Professional Documents
Culture Documents
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா
நெல்லையப்பர்
கோயில்
தமிழ்நாட்டின் திருநெல்வேலி
மாவட்டத்திலுள்ள ஒரு சிவன்
கோயில்
திருநெல்வேலி நெல்லையப்பர்
கோயில் (Nellaiappar Temple)
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்
பாண்டிய நாட்டுத் தலங்களில்
ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற
இத்தலம் திருநெல்வேலி நகரில்
அமைந்துள்ளது. இத்தலத்தை பற்றி
வழங்கும் நூல்கள் மூன்றாம்
திருமுறை, ஏழாம் திருமுறை மற்றும்
பன்னிரெண்டாம் திருமுறை,
திருவிளையாடல் புராணம் முதலிய
நூல்களாகும். பொ.ஊ. ஏழாம்
நூற்றாண்டில் வாழ்ந்து சைவ
சமயத்தை வளர்த்த
திருஞானசம்பந்த பெருமான்
திருநெல்வேலி என்ற பெயருடன்
"திருநெல்வேலிப் பதிகம்"
பாடியிருப்பதால் அதற்கு முன்பே
"திருநெல்வேலி" என்று
வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
இதனால் இத்தலம் ஏழாம்
நூற்றாண்டுக்கு முன்பே சிறப்பு
பெற்றது என விளங்குகிறது. தமிழ்
நாட்டில், முக்கியமான ஐந்து
அம்பலங்களில், இரண்டு
அம்பலங்கள் திருநெல்வேலி
மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ
நெல்லையப்பர் காந்திமதி ஆலயம்
தாமிர அம்பலமாகவும், ஸ்ரீ குற்றால
நாதர் ஆலயம் சித்திர
அம்பலமாகவும் உள்ளன.
தேவாரம் பாடல் பெற்ற
திருநெல்வேலி
நெல்லையப்பர் கோயில்
பெயர்
புராண வேணுவனம்,
பெயர்(கள்): நெல்வேலி,
நெல்லூர், சாலி
வேலி, சாலிநகர்,
சாலிவாடி,
பிரமவிருந்தபுரம்,
தாருகாவனம்[1]
பெயர்: திருநெல்வேலி
நெல்லையப்பர்
கோயில்
அமைவிடம்
ஊர்: திருநெல்வேலி
மாவட்டம்: திருநெல்வேலி
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்: நெல்லையப்பர் (வேண்ட
வளர்ந்தநாதர்,வேணுவனநாத
வேய்முத்தநாதர், நெல்வேலி
நாதர், சாலிவாடீசர், வேணுவன
மகாலிங்கேஸ்வரர்,
வேணுவனேஸ்வரர்)
தாயார்: காந்திமதியம்மை,
வடிவுடையம்மை
தல விருட்சம்: மூங்கில்
தீர்த்தம்: பொற்றாமரைக்குளம்
(ஸ்வர்ண புஷ்கரணி
கருமாரித் தீர்த்தம்,
சிந்துபூந்துறை
ஆகமம்: காரண ஆகமம்,
காமீக ஆகமம்
சிறப்பு மகா சிவராத்திரி,
திருவிழாக்கள்: ஆனிப்
பெருந்திருவிழா,
மார்கழி
திருவாதிரை,
ஐப்பசி
அன்னாபிஷேகம்.
பாடல்
பாடல் வகை: தேவாரம்
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்
வரலாறு
தொன்மை: புராதனக் கோயில்
நிறுவிய நாள்: 2000
ஆண்டுகளுக்கு
முன்னர்
கோயிலின் மூலக்கதை
காந்திமதியம்மன் கோயில்
கோபுரம்
முன்பொரு காலத்தில்
அரண்மனைக்குப் பால் ஊற்றிக்
கொண்டிருந்தாராம் ராமகோனார்.
அப்படி ஒருநாள் அவர் சென்று
கொண்டிருக்கும் பொழுது
வழியிலிருந்த கல் ஒன்று அவரின்
காலை இடறி விட, பானையில்
இருந்த பால் முழுதும் அந்தக்
கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த
நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து
நாட்கள் நடைபெற, பயந்து போன
ராமகோனார் உடனே மன்னனிடம்
சென்று முறையிட்டார். மன்னரும்
வீரர்களை அழைத்துக் கொண்டு
அவ்விடத்திற்குச் சென்றார்.
அவர்கள் அந்தக் கல்லை
அங்கேயிருந்து அகற்ற முயல
கோடரி கொண்டு வெட்டினர்.
அப்போது அந்தக் கல்லிலிருந்து
இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர
ஆரம்பித்தது. அனைவரும்
செய்வறியாது அரண்டு போய் நிற்க
வானில் ஓர் அசீரிரி கேட்டதாம்.
