ஆயுள் பலம்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 48

1

ஆயுள் பலம் ஸ்ரீராம் 75928 68536

1. அற்ப ஆயுள் 33 வரை, மத்திம ஆயுள் 60 வரை, அதற்கு மேல் பூரண ஆயுள்.
2. ஆயுள் காரகன் சனி, மறைமுகமாக செவ்வாயும் ஆயுளுக்குப் பொறுப்பானவர். காலபுருஷனுடைய
எட்டாவது ராசி விருச்சிகம், அதற்கு அதிபன் செவ்வாய். இவர் சனியின் வீடான மகரத்தில்
உச்சமடைகிறார். ஆகவே இரண்டுக்கும் ஒரு தொடர்பு உண்டு. ஒரு மனிதனுக்கு நோய், கடன், எதிர்ப்பு,
போட்டி, பொறாமை, வஞ்சகம், வில்லங்கம், வம்பு, வழக்கு, தகறாறு, வெட்டு குத்து இவற்றைத்
தருவது இந்த இரு கிரகங்களுமே. எப்போது எதனால் சாவான் என்பதை ஆயுளுக்கு நேர்முகப்
பொறுப்பேற்ற சனியும் மறைமுகமாக செவ்வாயும் முடிவு செய்யும்.
3. முதலில் லக்னாதிபனுடைய வலுவை கணிக்க வேண்டும். லக்னாதிபன் கேந்திர, திரிகோணங்களில்
அல்லது சுபர் வீடுகளில் அமர்ந்து ஆட்சியோ உச்சமோ பெற்றால் ஓரளவு ஆயுள் தீர்க்கம்.
4. எட்டாம் அதிபனது வலுவை கவனிக்க வேண்டும். சுபர்களின் பார்வை, சேர்க்கை, அல்லது இணைவு
பெறுவது அவசியம். உதாரணமாக மேஷ லக்னத்தாருக்கு லக்னாதிபனும் எட்டாமதிபனும் ஒருவரே
என்பதால் செவ்வாய் வலுப் பெறுவது அவசியம். எட்டாமிடம் சுபத்துவம் அடைதல் வேண்டும். குரு,
புதன் அல்லது சுபர்கள் பார்வை தேவை.
5. எட்டாமிடத்திற்கு எட்டாமிடமான மூன்றாமிடமும் வலு பெற வேண்டும்.
6. ஆயுளைத் தரக்கூடிய சனியும் வலிமை பெற வேண்டும். லக்னாதிபன், எட்டாமதிபன், மூன்றாமதிபன்
மற்றும் சனி பகவான் வலு பெறுதல் தேவை. செவ்வாய்க்கும் வலிமை வேண்டும்.
7. இவற்றில் 1 ஆம் இடமோ 8 ஆம் இடமோ பலமற்றிருந்தால் சுபர் பார்வை சேர்க்கை அற்றிருந்தால்
அது அற்பாயூளைக் குறிக்கும்.
8. எப்போது எப்படி முடியும் என்பதை 8 ஆமிடமும் 12 ஆமிடமும் முடிவு செய்கின்றன. 4, 8, 12 4 மிடம்
வசிப்பிடம் என்று சொன்னாலும் அது கல்லறையையும் குறிக்கும், 8 ஆயுள், 12 முடிவு அடுத்த
பிறவியை நோக்கி நாம் நகர உதவும் ஸ்தானம்.
9. 3, 8,லக்னாதிபன், சனி செவ்வாய் இவற்றில் 2 க்கு மேல் வலிமை பெற்றால் அது மத்திம ஆயுள்
ஜாதகம். 3 நிலைகளுக்கு மேல் வலிமை பெற்றிருந்தால் உத்தம ஆயுள் ஜாதகம். எல்லாவற்றிலும் வலு
இருக்க பரிபூரண ஆயுள்
அட்டமத்தோன் அதற்கு எட்டும்
திட்டமிட்டு கேந்திரத் திரிகோணத்தில் நின்றுவிட்டால்
இட்டமுடன் கூறிவிடப்பா இவர்களுக்கு ஆயுள் தீர்க்கமென்று.

மரணம் எப்படி வரும்? மணிகண்டன் 99624 10058, 74491 67441 myastromani@gmail.com

 ஆயுள் காரகன் சனியின் சுற்றை வைத்தே ஆயுள் நிர்ணயமாகிறது. சனியின் ஒரு சுற்றுக்கு 30
வருடங்கள் தேவை. முப்பது வருடத்துக்குள் ஒருவர் மரணித்தால் அது அற்ப ஆயுள், இரண்டாவது
சுற்று 30 லிருந்து 60 க்குள் நடக்கிறது. ஒருவர் முப்பதிலிருந்து அறுபது வயதுக்குள் இறந்தால் அது
மத்திம ஆயுள்; மூன்றாவது சுற்று அறுபதிலிருந்து தொண்ணூறுக்குள் நடக்கிறது, ஒருவர்
அறுபதிலிருந்து தொண்ணூறு வயது வரை வாழ்ந்தால் அந்த ஜாதகருக்கு தீர்க்காயுள்;
 சர ராசிக்கு 11 ஆமிடம் பாதக ஸ்தானம், ஸ்திரத்துக்கு 9 ஆமிடம், உபயத்துக்கு 7 ஆமிடம் பாதகம்;
மரணத்துக்கொப்பான சில விஷயங்களை பாதக ஸ்தானம் காட்டும், அந்த ஸ்தானதிபதியின் தசா
புத்திகளில்.
 ஒரு ஜாதகனுக்கு தர்ம கர்மாதிபனும் பத்தாமிடத்தோனுமான சனி தசையோ புத்தியோ
நடக்கும்போது அவரது தாய், தந்தையர் மரணிக்கலாம்.
 சனியோடு செவ்வாய் இணைந்தால் வாகன விபத்தால் அல்லது தீவிபத்தால் மரணம்.
2

