Professional Documents
Culture Documents
உத்₃த₃வ கீதை₃ - அத்தியாயம்-05
உத்₃த₃வ கீதை₃ - அத்தியாயம்-05
உத்₃த₃வ கீதை₃ - அத்தியாயம்-05
ஶ்ரீபகவான் உவாச
ப 3 த்3 தோ4 முக்த இதி வ்யாக்2 யா கு3 ணதோ மே ந வஸ்துத: |
கு3 ணஸ்ய மாயாமூலத்வான் ந மே மோக்ஷோ ந ப 3 ந்த 4 னம் || 1 ||
ப 3 த்3 தோ4 முக்த இதி - நான் பந்தத்துடன் இருக்கிறேன். மோட்சத்தில் இருக்கிறேன் என்ற
வ்யாக்2 யா - நினைவானது, எண்ணமானது, அனுபவமானது
மே கு3 ணதஹ ந வஸ்துத: - இறைவனாகிய என்னுடைய சத்துவ, ரஜஸ், தமஸ் குணத்தின்
காரணமாக வந்திருக்கிறது. உண்மையிலே அவைகள் இல்லை.
கு3 ணஸ்ய மாயாமூலத்வான் – முக்குணங்களுக்கு என்னுடைய மாயையே மூலமாக உள்ளது
ந மோக்ஷோ ந ப 3 ந்தனம் – பந்தமும், மோட்சமும் கிடையாது.
சத்துவம் மோட்சத்திற்கு காரணமாகவும், ரஜோ குணம் சம்சாரத்தின் வெளிப்பாடாகவும், தமோ
குணம் சம்சாரத்திற்கு காரணமாகவும் இருக்கிறது. முக்குணங்கள் தனித்து இயங்க முடியாது.
எனவே இது மித்யாவாக புரிந்து கொள்ளலாம்.
Page 1 of 15
ஜீவஸ்ய ஏவ – ஜீவனிடத்தில்தான் பந்தமும்,மோட்சமும் இருக்கிறது
மஹாமதே – ஹே உத்தவரே! (மதி மிக்கவரே)
பந்த 3 ஹ அஸ்ய அவித்3 யா – அந்த ஜீவன் அறியாமையின் வசத்தில் இருக்கும் போது பந்தத்தில்
இருக்கிறான்
வித்3 யயா – வித்யாவினுடைய வசத்தில் இருக்கும் போது மோட்சத்தில் இருக்கிறான்
தத 2 இதர அனாதி3 – இவைகள் அனாதி காலத்திலிருந்து இருந்து கொண்டிருக்கிறது.
ஜீவாத்மாவிற்கு நான்கு அம்சங்கள் உண்டு. அவைகள் ஸ்தூல உடல், சூட்சும உடல் (மனம்),
சிதாபாஸம் (மனதில் பிரதிபலிக்கும் ஆத்மா), மனதிலுள்ள உணர்வு தத்துவம், சைதன்ய ஸ்வரூபம்
அல்லது சித் ஸ்வரூபம்
Page 2 of 15
இரண்டு பறவைகள் (முக்தன், சம்சாரி) உணர்வின் அடிப்படையில் ஒரே தன்மையுடையது. பிரிக்க
முடியாதவைகள், கர்ம வசத்தினால் இந்த மரத்தில் கூடுகட்டிக் கொண்டு அவரவர்கள்
கர்மபலன்களுக்கேற்ப உடல் என்ற மரத்தில் மனம் என்ற கூடு கட்டிக் கொண்டு அந்த மரத்தில்
உள்ள பழங்களை சாப்பிட்டு கொண்டிருக்கிறது. மற்றொரு பறவை சாப்பிடாமல் இருந்த
போதிலும் (சாப்பிட்டுக் கொண்டிருக்கின்ற பறவையை விட) அதிக பலத்துடன் இருக்கிறது.. ஒரு
பறவை கர்த்தா, போக்தாவாக இருந்து கொண்டு அதன் பலன்களை அனுபவித்துக்
கொண்டிருக்கின்றான். சுக-துக்கங்களில் மூழ்கியிருக்கின்றான். வேறொரு பறவை (ஞானி)
வைராக்கிய ஞான பலத்துடன் இருக்கிறான். எதையும் அனுபவமாக ஏற்றுக் கொள்ளமாட்டான்.
தே3 ஹஸ்த 2 அபி ந தே3 ஹஸ்த 2 ஹ வித்3 வான் – அவன் உடலோடு இருந்தாலும் உடல்
இல்லாதவன்.
பொதுவாக ஒவ்வொருவரும் அவரவர் உடலின் தர்மத்திற்கேற்றவாறு செயல்பட்டுக்
கொண்டிருப்பார்கள். ஞானி எந்த சூழ்நிலையிலும் தன் அறிவிலிருந்து பிறழ மாட்டான். உடல்
சக்தியுடன் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதனால் பாதிக்கப்படமாட்டான்.
வித்3 வான் ஸ்வப்னாத் யதா2 உத்தி2 தஹ – கனவிலிருந்து விழித்துக் கொண்டவனைப் போல
இருப்பான் ஞானி
அதே3 ஹஸ்த 2 ஹ அபி தே3 ஹஸ்த: - இல்லாத தேகத்துடன் அபிமானம் வைத்து
செயல்படுபவன் தேகத்தையுடையவனாக இருக்கிறான்
குமதி ஸ்வப்னத்3 ருக்3 யதா2 – அக்ஞானி கனவை கண்டு கொண்டிருப்பவன் போல இந்த நிலை
இருக்கின்றது.
Page 3 of 15
ந அஹம் குர்யான் – ஞானி நான் எதுவும் செய்யவில்லை என்று நினைத்துக் கொண்டிருப்பான்.
Page 4 of 15
நானாவாத்3 வினிவர்ததே – இருமையிலிருந்து விடுதலை அடைகின்றான்.
ஶிதயா-கூர்மையாக்குதல்,
Page 5 of 15
ந குர்யாத் ந வதேதி – எதையும் செய்யாமலும், எதையும் பேசாமலும்
கிஞ்சித் ந த்4 யாயேத் – தியானம் எதுவும் செய்யாமலும்
ஆத்மாராமஹ – தன்னிடத்திலேயே மகிழ்ந்து கொண்டிருப்பான்
அனயா வ்ருத்த்யா – இப்படிபட்ட வாழ்க்கை முறையில்
விசரேத் ஜட 3 வன் முனி: - ஜடம் போல வாழ்ந்து கொண்டிருப்பான் ஞானி. மற்றவர்கள்
பார்வைக்கு சாதாரணமாக தோன்றிக் கொண்டிருப்பான்.
விளக்கம்
பொதுவாக உலகத்திலுள்ள விஷயங்களை அனுபவிக்க வேண்டும் என்று போக்தாவாக நிறைய
பேர் இருக்கிறார்கள். வேறு சிலர் சாதகனாக இருக்கிறார்கள், மோட்சத்தை அடைவதற்கான
சாதனங்களை பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். வெகு சிலரே ஞானியாக இருக்கிறார்கள். ஞானி
சாதகனாக இருக்கும்போது செய்ய வேண்டியவைகளை செய்துமுடித்தவன். நற்குணங்கள் அவனது
சுபாவமாக இருக்கும்.
கா3 ம் து3 க்3 த 4 தோ3 ஹாமஸர்தீ ச பார்யாம் தே3 ஹம் பராதீ3 னமஸத்ப்ரஜாம் ச |
வித்தம் த்வதீர்தீ2 க்ருதமங்க 3 வாசம் ஹீனாம் மயா ரக்ஷதி து3:க 2 து2:கீ || 19 ||
Page 6 of 15
மே பா4 வனம் கர்ம – என்னுடைய புனிதமான செயல்களின் பொருளை தெரிந்து கொள்ளாத
அஸ்ய - இந்த
ஸ்திதி உத்3 ப 4 வ ப்ராண நிரோத – ஸ்ருஷ்டி, லய, பராமரிப்பு
இத்தகைய பேராற்றல் படைத்த பகவானைப் போற்றாத, பகவானுடைய அவதாரங்களை லீலா
வினோதங்களை கூறாத உரைகள், வெறும் அர்த்தமற்ற சப்தத்தில் மட்டும் தேர்ச்சி பெற்று
நின்றுவிடக் கூடாது
Page 7 of 15
உத்தவரே! இவ்வாறு என் பொருட்டாகவே என்னையே புகலிடமாகக் கொண்டு தர்ம-அர்த்த-காம
புருஷார்த்தங்களை செய்துவருபவர் என்றும் இருக்கின்ற பரமாத்வான என்னிடம் அசைக்க
முடியாத பக்தியை பெறுகிறார்.
ஶ்ரீஉத்3 த 4 வ உவாச
ஸாது4 ஸ்தவோத்தமஶ்லோக மத: கீத்3 ருக்3 வித 4: ப்ரபோ4 |
ப 4 க்திஸ்த்வய்யுபயுஜ்யேத கீத்3 ர்ஶீ ஸத்3 பி4 ராத்3 ருதா || 26 ||
உத்தவர் கேட்டார்.
உத்தமஶ்லோக – நற்கீர்த்தி உடையவரே! பகவானே!
கீத்3 ருக்3 வித 4: - எப்படிபட்ட குணங்களுடன் இருப்பான்
பக்தி த்வய உபயுஜ்யேத – உங்களிடத்தில் செலுத்தப்படுகின்ற பக்தியானது
ஸத்3 பி4 ராத்3 ருதா – சான்றோர்களால அங்கீகரிக்கப்பட்ட அல்லது பின்பற்றப்பட்ட பக்தியானது
கீத்3 ருஶீ – எந்த முறையில் இருக்கும்
Page 8 of 15
ஶ்ரீகிருஷ்ண பகவான் கூறுகிறார்
இந்த ஸ்லோகத்தில் ஏழு பண்புகளை கூறியிருக்கிறார். இவைகளை நாம் கடும் முயற்சி செய்து
அடைய வேண்டும்.
ஸர்வதேஹினாம் – எல்லா ஜீவராசிகளிடத்திலும் கீழே கூறப்பட்ட நற்பண்புகளுடன் நடந்து
கொள்ள வேண்டும்.
1. க்ருபாலு – கருணையோடும், தயையோடும், பிறருடைய துன்பத்தைக் கண்டு இரங்கும் மனதை
உடையவனாக இருத்தல், அதாவது அஹிம்சையை பின்பற்ற உதவும் குணம்
2. அக்ருத் த்3 ரோஹம் – நம்பிக்கை துரோகம் செய்யாது இருத்தல், நம்மிடம் பிறர் வைத்திருக்கும்
நம்பிக்கைக்கு துரோகம் செய்யக்கூடாது. அதைக் காப்பாற்ற வேண்டும்.
3. திதிக்ஷூ – சகிப்புத்தன்மையுடையவன்; பொறுத்துக் கொள்ளும் இயல்புடையவனாக இருத்தல்,
தனக்கு துயரம் வரும் போது இவ்வாறு இருக்க வேண்டும். தனக்கு வந்த துயரத்தை நீக்குவதற்கு
முழு முயற்சியெடுக்க வேண்டும். அதில் வெற்றி கிடைக்கும் வரை பொறுமையாக இருக்க
வேண்டும். அதாவது நாம் எடுக்கும் நல்ல முயற்சிக்கு வரும் தடைகளை பொறுத்துக் கொள்ள
வேண்டும்.
4. ஸத்யஸாரம் – உண்மையாக இருத்தல், உண்மையையே பேசுதல், சத்தியத்தை பலமாக
கொண்டிருத்தல், வாய்மையில் நம்பிக்கை வைத்தல்
5. அனவத்3 யாத்மா – நற்குணங்களுடன் இருப்பவன்; பொறாமைப் போன்ற தீயகுணங்கள் எதுவும்
இல்லாதவன், பண்பாடு உடையவன், மனிதநேயம் மிக்கவன்
6. ஸமஹ – சமநோக்கு உடையவன்; எல்லா நிலைகளிலும் சமபுத்தி உடையவனாக இருத்தல், கர்ம
பலன்களை அனுபவிக்கும்போதும், இருமைகளை அனுபவிக்கும் போதும் சமமாக இருத்தல், ஒரே
மனநிலையில் இருத்தல்
7. ஸர்வௌபகாரகஹ – எல்லோருக்கும் உதவி செய்பவன்
Page 9 of 15
17. மத் சரணஹ – இறைவனிடத்தில் (என்னிடத்திலே) சரணைடைந்தவன். அவர் வகுத்து கொடுத்த
தர்ம பாதையில் வழுவாது இருந்தால்தான், இந்த சரணாகதி பயனளிக்கும். எனவே தர்மத்தில்
முழுசிரத்தை உடையவனாக இருப்பவன்
18. முனி: - ஞானியாக இருப்பவன். எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருப்பான், வாக்கை
கட்டுபடுத்தியவனாக இருப்பான்
Page 10 of 15
ஸ்வகான் த 4 ர்மான் – தன்னைச் சார்ந்துள்ள, தனக்குரிய கடமைகளை ( ஸ்வதர்மங்களை)
மயா ஆதி3 ஶ்டான் அபி – இறைவனாகிய என்னால் வகுத்து கொடுக்கப்பட்ட கடமைகளாக
இருந்தாலும்
மாம் பஜதே – என்னை நாடி வருவதற்காக, என்னை அடைவதற்காக
ஸந்த்யஜ்ய – அவைகளை சிறிது சிறிதாக விட்டு விடவேண்டும்
ஸஹ ஸத்தமஹ – அவன்தான் மிகவும் உத்தமமானவன், ஸத்புருஷர்களிலே மிகவும்
உயர்ந்தவன்
30. பக்தி
ஞாத்வா, அக்ஞாத்வாத்2 – அறிந்தும், முழுமையாக அறியாமலும், முழுமையாக அறிந்தும்
யே மாம் - எந்த சாதகர்கள் என்னை
யாவான் யாத்3 ருஶ - என்ன மகிமை பொருந்தியவன்? எப்படிபட்டவன்
யஶ் ச அஸ்மி – நான் யார்?
