Professional Documents
Culture Documents
ஆயுள் பலம்
ஆயுள் பலம்
1. அற்ப ஆயுள் 33 வரை, மத்திம ஆயுள் 60 வரை, அதற்கு மேல் பூரண ஆயுள்.
2. ஆயுள் காரகன் சனி, மறைமுகமாக செவ்வாயும் ஆயுளுக்குப் பொறுப்பானவர். காலபுருஷனுடைய
எட்டாவது ராசி விருச்சிகம், அதற்கு அதிபன் செவ்வாய். இவர் சனியின் வீடான மகரத்தில்
உச்சமடைகிறார். ஆகவே இரண்டுக்கும் ஒரு தொடர்பு உண்டு. ஒரு மனிதனுக்கு நோய், கடன், எதிர்ப்பு,
போட்டி, பொறாமை, வஞ்சகம், வில்லங்கம், வம்பு, வழக்கு, தகறாறு, வெட்டு குத்து இவற்றைத்
தருவது இந்த இரு கிரகங்களுமே. எப்போது எதனால் சாவான் என்பதை ஆயுளுக்கு நேர்முகப்
பொறுப்பேற்ற சனியும் மறைமுகமாக செவ்வாயும் முடிவு செய்யும்.
3. முதலில் லக்னாதிபனுடைய வலுவை கணிக்க வேண்டும். லக்னாதிபன் கேந்திர, திரிகோணங்களில்
அல்லது சுபர் வீடுகளில் அமர்ந்து ஆட்சியோ உச்சமோ பெற்றால் ஓரளவு ஆயுள் தீர்க்கம்.
4. எட்டாம் அதிபனது வலுவை கவனிக்க வேண்டும். சுபர்களின் பார்வை, சேர்க்கை, அல்லது இணைவு
பெறுவது அவசியம். உதாரணமாக மேஷ லக்னத்தாருக்கு லக்னாதிபனும் எட்டாமதிபனும் ஒருவரே
என்பதால் செவ்வாய் வலுப் பெறுவது அவசியம். எட்டாமிடம் சுபத்துவம் அடைதல் வேண்டும். குரு,
புதன் அல்லது சுபர்கள் பார்வை தேவை.
5. எட்டாமிடத்திற்கு எட்டாமிடமான மூன்றாமிடமும் வலு பெற வேண்டும்.
6. ஆயுளைத் தரக்கூடிய சனியும் வலிமை பெற வேண்டும். லக்னாதிபன், எட்டாமதிபன், மூன்றாமதிபன்
மற்றும் சனி பகவான் வலு பெறுதல் தேவை. செவ்வாய்க்கும் வலிமை வேண்டும்.
7. இவற்றில் 1 ஆம் இடமோ 8 ஆம் இடமோ பலமற்றிருந்தால் சுபர் பார்வை சேர்க்கை அற்றிருந்தால்
அது அற்பாயூளைக் குறிக்கும்.
8. எப்போது எப்படி முடியும் என்பதை 8 ஆமிடமும் 12 ஆமிடமும் முடிவு செய்கின்றன. 4, 8, 12 4 மிடம்
வசிப்பிடம் என்று சொன்னாலும் அது கல்லறையையும் குறிக்கும், 8 ஆயுள், 12 முடிவு அடுத்த
பிறவியை நோக்கி நாம் நகர உதவும் ஸ்தானம்.
9. 3, 8,லக்னாதிபன், சனி செவ்வாய் இவற்றில் 2 க்கு மேல் வலிமை பெற்றால் அது மத்திம ஆயுள்
ஜாதகம். 3 நிலைகளுக்கு மேல் வலிமை பெற்றிருந்தால் உத்தம ஆயுள் ஜாதகம். எல்லாவற்றிலும் வலு
இருக்க பரிபூரண ஆயுள்
அட்டமத்தோன் அதற்கு எட்டும்
திட்டமிட்டு கேந்திரத் திரிகோணத்தில் நின்றுவிட்டால்
இட்டமுடன் கூறிவிடப்பா இவர்களுக்கு ஆயுள் தீர்க்கமென்று.
ஆயுள் காரகன் சனியின் சுற்றை வைத்தே ஆயுள் நிர்ணயமாகிறது. சனியின் ஒரு சுற்றுக்கு 30
வருடங்கள் தேவை. முப்பது வருடத்துக்குள் ஒருவர் மரணித்தால் அது அற்ப ஆயுள், இரண்டாவது
சுற்று 30 லிருந்து 60 க்குள் நடக்கிறது. ஒருவர் முப்பதிலிருந்து அறுபது வயதுக்குள் இறந்தால் அது
மத்திம ஆயுள்; மூன்றாவது சுற்று அறுபதிலிருந்து தொண்ணூறுக்குள் நடக்கிறது, ஒருவர்
அறுபதிலிருந்து தொண்ணூறு வயது வரை வாழ்ந்தால் அந்த ஜாதகருக்கு தீர்க்காயுள்;
சர ராசிக்கு 11 ஆமிடம் பாதக ஸ்தானம், ஸ்திரத்துக்கு 9 ஆமிடம், உபயத்துக்கு 7 ஆமிடம் பாதகம்;
மரணத்துக்கொப்பான சில விஷயங்களை பாதக ஸ்தானம் காட்டும், அந்த ஸ்தானதிபதியின் தசா
புத்திகளில்.
ஒரு ஜாதகனுக்கு தர்ம கர்மாதிபனும் பத்தாமிடத்தோனுமான சனி தசையோ புத்தியோ
நடக்கும்போது அவரது தாய், தந்தையர் மரணிக்கலாம்.
சனியோடு செவ்வாய் இணைந்தால் வாகன விபத்தால் அல்லது தீவிபத்தால் மரணம்.
2
சனி ராகு, கேது தொடர்பிருந்தால் நோயால் மரணம், வெளியில் தெரியாத நாள்பட்ட நோயாலாகும்.
சூரியனால் மரணம் எனில் அது விடியற்காலையில் நிகழும் பெரும்பாலும் இயற்கை மரணமே
தான். தூக்கத்திலும் கூட நிகழலாம்.
சந்திரனால் மரணமெனில் நீர்நிலைகளில் பாதிப்பு ஏற்படலாம். ஒரு வேளை இரவிலும் ஏற்படலாம்.
சுக்கிரனால் மரணம் வருமெனில் அது பெண்களால் நிகழலாம், உடலில் எங்காவது புண் வந்து அது
ஆறாமல் பெரிதாகி மரணம் வரலாம். துன்பப்பட்டு உயிர் பிரியும்
ராகு, கேது மரணம் தருமெனில் விபத்தாலோ விஷ ஜந்துக்களாலோ அது நேரலாம், வாதைப்பட்டே
உயிர் பிரியும் எனலாம்.
புதன் பொறுப்பெனில் மரணம் திடீர் விபத்துக்களால் வரலாம்.
குருவால் மரணம் எனில் அது இயற்கை மரணமாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம். ஒருவேளை
மாரடைப்பும் காரணமாகலாம். உயிர் அதிக துன்பம் தராமல் பிரியும்.
கேது
ராசி
ராகு
/ல சனி
(வ)
கேது
ராசி
அந்தக் கட்டடத்துக்கு சூரியனும் வருகிறது.
ராகு சூரியன் தான் ஆன்மா, இங்கே சந்திரன் கோட்சார
குரு சனி
சந்திரன் பயணம், பயணத்துக்கு உள்ளது சந்திரன்,
சூரி
/ல சனி ஆயுளை முடிக்க கூடிய கிரகம் கோச்சார ராகு.
(வ)
இந்த ராகு இப்போது கடகத்தில் இருக்கிறது.
இன்னும் ஒரு மாதத்தில் மிதுனத்திற்கு போய்விடும், ஒன்றரை வருஷம் கழிச்சி ரிஷபத்திற்கு
வரும். அவர் ரிஷபத்திற்கு வரும்போது ராகு குருவோடு இணைந்து இந்த கோச்சாரம் குருவும்
சனியும் பிறப்பு ஜாதகத்தில் உள்ள ராகுவுடன் இணைந்து செயல் இழக்கிறது.
கோச்சர குரு இயக்கம், சனி கர்மா, இந்த குருவும் சனியும் பிறப்பு ஜாதகத்தில் உள்ள ராகு,
கேதுவோடு இணைந்தால் செயல் இழந்துவிடும். செயலிழக்கும் போது அங்கு சூரியன் அந்த
கட்டத்துக்கு வருது. மகரத்துக்கு வரும்போது ஆன்மா (சூரியன்) அதில் சிக்குகிறது. பயணத்திற்கு
உண்டான கிரகம் சந்திரன் ரிஷப ராசியில் வருகிறது, ஆன்மா பயணமாகும்.
எப்போதுமே ராகுவுக்கு ஒரு குணம் உண்டு, துண்டு செய்யக்கூடிய, துண்டு பண்ணக்கூடிய அந்த
அமைப்பு, உடலில் இருந்து உயிரை துண்டு பண்ணும்.21.02.2021 அன்று குரு சனி இரண்டும்
செயலிழக்கிறது, ராகு குருவை நெருக்குது, ஆன்மா சூரியன் ராகுவுடன் சேர்கிறது,
அன்னைக்குதான் அந்த 2021 ஜனவரி 21 ஆம் தேதி மாந்தி, மகரத்தில் உதயமாகிறது. மாந்தி
உதயமாகும் போது ஜாதகருடைய ஆயுள் முடியும். ஜாதகத்தில் 21 1 2021 அன்றைக்கு என்னுடைய
உயிர் உடம்பு விட்டு பிரிந்து இறுதிப்பயணம் ஆகும்.
4
ஆனா இதுல பாருங்க இந்த இறுதிப் பயணத்தை கொடுக்கக்கூடிய இதற்கு என்ன காரணம்
அப்படிங்கிறது கண்டுபிடிக்கணும். ஒருவருக்கு ஆயுள் முடியும் போது அதற்கு ஏதேனும் ஒரு
காரணத்துக்காக ஏற்படும். இந்த ராகு-கேது அதை உருவாக்கும்.
ஒரு காரணத்தை அது கொடுத்து அது உயிர் எடுக்கும் அப்ப அந்தக் காரணம் என்ன என்று கண்டு
பிடிக்கணும். பத்தான ராசியில் குருவும் சுக்கிரனும் பரிவர்த்தனை இருக்குது இந்த ஜாதகத்தைப்
பார்க்கும்போது தீர்க்காயுள் என்று முடிவு பண்ணிடலாம். அறுபதுக்கு மேல நூறு வயசுக்குள்ள
மரணம் நிகழும்.
அதற்கு ஒரு காரணம் வேண்டும் அதற்கு என்ன காரணம். சுக்கிரன் நாலம் இடத்தில் மீன ராசியில
நிற்கிறது அதற்கு பன்னிரண்டாம் இடம், மூன்றாம் வீடு கும்பம். இந்த மூன்றாம் வீட்டின்
காரகத்துவம் வீர்யம், பலம், ரத்தம். அப்ப வீர்யம் பலம், ரத்தம் அப்படின்னாலே அது நம்முடைய
தெம்பு, சக்தி. தெம்பு இல்லாம போயிடும் போயி உனக்கு ஒரு தீராத ஒரு நோயை கொண்டு
வந்து அந்த சக்தியை எடுத்துவிட்டு அதற்குப் பிறகு அது உயிரை எடுக்கும்.
சரி நண்பர்களே ஒவ்வொருவரும் அவர்களது ஜாதகத்தை ஆராய்ந்து பாருங்கள், பாக்குறதுக்கு
ஜாதகரை குருவாக வைத்து, இந்த குருவை கோச்சார ராகுவும் குருவும் சனியும் ஒரே சமயத்தில
பாக்கணும், அப்படி இருக்கும்போது அந்த ஜாதகர் இறப்பார் அவருடைய ஆன்மா உடலில் இருந்து
பிரிந்து விடும்.
சரி நண்பர்களே உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் எனக்கு இந்த குழுவில் பதிவு
போடுங்க இந்த வாட்ஸப் குழுவில் பதிவு போடுங்க நான் உங்களுக்கு பதில் சொல்றேன் நன்றி
நண்பர்களே வணக்கம்
Dr K Balasubramanyam mail id Srikrishna.jyotish@gmail.com 925 292 7171 Watts App 510 725 6244
எட்டாமிடம் துன்பங்கள், அவமானம், திடீர் திருப்பங்கள், விபத்துக்கள், எண்ணங்கள்
நிறைவேறாமை, ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, கண்டம், உழைக்காமல் வரும் பணம்
(அப்பாவின் சொத்து) விரோதிகளால் தாக்கப்படுவது மற்றும் மரணம் நேரும் விதம்
ஆகியவற்றைக் குறிக்கும்.
எட்டாமிடம் சனி தொடர்பாயின் மரணம் ( prolonged illness) நீண்ட நாள்பட்டதாக இருக்கும்.
செவ்வாய் தொடர்பு பட்டால் துன்பமின்றி லகுவில் மரணம்.
குரு சம்மந்தப்பட்டிருந்தால் இயல்பாக அமைதியாக இயற்கை மரணம் நிகழும்.
பொது விதிகள்
ஆணோ, பெண்ணோ வாழ்க்கையில் தன் துணையோடு வாழ்வதே சிறப்பு. ஆண் ஜாதகத்தில்
ஆணைக் குறிப்பது குரு – பெண்ணைக் குறிப்பது சுக்ரன்; பெண் ஜாதகத்தில் பெண்ணைக் குறிப்பது
செவ்வாய் – ஆணைக் குறிப்பது சுக்ரன். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் வக்ரம்
பெற்றிருந்தால் அவரது மண வாழ்க்கை (குடும்ப உறவு) சிறப்பாக அமையாது எனலாம்.
குருவுக்கு ஒன்பதில் ராகு அமைந்தால் தன்னம்பிக்கையைக் குறைக்கும். ஒராயிரம் வழிகளில்
சிந்தனை தரும். தாயத்து, மந்திரக்கயிறு முதலிய வலு சேர்க்கும் உபகணங்களைத் தேடச்
செய்யும். எதிர்மறை சிந்தனகளின் உச்சமாக தற்கொலை வரை தள்ளும்.