 சனி ராகு, கேது தொடர்பிருந்தால் நோயால் மரணம், வெளியில் தெரியாத நாள்பட்ட நோயாலாகும்.
 சூரியனால் மரணம் எனில் அது விடியற்காலையில் நிகழும் பெரும்பாலும் இயற்கை மரணமே
தான். தூக்கத்திலும் கூட நிகழலாம்.
 சந்திரனால் மரணமெனில் நீர்நிலைகளில் பாதிப்பு ஏற்படலாம். ஒரு வேளை இரவிலும் ஏற்படலாம்.
 சுக்கிரனால் மரணம் வருமெனில் அது பெண்களால் நிகழலாம், உடலில் எங்காவது புண் வந்து அது
ஆறாமல் பெரிதாகி மரணம் வரலாம். துன்பப்பட்டு உயிர் பிரியும்
 ராகு, கேது மரணம் தருமெனில் விபத்தாலோ விஷ ஜந்துக்களாலோ அது நேரலாம், வாதைப்பட்டே
உயிர் பிரியும் எனலாம்.
 புதன் பொறுப்பெனில் மரணம் திடீர் விபத்துக்களால் வரலாம்.
 குருவால் மரணம் எனில் அது இயற்கை மரணமாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம். ஒருவேளை
மாரடைப்பும் காரணமாகலாம். உயிர் அதிக துன்பம் தராமல் பிரியும்.

கடைசி கால வாழ்க்கை


எப்படி இருக்குமென்று ஜோதிட ரீதியாக அறிவது
ஆஸ்ட்ரோவெல் பால கிருஷ்ணன் 7068570585 email astrovel2020@gmai.com
 நன்றாக வாய்க்கும் அமைப்பு – பூர்வ புண்ணிய அதிபதி சுபத்துவத்தில் இருந்து அந்த தசை 50 – 60
வயதுக்குப்பின் வருமானால் வாழ்க்கை அருமையானதாக இருக்கும்.
 ஆயுள் ஸ்தானமாகிய எட்டாமதிபன் சனி சுபத்துவமடைந்து அந்த தசை 50 – 60 வயதுக்குப்பின்
வருமானால் வாழ்க்கை சுகமானதாக இருக்கும். நோய் நொடியின்றி உறக்கத்தில் மரணம் ஏற்படும்.
 ஆயுள் காரகனான சனி சுபத்துவ அமைப்பில் இருப்பது ( குருவின் பார்வை, சுக்கிரனது சேர்க்கை,
கிரகம் நின்ற வீட்டுக்கதிபன் சுபத்துவத்திலிருப்பது, குரு பார்வை அல்லது குரு ஸ்தானத்தை
வாங்கிக் கொள்வது, சுக்கிர சேர்க்கை, சாரம் பெறுதல்). நீசமோ, வக்ரமோ பெறாதிருத்தல், 3,6,8,12
ஆகிய மறைவு ஸ்தானங்களில் இல்லாதிருப்பது,
 பாவ கிரகங்களான சனி, ராகு, கேது மறைவு ஸ்தானங்களில் வலுப் பெறுவர்.
 தசா புத்தியை வைத்தே இறுதிகால வாழ்க்கை தீர்மானிக்கப் படுகிறது.

துன்ப வாழ்க்கைக்கான அறிகுறிகள்:


 ஐந்தாமதிபனாக சனி அமர்ந்து அவரது தசை நடந்தால் வியாதியைக் கொடுப்பார், தீராத
நோய்களைக் கொடுத்து வீட்டுக்கும் ஆஸ்பத்திரிக்கும் நடையாய் நடந்து, எவ்வளவு செலவு
செய்தாலும் நோய் தீராத அமைப்பைத் தருவார்.
 லக்னாதிபன் நீசமோ, வக்ரமோ பெற்று கடைசி காலத்தில் அவரது தசை நடந்தால் உடல், உள்ளம்,
பொருள், உறவு அனைத்திலும் கஷ்டம்,
 தீர்வு : விடியற்காலையில் வீட்டில் விளக்கேற்றி, தியானம் செய்து ஈஸ்வரனை நினைந்து
வழிபடல்.
3

ஆயுள் முடியும்போது கிரக நிலை எப்படி இருக்கும்? திருமயம் 80980 25125

சுக், புத குரு


சந் சூரி செவ்

கேது
ராசி
ராகு

/ல சனி
(வ)

உதாரண ஜாதகர் 09.05.1953


 குரு தான் ஜாதகர், ஜாதகர் பற்றி அறிய குருவை பார்க்க வேண்டும். இந்த குருவை கோச்சார
கிரகங்கள், ராகு, சனி, குரு ஆகிய மூன்றும் பிறப்பு ஜாதகத்திலுள்ள குருவை நெருக்கும்போது அந்த
ஜாதகருக்கு ஆன்மா பிரியும்.
 ஆயுள் பாதிப்பு ஏற்படும் இன்னைக்கு வந்து அவரோட வயசு 67 முடிஞ்சு எட்டு மாசம் 12 நாள்
ஆகுது, எப்ப 21 1 2021 ல, 67 முடிஞ்சு எட்டு மாசம் 12 வது நாள் இந்த ஆன்மா பிரியும். கட்டத்தில்
இருக்கக் கூடிய கிரகங்கள் பிறப்பில் உள்ள ஜாதகம்.
 இந்த கட்டத்துக்கு வெளியில் குறிக்கப்பட்ட இந்த கிரகங்கள் 21 1 2021 ல் உள்ள கோச்சாரம். இந்த
பிறப்பு ஜாதகத்தில் உள்ள குருவே அன்னைக்கு ராகு குருவோட வருது. இங்கே சனி குரு
இரண்டும் பிறப்பு ஜாதகத்தில் உள்ள ராகுவோடு இணைகிறது.

