Professional Documents
Culture Documents
Ps 1
Ps 1
Ps 1
Temple of Consciousness
28-10-2014
அறிவே தெய்வம்
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள் – பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனில் கேளீரோ?
………………………………………..
………………………………………..
சுத்த அறிவே சிவமென்னு கூறுஞ்
சுருதிகள் கேளீரோ? …..
………………………………………………………………………… என்று கூறுகிறார் மகாகவி
பாரதியார்.
அவருக்கு இளையவரான வேதாத்திரி மகரிஷியும்
“துணிந்துரைப்போம் அறிவே தெய்வம்” என்கிறார். அறிவைத்
தெய்வம் என்று கூறுவதோடு மட்டுமல்லாது எவ்வாறு அறிவே
தெய்வமாகின்றது என்று கருத்தியலாகவும்(theory),
பயிற்சியாகவும்(practical) விளக்குகிறார். இப்பயிற்சிக்கு மனவளக்கலை
என பெயரிடப்பட்டுள்ளது. மனவளக்கலை என்கின்ற அகவழிபாட்டுத்
தெய்வீகப் பயிற்சியினை நடத்துவதற்கான புனித இடம்
தேவைப்பட்டது.அப்போது, இயற்கை, வேதாத்திரி மகரிஷி அவர்களின்
வாயிலாக, உலகிலேயே முதல் அறிவுத் திருக்கோயிலை ஆழியாரில்
ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இப்போது தழிழ் நாட்டில்
ஊரெங்கும், மற்ற இடங்களிலும் அறிவுத் திருக்கோயில்கள். உருவாகி
வருகின்றன. அரிதாக இருந்து வந்த “தவம் இயற்றுதலை”
எல்லோருக்கும் கிடைக்குமாறு கருணை புரிந்துள்ளது இயற்கை. நாம்
இப்போது எவ்வாறு அறிவு தெய்வம் எனப்படுகின்ற விளக்கத்திற்குள்
செல்லவில்லை. அதற்கான விளக்கத்தை வேறொரு தலைப்பில்
பிறிதொரு சமயத்தில் பார்ப்போம். தற்போதைக்கு அறிவை தெய்வம் என
அறிவை அறிந்த அறிஞர்கள் சொல்வதனை ஏற்றுக் கொண்டு அறிவுத்
திருக்கோயில் பற்றிய இன்றையச் சிந்தனையைத் தொடா்வோம்.
முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது, அறிவுத் திருக்கோயிலில் சிலை
கிடையாது. காரணம் அரூபமான அறிவுதான் தெய்வம் என்பதால்,
அறிவுத் திருக்கோயிலில் சிலை கிடையாது. பின்னர் எதனை
வணங்குவர் அறிவுத்திருக்கோயிலில்? அறிவை வணங்குவர். இறை
வழிபாடு இரண்டு வகைகளில் மேற்கொள்ளப்படலாம். ஒன்று புற
வழிபாடு. மற்றொன்று அகவழிபாடு. புறம் என்றால் வெளியே என்று
பொருள். அகம் என்றால் உள்ளே என்று பொருள். புறவழிபாட்டில்
சிலையை வெளியே வைத்து வணக்கம் செய்யப்படுகின்றது. எனவே
இதர கோயில்களில் சிலைகள் உள்ளன. மேலும் புறவழிபாட்டில்
இறைவழிபாடு புலன்கள் வழியாக நடத்தப்படுகின்றது.