Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 9

சப்தமாதர் அல்லது சப்த கன்னியர் என்றழைக்கப்படும்

அன்னையர் எழுவர், நமது தாய்


தெய்வ வழிபாட்டின் முன்னோடித்
தெய்வங்களாவர்.

இந்தியா முழுமையிலும் வணங்கப்பட்டு வந்த இத்தாய் தெய்வங்கள்


ஸ்கந்தனுடனும்,
சிவபெருமானுடனும் தொடர்புடையவர்களாக
சித்தரிக்கப்படுகின்றனர்.
மு.பொ.ஆ. 30 முதல் வ. 375 வரை
இன்றைய ஆப்கானிஸ்தான் உள்பட வடஇந்தியப் பகுதிகளை
ஆட்சி புரிந்த குஷானர்கள் காலத்தில், தாய் தெய்வங்களைச்
சிற்பங்களாகச் செதுக்கி வணங்கி வந்தனர். மத்தியப் பிரதேசத்தில்,
குடவரைக்குள்
சப்தமாதர்கள் உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

அன்னையர் எழுவரும் பெண், தெய்வங்களும் போர்த் தெய்வங்களுமாகவே


சித்தரிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், கொடிய அரக்கர்களிடம் இருந்து
காப்பதற்காகப் பிறப்பெடுத்தவர்கள். இவர்களது கைகளில் காணப்படும்
ஆயுதங்களைக் கொண்டே இவர்களைப் போர்க்கடவுளர் எனக் கருதி,
அவர்களின் வன்மையில் தங்களைக் காக்க வேண்டும் என வழிபட்டனர்.
அன்னையர் எழுவரையும் தெய்வங்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பாகவே
கிராமங்களில் கருதினர். சில இடங்களில் இவர்களுடன், விநாயகரையும் .
வீரபத்திரரையும்,
இணைத்து, அவர்களுக்குக் காவல் தெய்வங்களாக அமைத்துச்
சிறப்பித்துள்ளனர்.
சில இடங்களில் வீரபத்திரர் மட்டுமே இடம்பெற்றுள்ளார்
என்பதையும் ஆங்காங்கே காணப்படும் சிற்பத் தொகுப்புகளிலிருந்து
அறியமுடிகிறது.
தமிழகத்து சமயச் சிந்தனைகளை மக்களுக்கு எடுத்துக்காட்டியது சங்க
இலக்கியங்களும், பின்னர் இயற்றப்பட்ட இரட்டைக்காப்பியங்களாகத்
திகழும் சிலப்பதிகாரமும் மணிமேகலை என்றால் அது மிகையாகாது. அந்த
வகையில், அன்னையர் எழுவரைப் பற்றிய சில தகவல்களை சிலப்பதிகாரம்
முதன்முதலாக வெளிப்படுத்துகிறது. அன்னையர் எழுவரில் இளைய பெண்
தெய்வம் காளி என்பதை சிலப்பதிகாரத்தில் வழக்குரைக் காதையில்
தெளிவுபட கூறப்பட்டுள்ளது."

ஆடல்கண்டருளிய இறைவனை
அணங்கு யாரென்பதை சிலப்பதிகாரத்துக்குச் சற்று பின்வந்த அப்பரும்
சம்பந்தரும்கூட, தங்கள்
பதிகங்களில் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர்.

சிலம்பு கூறும் அன்னையர் எழுவர்

சிலம்பில், 'அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப் பிடர்த்தலைப் பீடம்


ஏறிய மடக்கொடி வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை' எனக்
கொற்றவையைக் கூறிய பிறகே காளியைப் பற்றிய செய்திகள்
குறிப்பிடப்படுகின்றன. இது, கொற்றவையான துர்க்கைக்கு அடுத்த
நிலையிலே காளியைப் பற்றிய இடம்பெற்றிருந்த செய்திகள் நிலையைக்
காட்டுகிறது. இது, கொற்றவை துர்க்கைக்கு அடுத்துதான் அன்னையர்
வழிபாடு வழக்கத்துக்கு வந்தது என்று உய்த்துணர வழிவகுக்கிறது.

அறுவர்க்கு இளையநங்கை,

இறைவனை ஆடல்கண்டருளிய

அணங்கு, சூரரைக் கானகம் உகந்த

காளி, தாருகன் பேருரம் கிழித்த

பெண் என்று புதியதொரு பெண்


தெய்வத்தையும்,

அதன் வழி

அன்னையர் எழுவர் வழிபாட்டின்

தொடக்கத்தையும்

வழக்குரைக் காதை

எடுத்துரைக்கிறது.

