வாழ்க்கையை வித்தியாசமாக வாழ முயற்சிப்பவர்களும், மற்றவர்களிடமிருந்து தன் வாழ்க்கையை வித்தியாசப்படுத்தி காண்பிப்பவர்களும், தனக்கும் மற்றவர்களுக்குமான வித்தியாசத்தை உறுதிப்படுத்துபவர்களும், அதனை ஊரறிய செய்பவர்களும் இந்த புளோரின் எனர்ஜி காரர்களே, எவரும் வாழ துணியாத வாழ்க்கையை தேர்ந்தெடுப்பவர்களும், இனம் மொழி, மாநிலம் கடந்து வாழ்க்கையை வாழ்ந்து சாதிப்பவர்களும் இவர்களே. எதையாவது வித்தியாசமாக செய்பவர்களும், (உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என திரு அருட்பாவில் வள்ளலார் அவர்கள் விண்ணப்பித்ததை போல ) தன்னுள் இருக்கும் முழு பலவீனத்தையும் மறைத்து அதனை பலமாக காண்பிப்பதில் கைதேர்ந்தவர்கள் இவர்களே. வாழ்க்கையை முழு ரசனையுடன் வாழ்ந்து அனுபவிப்பவர்கள் இவர்களே. இங்கு இந்த இடத்தில் எந்த வகையான உணவு கிடைக்கும் என்பது முதல் எந்தெந்த நேரங்களில் கிடைக்கும் என்பது வரை, இதை விட அது பரவாயில்லை என வாழ்க்கையின் வித்தியாசங்களை உணர்ந்து, அதற்கேற்றார் போல தன்னை வடிவமைத்து கொள்வோரும் இவர்களே.
வித்தியாசப்படுத்தி காண்பிக்கக் கூடிய ஒரு ஆண்மகனை மட்டுமே,
ஒவ்வொரு பெண்மணியும் ஏற்றுக்கொள்கிறாள், அவனுடன் எளிதில் காதல் வயப்படுகின்றாள், ஏமாருவோரும், ஏமாற்ற படுவோரும் சந்தித்து கொள்வது இங்குதான். சாதாரணமாக வாழ்க்கை வாழபவர்களை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை, இது ஏன் என்றால் A என்று காண்பிப்பவனை விட A 1 என்று காண்பிப்பவனையே ஒரு பெண் விருப்பப்பட்டு பார்க்கிறாள், ஏற்றுக்கொள்கிறாள், அடுத்தது A 2 என்று ஒன்று அவர்கள் வாழ்கையில் வந்தவுடன் A 1 காணாமல் போய்விடுகிறது. ஒன்றோடு ஒன்றை ஒப்பிட்டுப் பார்ப்பதும் ஒப்பிட்டுப் பார்ப்பதில் சிறந்தவைகளை தேர்ந்தெடுப்பதும், புளோரினுடைய அடிப்படை குணம். ஏன் அன்றாட வாழ்க்கையில் புளோரின் இருந்தால்தான், ஒருவர் வாழ்க்கையில் சிரிக்கக் கூட முடியும், பல் வரிசை முழுவதும் தெரிய சுண்டி இழுக்கும் ஒவ்வொரு சிரிப்பின் சொந்தக்காரர்களும் இவர்களே. ஒரு பக்கத்தில் இப்படி என்றால், மறு பக்கத்தில் கடவுள் இல்லை என்று சொல்லக்கூடிய கொள்கைவாதிகளும் இவர்களே, ஏனென்றால் கடவுள் இல்லை,கடவுள் இல்லவே இல்லை என்று தன்னை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தி பார்ப்பதும் இவர்களே. தன்னுடைய தாழ்வு மனப்பான்மையை மறைப்பதற்கும், தனது தாழ்வுமனப்பான்மை வெளியில் தெரிந்து விடக்கூடாது, எள்ளளவேனும் வெளியில் காண்பித்து விடக்கூடாது என்பதற்காக தன்னை வித்தியாசப்படுத்தி வேறு ஒரு கோணத்தில் தன்னை வெளி காட்ட கூடியவர்களும் இவர்களே, புலித்தோல் போர்த்தி