நவக்கிரகங்களில் இராகு ஒன்றாகக் கருதப்பட்டாலும் இதுவும் கேதுவும்
நிழல் கிரகங்களாகும். சாயா கிரகங்கள் என்றும் கூறுவர்.
இது பெண் கிரகம்.ஆகும். இதைக் கருங்கோள் என்றும் கூறுவர். இது மூன்று
கிரணங்களை உடையது. இது ஓர் இராசியை 30 டிகிரியைக்கடக்க 14 ஆண்டுகளா
அடையும் கிறது. பள்னிரு இராசிகளையும் கடக்க 18 ஆண்டுகள் ஆகின்றன.
எல்லா கிரகங்களும் இராசியில் முன்னோக்கிச் செல்ல இராகுவும், கேதுவும் பின்னோக்கி சஞ்சாரம் செய்யும், வக்கிரம் சமயத்தில் மட்டும் முன்னோக்கிச் செல்வதுண்டு. வக்கிரம் பற்றி கோச்சார பலனைக் கூறும்போது கவனிக்கலாம்.
இராசிகளில் இதற்கென்று ஆட்சி வீடு கிடையாது. இது இராசியில் எங்கு
இருக்கிறதோ அந்த வீட்டு பலனையோ, அந்த வீட்டுக்கு அதிபதி பலனையோ கொடுக்கும் தன்மையுடையது. மற்ற கிரகத்துடன் சேர்ந்திருந்தால் அந்த கிரகத்தின் வலிமையை இது கிரகித்து அந்தப் பலனைக் கொடுக்கும் தன்மையுடையது. இதன் திசை தென்மேற்கு.
ஆகிய இராசிகளில் இருந்தால் நல்ல பலனைத் தருவான் என்று நம்பப்படுகிறது. இராகுவுக்கு ஆட்சி வீடு இல்லை எனினும் விருச்சிகத்தில் உச்சமும், ரிஷபத்தில் நீசமும் பெறுகிறது.
பன்னிரு ராசிகளில் இராகு
மேஷத்தில் இராகு இருந்தால் மிகவும் சிறப்பானது என்று கூறப்படுகிறது.
மேஷ ராகு பெருத்த பலனைக் கொடுப்பான் என்பது பொது விதி மேஷத்தில் இராகு நின்றால் யாருக்கும் எதையும் விட்டுக் கொடுக்காதவர்கள்; சுய நல வாதிகள், செய் யும் தொழிலிலும், வாழ்க்கையிலும் ஒரே சீரான நிலை இருக்காது. மாற்றம் இருந்து கொண்டேயிருக்கும். வாழ்க்கை யில் முற்பகுதியில் சோதனை வேதனை நிறைந்திருக்கும்.பிற்பகுதியில் உயர்வு இருக்கும். ரிஷபம் இராகுவின் நீச வீடாகும். அவசரக்காரர்கள் எதையும் முன்பின் யோசிக்காமல் செய்துவிடுவர். இருந்தாலும் எப்படி யாவது எடுக்கும் காரியத்தில் வெற்றி பெற தீவிரம்காட்டுவர்.
மிதுனத்தில் நின்றால் குடும்பம் நல்ல முறையில் நிம்மதியாக நடக்காது.
ஓரிடத்திலும் நிலையாக இல்லாது அடிக்கடி இடம் மாறிக் கொண்டே இருப்பர்.
கடகத்தில் இராகு இருந்தால் சுய நலமில்லாதவர்கள். பொதுதொண்டு புரியும்
நல்ல மனம்கொண்டவர்களாக இருப்பர்.
சிம்மத்தில் இருப்பின் சுய நம்பிக்கையுடன் உழைப்பால் முன்னேறி ஓர்
உன்னத நிலை அடைவர். அவர்கள் எந்த அளவுக்கு உயர்ந்தார்களோ அந்த அளவுக்கு வாழ்க்கையில் சரி வடைந்து விடுவர். நிலையான வாழ்க்கை இருக்காது.
கன்னியில் இராகு இருந்தால் எண்ணியபடி காரிய வெற்றி பெறுவர். நீண்ட
உழைக்கும் சுபாவமுடையவர்களாக இருப்பர். அவர்களின் உழைப்பு
அவர்களுக்கு எந்த லாபமும் தராது. பிறருக்காக உயிர் தியாகம் செய்யவும் அஞ்ச மாட்டார்கள். விருச்சிகம் இராகுவின் உச்ச ஸ்தானம். கல்வி, அறிவு மிக்கவர். தைரியம் மிக்கவராகவும் இருப்பர். வசதியுடன் செல்வாக்கும், மதிப்பும் பெற்று வாழ்வர். தனுசில் இராகு நின்றால் எல்லாம் அறிந்தவராக இருப்பர். ஞானம் உள்ளவர். பலரும் போற்றும்படி வாழ்வர்.
மகரம், கும்பம் சனி பகவானின் ஆட்சி வீடுகள். இங்கு இராகு இருந்தால்
நிறைந்த கல்வி, ஞானம், கடவுள் நம்பிக்கை, ஆன்மிகத் துறையில் ஈடுபாடு இருக்கும். மீனத்தில் இராகு இருப்பது நல்ல குடும்பம், சந்தோஷமான வாழ்க்கை இருக்கும்.
கேது
கேது பகவான் இராகுவைப் போன்று சாயா கிரகம் ஆகும்.இதை செங்கோள்
என்று கூறுவர். இதுவும் மூன்று கிரணங்களை உடையது.
இது ஓர் இராசியின் 30 டிகிரியைக் கடக்க 1.5 ஆண்டுகள் ஆகிறது. பன்னிரு
இராசிகளைக் கடக்க 18 ஆண்டுகளாகும். இராசியில் இராகுவைப் போன்று பின்னோக்கி சஞ்சாரம் செய்யும். இதன் நிறம் சிவப்பு.
இராசிகளில் இதற்கென்று ஆட்சி வீடு கிடையாது. இருந் தாலும் எந்த
ஸ்தானத்தில் இருக்கின்றதோ அந்த ஸ்தானத்துக் குரிய பலனைக் கொடுக்க வல்லது. இதற்கு விருச்சிகம் உச்ச வீடாகும். ரிஷபம் நீசம் பெறும் வீடாகும்.
கபடத் தொழில், கீழ்த்தரமான தொழில், மண்டை ஓடு, விபூதி, இரத்தம், மாமிசம்,நெருப்பு, கோழி, முட்டை, சிறு ஆணி, கரிக்கட்டை, இழி தொழிலான விபசாரம் பாவத் தொழில், மது, அபின்,போன்ற போதை தரும்பொருள்கள், புனித நீராடுதல், விரோதிகளுக்குத் தொல்லை அளித்தல், வெளி நாட்டு ஜீவனம், பில்லி சூனியம், தற்கொலை, அகங்காரம், சிறை தண்டனை பெறுதல் போன்றவற்றோடு சாஸ்திர ஞானத்திற்கும் இவனே காரகனாவான்.
இரத்த சம்பந்த வியாதிகள் நெருப்பினால் விபத்து, குஷ்டம், சொரி, சிரங்குகள்
போன்ற வியாதிகள் வரும். கிரகம். இருந்தாலும் அலி கிரகமான சனியுடன் சேர்ந்திருக்கும் போது ஆண் கிரகமாகும் தன்மை பெற்றது. கேது பெண்
இராகு வாசம் செய்யும் இடங்களில் எல்லாம் கேதுவும் இருக்கும்.
பன்னிரு இராசிகளில் கேது
மேஷத்தில் கேது இருந்தால் விளையாட்டுப் பந்தயங்களில் ஆர்வம்
உள்ளவராக இருப்பர். தொழிலிலும் சிறந்து விளங்குவர். அரசியலில் ஈடுபாடு செல்வாக்கு இருக்கும்.
ரிஷபம் இதன் நீச வீடு. இதில் கேது அமர்ந்திருந்தால் மனச் சாட்சி
உள்ளவராக இருப்பர்; மற்றவரைத் தம்மைப் போலஎண்ணும் சுபாவமுடையவர். ஆன்மிகத் துறையில் மிகுந்த ஈடு பாடு கொண்டவராக இருப்பர்.
மிதுனத்தில் கேது நின்றால் வாழ்க்கையில் அடுத்தடுத்து எதிர்ப்புகள் இருந்து
கொண்டே இருக்கும். சிறு காரியத்தையும் சுலபத்தில் செய்து விட முடியாது. வாழ்க்கையில் பல கட்டங் களிலும் எதிர் நீச்சலிட நேரும். இருந்தாலும் அனைத்தையும் சமாளிக்கும் திறனுள்ளவர்.
கடகத்தில் கேது நின்றால் பிடிவாதம் மிக்கவராக இருப்பர். எதையும் பிறருக்கு
விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இருப்பினும் சாஸ்திர ஞானம் உள்ளவராக இருப்பர். சிம்மத்தில் கேது இருந்தால் வாழ்க்கையில் பிரச்னைகள்
போராட்டங்கள் நிறைந்திருக்கும். இருந்தாலும் அவற்றைத் தாங்கி
வெற்றியடையும் திறன் இருக்கும்.
கன்னியில் கேது இருப்பின் குடும்பத்தில் பற்றுள்ளவராக இருக்க மாட்டார்கள்.
அவர்கள் வாழ்க்கையில் ஒரே சீரான நிலை இருக்காது. நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கும். இருந்தாலும் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் சமமாக பாவிக்கும் மனப்போக்கு உள்ளவராக இருப்பர்.
துலாத்தில் கேது இருந்தால் யாருக்கும் அடங்காதவர்களாக இருப்பர். தாம்
சொல்வதையே நிலை நிறுத்த முயலுவர். பிறரை அடக்கி ஆளும் திறமை பெற்றவர்களாக இருப்பர்.
விருச்சிகம் கேதுவின் உச்ச வீடு இதில் கேது இருப்பின் சுயநலம்
மிக்கவர்கள். வாழ்க்கையில் கீழான நிலையிலிருந்துதம் சுய முயற்சிகளால் சிறிது சிறிதாக முன்னேற்றம் பெறக் கூடியவர் களாக இருப்பர்.
ஆற்றல் பெற்றவர். சமூகத்தில் பெயரும், புகழும் இருக்கும். ஆனால் குடும்பத்தில் பற்றுகுறைவு. மகரம்,கும்பம் ஆகியவற்றில் கேது நின்றால் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுபவராக இருப்பர். வாக்குவன்மை மிக்கவர். தயாளகுணமும், ஈவிரக்கமும் உள்ளவர்.
மீனத்தில் கேது நின்றால் வெள்ளை மனம் கொண்டவர்கள். இவர்களிடத்தில்
ஒளிவு மறைவு இருக்காது. பொதுநல வாதிகள், கடவுள் நம்பிக்கை மிக்கவராக இருப்பர்
இராசியில் இராகுவும், கேதுவும் ஒரே சமயத்தில் இடம் மாறக் கூடியது. இவை
எப்பொழுதும் ஒன்றுக்கொன்று 180 டிகிரி தள்ளியே இருக்கும். அதாவது இராகு இருக்கும் இடத்திற்கு 7-ஆம் வீட்டில் கேது இருக்கும். கேதுவிற்கு 7 ஆம் இடத்தில் இராகு இருக்கும்.