Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

தலை நிமிர செய்தார்

என்னை உயர்த்திவிட்டார்
இனி நான் கலங்குவதில்லையே
பெலன் அடைய செய்தார்
என்னை மகிழ செய்தார்
இனி என்றும் பயமெனக்கில்லையே

கிருபையால் எல்லாம் அருளினார்


கிருபையால் என்னை உயர்த்தினார் - 2

நம் கர்த்தர் நல்லவரே - 2 - தலை நிமிர

சிலுவையில் எந்தன் சிறுமையை


சிதைத்திட்டார் இராஜனே
வெறுமையை வேரோடு அறுத்திட்டார்
வெற்றியின் தேவனே
கைகளில் பாய்ந்த ஆணியால்
என் கரம் பிடித்தாரே
இரத்தம் பாய்ந்த தம் காலினால்
என்னை நடக்க செய்தாரே

நம் கர்த்தர் நல்லவரே-2

குகைதனில் ஒளிந்து கிடந்தேனே


அரண்மனை தந்தாரே
வெட்கத்தை அவர் மாற்றினார்
நம்பினேன் விடுவித்தார்
எதிரிகள் முன் உயர்த்தினார்
என் தலையை நிமிர செய்தார்
உத்தமம் அவர் வார்த்தைகள்
செய்கைகள் சத்தியம்

நம் கர்த்தர் நல்லவரே - 2 - தலை நிமிர

சிறுமையும் எளிமையுமான என் மேல்


நினைவாய் இருப்பவரே
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை வாஞ்சிக்கிறேன் வாஞ்சிக்கிறேன்

கர்த்தாவே நான் நிலையற்றவன்


என் கால்களை ஸ்திரப்படுத்தும்
கர்த்தாவே நான் நிலையற்றவன்
என் கால்களை ஸ்திரப்படுத்தும்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்

தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்


தழுவி என்னை தாங்குமே
தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்
தழுவி என்னை தாங்குமே
தயங்கிடும் நேரத்தில்
தேவா உந்தன் தோலில் சுமந்திடுமே
தயங்கிடும் நேரத்தில்
தேவா உந்தன் தோலில் சுமந்திடுமே

உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க


தேவா உம் பெலன் தாருமே
உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க
தேவா உம் பெலன் தாருமே
உயிருள்ளவரையும் உமக்காக வாழும்
உணர்வினை உருவாக்குமே
உயிருள்ளவரையும் உமக்காக வாழும்
உணர்வினை உருவாக்குமே

You might also like