குரு சனி சேர்க்கை இளவயதிலேயே பொறுப்பேற்கச் செய்யும். பொருளீட்டுதல், சுய சம்பத்யம்
என்ற இலக்குகளை ஏற்படுத்தும்.
ஒரு ஜாதகத்தில் 12 ஆம் இடத்திலுள்ள கிரகம் அல்லது பாவதிபதி இறந்தபின் உயிர் எங்கே
போகிறது என்பதை நிர்ணயிக்கிறது. 12 ஆமிடத்தில் கேது இருந்தால் ஜாதகன் மோட்சம்
அடைவானென்றும், சூரியன் இருந்தால் கைலாயம் அடைவான் என்றும் புதன் இருந்தால்
வைகுந்தம் அடைவான் எனவும் குரு இருப்பின் பிரம தேவனின் சத்திய லோகத்தை அடைவான்
என்றும் கூறப்படுகிறது. 12 ல் சனி நரகத்தைத் தரும், ராகு உடனடியாக மானிடப் பிறப்பைத்
தரும்,
டிகிரி கொண்டது. மொத்தம் 11 கரணங்கள். ஒருவர் எந்த கரணத்தில் பிறந்தவர் என்பதை வைத்து
.அவரது குணத்தை அறிந்து கொள்ளலாம்.
காலையில் ஒரு கரணமும், மாலையில் ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும்
மொத்தமாக 60 கரணங்கள் உண்டு. சந்திரனின் 16 நாட்கள் வளர்பிறை , 16 நாட்கள் தேய்பிறை
ஒருமாத காலத்தில் சந்திரனின் வளர்பிறை, தேய்பிறைக் காலங்களில் வருவது தான் கரணங்கள்.
இக்கரணங்கள் என்பது ஒரு மாதத்தில் வரும் திதிகளில், அத்திதியின் அரைப் பகுதியாகும்.
மொத்தம 11 வகையான கரணங்கள் இருக்கின்றன. இதில் 7 கரணங்கள் ஸ்திர கரணங்கள் அதாவது
நிலையான கரணங்கள், இது ஒரு மாதத்தில் 8 முறை வரும். மீதமுள்ள 4 கரணங்கள் சர
கரணங்கள். அதாவது நகரும் கரணங்கள் இது மாதத்தில் ஒரு முறை மட்டுமே வரும்.
அக்கரணங்களுக்குக்கான உருவமாக சில விலங்குகள், பறவைகள் உருவங்களும் ஜோதிட
சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. நீங்கள் பிறந்த நேரத்தை வைத்து உங்களுக்கான .
கரணத்தை அறியலாம். அதோடு ஒவ்வொரு கரணத்தில் பிறந்தவருக்கும் சில குணாதிசயங்கள்
இருக்கும் அது பற்றி பார்ப்போம்.
பவம் ,பாலவம், கௌலவம், தைதுலை,கரசை ஆகியவை சுபகரணங்களாகும். வணிசை, பத்திரை,
சகுனி, சதுஷ்பாதம் , நாகவம் , கிம்ஸ்துக்னம் ஆகியவை அசுபகரணங்களாகும்.
கரணங்கள் விலங்குகள் பவம் - சிங்கம், பாலவம் - புலி, கௌலவம் - பன்றி, தைதுளை - கழுகு, கரசை
- யானை, வணிசை- எருது, பத்தரை - கோழி, சகுனி - காக்கை, சதுஷ்பாதம் - நாய், நாகவம் - பாம்பு,
கிம்ஸ்துக்னம் - இந்த 11 கரணங்களில் ஜனிக்கும் மனிதர்கள் அந்த அந்த பறவைகள், மிருகங்களின்
குணாதிசயங்களையும், உணர்வுகளையும் தன்னகத்தே பெற்றவர்களாக இருப்பார்கள்.
தாம்பத்திய உறவுகளில் அந்தந்த பறவை , மிருகங்களின் காம உணர்வினையே அதிகமாக
பிரதிபலிப்பார்கள். நா, நாய் குணம் கொண்டவர்களுடன் கோழி குணமோ காகம் குணமோ
கொண்டவர்களை ஜோடி சேர்த்தால் உறவு இனிக்காது தம்பதியரிடையே இதுதான் பிரிவுக்கு
காரணமாகிறது.
விலங்குகளின் குணாதிசயங்கள் திருமணத்திற்கு ஜோடி சேர்க்கும் போது பத்துப்பொருத்தம்,
ஜாதகப்பொருத்தம் பார்ப்பது போல கரணம் பொருத்தமும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
கரணங்களுக்கும் தம்பதியர் இடையே பிரச்சினை ஏற்பட்டு திருமணம் முறிந்து போவதற்கும்
காரணம் என்ன என்று ஓசிக்கிறீர்களா அதற்கும் விளக்கம் கொடுத்துள்ளனர் ஜோதிடர்கள்.
கோழி , நாய் , பன்றி , கழுதை , எருது , பாம்பு போன்றவைகள் எதனைப் பற்றியும் கவலையின்றி
தனது இன்பத்தினை மட்டுமே கருத்தில் கொண்டு சந்தோஷமாக இருக்கும். அதே நேரம் மற்ற
சிங்கம், புலி, யானை, காகம், புழு போன்றவைகள் தனது இன்பத்தினை யாரும் காணாதவாறு
அமைத்துக்கொள்ளும்.
எந்த விலங்குகளுக்கு எவ்வளவு நேரம்: காமத்தில் அதிக ஈடுபாடு கொண்டதாக கோழி, நாய், பன்றி,
கழுதை, பாம்பு , புழுக்கள் இருந்தாலும் இவைகள் கலவியில் ஈடுபடும் நேரம் ஒரே மாதிரி
இல்லை. குறுகிய நேரம், நீண்ட நேரம் என மாற்றம் உடையதாக இருக்கின்றது. உதாரணமாக
கோழி அல்லது சேவலின் உறவும் , காகங்கள் உறவில் ஈடுபடுவதும் சில நொடிகளே, அதே நேரம்
நாய்,பன்றி,கழுதை,புழு போன்ற விலங்குகள் உறவில் நீண்ட நேரம் ஈடுபடும்.
சிங்கம் புலி பவம் பால கரணத்தில் பிறந்தவர்கள் சிங்கம் பபோன்றவர்கள். இவர்கள்
எக்காரியத்திலும் பின் வாங்காத தைரியம் உடையவர். கூர்ந்து ஆராய்ச்சி செய்பவரும்.
சுகமுடையவரும், நன்னடத்தை உடையவரும். மென்மையான தலைமுடி கொண்டவர். பாலவம்
கரணத்தில் பிறந்தவர்கள் போன்றவர் சிற்றின்ப பிரியர். நீங்காத செல்வமுடையவர். அற்பத்
தொழில் முறையையுடையவர். தருமம் செய்பவரும், பிறரால் நிந்திக்கப்படாத
நற்குணமுடையவரும். தன் உறவினரைப் பேணிக்காக்கும் குணமுடையவர்.
9
திருமணம் எப்போது?
சந் செ ல/ சூரி
கேது புத
சனி சுக்
10
ராசி
குரு
ராகு
பிறந்த தேதி: 03.07.1994 நடப்பு தசை: சூரிய தசை புதன் புத்தி வயது 27 ஜாதகப்படி
6 பகை சூரியன்
சூரியன்
மூலத்
ஆட்சி 1
12
2 ஆமிடம் புதன் 2 ல் நட்பு 11 ல் பகை நட்பு + பகை = சமம் சூரியனுக்கு புதன் சமம்.
3 ஆமிடம் சுக்ரன் 3 ல் நீசம் 10 ல் பகை நீசம் + பகை = சமம்; சூரியனுக்கு சுக்ரன் சமம்.
4 ஆமிடம் செவ்வாய் 4 ல் நட்பு 9 ல் உச்சம் உச்சம் + நட்பு = நட்பு, சூரியனுக்கு செவ்வாய் நட்பு.
5 ஆமிடம் குரு 5 மற்றும் 8 ல் நட்பு சூரியனுக்கு குரு நட்பு.
6 ஆமிடம் சனி 6 மற்றும் 7 ல் பகை சூரியனுக்கு சனி பகை.
12 ஆமிடம் சந்திரன் நட்பு ஆனாலும் ஞானிகள் அதை சமம் என்று குறித்துள்ளனர் - விதிவிலக்கு
9 சமம் 4 நட்பு
சந்திரன்
6 சமம் பகை 3 6 7 10 11 11
நட்பு 1 2 4 5 89 சமம்
5 சமம் 12 12
புதன் நட்பு
10 உச்ச 5 நட்பு
செவ்வாய்
சமம்
12 ஆ சனி 7 பகை
அஸ்தங்கம்
சூரியனிலிருந்து சந்திரன் பனிரெண்டு, செவ்வாய் பதினேழு, புதன் பதின்மூன்று, குரு பதினொன்று,
சுக்கிரன் ஒன்பது, சனி பதினைந்து பாகைக்குள் வரும்போது அஸ்தங்கம் அடையும்.
கிரக யுத்தம்
சூரியன் சந்திரனைத் தவிர்த்து மற்ற கிரகங்கள் ஒன்றுக்கொன்று ஒரு பாகைக்குள் வரும்போது யுத்தம்
அடையும். மற்ற கிரகங்களில் வடக்கில் உள்ள கிரகம் வெற்றி அடையும்.
சர்வாஷ்டக பரல்கள்
உலகில் அனைவருக்கும் உள்ள மொத்த சர்வாஷ்டக பரல்கள் 337 மட்டுமே அதை 12 ஆல் (ராசிகளால்)
வகுத்தால் சராசரியாக 28 வரும். சராசரிக்கும் மேலே கூடுதலாக இரண்டு பரல்களுடன் - அதாவது 30
பரல்கள் மூன்று வீடுகளில் (லக்கினம், 5 ஆம் வீடு, 9 ஆம் வீடு... ) - அல்லது ஒன்றிலாவது இருத்தல் நல்லது.
16
அதோடு ஒரு கிரகத்தின் தனிப்பட்ட வலிமைக்குரிய பரல்கள் எட்டு. நான்கு என்பது சராசரி. 4 ற்கு மேற்பட்ட
பரல்களுடன் அந்த கிரகம் (அதிபதி) இருந்தால் நல்லது.
1. நவாம்ச சக்கரத்தில், சனி அம்சமாகிய மகர, கும்பங்களில் ஒன்றில் சனி இருந்தாலும், அல்லது
இராசியிலுள்ள சந்திரனை சனி பார்த்தாலும், பிரசவ அறை இருட்டாக இருக்கும். ஆனால் இக்காலத்தில்,
மேற்கூறப்பட்டவாறு அமைந்தாலும், அவசரக்கால விளக்குகள் அல்லது மாறுதிசை மின்னோட்டம் (INVERTER)
பயன்படுத்தினாலும் அந்த அறையானது, இயற்கையிலேயே, நிச்சயம் இருள் கவ்வியதாக இருக்கும்.
2. குழந்தையின் பிறப்பின் நிலையை அறிய முடியும். எந்த லக்கினத்தில் குழந்தை பிறந்ததோ, அந்த
லக்கினத்தின் தொடக்கத்தில் 10 பாகைக்குள் இருந்தால், அக்குழந்தையின் பிரசவ காலத்தில், எந்தவிதமான
துன்பமும் இல்லாமல் பிறந்திருக்கும் எனலாம். அதே சமயம் அந்த லக்கினத்தின் 29-30 பாகைக்குள்
குழந்தை பிறந்திருந்தால், அக்குழந்தை பிறக்கும் போது பிரசவம் கடினமானதாக இருக்கும்.
3. ஜென்ம லக்கினம் முதல் சந்திரன் இருக்கும் வீடு வரை எண்ணி அவற்றில் எத்தனை கோள்கள்
இருக்கிறதோ அத்தனை பேர் பிரசவம் ஆகும் நேரத்தில் அருகில் இருப்பார்கள்.
ஒருவர் பிறந்து ஜாதகம் பார்ப்பதற்கு 12 வருடங்களுக்குப் பிறகு பார்த்தால் தான் சரியாக இருக்கும்.
ஏனென்றால் 12 வயதில்தான் ஜனன கால ஜாதகத்தில் இருக்கும் குருவோடு கோச்சார குரு சேர்வார். (12
ராசிகளைக் கடந்து ஜனன கால குருவோடு, கோச்சார குரு சேர்வார்.) எனவே பனிரெண்டு வயதிலே தான்
மிக முக்கியமான நிகழ்வுகள் நிகழும். அதற்கு முன்னதாக அவசியம் பார்க்க வேண்டுமானால், அந்த
குழந்தை (ஜாதகர்), ஏதேனும் நோய்வாய்ப்பட்டிருந்தாலோ அல்லது பிரச்னை ஏதேனும் இருந்தாலோ,
ஜாதகம் பார்க்கலாம். அது பாலாரிஷ்டம் சம்பந்தம் உள்ளதாக இருக்கக்கூடும்.
புத்திர பாக்யம்
ஜனன ஜாதகத்தில் இலக்னத்தில் இருந்து / சந்திரனில் இருந்து 5 ஆம் இடம், பஞ்சமாதிபதி, அவரின் பலம்,
காரகர் குருவின் நிலை, ஆணுக்கு பீஜ ஸ்புடமும், பெண்ணுக்கு க்ஷேத்திர ஸ்புடமும் மற்றும் பார்வை
நிலைகளும் ஆராயப்பட வேண்டும். குழந்தைப் பேறுக்கான காலத்தை தசா/புத்தி, கோசார நிலைகளை
ஆராய்ந்து அறிவித்தல் வேண்டும்.
17
உதாரண ஜாதகம் – 1 –
பீஜ ஸ்புட கணிதம். ஜாதகரின் திருமண நாள் – ஜூலை 2008 – புத்திரன் பிறந்த்து – ஜூன் – 2016.