"அறுவர்க்கிளைய இறைவனை நங்கை

ஆடல் கணடருளிய அணங்கு சூருடைக்

காணகம் உகந்த காளி, தாருகன்

பேரூரங் கிழித்த பெண்".

அறுவர்க்கு

இளையநங்கை என்பதால், அன்னையர் எழுவரில் இளைய பெண் தெய்வம்


காளி என்பது எளிதில் புலப்படுகிறது.

அன்னையர் எழுவர் என்பது காளியையும் உள்ளடக்கி, காளியை அறுவர்க்கும்


இளையவர் எனக் குறிப்பிடும் சிலம்பின் கருத்து, தேவார காலத்தில்
அன்னையர் எழுவராக மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, பிராமி, வாராகி,
இந்திராணி ஆகிய அறுவருடன் காளியையும் இணைப்பதிலிருந்தும் ஏழாவது
பெறமுடிகிறது. இவர்கள், சைவ சமய மக்களால் போற்றப்பட்ட ஆண்
தெய்வங்களின் துணைவிகளாகவும்

பின்னர்
கருதப்பட்டனர். ஆனால், காளி

மட்டும்

இறைவியாக

ஏற்றுக்கொள்ளப்பட்ட தனி பெண்

தெய்வமாகும். மற்ற அறுவரும்,

அரக்கர்களை

அழிக்கத்

தோற்றுவிக்கப்பட்டவர்கள் ஆவர்.

காளி

துஷ்டர்களை

போர்க்கடவுளாகவும்,

அழிக்கக்கூடிய

சக்தியாகவும் உருவாக்கப்பட்டவள்.

அப்பரும் சம்பந்தரும் தங்கள்

பதிகங்களில் பல இடங்களில்

காளியைக் குறிப்பிட்டுள்ளனர்.

"ஆடினார் பெருங் கூத்து காளி

"காளிமுன் காணக் கானிடை நடனஞ் செய்த


என்று தேவாரப்பதிகங்களில் காண முடிகிறது
தக்கையாக்கப்பரணியில் அன்னையர் எழுவர்

சோழப் பேரரசின் அவையை அலங்கரித்த கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்,


தாய் வழிபாட்டை தக்கையாக்கப்பரணியில் தெய்வ கீழ்க்கண்டவாறு
பாடியுள்ளார்.

"எறிபடைவிசையை யிசைகெழு தெய்வமகளிர்

எழுவரும் வௌ;ளை முரளி யினிதுறை செல்வமகளும்


மறிகடல் வையமகளு மலா;கெழு செய்யதிருவும்

வரவிரு மெல்ல வரகன் மணியணி பள்ளியருகே” என்றும்,

மேலும், சமய இலக்கியங்களில் தன்னிகரில்லா சிறப்பைக் கொண்ட


திருமூலர் பாடிய திருமந்திரத்தில், கன்னியர் தெய்வங்களைப் பற்றி
குறிப்பிடும்பொழுது, என்பதை, எண்மர்

"பூரித்த பூவிதழ் எட்டினுக் குள்ளேயோர்;

ஆரியத் தாளுண்டங்கு கன்னியர் என

பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும்

சாரித்துச் சக்தியைக் தாங்கள் கண்டாரே" என்று குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, எழுவர், எண்மர் என்ற கருத்து காளியையும், சாமுண்டாவையும்


உள்ளடக்கிய நிலையா, அல்லது சாமுண்டாதான் காளியாகி மறுபிறவியாக
நிற்கின்றாரா என்பதும் உற்று நோக்கத்தக்கதாகும். சாமுண்டா பின்னர்
இணைக்கப்பட்டதாகவும் கருத்துகள் உண்டு. காளியே சாமுண்டாவாகக்
கருதும்படி உருவ அமைதியிலும், செயலிலும் கையில் வைத்திருக்கும்
ஆயுதங்களிலும் ஒற்றுமை காணப்படுகிறது.
எனவே, சிவனோடு பார்வதி நாட்டியமாடி அமர்ந்த நிலையாகக்
காட்டும்போது, அவள் காளியாக உருவெடுத்து மக்களுக்கு நன்மை
பயத்தலால், அவளைத் தனித் தெய்வமாகப் கிராம மக்கள் போற்றி வழிபட
ஆரம்பித்தனர் என வரலாற்றுப்போக்கு கொண்டு கருதலாம். பின்னர்
அவளுக்கென்று தனிக்கோயில்களும் அமைத்தனர் என்பதும்
குறிப்பிடத்தக்கது.

