d5 BT Sej - Sejarah SJKT

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 186

ப�ொருளடக்கம்

முன்னுரை iv

அலகு 1 அரசமைப்பு நாட்டின் அரண் 2

அலகு 2 மலேசியாவில் இஸ்லாமிய சமயம் 16

அலகு 3 மலாய்மொழி நமது பாரம்பரியம் 30

அலகு 4 நாட்டின் இறையாண்மைக்குச் சவால் 44

அலகு 5 ப�ோராட்ட எழுச்சியும் காலனித்துவ எதிர்ப்பும் 58

அலகு 6 சுதந்திர வரலாறு 74

அலகு 7 மாட்சிமை தாங்கிய மாமன்னர் நாட்டின் அரண் 90

அலகு 8 தேசியச் சின்னம் 108

அலகு 9 மலேசியத் தேசியக் க�ொடி 120

அலகு 10 மலேசியத் தேசியப் பண் 134

அலகு 11 தேசிய ம�ொழி 148

அலகு 12 செம்பருத்தி தேசிய மலர் 162

Saiz sebenar

iii
KURIKULUM STANDARD SEKOLAH RENDAH (SEMAKAN 2017)

Penulis / ஆசிரியர் PENGURUS PROJEK / ஒருங்கிணைப்பாளர்


• Ahmad Hishanuddin bin Ramli • Mohd Muhaimi bin Abdul Rahman
• Dr. Jayakumary a/p Marimuthu
• Hasfalila binti Hassan pereka BENTUK / வடிவமைப்பாளர்
• Aini binti Abd. Hamid
Editor / பதிப்பாசிரியர் • Awaludin bin Mohd Arof
• தமிழரசி சின்னசாமி • Mogan Kumar Raju

PENTERJEMAH / ம�ொழிபெயர்ப்பாளர் ILUSTRATOR / ஓவியர்


• கதிரவன் பெரியண்ணன் • Rozlin Azrar bin Abd Azib
• ராஜேஸ்வரி முனியாண்டி • Mohd. Sazali bin Ibrahim
• பாமா பெரியசாமி

Dewan Bahasa dan Pustaka


Kuala Lumpur
2020
No. Siri Buku: 0024

KK 959-221-0106041-49-2950-20101
ISBN 978-983-49-2950-3

Cetakan Pertama 2020


© Kementerian Pendidikan Malaysia 2020

Hak Cipta Terpelihara. Mana-mana bahan dalam


buku ini tidak dibenarkan diterbitkan semula,
disimpan dalam cara yang boleh dipergunakan
lagi, ataupun dipindahkan dalam sebarang
bentuk atau cara, baik dengan cara
elektronik, mekanik, penggambaran semula
mahupun dengan cara perakaman tanpa
kebenaran terlebih dahulu daripada Ketua
Pengarah Pelajaran Malaysia, Kementerian
Pendidikan Malaysia. Perundingan tertakluk
kepada perkiraan royalti atau honorarium.

Diterbitkan untuk Kementerian Pendidikan Malaysia


oleh:
Dewan Bahasa dan Pustaka,
Jalan Dewan Bahasa,
50460 Kuala Lumpur.
No. Telefon: 03-21479000 (8 talian)
No. Faksimile: 03-21479643
Laman Web: http://www.dbp.gov.my

Reka Letak dan Atur Huruf:


Dewan Bahasa dan Pustaka

Muka Taip Teks: Murasu Anjal


Saiz Muka Taip Teks: 13 poin

Dicetak oleh:
My Bookpal Sdn. Bhd.,
13A, Jalan Taming 10,
Taman Taming Jaya Industrial Park,
43300 Balakong,
Selangor Darul Ehsan
முன்னுரை
தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிக்கான ஐந்தாம் ஆண்டு வரலாற்றுப் பாடநூல், மலேசியக் கல்வி
அமைச்சின் த�ொடக்கப்பள்ளிக்கான தர அடிப்படையிலான கலைத்திட்ட (KSSR) சீராய்வு
2017க்கு ஏற்ப எழுதப்பட்டுள்ளது. இப்பாடநூல் பண்பு நெறி, நாட்டுப்பற்று, குடியியல்,
குடியுரிமை ஆகிய கூறுகளை வலியுறுத்துகின்றது. இவை ப�ோட்டியிடும் ஆற்றலையும்
மலேசியக் குடிமகன் என்னும் வகையில் நாட்டுப்பற்றையும் விதைத்துத் தூய
தன்னடையாளமிகு மாணவர்களை உருவாக்கும்.

இப்பாடநூல் பல்வகைக் கற்றல் அணுகுமுறைகளை வலியுறுத்துவத�ோடு, கண்டறிதல்


அடிப்படையிலான கற்றல், எதிர்காலவியல், சூழலமைவு, வகுப்பறைக்கு வெளியே கற்றல்,
நிகழாய்வு, தகவல் த�ொடர்புத் த�ொழில்நுட்பத் திறன் 21ஆம் நூற்றாண்டுக் கற்றல் திறன்கள்
ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

மேலும், வரலாற்றை ஆர்வமுடன் கற்க மாணவர்கள் ஆய்வு, படைப்பாக்கம், புத்தாக்கம்


நிறைந்த வரலாற்றுச் சிந்தனையை உருவாக்கிட உயர்நிலைச் சிந்தனைத் திறனும்
(KBAT) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, மாணவர்கள் தகவல் திரட்டும் வகையில்
சுயமாக ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகளும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகள்
மாணவர்களுக்குப் பட்டறிவையும் திறன்களையும் வளர்ப்பதற்காகக் க�ொடுக்கப்பட்டன.
மாணவர்கள் வரலாற்று அறிவை உய்த்துணர்ந்து, தன்னடையாளத்தை வலுப்படுத்தி சிந்தனை
முதிர்ச்சி மிக்கவர்களாக உருவாகிட வேண்டும்.

இந்தத் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிக்கான ஐந்தாம் ஆண்டு வரலாற்றுப் பாடநூல்,


நான்காம் ஆண்டுக்கான வரலாற்றுப் பாடநூலின் த�ொடர்ச்சி ஆகும். இந்த வரலாற்றுப் பாட
நூலின் கருப்பொருள் நாட்டின் இறையாண்மை ஆகும். மேலும், இப்பாடநூல் பின்வரும்
நான்கு தலைப்புகளைக் க�ொண்டுள்ளது.

தலைப்பு 6: நம் நாட்டின் பாரம்பரியம்

இத்தலைப்புத் தனித்துவமும் சிறப்பிற்குரியதாகவும் காணப்படும் மலேசிய நாட்டின் பாரம்பரியம்


குறித்ததாகும். நம் நாடு, கூட்டரசு மலேசியா அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள
மலாக்கா மலாய் அரசு த�ொடங்கி அரசமைப்பு, இஸ்லாமிய சமயம், மலாய்மொழி எனப்
பெருமைப்படத்தக்க பல்வேறு பாரம்பரியங்களைத் த�ொடர்ச்சியாகக் க�ொண்டொழுகுகிறது.
இந்தப் பாரம்பரியமே இன்றைய மலேசிய அமைப்பிற்கு அடிப்படைக் க�ொள்கையாக
அமைகின்றது.

தலைப்பு 7: நாட்டின் சுதந்திரப் ப�ோராட்டம்


இத்தலைப்பு நம் நாட்டில் காலனித்துவத்தையும் அந்நியத் தலையீட்டையும் எதிர்த்த முந்தைய
தலைவர்களின் ப�ோராட்டங்களையும் தியாகங்களையும் விவரிக்கின்றது. தன்னம்பிக்கையும்
எழுச்சியின்வழி மட்டுமின்றி தலைவர்களின் அர்ப்பணிப்பை உய்த்துணர்வத�ோடு ப�ோற்றவும்
செய்தல்வழி பள்ளிப் பருவம் முதற்கொண்டே மாணவர்களிடம் நாட்டுணர்வையும் வலுவான
குடியுரிமை நெறி ஆர்வத்தையும் கிளர்ந்தெழச் செய்ய இயலும். இத்தலைப்பு அந்நிய
சக்திகளின் தலையீடு, காலனித்துவம் மீதான ப�ோராட்டம், 1957ஆம் ஆண்டு சுதந்திர
வரலாறு பற்றிய உட்தலைப்புகளைக் க�ொண்டுள்ளது.
Saiz sebenar

iv
தலைப்பு 8: மாட்சிமை தாங்கிய மாமன்னர்
இத்தலைப்பு நாட்டுணர்வையும் நாட்டை நேசிப்பதையும் குறிப்பிடுவத�ோடு, நாட்டின்
முதன்மைத் தலைவர் என்னும் முறையில் மாட்சிமை தாங்கிய மாமன்னர் அமைப்பு
முறையை மதிக்கவும் விரும்பிடச் செய்தலையும் வளர்க்கிறது. இத்தலைப்பு நியமன முறை,
அரசுரிமைச் சின்னங்கள், அரச அரசியலமைப்பு அதிகாரத்துறை ஆகியன நாட்டின் அரணாக
அரசமைப்பைப் ப�ோற்றுவதற்கானது என்பதை விவரிக்கின்றது.

தலைப்பு 9: நம் நாட்டின் அடையாளம்


இத்தலைப்பு குடியுரிமைக் கூறுகளாகத் திகழும் நாட்டின் அடையாளங்களான தேசியச்
சின்னம், தேசியக் க�ொடி, தேசியப் பண், தேசிய ம�ொழி, தேசிய மலர் ஆகியவற்றை
விவரிக்கின்றது. நாட்டின் அடையாளங்கள் மீதான அறிவு, உய்த்துணர்வு பெருமைப்படத்தக்க
நாட்டை நேசிக்கும் தன்னடையாளத்தை உருவாக்கும்.

தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிகளுக்கான ஐந்தாம் ஆண்டு வரலாற்றுப் பாடநூல்,


12 அலகுகளில், 4 தலைப்புகளில் ஒவ்வொன்றும் தனிச்சிப்பமாக இயங்கும் ஆற்றலைக்
க�ொண்டதாகும். ஒவ்வோர் அலகும் ஐந்தாம் ஆண்டுக்கான தர அடிப்படையிலான
கலைத்திட்டம்(KSSR) சீராய்வு 2017 விவரிக்கின்றது. ஆசிரியர்கள் விவரம் சேகரிக்க
உதவும் வகையில் இப்பாட நூலின் இறுதியில் துணைநூல் பட்டியலும் வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களும் மாணவர்களும் இப்பாடநூலை எளிதாகப் பயன்படுத்த பின்வரும் சில
படவுருக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சாரம்
ஒவ்வோர் அலகின் கற்றலின் ப�ொதுவான கண்ணோட்டம்.
நீங்கள் கற்கப் ப�ோவது என்ன?
இக்கூறு, நேரடியாகவும் மறைமுகமாகவும் விளக்கம், கேள்விகள்,
நடவடிக்கைகள் வழி வெளிப்படுகின்றது.
அடிப்படை வரலாற்றுச் சிந்தனைத் திறன்
மாணவர்கள் சுயமாக வரலாற்று நிகழ்வுகளான சான்றுகள்,
PS நிகழ்வுகளைய�ொட்டிய ஆய்வு ஆகியவற்றை ஆக்கச்சிந்தனை அடிப்படையில்
AK

ஆய்வுசெய்ய வகை செய்யப்பட்டுள்ளது. இவ்வரலாற்றுச் சிந்தனைத் திறன்படி


அடிப்படை வரலாற்றுக் கூறுகள், காலக் கருத்துரு, காலநிரல் மாறுதல்கள்,
தெளிவான சான்று, கற்பனை, சிக்கல், முந்தைய சிக்கல்கள், முந்தைய கால
ஒப்பீடு, மூலம் அறிதல் ஆகியன இவர்களுக்கு உதவும்.

குடியியல் நெறி
மாணவர்களுக்கு இருக்க வேண்டிய பண்புநெறிகள்.

ச�ொற்களஞ்சியம்
மாணவர்கள் புரிந்து க�ொள்ளச் சிரமப்படும் ச�ொற்களுக்குப் ப�ொருள்விளக்கம்
க�ொடுக்கப்படுகிறது.
உயர்நிலைச் சிந்தனைத் திறன் கேள்விகள் (KBAT)
வரலாற்று நிகழ்வுகள் த�ொடர்பான சிந்தனையைத் தூண்டுவதற்கு உயர்நிலைச்
சிந்தனைத் திறன் கேள்விகள் வழங்கப்படுவதைக் குறிக்கின்றது.
உருவாக்குவ�ோம் வாரீர்
ஒவ்வொரு அலகிலும் கற்ற தலைப்பை ஆக்கத் திறனைத் தூண்டும்
Saiz sebenar
நடவடிக்கை மூலம் செய்திடல் வேண்டும்.

v
நடவடிக்கை
சுயக் கற்றலும் வகுப்பறைக்கு வெளியே கற்றலுக்கான நடவடிக்கைகள்
வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஐ- திங் (I-think), உருவாக்குவ�ோம் வாரீர்,
நிகழாய்வு, எதிர்காலவியல், 21ஆம் நூற்றாண்டுக் கல்வி, தகவல் த�ொடர்பு
த�ொழில்நுட்பம் ஆகும்.
உங்களுக்குத் தெரியுமா?
ஒன்றனை விரிவாகவும் ஆழமாகவும் தெரிந்துக�ொள்ள க�ொடுக்கப்பட்டுள்ள
கூடுதல் விவரங்கள் ஆகும்.
விரைந்து பதிலளி
கற்ற வரலாற்று நிகழ்வுகள் த�ொடர்பான புரிதலை அறியும் வகையிலான
கேள்விகளை உள்ளடக்கியுள்ளது. இக்கேள்விகள் சுருக்கமாகவும் மிதமாகவும்
இருக்கும்.
கற்றல் தரமும் குடியியல் கூறுகளும்
6.1.3
K6.1.7 ஒரு குறிப்பிட்ட தலைப்பில் மாணவர்களின் கற்றல் கற்பித்தலின் வழி பெறப்பட்ட
கற்றல் அடைவையும் தரத்தையும் குறிக்கும் அளவுக�ோல் ஆகும். இது
மாணவர்கள் அடைய வேண்டிய கற்றல் உள்ளடக்கங்களை வெளிப்படுத்துகிறது.

ஆசிரியர் குறிப்பு
ஆசிரியர் ஒவ்வோர் அலகின் கற்றல் கற்பித்தலை மிகச் சிறப்பாக
நடத்துவதற்குத் துணை புரிகிறது.

விரைவு தகவல் குறியீடு (QR CODE)


மேலும் தகவல்களைக் காண�ொலி அல்லது ஏனைய மூலங்களிலிருந்து பெற
முடியும்.
மீட்டுணர்வோம்
ஒவ்வொரு அலகின் இறுதியிலும் பாடத்தின் சுருக்கமாக, மாணவர்கள் தாங்கள்
கற்ற தலைப்பை மீட்டுணர உதவுகிறது.

சிந்தித்துப் பதிலளி
பல்வேறு வகையான பயிற்சிகளின் மூலம் கற்ற தலைப்பின் உள்ளடக்கத்தின்
புரிதலை அறிய முடிகிறது.

நாட்டை நேசிப்போம்
மாணவர்கள் சுயமாகத் தாம் கற்ற கூறுகளைத் தனிநபர், சமுதாயம், நாடு
எனும் அடிப்படையில் மீண்டும் மதிப்பிட்டுத் த�ொடர்புப் படுத்த இயலும்.

அல்லது குறியீட்டை அதன் சாதனத்தைப் பயன்படுத்தி வருடி


Google Play Store App Store

Augmented Reality (AR) பயனீட்டுத் தகவல்களை அந்தப் பக்கத்தில் பெறவும்.


தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிக்கான ஐந்தாம் ஆண்டு வரலாற்றுப் பாடநூல், மகிழ்வான
கற்றல் கற்பித்தலின் வழி வரலாற்று அறிவை மேம்படுத்துகிறது. மேலும், மாணவர்கள் தங்களின்
அறிவாற்றலையும் திறனையும் முழுமை படுத்திக் க�ொள்வத�ோடு பண்புநெறிகளையும்
அமல்படுத்த உதவும். மலேசிய குடிமகன் என்னும் வகையில் மாணவர்கள் தன்னடையாள
Saiz sebenar
உணர்வையும் பெருமிதத்தையும் உருவாக்கி நாட்டுப்பற்றை வலுப்படுத்தும்.

vi
நாட்டின்
இறையாண்மை

Saiz sebenar

1
தலைப்பு 6 : நம் நாட்டின் பாரம்பரியம்

அலகு

1 அரசமைப்பு நாட்டின் அரண்

1897ஆம் ஆண்டு க�ோல கங்சாரில் நடைபெற்ற மலாய்


அரசர்களின் முதலாவது மாநாட்டில் (தர்பார்) பிரிட்டிஷ்
அதிகாரிகளுடன் மலாய் அரசர்களும் மலாய் ஆட்சியர்களும்
(மூலம்: Arkib Negara Malaysia)
சாரம்

இன்றைய அரசமைப்பானது த�ொடக்கக்கால மலாய் அரசு ஆட்சிமுறையை


அடிப்படையாகக் க�ொண்டது. இன்றுவரை பின்பற்றப்படும் அரசமைப்பானது
நாட்டின் பாரம்பரியத்தின் அடையாளமாக மலேசியர்களால் மதிக்கப்பட்டும்
ப�ோற்றப்பட்டும் வருகிறது. இந்த அலகு அரசர், அரசு, வாடாட் கருத்துரு
(konsep waadat), இறையாண்மை, துர�ோகம் ஆகியவற்றின் ப�ொருளை
விவரிக்கின்றது. மேலும், இவ்வலகானது அரசர்களின் நிலையையும்
பங்களிப்பையும் விளக்குவத�ோடு இன்றும் அரசமைப்பு முறையை அமல்படுத்தும்
Saiz
Saizsebenar
sebenar குறித்தும் விவரிக்கின்றது.
நாடுகள்
22
நீங்கள் கற்கப் ப�ோவது என்ன?
1. அரசர், அரசு என்பதன் ப�ொருள்.
2. அரசருக்கும் மக்களுக்கும் இடையிலான வாடாட் கருத்துரு.
3. இறையாண்மை, துர�ோகம் ஆகியவற்றின் ப�ொருள்.
4. அன்றைய, இன்றைய மலாய் அரசர்களின் நிலையும் பங்களிப்பும்.
5. அரசாட்சி முறையை இன்றும் அமல்படுத்தும் நாடுகள்.

குடியியல் நெறி

மதித்தல்

PS
AK

அடிப்படை வரலாற்றுச் சிந்தனைத் திறன்


1. அரசர், அரசு, வாடாட் கருத்துரு, இறையாண்மை, துர�ோகம்
ஆகியவற்றைப் ப�ொருள்விளக்கம் செய்தல்.
2. அன்றைய, இன்றைய மலாய் அரசர்களின் நிலை, பங்களிப்பு
ஆகியவற்றின் குறிப்பிடத்தக்கச் சான்றுகளை ஆராய்தல்.
3. அரசாட்சி முறையை இன்றும் அமல்படுத்துகிற நாடுகளின்
ஏற்புடைமையை (rasionalisasi) ஆராய்தல். Saiz
Saizsebenar
sebenar

33
இறையாண்மைமிகு அரசர் அரசின் தூண்

அரசர் அல்லது சுல்தான் என்பவர் இறையாண்மைமிகு அரசின் உயர்நிலை


ஆட்சியாளர் ஆவார். அரசு என்பது அங்கீகரிக்கப்பட்ட முறையில் ஆட்சி
செய்யப்படும் மாநிலம் அல்லது நாடு ஆகும்.

உங்களுக்குத் தெரியுமா? அரசமைப்பு, த�ொடக்கக்கால மலாய் அரசுகளின்


காலந்தொட்டே பின்பற்றப்பட்டு வருகின்றது. த�ொடக்கக்கால மலாய்
அரசுகளின் அரசாட்சி முறையில் அரசர், மிக உயர்ந்த நிலையில்
வைக்கப்பட்டுள்ளார். அரசர் அல்லது சுல்தான் மக்களையும் தனது
அரசையும் ஆட்சி செய்யும் மாநிலத்தில் தலைவர் ஆவார்.

ஐயா, இஸ்லாமிய
வருகைக்குப் பின்னர்தான் ஆமாம் சீமா,
அரசருக்குச் சுல்தான் பெரும்பாலான
எனும் விளிப்புமுறை மலாய் அரசர்கள்
பயன்படுத்தப்பட்டதா? சுல்தான் எனும்
விளிப்புமுறையைப்
பயன்படுத்தினர்.

சுதந்திரத்திற்குப் பின்னரும் அரசமைப்பு, த�ொடர்ந்து வி ர ை


ந் து ப தி ல ளி
பின்பற்றப்பட்டு நாட்டின் அடையாளமாக விளங்குகின்றது.
நாட்டின் பாரம்பரியம் எனும் வகையில் அரசமைப்பை நாம் ராஜா என்பதன்
மதிப்பதும் நன்றி பாராட்டுவதும் அவசியம் ஆகும். ப�ொருள் என்ன?
21ஆம் திறன்
நூற்றாண்டுக் கற்றல் தகவல் த�ொலைத்தொடர்பு த�ொழில்நுட்பம்
1. மாணவர்களைக் குழுவாரியாகப் பிரித்தல்.
2. நம்பகமான வலைத்தளத்தைப் பயன்படுத்தி, ஒவ்வொரு குழுவும் அரசர்
அல்லது சுல்தான், அரசு த�ொடர்பான படத் தகவல்களைத் தேடுதல்.
3. மாணவர்கள் பெறப்பட்ட தகவல்களைப் படைத்தல்.
Saiz sebenar
அரசர், அரசு என்பதன் ப�ொருளை விளங்கிக் க�ொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
4
மாநிலத்தின் அரண்
ராஜா அல்லது சுல்தான் மாநிலத்தின் அமைதியையும் நல்லிணக்கத்தையும்
நிலைநாட்டும் தலைவராகத் திகழ்கின்றார். தற்பொழுது ஒன்பது மாநிலம்
அரசமைப்பை அமல்படுத்துகின்றன. அம்மாநிலத் தலைவர்கள் வெவ்வேறு
விளிப்பு முறையைக் க�ொண்டுள்ளனர்.

ராஜா
பெர்லிஸ்

கெடா
சுல்தான் தென் சீனக் கடல்
சுல்தான் சபா
பினாங்கு கிளந்தான்
திரங்கானு
பேராக் சுல்தான்
சுல்தான்
பகாங்
சிலாங்கூர் சுல்தான்
சுல்தான்
நெகிரி
மல ரிண
நீ

செம்பிலான்
ாக்காை

சரவாக்
மலாக்கா
சுல்தான்
ஜ�ொகூர்
யாங் டி பெர்துவான் பெசார்

ராஜா அல்லது சுல்தான் க�ொண்ட மாநிலங்கள்

நம் நாட்டின் பாரம்பரியமாக விளங்கும் அரசமைப்பு நாட்டின் அமைப்புக்கு


அடிப்படையாக விளங்குவதால் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நாம்
அனைவரும் அரசமைப்பை முழுமனத்துடன் ஏற்கவும் ப�ோற்றவும் வேண்டும்.

உங்களுக்குத் தெரியுமா?
• பினாங்கு, மலாக்கா, சரவாக், சபா ஆகிய மாநிலங்களில் அரசமைப்பு
இல்லை. இம்மாநிலங்களுக்குத் தலைவராக யாங் டி பெர்துவா நெகிரி,
மாட்சிமை தாங்கிய மாமன்னரால் நியமிக்கப்படுகிறார்.
• கூட்டரசுப் பிரதேசங்களான க�ோலாலம்பூர், புத்ராஜெயா, லாபுவான்
ஆகியவற்றிற்கு மாட்சிமை தாங்கிய மாமன்னர் தலைமையேற்கிறார்.
• நெகிரி செம்பிலான் ராஜாவை யாங் டி பெர்துவான் பெசார்
என்றும் பெர்லிஸ் ஆட்சியாளரை ராஜா என்றும் அழைப்பர்.
ந ட வ டி க ் கை வி ர ை
ந் து ப தி ல ளி
குழுவில், அரசமைப்பைப் ப�ோற்ற அரசமைப்பை
வேண்டியதன் அவசியத்தைப் அமல்படுத்துகிற
படைப்பாக்கத்திறன�ோடு விவரித்திடுக. Saiz sebenar
மாநிலங்களைக் குறிப்பிடுக.
6.1.1 அரசமைப்பை அமல்படுத்துகிற மாநிலங்களை அடையாளங்காண மாணவர்களுக்கு
K6.1.6 வழிகாட்டுதல்.
5
அரசர் விசுவாசத்திற்கும் மரியாதைக்கும் உரியவர்
அரசருக்கு விசுவாசமாக இருக்கும் பண்பானது முந்தைய காலந்தொட்டு
ஒவ்வொரு குடிமகனும் பின்பற்றிவரும் பழக்கமாகும். 'சுலாலாதூஸ் சாலாத்தின்'
எனும் புத்தகத்தில் அரசருடனான வாடாட் உடன்பாடு காணப்படுகிறது.
இவ்வுடன்பாடு ஸ்ரீ தெரி புவானாவிற்கும் மக்களுக்கும் அதாவது டெமாங் லெபார்
டாவுன் உடனான வாக்குறுதி விசுவாசத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
மக்கள் அரசருக்கு விசுவாசமாக இருக்க உறுதியளித்தனர். அதே சமயம் அரசரும்
மக்களை நீதிவழுவா நடுநிலைமையுடன் ஆட்சி செய்ய உறுதி அளித்தார்.
“...யாம் மாட்சிமை தாங்கிய தங்களின்
“பாமான் உமது வாக்குறுதியை யாம் ஏற்கிற�ோம்'.
அருளை வேண்டுகிறேன். எல்லா
அடியேனும் தங்களிடமிருந்து வாக்குறுதியை
மலாய் அடிமைகளும் தங்களின்
எதிர்பார்க்கிறேன்.'
பாவத்திற்கு ஆளாயிருப்பினும், எங்களை
.... அடியேனின் வம்சாவளிக் குழந்தைகள்
ஒதுக்காதீர்கள். தீயச் ச�ொற்களால்
தவறுகள் செய்யினும், எல்லா மலாய்க்காரர்களும்
நிந்திக்காதீர்கள். ஒரு வேளை 'ஷாராக்'
அடியேன் மீது துர�ோகம் பூண்டு பூமியில் ரத்தம்
விதிகளுக்கு உட்பட்ட க�ொலையாக
சிந்தக்கூடாது. அவர்கள் காயம் பட்டாலும்
இருப்பினும் தங்களிடம் தயவு கூர்ந்து
நாட்டைக் கைப்பற்றிப் பின்வாங்கும் வரையிலும்
மன்னிப்புக் க�ோருகிற�ோம்."
கூட."

“அப்படியே ஆகட்டும் வேந்தரே, "ஆகட்டும் பாமான், அடியேன்


தங்களின் குழந்தைகள் முதலில் இந்த உடன்பாட்டை
மாறிடும் பட்சத்தில் எங்களின் ஏற்கிறேன்."
குழந்தைகளும் மாறிடுவர் வேந்தரே"

'சுலாலாதூஸ் சாலாத்தின்' புத்தகத்தில் காணப்படும் வாடாட் உடன்பாடு த�ொடர்பாக மாணவர்


குழுவினரின் நடிப்புக் காட்சி.
[மூலம்: A. Samad Ahmad (peny.), 1996. Sulalatus Salatin, Edisi Pelajar, Kuala Lumpur: Dewan Bahasa
dan Pustaka, hlm. 25-26]
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இந்த வாடாட் கருத்துரு ருக்குன்
நெகாராவில், 'பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்' என
இரண்டாவது க�ோட்பாடாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே, மலேசியர்களாகிய
நாம் அரசர் அல்லது சுல்தானுக்கு முழு விசுவாசத்தை வழங்க வேண்டும்.
ச�ொற்களஞ்சியம்
ஒதுக்காதீர்: தள்ளி வைக்காதீர் 'சுலாலாதூஸ்
ஷாராக்: இஸ்லாமிய சமய விதி சாலாத்தின்' புத்தகத்தில்
நிந்திக்கும்: அவமதிக்கும் காணப்படும் வாடாட்
உடன்பாடு: ஒப்புக்கொள்ளுதல் மூலவரிகள்.
21ஆம் திறன் பாகமேற்று நடித்தல்
நூற்றாண்டுக் கற்றல் உங்களுக்குத் தெரியுமா?
1. ஐவர் க�ொண்ட குழுக்களை அமைத்தல். வாடாட் எனப்படுவது விசுவாச
2. மேற்கண்ட உரையாடலுக்கேற்பப் படைப்பாற்றல் உடன்படிக்கை ஆகும்.
Saiz sebenar
திறனுடன் நடிக்கச் செய்தல்.
• வாடாட் கருத்துருவை விளங்கிக் க�ொள்ள மாணவர்களுக்குத் துணை 6.1.2
புரிதல். K6.1.7
6 • மாணவர்கள் அரசமைப்பு மீதான விசுவாச நெறியின் அவசியத்தை விளக்க
வழிகாட்டுதல்.
இறையாண்மைமிகு அரசர்
அரசர் அல்லது சுல்தான் என்பவர் மக்களின் விசுவாசத்திற்கும் மதிப்பிற்கும்
உரிய ஓர் அரசின் தலைவர் ஆவார். ஸ்ரீ தெரி புவானாவிற்கும் டெமாங் லெபார்
டாவுனிற்கும் இடையிலான உடன்பாட்டின் வழி இறையாண்மைக் கருத்துருவும்
துர�ோகக் கருத்துருவும் த�ோன்றின.
இறையாண்மை

இறையாண்மை எனப்படுவது
தனது அரசின் மீது அரசர்
அல்லது சுல்தான் க�ொண்டுள்ள
மிக உயரிய அதிகார அடையாளம்
ஆகும். இறையாண்மைமிகு அரசர்
அல்லது சுல்தான் ஆட்சிப்புரிவதற்கு
ஆளுமை, தனித்துவமிகு தன்னெறி,
அறிவாற்றல் க�ொண்டிருத்தல்
வேண்டும்.

துர�ோகம்

துர�ோகம் எனப்படுவது
அரசர் அல்லது சுல்தானின்
ஆணையையும் கட்டளையையும்
புறக்கணித்தல் ஆகும்.
துர�ோகம் புரிகின்ற மக்களுக்கு
அதற்கு நிகரான தண்டனை
வழங்கப்படும்.

(மூலம்: Profesor Emeritus Datuk Wira Dr. Muhammad Yusoff bin Hashim)
இறையாண்மைமிகு அரசர் எந்நேரமும் அமைதியும் சுபிட்சமும் நிலவுவதை
உறுதிச் செய்பவர். மக்கள் அவரின் ஆட்சியின் கீழ் அமைதியுடனும்
ஒற்றுமையுடனும் வாழ்கின்றனர்.
உங்களுக்குத் தெரியுமா?
• ‘டாவ்லாட்’ (இறையாண்மை) எனும் ச�ொல் அரபுச் ச�ொல்லாகும்.
‘டாவ்லா’ என்பதன் ப�ொருள் நாடு அல்லது அரசு.
• துர�ோகம் புரிகின்ற மக்களுக்குச் சாபக்கேடு அல்லது பேரிடர் ஏற்படும்.
வி ர ை
ந் து ப தி ல ளி ந ட வ டி க ் கை
இறையாண்மை என்பதன் குழுவாரியாக அரசமைப்பு மீது விசுவாசம்
ப�ொருளைக் குறிப்பிடுக. செலுத்த வேண்டியதன் அவசியத்தை விளக்குதல்.
Saiz sebenar
6.1.3
இறையாண்மை, துர�ோகம் ஆகியவற்றின் கருத்துருவை மாணவர்கள் விளங்கிக்
க�ொள்ள வழிகாட்டுதல். 7
அரசமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள்

அரசமைப்புப் பாரம்பரியத்தை நிலைநிறுத்தியுள்ள நாடுகளில் மலேசியாவும்


ஒன்றாகும். த�ொடக்கக்கால மலாய் அரசுகளின் காலம் த�ொட்டே அரசமைப்பு
நமது இறையாண்மைக்கும் பெருமைக்கும் அடையாளமாக விளங்குகின்றது.
காலத்திற்கேற்ப அரசமைப்பு பல மாற்றங்களைக் கண்டுள்ளது.

1 த�ொடக்கக்கால மலாய் 2 பிரிட்டிஷ் காலனித்துவ


அரசமைப்பு அரசமைப்பு

• அரசர் அல்லது சுல்தான் தங்கள் • அரசர் அல்லது சுல்தான் மாநிலத்


மாநிலத்தின் தலைவர். தலைவராக நிலைநிறுத்தப்பட்டார்.
• அரசர் அல்லது சுல்தான் தமது • அரசர் அல்லது சுல்தான் ஆட்சிப்
ஆட்சியில் முழு அதிகாரம் ப�ொறுப்பில் முழு அதிகாரம்
பெற்றவர். பெற்றிருக்கவில்லை.
• நிர்வாகம், சட்டம், நீதி, அரசதந்திர • அரசர் அல்லது சுல்தான்
உறவு ஆகியவை த�ொடர்பான தங்கள் மாநிலத்தில் இஸ்லாமிய
க�ொள்கைகளை அரசர் அல்லது சமயத்திற்கும் மலாய்ச் சடங்கு
சுல்தான் முடிவு செய்வார். சம்பிரதாயங்களுக்கும் தலைவர்
• அரசை நிர்வாகம் செய்ய அரசர் ஆவார்.
அல்லது சுல்தானுக்கு ஆட்சியர்கள் • ஒவ்வொரு மாநில நிர்வாகத்தையும்
உதவுகின்றனர். நிர்வகிக்க பிரிட்டிஷ் ஆல�ோசகர்
ஒருவர் நியமிக்கப்பட்டார்.

ஆட்சியர்கள் பாலாய் ர�ோங் ஸ்ரீயில்


சுல்தானுடன் கலந்தால�ோசிக்கும் த�ொடுவாய்க் குடியேற்ற மாநிலங்களின்
உருப்போலி காட்சியமைப்பு. (Diorama) ஆளுநருடன் மலாய்ச் சுல்தான்கள்.
(மூலம்: Kompleks Sejarah Pasir Salak) (மூலம்: Arkib Negara Malaysia)

21ஆம் தி றன்
நூற்றாண்டுக் கற்றல் அருந்தகம் (Kafe)
1. அருந்தகச் சூழல் ப�ோன்று ஒரு மேசையில் மாணவர்கள் குழுவாக அமர்ந்திருத்தல்.
2. ‘அரசமைப்பு இறையாண்மையைத் தற்காக்க வேண்டியதன் அவசியம்’ என்ற
கலந்துரையாடல் தலைப்பை ஆசிரியர் வழங்குதல்.
3. மாணவர்கள் அத்தலைப்பைய�ொட்டி குழுவில் கலந்துரையாடுதல்.
Saiz sebenar

8
3 ஜப்பானிய ஆக்கிரமிப்புக் 4
காலத்தில் அரசமைப்பு

• அரசர் அல்லது சுல்தான் மாநிலத்


தலைவராக நிலைநிறுத்தப்பட்டார்.
• அரசர் அல்லது சுல்தான் ஆட்சிப்
ப�ொறுப்பில் முழு அதிகாரம் மாட்சிமை தாங்கிய மாமன்னர் 14ஆம்
பெற்றிருக்கவில்லை. நாடாளுமன்ற இரண்டாம் தவணைக்
• அரசர் அல்லது சுல்தான் தங்கள் கூட்டத்தொடர் அரசச் சடங்கில்
மாநிலத்தில் இஸ்லாமிய சமயத்திற்கும் அதிகாரப்பூர்வத் திறப்புரை ஆற்றுகின்றார்.
மலாய்ச் சடங்கு சம்பிரதாயங்களுக்கும் (மூலம்: Istana Negara)
தலைவர் ஆவார்.
• ஜப்பானிய ஆளுநர் மலாய் சுதந்திரத்திற்குப் பின்னர் இன்று
மாநிலங்களின் நிர்வாகத்தை வரையிலான அரசமைப்பு
நிர்வகித்தார்.
• அரசியலமைப்பு முடியாட்சி
முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.
• அரசர் அல்லது சுல்தானின்
அதிகாரம் மாநில
அரசியலமைப்புக்கு உட்பட்டது.
• மாநில நிர்வாகத்திற்கு மந்திரி
பெசார் தலைமையேற்க, நிர்வாகச்
சபை துணை புரிகிறது.
• மாட்சிமை தாங்கிய மாமன்னர்
டிசம்பர் 1941இல் ஜப்பானிய இராணுவம் அமைப்புமுறை சுதந்திரத்திற்குப்
க�ோத்தா பாரு, கிளந்தான் வழியாக பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஊடுருவியது. • ஒன்பது மலாய் அரசர்களும்
(மூலம்: Arkib Negara Malaysia)
மாட்சிமை தாங்கிய
மாமன்னராகச் சுழல்முறையில்
மலேசியக் குடிமக்களாகிய நாம் நியமிக்கப்படுகின்றனர்.
அரசமைப்பு இறையாண்மையை எவ்விதப் • நாட்டின் நிர்வாகத்தைப் பிரதமர்
பாகுபாடின்றித் தற்காப்பது அவசியமாகும். தலைமையேற்க அமைச்சரவை
துணைபுரிகிறது.
அரசமைப்பு இறையாண்மை நாட்டின்
வளப்பத்தையும் அமைதியையும் வி ர ை
உறுதிப்படுத்துகின்றது. ந் து ப தி ல ளி
ச�ொற்களஞ்சியம் ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது
நிர்வாகச் சபை: நிர்வாகப் பணிகளைச் மலாய் மாநிலங்களின் நிர்வாகத்தை
செய்யும் அமைப்பு ஆகும். நிர்வகித்தது யார்?
அமைச்சரவை: பிரதமரையும்
அமைச்சர்களையும் உள்ளடக்கிய உங்களுக்குத் தெரியுமா?
அமைப்பு. ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குப்
முழு அதிகாரம்: முழுமையான அல்லது பின்னர் ஆட்சிக்கு வந்த
எல்லையற்ற அதிகாரம். பிரிட்டிஷார் தங்களது
க�ொள்கைகளைத் த�ொடர்ந்தனர்.
Saiz sebenar
6.1.4
K6.1.8 ஆசிரியர் அரசமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களை மாணவர்கள் விளங்கிக் க�ொள்ள
குறிப்பு வழிகாட்டுதல். 9
பன்னாட்டு அரசமைப்பு

அரசமைப்பு ஆட்சிமுறை உலகின் மிகப் பழமையான நிர்வாகமுறை ஆகும்.


அரசமைப்பு ஆட்சிமுறையில் அரசர் மிக முக்கியத் தூண் ப�ோன்றவர்.
தற்பொழுது உலகில் மலேசியா உட்பட 43 நாடுகள் அரசமைப்பு முறையை
அமல்படுத்துகின்றன.

டென்மார்க்

யுனைட்டட் கிங்டம்

யுனைட்டட் கிங்டம் மகாராணியின் க�ொடி


(மூலம்: British High Commision,
Kuala Lumpur)
மஹ்க்ரிபீ

அட்லாண்டிக் பெருங்கடல்

டென்மார்க் மகாராணியின் க�ொடி


(மூலம்: Sekretariat Kabinet
Denmark, Denmark)

மஹ்க்ரிபீ அரசின் க�ொடி


(மூலம்: Kedutaan Negara
Maghribi, Kuala Lumpur)
(மூலம்: Khairil Annas Jusoh, 2014. Dustur Wa
Salatin: Perlembagaan dan Para Sultan.
Shah Alam: Yayasan Penyelidikan Transformasi)

21ஆம் திறன்
நூற்றாண்டுக் கற்றல் மாணவர் படைப்பு
அரசமைப்பு இறையாண்மையைத் தற்காக்கும் முறையை வகுப்பில் படைத்தல்.
தகவல் த�ொடர்பு த�ொழில்நுட்பச் செயலியைப் பயன்படுத்தி இப்படைப்பைப்
Saiz sebenar
படைக்கலாம்.

10
தாய்லாந்து அரசின் க�ொடி
(மூலம்: Kedutaan Negara Thailand,
Kuala Lumpur)

பசிபிக் பெருங்கடல்

தாய்லாந்து

ம ல ே சி ய ா

மாட்சிமை தாங்கிய மாமன்னரின் க�ொடி


(மூலம்: Istana Negara)

இந்தியப் பெருங்கடல்

வி ர ை
ந் து ப தி ல ளி
அரசமைப்பை அமல்படுத்தும் நாடுகளைக் குறிப்பிடுக.
அரசமைப்பு நாட்டின் ஒற்றுமையையும் வளப்பத்தையும் காட்டும்
அடையாளமாகும். ஆகவே, அரசமைப்பு இறையாண்மையைத் தற்காக்க, மக்கள்
முழு விசுவாசத்தைக் காட்டுவது அவசியமாகும். Saiz sebenar
6.1.5
ஆசிரியர் உலகில் அரசமைப்பு முறையை அமல்படுத்தும் நாடுகளை மாணவர்கள்
குறிப்பு அறிய வழிகாட்டுதல். 11
அரசக் க�ொடி அறிவு மரம்
உருவாக்குவ�ோம் வாரீர் கருவிகளும் ப�ொருள்களும்
துளையிடும்
கருவி நெகிழிப்
மணிலா பாத்திரம்
தூரிகை அட்டை
மணல் கிளைகள்
அரசர்
நீர் வண்ணம் பசை
க�ொடி கயிறு கத்தரிக்கோல்

1 2

நெகிழிப் பாத்திரத்தின் மேல் படைப்பாக்கத்திறனுடன் கிளைகளுக்கு


வண்ணம் பூசி அதன் உள்ளே வண்ணம் பூசி மணல் நிரம்பிய
மணலை நிரப்புக. பாத்திரத்தின் உள்ளே நடவும்.
3 4

ஒவ்வொரு நாட்டின் அரசக் க�ொடிப் மணிலா அட்டையில் துளையிடுக.


படத்தை மணிலா அட்டையில் ஒட்டுக.

5 6

மணிலா அட்டையில்
கயிற்றைக் கட்டிக் கிளைகளில் அரசக் க�ொடி, அறிவு மரம்
Saiz sebenar
த�ொங்கவிடவும். தயாராகிவிட்டது.
மாணவர்கள் அரசக் க�ொடி அறிவு மரத்தைத் தயார் செய்ய வழிகாட்டுதல்.
12
மீட்டுணர்வோம்

1 இறையாண்மைமிகு அரசர் நாட்டின் அரண்


அரசர் அல்லது சுல்தான் இறையாண்மைமிகு
அரசின் உயரிய ஆட்சியாளர் ஆவார். அரசு என்பது
அங்கீகரிக்கப்பட்ட முறையில் ஆட்சி செய்யப்படும்
மாநிலம் அல்லது நாடு ஆகும்.

2 அரசர் மரியாதைக்கும் விசுவாசத்திற்கும் உரியவர்


ஸ்ரீ தெரி புவானா (அரசர்), டெமாங் லெபார் டாவுன்
(மக்கள்) இடையிலான வாடாட் அரசர், சுல்தான்
மீதான மக்களின் விசுவாசத்திற்கு அடிப்படையாக
அமைந்தது.

3 இறையாண்மைமிகு அரசர்
இறையாண்மை என்பது அரசர் அல்லது சுல்தான்
தங்கள் அரசின் மீதான உச்ச அதிகாரத்தின்
அடையாளமாகும். அரசர் அல்லது சுல்தானின்
ஆணையை மீறுவது துர�ோகம்.

4 அரசமைப்பின் மாற்றங்கள்
த�ொடக்கக்கால மலாய் அரசுகளின் ப�ோது அரசர்
அல்லது சுல்தான் முழு அதிகாரம் க�ொண்டிருந்தார்.
தற்பொழுது அரசர் அல்லது சுல்தானின் அதிகாரம்
அரசியலமைப்புக்கு உட்பட்டுள்ளது.

5 உலகின் அரசமைப்பு
உலகின் அரசமைப்பு ஆட்சிமுறையை அமல்படுத்தும்
நாடுகளில் மலேசியா, தாய்லாந்து, யுனைட்டட்
கிங்டம், மஹ்க்ரிபீ, டென்மார்க் ஆகியவை
அடங்கும்.

இந்த அலகு, அரசமைப்பு த�ொடர்பான வரலாறு, வளர்ச்சி, நம் நாட்டில் மலாய்


அரசர்களின் நிலை, பங்கு ஆகியவற்றை விவரிக்கின்றது. இந்த அறிவானது
நாட்டின் பாரம்பரியமாக விளங்கும் அரசமைப்பு மீது பெருமை க�ொள்ளும்
உணர்வை ஊட்டுகிறது. அடுத்த அலகு இஸ்லாமிய சமயம் கூட்டரசுச் சமயம்
என்பதை விவரிக்கின்றது. Saiz sebenar

13
சிந்தித்துப் பதிலளி
அ. கீழ்க்காணும் கூற்றுகளுக்குச் சரி, பிழை என அடையாளமிடுக.

1. அரசு என்பது மாநிலம் அல்லது நாட்டைச் சட்டப்படி


ஆள்வதாகும்.

2. த�ொடக்கக்கால மலாய் அரசர்களின் காலந்தொட்டே


அரசமைப்பு பின்பற்றப்படுகிறது.

3. யாங் டி பெர்துவா நெகிரியை அரசர் அல்லது சுல்தான்


நியமனம் செய்வார்.
4. வாடாட், தெரி புவானாவிற்கும் டெமாங் லெபார்
டாவுனிற்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கையாகும்.

5. ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது சுல்தான் த�ொடர்ந்து முழு


அதிகாரம் க�ொண்டிருந்தார்.

6. மாட்சிமை தாங்கிய மாமன்னர் அரசமைப்பு, சுதந்திரத்திற்குப்


பின்னரே அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆ. க�ொடுக்கப்பட்டுள்ள ச�ொற்களுக்கு ஏற்பக் கட்டத்தில் உள்ள ச�ொற்களுக்கு


வட்டமிடுக.

இறையாண்மை
இ து த பி ரி ட் டி ஷ் ம் ரா வி
விசுவாசம்
ம் றை ர சு ல் தா ன் ஜி து ஜா சு
பிரிட்டிஷ்
வி ந் யா ய் து ச் கி வி ர�ோ ஒ வா
முழு
சு கி தா ண் யி மே சு சு க மு ச அதிகாரம்

துர�ோகம்
அ ர ச ர் மை க கெ வா ம் ட் ம்

இ ரா ஜ து ர�ோ க ம் ச சி ம் க் சுல்தான்

மு ழு அ தி கா ர ம் ம் து டெ சி அரசர்

Saiz sebenar
இப்பக்கத்தைப் படியெடுத்து வழங்கிடுக.
14
நாட்டை நேசிப்போம்
நாட்டின் பாரம்பரிய அரசமைப்பு மலேசியாவின் வளப்பத்தையும் சுபிட்சத்தையும்
உறுதிச் செய்கிறது.

16ஆவது மாட்சிமை தாங்கிய மாமன்னரான அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-


முஸ்தாபா பில்லா ஷா அவர்களின் முடிசூட்டு விழா தேசிய அரண்மனையில் நடந்தேறியது.
(மூலம்: Jabatan Penerangan Malaysia)

சமுதாயம்
தனிநபர் அரசமைப்பைப் ப�ோற்றுவது
அரசமைப்பை நன்கு மக்களிடையே ஒற்றுமையை
தெரிந்து க�ொள்வது வலுப்படுத்தும்.
விசுவாச உணர்வை
விதைக்கும்.
நாடு
இறையாண்மை அரசமைப்பு
மீதான விசுவாசத்தையும்
நாட்டை நேசிக்கும்
பண்பையும் வலுப்படுத்தும்.

Saiz sebenar

15
தலைப்பு 6: நம் நாட்டின் பாரம்பரியம்

அலகு
மலேசியாவில்
2 இஸ்லாமிய சமயம்

சாரம்
சமூகத்தினரிடையே பல்வேறு சமயமும் நம்பிக்கைகளும் உள்ளன. இந்த
அலகு மலாயாவின் சமூகத்தினரிடையே காணப்படும் சமயப் பின்னணியையும்
நம்பிக்கைகளையும் விவாதிக்கின்றது. மேலும், இந்த அலகு மலாக்கா மலாய்
மன்னராட்சிக் காலத்தில் இஸ்லாமிய சமய வருகையின் வரலாறு; சுதந்திரம்
வரைக்குமான மலாய் மாநிலங்களின் நிர்வாகத்தில் இஸ்லாமிய சமயத்தின்
நிலை; கூட்டரசுச் சமயமாக விளங்கும் இஸ்லாமிய சமயம் ஒற்றுமையை
உருவாக்குவதில் க�ொண்டுள்ள பங்கு ஆகியவற்றை விளக்குகின்றது.

