Consumer

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 62

விழிப்புணர்வை வலியுறுத்தி ஆண்டு தோறும் இந்தியாவில்

டிசம்பர் 24 ஆம் தேதி தேதி நுகர்வோர் தினம் ( National Consumer


Day, December 24 )ஆக அனுசரிக்கப்படுகிறது.

எந்தப் பொருளை வாங்கினாலும் ரசீதை கேட்டு வாங்குங்கள்.


அப்போதுதான் ஏதாவது பிரச்னை என்றால் உரிமையோடு போராட
முடியும். ரசீது இல்லை என்றால் எங்கள் கடையில் வாங்கியதே
இல்லை என்று கடைக்காரர்கள் சொல்ல வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக
ஹால் மார்க் சான்றிதழ் வழங்கப்பட்ட தங்க நகைகளை மட்டுமே
வாங்கவும். ஐ.எஸ்.ஐ. அக்மார்க் சான்றிதழ் பெற்ற பொருட்களை
வாங்கலாம்.
 
எங்கே புகார் செய்ய வேண்டும்?
 
அதையும் மீ றி பொருட்களில் மோசடியோ அல்லது ஏமாற்றுவேலை
செய்தால்,  சரக்குகளின் விலை அல்லது சேவையின் மதிப்பு அல்லது
கேட்கும் நஷ்ட ஈட்டைப் பொறுத்து புகார் செய்யும் இடம் மாறுபடுகிறது.
 
* 20 லட்ச ரூபாய்க்கு குறைவு என்றால் மாவட்ட மன்றம்
 
* 20 லட்ச ரூபாய்க்கு மேல் 1 கோடி ரூபாய் வரை மாநில கமிஷன்
 
* 1 கோடி ரூபாய்க்கு மேல் - தேசிய கமிஷன்
 
நுகர்வோர் குறித்த புகார்களை  www.core.nic.in என்ற இணைய தளத்தில்
பதிவு செய்யலாம்.
தேயிலையை சிறிய பைகளில் வைத்து டீ பேக் தயார்
செய்கின்றனர். இந்த தேயிலை பைகளை அப்படியே பால்
அல்லது சூடான நீரில் மூழ்கும்படி வைத்தால்
தேயிலையின் சாயம் இறங்கி தேநீர் தயாராகிறது.

இன்று இந்த டீ பேக்குகளை பல நிறுவனங்கள் தயார்


செய்து போட்டிபோட்டு விற்கின்றனர்.

இதற்கான விளம்பரங்களைப் பார்த்து ஆர்வத்தில்


தற்போது அதிகமானோர் டீ பேக் பயன்படுத்தத் தொடங்கி
உள்ளனர்.

இந்த டீ பேக்குகள் எப்படி தயாரிக்கப்படுகிறது? அதனால்


உடல்நல பாதிப்புகள் ஏற்படுமா? என்று உணவியல்
நிபுணர் சாந்தி காவேரியிடம் கேட்டோம்.

‘‘டீ பேக்குகள் (Tea bags) தயாரிக்கையில், அது எளிதில்


கிழியாமல் இருப்பதற்காக Epichlorohydrin என்ற
வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது.

இந்த வேதிப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும்


காரணியாக உள்ளது என்று தேசிய தொழில் பாதுகாப்பு
மற்றும் சுகாதார நிறுவனம்(NIOSH) தெரிவித்துள்ளது.

இந்த வேதிப்பொருள் பூச்சிக்கொல்லியாகவும்


பயன்படுத்தப்படுகிறது. இந்த டீ பேக்கை சுடுதண்ண ீரில்
போடும்போது எப்பிகுளோரோஹைட்ரின் நீரில் கரைந்து
வேதியியல் மாற்றமடைந்து MCPD என்கிற
வேதிப்பொருளாக மாறுகிறது.
இது புற்றுநோய் காரணியாக இருப்பதோடு
குழந்தையின்மை மற்றும் நோய் எதிர்ப்புசக்தி குறைவு
போன்ற பிரச்னைகளுக்கு காரணமாகிறது.

தற்போது இதுபோன்ற டீ பேக்குகள் PVC, Food grade Nylon


போன்ற பொருட்களால் தயார் செய்யப்படுகிறது.

இந்த பைகளில் உள்ள Bisphenol-A (BPA) என்கிற


ஒருவகை பிளாஸ்டிக் பொருள் ஈஸ்ட்ரோஜென் போன்ற
ஹார்மோன்களின் சீரான செயல்பாடுகளுக்குத் தடையாக
உள்ளது.

மேலும், மார்பகப் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய்,


நீரிழிவுநோய், உடல்பருமன், இதயநோய்கள், கல்லீரல்,
தைராய்டு பிரச்னைகள், குழந்தையின்மை, பெண்
குழந்தைகள் சீக்கிரமாக பருவமடைதல் மற்றும்
குழந்தைகளின் நடத்தை மாற்றங்கள் போன்ற
பிரச்னைகள் ஏற்படுகிறது.

சில டீ பேக்குகளில் ஃப்ளூரைடு பயமுறுத்தும் அளவுக்கு


உள்ளது. இதனால் எலும்பு மற்றும் பற்களில் பாதிப்பு
உண்டாகிறது.

ஃப்ளூரைடு அளவு உடலில் அதிகமாகும்போது Fluorosis


என்ற நிலை உருவாகிறது. இந்த நிலையால் பற்களின்
நிறம் மாறுவதோடு எலும்புகளில் வலி, தசைப்பிடிப்பு
போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.
டீபேக்குகளில் உள்ள Synthetic fluoride என்கிற
வேதிப்பொருளால் புற்றுநோய், எலும்பு, பல் மற்றும்
சிறுநீரகபிரச்னைகள் உண்டாகிறது.

இத்தனை உடல்நலப் பிரச்னைகளை உருவாக்குகிற


அளவுக்கு, தரமற்றதாகவே பெரும்பாலும் டீ பேக்குகள்
தயார் செய்யப்படுவதால் அவற்றை இனம் கண்டறிந்து
தவிர்ப்பதே நல்லது’’ என்கிறார் சாந்தி காவேரி.

டீ பேக் தயாரிப்பு, அதில் உள்ள வேதிப்பொருட்கள் பற்றி


முதுகலை வேதியியல் ஆசிரியர் ரவி சுந்தரபாரதியிடம்
கேட்டோம்.‘‘டீ பேக்குகளை காட்டன் துணிகளில் தயார்
செய்யும் பட்சத்தில் அதனால் பாதிப்பில்லை.

ஆனால், தற்போது டீ பேக்குகளைத் தயாரிக்கும்


நிறுவனங்களுக்கு இடையே உள்ள போட்டி
அதிகரித்துள்ளது.

இதனால் உற்பத்திச் செலவைக் குறைத்து விற்பனையை


அதிகரிப்பதற்காக செயற்கை தொகுப்பு
துணிகளால்(Synthetic Fabrics) செய்யப்பட்ட டீ
பேக்குகளை தயாரித்து விற்பனை செய்கின்றனர்.

Polyethylene Terephthalate (PET) என்ற வேதிப்பொருளை


டீபேக்கு கள் உறுதியாக, பளபளப்பாக இருப்பதற்காக
சேர்க்கிறார்கள்.

இந்த டீபேக்குகளை, டீ தயார் செய்யும் போது சூடான நீர்


அல்லது பாலில் மூழ்கும்படி வைக்கும்போது PET
வேதிப்பொருள் வெளிப்படுகிறது. இது ஒரு புற்று நோய்
காரணியாக உள்ளது. சாதாரண தேயிலை காற்றிலுள்ள
ஈரத்தை உறிஞ்சும் தன்மையுடையது.

இப்படி ஈரமாவதால் அந்த தேயிலையில் பூஞ்சை, காளான்


உற்பத்தியாகும் வாய்ப்பு உள்ளது.

இதைத் தடுப்பதற்காக Synthetic fluoride மற்றும்


பூச்சிக்கொல்லி களை டீ பேக்குகளில் சேர்க்கின்றனர்.

இவை புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளாக உள்ளது.


பார்க்க அழகாக, பயன்படுத்த சுலபமாக இருப்பதாலோ,
கண்ணைக் கவரும் விளம்பரங்களைப் பார்த்தோ
இதுபோன்ற பொருட்களை வாங்கக்கூடாது.

எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம்’’


என்கிறார் நிபுணர்.

அமெரிக்காவில் உள்ள ・ சென்டர் ஃபார் என்விரான்மென்டல்


ஹெல்த் ・ அமைப்பு, குளிர்பானத்தில் (பெப்சி, டயட் பெப்சி,
பெப்சி ஒன்) கேரமல் நிறமியாகச் செயல்படும் 4 -
மெதிலிமிடசோல் (4-Methylimidazole) எனும் ரசாயனம்
புற்றுநோயை உருவாக்கும் என 2013-ம் ஆண்டே
ஆதாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டது. டெஸெர்ட்ஸ்,
ஐஸ்கிரீம்கள், குளிர்பானங்கள், கேக் ஆகியவற்றில் இனிப்பு
மற்றும் மணம் சேர்க்க இந்த கேரமல் நிறமி
பயன்படுத்தப்படுகிறது. பெப்சி பருகுவோருக்கு இதனை
அறிவுறுத்தும் வகையில், பெப்சி குளிர்பான பாட்டில்களின்
மேல் புற்றுநோய் எச்சரிக்கை வாசகம் அச்சிடப்பட வேண்டும்
என வலியுறுத்தப்பட்டது. `தங்கள் குளிர்பானங்களில்
புற்றுநோயை உண்டாக்கும் எந்த வேதியியல் பொருட்களும்
இல்லை' என அப்போது அடித்துக் கூறியது பெப்சி நிறுவனம்.
மக்களின் பாதுகாப்புக் கருதி, இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி
வைக்கக் கோரி, அமெரிக்காவின் கலிஃபோர்னியா
நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், `ஒரு பாட்டில் பெப்சியில் 29 மைக்ரோ


கிராமுக்கு மிகாமல் கேரமல்தான் சேர்க்கப் பட வேண்டும்'
என்று நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தது. நீதிமன்ற உத்தரவை
அடுத்து, குளிர்பான நிறுவனம் நிறமியின் அளவு
கட்டுப்பாட்டுக்கு ஒப்புக்கொண்டது. ஆனால், 2014-ம் ஆண்டு
நுகர்வோர் பாதுகாப்புக்காக நடத்தப்பட்ட ஆய்வில், அந்த
நிறுவனத்தின் குளிர்பானத்தில், 29 மைக்ரோ கிராமுக்கு மேல்
கேரமல் பயன்படுத்துவது    தெரியவந்தது. 29-க்கு மேல் ஒரு
மைக்ரோ கிராம் அதிகமாக கேரமல் சேர்த்தாலும், அந்தக்
குளிர்பானம் பருகும் ஒரு லட்சம் பேரில் ஒருவருக்குப்
புற்றுநோய் வருவதற்கான அபாயம் இருப்பதாக ,
கலிஃபோர்னியாவின் சுற்றுச்சுழல் மற்றும் உணவுப் பாதுகாப்பு
அமைப்பின் ஆய்வு முடிவுகள் கூறின.   

தற்போது, இந்தக் குற்றச்சாட்டு ஆய்வு மூலம் ஆதாரத்தோடு


நிரூபிக்கப்பட்டதும்,    சுதாரித்துக்கொண்ட குளிர்பான நிறுவனம்
உண்மையை ஒப்புக்கொண்டது. "எங்கள்  வாடிக்கையாளர்கள்
ஒரு நாளில் சராசரியாக ஒ

brominated vegetable oil, 4-methylimidazole (4-MEI, Caffeine, Bisphenol-


A (BPA, Sodium Cyclamate

 prevent the drinks' ingredients from separating. ...


 High-fructose corn syrup (HFCS)
 4-MEI.
 Caffeine.
 Bisphenol-A (BPA)
 Sodium Cyclamate.

Aspartame
ஆனால் இந்த புரோட்டாவினால் உடலுக்கு தீங்கு வரும் என்று
உணவியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். கேரளாவில் மைதாவில்
உள்ள தீங்குகளைப் பற்றி விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தி
வருகிறார்கள். ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகள்
மைதா பொருட்களுக்கு தடைவிதித்துள்ளன.

புரோட்டா மட்டுமல்லாமல் இன்னும் பல வகை உணவுகள் இந்தக் கொடிய


மைதாவால் செய்யப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட
கோதுமை பற்றாக்குறையால் மைதா மாவினால் செய்யப்பட்ட உணவு
புழங்கத் தொடங்கின. புரோட்டாவும் பிரபலமடைந்தது.

மைதாவில் நார்ச்சத்து எதுவும் கிடையாது. அதனால் நமக்கு செரிமான


சக்தி குறைந்து விடுகிறது. குறிப்பாக இரவில் புரோட்டா சாப்பிடுவதை
அடியோடு நிறுத்த வேண்டும். அதுமட்டுமல்ல, மைதா மாவினால்
தயாரிக்கப்படும் ரொட்டிப் பொருள்கள், கேக் வகைகள் போன்றவைகளை
நாம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

நன்றாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு லேசான மஞ்சள் நிறத்தில்


இருக்கும், அதை அப்படியே சப்பாத்தி செய்து சாப்பிடுவது உடலுக்கு
நன்மை பயக்கும்.

ஆனால் அதிலிருந்து மைதா தயாரிக்க கோதுமை மாவில் ‘பெண்சாயில்


பெராக்ஸைடு’ என்னும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது.

இந்த ரசாயனம்தான் நாம் முடியில் அடிக்கும் டையில் உள்ள ரசாயனம்.


இந்த நச்சு ரசாயனம் மாவில் உள்ள புரோட்டீன் சத்துடன் சேர்ந்து
கணையத்தை சேதமாக்கி நீரழிவு நோய் வருவதற்கு காரணமாகிறது.
அதுமட்டுமல்ல, அலோக்கான் என்னும் ரசாயனம் மாவை
மிருதுவாக்கவும், ஆர்ட்டிஃபிசியல் கலர், மினரல் ஆயில், டேஸ்ட் கேம்கர்,
சாக்கரின் சக்கரை அஜினேமோட்டோ போன்றவை சேர்க்கப்படுவதால்
புரோட்டா இன்னும் அபாயகரமாகிறது. மைதா சாப்பிடுவது
இந்தியாவில்தான் அதிகம். உலகளவில் சர்க்கரை நோயாளிகளும் நம்
நாட்டில்தான் அதிகம். மேலும் சிறு நீரகம், இதயம் சம்மந்தப்பட்ட
நோய்களும் இதனால் வருவதாக கூறுகிறார்கள்.

இன்றைக்கு காளைகள் உழுத நிலத்தில் எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின்


டிராக்டர்களது  உழவு தான் நடக்கின்றன.  காளைகள் மண்ணை செழிக்க வைக்க
உரமிட்டது. ஆனால் டிராக்டர் டீசலைக் குடித்துவிட்டு புகையை விட்டது. கூடவே,
ஆயிலையும் பீச்சியடிக்கிறது. மாடு சிறுநீர் கழித்தால் உரம்; டிராக்டரில் இருந்து
வெளியேற்றப்படும் ஒரு லிட்டர் ஆயில் தண்ண ீரில் கலந்தால்… 1.58 லட்சம்
லிட்டர்கள் தண்ண ீர் நாசம்.கூடவே, நிலத்தில் கலந்தால் மண் மலடாகும்.

ஒரு கலப்பின மாட்டை உருவாக்குவதற்காக சுமார் 50 ஆயிரம் ரூபாய்கள் வதம்,



ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்களைச் செலவு செய்கின்றன மத்திய மற்றும்
மாநில அரசுகள். அப்படி உற்பத்தி செய்யப்படும் மாடுகளில்  பலவிதமான
வியாதிகள்… சினை பிடிப்பதில் பிரச்சினைகள் ஏற்பட்டு… இன்றைக்கு அனைத்து
மாடுகளும்  கேரளாவுக்கு அடி மாட்டுக்கு ஏற்றப்படுகிறது.

ஒரு உயிரினத்தில் 67 சதவத


ீ அளவு தான் கலப்பு செய்யலாம் என்ற சட்டம் இருக்கும்
போது,  மாடுகளில் மட்டும் இது வரையில் 90 சதவதம்
ீ கலப்பின மாடுகள் உருவாக்கி
இருக்கிறனர். கலப்பின மாடுகள் பெருக்கத்தால்… ரகத்திற்கு பெயர் தெரியாத நாட்டு
மாடுகளை ND (none described) என்ற பெயர் வைத்து, கலப்பு செய்து விட்டனர். இதனால்
இன்றைக்கு பல இனங்கள் இல்லாமல் போய் விட்டது. தற்பொழுது வரை, இந்தியா
முழுவதும் 30 வகை மாட்டினங்கள் மட்டும்தான் வகைப்படுத்தப் பட்டிக்கிறது.
வகைப்படுத்தப் படாமல் சுமார் 30 இனங்கள் இருக்கின்றன. தமிழ் நாட்டில் காங்கேயம்,
உம்பளாச்சேரி ரக மாடுகளைத் தவிர… திருவண்ணாமலை, பர்கூர், புலிக்குளம்,
மணப்பாறை, கிடை மாடுகள் என்று பலவகையான இனங்கள் இதுவரை வரையறை
செய்யப்படாமலே இருக்கின்றன.

1972 மற்றும் 1982-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட பத்து ஆண்டுகளில் ‘வெண்மைப்


புரட்சியின்’ விளைவால் 1.25 லட்சம் காளை மாடுகள் குறைந்துள்ளதாகவும், 1976
மற்றும் 1982-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட ஆறு ஆண்டுகளில் மட்டும் ’பர்கூர்’ இனக்
காளைகள் 49 சதவதமும்,
ீ ’காங்கேயம்’ இனக் காளைகள் 18 சதவதமும்

அழிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் கால்நடைக் கணக்கெடுப்புப் புள்ளிவிபரம் 
சொல்கிறது.
பொதுவாக பிறக்கும் கன்றின் எடையில் 10 சதவதம்
ீ தான் தாய்ப்பால் சுரப்பு இருக்கும்.
அதன்படி 20 கிலோ எடை கொண்ட பசுங் கன்றின் எடையில் 1/10 பால் என்று 2
லிட்டர்கள் பால் தான் சுரக்கும். இந்தப் பால் குறைவாக சுரக்கிறது என்பது தான்
அவர்களின் வாதம். அதற்காகத்தான் செயற்கை முறையில் குளிர் நாடுகளில் இருந்து
உறை விந்துகளை இறக்குமதி செய்து செயற்கை முறையில் கருவூட்டலை
அதிகப்படுத்தினார்கள். கன்று ஈன்ற 60 நாள் இடைவெளியில் பருவத்திற்கு வந்தவுடன்
பசுவுக்கு கருவூட்டல் செய்யப்பட்டு, வருடம் முழுவதும் உள்ள  365 நாட்களில்
பெரும்பாலான நாட்களும் இயந்திரத்தைப் போன்று பாலைக் கறப்பதிலேயே குறியாக
இருந்தனர்.  பால் உற்பத்தியும் பெருகியது. பாலுக்கு பசு மாடு மட்டும் போதும், காளை
தேவையில்லை என்று காளை அழிப்பு நடத்த நடத்த… வியாதிகளும் அதிகமாகியது.

குளிர் நாட்டு பசுக்களுக்கும், காளைகளுக்கும் ‘பாலுணர்வு மந்தமாகவே’ இருக்கும்.


அவற்றால் நம் நாட்டு மாடுகளைப் போல எளிதில் சினை பிடிக்க முடியாது. முதலில்
கலப்பு செய்யப்பட்ட போது, 50 சதவதம்
ீ நாட்டு மாடாக இருந்ததால்… சினை
பிடிப்பதில் பிரச்சினை இல்லாமல் இருந்தது. இரண்டாவது முறை, மூன்றாவது
முறைக்குச் செல்ல செல்ல… சினை பிடிப்பது குறைந்து விட்டது.  இரண்டு லிட்டர்கள்
பாலைக் கொடுத்த மாட்டில் இருபது லிட்டர்கள் பால் கறக்க, செயற்கை முறையில்
விந்தணுக்களைச் செலுத்தி கருத்தரிக்கச் செய்தனர். மேலும், மாடுகளுக்கு தேவைக்கு
அதிகமான தீவனங்கள், ஊசிகள் என்று பால் சுரப்பை அதிகப்படுத்தும் போது…
மாட்டின் ‘ஜீனில்’ மாற்றம் ஏற்படுகிறது. 5 முதல் 8 நிமிடங்களில் 2 லிட்டர்கள் பாலைக்
கறக்க வேண்டிய நேரத்தில், 20 லிட்டர்கள் பால் கறவை செய்கின்றனர். பால்
சுரப்புக்கான ‘லேக்டேட்டிங் ஹார்மோன்’ அதிகமாகி பாலில் கலந்து வெளியேறுகிறது.
அந்த பாலை உட்கொண்டு வரும் குழந்தைகள் முதல்  பெரியவர்கள் வரை புதிதாக 
பிரச்சினைகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.

‘குழந்தைகளின் இரைப்பை நீர் கார நிலையில் இருக்கும். ஜீரணிக்கக் கூடிய ‘ரெனின்’


சுரப்பி இருக்கிறது. வளர்ந்த மனிதர்களில் இரைப்பை அமில நிலையில் இருக்கும்
’ரெனின்’சுரப்பு இருக்காது. பால் இயற்கைக்கு மாறாக வேறு வழியில்தான் 
செறிக்கப்படுகிறது. தவழும் வரை தான் தாய்ப்பால். உலகத்தில் 4300 பாலுட்டிகள்
இருக்கிறது. அவற்றில் மனித இனத்திற்கு மட்டும் தான் பால் சுரப்பதில் சிக்கல்
இருக்கிறது.

