங்கும் என்பதை உணர்ந்ததால் உழைத்துச் சம்பாதித்து
மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்.
 பெருமழையால் வெள்ளம் ஏற்பட்ட போது, யானை வாயில்
அகப்பட்ட கரும்பு போல தங்களது இரண்டு வாகனங்களும்
மூழ்கிவிடும் என உணர்ந்த மணி செய்வதறியாது கலங்கினார்.
 நீலாயில் தொடர்மழையால் வெள்ளம் ஏற்பட்டபோது தம்
உடமைகள் அனைத்தும் யானை வாயில் அகப்பட்ட கரும்பு
போல சேதமைந்துவிடும் என்பதை மக்கள் உணர்ந்திருந்தாலும்
செய்வதறியாது கலங்கி நின்றனர்.
 நல்ல குடும்பத்தில் பிறந்த கவின் தவறான பழக்கங்களுக்கு
ஆட்பட்டு, நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல
குடும்பத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தினார்.
 பள்ளியிலேயே சிறந்த மாணவனாகத் திகழ்ந்த சந்திரன் தீய
பழக்கம் கொண்ட தியாகுவுடன் பழகத்தொடங்கியதும் நல்ல
மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல அவனும் தீய
பழக்கங்களுக்கு ஆளானான்.

உவமைத்தொடர் படிவம் 5
 சுந்தர் பல்கலைகழகப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியதால்
அவன் படிப்பிற்காக அவன் பெற்றோர் செய்த செலவு விழலுக்கு
இறைத்த நீர்போல் ஆனது.
 வெளிநாட்டில் படிக்கச்சென்ற பிள்ளைகள் இருவரும் அங்கேயே
தங்கிவிட்டதால் வயதான காலத்தில் அவர்களின் பெற்றோர்
கொழுகொம்பற்ற கொடி போல் தனிமையில் தவிக்கின்றனர்.
 ஒரு வாரத்தில் நடக்கவிருந்த மகளின் திருமணத்திற்கு வைத்திருந்த
நகைகள் காணாமல் போனபோது, அம்மா சிறகிழந்த பறவை போல்
செய்வதறியாது கண்கலங்கி நின்றார்.

4
 அந்தக் குடும்பத் தலைவரின் மறைவுக்குப் பின்னர், வெளி உலகமே
தெரியாமல் வளர்க்கப்பட்ட அவரது பிள்ளைகள் மாலுமி இல்லாத
கப்பல் போல் செய்வதறியாது சிரமப்பட்டனர்.
 எங்கள் பந்து விளையாட்டுப் பயிற்றுனர் ஒப்பந்த காலம் முடிந்து
தம் சொந்த நாடு சென்று விட்டதால் நாங்கள் மாலுமி இல்லாத
கப்பல் போல் தடுமாறுகிறோம்.
 அந்த இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பகைமை நீறு பூத்த
நெருப்பாக இருப்பதால் எப்போது வேண்டுமானாலும்
அந்நாடுகளுக்கிடையே போர் மூளலாம் என்பது அனைவரும்
அறிந்ததே.

மரபுத்தொடர் படிவம் 4
 முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் எங்கள் ஆசிரியர் நிறைகுடம்
தளும்பாது என்பதற்கொப்ப எல்லோரிடமும் ஆரவாரமின்றி /
சகஜமாகப் பழகுவார்.
 உதவி என்று கேட்டு வரும் ஏழை மக்களுக்கு மனம் கோணாமல்
உதவி செய்யும் திரு. சுப்பையாவின் பண்பு கருணைக் கடலுக்கு
ஒப்பாகும்.
 தான் சிறுவயது முதல் பரதம் கற்றுக் கொண்டிருப்பதாக சக
தோழிகளிடம் தம்பட்டம் அடித்து வந்த நளினி, பள்ளி இலக்கிய
விழா நடனப் போட்டியில் ஆடத்தெரியாமல் நின்றபோது
அவளது சாயம் வெளுத்ததால் வெட்கித் தலைகுனிந்தாள்.
 நூறு ரிங்கிட் முதலீடு செய்தால் அப்பணத்தை ஆயிரமாக
மாற்றித் தருவதாகச் சொல்லி அனைவர் காதிலும் பூ வைத்ததால்
மக்கள் அனைவரும் உண்மை அறிந்து ரங்கனை அடித்து
உதைத்தனர்.
 வீட்டுப்பாடங்களை ஒழுங்காகச் செய்து வரும் மாணவர்களை
ஆசிரியை மங்கை தட்டிக் கொடுத்துப் பாராட்டுவதால் அவரது
மாணவர்கள் அனைவரும் வீட்டுப்பாடங்களைத் தவறாது செய்து
வருகின்றனர்.

மரபுத்தொடர் படிவம் 5
 உழைப்பாளியான சங்கர் தொழில் தொடங்கி ஒரே வருடத்தில்
வீடு, வாகனம் வாங்கியதைக் கண்டவர்களுக்கு அவன் தொழிலில்

5
நன்றாக சம்பாதிக்கிறான் என்பது வெள்ளிடைமலையாகத்
தெரிந்தது.
 சிறந்த தேர்ச்சியைப் பெற விரும்பும் மாணவர்கள் பாடங்களைக்
குறிப்பெடுத்துப் படிப்பதுடன் நிறைய பயிற்சிகளைச் செய்தால்
அதிக மதிப்பெண்களைப் பெற முடியும் என்பது வெள்ளிடைமலை.
 ரவி தன் கடையில் விலை குறைந்த கைப்பேசியை அதிக
விலைக்கு விற்றுவிட இனிப்புக் காட்டிப் பேசியதை அறிந்த
வாடிக்கையாளர் அக்கடையை விட்டு வெளியேறினார்.
 யார் என்ன சொன்னாலும் ஒத்துப் பாடும் வள்ளியின் கருத்திற்கு
யாரும் முக்கியத்துவம் கொடுக்காததால் அவள் தன் தவற்றை
உணர்ந்து வெட்கப்பட்டாள்.
 நல்ல நட்புக்கு அழகு, நண்பர் என்ன சொன்னாலும் ஒத்துப்
பாடாமல் சரியான கருத்தை வலியுறுத்துவதாகும் என்பதை நன்கு
உணர்ந்த விமலா, யார் என்ன சொன்னாலும் அதனைச்
சீர்தூக்கிப்பார்த்தே விளக்கமளிப்பார்.
 கணக்குப் பாடத்தின் நெளிவு சுளிவுகளைத் தெரிந்து கொண்டு
பயிற்சியும் முயற்சியும் செய்ததால் கோமதியால் கணிதத் தேர்வில்
சிறந்த தேர்ச்சி பெறமுடிந்தது.
 வீட்டிலிருந்து உணவு அனுப்பும் தொழிலை ஆரம்பிக்கும் முன்
அதில் வெற்றி பெறத் தேவையான நெளிவு சுளிவுகளைச் சில
இடங்களில் வேலை செய்து பெற்றதால் அமுதன் இன்று
அத்தொழிலில் வெற்றி நடை போடுகிறார்.
 தமது தாயின் உடல் நலக்குறைவுக்கு ஒய்வு ஒழிச்சல் இல்லாது
வேலை செய்ததே காரணம் என்று உணர்ந்த பிள்ளைகள் இப்போது
அவரை ஓய்வெடுக்க வைத்து நன்றாகப் பார்த்துக் கொள்கின்றனர்.
********************************************************************

You might also like