Professional Documents
Culture Documents
Q&A in Hinduism for Tamil Malar - 00 - சித்திரைப் புத்தாண்டு
Q&A in Hinduism for Tamil Malar - 00 - சித்திரைப் புத்தாண்டு
Q&A in Hinduism for Tamil Malar - 00 - சித்திரைப் புத்தாண்டு
1. தைப்பொங்கல்
2. அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)
3. இந்திர விழா
4. கள்ளர் வெட்டுத் திருவிழா
5. கூட்டாஞ்சோறு
6. சித்திரைத் திருவிழா
7. தமிழ்ப் புத்தாண்டு
8. தைப்பூசம்
9. பத்திரகாளி மாரியம்மன் கோவில் திருவிழாக்கள்
10. பாரதம் படித்தல்
11. புரவியெடுப்பு
12. பூச்சொரிதல் திருவிழா
13. வெறியாட்டு
14. வேனில் விழா
1. தைப்பொங்கல்
பொங்கி பகிர்ந்து உண்ணல், உறவுகளை காணுதல்
2. அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)
பச்சைப் பட்டுடுத்திய கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில்
அழகர் ஆற்றில் இறங்குதல் அல்லது கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் என்பது
தமிழ்நாட்டின் பழைமை வாய்ந்த மதுரை மாநகரில் சித்திரை மாதத்தில்
கொண்டாடப்படும் சைவ வைணவ ஒற்றுமைத் திருவிழாகும். இது மதுரை
மாநகரில் வீற்றிருக்கும் அன்னை மீனாட்சியின் திருக்கல்யாணத்
திருவிழாவுடன் இணைத்துக் கொண்டாடப் பெறுகிறது. தமிழ்நாட்டில்
பொதுவாக தமிழில் முதல் மாதமான சித்திரை மாதப் பிறப்பை சித்திரைத்
திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர்.
6. சித்திரைத் திருவிழா
சித்திரைத் திருவிழா இந்தியாவின் தமிழ்நாட்டில் தமிழ் வருடபிறப்பான
சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள்
கொண்டாடப்படும் விழாவாகும்.
6.1. மதுரை சித்திரைத் திருவிழா
மதுரையில் சித்திரைத் திருவிழா சைவத் திருவிழா, வைணவத் திருவிழா என
சமயங்கள் தொடர்புடையதாகவே மீனாட்சி சுந்தரேசுவரர்
திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன.
சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே மன்னர்
திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒரு
விழாவாக ஆக்கினார். இதனால் தேனூரில் வைகை ஆற்றில் இறங்கி வந்த
அழகர் ஆற்றில் இறங்கும் விழா, மதுரையில் வைகை ஆற்றில்
இறங்கும்படியான விழாவாக மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக, மதுரை
மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு
வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து
அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில்
மண்டூக மகரிசிக்கு சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில்
எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த
பழைய புராணம்.
6.2. வீரபாண்டி சித்திரைத் திருவிழா
தேனி அருகிலுள்ள வீரபாண்டியிலுள்ள வீரபாண்டி கௌமாரியம்மன்
கோயிலிலும் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம்
கடைசி செவ்வாய்க் கிழமை தொடங்கி மறு செவ்வாய்க்கிழமை வரை
தொடர்ந்து எட்டு நாட்கள் நடைபெறுகிறது.
தமிழ்ப்புத்தாண்டின் முதல் மாதமான சித்திரையில் பொதுவாகவே
வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த சித்திரை மாதத்தில்
கூழ்வார்க்கும் திருவிழா நடைபெறும். வெப்பம் மிகுந்த இந்தகாலத்தில்
வைரஸ் கிருமியினால் ஏற்படும் அம்மைத் தொற்று அதிகம். அந்த வைரஸ்
கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வேப்பிலைக்கு உண்டு.
அதனால் தான் தமிழ் மக்கள் வேப்பிலை மரத்தை தெய்வமாக வழிபட்டனர்.
கூழ்வார்க்கும் திருவிழாவின்போது வேப்பிலையினால் தோரணங்கள்
கட்டியதுடன் அம்மை நோய்க் கண்டவர் இருப்பவர் வீட்டில் வேப்பிலையைச்
சொருகியும் வைத்தார்கள். கேழ்வரகு தானியம் அதிக நார்ச்சத்து மிகுந்த
உடலுக்கு குளிர்ச்சியூட்டுகின்ற நல்ல சத்தான தானியம் என்பதால் வெயில்
அதிகமான இந்த நாட்களில் கேழ்வரகினால் கூழ் செய்து அம்மனுக்கு
படைத்து அதனை ஏழை எளியோருக்கு ஊற்றினார்கள்.
