Kanini

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 25

கணினித் தமிழ் வளர்ச்சி

மனித மூளையின் வியக்கத் தக்க படைப்புகள்தான் மனிதரின் இயற்கைமொழிகள்.

ஒரு குழந்தைக்கு அதனுடைய வளர்ச்சியில், நடக்கும்திறன் எவ்வாறு தானாகவே

வளர்ச்சியடைகிறதோ, அவ்வாறே மொழித்திறனும் வளர்ச்சியடைகிறது.

தேவையான மூளை வளர்ச்சியும் செவித்திறனும் உடைய எந்த ஒரு குழந்தையும் தான்

பிறந்து வளர்கிற சமூகத்தின் மொழியை தாய்மொழியை- குறைந்த அனுபவத்தில்

குறைந்த காலத்தில் பெற்றுக்கொள்கிறது என்பது நோம் சாம்ஸ்கியின் கருத்து.

மொழித் தொழில்நுட்பம்

மனித மூளையின் சிறப்புத் திறனான மொழித்திறனை வளர்த்தெடுக்க மனித


சமுதாயம் தொடர்ந்து முயன்றுவந்துள்ளது. அதன் ஒரு பயனே

இயற்கைமொழிகளுக்கான வரிவடிவங்கள். மொழியின் எழுத்து வடிவம் என்பது

மனிதன் உருவாக்கிய முதல் மொழித்தொழில்நுட்பமாகும். தனது கருத்துகளைக் காலம்

கடந்து, இடம் கடந்து நிலைத்து வைக்க மனித சமுதாயம் உருவாக்கிய தொழில்நுட்பமே

எழுத்து மொழி. பானைகள், பாறைகள், கற்கள், ஓலைச்சுவடிகள் என்று பல

ஊடகங்களில் மனிதன் தனது கருத்துகளைப் பொதிந்துவைக்கத் தொடங்கினான்.

அதன் இன்றைய வளர்ச்சியே , தட்டச்சு , அச்சு மற்றும் கணினி எழுத்துருக்கள் ஆகும்.

மின்தமிழ்

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர், கணினியில் தமிழை உள்ளீடு செய்வதற்கே வசதி

கிடையாது. தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகைகள் உருவாக்கப்படவில்லை. முதலில்

தமிழை உள்ளீடு செய்வதற்கு வசதிகள் உருவாக்கப்பட்டால்தானே பிற பயன்பாடுகளை


எண்ணிப் பார்க்க முடியும். பின்னர், மெல்லமெல்லத் தமிழ் உரையை ரோமன்

எழுத்துகளில் உள்ளீடு செய்து, அதைத் தமிழ் எழுத்துருக்களில் மாற்றும் வசதி

உருவாக்கப்பட்டது. ஆதமி போன்ற மென்பொருட்கள் உருவாக்கப்பட்டன. தமிழ்

எழுத்துகளுக்கான எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டன.

அடுத்தகட்ட வளர்ச்சியாக , தமிழ் விசைப்பலகைகள் உருவாக்கப்பட்டன. இதன்

பயனாக, நேரடியாகவே தமிழைக் கணினியில் உள்ளீடு செய்யும் வசதி ஏற்பட்டது.

வோர்ட், வோர்டுபெர்ஃபெக்ட், வோர்டு ஸ்டார், பேஜ்மேக்கர், வெஞ்சுரா போன்ற

மென்பொருட்களில் தமிழைப் பயன்படுத்தும் வாய்ப்பு வளர்ச்சி ஏற்பட்டது.

இருப்பினும், தமிழ் எழுத்துருக்களைக் கணினியில் குறியேற்றம் செய்வதில் பல

சிக்கல்கள் நீடித்தன. தமிழ் எழுத்துருக்களுக்கான குறியேற்றத்தில் தரப்படுத்தல்

இல்லாமல் இருந்தது. ஒரு குறிப்பிட்ட தமிழ்மென்பொருளைக் கொண்டு தட்டச்சு

செய்யப்பட்ட ஒரு தமிழ் ஆவணத்தை மற்றொரு தமிழ் மென்பொருளைக்கொண்டு

வாசிக்கவோ, பதிப்பிக்கவோ இயலாத ஒரு நிலை நீடித்தது. இதற்கு அஸ்கி (ASCII)

என்ற குறியேற்ற முறையும் ஒரு தடையாக அமைந்தது. தமிழ் விசைப்பலகைகளும்

தரப்படுத்தப்படவில்லை.

இருப்பினும் தமிழில் இணையதளங்கள், வலைப்பூக்கள் தோன்ற ஆரம்பித்தன. அச்சில்

இடம்பெற்ற அனைத்தும் கணினியிலும் இடம்பெற்றன. இந்த நூற்றாண்டின்

தொடக்கத்தில் ஒருங்குறிக் குறியேற்றம் (யூனிகோட் என்கோடிங்) பன்னாட்டுக் கணினி

நிறுவனங்களின் வணிக முயற்சிகளினால் அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழுக்குத்


தனியே ஒருங்குறிக் குறியேற்ற எண்கள் வழங்கப்பட்டன. இதன் பயனாக, தற்போது

மின்னணுச் சாதனங்களில் தமிழை உள்ளீடு செய்வதற்கான தடை எதுவும் கிடையாது.

கைபேசியில்கூட தமிழைத் தற்போது உள்ளீடு செய்து, அனைத்துப் பயன்பாடுகளையும்

மேற்கொள்ளலாம்.

அடுத்த கட்ட வளர்ச்சி

கல்வெட்டு, ஓலைச்சுவடி, தட்டச்சு, அச்சுப்பொறி, கணினி ஆகியவற்றில் இதுவரை நாம்

பார்த்த தமிழ் மொழித் தொழில்நுட்பமானது, தமிழ் உரை அல்லது பனுவலை அவற்றில்

பொதிந்து அல்லது பதிந்து வைக்கப் பயன்பட்ட தொழில்நுட்பமே; காலம் கடந்து, இடம்

கடந்து, தமிழ்ப் பனுவல்களைச் சேமித்துவைக்கப் பயன்பட்ட மொழித்தொழில்நுட்பமே.

கல்வெட்டாலோ ஓலைச்சுவடியாலோ அச்சாலோ கணினியாலோ தங்கள்வழி அல்லது


தங்கள்மீது பதியப்பட்ட தமிழ்ப் பனுவலை அல்லது உரையைப் புரிந்து கொள்ள முடியாது.

பதியப்பட்டவற்றைப் பாதுகாப்பாகச் சேமித்து மட்டுமே வைக்க முடியும்.

இந்த வகை மொழித்தொழில்நுட்பத்தைத் தன்முனைப்பில்லா / செயலூக்கமில்லா

மொழித்தொழில்நுட்பம் என்றழைக்கலாம். இத்தொழில்நுட்பமானது ஒரு உருவத்தைச்

சிலையில் செதுக்கிவைப்பது போன்றதாகும் இது. உருவம் பொறிக்கப்பட்டுள்ள

அசையாச் சிலையானது தன்னைப் புரிந்துகொள்ளாது. நாம் சொல்வதைப்

புரிந்துகொண்டும் செயல்படாது.

கணினியானது தன்மீது பதியப்பட்ட தமிழ் உரையை நாம் புரிந்துகொள்வதுபோல புரிந்து

கொண்டால், புரிந்துகொண்டு செயல்பட்டால், அதுவே தன்முனைப்புள்ள அல்லது

செயலூக்கமுள்ள மொழித்தொழில்நுட்பம். இது ஒரு இயந்திர மனிதன் போன்றது.

இயந்திர மனிதன் ஏதோ ஒரு வகையில் நாம் சொல்வதைப் புரிந்துகொண்டு

செயல்படுகிறான் அல்லவா, அதுபோல நாம் சொல்வதைப் புரிந்துகொண்டு செயல்படும்

மொழித்தொழில்நுட்பமே இது. இந்த வகை மொழித்தொழில்நுட்பமும் தற்போது

ஆங்கிலம், ஜெர்மன் போன்ற மேலைநாட்டு மொழிகளுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

இயந்திர மொழிபெயர்ப்பு...

எம் எஸ் வோர்டு போன்ற ஆங்கிலச் சொல்லாளர் மென்பொருட்களைக்கொண்டு

ஆங்கில உரையைத் தட்டச்சு செய்யும்போது, எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகள்

இருந்தால் உடனே அவை கண்டறியப்பட்டு, சிவப்புக் கோடு இடப்பட்டுக்


காட்டப்படுகின்றன. நாம் உடனே அவற்றைத் திருத்திக்கொள்ள அந்த மென்பொருட்கள்

சரியான சொற்களை அளிப்பதன்மூலம் உதவியும் செய்கின்றன. அதாவது, மொழி

ஆசிரியர் செயல்படுவதுபோன்று இந்த மென்பொருள்களும் செயல்படுகின்றன.

ஆசிரியர் பெற்றிருக்கும் மொழி அறிவை இந்த மென்பொருட்களும் பெற்றிருப்பதால்,

இவ்வாறு செய்ய முடிகிறது. தானியங்கி சொற்பிழைத் திருத்தி, இலக்கணப்பிழைத்

திருத்திகள் இவற்றில் இடம்பெற்றுள்ளன.

டிராகன் போன்ற சில மென்பொருட்கள் நாம் ஆங்கிலத்தில் கணினிமுன் பேசினாலே

போதும், அவையே கணினியில் தட்டச்சு செய்துவிடுகின்றன. இதைப் பேச்சு எழுத்து

மாற்றி என்று அழைக்கின்றனர். இதுபோன்று, கணினியில் உள்ளதை அப்படியே நமக்கு

வாசித்துக் காட்டும் மென்பொருட்களும் உள்ளன. இவற்றை எழுத்து பேச்சு மாற்றி என்று

அழைக்கின்றனர். இதையும் தாண்டி, சில பக்கங்களைக் கணினியில் உள்ளீடு


செய்தால், அவற்றில் உள்ள கருத்துகளைப் புரிந்துகொண்டு, நமக்குக் கூறும்

மென்பொருட்களும் இருக்கின்றன. இதைப் பனுவல் சுருக்கக் கருத்துருவாக்கம் என்று

அழைக்கின்றனர். தற்போது ஒரு மொழியில் உள்ள உரை அல்லது பனுவலை மற்றொரு

மொழியில் மொழிபெயர்த்துத் தரும் மென்பொருளை உருவாக்குவதற்கான முயற்சியும்

நடைபெற்றுவருகின்றன.