சுக், சந் புத, சூரி குரு,செவ்


சந் ராகு

கேது
 ராசி
அந்தக் கட்டடத்துக்கு சூரியனும் வருகிறது.
ராகு சூரியன் தான் ஆன்மா, இங்கே சந்திரன் கோட்சார
குரு சனி
சந்திரன் பயணம், பயணத்துக்கு உள்ளது சந்திரன்,
சூரி
/ல சனி ஆயுளை முடிக்க கூடிய கிரகம் கோச்சார ராகு.
(வ)
 இந்த ராகு இப்போது கடகத்தில் இருக்கிறது.
இன்னும் ஒரு மாதத்தில் மிதுனத்திற்கு போய்விடும், ஒன்றரை வருஷம் கழிச்சி ரிஷபத்திற்கு
வரும். அவர் ரிஷபத்திற்கு வரும்போது ராகு குருவோடு இணைந்து இந்த கோச்சாரம் குருவும்
சனியும் பிறப்பு ஜாதகத்தில் உள்ள ராகுவுடன் இணைந்து செயல் இழக்கிறது.
 கோச்சர குரு இயக்கம், சனி கர்மா, இந்த குருவும் சனியும் பிறப்பு ஜாதகத்தில் உள்ள ராகு,
கேதுவோடு இணைந்தால் செயல் இழந்துவிடும். செயலிழக்கும் போது அங்கு சூரியன் அந்த
கட்டத்துக்கு வருது. மகரத்துக்கு வரும்போது ஆன்மா (சூரியன்) அதில் சிக்குகிறது. பயணத்திற்கு
உண்டான கிரகம் சந்திரன் ரிஷப ராசியில் வருகிறது, ஆன்மா பயணமாகும்.
 எப்போதுமே ராகுவுக்கு ஒரு குணம் உண்டு, துண்டு செய்யக்கூடிய, துண்டு பண்ணக்கூடிய அந்த
அமைப்பு, உடலில் இருந்து உயிரை துண்டு பண்ணும்.21.02.2021 அன்று குரு சனி இரண்டும்
செயலிழக்கிறது, ராகு குருவை நெருக்குது, ஆன்மா சூரியன் ராகுவுடன் சேர்கிறது,
அன்னைக்குதான் அந்த 2021 ஜனவரி 21 ஆம் தேதி மாந்தி, மகரத்தில் உதயமாகிறது. மாந்தி
உதயமாகும் போது ஜாதகருடைய ஆயுள் முடியும். ஜாதகத்தில் 21 1 2021 அன்றைக்கு என்னுடைய
உயிர் உடம்பு விட்டு பிரிந்து இறுதிப்பயணம் ஆகும்.
4

 ஆனா இதுல பாருங்க இந்த இறுதிப் பயணத்தை கொடுக்கக்கூடிய இதற்கு என்ன காரணம்
அப்படிங்கிறது கண்டுபிடிக்கணும். ஒருவருக்கு ஆயுள் முடியும் போது அதற்கு ஏதேனும் ஒரு
காரணத்துக்காக ஏற்படும். இந்த ராகு-கேது அதை உருவாக்கும்.
 ஒரு காரணத்தை அது கொடுத்து அது உயிர் எடுக்கும் அப்ப அந்தக் காரணம் என்ன என்று கண்டு
பிடிக்கணும். பத்தான ராசியில் குருவும் சுக்கிரனும் பரிவர்த்தனை இருக்குது இந்த ஜாதகத்தைப்
பார்க்கும்போது தீர்க்காயுள் என்று முடிவு பண்ணிடலாம். அறுபதுக்கு மேல நூறு வயசுக்குள்ள
மரணம் நிகழும்.
 அதற்கு ஒரு காரணம் வேண்டும் அதற்கு என்ன காரணம். சுக்கிரன் நாலம் இடத்தில் மீன ராசியில
நிற்கிறது அதற்கு பன்னிரண்டாம் இடம், மூன்றாம் வீடு கும்பம். இந்த மூன்றாம் வீட்டின்
காரகத்துவம் வீர்யம், பலம், ரத்தம். அப்ப வீர்யம் பலம், ரத்தம் அப்படின்னாலே அது நம்முடைய
தெம்பு, சக்தி. தெம்பு இல்லாம போயிடும் போயி உனக்கு ஒரு தீராத ஒரு நோயை கொண்டு
வந்து அந்த சக்தியை எடுத்துவிட்டு அதற்குப் பிறகு அது உயிரை எடுக்கும்.
 சரி நண்பர்களே ஒவ்வொருவரும் அவர்களது ஜாதகத்தை ஆராய்ந்து பாருங்கள், பாக்குறதுக்கு
ஜாதகரை குருவாக வைத்து, இந்த குருவை கோச்சார ராகுவும் குருவும் சனியும் ஒரே சமயத்தில
பாக்கணும், அப்படி இருக்கும்போது அந்த ஜாதகர் இறப்பார் அவருடைய ஆன்மா உடலில் இருந்து
பிரிந்து விடும்.
 சரி நண்பர்களே உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் எனக்கு இந்த குழுவில் பதிவு
போடுங்க இந்த வாட்ஸப் குழுவில் பதிவு போடுங்க நான் உங்களுக்கு பதில் சொல்றேன் நன்றி
நண்பர்களே வணக்கம்

மரணம் எப்படி வரும்?


ஆதித்ய குருஜி
 ஆயுள் ஸ்தானமான எட்டாவது இடத்தோடோடு சம்மந்தப்பட்ட கிரகங்கள் வழியாக மரணம்
நடக்கும்.
 செவ்வாய் – ராகு அல்லது பாபர்கள் தொடர்பிருந்தால் அவற்றின் திசை அல்லது புத்தியில்
விபத்தால் மரணம் வரும்.. செவ்வாய் விபத்துக்கு காரணமாவான்.
 சனி சம்மந்தப்பட்டால் நோயால் மரணம் நேரும். புற்று நோய் போன்ற நீடித்த நோய்கள் சனியின்
தொடர்பால் உருவாகும்.
 பாதகாதிபதியின் திசையில் அஷ்டமாதிபதி புத்தி நடக்கும் போது பொதுவாக மரணம் நடக்கும்.
 ஷஷ்டா அஷ்டகம் என்பது ஜோதிட ரீதியாக ஒரு பலம் குறைந்த நிலையைக் குறிக்கும். தசா
நாதனும் புத்தி நாதனும் ஆறு எட்டாக இருக்கும் நிலை – ஆயுளைக் குறைக்கும் என்பது விதி.