15, 16 வயதில் பருவமடைந்த பெண் மக்கள் தற்போது விபரம் தெரியாத 10, 11


வயதிலே பருவமடைந்து விடுகிறனர். சிறு வயதில் ஆரம்பமாகும் மாத விலக்கு… 
நடுத்தர வயதிலே நின்று விடுகிறது. மேலும், குழந்தை பெற்றுக்கொள்ளும் போது,
‘சிசேரியன்’  முறையில் குழந்தை பிறக்கிறது. தாய்மார்களுக்கு  குழந்தை பிறந்த
மூன்று நாட்களுக்கு மேல்… தாய்ப் பால் சுரப்பு இல்லாமல் போய் விடுகிறது.
ஆண்களுக்கு   பால் தன்மை அதிகமாக தூண்டி விடுகிறது.  இவ்வாறு ஒழுங்கற்ற 
ஹார்மோன்  சுரப்பால் ஏழில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை உருவாகி  இருக்கிறது.”
என்கிறார் மருத்துவர் காசி.பிச்சை.

பால்… குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் கால்சியம், புரதச் சத்து,


விட்டமின் ‘ஏ’வையும் கொடுக்கிறது. ஆனால் பாலில் இருக்கும் கேசின் புரதம் நீரிழிவு
நோயை தூண்டக் கூடியது. இந்த கேசினில் ஏ 1,ஏ 2 என்று இரண்டு வகை இருக்கிறது.
பாஸ் இன்டிகஸ் இன மாடுகளில்( திமில் உள்ளது,   நாட்டு மாடுகள்) ஏ 2
அதிகமாகவும், பாஸ் டாரஸ் ( திமில் அற்றது, ஹெச்.எப், ஜெர்சி போன்ற அயல்நாட்டு
இனம்) மாடுகளில் ஏ 1 கேசின் மட்டும் இருக்கின்றன.  ஏ 1  கேசின் இருக்கும் பாலைக்
குடித்தால்… அது குடலில் செறிக்கப்படும் போது BCM7 (beta-caso-morpine-7) ஆக
மாற்றமடைந்து, நீரிழிவு,நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சியைப் பாதித்தல்(ஆடிசம்)
போன்ற வியாதிகளை உண்டாக்குவதாகக்  கண்டுபிடித்துள்ளார்கள். ”ஏ 2 கேசின் உள்ள
பாலைக் குடித்து அது செறிக்கப்படும் போது, உடலுக்கு தீமை செய்யாமல் உடலைக்
காப்பாற்றுகிறது” என்கிறார்  பேராசிரியர்  பாப் எலியாட்.

ஏ 1, ஏ 2 பாலைப் பற்றி… 1990-ம் ஆண்டு வாக்கில் ஆக்லாந்து பல்கலைக் கழகத்தின்


குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவைச் (childeren’s   medicine at  aucklanad  university)
சேர்ந்த பேராசிரியர் ‘பாப் எலியாட், ‘டைப் 1 நீரிழிவு நோய் தாக்கிய குழந்தைகளுக்கு
கண்டிப்பாக இன்சுலின் போட்டே ஆக வேண்டும்.’ என்றார். அந்நோய் ஏன் ஏற்படுகிறது
என்று நியூசிலாந்தில் ’சமோன்’ மலைவாழ் இன மக்களிடையேயும்,  அவர்களின்
சொந்த ஊரில் இருப்பவர்களிடமும் ஆராய்ச்சி செய்த போது, நியூசிலாந்தில்
இருக்கும்  குழந்தைகள் பாலை அதிகமாகக் குடிப்பதாகவும், அந்த பாலில் ஏ 1
அதிகமாக இருப்பதாகவும், அதே சொந்த ஊரில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த
நோய் குறைவாக இருந்ததும் கண்டறியப்பட்டது. அவர்கள்  ஏ 2  பாலைக்
குடிப்பதாகவும் கண்டு பிடித்தார்.    பால் ஒவ்வாமை இருக்கும் குழந்தைகள், நீரிழிவு
நோய் தாக்கிய குழந்தைகள் கேசின் ஏ 2 இருக்கும் பாலை சாப்பிட்டால் இந்தப்
பிரச்சினை வருவதில்லை என்று கண்டுபிடித்துள்ளார். தற்பொழுது நியூசிலாந்து,
ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏ 2 பாலுக்கு தனியாக கார்ப்பரேஷன் ஆரம்பித்து
பாலை உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள். கென்யா மாட்டின் பாலில் 100 சதவதம்
ீ ஏ2
இருக்கிறது. மேலும் அமெரிக்கா, நியூசிலாந்து நாடுகளில் இருக்கும் மாடுகளில்  50:50
ஏ 1,ஏ 2 வாகவும் இருக்கிறது. அமெரிக்காவில் 50 சதவதமாக
ீ இருக்கும் ஏ 1 பாலைக்
கொடுக்கும் மாடுகளை ஏ 2 பாலை கொடுக்கும் மாடுகளாக மாற்றுவதற்கு
ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் நாமும், அரசும் கலப்பின
மாடுகளை உருவாக்குவதிலே குறியாக இருக்கிறோம்.   கலப்பின  மாடுகளைத்தான்
விவசாயிகள் தலையில் கட்டுவதற்கு  அரசு துடிக்கிறது.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய கால்நடைத்துறை


அமைச்சர் சின்னய்யா, தமிழ்நாட்டில் எல்லா மாடுகளும் ‘அம்மா… அம்மா…’ என்று
கத்துவதாகச் சொல்லி இருக்கிறார். இந்த கால்நடைத்துறை மு(ம)ந்திரி கலப்பின
கால்நடைகள் கத்துவதை கேட்டிருக்க மாட்டார் போலும்.  தற்பொழுது எந்த கலப்பின
மாடும் ‘அம்மா’ என்று கூட கத்த திராணி இல்லாமல்… ‘ம்ம்ம்ம்ம்ம்ம்மா..ஆஆஆஆ’
என்று விநோதமாகத்தான் கத்துகிறது.  தமிழக முதல்வர் அம்மையார் கோவில்
கோவிலாக போய் நந்தியை வழிப்படுகிறாரே… காளைகளை அழித்து விட்டு ஏன்
நந்தியை பிரதிஷ்டை செய்ய வேண்டும். ‘தஞ்சை பெருவுடையார் கோவிலில்
இருக்கும் நந்தியை எடுத்துவிட்டு, சிவனுக்கு டிராக்டரை பிரதிஷ்டையாக நிறுத்த
வேண்டியது தானே!

காளை மாடுகளின் அழிவு என்பது ஒரு கலாச்சாரத்தின் அழிவு தான். மாடு சுமந்த ஏர்க்
கலப்பைகளின் மரணம் தான். கால்நடைகளை மட்டும் இழக்கவில்லை. நம்முடைய
பாரம்பரியம்…  அனுபவத்தில் முதிர்ந்த சான்றோர்களின்  அறிவையும் 
உதாசீனப்படுத்தி விட்டோம். இனியாவது மண்ணுக்கு ஏற்ற மரபுக்கு ஏற்ற…
பாரம்பரிய கால்நடை இனத்தைப் பாதுகாக்க வேண்டும்.

வெண்மைப் புரட்சி என்ற பெயரில் ஏகாதிபத்திய சூழ்ச்சியால் நாட்டுக்குள் ஊடுருவிய


கலப்பின மாடுகள் அனைத்தும் பாலுக்காக மட்டுமே வளர்க்கப்பட்டாலும், நிறைய
கறப்பது என்ற பெயரால் நாட்டு மாடுகளை ஒழித்து விட்டன. விவசாயிகள் பசுமைப்
புரட்சியால் மலடாகிப் போன நிலத்தை உழுவதற்கு காளைகள் இல்லாமல்
போகின்றன. புதிய பொருளாதாரக் கொள்கை ஆரம்பித்த இருபது ஆண்டுகளில் விதை
உள்ளிட்ட இடுபொருட்களுக்கு பன்னாட்டுக் கம்பெனிகளை எதிர்பார்க்கிறோம்
என்றால் உழவு செய்ய காளைகளையும் இறக்குமதி செய்ய நேரிடலாம்.

எவ்வளவோ பிரச்னைகளில் சிக்கி மூச்சுத்திணறும் சென்னை போன்ற


பெருநகரங்களில் வாழ்பவர்களுக்கு இப்போது புதிய பிரச்னை ஒன்று
புறப்பட்டிருக்கிறது.

வேலை வேலை என்று ஆலாய்ப் பறந்துகொண்டிருப்பவர்களுக்கு எதைச்


சாப்பிடுகிறோம்? எப்படிச் சாப்பிடுகிறோம்? என்பது தெரியாமல் அவசர அடியாக அள்ளி
வாயில் போட்டுக்கொண்டு ஓடுகின்றனர். இவர்களில் சிலர் உணவுக்குப் பதில் வெறும்
நொறுக்குத் தீனியாகத் தின்றே பசியைப் போக்கிக் கொள்வார்கள். அதுவும்
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வரும் சிப்ஸ், லேஸ், போன்றவைதான் அதிகம்.
பிட்ஸா, பர்கர் இவை அடுத்த கட்டத்தில் உள்ளவர்களின் உணவு. ``இவர்களெல்லாம்
தங்களுக்குத் தெரியாமலே நோயை விலை கொடுத்து வாங்கி
வைத்துக்கொள்கிறார்கள் என்பதே அதிர்ச்சிகரமான உண்மை'' என்கிறார் உணவுப்
பாதுகாப்பு நிபுணர் பசுபதி. எப்படி? 

``ஜங்க் ஃபுட் அயிட்டங்கள் கெட்டுப் போகாமலும், ருசியாகவும் இருக்க கலக்குற


பொருட்களில் அமோனியாவும் கலந்து இருக்கும். இது புற்றுநோயை வரவழைக்கக்
கூடியது. இந்த மாதிரியான உணவுப் பொருட்களை ஒரு குறிப்பிட்ட குளிர்ப்பதன
வசதியில் மைனஸ் 18 டிகிரி முதல் 22 டிகிரி வரை வைக்கணும். ஆனால், இதை
எப்பவும் மெயின்டெயின் பண்ண முடியாது. இதுபோன்ற நேரங்களில் ஜங்க் ஃபுட்டில்
நீர்க்குமிழிகள் உண்டாகும். இது உணவுப் பொருள் மீ து படிந்து கெட்டித் தன்மையை
ஏற்படுத்திவிடும். பட்டாணி பாக்கெட் வாங்கி ஆட்டிப் பார்த்தோம் என்றால் அது
தனித்தனியாக ஆடும். ஆனால் நீர்க்குமிழி உண்டான பாக்கெட் அப்படி ஆடாமல்
மொத்தமாக ஆடும். இது கெட்டுப் போன நிலையில் உள்ள பாக்கெட்.

அதேபோல் ஃப்ரூட் ஜெல்லியில் சேர்க்கிற கலரிங் பொடிகள். இந்த வண்ணங்களை


ஏற்று செரிமானம் செய்கிற சக்தி நம் ரத்தத்திற்குக் கிடையாது. சிறுநீரகமும் இதை
சுத்திகரிக்காது.

ஒரு பாக்கெட்டில் எவ்வளவு கெமிக்கல் கலந்து தயாரிக்கணுமோ அவ்வளவு


குறைவான (100 கிராம்) அளவுதான் கலப்பார்கள். ஆனால், இதைச் சாப்பிடும் ஒரு
குழந்தை டேஸ்ட்டுக்காக அடிக்கடியோ, அதிகமாகவோ சாப்பிட்டால் என்ன ஆகும்
என்று யாரும் யோசிப்பது இல்லை. குழந்தைகள் மட்டுமில்லை பெரியவர்கள்,
கர்ப்பிணிப் பெண்கள், குறிப்பிட்ட நோய் உள்ளவர்கள் சோடியம் சம்பந்தப்பட்ட
பொருட்களைச் சாப்பிடக்கூடாது. ஆனால், இதுபற்றி ஜங்க் ஃபுட் சாப்பிடுகிற யாருக்கும்
தெரியறதே இல்லை'' என்று நொறுக்குத் தீனி பிரியர்களுக்குப் பீதியைக் கிளப்பினார்.

``வடஇந்திய உணவு விற்கிற சாட் ஷாப்களில் சேர்க்கிற மசாலாப் பொடிகள், கலர்


பொடிகள் எல்லாம் `எப்போது தயாரித்தது, அவை சுத்தமானவையா' என்பதற்கு எந்த
விளக்கமும் கிடையாது. அங்கு வேக வைத்த உருளைக்கிழங்குகளையும், நறுக்கிய
வெங்காயத்தையும் அப்படியே தட்டுகளில் வைத்திருப்பாங்க. இந்த இரண்டிற்கும்
காற்றில் உள்ள நுண்கிருமிகளை ஈர்க்கும் தன்மை அதிகமா இருக்கும். பக்கத்துல
ஒருத்தர் தும்மினால்கூட கிருமிகளை அப்படியே இது ஈர்க்கும். எவ்வளவு டேஞ்சர்
பாருங்க. சாட், பிஸ்கட், பர்கர், பிட்ஸா இவையெல்லாமே மேற்கத்திய
நாகரிகத்திலிருந்து வந்தவைதான். ஆனால் அங்கே உள்ள வெப்பநிலைக்கும் கலக்குற
பொருட்களுக்கும் இங்கே உள்ள நிலைக்கும் வித்தியாசம் இருக்கு.

ஒரு பொருளின் தன்மைக்கு அதிகமாக அதைச் சூடுபடுத்தவே கூடாது. ஒன்றரை


நிமிடத்தில் 150 டிகிரியில் சூடுபடுத்தும்போது ஏற்படும் உயிர் வேதியியல் மாற்றம்
உடலுக்கு ரொம்ப பாதிப்பை ஏற்படுத்தும். இந்த மாற்றத்தை `பாலி அக்ரலைமைட்
ஃபார்மேசன்' என்று சொல்லி உலக விஞ்ஞானிகளே ஏற்றுக்கொள்கிறார்கள்'' என்று
நீண்ட விளக்கம் கொடுத்தார் உணவுப் பாதுகாப்பு நிபுணர் பசுபதி.

``பிட்ஸா, பர்கர், பிரெஞ்ச் பிரைஸ், உருளை, பெப்சி, கோக், எண்ணெயில் தயாரித்த


ஆயில் பிரைட் சிக்கன், லேஸ், சிப்ஸ், ஐஸ்க்ரீம் இதெல்லாமே ஜங்க்ஃபுட்
அயிட்டம்தான். இளையதலைமுறைக்கு பாதி நேர சாப்பாடே இதுதான். ஒவ்வொரு
உணவும் இப்படித்தான் சாப்பிடணும்னு விதிமுறை இருக்கு. முழு கோதுமையை
அரைத்து சாப்பிடுவதுதான் நல்லது. மைதா நல்லதல்ல. இது நம்ம உடலுக்கு
சக்தியைத் தராமல் ஜீரணம் ஆவதற்காக நம் உடம்பிலிருந்து சக்தியை
எடுத்துக்கொள்ளும். சீனினு சொல்ற சர்க்கரையும் அப்படித்தான். நிலத்தில் உரம்
போடாமல் வளர்க்கிற ஆர்கானிக் உணவுதான் நல்லது.

ஒருமுறை சாப்பிடும்போது நம் உணவில் ஸ்டார்ச், புரோட்டின், கொழுப்பு


சரிவிகிதத்தில் இருக்க வேண்டும். இப்படி உணவுமூலம் உடம்பை ஈசியா
கட்டுப்படுத்தலாம்.

இந்த கலோரி அளவு சரியாக கிடைக்க கூட்டு, பொரியல், காய்கறி வைத்து


சாப்பிடணும். அப்படி சாப்பிட்டால் டயாபடிக் வராது. 

சாப்பாடு சாப்பிடறது மூலமா நமக்குக் கிடைத்த கார்போ ஹைட்ரேட்டை எரிக்க


வாக்கிங், எக்ஸர்சைஸ் கண்டிப்பா போகணும். இலை போட்டு பரிமாறும் கலாசாரம்
வந்ததே சத்தான உணவு கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான். அதாவது காய்கறி,
பருப்பு, உப்பு, புளிப்பு, இனிப்பு எல்லாமே சமஅளவில் நம்ம உடம்பிற்குக் கிடைக்கும்படி
செய்யத்தான் முன்னோர்கள் தலைவாழை இலையில் விருந்து வைக்கிற
பழக்கத்தைக் கொண்டு வந்தாங்க'' என்று பாரம்பரிய பழக்கத்தின் பாதுகாப்பைப் பற்றி
விளக்கினார் ஜி.ஆர்.டி நட்சத்திர ஹோட்டலின் சமையல் நிபுணர் சீத்தாராம்.

இதையும் மீ றி தொடர்ந்து இதுபோன்ற உணவு, நொறுக்குதீனி பழக்கம்


உள்ளவர்களுக்கு ஏற்படும் பாதிப்பைப் பற்றி விளக்கினார் மருத்துவர் சதீஸ்.

``ஒவ்வொருத்தருடைய உடலமைப்பு, குடல், இரைப்பை அது சுருங்கி விரியும் தன்மை


இதைப் பொறுத்து பாதிப்பின் தீவிரம் இருக்கும். பொதுவா ஜீரணம் செய்ய பித்தநீர்,
கணையநீர் தேவை. இது குறைந்தால் ஜீரணம் ஆகாது. இவையெல்லாம் நாம்
சாப்பிடுகிற உணவைப் பொறுத்துதான் சரியாக இருக்கும். இல்லையென்றால்
அஜீரணம், வாய்வு, நெஞ்சு எரிச்சல், அல்சர், அதிகபட்சமாக கேன்சர் கூட வர
வாய்ப்பிருக்கு சார். அதுவும் தந்தூரி பிரியர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். நேரடியாக
தீயில் சுட்டு சாப்பிடுவதே இதற்குக் காரணம். இதை தவிர்ப்பது நல்லது''

இன்று நுகர்வோர் உரிமை நாள்.மார்ச் 15 ம் நாள் நுகர்வோர் உரிமை நாளாக உலகம்


முழுவதும் கொண்டாடபடுகிறது.அந்த நாளில்தான் (15.03.1983)அமெரிக்க  நாட்டின்
ஜனாதிபதியாக இருந்த ஜான் கென்னடி அவர்கள் நுகர்வோரின் உரிமைகளைப் பிரகடனம்
செய்து உரை நிகழ்த்திய நாள். நாம் பணம் கொடுத்துப் பெறும் எந்த ஒருபொருளும்
அல்லது சேவையும் அதன் மதிப்புக்கேற்ப இருக்க வேண்டும். அப்படி இல்லாது போனால்
அதை தட்டிக்கேட்கவும் உரியதைப் பெறவும் நுகர்வோருக்கு முழு உரிமை
உண்டு.நுகர்வோர் உரிமையைப் பாதுகாக்க தேவையான அளவு சட்டங்களும் உள்ளன.
 

    சமீ ப காலங்களில் நுகர்வோரின் உரிமைகள் பற்றி அதிகமாக பேசப்பட்டு வந்தாலும்


நுகழ்வோர் விழிப்புணர்வு நம்நாட்டில் குறைவு என்றே கூறுகிறார்கள்.  

   படித்தவர்களும்  நுகர்வோர் உரிமைகளை அறியாதவர்களாகவோ அல்லது நமக்கு 


எதற்கு இந்த வம்பு என்ற மனப்பான்மை உடையயவர்களாகவே இருக்கிறார்கள். சிலர்
கௌரவம் கருதியும் உரிமைகளை கேட்கத் தயங்குவது கண்கூடு. இந்த நிலை காரணமாக
வாழ்வின் அத்தியாவசிய தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை
வாங்கும்போது கூட நுகர்வோர் ஏமாற்றப்படுகிறார்கள். அல்லது குறைபாடுடைய
சேவையைப் பெறுகிறார்கள்.

   நடுத்தர மட்டும் மேல்தட்டு வர்க்கத்தினரின் பணப் புழக்கம் காரணமாகவும்


மீ டியாக்களின் விளம்பரங்களின் தாக்கம் காரணமாகவும் நுகர்வு நோய்க்கு ஆட்பட்டு
விடுகிறார்கள்.இதை நுகர்வு வெறி என்று கூட கூறலாம்.தேவைக்கு அதிகமான
நுகர்ச்சி,பொறுப்பற்ற நுகர்ச்சி,தொடர்ந்து கடை பிடிக்க முடியாத நுகர்ச்சி இவை நுகர்வு
வெறியின் வகைகளாகக் கொள்ளலாம். 

   பல்வேறு மாயாஜாலம் காட்டும்  விளம்பரங்கள் நுகர்வோரை கவர்ந்திழுப்பதால்


தேவையை கணக்கில் கொள்ளாமல் பொருட்கள் வாங்கிக் குவிக்கப் படுகின்றன.
நுகர்வோரின் உரிமைகள் பேணப்படவேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் 
நுகர்வோருக்கென்று பொறுப்புகள் உண்டு. அவை என்னவென்று சிந்திக்க வேண்டியது
அவசியமாகிறது. அவை

1. ஆராய்ந்து அறியும் பொறுப்பு: நாம் வாங்கிப் பயன்படுத்தும் பொருள் அல்லது


சேவையின் விலை தரம் ஆகியவற்றைப் பற்றி விழிப்புடன் இருந்து கேள்விகள்
கேட்கவேண்டும்.பொருள் அல்லது சேவையை பற்றிய உண்மைகளை வெவேறு
இடங்களிலிருந்தும் விசாரித்து அறிந்து வாங்க வேண்டும்.பணத்துக்கு மதிப்பு,
சுற்றுச் சூழலுக்கு மதிப்பு,மக்களுக்கு மதிப்பு ஆகியவற்றைப் பற்றியும் கேட்டறிய
வேண்டும்.
2. செயல்படும்  பொறுப்பு: நுகர்வோரான நாம் நம் உரிமைகளை நிலைநாட்டி நமக்கு
நியாயம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் செயல்படவேண்டியது நமது
பொறுப்பாகும். சமுதாயத்தில் இருக்கும் மற்றவர்களோடு நமக்கு உள்ள
உறவுகளை நாம் மதிக்கிறோம். ஆனால் நமது மதிப்புகளை விட்டுக்கொடுக்காமல்
நியாயம் பெறுவதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
3. சமுதாயம் பற்றிய சிந்தனை: ஒரு பொருளையோ சேவையையோ நாம் 
பயன்படுத்துவதால் மற்ற குடிமக்களுக்கு குறிப்பாக உலகின் பல்வேறு
பகுதிகளிலும் இருக்கின்ற வசதியும் வலிமையும் இல்லாத சமுதாயங்களைச்
சேர்ந்த மக்களுக்கு ஏற்படக் கூடிய விளைவுகளை எண்ணிப் பார்த்து உணர்கின்ற
தன்மை உடையவர்களாக இருப்பது நமது பொறுப்பாகும். நாம் பயன் படுத்தும்
பொருள்களும் சேவைகளும் மற்றவர்களுக்கு துன்பம் தராத சூழ்நிலைகளில்
தயாரிக்கப் பட்டவைதானா என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
4. சுற்றுச் சூழல் பற்றிய சிந்தனை : நம்முடைய நுகர்ச்சியினால் சுற்று சூழலுக்கும்
மற்ற வகையிலும் ஏற்படக்கூடிய விளைவை எண்ணிப் பார்க்க வேண்டும்.நாம்
வாழும் இந்த பூமியும் இயற்கை வளங்களும்  எதிர்காலச் சந்ததியினருக்கும்
சொந்தம் என்பதை உனர்ந்து அவற்றை வணாக்காமல்
ீ பாதுகாக்கவும்
பொறுப்பேற்க வேண்டும். பொருள்களின் அல்லது சேவைகளின்  உற்பத்தி,
பயன்பாடு மற்றும் அப்புறப் படுத்துதல் ஆகியவை சூற்றுச் சூழலுக்கு தீங்கு
செய்யாதவையாக இருப்பதை உறுதி செய்யும் பொறுப்பும் நம்முடையதாகும்.
5. இணைந்து செயல்படல்: நுகர்வோர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஓர்
அமைப்பை நிறுவுகின்ற பொறுப்போடு நுகர்வோர் நலத்தை பாதுகாக்கவும்
மேம்படச் செய்யவும் உலகமும் சந்தையும் நீ தியுடனும் நேர்மையுடனும்
திகழச்செய்ய பாடுபடுபவரோடு துணை நிற்பதும் நம் பொறுப்பாகும்.நுகர்வோர்
நலம் பற்றி அறியாத பாமரமக்களுக்கு உதவுவதும் நம் கடமையாகும்.  

     இவற்றை எல்லாம் மனதில் கொண்டு நுகர்வு அமைதல் நாட்டுக்கும் வட்டுக்கும்



நன்மை பயக்கும். 

  பொறுப்பான  நுகர்வோருக்கான அடையாளங்கள்,மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு


மையங்களின் முகவரிகள் ஆகியவற்றை அடுத்த வாரம் காண்போம். 

Read more: http://www.tnmurali.com/2013/03/consumer-right-day-responisibilities.html#ixzz4XnFAN5dr

நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட விதிகள்

ஆச்சாரி 

Dec 21, 2013

inShare

 
அறிந்துகொள்வோம் – நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்.1986:-

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமென்பது


நுகர்வோர் பிரச்சனைகள், சேவை குறைபாடு, வணிக நடைமுறை, நேர்மையற்ற
வணிகமுறை போன்றவற்றிற்கு தீர்வு தரும் சட்டமாக உள்ளது. நுகர்வோர்
நீதிமன்றங்கள் மூலம் புகார்தாரரே புகார் தாக்கல் செய்தும் அவரே வாதிட்டும்
நீதிபெற முடியும்.

மருத்துவக்குறைபாடுகள், வங்கிகள், வடு


ீ கட்டிக் கொடுப்பவர் பிரச்சனைகள்
மற்றும் பொருள்கள் தரத்தில் உள்ள குறைபாடுகள் போன்றவற்றை உள்ளடக்கிய
சிக்கல்களுக்கு நீதி பெற நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம்.
முக்கிய விதிகள்:-

நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் பிரிவு ”2(7)” நுகர்வோர்


மன்றங்கள் எல்லாம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 இல் பிரிவு 27(2) –இன்படி
முதல் நிலைக் குற்றவியல் நீதிமன்றமாக (FIRST CLASS MAGISTRATE
COURT)செயல்படவும், அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கவும்
அல்லது அதிகபட்சம் ரூ.10,000/-(ரூபாய் பத்தாயிரம்) அபராதம் விதிக்கவும்
அதிகாரம் உள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் பிரிவு ”3” அடுக்கு நீதி வழங்கும் நுகர்வோர் மன்ற
அமைப்புகள் (Three – Tier Consumer Disputes Redressal Agencies) பண வகையிலான
அதிகார வரம்பு :-
1).மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்   – அசல் அதிகார வரம்பு (Original (District
Forum) 20 இலட்சம் Jurisdiction).
2).மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் – 20 இலட்சத்திற்கும் மேல் ஒரு (State
Commission) கோடி வரை.
3).தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் – ஒரு கோடிக்கு மேல்.  (National
Commission)
4).மேல் முறையீடு (APPEAL) :- உச்சநீதிமன்றம் (Supreme Court)

நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் பிரிவு ”2(b)”:-

புகார்தாரர்(Complainant) என்பவர் யார்? எந்தவகையான


புகார்தாரர்கள் புகார் கொடுக்க உரிமை உள்ளது?

1).நுகர்வோர் புகார் தாக்கல் செய்யலாம்.

2).ஒரே நலனில் அக்கறை கொண்ட நுகர்வோர் பலர் இருக்கையில், ஒருவர்


அல்லது பலர் இருக்கையில், ஒருவர் அல்லது பலர் இச்சட்டத்தின் கீ ழ் புகார்
செய்யலாம்.
3).நிறுவனச் சட்டம் (Company Act) 1956 இன் கீ ழ் அல்லது நடைமுறையிலுள்ள வேறு
சட்டத்தின் கீ ழ் பதிவு பெற்ற எந்த நுகர்வோர் அமைப்பும் (Any Voluntary Consumer
Association) புகார் செய்யலாம்.

4.மத்திய அரசாங்கம் அல்லது ஏதேனுமொரு மாநில அரசாங்கம் புகார்


செய்யலாம்.
5).நுகர்வோர் (Consumer) இறப்பு (Death) ஏற்படும் நிலையில், அவரது சட்ட வாரிசு
அல்லது பிரதிநிதி (Legal Heir)தாக்கல் செய்யலாம்.

6).மேலும், நுகர்வோர் நேரிடையாகவோ அல்லது அவருடைய சார்பிலோ


பொருட்களுடைய மதிப்பீட்டை அனுசரித்து அல்லது சேவையை அனுசரித்து நட்ட
ஈடு தொகை பெறமுடியும்.
நுகர்வோர் (Consumer) என்பவர் யார் என்ற விளக்கத்தை கீ ழ்கண்ட பிரிவுகளில்
காண்போம் :-
பிரிவு.2(d)(i):- பொருட்களை நுகர்வோர்,
பணம் செலுத்தி விலைக்கு வாங்குவது; (Consideration) (அ) பகுதி அளவு பணம்
செலுத்துவது, மற்றும் பகுதி வாக்குறுதியின் பேரில் வாங்குவது; (Deferred
Payment) (அ) தள்ளி (பிறகு) பணத்தைச் செலுத்தப்படும் என்ற முறையில்
பொருட்களை வாங்குவது; அத்தகைய பொருட்களை பயன்படுத்துவர் இந்த
விளக்கத்தின் கீ ழ் வருகிறார். (அதாவது) பொருட்களை விலைக்கு வாங்கியவர் (அ)
பாதி வாக்குறுதியின் பேரிலும், பாதி பணம் செலுத்தியதின் பேரில் சேர்த்து
‘நுகர்வோர்’ என்ற விளக்கத்திற்கு வருகிறார்.
ஆனால், நுகர்வோர் என்பவர், அத்தகைய பொருட்களை ‘மறுவிற்பனைக்கு’(For
Resale) வாங்குபவரும், (அ) ’வியாபார நோக்கத்திற்கு’ (For Commercial
Purpose) வாங்குபவரும், ‘நுகர்வோர்’ பிரிவில் வருவதில்லை.
பிரிவு.2.(d)(ii):-
‘சேவை (Services)’
பணம் செலுத்தி, ‘சேவையை’ வாடகைக்கு பெறுவது, (அல்லது) பயன் பெறுவது:-
(அல்லது) பாதியை செலுத்தப்படுவது மற்றும் பாதி வாக்குறுதியின் பேரில்
(பயன்பெறுவது) – (அல்லது) வேறு எந்த முறையின் கீ ழ் பணத்தை தள்ளி (பிறகு)
செலுத்தப்படுதல், மற்றும் – பணம் செலுத்தி ‘சேவை’ பெறுதல் (அல்லது)
வாக்குறுதியின் பேரில் செலுத்துவது, (அல்லது) பாதி செலுத்துவது மற்றும்
பாதியை வாக்குறுதியின் பேரில் பெறுதல் செலுத்துவது, (அல்லது) வேறு எந்த
முறையிலும் பணம் தள்ளி செலுத்துவது, பெறுபவர்களை தவிர அத்தகைய(Such
Services) ’சேவைகளின்’ பலன்களை பெறுபவர்களையும் ‘(Benificiary)’ சேர்த்துக்
கொள்ளுதல் வேண்டும்.
பிரிவு.2(e):-
நுகர்வோர் பிரச்சனை என்றால் என்ன?(Consumer Dispute):-

நுகர்வோர், எழுத்து மூலம் புகார் (குறைபாடுகள்) (Complaint) வேறு நபர் மீ து


கொடுப்பது (அல்லது) அந்தப்புகாரில் ‘மறுப்பது’ அல்லது குற்றச்சாட்டுகளை
எதிர்ப்பது என்பதாகும். அதாவது, நுகர்வோர் அல்லது பதிவு செய்யப்பட்ட
நுகர்வோர் அமைப்பு அல்லது மத்திய அரசங்கம் அல்லது மாநில அரசாங்கம்
மேற்படி ’புகார்‘ (Complaint) தாக்கல் செய்வது, இந்த விளக்கத்தில்
உள்ளடங்கியுள்ளது. எனவே, பிரச்சனை (Dispute) என்ன என்பதை விரிவாக
சொல்லவேண்டுமென்றால், ஒரு நபர் பரிகாரம்(Claim) கோருவது அந்த
கோரிக்கையை மற்ற நபர் மறுப்பது அல்லது ’பொய்’  என்று கூறுவது அல்லது
‘உண்மை’ என்று கூறுவதாகும்.
‘நுகர்வோர்’ பிரச்சனையில்’, ‘அசையா சொத்துக்கள் பற்றியும்’ அல்லது ‘அசையா
சொத்துக்களின் விலை பற்றியும்’ எழுகின்ற பிரச்சனைகள், வருவதில்லை.
ஆகவே, நுகர்வோர் பிரச்சனை பற்றி நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் சிவில்
நீதிமன்றம் (Civil Court) போல புகாரில் தீர்ப்புக்காக ‘எழுவினாக்கள்’ (Issues) எழுதப்பட
வேண்டியதில்லை. ஆனால், பிரச்சனை பற்றி தீர்மானிக்கப்படவேண்டிய
அம்சங்கள் எழுதப்பட வேண்டும்(Points for determination).
பிரிவு.2(f):-

குறைபாடு (பொருட்கள்)’(Defect):-

‘குறைபாடு’ (Defect) என்றால், ‘தவறானது’, நேர்த்தியில்லாமல் இருப்பது’ அல்லது


‘தரத்தில்’ குறைபாடு உள்ளது, எண்ணிக்கைக் குறைபாடு, பொருளின் உள்திறன்,
சுத்தம் (Purity) அமலில் உள்ள சட்டத்தின்படி ‘தகுதி உடையவையாக’ இல்லாமல்
இருத்தல் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும், அந்த ‘குறைபாடு எந்த
ஒப்பந்தத்தின் கீ ழ் அல்லது வெளிப்படையாகவும் அல்லது மறைமுகமாகவும்
பொருட்கள் சம்பந்தமாக வியாபரி (உற்பத்தியாளர்) என்ற வகையில் கோருகின்ற
முறையிலும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
எடுத்துக்காட்டு:-

புகார்தாரர், தனது புகாரில், வாகனத்தில் குறைபாடு (Defect) உள்ளது என்றும், அதன்


அடிப்படையில் அந்த வாகனத்தை மாற்றி, வேறு வாகனம் கொடுக்க வேண்டும்
என்று கோரும்பொழுது, அந்தப் புகார்தாரர் அந்த வாகனத் ’தாயாரிப்பில்
குறைப்பாடு’ (Manufacturing Defect) என்று நுகர்வோர் மன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.
சேவை குறைபாடு:-

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் முக்கிய குறிக்கோள் ‘நுகர்வோரின் நலனைப்’


பாதுகாப்புதான். அதாவது, வியாபார ரீதியாகச் சொல்லுகின்ற பொழுது,
பொருட்களை வாங்குபவர் மற்றும் பெரும்பான்மையாக கருதப்படுவது,
பொருட்களின் பயன்படுத்தும் ‘சேவை’(Service) என்பதாகும். ’சேவை குறை’ (Deficiency)
என்பது ‘தவறான செய்கை’, ‘நேர்த்தியின்மை’, ‘சிறுகுறைபாடு’ அல்லது
‘சேவையில் பற்றாக்குறை’ மேலும் பொருட்களின் தரத்திலும் (Quality) குறைபாடு,
சேவை முறையில் குறைபாடு, அந்த சேவைமுறை அமலில் உள்ள சட்டத்தினால்
பின்பற்ற வேண்டிய ஒன்றாக இருக்கவேண்டும். அந்தச் சேவை முறை
ஒப்பந்தத்தின் தொடர்பாக அல்லது வேறு வகையிலும் செயல்படுத்த
வேண்டுமென்று பொறுப்பு எடுத்துக்கொள்வது அல்லது வேறு வகையிலும்
சேவைக்கு தொடர்பாக இருப்பது என்பதாகும்.
தொடர்வண்டி (Railway) சேவை குறைபாடு:-

பதிவு செய்யப்பட்ட பெட்டியில்(Compartment)


பதிவு செய்துள்ள பயணிக்கு, ”தண்ண ீர் வசதி” கிடைக்கவில்லை. எனவே,
இத்தகைய சேவை குறைபாட்டிற்கு (Deficiency in Service) தொடர்வண்டி நிர்வாகம்,
பாதிக்கப்பட்ட அந்த பயணிக்கு நஷ்டஈடு பணம் வழங்கப்பட வேண்டும் என்று
நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் உள்ளது.

மேற்கூறிய சேவை குறைபாடுகளை போலவே விவசாய விதைகளின் தரத்தில்


குறைபாடு, விவசாயத்தில் மின் இணைப்பு வழங்குவதில் குறைபாடு, கல்வி
நிறுவனங்களில் சேவை குறைபாடு, வங்கி முகவர்கள் வாகனங்கள்
கைப்பற்றுவதில் குறைபாடு, வழக்கறிஞர் தொழிலில் சேவை குறைபாடு, வடு

கட்டி தருவதில் குறைபாடு, ஆயுள் காப்பிட்டில் சேவை குறைபாடு, சமையல்
எரிவாயு சிலிண்டர் இணைப்பில் குறைபாடு, விமான சேவையில் குறைபாடு,
வங்கி சேவை குறைபாடு, அஞ்சல் சேவை குறைபாடு, குரியர் சர்வஸ்

சேவையில் குறைபாடு, போன்ற பல மக்கள் நுகர்வுகின்ற சேவைகளில் குறைபாடு
இருந்தால் நட்ட ஈடு பெற்றுக்கொள்ளலாம்.
நுகர்வோர் சட்டத்தில் நட்ட ஈடு கோர முடியாத சேவைகள்:-

மேற்குறிப்பிட்ட சேவைகள் போல்


இல்லாமல் இலவசமாக பெறும் சேவை மற்றும் தனிப்பட்ட சேவை ஒப்பந்தத்தின்
கீ ழ் உள்ள சேவைக்கும் பொருந்தாது. விதி விலக்காக அரசு அலுவலர் அரசு
மருத்துவமனையில் இலவச சிகிச்சை எடுத்துக்கொண்டால் இலவச
சிகிச்சையாகக் கருதமுடியாது. அதில் சேவைக் குறைபாடு இருந்தால் அந்த அரசு
அலுவலர் நுகர்வோர் நீதிமன்றத்தில் இழப்பீடு பெறலாம். மேலும் வாடகைதாரர்
வட்டு
ீ உரிமையாளர் சேவை குறைப்பாட்டிற்கும் நுகர்வோர் நீதிமன்றத்தில்
பரிகாரம் கோரமுடியாது.

இது போன்ற பல விரிவான சட்ட உரிமைகளை உள்ளடக்கியதே நுகர்வோர்


பாதுகாப்பு சட்டமாகும். எனவே மக்கள் அனைவரும் நுகர்வாளர்களாக இருக்கும்
பட்சத்தில் தாங்களே விரிவாக இச்சட்டத்தின் விளக்கத்தைப் பெற்று அல்லது
வழக்குரைஞர் மூலமாக வழக்குத் தாக்கல் செய்து இழப்பீடு பெறலாம்.
இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்  (the consumer protect act, 1986) இந்தியாவில் வாழும்
மக்களின் நுகர்வுத் தன்மையை பதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் ஏற்படுத்தப்பெற்றச்
சட்டமாகும். ஜூலை 1, 1987 முதல் இச்சட்டம் அமலுக்கு வந்த்து.

இச்சட்டம் 1991 மற்றும் 1993 களில் திருத்தச் சட்டங்களாக வெளிவந்தன். நுகர்வோர்


பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாகவும், அதன் செயற்பாடுகள், முக்கியத்துவங்கள்
அதிகரிக்கப்பட்டு டிசம்பர், 2002 இல் புதிய திருத்தச்சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு, மார்ச் 15,
2003 புதிய பரிமானங்களுடன் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்த்தது.
இதன்படி வடிவமைக்கப்பட்ட விதிகள் நுகர்வோர் பாதுகாப்பு விதிகள், 1987 என
அழைக்கப்படுகின்றன. இந்த விதிகள் மார்ச் 5, 2004 முதல் நாட்டுக்கு அறிமுகம் செய்யப்ப்ட்டது.

நுகர்வோரின் உரிமைகள்:

1. உயிருக்கும் உடைமைகளுக்கும் தீங்கு விளைவிக்ககூடிய பொருட்களை


சந்தைப்படுத்துவதில் இருந்து பாதுகப்பு பெறும் உரிமை

2. நேர்மையற்ற வர்த்தக செயல்முறைகளில் இருந்து தங்களைப்பாதுகாத்துக் கொள்வதற்காக,


சந்தையில் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம், அளவு, தூய்மை, தரனிலை
மற்றும் விலை பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்வதற்கான உரிமை.

3. பலவகைப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை போட்டி விலைகளில் வாங்குவதற்கான


வாய்ப்புகளைப் பெறுவதற்கான உரிமை

4. நுகர்வோரின் குறைகளைக் கேட்பத்ற்கும் அவர்க்ளின் உரிமைகளைப் பாதுகாக்கவும்


உத்தரவாதம் பெறும் உரிமை

5. நேர்மையற்ற வர்த்தகச் செயல்முறைகள் மற்றும் கட்டுப்படுத்தும் வர்த்தகச்


செயல்முறைகள் போன்றவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான உரிமை

6. நுகர்வோருக்கான விழிப்புணர்வினைப் பெறும் உரிமை

7. நுகர்வோரின் சச்சரவுகளுக்கு விரைவாகவும் எளிமையாகவும் தீர்வு பெறும் உரிமை.


நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் எல்லை:

1. இந்த சட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். ஆனால் ஜம்மு -


காஷ்மீ ர் மாநிலத்திற்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

2. பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றுக்கு மட்டுமே இந்தச் சட்டம் பொருந்தும்.

3. தனியார் துறை, பொதுத்துறை, கூட்டுறவுத்துறை போன்றவைகளுக்கும் இச்சட்டம்


பொருந்தும்.

சட்டம் பொருந்தாத நிலைகள்

1. வாங்கிய பொருளை மறு விற்பனை செய்தல் அல்லது இலாபம் ஈட்ட வேண்டும் என்கிற
நோக்கத்துக்கு வாங்கப்பட்ட பொருள்.

2. இலவசமாக பெற்ற பொருள் அல்லது இலவச சேவை


உதாரணம்: அரசு மருத்துவமனைகளில் பெறும் இலவச மருத்துவ சேவை.

3. இலவச அனுமதியளிக்கும் திட்டங்களில் பெறும் சேவை குறைபாடுகளுக்கு இச்சட்டத்தின்படி


வழக்கு தொடர முடியாது.

இச்சட்டம் தான் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என அழைக்கப்படு

கிறது. 1986 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் தேதியன்று


அமுலுக்கு வந்தது. ஏற் கனவே அமுலில் உள்ள சட்டத்தின் மூல ம் நிவாரணம் பெற
வாய்ப்பு இருந்தும் தனியாக ஒரு சட்டம் கொண்டு வரப்ப ட்ட தின் அடிப்படை நோக்கமே –
எளிய முறையில், குறுகிய காலத்தில், செலவி ல்லாமல் நிவாரணம் பெற வேண்டும்
என்பதே. சாதார ணமாக, நுகர்வோர் வழக்குகள் பதிவு செய்யப்படு ம் பொழுது அது சிவில்
வழக்காக மாறிவிடும். இதனால் வழக்கு, நீ திமன்ற நடை முறைப்படியே நடை பெற்வதால்
காலதாமதம் ஏற் படுவதுடன், பெரும் செலவும் ஏற்படும். பெரும் தொகை சம்பந்தப் பட்ட
பிரச்சனைகள் உள்ளவர்கள் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் நீ தி மன்றத்தை அணுகுவது
இல்லை. இச்சட்டத்தின் மூலம் இந்த  குறைபாடுகள்
அனைத்தும் நீ க்கப் பட்டுள்ளது. இனி அது பற்றி பார் க்கலாம்.
நுகர்வோர் நீ திமன்றங்களின் ( Consumer Court ) அமைப்பும், செயல் பாடும்:
கீ ழ் நீ திமன்றம், உயர் நீ திமன்றம், உச்சநீ திமன்றம் என்று இருப்ப தை போலவே
இச்சட்டப்படி – மா வட்ட அளவில் ” மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்கள்”, மாநில
அளவில் “மாநில ஆணையம், தேசிய அளவில் ” தேசிய ஆணையம்”
அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம்:

20 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும்


வழக்குகளை, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தான் பதிவு செய் ய வேண்டும்.
நீ திமன்ற கட்ட ணம் எதுவும் செலுத்தவேண் டியது கிடையாது. இத னால் வழக்கு
தொடருவதற்கு தகுதி யே இல்லாத பிரச்சனைக்கெ ல்லாம் வழக்கு தொடர ஆரம்
பித்தனர். இதில் எதிர் தரப்பினரை பிளாக் மெயில் செய்பவர்க ளும் அடங்கும். இது போன்ற
வழக் குகளுக்கு அவர்கள் ஆஜராவது கிடையாது. இதனால் வழக்கு தள்ள் படியாகும்
நிலை ஏற் பட்டது. இதனால் தவ்றே செய்யாத எதிர் தரப்பினர்களுக்கு கால விரயம்

மற்றும் செலவு ஏற்படுவதையும், நீ தி மன்றத்தின் நேரம்


வணாவ
ீ தையும் கரு த்தில் கொண்டு 2006 ம் ஆண்டில் கீ ழ் கண்டவாறு கட்ட ணம்
நிர்ணயம் செய் ய்ப்பட்டு ள்ளது.
1 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரு  ம் வழக்குகளுக்கு = 100 /-
1 லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை = 200 /-
5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை = 400 /-
10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை = 500 /-
வழக்கு தொடர தேவையான தகுதிகள்:
1. வழக்கு தொடருபவர் நுகர்வோராக இருக்கவேண்டும். வழக்கு அவர் சம்பந்தப் பட்டதாக்
இருக்கவேண்டும்.

2. நுகர்வோர், எந்த நுகர்வோர் குறை தீர் மன்றத்தின்


அதிகார வரம்பிற்கு உட்பட்ட எல்லைக்குள் ( Jurisdi- ction) இருக்கிறாரோ அதில் தான்
வழக்கு தொடரவேண்டும்.
3. புகாருக்கான ஆதாரங்கள் இருக்க வேண்டும்.
4. பிரச்சனை ஏற்பட்டதிலிருந்து 2 வருடங்களுக்குள் வழக்கு தொட ர வே ண்டும்.
யார் மீ து வழக்கு தொடர முடியும்?
1. நமக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் அனைவரும். இ தில் தனியார், அரசு
நிறுவனம் என்ற பாகுபாடு கிடையாது. அனை வருமே இதில் உட்படுவர்.

உதாரணம்: மளிகை கடை, டிபார்ட்மெண் டல் ஸ்டோர், பேக்கரி,


சைக்கிள் – பைக் – கார் – லாரி விற்பனையாளர், மெடிகல் ஷாப், ரேஷன் கடை
போன்றவை.
2. பணம் வாங்கிக்கொண்டு வழங்கப்படும் சேவைகள், தனியார் மற் றும் அரசு துறை
நிறுவனங்கள் அனைத்துமே இதில் அடங்கும்.
உதாரணம் : மின்சார வாரியம், குடிதண்ண ீர் சப்ளை, இன்ஸூரன் ஸ் கம்பெனி, வங்கிகள்,
மருத்துவ மனைகள், கியாஸ் கம்பெனி கள், சப் -ரிஜிஸ்டிரார் அலுவலகம்,
போன்றவைகள்.
எந்தெந்த துறைகள் எல்லாம் இதில் அடங்கும் என சட்டத்தில் பட்டியலி டப் படவில்லை.
காரணம். சேவை என்ற வார்த்தைக்கு முழுமையான விளக்கம் கொடுக்க முடியாது. வார்
த்தைக்கான விள க்கம், வழக்குக்கு வழக்கு விரிவடையும் என்பதே உண்மை.
உதாரணத்திற்கு சப்-ரிஜி ஸ்டிரார் ஆபீஸை எடுத்துக்கொள்ள லாம். இந்த சட்டம் வந்த
பின்பு, ப லர் இந்த அலுவலகத்தில் அவஸ் தை பட்டு வந்தாலும், இது அரசு அலுவலகம்
என நினைத்து விட்டு விட்டனர். பல வருடங்கள் இப்படியே கழிந்தது.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒருவர் ஒரு


சொத்து வாங்க மு டிவு செய்து, அதற்கு சம்பந்தப் பட்ட சப்- ரிஜிஸ்டிரார் அலுவல கத்தில்
வில்லங்க சர்டிபிகேட்டி க்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப் பம் செய்தார். எந்த
வில்லங்கமும் இல்லை என சர்டிபிகேட் கொடுத்து விட்டன ர். அதை நம்பி, அவர் அந்த
சொ த்தை வாங்கி விட்டார். அதன் பின்பு தான் அதில் வில்லங்கம் இருப்பது தெரிய வந்த
து. அதனால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. தவறான வில்லங்க சர் டிபிகேட்

டிப்  பார்ட்மெண்ட் கொடுத்ததினால்த் தான் நஷ்டம்


என்றும், வில்லங்க சர்டிபிகேட் வழங்குவது என்பது பணத்தை பெற்று க்கொண்டு வழங்
கப்படும் சேவை என்பதால், நுக ர்வோர் பாதுகாப்பு சட்டப்படி குறை பாடான சேவை
என்பது அவர் முடி வு. அவர் நுகர்வோர் குறைதீர் மன் றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அரசு தரப்பில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி தங்கள் மீ து வழக்கு தொடர முf டியாது

என்றும், சர்டிபிகேட்டில் தவறுகள் இருந்தால்


இலாகா பொறுப்பு அல்ல” என குறி ப்பிட்டே வழங்கட்டுள்ளதால் தாங் கள் பொறுப்பல்ல
என வாதம் செய் தனர். ஆனால் அவர்களின் ஆட்சே பனையை நிராகரித்த் நீ திமன்றம்
மனுதாரருக்கு நஷ்ட ஈடு வழங்க உத் தரவிட்டது. இது சட்டம் பற்றிய விளக்கம் விரிவ
டையக் கூடியது என்பதற்கு ஒரு உதாரணம்.
வழக்கு தொடர தேவையான முன் நடவடிக்கைகள்:
உதாரணத்திற்கு நாம் ஒரு கடைக்குப்போய் ஒரு பொருள் வாங்கு கிறோம் என்று

வைத்துக் கொள்வோம். அதன் பாக்கிங்கில் போட ப்பட்ட


விலைக்கு அதிகமாக பணம் வாங்கினாலோ, எடை மற்றும் அள் வு குறைவாக
இருந்தாலோ அல்ல து தரம் குறைவாக இருந் தாலோ உடனடியாக அதைப் பற்றி கடைக்
காரரிடம் சுட்டிக்காட் டுங்கள். அவர் தவறை சரி செய்ய மறுத்தால், அவ ருக்கு நீ ங்களே ”
குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதை சரி செய்யா விட்டால் நுகர் வோர் வழக்கு தொட
ரப்படும்” என அத்தாட்சியுடன் கூடி ய பதிவு தபாலில் நோட்டீஸ் அனு ப்புங்கள். அவருக்கு
நோட்டீஸ் பட்டு வாடா செய்யப்பட்டுள்ளது என்பதற்கான் ஆதாரத்தை நோட்டீஸ்
காப்பியுடன் வைத்துக் கொள்ளுங்கள். அதைப் போலவே பொருள்
வாங்கியதற்கான  ரசீ தும் பத்திரமாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
விலை சம்பந்தப்பட்ட பிரச் சனை என்றால், விலை அச் சடிக்கப்பட்ட பாக்கிங் கவரை
பத்திரமாக வைத்திருங்கள்.
தரம் சம்பந்த பிரச்சனை என் றால், அதே பாக்கிங் கவரு டன் பொரு ளை பாக் செய்ய்து
வைத்துக்கொள்ளுங்கள்.

எடை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், நீ ங்கள்


பாக்கிங்கை பிரி ப்பதற்கு முன்பே எடை குறைவு என்பதை ஊர்ஜிதம் செய்து விட்டு
பாக்கிங்கை பிரிக்காமல் இருக்க வேண்டும். ஒரு வேளை பிரித்து விட்ட பின்பு தான் எடை
குறைவை கண்டு பிடித்தீர்கள் என்றால், பிரிக் கப்பட்ட பாக்கிங்கை ஆதாரமாக வை த்து
வழக்கு தொடர முடியாது. எனவே மற்படியும் அதே கடைக்கு போய், அதே பொருளை, பில்
போ ட்டு வாங்கிக்கொளுங்கள்.
இப்பொழுது சேவை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால்,

சேவைக்  கான ரசீது இருக்கவேண்டு ம். முன்பு


குறிப்பிட்ட படி யே சம்பந்தப்பட்டவர்களுக் கு நோட்டீஸ் அனுப்புங் கள். எல்லா
அத்தாட்சிகளையும் பத்திரமாக வைத்துக் கொ ள்ளுங்கள்.

ஈா1 ழூ மருந்துப் பொருள்கள் மற்றும் அழகுசாதனப் பொருள்கள் சட்டம் - 1940


மருந்துகள் அழகுசாதனப் பொருள்கள் முறையாக, ஏற்ற சூழ்நிலையில்
தயாரிக்கப்படுவதற்காகவும் நுகர்வோர் பயன்படுத்தும் மருந்துகள் தரமுள்ளதாக இருப்பதை
உறுதி br�a கொண்டு வரப்பட்டது. தான் ஃஃமருந்து மற்றும் அழகுசாதனப் பொருள்கள் r�l�||.
இச்சட்டம் இறக்குமதி செய்யப்படும் மருந் துகளின் தரத்தை ஒழுங்குபடுத்துவதுடன், நம்
நாட்டில் உற்பத்தி br�J விற்கப்படும் மருந்துகளையும் கண்காணிக்கிறது.

இச்சட்டத்திலுள்ள வழிமுறைகளை அமுல்படுத்தும் பொறுப்பு மத்திய, மாநில மருந்துப்


பொருள்கள் ஆய்வு செய்யும் துறையைச் சாரும்.

மருந்து மற்றும் அழகு சாதனப் பொருள்கள் சட்டம் நுகர்வோர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன்


மட்டுமின்றி, சட்டத்தை முறையாக பின்பற்றும் விற்பனையாளர் மற்றும்
உற்பத்தியாளர்களையும் அநியாய போட்டி விற்பனை, சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்டு
விற்பனை செய்யப்படும் மருந்துகளிலிருந்து காக்கிறது. எனவே, சட்டத்தை மதித்து நடக்கும்
தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நுகர்வோர் நலனில் அக்கறை கொண்ட
இச்சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த மருந்;துப் பொருள்கள் ஒழுங்கு படுத்தும் துறைக்கு
உதவ வேண்டும்.

சட்ட விரோதமாக விற்பனையாளர், போலி மருந்துகளை விற்பதற்கு எளிதில் ஏமாறுகிற நுகர்


வோரே ஒரு முக்கிய காரணம்.

தான் வாங்கும் ஒவ்வொரு மருந்தையும் நுகர்வோர் சோதனைக்குட்படுத்தி அதன் தரத்தை


உறுதி br�J கொள்ள முடியாது. சில நேரங்களில் போலி மருந்துகள் உண்மையாக தயாரிப்பு
போலவே எவ்வித வித்தியாசமின்றி மிகத் திறமையாக தயாரிக்கப்படுகின்றன. சாதாரண
மனிதனால் உண்மையான மருந்துக்கும் போலி மருந்துக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க
இயலாது.

அநியாய இலாபம் சம்பாதிக்க நினைக்கும் பேராசையுடைய உற்பத்தியாளர்கள்


விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோரின் விளைவே போலி மருந்து சந்தைக்கு வரக்
காரணமாகிறது. இதற்கு முக்கிய காரணம் போலி மருந்துகளை பில் இல்லாமல் வாங்கி
பணத்தை மிச்சப்படுத்த நினைக்கும் நுகர்வோர் ஆவார். பெயர் பெற்ற உற்பத்தியாளர்களும்,
விற்பனையாளர்களும் போலி மருந்துகள் தயாரிப்பு விற்பனையில் ஈடுபடுவதில்லை. குறைந்த
லாபம் பெறும் சிறு வியாபாரிகளே பெரும்பாலும் இச்செயலில் ஈடுபடுகின்றனர்.

இப்படிப்பட்ட போலி மருந்துகளிலிருந்து நுகர்வோர் எவ்வாறு தன்னைத்தானே காத்துக்


கொள்வது என்ற நியாயமான கேள்வி எழும். இவைகளிலிருந்து முழுமையாக பாதுகாத்துக்
கொள்ள முடியாவிடிலும், நுகர்வோர் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
கடைப்பிடிப்பதன் மூலம் தன்னை பாதுகாத்துக் கொள்வதுடன், மருந்துப் பொருள்கள்
ஒழுங்குபடுத்தும் துறைக்கு போலிகளை கண்டுபிடித்து ஒழிக்க உதவ முடியும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாவன :

1. முடிந்தவரை மருந்துகளை புகழ்பெற்ற மருந்து வியாபாரிகளிடமே வாங்க வேண்டும்.


அதிலும் வியாபாரி நமக்கு தெரிந்வராயிருந்தால் மிகவும் நல்லது.

2. மருந்து வாங்கும் போது பணம் செலுத்தியதற்கான ரசீதை கேட்டுப் பெற வேண்டும். மேலும்
ரசீது இல்லாமல் மருந்து மற்றும் அழகுசாதனப் பொருள்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க
முடியாது.மேலும் விற்பனையாளர் ரசீது கொடுக்க மறுப்பது குற்றமாகும்.
3. மருந்தின் மேலுள்ள தாளில் குறிப்பிடப்பட்டுள்ள விலையையும், விற்பனையாளர் வசூலித்த
தொகையையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். தொகை விலைப்பட்டியலில் உள்ளதை விட மிகக்
குறை வெனில் குறிப்பிட்ட பொருள் போலியானதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

4. மற்ற கடைக்காரர்களை விட மிகக் குறைந்த விலையில் விற்கும் கடைக்காரரிடம்


ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

5. வாங்கிய மருந்தின் காலாவதியாகும் தேதியை பார்த்து உறுதி br�J கொள்ள வேண்டும்.


காலாவதி தேதி முடிந்தவைகளை வாங்கக்கூடாது.

6. வாங்கும் மருந்தின் தோற்றம் முன்பே வாங்கிய அதே மருந்திலிருந்து வேறுபடுமானால்


அதை உடனே அருகிலுள்ள மருந்து ஆய்வாளருக்கு சோதனைக்கு அனுப்ப வேண்டும். அதே
போல மருந்தின் சுவை வேறுபட்டாலும் மருந்தின் மாதிரியுடன் மருந்து ஆய்வாளருக்கு புகார்
br�a வேண்டும்.

7. தீர்ந்து போன மருந்து பாட்டில்களை உடனே அழித்தி வேண்டும். அதிலும் குறிப்பாக மருந ;துப்
பெயர் (m) தயாரிப்பாளரின் பெயர் தெளிவாக உள்ளவைகளை கட்டாயம் அழித்திட வேண்டும்.

8. மருந்துகளை கண்காணிக்கும் துறையுடன் பொதுமக்களும் இணைந்து கூட்டங்கள் நடத்த


வேண்டும். அதில் மருந்துகளின் தரம் பற்றி விவாதம் br�a வேண்டும்

9. உங்கள் கவனத்திற்கு வரும் போலி மருந்துகளை பற்றிய விபரத்தை மாநில மருந்துப்


பொருள்கள் கட்டுப்பாட்டாளருக்கு தெரிவிக்க வேண்டும். நீங்கள் தரும் தகவல்
உண்மையானவைகளா என்பதை உறுதி br�J கொள்வதின் மூலம் கட்டுப்பாட்டாளரின் நேரம்
வணாகாமல்
ீ பார்த்துக் கொள்ள முடியும். (பக்கம் 205, ஹாத்தி கமிட்டியின் அறிக்கையிலிருந்து).

நுகர்வோர் இயக்கங்களின் கவனத்திற்கு :


m. எந்த ஒரு நபரும் அல்லது அங்ஙீகரிக்கப்பட்ட நுகர்வோர் குழு தான், தாம் வாங்கிய மருந்து
அல்லது அழகுசாதனப் பொருட்களை அரசுப் பகுப்பாய்வாளரிடம் கொடுத்து சோதனைக்கு
உட்படுத்தி அவரின் கையெழுத்திட்ட அறிக்கையைப் பெற தகுதி பெற்றவராவார், புகாரளிப்பவர்
நுகர்வோர் குழுவின் உறுப்பினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அறிக்கையைப் பெறலாம்.
இதற்கு 14-ஏ என்ற படிவத்தில் பிரிவு ஃஆய்வில் குறிப்பிட்டுள்ளபடி கட்டணம் செலுத்தி
விண்ணப்பிக்க வேண்டும், ஆய்வாளரின் சான்றிதழை படிவம் 14-பிஇல் பெற வேண்டும். (பிரிவு
26, மருந்து பொருள்கள் மற்றும் அழகு சாதனப் பொருள்கள் சட்டம்)

M. மருந்து ஆய்வாளர் மட்டுமின்றி அங்ஙீகரிக்கப்பட்ட நுகர்வோர் குழுக்கள் மற்றும்


பாதிக்கப்பட்ட நபரும் இச்சட்டத்தின் ஙீழ் வழக்குத் தொடரலாம். (பிரிவு 32 ன்படி).

இ. அங்ஙீகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்பு என்பது 1956 ம் வருடத்திய கம்பெனிகள் சட்டத்தின்


ஙீழோ அல்லது அமுலில் உள்ள சட்டத்தின் ஙீழ் பதிவு செய்யப்பட்ட தன்னார்வ நுகர்வோர்
குழுவாகும.

எடை, அளவு, கட்டுப்பாடு சட்டம்....


பொட்டலப் பொருட்களின் சட்டப்படி அதன் மேல் குறிப்பிட்டு விற்பனைக்கு வரும்
பொட்டலத்தின மேல் 1) அந்த பொருளின் பெயர் 2) அதன் நிகர எடை அல்லது (மெட்ரிக்
முறையில் நிர்ணயிக்கப் பட்ட ஸ்டேண்டர்டு யூனிட்டுகளில் 3) அந்த பொட்டல பொருள்
எண்ணிக்கையில் விற்கப்பட்டாலோ, பொட்டலம் போடப்பட்டாலோ அந்த பொட்டலத்தின்
உள்ளே உள்ள பொருளின் சரியான எண்ணிக்கை குறிப்பிட வேண்டும். 4) அந்த பொருளின்
யூனிட் விற்பைன விலை 5) அந்த பொருளின் விற்பனை விலை வரிகள் உட்பட 6)
தயாரிக்கப்பட்ட தேதி, மாதம், வருடம் போன்ற விபரங்கள் இருக்க வேண்டும்.

இதன்படி எடை, அளவு, பொருள்களின் எண்ணிக்கை ஃஎடை, அளவு கட்டுப்பாட்டுத்


துறையினால்ஞு குறிப்பிடப்பட்ட மெட்ரிக் எடை அளவு முறையில் குறிப்பிட வேண்டும்.
உதாரணமாக, இந்த சட்டம் பிரிவு 5 ம் go குழந்தை உணவு, பால் பவுடர்கள், 200 கி, 400 கி, 500 கி,
1000 கி என்ற அளவுகளிலும், தானியங்கள் 200 கி, 500 கி, 1000 கி என்ற அளவுகளிலும், பிரெட்
வகைகள் 100 கி, 200 கி, 400 கி, 800 கி, 1000 கி என்ற அளவுகளிலும், தீக்குச்சிகள் 10,20,50,60,100
என்ற எண்ணிக்கையிலும், பேக் செய்யப்பட வேண்டும். இது போன்று ஒவ்வொரு
பொருளுக்கும் தேவையை அனுசரித்து எடை அளவு, எண்ணிக்கை நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளன. முன்போல் டஜன், குரோஸ், go மரக்கால், ராத்தல் போன்ற அளவுகள்
தற்போது பயன்படுத்தக்கூடாது. தமிழ்நாடு தான் இது போன்ற அளவுகளை பயன்படுத்துவதை
1.1.74 முதல் கைவிட்டது. ஆனால், மரம், மார்பிள், கண்ணாடி போன்ற பொருட்கள் இன்னும்
நுகர்வோரும் சதுர mo அளவுகளிலேயே கேட்டு வாங்கி வருகின்றனர். கண்ணாடி மார்பிள்
வாங்கும் போது 14 அஙகுலம், 1 mo (18||) அல்லது 24|| (2 mo) அளவுக்கு கட்டணம் வசூலிப்பது
குற்றமாகும். நுகர்வோர் வாங்கின அளவுக்கு விலை கொடுத்தால் போதும்.

இனி எடை அளவுகளில் நுகர்வோர் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என பார்ப்போம்.

