Professional Documents
Culture Documents
G4 2024 Thiru
G4 2024 Thiru
பதிவெண் 0401052263
அறை
தேர்வுத் தாள் (கொள்குறி வகை) தேர்வு நடைபெறும் நாளும் நேரமும் கண்காணிப்பாளரின்
கையொப்பம் (**)
(*)
தேர்வுக்கூடத்தின் QR குறியீடு, நிகழ்விடம் பற்றிய தகவலை வழங்குவதற்காக
மட்டுமே. எனவே விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூட அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள
முகவரியிலிருந்து அமைவிடத்தை சரிபார்த்து உறுதிப்படுத்திக்கொள்ள
அறிவுறுத்தப்படுகிறார்கள்.
I. விண்ணப்பதாரர்கள் கருமைநிற மை கொண்ட பந்துமுனைப் பேனாவை (black ink ball point pen) மட்டுமே பயன்படுத்த
வேண்டும்.
V. OMR விடைத்தாள்
1. தேர்வறையில் தேர்வரின் அனுமதிச்சீட்டில் உள்ளவாறு புகைப்படம், பெயர், பதிவு எண், தேர்வுத்தாளின் பெயர் மற்றும் தேர்வு
மையம், தேர்வு நாள் மற்றும் அமர்வு நேரம் போன்ற விவரங்களை உள்ளடக்கிய சுயவிவரங்கள் அச்சிடப்பட்டுள்ள OMR
விடைத்தாள் அளிக்கப்படும், OMR விடைத்தாளினை உபயோகப்படுத்தும் முன்னர், புகைப்படம் மற்றும் விவரங்கள்
அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, அவைகள் அத்தேர்வரின் விவரங்கள்தான் எனவும் உறுதி செய்துகொள்ள வேண்டும். OMR
விடைத்தாளில் உள்ள தகவல்கள் ஏதேனும் தவறாக இருந்தால் அல்லது எந்த வகையிலேனும் குறைபாடுடையதாக
இருந்தால், தேர்வர் விவரங்களை நிரப்புவதற்கு முன்னர், அதனை உடனடியாக மாற்றிக் கொடுக்கும்படி
அறைக்கண்காணிப்பாளரிடம் கோரவேண்டும். OMR விடைத்தாளைப் பயன்படுத்திய பின்னர் மாற்றித் தரப்படமாட்டாது.
2. தேர்வர், ஒவ்வொரு வினாவிற்கும் விடைத்தாளில் ஒரு வட்டத்தை மட்டும் கண்டிப்பாக நிரப்ப வேண்டும். ஒரு குறிப்பிட்ட
வினாவிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வட்டங்கள் நிரப்பப்பட்டிருந்தால், அவற்றுள் ஒரு விடை சரியானதாக இருந்தாலும்
அவ்விடையானது தவறான விடையாகக் கருதப்படும்.
3. OMR விடைத்தாளில் பக்கம் 2-ல் உள்ள எடுத்துக்காட்டில் உள்ளபடி அனைத்து விடைகளுக்கான வட்டங்களும்
நிரப்பப்பட்டிருக்க வேண்டும். தேர்வருக்கு ஏதாவது ஒரு வினாவிற்கு விடை தெரியவில்லை எனில், [E] என்ற வட்டத்தை
அவசியம் நிரப்ப வேண்டும். எப்படியாயினும், ஒரு கேள்விக்கு ஒரே விடைதான் தேர்ந்தெடுக்க வேண்டும். விண்ணப்பதாரர்,
ஒரு கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடையினை அளித்தால் அவற்றுள் ஒரு விடை சரியானதாக இருந்தாலும் அந்த விடை
தவறானதாகவே கருதப்படும். மொத்தம் எத்தனை வினாக்களுக்கு முறையே [A],[B],[C],[D] மற்றும் [E] விடைகளை
நிரப்பியுள்ளார் என்ற விவரங்களை OMR விடைத்தாளின் பகுதி 2- இன் பிரிவு III-இல் அதற்குரிய கட்டங்களில் எழுதுவதுடன்
தொடர்புடைய வட்டங்களையும் தேர்வர்கள் நிரப்ப வேண்டும். தேர்வர்களால் OMR விடைத்தாளில் நிரப்பப்பட்ட [A], [B], [C], [D]
மற்றும் [E] ஆகியவைகளின் மொத்த எண்ணிக்கையானது, வினாத் தொகுப்பில் அச்சிடப்பட்ட மொத்த கேள்விகளின்
எண்ணிக்கைக்கு சமமாக இருக்க வேண்டும்.