ஆயுள் கணக்கிடுவது ஆதித்ய குருஜி 9768 99 8888

 ஒரு கிரகத்தின் செயல்பாடுகள் காரகத்துவம் என்றும் ஒரு பாவத்தின் செயல்பாடுகள் ஆதிபத்யம்


என்றும் கூறப்படுகின்றன. பார்வை ஆதிபத்ய சுபத்துவத்தைக் குறிக்கும், சேர்க்கை கிரக
சுபத்துவத்தைக் காட்டும்.
 ஒரு கிரகம் பகை/ நீசம் பெற்று வர்கோத்தமம் பெற்றால் அது ஆட்சிக்கு சமம்.
5

 தசா புத்திகளே நடைபெறும் சம்பவத்தை நிர்ணயிக்கின்றன. லக்னதிபன் ஐந்து ஒன்பதுக்கு


உடையவர்கள் சுப கிரகங்களோடு சேர்ந்து வரும் தசா புத்திகளில் மகிழ்சி தரக்கூடிய சுபச்
செயல்களும்’
 ஆறு எட்டு பனிரெண்டு பாவாதிபர்கள் பாவர்களோடு இணைந்து வரும் தசா புத்திகளில்
ஒருவருக்கு துன்பம் தரக்கூடிய நோய், கடன், ஆயுள் குறைப்பு (மரணம்) போன்ற செயல்களும்
நிகழ்கின்றன. ஆயுளை முடித்து வைப்பதும் அதிலடங்கும்.
 பாதக அஷ்டக மாரக அதிபதிகளின் தசை புத்தியில் மரணம் நேரும்..

ஆயுள் தடை முனைவர் கே பாலசுப்ரமண்யம்

Dr K Balasubramanyam mail id Srikrishna.jyotish@gmail.com 925 292 7171 Watts App 510 725 6244
 எட்டாமிடம் துன்பங்கள், அவமானம், திடீர் திருப்பங்கள், விபத்துக்கள், எண்ணங்கள்
நிறைவேறாமை, ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, கண்டம், உழைக்காமல் வரும் பணம்
(அப்பாவின் சொத்து) விரோதிகளால் தாக்கப்படுவது மற்றும் மரணம் நேரும் விதம்
ஆகியவற்றைக் குறிக்கும்.
 எட்டாமிடம் சனி தொடர்பாயின் மரணம் ( prolonged illness) நீண்ட நாள்பட்டதாக இருக்கும்.
 செவ்வாய் தொடர்பு பட்டால் துன்பமின்றி லகுவில் மரணம்.
 குரு சம்மந்தப்பட்டிருந்தால் இயல்பாக அமைதியாக இயற்கை மரணம் நிகழும்.

யாருக்கு இரு மனைவி?

 ஒரு ஜாதகத்தில் அந்த ஜாதகரை குறிக்கக்கூடிய கிரகம் குரு. ஏனென்றால் காலபுருஷ


தத்துவத்தில் 9, 12; இவற்றில் 9 ஜாதகர் இந்த பிறவி எடுத்ததன் நோக்கம் காட்டும். அவர்
செய்யக்கூடிய தர்ம காரியங்கள், புண்ணியங்களை கூறுவது
 அடுத்து 12 ஆமிடம் என்பது மோட்சம், மோட்சம் என்பது இறுதி வெற்றி. அவருடைய முக்தி,
சித்தியை குறிக்கும். மற்ற எல்லா பாவங்களும் இந்த ஜாதகரின் வாழ்க்கையில் வாழக்கூடிய
விஷயங்களை மட்டுமே குறிப்பிடும். மோட்சம் என்ற இந்த வார்த்தை - ஜாதகன் செய்யக்கூடிய
புண்ணிய தர்மங்களையும் அந்த புண்ணியத்தால் கிடைக்கக்கூடிய முக்தி இன்பங்களையும்
கூறுவது குருவினுடைய வீடுகள். அதனாலதான் ஜாதகரை குரு என்று கூறுகிறார்கள்.
 ஜாதகத்தில் 9 ம் 12 ம் குருவினுடைய வீடுகள். ஜாதகர் குரு என்கிற போது, இந்த இடத்துல நம்ம
கவனிக்கவேண்டியது எதிர் பாலினம் – களத்திரம். களத்திரத் தன்மை எதிர்பாலின ஈர்ப்பு வேட்கை
ஆசை இதையெல்லாம் கொடுக்கக் கூடிய கிரகம் சுக்கிரன்.
 ஒரு ஜாதகத்திலே இது எல்லாமே ஒரே வீட்டில் இருக்கணும்னு அவசியம் இல்லை.
திரிகோணங்களில் இருந்தால் போதும் 1 5 9 7 சமசப்தமஸ்தானத்தில் இருந்து ஒவ்வொரு
கிரகங்கள் பார்க்கும் பொழுது குரு உள்ள வீட்டில் இருந்து சுக்கிரன் 1 5 7 9 ல் இருந்தால் இந்த
ஜாதகர் ஒரு காந்தம் மாதிரி அப்படியே கவர்ந்து இழுப்பார். அதன் பிறகு இந்த சுக்கிரனுடன் புதன்
இணைவது; சுக்கிரனிலிருந்து புதனோ புதனிலிருந்து சுக்கிரனோ 3, 11 ல் இருந்தாலோ ஒன்றில்
இருந்தாலோ இந்த ஜாதகர்கள் கவர்ந்து இழுக்கிறார்கள்;
 குருவோட சுக்கிரன் சேரும்போது ஜாதகரை நோக்கி எதிர் பாலினத்தவரை இழுக்கும்.
அப்படியிழுத்த எதிர்பாலினத்தவர்களை பேசி சரி செய்ய சுக்ரன் புதன் சேர்க்கை உதவும். இவை
6

