Professional Documents
Culture Documents
காலை ஜெபம்
காலை ஜெபம்
சங்கீதம் 59:16-17
16. நானோ உம்முடைய வல்லமையைப் பாடி,
காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்;
எனக்கு நெருக்கமுண்டான நாளிலே
நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.
17. என் பெலனே,
உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்;
தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும்,
கிருபையுள்ள என் தேவனுமாயிருக்கிறார்.
சங்கீதம் 30:4-5
4. கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி,
அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.
5. அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு;
சாயங்காலத்தில் அழுகை தங்கும்,
விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.
சங்கீதம் 16:18
23. அவைகள் காலைதோறும் புதியவைகள்;
உமது உண்மை பெரிதாயிருக்கிறது.
சங்கீதம் 16:18
8. கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்;
அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால்
நான் அசைக்கப்படுவதில்லை.
சங்கீதம் 118:24
24. இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்,
இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.