நீங்கள் கற்கப் ப�ோவது என்ன?


1. மலாயாவில் உள்ள சமூகத்தினரின் சமயமும் நம்பிக்கைகளின்
பின்னணியும்.
2. மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில் இஸ்லாமிய சமய
வருகையின் வரலாறு.
3. சுதந்திரம் வரையிலான மலாய் மாநிலங்களின் நிர்வாகத்தில்
இஸ்லாமிய சமயத்தின் நிலை.
4. கூட்டரசுச் சமயமாக இஸ்லாமிய சமயத்தின் நிலை.
5. ஒற்றுமையை உருவாக்குவதில் இஸ்லாமிய சமயத்தின்
பங்களிப்பு.
Saiz sebenar

16
PS
AK
அடிப்படை வரலாற்றுச் சிந்தனைத் திறன்
1. மலாயாவில் உள்ள சமூகத்தினரின் இஸ்லாமிய சமயத்தின் கால
வரைக்கோடு, நம்பிக்கைகள் ஆகியவற்றை விளங்கிக் க�ொள்ளச் செய்தல்.
2. மலாயாவில் இஸ்லாமிய சமயத்தின் வருகைக்கான குறிப்பிடத்தக்கச்
சான்றுகளை ஆராய்தல்.
3. இஸ்லாமிய சமயத்தில் ஒற்றுமையை உருவாக்குகின்ற ப�ொதுமை
நெறிகளைக் காட்சிநிலையில் கற்பனை செய்தல்.

குடியியல் நெறி

ப�ொறுப்புணர்வு மலேசியத் தேசியப் பள்ளிவாசல்


மதித்தல் (மூலம்: Koleksi Dewan Bahasa dan Pustaka)
Saiz sebenar

17
பின்பற்றப்படும் சமயம் மதிக்கப்படும் நம்பிக்கை
மலாயாவில் உள்ள சமூகத்தினர் த�ொடக்கக்காலம் த�ொட்டே சமயப் பிடிப்பும்
நம்பிக்கைகளும் க�ொண்டிருந்தனர். இ்வற்றுள் இயற்கை வழிபாடு (Animisme),
இந்து, பெளத்தம், இஸ்லாம், கிறிஸ்துவம் ஆகியவை அடங்கும்.

இயற்கை வழிபாடு
• இது மலாயாவில் உள்ள
சமூகத்தினரின்
த�ொடக்கக்கால
நம்பிக்கையாகும்.
• முன்னோர்களின் ஆத்மா
மீதும் அமானுஷ்ய
சக்தி மீதும் நம்பிக்கை
க�ொண்டிருந்தனர்.
இந்து சமயம்
பெளத்த சமயம் • மலாயாவுக்கு
• மலாயாவுக்கு வணிகம் வணிகத்தின்
வாயிலாகக் வாயிலாகக்
க�ொண்டுவரப்பட்டது. க�ொண்டுவரப்பட்டது.
• எட்டு உயர்நிலை • மறுபிறப்பில் நம்பிக்கை
நெறிகளைக் கடைப்பிடித்தல். க�ொண்டுள்ளது.

இஸ்லாமிய சமயம்
• மலாயாவுக்கு வணிகர்கள்,
உலாமாக்கள், சமயப்
ப�ோதகர்களால்
க�ொண்டுவரப்பட்டது.
• இஸ்லாமியக் க�ோட்பாடுகளையும்
இமான் க�ோட்பாடுகளையும் கிறிஸ்துவ சமயம்
உறுதியாக நம்புதல்.
• ப�ோர்த்துகீஸிய
இயற்கை வழிபாடு அன்றும் இன்றும் அமலில் காலனித்துவ
உள்ளது. இந்து, பெளத்தம், இஸ்லாமிய சமயங்களின் வருகைக்குப் பின்னர்
வருகை மலாயாவைப் பல்வேறு சமயத்தவர்கள் க�ொண்ட த�ோன்றியது.
சமூகமாக உருவாக்கியது. ப�ோர்த்துகீஸியர், டச்சு, • ஏசுவை இறைவனின்
பிரிட்டிஷார் ஆகிய காலனித்துவ வருகை மலாயாவுக்குக் குழந்தையாக
கிறிஸ்துவ சமயத்தைக் க�ொண்டு வந்தது. நம்புதல்.

ந ட வ டி க ் கை
Saiz sebenar குழு வாரியாக, மலாயாவில் உள்ள சமயம், நம்பிக்கைகள்
ஆகியவற்றின் பின்னணியைக் கலந்துரையாடுக. 6.2.1
18
மலாக்கா மலாய் மன்னராட்சிக்
காலத்தில் இஸ்லாத்தின் வருகை
திரங்கானுவிலும் நெகிரி செம்பிலானிலும் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள்,
இஸ்லாமிய சமயம் மலாயாவில் இருந்துள்ளதை நிரூபிக்கின்றன.
த�ொடக்கக்கால மலாய் அரசாட்சிக் காலந்தொட்டே இஸ்லாமிய சமயம்
பரப்பப்பட்டுள்ளது.

மலாயாவில் இஸ்லாத்தின் வருகைக்கான அகழ்வாராய்ச்சி சான்றுகள்

❃ 1303ஆம் ஆண்டு எனத் ❃ 1467ஆம் ஆண்டு எனத்


தேதியிடப்பட்ட க�ோல பெராங், தேதியிடப்பட்ட பெங்காலான்
சுங்கை தெரெசாட்டில் கெம்பாஸ் எனும் இடத்தில்
கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு, கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு
திரங்கானுவில் இஸ்லாமிய சமயத்தின் நெகிரி செம்பிலானில் இஸ்லாமிய
வருகையை நிரூபிக்கின்றது. சமயத்தின் வருகையை
நிரூபிக்கின்றது.

(மூலம்: Nik Hassan Shuhaimi Nik Abdul Rahman. “Sejarah Tulisan Jawi melalui Kajian Arkeologi
di Alam Melayu” dlm. Jurnal Arkeologi Malaysia, Bil. 22, 2009)
வி ர ை
ந் து ப தி ல ளி
மலாயாவில் இஸ்லாமிய சமயத்தின் வருகையை நிரூபிக்கும்
இரண்டு கல்வெட்டுச் சான்றுகளின் அமைவிடங்களைக் கூறுக.
உங்களுக்குத் தெரியுமா?
அகழ்வாராய்ச்சி சான்றுகளுள்
ஒன்றான கல்வெட்டுகளை கல்வெட்டு, 'பிரசஸ்டி' (Prasasti) என்றும்
நாம் ஏன் பேண வேண்டும்? அழைக்கப்படுகிறது. 'பிரசஸ்டி' எனும் ச�ொல்
சமஸ்கிருத ம�ொழியிலிருந்து த�ோன்றியது.
Saiz sebenar
அகழ்வாராய்ச்சி மூலங்களைப் பேணுவதன் அவசியத்தை மாணவர்கள் விளங்கிக்
க�ொள்ள வழிகாட்டுதல். 19
15ஆம் நூற்றாண்டின் த�ொடக்கத்தில், மலாக்கா புகழ் பெற்ற கடல் வாணிப
மையமாக உருவானது. மலாக்கா, ஏற்றுமதி இறக்குமதி துறைமுகமாகவும்
இஸ்லாமிய வணிகர்களும் இஸ்லாம் அல்லாத வணிகர்களும் கூடும் தளமாகவும்
திகழ்ந்தது. மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில் இஸ்லாமிய சமய
வருகைக்குப் பல்வேறு காரணிகள் உந்துதலாக அமைந்தன.

இஸ்லாமிய வணிகர்களின் பங்கு


அரேபியா, இந்திய நாடுகளிலிருந்து வருகை புரிந்த இஸ்லாமிய
வணிகர்கள் பரப்புரை நடவடிக்கை வாயிலாக இஸ்லாத்தைப்
பரப்பினர். சில வணிகர்கள் மலாக்கா மக்களை மணம்புரிந்து,
மலாக்கா உள்ளூர் மக்களிடையே இஸ்லாத்தைப் பரப்பினர்.
மலாய்
மன்னராட்சிக் உலாமாக்களின் பங்கு
காலத்தில் மலாக்காவில் இஸ்லாத்தைப் பரப்பியவர் மெக்காவிலிருந்து வந்த
இஸ்லாமிய சேக் அப்துல் அஜிஸ் எனும் உலாமா என்று ஹிக்காயாட் ராஜா
வருகையின் ராஜா பாசாய் (Hikayat Raja-raja Pasai) குறிப்பிடுகிறது. இவர் ராஜா,
ஆட்சியர், மலாக்கா மக்கள் இஸ்லாத்தைத் தழுவக் காரணமானார்.
காரணிகள்
சுல்தானின் பங்கு
மெகாட் இஸ்கண்டார் ஷா, பாசாய் இளவரசியைத் திருமணம்
செய்து க�ொண்டதன் விளைவாக இஸ்லாத்தைத் தழுவினார்.
சுல்தான் இஸ்லாத்தைத் தழுவியதால் மலாக்கா மக்களும் அவ்வாறே
இஸ்லாத்தைத் தழுவினர்.

ச�ொற்களஞ்சியம்

ஏற்றுமதி
இறக்குமதி:
வெளிநாட்டுப்
ப�ொருள்களைப்
பெறுவதும்
உள்நாட்டுப்
ப�ொருள்களை
விநிய�ோகம்
செய்வதும்.
துறைமுகம்:
வணிகத்திற்காகப் மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில், மலாக்கா
பல்வேறு கப்பல்கள் வந்தடைந்ததுமே வணிகர்களும் உலாமாக்களும் த�ொழுகை
முகாமிடும் இடம். மேற்கொள்ளும் காட்சிப்படம்.
(மூலம்: Muzium Sejarah dan Etnografi, Melaka)

மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில் இஸ்லாத்தைப் பரப்புவதில்


Saiz sebenar
சுல்தான், வணிகர்கள், உலாமாக்கள் பெரும் பங்கு வகித்தனர்.
மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில் இஸ்லாமிய சமய வருகைக்கான
20 காரணிகளை மாணவர்கள் விளங்கிக் க�ொள்ள வழிகாட்டுதல்.
மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்திலான சட்ட அமைப்பில் இஸ்லாமிய
சட்டங்களும் (Hukum Islam) உள்ளடங்கியுள்ளன. மலாக்காவில் இரண்டு சட்ட
அமைப்புமுறைகள் உள்ளன. அவை மலாக்கா சட்ட மரபு (Hukum Kanun Melaka),
மலாக்கா கடல் சட்ட விதிகள் (Undang-undang Laut Melaka) ஆகும்.

மலாக்கா சட்ட மரபு மலாக்கா கடல் சட்ட விதிகள்


(மூலம்: Pusat Kebangsaan Manuskrip Melayu, Perpustakaan Negara Malaysia)

மலாக்கா சட்ட மரபு மலாக்கா கடல் சட்ட விதிகள்


இந்தச் சட்டம் அரசர், ஆட்சியர் இச்சட்டம் கடல் விதிமுறை, வாணிப
சிறப்புரிமையையும் ப�ொறுப்பையும் விதிமுறை, வணிகப் பரிவர்த்தனை
உள்ளடக்கிய 44 பிரிவுகள் விதிமுறை த�ொடர்பான 25
க�ொண்டதாகும். பிரிவுகளை உள்ளடக்கியது.

இச்சட்ட அமைப்பிலுள்ள இஸ்லாமியச் இச்சட்ட அமைப்பிலுள்ள


சட்டம் குற்றவியல், வணிகப் இஸ்லாமியச் சட்டம், குற்றவியல்
பரிவர்த்தனை, குடும்பவியல் ப�ோன்ற குற்றங்களுக்கான தண்டனைகள்
குற்றங்களுக்குரிய தண்டனைகள் த�ொடர்புடையதாகும்.
த�ொடர்புடையதாகும்.
இந்தச் சட்டம் வாணிப
இந்தச் சட்டம் மலாக்கா மாநில நடவடிக்கைகளைச் சீரமைப்பத�ோடு
மக்களிடையே அமைதியையும் மலாக்காவிற்கு வரும் வணிகர்களுக்கு
பாதுகாப்பையும் உருவாக்கியது. நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.
[மூலம்: Muhammad Yusoff Hashim, 1980. “Islam dalam Sejarah Perundangan Melaka di Abad Ke-15/16”
dlm. Khoo Kay Kim (peny.) Islam di Malaysia. Kuala Lumpur: Penerbitan Persatuan Sejarah Malaysia]

மலாயாவுக்கு இஸ்லாத்தின் வருகை, அகழ்வாராய்ச்சிக் கண்டெடுப்பு மூலம்


நிரூபிக்கப்பட்டுள்ளது. மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில், இஸ்லாமிய
சமய வளர்ச்சி அரசாட்சி முறைமை, சட்ட அமைப்பு, கல்வி ப�ோன்ற சமூகத்தின்
பல்வேறு கூறுகளில் மாற்றங்களை ஏற்படுத்தியது.
வி ர ை
ந் து ப தி ல ளி
மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில் காணப்பட்ட
இரண்டு சட்ட அமைப்பு மூலங்களைக் குறிப்பிடுக. Saiz sebenar
6.2.2
மலாக்கா சட்ட மரபு, மலாக்கா கடல் சட்ட விதிகள் ஆகியவற்றிற்கிடையிலான
வேறுபாடுகளை மாணவர்கள் விளங்கிக் க�ொள்ள வழிகாட்டுதல். 21
நிர்வாகத்தில் இஸ்லாமிய சமயம்

15ஆம் நூற்றாண்டில் மாநில நிர்வாகத்தில் இஸ்லாமிய சமயம் முக்கியப்


பங்கை ஆற்றியுள்ளது. மலாக்கா சட்ட மரபு, மலாக்கா மலாய் மன்னராட்சிக்
காலத்தில் நிர்வாக முறைக்கு ஒரு மேற்கோளாக விளங்கியத�ோடு வேறு
மலாய் மாநிலங்களின் சட்ட மரபுகளான பகாங் சட்ட மரபு (Hukum
Kanun Pahang), பேராக் 99 சட்ட மரபு (Undang-undang 99 Perak)
உருவாக்கத்திற்கும் மேற்கோளாகத் திகழ்ந்தது.

பகாங் சட்ட மரபு பேராக் 99 சட்ட மரபு

(மூலம்: Koleksi Dewan Bahasa dan Pustaka)

சட்டம் மனித வாழ்க்கையைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டது. நாட்டின்


சுபிட்சம், சட்டத்தைக் கடைப்பிடிக்கும் குடிமக்களால் நிலைநிறுத்தப்படுகிறது.

சட்டம் எவ்வாறு நல்லிணக்கமிக்க


மக்களை உருவாக்குகின்றது?

Saiz sebenar
நல்லிணக்கமிக்க சமுதாயத்தை உருவாக்குவதில் சட்டத்தின் பங்கை மாணவர்கள்
22 அறிந்து க�ொள்ள வழிகாட்டுதல்.
காலனித்துவத்தின் ப�ோது
ப�ோர்த்துகீஸிய, டச்சுக் காலனித்துவத்தின்போது, இஸ்லாமியச் சட்டம்
அமல்படுத்தப்பட்டது. எனினும், பிரிட்டிஷ் காலனித்துவத்தின் ப�ோதும் ஜப்பானிய
ஆக்கிரமிப்பின் ப�ோதும் இஸ்லாமியச் சட்டம், மலாய் மாநிலங்களில் மட்டுமே
பயன்படுத்தப்பட்டது.
பிரிட்டிஷ் காலனித்துவக் காலம்

❋ சுல்தான், தத்தம் மாநிலங்களின் இஸ்லாமிய சமயத்திற்கும் மலாய்ச் சடங்கு


சம்பிரதாயத்திற்கும் தலைவராகத் திகழ்ந்தார்.
❋ இஸ்லாமியச் சட்டம் குடும்பவியல், பூர்வீகச் ச�ொத்து, நன்கொடை (zakat)
த�ொடர்பான விவகாரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

ஜப்பானிய ஆக்கிரமிப்புக் காலம்

❋ சுல்தான், தத்தம் மாநிலங்களின் இஸ்லாமிய சமயத்திற்கும் மலாய்ச் சடங்கு


சம்பிரதாயத்திற்கும் தலைவராகத் திகழ்கிறார்.
❋ இஸ்லாமியக் குடும்பச் சட்டத்தை மேற்கொள்ள இஸ்லாமிய சமய சபையை
ஜப்பானியர் உருவாக்கினர்.

ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குப் பின்னர், பிரிட்டிஷார் மீண்டும் காலனித்துவம்


செய்தத�ோடு இஸ்லாமியச் சட்டங்கள் த�ொடர்ந்து அமலாக்கப்பட்டன. அந்நிய
சக்திகளின் வருகை த�ொடர்ந்து மாறினும் நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும்
இஸ்லாமிய சமயத்தின் நிலை த�ொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு கூட்டரசு
அரசியலமைப்பில் இடம்பெறச் செய்தது.

வி ர ை
ந் து ப தி ல ளி

பிரிட்டிஷ் காலனித்துவத்தின்போது சுல்தானின் பங்கைக்


குறிப்பிடுக.

பிரிட்டிஷ் காலனித்துவத்தில்
இஸ்லாமியச் சட்டம் ஏன் முழுமையாகக்
கடைப்பிடிக்கப்படவில்லை?

Saiz sebenar
6.2.3 சுதந்திரம் வரையிலான மலாய் மாநிலங்களின் நிர்வகிப்பில் இஸ்லாமிய சமயத்தின் பங்கை
மாணவர்கள் விளங்கிக் க�ொள்ள வழிகாட்டுதல்.
23
கூட்டரசு மலேசியாவின் சமயம்
பல்வேறு சமயம், நம்பிக்கை த�ோன்றலின் வாயிலாக மலேசியா தனக்கே
உரிய அடையாளத்தைக் க�ொண்டுள்ளது. பல்வகைமை காரணமாக மலேசியா
சடங்கு, பண்பாடு, பாரம்பரியத்தில் வளம் பெற்றுள்ளது. எனினும், கூட்டரசு
அரசியலமைப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய சமயம் கூட்டரசுச் சமயம்
ஆகும்.
1 சீன் யீ, நான் மலேசியக் குடிமகனாக 2 ஆமாம் அமீர், நாம் ஆண்டு முழுதும்
இருப்பதில் பெருமைக�ொள்கிறேன். பல்வேறு சமய, இன விழாக்களான
இஸ்லாம் கூட்டரசுச் சமயமாக முகம்மது நபிகள் நாயகம் பிறந்தநாள்,
இருப்பினும் பிற சமயங்களையும் தைப்பூசம், விசாக தினம் க�ொண்டாடுவது
அமல்படுத்த முடியும். ஆச்சரியப்படுவதற்கில்லை.

3 நான் ஓர் ஈபானியன். நாங்கள் 4 நான் ஒரு கடசானியன்.


'காவாய் திருநாள்' (Hari Gawai) நாங்கள் கெ அமாத்தான் திருவிழாவைக்
க�ொண்டாடுகிற�ோம். (Pesta Kaamatan) க�ொண்டாடுகிற�ோம்.
மலேசியக் குடிமக்களாகிய நாம், நாட்டின் ஒற்றுமை த�ொடர்ந்து
பேணப்பட பிற இனத்தவரின் சமயத்தையும் நம்பிக்கைகளையும் மதிக்க
வேண்டும்.
வி ர ை
ந் து ப தி ல ளி உங்களுக்குத் தெரியுமா?
மலேசியாவின் கூட்டரசுச் கெ அமாத்தான் திருவிழா, அறுவடைத்
சமயம் எது? திருநாளை (semangat padi) மதிக்கும்
விழாவாகும்.

கூட்டரசுச் சமயமான இஸ்லாமிய சமயத்தை


மதிப்பதன் அவசியம் என்ன?
Saiz sebenar
6.2.4
K6.2.7
24 K6.2.8
இஸ்லாமும் சமூக ஒற்றுமையும்
ஒவ்வொரு சமயமும் அதன் பின்பற்றுநர்கள் நல்ல நெறிகளை அமல்படுத்த
வலியுறுத்துகின்றது; ஒழுக்கமற்ற செயல்களுக்குத் தடை விதிக்கின்றது.
இஸ்லாமிய சமயம் தன் பின்பற்றுநர்களிடையே சமத்துவத்தையும்
மனிதநேயத்தையும் அமல்படுத்தி ஒற்றுமையை உருவாக்கி மக்கள் சுபிட்சமாக
வாழ வழிவகுக்கின்றது.
விட்டுக் க�ொடுத்தல் அன்புடைமை
• பல்வேறு வேலைகளில் • வெவ்வேறு சமயத்தவராக
ஒத்துழைத்தல். இருப்பினும் அன்பு செலுத்துதல்;
• வழிபாட்டுத் தலங்களை மதித்தல்.
• சமயப் பின்பற்றுதலில் நேசித்தல்.
கட்டாயமின்மை. • தேவைப்படுவ�ோருக்கு
உதவுதல்.

ஒற்றுமையை
உருவாக்கும்
சமய சமத்துவம்

மிதமான ப�ோக்கு அமைதி


• பல்வேறு வாழ்க்கைச் சூழலில் • சந்திப்புக் கூட்டத்தின்வழி பலரின்
செலவு செய்தல், பேச்சு, உடை முடிவை அறிதல்.
ஆகியவற்றில் மிதமான ப�ோக்கைக் • சச்சரவு ஏற்படக் காரணமாக
கடைப்பிடித்தல். இல்லாதிருத்தல்.

ந ட வ டி க ் கை
1. நான்கு குழுக்களாக மாணவர்களைப் பிரித்தல்.
2. ஒவ்வொரு குழுவினரும் நல்லிணக்கமிகு சமுதாயத்தை உருவாக்க
அமல்படுத்த வேண்டிய சமயக் கூறுகளை விவாதித்துப் பட்டியலிடுதல்.
3. கிடைக்கப்பெற்ற தகவல்களைப் படைத்தல். Saiz sebenar
சமய சமத்துவ நெறிகளை விளங்கிக் க�ொள்ளும் நடவடிக்கையை மேற்கொள்ள
மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
25
மனிதருக்கும் மனிதருக்குமான
த�ொடர்பு
நல்ல அபிப்பிராயம் க�ொள்வத�ோடு, சக
மனிதரை மதித்தல்.
மனிதருக்கும்
இறைவனுக்குமான
த�ொடர்பு
சமயப் ப�ோதனைகளை
அமல்படுத்துவத�ோடு அது
விதிக்கும் தடைகளை
விட்டொழித்தல்.
மனிதநேயம்
சுபிட்சத்தின்
மனிதருக்கும்
அடித்தளம் சுற்றுச்சூழலுக்குமான
த�ொடர்பு
சுற்றுச்சூழலைப் பேணுதல்,
புனரமைத்தல், அழகுப்படுத்துதல்.

(மூலம்: Koleksi peribadi


Hasfalila binti Hassan)

சமயத்தில் காணப்படும் மனிதநேயமும் சமத்துவமும் சுபிட்சத்தை


உருவாக்குவதில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஒற்றுமை நிறைந்த
மக்களை உருவாக்க இந்நெறிகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.

செஜாத்ரா
மலேசியா
காண�ொலிப்
பாடல் 21ஆம் தி றன்
நூற்றாண்டுக் கற்றல் விரைவாக எழுதுதல்
வி ர ை
ந் து ப தி ல ளி பள்ளியில் ஒற்றுமையை நிலைநாட்ட நீ
சுற்றுச்சூழலைப் பேணும் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளை ஐந்து
முறைகளைக் குறிப்பிடுக. மணித்துளிகளில் குறிப்பிடுக.
Saiz sebenar
21ஆம் நூற்றாண்டின் கற்றல் திறனுக்கான நெறிகளை மாணவர்கள் விளங்கிக் 6.2.5
க�ொள்ள வழிகாட்டுதல். K6.2.6
26
மீட்டுணர்வோம்
பின்பற்றப்படும் சமயம் மதிக்கப்படும் நம்பிக்கை
¯ இயற்கை வழிபாடு ¯ இஸ்லாம்
¯ இந்து ¯ கிறிஸ்து
¯ பெளத்தம்
மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில்
இஸ்லாத்தின் வருகை
அகழ்வாராய்ச்சி வருகைக்கான காரணிகள்
சான்று ¯ இஸ்லாமிய வணிகர்களின்
¯ கல்வெட்டு பங்கு
¯ உலாமாக்களின் பங்கு
¯ சுல்தானின் பங்கு

நிர்வாகத்தில் இஸ்லாமிய சமயம்


¯ மலாக்கா சட்ட மரபு
¯ மலாக்கா கடல் சட்டம்
காலனித்துவ நிர்வாகத்தின்போது
இஸ்லாமிய சமயம்
¯ பிரிட்டிஷ் காலனித்துவம்
¯ ஜப்பானிய ஆக்கிரமிப்பு

மலேசியக் கூட்டரசுச் சமயம்


கூட்டரசு அரசியலமைப்பில் இஸ்லாமிய சமயம்
கூட்டரசுச் சமயமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
எனினும், வேறு சமயங்களையும் அமல்படுத்த முடியும்.

இஸ்லாமும் சமூக ஒருமைப்பாடும்


¯ விட்டுக்கொடுத்தல் ¯ மனிதருக்கும் இறைவனுக்குமான த�ொடர்பு
¯ மிதமான ப�ோக்கு ¯ மனிதருக்கும் மனிதருக்குமான த�ொடர்பு
¯ அன்புடைமை ¯ மனிதருக்கும் சுற்றுச்சூழலுக்குமான
¯ அமைதி த�ொடர்பு

இந்த அலகு, மலாயாவில் ஒற்றுமையை உருவாக்கிய இஸ்லாமிய சமய


நெறிகளின் மேம்பாட்டை விளக்குகின்றது. அடுத்த அலகு, ம�ொழி நாட்டின்
பாரம்பரியம் எனும் வகையில் மலாய்மொழியின் வரலாற்றையும் பங்கையும்Saiz sebenar
விவாதிக்கின்றது.
27
சிந்தித்துப் பதிலளி

காலி இடத்தைச் சரியான பதிலைக் க�ொண்டு நிறைவு செய்க.

இஸ்லாமிய இஸ்லாமிய இயற்கை


சமயம் சமய சபை வழிபாடு

மலாக்கா சட்ட சுற்றுச்சூழலைப் பேணுதலும் அன்புடைமை


மரபு புனரமைத்தலும்

வணிகர்கள் திரங்கானு
கல்வெட்டு

1. _______________ மலாயாவில் இஸ்லாமிய சமய வருகையை நிரூபிக்கின்றது.

2. நம் நாட்டின் கூட்டரசு சமயம் ________________ ஆகும்.

3. ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது _________________ த�ோற்றுவிக்கப்பட்டது.

4. _______________ மலாக்காவின் சட்ட மூலம் ஆகும்.

5. _______________ மலாக்காவிற்கு இஸ்லாமிய சமயத்தைக் க�ொண்டு


வந்தனர்.

6. _______________ ஒவ்வொரு ப�ொருளிலும் ஆத்மாவும் அமானுஷ்ய சக்தியும்


உள்ளதாக நம்புகிறது.

7. மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்குமான த�ொடர்பு _____________ மூலம்


வெளிப்படுகின்றது.

8. வெவ்வேறு சமயத்தவராக இருப்பினும் ஒருவரை நேசித்தலும்


நேசிக்கப்படுதலும் அந்நபர் _______________ அதிகம் க�ொண்டுள்ளதாகக்
காட்டுகின்றது.
Saiz sebenar
இப்பக்கத்தைப் படியெடுத்து வழங்கிடுக.
28
நாட்டை நேசிப்போம்
மலாயாவில் த�ொடக்கக்கால மலாய் அரசுகளின் காலந்தொட்டே இஸ்லாமிய
சமயம் வேறூன்றி இருக்கிறது. மக்கள் சுபிட்சமாக வாழ்வதற்குப் புரிந்துணர்வு,
ஒருவர் ஒருவரை மதித்தல் ஆகியன த�ொடர்ந்து நிலைநிறுத்தப்படுகிறது.

பிற இனத்தவரின் சமயம், நம்பிக்கைகளை மதிப்பதன்வழி மலேசியாவில் சமுதாயத்தின்


ஒற்றுமையை அடைய முடிந்தது.
(மூலம்: Koleksi peribadi Hasfalila binti Hassan)

சமுதாயம்
தனிநபர் பிற இனத்தவரின் சமயத்தையும்
தன்னிடமுள்ள சமய நெறி நம்பிக்கையையும் அறிந்து
சிறந்த ஆளுமையை மதிப்பதன் வழி மக்கள்
உருவாக்க அவசியமாகிறது.
மகிழ்ச்சியாக வாழலாம்.

நாடு
விட்டுக்கொடுத்தல், அன்புடைமை,
இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு ஆகியவை
நாட்டின் சுபிட்சத்திற்கு வழி வகுக்கும்.
Saiz sebenar

29
தலைப்பு 6: நம் நாட்டின் பாரம்பரியம்

அலகு
மலாய்மொழி நமது
3 பாரம்பரியம்
சாரம்
அன்றைய இன்றைய சமூகத்தினரின் வாழ்க்கையில் வரலாற்றையும்
பங்கையும் விளங்கிக் க�ொள்வதற்காக மலாய்மொழி கற்பது
அவசியமாகும். நம் நாட்டின் பாரம்பரியத்தை நிலைநாட்டப் பல்வேறு
முயற்சிகளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த
அலகு மலாய்மொழிப் பாரம்பரிய வழித்தோன்றல், உலகின் மலாய்மொழி
பேசுகின்றவர் பகுதி, முந்தைய காலம் த�ொட்டு இன்று வரையிலான
மலாய்மொழியின் பங்கு ஆகியவற்றை விவாதிக்கின்றது.

Saiz
Saizsebenar
sebenar

3030
'பூர�ோங் தெம்புவா டெங்கான் பூடாக் மாலாஸ்'
எனும் நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள பழைய குடியியல் நெறி
மலாய்மொழி எழுத்துக் கூட்டல்.
(மூலம்: Burong Tempua dengan Budak Malas, மதித்தல்
1971. Johor: Pustaka Pendidekan Sdn. Bhd.) ப�ொறுப்புணர்வு

நீங்கள் கற்கப் ப�ோவது என்ன?


1. மலாய்மொழியின் பாரம்பரிய வழித்தோன்றல்.
2. உலகில் மலாய்மொழி பேசுகின்றவர் பகுதி.
3. அன்றும் இன்றும் மலாய்மொழியின் பங்கு.

PS
AK

அடிப்படை வரலாற்றுச் சிந்தனைத் திறன்


1. மலாய்மொழி வரலாறு, பங்கு ஆகியவற்றின் காலநிரல் மாற்றத்தை
விளங்கிக் க�ொள்ளல்.
2. நாட்டின் பெருமைமிகு பாரம்பரியம் எனும் வகையில் மலாய்மொழியின்
முக்கியத்துவத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் முந்தைய
சிக்கல்களையும் பிரச்சினைகளையும் விளங்கிக் க�ொள்ளல்.
3. மலாய்மொழி அறிவு ம�ொழி, ஒற்றுமை ம�ொழி எனும் வகையில் அதன்
மாற்றங்களையும் த�ொடர்ச்சியையும் விவரித்தல்.
Saiz
Saizsebenar
sebenar

3131
மலாய்மொழி பாரம்பரிய வழித்தோன்றல்

ம�ொழி மனிதனின் த�ொடர்புக் கருவி ஆகும். மலாய்மொழி பிலும் (filum) எனக்


கூறப்படும் ஆஸ்ட்ரிக்கிலிருந்து த�ோன்றியது. இந்தப் பிலும்மிலிருந்துதான்
அஸ்ட்ரோனேசியா குடும்பம் (rumpun) த�ோன்றியது. மலாய்த் தீவுக்
கூட்டங்களில் பேசப்படும் வேறுபட்ட ஆயிரக்கணக்கான ம�ொழிகளில்
மலாய்மொழியும் ஒன்று. உலகில் புகழ் பெற்ற மலாய்மொழி, மிதமான வெளிக்
கூறுகளை எளிதாக ஏற்றுக்கொள்ளும் இயல்புகளைப் பெற்றுள்ளதால்
த�ொடர்ந்து விரிவடையும் ம�ொழியாகத் திகழ்கின்றது.

வ மலாய்மொழி பாரம்பரிய
வழித்தோன்றலின் சுருக்கம்
அந்தமான்
கடல்

சயாம்
விரிகுடா
மலாய்மொழி
வியாட்நாம்
(மெலாயு சம்பா)

குடும்பம் -
அஸ்ட்ரோனேசியா
(Rumpun - Austronesia)
தீபகற்ப தென் சீனக் கடல்
மலாயா
புருணை
பிலும்-ஆஸ்ட்ரிக்
(Filum - Austrik)

சுமத்திரா

ப�ோர்னிய�ோ
ச�ொற்களஞ்சியம்

பிலும்: 5000 ஆண்டுகளுக்கும்


மேலான வயதைக் க�ொண்ட
ப�ோர்னிய�ோ கடற்கரை
முதன்மை ம�ொழிக் குடும்பமாகும்.
ஜாவா கடல் குடும்பம் (Rumpun): 2500–
ஜாவா
5000 ஆண்டுகளுக்கும் மேலான
வயதைக் க�ொண்ட ம�ொழிக்
குடும்பமாகும்.

மலாய்மொழியின் நில அசல் வரைபடம்


(மூலம்: Asmah Haji Omar, 2015. Ensiklopedia Bahasa
Melayu. Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka)

வி ர ை
ந் து ப தி ல ளி
Saiz sebenar மலாய்மொழியின் மூலக் குடும்பத்தைக் குறிப்பிடுக.

32
மலாய்மொழி நாட்டின் பாரம்பரியம் எனும் வகையில் இனத்தின்
அடையாளத்தைப் பிரதிபலிப்பதால் அவசியம் நிலைநாட்ட வேண்டும். ஒரு
நாட்டின் நாகரிகத்தைக் கலை கலாச்சாரப் பாரம்பரியம், ம�ொழி, பழக்கங்கள்,
பல்வேறு இனத்தவரின் வாழ்க்கைமுறை ஆகியவற்றிலிருந்தும் அறிய
முடிகிறது. பண்பாட்டுத் த�ொடர்ச்சியை நிலைநாட்ட நாட்டின் பாரம்பரியத்தை
நிலைநிறுத்த வேண்டும்.

Bahasa Melayu Warisan Negara

Bahasa Melayu sanjungan kita,


Usah cemarkan keindahannya,
Gunakanlah dengan bijaksana,
Santun bahasa sama dijaga.

Puisi Melayu tiada kurangnya,


Jadi penyeri hari bahagia,
Kita alunkan warisan budaya,
Lambang kebanggaan kita semua.

Cintailah bahasa kita,


Bahasa Melayu warisan bangsa,
Usahlah malu menuturkannya,
Martabatkan bahasa setiap masa.

Bahasa Melayu warisan kita,


Ayuh semua menuturkannya,
Bahasa juga menyatukan kita,
Aman negara tiada sengketa.
கவிதை: மலாய்மொழி
நாட்டின் பாரம்பரியம்

ந ட வ டி க ் கை மலாய்மொழி பாரம்பரியத்தின்
1. மேற்கண்ட கவிதையைச் சரியான வழித்தோன்றலைக் கற்பதன் வழி
த�ொனியுடன் வாசித்தல். மலாய்மொழி நாட்டின் பாரம்பரியமிக்கது
2. அக்கவிதையின் ப�ொருளை என நம்மை விழிப்படையவும் பெருமை
விளங்கிக் க�ொள்ளுதல். க�ொள்ளவும் செய்கிறது.
3. ‘மலாய்மொழி நாட்டின்
பாரம்பரியம்’ எனும் தலைப்பில் நாட்டின் பாரம்பரியமிக்க
கவிதை ஒன்றனை எழுதுதல். மலாய்மொழியின் அவசியத்தை
4. எழுதிய கவிதையைப் படைத்தல். விளக்குதல்.
Saiz sebenar
6.3.1
ஆசிரியர் • கவிதையைச் சரியான த�ொனியில் வாசித்திட மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
K6.3.4 குறிப்பு • சுயமாகக் கவிதை எழுத மாணவர்களுக்குத் துணைபுரிதல். 33
மலாய்மொழி பேசுவ�ோர் வாழும் பகுதிகள்

மலாய்மொழி மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலந்தொட்டுப் புகழ் பெற்ற


ப�ொக்கிஷமாக விளங்குகின்றது. உலகம் முழுதும் 'லிங்குவா பிரான்கா'
அடிப்படையில் மலாய்மொழியின் பயன்பாடு படர்ந்திருந்தது. பின்வரும்
கரைவரைபடம் உலகில் மலாய்மொழி பேசுகிறவர்களின் படர்ச்சியைக்
காட்டுகின்றது.
வியட்நாம்
(மெலாயு சம்பா)

தைவான்
கம்போடியா

தென் தாய்லாந்து பிலிப்பைன்ஸ்

மலேசியா
சவுதி அரேபியா சூலு
கடல்
தென் சீனக்

ஸ்ரீ லங்கா கடல்

புருணை
இந்தோனேசியா டாருஸ்சலாம்
ஜாவா கடல்

க�ோக�ோஸ் தீவு சிங்கப்பூர்

மடகாஸ்கார்
கிறிஸ்மஸ் தீவு

தென் இந்தியப் பெருங்கடல்


ஆப்பிரிக்கா கிழக்கு ஆஸ்திரேலியா

உலகின் மலாய்மொழி பேசும் பகுதிகளின் ச�ொற்களஞ்சியம்


படர்ச்சிகளில் சில லிங்குவா பிரான்கா (Lingua
(மூலம்: Asmah Haji Omar, 2015. Ensiklopedia Franca): இணைப்பு ம�ொழி அல்லது
Bahasa Melayu. Kuala Lumpur: Dewan Bahasa
Saiz sebenar
dan Pustaka) சமூகத்தினரிடையிலான த�ொடர்பு ம�ொழி.

34
பிரான்கோய்ஸ் வெலண்டின் (Francois Valentijn) எனும் டச்சு
எழுத்தாளர் 1726இல் பதிவு செய்தது:
“அவர்கள் ம�ொழியான மலாய் ம�ொழி, கரைய�ோர மாவட்டங்களில்
பேசப்படுவது மட்டுமின்றி மலாய்த் தீவுகள் முழுவதிலும்
பயன்படுத்தப்படுகிறது. கிழக்கத்திய நாடுகளில் எவ்விடத்தும்
ஒவ்வொருவருக்கும் விளங்கும் ம�ொழியாக ஐர�ோப்பாவில் பிரஞ்சு,
லத்தின் ம�ொழி ப�ோலவும் அல்லது இத்தாலியில் லிங்குவா பிரான்கா
ம�ொழி ப�ோலவும் ப�ோன்றது ஆகும். அந்த ம�ொழி பார்சியிலும்
அதற்கப்பால் வரையிலும் விளங்கிக்கொள்ளப்படுவத�ோடு மட்டுமின்றி
கிழக்கில் பிலிப்பைன்ஸ் தீவுகள் வரையிலும் காணப்படுகிறது.
உனக்கு இந்த ம�ொழி தெரியவில்லையெனில் கிழக்கில் நீ
கல்வியறிவு அற்றவராகக் கருதப்படுவாய்”
(மூலம்: Arkib Negara Malaysia).

பசிபிக் பெருங்கடல்

ஈஸ்டர் தீவு

நியூசிலாந்து

வி ர ை
ந் து ப தி ல ளி
உலகின் மலாய்மொழி பேசும் பகுதிகள்
இரண்டைக் குறிப்பிடுக.
Saiz sebenar
6.3.2 ஆசிரியர் உலகின் மலாய்மொழி பேசும் பகுதிகளை அடையாளங்காண மாணவர்களுக்கு
குறிப்பு வழிகாட்டுதல்.
35
உச்சரிப்பில் ஒற்றுமை
மலாய்மொழியின் வளர்ச்சி மிக விரிவானது. அந்நிய ஆதிக்கத்தின் வருகை
மலாய்மொழியின் ச�ொற்களஞ்சியத்தை வளப்படுத்தியது. மலாய்மொழி இன்று
சமஸ்கிருதம், அரபு, ப�ோர்த்துகீஸ், டச்சு, ஆங்கிலம், சீனம், தமிழ் ஆகிய
ம�ொழிகளின் ச�ொற்களஞ்சியங்களைக் க�ொண்டுள்ளது.
பிறம�ொழி ஆதிக்கம் நவீன மலாய்மொழி
nagara negara
சமஸ்கிருதம் rajha raja
putra putera
sholat solat
அரபு ustaz ustaz
aqal akal
camisa kemeja
ப�ோர்த்துகீஸ்
veradha beranda
janela jendela
டச்சு laatje laci
balkon balkoni
hospital hospital
ஆங்கிலம் clinic klinik
doctor doktor
cawan cawan
சீனம்
laici laici
kappal kapal
தமிழ்
ayyaa ayah
(மூலம்: Asmah Haji Omar, 2015. Ensiklopedia Bahasa Melayu. Kuala Lumpur: Dewan Bahasa
dan Pustaka)

மலாய்மொழி, மலாக்கா மலாய் தாய்மொழியைப் பயன்படுத்துவதை


மன்னராட்சிக் காலத்தில் மிகவும் புகழ் நிலைநாட்ட வேண்டியதன் அவசியம்
பெற்றிருந்தத�ோடு உலகம் முழுதும் என்ன?
Saiz sebenar
பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.
தாய்மொழியைப் பயன்படுத்துவதை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை 6.3.2
ஆசிரியர்
குறிப்பு மாணவர்கள் விவரிக்க வழிகாட்டுதல். K6.3.7
36
மலாய்மொழியின் பங்கு

மலாய்மொழி நாட்டை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கை ஆற்றுகிறது.


மலாய்மொழி அதிகாரப்பூர்வ ம�ொழி, ஒற்றுமை ம�ொழி என்பத�ோடு மட்டும்
அல்லாமல் கல்வி, நிர்வாகம், சட்டம், ப�ொருளாதாரம், த�ொடர்பு, எழுத்துப்
படிவ ம�ொழி ஆகியவற்றிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இன்றுவரை
மலாய்மொழி த�ொடர்பும�ொழி எனும் வகையில் கீழ்க்காணும் துறைகளில்
பயன்படுத்தப்படுவது நாட்டின் பெருமைமிகு பாரம்பரியமாகத் திகழ்கின்றது.

அதிகாரப்பூர்வ
ம�ொழி

எழுத்துப் படிவ
ம�ொழி ஒற்றுமை ம�ொழி

த�ொடர்பு ம�ொழி மலாய்மொழியின் கல்வி ம�ொழி


பங்கு

ப�ொருளாதார நிர்வாக ம�ொழி


S ம�ொழி

சட்ட ம�ொழி

வி ர ை
ந் து ப தி ல ளி
(மூலம்: Asmah Haji Omar, 2015. Ensiklopedia
மலாய்மொழியின் பங்கைப் Bahasa Melayu. Kuala Lumpur: Dewan Bahasa
பட்டியலிடுக. dan Pustaka)
Saiz sebenar
6.3.3 மலாய்மொழியின் பங்கை மாணவர்கள் விளங்கிக் க�ொள்ள வழிகாட்டுதல்.
ஆசிரியர்
குறிப்பு
37
நிர்வாக ம�ொழி

அன்று
கல்வி ம�ொழி மலாக்கா மலாய் மன்னராட்சிக்
கால நிர்வாகத்தில் மலாய்மொழி
அன்று பயன்படுத்தப்பட்டது.
மலாய்மொழி அறிவாற்றலை
வழங்கும் கல்விம�ொழி ஆகும். இன்று
உலாமாக்கள் அரண்மனையில் மலாய்மொழி அதிகாரப்பூர்வ
மலாய் அரசர்களுக்குச் சமயக் ம�ொழியாக அரசு அலுவல்களில்
கல்வியை மலாய்மொழியிலேயே பயன்படுத்தப்படுகிறது.
வழங்கினர்.

இன்று
மலாய்மொழி த�ொடர்பு
ம�ொழியாகக் கற்றல் கற்பித்தலில்
அறிவையும் தகவல்களையும்
வழங்கப் பள்ளிகளிலும்
உயர்க்கல்விக் கூடங்களிலும்
பயன்படுத்தப்படுகின்றது.
மலாய்
ம�ொழியின்
பங்கு
சட்ட ம�ொழி
அன்றும்
அன்று இன்றும்
மலாக்கா மலாய் மன்னராட்சிக் கால
நிர்வாகத்திலும் ஆட்சி முறையிலும் முக்கிய
வழிகாட்டியாக விளங்கிய மலாக்கா
சட்ட மரபு பதிப்பில் மலாய்மொழி
பயன்படுத்தப்பட்டுள்ளது.

இன்று மலாய்மொழி அறிவு


மலாய்மொழி நாட்டின் சட்ட ம�ொழி என்பதன்
அமைப்பு முறையில் முதன்மை அவசியத்தைக்
ம�ொழியாகத் திகழ்கிறது. குறிப்பிடுக.

வி ர ை
ந் து ப தி ல ளி
Saiz sebenar நிர்வாகத் துறையில் மலாய்மொழியின் பங்கைப் பட்டியலிடுக.

38
ப�ொருளாதார ம�ொழி

அன்று
மலாய்மொழி லிங்குவா பிரான்கா
எனும் வகையில் மலாக்கா
மலாய் மன்னராட்சிக் காலத்தில்
வாணிபப் பரிவர்த்தனையை
எளிதாக்கியது.

இன்று த�ொடர்பு ம�ொழி


மலாய்மொழி நம் நாட்டின்
வாணிபப் பரிவர்த்தனையில்
முதன்மை ம�ொழியாக அன்று
அமைந்துள்ளது. மலாய் அரசு, வெளி
அரசுகளுடன் த�ொடர்பு க�ொள்ள
மலாய்மொழியைப் பயன்படுத்தியது.
கிளந்தான் சுல்தான், ரைட்
வில்லியம் டப் அவர்களுக்கு எழுதிய
கடிதம் ஓர் எடுத்துக்காட்டாகும்.
இன்று
மலாய்மொழி மக்களின்
வட்டாரத் த�ொடர்பு ம�ொழியாகப்
பயன்படுத்தப்படுகிறது.

எழுத்துப் படிவ ம�ொழி

அன்று
அதிகமான உயரிய படைப்புகள்
மலாய்மொழியில் எழுத்துப் அனைத்துலக
நிலையில்
படிவமாக்கப்பட்டுள்ளன. மலாய்மொழி

இன்று ந ட வ டி க ் கை
நாட்டின் படைப்பாளர்களின்
படைப்புகளால் மலாய்மொழி எழுத்துப் ப�ொருத்தமான சிந்தனை
படிவ ம�ொழியாக உலக அளவில் வரையைப் பயன்படுத்தி அன்றும்
இன்றும் மலாய்மொழியின்
அங்கீகரிக்கப்படுகிறது.
பங்கை ஒப்பிட்டுக் காட்டுக.

(மூலம்: Asmah Haji Omar, 2015. Ensiklopedia


Bahasa Melayu. Kuala Lumpur: Dewan Bahasa
dan Pustaka) Saiz sebenar
6.3.3 அன்றும் இன்றும் மலாய்மொழியின் பங்கை மாணவர்கள் விளங்கிக் க�ொள்ள
ஆசிரியர்
K6.3.6 குறிப்பு வழிகாட்டுதல்.
39
அதிகாரப்பூர்வ ம�ொழியாக மலாய்மொழி

மலாய்மொழி நம் நாட்டின்


அதிகாரப்பூர்வ ம�ொழி ஆகும். தேசிய
ம�ொழிச் சட்டம் 1963/67இன் வழி
இதன் நிலை உறுதிப்படுத்தப்படுகிறது.
அதிகாரப்பூர்வ ம�ொழி எனும் வகையில்
அன்றாட அலுவலில் த�ொடர்பு
ம�ொழியாக இதன் முக்கியத்துவம்
இருக்கின்றது. எனினும், பல
இனத்தைச் சேர்ந்த மலேசியர்கள்
வேறு ம�ொழிகளையும் சுதந்திரமாகப்
பயன்படுத்தலாம்.
அரசு அலுவலகங்களில்
மலாய்மொழிப் பயன்பாடு

ஒற்றுமை ம�ொழியாக மலாய்மொழி


மலாய்மொழி பல்வேறு இனத்தவர்களை
ஒன்றுபடுத்தும் ம�ொழியாகும்.
மலாய்மொழி மிக எளிதாக விளங்கிக்
க�ொள்ளக் கூடியது மட்டுமல்லாமல்
சமுதாயத்திற்குத் தகவல்களை
வழங்குவதற்கான முதன்மை த�ொடர்பு
ம�ொழியாக விளங்குகின்றது.
தேசிய ம�ொழி வாரம், கவிதை
ஒப்புவித்தல், கவிதைக்குக் கவிதை
கூறுதல், பேச்சுப் ப�ோட்டி, மேடைப்
பேச்சு ப�ோன்ற நடவடிக்கைகள்
பல இன மாணவர்களிடையே
ஒற்றுமை ம�ொழியாக மலாய்மொழியை ஒற்றுமையை விதைக்க உதவுகிறது.
மேம்படுத்தும் நிகழ்ச்சி் இந்நடவடிக்கைகள் மறைமுகமாக
ம�ொழியின் வாயிலாக இனத்தை
ஒன்றுபடுத்துகிறது.