கொண்டுவரக்கூடிய முயற்சியும், மற்றவர்களை வீழ்த்த எடுக்கும் நரித்தனமான செயல்பாடுகள், நரித்தனமான சிந்தனைகள்,செயல்கள் மூலம் கவர்ந்திழுப்பது, கவர்ந்து இழுப்பதற்காக உண்மையை மறைப்பது, கவர்ச்சிக்காக உண்மையை புறந்தள்ளுவது இது எல்லாமே ஃப்ளோரின்னு க்கான உலகம், ப்ளோரின்னு க்கான உலகம் என்பது (Reliability) நம்பகத்தன்மை , Reality உண்மை தன்மையும் கொண்டிருக்காது, அது உண்மை தன்மைக்கு அப்பாற்பட்டது, நம்பிக்கைத் தன்மைக்கும் அப்பாற்பட்டது, கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர் ஒரு கோணத்தில் இருப்பார்கள், அவர்கள் இடையே கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் தன்னை வித்தியாசப்படுத்தி காண்பிப்பதற்காக வேறு ஒரு கோணத்தில் இருப்பார்கள். தன்னை வித்தியாசப்படுத்தி காண்பிக்க விஷயங்களில் முழுமையாக தைராய்டு ஹார்மோனுடன், ஃப்ளோரின் நெருங்கிய தொடர்பை உருவாகிக்கொள்ளும், தைராய்டு ஹார்மோன்களின் குறைபாடுகளை நாம் ஃப்ளோரின் கொடுக்காமல் சரிசெய்ய முடியாது. ஏனென்றால் தைராய்டு என்றாலே (Comparison between two things) இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள நுட்பமான ஒற்றுமை, வேற்றுமைகளை அலசி ஆராய்ந்து பார்ப்பது தான் தைராய்டு, இரண்டு பொருட்களை எடை போட்டு சீர்தூக்கிப் பார்ப்பது தான் தைராய்டு, ஃப்ளோரின் காரர்கள் தன்னை வித்தியாசப்படுத்தி காண்பிக்க வேண்டிய முயற்சியில் விதவிதமாக வினோதமான முயற்சியில் ஈடுபடுவார்கள். உண்மையை மறைத்து தன்னை இன்னொரு முகமாக வெளிப்படுத்தும் முயற்சியில் ஃப்ளோரின் உடன் தைராய்டு ஹார்மோன்கள் சேர்ந்து வேலை பார்க்கும். அப்பொழுது ரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தக் கூடிய விஷயமாக இருந்தாலும் சரி, பற்களில் ஏற்படக்கூடிய காரைகளாக இருந்தாலும் சரி, .மூளை நரம்புகளில் ஏற்படக்கூடிய அடைப்புகள் ஆக இருந்தாலும் சரி, அடைப்பின் காரணமாக ஏற்படக்கூடிய அமைப்பின் காரணமாக ரத்தம் போகாமல் இருக்க குருதியூட்ட குறை பாடாகட்டும், குருதி ஆங்காங்கு போய் சேராமல் ஏற்படும் திசு இறப்பாகட்டும் இ வை எல்லாமே ஃப்ளோரினுக்கான வேலை, மனித வாழ்க்கையில் ஃப்ளோரின் என்பது மிகப்பெரிய பிரம்மாண்டம் ஆகும், ஃப்ளோரின் இல்லாமல் நாம் எந்த ஒரு நிலைமையையும் சீர்படுத்துவோ, சீர்தூக்கி பார்க்கவோ முடியாது , சினிமா உலகம் ஆகட்டும், கவர்ச்சியின் உலகம் ஆகட்டும், வாழ தகுதி இல்லாத அண்டர்கிரவுண்ட் வாழ்க்கை ஆகட்டும், வாழ்க்கையில் வெளியில் சொல்ல முடியாத நிகழ்வுகள் ஆகட்டும், இது எல்லாமே ஃப்ளோரின் எனர்ஜியே.
Cal.Floor - ஒரு நுட்பமான பார்வை.