இவையெல்லாம் மேலைநாட்டு மொழிகளுக்கு எவ்வாறு சாத்தியமாகியுள்ளன?

அம்மொழிகளின் சொற்களஞ்சிய அறிவும், இலக்கண அறிவும் கணினிக்கு நிரல்களாக

உருவாக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, நமது மூளை எவ்வாறு மொழியைப்

புரிந்துகொண்டு செயல்படுகிறதோ, அவ்வாறே கணினியும் புரிந்துகொண்டு

செயல்படுகிறது. நமது மூளைக்குள் நமது மொழியின் அறிவு இருப்பதால்தான்

மூளைக்கு நாம் பேசுவதும், எழுதுவதும் புரிகிறது; நாம் நினைக்கும் கருத்துகளை

மொழியில் வெளிப்படுத்தவும் முடிகிறது. இந்த மொழியறிவு கணினிக்கு நிரல்களாகக்

கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் மேற்சொன்ன மொழித்தொழில்நுட்பம்

வளரும்.

தமிழில் முடியுமா?

மேற்கூறிய மொழித்தொழில்நுட்பம் எல்லாம் தமிழ்மொழிக்கும் செயல்படுத்தப்பட

வேண்டும். அப்போதுதான் தமிழின் பயன்பாட்டு எல்லை விரிவடையும். தமிழ்மொழி

அறிவைக் கணினிக்குப் புரியக்கூடிய வகையில் கணித முறையில்- அளித்தால்தான்

இப்பணி வெற்றியடைய முடியும். அதற்கான துறையாகக் கணினிமொழியியல் மற்றும்


மொழித்தொழில்நுட்பத்துறை என்ற ஒரு துறை இன்று வளர்ந்துவருகிறது. அத்துறை

அறிவின் அடிப்படையில் தமிழ்மொழி ஆய்வு நடைபெற்றால்தான் மின்தமிழ்

கணினித்தமிழ் வளர்ச்சியடையும்.

இலக்கண நூல்களும் இன்றைய மொழியி யல் ஆய்வுகளும் மனித மூளைக்காக

உருவாக்கப்பட்டவை. அவற்றை அப்படியே கணினிக்குக் கொடுத்தால், கணினியால்

புரிந்துகொள்ள முடியாது. கணினியில் அமைந்துள்ள மின்னணுச் சில்லுகளுக்குப்

புரியக்கூடிய கணினிநிரல்களாக அவை மாற்றப்பட வேண்டும். தமிழ் அகராதிகள்

எல்லாம் கணினிக்குப் புரியக்கூடிய வகையில் மின்னகராதிகளாக மாற்றப்பட வேண்டும்.

மனித மூளையின் திறன் வேறு. கணினியின் திறன் வேறு. பின்புல அறிவைக் கொண்டு

நமது மூளையால் ஒரு கருத்தைச் சுருங்கச்சொன்னாலும் மறைமுகமாகச்

சொன்னாலும் புரிந்து கொள்ள முடியும். ஆனால், கணினியால் அவ்வாறு முடியாது.


எனவே தமிழ் இலக்கணமும் அகராதியும் கணினியின் புரிந்துகொள்ளும் முறைக்கு

ஏற்ற வடிவில் கொடுக்கப்பட வேண்டும்.

இன்றைய தலையாய பணி

இன்று மின்தமிழ் வளர்ச்சியில் தமிழை உள்ளீடு செய்வதற்கான பணிகள் பெருமளவில்

வெற்றிபெற்றுள்ளன. தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகைகள் உருவாக்கத்தில் பல

சிக்கல்கள் தீர்க்கப்பட்டுவிட்டன. அதையொட்டி, தமிழ் விக்கிபீடியா, வலைப்பூக்கள்,

இணைய தளங்கள் பெருகிக்கொண்டி ருக்கின்றன. இவையெல்லாம், வரவேற்கத்தக்க

தமிழ்ப்பணிகள். ஆனால் இவையெல்லாம் கணினித்தமிழ் வளர்ச்சியின் முதல்கட்டமே

ஆகும். முன்னர் கூறிய தன்முனைப்பில்லா / செயலூக்கமில்லா மொழித்தொழில்நுட்பமே

இவை. இந்த முதல் கட்டத்தைத் தற்போது நாம் தாண்டிவிட்டோம். இனி அடுத்தகட்ட

வளர்ச்சியான தன்முனைப்புள்ள / செயலூக்கமுள்ள

மொழித்தொழில்நுட்பத்தைநோக்கி நம் பணி அமைய வேண்டும்.

தமிழ் இணையக் கல்விக்கழகம்

தமிழ் இணையக்கல்விக்கழகப் பெயர்ப்பலகை

தமிழ் இணையக் கல்விக்கழகம் (முந்தைய பெயர் : தமிழ் இணையப்

பல்கலைக்கழகம்) உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களின் மரபுகளையும்

பண்பாட்டையும் காக்கவும் அவர்களது இலக்கியத் தொடர்பினை நீட்டிக்கவும் 17

பிப்ரவரி 2001 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[3] இந்தியாவில் இணையவழியே கல்வி

வளங்களையும் வாய்ப்புகளையும் உலகளாவிய கல்விக்காக நிறுவப்பட்ட முதல்

மற்றும் இணையில்லா அமைப்பாக இது விளங்குகிறது. 1999 ஆம் ஆண்டு

நடைபெற்ற இரண்டாம் தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழாவில் இதற்கான


அறிவிப்பினை அப்பொழுதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அறிவித்தார்.
[4]
தமிழ் இணையப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஒன்றால் வழி நடத்தப்பட்டு, ஒரு

முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகின்றது.

கல்வித்திட்டம்[தொகு]

இக்கழகத்தின் பணித்திட்டம் இணையவழிக் கல்வித்திட்டங்கள், மின் நூலகம்,

கணித்தமிழ் வளர்ச்சி எனப் பலவற்றைக் கொண்டுள்ளது. கல்வித்திட்டத்தின் கீழ்

சான்றிதழ்க் கல்வி மூன்று நிலைகளில் (அடிப்படை, இடைநிலை மற்றும் உயர்நிலை)

வழங்கப்படுகிறது. தவிர, தமிழ் மொழி இளங்கலைப் பட்டப்படிப்பும்

அளிக்கப்படுகிறது. தஞ்சையிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வழியே தமிழ்

முதுகலைப் பட்டமும் வழங்கப்படுகிறது.

நூலகம்[தொகு]

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நூலகம், தமிழ் இணையக் கல்விக்கழகப்

பாடத்திட்டத்தில் சேர்ந்து பயில்வோர் மற்றும் உலகு தழுவி

வாழும் தமிழர்கள் அனைவரது பயன்பாட்டிற்காகவும் உருவமைக்கப்பட்டுள்ளது.

நூலகம் எனும் பகுதி நூல்கள், சுவடிக் காட்சியகம், பண்பாட்டுக் காட்சியகம்,

தமிழிணையம்-மின்னூலகம் என 4 பிரிவாக உள்ளது. விரிவான பொருள்சார்

சுட்டிகளாக்குதல் (subject-indexing) மற்றும் தேடல் வசதிகளும் பெரும் வசதியாக

உள்ளது.

நூலகம் எனும் பிரிவில் எண்சுவடி முதல் சிறுவர்

இலக்கியம் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின்

நூல்கள் அகராதிகள் நிகண்டுகள் கலைச்சொல் தொகுப்புகள் உரோமன் எழுத்து

வடிவிலான சங்க இலக்கியம் போன்றவை உள்ளன. இதில்

நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் தவிர பிறவற்றை ஒரு இணையப்பக்க (web

page) வடிவில் காணலாம்.

சுவடிக் காட்சியகம் எனும் பிரிவில் மின்னுருவாக்கப்பட்ட ஓலைச் சுவடிகளைக்

காணலாம்.
பண்பாட்டுக் காட்சியகம் எனும் பிரிவில் தமிழ் நாடு|தமிழ் நாட்டின் திருத்தலங்கள்

திருவிழாக்கள் வரலாற்றுச் சின்னங்கள் கலைகள் விளையாட்டுகள் திருக்கோவில்

சாலை வரைப்படங்கள் உள்ளன.

தமிழிணையம்-மின்னூலகம் எனும் பிரிவு தனி இணையத்தளத்துடன்

செயல்படுகிறது.[5]

மின் நூலகம்[தொகு]

இந்த மின் நூலகம் அரிய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் தமிழ்நாடு

பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நூல்கள் ஆய்விதழ்கள், பருவ இதழ்கள்,

சுவடிகள் ஆகியவற்றை கொண்டுள்ளது [6] இம்மின்னூலகம் 2015–16 ஆண்டுக்கான

தமிழ்நாடு புதுமை முயற்சி திட்டத்தின் (Tamil Nadu Innovation Initiatives – TANII)

கீழ் ₹100 கோடியில் தொடங்கப்பட்டது. இதை அப்பொழுதைய தமிழக

முதல்வர் எடப்பாடி க. பழனிசாமியால் அக்டோபர் 11 2017 இல் தொடங்கி

வைக்கப்பட்டது [7][8]

கணினித்தமிழ் வளர்ச்சி[தொகு]

கணித்தமிழின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கானப் பணிகளையும்

இப்பல்கலைக்கழகம் கீழ்கண்ட அமைப்புகளைக் கொண்டு மேற்பார்வையிட்டு

வருகிறது.

