61 செவ்வாய் தோஷ ஜாதகத்தை, ஒன்றுடன் ஒன்று இணைத்தால்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

661 ஜோதிட நுணுக்கங்களும் தோஷ நிவர்த்திகளும்

செவ்வாய் தோஷ ஜாதகத்தை, ஒன்றுடன் ஒன்று இணைத்தால்


🛑🌺🛑🌺🛑🌺🛑🌺🛑🌺🛑🌺🛑🌺🛑🌺🛑

செவ்வாய் தோஷம் நீங்கி நல்ல பலன் கொடுக்குமா ?

திருமணத்திற்கு வரன் பார்க்கும் போது, வரனின் ஜாதகத்தில்,

செவ்வாய் தோஷம் இருந்தால் அவர்கள் படும் மன வேதனை

சொல்லி மாளாது.

பொதுவாக செவ்வாய்,லக்னத்திற்கு 2, 4, 7 ,8 ,12-ல் இருந்தால்

செவ்வாய் தோஷம்.

செவ்வாய் தோஷம் உள்ள ஒரு பெண்ணிற்கு ,அதே தோஷம்

உடைய ,அதே அமைப்பில் உள்ள ,ஒரு ஜாதகத்தை

பொருத்தினால் செவ்வாய் தோஷம் நீங்கிவிடும் என்றும், அதற்கு

பரிகார செவ்வாய் என்றும் பரிகாரமாக சொல்லப்படுகிறது.

உதாரணமாக ஒரு பெண் ஜாதகம்.

கன்னி லக்கினத்திற்கு எட்டாம் இடத்தில் செவ்வாய் இருக்கும் ஒரு

ஜாதகத்திற்கு, 8 ல்செவ் இருக்கும் ஆண் ஜாதகத்தை பொருத்தினால்

தோஷம் நீங்கி, பரிகார செவ்வாய் ஆகிவிடும் என்று

சொல்லப்படுகிறது.

கன்னியா லக்னத்திற்கு 8 ல் ஆட்சியாகும் செவ்வாய், கடுமையான

கெடுபலனை செய்யும் கிரகம்.


மற்றொரு ஆண் ஜாதகத்தில் தனுசு லக்னத்திற்கு 8 ல் செவ்வாய்

நீசம் என்று வைத்துக்கொள்வோம்.

தனுசு லக்னத்திற்கு புத்திர ஸ்தானாதிபதி நீசம். கூடவே ராகு 2

டிகிரியில் செவ்வாயுடன்

இணைந்துள்ளது என்று வைத்து கொள்வோம்.

இந்த இரு ஜாதகங்களும் எட்டில் செவ்வாய் இருக்கிறது என்ற ஒரே

காரணத்தால் இணைகிறது என்று வைத்துக்கொள்வோம்.

நிலைமை என்னவாகும்? யோசித்துப் பாருங்கள்.

பெண் ,சுக்கிர திசை இறுதிப்பகுதியில் பிறந்துள்ளாள் .திருமணம்

முடிந்த பின்பு, கன்னி லக்னத்திற்கு வரக்கூடாத செவ்வாய் திசை

நடைமுறையில் வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.

ஆண் ஜாதகம், கடுமையான புத்திர தோஷம் உள்ள ஜாதகம்.

இரண்டையும் ஒன்றோடு ஒன்று இணைக்கலாமா?

பரிகார செவ்வாய் என்ற ஒரு வார்த்தையை மட்டும் நம்பி,

ஜாதகத்தை முழுமையாக ஆராயாமல், இணைத்தால் கடலளவு

துன்பத்தை கொடுத்துவிடும்.

ஒரு ஜாதகத்தில் களத்திர ஸ்தானம், ஆயுள் ஸ்தானம், புத்திர

ஸ்தானம் குடும்ப ஸ்தானம் ,குரு ,சுக்கிரனின் நிலைமையை அறிந்து

, குறைந்தபட்சம் அடுத்து 20 வருடங்களுக்காவது ,நல்ல திசைகள்


நடைமுறையில் உள்ள ஜாதகங்களை, சரியாக ஆராய்ந்து

திருமணத்தின் போது ஒன்றோடொன்று இணைக்க வேண்டும்.

தோஷ நிவர்த்தி செவ்வாய் என்ற ஒரு வார்த்தையை மட்டும் நம்பி,

ஜாதகங்களின் மற்ற அமைப்புகளை ஆராயாமல் இணைத்தால்

பரிதாபப்பட வைத்து விடும்.

திருமண தகவல் மையங்களிலும், வரனின் இடைதரகர்களிடம்

இது பற்றிய தெளிவான புரிதல் இன்மையால், தோஷ ஜாதக

வரனை இணைத்துப் பல இடங்களில் திருமணம் மற்றும் குழந்தை

பேற்றில் பிரச்சனையை கொடுத்து விடுகிறது

செவ்வாய் எதிர்மறையான அமைப்பில் இருப்பவர்கள் ,பழனி

முருகனை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ,செவ்வாய்

ஹோரையில் வீட்டில் தீபமேற்றி வழிபட்டு வர தோஷம் குறையும்.

நம்மை

தோஷங்களுடன் படைத்தவனை தீபமேற்றி வழிபட்டால்

தோஷங்களை நீக்கி வெளிச்சத்தைக் காட்டுவான்.

இறைவனை நம்பினார் கெடுவதில்லை

நான்கு மறை தீர்ப்பு.

You might also like