ஹீபர் சல்ப் (Hepar Sulph) பொருத்தவரை அது ஒருசுட்ட கிளிஞ்சல். சுடாத கிளிஞ்சல் கல்கேரியா கார்ப், கல்கேரியா கார்ப்பில் அனுமதி இல்லாமல் ஒருவர் நுழைத்து விட்டால் (intruder -அழையா விருந்தாளி) அது அதனை முத்தாக மாற்றி கொடுத்துவிடுகிறது.நேர் எதிர் அபிஸ் மேலிபிகா, எந்த ஒரு அருவருப்பான, அருவருக்கத்தக்க விஷயத்தையும் அது, என்ன செய்கிறது என்றால், எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமாக மாற்றிக் கொடுக்கிறது. தன்னை எவ்வகையிலும் சாராத அந்த அந்நிய பொருளை, அது என்ன செய்கிறது என்றால், அதனை சூழ்ந்து, அதனுடன் காத்திருந்து, அதனை இன்னும் ஒரு நுட்பமான விலை உயர்ந்த பொருளாக மாற்றுகிறது, அது மாறும் போது கல்கேரியா ஃப்ளோர், மாற்றுவது கல்கேரியா கார்ப், இது இரண்டுக்குமான நுட்பமான வேறுபாடுகளை இப்பொழுது பார்ப்போம், தனக்குள் அந்த இரிடேஷன் பொருள் ஆபத்தை உருவாக்கக் கூடிய ஒரு விஷயம், சிப்பிக்குள் ஒரு வெளி பொருள் நுழைந்தால் சிற்பி இறந்துவிட நேரும், ஆனால் அது என்ன செய்கிறது என்றால் தன்னையும் காத்துக்கொள்கிறது, தனக்குள் அந்நியனாக நுழைந்த ஒரு பொருளையும் மிகச்சிறப்பான பொருளாக மாற்றுகிறது. முதலில் அது அவனை மன்னிக்கிறது, அவனை சமுதாயம் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நபராக மாற்றமும் செய்கிறது, இதை ஒரு உதாரணமாக பார்ப்போம், ஒரு பையன் இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம், அவன் எல்லா அயோக்கியத்தனமும் செய்து சமுதாயத்தில் பேரை கெடுத்து கொள்கின்றான், அவனால் அவனை சார்த்த சமுதாயத்தில் ஆபத்தும் சங்கடமும் வருகிறது. இப்பொழுது கல்கேரியா என்ன செய்கின்றது, என்றால் மிகவும் பொறுமையாக இருந்து அவனை ஊரார் மதிக்கத்தக்க ஆளாக மாற்றம் செய்கிறேன் என மார் தட்டி நின்று அதனை சாதிக்கும். இது கல்கேரியா ஃப்ளோர். அதாவது ஊரார் மதிக்காத ஒருவனை ஊரார் மதிக்கும்படி மாற்றுதல், சமுதாயத்தில் எவராலும் ஏற்றுக் கொள்ளாத ஒருவனை, ஏற்றுக்கொண்டு அவனோடு குடும்பம் நடத்துதல் அவனை மன்னித்தலும் அவனை நேசித்தலும், என்னை விட்டால் அவரை பார்த்துக் கொள்வதற்கு ஆளே கிடையாது நான்தான் அவரை பாத்துகொள்வேன், நான்தான் அவனை காப்பாற்ற, அவனுக்கான எல்லாவற்றையும் நான்தான் செய்து கொடுத்தேன் என்போரும், சமுதாயத்தில் சில பணக்கார வீட்டு பெண்கள் தன்னுடைய தேவைகளுக்காக இந்த போல ஆட்களைத் திருமணம் செய்து கொள்வதும், அவனுக்கு துணிமணி எடுத்துக் கொடுப்பது, அவனை பத்திரமாக பார்த்துக்கொள்வது, சமுதாய மதிக்காத ஒரு ஆணை மிகவும் உன்னத நிலைக்கு மாற்றுவதும்,அதற்காக தன்னை அர்பணிபதும், அவன் வாழ்விலும், வளர்ச்சியிலும் பங்கெடுத்துக் கொள்வதும், அவன் வாழ்வையும் வளர்ச்சியையும் உயர்த்துவது. அருவருப்பான உறவுகளை ஏற்றுக்கொண்டு வாழ்பவர்களும் இவர்கள்தான். இன்னும் தொடரும் ....