பொது, ஒருவேளை இது ஒரு ஆண் ஜாதகமாக இருந்தால், சுக்ரனுக்கு திரிகோணத்தில் 1 5 9 ல்


ராகுவோ கேதுவோ இருந்தால் இவர்கள் குடும்பத்தைக் கெடுத்து அசிங்கம்; ஒண்ணு இவங்க
யாரையாச்சும் விரும்பி திருமணம் பண்ணிக்கணும், அந்த திருமணம் வந்து சமூகத்துக்கும்
தங்களுடைய குடும்பத்தையும் எதிர்க்கக்கூடிய திருமணமா பண்ணிக்கணும்;
 குடும்ப வாழ்க்கையை கெடுத்து தொடர்பை ஏற்படுத்த, அதாவது குரு சுக்கிரன் புதன் இணைவு
இருந்து அது பெண் சாதகமாக இருந்தால் அந்தப் பெண் ஜாதகத்தில் செவ்வாய்க்கு 1 5 7 ஒன்பதில்
ராகு இருந்தால் குடும்பத்தை கெடுக்கும்; அதன் பிறகு இந்த ஜாதகத்தில் குருவுக்கு சந்திரன்
இணைவு குருவுக்கு 1 5 7 9 ல் சந்திரன் இருந்தால் இந்த ஜாதகருடைய அவமானம். அந்த நாலு பேர்
பேசுற அளவுக்கு பேசுவதால் செய்யமாட்டான் அப்படி ஒரு அவமானச் சின்னங்கள்
ஏற்படுத்தக்கூடிய அமைப்பு.
 ஒரு ஜாதகத்தில் குருவுடன் சுக்கிரன் இணைவு, சந்திரனுடன் இணைவு குருவுடன் கேது இணைவு
இப்படி இணைவுகள் எல்லாம் ஒன்று சேரும் பொழுது, ஆண் ஜாதகமாக இருந்தால் குரு ராகு
கேதுவுடன் சேருவதோ - பெண்களுக்கு செவ்வாய் ராகுவுடன் சேருவதோ இருக்குமானால் இந்த
ஜாதகர் தகாத அல்லது சமூகத்துக்கு கட்டுப்படாத சமூக திட்டங்களுக்கு உட்படாத தொடர்புகளை
ஏற்படுத்திக் கொள்வார். முக்கியமா கவனிக்க வேண்டியது, மூத்த ஆண்களை அல்லது இளைய
வயது ஆண்களை கல்யாணம் செஞ்சுக்க பெண்களுக்கு ஆசை வரும்.
 சில ஆண்களுக்கு வயது மூத்த பெண்களை திருமணம் செய்யக் கூடிய அமைப்பு ஆண்களுக்கு
இது இரண்டுமே வந்து சமுக கட்டுப்பாட்டுக்கு ஒத்துவராத இது மாதிரி விஷயங்கள் நடக்கும்.
சிலபேர் இரண்டாம் திருமணம் செய்து கொள்வர், அவர்களுடைய முதல் மனைவி தவறியதால்.
சிலர் வந்து முதல் திருமணம் ஆன பெண்ணோ, பண்ணி வர கணவன், அவங்க எல்லாமே 2
திருமணம் செய்து கொண்டவர்களாக இருப்பார்கள்; இந்த எல்லா திருமணங்களும் நீச திருமணம்
என்று சொல்லப்படுகிறது. அப்போ ஒரு சராசரியான தன்மை இல்லாத ஒரு திருமணத்
தொடர்புகளை கொடுக்கக்கூடியது குரு சந்திரன் குரு சுக்கிரன் குரு புதன் சுக்கிரன் புதன் குரு
கேது இணைப்பு
 இப்படிப்பட்ட இணைவு இருந்தா கண்டிப்பா ரெண்டு லட்டு திங்க ஆசையா அதுதான். ஒருவேளை
அவருடைய ஜாதகத்தில் சந்திரன் கோச்சாரத்தில் மிகவும் முக்கியமா இந்த இணைப்புக்கு
கோச்சார குரு வரும் பொழுது இந்த ஜாதகர் விரும்பி செய்வார் சனி வரும்போது அவர்
விரும்பாவிட்டாலும் நடக்கும். குருவுடன் சந்திரன் சூரியன் ராகு கேது இணைவு தான் அதனால்
விஷயம் எதுவாக இருந்தாலும் ஒரு ஜாதகத்தில் குரு சுக்கிரன் சூரியன் புதன் குரு சுக்கிரன் புதன்
சந்திரன் கேது என ஒரு பெரிய சேர்க்கை மிக முக்கிய சிக்கலாக இருக்கும்
 நன்றி வணக்கம் நான் உங்கள் பார்த்திபன் 994 122 0631

மாந்தி ( சனியின் புத்திரன் ) குளிகன்


 நவகிரகங்களில் ஒன்றல்ல, எந்த காரகத்துவத்தையும் கெடுக்க வல்லது, அன்றாட வாழ்வில்
குளிகை காலம் ஆக இடம் பெறுகிறது.
 தினசரி ஒன்றரை மணி நேரம் இதன் ஆளுகைக்கு வருகிறது. சனியின் புதல்வனாகையால்
சனிக்கிழமை காலை சூரிய உதயத்திற்குப் பின் இரண்டு நாழிகையில் உதிக்கும்,
 சனிக்கிழமை பகலில் பிறந்த குழந்தைகளுக்கு சூரியனுக்கு அருகிலேயே மாந்தி இருக்கும்,
 வெள்ளிக்கிழமை சூரியனுக்கு 2 அல்லது 3 வது வீட்டில் இருக்கும். வியாழன் அன்று 3 அல்லது 4
வது வீட்டிலும், புதனன்று சூரியனிலிருந்து 4 அல்லது 5 வது வீட்டிலும் மாந்தி இருப்பார்.
 மாந்தி இரவு நேர ஜாதகங்களில் இதற்கு நேர் மாறாக இருப்பார்.
7

 பகலில் மாந்தி எனவும் இரவில் குளிகன் எனவும் குறிக்கப்படுகிறார்.


