291 அமானுஷ்ய சக்திகள்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

ஜோதிட நுணுக்கங்களும் பரிகாரங்களும்(291)*

*அமானுஷ்ய சக்திகள்*

அமானுஷ்யங்கள், செய்வினை கோளாறு ,பில்லி சூனியம் ஆவி போன்ற கெட்ட சக்திகள்

அல்லது இந்த அனுபவம் யாருக்கு ஏற்படும் ..

. Negative Energy or bad vibration ..பொதுவாக ஆவி செய்வினை கோளாறு என்பது சுத்தமாக

இல்லை அது ஒரு பொய் பிரச்சாரம் அல்லது பொய்யான குற்றச்சாட்டு என்றாலும்கூட

அனைவருக்கும் இந்த மாதிரியான அனுபவங்கள் ஏற்படுவதில்லை. குறிப்பாக சிலருக்கு

மட்டுமே இந்த அமானுஷ்யங்கள் செய்வினை கோளாறு போன்றவை ஏற்படுகிறது காரணம்

பார்க்கலாம் வாருங்கள்.

அதர்வண வேதம் இதன் அதிபதி புதன். அதர்வண வேதம் முழுவதுமே மாந்திரீகம்

தொடர்புடையது. காளி இதன் அதிதேவதை.

ஆன்மீகம் தொடர்புடையவர்கள், எந்த ஒரு குடும்பத்திலும் சாமியாடி என்று சொல்பவர்கள்,

அதர்வண வேதம் இவர்கள் இல்லாவிட்டாலும் இவர்களுடைய முன்னோர்கள் பயன்படுத்தி

இருப்பார்கள் (முன்னோர்கள் என்பது ஐந்து தலைமுறைகளை கடந்தும் பயன்படுத்தி

இருக்கலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது) இங்கே குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால்,

ரோகிணி, உத்திரம், பூராடம் ,பூசம் இந்த நட்சத்திரங்கள் அதர்வண வேத த்துடன்

தொடர்புடையது .

புதன் சார்ந்த நட்சத்திரங்கள் அல்லது புதனின் கர்ம பலனை அனுபவிக்கும் நட்சத்திரக் காலில்

நின்று ஒரு தசா புக்தி நடந்தாலும், உதாரணமாக மேலே சொன்ன ரோகிணி உத்திரம் பூராடம்

பூசம் அல்லது புதனின் நட்சத்திர காலில் நின்று ஏதேனும் ஒரு தசா அல்லது புத்தி

நடப்பவர்களுக்கு அந்த குறிப்பிட்ட காலத்தில் தன்னை ஏதோ ஒரு சக்தி போட்டு அமுக்குவது

போல்அல்லது ஏதோ கருப்பான உருவம் தன்னை ஆட்கொள்வது போலும் உணர்வுகள்

ஏற்படும்.

குறிப்பாக செவ்வாய் சந்திரன் சேர்க்கை, செவ்வாய் சந்திரன் பார்வை உள்ளவர்கள்

குடும்பத்தில் நிச்சயமாக ஆன்மீகம் சம்பந்தமாக அல்லது சாமியாடி குறி சொல்பவர்கள்,

அமானுஷ்யம் சம்பந்தப்பட்ட அல்லது மாந்திரீகம் தொடர்புடையவர்கள் இருப்பார்கள்,

காரணம் சந்திரன் இங்கே மனோகாரகன் செவ்வாய் ரத்த காரகன் இரண்டும் தொடர்பு பெறும்

பொழுது மேலே குறிப்பிட்ட புதனின் நட்சத்திர காலில் நின்று தசா நடந்தாலும் அல்லது புக்தி

நடக்கும் சமயங்களில் மனம் புத்தி இரண்டுமே மிகவும் நுணுக்கமாக (sensitive)


அவர்களுடைய ஆத்மா எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய, தன்னை சுற்றி ஏதோ ஒரு

அமானுஷ்யம் நடப்பதுபோல் அதிகமாக உணர்வார்கள் ..

அனைத்திற்கும் மேலாக. ஒருவருக்கு அவயோக தசா புக்தி காலங்களிலும் கர்ம தசைகள்

எனக்கூறப்படும் ராகு, சனி தசா காலங்களிலும், ஒருவர் எதிர்மறை ஆற்றலால் பாதிக்கப்பட

முடியும். அல்லது பாதிப்புகளை உணர முடியும் ..

அந்தக் குறிப்பிட்ட தசா காலம் முடிந்தவுடன் இவர்களை சுற்றி இருந்த அமானுஷ்யம் பில்லி

சூனியம் ஏவல் போன்ற உணர்வுகள் இவர்களை விட்டு நீங்கிவிடும் ..

இது போன்ற விஷயங்களில் பாதிக்கப்பட்டவர்கள், துர்க்கை அம்மன் வழிபாடு மற்றும் காளி

வழிபாடு இவர்களுக்கு நன்மை தரும்.வாராஹி அம்பாள் வழிபாடு , பிரத்தியங்கிரா அம்பாள்

வழிபாடு பலன் அளிக்கும் காரணம் பெண் தெய்வங்களே இவர்களுக்கு positive energy

(நேர்மறை எண்ணங்களை தூண்டும்) .மேலே கூறிய அனுபவங்கள் இருப்பவர்கள் சோதித்து

அறிக.

♓💥♓💥♓💥♓💥♓💥

You might also like