தமிழ் மென்பொருள் மேம்பாட்டு நிதி[தொகு]

தமிழ் மென்பொருள் மேம்பாட்டு நிதி (Tamil Software Development Fund – TSDF)

என்பது தமிழில் புதிதாக மென்பொருள் உருவாக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள

மென்பொருளை மேம்படுத்தவோ நினைக்கும் ஒரு நிறுவனத்திற்கோ அல்லது தனி

மனிதற்கோ வழங்கப்படும் நிதியாகும்

இந்நிதி தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நிறுவனத்திற்கும் அல்லது இந்திய

அரசின் உதவியோடு இந்தியாவில் எப்பகுதியிலிருந்தும் செயல்படும்

நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் [9]


கணித்தமிழ்ப் பேரவை[தொகு]

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பரப்புரை அலகே கணித்தமிழ்ப் பேரவை ஆகும்

.கல்லூரிகள்தோறும் கணித்தமிழ்ப் பேரவை என்பது தமிழக அரசின் கொள்கை

முடிவு ஆகும்.கணித்தமிழ்ப் பேரவையானது, இணையத்தில் தமிழின் பங்களிப்பை

வளப்படுத்துதல், வலுப்படுத்துதல் கணித் தமிழ் மற்றும் தமிழ் பயன்பாட்டு

மென்பொருள்களை உருவாக்கம் செய்ய ஊக்குவித்தல்/ மாணவர்களுக்கு அகநிலை

பயிற்சி அளித்தல் கணிப்பொறியில் தமிழ் உள்ளீட்டு பயிற்சியினை ஆசிரியர்கள்,

மாணவர்கள், கணிப்பொறி ஆர்வலர்களுக்கு வழங்குதல் கட்டற்ற

மென்பொருள் பயன்பாட்டை முன்னெடுத்தல் கணித்தமிழ்த் திருவிழா நடத்துதல்

தமிழ் மென்பொருள், குறுஞ்செயலி உருவாக்கம், மின் உள்ளடக்கப் பயிற்சி

வழங்குதல் கணித்தமிழ் சார்ந்த பயன்பாட்டை ஊக்குவிக்க கோடை கால முகாம்

நடத்துதல் கலைக்களஞ்சிய உருவாக்கம் ஆகியனவற்றை இலக்குகளாகக் கொண்டு

செயல்பட்டு வருகிறது.[10]

ஆதார நிதி[தொகு]

1. தமிழ் இணையக் கல்விக்கழகம் 2016 ஆம் ஆண்டு 100 கல்லூரிகளில் கணித்தமிழ்ப்


பேரவை அமைப்பினைத் தொடங்கிச் செயல்படுத்த ஆதார நிதியாக ₹25 இலட்சம்

ஒதுக்கீடு செய்தது [அரசாணை (ப) எண்.6 தகவல் தொழில்நுட்பவியல் (நிர்வாகம்-2)

நாள்: 29.02.2016]. ஒரு கல்லூரிக்கு ₹25,000/- வீதம் 100 கல்லூரிகளுக்கு இத்தொகை

வழங்கப்பட்டு முதற்கட்டமாக 100 கல்லூரிகளில் கணித்தமிழ்ப் பேரவைகள்

தொடங்கப்பட்டன.

2. 2019 ம் ஆண்டு மேலும் 100 கல்லூரிகளில் கணித்தமிழ்ப் பேரவை அமைப்பினைத்

தொடங்கிச் செயல்படுத்த ஆதார நிதியாக ₹25 இலட்சம் ஒதுக்கீடு செய்தது.

[அரசாணை (ப) எண்.28 தகவல் தொழில்நுட்பவியல் (நிர்வாகம்-2) நாள்:

04.07.2019] இதன்படி இரண்டாம் கட்டமாக 100 கல்லூரிகளுக்கு இத்தொகை

வழங்கப்பட்டு மேலும் 100 கல்லூரிகளில் கணித்தமிழ்ப் பேரவைகள்

தொடங்கப்பட்டன.

3. தற்போது 200 கல்லூரிகளில் கணித்தமிழ்ப் பேரவை செயல்பட்டு வருகிறது.

கல்வி நிறுவனங்கள் தோறும் கணித்தமிழ்ப் பேரவை[தொகு]


1. 24.03.2020 அன்று தமிழக சட்டமன்ற பேரவையில் கல்வி நிறுவங்கள் தோறும்
கணித்தமிழ்ப் பேரவை என்ற அறிவிப்பு (வருவாய் (ம) பேரிடர் மேலாண்மை (ம)

தகவல் தொழில்நுட்பம்) அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. (அறிவிப்பு

எண்.5)

பல்கலைக்கழகமாக தகுதிஉயர்வு[தொகு]

தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ் மொழியில் இலக்கண இலக்கியங்களையும்,

தமிழ் மொழி வரலாறு, தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றைப் பயில விரும்புவோரின்

தேவைகளை நிறைவு செய்வதற்கு உதவும் வகையில் இந்நிறுவனம் பிற

பல்கலைக்கழகங்களுக்கு நிகராக முழுமையான பல்கலைக்கழகமாக நிலை

உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் மு.கருணாநிதி அறிவித்தார். அதற்கான சட்டம்

இயற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தகவலாற்றுப்படை[தொகு]

ஆகத்து 11 2014-இல் அப்பொழுதைய தமிழக முதல்வர் செ. செயலலிதா தமிழக

சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் பின்வருமாறு அறிவித்தார்

தமிழரின் சாதனைகள், தமிழ் மொழி மற்றும் இலக்கியம் குறித்து அறிந்து கொள்ளும்

வகையில், ₹20 இலட்சத்தில், தகவலாற்றுப்படை என்ற இணையத்தளம்

உருவாக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் 627 தொல்லியல் மற்றும் வரலாற்று தளங்கள்,

நினைவுச்சின்னங்கள், அகழாய்வுகள், கல்வெட்டுகள், சமயம் சார்ந்த

இடங்கள், சிற்பங்கள், நாணயங்கள், செப்பேடுகள்,ஓவியங்கள் ஆகியவை

புகைப்படங்களாக எடுக்கப்பட்டு தேவையான மீதரவுடன் (Meta data) நிலையான

வடிவத்தில் இத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றார்.

அக்டோபர் 11 2017 இல் அப்பொழுதைய தமிழக முதல்வர் எடப்பாடி க.

பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது. தொல்லியல் மற்றும் வரலாற்று

தளங்களின் புகைப்படத்துடன் கூடிய மேலதிக ஆவணங்கள் இத்தளத்தில்

நாள்தோறும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.[7] இத்தளம் தமிழ் இணையக்

கல்விக்கழகத்தின் கீழ் உள்ளது [8]


தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையம்

 தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையம் (Tamil Software Incubation Centre) ஒன்று

தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

 இம்மையத்தில் பணியிடமும் (Work Station), இணைய இணைப்புடன் கணினிகளும்,

மென்பொருள்களும், மற்ற கருவிகளும் இருக்கும்.

 ஆக்கபூர்வ எண்ணங்களும், தமிழில் மென்பொருள் உருவாக்கும் ஆர்வமும்,

ஆற்றலும் கொண்டிருப்போர், அந்த எண்ணங்களைச் செயல்படுத்தத் தேவையான

ஆய்வு மேற்கொள்ளவும், பரிசோதிக்கவும், மேம்படுத்தி உலகிற்கு வழங்கவும்

இம்மையம் துணை புரியும்.

 தொடக்கத்தில், தனியர்களுக்கும், மாணவர்களுக்கும் இவ்வசதி கொடுக்கப்படும்.

பின்னர் சிறு, குறு நிறுவனங்களுக்கு இது விரிவுபடுத்தப்படும்.

 தனியர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.4000/- மும் மாணவர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.1000/-

மும் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும்.

 ஆர்வமுடையோர், தங்கள் பணித்திட்ட அறிக்கையுடன் விண்ணப்பிக்க கேட்டுக்

கொள்ளப்படுகிறார்கள்.

 வல்லுநர் குழுவால் பயனர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

 மற்ற விவரங்களுக்கு தமிழ் இணையக் கல்விக்கழகத்தை அணுகலாம்.

 ஆக்கபூர்வமான எண்ணமுடையவர்களுக்கு, அவற்றைச் செயல்படுத்த துணை

செய்ய ஏற்பட்டவை தான் தொழில்நுட்பப் பூங்காக்களும் (Tech.Park ) பொருள்/செயல்

உருவாக்க மையங்களுமாகும் (Product/ Process Incubation Centers). இவை பொதுவாக

உலகில் I.I.T போன்ற கல்வி நிலையங்களிலோ, பெரிய பல்கலைக்கழகங்களிலோ

செயல்பட்டு வருகின்றன.
 தொழிற்சாலைகளில் உள்ள தொழில் நுட்பியலார்கள், இங்கு வந்து தங்கி, இக்கல்வி

நிலையங்களில் உள்ள பேராசிரியர்களுடன் ஒருங்கிணைந்து அங்குள்ள ஆய்வுக்

கூடங்களை, நூலகத்தை, பிற வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு புதிய

எண்ணங்களை, ஆராய்ச்சி திட்டங்களை செயல்படுத்த முனைவார்கள்.

 தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக, புதிய மென்பொருள்களை

உருவாக்குவதின் தேவை மிகுந்த காரணத்தால், அவற்றுக்கெனத் தனியாக

மென்பொருள் உருவாக்கும் மையங்கள் கல்வி நிலையங்களில் தோற்றுவிக்கப்பட்டன.

மைய அரசும் இம்மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா (Software Technology Park of

India – STPI) ஒன்றை சென்னைத் தரமணியில் உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.

இத்தகைய மையங்கள் தமிழ்நாட்டில், கீழ்கண்டுள்ள இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

1. I.I.T, சென்னை

2. அண்ணா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத்துறை, சென்னை

3. கொங்கு பொறியியல் கல்லூரி, திருப்பெருந்துறை

4. V.I.T வேலூர்

இந்திய அளவில், I.I.T., கான்பூர், கரக்பூர் போன்ற இடங்களிலும் இம்மையங்கள் செயல்பட்டு


வருகின்றன. இத்தகைய மையங்கள் தொழில்நிறுவனங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்
போன்றவர்களின் எந்த ஒரு எண்ணத்தையும் செயல்படுத்தப் பயன்படுத்துகின்றன.