 பிரசன்ன ஜோதிடத்தில் மாந்தி அவசியமாக பயன் படுவார்.
 லக்னத்தில் இருந்தால் ஜாதகரின் தோற்றத்தையே ஏதாவது ஒருவகையில் மாற்றிவிடுவார்.
 2 ஆமிடத்தின் தன்மைகளை தரம் தாழ்த்தும்
 3,6,8,11 மறைவிடங்களாகையால் பாதிப்பு குறையும்
 ஆன்மா உடலிலிருந்து பிரிந்த பின்பு உடலைக் கட்டி காப்பது மாந்தியின் பணி, பிரேத காரகன்
என்ற பெயரும் உண்டு, தாயின் கருவறையிலிருந்து குழந்தையை வெளியேற்றுவதும் இதன் பணி,
ஒரு உயிரிலிருந்து இன்னொரு உயிரைப் பிரிப்பதும் இதுவே. உடலில் தொப்புள் பாகத்தைக்
குறிப்பது. தொப்புள்கொடி உறவு.
 குளிகை காலத்தில் கெட்ட காரியங்களைச் செய்யக்கூடாது, நல்ல காரியங்களைச் செய்யலாம்,
ஏனெனில், குளிகை எந்த செயலையும் வளர வைப்பது.

பொது விதிகள்
 ஆணோ, பெண்ணோ வாழ்க்கையில் தன் துணையோடு வாழ்வதே சிறப்பு. ஆண் ஜாதகத்தில்
ஆணைக் குறிப்பது குரு – பெண்ணைக் குறிப்பது சுக்ரன்; பெண் ஜாதகத்தில் பெண்ணைக் குறிப்பது
செவ்வாய் – ஆணைக் குறிப்பது சுக்ரன். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் வக்ரம்
பெற்றிருந்தால் அவரது மண வாழ்க்கை (குடும்ப உறவு) சிறப்பாக அமையாது எனலாம்.
 குருவுக்கு ஒன்பதில் ராகு அமைந்தால் தன்னம்பிக்கையைக் குறைக்கும். ஒராயிரம் வழிகளில்
சிந்தனை தரும். தாயத்து, மந்திரக்கயிறு முதலிய வலு சேர்க்கும் உபகணங்களைத் தேடச்
செய்யும். எதிர்மறை சிந்தனகளின் உச்சமாக தற்கொலை வரை தள்ளும்.
 குரு சனி சேர்க்கை இளவயதிலேயே பொறுப்பேற்கச் செய்யும். பொருளீட்டுதல், சுய சம்பத்யம்
என்ற இலக்குகளை ஏற்படுத்தும்.
 ஒரு ஜாதகத்தில் 12 ஆம் இடத்திலுள்ள கிரகம் அல்லது பாவதிபதி இறந்தபின் உயிர் எங்கே
போகிறது என்பதை நிர்ணயிக்கிறது. 12 ஆமிடத்தில் கேது இருந்தால் ஜாதகன் மோட்சம்
அடைவானென்றும், சூரியன் இருந்தால் கைலாயம் அடைவான் என்றும் புதன் இருந்தால்
வைகுந்தம் அடைவான் எனவும் குரு இருப்பின் பிரம தேவனின் சத்திய லோகத்தை அடைவான்
என்றும் கூறப்படுகிறது. 12 ல் சனி நரகத்தைத் தரும், ராகு உடனடியாக மானிடப் பிறப்பைத்
தரும்,

திதி, கரணம், யோகம்


 திதி என்பது சூரியன் சஞ்சரிக்கும் நிலைக்கும், சந்திரன் சஞ்சரிக்கும் நிலைக்கும் இடையில்
ஏற்படும் தூரத்தின் அளவைக் குறிப்பது. உதாரணத்திற்கு அமாவாசை நாளன்று சூரியனும்
சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பர். அமாவாசை நாள் தொடங்கி பிரதமை .,
த்விதியை என்று ஒவ்வொரு நாளாக சூரியனின் பாகையிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக விலகி
பௌர்ணமி நாளன்று நேர் எதிர் பாகையில் அதாவது சூரியன் இருக்கும் பாகையில் இருந்து
சரியாக 180 வது பாகையில் சந்திரன் சஞ்சரிப்பார். இந்த சஞ்சாரத்தின் அடிப்படையில் அமைவது.
திதி.
 அதேபோன்று கரணம் என்பது திதியின் அடிப்படையில் அமைவது. திதியின் அளவை
சரிபாதியாகப் பிரித்துப் பார்ப்பது கரணம்,. கரணம் என்பது திதியில் பாதிஒரு கரணம் என்பது ஆறு
8