இரண்டு லிட்டர் அளக்கும் பாத்திரத்தில் உள்ளே உயரம் குறைந்த மற்றொரு பாத்திரம் brU�
பொருத்தப்பட்டு இருக்கும். இது எளிதில் பார்த்தால் தெரியாது. அதுவும் திரவ பொருள்
விட்டதும் ஃஇடமாறு தோற்றப்பிழைஞு காரணமாக ஏமாற்றப்படுகின்றனர். எண்ணை
கேன்களில் அடியில் இரண்டடுக்கு அடித்தகடு பொருத்துவது. இதனால் அளவு குறைவதோடு
விரைவில் கண்டுபிடிக்க முடியாது.

தராசில் தட்டுகளை சங்கிலி கொண்டு தான் இணைக்கப்படவேண்டும். ஒரு சிலர் கம்பியை


வளைத்து அதில் வெட்டுகள் ஏற்படுத்தி உபயோகிக்கின்றனர். இதனால் நெம்புகோல் போல
இந்த கம்பி செயல்பட்டு ஒரு தட்டில் 5 கிலோ எடையைக் கூட மறுதட்டில் 1 கிலோ கல்லுக்கு
சமமாக முள்காட்டும்படி நிறுத்த முடியும்.

தராசில் குறிக்கப்பட்டுள்ள அதிகபட்ச எடையின் அளவுக்கு மேல் எடைபோடுவது குற்றமாகும்.


எடைக்கற்களின் அடிப்பகுதியை சாணையில் தேய்த்து உயரத்தை கணிசமாக குறைத்து அதைப்
பயன்படுத்தி எடைபோட்டு ஏமாற்றுகின்றனர்.

தவிர மண்ணெண்ணை போன்றவற்றை நுரையுடன் அளப்பது குற்றமாகும். இதே போன்று ஈரப்


பதமான பொருட்களை குறிப்பிட்ட அளவுக்கு மேல் வேண்டுமென்றே தண்ணர்ீ சேர்த்து
எடைபோடு வதும் வழக்கமாக நடப்பது உண்டு. உதாரணமாக மல்லிகைப் பூ மூட்டை
லாரியிலிருந்து சாம்ரா{ நகர் அருகே தொட்டியில் இறக்கி நன்றாக நனைத்து பின்னர்
பெங்களூரில் எடைபோட்டு விற்கின்றனர். வெண்ணை, சோப்பு போன்ற பொருட்களில்
ஈரப்பதத்தின் அளவு கூட வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்கு அதிகபடக்கூடாது. இதே போல்
பேக்கிங் செய்யப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு குறிப் பிட்ட விழுக்காடு எடை
குறைபாடுகள் அனுமதிக்கப்படுகிறது. இதை பயன்படுத்தி சில கம்பெனிகள் எப்போதுமே எடை
அளவு எண்ணிக்கை குறைவாக பேக் செய்கின்றனர். உதாரணமாக தரமுள்ளஸ்டேண்டர்டு
தீப்பெட்டிகளில் கூட 48 குச்சிகள் தான் உள்ளன. அதுபோல சிமெண்ட் மூட்;டையிலும் அளவு
குறைவாக வருகிறது. மேலும் அனுமதிக்கப்பட்ட குறைபாடு விழுக்காடு அதிகமாக இருப்பதாக
கருதுகின்றோம். சில சமயங்களில் அரசின் சில ஆணைகள் வியாபாரிகள் தவறாக பயன்படுத்த
ஏது வாகிறது. குறிப்பாக ஒரு பகுதியை சேர்ந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும்
பொருளுக்கு ஒரு சில மாதங்களுக்கு எக்சைஸ் சீல் லேபிள் ஒட்ட வேண்டாம் என்று
ஆணையிட்டுள்ளது. இந்த பொருளில் தயாரித்த மாதம்

இதுபோன்ற பல விபரங்கள் நமக்கு தெரிந்து இருந்தும் வாய்மூடி மெளனமாக


சென்றுவிடுகின்றோம். எங்கேனும் எடை அளவு குறைவாக வழங்கப்பட்டால் உடனே அந்த
வணிகரை kW எடைபோட கேளுங்கள். இது உங்கள் உரிமை. அவர் மறுத்தால் தயங்காமல்
ஃஃஎடை அளவுக் கட்டுப்பாடு m�fh�|| (தொழிலாளர் ஆய்வாளர்) வட்டு
ீ வசதி வாரிய அலுவலக
வளாகம், சூரம்பட்டி நால்ரோடு, ஈரோடு அல்லது உபயோகிப்பாளர் பாதுகாப்புக்குழு, 180 காந்தி
ரோடு, ஈரோடு-2 என்ற முகவரியை அணுகவும்.

உங்களுக்குத் தெரியுமா

எடை அளவுகள் - பொட்டலப் பொருட்கள்

1. பொருட்கள் அளக்க நிறுக்கப் பயன்படுத்தப்படும், லிட்டர் குவளைகள் தராசு-படிக்கற்கள்,


மீ ட்டர் ஸ்கேல், கூம்புக்குடுவை ஆகிய கருவிகள் ஆண்டுக்கொருமுறை சோதனையிட்டு
முத்திரை யிடப்பட வேண்டும்.

2. பொருள்கள் வாங்கும் பொழுது இக்கருவிகளை நீங்களே சோதனை செய்யலாம். அவற்றை


கயிறுகட்டி தொங்கவிட்டே பயன்படுத்த வேண்டும்.

3. விட்டத் தராசுகளை (ுநயஅ ுயடயஉேந) கையில் பிடித்து நிறுக்கக்கூடாது. அவற்றை


கயிறு கட்டி தொங்கவிட்டே பயன்படுத்த வேண்டும்.

4. உணவு எண்ணெய்கள் (Edible Oils) உப்பு ஆகியவற்றை எடையிட்டு நிறுத்தே விற்க வேண்டும்-
வாங்க வேண்டும். அவற்றின் விலை கிலோ முறைக்கே நிர்ணயம் செய்யப்படுகிறது. லிட்டர்
முறையில் வாங்கினால் ந\;டமடைவர்கள்.

5. பேக் செய்யப்பட்ட பொட்டலப் பொருட்களின் அட்டை/டின் ஆகியவற்றின் மேல் ஙீழ்க்கண்ட


விவரங்கள் கட்டாயம் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

1.உற்பத்தி/பேக் br�j நிறுவனத்தின் பெயர் - முகவரி.

2. உற்பத்தி/பேக் செய்யப்பட்ட காலம் (மாதம்-ஆண்டு)

3. உள்ளே இருயக்கும் பொருளின் அளவு (எடை-எண்ணிக்கை)

4. எல்லா வரிகளும் உட்பட-உயர்பட்ச விற்பனை விலை, (இது அச்சடிக்கபட்டிருக்க வேண்டும்-


இதன் மீ து எவ்வித விலை வில்லையும் (Sticker) ஒட்டியிருக்கக்கூடாது).
5. உள்ளே இருக்கும் பொருள் நச்சுத்தன்மை கொண்டது எனில் அது தொடர்பான எச்சரிக்கை/
தேவையான கூடுதல் விவரம்.

6. எடை-அளவு குறைபாடுகள் (ரே\ன் கடைகள் உட்பட) பெட்ரோல்-டீசல் அளவு குறை பாடுகள்,


பொட்டலப் பொருட்கள் தொடர்பான குறைபாடுகள், சமையல் எரிவாயு எடை ஆகியவற்றிற்காக
மாவட்ட அளவில் தொழிலாளர நல ஆய்வாளர் (எடை, அளவுகள் பிரிவு) மாநில அளவில்
தொழிலாளர் நல ஆணையாளர் (எடை-அளவுகள் பிரிவு)னு.ஆ.ளு. Compound.
கூநலயேஅயீநவஇ ஹயேளயடயஇை ஆயனசயள-6 என்ற முகவரிக்கு எழுதலாம்.

7. திருத்தப்பட்ட எடை அளவுகள் சட்டப்படி, பொருள் வாங்கும் தனி நபரே எடை-அளவு


கருவிகளை சோதனை செய்யலாம். பாதிக்கப்பட்டால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குப்
போடலாம்.

8. விதிகளின்படி அமையாத பேக்கே{ - முதன் முறையாக குற்றத்திற்கு ௫ூ.2000/- வரை


அபராதம். இரண்டாவது முறை (m) தொடர்ச்சியான குற்றங்களுக்கு அபராதத்துடன் 5
ஆண:;டுகள் சிறை தண்டனை.

9. தயாரிப்பாளர்/பேக்கர் தவிர மற்றவர் பேக்கே{ மீ தான தகவல்களை திருத்தினால் ௫ூ.2000/-


அபராதம்.

10.எடை-அளவு சட்டம்/பொட்டலப் பொருட்கள் மீ தான வேறு எந்த குற்றத்திற்காகவும் ௫ூ.2000/-


அபராதம்.

நுகர்வோர் (பயன்படுத்துவோர்) உரிமைகள்


நுகர்வோர் (பயன்படுத்துவோர்) உரிமைகள்
1. பாதுகாப்பு உரிமை (Right to Safety)
உயிருக்கும் உடமைக்கும் தீங்கு விளைவிக்கும் பொருட்களின் விற்பனையிலிருந்து
காக்கப்படும் உரிமை என்று பொருள்படும். வாங்கப்படும் பொருள் உடனடித் தேவையைப் பூர்த்தி
செய்வதோடல் லாமல் நீண்டகால நலன்களையும் நிறைவு செய்வதாகவும் இருத்தல்
வேண்டும்.
பொருட்களை வாங்குவதற்கு முன்பாக பொருளின் தரம், தேவை ஆகியவற்றுக்கு உத்திரவாதம்
அளிக்குமாறு நுகர்வோராகிய நாம் வற்புறுத்த வேண்டும். அக்மார்க், ஐ.எஸ்.ஐ.(I.S.I.) முதலான
தரக் குறியீடுள்ள பொருள்களை மட்டுமே நாம் வாங்குவது என உறுதி கொள்ள வேண்டும்.
உதாரணம் :
மின்சாதனங்கள், ஸ்டவ், பிரிட்ஜ், குக்கர்கள், காஸ் சிலிண்டர்கள் மற்றும் சில பொருட்கள்
அரசின் நிர்ணயம் செய்யப்பட்ட தரத்தில் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும். I.S.I முத்திரை
இல்லாமல் மேற்குறிப்பிட்ட பொருட்கள் தயாரிக்கப்படக்கூடாது.
கலப்படமில்லாத உணவுப் பொருட்களை பெறுகின்ற உரிமை

விவரம் அறியும் உரிமை (Right to be informed)


முறையற்ற வணிகத்திற்கெதிராய் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பொருள்களின்
தரம், அளவு, திறன், தூய்மை, வரைநிலை, விலை ஆகியவற்றைத் தெரிந்து கொள்வதற்கான
உரிமை என்று பொருள்படும.
ஒரு பொருளை/சேவையை/ தேர்வு செய்வதற்கு/பயன்படுத்துவதற்கு முன்பு அப்பொருளைப்
பற்றி அல்லது சேவையைப பற்றி முழு விபரங்களை அளிக்குமாறு நுகர்வோராகிய நாம்
விற்பனையாளரை வற்புறுத்த வேண்டும். இது அவரை பொறுப்புடனும்,
புத்திசாலித்தனத்துடனும் நடந்து கொள்ளச் செய்வதுடன், பெரும் நிர்ப்பந்த வியாபார
உத்திகளின் தாக்கத்திற்கு நாம் இரையாகாது காக்கச் செய்யும். விளம்பரத்திற்காக ஒரு
பொருளை வாங்காமல், கொடுக்கும் விலைக்கு உரிய பொருளை வாங்குகிறோமா என்பதை
நாம் ஆராய வேண்டும்.
உதாரணம் :
பொட்டலப், பொருட்கள் சட்டம் - பொட்டலப் பொருட்கள் சட்டப்படி, பொட்டலப் பொருட்கள்
அனைத்திலும் தயாரிப்பாளர்
பெயர் விலாசம்
என்னபொருள் (Content)
எடை
பொருளின் விலை MRP(வரிகள் உள்பட)
காலாவதியாகும் தேதி (Expiry Date)
போன்ற விபரங்கள் அச்சடிக்கப்பட்டு இருக்க வேண்டும். இதே போன்று மருந்துகளில் உள்ள
மூலப் பொருள்களின் பெயர், விற்பனையாளர் (Manufacturers Brand Name) வைத்து இருக்கும்
பெயரை விட பெரிய அளவில் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும். (Example : PARACETAMOL 500 GM
Crocin)

தேர்வு செய்யும் உரிமை (Right to Choose)


போட்டி விலைகளில் விற்கப்படும் பலவகைப் பொருட்களை இயன்றவிடத்து கண்ணுற்றுத்
தேர்வு செய்யும் உரிமை என்று பொருள்படும். ஏகபோக வர்த்தகமெனில் நியாயமான
விலையில் திருப்திகரமான தரம், பணி, சேவை ஆகியவற்றை உறுதி செய்வதற்கான உரிமை
என்று பொருள்படும்.
அடிப்படையான பொருள்கள், பணிகள் ஆகியவை குறித்த உரிமையும், இதில் அடங்கும். ஏனெ
னில் பொருளைத் தேர்வு செய்வதில் சிறுபான்மையானவரின் கட்டுப்பாடில்லா உரிமை என்பது
பெரும் பான்மையானவரின் நியாயமான உரிமைகளைப் பறிப்பதாகும்.
பலவகைப் பொருள்/சேவைகள் போட்டி விலைகளில் கிடைக்கும் போது இந்த உரிமையை
மேலும் சிறப்பாகப் பயன்படுத்தலாம்.
உதாரணம் :
டிவி (T.V), (Fridge), வாஷிங் மெஷின், கிரைண்டர் போன்ற பொருள்களை வாங்கும் போது பல
தயாரிப்பாளர்களின் மாதிரிகளை (Models) ஒவ்வொன்றையும் ஒப்பிட்டு அவற்றின்
விலையிலிருந்து, செயல்திறன் வரை பரிசோதித்துத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு நமக்கு இருக்கிறது.
இது போன்ற ஒரு உரிமை நுகர்வோருக்கு எல்லாத் துறைகளிலும் அவசியமாகின்றது. தற்போது
பேருந்து மாத்திரமே தனியார், அரசு இவர்கள் நடத்தி வருவதை ஒப்பிட்டு பார்க்க முடிகிறது.
தேர்வு செய்ய முடிகின்றது. இது போன்ற வாய்ப்பு மின்சாரம், டெலிபோன், ரயில்வே, தந்தி
போன்றவைகளிலும் நுகர்வோருக்கு கிடைக்க வேண்டும். இது நமது அடிப்படை உரிமை ஆகும்

4. கேட்கப்படும் உரிமை (Right to be Heard)


நுகர்வோரின் நலன்கள் உரிய மன்றங்களில் (Court/Forum) முழுமையாகப் பரிசீலிக்கப்படும்
உரிமை என்று பொருள்படும். நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்க அமைக்கப்படும். பல்வேறு
மன்றங்களில் அங்கம் வகிப்பதற்கான உரிமையும் இதில் அடங்கும்.
நுகர்வோர் தொடர்பாக அரசும், அரசு சார்பு நிறுவனங்களும் ஏற்படுத்தும் குழுக்களில், கட்சி,
வணிக சார்பற்ற நுகர்வோர் அமைப்புகள் பிரதிநிதித்துவம் பெறச் செய்யலாம்.
உதாரணம் :அநேக அரசுத்துறைகளில் இதற்கென நுகர்வோர் குறை கேட்கும்/தீர்க்கும் நாள் அரசு
நடத்தி வருகின்றது. தவிர நுகர்வோர் பொதுமக்கள் அடங்கிய ஆலோசனைக் குழுக்கள்
அவ்வப்போது நுகர்வோர் புகார்களை மற்றும் ஆலோசனைகளை ஏற்று கேட்டுத் தீர்க்க முயற்சி
செய்து வருகின்றது. இது நமது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். நாம் இவைகளை
முறையாக பயன்படுத்தி நமது குறைகளை இந்த கூட்டத்திலேயே தீர்த்துக் கொள்ள முயற்சி
செய்தல் வேண்டும்.
உதாரணம் :
டெலிபோன் டெலிபோன் அதாலத்
தபால் தந்தி வாரத்தில் ஒரு நாள்
மின்சாரம் வாரத்தில் ஒரு நாள்
மாவட்ட ஆட்சியர் மனு நீதி நாள்
வங்கிகள் ஒவ்வொரு 15 ஆம் தேதி

நுகர்வோரில் குறை தீர்க்கப் பெறுவதற்கான உரிமை (Right to Seek Redressal)


நியாயமற்ற வணிக முறைகள், தயக்கமற்ற சுரண்டல், கலப்படம், பதுக்கல், மிகைப்படுத்தும்
விளம்பரங்கள் இவைகளைத் தீர்க்கும் உரிமை என்று பொருள்படும் உண்மையான குறைகளை
நியாய மான முறையில் தீர்த்து வைப்பதற்காக உரிமையும் இதில் அடங்கும். இதற்காகவே
தான் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 (Consumer Protection Act 1986) இயற்றப்பட்டு நுகர்வோர்
குறைதீர் மன்றங்கள் (Consumer Redressal Forum) போன்றவை மூலம் குறைகளை நிவர்த்தி
செய்து கொண்டு வருகின்றன.
நுகர்வோர் தங்கள் குறைகளைத் தீர்;த்துக் கொள்ள நுகர்வோர் அமைப்புகளில் (Consumer
Protection Council) உதவியையும் நாடலாம்
நுகர்வோரில் குறை தீர்க்கப் பெறுவதற்கான உரிமை (Right to Seek Redressal)
நியாயமற்ற வணிக முறைகள், தயக்கமற்ற சுரண்டல், கலப்படம், பதுக்கல், மிகைப்படுத்தும்
விளம்பரங்கள் இவைகளைத் தீர்க்கும் உரிமை என்று பொருள்படும் உண்மையான குறைகளை
நியாய மான முறையில் தீர்த்து வைப்பதற்காக உரிமையும் இதில் அடங்கும். இதற்காகவே
தான் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 (Consumer Protection Act 1986) இயற்றப்பட்டு நுகர்வோர்
குறைதீர் மன்றங்கள் (Consumer Redressal Forum) போன்றவை மூலம் குறைகளை நிவர்த்தி
செய்து கொண்டு வருகின்றன.
நுகர்வோர் தங்கள் குறைகளைத் தீர்;த்துக் கொள்ள நுகர்வோர் அமைப்புகளில் (Consumer
Protection Council) உதவியையும் நாடலாம்

நுகர்வோர் கல்வி பெறும் உரிமை (Right to Consumer Education)


நுகர்வோர் உரிமை, கடமை, சட்டம் பற்றி அறிவதற்கும் அவர் விழிப்புணர்வு பெறுவதற்கான
கல்வி பெறுவதற்கும் உரிமை பெற்றுள்ளனர்.
நம் போன்ற குழுக்கள் இது போன்ற பணியை செய்வதுடன், பள்ளிப் பாடத்திலேயே நுகர்வோர்
கல்வி சேர்க்கப்பட வேண்டிய அவசியம் பற்றி எடுத்து உரைத்து வருகிறது. குடும்பத்திற்கான
பொருட்களை அன்றாடம் வாங்குவது பெண்கள். எனவே பெண்கள் விழிப்புணர்வு பெறுவது மிக
மிக அவசியமாகும்.

தூய்மையான சுற்றுபுறச் சூழலைப் பெறுவதற்கான உரிமை (Right to Health Environment)


தூய்மையான நீர், காற்று, நிலம் இவைகளைப் பெறுவது நமது அடிப்படை உரிமையாகும்.
இவற்றை மாசுபடுத்துவதற்கு யாருக்கும் உரிமையில்லை. ஒலி மாசுவைக் கட்டுப்படுத்த
ஏர்ஹாரன் போன்றவற்றை கட்டுப்படுத்தி ஒலிக்கச் செய்யவும். மரங்களையும், இயற்கை
சூழ்நிலைகளையும் அழிக்காமல் பாதுகாக்கவும், மரங்களை நட்டு இயற்கை சூழலை
மேம்படுத்தும உள்ள உரிமையாகும்.
அடிப்படைத் தேவைகளுக்கான உரிமை (Right to Basic Needs)
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் போன்றவை மனிதரின் அடிப்படை உரிமை
யாகும். நமக்கு தேவையான உணவு, உடை, இடம் ஆகியவற்றை நம்மை ஆளுகின்றவர்கள்
நம்மிட மிருந்து வரி வசூலிக்கும் அரசிடமிருந்து பெறுகின்ற உரிமை.
உரிமைகள் 7-ம், 8-ம் அண்மைக்காலத்தில் I.eh. சபையானது நுகர்வோர் உரிமைகளாகச்
சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்
உணவுப் பொருட்களில் கலப்படத்தைக் கண்டுபிடிக்க
உணவு கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி

உணவுப் பொருட்களில் கலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகள் ஙீழே தரப்பட்டுள்ளன.

இவற்றைப் படிக்கத் துவங்குமுன் ஒரு சில வார்த்தைகள். கலப்படத்தைக் கண்டுபிடிப்பதற்கென


இங்கே விவரிக்கப்படுகிற வழிகள் எல்லாம் முடிவானவை என்று சொல்வதற்கில்லை.
கலப்படத்தைக் கண்டு பிடிக்கும் முறையான ஒரு ஆய்வகம் தரும் ஆராய்ச்சி முடிவுகளுக்கு
இவை ஈடாகாது.