 இன்று தமிழிலும் மென்பொருள்கள் உருவாக்கப்பட வேண்டியதின் தேவை

ஏற்பட்டுள்ளது. சிலர் இத்துறையில் ஈடுபட்டு தமிழ்மென்பொருள்களை உருவாக்க

முனைந்துள்ளனர். மேலும் பலர் தமிழ் மென்பொருள்களை உருவாக்க ஆர்வம்

கொண்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு, அதற்குத் தேவையான வசதிகளோ,

வசதிகளை உருவாக்க மூலதனமோ இல்லை. எனவே அவர்களுக்கு உதவும்

வகையில், தேவையான எல்லா வசதிகளையும் கொண்ட மென்பொருள் உருவாக்க

மையங்களை ஏற்படுத்தித் தந்தால், அவர்களுடைய எண்ணங்கள் செயல்வடிவம்

பெறும்; பல மென்பொருள்கள் உருவாகும்; அதன் பயன்பாடும், புதிய

மென்பொருள்களுக்கான தேவையும் பெருகும். அதனால் கணித்தமிழ் வளர்ச்சி

பெறும்.

 ஆகவே, தமிழில் மென்பொருள்கள் உருவாக்க வேண்டும் என்ற குறிப்பிட்ட

நோக்கத்திற்காகவே, தமிழ் இணையக் கல்விக்கழகத்தில், தமிழ் மென்பொருள்

உருவாக்க மையம் ஏற்படுத்த ஒரு திட்டத்தை தமிழக அரசிடம் முன்வைத்தது.


தமிழக அரசும் அதனை ஏற்றுக் கொண்டு உரூ.45.00 லட்சம் நிதியை பகுதி-2

திட்டத்தின்கீழ் ஒதுக்கியுள்ளது.

 இத்திட்டத்தைச் செயல்படுத்த, த.இ.க-வில் ஒரு வல்லுநர் குழு

ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழு கூடி, இம்மையத்தில் இருக்க வேண்டிய கணினி

மற்றும் கட்டுமான வசதிகளை வரையறை செய்து தந்துள்ளது. இதன்படி த.இ.க

தரைத்தளத்தில், தோராயமாக 64 சதுர அடி கொண்ட தனியறைகளும் ஒரு

கலந்துரையாடல் கூடமும், ஒரு நூலகமும், ஒரு வரவேற்புக் கூடமும் ஏற்படுத்தப்படும்.

 இந்த மையத்தில் தமிழ் மென்பொருள் உருவாக்கத் தேவையான கணிப்பொறிகளும்,

மென்பொருள்களும், மற்ற கருவிகளும், சேவைகளும் இருக்கும். ஆக்கப் பூர்வ

எண்ணங்களை கொண்டிருப்போர் அந்த எண்ணங்களை செயல்படுத்தத்

தேவையான ஆய்வு மேற்கொள்ளவும், பரிசோதிக்கவும், மேம்படுத்தி

செம்மைபடுத்தி உலகிற்கு வழங்கவும் இந்த மையம் துணைபுரியும்.

1. பயனாளர்கள் :
1. மாணவர்கள்/ஆசிரியர்கள்
2. ஆக்கபூர்வ எண்ணம் கொண்டுள்ள தனியர்கள்
3. குறு, சிறு தொழில் நிறுவனங்கள்
2. பயனாளர்களைத் தேர்வு செய்யும் முறை :

 முதலில் அவர்கள் எண்ணியுள்ள திட்ட கருத்துருவுடன் விண்ணப்பித்து த.இ.க


வல்லுநர் குழுவிடம் விளக்க வேண்டும்.
 திட்டத்தின் தன்மை, தேவை கருதி வல்லுநர் குழு அவர்களைத் தேர்ந்தெடுக்கும்.
 தேர்ந்தெடுக்கப்பட்ட மென்பொருள் உருவாக்குபவர்களுக்கு, ஒவ்வொருவருக்கும் 64
சதுர அடி கொண்ட பணியிடமும், கணினியும், தேவையான மென்பொருள்களும்
தரப்படும்.
 அவர்கள் த.இ.க நூலகத்தையும், த.இ.க-வில் உள்ள வல்லுநர் உதவியையும் பெற்றுக்
கொள்ளலாம்.
 த.இ.க. வில் உள்ள கருத்தரங்கக் கூடத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

3. காலம் :

திட்டத்திற்கேற்ப எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதை வல்லுநர் குழு முடிவு


செய்யும். இது பொதுவாக ஆறுமாதம் முதல், ஒருவருடம் வரை இருக்கும்.
4.நிதித் தேவை :

இம்மையத்தை நடத்துவதற்கு தேவைப்படும் நிதியை இலாப நட்டமில்லாத வகையில்


திரும்பப்பெறுவதற்கு ஏற்றவகையில் கீழ்க்கண்டுள்ள கட்டணம் வசூலிக்கலாம் என
த.இ.க வல்லுநர் குழு தீர்மானித்தது. .
கட்டண விபரம் :
ஒருமாத
வ.எண் பயன்பாட்டாளர்கள் சேவை
கட்டணம்
1. மாணவர் ஒருவருக்கு உரூ.1,000/=
2. தனி நபர் ஒருவருக்கு உரூ.4,000/=
3. குறு, சிறுதொழில் முனைவோர் மற்றும் நிறுவனம் உரூ.10,000/=
ஒருவருக்கு

மேலும், உருவாக்கப்படும் மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்குமாயின்,


உருவாக்குபவர் செலுத்திய கட்டணத்தில் உரிய கழிவு வழங்கலாம் என்ற திட்டமும் உள்ளது.

சொற்குவை

சொற்களே மொழிக்கு அடிப்படை. சொற்களைப்


பாதுகாத்தால்தான் மொழியைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் முடியும்.
சொற்கள் பெருகப் பெருக மொழியும் வளர்ந்து உயர்வு பெறும்.
காலந்தோறும் மொழியில் சில சொற்கள் பொருள் மாறுபாடு அடையும்;
சில சொற்கள் வழக்கொழியும்; சில சொற்கள் புதிதாக உருவாகும்.
இவை அனைத்தையும் தொகுத்துப் பதிவு செய்து அகரமுதலி வடிவில்
வெளியிடுவதே மொழி வளர்ச்சிக்கான ஆக்கப் பணியாக அமையும்.

அந்த வகையில், புலமையாளர்கள், பொதுமக்கள்,


ஆய்வறிஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயன்படும்
வகையில், தமிழில் சொற்பிறப்பியல் அகரமுதலிகளைத் தொகுத்து
வெளியிட வேண்டுமென்று தமிழ்நாடு அரசு விரும்பியது.

இதனை நடைமுறைப்படுத்த தனி இயக்ககம் இருந்தால்தான்


பணி சிறப்பாக அமையும் என்று எண்ணிய தமிழ்நாடு அரசு, செந்தமிழ்ச்
சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் என்னும்
துறைத்தலைமை அலுவலகத்தைத் தோற்றுவித்தது.

உலக மொழிகளில் தொன்மைமிக்கதும், இலக்கணச்


செறிவுடையதும், பல்வேறு துறைகளிலும் இலக்கிய வளம் கொண்டதும்,
மிக விரைவாக வளர்ந்து வரும் அனைத்து அறிவியல்
துறைகளுக்குமான கலைச்சொற்களைத் தன் சொல்வளத்திலிருந்தே
உருவாக்கிக்கொள்ளும் வல்லமை வாய்ந்ததுமான தமிழ்மொழியில்,
சொல்லின் பொருளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுவதற்கு உரிய
வழிகாட்டுதல் தேவையாகும்.
தமிழ்மொழியின் ஒவ்வொரு சொல்லமைப்பையும் அறிந்து
சிறப்பாக வெளிப்படுத்தும் ஆற்றலைப் படைப்பாளர்களும்,
கல்வியாளர்களும் பெற வேண்டுமெனில், தமிழின் வேர்மூலங்களை
வெளிப்படுத்தும் சொற்பிறப்பியல் அகராதி அவர்களுக்கு மிகவும்
இன்றியமையாதவை.

அறிவியல் பெரிதும் வளர்ந்து கொண்டிருக்கும் இன்றைய


காலத்திற்கேற்பக் கலைச்சொற்களை உருவாக்கும் திறன் பெற்ற மொழி
மட்டுமே வாழும்; வளர்ச்சி பெறும். அவ்வாறு ஒரு மொழியின்
வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் துணை செய்யும் முதன்மையான பணியை
அகரமுதலி இயக்ககம் செயற்படுத்திக் கொண்டிருக்கிறது.
தமிழ்மொழியின் அனைத்துச் சொற்களையும் தொகுத்து,
அச்சொற்களுக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் பொருள்விளக்கம்
அளித்து, அச்சொற்கள் தோன்றி வளர்ந்த வேர்ச்சொல்
விளக்கத்தையும் வழங்கி, அரிய சொற்களுக்குப் படவிளக்கத்துடன்
கூடிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலிகளை உருவாக்கி
அச்சிட்டு நூல்களாக வெளியிட்டுள்ளது; இணையத்திலும் பதிவேற்றம்
செய்துள்ளது.

தமிழ்மொழிக்குப் பெருமை சேர்ப்பது அதன் சொல்வளமே ஆகும்.


இன்றைய கல்விப்புலத்தில் உள்ள 600க்கும் மேற்பட்ட துறைகளில்
புழங்கும் கலைச்சொற்களை யெல்லாம் திரட்டி அவற்றிற்கு நிகரான
தமிழ்க் கலைச்சொற்களை வடிவமைத்து இணைய தளத்தின்
பொதுவெளியில் வெளியிடுவதும் இதுவரை தமிழில் வெளிவந்துள்ள
அகராதிகளில் இடம் பெற்றுள்ள அனைத்துச் சொற்களையும்
ஒன்றுதிரட்டி; அவற்றுள், வந்தசொல்லே மீளவும் வராதவகையில்
(deduplication) நிரல்படுத்தி தமிழின் சொல்வளத்தை உலகறியச்
செய்வதுமே ‘சொற்குவைத்’ திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

இத்திட்டத்தின்கீழ் தொடங்கப்பெற்றுள்ள சொற்குவை.காம்


(sorkuvai.com) என்ற இணையதளத்தின் வாயிலாக தமிழ்க் கலைச்சொல்
தொடர்பான ஐயங்களைத் தீர்த்துக்கொள்ள வழிவகைச்
செய்யப்பட்டுள்ளது. விரைவில் தொடங்கப்படவுள்ள கட்டணமில்லாத்
தொலைபேசி வாயிலாகவும் தமிழ்க் கலைச்சொல் தொடர்பான
ஐயங்களைத் தீர்த்துக்கொள்ளலாம். இச்சொற்குவைத் திட்டத்தை
உலகெங்கும் உள்ள அறிஞர் பெருமக்களும், மொழியியல்
ஆய்வாளர்களும் பயன்படுத்துவதன் மூலம் ஐக்கிய நாடுகளின்
அமைப்பு (யுனெஸ்கோ) வெளியிட்டுள்ள மொழிவரிசைப் பட்டியலில் 14-
ஆம் இடத்திலுள்ள தமிழ்மொழி 10-ஆம் இடத்திற்கு முன்னேற்றம்
காண்பதற்கான வழிவகை அமையும் என்று கருதப்படுகிறது.

