விருதுநகர் மாவட்ட தொல்லியல் மற்றும் வரலாற்றுக் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கைத் தொடர்ந்து வெம்பக்கோட்டை அகழாய்வு உட்பட பல தொல்லியல் மற்றும் சுற்றுலா சார்ந்த கண்காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
மாவட்ட ஆட்சித் தலைவரின்
அறிவுறுத்தலின்படி கண்காட்சி ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு வருகிற திங்கட்கிழமை வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர். வருகிற நவ.4 -சனி மற்றும் நவ.5 ஞாயிற்றுக்கிழமைகளில் பொது மக்களின் பார்வைக்காக கண்காட்சி திறந்து வைக்கப்படவுள்ளன.
எனவே இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள்
அனைவரும் பயன்படுத்திக் கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் இப்படிக்கு முதல்வர் முனைவர் த.வெங்கடேஸ்வரன்