Professional Documents
Culture Documents
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை திருவாரூர் பதிகம் 7.095
மீளா அடிமை உமக்கே ஆள்
பண் - செந்துருத்தி ( அருள்தரு அல்லியங்கோதையம்மை உடனுறை அருள்மிகு வன்மீகநாதர்
திருவடிகள் போற்றி )
திருத்துருத்தியிலிருந்து திருவாரூரை யடைந்த நம்பியாரூரர், முதலில்
திருப்பரவையுண்மண்டளி யென்னும் திருக்கோயிலை யடைந்து திருப்பதிகம் பாடி, எனது
துன்பத்தினைப் போக்கிக் கண் காணும்படிக் காட்டுதல் வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
பிறகு அடியார்களுடன் ஆரூர் மூலட்டானேசுவரரை அர்த்தயாம காலத்திலே சென்று வழிபட
எண்ணி அயன்மை தோன்ற வருந்திக் கூறும் நிலையில், திருப்பதிகம் பாடிக்கொண்டு உள்ளே
சென்று வீழ்ந்து வணங்கினார். இறைவன் திருமேனி யழகைக் காண ஒரு கண் போதாமையை
எடுத்துக்கூறி, வலக் கண் வேண்டி மிக உருக்கமாக, மீளா அடிமை என்ற திருப்பதிகத்தைப்
பாடினார்.
இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ கண்களில் உள்ள கோளாறு பார்வை
குறைபாடு அனைத்தும் நீங்கும்
[ 9]
பேயோடேனும் பிரிவு ஒன்று இன்னாது என்பர்,
பிறர் எல்லாம்;
காய்தான் வேண்டில், கனிதான் அன்றோ,
கருதிக் கொண்டக்கால்?
நாய்தான் போல நடுவே திரிந்தும், உமக்கு
ஆட்பட்டோர்க்கு
வாய்தான் திறவீர்; திரு ஆரூரீர்!
வாழ்ந்துபோதீரே!