சைவ சமயத்தில் அன்னையர் எழுவர்

சைவ சமயத்தில் சிறப்புற்றிருக்கக்கூடிய பெண் தெய்வங்கள், தங்களின்


தனிப்பட்ட திறமைகளையும், உண்மையான தோற்றத்தையும், தேவையான
சமயங்களில் வெளிப்படுத்தினர். சிவனின் துணைவியரான பார்வதி, தனது
தனிப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்த அவதாரம் எடுத்துள்ளாள். இவரைப்
போன்றே, இவருடன் இருக்கும், அதாவது மக்களால் வணங்கப்பட்ட பெண்
தெய்வங்களும் தங்கள் சொந்த வடிவிலிருந்து தாங்கள் மேற்கொள்ளும்
கொள்கைக்கு ஏற்ப வடிவை மாற்றி அமைத்துக்கொண்டு செயல்பட்டுள்ளனர்
என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவர்கள் இன்றியமையாத பெண்
தெய்வங்களாக, கிராமங்களிலும், பெருங்கோயில்களிலும் தற்பொழுது வலம்
வந்துகொண்டுள்ளனர்.

கன்னிமார் சாமிகள்

கிராமங்களில், இத்தெய்வங்களின் தொகுப்பை கன்னிமார் சாமிகள் என்றே


அழைத்து வழிபாடு செய்கின்றனர். கன்னிமார்க என்பது நாட்டார் வழக்காக
இன்றும் தமிழகத்தின் தென்பகுதிகளில் நிலவி வருவதைக் காணலாம்.

இதுபோன்றே, பெண் தெய்வங்கள் என்று குறிப்பிடப்படும், குறிப்பாக


ஜேஸ்டா, ரௌத்திரி, காளி, காளவிக்ராணி, பாலவிக்ராணி, பாலபிரமாதானி,
சர்வபூததாமணி மற்றும் மனோன்மணி ஆகியோர், சிவனின்
மறுவடிவங்களாகவே அமையப்பெற்றவர் எனலாம். இவர்கள் இறுதியாக
பெண் தெய்வ அமைப்பைப் பெற்று, தங்களது கருத்துகளைச்
செயல்படவைக்கும் திறனையே வெளிப்படுத்துகின்றனர். சைவப் பெண்
தெய்வங்களின் ஒரு தொகுப்பை கன்னிமார் எழுவர் என்றும் குறிப்பர்.
அவர்கள் பிரம்மி மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, மகேந்திரி,
மற்றும் சாமுண்டா என குறிப்பிடுவர். சில இடங்களில் மகாலட்சுமியையும்
இணை எண்மராக பெண் தெய்வங்களைச் சித்தரித்துள்ளதையும்
காணமுடிகிறது.

எண்மர் தாய்மார்கள்

சாமுண்டா என்பது நரசிம்மி உருவமாகும். இதன் அமைப்பு, மனித


உருவமும், சிம்ம முகத்தையும் கொண்ட நரசிம்மக் கடவுள் அமைப்பு ஆகும்.
சில இடங்களில், நரசிம்மிக்குப் பதிலாக சாமுண்டாவை வைத்து
வழிபடுவதும் வழக்கமாக இருந்துள்ளது. சாமுண்டா என்பது நரசிம்மி
உருவம் எடுத்துக்கொள்வதை விளங்கிக்கொள்ள நன்கு முடிகிறது.
மகாலட்சுமி இரண்டு கரங்களுடன் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டிருப்பாள்.
கைகளில் கபாலமும், தாமரை மலரையும் ஏந்தியிருப்பாள். இவளைக்
காளியாகவும் சித்தரிப்பர். மாகாளி தனிச்சிறப்பு பெற்ற வடிவமாகும்.

சில்பசங்கிரகம் கூறும் கன்னியர் எழுவர்

சில்பசங்கிரகம் (Silpasangraha) கூறும்பொழுது, பிரம்மா, மகேஸ்வர் குமரன்,


விஷ்ணு இவர்கள் செயல்படும் சக்திகளாகவே பிரம்மி, வைஷ்ணவி,
கௌமாரி, மகேஸ்வரி ஆகிய பெண் தெய்வங்கள் எனக் குறிப்பிடுகிறது.
எனவேதான், இப்பெண் தெய்வங்கள் அனைத்தும் அவரவர் துணைவர்களின்
வாகனங்களையும், ஆயுதங்களையும் பயன்படுத்தி, தங்களது சக்தியை
வெளிப்படுத்தியுள்ளனர் எனவும் கருதப்படுவர்.

