Professional Documents
Culture Documents
Tamil Project
Tamil Project
மட்பாண்டங்கள்:
மட்பாண்டங்கள், கைகளால் வடிவமைத்தல் அல்லது குயவரின் சக்கரம் "வீசுதல்"
முறைகளைப் பயன்படுத்தி வடிவமைக்கப்படுகின்றன. நீர், தூர்வையாகபட்ட மண்
சேர்த்துக் குழைக்கப்பட்ட களி மண்ணை வேண்டிய உருவத்தில் செய்து, அதனை
சூளையில் இட்டு உயர்ந்த வெப்பநிலைக்குச் சூடாக்கி மட்பாண்டங்கள்
உருவாக்கப்படுகின்றன.
மூங்கில் கூடைகள்:
மூங்கில் ஓலைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் கூடை, முறம், தட்டு, தட்டி
போன்ற பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. அந்த காலத்தில் வீடுகளில் மூங்கில்
கூடைகளின் பயன்பாடு வாழ்வியலோடு ஒன்றியதாக இருந்தது. நெகிழி எனப்படும்
பிளாஸ்டிக் பைகளுக்குப் பதில் மூங்கில் கூடைகளைப் பயன்படுத்துவது
சுற்றுச்சூழலுக்கு நல்லது.
கோரைப்பாய்கள்:
கோரைப் பாய் என்பது கோரை எனும் ஒரு தாவரத்தில் செய்யப்பட்ட பாய் ஆகும்.
கரும்பு போலவே இருக்கும் இந்த தாவரம், ஆறு மாதம் வளர்ந்தவுடன் அறுவடை
செய்து, பிறகு இரண்டாக கிழித்து காயவைத்து அதை நெய்வார்கள்.
பட்டு புடவை:
பிரம்பு பொருட்கள்:
பிரம்பு நெகிழ்ச்சித்தன்மையான வன்தண்டைக் கொண்ட பல்லாண்டுத்
தாவரமாகும். உறுதிமிக்க பிரம்பு ஊன்றுகோல், வீட்டுக் கூரை, கதிரை, புத்தக
அலுமாரி, ஆகியவை தயாரிக்கப் பயன்படுத்தப் படுகின்றன. வளையும் தன்மையான
பிரம்பு, தண்டனை வழங்கும் கோலாகவும் பூச்சாடி போன்றவைகள் தயாரிக்கவும்
பயன்படுத்தப்படுகின்றது.
மண் பொம்மைகள்: