Professional Documents
Culture Documents
Bible Verse Class VIII
Bible Verse Class VIII
5 அவர்களை வெள்ளம்போல்
வாரிக்கொண்டுபோகிறீர்; நித்திரைக்கு
ஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற
புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
6 அது காலையிலே முளைத்துப் பூத்து,
மாலையிலே அறுப்புண்டு உலர்ந்துபோம்.
சங்கீதம் 148
1 அல்லேலுூயா, வானங்களில் உள்ளவைகளே,
கர்த்தரைத் துதியுங்கள்; உன்னதங்களில்
அவரைத் துதியுங்கள்.
12 வாலிபரே கன்னிகைகளே,
முதிர்வயதுள்ளவர்களே பிள்ளைகளே,
கர்த்தரைத் துதியுங்கள்.
சங்கீதம் 37
1 பொல்லாதவர்களைக் குறித்து
எரிச்சலடையாதே;
நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல்
பொறாமைகொள்ளாதே.
9 பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்;
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச்
சுதந்தரித்துக்கொள்வார்கள்.
14 சிறுமையும் எளிமையுமானவனை
மடிவிக்கவும், செம்மை மார்க்கத்தாரை
விழப்பண்ணவும், துன்மார்க்கர் பட்டயத்தை
உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள்.
16 அநேக துன்மார்க்கருக்குள்ள
செல்வத்திரட்சியைப்பார்க்கிலும்,
நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.
20 துன்மார்க்கரோ அழிந்துபோவார்கள்,
கர்த்தருடைய சத்துருக்கள் ஆட்டுக்குட்டிகளின்
நிணத்தைப்போல் புகைந்துபோவார்கள், அவர்கள்
புகையாய்ப் புகைந்துபோவார்கள்.
21 துன்மார்க்கன் கடன்வாங்கிச்
செலுத்தாமற்போகிறான்; நீதிமானோ
இரங்கிக்கொடுக்கிறான்.
25 நான் இளைஞனாயிருந்தேன்,
முதிர்வயதுள்ளவனுமானேன், ஆனாலும்
நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி
அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான்
காணவில்லை.