ந ட வ டி க ் கை மலாய்மொழியின் பங்கு அன்றும்


இன்றும் மிகவும் விரிவானது. இதன்
நம் நாட்டின் ஒற்றுமை ம�ொழியாக பயன்பாடு காலமாறுதலுக்கு ஏற்ப
விளங்கும் மலாய்மொழியின் அமைகிறது. மலாய்மொழி நாட்டின்
முக்கியத்துவத்தைக் குழுவாரியாகப் பாரம்பரியமாகத் திகழ்வதால் அவசியம்
Saiz sebenar
பட்டியலிடுக. மதிக்கப்பட வேண்டும்.
6.3.3
K6.3.5
40
மீட்டுணர்வோம் மலாய்மொழி பாரம்பரிய
வழித்தோன்றலின் சுருக்கம்

மலாய்மொழி

மலாய்மொழியின் பாரம்பரிய குடும்பம் -


வழித்தோன்றல் அஸ்ட்ரோனேசியா
(Rumpun - Austronesia)

பிலும்-ஆஸ்ட்ரிக்
(Filum - Austrik)

மலாய்மொழி பேசுவ�ோர் வாழும் பகுதிகள்


• மலேசியா • வியட்நாம்
• இந்தோனேசியா (மெலாயு சம்பா)
• தென் தாய்லாந்து • தென் ஆப்பிரிக்கா
• பிலிப்பைன்ஸ் • ஸ்ரீ லங்கா
• புருணை • க�ோக�ோஸ் தீவு
• சிங்கப்பூர் • தைவான்
மலாய்மொழி • மடகாஸ்கார்
• கம்போடியா
நாட்டின் • நியூசிலாந்து
பாரம்பரியம் • ஈஸ்டர் தீவு
• சவுதி அரேபியா
• கிறிஸ்மஸ் தீவு
• கிழக்கு ஆஸ்திரேலியா

மலாய்மொழியின் பங்கு அன்றும் இன்றும்


■ அதிகாரப்பூர்வ ம�ொழி அதிகாரப்பூர்வ

■ ஒற்றுமை ம�ொழி
ம�ொழி

■ கல்வி ம�ொழி எழுத்துப் படிவ


ம�ொழி ஒற்றுமை ம�ொழி

■ நிர்வாக ம�ொழி
■ சட்ட ம�ொழி மலாய்மொழியின்
த�ொடர்பு ம�ொழி கல்வி ம�ொழி

■ ப�ொருளாதார ம�ொழி பங்கு

■ த�ொடர்பு ம�ொழி ப�ொருளாதார நிர்வாக ம�ொழி

■ எழுத்துப் படிவ ம�ொழி


S ம�ொழி

சட்ட ம�ொழி

இந்த அலகு, மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலந்தொட்டே மலாய்


ம�ொழி பாரம்பரிய வழித்தோன்றல், மலாய்மொழி பேசுவ�ோர் வாழும் பகுதிகள்
பற்றிய விளக்கத்தை வழங்கியது. அடுத்த அலகு சுதந்திரத்தை ந�ோக்கிய
ப�ோராட்டத்தைப் பற்றி விவாதிக்கும். Saiz sebenar

41
சிந்தித்துப் பதிலளி
பின்வரும் கூற்றுகளை நிறைவு செய்து கட்டங்களில் அதன் சரியான
விடைக்கு வட்டமிடுக.
இடமிருந்து வலம்

1. மலாய்மொழி _________ கிளையிலிருந்து த�ோன்றியதாகக் கூறப்படுகிறது.


2. மலாய்மொழி நாட்டின் ________ என்பதில் பெருமை க�ொள்ள வேண்டும்.
3. மலாய்மொழி பேசப்படும் பகுதிகளில் __________________ ஒன்றாகும்.
4. லிங்குவா பிரான்கா வெவ்வேறு ம�ொழி பேசும் சமூகத்தினரிடையே
__________________ ம�ொழியாக இருந்தது.
மேலிருந்து கீழ்
1. நம் நாட்டில் மலாய்மொழி ______________யின் சின்னமாகத் திகழ்கிறது.
2. மலாய்மொழி_________ ம�ொழியையும் தழுவி இருந்தது.
3. பல உயரிய படைப்புகள் மலாய்மொழியை _____________ ம�ொழியாகப்
பயன்படுத்தின.
4. மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில் மலாக்கா சட்ட மரபில்
மலாய்மொழி ______________யாகப் பயன்படுத்தப்பட்டது.

ச க ம் சி த் டி ச் ல து அ கி ந் ண ஏ சை லா ம்
அ ச ஸ் ச ச கி எ ச ரி ம ச இ ச ச வ ச ச
ச அ ஸ் ட் ர�ோ னே சி யா ச ச டி உ ச சா ழி ச ச
ந் ச ஸ் ச அ ச க ச லா ச ச ச ச ன் கா கி ட
ச கி த�ொ ட ர் பு ச டி ச அ ச ச ச று ட் டி ச்
மு ச ம் ச ண ச ரி செ க் ச ஸ் கி ச ஏ டி ந் சு
ச எ ஸ் ச ச லி ங் கு வா பி ர ன் கா ச ந் ச ச
ர ழு ப ஒ ச ந் கி ச ண ச டி ச லி ச லி ல்்் ச
ச த் ஸ் ற் ச க ம் ப�ோ டி யா ச ச ட் கி து ந் ச
ந் து கி று டி ச ப அ சு ச ஜ் ப் ச ச அ லி க்
வ் ச ஸ் மை ச அ ண ச ச பா ர ம் ப ரி ய ம் ச
லி கு ஸ் ச கி ச கி ந் ச ஹ் ச டி ண ச ந் ச அ

Saiz sebenar
ஆசிரியர் இப்பக்கத்தைப் படியெடுத்து வழங்கிடுக.
குறிப்பு
42
நாட்டை நேசிப்போம்
மலாய்மொழியின் பூர்வீகத்தையும் பங்கையும் அறிவதன்வழி நாம் எப்போதும்
முயற்சி செய்யவும் தயாராக இருக்கவும் சவால்களை எதிர்கொள்ளவும்
துணிவைப் பெறவும் தூண்டுக�ோலாக அமையும்.

(மூலம்: Koleksi Dewan Bahasa dan Pustaka)

நாடு
நாட்டின் பாரம்பரியம் எனும்
வகையில் மலாய்மொழி
ஒன்றுபட்ட வளர்ச்சிமிகு
நாட்டை உருவாக்கும்.

சமுதாயம்
தனிநபர் அறிவுமிக்க சமுதாயம் மலாய்
மலாய்மொழியின் பாரம்பரிய ம�ொழியை ஒற்றுமை ம�ொழியாக
வழித்தோன்றலை அறிவதன்வழி அன்றாட மாண்புறச் செய்யும்.
வாழ்வில் தன்னெறியை வளப்படுத்துவர். Saiz sebenar

43
தலைப்பு 7: நாட்டின் சுதந்திரப் ப�ோராட்டம்

அலகு
நாட்டின்
4 இறையாண்மைக்குச்
சவால்
சாரம்

நாட்டின் வரலாற்றை ஆழமாக அறிந்து க�ொள்ள காலனித்துவ வரலாற்றை


அவசியம் கற்க வேண்டும். அந்நியத் தலையீடும் காலனித்துவமும் நம்
நாட்டில் அதிகமான மாற்றங்களைக் க�ொண்டு வந்துள்ளன. இந்த அலகு,
பாதுகாப்பளித்தல் (naungan), தலையீடு, காலனித்துவம் ஆகியவற்றின்
ப�ொருளை விவரிக்கின்றது. மேலும், அந்நிய சக்திகள், வருகையின் ந�ோக்கம்,
தலையீட்டாலும் காலனித்துவத்தினாலும் ஏற்பட்ட விளைவுகள் ஆகியவற்றையும்
விவாதிக்கின்றது.

குடியியல் நெறி

Saiz sebenar ப�ொறுப்புணர்வு

44
நீங்கள் கற்கப் ப�ோவது என்ன?
1. பாதுகாப்பளித்தல், தலையீடு, காலனித்துவம் ஆகியவற்றின் ப�ொருள்.
2. நம் நாட்டில் தலையீடு செய்து காலனித்துவம் புரிந்த அந்நிய சக்திகள்.
3. அந்நிய சக்திகள் நம் நாட்டிற்கு வருகை புரிந்ததற்கான காரணிகள்.
4. அந்நிய சக்திகளின் தலையீடும் காலனித்துவமும் ஏற்படுத்திய நிர்வாகம்,
சமூகவியல், ப�ொருளாதாரம் ஆகியவற்றின் விளைவுகள்.

PS
AK

அடிப்படை வரலாற்றுச் சிந்தனைத் திறன்


1. நம் நாட்டிற்கு வருகை தந்த அந்நிய சக்திகளின் வரலாற்றுக்
காலநிரலை விளங்கிக் க�ொள்ளுதல்.
2. நம் நாட்டிற்கு அந்நிய சக்திகளின் வருகைக்கான குறிப்பிடத்தக்கச்
சான்றுகளை ஆராய்தல்.
3. நம் நாட்டில் அந்நிய சக்திகளின் வருகையின் காரணங்களையும்
விளைவுகளையும் காணல்.

(மூலம்: Arkib Negara Malaysia dan Kompleks Sejarah Pasir Salak) Saiz sebenar

45
எனது தாயகத்தில் அந்நிய சக்திகள்

முன்பு ஒரு காலத்தில் நம் நாடு அந்நிய சக்திகளின் ஆதிக்கத்திலும்


காலனித்துவத்திலும் இருந்துள்ளது. நம் நாட்டின் கேந்திரத்துவமிக்க நில
அமைப்பும் இயற்கை வளமும் அந்நிய சக்திகளை ஈர்த்தன. அந்நிய சக்திகள்
தங்கள் ந�ோக்கத்தை நிறைவேற்றிக் க�ொள்ளப் பாதுகாப்பளித்தல், தலையீடு,
காலனித்துவம் ஆகிய உத்திகளைப் பயன்படுத்தின.

✯ பாதுகாப்பளித்தல் என்பது அந்நிய சக்திகள் நாட்டிற்கோ


நாட்டின் ஒரு பகுதிக்கோ அரண் அளிப்பதாகும்.
✯ பாதுகாப்பு அளிக்கப்பட்ட நாடுகள் நட்புறவின்
அடையாளமாகவும் பாதுகாப்பிற்கு உத்தரவாதமாகவும் கப்பம்
பாதுகாப்பளித்தல்
செலுத்தின.
✯ 20ஆம் நூற்றாண்டின் த�ொடக்கம்வரை பெர்லிஸ், கெடா,
கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்கள் சயாமின்
பாதுகாப்பின்கீழ் இருந்தன.

உங்களுக்குத் தெரியுமா?
தங்கமலர் மூன்றாண்டுக்கு
ஒருமுறை கப்பமாகச் சயாம்
ஆட்சியாளருக்கு அனுப்பப்பட்டது.

வி ர ை
ந் து ப தி ல ளி

20ஆம் நூற்றாண்டின் த�ொடக்கம்


வரை சயாமின் பாதுகாப்பில் தங்கமலர் உருப்போலி (Replika).
(மூலம்: Muzium Kota Kayang, Perlis)
இருந்த மாநிலங்கள் யாவை?

ச�ொற்களஞ்சியம்
கப்பம்: சிற்றரசு, பேரரசின் அதிகாரத்தை ஏற்பதன் அடையாளமாக
வழங்கப்படும் பணம், தங்கமலர், உடை.
தங்கமலர்: தங்கத்தாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட பூச்செடி.
Saiz sebenar

46
✯ தலையீடு என்பது அந்நிய சக்திகள், மாநிலங்களின்
நிர்வாகத்தில் நேரிடையாகத் தலையிடுகின்றன
தலையீடு என்பதாகும்.
✯ உள்ளூர் ஆட்சியாளர் நிர்வாகத்தை வழிநடத்துவதற்கு
உதவியாகப் பிரிட்டிஷ் ரெசிடண்ட் நியமிக்கப்பட்டார்.
✯ 1874ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட பங்கோர்
உடன்படிக்கையின்படி மலாயாவில் பிரிட்டிஷாரின்
தலையீடு பேராக்கில் த�ொடங்கியது.

✯ அந்நிய சக்திகள் ஒரு நாட்டைக் கைப்பற்றித் தன்


வசப்படுத்திக் க�ொள்வதே காலனித்துவம் ஆகும்.
காலனித்துவம்
✯ அந்நிய சக்திகள் கைப்பற்றிய நாட்டைத் தன்வசப்படுத்தி
அரசியல், ப�ொருளாதாரம், சமூகவியல் ஆகிய
நடவடிக்கைகளைத் தன்னலம் கருதிப் பாதுகாப்பின்கீழ்
வைத்திருத்தல்.
✯ முதல் காலனித்துவம் ப�ோர்த்துகீஸியர்கள் மலாக்காவிலும்
ஜேம்ஸ் புரூக் சரவாக்கிலும் வட ப�ோர்னிய�ோ பிரிட்டிஷ்
நிறுவனம் (Syarikat Borneo Utara British) சபாவிலும்
த�ொடங்கியது.

அந்நிய சக்திகளின் தலையீட்டைத் தவிர்க்க


மூன்று வழிமுறைகளைக் குறிப்பிடுக.

நாட்டின் இறையாண்மை அந்நிய சக்திகளின் தலையீட்டாலும்


காலனித்துவத்தாலும் நிலைகுலைந்தது. அந்நிய சக்திகள் தங்களின்
தேவைக்காகப் பல மாற்றங்களைச் செய்தன.
21ஆம் தி றன்
நூற்றாண்டுக் கற்றல்

சிந்தனை வரைபடம்

1. பாதுகாப்பளித்தல், தலையீடு,
காலனித்துவம் ஆகியவை
த�ொடர்பான தகவல்களை
அடிப்படையாகக் க�ொண்டு
மரவரைபடத்தை (peta pokok)
நிறைவு செய்க.
2. மரவரைபடத்தை உனது
குறிப்புப் புத்தகத்தில் வரைக.
Saiz sebenar
7.1.1
ஆசிரியர் • பாதுகாப்பளித்தல், தலையீடு, காலனித்துவம் ஆகியவற்றின் ப�ொருளை
குறிப்பு விளங்கிக் க�ொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல். 47
• சிந்தனை மனவரைபடத்தை நிறைவு செய்ய வழிகாட்டுதல்.
அந்நிய சக்திகளின் தலையீடும் காலனித்துவமும்
நம் நாட்டிற்கு அந்நிய சக்திகள் தலையீடு செய்வதற்கும் காலனித்துவ
ந�ோக்கத்திற்குமே வந்தனர். அந்த அந்நிய சக்திகள் சயாம், ப�ோர்த்துகீஸ்,
டச்சு, பிரிட்டிஷ், ஜப்பான், புரூக் குடும்பத்தினர், வட ப�ோர்னிய�ோ பிரிட்டிஷ்
நிறுவனம் ஆகியவை ஆகும்.
சயாம்
❃ கெடா, பெர்லிஸ், கிளந்தான், திரங்கானு ஆகிய
மாநிலங்களுக்குச் சயாம் பாதுகாப்பளித்தது.
❃ அம்மாநிலங்களை நிர்வகிப்பதில் சயாம் சிக்கலை
எதிர்நோக்கியது.
❃ 1909ஆம் ஆண்டு பாங்கோக் உடன்படிக்கையின்வழி
மேற்கண்ட அனைத்து மாநிலங்களும் பிரிட்டிஷாரிடம்
க�ோல கெடா க�ோட்டை
ஒப்படைக்கப்பட்டன. (மூலம்: Koleksi peribadi Timothy Tye)

ப�ோர்த்துகீஸ் (1511)
❃ 1511ஆம் ஆண்டில் ப�ோர்த்துகீஸ் மலாக்காவைத்
தாக்கிக் காலனித்துவம் செய்தது.
❃ மலாக்கா சுல்தான், மலாக்காவை மீண்டும்
கைப்பற்ற முயன்று த�ோல்வி கண்டார்.
❃ 1641ஆம் ஆண்டில் ப�ோர்த்துகீஸியர்கள்
ஆ பாம�ோசா க�ோட்டை
(மூலம்: Koleksi peribadi Hasfalila binti Hassan) டச்சுக்காரர்களிடம் த�ோல்வியுற்றனர்.
டச்சு (1641)
❃ 1641ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் மலாக்காவில்
ப�ோர்த்துகீஸியரைத் தாக்கினர்.
❃ வெற்றி பெற்ற டச்சுக்காரர்கள் 1824ஆம் ஆண்டுவரை
மலாக்காவை ஆண்டனர்.
❃ 1824இல் ஆங்கில-டச்சு உடன்படிக்கையின்வழி டச்சுக்காரர்கள் ஸ்ெடட்டியூஸ் (stadthuys)
கட்டடம் மலாக்கா
மலாக்காவைப் பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தனர். (மூலம்: Koleksi Dewan Bahasa dan Pustaka)

மலாய் சுல்தான்களுடன் பிரிட்டிஷ் அதிகாரி (மூலம்: Arkib Negara Malaysia)


பிரிட்டிஷ் (1786, 1824, 1826, 1874)
❃ 1786ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ❃ 1826ஆம் ஆண்டு பிரிட்டிஷ், பினாங்கு, சிங்கப்பூர்,
பினாங்கைத் தன் வசப்படுத்தியது. மலாக்கா ஆகியவற்றைக் க�ொண்டு த�ொடுவாய்க்
❃ 1824ஆம் ஆண்டு ஆங்கில–டச்சு குடியேற்ற மாநிலங்களை அமைத்தது.
உடன்படிக்கையின்வழி மலாக்கா, ❃ 1874ஆம் ஆண்டு பிரிட்டிஷ், பேராக்கில் தலையிட்டுத்
பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தன் செல்வாக்கை மலாயாவில் இரண்டாம் உலகப்
ப�ோர்வரை நிலைபெறச் செய்தது.
வி ர ை
ந் து ப தி ல ளி
எந்தச் சக்தி மலாக்காவில் நம் நாடு மீண்டும் காலனித்துவ
Saiz sebenar ஆட்சிக்குட்பட்டால் என்ன நிகழும்?
ப�ோர்த்துகீஸியரைத் த�ோற்கடித்தது?
48
ஜேம்ஸ் புரூக்கும் புரூக் குடும்பத்தினரும் (1841)
❃ 1841ஆம் ஆண்டு ஜேம்ஸ் புரூக் சரவாக்கைத் தம்
வசப்படுத்தினார்.
❃ ஜேம்ஸ் புரூக் ‘வெள்ளை ராஜா’ என அழைக்கப்பட்டார்.
❃ அவரின் மறைவிற்குப் பின்னர், சரவாக் த�ொடர்ந்து 1946
இளம்வயதில் ஜேம்ஸ் புருக் வரை புரூக் குடும்பத்தினரால் ஆளப்பட்டது.
(மூலம்: Jabatan Muzium Sarawak)

வட ப�ோர்னிய�ோ பிரிட்டிஷ் நிறுவனம்


(SBUB) (1881)
❃ த�ொடக்கத்தில் வட ப�ோர்னிய�ோ பிரிட்டிஷ் நிறுவனம்
சபாவில் உள்ள நிலத்தில் த�ொழில் புரிய உரிமை
பெற்றது.
❃ பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அரசப் பிரகடனம் பெற்ற பின்,
1881ஆம் ஆண்டில் வட ப�ோர்னிய�ோ பிரிட்டிஷ் நிறுவனம்
சபாவை ஆட்சி செய்தது. SBUB இயக்குநர் வாரியம்
❃ வட ப�ோர்னிய�ோ பிரிட்டிஷ் நிறுவனக் காலனித்துவம் (மூலம்: Arkib Negara Malaysia)
1946ஆம் ஆண்டுவரை த�ொடர்ந்தது.

ஜப்பான் (1942)
❃ 1942ஆம் ஆண்டில் ஜப்பான் ஒரு வல்லரசாக
உருவாகி மலாயா, சரவாக், சபாவை
வெற்றிகரமாகத் தன் வசப்படுத்தியது.
❃ 1945ஆம் ஆண்டில் ஜப்பான் பிரிட்டிஷாரிடம்
பிரிட்டிஷ் இராணுவம் 1942ஆம் ஆண்டில் சரணடைந்தது.
ஜப்பான் இராணுவத்திடம் சரண் அடைந்தது.
(மூலம்: Arkib Negara Malaysia)

பிரிட்டிஷ் (1945,1946)
❃ பிரிட்டிஷ் மீண்டும் மலாயாவை 1945ஆம் ஆண்டு
முதல் 1957ஆம் ஆண்டுவரை காலனித்துவம் செய்தது.
❃ 1946ஆம் ஆண்டில் புரூக் குடும்பத்தினர் சரவாக்கையும்
வட ப�ோர்னிய�ோ பிரிட்டிஷ் நிறுவனம் சபாவையும்
பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தனர்.
❃ 1963ஆம் ஆண்டுவரை பிரிட்டிஷ் சரவாக்கையும் 1955 மலாயா கூட்டரசின்
சபாவையும் தன் வசப்படுத்தியிருந்தது. அமைச்சரவை
(மூலம்: Arkib Negara Malaysia)

அந்நிய சக்திகளின் வருகை நம் நாட்டின் இறையாண்மையைப் பாதித்தது.


எனவே, குடிமக்களாகிய நாம் அமைதி த�ொடர்ந்து நிலைத்திருக்க நம்
நாட்டைத் தற்காக்க வேண்டும்.
21ஆம் தி றன்
உங்களுக்குத் தெரியுமா? நூற்றாண்டுக் கற்றல் சிந்தனை வரைவு
இரண்டாம் உலகப் ப�ோர் 1. தன்னெறியின் முக்கியத்துவம் த�ொடர்பான
1939ஆம் ஆண்டில் தகவல்களைப் பல்வேறு மூலங்களின்வழி திரட்டுதல்.
த�ொடங்கி 1945ஆம் 2. தகவல் த�ொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி
ஆண்டில் முடிவு பெற்றது. வரைபடத்தைத் தயார் செய்தல்.
3. வகுப்பில் படைத்தல்.
Saiz sebenar
7.1.2
ஆசிரியர் அந்நிய சக்திகள் நம் நாட்டில் தலையிட்டு, காலனித்துவம் செய்ததை மாணவர்கள்
K7.1.5 குறிப்பு விளங்கிக் க�ொள்ளத் துணைபுரிதல். 49
கவர்ந்திழுக்கும் வளமான பூமி
நம் நாடு இயற்கை வளமும் இயற்கை மூலமும் கேந்திரத்துவமிக்க
இடத்திலும் அமைந்துள்ளது. இதுவே, அந்நிய சக்திகள் தங்களின்
சுயநலத்திற்காக நம் நாட்டைக் கைப்பற்றக் காரணமாக அமைந்தது. மேலும்,
சமயத்தைப் பரப்பவும் த�ொழிற்புரட்சியை மேம்படுத்தவும் நாட்டின் சிறப்பும்
அந்நிய சக்திகள் நம் நாட்டின் மீது ஈர்ப்புக் க�ொள்ள வழிவகுத்தன.
அந்நிய சக்திகளின் வருகைக்கான காரணிகள்
இ வ
ந்தி
யா
கேந்திரத்துவமிக்கப் பகுதி வி
லி
ரு
ந்து

ந்து

து
v கிழக்கு மேற்கு வாணிப வழியில் மலாக்கா

ருந்
ஜப்பா லிரு
னிலி
ாவி
அமைந்துள்ளது.

சீன
மலாக்கா
v மலாக்கா முக்கியத் தங்குமிடத் துறைமுகமாக
விளங்கியது.
v ப�ோர்த்துகீஸியர்களும் டச்சுக்காரர்களும் தீவு மல
களி ாய்
லி த்
மலாய்த்தீவுகளின் மசாலைப் ப�ொருள்களின் ருந்
து
வாணிபத்தைத் தம் கட்டுப்பாட்டிற்குக்
க�ொண்டுவர மலாக்காவை வசமாக்கிக்
15ஆம் நூற்றாண்டில்
க�ொள்ள ஆர்வம் க�ொண்டனர். மலாக்காவின் வாணிப வழி

இயற்கை மூலமும்
இயற்கை வளமும்
v ஈயம், எஃகு, தங்கம் ப�ோன்றவை
மலாயாவின் இயற்கை வளங்களாகும்.
வெட்டு மரம் தங்கம் v வெட்டுமரம், பிரம்பு, பறவைக் கூடு
ப�ோன்றவை சபாவின் புகழ் பெற்ற
இயற்கை மூலங்கள் ஆகும்.
v தங்கம், ஜவ்வரிசி, கற்பூரம் ஆகியவை
சரவாக்கில் காணப்படுகின்றன.

ஜவ்வரிசி ஈயம்
ச�ொற்களஞ்சியம்

இயற்கை வளம்: பூமியிலிருந்து த�ோண்டி எடுக்கப்படும் ப�ொருள்.


இயற்கை மூலம்: பூமியின் மேற்பரப்பில் காணப்படும் தாவரங்களும்
விலங்குகளும்.
த�ொழிற்புரட்சி: பெரிய அளவில் ப�ொருள்களைத் தயாரித்தல்.
Saiz sebenar

50
சமயத்தைப் பரப்புதல்
v அந்நிய சக்திகள் கிறிஸ்துவ சமயத்தை மலாயா
உட்பட பல இடங்களில் பரப்ப எண்ணினர்.
v ப�ோர்த்துகீஸிய அரசர் கிறிஸ்துவ சமயத்தைப் பரப்ப
1521ஆம் ஆண்டு ப�ோர்த்துகீஸியர்களால்
கடல் பயணங்களை ஊக்குவித்தார். மலாக்காவில் கட்டப்பட்ட
செண்ட்போல் தேவாலயம்
(மூலம்: Koleksi peribadi Jayakumary a/p Marimuthu)

த�ொழிற்புரட்சி
v 18ஆம் நூற்றாண்டில் த�ொழிற்புரட்சி
ஐர�ோப்பாவில் விரிவடைந்தது.
v இரும்பு, எஃகு தயாரிப்பு, வாகனத்
தயாரிப்பு, உணவைக் கலனிடுதல்
ப�ோன்ற த�ொழில்துறைகள் மும்முரமாக
ஐர�ோப்பிய த�ொழிற்புரட்சியின் நடைபெற்றன.
விரிவாக்கம் v அந்நிய சக்திகள் தங்களின் ப�ொருள்களைச்
(மூலம்: Peter Lafferty, 2002. Perintis Sains சந்தைப்படுத்துவதற்குப் புதிய காலனித்துவ
Pengangkutan. Kuala Lumpur: Dewan Bahasa
dan Pustaka) நாடுகள் தேவைப்பட்டன.

புகழ்
v அந்நிய சக்திகள் தமக்கும் நாட்டுக்கும் புகழைச்
சேர்க்க விரும்பின.
v பிரிட்டிஷ் மாபெரும் காலனித்துவச் சக்தியாகத்
த�ோன்றியது.
v பினாங்கிலும் சிங்கப்பூரிலும் பிரிட்டிஷாரின் வெற்றியைப்
பார்த்த ஜேம்ஸ் புரூக் சரவாக்கைத் தம் வசப்படுத்தினார்.
ப�ோர்ட் மார்கரீத்தா, சரவாக்
(மூலம்: Koleksi Dewan Bahasa dan Pustaka)
அந்நிய சக்திகளின் காலனித்துவம், நாட்டின் இறையாண்மையைக் தற்காக்க
வேண்டியதன் அவசியத்தை நமக்கு உணர்த்துகிறது. அந்நிய சக்திகளின் தலையீடும்
காலனித்துவமும் மீண்டும் நிகழாமல் இருக்க குடிமக்களாகிய நாம் நாட்டுப் பற்றை
அவசியம் வளர்க்க வேண்டும்.
நாட்டின் 21ஆம் திறன்
இறையாண்மையைத் நூற்றாண்டுக் கற்றல்
தங்கமீன் கலன்
தற்காக்க நாட்டுப்பற்றின்
1. அந்நிய சக்திகள் வருகையின்
அவசியத்தைக் குறிப்பிடுக.
காரணிகளுக்கேற்ப ஐந்து குழுக்களை
அமைத்தல்.
உடனே 2. ஒவ்வொரு குழுவினரும் தங்களுக்கு
ப தி ல ளி
வழங்கப்பட்ட தலைப்பைய�ொட்டிய கூடுதல்
த�ொழிற்புரட்சி ஐர�ோப்பாவில் தகவல்களைத் திரட்டுதல்.
எப்போது விரிவடைந்தது? 3. தகவல்களைப் படைத்து, பிற குழுவினரின்
கேள்விகளுக்குப் பதிலளித்தல். Saiz sebenar
7.1.3
ஆசிரியர் அந்நிய சக்திகள் நம் நாட்டிற்கு வந்ததற்கான காரணிகளை அறிய மாணவர்களுக்கு
K7.1.6 குறிப்பு வழிகாட்டுதல். 51
காலனித்துவத்தினால் நிர்வாகத்திற்கு ஏற்பட்ட விளைவுகள்
அந்நிய சக்திகளின் தலையீடும் காலனித்துவமும் மலாயா, சரவாக், வட
ப�ோர்னிய�ோ (சபா) மாநிலங்களில் நிர்வாக முறையில் அதிக மாற்றங்களை
ஏற்படுத்தின.
த�ொடுவாய்க் குடியேற்ற
மாநிலங்கள் (1826)
✯ பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர்
ஆகியன த�ொடுவாய்க் குடியேற்ற
மாநிலங்களாக இணைக்கப்பட்டன. சரவாக் (1841)
✯ இந்த மாநிலங்கள் காலனித்துவ
✯ முடியாட்சிமுறை
மகுடமாக விளங்கின. அறிமுகப்படுத்தப்பட்டது.
✯ த�ொடுவாய்க் குடியேற்ற மாநிலங்களை
✯ சரவாக் ஆட்சியாளர் வெள்ளை
ஆளுநர் நிர்வாகம் செய்தார். ராஜா என அழைக்கப்பட்டார்.
✯ சரவாக்கின் நிர்வாகம் ஐந்து
வடப�ோர்னிய�ோ(சபா) (1881) பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுப்
✯ லண்டனில் உள்ள வடப�ோர்னிய�ோ பிரிட்டிஷ் ரெசிடண்டால்(Residen)
பிரிட்டிஷ் நிறுவன இயக்குநர் வாரியம், நிர்வகிக்கப்பட்டது.
சபா நிர்வாக விவகாரங்களுக்கான
கட்டளைகளைப் பிறப்பித்தது.
✯ மாநில நிர்வாகத்திற்கு ஆளுநர் ஐக்கிய மலாய் மாநிலங்கள்
தலைமையேற்றார். (1896)
✯ பேராக், சிலாங்கூர், நெகிரி
ஐக்கியப்படாத மலாய் மாநிலங்கள் செம்பிலான், பகாங் ஆகியன
(1909, 1914) ஐக்கிய மலாய் மாநிலங்களாக
✯ கெடா, கிளந்தான், பெர்லிஸ், திரங்கானு ஒருங்கிணைக்கப்பட்டன.
ஆகியன ஐக்கியப்படாத மலாய் ✯ மாநில நிர்வாகத்தை நிர்வகிக்க
மாநிலங்கள் என அழைக்கப்பட்டன. பிரிட்டிஷ் ரெசிடண்ட்
✯ 1914ஆம் ஆண்டில் ஜ�ொகூர் ஐக்கியப் நியமிக்கப்பட்டார்.
படாத மாநிலங்களில் சேர்க்கப்பட்டது. ✯ பிரிட்டிஷ் ரெசிடண்டால்
✯ பிரிட்டிஷ் ஆல�ோசகர் மாநில இஸ்லாமிய சமய விவகாரங்களிலும்
நிர்வாகத்திற்கு உதவ நியமிக்கப்பட்டார். மலாய்க்காரர்களின் சடங்கு
சம்பிரதாயங்களிலும் தலையீடு
செய்ய இயலாது.

ச�ொற்களஞ்சியம்
உங்களுக்குத் தெரியுமா?
முடியாட்சி: அரசாட்சி முறை
• பிரிட்டிஷ் ரெசிடண்ட், பிரிட்டிஷ்
ஆல�ோசகர் என்பவர் அரசர் அல்லது
வி ர ை
ந் து ப தி ல ளி சுல்தானுக்கு ஆல�ோசனை வழங்குபவர்.
• காலனித்துவ நாடு மகுடம் என்பது
சரவாக்கின் பிரிட்டிஷ் அரசு நேரிடையாக ஆட்சி
அரசாட்சிமுறை என்ன? செய்யும் மாநிலங்கள் ஆகும்.
Saiz sebenar
ஆசிரியர் தலையீடு, காலனித்துவத்தின் விளைவுகளினால் ஏற்பட்ட நிர்வாக மாற்றங்களை 7.1.4
குறிப்பு மாணவர்கள் அறிய உதவுதல்.
52
காலனித்துவத்தினால் ஏற்பட்ட சமூகப் ப�ொருளாதார விளைவுகள்

பிரிட்டிஷார் இயற்கை மூலம், இயற்கை வளம் ஆகியவற்றிலிருந்து ஆதாயம்


பெறவேண்டிப் பல்வேறு மாற்றங்களை அறிமுகம் செய்தனர். இந்த மாற்றங்கள்
நாட்டின் சமூகவியலிலும் ப�ொருளாதாரத்திலும் பல விளைவுகளை ஏற்படுத்தின.

காலனித்துவத்தினால் ஏற்பட்ட ப�ொருளாதார விளைவுகள்

சுரங்கத்தொழில் வளர்ச்சி
சுரங்கத்தொழில் மிகத் தீவிரமாகச் செயல்
படுத்தப்பட்டது. மலாயாவில் ஈயம், சரவாக்கில்
தங்கம், சபாவில் நிலக்கரி ஆகியன ஆகும்.

நிலக்கரி

வாணிப விவசாய வளர்ச்சி


ஏற்றுமதி ந�ோக்கத்திற்கான வாணிப விவசாயம்.
மலாயா – செம்பனை, கரும்பு, காப்பி.
சரவாக் – மிளகு.
சபா – புகையிலை.

மிளகு

ரப்பர் (ந�ொய்வம்) நடவு வளர்ச்சி


அதிக ரப்பர் த�ோட்டங்கள் உருவாக்கப்பட்டன.
ஐர�ோப்பிய நிறுவனமான கத்ரியும் (Guthrie)
வடப�ோர்னிய�ோ பிரிட்டிஷ் நிறுவனமும் ரப்பர்
நடவில் ஈடுபட்டன.

ரப்பர் நடவு

நவீன வங்கிப் பரிவர்த்தனை


வங்கிப் பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டது.
மெர்கண்டல் வங்கி 1859ஆம் ஆண்டிலும்
(Mercantile bank), தி. சார்ட்டட் வங்கி
(The Chartered Bank) 1888ஆம் ஆண்டிலும்
த�ோற்றுவிக்கப்பட்டன. மெர்கண்டல் வங்கி, ஈப்போ
வி ர ை
ந் து ப தி ல ளி
ச�ொற்களஞ்சியம்
சபாவில் செயல்படுத்தப்பட்ட வாணிப
விவசாயங்களைக் குறிப்பிடுக. வாணிபம்: வியாபாரம் த�ொடர்பானவை
Saiz sebenar
7.1.4 ஆசிரியர் நாட்டின் ப�ொருளாதாரத்தில் காலனித்துவத்தின் விளைவுகளை அறிந்திட
குறிப்பு மாணவர்களுக்கு உதவுதல்.
53
காலனித்துவத்தின் சமூகவியல் விளைவுகள்
பல்லின சமுதாய உருவாக்கம்
சீனா, இந்தியா நாடுகளின் த�ொழிலாளர்களின் சீன, இந்தியத் த�ொழிலாளர்
வருகை பல்லின சமுதாயத்தை உருவாக்கியது. (மூலம்: Arkib Negara Malaysia)
புதிய நகர் மேம்பாடு
புதிய நகரங்கள் நிர்வாக, வாணிப, துறைமுக
மையங்களாகத் த�ோன்றின.
எடுத்துக்காட்டாக, க�ோலாலம்பூர், ஈப்போ, தைப்பிங்,
சிரம்பான், சிபு, மிரி, ஜெசல்டன் (க�ோத்தா கினபாலு),
1960ஆம் ஆண்டுகளில் சிபு சண்டகான், தாவாவ் ஆகும்.
(மூலம்: Sarawak Chinese Cultural
Association, 2010. Sibu of Yesterday. Edisi Kedua: Sibu: Sarawak)

கல்விமுறையில் வளர்ச்சி
மலாய், ஆங்கிலம், சீனம், தமிழ் எனத் தாய்மொழிக்
கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
பட்டணங்களிலும் நகரங்களிலும் ஆங்கிலப் பள்ளிகள்
த�ோற்றுவிக்கப்பட்டன. 1883ஆம் ஆண்டில் சென்ட் மேரி
எதிர்கால ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்க கல்லூரி நகர தேசியப் பள்ளி நிறுவப்பட்டது.
நிலையிலான கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. (சபாவில் முதல் ஆங்கிலப்பள்ளி)
(மூலம்: SK St. Mary Bandar, Sabah)
ப�ோக்குவரத்து, த�ொடர்புத் துறை நலத்துறை சேவை வளர்ச்சி
வளர்ச்சி
மருத்துவமனைகளும் மருந்தகங்களும்
துறைமுகங்களுக்குப் ப�ொருள்களை எளிதில்
க�ொண்டுச் செல்ல இருப்புப் பாதைகளும்
ந�ோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கத்
சாலைகளும் அமைக்கப்பட்டன. திறக்கப்பட்டன.
அஞ்சல், த�ொலைவரி, த�ொலைபேசி
சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

தைப்பிங் மருத்துவமனை, 1880ஆம் ஆண்டில்


நிறுவப்பட்டது (நாட்டின் முதலாவது மருத்துவமனை)
(மூலம்: Arkib Negara Malaysia)
1886ஆம் ஆண்டில் க�ோலாலம்பூர்
மூலப்பொருள் வளத்தைச் சுய ஆதாயத்திற்குப்
இரயில் நிலையம்
(மூலம்: Arkib Negara Malaysia) பயன்படுத்திய காலனித்துவாதிகளின் செயல், நாம்
நம் நாட்டின் இறையாண்மையையும் சுபிட்சத்தையும்
பேண வேண்டியதன் முக்கியத்துவத்தை
நாட்டின் இறையாண்மையையும் உணர்த்துகிறது. மேலும், அனைத்து நிர்வாகம்,
சுபிட்சத்தையும் நிலைநிறுத்த சமூகவியல், ப�ொருளாதார மாற்றங்களும்
வேண்டியதன் அவசியம் என்ன? காலனித்துவவாதிகளின் நன்மைக்கு மட்டுமே
என்பதை நாம் அறிய வேண்டும்.
ச�ொற்களஞ்சியம்
மருந்தகம்: மருந்தைப் பெற்றுக் க�ொள்ளும் இடம்
சுய ஆதாயம்: வாய்ப்புகளைச் சுய ஆதாயத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளல்.
Saiz sebenar
தாய்மொழிக் கல்விமுறை: தாய்மொழியிலான பயிற்றும�ொழி
ஆசிரியர் நாட்டின் சமூகவியலில் காலனித்துவத்தின் விளைவுகளை மாணவர்கள் 7.1.4
குறிப்பு விளங்கிக்கொள்ள உதவுதல். K7.1.7
54
மீட்டுணர்வோம்
எனது தாயகத்தில் அந்நிய சக்திகள்
அந்நிய சக்திகள் பாதுகாப்பளித்தல், தலையீடு, காலனித்துவம்
ஆகிய அணுகுமுறைகளைப் பயன்படுத்தி நாட்டின் விவகாரங்களில்
தலையிட்டன.

அந்நிய சக்திகளின் தலையீடும்


காலனித்துவமும்
சயாம், ப�ோர்த்துகீஸ், டச்சு, பிரிட்டிஷ், ஜப்பான்,
புரூக் குடும்பத்தினர், வட ப�ோர்னிய�ோ பிரிட்டிஷ்
நிறுவனம் ஆகியன நம் நாட்டில் தலையிட்டுக்
காலனித்துவம் செய்த அந்நிய சக்திகள் ஆகும்.

கவர்ந்திழுக்கும் வளமான பூமி


கேந்திரத்துவமிக்க அமைவிடம், இயற்கை வளம்,
இயற்கை மூலம், சமய விரிவாக்கம், த�ொழிற்புரட்சி,
நாட்டின் புகழ் ஆகியன நம் நாடு காலனித்துவம்
செய்யப்பட்டதற்கான முக்கியக் காரணிகள் ஆகும்.

காலனித்துவமும் நிர்வாக விளைவுகளும்


நிர்வாக விளைவுகள்
- த�ொடுவாய்க் குடியேற்ற மாநிலங்கள் (1826)
- சரவாக் (1841)
- வட ப�ோர்னிய�ோ (சபா) (1881)
- ஐக்கிய மலாய் மாநிலங்கள் (1896)
- ஐக்கியப்படாத மலாய் மாநிலங்கள்
(1909, 1914)
ப�ொருளாதார விளைவுகள்
- ரப்பர் நடவு வளர்ச்சி
- சுரங்கத் த�ொழில் வளர்ச்சி
- வாணிப விவசாய வளர்ச்சி
- நவீன வங்கிப் பரிவர்த்தனை
சமூகவியல் விளைவுகள்
- பல்லின சமுதாயம் உருவாக்கம்
- புதிய நகர் மேம்பாடு
- கல்விமுறையில் வளர்ச்சி
- நலத்துறைச் சேவை வளர்ச்சி
- ப�ோக்குவரத்து, த�ொடர்புத் துறை வளர்ச்சி

இந்த அலகு, நம் நாட்டில் தலையீட்டையும் காலனித்துவத்தையும்


விவரிக்கின்றது. அந்நிய சக்திகள் த�ொடர்பான புரிதல் அடுத்த அலகில்
காலனித்துவவாதிகளை எதிர்த்துப் ப�ோராடிய உள்ளூர்த் தலைவர்களை அறிந்து
க�ொள்ள உதவியாக இருக்கும். Saiz sebenar

55
சிந்தித்துப் பதிலளி
அ. காலி இடங்களைக் க�ொடுக்கப்பட்டுள்ள விடைகளைத் துணையாகக்
க�ொண்டு நிறைவு செய்க.

வளமும் வாணிப பல்லின பாதுகாப்பளிக்கும்

ஜப்பான் துறைமுகத்திற்குக் வெள்ளை ராஜா

மருந்தகமும் மலாக்கா த�ொழிற்

1 ___________ மாநிலத்திற்கு அந்நிய சக்திகள் பாதுகாப்பு வழங்குகின்றன.

2 இரண்டாம் உலகப்போரில் ______________ வெற்றிகரமாக நம் நாட்டை


ஆக்கிரமித்தது.
3 பினாங்கு, ____________, சிங்கப்பூர் ஆகியன 1826ஆம் ஆண்டில்
த�ொடுவாய்க் குடியேற்ற மாநிலங்களாக இணைக்கப்பட்டன.
4 _______________ புரட்சி அந்நிய சக்திகள் நம் நாட்டில் தலையீடும்
காலனித்துவம் புரியவும் காரணமாக அமைந்தது.
5 நாட்டின் வளத்தை மேம்படுத்த _______________விவசாயப் பயிரீட்டை
அறிமுகப்படுத்தினர்.
6 சீன, இந்தியத் த�ொழிலாளர்களின் வருகை _____________ சமுதாயத்தை
உருவாக்கியது.
7 மருத்துவமனையும் _____________ ந�ோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கத்
திறக்கப்பட்டன.
8 இயற்கை _____________ இயற்கை மூலமும் அந்நிய சக்திகள் நம்
நாட்டிற்கு வருகை புரிந்ததற்கான காரணிகள் ஆகும்.
9 ஜேம்ஸ் புருக் சரவாக்கைக் கைப்பற்றிய பிறகு _____________ என
அழைக்கப்பட்டார்.
10 இருப்புப் பாதைகளும் சாலைகளும் ப�ொருள்களைத் _____________
க�ொண்டு செல்ல அமைக்கப்பட்டன.
Saiz sebenar
ஆசிரியர் இப்பக்கத்தைப் படியெடுத்து வழங்கிடுக.
குறிப்பு
56
நாட்டை நேசிப்போம்
காலனித்துவக் காலத்தை அறிந்து க�ொள்வதால் இன்றைய நம் நாட்டின்
இறையாண்மையை விளங்கிக் க�ொள்ளவும் ப�ோற்றவும் உதவும்.

அன்றும் இன்றும்

பிரிட்டிஷ் அரசாங்கம் ஜெசல்டனை வட ப�ோர்னிய�ோவின் தலைநகராக உருவாக்கியது.


1968ஆம் ஆண்டில் க�ோத்தா கினபாலு எனப் பெயர் மாற்றம் கண்டது.

1910ஆம் ஆண்டில் ஜெசல்டன் நகரம் க�ோத்தா கினபாலு நகரம்


(மூலம்: Arkib Negara Malaysia) (மூலம்: Tourism Malaysia)

தனிநபர்
மாணவராகிய நாம் நாட்டை
நேசிக்கும் உணர்வைப்
பெற்றிருக்க வேண்டும். சமுதாயம்
நாட்டை நேசிக்கும் உணர்வு
நாட்டுப் பற்றுமிகு சமுதாயத்தை
உருவாக்கும்.

நாடு
தன்னெறியும் நாட்டுப்பற்றும்
க�ொண்ட குடிமக்கள் நாட்டின்
இறையாண்மையைத் தற்காக்கும்
வலிமை பெற்றவர் ஆவர்.

Saiz sebenar

57
தலைப்பு 7 : நாட்டின் சுதந்திரப் ப�ோராட்டம்

அலகு ப�ோராட்ட எழுச்சியும்


5 காலனித்துவ எதிர்ப்பும்

பெர்லிஸ்

கெடா
த�ோக் ஜங்கூட்

ஹஜி அப்துல் ரஹ்மான் லிம்போங்


பினாங்கு

பேராக் கிளந்தான்

திரங்கானு

பகாங்
டத்தோ மகாராஜா லேலா
மல

டத்தோ பஹாமான்
ாக

சிலாங்கூர்
கா
நீரி

நெகிரி
செம்பிலான்
யாம்துவான் அந்தா

மலாக்கா
ட�ோல் சைட் ஜ�ொகூர்

சாரம்
அந்நிய சக்திகளின் வருகை உள்ளூர் மக்களிடையே எதிர்ப்புணர்வை
ஏற்படுத்தியது. காலனித்துவத்தை எதிர்த்த உள்ளூர்த் தலைவர்கள்,
எதிர்ப்பிற்கான காரணங்கள், அந்நிய சக்திகளின் தலையீடு, ஆக்கிரமிப்புக்கு
எதிரான ப�ோராட்டங்கள் ஆகியவை இந்த அலகில் விவாதிக்கப்படுகின்றன.
Saiz
Saizsebenar
sebenar

5858
நீங்கள் கற்கப் ப�ோவது என்ன?
1. அந்நிய சக்திகளின் தலையீட்டையும் காலனித்துவத்தையும் எதிர்த்த
உள்ளூர்த் தலைவர்கள்.
2. உள்ளூர்த் தலைவர்கள் அந்நிய சக்திகளின் தலையீட்டையும்
காலனித்துவத்தையும் எதிர்த்ததற்கான காரணங்கள்.
3. அந்நிய சக்திகளின் தலையீட்டையும் காலனித்துவத்தையும் எதிர்த்த
உள்ளூர்த் தலைவர்களின் ப�ோராட்டங்கள்.