‘சொற்குவைத்’ திட்டத்திற்கெனத் தனி வலைத்தளம்


உருவாக்கப்பட்டுள்ளது. தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், மாணவர்கள்,
பொதுமக்கள் உள்ளிட்டோர் உருவாக்கித்தரும் பல்வேறு துறைகளைச்
சார்ந்த புதிய தமிழ்க் கலைச்சொற்களை இந்த வலைத்தளத்தில்
பதிவேற்றம் செய்யலாம். அச்சொற்களை ‘சொற்குவை’ வல்லுநர் குழு
ஆய்வு செய்து ஏற்பிசைவு வழங்கிய பின் பதிவேற்றம் செய்யப்பட்டு,
பொதுவெளியில் பயன்பாட்டுக்கு வழங்கப்படவுள்ளன.

சொற்குவையின் முதன்மை நோக்கங்கள்


 தமிழ்மொழியின் சொல்வளத்தைக் காத்தல்
 தமிழ் மொழியின் சொல்வளத்தைப் பெருக்குதல்
 தமிழ்மொழியில் பிறமொழிக் கலப்பைத் தவிர்க்கத் துணை
நிற்றல்

மின் நூலகம் - கட்டுரை


மின் நூலகம்

21 ஆம் நூற்றாண்டின் இணையற்ற அறிவியல் சாதனமாகக் கணினியில் நூல்களைப் பதிவு


செய்து பாதுகாக்கும் பணி உலகெங்கிலும் எல்லா மொழிகளிலும் வெகு வேகமாக நடைபெற்
று வருகிறது.
தமிழ் மொழி இலக்கியம், இலக்கணம், உள்ளிட்ட நூல்களைக் கணினியில் சேமித்து
வைக்கும் வேலை அரசாலும், அரசு சார்புடைய அமைப்புகளாலும், தனியார் பலரின் ஆர்வத்
தாலும் நடைபெற்று வருகிறது.
சென்னையில் உள்ள தமிழ் இணையப் பல்கலைக்கழகமும் பெரும்பங்காற்றியுள்ளது.
சென்னை பல்கலைக்கழகமும் மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும்
தமிழ் நூல்களைக் கணினியில் சேமிக்கும் வேலையைத் தொடங்கி வருகின்றனர்.
கே.கல்யாணசுந்தரம் என்பவர் தமிழ் நூல்களைக் கணினியில் சேமிக்கும் வேலை
யை 1988 ஆம் ஆண்டு தொடங்கினார். இது தமிழ் நூல்களைக் கணினியில் சேமிக்கும் முத
ல் பணியாகக் கருதப்படுகிறது. இவர் தொடங்கிய திட்டத்திற்கு மதுரைத் திட்டம் என்று பெய
ர் வந்தது.
நூலக திட்டங்களை அமைத்து அனைத்து நூலகங்களிலும் மின்னூல் பணியை ஆர
ம்பித்தனர். இதுவே நூலக திட்டம் என்று குறிப்பிடுகின்றார்.
தமிழக அரசாங்கம் தமிழகத்தில் உள்ள கன்னிமார நூலகம் தேவநேயப் பாவாணர்
நூலகம், தஞ்சையில் உள்ள சரஸ்வதி மகால் நூலகம், தமிழ் பல்கலைக்கழக நூலகம், கும்ப
கோணத்தில் உள்ள அரசினர் கலைக் கல்லூரி நூலகம், போன்ற புகழ் மிக்கதும் பழமையான
துமான நூலகங்களைக் கணினிமயமாக்கி பாதுகாத்து வருகிறது.
மேற்கூறிய பணிகளில் சில நூல்களை முழுவதுமாக படிக்கும் வகையில் அமைக்கப்ப
ட்டுள்ளன. சில நூல்களின் பட்டியலைப் பார்வையிடும் வகையில் அமைந்து காணப்படுகின்ற
ன.
இங்ஙனம் தமிழ் நூல்களைக் கணினியில் சேமித்து இணையப் பயன்பாட்டின் மூலமா
க எவரும் எங்கிருந்தும் பார்க்கும் வகையில் நூலகமாக அமைத்திடும் முறையையே மின் நூ
லகம் என்று குறிப்பிடப்படுகின்றன.
மின் நூலகங்கள்
எண்ணிம நூலகம்
(Digital Library)
தமிழ் இணையப் பல்கலைக்கழகம் மின் நூலகம்
(Tamil Virtual University E – Library)
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
(Roja Muthiah Resarch Library)
சென்னை மின் நூலகம்
(Chinnai Library)
நூலகம்.நெட்
(Noolaham.net)
இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்
(Central Institute of Indian Languages – (CIIL)
மதுரைத் திட்டம், மின்பதிப்புத் திட்டம்
உலகளாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்று கூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதி
ப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம் வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்
வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யப் பெற்றுள்ளன.
ஒரு சமூகத்திற்கு இலக்கியங்கள்தான் கலாசாரத்திற்கான ஒரு முக்கிய எடுத்துகா
ட்டு ஆகும். உலகளாவிய தமிழர்களுக்கும் ஏனையோருகும் பகிர்ந்துகொண்டு பின் வரும் சந்
ததியினருக்குக் கொண்டுச் செல்வதும் ஒவ்வொரு தமிழரின் கடமை ஆகும்.
மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்கம் அல்லது தனியார் நிறுவன உதவியின்றி, விய
பார நோக்க மின்றியும் நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ முயற்சி ஆகும்.
1998 ஆம் ஆண்டு தமிழர் பொங்கல் திருநாள் அன்று ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இன்றும்
தொடர்ந்து இயங்க வருகின்றது. உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு
மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களுக்கும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்ற
னர்.
மதுரைத் திட்டம் உலகில் பல நாடுகளில் வசித்து வரும் தமிழர்கள் அவரவர் தங்களது
வீடுகளில் கணினியைக் கொண்டு கிடைக்கும் நேரங்களில் தமிழ் இலக்கியங்களை கணி
னியில் உள்ளிட்ட பிழை திருத்தி மின்பதிப்புகளாக தயாரிக்கும் ஒரு கூட்டு முயற்சியில் ஈடுப்ப
ட்டுள்ளனர்.
தமிழ் இலக்கியங்களை மின்வழி பாதுகாத்து மற்றவர்களுடன் இலவசமாக பகிர்ந்து
கொள்வதில் பங்கு பெறச்செயகின்றனர்.
மதுரைத் திட்டத்தின் மின்பதிப்புகள் ஆரம்ப காலத்தில் இணைமதி, மயிலை, தமிழ்
எழுத்துக்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது. ஆனால்1999 ஆம் ஆண்டிலிருந்து இணையம் வ
ழி தமிழ் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றதிற்கான இணையம் வழி தீர்மானிக்கப்பட்ட தமிழ் த
குதர வடிவம் கொண்டு தயாரித்து மின்பதிப்புகள் வெளியிட்டு வருகின்றது.
2003 ஆம் ஆண்டில் இருந்து பல்மொழி ஒருங்குக் குறியீடு முறை தயாரிக்கப்பட்ட மின்பதிப்பு
களையும் வெளியிட்டு வருகின்றனர்.
தமிழ் இலக்கியங்களின் வரலாறு மிக பழமையானது. முதற்சங்க கால நூல்கள் இர
ண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்டது என்பது வல்லுனர்கள் கருத்து.
மதுரைத் திட்டம் காலம், சமயம், தேசப்பிரிவு, இலக்கியப்பிரிவு போன்ற எவ்வித பாகு
பாடுமின்றி எல்லாவிதமான தமிழ் நூல்களின் மின்பதிப்புகளை வெளியிட்டு வருகின்றது.
தொன்றுதொட்டு சங்ககால நூல்கள் முதல் தற்கால தமிழ்நூல்கள் வரை அனைத்தும் வெ
ளியிடப் படுகிறது. ஒரேஒரு கட்டுப்பாடு புத்தக வடிவில் வெளியான நூல்கள் காப்புரிமைகளு
க்கு மரியாதை கொடுத்து கண்ணியமாக நடப்பது ஆகும். காப்புரிமை இல்லா எல்லா நூல்க
ளையும் மின்பதிப்பில் வெளியிடலாம்.
உலக மின்னூலகம்
உலக மின்னூலகம் என்பது யுனெஸ்கோ மற்றும் அமெரிக்க காங்கிரசு நூலகம் ஆகி
யவற்றால் நடத்தப்படும் ஒரு பன்னாட்டு மின்னூலகம் ஆகும். அனைத்துலக மற்றும் பல்வேறு
கலாசாரப் புரிதல்களை ஊக்குவித்தல், இணையத்தில் கிடைக்கும் கலாசார உள்ளடக்கங்க
ள் அளவிலும், வகையிலும், அதிகமாக்குதல், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள்,
ஆகியோருக்கு அறிவுசார் வளங்களை அளித்தல், பங்குதாரராக உள்ள நிறுவனங்களில் அறி
வுசார் வளங்களை அதிகாp த்தல் அதன் மூலம் பல்வேறு நாடுகளுக்கு இடையே உள்ள எண்ம
இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை தனது நோக்கமாக உலக மின்னூலகம் கொண்
டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள கலாசாரங்களின் முதன்மைத் தகவல் ஆதாரங்களான வரைப்ப
டங்கள் அரிய நூல்கள் இசைக் கோர்வைகள் திரைப்படங்கள், அச்சுவடிவங்கள், ஒளிப்படங்க
ள், வடிவியல், வரைபடங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை இலவசமாக இணையத்தில் கி
டைக்கச் செய்வதில் முனைப்புடன் செயல்படுகிறது.
உலக மின்னூலகம் துவங்கப்பட்ட போது அரபி, சீனம், ஆங்கிலம், பிரஞ்சு, போர்ச்சுகிசு
, ரஷ்யன், ஆகிய மொழிகளில் கிடைத்த 1170 உருப்படிகளைக் கொண்டிருந்தது.
வரலாறு
ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2003 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி
அறிவியல் மற்றும் கலாசார அமைப்புக்கான யுனெஸ்கோ தனது நிலையான பிரதிநிதிக் குழு
வை ஐக்கிய அமெரிக்கா மீள அமைத்தது. அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் நூல
கர் முனைவர் ஜேம்சு.எச்.பில்லிங்டன், அந்நாட்டின் ஆணையாளராக யுனெஸ்கோவில் நியமிக்
கப்பட்டார்.