சூரியன் + சுக்கிரன் + குரு பாகைள் = 323º . 50’ + 296º . 58’ + 125º . 23’ = 746º . 11’ – இதை 360 ஆல் வகுக்க மீதி
26º.11’ = மேஷம் – பரணி – 4 ஆம் பாதம்.
இராசிக் கட்டத்தில் பீஜ ஸ்புடம் ஒற்றைபடை இராசியான மேஷத்தில் இருப்பது நல்லது. நவாம்சத்தில்
இரட்டைப் படை இராசியான விருச்சிகத்தில் அமைவது நல்லதல்ல. சப்தாம்சத்தில் (துலாம்)
ஒற்றைப்படை இராசியில் இருப்பது நல்லதே.
இராகு குரு,சூரி
செவ் நவாம்சம்
சனி லக்//,சந்
புத,கேது,சுக்.
சந்திரன்+ செவ்வாய் + குரு பாகைகள் கூட்ட 110º.18’ + 02º.25’ + 282º.29 = 395º.12’. இதை 360 ஆல் வகுக்க
மீதி 35º.12’. இது ரிஷப இராசியில் (இரட்டைப்படை) விழுகிறது. கார்த்திகை – 3 ஆம் பாதம். சப்தாம்சம்
மற்றும் நவாம்சத்தில் முறையே தனுசுவிலும், கும்பத்திலும் விழுகிறது.
இராசிக் கட்டத்தில் பஞ்சமாதிபதி 8 இல் உள்ளார். குரு நீசமாகி உள்ளார். நவாம்சத்தில் க்ஷேத்திர
ஸ்புட அதிபதி சனி தனது சுய வீடான 4 ஆம் வீட்டில் உள்ளார்.
நவாம்சம் சூரி
சனி சந்
யோகி அவயோகி :
20
ஜோதிடத்தில் யோக ஸ்புடம் , அவயோக ஸ்புடம் என இரண்டு கணித ஸ்புடம் உண்டு. யோக ஸ்புடம்
எந்த நட்சத்திரத்தை குறிக்கிறதோ அந்த நட்சத்திர அதிபதி யோகி எனப்படுகிறார். யோக ஸ்புட நட்சத்திர
அதிபதிக்கு ஆறாவது நட்சத்திர அதிபதி அவயோகியாவார்.
யோக ஸ்புடம் = சூரிய ஸ்புடம் + சந்திர ஸ்புடம் + 93 பாகை 20 கலை.
உதாரணமாக
சூரிய ஸ்புடம் 256 பாகை 15 கலை 07 விகலை
சந்திர ஸ்புடம் 126 பாகை 40 கலை 34 விகலை
+ 93 பாகை 20 கலை 00 விகலை
−−−−−−−−−−−−−−−−−−−−
476 பாகை 25 கலை 41 விகலை .
யோக ஸ்புடமானது 360 பாகைக்கு மேல் இருப்பதால் 476 பாகை 25 கலை 41 விகலையை
360 பாகையிலீருந்து கழிக்க வேண்டும். கழித்து வருவது 116 பாகை 25 கலை 41 விகலை வருகிறது.
இந்த பாகை அளவானது கடக ராசியில் ஆயில்யம் நட்சத்திரத்தில் வருகிறது.
ஆயில்யம் நட்சத்திர அதிபதி புதன் ஆவார். புதனே யோகியாவார். ஆயில்யத்திற்கு ஆறாவது வரும்
நட்சத்திரம் சித்திரை யே அவயோகி நட்சத்திரமாகும். இதன் அதிபதி செவ்வாயாகும்.
யோகியாக வரும் கிரகம் ஒருவர் தன்னிச்சையாக தானே விரும்பி தனிபட்ட விசயங்களில் ஈடுபாடு
இருக்கும்.அவயோகியாக வரும் கிரக காரகங்களில் முழுமையான ஈடுபாடு இருக்காது.
யோகி கிரகம் புதனின் தன்மைகள் ஜாதகருக்கு அதிக நன்மைகளையும் அது சார்ந்த காரக பலன்களில்
அதிக ஈடுபாடு கொள்வதோடு ஜோதிடம் , கணக்கு வேலை, தணிக்கை, பச்சை நிறம் , தாய்மாமன்
உறவுநிலை மேம்படும்,இது போன்ற காரகங்கள் மேம்படும். அவயோகியாக வரும் செவ்வாயின் காரக
பலன் கெடு பலனாக அமையும். அதாவது உடன் பிறந்த சகோதரருடன் கருத்து வேறுபாடுகள், சண்டை
சச்சரவுகள், ரத்தம் சம்பந்தபட்ட நோய்கள், பூமி மண் மனை பிரச்சனைகள் போன்ற பலன்களில் தடைகள்
ஏற்படும்.
ஒவ்வொறு யோகி கிரகத்திற்கும் ஒரு அவயோகி கிரகம் உண்டு . அவையாவன.
# சூரியன் யோகி − சனி அவயோகி.
# சந்திரன் யோகி − புதன் அவயோகி.
# செவ்வாய் யோகி −கேது அவயோகி.
# ராகு யோகி − சுக்கிரன் அவயோகி.
# குரு யோகி − சூரியன் அவயோகி.
# சனி யோகி − சந்திரன் அவயோகி.
# புதன் யோகி − செவ்வாய் அவயோகி.
# கேது யோகி − ராகு அவயோகி.
# சுக்கிரன் யோகி − குரு அவயோகி.
குறிப்பு :
ஜாதக ரீதியாக யோகத்தை செய்யும் கிரகம் அவயோகி கிரகமாக வந்தால் நிச்சயமாக யோகத்தை
செய்யாது.
ஜாதக ரீதியாக தீமை செய்யும் கிரகம் யோகியா வந்தால் நிச்சயம் நன்மையை செய்யும்.
கே பி ஆளும் கிரகங்கள்:
நாள் அதிபதி M ராஜதுரை முன்னாள் ஒருங்கிணைப்பாளர் – ஜோதிடவியல்
ராசி அதிபதி சாஸ்திரா பல்கலை, தஞ்சை. 92453 40338
லக்ன அதிபதி
லக்ன நட்சத்திர அதிபதி
21.01.2020 காலை 10.00 மணி
ஒரு நட்சத்திரத்தின் ஒன்று மூன்று ஆகிய பாதங்களில் லக்னம் விழுந்தால் குழந்தை ஆண்.
ராசி சக்கரத்தில் மேஷம் ஆண், ரிஷபம் பெண் தொடர்ந்து 1 3 5 7 9 11 ஆண் எனவும் 2 4 6 8 10 12 பெண்
எனவும் கொள்ளப் படும்
நவாம்சத்தில் லக்னம் வரும் இடத்தின் மூலம் இதை அறியலாம்.
தற்போது அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பதால் நேரம் புரியாமல் லக்னம் சரியாக
கணிக்க முடிவதில்லை.
சுகப் பிரசவத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கே இது முறையாக சொல்ல முடியும்.
ஒரு ராசியின் 30 பாகைகளை 1 பாகை 25 கலை என்ற விகிதத்தில் 24 பகுதிகளாக பகுத்து ஆண்
ராசியின் முதல் 1 பாகை 25 கலை ஆண் குழந்தை, அடுத்தது பெண் குழந்தை எனவும் பெண்
ராசியின் முதல் பகுதி பெண் தொடர்ந்து ஆண் என குறிக்கப்படுகிறது.
லக்னம் துலா ராசி 16 பாகையில் உள்ளது, துலா ராசியின் முதல் 1 ¼ பாகை ஆணைக் குறிப்பது,
இவ்வகையில் 15 பாகைக்குள் 12 பகுதிகள் அடங்குகின்றன, 16 பாகையில் லக்னம் அமைந்து
இருப்பதால், அது 13 வது பகுதியைக் காட்டுகிறது. ஆகவே ஆண் குழந்தை என அறியலாம்.
அடுத்து மீன ராசியின் 7 பாகையில் லக்னம் என்றால், அது பெண் ராசியாகையால் முதல் 11/4
பாகை பெண், அடுத்த 1 ¼ பாகை ஆண், 5 – 6 ¼ பெண், ஆகவே 7 பாகை என்பது ஆணைக்
குறிக்கும் என அறியலாம்.
ஐந்தாமிடம் பூர்வ புண்ணியம், குல தெய்வம், புத்திர பாக்யம், காதல் உணர்வு, அன்பு, இரக்கம்,
பிறர்க்கு உதவுதல், ஆழ்மன எண்ண ஓட்டம், சுகபோகங்கள் மற்றும் குழந்தைகளால் பெறும்
நன்மை தீமை ஆகியவற்றைக் குறிப்பிடும்.
ஐந்தாமிடம் வலுப்பெற்று, ஒன்பதாமிடம் உச்சமானால் சுயசம்பாத்யம் இல்லாமலேயே
சுகபோகவாழ்க்கை கிட்டும்.
ஐந்தாமிடத்தில் அமரும் கிரகங்கள், அதைப் பார்க்கும் கிரகங்கள் தான் குழந்தையின் பாலினத்தை
நிர்ணயிக்கின்றன.
ஒருவருடைய ஜாதகத்தின் ஐந்தாமிடத்தில் சூரியன், குரு, ராகு ஆகிய கிரகங்கள் இருந்தால்
நிச்சயமாக ஆண் குழந்தை பிறக்கும்.
மனைவியின் ஜாதகம் ஐந்தாமிடம் வலுத்திருந்து அது பெண் எனக் காட்டினால் அப்போது பெண்
குழந்தையே பிறக்கும்.
ஐந்தில் குரு தனித்திருந்தால் புத்திர பாக்யம் தடைப்படும்/ தாமதமாகும். இல்லாமலே கூட போகும்.
ஐந்தில் சூரியன் மட்டும் தனித்திருந்தால் 99 சதவிதம் ஒரே ஒரு ஆண் குழந்தை பிறக்கும்.
ஐந்தில் செவ்வாய் நின்றால் இரண்டு குழந்தைகள் பிறக்கும்.
ஐந்தில் புதன் தனித்து அம்ர்ந்தால் பெண் குழந்தையே, ஆண் பிறந்தாலும், பெண் தன்மை
கொண்டதாக கூச்ச சுபாவம் உள்ளதாக அமையும். சனி நின்றாலும் இதே பலன் தான்.
ஐந்தில் சுக்ரன் அல்லது சந்திரன் நின்றால் பெண் குழந்தை மட்டுமே என்பது உறுதி.
ஐந்தில் ராகு இருந்தால் அளவற்ற ஆண் குழந்தைகள் உண்டு.
ஐந்தில் கேது அமர்ந்தால் ஆண் குழந்தை உண்டு, ஆனால் வேறு எங்காவது விடுதிகளில் அல்லது
உறவினர் வீட்டில் வளர்ந்து, பின் வெளிநாடுகளில் பணியமர்ந்து உங்களுக்குப் பயன் படாது.
உங்களோடு சேர்ந்து வாழ வாய்ப்பிருக்காது, அடிக்கடி நோய் தாக்கும்.
பாதகஸ்தானம்
மேஷத்திற்கு ஆறாமிடம் கன்னி, கன்னிக்கு கும்பம் ஆறாமிடம், ஆகவே மேஷத்திற்கு
பதினொன்றாமிடமான கும்பம் பாதகஸ்தானம்.
ரிஷபத்திற்கு ஐந்தாமிடம் கன்னி, கன்னிக்கு ஐந்தாமிடம் மகரம். ஆகவே ரிஷபத்திற்கு
ஒன்பதாமிடமான மகரம் பாதகஸ்தானம்.
மிதுனத்திலிருந்து நாலாமிடம் கன்னி, கன்னிக்கு நாலாமிடம் தனுசு. ஆகவே மிதுனத்திற்கு
ஏழாமிடமாகிய தனுசு பாதகஸ்தானம்.
இந்த அடிப்படையில் தான் சரராசிக்கு 11 ம் ஸ்திர ராசிக்கு 9 ம் உபய ராசிக்கு 7 ம் பாதக்
ஸ்தானங்களாக சொல்லப்பட்டுள்ளன. கன்னி ராசியை அடிப்படையாக வைத்துத்தான் இது முடிவு
செய்யப்பட்டிருக்கிறது.
கன்னி ராசி தனுசு ராசிக்கு பத்தாவது ராசி, கன்னி ராசி மகரத்திற்கு ஒன்பதாவது ராசி, கன்னி ராசி
மிதுனத்திற்கு நாலாவது ராசி,
கால புருஷனுக்கு தர்ம வீடாகிய ஒன்பதாவது வீடாகிய தனுசுக்கு கன்னி பத்தாம் வீடு,
கால புருஷனுக்கு கர்ம வீடாகிய பத்தாவது வீடாகிய மகரத்திற்கு கன்னி ஒன்பதாம் வீடு –
தர்மத்திற்கு கர்மம், கர்மத்திற்கு தர்மம். ஆகவே கன்னி ராசி குறியாக கொள்ளப்பட்டது.
லக்னாதிபதி
உங்கள் லக்னாதிபதி எந்த ராசியில் நீச்சமடைகிறாரோ அந்த ராசி சுட்டும் பாவம் / உறவினிடம்
அனுசரணையாகப் பழகி அவரது ஆதசீர்வாதம் பெற வேண்டும். இது உங்களை உயர்த்தும்.
2 ஆம் வீடு சுட்டும் உறவு பெரியம்மா, பெரிய மாமா, 12 ஆம் வீடு சுட்டும் உறவு அம்மாவின்
அப்பா, அப்பாவின் அம்மா, 5 ஆம் வீடு தாத்தா, குரு மற்றும் குழந்தைகளைச் சுட்டும்.