மாட் சாலே
தென் சீனக் கடல்
சபா

அந்தான�ோம்

ஷரிப் மசாஹ�ோர்

சரவாக்
ரெந்தாப்
குடியியல் நெறி
ப�ொறுப்புணர்வு
அன்புடைமை

PS
AK

அடிப்படை வரலாற்றுச் சிந்தனைத் திறன்


1. காலனித்துவத்தையும் அந்நிய சக்திகளின் தலையீட்டையும்
எதிர்ப்பதில் ஈடுபட்ட உள்நாட்டுத் தலைவர்களின் குறிப்பிடத்தக்கச்
சான்றுகளை ஆராய்தல்.
2. காலனித்துவத்திற்கு உள்ளூர்த் தலைவர்களின் எதிர்ப்பையும் அந்நிய
சக்திகளின் தலையீட்டிற்கான காரணங்களையும் ஆராய்தல்.
3. உள்ளூர்த் தலைவர்களின் ப�ோராட்டங்களையும் காரணங்களையும்
அதன் விளைவுகளையும் அறிதல். Saiz
Saizsebenar
sebenar

59
59
உள்ளூர் வீரர்கள்
உள்ளூர் வீரர்களான ட�ோல் சைட், ரெந்தாப், ஷரிப் மசாஹ�ோர், டத்தோ
மகாராஜா லேலா, யாம்துவான் அந்தா, டத்தோ பஹாமான், மாட் சாலே,
அந்தான�ோம், த�ோக் ஜங்கூட், ஹஜி அப்துல் ரஹ்மான் லிம்போங் ஆகிய�ோர்
அந்நிய நாட்டவர்களின் தலையீட்டையும் காலனித்துவத்தையும் எதிர்த்துப்
ப�ோராடினர். இந்த வீரர்கள் தங்களுடைய நிலையையும் நிர்வாகத்தையும்
அந்நிய சக்திகளிடமிருந்து தற்காத்துக் க�ொள்ள முயன்றனர். அவர்களின்
வட்டாரம் சார்ந்த ப�ோராட்ட உணர்வும் வீரமும் உள்ளூர் ஆட்சியர், மக்கள்
ஆகிய�ோரின் ஆதரவைப் பெற்றுத் தந்தன.
ட�ோல் சைட் (Dol Said)
இவரின் இயற்பெயர் அப்துல் சைட் பின் ஓமார். இவர்
பெங்குலு நானிங் ஸ்ரீ மேரா ராஜா ட�ோல் சைட் என்றும்
அழைக்கப்பட்டார். 1773ஆம் ஆண்டில் பிறந்த இவர்
செமெலிங்காங் இனக் குழுமத்தைச் சேர்ந்தவர்.
எதிர்ப்பிற்கான காரணம் ப�ோராட்டங்கள்
◆ நானிங் மலாக்காவின் எல்லைப் பகுதி. ◆ 1831ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் நானிங்கை
◆ பிரிட்டிஷ் நானிங் தன் எதிர்த்துத் த�ோற்றது. உலு மூவார்,
காலனித்துவத்திற்கு உட்பட்டது சுங்கை ஊஜ�ோங், ஸ்ரீ மெனாந்தி,
என்று உரிமை க�ோரியதால் ட�ோல் ரெம்பாவ் ஆகிய பகுதிகளிலிருந்து
சைட் எதிர்ப்புத் தெரிவித்தார். இராணுவ உதவி பெற்றதால் ட�ோல்
◆ ட�ோல் சைட் ஆண்டு வருமானத்தில் சைட் வென்றார்.
பத்தில் ஒரு பகுதியை வரியாகப் ◆ 1832ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் மீண்டும்
பிரிட்டிஷாரிடம் செலுத்த மறுத்தார். நானிங்கை எதிர்த்துத் தாக்கி ட�ோல்
◆ ட�ோல் சைட் நானிங்கின் சைட்டை வீழ்த்தியது. ட�ோல் சைட்டுடன்
இறையாண்மையைக் காக்கப் இருந்தவர்கள் பிரிட்டிஷாருக்கு
ப�ோராடினார். உதவியதால் அவர் வீழ்ந்தார்.
◆ இறுதியாக, ட�ோல் சைட்
சரணடைந்தார். அவருக்கு ஓய்வு ஊதியம்,
நிலம் வழங்கப்பட்டு மலாக்காவுக்கு
நெகிரி செம்பிலான் அழைத்துச் செல்லப்பட்டார்.

அல�ோர் காஜா
தாப�ோ
மல
ாக
்கா
நீரிண ஜ�ொகூர்

வி ர ை
குறியீடு:
நானிங் ப�ோராட்டப்
ந் து ப தி ல ளி
பகுதி
பிரிட்டிஷார் எவ்வாறு ட�ோல்
Saiz sebenar
நானிங் ப�ோர் கரைவரைபடம் சைட்டை வென்றனர்?

60
ரெந்தாப் (Rentap)
இவரின் இயற்பெயர் லிபாவ் அனாக் நிங்கன்.
இவர் சரவாக் நஙா ஸ்கராங்கில் இபான்
மக்களின் தலைவர் ஆவார்.
ப�ோராட்டங்கள்
எதிர்ப்பிற்கான காரணம்
◆ 1853ஆம் ஆண்டு, ரெந்தாப் நஙா
◆ ஜேம்ஸ் புரூக் நஙா ஸ்கராங்கில் ஸ்கராங்கில் ஜேம்ஸ் புரூக்கின்
இபான் மக்களின் வசிப்பிடத்தை தற்காப்பு அரணைத் தகர்த்தார்.
அழித்தார்.
◆ ஜேம்ஸ் புரூக் பலி தீர்க்க ரெந்தாப்
◆ ஜேம்ஸ் புரூக் இபான் மக்களைக்
கடற்கொள்ளையர்கள் எனக் பகுதியில் உள்ள 20 நீண்ட
கருதினார். வீடுகளை எரித்தார்.
குறியீடு: ◆ 1854ஆம் ஆண்டு, ஜேம்ஸ் புரூக்
ஜேம்ஸ் புரூக் அரண்
ரெந்தாப் அரண்
சுங்கை லாங்கில் ரெந்தாப்பை
எதிர்த்தார். ரெந்தாப் பின்வாங்கி
காட்டுக்குள் சென்று புக்கிட்
புக்கிட் சாட�ோக்கில்
சட�ோக்கில் (Bukit Sadok) தற்காப்பு
ரெந்தாப் அரண்
புக்கிட் சாட�ோக் அரண் ஒன்றை எழுப்பினார்.
◆ 1861ஆம் ஆண்டு ஜேம்ஸ் புரூக்
சரிபாஸ் ஆறு

நஙா ஸ்கராங்
ரெந்தாப் அரணைத் தாக்கினார்.
லிங்கா
அரண்
◆ ரெந்தாப் உலு எந்தாபாய்க்குப் பின்
சிமங்காங்
வாங்கினார்.
ச�ொற்களஞ்சியம்

ரெந்தாப் அரணைக் காட்டும் கரைவரைபடம் நஙா: இபான் ம�ொழியில் ஆறு


என்று ப�ொருள்.
பெலியான்: உறுதியான
மரக்கட்டை வகை.

உங்களுக்குத் தெரியுமா?
ரெந்தாப் தற்காப்பு
அரண் ‘பெலியான்’
எனும் மரக்கட்டையால்
அமைக்கப்பட்டது. Saiz sebenar
7.2.1
ஆசிரியர் ட�ோல் சைட், ரெந்தாப் ஆகிய�ோரின் ப�ோராட்டங்களையும்
7.2.2 குறிப்பு காரணங்களையும் மாணவர்கள் விளங்கிக் க�ொள்ள வழிகாட்டுதல்.
7.2.3 61
ஷரிப் மசாஹ�ோர் (Sharif Masahor)
இவரின் பெயர் ஷரிப் மசாஹ�ோர் பின் முகமட் அல் சாஹாப்.
இவர் இகான் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் சரவாக் சுங்கை
ரெஜாங், சரிக்கேயின் ஆட்சியர் ஆவார்.

எதிர்ப்பிற்கான காரணம் ப�ோராட்டங்கள்


◆ சரிக்கேய் பகுதியை ◆ 1859ஆம் ஆண்டு ஷரிப் மசாஹ�ோர், டத்து
ஆக்கிரமித்ததால் ஷரிப் பத்திங்கி அப்துல் காப்பூருடனும் தெமெங்கோங்
மசாஹ�ோர் ஜேம்ஸ் புரூக்கை ஹசிமுடனும் இணைந்து கூச்சிங்கில் உள்ள
எதிர்த்தார். ஜேம்ஸ் புரூக்கின் குடும்பத்தை வெளியேற்ற
◆ நிர்வாக அதிகாரங்களை முயன்றார்.
ஜேம்ஸ் புரூக் அபகரித்துக் ◆ கன�ோவிட்டில் உள்ள சுங்கை ரெஜாங் அருகில்
க�ொண்டதால் ஷரிப் புரூக் அரணை ஷரிப் மசாஹ�ோர் தாக்கினார்.
மசாஹ�ோர் சரிக்கேயில் ◆ எனினும், ஜேம்ஸ் புரூக் குடும்பத்தினர்
தனது ஆட்சியர் பதவியையும் இத்தாக்குதலை முறியடித்தனர்.
அதிகாரத்தையும் இழந்தார். ◆ ஷரிப் மசாஹ�ோர் நாடு கடத்தப்பட்டார். டத்து
பத்திங்கி அப்துல் காப்பூர் டச்சுக்காரர்களால்
பிடிபட்டு பெதாவியில் (Betawi) சிறை
வைக்கப்பட்டார்.
குறியீடு:

சபா
ஷரிப் மசாஹ�ோர், டத்து
பத்திங்கி அப்துல் காப்பூரின்
ப�ோராட்டப் பகுதி

தென் சீனக் கடல்

ஈகான்

ச ர வ ா க்
சிபு
கன�ோவிட்
சரிக்கேய் ரெஜாங் நதி
காபிட்

கூச்சிங்

ஷரிப் மசாஹ�ோரின் ப�ோராட்டப்


பகுதியைக் காட்டும் கரைவரைபடம்

வி ர ை
ந் து ப தி ல ளி
ஷரிப் மசாஹ�ோர் ப�ோராட்டப்
Saiz sebenar
பகுதியின் பெயர் என்ன?

62
டத்தோ மகாராஜா லேலா (Dato' Maharaja Lela)
இவரின் பெயர் டத்தோ மகாராஜா லேலா பண்டாக் லாம்.
டத்தோ மகாராஜா லேலா பாசீர் சாலாக் பகுதியை நிர்வாகம்
செய்த பேராக்கின் எண்மர் பெருந்தலைவர்களில் (Orang Besar
Berlapan) ஒருவர்.
எதிர்ப்பிற்கான காரணம்
◆ பிரிட்டிஷ் ரெசிடண்ட் J.W.W. பெர்ச் மாநில நிர்வாகத்திலும்
மலாய்க்காரர்களின் மரபுவழக்குகளிலும் தலையீடு செய்தார்.
◆ பிரிட்டிஷ் ரெசிடண்ட் மாநில சுல்தான் அதிகாரத்தை எடுத்துக் க�ொண்டார்.
◆ பிரிட்டிஷார் புதிய வரிகளை அறிமுகப்படுத்தி மக்களைச் சிரமப்படுத்தினர்.
◆ பிரிட்டிஷ் ரெசிடண்ட் கர்வமும் ஆணவமும் க�ொண்டிருந்தார்.
ப�ோராட்டங்கள்
◆ பிப்ரவரி 1875ஆம் ஆண்டு சுல்தான் அப்துல்லா, டத்தோ மகாராஜா லேலா, பேராக்
மலாய் ஆட்சியர்கள் ஆகிய�ோர் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்தனர்.
◆ செப்டம்பர் 1875ஆம் ஆண்டு டத்தோ மகாராஜா லேலா பிரிட்டிஷ் ஆல�ோசகரான
J.W.W. பெர்ச்சைக் க�ொல்லப் ப�ொறுப்பேற்றுக் க�ொண்டார்.
◆ நவம்பர் 1875ஆம் ஆண்டு பாசீர் சாலாக் சுங்கை பேராக்கில் டத்தோ மகாராஜா
லேலா ஆணையின்கீழ் செபுத்தும் (Seputum) என்பவர் J.W.W. பெர்ச்சைக்
க�ொன்றார்.
◆ 1877ஆம் ஆண்டு டத்தோ மகாராஜா லேலாவும் செபுத்துவும் கைது செய்யப்பட்டுத்
தூக்கிலிடப்பட்டனர்.

பகாங்
பேராக் நதி

பாசீர் சாலாக்
பேராக்

குறியீடு:
டத்தோ மகாராஜா லேலாவின்
ப�ோராட்டப் பகுதி சிலாங்கூர்
பாசீர் சாலாக், சுங்கை பேராக்கில் J.W.W.
பேராக்கில் டத்தோ மகாராஜா பெர்ச் க�ொலைச் சம்பவ உருப்போலி காட்சி.
லேலாவின் ப�ோராட்டப் பகுதியைக் (மூலம்: Kompleks sejarah Pasir Salak)
காட்டும் கரைவரைபடம் ந ட வ டி க ் கை
அக்காலத்தில் ப�ோராடிய உள்ளூர் வீரர்களின்
உடையை மறுசுழற்சிப் ப�ொருள்களைக்
டத்தோ மகாராஜா லேலாவின் க�ொண்டு குழுவாரியாக உருவாக்குதல்.
ப�ோராட்டத்திலிருந்து என்ன
கற்றுக் க�ொண்டாய்? உங்களுக்குத் தெரியுமா?
J.W.W. பெர்ச்சின் முழுப்பெயர் ஜேம்ஸ்
Saiz sebenar
வீல்லர் வூட்போர்ட் பெர்ச் என்பதாகும்.
7.2.1, 7.2.2
ஆசிரியர் டத்தோ மகாராஜா லேலா, ஷரிப் மசாஹ�ோர் ஆகிய�ோரின் ப�ோராட்டங்களையும்
7.2.3 குறிப்பு காரணங்களையும் அறிய மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
K7.2.4 63
யாம்துவான் அந்தா (Yamtuan Antah)
யாம்துவான் அந்தாவின் இயற்பெயர் துங்கு அந்தா ராஜா ராடின். இவர்
நெகிரி செம்பிலான் யாம்துவான் பெசார் அவர்களின் புதல்வர் ஆவார்.
எதிர்ப்பிற்கான காரணம்
◆ சுங்கை ஊஜ�ோங் நிர்வாகத்தில் தலையிட்டதால் யாம்துவான் அந்தா பிரிட்டிஷாரை
எதிர்த்தார்.
◆ தெராச்சியைத் தனது பகுதியாக உரிமைக்கோரிய டத்தோ கிளானாவைப் பிரிட்டிஷார்
ஆதரித்தனர்.
◆ பிரிட்டிஷார் டத்தோ கிளானாவை ஆதரித்ததை யாம்துவான் அந்தா ஏற்றுக்
க�ொள்ளவில்லை.
◆ பிரிட்டிஷார் மற்ற பகுதிகள் மீதும் தம் அதிகாரத்தைப் செலுத்துவர் என யாம்துவான்
அந்தா அச்சம் க�ொண்டார்.
ப�ோராட்டங்கள்
◆ 1875ஆம் ஆண்டு பார�ோயில் (Paroi) ம�ோதல் நடந்தது.
◆ யாம்துவான் அந்தா பார�ோயைக் கைப்பற்றினார். எனினும், பிரிட்டிஷார் மீண்டும் தாக்கி
இறுதியாக யாம்துவான் அந்தாவின் படையைத் த�ோற்கடித்தனர்.
◆ இம்மோதலை ஒரு முடிவுக்குக் க�ொண்டு வர, 1876ஆம் ஆண்டு யாம்துவான் அந்தா
பிரிட்டிஷாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
◆ இந்தப் பேச்சுவார்த்தையின் பயனாக, யாம்துவான் அந்தா, ஸ்ரீ மெனாந்தியின்
யாம்துவான் பெசாராக அங்கீகரிக்கப்பட்டார்.
சிலாங்கூர்
ஜெலெபு

உலு மூவார்
சுங்காய் உஜ�ோங்
தெராச்சி

ஆறு மூவார் ஆறு


கெபாயாங் ாச்சி
தெர
அம்பாஙான்
ராசா

மெனாந்தி

ஜ�ொஹ�ோல்

ரெம்பாவ்

லுக்கூட்
பெர்மாத்தாங்
பாசீர்

மலாக்கா
குறியீடு:
 மெனாந்தி
கட்டுப்பாட்டில் இருந்த
பகுதிகள்

 மெனாந்தி கட்டுப்பாட்டில் இருந்த


பகுதியைக் காட்டும் கரைவரைபடம் உங்களுக்குத் தெரியுமா?
ஸ்ரீ மெனாந்தி என்பது
21ஆம் திறன்
நூற்றாண்டுக் கற்றல் நாடகம் நெகிரி செம்பிலான்
யாங் டி பெர்துவான்
1. மேற்கண்ட ப�ோராட்டத்தை அடிப்படையாகக் க�ொண்டு பெசாரின் அதிகாரப்பூர்வ
கதை வசனத்தைக் குழுவாரியாக இயற்றுக. இருப்பிடம்.
Saiz sebenar
2. நடித்துக் காட்டுக.
ஆசிரியர் • யாம்துவான் அந்தாவின் ப�ோராட்ட நடவடிக்கைகளை நடிக்க மாணவர்களுக்கு
குறிப்பு வழிகாட்டுதல்.
64
• நடவடிக்கையின்போது மாணவர்களின் பாதுகாப்பைக் கண்காணித்தல்.
டத்தோ பஹாமான் (Dato' Bahaman)
டத்தோ பஹாமானின் இயற்பெயர் அப்துல் ரஹ்மான் பின் இமாம்
ந�ோ. இவரை டத்தோ பஹாமான் ஓராங் காயா செமாந்தன்
என்றும் அழைப்பர்.
எதிர்ப்பிற்கான காரணம்
◆ டத்தோ பஹாமான் வரி வசூலிக்கும் ப�ோராட்டங்கள்
உரிமையையும் ஆட்சியர் பட்டத்தையும்
இழந்தார். ◆ 1891ஆம் ஆண்டில் டத்தோ
◆ டத்தோ பஹாமான் தன் செல்வாக்கு பஹாமான் பிரிட்டிஷார் மீதான
மிகுந்த பகுதியான லுப�ோக் தெருவா தாக்குதலுக்குத் தலைமையேற்று
காவல் நிலைய நிர்மாணிப்பை எதிர்த்துப் லுப�ோக் தெருவாவை மீண்டும்
ப�ோராடினார். கைப்பற்றினார்.
கிளந்தான்
◆ 1892 ஆம் ஆண்டில் டத்தோ
திரெங்கானு வ
பஹாமான் செமந்தானில் பிரிட்டிஷ்
தாக்குதலை முறியடித்தார்.
◆ 1894ஆம் ஆண்டில் டத்தோ
ஆறு
லிங்

பஹாமான் க�ோல தெம்பிலிங்கையும்


ம்பெ

பேராக்
தெ

ஜெராம் ஜெராம் அம்பாயையும்


அம்பாய் தென் கைப்பற்றினார்.
ஜெராந்தூட் சீனக் ◆ 1895ஆம் ஆண்டில் பிரிட்டிஷார்
கடல் ஜெராம் அம்பாயை மீண்டும்
சிலாங்கூர்
செமந்தான் ஆறு பகாங் ஆறு கைப்பற்றியப�ோது டத்தோ
தெமெர்லோ
லுப�ோக் தெருவா
பஹாமான் கிளந்தானுக்குப்
பகாங்
பின்வாங்கினார்.
குறியீடு:
ப�ோராட்டம் நடந்த
பகுதிகள்
ந ட வ டி க ் கை
Peta 2g. Petaபகாங்கில்
Negeri Pahangடத்தோ பஹாமான்
Abad Ke-19: ப�ோராடிய
Kawasan Penentangan
பகுதிகளின் கரைவரைபடம்
கரைவரைபடத்தை
அச்சிட்டு, டத்தோ
பஹாமானின்
ப�ோராட்டப்
பகுதிகளைக்
கருமையாக்கவும்.

டத்தோ பஹாமான் ஏன்


லுப�ோக் தெருவாவைத்
தற்காக்க முயன்றார்?

Saiz sebenar
7.2.1, 7.2.2 டத்தோ பஹாமான், யாம்துவான் அந்தா ஆகிய�ோரின் ப�ோராட்டங்களையும்
ஆசிரியர்
7.2.3 குறிப்பு காரணங்களையும் மாணவர்கள் விளங்கிக் க�ொள்ள வழிகாட்டுதல்.
K7.2.6 65
மாட் சாலே (Mat Salleh)
மாட் சாலேயின் இயற்பெயர் பெயர் டத்து படுகா முகமாட் சாலே பின்
டத்து பாலு. இவரை மாட் சாலே என்றும் அழைப்பர். இவர் இனனாம்
(Inanam), சபாவில் பிறந்தார். இவர் பஜாவ், சுலுக் இனத்தைச் சார்ந்தவர்.

எதிர்ப்பிற்கான காரணம்
◆ சண்டகான், மெங்காத்தால், இனனாம், புலாவ் காயா ஆகிய இடங்களின் ஆட்சியாளராக
மாட் சாலேவை வட ப�ோர்னிய�ோ பிரிட்டிஷ் நிறுவனம் அங்கீகரிக்காததால், மாட்
சாலே அவர்களை எதிர்த்தார்.
◆ வட ப�ோர்னிய�ோ பிரிட்டிஷ் நிறுவனம் வரிவிதிப்பிற்கான உரிமையை எடுத்துக்
க�ொண்டு மக்களுக்குச் சுமையைத் தரும் புதிய விதிகளை விதித்தனர்.
ப�ோராட்டங்கள்
◆ 1897ஆம் ஆண்டில் மாட் சாலேவும் அவரது சகாக்களும் புலாவ் காயாவில்
இருக்கும் வட ப�ோர்னிய�ோ பிரிட்டிஷ் நிறுவனத்தின் அரணைத் தாக்கினர்.
◆ வட ப�ோர்னிய�ோ பிரிட்டிஷ் நிறுவனத்தால் மாட் சாலேவின் தற்காப்பு அரண்
ரானாவில் அழிக்கப்பட்டதால், மாட் சாலே தம்புனானில் ஒரு வலுவான தற்காப்பு
அரணை நிர்மானித்தார்.
◆ 1900ஆம் ஆண்டில் வட ப�ோர்னிய�ோ பிரிட்டிஷ் நிறுவனம் நடத்திய பெரிய
தாக்குதலினால் மாட்சாலே பலியானார்.
◆ தம்புனானில் உள்ள கபாயான் லாமா கிராமத்தில் மையம் க�ொண்டிருந்த மாட்
சத்தோர், மாட் சாலேவின் ப�ோராட்டத்தைத் த�ொடர்ந்தார்.
குறியீடு:
மாட் சாலேயின்
ப�ோராட்டப் பகுதி

தென்
சீனக்
கடல் தெருசான்

காயா தீவு இனனாம்


ரானாவ்
க�ோத்தா கினபாலு சண்டகான்

தம்புனான்

சபா
லாஹாட் டத்து

புருணை
டத்து படுக்கா மாட் சாலேயின்
டாருல்சலாம்
நினைவகம், தம்புனான்
தாவாவ் (மூலம்: Koleksi peribadi Sinawat Antakah)
சரவாக்

சபாவில் மாட் சாலே ப�ோராடிய பகுதிகளைக்


காட்டும் கரைவரைபடம்

அக்காலத்து வீரர்களின் ப�ோராட்டங்களைப்


ப�ோற்ற வேண்டியதன் அவசியம் என்ன?
Saiz sebenar
7.2.1, 7.2.2
7.2.3
66 K7.2.5
அந்தான�ோம் (Antenom)
அந்தான�ோமின் இயற்பெயர் ஒந்தொர�ோஸ் பின்
புயுசான். இவர் 1873ஆம் ஆண்டில் சிலார் பினிகிட்
சலங்கிட், உலு சுங்கை தாஹ�ோல், பென்சியாங்கன்
சபாவில் பிறந்தார்.
எதிர்ப்பிற்கான காரணம்
◆ வட ப�ோர்னிய�ோ பிரிட்டிஷ்
நிறுவனம் முரூட் குடிகளைக்
கட்டாயத் த�ொழிலாளர்களாகச்
சாலைகள் அமைக்கப் (மூலம்: Dayu Sansalu, 2017. Antenom Pahlawan Terbilang
பயன்படுத்தியது. Bangsa Murut. Kota Kinabalu: Pusaka Sabah)
◆ வட ப�ோர்னிய�ோ பிரிட்டிஷ் ப�ோராட்டங்கள்
நிறுவனம் முன்னோர்களின்
ஆவிகளுக்கு இடையூறு ◆ வட ப�ோர்னிய�ோ பிரிட்டிஷ் நிறுவனத்தை
விளைவிப்பதாகக் கருதப்படும் எதிர்க்க முரூட் வீரர்களின் தலைவராக
காட்டுப்பகுதிகளை அந்தான�ோம் திகழ்ந்தார். மேலும், இவர்
ஆக்கிரமிப்பதன் மூலம் மக்களின் பினிட், சங்கிட், உலு சுங்கை தாஹ�ோல்,
பென்சியாங்கன் எனும் இடத்தில் அரண்
பழக்க வழக்கங்களையும் அமைத்தார்.
நம்பிக்கைகளையும்
◆ 1915ஆம் ஆண்டில் அந்தான�ோம்
புறக்கணித்தது.
ஈட்டி, வாள், நீள் ஊதுகுழல் (sumpit)
◆ புதிய வரியின் அறிமுகம் ஆகியவற்றைப் பயன்படுத்தி வட ப�ோர்னிய�ோ
மக்களுக்குச் சுமையை பிரிட்டிஷ் நிறுவனத்தின் மீது திடீர்த்
ஏற்படுத்தியது. தாக்குதல் நடத்தினார். மேலும், சுங்கை
◆ வட ப�ோர்னிய�ோ பிரிட்டிஷ் செலாங்கிட்டில் தற்காப்பு அரணை
நிறுவனம் குடிமக்களை அமைத்தார்.
விவசாயம் செய்ய ◆ இறுதியில் தன் குடும்பம், சகாக்கள், மூரூட்
அனுமதிக்கவில்லை. இனத்தைக் காக்க அந்தான�ோம் வட
ப�ோர்னிய�ோ பிரிட்டிஷாரிடம் சரணடைந்தார்.

வி ர ை
ந் து ப தி ல ளி
சபாவில் அந்தான�ோம் எதிர்ப்பிற்கான
இரண்டு காரணங்களைக் கூறுக. Saiz sebenar
ஆசிரியர் மாட் சாலே, அந்தான�ோம் ஆகிய�ோரின் ப�ோராட்டங்களையும்
குறிப்பு காரணங்களையும் அறிந்து க�ொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல். 67
த�ோக் ஜங்குட் (Tok Janggut)
த�ோக் ஜங்குட்டின் இயற்பெயர் ஹஜி மாட் ஹாசான்
பின் முனாஸ். இவர் 1853ஆம் ஆண்டு கம்போங்
ஜெராம், பாசீர் பூத்தே, கிளந்தானில் பிறந்தார்.
எதிர்ப்பிற்கான காரணம்
◆ பிரிட்டிஷ் அறிமுகப்படுத்திய 'பிரிட்டிஷ் ஆல�ோசகர் முறைமைக்கு' த�ோக் ஜங்கூட்
உடன்படவில்லை.
◆ சுமையாக அமைந்த வரிவசூலிப்பு முறையையும் புதிய நில விதிமுறையையும் ஏற்றுக்
க�ொள்ள உள்நாட்டு மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
◆ பிரிட்டிஷாரின் புதிய விதிமுறைகள் உள்ளூர் மக்களுக்குச் சிரமங்களை ஏற்படுத்தின.
ப�ோராட்டங்கள்
◆ 1915ஆம் ஆண்டில் த�ோக் ஜங்கூட் பாசீர் பூத்தேவைத் தாக்கி அதனைக்
கைப்பற்றினார்.
◆ கம்போங் டாலாம் பூத்தேயில் முகாமிட்டிருந்த த�ோக் ஜங்கூட் மீது பிரிட்டிஷார்
எதிர்த்தாக்குதல் நடத்தினர்.
◆ அம்மோதலில் த�ோக் ஜங்கூட் பலியானார்.

தென்
நதி சீனக்

க�ோல�ோக்
கடல்
நதி

கிளந்தான்
்தான்
கிளந

பாசீர் பூத்தே
சாரிங்

குறியீடு:
பிரிட்டிஷை எதிர்த்து நடந்த
ப�ோராட்டப் பகுதிகள்
உங்களுக்குத் தெரியுமா?
கிளந்தானில் த�ோக் ஜங்கூட் ப�ோராட்டப் பிரிட்டிஷ் ஆல�ோசனை
பகுதிகளின் கரைவரைபடம்
முறைமை என்பது
குறிப்பிட்ட மாநிலத்தில்
21ஆம் திறன் ஓர் ஆல�ோசகரை
நூற்றாண்டுக் கற்றல் வெப்ப நாற்காலி நியமிக்கும் பிரிட்டிஷ்
நிர்வாகத்தின் முறையாகும்.
1. மேற்கண்ட பகுதியை மாணவர்கள் வாசித்த பின்னர்,
இஸ்லாமிய சமயம், மலாய்
மேற்கொள்ளும் த�ொடர்நடவடிக்கை.
மரபுவழக்குகள் தவிர இதர
2. ஒரு மாணவனைத் தேர்வு செய்து தயார் செய்துள்ள
விவகாரங்களில் சுல்தானுக்கு
நாற்காலியில் த�ோக் ஜங்கூட்டாக அமர வைத்தல்.
ஆல�ோசனை கூறுவது
3. ‘த�ோக் ஜங்கூட்’ மாணவர்கள் கேட்கும் அனைத்துக்
பிரிட்டிஷ் ஆல�ோசகரின்
கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்.
Saiz sebenar ப�ொறுப்பாகும்.

68
ஹஜி அப்துல் ரஹ்மான் லிம்போங் (Haji Abdul Rahman Limbong)
இவரின் இயற்பெயர் ஹஜி அப்துல் ரஹ்மான் பின் ஹஜி அப்துல் ஹமிட்.
1868ஆம் பிறந்த இவர் 1929ஆம் ஆண்டில் மெக்காவில் உயிர் துறந்தார்.

எதிர்ப்பிற்கான காரணம் ப�ோராட்டங்கள்


◆ பிரிட்டிஷ் அறிமுகப்படுத்திய ◆ 1922ஆம் ஆண்டில் புதிய
புதிய விதிமுறைகள் மக்களுக்குப் நிலவிதிகளைப் பின்பற்றாததால்
பெரும் சுமையைத் தந்தன. க�ோல தெலேம�ோங் விவசாயிகள்
எடுத்துக்காட்டாக விவசாய கைது செய்யப்பட்டனர். அவர்களைப்
நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிரதிநிதித்து ஹஜி அப்துல்
விவசாயிகளுக்கான நில ரஹ்மான் லிம்போங் வழக்கறிஞராக
விதிமுறைகள் ஆகும். நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி
◆ வரி செலுத்தாத உள்ளூர் பெற்றார்.
மக்கள் மீது சட்ட நடவடிக்கை ◆ 1928ஆம் ஆண்டில் விவசாயிகளும்
எடுக்கப் ப�ோவதாகப் பிரிட்டிஷார் ஹஜி அப்துல் ரஹ்மான்
அச்சுறுத்தினர். லிம்போங்கின் சகாக்களும் க�ோல
பேராங் காவல் நிலையத்தைக்
கைப்பற்றினர்.
தென் ◆ பிரிட்டிஷார் எதிர் தாக்குதல்
செதூயு சீனக் நடத்தினார். ஹஜி அப்துல்
கடல்
க�ோல திரங்கானு ரஹ்மான் லிம்போங்கைத் தூண்டுதல்
குற்றத்திற்காகக் கைது செய்து
கிளந்தான் க�ோல
பேராங்
மெக்காவிற்கு நாடு கடத்தினர்.

திரெங்கானு

பகாங்

குறியீடு:
திரெங்கானு மக்களின்
எழுச்சிப் பகுதிகள்

திரெங்கானு மக்களின் ப�ோராட்டப்


பகுதிகளைக் காட்டும் கரைவரைபடம்
பிரிட்டிஷாரை எதிர்த்த உள்ளூர்
மக்களைக் காவல் நிலையத்திற்கு
நாட்டின் இறையாண்மையைத் தற்காக்க அழைத்துச் செல்லும் சூழல்
வேண்டியதன் அவசியத்தை விவரிக்கவும். (மூலம்: Arkib Negara Malaysia)

காலனித்துவத்திடமிருந்து தங்கள் பகுதியைப் பாதுகாப்பதற்காக நம்


உள்ளூர் வீரர்களின் ப�ோராட்ட வரலாற்றிலிருந்து பல படிப்பினைகளைக் கற்றுக்
க�ொள்ள முடியும். நாட்டுப்பற்று மிக்க குடிமக்கள் எனும் வகையில் வீரர்களின்
ப�ோராட்டங்களையும் அவர்களின் தியாகங்களையும் ப�ோற்றுவத�ோடு பெருமை
க�ொள்ள வேண்டும். Saiz sebenar
7.2.1, 7.2.2
ஆசிரியர் த�ோக் ஜங்குட், ஹஜி அப்துல் ரஹ்மான் ப�ோராட்டங்களையும்
7.2.3 குறிப்பு காரணங்களையும் மாணவர்கள் விளங்கிக் க�ொள்ள வழிகாட்டுதல். 69
K7.2.6
கள ஆய்வு

பெருமைமிகு வீரர்கள்

• மலாயாவைக் கைப்பற்ற அந்நிய


சக்திகளின் வருகை உள்ளூர்
ஆய்வுச்சிக்கல் மக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியது.
அதனைய�ொட்டிக் கலந்துரையாடுக.

• அந்நிய சக்திகளின் தலையீட்டையும்


காலனித்துவத்திற்கு எதிர்ப்பு
தெரிவித்த வீரர்களையும் அதற்கான
காரணங்களையும் கூறுக.
ஆய்வின் ந�ோக்கம் • ப�ோராட்டங்களை விவரிக்கவும்.
• ப�ோராட்டங்களின் விளைவுகளையும்
அதனால் ஏற்பட்ட படிப்பினைகளையும்
விவரிக்கவும்.

• அருங்காட்சியகம்/பழஞ்சுவடிக் காப்பகம்
த�ொடர்பான நிறுவனங்கள்
• நூல்/இதழ்/சஞ்சிகை
• ஆவணம்/அறிக்கை/நாட்குறிப்பு
மேற்கோள்/மூலம் • நாளிதழ்
• தனிமனிதர்
• அதிகாரப்பூர்வ வலைத்தளம்

• தலைப்பு
• ஆய்வுச் சிக்கல்
• ஆய்வின் ந�ோக்கம்
• ஆய்வு அணுகுமுறை
ஆய்வு அறிக்கை
• தரவு பகுப்பாய்வு
• ஆய்வின் முடிவு
• முடிவு
• மேற்கோள்
• இணைப்பு
Saiz sebenar
ஆசிரியர் • குழு அல்லது தனியாள் முறையில் செய்யலாம்.
குறிப்பு • ஆய்வறிக்கை ஒன்று முதல் ஐந்து பக்கங்களுக்குள் செய்திட வேண்டும்.
70
• சரியான வடிவ முறையில் கள ஆய்வைச் செய்திட மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
மீட்டுணர்வோம் உள்ளூர் வீரர்கள்
ட�ோல் சைட் ரெந்தாப்
✿ ஜேம்ஸ் புரூக், இபான் மக்களைக்
✿ நானிங் தனது காலனி என்று கடற்கொள்ளையர்கள் எனக் கருதினார்.
பிரிட்டிஷ் கூறியது.
✿ ட�ோல் சைட் பிரிட்டிஷ் மீது ✿ ரெந்தாப் நஙா ஸ்கராங்கில் உள்ள
தாக்குதல் நடத்தினார். ஆனால், ஜேம்ஸ் புரூக்கின் தற்காப்பு அரணைத்
அவர் த�ோற்கடிக்கப்பட்டார். தாக்கினார்.

ஷரிப் மசாஹ�ோர் டத்தோ மகாராஜா லேலா


✿ சரிக்கேய் பகுதியை ஜேம்ஸ் ✿ ஆட்சியர் அதிகாரங்களை இழந்தார்.
புரூக் ஆக்கிரமித்ததால் அவரை பிரிட்டிஷ் ரெசிடெண்ட் மலாய் மரபு
எதிர்த்தார். வழக்குகளில் தலையிட்டார்.
✿ ஷாரிப் மசாஹ�ோர் ✿ டத்தோ மகாராஜா லேலா J.W.W.
பெர்ச்சைக் க�ொல்லத் திட்டமிட்டார்.
கன�ோவிட்டிலுள்ள புரூக்
அரணைத் தாக்கினார்.
டத்தோ பஹாமான்
யாம்துவான் அந்தா ✿ ஆட்சியர் வரிவசூலிப்பு உரிமையை
✿ சுங்கை ஊஜ�ோங்கில் பிரிட்டிஷ் இழந்தனர்.
தலையீட்டை எதிர்த்தார். ✿ டத்தோ பஹாமான் பிரிட்டிஷ்
✿ யாம்துவான் அந்தா ம�ோதலை மீது தாக்குதலைத் த�ொடங்கி,
முடிவிற்குக் க�ொண்டுவர லுப�ோக் தெருவாவை மீண்டும்
பிரிட்டிஷாருடன் பேச்சுவார்த்தை கைப்பற்றினார்.
நடத்தினார்.
அந்தான�ோம்
மாட் சாலே
✿ சாலைகள் அமைக்க வட ப�ோர்னிய�ோ
✿ வட ப�ோர்னிய�ோ பிரிட்டிஷ் நிறுவனம் பிரிட்டிஷ் நிறுவனம் முரூட் குடிமக்களைக்
மாட் சாலேவைச் சண்டகான், கட்டாயத் த�ொழிலாளர்களாக ஆக்கியது.
மெங்காத்தால், இனனாம், புலாவ் காயா
ஆகிய இடங்களில் ஆட்சியாளராக ✿ அந்தன�ோம் வட ப�ோர்னிய�ோ பிரிட்டிஷ்
அங்கீகரிக்கவில்லை. நிறுவனத்தை எதிர்க்கத் தலைமையேற்று,
✿ புலாவ் காயாவில் அமைந்துள்ள வட முரூட் வீரர்களை ஒன்று திரட்டினார்.
ப�ோர்னிய�ோ பிரிட்டிஷ் நிறுவனத்தின்
தற்காப்பு அரணை மாட் சாலே
தாக்கினார். ஹஜி அப்துல் ரஹ்மான் லிம்போங்
த�ோக் ஜங்குட் ✿ புதிய நில விதி சட்டத்தை
அறிமுகப்படுத்திற்காகப் பிரிட்டிஷாரை
✿ பிரிட்டிஷ் ஆல�ோசனை முறைக்கு எதிர்த்தார்.
எதிர்ப்புத் தெரிவித்தார். ✿ பிரிட்டிஷ் விதிகளை மீறியதற்காகக் கைது
✿ த�ோக் ஜங்குட் தாக்குதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஹஜி
நடத்தி பாசீர் பூத்தேவைக் அப்துல் ரஹ்மான் லிம்போங்
கைப்பற்றினார். வழக்கறிஞராகப் பிரதிநிதித்து வாதாடி
வெற்றி பெற்றார்.
உள்ளூர் வீரர்களின் அந்நிய சக்திகளின் தலையீட்டுக்கும் காலனித்துவத்திற்கும்
எதிரான ப�ோராட்டத்தை இந்த அலகு விவாதிக்கிறது. இவர்களின்
ப�ோராட்டத்தைப் பற்றிய புரிதல் மாணவர்கள் நாட்டின் சுதந்திர வரலாற்றை
அடுத்த அலகில் புரிந்துக�ொள்ள உதவும். Saiz sebenar

71
சிந்தித்துப் பதிலளி
அ. சரியான விடையைக் க�ொண்டு அட்டவணையை நிறைவு செய்க.
இடம் மாவீரர் இடம் மாவீரர்
நானிங் டத்தோ பஹாமான்
ரெந்தாப் பாசீர் பூத்தே
சரிக்கேய் மாட் சாலே
டத்தோ மகாராஜா லேலா அந்தான�ோம்
ஸ்ரீ மெனாந்தி ஹஜி அப்துல்
ரஹ்மான் லிம்போங்

Perajurit Tanah Air


Inilah barisan kita
Yang ikhlas berjuang
Siap sedia berkorban
Untuk ibu pertiwi
Sebelum kita berjaya
Jangan harap kami pulang
Inilah sumpah pendekar kita
Menuju medan bakti
Andai kata kami gugur semua
Taburlah bunga di atas pusara
Kami mohon doa Malaysia berjaya
Semboyan telah berbunyi
Menuju medan bakti.
Lagu/lirik: Saiful Bahri
Perajurit Tanah Air
ஆ. மேற்கண்ட பாடல் வரிகளை அடிப்படையாகக் க�ொண்டு:
அ) நற்பண்புகள் இரண்டனைக் குறிப்பிடுக.
(i) ______________________________________________
(ii) ______________________________________________

ஆ) இப்பாடலில் உள்ள முதல் கண்ணியின் ப�ொருள் என்ன?
________________________________________________
இ) நாட்டுக்காகத் தியாகம் செய்த வீரர்களின் சேவையைப் ப�ோற்றும்
முறையைக் குறிப்பிடுக.
_________________________________________________
Saiz sebenar
ஆசிரியர் "Perajurit Tanah Air" பாடலை உற்சாகத்துடன் பாட மாணவர்களுக்கு வழி
குறிப்பு காட்டுதல்.
72
நாட்டை நேசிப்போம்
காலனித்துவத்திற்கு எதிரான உள்ளூர் வீரர்களின் ப�ோராட்டங்களும் அந்நிய
சக்திகளின் தலையீடும் நம் நாட்டின் இறையாண்மையைப் பேணுவதன்
அவசியத்தை நமக்கு நன்கு உணர்த்துகின்றன.
தனிநபர்
காலனித்துவத்திற்கு எதிரான வீரர்களின்
தியாகங்களை உய்த்துணர்ந்து அதனைப் சமுதாயம்
ப�ோற்றுவது என்னுள் ஒரு நாட்டுப்பற்றைத் நாட்டுப்பற்றையும் வரலாற்றையும்
தூண்டுகிறது. உய்த்துணரும் சமூகம் நிச்சயமாகச்
சமயம், இனம், நாட்டை நேசிக்கும்.

நாடு
நாட்டை நேசிக்கும்
சமூகம் நாட்டின்
நலனுக்காக
அமைதியையும்
இறையாண்மையையும்
ஒற்றுமையையும்
நிலைநிறுத்த முயற்சிக்கும்.

மலேசியத் தரைப் படை அரச மலேசியக் காவல்துறை

அரச மலேசிய விமானப்படை அரச மலேசியக் கடற்படை


பாதுகாப்புப் படை எப்பொழுதும் நாட்டின் இறையாண்மையைத் தற்காக்கத் தயாராக உள்ளது.
(மூலம்: Kementerian Pertahanan Malaysia dan Polis Diraja Malaysia) Saiz sebenar

73
தலைப்பு 7: நாட்டின் சுதந்திரப் ப�ோராட்டம்

அலகு

6 சுதந்திர வரலாறு

சாரம்

நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு நம் நாட்டுத் தலைவர்களின்


அயரா உழைப்பையும் மக்களின் பங்களிப்பையும் அறிந்து
க�ொள்ள நாட்டின் சுதந்திர வரலாற்றை அறிவது
அவசியமாகும். சுதந்திர நாட்டை உருவாக்கப் பல்வேறு
ப�ோராட்டங்களையும் சவால்களையும் கடந்து வந்துள்ளோம்.
இந்த அலகு தலைவர்களின் சுதந்திரப் ப�ோராட்டங்கள்,
1957ஆம் ஆண்டு சுதந்திரப் பிரகடன ந�ொடிப்பொழுது
ஆகியவற்றை விவாதிக்கின்றது.

20 பிப்ரவரி 1956ஆம் ஆண்டில் சுதந்திரக் குழுவினர்


வருகை, பண்டா ஹிலிர் மலாக்கா.
Saiz sebenar (மூலம்: Arkib Negara Malaysia)

74
நீங்கள் கற்கப் ப�ோவது என்ன?
1. சுதந்திரத்திற்குப் ப�ோராடிய தலைவர்கள்.
2. சுதந்திரத்திற்கான முயற்சிகள்.
3. சுதந்திரப் பிரகடன ந�ொடிப்பொழுது.

குடியியல் நெறி
ப�ொறுப்புணர்வு

PS
AK

அடிப்படை வரலாற்றுச் சிந்தனைத் திறன்


1. நாட்டின் சுதந்திர வரலாற்றின் காலநிரல் மாற்றத்தை விளங்கிக்
க�ொள்ளல்.
2. நாட்டின் சுதந்திரத்தைத் தற்காப்பதன் அவசியத்தின் விழிப்புணர்வு
மேம்பட முந்தைய சிக்கல்களை விளங்கிக் க�ொள்ளல்.
3. சுதந்திரப் ப�ோராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் குறிப்பிடத்தக்கச்
சான்றுகளை ஆராய்தல்.
Saiz sebenar

75
சுதந்திரப் ப�ோராளிகள்
மக்களும் தலைவர்களும் சுதந்திர நாட்டின் அவசியத்தை அறிந்திருப்பர்.
சுதந்திரத் தலைவர்களின் அறிவாற்றலும் தீரமும் அந்நிய ஆதிக்கத்திலிருந்து
நாட்டைச் சுதந்திரம் அடையச் செய்தது. தலைவர்களுக்கிடையிலான
ஒருமைப்பாடு நாட்டின் சுதந்திரத்தை எளிதாக்கியது.
டத்தோ ஓன் பின் ஜபார்
(Dato’ Onn bin Ja’afar)
✯ 1946ஆம் ஆண்டில் மலாய் காங்கிரஸின் தலைவர்.
✯ 1946ஆம் ஆண்டில் அம்னோவின் (United Malays
National Organisation) முதல் தலைவர்.
✯ ஜ�ொகூர் மந்திரி பெசராக நியமிக்கப்பட்டவர்.
✯ மலாய்க்காரர்களை ஒன்றிணைத்து மலேயன்
யூனியனை எதிர்த்தவர்.
✯ மலாயா சுதந்திரக் கட்சியைத் (IMP)
த�ோற்றுவித்தவர்.

டாக்டர் புர்ஹானுடின் அல்ஹெல்மி


(Dr. Burhanuddin al-Helmi)
✯ 1945ஆம் ஆண்டின் மலாயாத் தேசிய மலாய்க்காரர்கள்
கட்சியின் (PKMM) இரண்டாம் தலைவர்.
✯ 1956ஆம் ஆண்டில் மலாயா இஸ்லாமியர் கட்சிக்குத்
(PAS) தலைமையேற்றார்.
✯ 'மலாயு ராயா' சிந்தனைக்குப் ப�ோராடினார்.
✯ 'ஐக்கிய தீபகற்ப இந்தோனேசியக் குடியரசு கட்சிக்குத்
(KRIS) தலைமையேற்றார்.

அமாட் ப�ோஸ்தாமாம்
(Ahmad Boestamam)
✯ 1946ஆம் ஆண்டில் 'அங்காத்தான் பெமுடா
இன்சாப்' (API) தலைவர்.
✯ 1955ஆம் ஆண்டில் மலாயா மக்கள் கட்சியைத்
(PRM) த�ோற்றுவித்தார்.
✯ 'சுவாரா ராக்யாட்' (Suara Rakyat), 'வ�ோய்ஸ் ஓப்
தி பீப்பிள்' (Voice of The People) நாளிதழ்களை
Saiz sebenar வெளியிட்டார்.

76
துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல் ஹஜ் இப்னி
அல்மர்ஹோம் சுல்தான் அப்துல் ஹமிட் ஹலிம் ஷா
(Tunku Abdul Rahman Putra Al-Haj ibni
Almarhum Sultan Abdul Hamid Halim Shah)
✯ அம்னோவின் இரண்டாம் தலைவர்.
✯ 1952ஆம் ஆண்டில் கூட்டணிக் கட்சியைத்
த�ோற்றுவித்தவர்.
✯ 1956ஆம் ஆண்டில் லண்டன் சென்ற கூட்டரசு
மலாயா சுதந்திரக் குழுவிற்குத் தலைமையேற்றார்.
✯ கூட்டரசு மலாயாவின் முதலாவது பிரதமர்.

ஈஷாக் ஹஜி முகமட் (Ishak Haji Muhammad)


✯ 1934ஆம் ஆண்டு அரசியலில் தீவிரமாக ஈடுபட
மூன்றாம் நிலை மஜிஸ்திரேட் பதவியிலிருந்து
விலகினார்.
✯ உத்துசான் மெலாயு நாளிதழைத் த�ோற்றுவித்தார்.
✯ 1957ஆம் ஆண்டு மலாயா த�ொழிலாளர் கட்சிக்குத்
தலைமையேற்றார்.

