Professional Documents
Culture Documents
TVA BOK 0019380 மதுரை நாயக்கர் காசுகள்
TVA BOK 0019380 மதுரை நாயக்கர் காசுகள்
ஆறுமுகசீதாராமன்
் சங்கரன்ராமன்
் வெளியீடு
தனலட்சுமி பதிப்பகம்
12, ராஜராஜன் நகர்,
மானோஜிப்பட்டி (தெற்கு),
தஞ்சாவூர் - 613004.
முதற்பதிப்பு : Gw - 2002
தனலட்சுமி பதிப்பகம்
தஞ்சாவூர்.
ஆசிரியா் ஆறுமுகசீதாராமன்
சங்கரன்ராமன்
உரிமை ஆசிரியர்களுக்கு.
விலை : தே. 60
பொருளடக்கம்
அணிந்துரை
ஆக்கியோர் உரை
மதுரை நாயக்கர் வரலாறு
தேதி : 6-5-.2002
மதுரை . வே.வேதாசலம்.
ஆக்கியோர் உரை
மதுரை நாயக்கர் வரலாற்றுக்கு வளம் சேர்க்கும் வகையில்
முதன்மைச் சான்றுகளை அளிக்கும் பொருட்டு, நாங்கள்
1988-ஆம் ஆண்டிலிருந்து மதுரை நாயக்க மன்னர்கள்
வெளியிட்ட காசுகளைத் தேடி மதுரை, திருநெல்வேலி,
திண்டுக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்கள் முழுவதும்
சுற்றித்திரிந்து சேகரிக்கத் தொடங்கினோம். எல்லா
மன்னர்களுடைய காசுகளும் கிடைத்தன.அவற்றை எல்லாம்
ஆய்வு செய்தபின் வரலாற்று அறிஞர்களுக்கும், தொல்லியல்
அறிஞர்களுக்கும் பயன்படும் வகையில் இச்சிறிய ஆராய்ச்சி
நாலை வெளியிடுகின்றோம். இந்நாவலில் கூறப்பட்டுள்ள
பெரும்பாலான மதுரை நாயக்க மன்னர் காசுகளும் எங்கள்
களப்பணியில் கிடைத்தவையே. எங்கள் களப்பணியில்
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மதுரை நாயக்கர் காசுகள்
கிடைத்தன. இதில் முக்கியமான காசுகளை மட்டும்
தேர்ந்தெடுத்து தெளிவான ஒளிப்படங்களுடன்
வெளியிட்டுள்ளோம்.
மதுரை நாயக்கர் காசுகளைப் பாமரமக்களும், நாணய
சேகரிப்பாளர்கள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்களும்
அறிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் கூறவேண்டும்
என்ற எங்கள் எண்ணத்தின் வெளிப்பாடே இந்தச் சிறு நூல்,
பழங்காசுகளைப் பற்றி ஆய்வு செய்யும்போது எங்களுக்கு
எழுந்த ஐயங்களைத் தீர்த்து, ஊக்கமளித்த தொல்லெழுத்து
அறிஞரும், எங்கள் ஆசானுமாகிய திரு.ஐராவதம் மகாதேவன்
அவர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறோம். மேலும் இந்நூலுக்குச் சிறந்ததொரு
அணிந்துரை வழங்கியும், சிரமம் பாராமல் ஒளிப்படங்கள்
எடுத்துக் கொடுத்தும், அவ்வப்போது அறிவுரை வழங்கி
ஊக்கமளித்த முனைவர். வெ.வேதாசலம் அவர்களுக்கும்
எங்கள் நன்றியைப் புலப்படுத்திக் கொள்கிறோம்.
