நீரிழிவு நோயை பொறுத்தவரை நித்திய கல்யாணி பல்வேறு நன்மைகளை
அளிக்கிறது. ஆனால் அவற்றை எப்படி உண்பது அல்லது அதை உணவாக
பயன்படுத்துவதில் பலருக்கு ஐயம் இருக்கலாம். அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என இப்போது பார்க்கலாம்.
நித்திய கல்யாணியின் இலைகளை உலர்த்தி, அவற்றை அரைத்து தூள்
செய்ய வேண்டும். பிறகு இந்த தூளை காற்று புகாத இறுக்கமான கொள்கலனில் வைக்க வேண்டும். இந்த பொடியை தினமும் தண்ணீர் அல்லது பழச்சாறில் ஒரு டீஸ்பூன் போட்டு குடிக்கலாம். இந்த தூள் கசப்பாக இருக்கும் என்பதால் பழச்சாறு போன்ற இனிப்பு பானங்களில் கலந்து குடிப்பது நல்லது.
நமது உடலின் இரத்த சர்க்கரை அளவை குறைக்க தினமும் நித்திய
கல்யாணியை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு இந்த தாவரத்தின் மூன்று முதல் நான்கு இலைகளை எடுத்து மென்று சாப்பிடலாம். இதன் மூலம் நேரடியாகவே இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இது உதவுகிறது.
நித்திய கல்யாணியில் உள்ள இளஞ்சிவப்பு நிற பூக்களை எடுத்து ஒரு கப்
தண்ணீரில் கொதிக்க வைக்கவும். பிறகு அந்த தண்ணீரை வடிக்கட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் அதை குடிக்கவும்.
இவற்றை பயன்படுத்துவதற்கு முன்பு சான்றளிக்கப்பட்ட ஆயுர்வேத
நிபுணர்களிடம் உங்கள் உடல் நிலை மற்றும் சர்க்கரை அளவு குறித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள். மேலும் உங்கள் உடல் நிலைக்கு இந்த மூலிகையை பயன்படுத்தலாமா என்பதையும் கேட்டுக்கொள்ளுங்கள்.