அபு பக்கார் அல் பகீர் (Abu Bakar al-Baqir)


✯ 1934ஆம் ஆண்டு மஹாட் அல் எஹ்யா
அஸ்ஷரிப்பைத் (al-Ehya Assharif) த�ோற்றுவித்தார்.
✯ 1948ஆம் ஆண்டில் ஒரே மலாயா உயர்நிலை
சமய சபையைக் (MATA) கூட்டினார்.
✯ 1948ஆம் ஆண்டில் ஹிஸ்புல் முஸ்லிமின்னுக்குத்
தலைமையேற்றார்.
உங்களுக்குத் தெரியுமா?
வி ர ை
ந் து ப தி ல ளி • துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா
அல் ஹஜ் இப்னி அல்மார்ஹோம்
லண்டன் சென்ற கூட்டரசு சுல்தான் ஹமிட் ஹலிம் ஷா,
மலாயாச் சுதந்திரக் குழுவிற்குத் கெடா சுல்தானாகிய சுல்தான்
தலைமையேற்றவர் யார்? ஹமிட் ஹலிம் ஷாவின் புதல்வராவார்.
• கூட்டணிக் கட்சி எனப்படுவது
அம்னோ, மசீச, மஇகா ஆகிய
சுதந்திரம் பெறுவதற்கு ஒருமைப்பாடு உறுப்புக்கட்சிகள் இணைந்தது
எவ்வளவு முக்கியமெனக் குறிப்பிடுக. ஆகும். மலாய்க்காரர்கள்,
சீனர்கள், இந்தியர்கள் அரசியலில்
வலுவான உறவு அமைய இக்கட்சி
அமைக்கப்பட்டது. Saiz sebenar
7.3.1 நாட்டின் சுதந்திரப் ப�ோராளிகளை அறிய மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
K 7.3.5 77
துன் தான் செங் ல�ோக் (Tun Tan Cheng Lock)
✯ 1945ஆம் ஆண்டு 'ஆல் மலாயன் க�ொன்சில் ஓப்
ஜ�ோயிண்ட் ஆக்‌ஷன்'இன் (AMCJA) தலைவர்.
✯ 1949ஆம் ஆண்டின் மலாயன் சீனர் சங்கத்தின் (மசீச)
முதல் தலைவராவார்.
✯ மசீச, அம்னோவ�ோடு இணைந்து கூட்டணிக் கட்சி
உருவாகக் காரணமானவர்.
✯ சீனச் சமூகத்தினரிடையே நாட்டின் மீது விசுவாச
உணர்வை விதைத்தவர்.
துன் அப்துல் ரசாக் பின் டத்தோ உசேன்
(Tun Abdul Razak bin Dato’ Hussein)
✯ லண்டன் சென்ற கூட்டரசு மலாயாச் சுதந்திரக்
குழுவின் உறுப்பினர்.
✯ 1956ஆம் ஆண்டு ரசாக் அறிக்கையை
அறிமுகப்படுத்தியவர்.
✯ 1957ஆம் ஆண்டு கூட்டரசு மலாயாவின் முதலாவது
துணைப் பிரதமர்.
✯ மலாய்மொழியைப் பயிற்று ம�ொழியாக்கியவர்.

டத்தோ அப்துல் வாஹாப் பின்


த�ொ மூடா அப்துல் அசிஸ்
(Dato’ Abdul Wahab bin Toh Muda Abdul Aziz)
✯ மலேயன் யூனியனின் உருவாக்கத்தை எதிர்த்தவர்.
✯ 1946ஆம் ஆண்டின் அம்னோவின் முதலாவது ப�ொதுச்
செயலாளர்.
✯ 1956ஆம் ஆண்டில் லண்டன் சென்ற கூட்டரசு
மலாயாவின் சுதந்திரக் குழுவில் மலாய் அரசர்கள்
நிகராளியாகச் சென்றார்.
✯ முதலாவது பேராக் மந்திரி பெசார் ஆவார்.
21ஆம் திறன் களரி நடை (Gallery Walk)
நூற்றாண்டுக் கற்றல்
1. மாணவர்கள் பல குழுக்களாகப் பிரிக்கப்படுதல்.
2. ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தாள் க�ொடுக்கப்படும். நாட்டுச் சுதந்திரத்திற்குப்
ப�ோராடிய ப�ோராளிகளின் ப�ோராட்டங்களைப் படைப்பாக்கத் திறன்கொண்டு
எழுதுதல்.
3. மாணவர்களின் படைப்பைப் பிற குழு மாணவர்களும் காண வகுப்பில் ஒட்டி
வைத்தல்.
4. பிற குழு மாணவர்கள் படைப்புகள் த�ொடர்பான தங்கள் கருத்துகளைக் குறிப்பு
Saiz sebenar
அட்டையில் எழுதி, அப்படைப்புகள்மீது ஒட்டுதல்.

78
துன் எச்.எஸ்.லீ (Tun H.S. Lee)
✯ 1949ஆம் ஆண்டின் சிலாங்கூர் மாநில மசீச கட்சியின்
தலைவர்.
✯ அம்னோ-மசீச ஒத்துழைப்பை முன்னெடுத்த தலைவர்.
✯ இனங்களிடையே ஒற்றுமையை வளர்க்க முற்பட்டவர்.
✯ 1956ஆம் ஆண்டு லண்டன் சென்ற கூட்டரசு மலாயாவின்
சுதந்திரக் குழுவின் உறுப்பினர்.
✯ கூட்டரசு மலாயாவின் முதல் நிதி அமைச்சர்.

துன் வீ.தி. சம்பந்தன் (Tun V.T. Sambanthan)


✯ 1955ஆம் ஆண்டின் மலாயன் இந்தியர் காங்கிரஸின்
(மஇகா) 5ஆவது தேசியத் தலைவர்.
✯ 1957ஆம் ஆண்டு சுதந்திரக் குழுவில் பங்கேற்றார்.
✯ கூட்டரசு மலாயாவின் முதல் நலத்துறை அமைச்சர்
ஆவார்.

துன் டாக்டர் இஸ்மாயில் பின்


டத்தோ அப்துல் ரஹ்மான்
(Tun Dr. Ismail bin Dato’ Abdul Rahman)
✯ 1951ஆம் ஆண்டின் அம்னோவின் துணைத் தலைவர்.
✯ 1951-1952 ஆம் ஆண்டில் கூட்டணிக் கட்சி
உருவாக்கத்தில் மசீசவுடன் பேச்சுவார்த்தை நடத்திய
அம்னோவின் நிகராளி.

(மூலம்: Ishak Saat, 2011. Radikalisme Melayu Perak 1945-1970. Pulau Pinang: Penerbit Universiti Sains Malaysia)

சுதந்திரப் ப�ோராளிகள் நாட்டிற்குப் பெரும் தியாகம் செய்துள்ளார்கள்.


சுதந்திரக் குடிமக்களாகிய நாம், தலைவர்களின் தியாகங்களையும்
ப�ோராட்டங்களையும் ப�ோற்றிப் பெருமிதம் க�ொள்ள வேண்டும்.
வி ர ை
ந் து ப தி ல ளி

கூட்டரசு மலாயாவின் முதலாவது


நலத்துறை அமைச்சர் யார்?
Saiz sebenar
7.3.1
சுதந்திரத்திற்குப் ப�ோராடிய ப�ோராளிகளின் பெயர்களைப் பட்டியலிட
மாணவர்களுக்கு வழிகாட்டுதல். 79
சுதந்திரம் க�ோரிப் ப�ோராட்டம்
காலனித்துவ ஆட்சியின் துயரம் மக்களிடையே சுதந்திர வேட்கையைத்
தூண்டியது. சமூக ஒருமைப்பாடும் பல்லினச் சமூகத் தலைவர்களுக்கிடையிலான
ஒருமைப்பாடும் கூட்டரசு மலாயாவின் சுதந்திர அடைவை எளிதாக்கியது.
பின்வருவன நாட்டின் சுதந்திரப் ப�ோராட்ட நிரல்களாகும்.
கம்னியூஸ்ட்டு அச்சுறுத்தல்

மலாயாவின் கம்னியூஸ்ட்டுக் கட்சி


ஜப்பானியர் ஆக்கிரமிப்பு க�ொலை செய்தல், ஈயச் சுரங்கங்களையும்
ரப்பர் த�ோட்டங்களையும் அழித்தல்
ப�ோன்ற க�ொடுமைகளைப் புரிந்தது.
ஜப்பானியர் ஆக்கிரமிப்புப் பெரும் கம்னியூஸ்டின் வன்செயல்களின்
துயரத்தை ஏற்படுத்தியது. விளைவாக 1948ஆம் ஆண்டு நாடு
உள்ளூர்த் தலைவர்கள் முழுவதும் அவசரக்காலம் (darurat)
சுதந்திரத்திற்கு முழுமூச்சாய்ப் பிரகடனப்படுத்தப்பட்டது.
ப�ோராடினர். 1955ஆம் ஆண்டில் பாலிங்கில்
நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை த�ோல்வியில்
முடிந்தது.
1960ஆம் ஆண்டில் அவசரக்காலம்
முடிவுக்குக் க�ொண்டு வரப்பட்டது.

1948 1945 –
1942–1945 1946–1948

மலேயன் யூனியன்
புதிய காலனித்துவ வடிவமாகப் பிரிட்டிஷார்
மலேயன் யூனியனை அறிமுகப்படுத்தினர்.
மலாய் அரசர்களின் அதிகாரத்தை அழித்தனர்.
டத்தோ ஓன் பின் ஜபார் மலாய்க்காரர்களுக்குத்
தலைமையேற்று மலேயன் யூனியனை
எதிர்த்தார்.
1948ஆம் ஆண்டில் மலேயன் யூனியனுக்குப்
பதிலாகக் கூட்டரசு மலாயா அமைக்கப்பட்டது.
வி ர ை
ந் து ப தி ல ளி உங்களுக்குத் தெரியுமா?
மலேயன் யூனியன் எதிர்ப்புப் அவசரக்காலம் என்பது எதிர்பாரா
ப�ோராட்டத்திற்குத் விதமாகத் திடீரென ஏற்படும்
Saiz sebenar
தலைமையேற்றவர் யார்? துயரம் ஆகும்.
80
கூட்டரசு சட்டச் சபைக்கான
தேர்தல்

தேர்தலை எதிர்நோக்க அம்னோ,


மசீச, மஇகா அங்கத்துவம்
பெற்ற கூட்டணிக் கட்சி
அமைக்கப்பட்டது.
இந்தக் கூட்டணிக் கட்சியில்
மலாய்க்காரர், சீனர், இந்தியர் கூட்டரசு மலாயாவின்
பிரதிநிதித்துவம் இருந்தது. சுதந்திரம்
இத்தேர்தலில் கூட்டணிக் கட்சி
வெற்றி பெற்றது. 31 ஆகஸ்ட்டு 1957ஆம் ஆண்டு
துங்கு அப்துல் ரஹ்மான் துங்கு அப்துல் ரஹ்மான் கூட்டரசு
முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். மலாயாவின் சுதந்திரத்தைப்
கூட்டணிக் கட்சி பிரிட்டிஷாருடன் பிரகடனம் செய்தார்.
சுதந்திரப் பேச்சுவார்த்தையை
நடத்தியது.

1956 1957
1951 1955

அரசியல் கட்சிகளின் த�ோற்றம் லண்டன் பேச்சுவார்த்தை

1945ஆம் ஆண்டு மலாயாத் தேசிய மலாய் அரசர்களின் நிகராளிகளும்


மலாய்க்காரர்கள் கட்சி [Parti Kebangsaan கூட்டணிக் கட்சியின்
Melayu Malaya (PKMM)]. நிகராளிகளும் லண்டன் சென்றனர்.
1946ஆம் ஆண்டு அம்னோ [United Malays இக்குழு லண்டன் சென்ற
National Organisation (UMNO)]. ந�ோக்கம் பிரிட்டிஷாருடன்
1946ஆம் ஆண்டு மஇகா [Malayan Indian சுதந்திரம் த�ொடர்பான
Congress (MIC)]. பேச்சுவார்த்தை நடத்துவதற்கே
1948ஆம் ஆண்டு ஹிஸ்புல் முஸ்லிமின் ஆகும்.
(Hizbul Muslimin).
1949ஆம் ஆண்டு மசீச [Malayan Chinese நாம் முன்மாதிரியாகக்
Association (MCA)]. க�ொள்ள வேண்டிய
1951ஆம் ஆண்டு பாஸ் [Parti Islam சுதந்திரப் ப�ோராளிகளின்
Se-Malaya (PAS)]. தியாகங்கள் என்ன?
(மூலம்: Ramlah Adam, 2003. Pejuang-pejuang Saiz sebenar
Kemerdekaan. Melaka: Institut Kajian Sejarah dan Patriotisme Malaysia)
7.3.2 சுதந்திரம் க�ோரிக்கை நிகழ்வுகளை மாணவர்கள் அடையாளங்காண
K7.3.4 வழிகாட்டுதல். 81
சுதந்திரப் பேச்சுவார்த்தை
தலைவர்களுக்கு இடையிலான ஒருமைப்பாடு நம் நாட்டின் சுதந்திரத்திற்கு
அடிப்படையாக அமைந்தது. 1956ஆம் ஆண்டில் சுதந்திரம் பெறுவதற்காகப்
பிரிட்டிஷாருடன் பேச்சுவார்த்தை நடத்த லண்டனுக்குச் சென்ற சுதந்திரக்
குழுவிற்கு ல�ோர்ட் எலென் லென�ொக்ஸ் ப�ோய்ட் (Lort Alan Lennox Boyd)
தலைமையேற்றார்.

துங்கு அப்துல் ரஹ்மான் தலைமையில் லண்டன் சென்ற சுதந்திரக் குழுவினர்.


(மூலம்: Arkib Negara Malaysia)

இச்சுதந்திரக் குழுவில் மலாய் அரசர்களின் நிகராளியாக நால்வரும் கூட்டணிக்


கட்சியின் நிகராளியாக நால்வரும் இடம் பெற்றிருந்தனர்.

மலாய் அரசர்களின் நிகராளிகள்: கூட்டணிக் கட்சியின்


டத்தோ அப்துல் வாஹாப் த�ொ மூடா நிகராளிகள்:
அப்துல் அசிஸ் (பங்லீமா புக்கிட் கந்தாங்) துங்கு அப்துல் ரஹ்மான்
அப்துல் அசிஸ் அப்துல் மஜிட் டத்தோ அப்துல் ரசாக்
டத்தோ முகமட் சேத் முகமட் சைட் உசேன்
டத்தோ நிக் அமாட் கமில் ஹஜி மாமூட் டாக்டர் இஸ்மாயில் அப்துல்
ரஹ்மான்
கெர்ணல் எச்.எஸ்.லீ
வி ர ை
ந் து ப தி ல ளி
சுதந்திரக் குழுவினர் பிரிட்டிஷாரை
சுதந்திரக் குழு
காண�ொலி
எங்குச் சந்தித்துப் பேச்சுவார்த்தை
Saiz sebenar நடத்தினர்?

82
இப்பேச்சுவார்த்தையின்
முடிவில் கூட்டரசு மலாயாவின்
சுதந்திர உடன்படிக்கை,
லண்டன் உடன்படிக்கை
எனவும் அறியப்பட்டது. இந்த
உடன்படிக்கையில் கூட்டரசு
மலாயாவின் சுதந்திர நாள்
31 ஆகஸ்ட்டு 1957 எனத்
தீர்மானிக்கப்பட்டது.

லண்டன், லென்கெஸ்தெர் அவுஸ் (Lancaster House) 8 ஜனவரி 1956ஆம் ஆண்டில் துங்கு


அப்துல் ரஹ்மான், ல�ோர்ட் எலென் லென�ொக்ஸ் ப�ோய்ட்டுடன் இணைந்து கூட்டரசு
மலாயாவின் சுதந்திர உடன்படிக்கையில் கையெழுத்திடுகிறார்.
(மூலம்: Arkib Negara Malaysia)

கூட்டரசு மலாயாவிற்குச் சுதந்திரம் பெற நம் நாட்டுத்


தலைவர்கள் கடைப்பிடித்த அணுகுமுறை என்ன?
Saiz sebenar
7.3.2
சுதந்திரக் குழுவின் ந�ோக்கத்தை மாணவர்கள் விளங்கிக்கொள்ள வழிகாட்டுதல்.
K7.3.5
83
சுதந்திரப் பிரகடன அறிவிப்பு

லண்டன் பேச்சுவார்த்தை
வெற்றிக்குப் பின்னர் 16 பிப்ரவரி
1956இல் சுதந்திரக் குழுவினர்
கூட்டரசு மலாயாவுக்குத் திரும்பினர்.

துங்கு அப்துல் ரஹ்மான் மக்களைப்


பார்த்துக் கை அசைக்கிறார்.

20 பிப்ரவரி 1956இல் மலேயன்


ஏர்வேஸ் விமானத்தில் சுதந்திரக்
குழு பத்து பெர்ரெண்டாம் விமான
நிலையத்தில் வந்து இறங்கியது.
மக்கள் குதூகலத்தோடு
வரவேற்றனர். துங்கு அப்துல்
ரஹ்மான் 31 ஆகஸ்ட்டு 1957ஆம்
நாள் நாடு சுதந்திரம் அடையும்
என அறிவித்தார்.

சுதந்திரக் குழுவினரை மக்கள்


குதூகலத்துடன் வரவேற்கும் காட்சி.

30 ஆகஸ்ட்டு 1957இல் மலாக்கா


பண்டா ஹிலி்ர் திடலில் யூனியன்
ஜெக் க�ொடி மாலை மணி
6.30க்கு இறக்கப்பட்டது. இந்த
நிகழ்வை மலாக்காவின் ரெசிடண்ட்
ஆணையர் எச்.ஜி.ஹெம்மட்டும்
ஆயிரக்கணக்கான மக்களும் கண்டு
களித்தனர். இந்நிகழ்ச்சி மலாயாவில்
பிரிட்டிஷ் காலனித்துவம் முடிவுக்கு
வந்ததைப் பிரதிபலித்தது.
யூனியன் ஜெக் க�ொடி மலாக்கா பண்டா ஹிலிர்
திடலில் இறக்கப்படும் காட்சி.

தலைவர்களிடையிலான ஒருமைப்பாட்டால் நம் நாட்டுக்குச் சுதந்திரம்


கிடைத்தது. இதனால், நாட்டில் வளப்பமும் அமைதியும் நிறைந்தது.
இந்நாட்டின் குடிமக்களாகிய நாம் இதனை உணர்ந்து நாட்டின் சுபிட்சத்தையும்
Saiz sebenar
எதிர்காலத்தையும் காக்க ஒன்றிணைவ�ோம்.
7.3.2
சுதந்திரப் பிரகடன காலநிரலை மாணவர்கள் விளங்கிக் க�ொள்ளத் துணைபுரிதல். K7.3.5
84
சுதந்திர ந�ொடிப்பொழுது
31 ஆகஸ்ட்டு 1957ஆம் நாள் மலாயா மக்கள் அனைவருக்கும் மிக முக்கியமான
நாளாகும். அந்த ந�ொடிப்பொழுதின் மகத்துவத்தில் நம் நாடு சுதந்திரம்
பெற்றுக் காலனித்துவக் காலம் முடிவுற்றது.

நள்ளிரவு
12:00

30 ஆகஸ்ட்டு 1957ஆம்
நாள் சரியாக நள்ளிரவு
மணி 12.00க்கு
யூனியன் ஜேக் க�ொடி
இறக்கப்பட்டது
மலாயாவில் பிரிட்டிஷ்
காலனித்துவக் காலம்
முடிவு பெற்றதைக்
காட்டுகிறது.

நள்ளிரவு
க�ோலாலம்பூரில் யூனியன் ஜேக் 12:01
க�ொடி இறக்கப்படுகிறது.

கூட்டரசு மலாயாக்
க�ொடி ஏற்றப்படுவது
மலாயா சுதந்திர
நாடு என்பதற்குச்
சான்றாகிறது.

க�ோலாலம்பூரில் மலாயா கூட்டரசுக்


க�ொடி ஏற்றப்படுகிறது.

(மூலம்: Arkib Negara Malaysia)

கூட்டரசு மலாயாக் க�ொடி ஏற்றப்படுவதை நேரடியாகப்


பார்த்திருப்பீர்களானால் உங்களின் மன உணர்வு எப்படி
இருந்திருக்கும்?
Saiz sebenar

85
புகழ்மிகு சுதந்திரம்

31 ஆகஸ்ட்டு 1957- க�ோலாலம்பூர் மெர்டேக்கா


அரங்கில் துங்கு அப்துல் ரஹ்மான் மலாய் அரசர்கள்,
மக்கள், 30 காமன்வெல்த் நாடுகளின் நிகராளிகள் ஆகிய�ோரின் முன்னிலையில்
கூட்டரசு மலாயாவின் சுதந்திரப் பிரகடன விழாவை நிகழ்த்தினார்.
துங்கு அப்துல் ரஹ்மான் ஏழு முறை ‘மெர்டேக்கா’ என முழங்கினார்.
மக்களும் அவரைப் பின் த�ொடர்ந்து உற்சாகத்துடன் முழக்கமிட்டனர்.
இதனூடே, தேசியப் பண் இசைக்கப்பட்டுக் கூட்டரசு மலாயாவின் க�ொடி
ஏற்றப்பட்டது.
சுதந்திரப் பிரகடனம் விடுதலை பெற்ற சுதந்திர நாடாக மலாயாவிற்குப்
புதியத் துவக்கமாக அமைந்தது.
ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் இறையாண்மையைத் தற்காக்க வேண்டும்.
சிறுவயதிலிருந்தே நாட்டுப்பற்றை விதைக்க வேண்டும். இனங்களுக்கிடையிலான
நல்லுறவு சுதந்திரத்தை நிலைப்படுத்துவதற்கும் நாட்டின் சுபிட்சத்துக்கும்
வழிவகுக்கும்.
உங்களுக்குத் தெரியுமா?
துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல் ஹஜ் இப்னி
அல்மர்ஹோம் சுல்தான் அப்துல் ஹமிட் ஹலிம் ஷா
கை உயர்த்தி ‘மெர்டேக்கா’ என முழக்கமிட்டது நம்
நாடு அந்நிய காலனித்துவத்திலிருந்து விடுதலையானது மெர்டேக்கா
என்பதைப் பறைசாற்றுவதாகும். முழக்கக் காண�ொலி

நாட்டின் சுதந்திரத்தைத் ச�ொற்களஞ்சியம்


தற்காப்பதன் அவசியத்தைக்
காமன்வெல்த்: முன்னாள் பிரிட்டிஷ்
குழுவில் கலந்துரையாடுக.
காலனித்துவ நாடுகளின் அமைப்பு.
Saiz sebenar
7.3.3
நாட்டின் சுபிட்சத்திற்கு வித்திடும் சுதந்திர நாட்டைத் தற்காப்பதன் அவசியத்தை
K7.3.6
86 மாணவர்கள் விளங்கிக் க�ொள்ள வழிகாட்டுதல்.
மீட்டுணர்வோம்

சுதந்திரப் ப�ோராளிகள்
• டத்தோ ஓன் பின் ஜபார் • துன் அப்துல் ரசாக் பின் டத்தோ
• டாக்டர் புர்ஹானுடின் உசேன்
அல்ஹெல்மி • டத்தோ அப்துல் வஹாப் பின்
• அமாட் ப�ோஸ்தாமாம் த�ொ மூடா அப்துல் அசிஸ்
• துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா • துன் எச்.எஸ்.லீ
அல் ஹஜ் • துன் வீ.தி.சம்பந்தன்
• ஈஷாக் ஹஜி முகமட் • துன் டாக்டர் இஸ்மாயில் பின்
• அபு பக்கார் அல் பகீர் டத்தோ அப்துல் ரஹ்மான்
• துன் தான் செங் ல�ோக்

சுதந்திரம் க�ோரிப் ப�ோராட்டம்


• அந்நிய சக்திகளின் காலனித்துவமும் கம்யூனிஸ்ட்டின் அச்சுறுத்தலும்
சுதந்திரம் க�ோரிப் ப�ோராட்டத்திற்கு மக்களிடையே எழுச்சியை
ஏற்படுத்தியது.

சுதந்திரப் பேச்சுவார்த்தை
• சமூக ஒருமைப்பாடும் பல்லினத் தலைவர்களுக்கும் இடையிலான
ஒருமைப்பாடும் ஒத்துழைப்பும் கூட்டரசு மலாயாவின் சுதந்திர
அடைவை எளிதாக்கியது.

சுதந்திர ந�ொடிப்பொழுது
• 31 ஆகஸ்ட்டு 1957ஆம் நாள் மலாயா மக்கள் அனைவருக்கும் மிக
முக்கிய நாளாகும். சுதந்திரம் அடைந்த அந்த ந�ொடிப்பொழுது
அந்நிய ஆட்சியை முடிவுக்குக் க�ொண்டு வந்தது.

இந்த அலகில் நாட்டின் சுதந்திர வரலாற்றை நன்கு அறிந்து க�ொண்டனர்.


அடுத்த அலகில் மாட்சிமை தாங்கிய மாமன்னரின் அதிகாரங்களை அறிய
இந்தப் புரிதல் துணைபுரியும்.
Saiz sebenar

87
சிந்தித்துப் பதிலளி

அனைத்துக் கேள்விக்கும் பதிலளிக்கவும்.

அ) சுதந்திரப் ப�ோராட்ட நிரல் வரைபடத்தைச் சரியான விடையைக் க�ொண்டு


நிறைவு செய்க.

ஜப்பானியர்
ஆக்கிரமிப்பு

ஆ) சரியான விடையைக் க�ொண்டு நிறைவு செய்க.

பெருமிதம் ஒருமைப்பாட்டால்

சுதந்திரம் பேச்சுவார்த்தை ஒற்றுமை

1. முந்தைய தலைவர்களின் ----------------- நாடு எளிதில் சுதந்திரம்


அடைந்தது.

2. தலைவர்களிடையே ஒருமைப்பாடு இருந்ததால் நாடு எளிதில் ----------------


அடைந்தது.

3. லண்டனுக்குச் சென்ற சுதந்திரக் குழு --------------- நடத்தி சுதந்திரத்திற்கு


வழிவகுத்தது.

4. இனங்களுக்கிடையே ------------------ இருந்தால் நாடு சுபிட்சம் பெறும்.

5. சுதந்திரம் பெற்ற நாட்டின் குடிமகனாக, நாம் அடைந்துவரும்


வெற்றிகளைக் கண்டு ---------------- க�ொள்ள வேண்டும்.

Saiz sebenar

88 இப்பக்கத்தைப் படியெடுத்து வழங்கிடுக.


நாட்டை நேசிப்போம்
சுதந்திரப் ப�ோராட்டத்தை அறிவது நாம் சுதந்திரத்தை உய்த்துணர
வழிவகுக்கிறது. ஒவ்வொருவரும் நாட்டின் சுதந்திரத்தைத் தற்காக்க எவ்விதச்
சவால்களையும் தடைகளையும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்.

சுதந்திர நாட்டின் குடிமக்களாகிய நாம் அடுத்த தலைமுறைக்காக நாட்டின்


சுதந்திரத்தை நிலைநிறுத்த வேண்டும்.
(மூலம்: Koleksi Dewan Bahasa dan Pustaka)

தனிநபர்
மக்களாகிய நாம்
நாட்டுப்பற்றை
விதைத்துச் சுதந்திரத்தின் சமுதாயம்
ப�ொருளைப் ப�ோற்றி சுதந்திரத்தின் ப�ொருளை
அதனை நேசித்திட உய்த்துணர்ந்து மக்களிடையே
வேண்டும். ஒற்றுமையை உருவாக்குவதன்வழி
நாட்டின் இறையாண்மையைத்
தற்காக்கலாம்.

நாடு Saiz sebenar


நாட்டின் முன்னேற்றத்திற்காக
இறையாண்மையைத் தற்காக்க 89
வேண்டும்.
தலைப்பு 8: மாட்சிமை தாங்கிய மாமன்னர்

அலகு
மாட்சிமை தாங்கிய
7 மாமன்னர் நாட்டின் அரண்

16ஆவது மாட்சிமை தாங்கிய மாமன்னர் அல்


சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல் முஸ்தப்பா
பில்லா ஷா இப்னி அல்மர்ஹோம் சுல்தான் ஹஜி
அமாட் ஷா அல்- முஸ்தப்பா இன் பில்லா. மாட்சிமை தாங்கிய மாமன்னர்
(மூலம்: Istana Negara) ஊடகவியலாளர்களுக்கு
உணவு க�ொடுக்கும்
காண�ொலி.
சாரம்

நம் நாட்டின் நிர்வாகத்தில் மாமன்னரின் அமைப்புமுறை மிக முக்கியமானது.


இந்த அலகில் மாமன்னரின் ஆட்சி முறை, அரசவை மன்ற கடமைகள்,
அரியணை அமர்வின் சடங்குகள் ஆகியன விவாதிக்கப்படும். மேலும், இந்த
அலகு மாமன்னரின் அதிகாரங்களையும் அரசுரிமைச் சின்னங்களையும் மாட்சிமை
Saiz
Saizsebenar
sebenar பேரரசியாரைப் பற்றியும் விளக்கும்.
தாங்கிய

9090
நீங்கள் கற்கப் ப�ோவது என்ன?
1. நாட்டின் முகாமைத் தலைவராக மாமன்னர்.
2. மாமன்னரைத் தேர்வு செய்வதில் அரசவை மன்றத்தின் பங்கு.
3. மாமன்னரின் அரியணை ஏறும் சடங்குகள்.
4. மாமன்னரின் அதிகாரங்கள்.
5. மாமன்னர், பேரரசியாரின் அரசுரிமைச் சின்னங்கள்.

11 செப்டம்பர் 1959ஆம் நாளன்று முதலாம் மாட்சிமை தாங்கிய மாமன்னர்


துவான்கு அப்துல் ரஹ்மான் இப்னி துவான்கு முகமதுவும் பேரரசியார் துவான்கு
புவான் பெசார் குர்சியா பிந்தி துவான்கு பெசார் புர்ஹானுடினும் முதல் கூட்டரசு
மலாயாவின் நாடாளுமன்றத் திறப்பு விழாவிற்கு வருகை தந்தனர்.
(மூலம்: Arkib Negara Malaysia)
குடியியல் நெறி
முதலாம் மாமன்னரின் அரியணை
ஏறும் சடங்கின் காண�ொலி.
மதித்தல்
PS
AK

அடிப்படை வரலாற்றுச் சிந்தனைத் திறன்


1. மாமன்னர் நாட்டின் முகாமைத் தலைவர் என்பதைப் புரிந்து
க�ொள்ளுதல்.
2. மாமன்னரைத் தேர்வு செய்வதில் அரசவை மன்றத்தின் பங்கினை
ஆராய்தல்.
3. மாமன்னர், பேரரசியார் ஆகிய�ோரின் அதிகாரங்கள், அரசுரிமைச்
சின்னங்கள் ஆகியவற்றை விளக்குதல். Saiz
Saizsebenar
sebenar

9191
நாட்டின் முகாமைத் தலைவர்

கூட்டரசு மலாயா சுதந்திரம் அடைந்த பிறகு மாமன்னர் அமைப்புமுறை


அமைக்கப்பட்டது. மாமன்னரின் அமைப்புமுறை கூட்டரசு அரசியலமைப்புச்
சட்டம் இயற்றப்பட்டப�ோது உருவாக்கப்பட்டது. கூட்டரசு அரசியலமைப்புச்
சட்டத்திற்கேற்ப மாமன்னர் நாட்டின் முகாமைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மாட்சிமை தாங்கிய மாமன்னர்


நாட்டின் முகாமைத் தலைவர்

சட்டத்துறை நிர்வாகத்துறை நீதித்துறை

வி ர ை
நாட்டின் முகாமைத் தலைவர் ந் து ப தி ல ளி
என்ற முறையில் மாமன்னர்
சட்டத்துறை, நிர்வாகத்துறை, மாமன்னர் தலைமை ஏற்கும் மூன்று
நீதித்துறை ஆகிய அரசு அரசுத் துறைகளைக் குறிப்பிடுக.
அமைப்புகளுக்குத் தலைமை ஏற்பார்.
ச�ொற்களஞ்சியம்
சட்டத்துறை: நாட்டின் சட்டதிட்டங்களை உருவாக்கும் துறை.
நிர்வாகத்துறை: ஏற்றுக் க�ொள்ளப்பட்ட க�ொள்கைகளை அமல்படுத்தும் துறை.
நீதித்துறை: நாட்டின் சமநீதியை நிர்வகிக்கும் துறை.
Saiz sebenar

92
மாட்சிமை தாங்கிய மாமன்னரின் நியமனம் ஒன்பது மலாய் அரசர்கள்
மத்தியில் நுட்பமான சுழல்முறையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை
நடத்தப்படுகிறது. மாட்சிமை தாங்கிய மாமன்னரின் தேர்வு கூட்டரசு
அரசியலமைப்புச் சட்டத்தின்படி செய்யப்படுகிறது.

5
அரசவை மன்ற சட்டத்தில் மாட்சிமை தாங்கிய
மாமன்னர் பதவி உறுதிம�ொழி எடுத்துக்
கையெழுத்திடுவார்.

4
பிரதமர் மாட்சிமை தாங்கிய மாமன்னரின்
நியமனத்தை நாளிதழில் ஊடகச் செய்தியாக
வெளியிடுவார்.

3
அரசியலமைப்புச் சட்டம் 3ஆம் அட்டவணைப்படி
மாட்சிமை தாங்கிய மாமன்னரின் உறுதிக் கடிதம்
மக்களவைக்கும் மேலவைக்கும் அனுப்பப்படும்.

2
அரசவை மன்றம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாட்சிமை
தாங்கிய மாமன்னர் அல்லது சுல்தான் பெயரைப்
பிரகடனப்படுத்தும்.

1 ஒன்பது அரசர்களின் கமுக்கமான வாக்கெடுப்பின்வழி அரசவை


மன்றம் மாமன்னரின் நியமனத்தை முடிவு செய்யும்.
மாமன்னர் நியமன நிரல்முறை வரைபடம்
(மூலம்: Pejabat Penyimpan Mohor Besar Raja-raja)

மாட்சிமை தாங்கிய மாமன்னரின் அரசர் அமைப்பு நம் நாட்டின்


ஒருமைப்பாட்டிற்கு அரணாகத் திகழ்கிறது. குடிமக்களாகிய நாம் இந்த அமைப்பு
முறையைப் ப�ோற்றுவத�ோடு மதிக்கவும் வேண்டும்.
ந ட வ டி க ் கை
நிரல் வரைபடம்
நிரல்முறை வரைபட
விவரத்தைக் க�ொண்டு
மாமன்னர் தேர்ந்தெடுக்கப்படும்
முறையை முழுமைப்படுத்துக.

21ஆம் தி றன்
நூற்றாண்டுக் கற்றல் ய�ோசி - இணை - பகிர்
மாமன்னர் நம் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு அரணாகத் திகழ்கிறார்.
1. இந்த நடவடிக்கையை இருவராகச் சேர்ந்து செய்யவும்.
2. பத்து நிமிடங்கள் க�ொடுக்கப்படும்.
3. மாட்சிமை தாங்கிய மாமன்னரைப் ப�ோற்றுவதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுக.
4. கிடைக்கப்பெற்ற குறிப்புகளைப் படைத்திடுக.
Saiz sebenar
8.1.1, • நாட்டின் உயரிய தலைவரான மாட்சிமை தாங்கிய மாமன்னரின் அதிகார
K8.1.6 வரம்பை அறிந்து க�ொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
• ஒற்றுமையின் அரணாக விளங்கும் மாமன்னரைப் ப�ோற்றுவதன் 93
முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
அரசவை மன்றம்

1948ஆம் ஆண்டில் தர்பாருக்குப் பதிலாக அரசர் மன்றம் அதிகாரப்பூர்வமாக


உருவாக்கப்பட்டது. அரசர் மன்றம் என்பது ஒன்பது மலாய் அரசரையும் நான்கு
மாநில ஆளுநரையும் க�ொண்ட அமைப்பாகும். மாட்சிமை தாங்கிய மாமன்னரை
நியமனம் செய்வதே அரசர் மன்றத்தின் தலையாய கடமைகளுள் ஒன்றாகும்.

ஒன்பது மலாய் அரசரையும் நான்கு மாநில ஆளுநரையும் அரசர் மன்றம் க�ொண்டுள்ளது.


(மூலம்: Pejabat Penyimpan Mohor Besar Raja-raja)

மாட்சிமை தாங்கிய மாமன்னர் மாட்சிமை தாங்கிய மாமன்னர் மாட்சிமை தாங்கிய மாமன்னர்


நியமனத் தேர்வுக்கு முன் நியமனத் தேர்வின் ப�ோது நியமனத் தேர்வுக்குப் பின்

• அரசர் மன்றம் நியமனத் • வாக்கெடுப்பின்வழி • தேர்ந்தெடுக்கப்பட்ட


தேர்வின் தேதியை அரசர் மன்றம் மாமன்னரின் பெயரை
உறுதிச் செய்தல். புதிய மாமன்னரைத் அரசர் மன்றம்
தேர்ந்தெடுக்க பிரகடனப்படுத்தும்.
முடிவு செய்கிறது.

அரசர் மன்றம் நேர்த்தியாக நடத்திய மாட்சிமை தாங்கிய மாமன்னர் நியமனத்


தேர்தல் செயல்முறை, அரசமைப்பு முறையின் அவசியத்தைப் பிரதிபலிக்கின்றது.
உங்களுக்குத் தெரியுமா?
வி ர ை • 1896ஆம் ஆண்டு ‘தர்பார்’ த�ோற்றுவிக்கப்பட்டது. இதில்
ந் து ப தி ல ளி பேராக், சிலாங்கூர், பகாங், நெகிரி செம்பிலான் (ஐக்கிய
மலாய் மாநிலங்கள்) ஆகிய மாநிலங்களிலிருந்து நான்கு
எப்போது அரசர் மன்றம் அரசர் பங்கேற்பர்.
அமைக்கப்பட்டது? • அரசர் மன்றத்தின் முத்திரைக் காப்பாளர் மன்றம் அனைத்து
அரசர் மன்ற விவகாரங்களையும் நிர்வகிக்கின்றது.
Saiz sebenar
மாட்சிமை தாங்கிய மாமன்னரைத் தேர்ந்தெடுப்பதில் அரசர் மன்றப் பங்கினை 8.1.2
94 மாணவர்கள் புரிந்து க�ொள்ள வழிகாட்டுதல்.
மாட்சிமை தாங்கிய மாமன்னரின் முடிசூட்டு விழா

தேர்ந்தெடுக்கப்பட்ட மாட்சிமை தாங்கிய மாமன்னரின் முடிசூட்டு விழா தேசிய


அரண்மனையில் மிக விமரிசையாகப் பிரகடனப்படுத்தப்படும்.

1
அரசர் மன்றக் கூட்டத்தில் மாட்சிமை தாங்கிய
மாமன்னர் பதவியேற்பு உறுதிம�ொழி எடுக்கிறார்.

அரசர் முத்திரைக் காப்பாளர் வழங்கிய 2


பதவியேற்பு உறுதிம�ொழிக் கடிதத்தில் மாட்சிமை
தாங்கிய மாமன்னர் கையெழுத்திடுகிறார்.

3 முடிசூட்டு விழாவின்போது மாமன்னர்


முன்னிலையில் பிரதமர் நியமனக் கடிதத்தை
(Watikah) வாசிக்கிறார்.

மாட்சிமை தாங்கிய மாமன்னர் நாட்டின் 4


முகாமைத் தலைவராகப் பதவி ஏற்றுக்கொண்டதன்
அடையாளமாகக் 'கிரீஸை' முத்தமிடுகிறார்.

5 முடிசூட்டு விழாவின்போது மாமன்னர் நாட்டைச்


சமநீதியும் நடுநிலைமையும் நிறைந்த நாடாக
உருவாக்க உறுதிம�ொழி எடுக்கிறார்.

முடிசூட்டு விழாவின்போது மாமன்னரின் இறையாண்மையும் மாட்சிமையும்


தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. ஆகையால், மாட்சிமை தாங்கிய மாமன்னரின்
திடமிகு அமைப்பை நாம் கண்டிப்பாகப் ப�ோற்ற வேண்டும்.
(மூலம்: Istana Negara dan
Jabatan Penerangan Malaysia)
உங்களுக்குத் தெரியுமா?
ச�ொற்களஞ்சியம்
அரியணை அமர்வு விழாவிற்கு நியமனக் கடிதம்-
16ஆம் மாட்சிமை முன்னதாக மாட்சிமை தாங்கிய
தாங்கிய மாமன்னரின் அங்கீகாரக் கடிதம்
முடிசூட்டு விழா
மாமன்னர் பதவியேற்பு உறுதிம�ொழிக் அல்லது பதவியேற்புக்
காண�ொலி கடிதத்தில் கையெழுத்திடுவார். கடிதம். Saiz sebenar
8.1.3 மாட்சிமை தாங்கிய மாமன்னரின் முடிசூட்டு விழாவைப் புரிந்து க�ொள்ள
மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
95
மாட்சிமை தாங்கிய மாமன்னரின் அதிகாரங்கள்
நம் நாடு அரசியலமைப்பு மன்னராட்சி முறைமையைக் க�ொண்டுள்ளது. மாட்சிமை
தாங்கிய மாமன்னர் அரசியலமைப்புச் சட்டத்திட்டத்தின்படி நம் நாட்டை ஆட்சி
புரிகிறார். நாட்டின் முகாமைத் தலைவராக விளங்கும் மாட்சிமை தாங்கிய மாமன்னர்
சட்டம், நிர்வாகம், நீதி ஆகிய துறைகளில் அதிகாரங்களைக் க�ொண்டுள்ளார்.

மாட்சிமை தாங்கிய மாமன்னர் பினாங்கு, மாட்சிமை தாங்கிய மாமன்னர்


மலாக்கா, கூட்டரசுப் பிரதேசம், சபா, சரவாக் பிரதமரையும் அமைச்சரவை
ஆகிய சுல்தான் அல்லாத மாநிலங்களுக்கு உறுப்பினர்களையும் நியமனம்
இஸ்லாமியத் தலைவராக இருக்கிறார். செய்கிறார்.

மாட்சிமை தாங்கிய மாமன்னர் மலேசியக் குடிமக்கள் என்ற வகையில்


மலாய்க்காரர்கள், பூமிபுத்ராக்கள் பிற இனங்களின் நலன்களை
ஆகிய�ோரின் சிறப்பு நிலையைப் மாட்சிமை தாங்கிய மாமன்னர்
பாதுகாக்கிறார். பாதுகாக்கிறார்.

வி ர ை
ந் து ப தி ல ளி
மாட்சிமை தாங்கிய
மாமன்னரின் அதிகாரத்தைக்
குறிப்பிடுக.

ச�ொற்களஞ்சியம்
மாட்சிமை தாங்கிய மாமன்னர் இராணுவப்
படையின் உயர் ஆணையாளராகத் பூமிபுத்ரா: பூர்வீகக் குடிகள்
Saiz sebenar
திகழ்கிறார்.
மாட்சிமை தாங்கிய மாமன்னரின் அதிகாரத்தை அறிந்து க�ொள்ள
96 மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
மாட்சிமை தாங்கிய மாமன்னர்
மாட்சிமை தாங்கிய மாமன்னர்
நாடாளுமன்றத்தைக் கூட்டவும் ஒத்தி
நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட
வைக்கவும் களைக்கவும் அதிகாரம்
மச�ோதாவுக்கு ஒப்புதல் அளிக்கிறார்.
க�ொண்டிருக்கிறார்.

உங்களுக்குத் தெரியுமா?
• மச�ோதா அமைச்சரால்
தயாரிக்கப்பட்டு
நாடாளுமன்றத்தில்
விவாதிக்கப்படும். ஏற்கப்பட்ட
மச�ோதாவிற்கு மாட்சிமை
தாங்கிய மாமன்னர் ஒப்புதல்
மாட்சிமை தாங்கிய மாமன்னர் நாட்டின் வழங்கி கூட்டரசு முத்திரையைப்
பெருமைக்குரிய விருதுகளை வழங்குகிறார். பதிப்பார்.
(மூலம்: Istana Negara, Kementerian Pertahanan Malaysia
dan Jabatan Penerangan Malaysia)

மாட்சிமை தாங்கிய மாமன்னர் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட


அதிகாரங்களைக் க�ொண்டு சமநீதி அடிப்படையில் கடமைகளை ஆற்றுகிறார்.
ச�ொற்களஞ்சியம்
ஒப்புதல்: மாட்சிமை தாங்கிய மாமன்னர் அல்லது ஒரு தரப்பினரால்
வழங்கப்பட்ட அனுமதி அல்லது ஒப்புதல் மூலம் சட்ட அமலாக்கத்தைச்
செயல்படுத்த முடியும்.

21ஆம் திறன்
நூற்றாண்டுக் கற்றல் படத்தைக் கருத்தூன்றுதல்
1. குழுக்களை உருவாக்குதல்.
2. படத்தை உற்று ந�ோக்கியப்பின் உங்களுக்கு ஏற்பட்ட
உணர்வைக் கூறுதல்.
3. அரசமைப்பு முறையின் முக்கியத்துவத்தைப் பல
மூலங்களில் திரட்டி விளக்குதல்.
4. திரட்டிய குறிப்புகளைப் படைத்தல்.
Saiz sebenar
8.1.4
K8.1.7
97
மாட்சிமை தாங்கிய மாமன்னரின் அரசுரிமைச் சின்னங்கள்

பெருமைமிகு மாட்சிமை தாங்கிய மாமன்னரும் பேரரசியாரும் நம் நாட்டின்


தனித்தன்மையின் அடையாளமாகக் திகழ்கின்றனர். இந்தத் தனிச்சிறப்பை
மாமன்னர் முடிசூட்டுவிழா, பிறந்தநாள், நாடாளுமன்றத் திறப்பு, சில குறிப்பிட்ட
விழாக்களின்போது பயன்படுத்தப்படும் அரச வைபவ உடை, அரசுரிமைச்
சின்னங்கள் மூலம் காணலாம்.

அரச வைபவ உடை

அரசத் தலைப்பாகை (Tengkolok Diraja)


✿ தங்க நூலால் பின்னப்பட்ட கறுப்பு
நிறத்திலான தலைப்பாகை.
✿ இந்த அலங்காரக் கட்டு டெண்டாம்
தாக் சுடா (Dendam Tak Sudah) என
அழைக்கப்படுகிறது.

அரசரின் குட்டை கிரீஸ் (Keris Pendek Diraja)

✿ பழைய கிரீஸ் முனையைக் க�ொண்டு செய்யப்பட்டது.


✿ இதன் உறை தங்கம் பதிக்கப்பட்ட தந்தத்தால் ஆனது.

உங்களுக்குத் தெரியுமா?
• அலங்காரக்கட்டு என்பது தலைப்பாகையில் கட்டப்பட்டதாகும்.
• ‘டெண்டாம் தாக் சுடா’ என்பதன் ப�ொருள் நாட்டின் இறையாண்மையைப்
பாதுகாக்கும் மலாய் அரசர்களின் ப�ோராட்டம் ஆகும்.
Saiz sebenar
அரச வைபவ உடையையும் அரசுரிமைச் சின்னங்களையும் மாணவர்கள்
98 அறிந்து க�ொள்ள வழிகாட்டுதல்.
அரசு அலங்காரப் பதக்கம் (Pending Diraja)
✿ தங்கத்தால் செய்யப்பட்ட இப்பதக்கத்தில்
மாணிக்கக்கற்கள் பதிக்கப்பட்டிருக்கும்.
✿ இப்பதக்கம் இடைப்பட்டைக்கான அலங்காரப்
ப�ொருளாகும்.

முஸ்காட் (Muskat)
✿ மாட்சிமை தாங்கிய மாமன்னரின் அதிகாரப்பூர்வ
அரச உடை முஸ்காட் ஆகும்.
✿ முஸ்காட் கருப்பு வண்ண உர�ோம நூலால்
தைக்கப்பட்டு, தங்கநூலால் பின்னப்பட்டிருக்கும்.

அரச மாலை (Kalung Diraja)


✿ வெண்தங்கத்தால் செய்யப்பட்ட இம்மாலையில்
வைரக்கற்கள் பதிக்கப்பட்டிருக்கும்.
✿ இம்மாலையை மாட்சிமை தாங்கிய பேரரசியார்
அணிந்திருப்பார்.