4. தேர்வரால் OMR விடைத்தாளில் பிரிவு-III (b) -இல் நிரப்பப்பட்ட [A], [B], [C], [D], மற்றும் [E] ஆகியவைகளின் எண்ணிக்கையை
தேர்வு அறையின் கண்காணிப்பாளர் OMR விடைத்தாளின் பகுதி 2-இன் பிரிவு IV -இல் நிரப்ப வேண்டும். தேர்வு முடிவடைந்த
பின்னர், தேர்வறையின் கண்காணிப்பாளர் மற்றும் தேர்வர் ஆகிய இருவரும் மேற்குறிப்பிட்ட பதிவிற்கு கீழே கையொப்பமிட
வேண்டும், விடைத்தாளில் இந்த விவரங்களை நிரப்புவதற்காக தனியே கூடுதல் நேரமாக 15 நிமிடங்கள் தேர்வர்களுக்கு
வழங்கப்படும். இந்த நடைமுறைகள் முடிவடைந்த பின்னரே தேர்வர் தேர்வறையை விட்டு வெளியே செல்ல
அனுமதிக்கப்படுவார்.
X. பிற அறிவுரைகள்
1. தேர்வர் அவருக்காக ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தில் (தேர்வுக் கூட அனுமதிச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள) மட்டுமே தேர்வு
எழுத வேண்டும். தேர்வு மையத்தினை மாற்றம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது.
2. தேர்வர், விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளின் பத்தி 17-இல் உள்ள அறிவுரைகளைக் கட்டாயம் படித்து பின்பற்ற
வேண்டும். (தேர்வாணையம் நடத்தும் பல்வேறு நியமனங்களுக்கான போட்டித் தேர்வுகள் எழுதும் விண்ணப்பதாரர்கள்
பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்). விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் தேர்வாணைய இணையதளத்தில்
அதாவது, www.tnpsc.gov.in / www.tnpscexams.in –இல் உள்ளன. OMR விடைத்தாளில் பக்கம் 2-ல் அறிவுரைகள் உள்ளன.
இவ்வறிவுரைகளை தவறாது பின்பற்ற வேண்டும்
3. தேர்வர்களுடன் வரும் பெற்றோர் மற்றும் பிறர், தேர்வு நடைபெறும் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
4. விண்ணப்பதாரருக்கான அறிவுரைகள்/ வினாத்தொகுப்பு/ OMR விடைத்தாள்/ தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு / அறிவிக்கை
ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளை மீறினால், தேர்வர் நிரந்தரமாகவோ அல்லது தேர்வாணையத்தால்
தக்கதென கருதப்படும் காலம் வரையிலோ விலக்கி வைக்கப்படுவதுடன், அவர்தம் விண்ணப்பமும் நிராகரிக்கப்படும்.
மேலும், அவரது விடைத்தாள் / விடைப்புத்தகம் செல்லாதாக்கப்படலாம் அல்லது தேர்வாணையத்தால் விதிக்கப்படும் வேறு
ஏதேனும் அபாரதத்திற்கும் உள்ளாக நேரிடும்.
5. தேர்வர் அனுமதிச்சீட்டினை தங்களது பாதுகாப்பில் நிரந்தரமாக வைத்துக் கொள்ளவேண்டும். தேர்வர், தெரிவின் அடுத்த
கட்டத்திற்கு அனுமதிக்கப்படும் நேர்வுகளில் / தேர்வாணையத்தால் கோரப்படுகின்ற நேர்வுகளில் தனது தேர்வுக்கூட
அனுமதிச் சீட்டினை சமர்ப்பிக்க வேண்டும். தேர்வர் அனுமதிச்சீட்டினை தேர்வு முடிவுற்றபின்னர், முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக நகல் எடுத்து தனது வசம் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார். எக்காரணத்தை முன்னிட்டும்
தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின் இரண்டாம்படி வழங்கப்படமாட்டாது.
6. தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வழங்கப்படுவதால் மட்டுமே இந்த பதவி நியமனத்திற்கு தகுதி பெறுவதற்கான எந்த
உரிமையும் அளிக்கப்பட்டதாகக் கருதக்கூடாது. எனவே, விண்ணப்பதாரரின் விண்ணப்பம், எல்லா நிலைகளிலும்
தற்காலிகமானது மேலும் விண்ணப்பதாரரால் அளிக்கப்பட்ட விவரங்கள் தவறு என்றாலோ தேர்வாணைய அறிவுரைகள் /
விதிகள் மீறப்பட்டுள்ளன எனக் கண்டறியப்பட்டாலோ, எந்நிலையிலும், விண்ணப்பத்தை நிராகரிக்கும் உரிமை
தேர்வாணையத்திற்கு உண்டு.
7. அறிவிக்கை/ விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் / தேர்வுக்கூட அனுமதி சீட்டு, ஆகியவற்றில் கொடுக்கப்பட்டுள்ள
விண்ணப்பதாரர்களுக்கான நெறிமுறைகள், தேர்வில் கலந்துகொள்வதற்கான விண்ணப்பதாரரின் அறிவுறுத்தல்களுடன்
முரணாக இருந்தால், அறிவிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளே இறுதியானவை.
8. தேர்வுக்கூடத்தில் ஒளிப்பதிவாளரின் வருகையின் போது தேர்வாளர்கள் தங்களது முகம் மற்றும் தேர்வுக்கூட அனுமதிச்
சீட்டில் உள்ள அல்லது மேசையில் உள்ள பதிவு எண் சரியாக தெரியும்படி ஒளிப்படம் எடுக்கும் பொருட்டு ஒத்துழைக்க
வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வுக்கு விலக்குப் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான வழிமுறைகள்:
1. அரசாணை நிலை எண்.49, மனிதவளமேலாண்மை (எம்) துறை, நாள் - 23.05.2022 மற்றும் அரசாணை நிலை எண். 8,
மாற்றுத்திறனாளிகள் நலன் (DAP 3.2) நாள்21.09.2021–ன்படி, 40%-ற்கு கீழ் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளும் தமிழ் தகுதி
மற்றும் மதிப்பீட்டுத் தேர்வை எழுதுவதிலிருந்து விலக்கு பெறலாம். இணைய வழி விண்ணப்பத்தில் அவ்வாறு விலக்கு
கோரியிருக்கும் பட்சத்தில், அவர்கள் பொது ஆங்கிலம் (SSLC Standard) பாடத்தினை எழுத வேண்டும்.
2. அரசாணை நிலை எண். 8, மாற்றுத்திறனாளிகள் நலன் (DAP 3.2) நாள் 21.09.2021 –ன்படி, உடல்குறைபாடு காரணமாக விலக்கு
அளிக்கப்பட்டவர்களில், எழுதுவதற்கு சிரமப்படுபவர்கள், அதாவது, வேகம் மற்றும் பதிலி எழுத்தாளரின் சேவைகளைப்
பெறாதவர்கள், பொதுப்பாடத்தாள் தேர்வு எழுத மூன்று மணி நேரத்திற்கு ஒரு மணி நேரம் ஈடு செய்யும் நேரம் வழங்கப்படும்.
3. தமிழ்மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விலிருந்து விலக்கு, ஈடுசெய்யும் நேரம் மற்றும் பதிலி எழுத்தரின் சேவை ஆகியவை
இணையவழி விண்ணப்பத்தில் கோரியவர்கள் அதற்கான மருத்துவச்சான்றினை இந்த அறிவிப்பின் பத்தி 4.4.2 பிற்சேர்க்கை –II
ல் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் பதிவேற்றம் செய்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
எச்சரிக்கை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணி நியமனங்களும் முற்றிலும் தகுதி
அடிப்படையிலானவை
முறையற்ற வழிகளில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகப் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றக்கூடிய போலிகள்
மற்றும் முகவர்கள் குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், விண்ணப்பதாரர்களை எச்சரிக்கிறது.
இது போன்ற நேர்மையற்ற முறைகளைக் கையாள்வதால் எந்தவொரு விண்ணப்பதாரருக்கும் ஏற்படும் இழப்புகளுக்கு தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் பொறுப்பேற்காது அல்லது பொறுப்பாகாது.
தொடர்பு எண்கள்:
குறை தீர் அழைப்பு மையம்: 044-69097777, 044-25300338, 044-25300339, 044-25300340.
கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 419 0958.