Professional Documents
Culture Documents
உத்₃த₃வ கீதை₃ - அத்தியாயம்-04
உத்₃த₃வ கீதை₃ - அத்தியாயம்-04
உத்₃த₃வ கீதை₃ - அத்தியாயம்-04
ஶ்ரீபகவான் உவாச
மயோதி3 தேஷ்வவஹித: ஸ்வர்மேஷூ மதா4 ஸ்ரிய |
வர்ணாசிரம குலாசாரமகாமாத்மா ஸமாசரேத் || 1 ||
ஶ்ரீபகவான் கூறினார்
என்னால் உபதேசிக்கப்பட்டக் கருத்துக்களில் கவனத்தை செலுத்து. வேதம், ஸ்ம்ருதி, ஆகம,
புராணங்களில் என்னால் கூறப்பட்ட தர்மங்களை, உபதேசங்களை கவனத்துடனும் அனுசரிக்க
வேண்டும். உன்னுடைய கடமைகளை என்னையே சரணடைந்தவனாக அனுசரிக்க வேண்டும்.
இறைவனிடத்தில் சரணாகதி என்பது அவரிடத்தில் வைக்க வேண்டிய
முழுநம்பிக்கையை குறிக்கின்றது
ஸமாசரேத் – நன்கு செய்வாயாக
அகாமாத்மா – நிஷ்காமபாவம்
வர்ணாசிரம குல ஒழுக்கங்களை நிஷ்காம பாவத்துடனும், பலனில் பற்றுதலின்றி கவனத்துடனும்
செய்ய வேண்டும்.
மனோரத 2 – பகற்கனவு
உலக விஷயங்களில் கிடைக்கும் இன்ப, துன்பங்களை தூங்கும்போது காணும் கனவில் அடையும்
இன்ப, துன்பங்ளுக்கு பகவான் ஒப்பிடுகிறார். விழித்துக் கொண்டிருக்கும் போது காண்கின்ற
கற்பனைகளில் கிடைக்கின்ற சுகங்களை வெறும் எண்ணங்கள்தான் கொடுக்கின்றது. எனவே
எண்ணங்கள்தான் சுக-துக்கத்தைக் கொடுக்கின்றது, பொருட்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள
வேண்டும்.
ஸுப்தஸ்ய விஷயாலோகஹ - தூங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் காணும் பொருட்களும்
த்4 யாயதோ வா மனோரதஹ - விழித்துக் கொண்டிருப்பவனின் கற்பனை உலகத்தில்
நானாத்மகத்வாத்3 - மனதில் பலவிதமான காண்கின்ற பொருட்களும்;
விபலஹ - பொய்யானவை
Page 1 of 11
ததா3 - அவ்விதம்
கு3 ணைஹி‘ - இந்திரியங்களால்
பேதாத்மதீஹி - பார்த்து அனுபவித்துக் கொண்டிருக்கும் உலகமும் நிலையானதல்ல,
உண்மையானதல்ல
Page 2 of 11
வேதாந்த மாணவர்களிடத்து இருக்க வேண்டிய ஒன்பது பண்புகளைக் பகவான் கூறுகிறார்.
1. அமானி - கர்வமற்றவன், பணிவுடன் இருப்பவன் (உடல், மனம், வாக்கு)
2. அமத்ஸரஹ - பொறாமையற்றவன். பொறாமையானது மற்றவர்களின் நிலையோடு ஒப்பிட்ட
பார்ப்பதால் வருகின்றது . தாழ்வு மனப்பான்மையினாலும் பொறாமை
வருகின்றது
3. த 3 தஹ - திறமையுடன் செயல்படுபவன் – தமோகுணத்திலிருந்து விடுபட்டவனாக
இருப்பவன். எதையும் சரியாக புரிந்து கொண்டு செயல்படும்
திறமையுடையவன்
4. நிர்மமஹ - மமகாரம் இல்லாதிருப்பவன்
5. த்3 ருட 4 ஸௌஹ்ருத 3: - எல்லோரிடமும் உறுதியான, மென்மையான உறவு வைத்திருப்பவன்
(ஸௌஹிருத)
6. அஸத்வரஹ - நிதானமாக செயல்படுபவன்; அவசர அவசரமாக எதையும் செய்யாதவன்
7. அர்த 2 ஜிக்3 ஞாஸு - வேதாந்தத்தையும், பிரம்மத்தையும் அறிந்து கொள்ள விரும்புவன்
8. அனஸூயு: - எதிலும் குறைகாணாதவன்; சாஸ்திரத்தில் குறை காணாதவன்
9. அமோக 4 வாக் - பயனற்ற சொற்களை பேசாதவன், வீண்பேச்சு பேசாதவன்
மனைவி, மகன், மகள், வீடு, நிலம், சொத்து, உறவினர்கள், நண்பர்கள் போன்றவற்றில் அதிக
பற்றுடன் இருக்கக்கூடாது. இவைகள் இல்லாமலும் வாழமுடிய வேண்டும். எல்லோரையும்
சமநோக்குடன் பார்க்க வேண்டும். தன் நலனைப் போலவே எல்லோருடைய நலனிலும்
சமநோக்குடன் இருக்க வேண்டும்.