உணவு குறித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதைப்


போன்றே கலப்படமும், மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அக்கலப்படத்தை இனங்கண்டு
கொள்வதற்க ஓரளவு இங்கே வழி செய்யப்பட்டுள்ளதேயொழிய, இனிமேல் வரக்கூடிய
கலப்படத்தைப் பற்றி எதுவும் இங்கே கூறவில்லை. தோற்றத்திலோ அல்லது குணத்திலோ
ஓரளவு ஒத்திருக்கும் சில கலப்படப் பொருட்களை தேடிப்பிடித்து உணவுப் பொருட்களில்
கலப்படத்தைச் br�J வருகின்றனர் சில வணிகர்கள். அவற்றைத் தடுக்கும் சிறு முயற்சி இது.

எனவே நுகர்வோர் இந்த வழிகளைப் பயன்படுத்துவதன் மூலம் கலப்படப் பொருளை


கண்டறிவதில், ஒரு சாதகமான அல்லது பாதகமான தீர்வு ஏற்பட்டது என்பதற்காக, ஒரு
பொருள் ~~e�yJ|| அல்லது ~~bf�lJ|| என்று அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரக்கூடாது.
குறிப்பி;ட்ட உணவுப் பொருளில் கலப்படம் செய்யப் பட்டள்ளதா என்று, மேலோட்டமாக
அறிவதற்கான வழிவகைகளே இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

எனவே ஃஃகலப்படமான bghU�|| என்று இறுதியாகச் சொல்வதற்கு ஒரு ஆய்வகமே தகுதி


படைத்தது ஆகும். இனி நீங்கள் மேலே படிக்கலாம்.

உணவுப் பொருளின் பெயர் : 1. நெய் அல்லது வெண்ணெய்

கலப்படப்பொருள் : வனஸ்பதி

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : ஒரு சோதனைக் குழாயில் ஒரு தேக்கரண்டி உருகிய
நெய் அல்லது வெண்ணெய் மற்றும் அதே அளவுக்கு அடர் ஹைட்ரோ குளோரிக்
அமிலத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அக்கலவையில் ஒரு சிட்டிகை சர்க்கரையைச்
சேர்த்து ஒரு நிமிட நேரம் நன்கு குலுக்கவும். பின்னர் ஐந்து நிமிட நேரம் அப்படியே
வைத்திருக்கவும். சோதனைக் குழாயின் அடியில் ஊதாநிறம் அல்லது கருஞ்சிவப்பு நிற அமிலப்
படிவு காணப்பட்டால் அதில் வனஸ்பதி கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை உணரலாம்.

முன் எச்சரிக்கை : வனஸ்பதி br�a கட்டாயமாக நல்லெண்ணெய் கலக்கப்பட வேண்டும் என்


பதை கண்டறிய இச்சோதனை மிகவும் ஏற்றது. சில நிலக்கரி தார் சாயங்களும்
இச்சோதனைக்கு இதே முடிவைத்தரும்.
உணவுப் பொருளின் பெயர் : நெய் அல்லது வெண்ணெய்

கலப்படப்பொருள் : கூழாக்கப்பட்ட உருளைக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு மற்றும் பிற மாவு


வகைகள்.

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : வெண்ணெயில் உருளைக்கிழங்கு அல்லது வள்ளிக்


கிழங்கின் கூழ் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய ஒரு சொட்டு டிஞ்சர் அயோடின்
விடவும். பழுப்புநிறமுள்ள டிஞ்சர் அயோடின் நீல நிறமாக மாறினால் கலப்படம்
நடந்திருக்கிறது என்று பொருள்.

முன் எச்சரிக்கை : இந்தசோதனை கொழுப்பு நீக்கப்பட்ட பால் அல்லது அடர்த்தி கொடுக்கக்


கூடிய பொருட்கள் கலந்த பால் இவற்றுக்குப் பொருந்தாது.

உணவுப் பொருளின் பெயர் : 2. பால்

கலப்படப்பொருள் : தண்ணர்ீ

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : 1. லாக்டோமீ ட்டரால் பாலின் அடர்த்தியைக் காண


வேண்டும. அது எண். 1.026 க்கு ஙீழிருந்தால் தண்ணர்ீ கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்பது
புலனாகும். 2. ஒரு பளபளப்பான பரப்பைச் செங்குத்தாக வைத்து ஒரு சொட்டு பால் விடவும்.
சுத்த மான பால் இலேசாக நகரும் அல்லது அப்படியே நிற்கும். கலப்படப் பால் எந்த ஒரு
வழ்படிவம்
ீ இல்லாமல் வேகமாக ஓடிவிடும்.

உணவுப் பொருளின் பெயர் : பால்

கலப்படப்பொருள் : மாவுப்பொருள்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : பாலில் சிறிதளவு டிஞ்சர் அயோடினைச் சேர்க்கவும்.


அது நிறம் மாறி நீலநிறமானால் மாவுப் பொருள் கலப்படம் செய்யப்பட்டிருப்பதை புரிந்து
கொள்ளலாம்.

உணவுப் பொருளின் பெயர் : 3. கோவா

கலப்படப்பொருள் : மாவுப் பொருள்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : மேலே சொன்னவாறு இதற்கும் செய்யவும்.

உணவுப் பொருளின் பெயர் : சமையல் எண்ணெய்

கலப்படப்பொருள் : நாய் கடுகு எண்ணெய்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சிறிதளவு மாதிரி எண்ணெயில் ஒரு சில துளிகள்
அடர் நைட்ரிக் அமிலம் விட்டு, ஜாக்கிரதையாகக் குலுக்கவும். அமிலப்படிவம் சிவப்பில் இருந்து
செம்பழுப்பு நிறத்தில் தோன்றினால் அதில் நாய் கடுகு எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டு
இருக்கிறது என்பது பொருளாகும்.
உணவுப் பொருளின் பெயர் : சமையல் எண்ணெய்

கலப்படப்பொருள் : தாதுப்பொருள் எண்ணெய்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : இரண்டு மில்லி மாதிரி எண்ணெயுடன் அதே அளவு
எண் 2 ஆல்காலிக் பொட்டாஸைச் சேரக்கவும். அக்கலவையை சுமார் 15 நிமிடங்கள் கொதி
நீரில் சூடுபடுத்திவிட்டு அதில் 10 மில்லி தண்ண ீரைக் கலக்கவும். ஏதேனும் கலங்கல்
தென்பட்டால் தாதுப்பொருள் எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டு இருக்கிறது என்று பொருள்.

முன் எச்சரிக்கை : இந்த சோதனைகள் குறைந்த அளவில் செய்யப்பட்டு உள்ள கலப்படத்தைக


கண்டுபிடிப்பதற்கு அல்ல.

உணவுப் பொருளின் பெயர் : சமையல் எண்ணெய்

கலப்படப்பொருள் : விளக்கெண்ணெய்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : ஒரு சோதனைக் குழாயில் சிறிதளவு எண்ணெயுடன்


கொஞ்சம் பெட்ரோலியம் ஈதரை விட்டுக் கரைக்கவும். அக்கலவையை உறை பனி கலவைக்கு
நடுவில் வைத்து சிறிது நேரம் குளிர வைக்கவும். ஐந்து நிமிடத்தில் கலங்கல் தென்பட்டால்
விளக ;கெண்ணெய் கலப்படம் செய்யப்பட்டிருப்பது விளங்கும்.

உணவுப் பொருளின் பெயர் : 5. இனிப்பு, ஐஸ்கிரீம், சர்பத் முதலியன.

கலப்படப்பொருள் : மெடானில் எல்லோ (இது ஒரு அனுமதிக்கப்படாத நிலக்கரித்தாரின் சாயம்)

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சம்பந்தப்பட்ட பொருளில் இருந்து வெதுவெதுப்பான


தண்ண ீரை விட்டு சாயத்தை தனியாக எடுக்கவும். சில துளிகள் அடர் ஹைட்ரோகுளோரிக்
அமிலத்தை விடும் போது மெஜந்தர் சிவப்பு நிறம்தோன்றுமானால் மெடானில் எல்லோ என்ற
சாயம் கலப்படம் செய்யப்பட்டு உள்ளது என்பதாகும்.

உணவுப் பொருளின் பெயர் : 6. பருப்பு வகைகள்

கலப்படப்பொருள் : கேசரி பருப்பு

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : பருப்பின் மீ து 50 மில்லி நீர்த்த ஹைட்ரோ குளோரிக்


அமிலத்தை விட்டு, 15 நிமிடம் நீரில் வைக்கவும். அப்போது இளஞ்சிவப்பு நிறம் தோன்று
மானால் கேசரி பருப்பு கலப்படம் செய்யப்பட்டிருப்பதாகப் பொருள்.

முன் எச்சரிக்கை : இந்த சோதனை கேசரிப் பருப்பை கண்டுபிடிக்க மட்டுமே உதவும்.

உணவுப் பொருளின் பெயர் : பருப்பு வகைகள்

கலப்படப்பொருள்: களிமண், சிறு கற்கள், சரளைக்கற்கள் போன்றவை (காாஞய குரோமேட்


மஞ்சள்)
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : இவற்றைச் சற்று கூர்ந்து பார்த்தே கண்டுபிடித்து
விடலாம். 5 மில்லி நீருடன் 5 கிராம் பருப்பைச் சேர்த்து அதில் ஒரு சில துளிகள் ஹைட்ரோ
குளோரிக் அமிலம் விடவும். அப்போது இளஞ்சிவப்பு நிறம் தோன்றுமானால் கலப்படம்
நடந்துள்ளதை அறியலாம்.

உணவுப் பொருளின் பெயர் : 7. பெருங்காயம்

கலப்படப்பொருள் : மாக்கல்லின் தூள் அல்லது மண் சம்பந்தப்பட்ட பொருள்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : இதனுடன் சிறிதளவு தண்ணர்ீ சேர்த்து குலுக்கவும்.


மாக்கல்லாயின் தூள் அல்லது மண் தூள்கள் தானாக அடியில் தங்கிவிடும். சுத்தமான
பெருங்காயம் நீரில் கரையும் போதுமான வெள்ளை நிற கரைசலாகும். அது நெருப்பில்
கொளுத்தினால் மஞ்சள் நிறத்தில் எரியும்.

முன் எச்சரிக்கை : கூட்டுப் பெருங்காயத்தில் மாவுப் பொருள் இருப்பதால் ஒரு சிறிது கலங்கல்
ஏற்படும் எனினும் சிறிது நேரத்தில் ஙீழே படிந்துவிடும்.

உணவுப் பொருளின் பெயர் : பெருங்காயம்

கலப்படப்பொருள் : மாவுப்பொருள்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : பாலுக்குச் br�j அதே சோதனையைத் தான் இதற்கும்
br�a வேண்டும்.

உணவுப் பொருளின் பெயர் : 8. தேயிலை

கலப்படப்பொருள் : சாரமிறக்கிய பின் உள்ள பயனற்ற தேயிலை அல்லது நிறம் கூட்டப் பற்ற
காய்ந்த இலை பருப்பின் தவிடு

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : 1. இதனை ஈரமான ஒற்றுத்தாளில் சிறிதளவு


தூவவும். செயற்கை நிறம் தானாக பிரிந்து விடும். 2. வெண்மையான பீங்கான் ஓடு அல்லது
கண்ணாடித் தகட்டின் மீ து சிறிதளவு சுட்ட சுண்ணாம்புத்தூளைப் பரப்பவும். அதன்மேல்
சிறிதளவு தேயிலைத் தூளை தூவவும். அப்போது சிவந்த நிறமோ ஆரஞ்சுநிறமோ அல்லது
திரிந்த நிறத்திலான கலவையோ தோன்றுமானால் நிலக்கரித்தார் சாயமானது கலப்படம்
செய்திருப்பதை உணரலாம். சுத்தமான தேயிலையில் பச்சையம் இருப்பதால் சாதாரண
பசும்பொன்நிறம் மட்டுமே சிறிது நேரம் கழித்துத் தோன்றும்.

உணவுப் பொருளின் பெயர் : 9. சர்க்கரை

கலப்படப்பொருள் : சாக்கட்டித்தூள்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சிறிதளவு மாதிரியை எடுத்து ஒரு கண்ணாடி டம்ளர்
நீரில் கரைத்தால் சாக்கட்டித்தூள் அடியில் படிந்துவிடும்.

உணவுப் பொருளின் பெயர் : 10. கரும் மிளகு

கலப்படப்பொருள் : பப்பாளிப்பழத்தின் உலர்ந்த விதைகள்


கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : பப்பாளி விதைகள் முட்டை வடிவில் சுருங்கியவாறு
பசும்பழுப்பு அல்லது கரும்பழுப்பு நிறத்தில் தோற்றமளிப்பதால் பார்த்தவுடனேயே எளிதில்
கண்டுபிடித்து விடலாம். மேலும் ஒரு கரு மிளகைக் கடித்தால் ஏற்படும் கார குணம் பப்பாளி
விதையைக் கடித்தால் ஏற்படாததையும் கண்டு கொள்ளலாம்.

உணவுப் பொருளின் பெயர் : கரும் மிளகு

கலப்படப்பொருள் : சொத்தை மிளகு

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : எரிசாராயத்தின் (ஸ்பிரிட்) மேல் சொத்தை மிளகு


மிதக்கும்.

உணவுப் பொருளின் பெயர் : 11. மஞ்சள் தூள்

கலப்படப்பொருள் : நிறமேற்றப்பட்ட மரத்தூள்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : ஒரு சோதனைக்குழாயில் ஒரு தேக்கரண்டி மஞ்சள்


தூளை எடுத்துக் கொள்ளவும். அதில் சில துளிகள் அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை
விடவும். உடனே நீல நிறம் தோன்றி அது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தால் அந்த மஞ்சள் தூள்
சுத்தமானது என்று பொருள். நிறம் மாறாமல் மஞ்சளாகவே தோற்றமளித்தால்
அனுமதிக்கப்படாத செயற்கை சாயமான மெடானில் எல்லோ கலப்படம் செய்யப்பட்டிருப்பதை
உணரலாம்.

முன் எச்சரிக்கை : இந்த ஆய்வு மெடானில் எல்லோ கலப்படத்திற்கு.

உணவுப் பொருளின் பெயர் : 12. மிளகாய்த்தூள்

கலப்படப்பொருள் : செங்கல்தூள், உப்புத்தூள் அல்லது முகப்பவுடர்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : ஒரு டம்ளர் தண்ணரில்


ீ ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூளை போடவும். கலப்படத்தூளானால் சாயம் கரைந்து மேலாக வர செங்கல் தூள்
ஙீழே படியும். மேலும் வழ்படிவம்
ீ வெண்மையாகவும், வழுவழுப்பாகவும் காணப்பட்டால்
சோப்புக்கல் தூள் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்பது தெரியும்.

முன் எச்சரிக்கை : இந்த ஆய்வு மண் சம்பந்தப்பட்ட பொருட்கள் கலந்திருப்பதை கண்டுபிடிக்க


மட்டுமே உதவும்.

உணவுப் பொருளின் பெயர் : மிளகாய்த்தூள்

கலப்படப்பொருள் : வண்ணம்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : கண்ணாடி டம்ளரில் சிறிதளவு மிளகாய்த்தூளை தூவ


வேண்டும். வண்ணக்கலவை தானாக நிறம் பிரிந்து வரும். படிப்படியாக அந்த நிறம் குறைந்து
விடும்.

உணவுப் பொருளின் பெயர் : 13. காப்பித்தூள்


கலப்படப்பொருள் : சிக்கரி

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : ஒரு டம்ளர் தண்ணரில்


ீ இலேசாக காப்பித்தூளைத்
தூவவும். காப்பித்தூள் தண்ணரின்
ீ மேல் மிதக்கும். ஆனால் சிக்கரியோ ஒரு சில வினாடிகளில்
மூழ்கி விடும். சிக்கரியில் அதிக அளவு கருவெல்லச்சாயம் இருப்பதால் ஒருவித நிறத்
தொடர்ச்சி காணப்படும்.

உணவுப் பொருளின் பெயர் : காப்பித்தூள்

கலப்படப்பொருள் : புளிஸயங்கொட்டை, பேரீச்சங்கொட்டைத்தூள்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சந்தேகத்துக்கு இடமான காப்பித்தூளை ஒரு


வெள்ளை மையொற்றுத் தாளின் மீ து இலேசாக தூவி அதன் மேல் நீர் தெளிக்கவும்.
புளியங்கொட்டை அல்லது பேரீச்சங்கொட்டைதூள் கலந்திருந்தால் ஒற்றுத்தாள் சிவப்பு
நிறமாக மாறிவிடும்.

உணவுப் பொருளின் பெயர் : 14. தூள் வெல்லம், வெல்லம்.

கலப்படப்பொருள் : சலவை சோடா

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சந்தேகப்படும் தூள்வெல்லத்தின் மீ து ஒரு சில


துளிகள் ஹைட்ரோகுளோரிக் அமிலம் விடவும். நுரைத்து வந்தால் கலப்படம் நடந்துள்ளது என
உணரலாம்.

உணவுப் பொருளின் பெயர் : 14. தூள் வெல்லம், வெல்லம்.

கலப்படப்பொருள் : சாக்கட்டித்தூள்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : ஒரு டம்ளர் தண்ணரில்


ீ இரு தேக்கரண்டி
வெல்லத்தூளை விட்டுக் கலக்கவும். சாக்கட்டித்தூள் ஙீழே படிந்துவிடும்.

உணவுப் பொருளின் பெயர் : 15.ரவை

கலப்படப்பொருள் : இரும்புத்தூள்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சந்தேகப்படும் ரவையினுள் ஓரு காந்தத்தை எடுத்துத்


தூவினால் அதில் இரும்புத்தூள் தானாக ஒட்டிக் கொள்ளும்.

உணவுப் பொருளின் பெயர் : 16.அரிசி

கலப்படப்பொருள் : சலவைக்கற்கள் மற்றும் இதர கற்கள்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : உள்ளங்கையில் சிறிது அரிசியை வைத்து கையை


சிறிது சிறிதாக நீரில் அமிழ்த்தினால் கற்கள் நீரில் மூழ்கிவிடும். அரிசி மிதக்கும்.

உணவுப் பொருளின் பெயர் : 17. கோதுமை மாவு (மைதா)


கலப்படப்பொருள் : மைதா மற்றும் ரவை எடுத்துவிட்டபின் உள்ள ஆட்டா

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : இப்படிப்பட்ட மாவினால் சப்பாததி தயாரிக்க அதிக நீர்
விட்டு பிசைய வேண்டியிருக்கும். இதில் சப்பாத்தி தயாரித்தால் சற்று இறுகலாக இருக்கும்.
சுத்தமான மாவில் தயாராகும் சப்பாத்தி சிறிதளவு இனிப்பாக இருக்கும். ஆனால் கலப்பட
மாவில் தயாரிக்கும் சப்பாத்தி சுவையற்றதாக இருக்கும்.

உணவுப் பொருளின் பெயர் : 18. சாதாரண உப்பு

கலப்படப்பொருள் : வெள்ளைக்கல்லின் தூள் மற்றும் சாக்கட்டி போன்றவை

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : ஒரு டம்ளர் தண்ணரில்


ீ ஒரு தேக்கரண்டி சாதாரண
உப்புத்தூளைக் கலக்கவும். சாக்கட்டி கலந்திருந்தால் அந்த நீர் வெள்ளை நிறமாவதோடு மற்ற
அசுத்தமான பொருட்கள் ஙீழே படிந்துவிடும்.

உணவுப் பொருளின் பெயர் : 19. தேன்

கலப்படப்பொருள் : சர்க்கரைப்பாகு (தண்ணரும


ீ சர்க்கரையும் கலந்தது)

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : கொஞ்சம் பருத்தி திரியை சுத்தமான தேனில்


நனைத்து தீக்குச்சியால் பற்ற வைத்தால் அது தீப்பிடித்து எரியும். கலப்படத் தேனாக இருந்தால்
அது எரியாது. அப்படியே எரியத்துவங்கினாலும் பட் பட் என வெடிச்சத்தத்துடன் எரியும்.

முன் எச்சரிக்கை : ஈரம் கலந்த தேனுக்கு மட்டுமே இந்த ஆய்வு.

உணவுப் பொருளின் பெயர் : 20. சீரகம்

கலப்படப்பொருள் : கரித்தூள் பூசிய புல் விதைகள், குப்பைக்ஙீரை விதைகள்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : விரல்களால் கசக்கிப் பார்த்தால் விரலில் கரி


படிந்தால் கலப்படம் என முடிவு செய்துவிடலாம்.

உணவுப் பொருளின் பெயர் : 21. கடுகு

கலப்படப்பொருள் : மாவுப்பொருள், நாய்கடுகு, காட்டுச்செடி விதைகள்.

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : கடுகு மேற்பரப்பு வழவழப்பாக இருக்கும். நாய் கடுகு
brhw சொறப்பாகவும், மிகக் கறுப்பாகவும் இருக்கும். நிற வித்தியாசம் கூர்ந்து நோக்கினால்
தெரியும்.

உணவுப் பொருளின் பெயர் : 22. தானியங்கள், கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு.

கலப்படப்பொருள் : நச்சுத்தன்மையுடைய காளான் விதைகள் (எர்காட்)

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : செந்நிற கருப்பு கலந்த நீண்ட தானியங்கள்


சோளத்தில் இருந்தால், கலப்படம் இருபது சதவதம்.
ீ உப்புத்தண்ணரில்
ீ தானியங்களைப் போட
காளான் வகை தானியம் மிதக்கும். நல்ல தானியங்கள் நீரின் அடியில் படியும்.
உணவுப் பொருளின் பெயர் : 23. கிராம்பு

கலப்படப்பொருள் : எண்ணெய் எடுத்த கிராம்பு

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : எண்ணெய் எடுத்த கிராம்பு சுருங்கிப் போய் இருக்கும்.