“ஜூன் 2005 ஆம் ஆண்டு யுனெஸ்கோ துவக்க நாள் கருத்தரங்கில் அழைப்பின் பேரில் சென்
று உலக மின்னூலகம் ஒரு பார்வை என்ற தலைப்பில் உரையாற்றினார்.”5 அப்போது நிறுவனங்க
ள் நூலகங்கள் அருங்காட்சியகங்கள் சேகரித்து வைத்துள்ள அரிய உள்ளடக்கங்களை எளி
தில் அணுகி இலவசமாகப் பெறக்கூடிய வகையில் புதிய வடிவில் திரும்ப இந்த உலகிற்கு அளி
க்கத் தகுந்த அமைப்பாக உலக மின்னூலகம் செயல்பட வேண்டும் என்று விளக்கினார்.
அரசு தனியார் பங்களிப்புடன் தொடங்கப்பட்ட உலக மின்னூலகத்தில் 2005 ஆம் ஆண்
டு கூகுள் நிறுவணம் உதவியாக இருந்தது.
பணிக் குழுக்கள்
பில்லிங்டன் தொலை நோக்கை நிறை வேற்ற ஒரு செயற் திட்டத்தைக் காங்கிரசு நூ
லகத்தில் உள்ள உலக மின்னூலக முது நிலை ஆலோசகர் முனைவர் ஜான் வான் ஔடென்ரே
ன் 2006 ஆம் ஆண்டு கருத்தரங்கில் வழங்கினார்.
உலக மின்னூலகமானது தனது பங்குதாரர்களை முதன்மையான நான்கு திட்டப்ப
ணிகளில் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
அவை
தொழில் நுட்ப கட்டமைப்பு
தேர்வு செய்தல்
நிர்வகித்தல்
நிதியளித்தல்

2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரிசில் நடைப்பெற்ற உலக மின்னூலக வளர்ச்சி குறித்த மா
நாட்டில் இக்குறிக்கோள் வடிவமைக்கப்பட்டது. நான்கு திட்டப் பணிகளில் உள்ள தனிப்பட்ட சி
க்கல்களை ஆராய தனித்தனியான பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
2007 ஆம் ஆண்டு முதற்பகுதியில் ஒன்று கூடி மின்னூலகத் துறையில் உள்ள தொழில் வல்லுந
ர்களையும் சேர்த்து கொண்டது.
ஒவ்வொரு நாடுகளில் இருந்து பணிக்குழுவினருக்கு உதவி செய்து வந்தனர்.
2009 ஆம் ஆண்டு உலக மின்னூலகம் தொடங்கப்பட்டது.
காட்சிப்படுத்தல்
உலக மின்னூலகம் துவங்கப்பட்ட போது பல்வேறு காட்சிப்படுத்துதல்கள் சேர்க்கப்பட்ட
ன.
அவைகள்
செஞ்யின் கதை
11 ஆம் நூற்றாண்டு ஜப்பான் கதை
உலகில் முதன் முறையாக எழுதப்பட்ட புதினம்
குழந்தை ஏசுவின் முதல் அசுடெக் குறிப்புகள்
அல்ஜீப்ரா கணித வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்ட பழமை வாய்ந்த அரபு மொழி நூ
ல்கள்.
எட்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆப்பிhp க்கா ஒவியமான ரத்தம் சிந்தும் மா
ன்.
அமெரிக்கா சென்று முதன் முறையாக குறிப்பிட்டு உருவாக்கப்பட்ட வால்டுசீமுல்லர்
வரைப்படம்.
மொழியில் பெயர்க்கப்பட்ட விவிலியம் ருசிய குருவால் அலுசியன்.
மாலி நாட்டில் கிடைத்த இசுலாமிய கையெழுத்துப் பிரதி.
லுமியர் சகோதரர்கள் உருவாக்கிய உலகின் முதல் திரைப்படம்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கல்வெட்டு ஒளிப்படம்
இது போன்று பல்வேறு நூல்களை உலக மின்னூல்கள் துவங்கப்பட்ட போது காட்சிப்படுத்தலி
ன் போது சேர்க்ப்பட்டுள்ளன.
தமிழ் இணையப் பல்கலைக் கழக நூலகம்
(Tamil Virtual University E – Library)
உலகம் தழுவி வாழும் தமிழர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் பயில
விரும்பும் மாணவர்கள் முதலியோர் படித்துப் பயன்பெறும் வகையில் தமிழ் இணையப் பல்க
லைக்கழகம் மின்நூலகம் ஒன்றை அமைந்துள்ளது. தொல்காப்பியம் முதற்கொண்டு இக்கா
ல இலக்கியம் வரையிலான 250 க்கும் மேற்பட்ட ஏறக்குறைய 1,00,000 பக்கங்களுக்கு மேல் இம்
மின் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.
தமிழ் இணையப் பல்கலைக் கழக மின் நூலகத்தில் உள்ள நூல்களை உலகில் எவரும்
எங்கிருந்தும் எப்பொழுதும் இணைய வழியாகப் படித்தப் பயன் பெறலாம். ஓர் நூலை ஒரே நேர
த்தில் எத்தனைப் பேர் வேண்டுமானாலும் படித்தப் பயன பெறலாம். ஒருவர் வழக்கமான நூல
கத்திற்குச் சென்று தமக்குத் தேவையான நூல்களைத் தேடிப் பெறுவதில் உள்ள சிக்கல்கள்
நீங்குகின்றன.

“அவசரமான உலகத்தின் அவசரம் கருதி காலம் பொன்னானது என்ற பொன்மொழியை மன


த்தில் கொண்டு படிப்பவர்களின் நேர விரியத்தைத் தவிர்க்கும் வகையில் இந்நூலகம் அமை
க்கப்படுகின்றது.” அரிய வசதிகள் கொண்ட இம்மின் நூலகத்தை விரும்புகின்ற அனைவரு
ம் தற்பொழுது கட்டணம் ஏது மின்றி முற்றிலும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இ
ம்மின் நூலகமானது இலக்கண, இலக்கிய நூல்கள் உரோமன் வரி வடிவத்தமிழ் நூல்கள், அ
கராதிகள், கலைச்சொல், தொகுப்புகள், ஒளிக்காட்சித் தொகுப்புகள் என்ற வகையில் பகுக்
கப்பட்டுள்ளது.
பொதுவாக நூலகத்தில் நூல்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும் ஆனால், இம்மின் நூ
லகத்தில் தமிழர்களின் பண்பாட்டை எடுத்துரைக்கும் பண்பாட்டு நிகழ்ச்சிகளும், தமிழர்களி
ன் இறை உணர்வைப் புலப்படுத்துகின்ற சைவ, வைணவக் கோயில்களின் ஒலி, ஒளிக்காட்சி
களும் இடம் பெற்றுள்ளன. தமிழர்களின் சமயப் பொறைக்கு எடுத்துக்காட்டாக இம்மின் நூ
லகத்தில் இசுலாமிய மற்றும் கிறித்துவ ஆலயங்களின் ஒலி, ஒளிக்காட்சிகள் இடம் பெற்றுள்
ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
உள்ளடக்க மின்னூல்கள்
தமிழ் இணைய பல்கலைக் கழக மின் நூலகத்தில் இடம் பெற்றுள்ள நூல்கள் இலக்
கண நூல்கள், சங்க இலக்கியம், பதினெண் கீழ்கணக்கு, காப்பியங்கள், சமய இலக்கியங்க
ள், சிற்றிலக்கியங்கள், திரட்டு, நூல்கள், நெறி நூல்கள், சித்தர் இலக்கியங்கள், இருபதாம்
நூற்றாண்டுத் தமிழ் இலக்கியங்கள் உரைநடை, நாட்டுப்புற இலக்கியங்கள், சிறுவர் இலக்கிய
ங்கள் என்னும் வகைப்பாட்டு முறைமையில் பகுத்தமைக்கப்பட்டுள்ளன.
இலக்கண நூல்கள்
தொல்காப்பியம்
புறப்பொருள் வெண்பாமாலை
யாப்பருங்கலம்
யாப்பருங்கலக்காரிகை
தண்டியலங்காரம்
நன்னூல்
நம்பியகப் பொருள்
தொன்னூல் விளக்கம்
இலக்கண விளக்கம்
தமிழ் நெறி விளக்கம்
சிதம்பரப்பாட்டியல்
நவநீதப்பாட்டியல்
வீரசோழியம்
தமிழ் நூல்
முத்துவீரியம்
சுவாமிநாதம்
நேமிநாதம்
அறுவகை இலக்கணம்
இவை அனைத்து இலக்கண நூல்களுக்கு உரையுடன் அமைந்துள்ளன.