டிகிரி கொண்டது. மொத்தம் 11 கரணங்கள். ஒருவர் எந்த கரணத்தில் பிறந்தவர் என்பதை வைத்து
.அவரது குணத்தை அறிந்து கொள்ளலாம்.
 காலையில் ஒரு கரணமும், மாலையில் ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும்
மொத்தமாக 60 கரணங்கள் உண்டு. சந்திரனின் 16 நாட்கள் வளர்பிறை , 16 நாட்கள் தேய்பிறை
ஒருமாத காலத்தில் சந்திரனின் வளர்பிறை, தேய்பிறைக் காலங்களில் வருவது தான் கரணங்கள்.
 இக்கரணங்கள் என்பது ஒரு மாதத்தில் வரும் திதிகளில், அத்திதியின் அரைப் பகுதியாகும்.
மொத்தம 11 வகையான கரணங்கள் இருக்கின்றன. இதில் 7 கரணங்கள் ஸ்திர கரணங்கள் அதாவது
நிலையான கரணங்கள், இது ஒரு மாதத்தில் 8 முறை வரும். மீதமுள்ள 4 கரணங்கள் சர
கரணங்கள். அதாவது நகரும் கரணங்கள் இது மாதத்தில் ஒரு முறை மட்டுமே வரும்.
 அக்கரணங்களுக்குக்கான உருவமாக சில விலங்குகள், பறவைகள் உருவங்களும் ஜோதிட
சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. நீங்கள் பிறந்த நேரத்தை வைத்து உங்களுக்கான .
கரணத்தை அறியலாம். அதோடு ஒவ்வொரு கரணத்தில் பிறந்தவருக்கும் சில குணாதிசயங்கள்
இருக்கும் அது பற்றி பார்ப்போம்.
 பவம் ,பாலவம், கௌலவம், தைதுலை,கரசை ஆகியவை சுபகரணங்களாகும். வணிசை, பத்திரை,
சகுனி, சதுஷ்பாதம் , நாகவம் , கிம்ஸ்துக்னம் ஆகியவை அசுபகரணங்களாகும்.
 கரணங்கள் விலங்குகள் பவம் - சிங்கம், பாலவம் - புலி, கௌலவம் - பன்றி, தைதுளை - கழுகு, கரசை
- யானை, வணிசை- எருது, பத்தரை - கோழி, சகுனி - காக்கை, சதுஷ்பாதம் - நாய், நாகவம் - பாம்பு,
கிம்ஸ்துக்னம் - இந்த 11 கரணங்களில் ஜனிக்கும் மனிதர்கள் அந்த அந்த பறவைகள், மிருகங்களின்
குணாதிசயங்களையும், உணர்வுகளையும் தன்னகத்தே பெற்றவர்களாக இருப்பார்கள்.
 தாம்பத்திய உறவுகளில் அந்தந்த பறவை , மிருகங்களின் காம உணர்வினையே அதிகமாக
பிரதிபலிப்பார்கள். நா, நாய் குணம் கொண்டவர்களுடன் கோழி குணமோ காகம் குணமோ
கொண்டவர்களை ஜோடி சேர்த்தால் உறவு இனிக்காது தம்பதியரிடையே இதுதான் பிரிவுக்கு
காரணமாகிறது.
 விலங்குகளின் குணாதிசயங்கள் திருமணத்திற்கு ஜோடி சேர்க்கும் போது பத்துப்பொருத்தம்,
ஜாதகப்பொருத்தம் பார்ப்பது போல கரணம் பொருத்தமும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
கரணங்களுக்கும் தம்பதியர் இடையே பிரச்சினை ஏற்பட்டு திருமணம் முறிந்து போவதற்கும்
காரணம் என்ன என்று ஓசிக்கிறீர்களா அதற்கும் விளக்கம் கொடுத்துள்ளனர் ஜோதிடர்கள்.
 கோழி , நாய் , பன்றி , கழுதை , எருது , பாம்பு போன்றவைகள் எதனைப் பற்றியும் கவலையின்றி
தனது இன்பத்தினை மட்டுமே கருத்தில் கொண்டு சந்தோஷமாக இருக்கும். அதே நேரம் மற்ற
சிங்கம், புலி, யானை, காகம், புழு போன்றவைகள் தனது இன்பத்தினை யாரும் காணாதவாறு
அமைத்துக்கொள்ளும்.
 எந்த விலங்குகளுக்கு எவ்வளவு நேரம்: காமத்தில் அதிக ஈடுபாடு கொண்டதாக கோழி, நாய், பன்றி,
கழுதை, பாம்பு , புழுக்கள் இருந்தாலும் இவைகள் கலவியில் ஈடுபடும் நேரம் ஒரே மாதிரி
இல்லை. குறுகிய நேரம், நீண்ட நேரம் என மாற்றம் உடையதாக இருக்கின்றது. உதாரணமாக
கோழி அல்லது சேவலின் உறவும் , காகங்கள் உறவில் ஈடுபடுவதும் சில நொடிகளே, அதே நேரம்
நாய்,பன்றி,கழுதை,புழு போன்ற விலங்குகள் உறவில் நீண்ட நேரம் ஈடுபடும்.
 சிங்கம் புலி பவம் பால கரணத்தில் பிறந்தவர்கள் சிங்கம் பபோன்றவர்கள். இவர்கள்
எக்காரியத்திலும் பின் வாங்காத தைரியம் உடையவர். கூர்ந்து ஆராய்ச்சி செய்பவரும்.
சுகமுடையவரும், நன்னடத்தை உடையவரும். மென்மையான தலைமுடி கொண்டவர். பாலவம்
கரணத்தில் பிறந்தவர்கள் போன்றவர் சிற்றின்ப பிரியர். நீங்காத செல்வமுடையவர். அற்பத்
தொழில் முறையையுடையவர். தருமம் செய்பவரும், பிறரால் நிந்திக்கப்படாத
நற்குணமுடையவரும். தன் உறவினரைப் பேணிக்காக்கும் குணமுடையவர்.
9

 பன்றி, கழுதை : இந்த கரணத்தில் பிறந்தவர்கள் அரசாங்கப் பணியாளராக இருப்பார்கள். நல்ல