மகா தசை
தசைகளை கட்டுப்படுத்தும் கிரகங்கள், ஒருவரது வாழ்வில் வரும் ஒன்பது தசைகள் 1.ஜென்ம
தசை – சூரியன். 2.சம்பத்து தசை- புதன், 3.விபத்து தசை- ராகு, 4.ஷேம தசை- குரு, 5.சத்யக் தடை
25
தசை- கேது, 6.சாதக தசை- சந்திரன், 7.வதை தசை- சனி, 8.மைத்ர தசை- சுக்ரன், 9.பரம மைத்ர தசை-
செவ்வாய்
பஞ்சாங்கம்
நாள் அதிபதி குரு தட்சணாமூர்த்தி
நட்சத்திரம் அதிபதி செவ்வாய் முருகன்
திதி யதிபதி சுக்ரன் மகாலஷ்மி
யோகம் அதிபதி புதன் விஷ்ணு
கரணம் அதிபதி சனி
சந்திரன் ராகு சாரத்தில் இருந்தாள் கற்பனை வளம் அதிகமாக இருக்கும். மன குழப்பம் இருக்கும்.
சந்திரன் கேது சாரத்தில் இருந்தால் ஜாதகர் எரிச்சலான பேச்சு பேசிக்கொண்டே இருப்பார். முடிந்தவரை
மற்றவர்களை எதிர்த்து பேசுவார்கள், முடியாத நிலையில் காலில் விழுந்து விடுவார்கள்.
அமாவாசையில் பிறந்தால் உடல்நிலை குறைவு உண்டு 3 இல் சந்திரன் பலம் குறைந்தால் மனச்சிதைவு
ஏற்படும் ஆறில் சந்திரன் இருந்தால் உடல் நலம் கெடும், சக்தி குறைவு.
எட்டில் சந்திரன் இருந்தால், சிறுநீரக கோளாறு கணவன் மற்றும் தாயின் ஆயுள்காலம் கெடும்.
மேஷத்தில் சந்திரன் இருந்தால் சகிப்புத்தன்மை இருக்காது.
விருச்சிகத்தில் சந்திரன் இருந்தால அகண்ட மார்பகம் இருக்கும். பால் இருக்காது. மிகுந்த உணர்ச்சி
வசப்படுவார்கள்.
மீனத்தில் சந்திரன் இருந்தால் மன நோய் தாக்கும், குடிப்பழக்கத்திற்கு கொண்டுசெல்லும், போதைக்கு
அடிமையாவார்கள், இவர்களுக்கு கற்பனை வளம் அதிகமாக இருக்கும், எந்த விஷயத்திற்கும் இவர்கள்
ஒத்துப்போக மாட்டார்கள்.
சுக்கிரனுக்கு திரிகோணத்தில் சந்திரன் இருந்தால் ஜாதகருக்கு கண் நோய் வரும், தாய்ப்பாசம்
இல்லாதவராக இருப்பார், மாற்று தாய் உடையவராக இருப்பார்.
6, 8, 12 ல் சந்திரன் இருந்தால் அல்லது சம்பந்தம் இருந்தால் மனசு பலவீனமாக இருக்கும். பயந்த சுபாவம்
ஆக இருப்பார்.
செவ்வாய் சனிக்கு நடுவில் சந்திரன் இருந்தால் மூச்சு திணறல் கண்டிப்பாக இருக்கும்.
பாதிக்கப்பட்ட பலமிழந்த சந்திரன் இருந்தால் ஜாதகரின் தாய் படுத்த படுக்கையாக இருப்பார்.
சந்திரன் செவ்வாய் சம்பந்தப்பட்டால் உடல்நிலை பலமற்றதாக இருக்கும் ரத்த சம்பந்தமான நோய்,
புற்றுநோய் இருக்கும்,
பலமற்ற சந்திரன் எட்டில் இருக்க அந்த நபர் நீரில் மூழ்கி இறக்க வாய்ப்புண்டு.
எட்டாம் பாவத்தில் சந்திரன் கேது இருக்க பைல்ஸ் வரும்.
எட்டில் பலமற்ற சந்திரன் இருக்க சிறுவயதில் உடல்நிலை மோசமாக இருக்கும்.
லக்னத்தில் சந்திரன் செவ்வாய் இருக்க தன்னை கட்டுப்படுத்த முடியாதவராக இருப்பார். முன் கோபியாக
இருப்பார். திடகாத்திரமான மனசு உள்ளவராக இருப்பார்.
சந்திரன் புதன் பாதிக்கப்பட்டால் அதிகமாக பேசிக்கொண்டே இருப்பார்கள். தாழ்வுமனப்பான்மை இருக்கும்.
சந்திரன் சுக்கிரன் சேர்ந்து 7, 11 ல் இருந்தால் எப்போதும் பெண்கள் சூழ்ந்து இருப்பார்கள்.
சனி சந்திரன் தாழ்வு மனப்பான்மை, கவலை இருக்கும்.
செவ்வாய் நோய்கள்
வெட்டுக் காயங்கள், கொப்பளம், காயங்கள், எலும்பு முறிவு, சுட்ட புண், எரிச்சல், மஞ்சள் காமாலை,
ரத்தம் வடிதல், ரத்த கொதிப்பு, காக்கா வலிப்பு, கட்டிகள், ஆசனவாய் நோய், பல்நோய் ஆகும்.
செவ்வாய் சூரியன் சாரத்தில் இருந்தால் ரத்தசோகை இருக்கும்.
செவ்வாய் சந்திரன் சாரத்தில் இருந்தால் தோல் வியாதி வரும்.
செவ்வாய் செவ்வாய் சாரத்தில் இருந்தால் உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
செவ்வாய் புதன் சாரத்தில் இருந்தால் மன சிதறல் இருக்கும்.
செவ்வாய் சுக்கிரன் சாரத்தில் இருந்தால் பாலியல் நோய் வரும்.
செவ்வாய் சனி சாரத்தில் இருந்தால் தற்கொலை எண்ணம் தரும்.
செவ்வாய் ராகு சாரத்தில் இருந்தால் தற்கொலை எண்ணம் தரும்.
செவ்வாய் கேது சாரத்தில் இருந்தால் HIGH பி பி பொறுமை இல்லாதவர்கள்.
செவ்வாய் குரு சாரத்தில் இருந்தால் உடல்நலம் சிறப்பு. லக்னத்தில் சூரியன், செவ்வாய் இருந்தால்
ஜாதகருக்கு அடிக்கடி காய்ச்சல் வரும்.
லக்னத்தில் செவ்வாய் சந்திரன் இருந்தால் கொப்பளம் வீக்கம், ரத்தப்போக்கு இருக்கும்.
28
சுக்கிரன் நோய்கள்
பாலியல் நோய், சர்க்கரை வியாதி, மூத்திரப்பைகள், கண்புரை, மயக்கம், வலிப்பு ,பிறப்புறுப்பு நோய்,
வெண்குஷ்டம், அதிகமான பாலியல் நாட்டம், அதிக வெள்ளைப்படுதல், பெண்களுக்கு மாதவிடாய்
கோளாறு.
சுக்கிரன் சூரியன் சாரத்தில் இருந்தால் கண் குறைபாடு நோய்.
சுக்கிரன் சந்திரன் சாரத்தில் இருந்தால் பிறப்புறுப்பில் குறைகள் இருக்கும்.
சுக்கிரன் செவ்வாய் சாரத்தில் இருந்தால் பாலியல் வெறி உணர்வு இருக்கும்.
சுக்கிரன் புதன் சாரத்தில் இருந்தால் தோலில் புள்ளிகள் இருக்கும்,
தோல் வியாதி இருக்கும், எரிச்சல் இருக்கும்.
சுக்கிரன் சுக்கிரன் சாரத்தில் இருந்தால் நல்ல உடல் நிலை இருக்கும்.
சுக்கிரன் சனி சாரத்தில் இருந்தால் பாலியல் நோய் இருக்கும்.
30
சுக்கிரன் ராகு சாரத்தில் இருந்தால் நரம்புத் தளர்ச்சி இருக்கும், பாலியல் சம்பந்தமான நோய் இருக்கும்.
சுக்கிரன் கேது சாரத்தில் இருந்தால் பாலியல் நோய், கண்நோய், விந்து கோளாறு,
ரத்தத்தில் அணுக்கள் குறைவு,
சுக்கிரன், செவ்வாய், சனி, ஆறாம் அதிபதி சம்பந்தம் பெற்றால் பித்தம் சம்பந்தமான நோய் ஏற்படும்.
சுக்கிரன் சனியால் பாதிக்கப்பட்டால் முகம் அழகு கெடும், முகத்தில் கொப்பளம் தரும்.
சுக்கிரன் மூத்திரத்தை குறிக்கும் மேலும் விந்து, கண்பார்வை இவைகளையும் குறிக்கும்.
சுக்கிரன் லக்னத்தில் இருந்தால் மூத்திர பையை மட்டும் குறிக்கும்.
சுக்கிரன் பலம் பெற்று புதன் சனியால் சம்பந்தப்பட்டால் உடலுறவு ஈடுபாட்டில் குறைவு ஏற்படும்.
ஆறில் சுக்கிரன் இருந்தால் ஆண்மையற்றவர், உடலுறவில் திருப்தி படுத்த முடியாதவராக இருப்பார்கள்.
சுக்கிரன் சனி ராகுவிற்கு நடுவில் இருந்தால் தாம்பத்தியம் இல்லை.
ஆறாமிடம் நீர் ராசியாகி சுக்கிரன் இருந்தால் மதுவிற்கு அடிமையாக இருப்பார்கள்.
சுக்கிரன் கடகத்தில் இருந்து எட்டாவது பாவமாக இருந்து செவ்வாய் அல்லது ராகு பார்க்க மூத்திர
பையில் நோய் வரும்.
சுக்கிரன் பாபர் ஆனால் போதை சர்க்கரை வியாதி வரும்.
8 ல் சனி சுக்கிரன் இருந்தால் லோ பிபி, காம வாழ்க்கையில் பிரச்சனை இருக்கும்,
சனி நோய்கள்
சுற்றுச்சூழல் மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள், மனச்சிதைவுகள், வயிறு, உணவு செரியாமை, குடலில்
ஏற்படும் மாறுபாடுகள், வெட்டுக்காயம், சிராய்ப்பு, கைகால்களை கிழித்தல், மனநோய், கண்நோய், கட்டிகள்,
சுரப்பிகளில் ஏற்படும் நோய், புற்று நோய், பக்கவாதம், மூட்டு தளர்வு, காது கேட்காமல் இருப்பது. மிக
நீண்டகாலமாக குணமாகாத வியாதிகள். சனி காலம் கடத்துதல், தடைகள், தடங்கல், துன்பம், கஞ்சத்தனம்,
இவையெல்லாம் சனி நோய்கள்.
சனி சூரியன் சாரத்தில் இருந்தால் கண் நோய், காசநோய்.
சனி சந்திரன் சாரத்தில் இருந்தால் மாதவிடாய் பிரச்சனை, எதிர்காலத்தை பற்றி பயம், கடின உழைப்பாளி.
சனி செவ்வாய் சாரத்தில் இருந்தால் அடிக்கடி ஏற்படுகின்ற காய்ச்சல் கொப்புளங்கள், கட்டிகள், ரத்தம்
சம்பந்தமான நோய்கள், வயிற்றுவலி.
சனி புதன் சாரத்தில் இருந்தால் ஞாபக சக்தி குறைவு, தன்னம்பிக்கை குறைவு, நரம்புத்தளர்ச்சி, வரும்.
சனி குரு சாரத்தில் இருந்தால் சோம்பேறி, எப்போதும் தூங்கிக்கொண்டு இருப்பார்கள், உயர் ரத்த அழுத்தம்
இருக்கும், மஞ்சக்காமாலை, அதிக அளவு உணவு உன் கொள்பவர்களாக இருப்பார்கள்,
சனி சுக்கிரன் சாரத்தில் பாலியல், கண், உணவுப்பை இதில் நோய்.
சனி சனி சாரத்தில் இருந்தால் மிக சிறப்பான உடல்நலம்.
சனி ராகு சாரத்தில் இருந்தால் கண்டுபிடிக்க முடியாத நோய், அவ நம்பிக்கை உடையவர்,
ஆண்மை யில்லாதவன்.
சனி கேது சாரத்தில் இருந்தால் நீர்வற்றி போகுதல், வெற்றுப்பு, சுரப்பிகள் மாற்றம் இருக்கும்.
சனி புதன் கெட்டால் பய உணர்வு நிரந்தரமாக இருக்கும்.
சனியால் குரு கெட்டால் ஆண்தன்மை ஆண் தன்மையை பாதிக்கும்.
சனி சூரியன் இருவரும் பாவிகளின் பார்வை இருந்தால் பாலியல் நோய், பீதிநோய்,
நீண்ட நோய்களுக்கு காரணம்
சனி சனியால் புதன் கெட்டு மிதுனம் கன்னியில் இருந்தால் நரம்பு தளர்ச்சி வரும்.
லக்னத்தில் சனி இருந்து ஏழில் குரு பாவி இருக்க ஜாதகன் ஆண்மை அற்றவர்,
உடலுறவில் மகிழ்ச்சி இருக்காது.
சந்திரனுக்கு கேந்திரத்தில் சனி நிற்க மனத் தளர்ச்சி, சோர்வு இருக்கும்.
சுக்கிரனுக்கு இரண்டில் சனி இருக்க மிகவும் வேகமானவர்.
31
கோச்சாரசனி வக்கிரம் பெற்று ஆறில் இருக்கும் கிரகத்தின் மீது வரும் போது நோய் வரும்.
சனி, ராகு, கேது பலம் பெற்று லக்னாதிபதியை பார்த்தால் சர்க்கரை வியாதி வரும்.
சனி, செவ்வாய், ராகு, கேது, ஆறு, எட்டு பன்னிரெண்டில் இருக்க அந்த ராசிகள் நீர் ராசியானால் சர்க்கரை
நோய் உண்டு.
ராகு நோய்கள்
ராகு கேது என்றால் நிழல் கிரகங்கள் சாயா கிரகங்கள்.
ராகு சந்திரன் சேர்க்கை சுபர் பார்வை இல்லாமல் இருந்தால் ஹிஸ்டீரியா என்ற நோய் வரும், மனநோய்
இருக்கும், பைத்தியம் பிடித்தல், மதவெறி வரும், இதுவே விருச்சிக லக்னத்திற்கு பொருந்தி வராது.