விலக்ஷணஹ - வேறுபடுகின்றது.
Page 3 of 11
ஈக்ஷிதா - பார்ப்பவனாக இருக்கும் போது, வெறும் பார்வையாளனாக இருக்கும்போது
ஸ்வத்3 ருக் - தன்னுடைய இருப்புக்கு தானே சாட்சி. உதாரணமாக சூரியனை பார்ப்பதற்கு
வேறு வெளிச்சம் தேவையில்லை, அது தானாகவே தெரிந்து கொண்டிருப்பது
போல ஆத்மாவை புரிந்துகொள்ள வேண்டும்.
Page 4 of 11
தஸ்மாஜ்ஜிக்3 ஞாஸயாத்மானமாத்மஸ்த 2 ம் கேவலம் பரம் |
ஸங்க 3 ம்ய நிரஸேதே3 தத்3 வஸ்துபு3 த்3 தி4 ம் யதா2 க்ரமம் || 11 ||
ஆசார்யஹ – குருவானவர்
அரணி ஆத்3 யஹ ஸ்யாத் - அக்னி உண்டாக்க பயன்படும் நிலையாக இருக்கும்
அடிமரக்கட்டையாக இருக்கிறார்.
அந்தேவாஸ்யஹ - குருவிற்கு அருகே வாழ்பவர், குருவை அடைந்து ஆத்மஞானத்தை அடைய
விரும்பும் சிஷ்யன்
உத்தர அரணி - மேலேயுள்ள அரணி கட்டையாக ,இருக்கிறான்
தத்ஸந்தானம் - அரணிக்கட்டையை உரசுவதைப் போல இருப்பது
ப்ரவசனம் - குரு உபதேசம் செய்தல்
வித்3 யாஸந்தி4 ஹி - ஞானம் பலனாக கிடைக்கின்றது, அக்னி உண்டாவதைப் போல
ஸுகா2 வஹ - இந்த ஞானத்தின் பலன் நிலையான மனநிறைவை, மோட்சத்தைக் அடைவதாகும்
வைஶாரதீ3 ஸாதிவிஶுத்3 த 4 பு4 த்3 தி4 ர்து4 னோதி மாயாம் கு3 ணஸம்ப்ரஸூதாம் |
கு3 ணாம்ஶ்ச ஸந்த 3 ஹ்ய யதா3 த்மமேதத் ஸ்வயம் ச ஶாம்யத்யஸமித்3 யதா2 க்3 னி: || 13 ||
Page 5 of 11
ஏதத் – அதுபோல ஆத்மஞானமும்
கு3 ணாம்ஶ்ச ஸந்த 3 ஹ்ய – முக்குணங்களையும் எரித்துவிட்டு அதன் பலனை கொடுத்துவிட்டு
சென்று விடுகிறது.
Page 6 of 11
மீமாம்ஸகர்களுடைய கருத்துப்படி கர்மங்களை செய்து கொண்டிருக்கும் கர்த்தாவானவர்கள்
சுதந்திரமற்றவர்களாக இருக்கிறார்கள். அடிமையாகவே இருக்கிறாற்கள். செயலின் பலனை சுக
துக்கங்களை அனுபவிக்கும் போக்தாவும் சுதந்திரமற்றவர்களாக இருக்கிறார்கள். துயரத்தில்தான்
அகங்காரத்தின் சக்தியின் எல்லையை அறிகின்றோம். எனவே இதிலிருந்து மேலானதாக
இருக்கின்ற ஒரு சக்தியை நாடமுயற்சி செய்வோம். இவ்வாறு அடிமைப்பட்டிருக்கும் ஒருவனுக்கு
எந்தப் பொருள்தான் மகிழ்ச்சியைத் தரும்.