இவைகளை தெரிந்து கொண்டோ, தெரியாமலோ
அனன்ய பா4 வேன – வேறெதிலும் நாட்டமில்லாமல்
யே ப 4 ஜந்த்யா – யார் என்னை மட்டும் வழிபடுகின்றார்களோ
தே மே - அவர்களை
பக்த தமா மதா – உயர்ந்த பக்தர்கள் என்பது என் கருத்து
ஞானியின் பக்தி
பகவானுடைய உண்மை ஸ்வரூபத்தை முழுவதுமாக அறிந்தவர்கள். நானேதான் அந்த ஈஸ்வர
ஸ்வரூபம் என்று புரிந்து கொண்டவர்கள். ஸத்-சித் ஆனந்த ஸ்வரூபமாக உள்ளார் என்று அறிந்து
கொண்டவர்கள். பகவான் வரையறுக்க முடியாதவன் என்று அறிந்து கொண்டவன்.
தன்னிடத்திலிருந்து வேறுபடாதவனாக என்னை உணர்ந்துள்ளார்களோ அவனே மிகவும் மேலான
பக்தன் என்பது என் கருத்து
Page 11 of 15
ப்ரஹ்வ – விதவிதமான முறையில் பகவானை நமஸ்கரித்தல்
கு3 ணகர்ம அனுகீர்தனம் – பகவானின் மேன்மையான குணங்களையும், அவதாரத்தின் போது
செய்த செயல்களையும் புகழ்ந்து மீண்டும் மீண்டும் பாடுதல்
உத்தவ – ஹே உத்தவா1
மத்கதா3 ஶ்ரவணே ஶ்ரத்3 தா4 – என்னைப் பற்றிய கதைகளை கேட்பதில் சிரத்தை
மத்3 அனுத்4 யானம் – என்னையே எப்போதும் தியானித்துக் கொண்டிருத்தல்
ஸர்வலாப 4 உபஹரணம் – தனக்கு கிடைப்பனவற்றையெல்லாம் பகவானுக்கு படைத்து விட்டு
எடுத்துக் கொள்ளுதல்
தா3 ஸ்யேன் ஆத்ம நிவேதனம் – உடலையும், மனதையும் அவருடைய சேவைக்காக அவரிடம்
ஒப்படைத்தல்
Page 12 of 15
விளையாட்டு மைதானம், நகர நிர்மாணம், கோவில் கட்டுதல் போன்றவைகளை
நிறைவேற்றுவதில் பேரார்வம் காட்ட வேண்டும்
Page 13 of 15
கொடுப்பதாலும், உத்தம பிராமணனுக்கு விருந்தளிப்பதன் மூலமாகவும், பச்சைப் பசுமையான
புல்லை பசுவுக்குக் கொடுத்தும் என்னை பூஜிக்கலாம்.
என் பக்தர்களை தன் உறவினரைப் போல அன்புடன் பாவிப்பதும், எப்போதும் மனம் என்ற
ஆகாசத்தில் இறைவனான என்னை தியானம் செய்வதன் மூலமும், காற்றை ஆலம்பனமாக
வைத்துக் கொண்டு முக்கிய பிராணன் என்ற கருத்துடனும், தண்ணீரால் இறைவனக்கு
அர்ப்பணிக்கப்படும் பொருட்களை மந்திரங்களால் தூய்மைப்படுத்தி என்னை வழிபட வேண்டும்.
Page 14 of 15
உத்தவா! பக்தியோகத்தின் மூலமாகவும், ஸத்ஸங்கத்தின் மூலமாகவும் இவைகளை தவிர
சம்சாரக்கடலை கடப்பதற்கான வேறு வழிகள் இல்லை என்பது என்னுடைய கருத்து. நான்
சான்றோர்களுக்கு புகலிடமாக இருக்கின்றேன்.
Page 15 of 15