புதனுக்கு ராகு கேது சேர்க்கை இருந்தால் என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியாது.
ராகு கேதுவுடன் சுக்கிரன் சேர்ந்து இருந்தால் விபரீத காமம் இருக்கும், ஒழுக்கத்தை கடைபிடிக்க
மாட்டார்கள்.
ராகு கேதுவுடன் சனி சம்பந்தம் இருந்தால் இதை குரு பார்த்தால் யோகம் இல்லை என்றால் தற்கொலை
முயற்சி இருக்கும், கொடூரமானவராக இருப்பார், மரியாதை தெரியாதவர்களாக இருப்பார்கள்,
ஆண்மையற்றவர்,விபத்து இருக்கும்.
ராகு கேதுவுடன் செவ்வாய் சேர விரைவீக்கம், மூத்திரம் கோளாறு இருக்கும். பெண்கள் ஜாதகத்தில்
லக்னம் நவாம்ச லக்னம் ராகு அல்லது கேது இருப்பின் குழந்தையை அறுவை சிகிச்சை செய்து
எடுப்பார்கள்.
ராகு கேதுவுடன் செவ்வாய் இருந்தால் அடிக்கடி விபத்து இருக்கும்.
லக்னத்தில் ராகு உடல் நலம் கெடும்.
ஐந்தில் ராகு இருந்து பாவிகளின் பார்வை இருப்பின் மறதி, புத்தி பேதலிப்பு.
ஆறில் ராகு கைகால் மூட்டுவலி, நரம்புகள் இயங்காமல் இருக்கும்.
12 ல் ராகு தொழுநோய், என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியாத நோயாக இருக்கும்.
ராகு குரு இனைவு எட்டில் இருக்க வயிற்றில் பிரச்சனை,செவ்வாய் சம்பந்தம் பெற்றால் வயிற்றில்
அறுவை சிகிச்சை உண்டு.
சந்திரனுக்கு ஐந்தில் ராகு இருக்க அடிக்கடி விபத்து நீரினால், அபாயம் இருக்கும்.
ஜாதகத்தில் ராகு கேது 6, 12 ஆக இருந்தால் நிச்சயமாக அந்தக் கிரகத்தின் திசா புத்தியில் நரம்பு
சம்பந்தமான வியாதி இருக்கும்.
சனி லக்னாதிபதியாகி செவ்வாய் அல்லது கேது சம்பந்தம் பெறுவது எப்போது காமத்தைப் பற்றியே
சிந்தனை இருக்கும்.
சனி அல்லது ராகு லக்னத்தில் இருப்பது காமம்அதிகமாக இருக்கும்.
சனி ராகு சந்திரன் சேர்ந்திருப்பது எட்டாம் அதிபதி சனி ராகு நடுவில் இருப்பது காமம் அதிகம்.
ராகு சந்திரன் இருப்பது மனக்கோளாறு இருக்கும், பேச்சை மாற்றி பேசிக்கொண்டு இருப்பார்கள்.
ராகு லக்னாதிபதியோ அல்லது சந்திரனோ தொடர்பு இருந்தால் உடல் முழுவதும் அரிப்பு இருக்கும்.
ராகுவின் நோய் இதன் ஆளுகை கால்பாதம், சுவாசம் ஸ்பீரியஸ், அர்டினி சுரப்பிகள், குடல் நோய், அறிவு
குறைபாடு, குடல்புண், கொப்பளங்கள், குஷ்டம், தோல் நோய், எரிச்சல் தன்மை, கண்டுபிடிக்க முடியாத
நோய், மேலே இருந்து கீழே விழுவது இவையெல்லாம் வரும். பண்பு, வைராக்கியம் உள்ளவர்கள்,
குணமாக எடுப்பவர்கள் வெளிநாடு செல்வார்கள்.
கேது நோய்கள்
மண்ணீரல் வீங்குதல், கண் புரை, விரை வீக்கம், நுரையீரல் பாதிப்பு, காய்ச்சல், வயிற்றுவலி, உடலில்
வலி, எந்த காரணத்தால் வியாதி என்று புரியாமல் இருக்கும், வாந்திபேதி இருக்கும், அடிக்கடி காய்ச்சல்
வரும், வெட்டுக்காயம், அரிப்பு, படை, கொப்பளங்கள், கால் பாதம் எரிவது, குஷ்டம், தற்கொலை எண்ணம்,
இவையெல்லாம் கொடுக்கும்.
32
லக்னத்தில் பாவ கிரகத்தோடு சம்பந்தம் பெறுவது அல்லது செவ்வாய் 1 ஏழு எட்டில் இருக்க சூரியன்
பார்க்க நெருப்பு ராசி எனில் நீரினால் அபாயம் இருக்கும்.
சந்திரனை ஒரு லக்னத்திலிருந்து பார்க்க பலமற்ற செவ்வாய் அல்லது நீசம் பெற்ற செவ்வாய் எட்டில்
இருக்க அந்த ராசி நீர் ராசி எனில் ஜாதகருக்கு நீரினால் அபாயம் ஏற்படும்.
கிரகங்கள் பாதிக்கப்பட்டு ஆறாம் பாவத்தோடு தொடர்பு ஏற்பட்டால்
சூரியன் பாதிக்கப்பட்டு ஆறாம் வீட்டோடு அல்லது அதன் அதிபதிக்கு தொடர்பு கொண்டால் கொப்பளங்கள்,
தலைவலி, காச நோய், ரத்த அழுத்தம், கால் கட்டைவிரலில் அசுத்தம் பெரும்.
சந்திரன் பாதிக்கப்பட்டு ஆறாம் பாவம் அல்லது அது அதிபதிக்கு தொடர்பு கொண்டால் உணவு செரியாமை,
வயிற்று பிரச்சனை, ரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி ,சர்க்கரை வியாதி, ரத்தக்குழாயில் நோய், இருக்கும்.
செவ்வாய் பாதிக்கப்பட்டு ஆறாம் பாவம் அல்லது அதன் அதிபதிக்கு தொடர்பு ஏற்பட்டால் காய்ச்சல்,
எரிச்சல், தசைகளில் பிரச்சனை, தோல்நோய், விரைவீக்கம், குடலிறக்கம், ஆசன நோய் இருக்கும்.
புதன் ஆறாம் பாவம் அல்லது அதன் அதிபதிக்கு தொடர்பு கொண்டால் நரம்பு சம்பந்தமான நோய்,
மனநோய், மனச்சோர்வு, கவலை, மூச்சுத் திணறல், தலைவலி, சளி, மூட்டு வலி, கை கால் வலி
இருக்கும்.
குரு பாதிக்கப்பட்டு ஆறாம் பாவம் அல்லது அதன் அதிபதிக்கு தொடர்புகொண்டால் கல்லீரல், வயிறு, கை
கால் வலி இருக்கும்.
சுக்கிரன் பாதிக்கப்பட்டு ஆறாம் பாவம் அதன் அதிபதிக்கு தொடர்பு கொண்டால் சர்க்கரை நோய், சிறுநீரக
பாதிப்பு, கருப்பை பாதிப்பு இருக்கும்.
சனி பாதிக்கப்பட்டு ஆறாம் பாவம் அதன் அதிபதிக்கோ தொடர்பு கொண்டால் நரம்பு சம்பந்தமான நோய்
இருக்கும், கை கால்கள் வலி, மூட்டுவலி, காக்காவலிப்பு இருக்கும்.
ராகு பாதிக்கப்பட்டு ஆறாம் பாவம் அல்லது அதன் அதிபதிக்கு தொடர்பு கொண்டால் காக்கா வலிப்பு,
சின்னம்மை, குஷ்டம் வரும்.
கேது பாதிக்கப்பட்டு ஆறாம் பாவம் அல்லது அதன் அதிபதிக்கு தொடர்பு கொண்டால் காக்காவலிப்பு,
அம்மை, குடல் நோய், செரிமான கோளாறு இருக்கும் இவை அனைத்தும் ஆறாமிட தசா புத்தியில்தான்
நடக்கும்.
கிரக இணைவுகளால் வரும் நோய்கள்
செவ்வாய் ராகு ஆறில் இருந்தால் விரைவீக்கம்.
செவ்வாய், ராகு, சனி நினைவு குடலிறக்கம்.
குரு, ராகு லக்னத்தில் இருந்தால் குடலிறக்கம். செவ்வாய், ராகு ஏழில் இருந்தால் மாதவிடாய் கோளாறு.
கேது 6 அல்லது ஏழாம் அதிபதியோடு சேர்ந்து இருந்தால் நெஞ்சில் கோளாறு, நுரையீரல் பிரச்சனை
இருக்கும்.
ஆறாம் அதிபதி ஏழில் இருந்தால் கைகால் கிழிப்பு வரும்.
சுக்கிரன், சந்திரன் 6 ல் இருந்தால் மாலைக்கண் நோய் வரும்.
லக்னாதிபதி சூரியன் சுக்கிரன் 6 ல் இருந்தால் பார்வை இழப்பு.
ஆறாம் அதிபதி ஏழில் இருந்து செவ்வாய் தொடர்பு இருந்தால் சின்னம்மை நோய் வரும்.
எட்டாம் அதிபதி 6 ம் அதிபதியோடு சேர்ந்திருந்தால் ஆயுள் குறைபாடு இருக்கும்.
எட்டாம் அதிபதி லக்னாதிபதி யோடு ஆறில் இருந்தால் ஆயுள் குறைவு.
லக்னாதிபதி சூரியன் 6 ல் இருந்தால் கொப்புளம் காய்ச்சல் வரும்.
லக்னாதிபதி சந்திரன் 6 ல் இருந்தால் தண்ணீர் கொப்பளம்.
லக்னாதிபதி செவ்வாய் 6 ல் இருந்தால் சுரப்பிகள் பிரச்சனை, காயம் ஏற்படும்.
லக்னாதிபதி புதன் 6 ல் இருந்தால் ஆசன நோய் இருக்கும்.
லக்னாதிபதி குரு ஆறில் இருந்தால் வயிற்றுப்போக்கு இருக்கும்.
34
ஆறாம் பாவம்
ஒருவருக்கு ஏற்படும் வியாதி, அதனால் ஏற்படும் பாதிப்பு, பகைவர்களால் ஏற்படும் துன்பம், ஆயுதங்களால்
ஏற்படும் ஆபத்து, காயங்கள், தாயின் உறவினர்களுடன் ஏற்படும் வழக்குகள், சண்டையிடுதல், யுத்தம்
செய்தல், வீண் வம்பிற்கு செல்லுதல், திருடர்களால் ஆபத்து, பொருட்கள் களவாடப்படுதல், தண்ணீரால்
ஆபத்து, பெண்களால் உண்டாகும் வீண் வம்புகள், அதனால் அடையும் துன்பம், பாம்புகளால்-விஷத்தால்
ஆபத்து, சந்தேகம், சோம்பேறித்தனம், ஒருவரை தூசித்தல், பாவமான காரியங்களை செய்தல், நோய்,.
சிறைபடுதல், உயர் பதவி பெறுதல், கால்நடைகளை பற்றி அறிதல் இவை ஆறாம் பாவம் குறிக்கும்
காரகங்களாகும்.
6-ம் வீட்டில் சந்திரன் இருந்தால் இளம் வயதில் உடல் உபாதை நிறைய இருக்கும். அது சிலருக்கு
பாலாரிஷ்டமாகக் கூட இருக்கும். சமையல்கலையில் வல்லவராக இருப்பர்.
6-ம் வீட்டில் செவ்வாய் இருந்தால் எதிரிகளை எளிதாக வெல்லுவர்.
6-ம் வீட்டில் புதன் இருந்து ராகு, சனி, செவ்வாய் போன்ற கிரகங்களின் சேர்க்கையோ அல்லது
பார்வையோ இருக்குமேயாகில் நரம்புசம்மந்தமான வியாதிகளோ, சித்தப் பிரமையோ ஏற்படக் கூடும்.
6-ம் வீட்டில் குரு இருந்தால் மரியாதைக் குறைவு ஏற்படும். சிலர் துர்தேவதைகளை வசியம் செய்வதில்
ஈடுபடுவர்.
6-ம் வீட்டில் சுக்கிரன் இருந்து கெட்ட கிரகங்களின் சேர்க்கையோ அல்லது பார்வையோ இருக்குமேயாகில்
பிற பெண்களுடன் தொடர்பு இருக்கும்.
6-ம் வீட்டில் சனி இருந்தால் இவருக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள்.
6-ம் வீடு செய்யும் வேலையையும் குறிக்கிறது அல்லவா?
6-ம் வீட்டில் சனி இருந்தால் இரும்புத் தொழில், சுரங்கவேலைகள் ஆகியவற்றில் வேலை செய்வர்.
6-ம் வீட்டில் ராகு பாபியருடன் சேர்ந்து இருந்தால் அந்தரங்க உறுப்புக்களில் வியாதி இருக்கும். ராகுவுடன்
சனியும், சந்திரனும் சேர்ந்து இருந்தால் ஹிஸ்டீரியா நோயினால் அவதிப் படுவர்.
கேது 6-ம் வீட்டில் இருப்பது அவ்வளவு கெடுதல் இல்லை.
6-ம் வீட்டிற்கதிபதி லக்கினத்தில் லக்கினாதிபதியுடன் இருப்பாரேயாகில் அந்த ஜாதகர் நோயினால்
அவதிப்படுவர். அவர்களுடன் ராகுவும் சேர்வாரேயாகில் அந்த ஜாதகர் வீட்டில் களவு போகும்.
6-ம் வீட்டிற்கதிபதி 3-ம் வீட்டில் இருந்தால் அந்த ஜாதகருக்கும் அவர் இளைய சகோதரத்திற்கும் நல்லுறவு
இருக்காது. காது, தொண்டை சம்மந்தமான வியாதி இருக்கும்.
பொதுவாக 6-ம் வீட்டை வைத்துத்தான் ஒருவருக்கு வரக்கூடிய வியாதிகளைச் சொல்ல வேண்டும்.