இந்த உலகத்தில் அடைய வேண்டிய லட்சியமாக எதுவும் கிடையாது என்ற கருத்தானது இதில்
சுட்டிக் காட்டப்படுகிறது. அறிவுடன் செயல்பட்டு உலகத்தில் உள்ள செல்வங்களை
அடைந்தவனாலும் சுகம் என்பது சிறிதளவு கூட காணப்படவில்லை. அதுபோல
அறிவில்லாதவர்கள் எப்பொழுதுமே துக்கப்படுகிறார்கள் என்பதும் இல்லை. அதிக அறிவு, புகழ்,
செல்வம், சுகம் தரும் சூழ்நிலை இவைகளை அடைவதால் சுகமடையலாம் என்ற இந்த
அகங்காரம் கொள்வதால் பயனெதுவும் இல்லை.
Page 7 of 11
சுகம் கொஞ்சம்தான் அடைகிறோம் என்ற உண்மையை புரிந்து
கொள்ள வேண்டும்.
க்ருஷிவச்சாபி நிஷ்ப 2 லம் விவசாயி எவ்வளவு உழைத்தாலும் நல்ல பலன் கிடைக்கும் என்று
உறுதியாக கூறமுடியாது. அப்படி பலன் கிடைக்காமல்
போய்விட்டால் உழைப்பு வீணாகி போய்விடுகிறது
அந்தராயை – தடைகள்
ஒருவேளை எந்த இடையூறுமில்லாமல் தர்மமானது நன்கு அனுஷ்டானம் செய்யப்பட்டு சுகம்
தருகின்ற மேலுகங்களை அடைந்தாலும், அந்த லோகத்தை அவன் எவ்விதம் அடைகிறான்,
எவ்வாறு இருக்கிறான் என்பதை சொல்கிறேன் கேள்.
Page 8 of 11
எதுவரை புண்ணியம் இருக்கின்றதோ அதுவரை சொர்க்கத்தின் இன்பங்களை அனுபவிக்கின்றான்.
புண்ணியம் தீர்ந்தபின்னே அவன் விரும்பாவிட்டாலும்கூட காலம் அவனைக் கீழேத் தள்ளிவிடும்.
Page 9 of 11
மோட்சம் என்பது நிலையான சுகத்தைத் தரும் ஒரு வஸ்துவாக நினைத்தால் அது தவறு.
மோட்சம் என்பது விசேஷ அனுபவத்திற்குட்பட்டதல்ல. அனுபவிப்பது எல்லாம் சம்சாரம். மோட்சம்
என்பது சாமான்ய அனுபவம் எப்பொழுதும் மனநிறைவுடன் இருக்கின்றேன் என்ற உணர்வுடன்
இருப்பதுதான் மோட்சம். நான் ஆத்மா, சாட்சி என்ற நினைப்புடன் இருப்பது. கர்த்தாவும் அல்ல,
போக்தாவும் அல்ல.
உத்3 த 4 வ உவாச:
கு3 ணேஷு வர்தமானோS பி தே3 ஹஜேஷ்வனபாவ்ருத: |
கு3 ணைர்ன ப 3 த்3 த்4 யதே தே3 ஹீ ப 3 த்3 த்4 யதே வா கத 2 ம் விபோ4 || 35 ||
உத்தவர் கேட்கிறார்:
விபோ4 - பலவாக காட்சியளிக்கும் இறைவா!
கு3 ணேஷு வர்தமான அபி உடலிலிருந்து கொண்டிருக்கும்போது அதிலிருந்து செயல் செய்து
கொண்டிருந்த போதிலும் அதனால் கட்டுப்படாமல், தாக்கப்படாமல்,
உடல்களாலும், செயல்களாலும் ஞானி எப்படி பந்தப்படாமல்
இருக்கின்றான்? மற்றவர்கள் எப்படி பந்தப்படுகிறார்கள்?
Page 10 of 11
முக்தியடைந்தவன் நடத்தை எப்படியிருக்கும்?
ஞானி எவ்விதம் இருப்பான்? எப்படி நடந்து கொள்வான்? எந்தெந்த அடையாளங்களால் அவனை
அறிந்து கொள்ள முடியும்? எதை உட்கொள்வான்? போக்தாவாக இருக்கும்போது என்ன
மனநிலையில் இருப்பான்? கர்த்தாவாக இருக்கும்போது எவ்விதம் செயல்படுவான்? எப்படி
உறங்குவான்? எப்படி அமர்ந்திருப்பான்? எப்படி, எவ்விதம் செல்வான்?
Page 11 of 11