அரசக் கிரீடம் (Pemeles)


✿ அரசக் கிரீடத்தை மாட்சிமை தாங்கிய பேரரசியார்
அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியான முடிசூட்டு
விழாவின்போது அணிவார்.
✿ வெண் தங்கத்தால் செய்யப்பட்ட இக்கிரீடத்தில்
வைரக்கற்கள் பதிக்கப்பட்டிருக்கும்.
Saiz sebenar

99
அரசுரிமைச் சின்னங்கள்

நீண்ட அரச கிரீஸ் (Keris Panjang Diraja)


✿ கிரீஸின் முனை அரசரைக் க�ொண்ட ஒன்பது
மலாய் மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட இரும்பால்
செய்யப்பட்டதாகும்.
✿ கிரீஸின் முனையிலிருந்து உறைவரை தங்க முலாம்
பூசப்பட்டிருக்கும்.

ச�ோகான் அலாம் (Cogan Alam)


✿ ச�ோகான் அலாம் வெள்ளியால் செய்யப்பட்டது.
✿ அந்த வட்டத்தைச் சுற்றிலும் 11 கூட்டரசு மலாயா
மாநிலங்களின் சின்னங்கள் இருக்கும்.

ச�ோகான் அகாமா (Cogan Agama)


✿ வெள்ளியால் செய்யப்பட்ட இது பெரிய முனையைக்
க�ொண்டிருக்கும்.
✿ அதன் தண்டிலும் முனைப்பகுதியிலும் புனித அல்குர் ஆன்
Saiz sebenar வாசகங்கள் ப�ொறிக்கப்பட்டிருக்கும்.

100
ச�ொக்மார் (Cokmar)
✿ வெள்ளியால் செய்யப்பட்ட ச�ொக்மார் முனையில் க�ோள
வடிவத்தைக் க�ொண்டுள்ளது.
✿ ச�ொக்மார் முந்தைய காலத்துப் ப�ோர்க்கருவியாகும்.

மஞ்சள் குடை & த�ோம்பாக் பெராம்பு


(Payung Ubur-ubur Kuning dan Tombak
Berambu)
✿ மேல் முனையில் அரச வண்ணம் மஞ்சள்
நிறத்திலான பிறையும் நட்சத்திரமும்
இருக்கும்.
✿ த�ோம்பாக் பெராம்பு மூன்று முனைகளைக்
க�ொண்டிருக்கும்.

வாள், நீண்ட கிரீஸ், பட்டை அரச கிரீஸ்


(Pedang, Keris Panjang dan Sundang Diraja)
✿ இம்மூன்றும் மலாய்க்காரர்களின் பண்டைய
ஆயுதங்களாகும்.
✿ நீண்ட கிரீஸ், பட்டை அரச கிரீஸ் ஆகிய
இரண்டும் வெள்ளி முலாம் பூசப்பட்டு அவற்றின்
அடிப்பகுதியிலும் உறையின் மீதும் சித்திர
வேலைப்பாடுகளைக் க�ொண்டிருக்கும்.

அரச வைபவ உடையும் அரசுரிமைச் சின்னங்களும் மாட்சிமை தாங்கிய


மாமன்னரின் அரசமைப்பின் மேன்மையைப் பிரதிபலிப்பதால் நாம் பெருமைப்பட
வேண்டும்.
வி ர ை ந ட வ டி க ் கை
ந் து ப தி ல ளி
மாட்சிமை தாங்கிய மாமன்னரின் அரச வைபவ உடையையும்
அரசுரிமைச் சின்னங்கள் அரசுரிமைச் சின்னங்களையும்
இரண்டனைக் குறிப்பிடுக. மரவரைபடத்தைக் க�ொண்டு
உருவாக்குக. Saiz sebenar
8.1.5

101
இறையாண்மை அரசே
சுதந்திரம் பெற்றதிலிருந்து 16 மாட்சிமை தாங்கிய மாமன்னர்கள் சுழல்முறையில்
நாட்டின் முகாமைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். ஆட்சியாளர் எனும்
முறையில் மாட்சிமை தாங்கிய மாமன்னர் நம் நாட்டின் சுபிட்சத்தை இந்நாள்
வரை பாதுகாத்து வருகிறார்.

1 2 3

சுல்தான் ஹிசாமுடின் அலாம் ஷா துவான்கு சைட் புத்ரா அல்-ஹாஜ்


துவான்கு அப்துல் ரஹ்மான்
Almarhum Sultan Hisamuddin Alam Almarhum Tuanku Syed Putra
Almarhum Tuanku Abdul Rahman
Shah ibni Almarhum Sultan Alaiddin Alhaj ibni Almarhum Syed Hassan Jamalullail
ibni Almarhum Tuanku Muhammad
Sulaiman Shah செப்டம்பர் 1960 - செப்டம்பர் 1965
ஆகஸ்ட்டு 1957 - ஏப்ரல் 1960
ஏப்ரல் - செப்டம்பர் 1960 பெர்லிஸ்
நெகிரி செம்பிலான்
சிலாங்கூர்

4 5 6

சுல்தான் இஸ்மாயில் நசிருடின் ஷா சுல்தான் அப்துல் ஹலிம் முவாட்‌ஷாம் ஷா சுல்தான் யாஹ்யா பெத்ரா
Almarhum Sultan Ismail Nasiruddin Almarhum Sultan Abdul Halim Mu’adzam Almarhum Sultan Yahya Petra ibni
Shah ibni Almarhum Sultan Shah ibni Almarhum Sultan Badlishah Almarhum Sultan Ibrahim
Zainal Abidin செப்டம்பர் 1970 - செப்டம்பர் 1975 செப்டம்பர் 1975 - மார்ச் 1979
செப்டம்பர் 1965 - செப்டம்பர் 1970 கெடா கிளந்தான்
திரெங்கானு

7 8

வி ர ை
ந் து ப தி ல ளி
இரண்டு முறை
மாட்சிமை தாங்கிய
சுல்தான் ஹஜி அகமட் ஷா சுல்தான் இஸ்கண்டார்
மாமன்னராகத் அல் முஸ்தா இன் Almarhum Sultan Iskandar ibni
தேர்வு செய்யப்பட்ட Almarhum Sultan Haji Ahmad Shah Almarhum Sultan Ismail
Al-Musta’in Billah ibni Almarhum Sultan Abu ஏப்ரல் 1984 - ஏப்ரல் 1989
சுல்தானைக் கூறுக.
Saiz sebenar Bakar Ri’ayatuddin Al-Mu’adzam Shah
ஏப்ரல் 1979 - ஏப்ரல் 1984 ஜ�ொகூர்
பகாங்
102
9 10 11

துவான்கு ஜபார் சுல்தான் சலாஹுடின் அப்துல்


சுல்தான் அஸ்லான் முஹிபுடின் ஷா அஜிஸ் ஷா அல் ஹாஜ்
Almarhum Sultan Azlan Muhibbuddin Almarhum Tuanku Ja’afar ibni
Almarhum Tuanku Abdul Rahman Almarhum Sultan Salahuddin Abdul
Shah ibni Almarhum Sultan Yussuf Aziz Shah Alhaj ibni Almarhum Sultan
Izzuddin Shah Ghafarullahu-lah ஏப்ரல் 1994 - ஏப்ரல் 1999
Hisamuddin Alam Shah Alhaj
ஏப்ரல் 1989 - ஏப்ரல் 1994 நெகிரி செம்பிலான் ஏப்ரல் 1999 - நவம்பர் 2001
பேராக் சிலாங்கூர்

12 13 14

துவான்கு சைட் சிராஜீடின் சுல்தான் மிசான் சைனால் அபிடின் துவான்கு அல்-ஹஜ் அப்துல் ஹலிம்
Tuanku Syed Sirajuddin ibni Al-Wathiqu Billah Sultan Mizan Zainal முவாட்சம் ஷா
Almarhum Tuanku Syed Putra Abidin ibni Almarhum Sultan Mahmud Almarhum Almu’tasimu Billahi
Jamalullail Al-Muktafi Billah Shah Muhibbuddin Tuanku Alhaj Abdul Halim
டிசம்பர் 2001 - டிசம்பர் 2006 டிசம்பர் 2006 - டிசம்பர் 2011 Mu’adzam Shah ibni Almarhum Sultan
பெர்லிஸ் Badlishah
திரங்கானு
டிசம்பர் 2011 - டிசம்பர் 2016
கெடா

15 16

நீங்கள் நாட்டிற்கும்
மாட்சிமை தாங்கிய
மாமன்னருக்கும்
விசுவாசம்
செலுத்துவதன்
சுல்தான் முகாமட் V அவசியத்தைக் கூறுக.
Sultan Muhammad V
டிசம்பர் 2016 - ஜனவரி 2019
கிளந்தான்
ந ட வ டி க ் கை
தகவல் த�ொடர்பு த�ொழில் நுட்பத்தைப்
சுல்தான் அப்துல்லா ரியாத்துடின்
பயன்படுத்தி, முதல் மாமன்னர் த�ொடங்கி அல் முஸ்தபா பில்லா ஷா
தற்போதைய மாமன்னர் வரையிலான Al-Sultan Abdullah Ri’ayatuddin
நிரல்முறையில் படைப்பாக்கத் திறன�ோடு Al-Mustafa Billah Shah ibni Almarhum Sultan
பட்டியலிடுக. Haji Ahmad Shah Al-Musta’in Billah Saiz sebenar
ஜனவரி 2019 - இதுவரை
8.1.1
பகாங்
K8.1.8 103
(மூலம்: Laman web rasmi Pejabat Penyimpan Mohor Besar Raja-raja)
தேசிய அரண்மனைப் படச் சட்டகம்
உருவாக்குவ�ோம் வாரீர்
கருவிகளும் ப�ொருள்களும்

பனிக்கூழ்
குச்சி
பசை நாடா
தேசிய அரண்மனை படம்
மணிலா
அட்டை
கத்தரிக்கோல்
வண்ண நாடா
செய்முறை: (Reben) குறிவுத் தூவல்

1 2

படைப்பாக்கத் திறனுடன் பனிக்கூழ் பனிக்கூழ் குச்சிகளைப்


குச்சிக்கு வண்ணம் பூசவும். படச்சட்டக வடிவில் வைக்கவும்.

3 4

படச்சட்டகத்தின் பின்னால் மணிலா மணிலா அட்டையின் பின்புறத்தில்


அட்டையை வைக்கவும். வண்ண நாடாவைப் பசை நாடா
க�ொண்டு ஒட்டவும்.

5 6

தேசிய தேசிய
அரண்மனையின் அரண்மனைப்
படத்தைப் படச் சட்டகம்
படச்சட்டகத்திற்குள் தயார்.
செருகவும்.
Saiz sebenar
ஆசிரியர் தேசிய அரண்மனைப் படச் சட்டத்தைச் செய்ய மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
குறிப்பு
104
மீட்டுணர்வோம்
• இவர் நாட்டின் உயரிய தலைவர்.
நாட்டின் முகாமைத் • இவர் அதிகாரம், சட்டம், நிர்வாகம்,
தலைவர் நீதி ஆகிய துறைகளுக்குத் தலைமை
தாங்கியுள்ளார்.

அரசர் மன்றம் • அரசர் மன்றம் என்பது ஒன்பது மலாய் அரசரையும்


நான்கு மாநில ஆளுநரையும் க�ொண்ட ஓர்
அமைப்பாகும்.
• மாமன்னரைத் தேர்ந்தெடுப்பதில் அரசர் மன்றம்
முக்கியப் பங்காற்றுகின்றது.

மாட்சிமை • தேர்ந்தெடுக்கப்படும் மாட்சிமை தாங்கிய


தாங்கிய மாமன்னர் முடிசூட்டு விழாவின்வழி
மாமன்னரின் பிரகடனப்படுத்தப்படுவார்.
முடிசூட்டு விழா • மாட்சிமை தாங்கிய மாமன்னர் பதவி
உறுதிம�ொழி எடுத்துக் கையெழுத்திடுவார்.

• இஸ்லாமியத் தலைவர்.
• மலாய்க்காரர்கள், பூமிபுத்ராக்களின் சிறப்பு
நிலையைப் பாதுகாத்தல்.
• மலேசியக் குடிமக்களான பிற இனங்களின்
முறையான நலன்களைப் பாதுகாத்தல்.
மாட்சிமை தாங்கிய • நாடாளுமன்றத்தைக் கூட்டுதல், ஒத்தி வைத்தல்,
மாமன்னரின் அதிகாரம் களைத்தல்.
• மலேசிய இராணுவப் படையின் உயர் ஆணையாளர்.
• பிரதமரையும் அமைச்சரவை உறுப்பினர்களையும்
நியமித்தல்.
• சட்ட மச�ோதாவை அங்கீகரித்தல்.
• நாட்டின் பெருமைக்குரிய விருதுகளை வழங்குதல்.

மாட்சிமை
தாங்கிய • மாட்சிமை தாங்கிய மாமன்னராலும் பேரரசியாராலும்
மாமன்னரின் அரசுரிமைச் சின்னங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அரசுரிமைச் • அரச வைபவ உடைகளும் அரசுரிமைச்
சின்னங்கள் சின்னங்களும் அடங்கும்.

இவ்வலகு மாட்சிமை தாங்கிய மாமன்னரின் இறையாண்மை பற்றிய புரிதலை


அளிக்கிறது. அடுத்த அலகில் தேசிய அடையாளமான தேசியச் சின்னத்தைப்
பற்றி நாம் விவாதிக்க உள்ளோம். Saiz sebenar

105
சிந்தித்துப் பதிலளி
அ. க�ோடிட்ட இடத்தை நிரப்புக.

ஆட்சிமுறையை அரசமைப்பு சமநீதியும் ஆணையாளர் நான்கு

1. மலேசியா மன்னர் ___________ அமல்படுத்துகிறது.

2. ___________ மாநில ஆளுநர்கள் அரசர்கள் மன்றத்தின் உறுப்பினர்கள்


ஆவர்.

3. மாட்சிமை தாங்கிய மாமன்னர் மலேசிய இராணுவப் படையின் _______

4. நாடு சுதந்திரம் பெற்றதும் மாட்சிமை தாங்கிய மாமன்னர் ___________


அமைப்பு முறை உருவாக்கப்பட்டது.

5. ___________ நடுநிலைமையும் நிறைந்த ஆட்சி புரிய மாட்சிமை


தாங்கிய மாமன்னர் உறுதி ம�ொழி ஏற்கிறார்.

ஆ. கீழ்க்காணும் அரச வைபவ உடைகளையும் அரசுரிமைச் சின்னங்களையும்


குறிப்பிடுக.

Saiz sebenar
இப்பக்கத்தைப் படியெடுத்து வழங்கிடுக.
106
நாட்டை நேசிப்போம்
வெண்கொற்றக் குடையாகத் திகழும் மாட்சிமை தாங்கிய மாமன்னர் அரசமைப்பு
முறையைக் கண்டு நாம் பெருமைப்பட வேண்டும்.

(மூலம்: Istana Negara)

தனிநபர் சமுதாயம்
மாட்சிமை தாங்கிய மாமன்னர் மாட்சிமை தாங்கிய மாமன்னருக்கு
அரசமைப்பு முறையை மதிப்பதன் விசுவாசம் செலுத்துவதன் மூலம் பல
மூலம் ப�ொறுப்புள்ள நல்ல குடிமகனாக இன மக்களிடையே நல்லுறவை
இருக்க முடியும். வலுப்படுத்தலாம்.

நாடு
நாட்டின்
நிலைத்தன்மையை
உறுதிச் செய்ய
மக்களிடையே
ஒற்றுமையை வலுப்படுத்த
வேண்டும்.

Saiz sebenar

107
தலைப்பு 9: நம் நாட்டின் அடையாளம்

அலகு

8 தேசியச் சின்னம்

சாரம்

மலேசிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வச் சின்னமாகத் தேசியச் சின்னம்


விளங்குகின்றது. நம் நாட்டின் அடையாளங்களின் ஒன்றான தேசியச்
சின்னத்தின் ப�ொருளை விளங்கிக் க�ொள்ளவும் உய்த்துணரவும் அவசியம் கற்க
வேண்டும். இந்த அலகில் தேசியச் சின்னத்தின் வரலாற்றையும் அவற்றில்
காணப்படும் அடையாளங்களையும் அதன் ப�ொருளைப் பற்றியும் விவாதிக்க
உள்ளோம்.

(மூலம்: Warta Kerajaan Malaysia,


Saiz sebenar 20 September 1990)

108
நீங்கள் கற்கப் ப�ோவது என்ன?
1. தேசியச் சின்னத்தின் வரலாறு.
2. தேசியச் சின்னத்தின் அடையாளங்கள்.
3. தேசியச் சின்னத்தின் ப�ொருள்.
PS
AK

அடிப்படை வரலாற்றுச் சிந்தனைத் திறன்


1. தேசியச் சின்னத்தின் வரலாற்றையும் அதன் காலநிரலையும்
புரிந்து க�ொள்ளுதல்.
2. தேசிய அடையாளத்தை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைப்
பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க கடந்த காலச்சிக்கல்களைப்
புரிந்து க�ொள்ளுதல்.

குடியியல் நெறி
மதித்தல்
ப�ொறுப்புணர்வு

சில அடையாள ஆவணங்களில் தேசியச் சின்னம்.


(மூலம்: Koleksi peribadi Ahmad Hishanuddin bin Ramli)

Saiz sebenar

109
தேசியச் சின்னத்தை அறிவ�ோம்

ஒவ்வொரு நாட்டிற்கும் தனி தேசியச் சின்னம் இருக்கும். மலேசியாவின்


அதிகாரப்பூர்வ, இறையாண்மைச் சின்னமாகத் தேசியச் சின்னம் திகழ்கிறது.
மலேசியர்களின் ஒற்றுமை, பெருமை, அடையாளம் ஆகியவற்றைத் தேசியச்
சின்னம் பிரதிபலிக்கின்றது.

ஆஹா, புத்ரா ஜெயாவில்


கட்டப்பட்ட கட்டடங்கள் அதுதான் தேசியச் சின்னம்.
மிகவும் அழகாக இருக்கிறதே! அரசு அலுவலகங்களைத்
ஆனால், ஏன் அனைத்துக் தவிர்த்து, பல்வேறு அதிகாரப்பூர்வ
கட்டடங்களிலும் ஓரே ஆவணங்களிலும் தேசியச்
மாதிரியான சின்னங்கள் சின்னம் பயன்படுத்தப்படுகின்றது.
உள்ளன? எனவே, தேசியச் சின்னத்தை
நாம் மதிக்க வேண்டும்.

வி ர ை
ச�ொற்களஞ்சியம் ந் து ப தி ல ளி
சின்னம்: நாடு அல்லது மாநில நாம் ஏன் தேசியச் சின்னத்தை
மாண்பின் அடையாளம். மதிக்க வேண்டும்?
Saiz sebenar

110
ஐயா, நாம் ஏன் தேசியச் தேசியச் சின்னம் நம் நாட்டின்
சின்னத்தை மதிக்க அடையாளமாகவும் மாண்பின்
வேண்டும்? சின்னமாகவும் விளங்குவதால்
நாம் அதனை மதிக்க
வேண்டும்.

உங்களுக்குத் தெரியுமா?
மத்திய அரசின் நிர்வாக மையமாகப் புத்ரா
ஜெயா கூட்டரசுப் பிரதேசம் திகழ்கிறது.
Saiz sebenar
9.1.1
தேசியச் சின்னத்தை மதிப்பதன் அவசியத்தை மாணவர்கள் கூறுவதற்கு
K9.1.4
வழிகாட்டுதல். 111
தேசியச் சின்னத்தின் வரலாறு
1948
மலாய் அரசர்களால் அங்கீகரிக்கப்பட்ட தேசியச்
சின்னம் மலேசியர்களின் பெருமைக்குரியதாகும்.
தேசியச் சின்னம் காலப் ப�ோக்கில் சில
மாற்றங்களைக் கண்டு வந்துள்ளது.

1
நீயும் புத்ரா ஜெயா
2
சுற்றுப்பயணத்தில் கலந்து
க�ொண்டது மகிழ்ச்சியே. மிக்க மகிழ்ச்சி ஸ்டப்பனி. இந்த நூலில் குறிப்பிடப்பட்டதுப�ோல
அரசுக் கட்டடங்களில் 1948ஆம் ஆண்டில் தேசியச் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தேசியச் சின்னம் ஐந்து கிரீஸ், பினாங்கு, மலாக்கா மாநிலங்களின் சின்னங்களும்
ப�ொறிக்கப்பட்டிருக்கும் என நான்கு கட்டங்களில் வெள்ளை, சிவப்பு, கறுப்பு, மஞ்சள்,
நான் கேள்விப்பட்டதுண்டு. ஆகிய நிறங்களும் ஒரு ப�ோர்க் கேடயத்தில் ப�ொருத்தப்பட்டு,
தேசியச் சின்னத்தின் அதனை இரண்டு புலிகள் தாங்கி நிற்பதாகவும் அமைந்திருக்கும்.
வரலாறுதான் என்ன? அக்கேடயத்தின் மேல்பகுதியில் மஞ்சள் நிறத்தில் ஒரு பிறையும்
11 முனைகள் க�ொண்ட நட்சத்திரமும் ப�ொறிக்கப்பட்டிருக்கும்.
மேகப்பட்டையில் ‘ஐக்கியம் மேன்மையைத் தரும்’ எனும்
முழக்கவரி ஜாவியிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும்.

ச�ொற்களஞ்சியம்

ஐக்கியம்: பலத்தைப் பெருக்கிக்


க�ொள்ள ஒருவர்க்கொருவர்
ஒற்றுமையுடன் ஒன்றிணைதல்.
இயல்பான: நிதர்சனமான
Saiz sebenar
நிலையைக் காட்டுகிறது.

112
1963 1965 இன்று

(மூலம்: Arkib Negara Malaysia, 2017. Persekutuan Tanah Melayu 1948: Asas Negara Merdeka. Kuala Lumpur:
Arkib Negara Malaysia)

3 உண்மைதான் ஆல்யா. 1963ஆம் ஆண்டு


மலேசியாவின் த�ோற்றத்திற்குப் பிறகு தேசியச்
4 1965ஆம் ஆண்டு தேசியச்
சின்னம் மாற்றம் கண்டது. சிங்கப்பூர், சபா,
சரவாக் மாநிலங்களின் சின்னம் கேடயத்தின் சின்னத்தில் மீண்டும் சிறு மாற்றம்
கீழ்ப்பகுதியில் ப�ொறிக்கப்பட்டிருக்கும். மலாக்கா செய்யப்பட்டது. சிங்கப்பூர்
மரம் மலாக்கா மாநிலத்தைப் பிரதிநிதிக்கிறது. சின்னத்திற்குப் பதிலாகச்
‘ஐக்கியம் மேன்மையைத் தரும்’ எனும் முழக்கவரி செம்பருத்தி வைக்கப்பட்டுள்ளது.
மலாய்மொழியில் மாற்றப்பட்டுள்ளது.

தற்போது நாம் காணும் தேசியச்


சின்னத்தில் பினாங்கு மாநிலச் சின்னம்
சீர்செய்யப்பட்டது. இரண்டு புலிகளின்
த�ோற்றம் மிகவும் இயல்பான
நிலையில் இருக்கும்படி மாற்றப்பட்டது.
சபா, சரவாக் ஆகிய மாநிலங்களின்
சின்னம் மாற்றம் கண்டது. பதினான்கு
முனை நட்சத்திரம், பிறை, ஐந்து
கிரீஸ், மலாக்கா மரம், வெள்ளை,
சிவப்பு, கருப்பு, மஞ்சள் ஆகிய நான்கு
நிறக் கட்டங்களும் முழக்கவரியும்
நிலைநிறுத்தப்பட்டன.

வி ர ை
ந் து ப தி ல ளி

ஏன் தேசியச் சின்னம் 1963ஆம்


ஆண்டில் மாற்றம் கண்டது?
தேசியச் சின்னம் என்பது மாண்பின் அடையாளமாகும். நாட்டின்
இறையாண்மையைப் பாதுகாக்க, தேசியச் சின்னத்தை நாம் மதிக்கவும்
ப�ோற்றவும் வேண்டும். Saiz sebenar
9.1.1
K9.1.4 தேசியச் சின்னத்தைப் பற்றி மாணவர்கள் அறிந்து க�ொள்ள வழிகாட்டுதல்.
113
தேசியச் சின்னத்தின் அடையாளமும் ப�ொருளும்

தேசியச் சின்னம் நம் நாட்டின் அடையாளமாகும். மலேசியர்களின் ஒற்றுமைக்கும்


பெருமைக்கும் தேசியச் சின்னம் அடையாளமாகத் திகழ்கிறது. தேசியச்
சின்னத்தில் இரண்டு புலிகள் ஒரு கேடயத்தைத் தாங்கி நிற்பது ப�ோல
அமைந்திருக்கும். இந்த வடிவமைப்பில் வேறு சில சின்னங்களும் உள்ளன.
ஒவ்வொரு சின்னத்திற்கும் வண்ணத்திற்கும் ஏற்பத் தனிப்பொருள் உண்டு.

14 முனைகள் க�ொண்ட நட்சத்திரம்


மலேசியாவின் 13 மாநிலங்களையும் கூட்டரசுப்
பிரதேசத்தின் ஒற்றுமையையும் குறிக்கின்றது.
பிறை, நட்சத்திரச் சின்னங்கள் கூட்டரசு வீரத்தின் அடையாளமாக
மலேசியாவின் சமயமான இஸ்லாத்தைத் இரண்டு புலிகள்.
குறிக்கிறது.

ஐந்து கிரீஸ்கள் முன்பு ஐக்கியப் கேடயத்தின் நடுவில் காணப்படும்


படாத மலாய் மாநிலங்கள் நான்கு வண்ணங்கள் ஐக்கிய மலாய்
என அறியப்பட்ட பெர்லிஸ், மாநிலங்களைக் குறிக்கின்றன.
கெடா, கிளந்தான், திரங்கானு, சிவப்பு, மஞ்சள் வண்ணம் சிலாங்கூர்
ஜ�ொகூர் ஆகிய மாநிலங்களைக் மாநிலத்தையும் கருப்பு, வெள்ளை வண்ணம்
குறிக்கின்றன. பகாங் மாநிலத்தையும் கருப்பு, வெள்ளை,
மஞ்சள் வண்ணம் பேராக் மாநிலத்தையும்
சிவப்பு, கருப்பு, மஞ்சள் வண்ணம்
நெகிரி செம்பிலான் மாநிலத்தையும்
வி ர ை
ந் து ப தி ல ளி குறிக்கின்றன.

தேசியச் சின்னத்தில் காணப்படும் இரண்டு


Saiz sebenarபுலிகள் எதனைக் குறிக்கின்றன?

114
கேடயத்தின் இடது புறத்தில்
இருக்கும் பாக்கு மரமும் கேடயத்தின் வலது புறத்தில்
பாலமும் பினாங்கு மாநிலத்தைக் இருக்கும் மலாக்கா மரம்,
குறிக்கிறது. மலாக்கா மாநிலத்தைக்
குறிக்கிறது.

‘ஐக்கியம் மேன்மையைத் தரும்’


என்னும் முழக்கவரி குடிமக்களிடையே
சரவாக், சபா மாநிலச் சின்னம்
ஒருமைப்பாட்டு உணர்வை
கேடயத்தில் ப�ொறிக்கப்பட்டிருக்கும்.
ஏற்படுத்துவத�ோடு ஒற்றுமையை
அச்சின்னங்களின் நடுவில் உள்ள
வலுவடையச் செய்கிறது.
செம்பருத்தி நம் நாட்டின் தேசிய
மலரைக் குறிக்கிறது.

ந ட வ டி க ் கை
நாட்டின் அடையாளமான குழுவாரியாக, மணிலா அட்டையில் உங்கள்
தேசியச் சின்னத்தின் குழுவின் சின்னத்தை வரையவும். அச்சின்னத்தில்
முக்கியத்துவத்தைக் வண்ணமும் ச�ொந்த முழக்கவரியும்
குறிப்பிடுக. இருக்க வேண்டும். குழுவின் சின்னத்தைப்
படைப்பாற்றல�ோடு படைத்திடுக.
தேசியச் சின்னத்தில் காணப்படும் ஒவ்வோர் அடையாளமும் வண்ணமும்
தனிப்பொருளைக் குறிக்கிறது. இந்த அடையாளமானது தேசியச் சின்னத்தைத்
தனித்துவமாகவும் ப�ொருள் ப�ொதிந்ததாகவும் காட்டுகிறது. Saiz sebenar
9.1.2
தேசியச் சின்னத்தில் காணப்படும் அடையாளங்களையும் ப�ொருளையும் அறிந்து
9.1.3
க�ொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல். 115
K9.1.5
ஐக்கியம் மேன்மையைத் தரும்
தேசியச் சின்னத்தில் காணப்படும் முழக்கவரி ர�ோமன், ஜாவி ஆகிய
எழுத்துகளில் எழுதப்பட்டிருக்கும். 'ஐக்கியம் மேன்மையைத் தரும்’ எனும்
முழக்கவரி மலேசியர்களுக்குப் ப�ொருள்பொதிந்ததாக அமைந்துள்ளது. இந்த
முழக்கவரியானது மேம்புகழும் வளமும் க�ொண்ட மலேசிய நாட்டை
உருவாக்க மக்களிடையே ஒத்துழைப்பும் ஒருமைப்பாடும் அவசியம்
என்பதை வலியுறுத்துகின்றது. மலேசியா மக்களாகிய நாம், தேசியச்
சின்னத்தின் முழக்கவரியை உய்த்துணர்ந்து பின்பற்ற வேண்டும்.

நடவடிக்கை

யைக் காட்டுகிறது.
இப்படம் தேசியச் சின்னத்தில் காணப்படும் முழக்கவரி

குழுவாரியாக முழக்கவரியை ஆராய்க.


அவசியத்தை
1. தேசியச் சின்னத்தை உய்த்துணர்ந்து பின்பற்றுவதற்கான
பல்வேறு மூலங்களின்வழி குறிப்புகளைத் திரட்டுக.
அல்லது
2. திரட்டப்பட்ட குறிப்புகளைப் படைப்பாக்கத்துடன் தாள்
பல்லூடகங்களில் குறிப்பிடுக.
க.
3. குழுவில் கிடைக்கப் பெற்ற தகவல்களைப் படைத்திடு

தேசியச் சின்னத்திலுள்ள அடையாளங்களின் ப�ொருளை விளங்கிக்


க�ொண்டும் உய்த்துணர்ந்தும் நம் அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டும்.
தேசியச் சின்னத்தின் முழக்கவரிகளை உய்த்துணர்வதன் மூலம் மக்களிடையே
Saiz sebenar
நல்லிணக்கத்தை மேல�ோங்கச் செய்ய முடியும்.
9.1.3
K9.1.6
116
மீட்டுணர்வோம்
தேசியச் சின்னத்தின்
வரலாறு
தேசியச் சின்னத்தை அறிவ�ோம்
• மலேசிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ
சின்னம்
• நாட்டின் அடையாளம்
• இறையாண்மைச் சின்னம்
• ஒற்றுமையின் சின்னம் 1948

1963

1965

இன்று

தேசியச் சின்னத்தின் அடையாளமும் அதன் ப�ொருளும்


• ஒவ்வொரு சின்னத்திற்கும் வண்ணத்திற்கும் அதன் தனிப் ப�ொருள் உண்டு.

ஐந்து கிரீஸ், ஐக்கிய நான்கு வண்ணங்கள்


13 படாத ஐந்து மலாய் ஐக்கிய மலாய் புலி வீரத்தின்
மாநிலங்களுடன் மாநிலங்களைக் மாநிலங்களைக் அடையாளம்
கூட்டரசுப் குறிக்கின்றன. குறிக்கின்றன.
பிரதேசத்தின்
ஒற்றுமையையும்
இஸ்லாம்
கூட்டரசு
மலேசியாவின்
சமயம் என்பதையும் சபா, ‘ஐக்கியம்
குறிக்கின்றது. பினாங்கு மலாக்கா சரவாக்கையும் மேன்மையைத் தரும்’
மாநிலத்தைக் மாநிலத்தைக் தேசிய மலரையும் எனும் முழக்கவரி
குறிக்கிறது. குறிக்கிறது. குறிக்கிறது.

தேசியச் சின்னத்தின் வரலாற்றையும் அதன் அவசியத்தையும் புரிந்து


க�ொள்ள இந்த அலகு உதவுகிறது. அடுத்த அலகில் மாணவர்கள் தேசியக்
க�ொடியின் வரலாற்றையும் அதன் அவசியத்தையும் புரிந்துக�ொள்வர். Saiz sebenar

117
சிந்தித்துப் பதிலளி
தேசியச் சின்னத்தை அச்சிட்டு வரைந்து கேள்விகளுக்கு விடையளித்திடுக.

1. -------------------- தேசியச் சின்னத்தைக் காணலாம்.


அ) அரசாங்கக் கட்டடங்களில்
ஆ) வீடுகளில்
இ) பேரங்காடியில்

2. மஞ்சள் நிறத்திலான பிறை, நட்சத்திரச் சின்னங்களின் ப�ொருள் -----------


அ) மலேசியக் கூட்டரசுச் சமயம் இஸ்லாம்
ஆ) மக்களிடையே ஒருமித்த கருத்து
இ) வீரத்தைக் குறிக்கின்றது

3. செம்பருத்தி ------------- குறிக்கிறது.


அ) ஒற்றுமை மலரைக்
ஆ) அரசாங்க மலரைக்
இ) தேசிய மலரைக்

4. .................... என்பது தேசியச் சின்னத்தின் முழக்கவரி ஆகும்.


அ) 'ஒருமைப்பாட்டின் நன்மைக்கு வித்திடும்'
ஆ) 'தயார்நிலை, சேவை, அர்ப்பணிப்பு'
இ) 'ஐக்கியம் மேன்மையைத் தரும்'

5. எதற்காக நாம் தேசியச் சின்னத்தைக் கண்டு பெருமை க�ொள்ள வேண்டும்?


அ) மாண்பின் சின்னம்
ஆ இணக்கத்தின் சின்னம்
இ) விசுவாசத்தின் சின்னம்
Saiz sebenar

118
நாட்டை நேசிப்போம்
தேசியச் சின்னத்தின் அவசியத்தை அறிந்து, அதனை உய்த்துணர்வதன்வழி
நாம் ஒற்றுமைமிகு சமுதாயத்தை உருவாக்குவத�ோடு நல்வழிக்கும் இட்டுச்
செல்லலாம். தேசியச் சின்னத்தை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும்.

ஒற்றுமை சிறந்த சமுதாயத்தை உருவாக்கும்.


(மூலம்: Koleksi peribadi Ahmad Hishanuddin bin Ramli)

சமுதாயம்
நாடு
தனிநபர் தேசியச் சின்னத்தின் முழக்க
ஒன்றுபட்ட, சிறந்த
நாட்டின் அடையாளத்தை வரியை உய்த்துணர்ந்து
தலைமுறையினர்,
எண்ணிப் பெருமை கடைப்பிடிக்கும் சமுதாயம்
நாட்டை உன்னத
க�ொள்வதன்வழி நாம் ஒற்றுமைமிகு சிறந்த
நிலைக்குக் க�ொண்டு
எழுச்சிமிகு நாட்டுப்பற்றோடு தலைமுறையினரை
செல்ல முடியும்.
நல்வழியில் பயணிப்போம். உருவாக்கும்.

Saiz sebenar

119
தலைப்பு 9: நம் நாட்டின் அடையாளம்

அலகு

9 மலேசியத் தேசியக் க�ொடி

தேசியக் க�ொடியைப் பறக்கவிடுவது மலேசிய


மக்களின் பெருமையைப் பிரதிபலிக்கிறது.
(மூலம்: Persekutuan Kebangsaan Berbasikal Malaysia,
Noor Emy Liana binti Daud, Muslim bin Haji Tamsir,
Danish Irfan bin Muslim)
சாரம்
தேசியக் க�ொடி ஒவ்வொரு நாட்டின் பெருமைமிகு சின்னமாக விளங்குகிறது.
தேசியக் க�ொடியின் அடையாளத்தை அறிந்து புரிந்து க�ொள்வது நாட்டின்
மீது பெருமை உணர்வை ஏற்படுத்தும். இந்த அலகு வரலாறு, பெயர்,
வண்ணத்தின் ப�ொருள், சின்னம், தேசியக் க�ொடியை ஏற்றும்போதும்
இறக்கும்போதும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை விவரிக்கின்றது.
Saiz sebenar

120
நீங்கள் கற்கப் ப�ோவது என்ன?
1. தேசியக் க�ொடியின் வரலாறு.
2. தேசியக் க�ொடியின் பெயர்.
3. தேசியக் க�ொடியின் வண்ணமும் சின்னத்தின் ப�ொருளும்.
4. தேசியக் க�ொடி பயன்பாட்டின் நெறிமுறைகள்.

குடியியல் நெறி

ப�ொறுப்புணர்வு
PS
AK

அடிப்படை வரலாற்றுச் சிந்தனைத் திறன்


1. தேசியக் க�ொடி வரலாற்றின் ஆதாரத்தை ஆராய்தல்.
2. தேசியக் க�ொடியின் வண்ணத்தின் ப�ொருளையும் சின்னத்தின்
ப�ொருளையும் படைப்பாக்கத்தோடு விரிவாக்கம் செய்தல்.
3. தேசியக் க�ொடி பயன்பாட்டின் நெறிமுறைகள் பற்றிய காட்சியைக்
கற்பனை செய்தல். Saiz sebenar

121
நம் நாட்டுக் க�ொடியின் வரலாறு

தேசியக் க�ொடி ஒரு நாட்டின் உருவாக்கத்திற்கும் அடையாளத்திற்கும்


சின்னமாகத் திகழ்கிறது. தேசியக் க�ொடி இன, சமய பாகுபாடின்றித்
தனிநபர் ஒற்றுமையின் அடையாளமாகத் திகழ்கிறது. நாட்டுப்பற்று நிறைந்த
குடிமக்களான நாம் தேசியக் க�ொடியின் வடிவாக்க வரலாற்றைத் தெரிந்து
புரிந்து க�ொள்ள வேண்டும்.

1
3
1948ஆம் ஆண்டு
கூட்டரசு ஆட்சிமன்றம்
கூட்டரசு மலாயாவின்
க�ொடியை
வடிவமைக்கும்
ப�ோட்டியை ஏற்பாடு
செய்தது. இஞ்சே முகமது பின் ஹம்சா
வடிவமைத்த க�ொடி
• ஜ�ொகூர் மாநிலப் ப�ொதுப்பணித் துறையின்
கட்டட வடிவமைப்பாளரான இஞ்சே முகமது
பின் ஹம்சாவின் படைப்பு மிகச் சிறந்ததாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டது.
• நீலம், வெள்ளை வண்ணங்கள் க�ொண்ட
பதின�ொரு பட்டைகளைக் க�ொண்டுள்ளது.

2
• பிறையும் ஐந்து முனைகள் க�ொண்ட
நட்சத்திரமும் உள்ளன.
1949ஆம் ஆண்டு
இஞ்சே முகமது பின்
'தி மெலெ மெயில்'
பத்திரிகையில் இறுதி ஹம்சா 1918 ஆம் ஆண்டு
முடிவு அறிவிக்கப்பட்டது. மார்ச்சு திங்கள் ஐந்தாம்
க�ொடியின் மூன்று நாள் சிங்கப்பூரில் பிறந்தார்.
வடிவமைப்பு இவர் தமது ஆரம்பக்
இறுதிச்சுற்றுக்குத் கல்வியை ஜ�ொகூர் பாரு
தேர்ந்தெடுக்கப்பட்டன. ஆங்கிலக் கல்லூரியில்
பயின்றார். இவர் 1993ஆம்
ஆண்டு பிப்ரவரி திங்கள்
பத்தொன்பதாம் நாள்
இயற்கை எய்தினார்.
உங்களுக்குத் தெரியுமா? வி ர ை
ந் து ப தி ல ளி
கூட்டரசு மலாயா க�ொடியின்
வடிவமைப்புப் ப�ோட்டியில்
கூட்டரசு மலாயாவின் க�ொடியை
ம�ொத்தம் 373 பேர் பங்கேற்றனர்.
Saiz sebenar வடிவமைத்தவர் யார்?

122
4 5
மாற்றம் கண்ட வடிவமைப்பு 1950ஆம் ஆண்டின் கூட்டரசு
• இஞ்சே முகமது பின் ஹம்சா மலாயாவின் க�ொடி
வடிவமைத்த க�ொடியில் சில • ஏப்ரல் 1950ஆம் ஆண்டு கூட்டரசு
மாற்றங்கள் செய்யப்பட்டன. மலாயாவின் க�ொடி கூட்டரசு
• நீல பட்டைகள் சிவப்புப் ஆட்சிமன்ற ஒப்புதலுடன் ஏற்றுக்
பட்டைகளாக மாற்றப்பட்டன. க�ொள்ளப்பட்டது.
• சிவப்பு, வெள்ளை வண்ணங்கள் • பதின�ொரு பட்டை உள்ளன.
க�ொண்ட பதின�ொரு பட்டைகளைக் • பதின�ொரு முனை நட்சத்திரம்
க�ொண்டுள்ளது. உள்ளது.

6
1963ஆம் ஆண்டிலிருந்து மலேசியக் க�ொடி
• 26 மே 1950ஆம் நாள் கூட்டரசு மலாயாவின் க�ொடி முதன்முறையாக
சிலாங்கூர் சுல்தான் அரண்மனை வளாகத்தில் பறக்கவிடப்பட்டது.
• 16 செப்டம்பர் 1963ஆம் நாள் தேசியக் க�ொடி 14 பட்டையைக்
க�ொண்டுள்ளது.
• 14 முனை நட்சத்திரம் உள்ளது.

(மூலம்: Jabatan Penerangan Malaysia, Kementerian Komunikasi dan Multimedia Malaysia)

தேசியக் க�ொடியின் வடிவமைப்பையும் வரலாற்றையும் காலநிரலையும் அறிந்து


க�ொள்வதால் முன்னாள் தலைவர்களின் படைப்பாக்கத்தையும் முயற்சியையும்
பாராட்ட இயலும்.
உங்களுக்குத் தெரியுமா? ந ட வ டி க ் கை
இஸ்லாமிய சமயம், அரசர், ஒற்றுமை
ஆகியவற்றைக் குறிக்கும் கூறுகளை இஞ்சே முகமது பின் ஹம்சா
அடையாளமாகக் க�ொண்டதால் இஞ்சே வடிவமைத்த தேசியக்
முகமது பின் ஹம்சா அவர்களின் வடிவமைப்பு க�ொடியையும் 1963ஆம் ஆண்டில்
தேர்ந்தெடுக்கக் காரணமாக அமைந்தது. மலேசியா த�ோற்றம் கண்ட பிறகும்
Saiz sebenar
உள்ள க�ொடியையும் ஒப்பிடுக.
9.2.1
7.2.1, 7.2.2
7.2.3 123
K7.2.6
‘ஜாலூர் கெமிலாங்’ நமது க�ொடி

நாட்டின் அடையாளச் சின்னமாக விளங்கும் தேசியக் க�ொடி நமது


பெருமைக்குரியதாகும். நாம் தேசியக் க�ொடியின் பெயரையும் அதன்
ப�ொருளையும் தெரிந்து புரிந்து க�ொள்ள வேண்டும்.

1 2 எனக்குத் தெரியும் ஆசிரியை.


யாருக்கு 3 உனது தகவல்
நமது தேசியக் க�ொடியின் பெயர்
நம் தேசியக் ‘ஜாலூர் கெமிலாங்’. 31 ஆகஸ்ட்டு அருமையானது. ஆனால்,
க�ொடியின் 1997ஆம் நாள், 40வது சுதந்திர ஏன் தேசியக்
பெயர் நாள் க�ொண்டாட்டத்தை முன்னிட்டு க�ொடிக்கு ‘ஜாலூர்
தெரியும்? மலேசியாவின் பிரதமர் துன் டாக்டர் கெமிலாங்’ எனப் பெயர்
மகாதீர் முகமது இப்பெயரை சூட்டப்பட்டது?
அறிமுகப்படுத்தினார்.

4
நமது க�ொடியில் 14
பட்டை இருப்பதால்
‘ஜாலூர் கெமிலாங்’ எனப்
பெயர் சூட்டப்பட்டது.
மேம்புகழ் நாட்டையும்
இனத்தையும் உருவாக்கி
ஒரே ந�ோக்குடன்
பயணிப்பதை
அப்பட்டைகள்
உணர்த்துகின்றன.
7 உங்கள் அனைவரின் உரையாடலைக் கண்டு
பெருமைப்படுகிறேன். ‘ஜாலூர் கெமிலாங்’
க�ொடியின் வரலாற்றையும் ப�ொருளையும்
தெரிந்து க�ொள்வத�ோடு மட்டுமின்றி
தேசியக் க�ொடியைப் பறக்க விடுவதன்
அவசியத்தையும் அறிந்திருக்கவேண்டும்.

வி ர ை
ந் து ப தி ல ளி
நமது தேசியக் க�ொடி எப்பொழுது
‘ஜாலூர் கெமிலாங்’ எனப்
Saiz sebenar பெயரிடப்பட்டது?
124
JALUR GEMILANG
5 ‘கெமிலாங்’ என்றால் Merahmu bara semangat waja
ஒளிரும் அல்லது மேம்புகழ் Putihmu bersih budi pekerti
எனப் ப�ொருள்படும். Kuning berdaulat payung negara
மாணவர்களாகிய நாம் Biru perpaduan kami semua
முறையாகக் கல்வி கற்று ஜாலூர்
நாட்டை முன்னேற்ற கெமிலாங் Puncak dunia telah kautawan
முனைப்புடன் செயல்பட பாடல் Lautan luas telah kauredah
வேண்டும். Membawa semangat jiwa merdeka
Semarak jaya kami warganya
நாம் எங்கிருந்தாலும் நமது
Empat belas melintang jalurnya
தேசியக் க�ொடியைப்
Semua negeri dalam Malaysia
பெருமிதமாகப் பறக்கவிட
வேண்டும். Satu suara satu semangat
Itu sumpah warga berdaulat
6 Jalur Gemilang …
உண்மைதான்
ஆச்சோங். நம் நாட்டின் di bawah naunganmu
மீது நேசத்தையும் Jalur Gemilang …
நன்றியையும் kami semua bersatu
வெளிப்படுத்த தேசியக் Perpaduan ketaatan
க�ொடியைப் Amalan murni rakyat Malaysia
பறக்கவிடலாம்.
Jalur Gemilang …
megah kami terasa
Jalur Gemilang …
kibarkanlah wawasan
Merah putih biru kuning
Jalur semangat kami semua
Berkibarlah
Berkibarlah
Berkibarlah
Jalur Gemilang!
Lagu: Suhaimi Mohd Zain
Lirik: Syed Indera Syed Omar

‘ஜாலூர் கெமிலாங்’ என்பது தேசியக் க�ொடியின்


பெயராகும். ‘ஜாலூர் கெமிலாங்கை’ பெருமைப்படுத்துவதும்
உயர்வுபடுத்துவதும் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
ந ட வ டி க ் கை
தேசியக் க�ொடியைப் பறக்கவிடுவதன் ‘ஜாலூர் கெமிலாங்’ பாடலை
முக்கியத்துவம் என்ன? எழுச்சியுடன் பாடி மலேசியத் தேசியக்
க�ொடியைப் பறக்க விடுதல். Saiz sebenar
9.2.2 • ‘ஜாலூர் கெமிலாங்’ பறக்கவிடுவதற்கான முக்கியத்துவத்தை மாணவர்கள் புரிந்து
ஆசிரியர்
K9.2.5 குறிப்பு க�ொள்ள வழிகாட்டுதல்.
• ‘ஜாலூர் கெமிலாங்’ பாடலை எழுச்சியுடன் பாட மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
125
‘ஜாலூர் கெமிலாங்’ அடையாளத்தை அறிவ�ோம்
ஒவ்வொரு வண்ணத்திற்கும் அடையாளத்திற்கும் தனிப்பட்ட ப�ொருண்மை
உண்டு. நாட்டை நேசிக்கும் குடிமக்களாகிய நாம் தேசியக் க�ொடியின்
ப�ொருளை விளங்கி, உய்த்துணர்ந்து மரியாதை செலுத்த வேண்டும்.
மஞ்சள் நிறம் நீல நிறம்
• அரசருக்கும் நாட்டுக்கும் செலுத்தும் • பல்லின மக்களின் ஒற்றுமையைக்
விசுவாசத்தை வெளிப்படுத்துவதைக் காட்டுகிறது.
காட்டுகிறது. • ஒற்றுமையுடன் ப�ொருளாதாரத்தை
• அரசியலமைப்பின் மேம்படுத்தப் பாடுபடுதல்.
இறையாண்மையைக் காட்டுகிறது.
வெள்ளை நிறம் சிவப்பு நிறம்
• உளத்தூய்மையையும் நேர்மையையும் • சவால்களை எதிர்கொள்ளும்
காட்டுகிறது. மக்களின் துணிவையும்
• கண்ணியம் நிறைந்த மலேசிய மக்களின் விடாமுயற்சியையும்
திடத்தன்மையை மேம்படுத்தும் ஆர்வத்தைக் காட்டுகிறது.
காட்டுகிறது.