6-ம் வீடு என்பது நாம் செய்யும் அடிமைத்தொழிலைக் குறிக்கிறது. வேலைக்குச் செல்பவர் எல்லோரும்
அடிமைத் தொழிலாளர்தான்.
ஆக 6-ம் வீடு நாம் செய்யும் தொழிலைக் குறிக்கிறது.
6-ல் ஒரு கிரகம் இருக்கிறது எனக் கொள்ளுங்கள். அதன் தசா புக்தி காலங்களில் ஒருவருக்கு வேலை
கிடைக்கும். அல்லது பதவி உயர்வு கிடைக்கும். இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்து இருக்கும்.
6-ம் வீட்டில் உள்ள ஒரு கிரகத்தின் தசா, புக்தி காலத்தில் ஒருவருக்கு வேலை கிடைக்குமா அல்லது
உடல் நிலை பாதிக்கப் படுமா? எப்படிக் கூறுவது?
6-ம் வீட்டில் உள்ள கிரகம் லக்கினமாகிய முதல் வீட்டுடன் சம்மந்தப் பட்டால்தான் உடல் நிலை
பாதிக்கும். முதல் வீட்டுடன் சம்மந்தப் படவில்லையானால் உடல்நிலை பாதிக்காது.
லக்கினாதிபதியும், 6-ம் வீட்டில் உள்ள கிரகமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளலாம்; அல்லது
சேர்ந்து இருக்கலாம். அவ்வாறு 6-ம் வீடும் 1-ம் வீடும் சம்மந்தப் பட்டால்தான் ஒருவரின் உடல்நிலை
பாதிக்கப்படும்.
அடுத்ததாக ஒருவரின் வேலையாட்களைக் குறிப்பதும் இந்த வீடுதான்.
6-ம் வீட்டில் சுபர்கள் இருந்தால் வேலையாட்கள் மூலமாக ஒருவர் பயனடைவார். பாப கிரகங்கள்
இருந்தால் அவர்களால் செலவுதான். பயன் இருக்காது.
6-ம் வீடு நமக்குப் பிரியமான சாப்பாட்டையும் குறிக்கிறது. ஒருவரின் 6-ம் வீட்டில் சனியிருந்தால்
போஷாக்கற்ற உணவுவகைகளை உட்கொள்ளுவார். போதுமான அளவு சாப்பாடும் கிடைக்காது.
6-ம் வீட்டில் சுக்கிரன் இருக்குமேயாகில் வகை வகையான உணவுவகைகளை உட்க்கொள்ளுவர்.
ஒரளவிற்கு மதுபானத்திலும் பிரியம் இருக்கும்.
6-ம் வீட்டில் சந்திரன் ஒரு நீர்க்கிரகம் அல்லவா? நீர்சம்மந்தப்பட்ட உணவுவகைகளை விரும்பி
உட்கொள்ளுவார். அதுவும் 6-ம் இடம் நீர்ராசிகளாகிவிட்டால் கேட்கவே வேண்டாம். மதுபானப் பிரியராக
இருப்பார். அதைத் தவிர பாட்டில்களில்வரும் குளிர்பானங்களையும் விரும்பிச் சாப்பிடுவார்.
36
ஆறில் குரு இருந்தால் குழந்தை தாமதம். குரு ஆறு, எட்டு, பன்னிரெண்டில் இருந்தால் சுபகாரியம் தடை.
பொருளாதார தடை கொடுக்கும். பொருளாதாரம் வரவுக்கும், செலவுக்கும் சரியாக இருக்கும். எதிரி
வசதியானவராக இருப்பார். எதிரி கௌரவமான நபராக இருப்பார். எதிரி ஆச்சார மாணவராக இருப்பார்.
எதிரி பதவியில் உள்ளவராக இருப்பார். அந்தனர், பூஜாரி, ஜோதிடர் இவர்கள் எதிரியாக இருப்பார்கள். இதே
தொழிலை ஜாதகர் செய்வார். உறவுகள் முறியும். கடன் பெருகும். இவரே இவருக்கு எதிரி. வயிறு
பிரச்சனை, மஞ்சக்காமாலை நோய் இருக்கும்.
ஆறில் சுக்கிரன் இருந்தால்
வாகன தொழில். அழகு தொழில் செய்யலாம். கலைத்துறையில் வேலை செய்யலாம். திருமணத்தடை
இருக்கும். பொருளாதார தடை இருக்கும். இரண்டு மணம் இருக்கும் அல்லது மணம் தடை. வீடு கட்ட
தடை. வீடு கட்ட கடன் கிடையாது. கண் நோய், யூரியன் பிரச்சனை இருக்கும். சுகர் இருக்கும். ஆறில்
சுக்கிரன் இருந்து அது நீர் ராசி ஆனால் குடிப்பழக்கம் இருக்கும். இவர் இருக்கும் வரை அனுபவிக்க
வேண்டும் என்ற சிந்தனை இருக்கும். கலைகளில் வெற்றி உண்டு. சாஸ்திரம் குணம் இருக்கும்.
அரசனுக்கு கூட ஜோதிடம் பார்க்க இவர்களுக்கு திறமை இருக்கும். மந்திர தந்திரங்களில் ஈடுபாடு
அதிகமாக இருக்கும்.
ஆறில் சனி இருந்தால்
வேலை ஆளே எதிரியாக இருப்பார். வேலையாட்கள் மூலம் தொல்லை அதிகமாக இருக்கும்.
வேலையாட்கள் இவர்களுக்கு ஆகாது. கீழ்மட்ட மனிதர்களால் அதிக தொல்லை இருக்கும். வேலைக்கு
போவது இவர்களுக்கு நல்லது. கடின வேலை செய்வது நல்லது. மூட்டு வலி இருக்கும். ஒன்பதில்
பரல்கள் அதிகமாகி பத்தில் பரல்கள் குறைந்தால் நோகாமல் வருமானம் வரும். ஒன்பதில் பரல்கள்
குறைந்து பத்தில் பரல்கள் அதிகமானால் வேலை அதிகமாக இருக்கும். சனியும் கேதுவும் ஆறில்
இருக்கக்கூடாது. இவர்களுக்கு நேர்மை இருக்கும். இரும்பு ஏற்றுமதி இறக்குமதி செய்வார்கள். தார் ரோடு
போடுவது, கழிவுநீர் தொட்டி கிளீன் செய்வது, 6 ல் சனி, சந்திரன் இருந்தால் சாக்கடை, கக்கூஸ் அருகே
உணவு தொழில் அமையும். பக்கவாதம் அதிகமாக வரும்.
ஆறில் ராகு இருந்தால்
வெளிநாட்டு வேலை அல்லது வெளிநாட்டு மூலம் வருமானம் இருக்கும். மருந்து, மருத்துவ தொடர்பான
தொழில் இருக்கும். விஷ மருத்துவ தேர்ச்சி இருக்கும். தற்கொலை எண்ணம் அதிகமாக இருக்கும். வட்டி
தொழில், அடகு, மாந்திரீகம், போதைப் பழக்கம் இருக்கும். ஏதாவது ஒரு எதிரி இருந்துகொண்டே
இருப்பார்கள். எக்ஸ்ரே ஸ்கேன் தொழில் செய்யலாம். வெளிநாடு செல்லலாம். பணம் மாற்றம் தொழிலும்
செய்யலாம்.
6 ,9 இல் ராகு இருப்பது லக்ஷ்மியோகம்.
இதற்கு ஜீவசமாதி வழிபாடு நல்லது. அம்மன் வழிபாடு, ஈடுபாடு இருப்பது நல்லது. அம்மன்
கோவில்களுக்கு பயணம் செய்வது நல்லது. இவையெல்லாம் செய்தால் லஷ்மி கடாக்ஷம் கிடைக்கும்.
ஆறில் கேது இருந்தால்
மருத்துவம், சட்டம், ஜோதிடம் செய்யலாம். சட்டத்தின் உள்ளே ஒரு நாளாவது சென்று வருவார்கள்.
யூனிஃபார்ம் போடாத போலீசாக இருப்பார். செவ்வாய் கேது 3-ஆம் இட கேது உணவு தொழில் செய்யலாம்.
லக்ன கேது யூனிஃபார்ம் போடாமல் வண்டி ஓட்டுவார்கள். சுக்கிரன், கேது ஒன்றுவிட்ட மச்சினி அல்லது
ஒன்றுவிட்ட சகோதரன் என்று எடுக்கலாம். நேரத்திற்கு சாப்பிடாமல் வயிற்றுப் பிரச்சனை இருக்கும்.
இவர்கள் இடத்தில் சுவர் வேலி போட்டால் பிரச்சனை வரும். வழக்கு இருக்கும். உறவில் விரிசல் உண்டு.
உத்தியோகம் நல்லா இருக்கும்.
டிப்ஸ்
38
சுக்கிரன் நீசம் ஆனால் நாய்கடி உண்டு. நவாம்சத்தில் சுக்கிரன் நீசம் ஆனால், மனைவிக்கு நாய்க்கடி
உண்டு. ஆறாம் அதிபதி எங்கு இருந்தாலும் அந்த வீட்டு அதிபதி அங்கு இருந்தால் பெரும் பாதிப்பு
இருக்கும். ஆறாம் அதிபதி எங்கு இருந்தாலும் 8, 12- க்கு உடையவரோடு சேரக்கூடாது.
ஒரு உப ஜெய ஸ்தானாதிபதி மற்றொரு உப ஜெய ஸ்தானாதிபதியும் மாறி மாறி இருப்பது உயர்வான
பொருளாதார வாழ்வு கொடுக்கும்.
குரு, சுக்கிரன், புதன் உப ஜெயத்தில் இருந்தால் அது வசுமதி யோகம். சொத்து மதிப்பு உண்டு.
பாவிகளுக்கு உபஜெய ஸ்தானம் நல்லது 3, 6, 10, 11 இதில் இருந்து திசை நடத்தினால் யோகம் இருக்கும்.
ஆறாம் அதிபதி மீது கோசார கேது வரும்போது கடன், வழக்கு, நோய் வரும்.
ஆறாம் அதிபதிக்கு அடுத்து பதினொன்றாம் அதிபதி இருந்தால் கடன், நோய், வழக்கு தீரும்.
தனுசு மிதுனம் லக்னகாரர்களுக்கு 6, 11 க்கு ஒரே கிரகம் வருவதால் கடன் அடைபடும்.
ரிஷபம், விருச்சிகம் வழக்கு வெல்லும் ராசி.
கும்பம் ராசி, ஆறாம் அதிபதி, ஆறாம் பாவம் திதி சூனியத்தில் இருந்தால் கடனால் அவமானம் இருக்கும்.
லக்ன பாகையும் ஆறாம் அதிபதி பாகையும் நெருக்கம் ஆனால் கடன் இருக்கும். ஆனால் நல்ல வேலை
கிடைக்கும்.
ஆறாம் அதிபதி ஐந்தில் இருந்தால் வெல்வார்கள்.
ஆறு ஐந்து 6, 9 வழக்கில் சாட்சி சொல்வார்கள். வழக்குக்கு ஆதாரம் கிடைக்காமல் ஓய் வெற்றி
கிடைக்கும்.
ஜாதகருக்கு 6 ஆம் அதிபதியும் 11 ஆம் அதிபதியும் வலுகுன்றி இருந்து யாராவது ஒருவர் புதன்
நட்சத்திரத்தில் இருந்தால் I P கொடுப்பார்கள்.
ஆறாம் அதிபதிக்கு செவ்வாய், ராகு தொடர்பு அல்லது ராகு சாரம் பெற்ற கிரகத்தை ஆறாம் அதிபதியும்,
செவ்வாயும் பார்த்தால் நாய் கடி நிச்சயம்.
திதி சூன்யம் பாதகாதிபதி தொடர்பு நாய்க்கடி நிச்சயம்.
நாலாம் இடமாக வந்தால் வீட்டு நாய் கடிக்கும்.
ஏழாம் இடமாக வந்தால் எதிர் வீட்டு நாய் கடிக்கும்.
நாய்க்கடி நட்சத்திரம் திருவாதிரை இதிலுள்ள கிரகத்திற்கும் நாய்க்கடி உண்டு.
ஆறாம் அதிபதி வக்கிரம், பத்தாம் அதிபதி வக்ரம் என்றாலும் 6, 10 க்கு வக்ரகிரக தொடர்பு என்றாலும் பல
இடங்களில் பணியாற்றுவார்கள். பதவி உயர்வுக்கு தடை இருக்கும்.
ஒரு பாவத்திற்கு ஒரு கிரகத்திற்கு 3, 6, 10, 11 இல் உள்ள கிரகம் அந்த பாவத்திற்கு அந்த கிரகத்திற்கு
வலுவை கூட்டுகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் 3, 6, 10, 11 இல் இருப்பது ஜாதகருக்கு எதிர்பாராத வளர்ச்சி இருக்கும்.
விபரீத ராஜயோகம் செயல்படும்.
இதை 40, 45 வயது உள்ளவர்களுக்கு சொல்ல வேண்டும் என் வாழ்வு நன்றாக இருக்கும் ஒரு இழப்பை
சந்தித்து மீண்டும் ஒரு நல்ல நிலைக்கு வருவார்கள்.
உப ஜெயத்தில் இயற்கை பாவர்கள் இருப்பது மிக மிக நன்மை.
ஆறாம் பாவத்திற்கு ஆறாம் அதிபதிக்கு கேது தொடர்பு இருந்தால் கட்டாயம் வழக்கு இருக்கும்.
ஆறாம் அதிபதி நின்ற பாகையில் முன்பின் மூன்று பாகையில் கேது நின்றால் வழக்கு இருக்கும். ஆறாம்
பாவத்திற்கு கேது தொடர்பு அகால போஜனம்.
