Professional Documents
Culture Documents
November 06
November 06
vijayabharatham.org
2
உலகில் எந்த சக்தியாலும் பாரதத்தை அச்சுறுத்த முடியாது
உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை
அச்சுறுத்த முடியாது என்று பாதுகாப்புத்
துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
மத்திய பிரதேச கனேட்டா கிராமத்தில்
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
vijayabharatham.org பேசியதாவது: இந்தியாவை காங்கிரஸ்
ஆட்சி செய்தப�ோது வெளிநாடுகளில் உள்ள மக்கள், இந்தியாவை
ஒரு வலுவிழந்த நாடாக பார்த்தனர். ஆனால் பாஜக தலைமையில்
ஆட்சி அமைந்த பின்னர் நாடு வலிமையடைந்து வருகிறது. பிரதமர்
ம�ோடியின் நல்லாட்சியால் நாடு மிகப்பெரிய சக்தியாக வளர்ந்துள்ளது.
இந்தியாவின் பெருமை உலகம் முழுவதும் உயர்ந்து வருகிறது.
காங்கிரஸ் ஆட்சியின் ப�ோது வெளிநாடுகளில் உள்ளவர்கள் இந்தியா
பலவீனமான நாடு என்று கூறுவார்கள். அப்போது நாம் கூறிய
வார்த்தைகளை உலக நாடுகள் பெரிதாக எடுத்துக் க�ொள்ளவில்லை.
ஆனால் நிலைமை இப்போது மாறிவிட்டது. நாம் வேகமாக
வலிமையடைந்து வருகிற�ோம். சர்வதேச அமைப்புகளில் நாம்
பங்கேற்கும் கூட்டங்களில் நாம் கூறும் வார்த்தைகளை கேட்கின்றனர்.
யாராவது, கீழ்த்தரமான செயலை செய்ய முயன்றால், அவர்களை
எல்லையின் இந்தப் பக்கத்திலும், தேவைப்பட்டால் மறுபக்கத்துக்கும்
சென்று இந்தியாவால் அழிக்க முடியும். உலகில் எந்த சக்தியாலும்
இந்தியாவை அச்சுறுத்த முடியாது. பிந்த் மாவட்டத்தில் 5 குடும்பங்களில்
ஒருவர் ராணுவத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார். அவர்களது
சேவையை நாடு ப�ோற்றும். அவர்களது குடும்பங்களுக்கு நான்
வாழ்த்து தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
3
மேலும், அவர் கூறியிருப்பதாவது: '' இரு நாடுகளுக்கும்
இடையிலான வர்த்தகம் 2022-23 இல் 8.16 பில்லியன் டாலராக
இருந்தது. இந்தியாவின் சந்தை பெரியது. அதிக வாய்ப்புகளை
வழங்குவதால் இந்த நடவடிக்கை கனடாவை மேலும் பாதிக்கும்.
ஒப்பந்தம் த�ொடர்பாக இங்கிலாந்துடனான பேச்சுவார்த்தை சீராக
முன்னேறி வருகிறது'' என்றார்.
6
'தமிழகத்தில் இயற்கை வளங்கள்
கட்டுப்பாடின்றி க�ொள்ளை'
"தமிழகத்தின் அனைத்து
மாவட்டங்களிலும் ஆற்று
மணல், சவுடு மண் என
அனைத்து வகையான இயற்கை
வளங்களும் கட்டுப்பாடின்றி
க�ொள்ளை ய டி க ்க ப ்பட் டு
வருகின்றன. அதை உணர்ந்து vijayabharatham.org
தமிழகத்துக்கு மாபெரும் கேடாக மாறி வரும் மணல் க�ொள்ளையை
இரும்புக்கரம் க�ொண்டு அடக்க தமிழக அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
தெரிவித்துள்ளார்.
இதுத�ொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள
பதிவில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் சின்ன த�ோட்டாளம்
என்ற இடத்தில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவல்துறை
சிறப்பு சார் ஆய்வாளர் மணவாளன் என்பவரை மணல் கடத்தல்
கும்பலைச் சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கி, க�ொலை செய்ய
முயன்றுள்ளனர். வேலூர் மாவட்டத்தின் அணைக்கட்டு பகுதியில்
ப�ொன்னையாற்றிலிருந்து மணல் க�ொள்ளையடிக்கப்படுவதை
படம் பிடித்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரும், சமூக ஆர்வலருமான
உமாபதி என்பவரை மணல் கடத்தல் கும்பல் அரிவாளால் வெட்டி
காயப்படுத்தியுள்ளது.
ஒரே மாவட்டத்தில், ஒரே இரவில் நிகழ்ந்துள்ள இரு தாக்குதல்களும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இயற்கை வளங்களை பாதுகாக்க
முயலும் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் மீது நடத்தப்படும்
தாக்குதல்கள் அதிகரித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் பகுதியில் மணல்
கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் சேகர் என்பவர்
இரு நாட்களுக்கு முன் தாக்கப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம்
ஆயக்குடி பகுதியில் கடந்த இரு வாரங்களுக்கு மணல் க�ொள்ளையை
தடுத்த ஆயக்குடி கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி உள்ளிட்ட
நான்கு அதிகாரிகளை வாகனங்களை ஏற்றி க�ொலை செய்ய முயற்சி
நடந்தது. இந்த இரு நிகழ்வுகளால் ஏற்பட்ட பதற்றம் விலகும் முன்பே
மணல் க�ொள்ளையை தடுக்க முயன்றவர்கள் மீது அடுத்த தாக்குதல்
நடத்தப்பட்டிருப்பதிலிருந்தே தமிழகத்தில் மணல் க�ொள்ளை எந்த
அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து க�ொள்ள முடியும்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் மணல் க�ொள்ளைக்கு
எதிராக செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அவரது
அலுவலகத்தில் சில மாதங்களுக்கு முன் வெட்டிக் க�ொல்லப்பட்டது,
சேலம் மாவட்டம் மானாத்தாள் பகுதியில் மணல் கடத்தலில்
ஈடுபட்டவர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த கிராம
நிர்வாக அலுவலரை வெட்ட அரிவாளுடன் துரத்தியது என மணல்
க�ொள்ளையர்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து
வருவது ஆர�ோக்கியமானதாக தெரியவில்லை. தடி எடுத்தவர்கள்
எல்லாம் தண்டல் காரர்கள் என்பார்கள்... ஆனால், இப்போது
தண்டல்காரர்கள் எல்லாம் தடி எடுக்கத் த�ொடங்கியிருக்கிறார்கள்.
உடனடியாக இது கட்டுப்படுத்தப்படாவிட்டால் தமிழகத்தின் சட்டம்
- ஒழுங்கை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்று அவர்
பதிவிட்டுள்ளார்.
7
தமிழகத்தில் 6 நாட்களுக்குப் பரவலாக
மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் 6 நாட்களுக்கு
பரவலாக மழையும், ஒரு சில
இடங்களில் கனமழையும் பெய்ய
வாய்ப்பு உள்ளதாக சென்னை
வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது. இது குறித்து vijayabharatham.org
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்:
வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஒரு வளிமண்டல
மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
நவம்பர் 6 ம் தேதி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்
பகுதிகளில் பெரும்பலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய
லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி,
க�ோயம்புத்தூர், ஈர�ோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி,
சேலம், நாமக்கல், கரூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில்
ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நவ.7 ஆம் தேதி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்
பெரும்பலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்
மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, க�ோயம்புத்தூர்,
ஈர�ோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம்,
நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை,
ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில்
ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
vijayabharatham.org
vijayabharatham.org
vijayabharatham.org