கோயில் அமைப்பு
நெல்லையப்பர் கோவில்
தெப்பம்
தாமிர அம்பலம்
மூலவர்
இத்திருத்தலத்தில் உள்ள இறைவன்
நெல்லையப்பர், சுவாமி
வேணுநாதர், வேய்த நாதர்,
நெல்வேலி நாதர், சாலிவாடீசர்
என்றும் அழைக்கப்படுகிறார்.
அம்பாள்
இத்தலத்தில் உள்ள அம்பாள்
காந்திமதி அம்மை, வடிவுடை
அம்மை, திருக்காமக்கோட்டமுடைய
நாச்சியார் என்ற பெயர்களிலும்
அழைக்கப்படுகிறார்
ஊர்ப்பெயர்க் காரணம்
திருநெல்வேலி என இவ்வூர்
அழைக்கப்படுவதற்கு மரபுவழிக்
கதையொன்று உள்ளது:
ஆனிப் பெருந்திருவிழா
நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்
சிறப்புக்கள்
சுமார் 2000 ஆண்டுகளுக்கு
முந்தைய பழமை வாய்ந்த தலமாக
விளங்குகிறது.
சிவபெருமான் நடனமாடிய ஐந்து
முக்கிய தலங்களில்
நெல்லையப்பர் கோயில்
திருத்தலமும் ஒன்று.
திருஞானசம்பந்தரால் தேவாரப்
பாடல் பெற்ற தலமாக
விளங்குகிறது
அருணாசல கவிராயரால்
வேணுவன புராணத்தில்
பாடப்பெற்ற பெருமையுடையது.,
சொக்கநாத பிள்ளையால்
காந்திமதியம்மை பதிகத்திலும்
பாடப்பெற்ற பெருமையுடையது.
32 தீர்த்தங்கள் கொண்டது
இத்திருத்தலம்.
இக்கோவில் தேர் தமிழ்நாட்டின்
மூன்றாவது மிகப்பெரிய தேர்
என்ற பெருமைக்குரியது.
இவற்றையும் பார்க்க
சிவத் தலங்கள் திருஞான
தேவாரத் சம்பந்தர்
திருத்தலங்கள் சுந்தரர்
மாவட்ட திருநாவுக்கரசர்
வாரியான
தேவாரம் பாடல்
பெற்ற
சிவாலயங்கள்
சிதம்பரம்
திருச்சித்ரகூடம்
கோவிந்தராஜன்
கோயில்
மேற்கோள்கள்
1. தமிழகச் சிவாலயங்கள்-308;
திருமகள் நிலையம்;பக்கம் 345
2. "நெல்லையப்பர் கோயில்,
திருநெல்வேலி" (http://www.tami
laanmigam.com/category/%E0%A
E%B8%E0%AF%8D%E0%AE%A
4%E0%AE%B2-%E0%AE%AA%E
0%AF%81%E0%AE%B0%E0%AE%
BE%E0%AE%A3%E0%AE%AE%E
0%AF%8D/page/84/) . JANUARY
24, 2012.
http://www.tamilaanmigam.com/c
ategory/%E0%AE%B8%E0%AF%8
D%E0%AE%A4%E0%AE%B2-
%E0%AE%AA%E0%AF%81%E0%A
E%B0%E0%AE%BE%E0%AE%A3
%E0%AE%AE%E0%AF%8D/page/
84/ . பார்த்த நாள்: 25 நவம்பர்
2012.
வெளி இணைப்புகள்
வேங்கடம் முதல் குமரி வரை 4/
திருநெல்வேலி உறை செல்வர்
அருள்மிகு நெல்லையப்பர்
திருக்கோயில் (http://temple.dinama
lar.com/New.php?id=909)
(தினமலர்)
திருநெல்வேலி நெல்லையப்பர்
கோயில் (http://www.muthukamala
m.com/spiritual/worshipplace/hindu/
p6.html) (முத்துக்கமலம்)
திருநெல்வேலி அருள்மிகு
நெல்லையப்பர் காந்திமதி
திருக்கோயில் (http://www.deepaol
i.com/temples/nellaiappartemple.ht
ml) பரணிடப்பட்டது (https://web.ar
chive.org/web/20121024082044/htt
p://www.deepaoli.com/temples/nellai
appartemple.html) 2012-10-24 at the
வந்தவழி இயந்திரம் (தீபஒளி)
திருநெல்வேலி - நெல்லையப்பர்
ஆலயம் (http://palavesamonline.blog
spot.in/2010/07/blog-post_28.html)
"https://ta.wikipedia.org/w/index.php?
title=திருநெல்வேலி_நெல்லையப்பர்_கோயி
ல்&oldid=3844347" இலிருந்து
மீள்விக்கப்பட்டது
இப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர்
2023, 15:32 மணிக்குத் திருத்தினோம். •
வேறுவகையாகக்
குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி
இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ்
கிடைக்கும்.