Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 9

Ad

Published: 3rd Mar, 2023 at 7:30 AM Updated: 4 days ago

இளமை, கேச வளர்ச்சி, உடல் பலம், தாம்பத்யம்... மிடுக்காய்


மிளிரவைக்கும் கடுக்காய்!
எம்.மரிய பெல்சின்

Open App

கடுக்காய்
உடல்நலம்
FOLLOW US ON
News

LATEST TRENDING MAGAZINES INSTALL APP


இயற்கை தந்த பல மருத்துவ குணம் கொண்ட பொருள்களில்
கடுக்காய்க்கு முக்கிய இடமுண்டு. `காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு,
மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டால் கோலை ஊன்றி குறுகி
நடக்கும் கிழவனும், கோலை வீசி குலாவி நடப்பானே' என்கிறது
சித்தர்களின் வாக்கு. `ஈனாத மாட்டுக்கு ஒரு கடுக்காய்; இளம்
பிள்ளைத்தாய்ச்சிக்கு ஏழு கடுக்காய்' போன்ற பழமொழிகளும்
கடுக்காயின் மகத்துவத்தை நமக்கு உணர்த்துகின்றன.

`உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், 60-


க்கும் மேற்பட்ட காயகல்ப முறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக
உடல், மனம், ஆன்மாவைத் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு
உள்ளது' என்று கூறும் திருமூலர் அதை `அமுதம்’ என்கிறார்.

LATEST TRENDING MAGAZINES INSTALL APP


வைத்தியம்!

Also Doctor Vikatan: தினமும் கடுக்காய் பொடி சாப்பிடுவது


read: ஆரோக்கியமானதா?

இளமை தரும் கடுக்காய்!

காலையில் இஞ்சிச்சாறு, பகலில் (மாலை) சுக்குக் காபி, இரவில்


உறங்கப்போவதற்கு முன்னர் விதை நீக்கிய கடுக்காயைத்
தண்ணீர்விட்டு, கொதிக்கவைத்து அருந்த வேண்டும். இப்படிச்
செய்வதன் மூலம் உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் அனைத்தும்
நீங்கிவிடும். அதாவது மலச்சிக்கல் நீங்கும்; கபம் சமநிலைப்படும். இப்படி
நோய்கள் நீங்குவதன் மூலம் கிழவனும் குமரனாகலாம் என்பதே அதன்
பொருள். இதில் கடுக்காயின் பங்கு அதிகம்.

சித்தர்களின் கூற்றுப்படி கல்பங்கள் உடலுக்கு வலுவூட்டி, நீண்ட


ஆயுளைத் தரக்கூடியவை. மொத்தம் 108 கல்பங்கள் உள்ளதாகவும்,
அவற்றைச்
LATEST
சாப்பிடுவதால் நோய் விலகும், பிற்காலத்தில்
TRENDING MAGAZINES
நோய் வராமல்
INSTALL APP
தடுக்கும் என்கிறார்கள் சித்தர்கள். மேலும், உடல் செல்களைப் புதுப்பித்து,
உடலை வலுவாக்கி, இளமையாக இருக்கச் செய்யும்.

இஞ்சி, சுக்கு, கடுக்காயில் செய்யப்படும் கல்பங்கள் ஆண்- பெண்


உறவைப் பலப்படுத்தி, குழந்தைப்பேறு தரக்கூடியவை.
ஆண்மைத்தன்மை குறைவதாக கருதினால், இந்த மூன்று கல்பங்களும்
அருமருந்து. ஆண்களுக்கும் பெண்களுக்கும் உயிர் சக்தியை
மீட்டுத்தந்து, குழந்தைப்பேறு கிடைக்கச் செய்யும். காலையில் வெறும்
வயிற்றில் இஞ்சி கல்பம், மதிய உணவு உண்ட பிறகு, சுக்கு கல்பம்,
இரவில் கடுக்காய் கல்பம் என 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால், அடுத்த சில
மாதங்களில் குழந்தைப்பேறு கிடைக்க வாய்ப்புள்ளது.

மீண்டும் இயக்கு

4.7 ★★★★★ 1.5M


உங்கள் விரல் நுனியில் விகடன் அப்டேட்ஸ் அனைத்தையும் DOWNLOAD

பெற...
Install Vikatan App

இஞ்சி கல்பம்

இஞ்சி கல்பம் செய்ய அரை கிலோ இஞ்சியும் கால் லிட்டர் சுத்தமான


தேனும் தேவை. இஞ்சியை நன்றாகக் கழுவி, தோல் நீக்கி, சிறு
துண்டுகளாக்கி மையாக அரைக்கவும். அப்படி அரைத்த விழுதைப்
பிழிந்து, சாறு எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிப் படியவிடுங்கள். ஒரு
மணி நேரம் கழித்து தெளிந்த நீரை மட்டும் வடிகட்டிக்கொள்ள வேண்டும்.
பாத்திரத்தின் அடியில் படிந்திருக்கும் வெள்ளை நிற நச்சுப்பொருளை
அகற்றிவிட வேண்டும்.

தெளிந்த இஞ்சிச் சாற்றில் நன்றாகப் பழுத்த இரும்புக்கம்பியை ஒரு


நிமிடம்
LATEST முக்கி எடுக்க வேண்டும்
TRENDING . மீண்டும் வடிகட்டி அந்த இஞ்சிச் INSTALL APP
MAGAZINES

சாற்றுடன் தேனைக் கலந்து, கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, ஃபிரிட்ஜில்


வைத்துவிட வேண்டும். இதுதான் நச்சு நீக்கிய இஞ்சி கல்பம். இதில்
இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து 100 மி.லி தண்ணீருடன் கலந்து
அதிகாலையில் குடிக்க வேண்டும். (ஃபிரிட்ஜில் வைத்திருப்பதால்
தேவையான கல்பத்தை மட்டும் வெளியே எடுத்துவைத்து
பயன்படுத்தவும்.)

இஞ்சி கல்பம், பித்தத்தைச் சமப்படுத்தும். செரிமானக் கோளாறுகள்,


வயிற்றுக்கோளாறுகள், தலை கிறுகிறுப்பு போன்றவற்றைப் போக்கும்.
புற்றுநோய் வராமல் தடுக்கும். மாரடைப்பு மற்றும் இதயநோய்களைக்
கட்டுப்படுத்தும்.

சுக்கு

Also வயிற்றுவலிக்கு கடுக்காய்... வாய்ப்புண்ணுக்கு மாசிக்காய்...


read: குழந்தைகளுக்கான எளிய வைத்தியங்கள்

சுக்கு கல்பம்

சுக்கு
LATEST
கல்பம் செய்ய கால் கிலோ சுக்கு, 25 கிராம்
TRENDING
சுண்ணாம்பு, ஒருINSTALL
MAGAZINES
லிட்டர்
APP
தண்ணீர் தேவை. தண்ணீரில் சுண்ணாம்பைக் கரைத்து, அதில் சுக்கை
ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு வெயிலில் நன்றாக உலர
வைக்க வேண்டும். சுக்கின் மீது படிந்திருக்கும் சுண்ணாம்பை
அகற்றிவிட்டு, அதைச் சிறு சிறு துண்டுகளாக்கி, மிக்ஸியில் பொடியாக
அரைத்து, பாட்டிலில் போட்டுவைக்கவும். இதுதான் சுக்கு கல்பம்.

மதிய உணவுக்குப் பிறகு, இதில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில்


கலந்து பருகலாம். தேவைப்பட்டால் சர்க்கரை அல்லது வெல்லம்
சேர்த்துப் பருகலாம். இது சுரப்பிகளைச் சமநிலைப்படுத்தும்; வாய்வுத்
தொல்லைகளைப் போக்கும். வாதம் தொடர்பான நோய்களையும்
போக்கும்.
ADVERTISING

ADVERTISING

கடுக்காய் கல்பம்

கடுக்காய் கல்பம் செய்ய அரை கிலோ (மஞ்சள் நிற) கடுக்காய், அரை


லிட்டர் பசும்பால் தேவை. பாலில் கடுக்காயைப் போட்டு,
அடுப்பில்வைத்து கால் மணி நேரம் காய்ச்சவும். சூடு ஆறியதும் இறக்கி,
கடுக்காயை மட்டும் வெயிலில் உலரவைக்கவும். மூன்று நாள்கள்
உலரவைத்த பிறகு, இதை விதையுடன் மிக்ஸியில் அரைத்து, கண்ணாடி
பாட்டிலில் எடுத்துவைக்கவும். கடுக்காயின் விதை நச்சு. ஆனால், அதைப்
பால் ஊற்றிக் காய்ச்சியதன் மூலம் நச்சு விலகி, கல்பமாகிவிடும். இந்தக்
கடுக்காய் கல்பத்தை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து,
இரவு உணவுக்குப் பின்னர் அருந்தலாம். மற்ற கல்பங்களைப்போல
அல்லாமல்
LATEST
கடுக்காய் கல்பத்தை
TRENDING
மட்டும் பலMAGAZINES
ஆண்டுகளுக்குச் INSTALL APP
சாப்பிடலாம்.
கடுக்காய்

