Professional Documents
Culture Documents
திருவாயமொழி எளிய விளககவுரை 74 ஆழியெழ
திருவாயமொழி எளிய விளககவுரை 74 ஆழியெழ
4 – ஆழியெழ
divyaprabandham.koyil.org/index.php/2020/06/thiruvaimozhi-7-4-tamil-simple/
June 2, 2020
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
கோயில் திருவாய்மொழி
<< 7.2
1/5
ஆயுதங்களில் முக்யமானவனான திருவாழியாழ்வான் முன்னே உயர்ந்து தோன்றவும்,
உடனே ஸ்ரீபாஞ்சஜந்யமும் ஸ்ரீசார்ங்கமும் தோன்றவும், கதையும் வாளும் தோன்றவும்,
இந்த ஆயுத பூர்த்தியைக் கண்டு திசைதோறும் நின்றவர்கள் பெருத்த கோஷத்துடன்
மங்களாசாஸனம் செய்ய, எம்பெருமான் வேகமாக வளர, அண்டகபாலம் பிளந்து அது
வழியாக ஆவரண ஜலம் நீர்க்குமிழியாகக் கிளம்பும்படி திருமுடியும் திருவடியும்
உயரக்கிளம்பும்படி, நல்லகாலமும் தோன்றும்படி ஸர்வேச்வரன் உலகத்தை அளந்து கொண்ட
விதம் இருந்தபடியே!
2/5
பகல் இரவு போன்ற மாறுபாடுகள் குலையும்படியும் நிலம், நீர் ஆகியவைகள்
நிலைகுலைந்துபோகும்படியும், ஆகாசமும், க்ரஹங்களும் நிலைகுலைந்துபோகும்படியும்,
மலைகள் அடிவாரத்துடன் தூக்கப்படும்படியும், நக்ஷத்ரம் முதலிய ஒளி படைத்த
பதார்த்தங்களும் குலையவும், ப்ரளய ஆபத்திலே காக்கும் எம்பெருமானின் பெரிய
உபகாரங்கள் “பசித்துண்டான்” என்று சொல்லும்படி இந்த உலகத்தை உண்டது இருந்தபடியே!
நாள் கழியும் வேளையில் இளம் செக்கர்போலே ஆகாசமும் திசைகளும் சூழ எழுந்து ரத்த
நீராகும்படி அடியார்களுக்கு உதவுபவனான நரஸிம்ஹன் எம்பெருமான் பெரிய துக்கத்தை
விளைத்து அஸுரனான ஹிரண்யனைக் கொல்லும் விதம் மலை கிழியும்படி பிளந்த
சிங்கத்தை ஒத்திருந்தது.
3/5
நேர் சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே
4/5
குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே
வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org
5/5