இலக்கிய நூல்கள்
தமிழ் இணைய பல்கலைக் கழக நூலகத்தில் 52 இலக்கிய நூல்கள் உரையுடன் இடம்
பெற்றுள்ளன.
சங்கஇலக்கியம்
பதினெண்கீழ்க்கணக்கு
ஐம்பெங்ருகாப்பியங்கள்
ஐஞ்சிறுகாப்பியங்கள்
பெருங்கதை
கம்பராமாயணம்
வில்லிபாரதம்
அரிச்சந்திர புராணம்
காஞ்சிப் புராணம்
சமய இலக்கியங்கள்
சமய இலக்கிய நூல்கள் சைவம், வைணவம், கிறித்துவம், இசுலாமியம் என்ற வரிசை
யில் அமைந்துள்ளன.
சைவம் பன்னிரு திருமுறைகள்
திருவிளையாடற் புராணம்
கந்தபுராணம்
கல்லாடம்
மெய்கண்டசாத்திரங்கள்
திருமுறைத் தலங்கள்
வைணவம் - நாலாயிர திவ்யபிரபந்தம்
108 வைணவ திவ்யதேச ஸ்தலவரலாறு
கிறுத்துவம் - தேம்பாவணி
இரட்சணிய யாத்திரிகம்
திரு அவதாரம்
இயேசு காவியம்
இரட்சணிய மனோகரம்
இசுலாம் - சீறாப்புராணம்
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நாயகம் எங்கள் தாயகம்
யூசுப் ஜீலைகா
நாயகம் ஒரு காவியம்
சிற்றிலக்கியங்கள்
கலம்பகம் - கச்சிக்கலம்பகம்
உலா - மூவருலா
தூது - அழகர் வீடுதூது
- தமிழ்வீடுதூது
கோவை - தஞ்சைவாணன் கோவை
பிள்ளைத்தமிழ் சேக்கிழார்ப் பிள்ளைத் தமிழ்
- திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
- மதுரை மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்
பரணி இரணியவதைப் பரணி
- கலிங்கத்துப்பரணி
அந்தாதி - அபிராமி அந்தாதி
- திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
சதகம் தண்டலையார் சதகம்
- அறப்பளீசுர சதகம்
- குமரேச சதகம்
- கொங்கு மண்டல சதகங்கள்
வெண்பா - நள வெண்பா
குறவஞ்சி - திருக்குற்றாலக் குறவஞ்சி
- தியாகேசர் குறவஞ்சி
பிரபந்தம் - அஷ்டபிரபந்தம்
ஆற்றுப்படை புலவராற்றுப்படை
திரட்டு நூல்கள்
குமரகுருபரர் பிரபந்தத் திரட்டு 12 நூல்களும், சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்
டு 24 நூல்களும், இராமலிங்க அடிகளின் திருவருட்பா, தாயுமானவரின் தனிப்பாடல்கள் உள்
ளிட்ட 38 நூல்கள் உரையுடன் அமைக்கப்பட்டுள்ளன.
நெறி நூல்கள்
மனிதர்களை நெறிப்படுத்தும்நோக்கில் நெறிநூல்கள் உருவாக்கியுள்ளார். அவ்வகை
நுல்கள்
ஆத்திசூடி
கொன்றை வேந்தன்
மூதுரை
நல்வழி
வெற்றிவேற்கை
உலகநீதி
நீதி நெறி விளக்கம்
அறநெறிச்காரம்
நீதிநூல்
சித்தர் இலக்கியங்கள்
இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் கவிதை
பாரதியார்
பாரதிதாசன்
வேதநாயகம்பிள்ளையின் பெண்மதி மாலை
கவிஞர் முடியரசனின் பூங்கொடி
தமிழ் ஒளி கவிதை
இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் உரைநடை
சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, என்ற முறையில் நூல்களை அமைத்துள்ளது.
சிறுகதை - பாரதியார்கதைகள்
புதினம் அகல் விளக்கு (மு.வ)
- சமுதாய வீதி (நா.பார்த்தசாரதி)
- வேங்கையின் மைந்தன் (அகிலன்)
நாடகம் - மனோன்மணீயம்
கட்டுரை - புத்தர் அருளிய தம்மபதம்
திறனாய்வு - அறமும் அரசியலும் (மு.வ)
- இலக்கிய ஆராய்ச்சி (மு.வ.)
- தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்
(மயிலை சீனி.வேங்கடசாமி)
- பதினெண் கீழ்கணக்கும் தமிழர் வாழ்வும்
(சாமி.சிதம்பரனார்)
- பாரதியார் கட்டுரைகள்
- பாவாணர் படைப்புகள் (30 நூல்கள்)
வரலாறு
மொழி வரலாறு, இலக்கிய வரலாறு, வாழ்க்கை வரலாறு, நாட்டு வரலாறு, நாட்டுப்புற
இலக்கியங்கள், சிறுவர் இலக்கியங்கள், என பல இலக்கிய நூல்கள் அமைந்துள்ளன.
மொழி வரலாறு
தமிழ் மொழிவரலாறு (தொ.பொ.மீ)
இலக்கியவரலாறு சமணமும் தமிழும்
(மயிலை சீனி.வேங்கடசாமி)
தமிழ் இலக்கிய வரலாறு (மு.வ.)
பௌத்தமம் தமிழும்
(மயிலை சீனி.வேங்கடசாமி)
விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு
(மா.பொ.சி)
வாழ்க்கை வரலாறு
என்சரித்திரம் (உ.வே.சா)
நாட்டுவரலாறு குடியாட்சி (அப்பாதுரை)
தமிழகம் (கா.அப்பாதுரை)
தமிழ் இந்தியா (ந.சி.கந்தையாபிள்ளை)
தொண்டு (கா.அப்பாதுரை)
நாட்டுப்புற இலக்கியங்கள்
தமிழர் நாட்டுப் பாடல்கள் (நா.வானமாமலை)
மலையருவி (கி.வா.ஜகநாதன்)
முத்துப்பட்டன் கதைப்பாடல் (நா.வானமாமலை)
சிறுவர் இலக்கியங்கள்
வாண்டுமாமா படைப்புகள்
(கதைகதையாம் காரணமாம்)
உரோமன் வரிவடிவ நூல்கள்
தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய நூல்கள் முழுமையாக உரோம
ன் வரி வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
அகராதிகள்
தமிழ் இணைய பல்க்கலைக்கழக மின் நூலகத்தில் இலக்கண, இலக்கிய நூல்களே
யன்றிச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கி
லம் - தமிழ் அகராதி, பால்ஸ் அகராதி, மு.சண்முகம்பிள்ளையின் தமிழ் - தமிழ் அகரமுதல்
ஆகிய நான்கு அகராதிகள் இடம் பெற்றுள்ளன. சொற்களுக்கான பொருளை அகர வரிசை
முறையிலும், வேண்டிய சொற்களுக்கான பொருளைத் தேடிப் பெறும் வகையிலும், அச்சுவடி
வ அகராதியைப் பார்ப்பதைப் போலவே பக்கம் பக்கமாகப் பார்க்கும் வகையிலும் வசதிகள் செ
ய்யப்பட்டுள்ளன.
கலைச்சொற்கள்
சமுதாயவியல், கலை மானிடவியல், அறிவியல், மருத்துவவியல், தகவல் தொழில் நூ
ட்பவியல், சட்டவியல், கால்நடை மருத்துவவியல், பொறியியல் தொழில் நுட்பவியல், மனைஇய
ல், உயிரியத் தொழில் நுட்பவியல், வேளான்மைப் பொறியியல் ஆகிய துறைகளைச் சார்ந்த அ
ளவுகடந்த கலைச்சொற்கள் இந்நூலகத்தில் அடங்கியுள்ளது.
சுவடிக் காட்சியகம்
ஓலைச்சுவடிகள் உள்ள தமிழ் இலக்கியங்களைப் பாதுகாக்கும் வகையிலும் இம்மின்
னூலகம் பணியாற்றி வருகிறது. ஓலைச் சுவடிகளை ஒளிப்பட நகல் எடுத்துப் பாதுகாத்து வரு
கிறது. ஓலைச்சுவடிகள் மட்டுமன்றிச் சில அரிய காகிதச் சுவடிகளையும் பாதுகாத்து வைப்ப
தோடு அவற்றை இணையம் வழியாகக் காட்சிக்கும் அளிக்கிறது. அவ்வகையில் கீழ்க்கா
ணும் ஓலைச்சுவடிகள் காணக்கிடைக்கின்றன.
பண்பாட்டுக் காட்சியகம்
தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் பின்வரும் பகுதிகள் அமைந்
துள்ளன. ஒவ்வொன்று பற்றியும் சுருக்கமான விளக்கம், படக்காட்சிகள், ஒலி ஒளிக் காட்சிக
ள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
திருத்தலங்கள் - 14 சமணத்தலங்கள்
- 101 சைவத்தலங்கள்
- 93 வைணவத்தலங்கள்
- 9 இசுலாமியத் தலங்கள்
- 13 கிறித்துவத் தலங்கள்
திருவிழாக்கள் - 7 தேர் திருவிழாக்கள்
- 8 பல்வேறு விழாக்கள்
கலைகள் - 16 வகையான கலைகள்
வரலாற்றுச் சின்னங்கள் 3 சின்னங்கள்
விளையாட்டுகள் - 5 வகையான விளையாட்டுகள்

தமிழ் மொழியில் இன்று பரவலாக இருக்கும் நூல்களை அனைத்தும் மின்னூலாக மாற்றி வ


ருகின்றனர். மின்னூல்களை ஒரு கட்டமைப்பாக வைப்பதற்கு மின்னூலகங்கள் உருவாக்கின
ர். அந்நூலகத்தின் மூலமாக பல மின்னூல்களை வெளியிட்டு வருகின்றனர். இனி வரும் கால
ங்களில் கட்டமைக்கப்பட்ட புத்தகங்களைப் படிப்பதைத் தவிர்த்து விட்டு மின்னூல் படிக்கும்
முறை அதிகமாக வளர்ந்து வருகின்றன.
தமிழ் மின் புத்தகம்
வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்தில் கணினி மிக இன்றியமையாத

கருவியாக மாறிவருகிறது. தமிழன் இன்று கணினியுடன் நெருங்கிய தொடர்புடைய

இணையத்தில் தமிழைப் புகுத்தி அதன் வளர்ச்சியில் முக்கியப் பங்கேற்றுள்ளான்.