இந்தச் சித்திரையில் பிள்ளைப் பிறந்தால் வெப்பத்தின் தாக்குதல்
குழந்தையைப் பாதிக்கும் என்பதால் தான் ஆடி மாதத்தில் புதுமணத்
தம்பதிகளுக்கு தடா போட்டு பிரித்து வைத்தார்கள். ஆனால் ஆடி மாதம் ஒரு
அற்புதமான மாதம். குல தெய்வ வழிபாடு நடத்துவதற்காகவே இருக்கின்ற
மாதம் இது. பெரிய நகரங்களில் வாழ்பவர்கள் கூட ஆடிமாதம் என்றால்
எவ்வளவு தூரமாக இருந்தாலும் எத்தனை பணிச்சுமை இருந்தாலும் பேருந்து
போகாத குக்கிராமமாக இருந்தாலும் தன் முன்னோர்கள் வழிபட்ட குல
தெய்வத்தை சென்று வழிபடுவார்கள்.
கார்த்திகை விழா
சங்க காலத் தமிழர்கள் கொண்டாடிய சமய விழாக்களில் குறிப்பிடத்தகுந்தது
கார்த்திகைத் திருவிழாவாகும். கார்த்திகை விண்மீனை, ‘அறுமீன்’ என்று
நற்றிணைச் செய்யுள் ஒன்று குறிக்கின்றது. அஃது அறஞ்செய்யத்தக்க
சிறப்புடையது. எனவே கார்த்திகைத் திங்களை ‘‘அறஞ்செய் திங்கள்’’
என்றும் நற்றிணை குறிப்பிடுகின்றது (நற்றிணை, பா.எ. , 185). கார்த்திகை
விழாக்களின் போது வீடுகளும், தெருக்களும் ஒளிவிளக்குகளால்
அழகுறுத்தப் பெற்றமையை,
‘‘மழைக்கால் நீங்கிய மாசறு விசும்பின்
குறுமுயல் மறுநிறம் கிளர் மதிநிறைந்து
அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர’’ (அகம்., பா.எ., 141).
என்ற அகநானூற்றுப் பாடல் குறிப்பிடுகின்றது.
இலவ மரத்தில் நெருக்கமாக மலர்ந்துள்ள பூக்கள் பெரு விழாவில் ஏற்றப்பட்ட
விளக்குப் போல் தோன்றியதாக,
வரலாறு
7. தமிழ்ப் புத்தாண்டு
தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள் தங்கள் ஆண்டின் புத்தாண்டாக
கொண்டாடும் விழாவாகும். தற்போது தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும்
ஈழத்திலும் சித்திரை மாதத்தின் முதல் நாள் புத்தாண்டாகக்
கொண்டாடப்படுகிறது. 2008-2011 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் தை மாதம்
முதல் நாளை தமிழக அரசு புத்தாண்டாக அறிவித்து அரசாணை
பிறப்பிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.
7.1. புத்தாண்டு வரலாறு
புதுச்சேரியிலும், ஈழத்திலும் வழக்கத்திலும் தமிழ்நாட்டில் 2008 க்கு முன்பும்
வழக்கத்தில் இருந்த சித்திரை முதல் நாள் புத்தாண்டு வடநாட்டு மன்னனான
சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்கு பின் 78 ம் ஆண்டில் வடநாட்டில்
ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்களால் நம்பப்படுகிறது. சில
வரலாற்று ஆசிரியர்கள் கனிஷ்கன் என்ற அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது
என்று கூறுகின்றனர். தை முதல் நாள்தான் புத்தாண்டு என்று திமுக அரசால்
2008 தை மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசு ஆணையாக அறிவிக்கப்பட்டது.
2011 இல் இது அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல்
நாள் புத்தாண்டானது.
1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளாரின்
தலைமையில் 500 பேர் கொண்ட அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே
தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது.
7.2. கருத்து வேறுபாடுகள்
2006-2011 வரையிருந்த தமிழக அரசு சனவரி 29, 2008 அன்று அறிவித்த, தை
முதல் நாள் புத்தாண்டு சில பிரிவினரிடையே அதிருப்தியை உருவாக்கியது.
தமிழக அரசுக்கு தமிழக பாரம்பரிய விடயங்களில் தலையிட அனுமதி உண்டா
என்றும் கேள்விகள் எழுந்துள்ளது. அதன்படி 2006-2011 வரையிருந்த தமிழக
அரசும், அவ்வரசு அறிவித்த புத்தாண்டு தினத்துக்கு ஆதரவு தந்த பிரிவை
சேர்ந்த மக்களும் தையில் தமிழ் புத்தாண்டை கொண்டாடினர்.
ஆகஸ்ட் 23, 2011 ல் அப்போது ஆட்சியில் இருந்த தமிழக அரசு மீண்டும்
சித்திரை ஒன்றை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தது. அதற்கு 2006-2011 வரை
இருந்த தமிழக அரசை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
2.6 விழாக்கள்
சித்திரைத் திருவிழா
தேர்த்திருவிழா
தைப்பொங்கல்
பட்டி பெருக! பால் பானை பொங்க! நோவும் பிணியும் தெருவோடு போக!' என்று
கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.
காணும் பொங்கல்
முதன்மை கட்டுரை: காணும் பொங்கல்
இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள்
அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல்
கொண்டாட்டங்களில் நான்காம் நாள் இடம்பெறும்.இது பொதுவாக
இந்தியாவிலேயே கொண்டாடப்படுகிறது.
பொங்கலை ஒத்த பிற விழாக்கள்