சில்பசங்கிரகம் கூறும்பொழுது, வராகி எமனில் இருந்து உருவாக்கப்பட்டவர்.


எமன் இறப்புக்கான கடவுளாக சைவ சமயத்தில் போற்றப்படுபவர். வராகி,
எருமை வாகனத்தில் பயணித்துக்கொண்டு, மண் ஓட்டில் ரத்தத்தைக்
குடிப்பவள். மேலும், தண்டநாத வராகி, சுவப்னவராகி, சுத்தவராகி என
அவரின் பல தோற்றங்களை சில்பசங்கிரகம் வெளிப்படுத்துகிறது.
பெண்தெய்வங்கள், அவ்வப்போது நடக்கும் இன்னல்களைப் போக்கவும்,
மக்கள் துயர் நீங்கி நல்வாழ்வு அமையவும் இதுபோன்ற தோற்றங்களைப்
பெற்று, பல தீய செயல்களையும், தீய சக்திகளையும் அழித்து பல
நற்காரியங்கள் நடைபெற வழிவகுத்துத் தந்துள்ளனர்.

மகேஸ்வரி (பைரவி) தனது வாகனமாக பசுமாட்டையும், ஐந்து தலைகளும்,


மூன்று கண்களும் பத்து கரங்களுடனும் தலையில் பிறைச் சந்திரனுடனும்
காட்சியளிப்பவள். பிரம்மி, நான்கு முகங்களும். ஆறு கரங்களும்,
அன்னத்தை வாகனமாகவும் கொண்டவள். கௌமாரி ஆறு முகங்களையும்,
பன்னிரண்டு கரங்களையும் கொண்டு மயிலை தனது வாகனமாகவும்
கொண்டவளாவாள். வைஷ்ணவி கருட வாகனத்தில் வலம் வருபவள்.
வைஷ்ணவி நீலவண்ணனின் நீல நிறத்தைக் கொண்டவள். மலர்களைத்
தொகுத்து மாலையாக அணிந்தவள். அம்மாலையை வனமாலை என்று
குறிப்பிடுவர். வராகி பெண் பன்றி முகத்தையும், கருப்பு நிறத்தையும் பருத்த
வயிரும், எருமை வாகனத்தையும் கொண்டவள்.
இவளே வராகியம்மன் என்று அழைக்கப்படுபவள்.

மகேந்திரி என்று அழைக்கப்படும் இந்திராணி ஆயிரம் கண்ணுடையாள்.


இந்திரனுக்கும் ஆயிரம் கண்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திரனுக்குரிய வாகனமான யானை மீது வலம் வருகின்றாள். சாமுண்டா,
தனது விருப்பத்துக்கு ஏற்ப தன் உடலமைப்பை மாற்றிக்கொள்ளும் திறன்
பெற்றவள். கருப்பு நிறத்தவள். வெளியே நீட்டிக்கொண்டுள்ள பற்களும்.
நீண்ட நாக்கு அமைப்பையும் கொண்டவள். சிவந்த கண்களும்,
வெளித்தள்ளிய வயிறும் அமைந்தவள். அணிகலனாக நாகத்தை
அணிந்தவள். மண்டை ஓட்டையும் மாலையாக அணிந்தவள். இவளது பத்து
கரங்களும், ஆயுதங்கள் தாங்கி அபய, வரத முத்திரையில் காட்சியளிப்பவள்.
கேடயம், வில், ஈட்டி, அம்பு, உடுக்கை, வட்டு, கத்தி, அரிவாள்,
போன்றவற்றை தனது பத்து கரங்களிலும் கொண்டவள். அன்னையர்
எழுவருக்கும் பாதுகாவலராக வீரபத்திரரும் விநாயகரும் வீற்றிருப்பர்.
இவர்கள் இருவரையும் சிவனின் மறுவுருவமாகவே கருதுவர். அன்னையர்
எழுவர் சிற்பங்களுக்கு முன், தாமரை மலர் மீது அமர்ந்த நிலையில்,
ஆலமரத்தின் அடியில் சிவன் காட்டப்படுவர்.

You might also like