Professional Documents
Culture Documents
Korkkai Muthukkal
Korkkai Muthukkal
Korkkai Muthukkal
உலகின் மிகப்பெரிய முத்து நெதர்லாந்தில் ரூ.3 கோடிக்கு ஏலம் போனது PC: சங்கதி24
வேறு பெயர்கள்
முத்திற்கு தமிழில் நித்திலம் (எ.கா: நித்திலப் பைம்பூண் நிலாத்திகழ்
அவிரொளி (சிலப்பதிகாரம்.), தூமணி (எ.கா: துங்கக் கரிமுகத்துத்
தூமணியே – (நல்வழி) என்று சில பெயர்கள் உண்டு. வடமொழியில் முக்த
(Muktha) என்று பெயர். வட்டம், அனுவட்டம், ஒப்பு, குறு, சப்பாத்தி, இரட்டை,
கரடு என பல முத்து வகைகள் இருந்ததாகச் சோழநாட்டுக் கல்வெட்டுகள்
பதிவுசெய்துள்ளன.
உயர்தரமான அல்லது முதல்தரமான முத்தினை ஆணிமுத்து என்று
குறிப்பிடுவர்.
(எ.கா.)
கண்டேனே முத்துறையும் நாடும்கண்டேன் கருவான ஆணிமுத்து
தானுங்கண்டேன்
கொண்டேனே வெகுதூரங் குளிகைகொண்டு கொப்பெனவே முத்துறையும்
பதியுங்கண்டேன்
விண்டிட்ட குளிகையது பலத்தினாலே வீரான ஆழிவரை சுத்திகண்டேன்
உண்டதொரு குண்ணளவு முத்துகண்டேன் வுகமையுள்ள சிப்பிமுத்து
கண்டேன்பாரே
(போகரின் சப்த காண்டம் 4109)
வரலாறு
முத்துக்கள் மனித வரலாற்றுடன் நெருக்கமாக இணைந்துள்ளது. இவை
உலகின் மிகப் பழமையான மணிக்கற்களாக வரலாற்றுக் காலத்திற்கு
முன்பிலிருந்தே மதிக்கப்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாகவே
முத்துக்களின் கண்டுபிடிப்பிற்கு ஒரு நபரை மட்டும் பொறுப்பாக்க இயலாது.
கடற்கரை ஓரங்களில் ஆதிமனிதன் உணவைத் தேடி அலைந்த போது
முத்துக்கள் கண்டறியப்பட்டதாக நம்பப்படுகிறது.
… … … … …. … … ஈண்டு நீர்
முத்துப்படு பரப்பின் கொற்கை முன் துறை
(நற்றிணை 23: 5 – 6, கணக்காயனார்
முசிறி
சேரநாட்டின் துறைமுகமான முசிறி சுள்ளி என்னும் பேரியாறு (தற்போது
பெரியார்) கடலோடு கலக்கும் இடத்தில் வடகரைமேல் கடற்கரைப் பக்கத்தில்
அமைந்திருந்தது. கிரேக்க யவனர் இந்தத் துறைமுகப் பட்டினத்தை முசிறிஸ்
என்றும், வடமொழியாளர்கள் மரீசிபட்டணம் என்றும் கூறினார்கள். தற்போது
பரவூருக்கு அருகில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பட்டணம்
(Malayalam: പട്ടണം) (அமைவிடம் 10.15654°N அட்சரேகை 76.208982°E
தீர்க்கரேகை) என்னும் கிராமமே அன்றைய முசிறி துறைமுகப் பட்டணம்
என்பதை 2007, 2008 மற்றும் 2015 ஆண்டுகளில் முசிறி மரபுத் திட்டத்தின்
(Muziris Heritage Project) கீழ் இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள்
உறுதி செய்துள்ளன.
பந்தர்
சேரநாட்டுத் துறைமுகப் பட்டணமாகிய முசிறியில் முத்துக்கள் கிடைத்தன.
இந்த முத்துக்கள் பந்தர் என்னும் ஊரில் விற்கப்பட்டன. பெரிபுளூஸ் பந்தர்
துறைமுகத்தை Balita என்று குறிப்பிட்டுள்ளார். ‘பந்தர்” என்ற அரபுச்
சொல்லுக்குத் துறைமுகம் என்று பொருள். அரபிக் கடலோரத்
துறைமுகங்களான கொடுமணம், பந்தர் ஆகிய இரண்டும் பத்துப்பாட்டில்
இணையாகவே குறிப்பிடப்படுகின்றன.