ஆறாம் அதிபதிக்கு அடுத்து ராகு, கேது, சந்திரன், செவ்வாய், சனி தொடர்பு எனில் இவர்களில் இருவர்
அல்லது மூவர் இருந்தால் தேவையற்ற கடன் வரும். தன் தேவைக்கு தொடர்பில்லாத கடன் வரும்
ஆறாம் அதிபதி பன்னிரெண்டாம் இடத்தை பார்த்தால் இவர்களுக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்
செய்யலாம். இரவு தொழில் செய்யலாம்.
39
லக்னம் லக்னாதிபதிக்கு ஆறாம் அதிபதி தொடர்பு இருந்தால், தொடர்ந்து கடன் இருந்து கொண்டே
இருக்கும். கோபம் அதிகமாக இருக்கும்.
ஆறாம் பாவத்திற்கு செவ்வாய், சுக்கிரன் தொடர்பு இருந்தால் விபத்து இருக்கும் செவ்வாய்க்கு அடுத்து
அல்லது ஆறாம் அதிபதி க்கு அடுத்து எந்த கிரகம் இருக்கிறதோ அந்த காரக உறவுக்கு விபத்து இருக்கும்.
கிருத்திகை நட்சத்திர சாரத்தில் ஒரு கிரகம் இருந்து அதற்கு ஒரு விபத்து நடந்தால் அவர் பிழைத்துக்
கொள்வார்.
திருவாதிரையில் நின்றால் அது இறந்துவிடும்.
ஆறாம் அதிபதி 5, 9 இல் இருந்தால் உத்தியோகம் தேடி வரும்.
ஆறாம் அதிபதி 5, 9, 11, 12 இல் இருந்தால் கடன் ஜாதகர் பெறுவார்.
ஆறாம் பாவகம் நிர்வாகத் திறனை குறிக்கும்.
சூரியன் ராசி அம்சத்தில் பலம் பெற்றால் மருந்து மாத்திரை இல்லாமல் நோய் குணமாகும். பெரும்
மருத்துவம் தேவை இருக்காது.
ஆறாம் அதிபதி பார்வை பெற்ற கிரகத்திற்கு சூரியன் செவ்வாய் பார்வை பெற அந்த உறவு பெரிய
பதவியில் இருக்கும்.
ஆறாம் அதிபதி நெருப்பு ராசிகள் இருந்தால் வெப்பநோய் இருக்கும்.
ஆறாம் அதிபதி நீர் ராசியில் இருந்தால் வலிப்பு, நீர் நோய், நரம்பு நோய் இருக்கும்.
ஆறாம் அதிபதி நில ராசியில் இருந்தால் தோல் நோய் இருக்கும்.
ஆறாம் அதிபதி காற்று ராசியில் இருந்தால் மாரடைப்பு, சுவாசநோய், விக்கல், ஏப்பம், கேஸ் சம்பந்தப்பட்ட
பிரச்சனை இருக்கும்.
ஆறாம் அதிபதி சர ராசியில் இருந்தால் நோய் வரும், ஆனால் நோய் போய் விடும்.
ஆறாம் அதிபதி ஸ்திர ராசியில் இருந்தால் நோய் வருவதற்கு லேட் ஆகும் நோய் போவதற்கும் லேட்
ஆகும்.
ஆறாம் அதிபதி உபய ராசியில் இருந்தால் ஒருமுறை வந்த நோய் இரண்டு முறை வரும் இரண்டு ஊசி
போட வேண்டும்.
நவாம்ச விருச்சிகத்தில் கிரக சேர்க்கை பலன் குரு கேது நவாம்ச விருச்சிகத்தில் இருந்தால் உடம்பில்
கட்டி அதிகமாக இருக்கும்.
சந்திரன் சுக்கிரன் நவாம்ச விருச்சிகத்தில் இருந்தால் வெண்குஷ்டம் வரும்.
சந்திரன் புதன் நவாம்ச விருச்சிகத்தில் இருந்தால் வெண்குஷ்டம், மறதி, மனநிலை பாதிப்பு இருக்கும்.
புதன் சனி நவாம்ச விருச்சகத்தில் இருந்தால் வலிப்பு, வெரிகோஸ் ப்ராப்ளம் இருக்கும்.
சூரியன் + கேது, சந்திரன்+கேது நவாம்ச விருச்சிகத்தில் இருந்தால் ஆஞ்சியோ பிளஸ் பண்ணுவார்கள்.
ராசி கட்டத்தில் கடகத்துக்கு கேது தொடர்பான ஆஞ்சியோ பிளஸ் பண்ணுவார்கள்.
நீச சனி இரண்டை பார்த்தால் பேச்சு அசிங்கமாக இருக்கும்.
சனி செவ்வாயுடன் ஒரு கிரகம் இருந்தால் இருந்த கிரக உறுப்பு வெட்டி எடுக்கப்படும். விருச்சிக
நவாம்சத்தில் கிரகம் இல்லாமல் இருப்பது நல்லது.
பத்தாமிட புதனும் கர்ம ஸ்தானாதிபதியும் லக்னாதிபதி யுமான புதன் நாலாம் இட சுகஸ்தானத்தில் குரு
புதன் இருவரும் தோஷத்தில் உள்ளார்கள்
மூன்று எட்டுக்குடைய செவ்வாய் மூன்றாம் இடத்தில் ஆட்சி பெற்று திதி சூன்ய ராசி கிரகமும் செவ்வாய்
அதனால் ரத்தக் குறைபாடு வீரியத்தன்மை மற்றும் ரத்த அணுக்கள் குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது
அந்த செவ்வாயும் சனி சாரத்தில் சனி 5 6-க்குடையவர் அதிபதி வக்கிரம்
லக்னாதிபதி நீசம் அட்டமாதிபதி குடும்பஸ்தானத்தில் குடும்ப ஸ்தானாதிபதி நாளில் அமர்ந்து கேது
மாந்தியுடன் இணைவு திருமணம் தாமதப்படும்
ஆறாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் என்ன பலன்
40
யார் இருக்கிறாரோ அவருக்கு யோகம்.ரகசிய தொழில், ஜோதிட தொழில் நல்லது. பின்னாடி இருந்து
இயக்குவது. சுரங்கம், குவாரி வேலை, லாட்டரி, ரேஸ், உணவு தொழில் இவை எல்லாம் ஆகாது.
டிடெக்ட்டிவ் ஏஜென்ட் சிறப்பு.
ஆறாம் அதிபதி ஒன்பதில் இருந்தால் என்ன பலன்
வேலை தேடி வரும். தந்தைக்கு சிறு விபத்து உண்டு. தந்தையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். கடன்
வாங்கினால் பெருகிவிடும். பயணம் சார்ந்த வேலை இருக்கும். டிராவல் ஏஜென்ட். சாஸ்திர தொடர்பான
வேலை இருக்கும். கோவில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. தந்தை வகையில் கோவிலை
பராமரித்தவர்கள் இருப்பார்கள். தந்தையின் வேலை இருக்கும். ஆசிரியருடன் பகை இருக்கும். தந்தையை
பிரிக்கும், தந்தைக்கு கண்டம். இவர்கள் பாக்கியத்தை அனுபவிக்க தடை இருக்கும்.தந்தையின் சொத்தை
அனுபவிக்க முடியாது. சொத்தில் வழக்கு இருக்கும். ஜாமீன் யாருக்கும் போடக்கூடாது. தந்தைக்கு வாயுத்
தொல்லை இருக்கும். தந்தைக்கே மடத்தில் வேலை பார்க்கும் வேலை அல்லது பரம்பரை வேலை
இருக்கும்.
ஆறாம் அதிபதி பத்தில் இருந்தால் என்ன பலன்
சிறுதொழில் நன்று. சூரியன் அல்லது செவ்வாய் தொடர்பு இருந்தால் மருத்துவம் வரும். இருவருடன்
தொடர்பு இருந்தால் மத்திய அரசு டாக்டர் வரும். சொந்தத் தொழில் செய்யக்கூடாது. மாமியாருடன்
கருத்து வேறுபாடு இருக்கும். வெளி நாட்டு வருமானம் உண்டு. உணவு தொழில் வேலை நல்லது.
இவர்களுக்கு வேலை கிடைத்தவுடன் ஒரு கர்மம் உண்டு. பல கிளைகள் உள்ள இடத்தில் வேலை
அமையும். இரவு உணவகம் நல்லது. அயன சயனத்தை அனுபவிக்க தடை இருக்கும். வேலை செய்யும்
இடத்தில் தங்குவார்கள். வயிறு தொடர்பான நோய் இருக்கும். தூக்கத்தில் பேசிக்கொண்டு இருப்பார்.
உயரமான இடத்தில் வேலை இருக்கும் உயரமான இடத்தில் வேலை இருக்கக்கூடாது. பனிரெண்டாமிடம்
உயரமான இடம். பயணம் செய்து வேலைக்கு போவது நல்லது. வெளியூரில் வழக்கு வெளியூரிலிருந்து
வழக்குக்காக உள்ளுருக்குவருவது. வழக்குக்காக பயணம். கடின வேலை கடன் கட்ட வேலைக்கு போவது.
கால் பாதத்தில் இவர்களுக்கு நோய் வரும். இவர்கள் உணவு தொழில் ஏற்றுமதி செய்யலாம்.
நடைபயணம், நடைபயிற்சி ஆர்வம் அதிகமாக இருக்கும். காண்ட்ராக்ட் வேலை சீசன் வேலை நல்லது.
கிரகம் வக்கிரம் ஆனால் அடிக்கடி இடமாற்றம் உண்டு. புரமோஷன் தாமதமாக கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் எதிரி போட்டி இருக்கும்.வேலை அதிகமாக இருக்கும். தாம்பத்திய சுகம்
குறைவு, மணவாழ்வு பாதிக்கும்.ஆறாம் பாவகம் தொழில் எல்லாம் செய்யலாம். வீட்டில் தொழில்
செய்வது, வீடு கட்டி வாடகைக்கு விடுவது. கருமம் செய்வதற்கு இவர்களுக்கு தடை இருக்கும்.
ஆறாம் அதிபதி பதினொன்றில் இருந்தால் என்ன பலன்
இவர்களுக்கு நண்பனே எதிரியாக இருப்பார். பணிபுரியும் இடத்தில் எதிரி இருப்பார். வழக்கு வெற்றி
இருக்கும். கடன் இருக்கும். உத்தியோகம் நல்லது. இவர்களுக்கு எந்த நோய் வந்தாலும் சீக்கிரம்
குணமாகும்.மூத்த சகோதரத்துடன் கருத்து வேறுபாடு இருக்கும்.மூத்த சகோதரனால் கடன் இருக்கும்.
மூத்த சகோதரனுக்காக கடன் வாங்கக்கூடாது. மாமனுக்கு மணவாழ்க்கை சரியில்லை. மாமனுக்கு
இரண்டு மனைவி உண்டு. சித்தப்பாவுடன் கருத்து வேறுபாடு உண்டு. ஒரு உபஜெய ஸ்தானாதிபதி
இன்னொரு உபஜெய த்தில் இருந்தால் நல்லது தந்தைக்கு வளர்ச்சி உண்டு.
ஆறாம் அதிபதி பன்னிரெண்டில் இருந்தால் என்ன பலன்
வெளிநாட்டு வேலை கிடைக்கும். இரவு வேலை நல்லது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் நன்று. ஜோதிடம்
பார்க்கலாம். மருத்துவத்துறையில் இருக்கலாம். சாப்பிட்டவுடன் தூக்கம் வரும். சாப்பிட்டவுடன் டாய்லெட்
போவார்கள். தூக்கம் கெடும். கடன் நோய் வழக்குக்காக இவர்கள் பணம் விரையம் செய்வார்கள்.
வெளிநாட்டு செல்லும்போது ஆவணங்களை சரியாக உள்ளதா என்று பார்த்து போகவேண்டும்.
உயர்பதவி கிடைக்கும் துணை தொழில் செய்யலாம். வேலை பார்த்துக்கொண்டே சைடு பிசினஸ்
செய்யலாம்.
43
மருத்துவத்துறை
ஆறாம் பாவகம் மருத்துவர் ஆகும் யோகம். ஆக்சிஜன் தருபவர் சூரியன்,
ஒளிக்கதிர்களால் சக்தியை தருபவர் சூரியன், மருத்துவத்துறையில் வெற்றியை கொடுப்பவர் சூரியன்.
மருந்து கிரகம் என்றால் சூரியன். செவ்வாய் என்றால் தைரியம். தசைநார்கள், காயங்கள், விபத்து,
அறுவை சிகிச்சை இதற்கு காரணகர்த்தா.கதிர்வீச்சு, ஹீமோதெரபி,
ராகு கேது குரு நோயை குணப்படுத்தும் கைராசி டாக்டர் என்ற பெயருக்கு காரணகர்த்தா. மக்கள் சக்தி
மருத்துவமனை அமைக்க பணியாற்ற.
தீராத வலி வேதனை இதெல்லாம் சனியை குறிக்கும். சனி பார்வை பட்ட கிரக நோய், கிரகத்தினால்
உண்டாகும் நோய் குணமாக நீண்ட நாள் ஆகும்.
ராகு கேது தொற்று நோய், கிருமி, ஸ்கேன், எக்ஸ்ரே. இவையெல்லாம்.
மருத்துவ நட்சத்திரம் அஸ்வினி, மகம், மூலம், மிருகசீரிடம், திருவாதிரை, சித்திரை, சுவாதி, உத்திராடம்,
அனுஷம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி.
இதில் அஸ்வினி மகம் மூலம் மிருகசீரிடம் அனுஷம் சதயம் ரேவதி இவர்கள் பேமஸ் டாக்டர் ஆக
இருப்பார்கள்.
துல்லியமாக பார்த்தால், சதயம் நட்சத்திரம் கொண்டவர்கள் டாக்டராக ரொம்ப பிரபலமானவராக
இருப்பார்.
மருத்துவர்கள் சிம்மம், விருச்சிகம். சிம்ம ராசியாக வருவது நல்லது.
சிம்ம லக்கினமாக வருவது நல்லது.
பத்தாம் இடமாக வருவது விருச்சிக ராசி அல்லது லக்னமாக வருவது அல்லது பத்தாம் இடமாக வருவது.