பிறை 14 முனை நட்சத்திரமும் 14


பட்டையும்
• கூட்டரசு மலேசியாவின் சமயம் • 13 மாநிலத்தையும் ஒரு கூட்டரசுப்
இஸ்லாம் என்பதைக் காட்டுகிறது. பிரதேசத்தின் ஒற்றுமையையும்
காட்டுகிறது.

வி ர ை
தேசியக் க�ொடியின் ப�ொருளையும் ந் து ப தி ல ளி
சின்னத்தையும் உய்த்துணர்வது
நம்மை நல்லிணக்கத்திற்கும் நாட்டின் தேசியக் க�ொடியில் காணப்படும்
முன்னேற்றத்திற்கும் உரிய ப�ொறுப்புள்ள பிறையின் ப�ொருள் என்ன?
Saiz sebenar
குடிமக்களாக்கும்.
9.2.3
ஆசிரியர் தேசியக் க�ொடியின் ப�ொருளையும் சின்னத்தையும் மாணவர்கள் புரிந்துக�ொள்ள
குறிப்பு வழிகாட்டுதல்.
126
உருவாக்குவ�ோம் வாரீர் அச்சுப்பதிப்புத் தேசியக் க�ொடி
கருவிகளும் ப�ொருள்களும்

காது துடைப்பான் பஞ்சு

வரையப்பட்ட
தேசியக் க�ொடி

குச்சி பசை
நீர் வண்ணம்
வண்ணக் கலவைத்
தட்டு
செய்முறை:

1 3

காது துடைப்பான் பஞ்சைக் க�ொண்டு


வரையப்பட்ட தேசியக் க�ொடிக்கு வண்ணமிடுதல்.

முழுமை பெற்ற அச்சுப்பதிப்பு


தேசியக் க�ொடி.
வண்ணமிடப்பட்ட படத்தில்
குச்சியை ஒட்டுதல்.
Saiz sebenar
ஆசிரியர் நேர்த்தியான முறையில் தேசியக் க�ொடி அச்சுப்பதிப்பை உருவாக்க மாணவர்களுக்கு
குறிப்பு வழிகாட்டுதல். 127
க�ொடியை மதிப்போம் நல்லிணக்கம் வளர்ப்போம்

தேசியக் க�ொடி நாட்டின் மாண்பிற்கும் இறையாண்மைக்கும் அடையாளமாகத்


திகழ்கிறது. தேசியக் க�ொடியைப் பறக்கவிடுவது எழுச்சிமிகு நாட்டுப்பற்றைத்
தூண்டும். நாம் எப்பொழுதும் தேசியக் க�ொடியை மதிக்க வேண்டும். தேசியக்
க�ொடியைப் பயன்படுத்தும்போது சில நெறிமுறைகளைக் கண்டிப்பாகக்
கடைப்பிடிக்க வேண்டும்.

சுவரில் வரையப்படும்
அல்லது காட்சிக்கு
மேல்ப்பகுதி

1 வைக்கப்படும் தேசியக்
க�ொடியில் பிறையும்
நட்சத்திரமும்
முன்புறம் இருந்து
பார்க்கும்பொழுது
இடப்பக்கமாக
2 இருக்க வேண்டும்.

மேடையின்
பின்திரையில்
பேசுபவருக்குப்
கீழ்ப்பகுதி

3 பின்புறமாகத் தேசியக்
க�ொடியை உயர்ந்த
இடத்தில் வைக்க
வேண்டும்.

ஒரு வரிசையில்
அணிவகுத்துச்
1 14 சென்றால், தேசியக்
த�ொகுதி 1 க�ொடி மற்ற எல்லா
த�ொங்கும் நிலையில் க�ொடிகளுக்கும்
உள்ள தேசியக் முன்னணியில் இருக்க
க�ொடியில் பிறையும் வேண்டும்.
நட்சத்திரமும் (மூலம்: Jabatan Penerangan
மேல்நோக்கியும் Malaysia, Kementerian
பட்டைகள் கீழிருந்து Komunikasi dan Multimedia
Malaysia, 2017)
நீளவாக்காகவும் இருக்க
வேண்டும்.

Saiz sebenar நாம் ஏன் நம் தேசியக் க�ொடியை மதிக்க வேண்டும்?


9.2.4
K9.2.6
128
தேசியக் க�ொடியை ஏற்றும்போதும் இறக்கும்போதும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்
தேசியக் க�ொடியைப் பயன்படுத்தும்போது சில நெறிமுறைகளைப்
பின்பற்றாதவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவர். தேசியக் க�ொடியை
ஏற்றும்போதும் இறக்கும்போதும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளைத்
தெரிந்து மக்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

1 நேர்த்தியான உடை அணிந்திருக்க வேண்டும்.


2 க�ொடி தரையில் படாதிருப்பதை
உறுதிப்படுத்த வேண்டும்.
3 க�ொடி நல்ல நிலையில் இருப்பதை
உறுதிச் செய்ய வேண்டும்.
4 க�ொடிக் கயிறு உறுதியாகவும் எளிதில்
அறுந்து விடாமல் இருப்பதையும்
உறுதிச் செய்ய வேண்டும்.

5 க�ொடியை முறையாகவும் மெதுவாகவும்


ஏற்றவும் இறக்கவும் வேண்டும்.
6 துக்கத்தை அனுசரிக்கும் விதமாகக்
க�ொடியை அரைக்கம்பத்தில்
பறக்கவிட நேர்ந்தால் முதலில்
க�ொடியை முழுக்கம்பத்திற்கு ஏற்றிய
பின்னரே அரைக்கம்பத்திற்கு இறக்க
வேண்டும்.

7 க�ொடியைக் கீழே இறக்கும்போது


த�ோளில் தாங்கிட வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்தாலும் தேசியக் க�ொடி ஒவ்வொரு குடிமக்களின்


ஒருமைப்பாட்டின் சின்னமாக விளங்குகிறது. தேசியக் க�ொடியை மதித்துப்
பெருமிதம் க�ொள்ளும் வகையில் அதனைப் பயன்படுத்தும் நெறிமுறைகளை
அறிந்து சரியான முறையில் சமுதாயம் அமல்படுத்த வேண்டும்.
உங்களுக்குத் தெரியுமா?
கிழிந்த அல்லது வெளுத்துப்
ப�ோன க�ொடியை முறையாக
மறைவான இடத்தில் அரைக்கம்பக் க�ொடி
எரித்திட வேண்டும். ஏன் தேசியக் க�ொடி ஒற்றுமையின்
ந ட வ டி க ் கை சின்னமாக விளங்குகிறது?
உன் பள்ளியில் தேசியக்
ச�ொற்களஞ்சியம்
க�ொடியை ஏற்றும் இறக்கும்
நெறிமுறை: கடைப்பிடிக்க வேண்டிய
முறையைப் ப�ோலச் செய்தல்வழி முறைகள்.
செய்து காட்டுக. துக்கம்: அரசர் மறைவுக்கான ச�ோகத்தின்
அனுசரிப்பின் அடையாளம். Saiz sebenar
9.2.4 ஆசிரியர் தேசியக் க�ொடியை ஏற்றும் இறக்கும் முறையைப் ப�ோலச் செய்தல்வழி செய்து
K9.2.7 குறிப்பு காட்ட மாணவர்களுக்கு வழிகாட்டுதல். 129

தென்கிழக்காசிய நாடுகளின் தேசியக் க�ொடிகள்

தேசியக் க�ொடி என்பது சுதந்திர நாட்டின் அடையாளமாகும். உலக


அமைதிக்காக நாம் பிற நாடுகளின் தேசியக் க�ொடிகள் பற்றி அவசியம்
தெரிந்து க�ொள்ளவும் மதிக்கவும் வேண்டும்.

மலேசியா தாய்லாந்து சிங்கப்பூர் இந்தோனேசியா

மியன்மார் புருணை டாருஸ்சலாம் கம்போடியா

தீம�ோர் லெஸ்தே லாவ�ோஸ் வியட்நாம் பிலிப்பைன்ஸ்

பிறநாடுகளின் தேசியக் க�ொடியை அறிந்து க�ொண்டால் உலகளாவிய


நிலையில் ப�ொது அறிவை வளர்த்துக் க�ொள்ளலாம்.

21ஆம் தி றன் குழுப் பணி


நூற்றாண்டுக் கற்றல்
1. மாணவர்களைப் பல குழுக்களாகப் பிரித்தல்.
2. ஒவ்வொரு குழுவும் தாங்கள் தயாரித்த க�ொடிக்குப் பெயரிட்டு,
அதன் சின்னங்களின் ப�ொருளை விளக்குதல்.
3. குழுவின் முடிவுகளை வகுப்பில் படைத்தல்.
Saiz sebenar
ஆசிரி யர்யர்
ஆசிரி க�ொடியையும் குழுவின் பெயரையும் மாணவர்கள் உருவாக்க வழிகாட்டுதல்.
ப்புப்பு
குறிகுறி
130
மீட்டுணர்வோம்

நம் நாட்டுக் க�ொடியின் வரலாறு


வடிவமைப்பு செய்தவர் இஞ்சே முகமது பின் ஹம்சா.
1950ஆம் ஆண்டு மே திங்கள் 26ஆம் நாள் சிலாங்கூர்
சுல்தான் அரண்மனை வளாகத்தில் முதன்முறையாகத்
தேசியக் க�ொடி பறக்கவிடப்பட்டது.

‘ஜாலூர் கெமிலாங்’ நமது க�ொடி


1997ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு திங்கள் 31ஆம் நாள் 40வது சுதந்திர
நாள் க�ொண்டாட்டத்தை முன்னிட்டு மலேசியாவின் நான்காவது
பிரதமரான துன் டாக்டர் மகாதீர் முகமது அவர்களால் ‘ஜாலூர்
கெமிலாங்’ என அறிவிக்கப்பட்டது.

‘ஜாலூர் கெமிலாங்கின்’ அடையாளத்தை அறிவ�ோம்


சிவப்பு - துணிவும் விடாமுயற்சியும்
வெள்ளை - உளத்தூய்மையும் நேர்மையும்
மஞ்சள் - அரசருக்கும் நாட்டுக்கும்
விசுவாசம் செலுத்துதல்
நீலம் - மக்கள் ஒற்றுமை
பிறை - கூட்டரசு மலேசியாவின் சமயம்
இஸ்லாம்
14 முனை - 13 மாநிலமும் ஒரு கூட்டரசு பிரதேசத்தின்
நட்சத்திரம் ஒற்றுமையும்

க�ொடியை மதிப்போம் நல்லிணக்கம் வளர்ப்போம்


காட்சிக்கு வைக்கப்படும் தேசியக் க�ொடி சரியான
நிலையில் உள்ளதை உறுதிச் செய்ய வேண்டும்.
க�ொடியை ஏற்றும்போதும் இறக்கும்போதும்
நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

மலேசியா தாய்லாந்து சிங்கப்பூர் இந்தோனேசியா

தென்கிழக்காசிய நாடுகளின் தேசியக் க�ொடிகள்


உலகளாவிய அமைதிக்காக நாம் பிற நாடுகளின் மியன்மார் புருணை டாருஸ்சலாம் கம்போடியா

தேசியக் க�ொடிகளை அவசியம் மதிக்க வேண்டும்.


தீம�ோர் லெஸ்தே லாவ�ோஸ் வியட்நாம் பிலிப்பைன்ஸ்

இந்த அலகு, ஒற்றுமையின் சின்னமாக விளங்கும் தேசியக் க�ொடியின்


முக்கியத்துவத்தை விவரிக்கின்றது. அடுத்த அலகில் நாம் தேசியப் பண்ணைக்
கற்றுப் புரிந்து க�ொள்ளப் ப�ோகிற�ோம். Saiz sebenar

131
சிந்தித்துப் பதிலளி
அ. தேசியக் க�ொடியின் வண்ணத்தின் ப�ொருளை எழுதுக.
நீலம்:

சிவப்பு:

மஞ்சள்:

வெள்ளை:

ஆ. தேசியக் க�ொடியின் பயன்பாட்டு நெறிமுறைகளைக் குறிப்பிடுக.


மேல்ப்பகுதி

2
கீழ்ப்பகுதி

1 14
த�ொகுதி 1

இ. தேசியக் க�ொடியைக் கருப்பொருளாகக் க�ொண்டு ஒரு கவிதையை


இயற்றுக.

Saiz sebenar

132 ஆசிரியர் இப்பக்கத்தைப் படியெடுத்து வழங்கிடுக.


குறிப்பு
நாட்டை நேசிப்போம்
தேசியக் க�ொடியின் வரலாறு, ப�ொருள், சின்னங்கள் ஆகியவற்றை அறிந்து
க�ொள்வதால் நாட்டின் இறையாண்மையை அடையாளப்படுத்த முடியும்.
மலேசிய நாட்டிலும் உலகளாவிய நிலையிலும் ‘ஜாலூர் கெமிலாங்’ பறப்பதைக்
கண்டு நாம் பெருமிதம் க�ொள்ள வேண்டும்.
சமுதாயம்
தனிநபர்
‘ஜாலூர் கெமிலாங்’ வண்ணத்தையும்
தேசியக் க�ொடியை
சின்னத்தையும் புரிந்து க�ொண்டு உய்த்துணரும்
மதிப்பதன் மூலம்
சமுதாயம் எப்பொழுதும் எங்கிருந்தாலும் தேசியக்
நாட்டுப்பற்றைக் காட்ட
க�ொடியைத் தற்காக்கும்.
முடியும்.

நாடு
நாட்டின்
மாண்பின்
சின்னமாக
விளங்கும்
தேசியக்
க�ொடியை
மதிக்க
வேண்டும்.

‘ஜாலூர் கெமிலாங்கைப்’ பறக்கவிடுவதன்வழி மாணவர்களிடையே நாட்டுப்பற்றை மேல�ோங்கச்


செய்யலாம். Saiz sebenar
(மூலம்: Koleksi peribadi Hasfalila binti Hassan)
133
தலைப்பு 9 : நம் நாட்டின் அடையாளம்

அலகு
UNIT

8
10 மலேசியத் தேசியப் பண்

சாரம்

நம் நாட்டின் அடையாளத்தை அறிந்து க�ொள்வதற்காகத் தேசியப்


பண்ணைக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த அலகு, தேசியப் பண்ணின்
வரலாற்றையும் அதன் பெயரையும் விவாதிப்பத�ோடு பாடல் வரிகளையும்
ப�ொருளையும் விளக்குகிறது. மேலும், தேசியப் பண்ணைப் பாடும்போது
கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும் தனித்துவத்தை உருவாக்கும்
தேசியப் பண்ணின் பங்கையும் விவரிக்கின்றது.

குடியியல் நெறி

ப�ொறுப்புணர்வு
மதித்தல்

Saiz sebenar
(மூலம்: Koleksi peribadi Hasfalila binti Hassan)

134
நீங்கள் கற்கப் ப�ோவது என்ன?
1. தேசியப் பண் உருவான வரலாறு.
2. தேசியப் பண்ணின் பெயர்.
3. 'நெகாராகூ' பாடலின் வரிகளும் ப�ொருளும்.
4. தேசியப் பண்ணைப் பாடும்போதும் கேட்கும்போதும் கடைப்பிடிக்க
வேண்டிய நெறிமுறைகள்.
5. தனித்துவத்தை உருவாக்குவதில் தேசியப் பண்ணின் பங்கு.

PS
AK

அடிப்படை வரலாற்றுச் சிந்தனைத் திறன்


1. தேசியப் பண் உருவான வரலாற்றுச் சான்றுகளை ஆராய்தல்.
2. தேசியப் பண்ணின் வரியையும் அதன் ப�ொருளையும் பற்றிய உணர்வைக்
கற்பனை செய்தல்.
3. தேசியப் பண்ணைப் பாடும்போதும் கேட்கும்போதும் த�ோன்றும் காட்சியைக்
கற்பனை செய்தல்.

தேசியப் பண்ணைப் பாடுவதன்வழி மாணவர்களுக்கிடையே


நாட்டுப்பற்றையும் ஒற்றுமை உணர்வையும் வளர்க்கலாம். Saiz sebenar

135
தேசியப் பண்ணின் வரலாறு

'நெகாராகூ' நாட்டின் தேசியப் பண். தேசியப் பண் நாட்டின்


இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் அடையாளமாக விளங்குகிறது. தேசியப்
பண் உருவான வரலாறு 1957ஆம் ஆண்டு த�ொடங்கியது. நாட்டின் மீது
விசுவாசம் க�ொண்ட குடிமக்களான நாம் தேசியப் பண்ணின் வரலாற்றைத்
தெரிந்திருப்பது அவசியமாகும்.

பாரா, ஒவ்வொரு
முறையும் அதிகாரப்பூர்வ
சபை கூடுதலின்போது
கட்டாயம்
நாம் 'நெகாராகூ' பாட
வேண்டும்.
இன்றுதான் எனக்குத்
தேசியப் பண்
உருவான வரலாறு
தெரிந்தது.

மெய் யீ, நமது


முன்னாள் தலைவர்களும்
தனிநபர்களும் சுதந்திர
நாளுக்கு நாட்டைத்
தயார்படுத்திய முயற்சி
பாராட்டத்தக்கதுதானே.

வி ர ை
ந் து ப தி ல ளி ந ட வ டி க ் கை

தேசியப் பண் எங்கு குழு முறையில், பல்வேறு மூலங்களைக்


முதன்முறையாக க�ொண்டு உங்கள் பள்ளிப் பாடல்
Saiz sebenar வரலாற்றை ஆராய்க.
ஒலிபரப்பப்பட்டது?

136
அறிமுகம் இருந்தால்தான் நேசம்
உருவாகும். ஆகவே, நம் நாட்டின் மீது
பெருமிதமும் மதிப்பும் ஏற்பட நாம் தேசியப்
பண்ணை உய்த்துணர வேண்டும்.

(மூலம்: Arkib Negara Malaysia, 2013. Citra Merdeka


பேராக் மாநிலப் பண் 1957–2007. Kuala Lumpur: Arkib Negara Malaysia)

தேசியப் பண்ணின் வரலாற்றை அறிந்து க�ொள்வதன்வழி நாட்டின்


தலைவர்களின் விவேகத்தை எண்ணிப் பெருமிதம் க�ொள்ள முடியும்.
Saiz sebenar
9.3.1
ஆசிரியர் தேசியப் பண்ணின் வரலாற்றை மாணவர்கள் புரிந்து க�ொள்ளவும் பள்ளிப்
9.3.2 குறிப்பு
K9.3.7 பண்ணின் வரலாற்றை மாணவர்கள் ஆராயவும் வழிகாட்டுதல். 137
மலேசியாவின் தேசியப் பண் நெகாராகூ

ஒவ்வொரு நாட்டிற்கும் அடையாளமாகத் தேசியப் பண் திகழ்கிறது.


ப�ொதுவாக ஒவ்வொரு நாட்டுப் பண்ணுக்கும் அதிகாரப்பூர்வப் பெயர்
உண்டு.

1 குழுப்பாடல் பயிற்சியைத் த�ொடங்கும்


முன், கடந்த வாரம் நீங்கள்
மேற்கொண்ட தேசியப் பண் வரலாற்றுக்
கண்காட்சி சுற்றுலாவில் கிடைக்கப்
பெற்றது என்ன?

2 இச்சுற்றுலாவின் வாயிலாக
நாங்கள், நம் நாட்டுத் தேசியப்
பண்ணின் வரலாற்றைத்
தெரிந்து க�ொண்டோம்.

3 நீ ச�ொன்னது உண்மைதான் அமிர்தா.


இச்சுற்றுலாவின் வழி 'நெகாராகூ'
1957ஆம் ஆண்டு நம் நாட்டின் சுதந்திர
நாளை முன்னிட்டு உருவாக்கப்பட்டது
என அறிந்து க�ொண்டேன்.

4 சுதந்திரத்திற்கு முன்
நம் தேசியப் பண்
எது?

21ஆம் திறன்
நூற்றாண்டுக் கற்றல்
ச�ொற்களஞ்சியம்
பாகமேற்று நடித்தல்
மேற்கண்ட உரையாடலின் நாட்டுப்பற்று: நாட்டின் மீது
அடிப்படையில்
Saiz sebenar நடித்துக் காட்டுக. ஆழ்ந்த அன்பு செலுத்துதல்.

138
5 சுதந்திரத்திற்கு முன் நம் நாட்டின் தேசியப்
பண், ‘க�ோட் சேஃவ் தி குவின்’ (God Save the
Queen) என்ற பிரிட்டிஷ் நாட்டுப் பண்ணாகும்.

6 மலேசிய நாட்டுச் 7
குடிமக்களாகத் தேசியப் உண்மைதான் ரஞ்சிட். பாடல்
பண்ணின் வரிகளை நாம் வரிகளை நாம் நன்றாகப் புரிந்து
உள்ளுணர்வுடன் புரிந்து க�ொண்டு, உய்த்துணர்ந்து
க�ொள்ள வேண்டும். க�ொண்டால் நாட்டின் மீது
விசுவாசம் வளரும்.

8 ஆமாம் ரிக�ோ. தேசியப்


பண்ணை நெறிய�ோடு நாம் பாட
வேண்டும். எடுத்துக்காட்டாக
நேராக நின்று அதை மதிக்கும்
வகையில் பாட வேண்டும்.

கூட்டமாகத் தேசியப் பண்ணைப் பாடும்போது குடிமக்களிடையே


நாட்டுப்பற்று எழுச்சியூட்டப்படுகிறது.
வி ர ை
ந் து ப தி ல ளி

நம் நாட்டின் தேசியப் தேசியப் பண் எவ்வாறு நாட்டுப்பற்றை


பண்ணின் பெயர் என்ன? எழுச்சியூட்டுவதாக்குகிறது?
Saiz sebenar
9.3.2
ஆசிரியர்
K9.3.6 குறிப்பு மாணவர்கள் நடிப்பதற்கு வழிகாட்டுதல்.
K9.3.7 139
தேசியப் பண்ணின் ப�ொருளை உய்த்துணர்தல்

தேசியப் பண் நாட்டின் மீது மக்களின் நம்பிக்கையையும் வேட்கையையும்


வெளிப்படுத்துகிறது. நாட்டின் மீது விசுவாசம் க�ொண்ட குடிமக்களான
நாம் தேசியப் பண்ணின் வரிகளைப் புரிந்து க�ொள்ளுதலும் உய்த்துணர்தலும்
அவசியமாகும்.

Negaraku
நெகாராகூ பாடல் வரிகளின்
Negaraku ப�ொருள்
Tanah tumpahnya darahku
Rakyat hidup பல்லினத்தையும் பல
Bersatu dan maju சமயத்தையும் சார்ந்த மக்கள்
ஒன்றிணைந்து முன்னேற்றத்தை
Rahmat bahagia ந�ோக்கிச் செல்லக் க�ோருதல்.
Tuhan kurniakan
Raja kita நாட்டையும் மக்களையும்
Selamat bertakhta சுபிட்சத்துடன் ஆட்சிபுரியும்
அரசரின் நல்வாழ்விற்காக
Rahmat bahagia
இறைவனின் ஆசியை
Tuhan kurniakan
வேண்டுதல்.
Raja kita
Selamat bertakhta
நாட்டிற்கும் அரசருக்கும்
நாம் பிளவுபடாத
விசுவாசத்தைக் காட்ட
வேண்டும்.
நெகாராகூ பாடல்

21ஆம் திறன் சிந்தனை வரைபடம்


நூற்றாண்டுக் கற்றல்
1. 'நெகாராகூ' பாடல் வரிகளை உய்த்துணரும் அடிப்படையில், "மலேசியாவின்
குடிமகன் என்பதில் நான் பெருமிதம் க�ொள்கிறேன். காரணம்........" என்ற
வாசகத்தைச் சிந்தனை வரைபடத்தின்வழி குறிப்பிடுக.
2. இடுபணியின் தகவல்களைப் படைத்திடுக.
வி ர ை
ந் து ப தி ல ளி
நாம் ஏன் தேசியப் பண்ணின் வரிகளின்
தேசியப் பண்ணின் நான்காவது ப�ொருளை உய்த்துணர வேண்டும்?
வரியைக் குறிப்பிடுக.
Saiz sebenar
ஆசிரியர் 'நெகாராகூ' பாடல் வரிகளின் ப�ொருளைப் புரிந்து க�ொள்ளவும் உய்த்துணரவும் மாணவர்களுக்கு
குறிப்பு
140 வழிகாட்டுதல்.
நாம் சமயப்
ப�ோதனையை
உறுதியாகக்
கடைப்பிடித்து
இறைவனின்
கட்டளைக்கு
இணங்க வேண்டும்.

(மூலம்: Koleksi peribadi Hasfalila binti Hassan)

பல்வேறு துறைகளில்
முன்னேற நமக்குக்
குறிக்கோளும் முயற்சியும்
இருக்க வேண்டும்.

நாட்டின் விண்வெளி வீரர்


(மூலம்: Koleksi peribadi Dato’ Dr. Sheikh Muszaphar
Shukor Al Masrie bin Sheikh Mustapha)

பல்லினமும் பல சமயமும்
க�ொண்ட மலேசிய மக்கள்
ஒன்றுபட்டு ஒருவரை ஒருவர்
மதித்து வாழ வேண்டும்.

(மூலம்: Malaysia Dateline, 23 Ogos 2019)

நாம் எழிலும் அமைதியும்


க�ொண்ட சுதந்திர நாட்டில்
பிறந்ததற்காக நன்றி
பாராட்ட வேண்டும்.

(மூலம்: Sipadan.com)
'நெகாராகூ' பாடல் வரிகளைப் புரிந்து உய்த்துணர்வதால் முன்னேற்றம்,
ஒற்றுமை, விசுவாசம் ஆகிய பண்புகள் வளரும். இது நாட்டில் சுபிட்சத்தை
ஏற்படுத்தும்.
Saiz sebenar
9.3.3
K9.3.7
141
தேசியப் பண்ணைப் பாடும் நெறிமுறைகள்

தேசியப் பண்ணைப் பாடும்போது சில நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க


வேண்டும். தேசியப் பண்ணின் நெறிமுறைகளைப் பின்பற்றிக் கடைப்பிடிப்பதால்
மக்களிடையே நாட்டுப்பற்றை விதைத்து இலக்கையும் தனித்துவத்தையும்
அடையலாம்.

2 பாடும்போது குரலும்
பாடும்போது உடல்
உய்த்துணர்தலும்
1 அமைப்பு:
✓ தெளிவாக ஒரு சேரப்
பாட வேண்டும்.
✓ நிமிர்ந்து நிற்க வேண்டும். ✓ பாடல் வரிகளைச்
✓ இரண்டு கைகளையும் சரியான உச்சரிப்புடனும்
பக்கவாட்டில் கீழ்நோக்கி உற்சாகத்துடன் பாட
வைத்திருக்க வேண்டும். வேண்டும்.
✓ பாடல் வரிகளை
✓ இரண்டு கால்களையும் உய்த்துணர்தல் வேண்டும்.
நெருக்கமாக ✓ பாடும்போது
வைத்திருக்க வேண்டும். விளையாட்டுத்தனம்
கூடாது.

பள்ளிக்குத் தாமதமாக
வரும் மாணவர்கள்
4 மாற்றுத் திறனாளிகள்
3 ✓ சக்கரவண்டியில்
அமர்ந்திருப்போர்
✓ தேசியப் பண்ணைக் தலையை நேராக
கேட்டவுடன் நின்றுவிட வைத்திருக்க வேண்டும்.
வேண்டும். ✓ கண்கள் க�ொடியை
✓ புத்தகப்பையைக் கால் ந�ோக்கி இருக்க
பக்கவாட்டில் வேண்டும்.
வைக்க வேண்டும். ✓ இரண்டு கைகளையும்
✓ நிமிர்ந்து நிற்க த�ொடையின்மீது
வேண்டும். வைத்திருக்க வேண்டும்.
✓ கால்களை நெருக்கமாக
வைத்திருக்க வேண்டும்.

தேசியப் பண்ணுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இப்பாடலைச் சரியான


நெறிமுறைய�ோடும் உணர்வோடும் பாட வேண்டும்.
தேசியப் பண்ணைப்
உங்களுக்குத் தெரியுமா?
ந ட வ டி க ் கை பாடும், கேட்கும்
நெறிமுறைகளைக்
'நெகாராகூ' பாடலை
மதிக்காதவர்கள் எனக் குற்றம் பள்ளிக்குத் தாமதமாக கடைப்பிடிப்பதன்
சாட்டப்பட்டால் RM100.00க்கு வந்த மாணவனின் முக்கியத்துவத்தைக்
மேற்போகாத அபராதம் கதாபாத்திரத்தை குறிப்பிடுக.
அல்லது ஒரு மாதத்திற்கு மையப்படுத்தி 'நெகாராகூ'
மேற்போகாத சிறைத் தண்டனை பாடும் நெறிமுறைகளை
Saizவிதிக்கப்படலாம்.
sebenar நடித்துக் காட்டுக.
9.3.4
ஆசிரியர் 'நெகாராகூ' பாடலைப் புரிந்துக�ொண்டு நெறிமுறைகள�ோடு பாட
குறிப்பு K9.3.6
142 மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
தனித்துவத்தை உருவாக்கும் தேசியப் பண்

தேசியப் பண் வரிகளைப் புரிந்துக�ொண்டு உய்த்துணர்ந்தால் வெற்றிக்கு


வழிவகுக்கும். தேசியப் பண்ணின் இலக்கு தனித்துவமிக்க மலேசியச்
சமுதாயத்தை உருவாக்குவதே ஆகும்.

உயர்ந்த வேட்கையையும் தன்னை


நாட்டுக்கும் அரசருக்கும் விசுவாசம்
மேம்படுத்திக் க�ொள்ள முயற்சி செய்யும்
செலுத்தும் குடிமக்களை உருவாக்கும்.
குடிமக்களையும் உருவாக்கும்.

ஒற்றுமையை விதைத்து மலேசியாவில்


மலேசிய மக்களிடையே பெருமிதமும் உள்ள பல்வேறு இனம், சமயம்,
நன்றி உணர்வும் ஏற்பட்டு நாட்டின் மீது கலாச்சாரத்தை மதிக்கச் செய்யும்.
நேசத்தை விதைக்கும்.

தேசியப் பண்ணைப் புரிந்து க�ொள்வதன்வழி மக்களிடையே


நாட்டுப்பற்றையும் நேசத்தையும் ஒற்றுமையையும் மேல�ோங்கச் செய்ய முடியும்.

ந ட வ டி க ் கை
தனித்துவத்தை ஏற்படுத்த நீ மேற்கொண்ட
மூன்று முயற்சிகளைக் குறிப்பிடுக.
Saiz sebenar
9.3.5
ஆசிரியர் தனித்துவத்தை ஏற்படுத்தும் தேசியப் பண்ணைப் புரிந்து க�ொள்ள மாணவர்களுக்கு
K9.3.7 குறிப்பு
K9.3.8 வழிகாட்டுதல். 143
சிந்தித்துப் பதிலளி 'தர்சியா' விளையாடுவ�ோம் வாரீர்

கருவிகளும் ப�ொருள்களும் இணைக்கும் அட்டையும் கத்தரிக்கோலும்.

பங்கேற்பாளர்கள் இணையராக அல்லது குழுவாக.

விளையாடும் முறை
1. இணைப்பு அட்டைகளில் உள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்.
இணைப்பு
2. கேள்வியையும் பதிலையும் இணைக்கவும். அட்டைகள்
3. விடைகளைச் சரிபார்க்க விரைவு தகவல் குறியீட்டை (QR) நுணுகுக.

எடுத்துக்காட்டு:

மாணிக்கக்கற்கள்
முத
ன்
தேசியக் க�ொடியை வடிவமைத்த

முற

வடிவம்
ைய
ாக
த்
ஜாலூர் கெமிலாங்
தே
சிய
க் க
�ொ
முகமது பின் ஹம்சா

டி
பற
க்க
விட
ப்பட்ட
து

து
கிற
வர்

ட்டு
ம் கா
நிற
நீல
லா யர்
ெமி ன் பெ
அரச

நா
ட்டி
ரின்
து

ன்
ங்

நான
என்ப மற

ர்
ர் க �ொடியி

்கா
ைவி


திய வது
னால்

டுத் பிரதமரா
ல்
துக

ப்ப
த்த


்கத்தை

டன துன்
ஜா ேசியக்
சரி

பிரக டா
அனு

க்ட
னு

ைப் ர் மகா
சரி

வர்
க்கு

யர
ம் அ

தீர்

ம் அ

லூ

முகம
மக

பெ
சிய

ைத்த
டை

ங் து
்க

லா
்க

யாள
துக

மலே

ெமி
ளின்

ம்

வம

ர் க
முகம
றது

லூ
ஜா
துணி

வடி
கி

50
ட்டு

து

வும்
கா

முத

19
பின்
டிய

ன்
தேசியக் க�ொடியை வடிவமைத்தவ


விட
ம்

மரி முற

ஜாலூர் கெமிலாங்
டிய

நிற

�ொ

ாதை ைய

�ொ
ா மு

யா ாக

மே
க் க
ப்பு

ன த்
ந்த
ம்

முற தே
கிழி
யற்

26
சிவ

ையி சிய
சிய

சா

ல் க்
சி

அழி
முகமது பின் ஹம்சா

க�ொ
யும்

க்க
தே

வே டி
ண் பற
உளத்தூய்மையும் நேர்மையும்
டும் க்க
முதன் முறையாகத் தேசியக் க�ொடி பறக்கவிடப்பட்டது டப வி
க�ொ
வெள்ளை நிறம் காட்டுகிறது ்பட்ட
டிய 26 மே 1950
து

து

முகம
ஜா

ஏற்
லூ
ம்

ம் றும்
்லா

டனு
தீர்
ர் க

போ
தும்
இஸ

றியு
மகா
ெமி

நெ இறக்
யம்

லா

கும்
ர்

வும்
பிற

க்ட
ங்
சம

ாக போ
டா

தும்
பெ

துவ
ன்

துன்
யர
ாவி

மெ
கா
சிய

ைப்

ட்டு

பிரதமரா
மலே

பி

ர்
ரக
ம்

ல்

டன
சு
ட்டர

துத

வது
ப்ப
லுத்
கூ

டுத்
்கா
ம் செ

நான
திய
நீல

மஞ

றும

வர்
வாச

ன்
நிற
்சள்

ட்டி
ஒற்
விசு

ம்

நா
நிற

கா
கும்

ன்
ம்

ட்டு
டிற்

்களி
கா
ட்

கிற
நா

மக
ட்டு
கும்

து
கிற

லின
ருக்

து
பேரரச

பல்

அனைத்து அட்டைகளையும் இணைத்தபின் ஒரு வடிவம் உருவாகும்.


Saiz sebenar
ஆசிரியர்
குறிப்பு
விரைவு தகவல் குறியீட்டிலிருந்து நிறைய இணைப்பு அட்டைகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
144
மீட்டுணர்வோம்

தேசியப் பண்ணின் வரலாறு


பேராக் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பாடலின் மெட்டைப்
பயன்படுத்தி மலேசியாவின் தேசியப் பண், 1957ஆம்
ஆண்டு நாட்டின் சுதந்திரக் க�ொண்டாட்டத்தை
முன்னிட்டு உருவாக்கப்பட்டது.

Lagu Negaraku
Negaraku
Tanah tumpahnya darahku
Rakyat hidup
மலேசியாவின் தேசியப் பண் 'நெகாராகூ'
Bersatu dan maju
Rahmat bahagia
Tuhan kurniakan
'நெகாராகூ' எனும் மலேசியாவின் தேசியப் பண் நாட்டின்
Raja kita
Selamat bertakhta ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் அடையாளமாகத்
Rahmat bahagia
Tuhan kurniakan
Raja kita
திகழ்கிறது.
Selamat bertakhta

நெகாராகூ பாடல் வரிகளின்


ப�ொருள்
தேசியப் பண் வரிகளின் ப�ொருளை உய்த்துணர்தல் பல்லினத்தையும் பல
சமயத்தையும் சார்ந்த மக்கள்
மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் நாட்டையும் ஒன்றிணைந்து முன்னேற்றத்தை
ந�ோக்கிச் செல்லக் க�ோருதல்.
மக்களையும் சுபிட்சத்துடன் ஆட்சிபுரியும் அரசரின் நாட்டையும் மக்களையும்

நல்வாழ்விற்காக இறைவனிடம் வேண்டுவதே தேசியப் சுபிட்சத்துடன் ஆட்சிபுரியும்


அரசரின் நல்வாழ்விற்காக
இறைவனின் ஆசியை
பண்ணின் ப�ொருளாகும். வேண்டுதல்.

தேசியப் பண்ணைப் பாடும் நெறிமுறைகள்


நிமிர்ந்து நிற்றல், கால்களை நெருக்கமாக வைத்திருத்தல்,
தெளிவாகவும் உற்சாகத்துடன் ஒரு சேரப் பாடுதல்,
பாடும்போது விளையாட்டுத்தனம் கூடாது ஆகியவை தேசியப்
பண் பாடும்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளாகும்.

தனித்துவத்தை உருவாக்கும் தேசியப் பண்


தன்னை மேம்படுத்திக் க�ொள்ள முயற்சி செய்யவும்
ஒற்றுமையை நேசிக்கவும் அரசருக்கும் நாட்டிற்கும்
விசுவாசம் செலுத்தும் தனிநபரை தேசியப் பண்
உருவாக்குகிறது.

மலேசியாவின் தேசியப் பண் பற்றிய புரிதல், நாட்டின் அடையாளத்தின் மீது


பெருமிதத்தை விதைக்கும். அடுத்த அலகில் மாணவர்கள் தேசிய ம�ொழியையும்
அதன் ப�ொருளையும் கற்றுக் க�ொள்வர். Saiz sebenar

145
நடவடிக்கை

பல்வேறு மூலங்களைப் பயன்படுத்துதல்.


1. உன் மாநிலப் பண் வரிகளை எழுதுக.

மாநிலப் பண் வரிகள் ____________________________


_____________________________________________
_____________________________________________
_____________________________________________
_____________________________________________
_____________________________________________
_____________________________________________
_____________________________________________.

2. உன் மாநிலத்தின் பாடல் வரிகளின் ப�ொருளை ஆராய்ந்து எழுதுக.

_____________________________________________
_____________________________________________
_____________________________________________.

3. ஆராய்ந்த ப�ொருளின்வழி கிடைக்கப் பெற்ற பண்புக் கூறுகளைக்


குறிப்பிடுக.

_____________________________________________
_____________________________________________
_____________________________________________
_____________________________________________
_____________________________________________
Saiz sebenar
ஆசிரியர்
குறிப்பு
மாநிலப் பண்ணின் ப�ொருளையும் நற்பண்புகளையும் ஆராய மாணவர்களுக்கு
146 வழிகாட்டுதல்.
KAநNேசி
NE பG்AபRோAம்
CநINாTடA்Aடை
தேசியப் பண்ணின் முக்கியத்துவம், வரலாறு, வரிகள், நெறிமுறைகள்
ஆகியவற்றை அறிந்து க�ொள்வதால் நாட்டை நேசிக்கும் உணர்வையும்
தனித்துவத்தையும் விதைக்க முடியும்.

இன்று நாடு பெற்றிருக்கும் முன்னேற்றமும் ஒற்றுமையும் நாட்டை நேசிக்கும் குடிமக்களின்


முயற்சியால் உருவானதாகும்.
(மூலம்: Koleksi Dewan Bahasa dan Pustaka)

தனிநபர்
சமுதாயம்
நிமிர்ந்து நின்று 'நெகாராகூ'
பாடலைப் பாடுவது நாட்டுப்பற்று
ஒருவர் தேசியப் பண்ணை த�ொடர்ந்து
மதிப்பதற்கான சான்றாகும். எழுச்சியுற மக்கள்
தேசியப் பண்ணை
உய்த்துணர
வேண்டும்.

நாடு
மக்களின் நாட்டுப்பற்று முன்னேற்றமும் சுபிட்சமும்
Saiz sebenar
க�ொண்ட நாட்டை உருவாக்கும்.
147
தலைப்பு 9: நம் நாட்டின் அடையாளம்

அலகு

11 தேசிய ம�ொழி

GERAKAN DEKAD
BAHASA KEBANGSAAN
Ikrar Setia Bahasa
Kami rakyat Malaysia
Berikrar akan terus memperjuangkan
bahasa Melayu sebagai;
Bahasa yang mencipta kedaulatan negara,
bahasa kesatuan politik,
ekonomi, budaya, sosial, pendidikan,
sains dan teknologi
serta pembangunan negara
bagi menjamin
kelangsungan bangsa Malaysia
Bahasa yang menjaga dan memupuk
kebebasan intelektual serta memerdekakan
pemikiran bangsa dan
Bahasa yang membawa, memelihara, mencipta,
serta mengembangkan ilmu dan tamadun negara
hingga ke peringkat dunia.
Sesungguhnya kami bertekad akan
meneruskan perjuangan ini.

சாரம்
மலாய்மொழி நம் நாட்டின் தேசிய ம�ொழி. தேசிய ம�ொழியைப்
பயன்படுத்துவதன் மூலம் நாட்டுப்பற்றையும் நாட்டினத்தின்
தனித்துவத்தையும் விதைக்க இயலும். இந்த அலகு, அரசியலமைப்பில்
தேசிய ம�ொழியின் நிலைத்தன்மையையும் பிற ம�ொழிகளின்
நிலைத்தன்மையையும் விவரிக்கின்றது. மேலும், தேசிய ம�ொழியின் பங்கு,
தேசிய ம�ொழியின் நிலைத்தன்மையைப் பாதுகாக்கும் கழகங்கள் பற்றிய
விளக்கம், மலாய்மொழி தேசிய ம�ொழியாகப் பயன்படுத்துவதில் உள்ள
Saiz
Saizsebenar
sebenar ஆகியவற்றை விவரிக்கின்றது.
சவால்கள்

148
148
நீங்கள் கற்கப் ப�ோவது என்ன?
1. கூட்டரசு மலாயா அரசியலமைப்புச் சட்டத்தில் தேசிய ம�ொழி, பிற
ம�ொழிகள் ஆகியவற்றின் நிலைத்தன்மை.
2. தேசிய ம�ொழியின் பங்கு.
3. தேசிய ம�ொழியின் நிலைத்தன்மையைப் பாதுகாக்கும் கழகங்கள்.
4. மலாய்மொழியைத் தேசிய ம�ொழியாகப் பயன்படுத்துதலில் உள்ள
சவால்கள்.

Anjuran bersama

Sekolah Kebangsaan (1)


Dewan Bahasa Jalan Batu Tiga, Klang,
dan Pustaka Selangor Darul Ehsan.

குடியியல் நெறி
அன்புடைமை
PS
AK

அடிப்படை வரலாற்றுச் சிந்தனைத் திறன்


1. கூட்டரசு மலாயா அரசியலமைப்புச் சட்டத்தில் தேசிய ம�ொழியின்
முக்கியத்துவத்தின் சான்றுகளை ஆராய்தல்.
2. தேசிய ம�ொழியின் பங்கு குறித்த காலநிரலையும் காலமாற்றத்தையும்
அறிதல்.
3. தேசிய ம�ொழியின் நிலைத்தன்மையையும் முக்கியத்துவத்தையும் பற்றிய
விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த கால நிகழ்வுகளையும் சிக்கல்களையும்
ஆராய்தல்.
4. மலாய்மொழி தேசிய ம�ொழியாக இருப்பதன் சவால்களைப் பற்றிய
மாற்றத்தையும் த�ொடர்நிலையையும் விளக்குதல். Saiz
Saizsebenar
sebenar

149
149
தேசிய ம�ொழியின் நிலை

மலாய்மொழி நம் நாட்டின் தேசிய ம�ொழியும் அதிகாரப்பூர்வ ம�ொழியும்


ஆகும். மலாய்மொழி அதிகாரப்பூர்வ ம�ொழி என்று தேசிய ம�ொழிச் சட்டம்
1963/1967இல் (Akta Bahasa Kebangsaan 1963/97) பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்வி ம�ொழியாக மலாய்மொழியின் முக்கியத்துவம் குறித்து கல்விச் சட்டம்
1961 (Akta Pelajaran 1961), கல்விச் சட்டம் 1996 (Akta Pendidikan 1996)
ஆகியவற்றில் பதிவாக்கப்பட்டது. அதே வேளையில் பல்லின மக்களைக்
க�ொண்ட மலேசிய மக்கள் மெண்டரின், தமிழ், ஆங்கிலம் ஆகிய
ம�ொழிகளை அன்றாட வாழ்வில் த�ொடர்பு ம�ொழியாகப் பயன்படுத்தலாம்.

1 அனைவருக்கும் காலை வணக்கம்.


இம்மாதம் நம் பள்ளியில் தேசிய ம�ொழிக்
க�ொண்டாட்டம் நடைபெறவிருக்கிறது.
வரலாற்றுக் கழகமும்
இக்கொண்டாட்டத்தில் பங்கு பெறவுள்ளது.

“Perkara 152. Bahasa kebangsaan.


(1) Bahasa kebangsaan adalah
bahasa Melayu dan hendaklah
ditulis dengan apa-apa tulisan
sebagaimana yang diperintahkan
dengan undang-undang oleh
Parlimen:

Dengan syarat bahawa -


(a) tiada seorang pun boleh dilarang
atau dihalang daripada
menggunakan (selain bagi maksud
rasmi), atau daripada mengajar
atau belajar, apa-apa bahasa lain;”
6
ஆமாம், முடியும் வில்சன்.
(மூலம்: Asmah Haji Omar, 2015. Dasar Bahasa இப்புத்தகத்தில் எழுதி
Kebangsaan: Sejarah Memartabatkan Bahasa இருப்பதுப�ோல் மலாய்மொழியே
Kebangsaan dan Bahasa Rasmi Malaysia. தேசிய ம�ொழியாகும். ஆனால்,
Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka)
மற்ற ம�ொழிகளையும் அன்றாட
வி ர ை வாழ்வில் த�ொடர்பு ம�ொழியாகப்
ந் து ப தி ல ளி பயன்படுத்தலாம்.
Saiz sebenar
நம் நாட்டின் தேசிய ம�ொழி என்ன?
150
2 கவர்ந்திழுக்கிறது டாயாங் ஜெட்டி. நான்
கடந்த ஆண்டு ஷா ஆலாமில் நடைபெற்ற
சிலாங்கூர் மாநில அளவிலான தேசிய ம�ொழி
க�ொண்டாட்டத்தில் கலந்து க�ொண்டேன்.
அக்கொண்டாட்டத்தில் மலாய்மொழி
பயன்படுத்தப்பட்டது.

3
எலிசபத், ஏன் தேசிய ம�ொழி
மாதக் க�ொண்டாட்டத்தின்
ப�ோது மலாய்மொழி
த�ொடர்பு ம�ொழியானது?

4
நான் பதிலளிக்கிறேன்.
மலாய்மொழி த�ொடர்பு
ம�ொழியானதற்குக்
காரணம் மலாய்மொழி
நம் நாட்டின் தேசிய
ம�ொழியாகும்.

5
ஓ அப்படியா! அதனால்தான் நாட்டின்
அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்வுகளிலும்
மலாய்மொழி பயன்படுத்தப்படுகிறது.
தேசிய ம�ொழியைத் தவிர்த்து நாம் மற்ற
ம�ொழிகளைப் பயன்படுத்தலாமா?

தேசிய ம�ொழி என்பது பெருமிதம் மிக்க நாட்டின் பாரம்பரியம் ஆகும்.


ஒவ்வொரு குடிமகனும் கட்டாயமாகத் தேசிய ம�ொழியைப் பயன்படுத்தவும்
மதிக்கவும் வேண்டும்.
Saiz sebenar
9.4.1
நம் நாட்டின் தேசிய ம�ொழியைப் புரிந்துக�ொள்ள மாணவர்களுக்கு
K9.4.5 வழிகாட்டுதல். 151
தேசிய ம�ொழியின் பங்கு

நாட்டை மேம்படுத்துவதில் தேசிய ம�ொழி பல்வேறு வகையில்


பங்காற்றுகிறது. மலேசிய நாட்டின் குடிமகனாக நாம் தேசிய ம�ொழியைப்
த�ொடர்பு ம�ொழியாகத் தன்னம்பிக்கையுடன் பயன்படுத்துவதில் பெருமிதம்
க�ொள்ள வேண்டும்.