நாணயவியலாளர் சொ.மு.க. ஹமீதுஜலால் தம்
தொகுப்பில் வைத்திருந்த இராணிமங்கம்மாள் காசுகளின்
நெகடிவகளை எங்களுக்கு அளித்து அதிலிருந்து பிரதிகள்
தயாரித்துக் கொள்வதற்கு அனுமதி அளித்தமைக்கும்
அவருக்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எம்.டி. கருணாகரன் அவர்களின் சேகரிப்புகளிலிருந்து
கீழ்கண்ட காசுகளையும், ஒளிப்பா..ங்களையும் எங்கள்
ஆய்வுக்கு பயன்படுத்தி உள்ளோம். (காசு எண்கள்: 86, 27, 71,
73, 74, 75) 'ஸ்ரீரங்க' என்று தெலுங்கு மொழியில்
பொறிக்கப்பட்ட காசுகளை விஜயநகர மன்னர்களால்
வெளியிடப்பட்டது என்று சில நாணயவியலாளர்கள் ஆய்வு
செய்துள்ளனர். ஆனால் எம்.டி.கருணாகரன் இவற்றை மறுத்து
'ஸ்ரீரங்க' என்று பொறிக்கப்பட்ட தெலுங்கு காசுகள் எல்லாம்
மதுரை நாயக்க மன்னர் வெளியிட்ட காசுகள் என்று ஆய்வு
செய்து ௦௦118% இதழில் விரிவாக வெளியிட்டுள்ளார்கள்.
இந்நால் சிறப்பான முறையில் வெளிவரத்துணைபுரிந்த
அமரர் அளக்குடி ஆறுமுகம் மற்றும் சொ.மு.க. ஹமீது ஜலால்,
சையது இஸ்மாயில், எம்.டி. கருணாகரன், சி. அறம்வளர்த்தான்,
ஷீலா ராமன், கயல்விழி சீதாராமன் ஆகியோருக்கும் எங்கள்
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தஞ்சாவூர் ஆறுமுகசீதாராமன்
80-05-2002 . சங்கரன்ராமன்
1. மதுரை நாயக்கர் வரலாறு
விஜயந்கரப் பேரரசானது தலைக்கோட்டைப் போரில்
(கி:பி. 7565) வீழ்ச்சியுற்றுச் சிதறுண்டு போயிற்று.
விஜயநகரத்துச் செல்வங்களும் சீரழிந்து விட்டன. விஜயநகரப்
பேரரசன் இராமராயர் போரில் வீர மரணத்தைத் தழுவினார்.
ஆனால் விஜயநகர அரசு மட்டும் மறையாமல் தொடர்ந்து
நடைபெற்று , வந்தது; :: இராமறநாயனின் தம்பி முதலாம்:
திருமலைராயன் (கி.ி. 1570-73) நகரத்துக்குப் புத்துயிரட்ட
முயன்றான். அனால் வெற்றி. கிடைக்கவில்லை. விஜயநகரத்தை
விட்டுப் பெனுகொண்டாவைத் தன் தலைநகரமாக்கிக்
கொண்டான். அவ்வூரில் தங்கிப் படைகளைச் சீரமைக்கத்
தொடங்கினான். "உள்நாட்டுக் கிளர்ச்சிக்காரருடனும்,
கொள்ளைக் கூட்டத்தாருடனும், பாளையக்காரருடனும்
அவ்ன் - ஆறாண்டுகள் போராட வேண்டியவனானான்.
அவனுடைய அவல நிலையைப் பயன்படுத்திக் கொண்டு
மதுரை, தஞ்சாவூர், செஞ்சி முதலிய இடங்களில் பாளையங்கள் ,
அமைத்து ஆண்டு வந்த நாயக்கர்கள் விஜயநகரப் பேரரசின்
மேலாதிக்கத்தை உதறித்தள்ளிவிட்டு தாமே ., சுதந்தர
மன்னர்க் ளாக அரசாங்க ம் நடத்தலானார்கள்.
திருமலைநாயக்கர்: (இ.பி.1623-1659)
திருமலைநாயக்கர் முத்துகிருஷ்ணப்பரின் இரண்டாவது
மகனாவார். மதுரைப் பெருநாடு இவர் ஆட்சிக்காலத்தில்
3
கன்னியகுமரி மாவட்டத்தின் ஒரு பகுதி, திருநெல்வேலி,
திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை,
புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கோவை முதலிய
மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்ட. பெரும்பரப்புடைய
நாடாக விளங்கியது. திருச்சியில் ஆறு அல்லது ஏழு ஆண்டுகள்
ஆட்சி செலுத்திய திருமலை அதன்பின் மதுரையைத் தம்
தலைநகராகக் கொண்டார். மதுரை நாட்டைப் பாதுகாத்தற்
பொருட்டு இரண்டு கோட்டைகளைக் கட்டினார். ஐந்து பெரும்
போர்களை நிகழ்த்தினார். முதன் முதலில் நடத்திய போர்
மைதர் சாமராஜ உடையாருக்கு எதிரானது ஆகும்.