ஆறாம் பாவம் நோயை குறிக்கும். இதன் காரகர் சனி.
செவ்வாய் மருத்துவராக பணியாற்றுவதை குறிக்கும்.
எட்டாம் பாவம் மருத்துவமனை மருந்து, தாய்சேய் நலவிடுதி, இறப்பு, இறப்பின் தன்மை, தீராத
வியாதியை குறைக்கும்.
பனிரெண்டாம் இடம் மருத்துவத்தில் நீண்ட காலம் பணியாற்றுவது பெயர் பெறுவது
லக்னம் அல்லது லக்னாதிபதி 6, 8, 12 தொடர்பு மருத்துவத்துறை 8, 12 சூரியன் செவ்வாய் தொடர்பு
இருந்தால், ஆறு எட்டு பாபங்களும் அல்லது சூரியன் செவ்வாய் குரு இவர்கள் பலம் பெற்றால்
மருத்துவத்துறையில் பெயர் வாங்க முடியும்.
புதனுக்கு அடுத்து ராகு அல்லது சூரியன் இருக்க மருத்துவ படிப்பு.
இரண்டாம் அதிபதிக்கு அடுத்து சூரியன் செவ்வாய் கேது மருத்துவத்துறையில் வருமானம் இருக்கும்.
இரண்டாம் அதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் இருப்பது தொழில்.
சோதிடத்தில் சிற்றின்பம்
உங்களுடைய பிறப்பு ஜாதகம் என்பது உங்களுடைய வாழ்க்கையின் அம்சங்களுக்கான கண்ணாடியாகும்,
இதில் சீரான அல்லது (சமநிலையற்ற) ஒழுங்கற்ற அல்லது விருப்பம் போன்ற உங்களின் பாலியல்
தூண்டுதலும் அடங்கும். உங்கள் குணாதிசயங்களை அறிந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சியான திருமணம்
மற்றும் பாலியல் வாழ்க்கைக்கு வளமாக உங்களை வடிவமைக்கவும். பாலியல் நடத்தை மற்றும்
மனோபாவம் ஒரு நபர் எந்த ராசிடன் இணைக்கப்பட்டுள்ளது. செவ்வாய் மற்றும் சுக்கிரன் கிரகங்கள் ஒரு
நபரின் பாலியல் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஜோதிடத்தில் களத்திரம் என்பது ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் பெண் ஜாதகத்தில் செவ்வாய்
குறிக்கிறது. இவை முக்கியத்துவம் வாய்ந்தவை அல்லது காராகர்கள் என்று அழைக்கப்படுகின்றன, எனவே
44
காராககிரகம் பிற கிரகங்களுடனான நிலை, வலிமை, உறவுகள் ஆண்கள் மற்றும் பெண்களின் பாலியல்
வாழ்க்கையை அளவிட மிகவும் முக்கியம். பெண்களுக்கு சூரியன் மற்றும் செவ்வாய் மற்றும்
ஆண்களுக்கு சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகியவை முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன.
பெண்னின் கணவரின் இறப்பு மற்றும் திருமண மகிழ்ச்சியைக் குறிக்கும் 8 ஆம் வீட்டைத் தவிர ஆண்
மற்றும் பெண் ஜாதகங்களுக்கு இடையே அதிக வித்தியாசம் இல்லை. 7 ஆம் வீடு பெண் ஜாதகத்தில்
கணவனுக்கும், ஆணின் ஜாதகத்தில் மனைவிக்கும். எனவே பாலினத்திற்கான விதிகள் காரகம் அல்லது
முக்கியத்துவத்தை மாற்றுவதைத் தவிர இருவருக்கும் பொருந்தும், ஆனால் பெண்களுக்கும் சில
குறிப்பிட்ட யோகங்கள் உள்ளன.
பெண்களைச் சேர்ப்பது பெண்ணின் உளவியல் ரீதியான அலங்காரத்தின் காரணமாகும், எனவே 4 ஆம்
வீடு சங்கம் மற்றும் கற்பு, 5 மற்றும் 9 ஆம் வீடுகள் குழந்தைகளுக்கு, கணவன் மற்றும் கவர்ச்சியை 7
முதல், 8 ஆம் வீடு சுபம் அல்லது வாழ்க்கையில், உயர்வு, 2 ஆம் வீடு போன்றவற்றைக் குறிக்கிறது.
எனவே 1 ஆம் வீடு 5, 7 ஆம் வீடும் மற்றும் 11 ஆம் வீடுகள் 12 வது வீடு உட்பட பாலியல்
தொடர்புடையவைகள்.
வேத ஜோதிடம் நட்சத்திராதின் அடிப்படையில் யோனியை (பாலியல் உறுப்புகளின் அளவு மற்றும்
பாலியல் நடத்தை) வகைப்படுத்தியுள்ளது.
பாலியல் நடத்தை மற்றும் சூரிய ராசிகள்
1. மேஷம் , சிம்மம் , தனுசு ஆகியவை மிகைப்படுத்தப்பட்டவை.
2. ரிஷபம் , கன்னி , மகரம் பாலியல் நடத்தையில் நிதானமானவை.
3. மிதுனம் , துலாம் , கும்பம் பாலியல் மீது ரகசிய விருப்பம் கொண்டவை ஆனால் ஒருபோதும்
அவர்களின் பாலியல் உணர்வுகளை வெளிப்படுத்துவதில்லை.
4. கடகம் , விருச்சிகம் , மீனம் ஆகியவை மிகவும் கவர்ச்சியானவை அல்ல, ஆனால் மிகுந்த
உணர்ச்சிகளைக் காட்டுகின்றன.
(விண்மீன்கள்:) நட்சத்திரம்
i) அஸ்வினி, மிருகாஷிரிசம், மகம், உத்திரம், அனுசம், மூலம், சதையம் ஆகியவை உயர் பாலியல்.
ii) பரணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, அவிட்டம், பூராடம் ரேவதி ஆகியோர் பாலியல்
பழக்கவழக்கங்களில் மிதமானவர்கள்.
iv) மீதமுள்ளவர்கள் பாலுறவில் ஏங்கினாலும் அவர்களின் உணர்வுகளை மறைக்கிறார்கள்
பாலியல் உறுப்புகளின் அளவுஆண்
மனிதன் ஆண்குறியின் அளவிற்கு ஏற்ப மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளார்
1 மான்-மனிதனுக்கு 4 "நீளமுள்ள குறுகிய ஆண் உறுப்புகள் உள்ளன.
2 காளை மனிதனுக்கு நடுத்தர ஆண் உறுப்பு 6 "நீளம் உள்ளது.
3 குதிரை மனிதனுக்கு 8 "நீளமுள்ள ஆண் உறுப்புகள் உள்ளன.
ஆண்குறியின் சுற்றளவு நீளத்திற்கு ஏற்ப இருக்கும், ஆனால் அது விகிதாசாரமாக இருக்காது.
பெண்
பெண் யோனியின் ஆழத்திற்கு ஏற்ப மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
1 மான் பெண்ணுக்கு 4 "நீளமான குறுகிய யோனி பாதை உள்ளது.
2 முயல் பெண்களுக்கு நடுத்தர யோனி பாதை 6 "நீளம் கொண்டது.
3 யானைப் பெண்ணுக்கு 8 "நீளமான யோனி பாதை உள்ளது.
சுற்றளவு யோனி நீளத்திற்கு விகிதத்தில் உள்ளது, ஆனால் அதை நீண்ட அளவுக்கு நீட்டலாம்.
பாலியல் ஒழுக்கக்கேடு / விபச்சாரம் / அதிகப்படியான பாலினத்தின் கிரக சேர்க்கைகள்
45
1. 7 ல் பாதிக்கப்பட்ட சூரியன்.
2. 7 ல் சனி செவ்வாய் சந்திரன்.
3. செவ்வாய் மற்றும் சுக்கிரன் இணைந்த பாதிப்பு.
4. 9 ஆம் அதிபதி அஸ்தமனம், நீச்சம் அல்லது 9-ல் நீச்ச கிரகம் இருந்தாலும்.
5. கரகாம்சத்திற்கு 9 இல் கேது.
6. 2 அல்லது 12 ஆம் வீடுகளில் 7 ஆம் அதிபதி மற்றும் பலம் குறைந்திருந்தால்
7. சுக்கிரன் செவ்வாய் மற்றும் சனியின் வர்கத்தில் இருந்தால்
8. சுக்கிரன் செவ்வாய் அல்லது சனியின் வீட்டில் இருக்க வேண்டும், அல்லது மோசமாக
பாதிக்கப்படிறுந்தால்.
9. 12 ல் 9 ஆம் அதிபதி ; 2 ஆம் இடத்தில் 12 ஆம் அதிபதி 3 ஆம் இடத்தில் ஒரு ஆண் கிரகம் இருந்தால்
10. செவ்வாய் சுக்கிரன் ராசியில்
சனி / செவ்வாய் நவாம்ச மற்றும் சுக்கிரன் செவ்வாய் ராசியில் ஆனால் சனி / சுக்கிரன் நவாம்சத்தில்.
11. 2 ஆம் இடத்தில் சனி மற்றும் 7 ஆம் அதிபதி இருந்தால்
12. லக்கினாதி 6 ஆம் அதிபதி ஆண் கிரகங்களுடன் இணைந்திருந்தால்
13. மேஷம், ரிஷபம் அல்லது கும்பத்தில் உள்ள சுக்கிரனை செவ்வாய் கிரகத்தால் பார்க்கப்பட்டால்
14. கன்னியில் சுக்கிரன் அல்லது சனியால் .
15. ராகு அல்லது கேதுவுடன் 7 ஆம் அதிபதி ஆண்மைக் கோளாறு.
16. பலவீனமான சந்திரன் 7 ல் , 7 ஆம் அதிபதியுடன் லக்னத்தில் ஆண்மையுடன்.
17. 10 ல் 2, 7, 10 ஆம் அதிபதிகளின் இணைவு
18. 4 ஆம் இடத்தில் 7 ஆம் அதிபதி, 1, 2 அல்லது 7 ஆம் இடத்தில் லக்கினாதிபதி இருந்தால்
19. 3 ஆம் இடத்தில் 2 ஆம் அதிபதி மற்றும் 12 ஆம் அதிபதி 9 ஆம் அதிபதி இருந்தால் அல்லது வியாழன்
இருந்தால்
20. 7 ஆம் அதிபதியும் மற்றும் 11 ஆம் அதிபதி இடையே வலுவான சம்பந்தம் இருந்தால்
21. 7 ல் 9 ஆம் அதிபதியும் 4 ஆம் இடத்தில் 7 ஆம் அதிபதி இருந்தால்
22. சிம்மத்தில் சுக்கிரன் புதனால் பார்க்கப்பட்டால்
23. செவ்வாய் மிதுனத்தில் அல்லது கன்னியில் சுக்கிரன்.
24. மேஷம் / விருச்சிகத்தில் 2 ஆம் அதிபதி / சுக்கிரன் தொடர்புபொற்றால்
25. மேஷம் / விருச்சிகத்தில் சுக்கிரன் 10 ஆம் அதிபதி அல்லது சனி அல்லது சுக்கிரன் பார்க்கப்பட்டால்
26. மேஷம் / விருச்சிகம் சுக்கிரன் தொடர்புடைய சனி.
27. 4 ஆம் இடத்தில் செவ்வாய், 7 ல் ராகு மற்றும் சூரியன் சனி எந்த ராசியிலும் சேர்ந்திருந்தால்
28. ராகு அல்லது சூரியன் 7 ல் மற்றும் செவ்வாய் 4 ல் அல்லது 7 ல்.
29. 7 ல் 1, 2 அல்லது 6 ஆம் அதிபதி இருந்தால்
30. வியாழன் புதன் அல்லது சுக்கிரன் சந்திரன் அல்லது சூரிய ராகு அல்லது சனி ராகு அல்லது சனி
கேது 7 ல் இருந்தால்
31. 6 மற்றும் 7 ஆம் அதிபதிகள் 9 ஆம் வீட்டில் இருந்தால் ஆண்மையுள்ளவர்.
32. 3 ஆம் வீடு மோசமாக பாதிக்கப்பட்டிருந்தால் மற்றும் ஜாதகத்தில் சந்திரன் மிகவும் பலவீனமாக
இருந்தால்
33. தலைக் கோடு வீசுதல் மற்றும் இதயக் கோடு சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளது, (உள்ளங்கையில்).
34- செவ்வாய் மூன்று, ஏழாம் வீடுகளின் அதிபதி மற்றும் சுக்கிரன் ஆகிய மூவரும் இணைந்திருந்தால்
35. 7 ஆம் மற்றும் 12 ஆம் வீடுகளின் அதிபதிகளுக்கு இடையில் பரிமாற்றம் இருந்தால்
36. 7 ல் புதன் சுக்கிரன் ரகசிய (கள்ளத்தானம்) இன்பங்களை நாடுகிறான்.
37. 7 ல் செவ்வாய் புதன் சுக்கிரன் ஒருவரை மிகவும் உணர்ச்சிவசப்படுத்துகிறது.
46
பகை 3 6 7 10 11
நட்பு 1 2 4 5 8 9 12
பகை 3 6 7 10 11
நட்பு 1 2 4 5 8 9 12
பகை 3 6 7 10 11
நட்பு 1 2 4 5 8 9 12
48
1. மாயா நயன்தாரா
2. உரியடி 2019
3. வி ஐ
4. கேம் ஓவர்
5. மெஹந்தி சர்க்கஸ்
6. இன்று நேற்று நாளை
7. தடம்
8. மெட்ரோ
9. மரகத நாணயம்
10. கொலைகாரன்
11. டிமாண்டி காலனி
12. வெள்ளைப் பூக்கள்
13. மாநகரம்
14. இரவுக்கு ஆயிரம் கண்கள்
15. ராஜ தந்திரம்
16. குற்றம் 23
17. மாயவன்
18. இரும்புதிரை
19. 8 தோட்டாக்கள்
20. துருவங்கள் பதினாறு