தனித்துவத்தின்
அடையாளம்

தேசிய ம�ொழி உலக


தேசிய அரங்கில் நாட்டின்
அடையாளமாகவும்
தனித்துவத்தின்
ம�ொழியின் சின்னமாகவும்
திகழ்கிறது.

பங்கு
நாட்டின் அடித்தளம்

ஒற்றுமையை
உருவாக்கப் பல்லின
மக்கள் புரிந்துக�ொள்ள
தேசிய ம�ொழியை முறையாகப் வழிகாட்டியாக ஒரு
பயன்படுத்துவதில் உன் ம�ொழி தேவைப்படுகிறது.
குடும்பத்தின் பங்கு என்ன?

வி ர ை ந ட வ டி க ் கை
ந் து ப தி ல ளி
பல்வேறு மூலங்களைப்
நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வ பயன்படுத்தி, பேச்சிலும்
அலுவல்களுக்குப் எழுத்திலும் தேசிய ம�ொழியை
பயன்படுத்தப்படும் ம�ொழி என்ன? முறையாகப் பயன்படுத்துவதன்
Saiz sebenar
முக்கியத்துவத்தைக் குறிப்பிடுக.
152
RM

எழுத்து ம�ொழி
த�ொடர்பு ம�ொழி
ப�ொன்மொழி,
RM
பழம�ொழி, கவிதை
ப�ோன்ற எழுத்துப் தேசிய ம�ொழி நம்
படிவ ம�ொழியாகத் நாட்டின் பல்லின
தேசிய ம�ொழி மக்களிடையேயும்
பயன்படுத்தப்படுகிறது. வட்டாரத்திலும்
த�ொடர்பு ம�ொழியாகவும்
விளங்குகிறது.

சட்ட ம�ொழி
ப�ொருளாதார ம�ொழி

TOH
RM
N
தேசிய ம�ொழி CO
நீதிமன்ற தேசிய ம�ொழி
அதிகாரப்பூர்வ ப�ொருளாதார
அலுவல்களில் நடவடிக்கைகளில்
பயன்படுத்தப்படுகிறது. பயன்படுத்தப்படுகிறது.

கல்வி ம�ொழி

நிர்வாக ம�ொழி தேசிய ம�ொழி பயிற்று


ம�ொழியாகவும் தகவல்களைக்
தேசிய ம�ொழி க�ொண்டுச் சேர்ப்பதற்கும்
அதிகாரப்பூர்வ பயன்படுத்தப்படுகிறது.
அலுவல்களான கூட்டம்,
விளக்கமளிப்பு, பயிற்சி,
(மூலம்: Asmah Haji Omar, 2015. Dasar Bahasa Kebangsaan:
கடிதத் த�ொடர்புகளில் Sejarah Memartabatkan Bahasa Kebangsaan dan Bahasa
பயன்படுத்தப்படுகிறது. Rasmi Malaysia. Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka)

நாட்டை மேம்படுத்துவதில் ஒவ்வொருவரும் முக்கியப் பங்கு


ஆற்றுகின்றனர். மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த தேசிய ம�ொழி
த�ொடர்புக் கருவியாகத் திகழ்கிறது.
Saiz sebenar
9.4.2
தேசிய ம�ொழியின் பங்கினை விளங்கிக் க�ொள்ள மாணவர்களுக்கு
K9.4.6 வழிகாட்டுதல். 153
தேசிய ம�ொழியின் நிலையைப் பாதுகாக்கும் கழகம்

தேசிய ம�ொழி மக்களிடையே நாட்டின் மீது நாட்டுப்பற்றை வளர்க்கிறது.


தேசிய ம�ொழியை மாண்புறச் செய்யப் பல்வேறு நடவடிக்கைகளும் த�ொடர்
முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

தேசிய ம�ொழியை மாண்புறச் செய்யும் கழகமும் முயற்சியும்

டேவான் பஹாசா டான்


புஸ்தாக்கா கல்வி அமைப்புமுறை
1956ஆம் ஆண்டு டேவான்
► ரசாக் அறிக்கை (1956)
பஹாசா டான் புஸ்தாக்கா தேசியப் பள்ளிகளில்
நிறுவப்பட்டது. டேவான் தேசிய ம�ொழியைப் மலேசியத் தேசியப்
பஹாசா டான் புஸ்தாக்கா பயிற்று ம�ொழியாக்கியது. பல்கலைக்கழகம்
த�ோற்றுவிக்கப்பட்டதற்கான ► ரஹ்மான் தாலிப் அறிக்கை
ந�ோக்கம் பின்வருமாறு: (1960) பள்ளிகளிலும்
► அனைத்து அலுவல்களிலும் பல்கலைக்கழகங்களிலும் ► 1970ஆம் ஆண்டில்
தேசிய ம�ொழியை தேசிய ம�ொழியைப் தேசிய ம�ொழி
முறையாகப் பயிற்று ம�ொழியாக்கியது. அறிவு ம�ொழியாக
பயன்படுத்துவதை ► தேசிய ம�ொழிச் மாண்புறச் செய்ய
ஊக்குவித்தல். சட்டம் 1963/67இல் மலேசியத் தேசியப்
► பல்வேறு வாசிப்புப் உருவாக்கப்பட்டது. பல்கலைக்கழகம்
பனுவல்களைத் தேசிய த�ோற்றுவிக்கப்பட்டது.
ம�ொழியில் வெளியீடு
செய்தல்.
► கலைச்சொற்களை
உருவாக்குதலும் ம�ொழியைத்
தரப்படுத்துதலும். வி ர ை
ந் து ப தி ல ளி
► எல்லா அலுவல்களிலும்
தேசிய ம�ொழியை எப்போது மலேசியத் தேசியப் பல்கலைக்கழகம்
முறையாகப் த�ோற்றுவிக்கப்பட்டது?
பயன்படுத்துவதற்கான
Saiz sebenar
தூண்டுதல் வழங்குதல்.

154
DEKAD BAHASA
தேசிய ம�ொழி மாதம் KEBANGSAAN

► மக்களிடையே தேசிய பத்தாண்டுகளில்


ம�ொழிப் பயன்பாட்டை தேசிய ம�ொழி
ஊக்குவிக்கும் ப�ொருட்டு
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் ► மலேசியாவில்
மாதம் தேசிய ம�ொழி மாதம் பல்வேறு துறைகளில்
க�ொண்டாடப்படுகிறது. மலாய்மொழியைத்
தேசிய ம�ொழியாகவும்
அதிகாரப்பூர்வ
ம�ொழியாகவும்
வலுப்பெறச் செய்தல்.

MBMMBI க�ொள்கை

► 2012ஆம் ஆண்டு தேசிய ம�ொழியை


மாண்புறச் செய்யவும் ஆங்கில ம�ொழியைத்
திடப்படுத்தவும் ‘MBMMBI’ க�ொள்கை
அறிமுகப்படுத்தப்பட்டது.

ஏன் தேசிய ம�ொழியை மாண்புறச் செய்ய வேண்டும்?

தேசிய ம�ொழியை மாண்புறச் செய்வது அனைவரின் கடமையாவத�ோடு


மக்களிடையே விதைக்கவும் வேண்டும். தேசிய ம�ொழி நாட்டின்
தனித்துவத்தையும் அடையாளத்தையும் பிரதிபலிக்கின்றது.
Saiz sebenar
9.4.3 தேசிய ம�ொழியை மாண்புறச் செய்யும் கழகத்தை அறிய மாணவர்களுக்கு
K9.4.7 வழிகாட்டுதல். 155
மலாய்மொழியைத் தேசிய ம�ொழியாகப்
பயன்படுத்துவதில் ஏற்படும் சவால்கள்

இனப் பாகுபாடின்றி மலேசியக் குடிமக்கள் அனைவரும் தேசிய ம�ொழியைச்


சரளமாகப் பயன்படுத்த வேண்டும். முழுமையான தேசிய ம�ொழியின் பயன்பாடு
முன்னேற்றமிகு நாட்டை உருவாக்கும். மலாய்மொழி அதிகாரப்பூர்வ
அலுவல்களில் பயன்படுத்தப்படும் தேசிய ம�ொழியாகும். தேசிய ம�ொழி பல்வேறு
சவால்களைச் சந்தித்தாலும் நாட்டின் அடையாளம் என்பதால் தேசிய
ம�ொழியின் நிலைத்தன்மையும் நிலைப்பாட்டையும் வலுப்படுத்துதல் அவசியம்.

அன்றாடத் த�ொடர்பு

மற்ற ம�ொழிகள�ோடு மலாய்மொழியும்


பெரும்பாலும் அன்றாடத் த�ொடர்பில்
பயன்படுத்தப்படுகிறது. குடிமக்களாகிய
நாம் மலாய்மொழியின் பயன்பாட்டிற்கு
முக்கியத்துவம் க�ொடுக்க வேண்டும்.

மலாய்மொழியைத்
தேசிய ம�ொழியாகப்
பயன்படுத்துவதில்
ஏற்படும் சவால்கள்

பேசுபவர்களின் இயல்பு
ஆர்வமின்மை அல்லது தயக்கம் தேசிய ம�ொழியை
மாண்புறச் செய்யும் முயற்சிகளுக்குத் தடையாக
அமைகின்றன. ஒவ்வொரு மலேசியக் குடிமகனும்
தேசிய ம�ொழியின் ஆற்றல் மீது நம்பிக்கை வைக்க
வேண்டும்.
(மூலம்: Asmah Haji Omar, 2015. Dasar Bahasa Kebangsaan: Sejarah Memartabatkan Bahasa
Saiz sebenar
Kebangsaan dan Bahasa Rasmi Malaysia. Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka)
தேசிய ம�ொழி பயன்பாட்டில் ஏற்படும் சவால்களை அறிய மாணவர்களுக்கு
156 உதவுதல்.
தகவல் த�ொழில்நுட்பத் துறை
இன்றைய காலக்கட்டத்தில் தகவல்
த�ொழில்நுட்பத் துறை மிகவும் முக்கியமானது.
பெரும்பாலான தகவல் த�ொழில்நுட்பப்
பயன்பாடுகளும் கருவிகளும் ஆங்கில
ம�ொழியிலே உள்ளன.

குடும்பப் பின்னணி

தேசிய ம�ொழியை முறையாகப்


பயன்படுத்த பெற்றோர் அல்லது
குடும்பத்தினர் உந்துதலையும்
வழிகாட்டுதலையும் வழங்க வேண்டும்.

கல்வித் துறை
கற்றலில் மாணவர்கள் தாய்மொழியையும்
வட்டாரவழக்குகளையும் அதிகமாகப்
பயன்படுத்துவதால் தேசிய ம�ொழிப்
பயன்பாட்டில் பல சவால்களை எதிர்நோக்க
நேரிடும்.

ம�ொழிக் கலப்பு

நிகழ்ச்சிகளிலும் சமூக ஊடகங்களிலும்


தேசிய ம�ொழிப் பயன்பாட்டில் பல்வேறு
ம�ொழிக் கலப்பு ஏற்பட்டதால் வாக்கிய
அமைப்பு முறை, கலைச்சொற்கள், ச�ொற்களஞ்சியம்
உச்சரிப்பு ஆகியவை தவறாகப்
பயன்படுத்தப்படுகிறது. ம�ொழிக் கலப்பு: பல்வேறு
ம�ொழிகளிலிருந்து கலந்து
பேசும் பேச்சு ம�ொழியாகும்.
மலேசியக் குடிமக்களாகிய நாம் ஒற்றுமையின் ம�ொழியாகவும்
அடையாளமாகவும் திகழும் மலாய்மொழியைப் பெருமிதத்துடன் மாண்புறச்
செய்ய வேண்டும். நிறைய சவால்கள் இருப்பினும் மலாய்மொழியைத் தேசிய
ம�ொழியாக மாண்புறச் செய்ய வேண்டும். Saiz sebenar
9.4.4
K9.4.5
157
ம�ொழி இனத்தின் உயிர்

ம�ொழி இனத்தின் உயிர் (Bahasa Jiwa Bangsa) எனும் பாடல் தேசிய ம�ொழிப்
பற்றை மேல�ோங்கச் செய்ய உருவாக்கப்பட்டது. மலேசியக் குடிமக்கள் தங்கள்
அன்றாட வாழ்க்கையில் தேசிய ம�ொழியைப் பயன்படுத்த இப்பாடல் வரிகள்
அமைந்துள்ளன. ம�ொழியின்வழி பல்லின மக்களை ஒன்றிணைக்க முடியும்.

Lagu Bahasa Jiwa Bangsa


Gunakanlah bahasa kebangsaan kita
Marilah amalkan ramai-ramai
Bahasalah menyatukan kita semua
Yakinlah bahasa jiwa bangsa

Marilah mari rakyat semua


Buktikan taat setia dengan satu bahasa
Maju bangsa dan maju negara
Megahkan bahasa kita
Bahasa jiwa bangsa
Lagu/lirik: Dol Ramli

Bahasa Jiwa Bangsa பாடல்

தேசிய ம�ொழி ஏன் ‘ம�ொழி இனத்தின் உயிர்’ எனப்படுகிறது?

மலேசியர்கள் தேசிய ம�ொழியில் ஆளுமை பெற்றிருக்க வேண்டும். தேசிய


ம�ொழியின் பயன்பாடு மக்கள் ஒன்றுபட்டு ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன்
இருக்கின்றனர் என்பதை நிரூபிக்கின்றது. நாம் எங்கிருந்தாலும் தேசிய
ம�ொழியைப் பயன்படுத்துவதில் தன்னம்பிக்கையும் பெருமிதமும் க�ொள்ள
Saiz sebenar
வேண்டும்.
9.4.2
‘ம�ொழி இனத்தின் உயிர்’ எனும் பாடலைச் சரியான மெட்டுடன் பாடுவதற்கு
மாணவர்களுக்கு வழிகாட்டுதல். K9.4.7
158
மீட்டுணர்வோம்
தேசிய ம�ொழியின் நிலை
★ மலாய்மொழி நாட்டின் தேசிய ம�ொழியாகவும் அதிகாரப்பூர்வ ம�ொழியாகவும்
திகழ்கிறது.
★ மலாய்மொழி அதிகாரப்பூர்வ ம�ொழி என்பது தேசிய ம�ொழிச் சட்டம்
1963/67இல் இடம் பெற்றுள்ளது.
★ பல்லின மலேசிய மக்கள் பிற ம�ொழிகளையும் அன்றாடத் த�ொடர்பு
ம�ொழியாகவும் பயன்படுத்தலாம்.

தேசிய ம�ொழியின் பங்கு


★ நாட்டின் அடித்தளம் ★ த�ொடர்பு ம�ொழி
★ தனித்துவத்தின் அடையாளம் ★ ப�ொருளாதார ம�ொழி
★ நிர்வாக ம�ொழி ★ எழுத்து ம�ொழி
★ சட்ட ம�ொழி ★ கல்வி ம�ொழி

தேசிய ம�ொழியின் நிலையைப் பாதுகாக்கும் கழகமும்


முயற்சியும்
★ கல்வி முறை
★ டேவான் பஹாசா டான் புஸ்தாக்கா
★ மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத் த�ோற்றம்
★ தேசிய ம�ொழியை மாண்புறச் செய்யவும் ஆங்கில ம�ொழியைத்
திடப்படுத்தவும் ‘MBMMBI’ க�ொள்கை
★ தேசிய ம�ொழி மாதம்
★ பத்தாண்டில் தேசிய ம�ொழி

மலாய்மொழி தேசிய ம�ொழியாகப்


பயன்படுத்துவதால் ஏற்படும் சவால்கள்
★ ம�ொழிக் கலப்பு
★ கல்வித் துறை
★ பேசுபவர்களின் இயல்பு
★ குடும்பப் பின்னணி
★ தகவல் த�ொழில்நுட்பத் துறை
★ அன்றாடத் த�ொடர்பு

இந்த அலகு, தேசிய ம�ொழியின் நிலைத்தன்மை, பங்கு, சவால்கள், தேசிய


ம�ொழியின் நிலையைப் பாதுகாக்கும் கழகம் ஆகியவற்றை விளக்குகின்றது.
அடுத்த அலகில் மாணவர்கள் தேசிய மலரைக் கற்று அறிந்து க�ொள்வர்.Saiz sebenar

159
சிந்தித்துப் பதிலளி
அ. நாட்டை மேம்படுத்துவதில் தேசிய ம�ொழியின் பங்கைக் குறிப்பிடுக.

தேசிய
ம�ொழியின்
பங்கு

ஆ. சரியான விடைகளைக் க�ொண்டு காலி இடத்தை நிறைவு செய்க.


1. கூட்டரசு மலாயாவின் அரசியலமைப்புச் சட்டம் மலாய்மொழியைத்
_______________________________ அறிவித்துள்ளது.

2. கூட்டம், விளக்கமளிப்பு ப�ோன்ற __________________________


அலுவல்களில் தேசிய ம�ொழியைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

3. மலேசியாவின் பல்வேறு இனங்கள் _________________________ பிற


ம�ொழிகளைப் பயன்படுத்துகிறது.

4. தேசிய ம�ொழி மாதம் ஒவ்வோர் ஆண்டும் ____________________மாதத்தில்


க�ொண்டாடப்படுகிறது.

5. ‘ம�ொழி இனத்தின் உயிர்’ எனும் பாடல் மலேசிய மக்கள் தங்கள் வாழ்வில்


________________ ம�ொழியைப் பயன்படுத்துமாறு கேட்டுக் க�ொள்கிறது.

Saiz sebenar
• இந்தப் பக்கத்தைப் படியெடுத்து வழங்குதல்.
160 • மாணவர்கள் பதிலளிக்க வழிகாட்டுதல்.
நாட்டை நேசிப்போம்
மக்கள் தேசிய ம�ொழியைச் சரியாகப் பயன்படுத்துவதால் தேசிய ம�ொழி
பெருமைமிகு அடையாளச் சின்னமாக விளங்குகிறது.

ஹன்குக் பல்கலைக்கழகம், ஓஹய�ோ பல்கலைக்கழகம்,


தென்கொரியா அமெரிக்கா

விக்டோரியா பல்கலைக்கழகம், அந்நிய ம�ொழி பல்கலைக்கழகம்,


வெலிங்டன் நியூசிலாந்து பெய்ஜிங், சீனா

வெளிநாடுகளில் மலாய்மொழிக் கல்வியை வழங்கும் சில பல்கலைக்கழகங்கள்


(மூலம்: Koleksi Dewan Bahasa dan Pustaka)

தனிநபர் சமுதாயம்
தேசிய ம�ொழியை உயிராகக் 'நாட்டை நேசிப்போம்' எனும் உணர்வு
கருதி அதன் ஆளுமையை சமுதாயத்தின்பால் மதிப்பையும்
மேம்படுத்திக் க�ொண்டால் ஒற்றுமையையும் வளர்க்கும்.
தனித்துவத்தையும் நாட்டுப்
பற்றையும் வளர்க்க முடியும்.

நாடு
ஒற்றுமை
நிறைந்த
மக்களால்
உலகம் ப�ோற்றும்
ஒரு நாட்டை
உருவாக்க
Saiz sebenar
முடியும்.

161
தலைப்பு 9: நம் நாட்டின் அடையாளம்

அலகு
UNIT

12 செம்பருத்தி தேசிய மலர்

சாரம்

நம் நாட்டின் தேசிய மலர் செம்பருத்தியாகும். இந்த அலகு செம்பருத்தி


தேசிய மலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான பின்னணி, பெயர்,
செம்பருத்தியின் சிவப்பு வண்ணத்தின் ப�ொருள், தேசியக் க�ோட்பாட்டுடன்
தேசிய மலர் இதழ்களின் அடையாளம் ஆகியவற்றை விவாதிக்கின்றது.

குடியியல் நெறி
மகிழ்ச்சி
Saiz sebenar

162
நீங்கள் கற்கப் ப�ோவது என்ன?
1. செம்பருத்தியைத் தேசிய மலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான
பின்னணி.
2. செம்பருத்தியின் பெயர், சிவப்பு வண்ணத்தின் ப�ொருள்.
3. தேசியக் க�ோட்பாடுடன் தேசிய மலர் இதழ்களின் அடையாளம்.

PS
AK

அடிப்படை வரலாற்றுச் சிந்தனைத் திறன்


1. செம்பருத்தியைத் தேசிய மலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான
காலநிரலை அறிதல்.
2. செம்பருத்தியின் பெயர், சிவப்பு வண்ணத்தின் ப�ொருள்விளக்கம்
செய்தல்.
3. செம்பருத்தி மலரின் இதழ்களுக்கும் தேசியக் க�ோட்பாட்டுக்கும்
உள்ள த�ொடர்பை விளக்குதல்.

Saiz sebenar

163
செம்பருத்தியின் சிறப்பு

செம்பருத்தி மலேசியாவின் தேசிய மலராகும். செம்பருத்தியின் தனித்தன்மை


பிற மலர்களிடம் இல்லாததால் தேசிய மலராகத் தேர்வு செய்யப்பட்டது.

மன�ோரஞ்சிதம் மல்லிகை

மகிழம் செண்பகம்
செம்பருத்தி

ர�ோஜா தாமரை

கூட்டரசு மலாயாவின் தேசிய


1958ஆம் ஆண்டு அனைத்து மலரைத் தேர்ந்தெடுக்க ஏழு
மாநில அரசாங்கத்திடமிருந்தும் பூக்கள் பரிந்துரைக்கப்பட்டன.
தேசிய மலருக்காக ஒரு மலரின் அவை செம்பருத்தி, மன�ோரஞ்சிதம்,
பெயரைப் பரிந்துரைக்க விவசாய மல்லிகை, ர�ோஜா, செண்பகம்,
அமைச்சுக் க�ோரியது. தாமரை, மகிழம் ஆகும்.

21ஆம் தி றன்
நூற்றாண்டுக் கற்றல்
ச�ொல் வலைக்குழு
1. நான்கு குழுக்களை உருவாக்குதல். உனக்குத் தேர்ந்தெடுக்கும்
2. 'தேசிய மலராகச் செம்பருத்தியின் வாய்ப்பு வழங்கப்பட்டால்,
அவசியம்' எனும் தலைப்பைக் குழுத்தலைவர் எந்த மலரைத் தேசிய
எழுதுதல். மலராக நீ தேர்ந்தெடுப்பாய்?
3. குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் காரணத்தைக் கூறு.
தம் எண்ணத்தை வெவ்வேறு வண்ணத்
Saiz sebenar
தூவலைக் க�ொண்டு எழுதுதல்; படைத்தல்.
செம்பருத்தியைத் தேசிய மலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான பின்னணியை
164 மாணவர்கள் அறிய வழிகாட்டுதல்.
சிவப்புச் செம்பருத்தி தேர்வு
செய்யப்பட்டதற்கான காரணம்:
• தனித்து நிற்கும் வண்ணமும்
வடிவமும் பெற்றுள்ளது.
நாட்டின் முதல் பிரதமர் துங்கு • நாடு முழுதும் ஒரே பெயரில்
அப்துல் ரஹ்மான் புத்ரா அல் ஹஜ் விளங்குகிறது.
அவர்கள் கவனமாகப் பரிசீலித்த பிறகு • நாட்டில் எல்லா இடங்களிலும்
சிவப்பு செம்பருத்தி மலரைத் தேர்வு எளிதில் கிடைக்கிறது.
செய்தார். 28 ஜூலை 1960ஆம் • ஆண்டு முழுவதும் பூக்கிறது.
ஆண்டு செம்பருத்தி, தேசிய மலராகப் • அக்காலக் கட்டத்தில் பிற
பிரகடனம் செய்யப்பட்டது. நாடுகளுக்குத் தேசிய மலராக
இல்லை.

(மூலம்: Jabatan Penerangan Malaysia, 2019. Malaysia Focus, 62 Years Hari Merdeka,
The Story of Malaysia Independence, Volume 2/2019. Kuala Lumpur: Jabatan Penerangan Malaysia)
தேசிய மலரான செம்பருத்தி நாட்டின் அடையாளமாகத் திகழ மிகவும்
ப�ொருத்தமானது. 1963ஆம் ஆண்டு, சபாவும் சரவாக்கும் மலேசியாவில் இணைந்த
பின்னரும் செம்பருத்தி தேசிய மலராக நிலைநிறுத்தப்பட்டது.
வி ர ை உங்களுக்குத் தெரியுமா?
ந் து ப தி ல ளி
எப்போது செம்பருத்தி
• செம்பருத்தியின் அறிவியல் பெயர்
தேசிய மலராகப் 'ஹைபிஸ்கஸ் ர�ோசா சினென்சிஸ்'
பிரகடனப்படுத்தப்பட்டது? (Hibiscus rosa-sinensis) ஆகும்.
• மலேசியாவில் மட்டும் ஏறக்குறைய 300
வகையான செம்பருத்தி இனமுண்டு.
Saiz sebenar
9.5.1
K9.5.4
165
செந்நிற செம்பருத்தி

செந்நிற செம்பருத்தி தேர்வு செய்யப்பட்டதற்கு


அதன் வண்ணமே காரணமாகும். சிவப்பு வண்ணம்
தன்னூக்கம், (semangat waja), சிறந்த
குடிமக்கள், (warganegara cemerlang) துணிவு
(keberanian) ஆகிய பண்புகளைக் குறிக்கின்றது.

Bunga Raya Merah Bermakna


Bunga raya bunga kebangsaan,
kebangsaan,
Rona merah jadi pilihan,
pilihan,
Penuh simbolik teras kehidupan,
kehidupan,
Jadi panduan untuk kejayaan. தன்னூக்கம்
(மூலம்: Persekutuan Bola Keranjang
Kerusi Roda Malaysia)
Merah bererti
bererti semangat waja,
Tersemat di jiwa rakyat jelata,
jelata,
Warganegara cemerlang juga juga maksudnya,
Mendukung segala aspirasi negara.

Merah membara lambang


lambang keberanian,
Berjiwa kental hadapi cabaran,
cabaran,
Rakyat maju tanpa halangan,
Makmur negara satu haluan.
சிறந்த குடிமக்கள்
(மூலம்: Tvetmara)
நாட்டின் பெயரை உலகளவில் உயர்த்துவதற்காக
மக்களிடையே இருக்க வேண்டிய நெறிகளைக்
சிவப்பு வண்ணத்திலான ச�ொற்கள் குறிக்கின்றன.
ச�ொற்களஞ்சியம்

தன்னூக்கம்: சுய ஊக்கம்


செந்நிறம்: சிவப்பு நிறம்

உன் அளவில் சிவப்பு வண்ணத்தின் துணிவு


முக்கியத்துவத்தைக் குறிப்பிடுக. (மூலம்: Borneo Post, 13 Oktober 2012)
வி ர ை
ந் து ப தி ல ளி
21ஆம் திறன்
நூற்றாண்டுக் கற்றல் செம்பருத்தி மலரின் சிவப்பு
பாடல்வழி கற்றல்
வண்ணத்தின் மூன்று
படைப்பாக்கத்திறன�ோடு இணையராகக் ப�ொருளைப் பட்டியலிடுக.
Saiz sebenar
கவிதையைப் பாடுக.
9.5.2
கவிதையை ஒப்புவிக்க மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
166
நடவடிக்கை செம்பருத்தி காந்த
அம்பெய்தல்
விளையாடும் முறை:
1. இவ்விளையாட்டைக் குழு முறையில்
விளையாட வேண்டும்.
2. முதல் விளையாட்டாளர் வட்டிலில்
அம்பெய்த வேண்டும்.
3. ஒவ்வொரு விளையாட்டாளரும் வட்டில்
நிற அடிப்படையில் ஒரு கேள்வி
அட்டையை எடுத்து கேள்விக்குப்
பதில் கூறுவர். பூடகம்
4. ‘பூடக' வட்டத்தில் அம்பு ஒட்டிக்
க�ொண்டால் விளையாட்டாளர்
ஆசிரியரிடமிருந்து கேள்வியைப்
பெற்றுக் க�ொள்ள வேண்டும்.
5. விளையாட்டாளர் சரியான விடையைக்
கூறிவிட்டால் கூடுதல் புள்ளி
வழங்கப்படும்.
6. விடை பிழையாக இருந்தால், மற்ற
குழு உறுப்பினர்களுக்குப் பதிலளிக்க
அக்கேள்வி க�ொடுக்கப்படும்.
7. அக்கேள்விக்குச் சரியான பதிலளித்த
குழுவிற்கு அரைப் புள்ளி வழங்கப்படும்.
8. அதிகமான புள்ளிகள் பெற்ற குழுவே
வெற்றியாளர்.

எடுத்துக்காட்டுக்
கேள்வி அட்டை டை
எடுத்துக்காட்டு பூடக அட்


செம்பருத்தியைத் தேசி
வர்
மலராகத் தேர்ந்தெடுத்த செம்பருத்தியின் சிவப்பு
யார்? வண்ணத்தின் மூன்று
.
ப�ொருளைக் குறிப்பிடுக

Saiz sebenar
• கேள்வி அட்டைக்கும் பூடகக் கேள்வி அட்டைக்கும் கேள்விகள் தயாரிக்க
வேண்டும். 167
• வட்டிலையும் காந்த அம்பு அட்டையையும் தயாரிக்க வேண்டும்.
செம்பருத்தியும் தேசியக் க�ோட்பாடும்

செம்பருத்தியின் ஐந்து இதழ், ஐந்து தேசியக் க�ோட்பாட்டினைக்


குறிக்கின்றன. தேசியக் க�ோட்பாடு மலேசியர்களிடையே ஒற்றுமை உணர்வை
உருவாக்கும் தேசியச் சித்தாந்தமாகும்.

1
Kepercayaan
kepada Tuhan
இறைவன் மீது
நம்பிக்கை வைத்தல்

5
Kesopanan
dan
Kesusilaan
நன்னடத்தையையும்
ஒழுக்கத்தையும்
பேணுதல்

21ஆம் திறன்
நூற்றாண்டுக் கற்றல் சிந்தனை – இணையர்
1. ஒற்றுமையின் சின்னமாகச் செம்பருத்தியின் முக்கியத்துவம் குறித்த தகவல்களைத்
தனியாளாகத் தேடுதல்.
2. த�ொடர்ந்து, இணையராகக் கண்டுபிடிப்புகளின் தகவல்களைக் கலந்துரையாடுதல்.
3. குழு உறுப்பினர்கள் வெண்திரைக் காட்சியின் மூலம் பதில்களைப் பகிர்ந்து
Saiz sebenar
க�ொள்ளுதல்.

168
2
Kesetiaan
kepada Raja
dan Negara
பேரரசருக்கும்
நாட்டிற்கும்
விசுவாசம்
செலுத்துதல்

3
Keluhuran
Perlembagaan
அரசியலமைப்புச்
சட்டத்தை
உறுதியாகக்
கடைப்பிடித்தல்

4
Kedaulatan இனத்தையும் சமயத்தையும்
Undang-undang ப�ொருட்படுத்தாமல் தேசியக் க�ோட்பாடு
சட்டமுறைப்படி அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கிறது.
ஆட்சி நடத்துதல் செம்பருத்தியின் ஒவ்வொரு இதழும் தேசியக்
க�ோட்பாட்டின் க�ொள்கைகளை எல்லா
நேரத்திலும் தாங்கியிருப்பதை நினைவூட்டுகிறது.

ச�ொற்களஞ்சியம்

சித்தாந்தம்: க�ொள்கை
அல்லது புரிதல்.
வி ர ை
ந் து ப தி ல ளி

தேசியக் க�ோட்பாட்டைக்
குறிப்பிடுக. Saiz sebenar
9.5.3
K9.5.5 செம்பருத்தியின் 5 இதழுக்கும் தேசியக் க�ோட்பாடு ஐந்திற்கும் இடையிலான
த�ொடர்பை விளங்கிக் க�ொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல். 169
பெருமைமிகு சின்னம் செம்பருத்தி
நாட்டின் அடையாளமான செம்பருத்தி அதிகாரப்பூர்வ, அதிகாரப்பூர்வமற்ற
அலுவல்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. செம்பருத்தியின்
பெயரும் படமும் குறியீடாகவும் சின்னமாகவும் அழகுப் ப�ொருளாகவும்
பயன்படுத்தப்படுகின்றன.
மலேசிய மக்களின் வாழ்க்கையில் செம்பருத்தி
குறியீட்டின் பயன்பாடு

சரவாக் மாநிலச் சின்னம்

மாட்சிமை தாங்கிய
மாமன்னரின் முஸ்காட்
H
TO
N
CO

பணம் விளையாட்டு

21ஆம் தி றன் மனவரைபடம்


நூற்றாண்டுக் கற்றல்
1. பல்வேறு மூலங்களிலிருந்து, அதிகாரப்பூர்வ அலுவல்களில் செம்பருத்தி
சின்னங்களைப் பயன்படுத்தும் எடுத்துக்காட்டுகளைக் கண்டறியவும்.
2.
Saiz sebenarப�ொருத்தமான சிந்தனை மனவரைபடத்தில் படைக்கவும்.

170
அஞ்சல் தலை

மலேசியாவிற்கு வருகை
தரும் ஆண்டு

சாலையின் பெயர் பள்ளிச் சின்னம்

செம்பருத்திக் குறியீட்டின் பயன்பாடு நமக்குத் தேசியக் க�ோட்பாட்டைக்


நினைவூட்டுகிறது. மலேசியக் குடிமக்களாகிய நாம் செம்பருத்திக் குறியீட்டைப்
ப�ொறுப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டும்.

வி ர ை
ந் து ப தி ல ளி
செம்பருத்தியின் குறியீடு மலேசிய மக்களின்
வாழ்வில் எவ்வகையில் பங்களிக்கிறது?
Saiz sebenar
9.5.3
K9.5.6 நாட்டின் அதிகாரப்பூர்வ அலுவல்களில் செம்பருத்தியின் பயன்பாட்டினை
மாணவர்கள் விளங்கிக் க�ொள்ள வழிகாட்டுதல். 171
உருவாக்குவ�ோம் செம்பருத்தி தாள்கனத்தி (Paper weight)
வாரீர்
கருவிகளும்
ப�ொருள்களும்
தட்டை வடிவ கல்
‘கிராய�ோன்’ வண்ணம்
நீர் வண்ணம்
தூரிகை
நகப்பூச்சு

தட்டை வடிவிலான கல்லில்


‘கிரய�ோன்’ வண்ணத்தைக்
1 க�ொண்டு செம்பருத்தி
வடிவத்தை வரைய வேண்டும்.

செம்பருத்தியை நீர்
2 வண்ணத்தைக் க�ொண்டு
வண்ணமிட்டுக் காய வைக்க
வேண்டும்.

அதன்மேல் நகப்பூச்சுவைப் பூச


3 வேண்டும். மீண்டும் காய வைக்க
வேண்டும்.

4 தாள்கனத்தி தயார்.

Saiz sebenar
• சில உதாரணங்களைக் காட்டி தாள்கனத்தியைச் செய்வதற்கு மாணவர்களுக்கு
வழிகாட்டுதல்.
172 • செய்து முடித்த தாள்கனத்தியைச் சிற்றுண்டி அல்லது த�ொழில்முனைவர் நாளன்று
விற்பனை செய்தல்.
மீட்டுணர்வோம்
செம்பருத்தியின் சிறப்பு செந்நிற செம்பருத்தி

செம்பருத்தி மலர் தேர்வு செம்பருத்தியின் சிவப்பு


செய்யப்பட்டதற்கான காரணம் : வண்ணத்தின் ப�ொருள்:
• தனித்து நிற்கும் வண்ணமும் வடிவமும் • தன்னூக்கம்
பெற்றுள்ளது. • சிறந்த குடிமக்கள்
• நாடு முழுதும் ஒரே பெயரில் • துணிவு
விளங்குகிறது.
• நாட்டில் எல்லா இடங்களிலும்
எளிதில் கிடைக்கிறது.
• ஆண்டு முழுவதும் பூக்கிறது.
• அக்காலக் கட்டத்தில் பிற
நாடுகளின் தேசிய மலராக இல்லை.

பெருமைமிகு சின்னம்
செம்பருத்தி

நாட்டின் அடையாளமான
செம்பருத்தி அதிகாரப்பூர்வ,
அதிகாரப்பூர்வமற்ற
அலுவல்களில்
பயன்படுத்தப்படுகிறது.

செம்பருத்தி மலரும் தேசியக் க�ோட்பாடும்

செம்பருத்தியின் ஐந்து இதழ், ஐந்து தேசியக் க�ோட்பாட்டினைக்


குறிக்கின்றன:
• இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்.
• பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்.
• அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்.
• சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்.
• நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்.

இந்த அலகு, நேசிக்கும் நாட்டின் அடையாளமாகச் செம்பருத்தி மலர் பற்றிய


புரிதலை அளிக்கின்றது. இந்தப் புரிதலானது மலேசிய மக்களிடையே நாட்டின்
மீது அன்பையும் மரியாதையையும் விதைக்கிறது. Saiz sebenar

173
சிந்தித்துப் பதிலளி
அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்திடுக.
அ. கீழ்க்காணும் குறுக்கெழுத்துப் பயிற்சியை நிறைவு செய்க.

1 கு

8 3 டு
சி க�ோ
4த 5 6 2

ரா

9 க் க பு 10

7 ம் த்

மேலிலிருந்து கீழ்

1. செம்பருத்தி மலேசியர்களின்
ஒற்றுமையின் __________ ஆகும். இடமிருந்து வலம்
2. செம்பருத்தி ஒரே ___________
பெயர் க�ொண்டது. 7. __________________ தேசிய
3. செம்பருத்தியின் படம்___________ மலராகும்.
பயன்படுகிறது. 8. செம்பருத்தியின் இதழ்கள் ஐந்து
4. மலேசிய மக்கள் ______________ ________ பிரதிபலிக்கின்றன.
க�ொண்டிருக்க வேண்டும். 9. மலேசிய __________ தேசிய
5. __________ வண்ணம் துணிவைக்
மலரை மதிக்க வேண்டும்.
குறிக்கிறது.
6. தேசிய மலராக ______________ 10. தேசிய மலருக்கு _________
மாதம் 1960ஆம் ஆண்டு மலர் பரிந்துரைக்கப்பட்டன.
பிரகடனப்படுத்தப்பட்டது.

Saiz sebenar
ஆசிரியர் • மாணவர்களைப் பதிலளிக்கக் க�ோருதல்.
குறிப்பு • இப்பக்கத்தைப் படியெடுத்து வழங்குதல்.
174
ஆ. செம்பருத்தியைத் தேசிய மலராகப் பிரகடனப்படுத்திய நிகழ்வுகளைச்
சரியான நிரல்படி வரிசைப்படுத்துக.

நிகழ்வு நிரல்

28 ஜூலை 1960ஆம் நாள் செம்பருத்தி தேசிய


மலராகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

1958 ஆம் ஆண்டு விவசாய அமைச்சு தேசிய மலர்


தேர்வுக்கு ஒரு மலரைப் பரிந்துரை செய்ய அனைத்து
மாநில அரசிடம் கேட்டுக் க�ொண்டது.

துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்-ஹஜ் சிவப்பு


செம்பருத்தியைத் தேர்வு செய்தார்.

தேசிய மலர் தேர்வுக்கு ஏழு வகை மலர்கள்


பரிந்துரைக்கப்பட்டன.

இ. தேசியக் க�ோட்பாடு ஐந்தனை எழுதுக.

Saiz sebenar
இப்பக்கத்தைப் படியெடுத்து வழங்குதல்.
175
ட்டை நேசிப்போம்
CநINாTA AKAN NEGARA
செம்பருத்தி தேசிய அடையாளமாக்கப்பட்டதற்கு நாம் பெருமிதம் க�ொள்ள
வேண்டும். செம்பருத்தி, இன ஒற்றுமையின் அடையாளம். மலேசியச் சமுதாயம்
ஒன்றுபடும்போது நாட்டின் அமைதியும் நல்லிணக்கமும் உறுதிச் செய்யப்படுகிறது.

(மூலம்: Jabatan Penerangan Malaysia)


தனிநபர்
தன்னூக்கத்தை
அடையாளப்படுத்தும் சமுதாயம்
செம்பருத்தியின் சிவப்பு தன்னூக்கத்தை
வண்ணம் நாட்டின்மீது அமல்படுத்துவதன் வழி
பெருமிதத்தை வளர்க்கும். சமுதாய ஒற்றுமையை
அடைய முடியும்.

நாடு
சமுதாயத்தில் சகிப்புத்தன்மை
நாட்டில் அமைதியையும்
Saiz sebenar வளப்பத்தையும் உருவாக்கும்.

176
துணைநூல் பட்டியல்
A. Samad Ahmad (peny.), 1996. Sulalatus Salatin. Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka.
Abd. Manaf Haji Ahmad, 2009. Kontrak Sosial. Kuala Lumpur: Utusan Publications & Distributors
Sdn. Bhd.
Abdul Aziz Bari, 2006. Majlis Raja-Raja: Kedudukan dan Peranan dalam Perlembagaan Malaysia.
Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka.
Abdul Rahman Haji Ismail dan Azmi Ariffin (ed.), 2016. Sejarah Malaysia: Wacana Kedaulatan
Bangsa, Kenegaraan dan Kemerdekaan. Pulau Pinang: Penerbit Universiti Sains Malaysia.
Abdul Rahman Haji Abdullah, 2016. Gerakan Penjajahan dan Anti Penjajahan Tanah Melayu,
1511–1957. Kuala Lumpur: Karya Bestari.
Abdullah Zakaria Ghazali, 1996. Terengganu Tokoh Pentadbiran dan Perjuangan. Kuala Lumpur:
Persatuan Muzium Malaysia.
Abdullah Zakaria Ghazali, 1997. Pasir Salak: Pusat Gerakan Menentang British di Perak. Ipoh:
Yayasan Perak.
Abdullah Zakaria Ghazali, 1997. Penghulu Dol Said dalam Melaka dan Sejarahnya. Melaka:
Persatuan Sejarah Malaysia Cawangan Melaka.
Andaya, B.W. dan Leonard, Y.A., 1983. Sejarah Malaysia. Kuala Lumpur: Macmillan Publishers.
Arkib Negara Malaysia, 2013. Arkib Warisan Eksklusif. Kuala Lumpur: Arkib Negara Malaysia.
Arkib Negara Malaysia, 2013. Citra Merdeka 1957–2007. Kuala Lumpur: Arkib Negara Malaysia.
Arkib Negara Malaysia, 2017. Persekutuan Tanah Melayu 1948: Asas Negara Merdeka. Kuala
Lumpur: Arkib Negara Malaysia.
Asmah Haji Omar, 2007. “Taksonomi Pertemuan Bahasa: Di Manakah Letaknya Bahasa Rojak?”.
Kertas kerja dalam Seminar Bahasa Rojak: Kecelaruan Penggunaan Bahasa Melayu. Kuala
Lumpur: Dewan Bahasa dan Pustaka, 18–19 Julai 2007.
Asmah Haji Omar, 2015. Dasar Bahasa Kebangsaan: Sejarah Memartabatkan Bahasa
Kebangsaan dan Bahasa Rasmi Malaysia. Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka.
Asmah Haji Omar, 2015. Ensiklopedia Bahasa Melayu. Kuala Lumpur: Dewan Bahasa dan
Pustaka.
Asmah Haji Omar, 2015. Susur Galur Bahasa Melayu. Edisi Kedua. Kuala Lumpur: Dewan Bahasa
dan Pustaka.
Azmah Abdul Manaf, 2001. Sejarah Sosial Masyarakat Malaysia. Kuala Lumpur: Utusan Publications
& Distributors Sdn. Bhd.
Buyong Adil, 1974. Sejarah Sarawak. Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka.
Buyong Adil, 1981. Sejarah Negeri Sembilan. Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka.
Buyong Adil, 1981. Sejarah Sabah. Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka.
Dayu Sansalu, 2017. DSP Ontoros @ Antenom: Pahlawan Terbilang Bangsa Murut. Kota Kinabalu:
Pusaka.
Emerson, R., 1982. Malaysia. Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka.
Gopinath, A., 1993. Sejarah Politik Pahang 1880–1935. Kuala Lumpur: Dewan Bahasa dan
Pustaka.
Hashim Musa, 2005. Pemerkasaan Tamadun Melayu Malaysia: Menghadapi Globalisasi Barat.
Kuala Lumpur: Penerbit Universiti Malaya.
Hassan Ahmad (ed.), 2003. Undang-undang Melaka dan Undang-undang Laut. Kuala Lumpur:
Yayasan Karyawan. Saiz sebenar

177
Hassan Ahmad. “Lidah Terputus, Bahasa dan Bangsa Pupus” dlm. Dewan Bahasa, Jilid 9. Bil. 4,
April 2009.
Ishak Saat, 2011. Radikalisme Melayu Perak 1945–1970. Pulau Pinang: Penerbit Universiti Sains
Malaysia
Ismail Hussein, 1984. Sejarah Pertumbuhan Bahasa Kebangsaan Kita. Edisi Kedua. Kuala Lumpur:
Dewan Bahasa dan Pustaka.
Jabatan Penerangan Malaysia, 2017. Raja Payung Negara Daulat Sepanjang Zaman. Kuala
Lumpur: Jabatan Penerangan Malaysia.
Jabatan Penerangan Malaysia, 2019. Malaysia Focus, 62 Years Hari Merdeka, The Story of Malaysia
Independence, Volume 2/2019. Kuala Lumpur: Jabatan Penerangan Malaysia.
Jabatan Penerangan Malaysia, 2019. Raja dan Rakyat Berpisah Tiada. Kuala Lumpur: Jabatan
Penerangan Malaysia.
Khairil Annas Jusoh, 2014. Dustur Wa Salatin: Perlembagaan dan Para Sultan. Shah Alam:
Yayasan Penyelidikan Transformasi.
Mohd Rosmizi Abd Rahman et al., 2011. Agama-agama di Dunia. Nilai: Universiti Sains Islam
Malaysia.
Muhammad Yusoff Hashim, 2008. Tun Perak dalam Sejarah dan Dinamisme Ketamadunan
Bangsa. Melaka: Institut Kajian Sejarah dan Patriotisme Malaysia.
Muhammad Yusoff Hashim, 1980. “Islam dalam Sejarah Perundangan Melaka di Abad ke-15/16”,
dlm. Khoo Kay Kim (ed.) Islam di Malaysia. Kuala Lumpur: Penerbitan Persatuan Sejarah
Malaysia.
Nik Anuar Nik Mahmud, 1999. Tok Janggut Pejuang atau Penderhaka?. Bangi: Jabatan Sejarah
Universiti Kebangsaan Malaysia.
Nik Hassan Shuhaimi Nik Abdul Rahman. “Sejarah Tulisan Jawi melalui Kajian Arkeologi di Alam
Melayu” dlm. Jurnal Arkeologi Malaysia, Bil. 22, 2009.
Nik Safiah Karim, 2004. Bahasa Melayu Sedekad Lalu. Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka.
Nik Safiah Karim, 2011. Perancangan Bahasa: Ideologi Bahasa Melayu. Kuala Lumpur: Dewan
Bahasa dan Pustaka.
Ramlah Adam, 1994. Dato’ Onn Jaafar Pengasas Kemerdekaan. Kuala Lumpur: Dewan Bahasa
dan Pustaka.
Ramlah Adam, 1999. Sumbanganmu Dikenang. Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka.
Ramlah Adam, 2003. Pejuang-pejuang Kemerdekaan. Melaka: Institut Kajian Sejarah dan
Patriotisme Malaysia.
Sayyidah Nur Najwa, 2014. Bunga Raya, Bunga Kebangsaan, Siri Keunikan Bunga-bungaan.
Kuala Lumpur: Penerbitan D.E.
Sulaiman Zakaria, 1993. Kemerdekaan Persekutuan Tanah Melayu. Kuala Lumpur: Pustaka
Mutiara.
Syed Idrus Syed Ahmad Syed dan R. Santhiram, 1990. Perkembangan Pendidikan di Sarawak.
Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka.
Tan Yao Sua, 2010. Isu Bahasa, Etnik dan Pembinaan Negara Bangsa dalam Sistem Pendidikan
Malaysia. Pulau Pinang: Penerbit Universiti Sains Malaysia.
Wan Norhasniah Wan Husin, 2012. Peradaban dan Perkauman, Hubungan Etnik Melayu–Cina.
Kuala Lumpur: Penerbit Universiti Malaya.

Saiz sebenar மலேசியத் தேசியப் பழஞ்சுவடிக் காப்பக (Arkib Negara Malaysia) பட அட்டைகள்
பட்டியலும் அவ்வப்போதைய இதர தகவல்களும்.
178

You might also like