Professional Documents
Culture Documents
26 01 1983
26 01 1983
சேவாதாரிகளுடன் சந்திப்பு :
சேவாதாரியின் அர்த்தமே பிரத்யக்ஷ பலன் என்ற பழத்தை அருந்துபவர். சேவை செய்தீர்கள்,
குஷியின் அனுபவம் ஆனது என்றால், இந்த பிரத்யக்ஷ பலன் என்ற பழத்தை சாப்பிட்டீர்கள்
இல்லையா! சேவாதாரி ஆவது என்றால் இதுவோ மிகப்பெரிய பாக்கியத்தின் அடையாளம். பல
ஜென்மங்களுக்கு தன்னை இராஜ்ய அதிகாரி ஆக்குவதற்கான சாதனம். எனவே சேவை செய்வது
என்றால் பாக்கிய நட்சத்திரம் மின்ணுவது. அந்த மாதிரி புரிந்து கொண்டு சேவை செய்கிறீர்கள் தான்
இல்லையா. சேவை என்று படுகிறதா அல்லது பிராப்தி என்று படுகிறதா? பெயர் சேவை ஆனால் இது
சேவை செய்வதில்லை, கிடைப்பது எவ்வளவு கிடைக்கிறது? செய்வது ஒன்றும் இல்லை, ஆனால்
கிடைப்பது அனைத்தும். செய்வதில் அனைத்து சுகத்தின் சாதனம் கிடைக்கிறது. ஏதாவது
கஷ்டப்பட்டு செய்ய வேண்டியதில்லை. எவ்வளவு தான் கடின வேலையாக இருந்தாலும்,
வசதிகளும் கூடவே கிடைக்கிறது, எனவே அது கடின வேலையாகப் படுவதில்லை, விளையாட்டு
மாதிரி இருக்கிறது, எனவே சேவாதாரி ஆவது என்றால் பிராப்திகளின் அதிபதி ஆவது. முழு நாளில்
எவ்வளவு பிராப்தி செய்கிறீர்கள்? ஒவ்வொரு நாளின், ஒவ்வொரு மணி நேரத்தின் பிராப்தியை ஒரு
வேளை கணக்கு போட்டுப் பார்த்தீர்கள் என்றால், எண்ணிலடங்காததாக இருக்கும், எனவே
சேவாதாரி ஆவது பாக்கியத்தின் அடையாளம். சேவைக்கான வாய்ப்பு கிடைத்தது என்றால்,
பிராப்தியின் களஞ்சியம் நிரம்பி விட்டது. ஸ்தூல பிராப்தியும் இருக்கிறது. சூட்சம் பிராப்தியும்
இருக்கிறது. எங்கேயாவது ஏதாவது சேவை செய்தீர்கள் என்றால் எவ்வளவு ஸ்தூல சாதனம்
மதுபன்னில் கிடைக்கின்றனவோ, அந்த அளவு மற்ற இடங்களில் கிடைப்பதில்லை, இங்கு
சேவையின் கூடவே முதலிலோ தன்னுடைய ஆத்மாவிற்கு, உடலுக்கு பாலனை கிடைக்கிறது,
இரட்டை பாலனை கிடைக்கிறது. அதனால் சேவை செய்து குஷி ஏற்படுகிறதா அல்லது களைப்பு
ஏற்படுகிறதா? சேவை செய்து கொண்டிருக்கும் பொழுது நான் இரட்டை சேவை செய்து
கொண்டிருக்கிறோனா என்று சோதனை செய்யுங்கள். மனசக்தி மூலமாக வாயு மணடலத்தை
சிரேஷ்டமாக்குவதற்கு மற்றும் காரியங்கள் மூலமாக ஸ்தூல சேவை செய்ய வேண்டும்,. ஒரு
சேவை மட்டும் செய்யக் கூடாது. ஒரே நேரத்தில் இரட்டை சேவாதாரி ஆகி தன்னுடைய இரட்டை
வருமானத்திற்கான வாய்ப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.