Also ஆரோக்கியம் தரும் ஆலமரம்... பற்களின் வலிமைக்கு உரம்... |


read: மூலிகை ரகசியம் - 20

கடுக்காய் லேகியம்

கடுக்காய் லேகியம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதைச்


சாப்பிடுவதால், நரைத்த தலைமுடிகூட கருகருவென வளரும்.
முற்காலங்களில் கட்டப்பட்ட கட்டடங்கள் உறுதியாக இருக்க, கடுக்காய்
சேர்த்துக் கட்டப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. சுமார் நான்காயிரம்
ஆண்டுகளுக்கு முற்பட்ட சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிக்
குறிப்பிடப்பட்டுள்ளது. இதை விதையை நீக்கிவிட்டுப் பயன்படுத்த
வேண்டும்.

கடுக்காயில் பலவகைகள் உள்ளன. அதில் பிஞ்சுக் கடுக்காய்


மலச்சிக்கலைப் போக்கும். மலத்தை இளக்கும்; உடலுக்கு அழகூட்டி,
மெருகூட்டும்
LATEST
. செங்கடுக்காய்
TRENDING
காசநோயைப்MAGAZINES
(டி.பி) போக்கி மெலிந்த
INSTALL APP
உடலைத் தேற்றி அழகாக்கும். வரிக்கடுக்காய் பல்வேறு நோய்களை
விரட்டும்; விந்தணுக்களை அதிகரிக்கச் செய்யும்.

இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் ஐந்து கிராம் கடுக்காய்த் தூளை


எடுத்து, வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். இஞ்சி, சுக்கு, கடுக்காயை
ஒரு மண்டலம் (48 நாள்கள்) சாப்பிட்டுவந்தால் செரிமானக் கோளாறுகள்
விலகும்; மலச்சிக்கல் குணமாகும்.

கடுக்காய்த்தூளுடன் சிறிதளவு சோம்பு (பெருஞ்சீரகம்) சேர்த்து மண்


சட்டியில் தண்ணீர்விட்டு நன்றாகக் காய்ச்சி, வடிகட்ட வேண்டும்.
அதனுடன் சுத்தமான தேன் கலந்து தினமும் இரண்டு வேளை
குடித்துவந்தால் உடல் எடை குறையும்.

மூன்று கடுக்காய்த் தோல்களுடன் தேவையான அளவு இஞ்சி, மிளகாய்,


புளி, உளுந்து சேர்த்து நெய்யில் வதக்கி உப்பு சேர்த்து துவையலாக
அரைக்கவும். இதைச் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டுவந்தால் செரிமான
சக்தி அதிகரிக்கும்; மலச்சிக்கல் விலகும்; உடல் பலம் பெறும்.

உயிரணு

Also ``உலகிலேயே சிறந்த காதல், நம்மீது கொள்ளும் காதல்தான்...''


read: - ஆரோக்கியத்தை வலியுறுத்திய `ஹெல்த் 360'

இப்படிப் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் கடுக்காய், உடல்


LATEST TRENDING MAGAZINES INSTALL APP
பலவீனத்தைப் போக்கும்; ஆண்களின் உயிரணு குறைபாடுகளை நீக்கி
என்றும் இளமையான தோற்றத்தைத் தரும்.
பொதுவாக, மலச்சிக்கல் இல்லாமல் இருந்தாலே மனிதனின் அத்தனை
செயல்பாடுகளும் சரியாக இருக்கும். தாம்பத்யக் குறைபாடு இல்லாமல்
இருந்தாலே போதும். தம்பதியரின் வாழ்வு சிறப்பாக இருக்கும். இந்த
அற்புதமானப் பணிகளை மிகச் சிறப்பாகச் செய்யக்கூடியது கடுக்காய்!

LATEST TRENDING MAGAZINES INSTALL APP

You might also like