முத்தாய்ப்பானவர் திருமதி. வீரப்பன் லெட்சுமி அவர்கள் ஆவார் தமிழ்இலக்கியத்தில் முதுகலை பட்டதாரியான இவர்உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவி. வானொலி, தொலைக்காட்சிஊடகங்களில்தம்நாடகங்களையும், நடைபயில விட்டு வெற்றி பெற்றவர். வாசகர் வாசிப்பில் புத்தொளி பாய்ச்சும் இவரது எழுத்துகள் ஒவ்வொன்றும் தமிழுக்குப் புதுவரவு. இவரது எழுத்துகளால் தமிழ்ப் படைப்புக் களம் விரிவடைகிறது. இவரது தமிழ்த்திறம்ஊற்றம்பெறுகிறது. கதை சொல்லிகள் தமிழில் இன்னும் நிறைய பேர் வரவேண்டும். தமிழர்களின் உள்ளம் அதனால் விரிவடைய வேண்டும். தமிழ்ப் படைப்புலகம் வழியே புது மனிதம் மலர வேண்டும். அதற்கான வாயில்களை வீரப்பன் லெட்சுமி போன்றோரின் படைப்புகள் ஓசைபடாமல் திறந்து விட்டிருப்பதை வாசகர்கள் எளிதில் உய்ந்துணர முடியும் என்னும் முன்மொழிதலுடன் இப்படைப்பை வாசகர்களிடையே வழங்கு கிறோம். படித்து இன்புறுவதுடன் தாங்களே படைப்பாளிகளாக மாறுவதற்கு வீரப்பன் லெட்சுமி போன்றோரின் எழுத்துக்கள் கைவிளக்காய் - கை காட்டியாய் வாசகர்களுக்குப் பயன் நல்க வேண்டும் என்பது எம் அவா. தமிழ்க் கலை பதிப்பகத்தின் வழியே இந்நூலை வெளியிடுவதற்கு அனுமதியளித்த நூலாசிரியருக்கு எங்கள்என்றும் உரித்து.