உணவு கலப்படம் – ஒரு பார்வை


அண்ணாச்சி ஒரு ரூபாய்க்கு மிளகு சீரகம் கொடுங்க! உள்ளங்கை வியர்வையுடன் அந்த ஒரு
ரூபாய் நாணயத்தைக் கடைக்காரரிடம் நீட்டினாள் சிறுமி. கூலி வேலை பார்க்கும் வட்டுப்

பெண்ணாக இருக்க வேண்டும். வறுமை, சோகம், சோர்வு என அனைத்தையும் தோற்றத்தில்
அப்பிக் கொண்டு நின்ற அந்தச் சிறுமியை அண்ணாச்சியோ திரும்பிக்கூடப் பார்க்கவில்லை!
லூஸ்ல இல்லம்மா! என்று கட்டையாய் சொல்லிவிட்டு, கிலோ மிளகு இருநூறு ரூபாய்
விக்குது! இதுல ஒரு ரூபாய்க்கு எண்ணியா குடுக்க முடியும்! என்று தன் இயலாமையை
சம்பந்தமே இல்லாமல் நம்மிடம் வெளிப்படுத்தியவர், இத மாதிரி ஏழ பாளைங்களெல்லாம்
எதையாவது கலப்படத்தத் தின்னுகிட்டு காய்ச்சல், வாந்தி பேதின்னு கவர்மெண்ட்
ஆஸ்பத்திரிக்கு அலைய வேண்டியதுதான்! என்று தன் ஆதங்கத்தையும் நம்மிடம்
கொட்டினார்… இது உண்மைதான்… இன்று ஃபுட் பாய்ஸனால் உடனடி வியாதிகள் மட்டுமின்றி
நீண்டகால நோய்கள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்தக் கொடுமையின் உச்சம்
மங்களகரமான மஞ்சளில்தான் ஆரம்பமாகிறது என்பது நமது சென்டிமெண்ட்டை மட்டுமல்ல
இந்த சமூகத்தின் மீ தான நம்பிக்கையையே தகர்க்கிற விஷயம்… நல்லது கெட்டது
எதுவென்றாலும் மளிகை லிஸ்ட் எழுதும் பொழுது மஞ்சளில்தான் ஆரம்பிப்போம்.
கலப்படமும் அதுபோல் மஞ்சளில்தான் ஆரம்பிக்கிறது… மஞ்சள் பொடியுடன் கலப்படம் செய்ய
லெட் க்ரோமேட் என்கிற கெமிக்கலைப் பயன்படுத்துகிறார்கள்… இது என்றாவது ஒரு நாள்
கிட்னியை செயலிழக்கச் செய்துவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை… எந்த மஞ்சள்
பொடியில் இது கலந்துள்ளது என்பதெல்லாம் எளிதில் கண்டுபிடிக்க முடியாத ஒன்று… முழு
மஞ்சளைவிட, மஞ்சள் பொடிதான் சமையலுக்கு எளிது என்று நாமும் எளிதாக ஆபத்தில்
சிக்கிக்கொள்கிறோம். _ கலப்படத்தின் அபாயத்திற்கான அலாரத்தை அடித்தார் அண்ணா
பல்கலைக்கழகத்தின் ஃபேகல்டி, ஃபுட் கன்சல்டண்ட் எஸ்.சந்தர்… மரணத்தின் பிள்ளையார்சுழி
மஞ்சள்தூளிலேயே ஆரம்பிக்கிறதென்றால் மற்ற பொருட்களின் நிலை எப்படி? மாநிலம்
முழுக்க நம் ஆராய்ச்சியைத் தொடர்ந்தபோது அடுத்தடுத்து பல பகீ ர் தகவல்கள்… பெட்ரோல்,
டீசல் போன்றவற்றின் தயாரிப்பில் கடைசியாகக் கிடைக்கக் கூடிய தாது எண்ணெய்தான்
மினரல் ஆயில். இந்த மினரல் ஆயிலுக்கு நிறமும் கிடையாது. மணமும் கிடையாது. இதை
அனைத்து வகையான எண்ணெயிலும் கலக்கலாம். ஒரு மாற்றத்தையும் காட்டாது. ஆனால்
சாப்பிட்டபின் முழுவதும் ஜீரணம் ஆகாமல் அப்படியே நம் குடல்களில் தங்கி குறிப்பிட்ட
காலத்திற்குப்பின் புற்றுநோயை உண்டாக்கிவிடும்… இதற்கு முக்கியக் காரணம், அந்த
எண்ணெயின் அதிகப்படியான அடர்த்தி…. காசுக்காக கலப்படம் செய்பவர்கள் அதன் இரசாயன
குணம் தெரியாது கலந்துவிடுகிறார்கள். ஆனால், ஐந்து ரூபாய்க்கும் பத்துரூபாய்க்கும்
எண்ணெய் வாங்கும் ஏழைகள் இந்த அபாயத்தை அறியாமல் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்!
என்கிறார் நெல்லை மாநகராட்சியின் சுகாதார உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம். கொஞ்சம்
மிளகுத் தண்ணரில்
ீ நிறைய பப்பாளி விதைகளை ஊறவைத்து, பின் அதை நன்றாகக்
காயவைத்து மிளகுடன் கலந்து மிளகு ரசத்தை பப்பாளி விதை ரசமாக மாற்றிவிடுகிறார்கள்.
இலவம் பிஞ்சு, மஞ்சநத்தி இலையைக் காயவைத்து வறுத்து அரைத்து டீத்தூளுடன்
கலக்கிறார்கள். ஏதோ உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, உணவு என்ற பெயரில் ஏழைகள் உதட்டில்
வைக்கும் ஒவ்வொன்றையும் இப்படி விஷமாக மாற்றிவிடுகின்றனர் கலப்படக்காரர்கள்.
கொஞ்சம் மனசாட்சியுள்ளவர்கள் மிளகுத் தூளுடன் பொட்டுக்கடலைத் தூளைக் கலப்பது;
சர்க்கரையையும் வெள்ளை ரவையையும் கலப்பது; கடலைப் பருப்புடன் வடைபருப்பைக்
கலப்பது என எடையை மட்டும் கூட்ட, விலை கூடுதலான பொருட்களுடன் விலை குறைந்த
ஆபத்தில்லாத பொருட்களை கலக்கின்றனர். துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்ற பருப்பு
வகைகளில் இரண்டு அயிட்டம் உண்டு. ஒன்றுக்குப் பெயர் சில்கி, இன்னொன்று செகண்ட்ஸ்.
இந்த சில்கி தான் ஒரிஜினல். எவ்வளவு நாள் வைத்திருந்தாலும் கெடாது. ஆனால் இந்த
செகண்ட்ஸ் பதப்படுத்தி, பாதுகாப்பாக வைத்திருக்கும் குடோன்களில் இருந்து வெளியே
எடுத்துவிட்டால் பத்துப் பதினைந்து நாட்களில் பூச்சியரித்து, புழுபூத்து, பவுடராகக் கொட்டும்.
கல்யாணவட்டுச்
ீ சமையல், ஓட்டல் என உடனடி பயன்பாட்டுக்கு இந்த செகண்ட்ஸைதான்
விலை குறைவு என்பதால் சரக்கு மாஸ்டர்கள், சமையல்காரர்கள் வாங்குவதுண்டு… காசு
கொடுத்து ஓட்டலுக்குச் சென்றாலும், அழைப்புக்காக கல்யாண விருந்துக்குச் சென்றாலும்
கலப்பட ஆபத்து இப்படியொரு ரூபத்தில் அங்கே காத்துக் கொண்டிருக்கும்! சரி, இந்தக்
கலப்படங்களையெல்லாம் கட்டுப்படுத்த சரியான சட்டமில்லையா? உணவுப் பாதுகாப்பு
மற்றும் தரம் குறித்த சட்டம் ஒன்றை மத்திய அரசு 2006_ல் இயற்றியுள்ளது. இதில் சில
முக்கியமான பொருட்களில் செய்யப்படுகின்ற கலப்படத்திற்காக ஆயுள் தண்டனை வரை
வழங்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்தச் சட்டமெல்லாம் நடைமுறைப்படுத்த முடியாமல்
கிடப்பில் கிடக்கிறது! வெளிநாடுகளில் அப்படியல்ல. லண்டனில் உள்ள நுகர்வோர் அகிலம்
என்கிற அமைப்பு உலகெங்கும் மக்கள் சாப்பிடக் கூடிய மோசமான ஐந்து உணவு வகைகளைக்
கண்டுபிடித்து மோசமான உணவுக்கான விருது! என்ற ஒன்றையே வழங்கி மக்களை
எச்சரிக்கிறது… அந்த வகையில் அண்மையில் அப்படி ஒரு விருது பெற்ற உணவு இந்தியாவில்
பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது… அதிலும் குறிப்பாக,
பாலில் அப்படியே ஊறவைத்து குழந்தைகளுக்கும் கொடுக்கலாம் என சிபாரிசு வேறு!
கலப்படத்தால் ஏழைகள் மட்டும்தான் சாக வேண்டுமா? வசதிபடைத்தவர்களும் கொஞ்சம்
பாதிக்கட்டும் என்ற தார்மீ க நியாயமோ என்னவோ? என்று அரசின் மெத்தனப் போக்கை
மெலிதாகச் சாடுகிறார், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின்
பொதுச் செயலாளர், வழக்கறிஞர் மார்ட்டின். பொதுவாகவே இந்தக் கலப்படக் குற்றங்கள்
அதிகம் நடைபெறுவது சென்னை, மதுரை, கோவை போன்ற பெரு நகரங்களில்தானாம்.
சென்னை மாநகராட்சி இது தொடர்பாக என்ன செய்து கொண்டிருக்கிறது? சென்னையைப்
பொறுத்தவரை பத்து மண்டலங்களிலும் கண்காணிப்பும் ஆய்வும் தொடர்ந்து நடைபெற்று
வருகின்றது. வட சென்னை பகுதிகளில்தான் கலப்படம் அதிகம் என்றாலும், பாக்கெட்டில்
அடைக்கப்பட்டு விற்கப்படும் தரமான பொருட்களைப் பார்த்து வாங்குவது, எல்லா இடத்திலும்
பாதுகாப்பானது. உணவுப் பொருட்களின் தயாரிப்புத் தேதிகளைப் பார்த்து வாங்குவது போன்ற
விழிப்புணர்வுப் பிரசாரங்களை தொடர்ந்து செய்து வருகிறோம். தவிர, கலப்படக்காரர்களைப்
பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவும் செய்கிறோம். அண்மைக்காலமாக கலப்படக் குற்றங்கள்
குறைந்துவருவதுதான் உண்மை. 2005_ல் நாங்கள் சோதனை யிட்ட 1169 இடங்களில் குற்றம்
செய்தவர்கள் 34 பேர். 2007 ல் 1083 இடங்களில் சோதனை செய்யப்பட்டதில் 27 பேர்மீ துதான்
தவறு இருந்தது… என்று சென்னை மாநகராட்சியின் கூடுதல் நல அதிகாரியான டாக்டர்
தங்கராஜன் புள்ளி விவரங்களைத் தருகிறார். குற்றங்கள் குறைவாகத் தெரிவதற்குக் காரணம்
கண்டுபிடிக்க முடியாத பல புதுப்புது யுக்திகளைக் கலப்படக்காரர்கள் கையாள்வதும் காரணம்
எனலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஏறிவிட்ட விலைவாசியினால் எந்தப் பொருளிலும் பத்து
முதல் இருபது சதவிகிதம் கலப்படம் செய்தாலே பல லட்சங்கள் பார்த்துவிடக்கூடிய வாய்ப்பு,
கலப்படத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது என்பது பொதுமக்களின் அபிப்பிராயம். இதற்கு
எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் அரசு மெத்தனம் காட்டினால் ஏழைகளின் ரசமும்
விஷமாகும் என்பது தவிர்க்க முடியாதது!.
பணம் செலுத்தி பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கும் அனைவரும் நுகர்வோர்
தான். 1986 வரை நுகர்வோர் பாதுகாப்புக்கென 1950 ம் ஆண்டைய மருந்துகள், ஒப்பனை
பொருட்கள் சட்டம், 1954 ம் ஆண்டைய உணவு கலப்பட தடுப்புச்சட்டம், 1955 ம்
ஆண்டைய இன்றியமையாமை பண்டங்கள் சட்டம், 1976 ம் ஆண்டைய எடை மற்றும்
அளவுகள் சட்டம் என்று பலதரப்பட்ட சட்டங்கள் இருந்தன.

இதே நேரத்தில் பாதிக்கப்பட்ட நுகர்வோர், குற்றம் புரிந்தோர் மீ து கொடுக்கும் புகாரின்


அடிப்படையில், இந்த சட்டங்கள் வாயிலாக அபராதம் மற்றும் தண்டனைகள் மட்டுமே
வழங்க முடிந்தது. ஆனால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நிவாரணமோ, நஷ்டஈடோ
வழங்கமுடியாத நிலை இருந்தது. இதனை நிவர்த்தி செய்து, பாதிக்கப்பட்ட
நுகர்வோருக்கு குறுகிய காலத்தில் (90 நாட்களில்) குறைந்த செலவில்
நிவாரணங்களையும், நஷ்ட ஈட்டையும் வழங்கும் வகையில் 1986 ம் ஆண்டு
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.

பாதிக்கப்படும் நுகர்வோரின் நலனை காக்க அரசு நிர்வாகத்துறை, நீதித்துறை, என இரு


வழிகளில் கட்டமைப்பு ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது. நிர்வாகத்துறையில்
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில், மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்,
மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் என 3 அடுக்கு முறையாக குழுக்கள்
அமைத்து செயல்படுத்தி வருகிறது. இதில் மாவட்ட குழுவிற்கு கலெக்டர்
தலைவராகவும், மாநில, தேசிய குழுக்களுக்கு அரசு செயலர்கள் தலைவர்களாகவும்
இருந்து செயல்பட்டு வருகின்றனர்.

நீதித்துறையை பொறுத்தவரை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம், மாநில


நுகர்வோர் ஆணையம், தேசிய நுகர்வோர் ஆணையம் என்று 3 அடுக்கு முறையாக
வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தி வருகிறது. மாவட்ட நுகர்வோர் குறைதீர்
மன்றத்திற்கு ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைவராகவும், மாநில நுகர்வோர்
ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைவராகவும், தேசிய
நுகர்வோர் ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைவராகவும்
உள்ளனர்.

அதேபோல் நுகர்வோர்கள் முறையற்ற வர்த்தகம், உணவு பொருட்கள் கலப்படம்,


போலி விளம்பரம், எடையளவு மோசடி மற்றும் சேவை குறைபாடு
போன்றவற்றிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க
வேண்டும். தாங்கள் வாங்கும் பொருட்களில் தயாரிப்பாளரின் பெயர், முகவரி,
உற்பத்திதேதி, காலாவதி தேதி, ஐஎஸ்ஐ முத்திரை மற்றும் அரசு நிர்ணயித்த விலை
உள்ளிட்ட விபரங்கள் அடங்கியுள்ளதா? என்பதை பரிசோதித்து தரமான பொருட்களை
தேர்வு செய்து வாங்க வேண்டும்.

போலியான, கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாறக்கூடாது. எனவே அன்றாட


வாழ்வில் நுகர்வோர் சேவையினை பெருமளவில் பெறும் பொதுமக்களாகிய நீங்கள்,
விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்கிறார் தமிழ்நாடு நுகர்வோர் மற்றும்
மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி தலைவர் வழக்கறிஞர் செல்வம்.
நுகர்வோர் விழிப்புணர்வை வலியுறுத்தி ஆண்டு தோறும் இந்தியாவில் டிசம்பர் 24
ஆம் தேதி தேதி நுகர்வோர் தினம் ( National Consumer Day, December 24 ) ஆக
அனுசரிக்கப்படுகிறது.
மக்களுக்கு விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் பாதுகாப்பானதாகவும்,
போதிய ஊட்டச்சத்துக்கள் அடங்கியதாகவும் உணவுப் பொருட்களுக்கு அறிவியல்
அடிப்படையிலான தரநிர்ணயங்களை உருவாக்குவதற்காகவும், அவற்றின் தயாரிப்பு,
சேமிப்பு, விநியோகம், விற்பனை, இறக்குமதி ஆகியவற்றை
ஒழுங்குபடுத்துவதற்காகவும் இந்த அமைப்பு, உருவாக்கப்பட்டுள்ளது.
உணவு பொருள் விற்பனையில் பேக்கேஜிங் , (PACKAGING) லேபில்  (LABEL) இடுதல்
இரண்டும் முக்கிய பங்கு வகிக்கின்றன .
உணவுப் பொருள்களை தயாரித்த பின்பு, உடனே அல்லது பல நாட்களுக்குப்பின்
உள்ளூரில்(அ) வெளியூரில் (அ ) வெளி நாட்டில் பல மைல்களுக்கு அப்பால்
விற்பனையாகும் வரை அது கெட்டுப் போகாமல் , காற்றுப் புகாதவாறு , ஒழுகாதவாறு
அதன் மணம் கெடாதவாறு, நுகர்வோரை சென்றடையச் செய்யும் முறைக்கு
பேக்கேஜிங் (PACKAGING) என்று பெயர்.
இதில் மொத்தமாக பேக் செய்வது, பல சிறிய பொட்டலங்களாக (POCKET) ஒன்று
கூட்டி பேக (PACK)் செய்வது என்று பல வகைகள் உண்டு.
கண்ணாடி, டின், அட்டைப்பெட்டி, பேப்பர், பாலிதீன் பைகள், துணிப்பைகள், சாக்கு
மூட்டைகள், என்று பேக்கேஜிங் பல வண்ணங்களில், பல வடிவங்களில், பல
அளவுகளில் சீல் செய்து, மூடி இட்டு, தைத்து, விற்பனைக்கு வரும்.
லேபிள்  (LABEL):
இந்த பேக்கேஜ்கள் மேல் ஒட்டப்பட்டிருக்கும், பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும், மூடியில்
எழுதப்பட்டிருக்கும் அனைத்து விபரங்களும், வாசகங்களும், எழுத்துக்களும்
வரிவடிவங்களும், முத்திரைகளும் 'லேபிள்' (LABEL) எனப்படும்.
இந்த லேபில்கள் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் இருக்கலாம். இதர பிற மொழிகளில்
கூடுதலாக இருக்கலாம். இதன் வடிவங்கள், நிறம், எழுத்துக்களின் அளவு, உயரம்
அகலம், எல்லாம் எவ்வளவு இருக்க வேண்டும் என்று தெளிவாக்கப்பட்டுள்ளது. இவை
அனைத்தும் தெளிவாக, குழப்பமின்றி, நுகர்வோரைத் திசை திருப்பா வண்ணம்,
ஏமாற்றாதவாறும் கண்ணுக்குப் புலப்படும் வகையிலும் இருத்தல் அவசியம்.
இவைகளில் ஏதேனும் குறை, வேறுபாடு, தெளிவற்று இருந்தால் அது "தவறான
குறியீடு" இட்டது (Misbranded) என்று கருதப்பட்டு தண்டனைக்குரிய குற்றமாகும். 
உணவு பொட்டலமாக்க என்ன அடிப்படை பேக்கேஜிங் (packaging) பின்பற்றப்பட
வேண்டும் ?
துருப்பிடித்த, உடைந்த எனாமல், ஈயம் பூசப்படாத பித்தளை ISI தரமில்லாத
அலுமினியம் பாத்திரங்களை உணவு உபயோகத்திற்குப் பயன்படுத்தக்கூடாது.
பாலிஎதிலின், ஸ்டைரீன் பாலிமர், பி.வி.சி, பாலிபுரோபிலீன், பெட், EAA, EVA, EMAA
ஆகிய பிளாஸ்டிக் பொருட்கள் ISI தரத்திற்கு உட்பட்டவையாக இருந்தால் மட்டுமே
உணவுப் பயன்பாட்டிற்கு உரியதாகும்.
உஷ்ணப்படுத்தப்பட்ட பால் / பால் பொருட்கள் தானியங்கி முறையில் பேக்
செய்யப்படவேண்டும்.
கண்ணாடிபாட்டில் போன்ற மீ ண்டும் பயன்படுத்தக்கூடியவை தவிர பிற பேக்கிங்
சாதனங்களை மீ ண்டும் உபயோகிக்க கூடாது.
பேக்கிங் செய்யப்பட்ட உடன் உரிய வெப்ப நிலையில் சேமிக்க வேண்டும் .
எண்ணெய் பேக் செய்ய பயன்படுத்தப்படும் டின் பிளேட்டுகள் ISI தரமுடையதாக
இருக்க வேண்டும்.
கேன்ட் (CANNED), பாட்டில்டு (BOTTLE) ப்ளக்சிபிள் பவுச் (FLEXIBLE POUCH)
ஆகியவற்றில் பழங்கள், காய்கறிப் பொருட்களை பேக் செய்ய வேண்டிய விபரங்கள்
BIS முறைப்படி இருத்தல் வேண்டும்.
கேன்ட்(CANNED) இறைச்சி பொருட்கள் லேக்கர் செய்யப்பட்டு கேன்களில் பேக்
செய்யப்பட வேண்டும்.
PDW / Mineral Water பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ண ீர் ISI தரப்படி இருத்தல்
அவசியம்.
லேபிளில் இருக்க வேண்டியவை:-
உணவுப் பொருளின் பெயர், வியாபாரப் பெயர். அடங்கியுள்ள பொருட்கள் .
தயாரிப்பாளரின் பெயர் மற்றும் முழு முகவரி
இறக்குமதி செய்யப்பட்ட உணவுக்கு இறக்குமதியாளர்களின் முகவரி
நிகர அளவு / எடை / எண்ணிக்கை.
பேட்ச் / லாட் / கோட் எண்.
பேக்செய்யப்பட்ட / தயாரித்த நாள் / மாதம், வருடம் .
சிறந்த பயன்பாட்டு நாள் / இறுதி உபயோக நாள் .
அடங்கியுள்ள சத்துக்களின் அளவு / 100gm / 100 ml
சைவ உணவுக் குறியீடு (பச்சை).

அசைவ உணவுக் குறியீடு (பழுப்பு).


உணவுச் சேர்க்கைகள் சேர்க்கப்பட்ட வண்ணங்கள், நறுமணம்.
இறக்குமதி செய்த உணவு தயாரான நாட்டின் பெயர் .
உபயோகிக்கும் முறை (விருப்பப்படி).
பாதுகாக்கும் முறை Storage Condition-(விருப்பப்படி).
வனஸ்பதி / பேக்கரி சார்ட்டனிங் பயன்படுத்தி இருந்தால் TFA உள்ளது என்று குறிப்பிட
வேண்டும்.
ஹெல்த் க்ளெய்ம் - Health Claim (விருப்பப்படி)
நீயுட்ரீஷன் க்ளெய்ம் - Nutrition Claim (கட்டாயம்)
இவைதவிர "சட்ட அளவியல் முறை" (Legal Metrology)
லேபிள்கள் பிரிண்ட் செய்யும் முறை:
லேபிள்களில் வெளியிடப்படும் வாசகங்கள் தெளிவாக, கண்ணுக்குப் புலப்படும்
வகையில், திசை திருப்பாமல், எளிமையாக இருக்க வேண்டும்.
லேபிளில் மிக முக்கிய பகுதி எனப்படுவது Principal Display Panel என்பதாகும்.
லேபிள்களில் பிரிண்ட் ஆகும் எண்கள் / எழுத்துக்களின் உயரம் இதர அளவுகள் உரிய
அளவில் இருக்க  வேண்டும்.
குழந்தைகள் உணவு (Infant Food). (12 மாதத்திற்குட்பட்ட குழந்தைகள் உணவு)
டின்களில் இருக்க வேண்டிய குறிப்புகள், எச்சரிக்கைகள், அளவுகள், வாசகங்கள்
பற்றிய விளக்கம் இருக்கவேண்டும்.
எண்ணெய் / கொழுப்பு பாக்கெட்களில் "கொலஸ்டிரால் எதிர்ப்பு" டபுள் ரீ பைன்ட்
போன்ற வாசகங்கள் இருக்கக்கூடாது.
உணவுக் கொழுப்பு / எண்ணெய் பாக்கெட்களில் "ஆர்ஜிமோன் எண்ணெய் கலப்படம்
இல்லை" என்ற வாசகம் இருக்க வேண்டும்.
"ரீபைண்ட் (உணவு எண்ணெய்) எண்ணெய்" பாக்கெட்டுகளில். குறிப்பிட்ட தாவர
எண்ணெயின் பெயர் இருக்க வேண்டும்.
இரண்டு எண்ணெய்கள் "அக்மார்க்" அனுமதியுடன் கலந்து பேக் செய்யப்பட்டால்
எண்ணெய்களின் அளவு மற்றும் பெயர் குறிப்பிட்ட ”Blended Oil” என்று கூற வேண்டும்.
உணவு வண்ணங்கள்; சேர்க்கப்பட்ட உணவு பாக்கெட்களில் "அனுமதிக்கப்பட்ட நிறம்
மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது" என குறிப்பிட வேண்டும்.
செறிவூட்டப்பட்ட பால் ஆகியவற்றில் சேர்க்கப்பட்ட உணவுச் சத்து சேர்க்கைகள்
குறிப்பிட வேண்டும்.
பட்டைகளில் காசியா / சின்னமன் என்று குறிப்பிட்டு விற்கவேண்டும்.
செறிவூட்டப்பட்ட பால், கொழுப்பு நீக்கிய பால், நிலைப்படுத்தப்பட்ட பால் ஆகியவை
அதன் பெயர் குறிப்பிட்டு விற்க வேண்டும்.
செயற்கை இனிப்பூட்டிகள் சேர்க்கப்பட்டால் அதன் பெயர் / குழந்தைகளுக்கு
ஏற்றதல்ல / for calorie conscious என்று குறிப்பிட வேண்டும்.
பான்மசாலா பாக்கெட் & விளம்பரங்களில் சுப்பாரி (பாக்கு) சுவைப்பது உடல்
நலத்துக்கு கேடு என்று குறிப்பிட வேண்டும்.
ஐஸ்கிரீம் / Dessert ஆகியவற்றில் பால் கொழுப்பு / உணவு எண்ணெய் / தாவரக்
கொழுப்பு அடங்கியது என்று குறிப்பிட வேண்டும்.
உப்பு பாக்கெட்களில் அயோடின் கலப்பதற்கு / இரும்பு சத்து கலப்பதற்கு / மிருக
உபயோகத்திற்கு / மருந்துக்கு / preservative க்கு என்று அதன் பயன்பாட்டிற்கு. உணவு
சத்துக்கள் சேர்க்கப்பட்ட உணவுகளின் மேல் செறிவூட்டப்பட்டது என்று குறிப்பிட
வேண்டும்.
லேபில்களின் மேல் உணவுச் சட்டம் விதிகள் பற்றிய குறிப்புகள் இருக்கக்கூடாது.
மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது என்று குறிப்பிடக்கூடாது.
குடிதண்ண ீர் பாட்டில்களின் மேல் மருத்துவ குணம் கொண்டது என்றோ, குறிப்பிட்ட
ஊர், இடத்தை குறிக்கும் வாசகங்களோ, படங்களோ, இருக்கக் கூடாது.
என்ன தகவல் லேபிளில் காட்டப்பட வேண்டும் ? ஏன்?
சிறந்த பயன்பாட்டு காலம் சேமிப்பு விதிமுறைகளின் கண்டிஷன்களின் படி
பாதுகாக்கப்பட்டால் உண்ண உபயோகிக்கத் தகுந்த நாள் / மாதத்தைக் குறிக்க
வேண்டும்.
லாட் எண் / கோட் எண் / பேட்ச் எண் - என்பவை உணவு தயாரிப்பு மற்றும்
விற்பனையில் உணவுப் பொருளை அடையாளம் காணப் பயன்படும் குறியீடுகளாகும்.
அசைவ உணவு:-
மிருகம், பறவை, மீ ன், முட்டை ஆகியவை பகுதியாகவோ முழுமையாகவோ
அடங்கியது. இதில் பால் மற்றும் பால் பொருட்கள் அடங்காது.
சைவ உணவு :-
அசைவ உணவில் அடங்காதவை அனைத்தும் சைவ உணவு ஆகும்.
  
“இறுதி உபயோக நாள்" (Expiry Date ) என்பது இந்த நாளுக்குப் பின் விற்கக்கூடாது
என்பதை குறிக்கும்.
இது இந்தியாவில் கடைபிடிக்கப்படும் முறையாகும்.
சர்வதேச அளவில் ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு  பொருட்களுக்கு பல்வேறு
குறியீடுகளை வைத்துள்ளன. லேபிளில் இடப்படும் குறியீடுகள் (Sign) என்பது
மறுசுழற்சி(Recycle), பாதுகாப்பு(Safety), தரம் (Quality) மற்றும் உபயோகமுறை(Usage)
போன்றவைகளை குறிப்பதாகும் இக்குறியீடுகள்(Sign) ஆயிரக்கணக்கில் உள்ளன.
அவற்றில் ஒரு சிலவற்றை அடுத்த பதிவில் பார்ப்போம்

பாக்கட் மற்றும் லேபிள் குறியீடுகள்(PACKING SIGNS)


நாம் வாங்கும் பொருட்களுக்கு உலக அளவில் வழங்கப்படும்
தரக்குறியீடுகள்,பாதுகாப்புக் குறியீடுகள் பற்றி சென்ற பதிவில் பார்த்தோம்.
முந்தைய பதிவை படிக்காதவர்கள்  இங்கே படிக்கலாம் அதன் தொடர்ச்சியாக
இன்னும் சில குறியீடுகளையும் அதை வழங்கும் நாடுகளையும் மிக
சுருக்கமாக பார்க்கலாம். 

படம் 1,2 பிரேசில் படம் 3 டென்மார்க் 

படம் 1.சிங்கப்பூர் படம் 2 ஹாங்காங் படம் 3 இஸ்ரேல் 

படம் 1. பிரான்ஸ் படம் 2. நெதர்லாந்து 

படம் 1 சுவிட்சர்லாந்து படம் 2.பெல்ஜியம் படம் 3. அர்ஜன்டைனா 

படம் 1.தைவான் படம் 2. கனடா 

படம் 1.சவுதி படம் 2.தென்ஆப்பிரிக்கா படம் 3.சுவடன்


ீ  

படம் 1.பின்லாந்து படம் 2. இத்தாலி படம் 3.ஆஸ்திரியா 


படம் 1.ரஷ்யா படம் 2. இங்கிலாந்து படம் 3. நார்வே 

இதுவரை பல்வேறு நாடுகள்


வழங்கும் தரக்குறியீடுகள்
(அ) தரமுத்திரைகள் பற்றி
பார்த்தோம்.

இனி, லேபிளின் மேல்


காணப்படும் இன்னும்
சில குறியீடுகளைப்
பார்க்கலாம்.

பொருட்களின் தன்மை
மற்றும் மறுசுழற்சி பற்றி
உணர்த்தும் பல்வேறு
அடையாளக் குறிகள்:

மேல் வரிசை
இடமிருந்து வலம்
படம் 1.மறுசுழற்சி
படம் 2.மறுசுழற்சி
படம் 3.மழை மற்றும் வெயில்
படாமல் பாதுகாக்கவும்
படம் 4.கண்ணாடி ஜாக்கிரதை
படம் 5.கவனமாக கையாளவும்
படம் 6.அம்புக்குறியிட்ட பகுதி
மேல் பக்கமாக வைக்கவும்
படம் 7.குறிப்பிட்ட வெப்ப நிலையில்  வைக்கவும்

கீ ழ் வரிசை
இடமிருந்து வலம்
படம் 1.கண்ணாடிப் பொருள்
சிதறாமல் போடவும்
படம் 2.மின்சாதனப் பொருள்
குப்பையில் போடாதே
படம் 3.வெயிலில் வைக்காதே
படம் 4.உணவகம்
படம் 5.தகவல் குறிப்பு
படம் 6.மருந்து கலக்கும் முறை
படம் 7.காலாவதி தேதி

படம் 1.வனபாதுகாப்பு குறியீடு.


Forest Stewardship Council (FSC) 
படம் 2.கண்ணாடி மறுசுழற்சி.
படம் 3.ஐரோப்பிய நாடுகளின்
மறுசுழற்சி குறியீடு.

படம் 1.காகித மறுசுழற்ச்சி


National Association of Paper Merchants (NAPM)
படம் 2.அலுமினிய மறுசுழற்ச்சி
படம் 3.பயோ பிளாஸ்டிக்

முதலில் உள்ள படம்


   இந்தப் பொருளை மறுசுழற்சி
செய்து பயன்படுத்தலாம்
இரண்டாவது படம்
    கழிவுப் பொருளின் தரம்
அறிந்து  சிதறாமல் போடவும்
(உதா:கண்ணாடி)
மூன்றாவது படம்
   பொருளை கவனமாக
கையாள உணர்த்துகிறது.
நான்காவது படம்
    மறுசுழற்சியின் ஒன்றாவது
வகையைக் குறிக்கிறது (PET )

மேல் வரிசை:
படம் 1.
வெடிக்கும்தன்மையுடையது
படம் 2.தீ அபாயம் 
படம் 3.தீ அபாயம் (ஆக்ஸைட்)
படம் 4.எரிவாயு நிரப்பப்பட்டது
படம் 5.அரிப்பு தன்மை
கீ ழ் வரிசை:
படம் 1.உயிர் அபாயம்
படம் 2.தோல் அரிப்புத் தன்மை
படம் 3.தோல் எரிச்சல் தன்மை
படம் 4.சுவாசக் கோளாறு
படம் 5.சுற்றுச்சூழல் தீங்கு

படம் 1.மின் தாக்குதல்


அபாயம்
படம் 2.உயிரியல் இன்னல்கள்
படம் 3.வெடிக்கும் அபாயம்

படம் 1.பதிப்புரிமை பெற்றது


(Copyright)
படம் 2.பதிவு செய்யப்பட்ட
வணிகக் குறியீடு
(Registred Trademark)
படம் 3.பதிவு செய்யப்படாத
வணிகக் குறியீடு

பாக்கெட் முத்திரைகள் மற்றும் குறியீடுகள் (PACKING SYMBOL AND


SIGNS )
நாம் அன்றாடம் பல
வகையான பொருட்களை
வாங்கி உபயோகிக்கிறோம்.
மின் சாதனப் பொருட்கள்,
உணவுப் பொருட்கள்,
குடிநீர் பாட்டில்கள்,செல்போன்,
மெமரிகார்ட்,பென்டிரைவ்,
உடுத்தும் துணி வரை
ஏராளமான பொருட்களை 
நாம்  கடைக்குச் சென்று 
வாங்குகிறோம்.அவை
உள்நாட்டில்
தயாரிக்கப்பட்டவையாகவோ
(அ) வெளிநாட்டில்
தயாரிக்கப்பட்டவையாகவோ
இருக்கலாம். பேக்
(PACK) செய்யப்பட்ட
அப்பொருள்களின் அட்டைப்பெட்டி
அல்லது டப்பாக்களின் (TIN)
மீ து பல்வேறு
குறியீடுகள் (SYMBOL or SIGN)
இருப்பதை பார்த்திருப்போம்.
அக்குறியீடுகள்
எதைக்குறிக்கின்றன.அவை
அப்பொருளின்
தரம், உபயோகமுறை,
உபயோகித்த பின்
அப்பொருளை
என்ன செய்ய வேண்டும்
என்பன போன்ற
விளக்கங்களையே குறிக்கிறது.
இத்தகைய குறியீடுகள்
ஆயிரக்கணக்கில்
உள்ளன.

இவை யாரால் ஏன் தரப்படுகிறது?


ஒரு பொருளை உற்பத்தி செய்பவர் தங்கள் நிறுவனத்தில்
தயாரிக்கப்படும் பொருட்கள் தரமானதுதானா என்பதை 
நுகர்வாளருக்கு எப்படி தெரிவிப்பது? அப்பொருளைப் பற்றி
அவர் விளம்பரம் செய்யலாம் ஆனால் விளம்பரத்தின் மூலம்
இவர் சொல்வதை நுகர்வாளர் நம்பலாம் அல்லது நம்பாமலும்
போகலாம்.எனவே உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும்
இடையில் ஒரு நபர் தேவைபடுகிறார் .அவர்தான் இந்த
சான்றிதழ் (குறியீடு) வழங்கும் நிறுவனம் ஆகும்.
இந்நிறுவனங்கள் வழங்கும் சான்றிதழ்களே நமக்கு குறியீடுகள்
(SIGN & SYMBOL) மூலம்  உணர்த்தப்படுகின்றது.
அவை  முக்கியமாக
•தயாரிப்பு தரம்•
( Product Quality )
•தர நிர்வாக முறை•
(Quality Management
System)
•சுற்றுசூழல் மேலாண்மை.
Environment Management
•பாதுகாப்பு முறை•
(Safety System )
போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

அவற்றில் ஒரு சிலவற்றை இப்போது


காண்போம்.
ஒவ்வொரு நாடும்
தரநிர்ணய முறைக்கு
தங்களுக்கென
தனித்தனி கோட்பாடுகளைக்
கொண்டுள்ளன.
    உதாரணமாக இந்தியா
"இந்திய தர நிர்ணய
ஆணையம் "
(BUREAU OF INDIAN
STANDARDS)
என்ற அமைப்பின் மூலம்
சான்றிதழ்கள் வழங்குகிறது.
அவைகளை முதலில்
பார்ப்போம்.
இந்தியாவில் வழங்கப்படும்
தரச்சான்று
மற்றும் அதன் குறியீடுகள்
1. ISI
இந்திய தரக்கட்டுப்பாட்டு மையம் (INDIAN STANDARD
INSTITUTE ) தொழிலக உற்பத்திப் பொருட்கள் (Industrial Products )
2. BIS HALLMARK
தங்கம் மற்றும் வெள்ளி (GOLD and SILVER )
3.FSSAI
பாதுகாப்பான உணவுப்பொருள் (Food Safety and Standards Authority
of India)
4.AGMARK
அனைத்து விவசாய பொருட்கள் (Agricultural Products)
5.SILK MARK
தூய பட்டு (PURE OF SILK)
6.INDIA ORGANIC
ஆர்கானிக் (உயிர்ம) பொருட்கள் (Non Chemical)
7.FPO
பழரசப் பொருட்கள் (Food Processed Order)
8.NON POLLUTING VEHICLE
மாசுக் கட்டுப்பாடுடைய வாகனம்
9.ECO MARK
சுற்றுச் சூழலியல. மேலும்,
•AYUSH MARK
இயற்கை நல மருந்துகள்(Herbal Products)
•TOXICITY MARKS
நச்சுத் தன்மையுடைய பொருள் என பல தரச்சான்றுகளை
வழங்குகிறது. இவ்வமைப்பின் மூலம் வழங்கப்படும் 
முத்திரையானது (SIGN) நுகர்வோர்களுக்கான இந்தியப்
பொருட்களின் தர உத்திரவாதத்தை வழங்குகிறது.
உலக நாடுகள்,
NATIONAL INSTRUMENTS
(NI) எனப்படும்
மின் 
(Electrical),
மின்னணு 
(Electronic),
மின் காந்ந
(Electromagnetic)
மற்றும்
வெடிக்கும்
(Explosives)
தன்மையுடைய
பொருட்களுக்கான தர
உத்திரவாதங்கள்
(Certificate)
பல அடிப்படைகளில்
வழங்கப்படுகின்றன.
அவற்றில் சில :

  EMC
(ElectroMagnetic Compatibility ) மின்காந்த
ஒத்திசைவு 
EMI
(Electromagnetic Interference ) மின்காந்த குறுக்கீ டு
QMS/EMS
(Quality/Environmental Management Systems) தரம்
மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை
போன்றவை குறிப்பிடத்தக்கவை. அவற்றை
வழங்கும் நாடுகளும் அதன் குறியீடுகளையும்
(Sign) பார்ப்போம் பின்வரும் படத்தைப்
பாருங்கள்

(இவை நமது நாட்டின்


ISI முத்திரை போன்றது)
FCC: அமெரிக்கா
FEDERAL COMMUNICATION
COMMISSION
(American EMI)
CE: ஐரோப்பா
EUROPEAN CONFORMITY
(European Union EMC and
Safety)
    RoHS: ஐரோப்பா
(Restriction Of
the use of certain
Hazardous Substances)

கீ ழே உள்ள படத்தைப் பார்க்கலாம்

    VCCI: ஜப்பான்


(Voluntary Control
Council of
Interference)
    CSA: கனடா
(Canadian Standards
Association)
    EX: ஐரோப்பா
EXPLOSIVES
(European Union Hazards Location)
    NATA: ஆஸ்திரேலியா
(National Association
of interference
Testing Authority)
    ! or ESUI : பொது
(Global Sign) தகவல்
(அ) குறிப்புகள்
(Essential Safety &
Usage Information)
  IC(or)CANADA : கனடா
(Canada Industries)

      UL: அமெரிக்கா (Underwriters Laboratory) North


American Hazardous Locations and Product (Safety)
     GS : ஜெர்மன்
German Safety
      Rounded (e) and Number: சீனா
China RoHS
(Restriction Of the use of certain Hazardous
Substances) (இதில் உள்ள எண்கள் வருடத்தை
குறிக்கும்) Number Stands In Year
      KCC: கொரியா
(Korea Communications Commissions)
     CCC :சீனா
China Compulsory Certificate (Safety)
   RCM/C-Tick:ஆஸ்திரேலியா Australian/New
Zealand EMC (Electronic Products)
      PSE :ஜப்பான்
(Product Safety Electrical Appliances)
      Demko (or) VDE : ஐரோப்பா-ஜெர்மனி (Verband
Duetscher Elektrotechniker) European Union Product
Safety Certification
      A-Tick :ஆஸ்திரேலியா Australian/New Zealand
EMC (Communication Products)

       ISO 9001:சர்வதேச அமைப்பு INTERNATIONAL


ORGANIZATION FOR STANDARDIZATION.
சர்வதேச தர நிர்வாக முறைமைக்கான
சான்றிதழ். தரமான உற்பத்தி முதல்
விற்பனைக்குப்பின் சேவை வரை இதில்
அடங்கும்
       ISO14001 :சர்வதேச அமைப்பு
INTERNATIONAL ORGANIZATION FOR
STANDARDIZATION. சர்வதேச சுற்றுச் சூழல்
முறைமைக்கான சான்றிதழ்
       IEC : சர்வதேச ஆய்வக  அமைப்பு
(INTERNATIONAL ELECTROMAGNETIC
COMPLIANCE)  ஆய்வக அங்கீ காரம்
பொது        :  IEC
ஐரோப்பா   :  EN
அமெரிக்கா :  UL
கனடா        :  CSA
WEEE:குப்பைத் தொட்டியில் பெருக்கல்
குறியிடப்பட்டது (Waste Electrical and Electronics
Equipment ) கழிவு விதிமுறையை பின்பற்ற
அறிவுறுத்துகிறது.
இன்னும் சிலவற்றைப் பார்ப்போம்.
கடல் வழி செல்லும் பொருள்களுக்கான தர
உத்திரவாதம்
DNV,RINA,LR,VERITAS போன்றவை. (Marine
Approval இவை வெவ்வேறு நாடுகளின்
குறியீடுகளாகும்)
ரேடியோ அலைவரிசை தகவல் தொடர்பு
அலைவரிசை போன்றவைகளினால் ஏற்படும்
பாதிப்பு குறித்த தகவல் (எழுத்து) குறியீடுகள்:
    ERM : Electromagnetic compatibility and Radio
spectrum Matters
     SRD :
Short Range Devices (இதை அதிகமாக
செல்போன்களில் காணலாம் )

You might also like