திருவாங்கூர் மீது திருமலை மேற்கொண்ட படையெடுப்பு
இரண்டாவது படையெடுப்பாகும். கி.பி.1687-ல் திருமலை
இராமநாதபுரம் சேதுபதியுடன் போர்புரிந்தார். விஜயநகர
அரசர் மூன்றாம் வேங்கடருடன் கி.பி.7637-ல் போர் செய்தார்.
மைதருக்கு எதிராக மீண்டும் இவர் நிகழ்த்திய போர்
மூக்கறுப்புப்போர் என வரலாற்றில் பேசப்படுகிறது. திருமலை
மதுரைக் கோயிலைப் புதுப்பித்ததோடு, திருப்பரங்குன்றம்
கோயில், அழகர்கோயில், திருவில்லிப்புத்தார், ஆண்டாள்
கோயில், திருவரங்கம் பெரியகோயில் ஆகியவற்றிலும்
திருப்பணிகள் பல செய்தார். ஆலயத்திருவிழாக்கள் 'நடத்தினார்;
மதுரையில் கலையழகு மிக்க திருமலைநாயக்கர் மகாலைக்
கட்டினார். சமயப் பொறையுணர்வு உடையவராகத் திகழ்ந்தார்.
சொக்கநாதநாயக்கர்: (இ.பி.1659-1682)
முத்துவீரப்ப நாயக்கர் இறந்த பிறகு அவரதுமகன்
சொக்கநாதன் தனது பதினாறாவது வயதில் மதுரை மன்னராகி
24 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவர் ஆட்சிக்கு வந்த
உடனேயே இவரது இளவயதைப் பயன்படுத்திக்கொண்டு,
இவரது பிரதானியும், தளவாயும், இராயசமும் கூடி சதித்திட்டம்.
தீட்டி தங்கள் திட்டத்திற்குத் தடையாக இருப்பவர்களை -'
ஒழித்துக் கட்டத் துணிந்தார்கள். தக்க சமயத்தில் இத்திட்டத்தை
அறிந்த சொக்கநாதநாயக்கர் அதை முறியடித்தார்.
துரோகம் நினைத்த இராயசம் கொல்லப்பட்டார். பிரதானி
பிராமணரானதால், கொல்லப்படாமல், அவரது கண்கள்
குருடாக்கப்பட்டன. தளவாய் லிங்கமநாயக்கர் செஞ்சிக்குத்
தப்பியோடி, செஞ்சிமன்னர் ஷாஜியுடனும், தஞ்சை மன்னர்
விஜயராகவ நாயக்கருடனும் கூட்டுச் சேர்ந்து மதுரை
நாயக்கரைத் தாக்க வந்தார். புதிதாக அமர்த்தப்பட்ட
தளவாயும் நம்பிக்கைக்குரியவராக இல்லாததால், சொக்கநாத
நாயக்கரே, மதுரைப் படைகளுக்குத் தலைமை தாங்கித்
திருச்சியைக் காக்கச் சென்றார். இவரது படையெடுப்பு
வெற்றியாய் முடிந்தது. தஞ்சை மன்னர் விஜயராகவ நாயக்கர்
சொக்கநாதநாயக்கரிடம் சரணடைந்தார். லிங்கமநாயக்கரும்,
ஷாஜியும் செஞ்சிக்குத் தப்பியோடினார்கள்.
5
தளபதிகளிடம் பணிவாகப் பேசி, பல வெகுமதிகளால்
அவர்களை மகிழ்வித்து, பேரரசர் ஓளரங்கசீப்பிற்குக்
கப்பமாகப் பெரும் பொருள் அனுப்பி வைத்தார்.
மொகலாயர்களிடம் எந்தளவிற்குத் திறமையோடு பணிந்து
மீபானாரோ அந்தளவிற்கு, உள்நாட்டுச் சக்திகளிடம் மிகக்
கடுமையாக, மங்கம்மாள் நடந்து கொண்டாள்.