இணையப் பயன்பாட்டில் தமிழ்மொழி இரண்டாவது இடத்தைப் பெற்று வளர்ந்து

வருகிறது.[மேற்கோள் தேவை] ஆங்கில மொழி இணைய தளங்களைப் போல் தமிழ்

மொழியிலான இணையத் தளங்களும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இந்த

இணைய தளங்களில் படிக்கக்கூடிய தமிழ் மின் புத்தகங்கள் உருவாக்கும்

முயற்சியிலும் பல தமிழ் இணைய தளங்கள் முயன்று வருகின்றன.

மின் புத்தகங்கள்[தொகு]

இன்று அதிக அளவில் பயன்படுத்தும் புத்தகங்கள், தாளில் அச்சிட்டு, கட்டுமானம்

செய்து தயாரிக்கப்படுகின்றன. இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள செய்திகளைப்

போலவே கணினி உதவியுடன் தட்டச்சு செய்து இணையத்தில் இடம் பெறச் செய்து

அதை இணைய வழியில் படிக்கும் படியாக மின்புத்தகங்கள் உருவாக்கப்படுகின்றன.

இணையத்திலிருந்து இதனைப் தரவிறக்கம் செய்து கணினியில் சேமித்து வைத்துத்

தேவைப்படும் போது படிக்கும் நிலையிலும் மின் புத்தகங்கள்

உருவாக்கப்படுகின்றன.

மின் நூல்கள்[தொகு]

 முனைவர் கே.கல்யாணசுந்திரம், முனைவர் பி.குமார் மல்லிகாருசுணன் ஆகிய இருவரின்

முயற்சியால் மதுரைத் திட்டம் என்ற பெயரில் திருவள்ளுவர் திருநாள் தை முதல் தேதி

1998 ஆம் ஆண்டு சில மின்நூல்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

http://www.projectmadurai.org/pmworks.html

 27 ஆகஸ்டு 2001 தமிழ்மரபு அறக்கட்டளை மின்நூலை வெளியிட்டுள்ளது.

http://www.tamilheritage.org/old/index.html
 தமிழில் 2003 ல் முதல்வன் என்ற பெயரில் மின்-நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதனை வெளியிட்டவர் முனைவர் சி.சிதம்பரம் அவர்கள். இவர் தற்பொழுது

காந்திகிராமகிராமியப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் உதவிப்பேராசிரியராகப்

பணியாற்றி வருகின்றார்.

http://www.muthalvan.in/images/mudalvan28-09-20pdf.pdf பரணிடப்பட்டது 2016-

03-04 at the வந்தவழி இயந்திரம்

 இதனைத் தொடர்ந்து தமிழ்த்திணை ஆசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன்

அவர்களின் முன்முயற்சியோடு முனைவர் ம.இளையராஜா, முனைவர்

கா.வாசுதேவன்,முனைவர் மு.அருணாசலம், முனைவர் வே.கண்ணையன் இவர்களின்

துணையோடு தமிழ்த்திணை சார்பில் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் நடைபெற்ற

சி.பா.ஆதித்தனார் நூற்றாண்டு சிறப்புக் கருத்தரங்கில் (டிசம்பர் 2005) தமிழ்நாடு

சட்டப்பேரவை அந்நாளைய தலைவர் முனைவர் கா.காளிமுத்து அவர்கள் கருத்தரங்க

மின்-நூலை வெளியிட மகாகவி பாரதியின் பெயர்த்தி விஜயபாரதியின் வாழ்க்கைத்

துணைவர் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் P.K.சுந்தராஜன் (கனடா) அவர்கள்

பெற்றுக்கொண்டார்.

தமிழ் மின் புத்தகங்கள் உருவாக்கம்[தொகு]

ஒருவர் புத்தகமாக வெளியிட விரும்பும் ஆழ்ந்த, உட்பொதிந்த கருத்துக்கள்

அடங்கிய பொருட்கூறுகளை (அ) பகுதிகளை கணினி வழியாகத் தமிழ்

எழுத்துருக்களைப் பயன்படுத்தி, தட்டச்சு செய்து, அதை ஒரு கோப்பாக சேமித்துக்

கொள்ள வேண்டும். தட்டச்சு செய்த கோப்புக்குப் பயன்படுத்திய மென்பொருளைக்

கொண்டு இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவை இணையத்தின்

குறிப்பிட்ட இணைய முகவரியின் சேமிப்புக் கிடங்கில் சேர்ப்பிக்கப்படும். அந்தக்

கோப்பைப் பார்வையிடச் சொடுக்கும் பொழுது அந்த கோப்பு செயல்படும்

பக்கங்களாக மாறி குறிப்பிட்ட கணினித் திரைக்கு வருகிறது.

சிக்கல்களும், தீர்வுகளும்[தொகு]

 தமிழ்மொழியில் பல்வேறு வகையான எழுத்துருக்கள் உள்ளன. தமிழ் இணைய தள

அமைப்பாளர்கள் அவரவருக்கு எளிதான ஒரு தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்தி


இணைய தளங்களை அமைத்தனர். இதனால் அந்த இணையதளத்தைப் பயன்படுத்த

விரும்புபவர்கள் அந்த தமிழ் எழுத்துருவை தரவிறக்கம் செய்து அவர்களது கணினியில்

நிறுவிக் கொள்ள வேண்டும். அதன் பிறகே அந்த தளத்திலுள்ள செய்திகளைப் படிக்க

முடியும். தற்போது சில இணைய தளங்கள் மட்டுமே தனிப்பட்ட தமிழ்

எழுத்துருக்களைப் பயன்படுத்துகின்றன. அதிகமான தமிழ் இணைய தளங்கள் தமிழ்

ஒருங்குறி எழுத்துருக்களைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டன. இதனால் தமிழ்

இணைய தளங்களில் எழுத்துருச் சிக்கல்கள் ஓரளவு குறைந்துள்ளன.

 தமிழ் மொழியிலான மின் புத்தகங்கள் அதிக அளவாக பி.டி.எப் எனப்படும்

கோப்புகளாக உருவாக்கப்பட்டு விடுகின்றன. இந்தக் கோப்புகளைப் படிப்பதற்கான

மென்பொருளை மட்டும் நம் கணினியில் நிறுவிக் கொள்ள வேண்டும். இதன் மூலம்

இந்தக் கோப்புகளை எளிதில் படிக்க இயலும். சாதாரண இணைய இணைப்புள்ள

கணினிகளில், இந்தக் கோப்புகளின் அளவு அதிகமான நிலையில் திறப்பதற்கும்

தரவிறக்கம் செய்வதற்கும் சிறிது காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் இந்தக்

கோப்புகளில் அதிக அளவுகளை எடுத்துக் கொள்ளும் படங்கள் போன்றவற்றைத்

தவிர்த்து கருத்துக்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அவசியம்

தேவை எனும் நிலையில் மட்டும் படங்களை இணைக்கலாம்.

 தற்போது பிளாஷ் என்ற மென்பொருளைப் பயன்படுத்தி தமிழ் மொழியில் அமைந்த

எந்த ஒரு கோப்பையும் மின் புத்தகமாக எளிதில் மாற்ற முடிகிறது. இதன் மூலம்

அமைந்த மின்நூலை எளிதில் படிக்க முடிகிறது. இதில் அதிகமான பக்கங்களையும்,

படங்களையும் இணைக்கும் வாய்ப்பு உள்ளது.

பயன்பாடுகள்[தொகு]

 அதிகப் பக்கங்கள் கொண்ட நூல் பகுதிகளை கையடக்க வடிவில் சுருக்கிவிட முடியும்.

எளிதில் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும்.

 கட்டுமான நூல்களில் வண்ணப் புகைப்படங்களைக் கொண்டு அதிகப் பக்கங்களை

இணைக்க முடியாது. ஏனெனில் அதிக பொருட்செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால்

மின் நூல்களில் அதிக அளவில் வண்ணப் புகைப்படங்களை இணைத்து

வெளியிடமுடியும்.
 மின் நூல்களில் உள்ள பக்கங்களைத் தேவைக்கேற்ப பெரிதாக்கிப் பயன்படுத்த முடியும்.

ஆனால் சாதாரண நூல்களை இவ்வாறு பயன்படுத்த முடியாது.

 உலகின் எப்பகுதியிலும் எந்த நேரத்திலும் தேவையான பகுதிகளை இணையத்தில்

தேடுபொறிகளைக் கொண்டு எளிதாக தேடிப் பார்த்துப் பயன்படுத்த முடியும்.

 தேவையான மின்நூல்களை மின் வணிகம் (e-commerce) வழியாக வாங்கிப்

பயன்படுத்த முடியும்.

 அச்சிடப்பட்ட நூல்கள் அச்சுப் பிரதிகள் (Out of Print) இல்லாத சூழ்நிலை ஏற்பட

வாய்ப்புள்ளது. ஆனால் மின் புத்தகங்களைத் தேவையான நேரங்களில் உடனே

தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

 மின் புத்தகங்களில் உள்ள தகவல்களை ஆவணமாக நீண்ட காலம் பயன்படுத்த முடியும்.

அச்சிடப்பட்ட நூல்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சிதைந்து விடுகின்றன. ஆனால்

மின் புத்தகங்களின் ஆயுள் காலம் பன்மடங்கு நீடிக்கக்கூடியது.

கோப்பு வகைகள்[தொகு]

 epub
 mobi
 pdf

இவற்றில் epub ஆனது திறந்த வகையானது. html கோப்புகளின் zip வடிவமே இது.

எந்த அளவு திரைக்கும் ஏற்ப இதன் பக்கங்கள் சுருங்கி, விரியும் தன்மை

கொண்டவை. இதனால், கைபேசி, திறன்பேசி, பலகைக்கணிடிகளில் படிக்க ஏற்றது.

mobi ஆனது epub போன்றதே. ஆனால் திறந்த நிலைக் கோப்பு அல்ல. அமேசான்

நிறுவனத்தின் kindle(கிண்டில்) கருவிகள், மென்பொருட்களில் மட்டுமே இதைப்

படிக்க முடியும்.

PDF ஆனது அதிகம் அறியப்பட்ட கோப்பு வகை. ஆனால், பக்க அளவு மாற்ற

இயலாததால், கணிணியில் மட்டுமே படிக்க ஏற்றது.

You might also like