மதுரை வரலாற்றில், மக்கள் நலம் பேணிய பல பொதுத்
தொண்டுகளால் இராணிமங்கம்மாள் மங்காத ஓர் இடத்தைப்
பெற்றுத் திகழ்கிறார். இவரது திறமையும், செயல்வேகமும்,
மதுரை அரசிற்குப் புதிய வாழ்வைத் தந்தது. இவர் கிறித்துவ
மதம். இசுலாமிய மதம் உள்பட அனைத்து மதங்களுக்கும்
உரிய மதிப்பினைத் தந்தார். கோவில்களுக்கும், பொதுத்
தர்மங்களுக்கும் பல மானியங்களை நல்கினார். பல
சாலைகளையும், பல சத்திரங்களையும் அமைத்து மதுரை
மக்களின் அன்பிற்குப் பாத்திரமானார்.
மீனாட்டு : (இி.பி.1732-173௦)
ஆண் வாரிசு இன்றி கி.பி.1731-ல் மரணமடைந்த விஜயரங்க
சொக்கநாத நாயக்கருக்குப்பின் அவரது மனைவி மீனாட்சி
மதுரை ஆரசியானார். இவரது ஆட்சியில் உள்நாட்டுக்
குழப்பமும், அதன் பயனாய் வெளியாரின் படையெடுப்பும்
ஏற்பட்டு, மதுரை நாயக்கர் ஆரசு அழிந்துவிட்டது.
பேராசை பிடித்த மீனாட்சி, பங்காரு திருமலை என்பவர் மகன்
விஜயகுமாரனைத் தத்து எடுத்து தனது வாரிசாக, வளர்த்து
6
வந்தார். பங்காரு திருமலை, திருமலைநாயக்கரின் தம்பி
குமாரமுத்துவின் வழி வந்தவர். இந்நிலையில் பங்காரு
திருமலை அவசரப்பட்டு, ஆட்சியை மீனாட்சியிடமிருந்து
பறித்துக்கொள்ள கலகம் விளைவித்தார். இக் குழப்பத்தை
அறிந்த ஆர்காடு நவாபு தனது மகன் சப்தர் அலியையும்,
மருமகன் சந்தா சாகிப்பையும் மதுரைக்கு அனுப்பி வைத்தார்.
கி.பி. 7798-ல் சந்தாசாயபு தனது வாக்குறுதிகளால்
மீனாட்சியைக் காப்பதாக நம்பவைத்து, மதுரை ஆரசின்
ஆட்சியை கைப்பற்றிக் கொண்டார். மீனாட்சியை சிறையில்
அடைத்தார். மீனாட்சி விஷம் குடித்து உயிர் துறந்தார். மனம்
உடைந்த பங்காரு திருமலை சிவகங்கையில் தஞ்சம் புகுந்தார்.
இவ்வாறு மதுரை நாயக்கர் ஆட்சி முடிவிற்கு வந்தது.
துணை நூற்பட்டியல்
தமிழ் நூற்கள்
[. அளக்குடி ஆறுமுகசீதாராமன் : தமிழகத் தொல்லியல்
சான்றுகள், (அண்மைக்காலக் கண்டுபிடிப்புகள்)
தொகுதி-!1, தஞ்சை, 2002.
கணபதி, ௮. : தமிழக வரலாறு (1565-1995), மல்விகை
பதிப்பகம், மதுரை, 1992.
ஆங்கில நூல்கள்
1. Desikachari. T., South Indian Coins, (Reprint), Asian
Educational Services, New Delhi, 1984.
Elliot Walter, Coins of Southern India, (Reprint), The
International Numismata Orientalia, Cosmo publications,
Dethi, 1975.
Hultzsch,E. South Indian Copper Coins, The Indian
Antiquary, 1892.
Loventhal, E. The Coins of Tinnevelly, Higginbotham and
Co. Madras. 1888.
Michael Mitchiner, Coin Circulation in Southern most
India, Indian Institute of Research in Numismatic Studies,
Nasik, 1995.
Nagasamy, R. Tamil Coins - a study, Tamilnadu State
Dept. of Archaeology, Govt. of Tamilnadu, Chennai,
1981.
54
இதழ்கள்
ஆவணம் (இதழ் - 9, 12)
வரலாறு (இதழ் - 9, 7)
தினமணி 12-22-1998, 25.7.1990,
Coinex - 1997, 1998, 1999, 2000 Madras Coin Society
95