ஆச்சாரமுடையவர், பெற்றவர்கள் மீது மதிப்பு மரியாதை கொண்டிருப்பார்கள். நிலபுலன்களைச்
சம்பாதிப்பார்கள், சொத்துக்களும் வண்டி வாகன வசதியும் கொண்டிருப்பார்கள். தைதூலை
கரணத்தில் பிறந்தவர்கள் தருமம் செய்ய மாட்டார்கள். அரசாங்கத்தின் மூலம் பொருளை
பெறுவார்கள்.
 யானை - எருது - சேவல் :கரசை கரணத்தில் பிறந்தவர்கள் அரசாங்கத்தின் மூலம் பணவரவு
கிடைக்கும். எதிரிகளை எளிதில் வெல்லக்கூடியவர்கள். அனைவருக்கும் உதவக்கூடிய தரும
சிந்தனை உள்ளவர்கள். வணிசை கரணத்தில் பிறந்தவர்கள் கற்பனையான வார்த்தைகளை
பேசுவார்கள். இந்த உலகத்தோடு ஒத்து வாழமாட்டார்கள். பத்திரையில் பிறந்தவர்கள் சஞ்சல மனம்
படைத்தவர்களாக இருப்பார்கள்.
 காகம், நாய், பாம்பு,புழு : சகுனியில் பிறந்தவர்கள் காகம் போன்றவர்கள் நல்ல அறிவு உள்ளவர்கள்,
அழகானவர்கள் தைரியசாலிகள் மிகுந்த செல்வம் உடையவர்கள். நாய் குணம் கொண்ட சதுஷ்பாத
கரணத்தில் பிறந்தவர்கள் பெண் பிரியர்கள். வறுமை உடையவர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற
மாட்டார்கள். நாகவத்தில் பிறந்தவர்கள் துன்பத்தை வெல்பவர்கள். உத்தம குணம் கொண்டவர்
சுவையான உணவு உண்பவர்கள். கிம்ஸ்துகினத்தில் பிறந்தவர்கள் பெற்றோர்கள் மீது பற்று
கொண்டவர்கள். சகோதரர்கள் மீது பாசம் கொண்டவர்கள்.
 பொருத்தம் ரொம்ப முக்கியம் : ஒரு கோழி குணம் கொண்ட பத்திரை கரணத்தில்
பிறந்தவர்களுக்கும் காகத்தின் அதாவது சகுனி கரணத்தில் பிறந்த ஆண்களுக்கு உறவில் ஈடுபடும்
நேரம் என்பது குறுகிய நேரமாகவே இருக்கும். அதே நேரம் ஒரு பன்றியின் குணம் கொண்ட வம்
்தில் பிறந்தவரோ அல்லது நாயின் குணம் கொசதுஷ் கற்றணத்த்சதுஷ்்ட கொண்டசதுஷ்பாதம்
கரணத்தில் பிறந்த ஒரு பெண்ணின் கலவி பிரியமானது நீண்டநேரம் இருக்கும். எனவேதான்
பொருத்தமான கரணம் பார்த்து ஜோடி சேர்ப்பது நல்லது. இதைத்தான் கரணம் தப்பினால் மரணம்
என்று பெரியோர்கள் கூறியுள்ளனர்.
 யோகங்கள் மொத்தம் 27 ஆகும். யோகம் என்பது வானத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து
சூரியனும், சந்திரனும் செல்லுகின்ற மொத்த தூரமாகும். இந்த 27 யோகங்களும்கூட முகூர்த்தம்
எனும் நற்காரியங்கள் செய்வதற்கான நாள் தேர்வு செய்யகிழமை, நட்சத்திரம், திதி ஆகியவைப்
போன் றே பயன்படும் நான்காவது அமைப் பாகும்.
 பஞ்சாங்கம் எனும் பஞ்ச (ஐந்து) அங்கங்களில் நான்காவது அமைப்பான இதை அநேகர் கண்டு
கொள்வதே இல்லை. ஜாதக குறிப்பில் ஜனன வாக்கியத்தில் பலர் இதையும் சேர்த்து
குறிப்பிட்டாலும், முகூர்த்த அடிப்படையில் நல்ல நாள் தேர்வு செய்யும்போது நான்காவதான இந்த
நித்திய நாம யோகமும் அடங்கும் என்பதை மறந்து விடுகி ன்றார்கள்.
 27 யோகங்களில் விஷ்கம்பம், அதிகண்டம், சூலம், கண்டம், வியாகாதம், வஞ்ரம், வியதீபாதம், பரிகம்,
வைதீருதி என்பவை தவிர்க்க வேண்டிய யோக நாட்கள் ஆகும்.

திருமணம் எப்போது?

சந் செ ல/ சூரி
கேது புத

சனி சுக்
10

ராசி

குரு
ராகு

பிறந்த தேதி: 03.07.1994 நடப்பு தசை: சூரிய தசை புதன் புத்தி வயது 27 ஜாதகப்படி

 இரண்டு ஐந்தாம் ஸ்தான அதிபதி புதன் லக்னத்தில் அமர்வு நல்லதே.


 குரு தன் பகை வீட்டில் இருந்து ஒன்பதாம் பார்வையாக மிதுனத்திலுள்ள சூரியனைப் பார்க்கிறார்.
 சூரிய தசை புதன் புத்தி திருமணத்தைக் கொடுக்கும்.
 2021 ஆகஸ்ட் மாதம் திருமணம் நடக்கும்.
 புதன் லக்னத்திலிருந்து 7 ஆம் பார்வையாக விருச்சிகத்தைப் பார்க்கிறார். அதன் அதிபதி செவ்வாய்
12 ஆம் இடத்திலிருந்து 3 ஆமிடத்திலுள்ள சுக்கிரனை 4 ஆம் பார்வையாக பார்க்கிறார்.
செவ்வாயை குரு 7 ஆம் பார்வையில் பார்க்கிறார். ஆகவே தெரிந்த அறிமுகமான பெண்ணே
வாய்ப்பார். ஒருவகையில் சொந்தமுள்ள பெண் வரலாம்.

பிரசன்னம் பார்த்தல் பரணி பாரதி 9842895099

 தொகுப்பு 1 3 7 11 தொகுப்பு 2 4 9 6 10 தொகுப்பு 5 9 தொகுப்பு 8 12


 1 ஒருவருடைய தனிப்பட்ட கேள்வி
 3 இடமாற்றம், ஒப்பந்தம்,
 7 திருமணம்
 11 ஆசை, லட்சியம், குறிக்கோள் 1 3 7 11 அன்பு + பணம்
 2 பணம், பேச்சு 4 வீடு, தாய், வாகனம் 6 வேலை, கடன், வெற்றி 10 தொழில், அரசியல்
 5 பிள்ளைப் பேறு, நோய் குணமாதல் 9 கோயில் 5 9 அன்பு சார்ந்தவை மட்டும்
 8 12 பிரச்சினை, தோல்வி, அவமானம், சண்டை, சச்சரவு
 மேற்கண்ட 1 – 12 வரையுள்ள எண்களுக்கு கூறப்பட்ட குறிப்புகள் மனதில் நிற்க வேண்டும்.
 கேள்வி கேட்கப்படும் நேரத்தைக் கொண்டு பலன் சொல்ல வேண்டும். கேள்வி கேட்கப்படும்
நேரத்தில் உள்ள மணி தசையையும் நிமிடம் புத்தியையும் குறிப்பவை. எப்போதும் புத்தியே
வலியது. ஆகவே புத்தியைக் கொண்டே பலன் தரப்படுகிறது.
 கேள்வியை மனதில் உள்வாங்கி, கேள்வி கேட்ட நேரத்தின் நிமிடத்தை ஒற்றை இலக்கமாக (6.32
3+2=5) ஆக்கி, 1-12 வரையுள்ள எண்களில் நிமிடத்தை சுட்டும் எண் எந்தப் பொருளைக் காட்டுகிறதோ
அதை வைத்துப் பலன் சொல்ல வேண்டும்.
 காலை 6.30 க்கு கேள்வி – இடத்தை விற்றுவிடலாமா? நிமிடம் 30 ஐ 3 ஆகக் கொண்டு 3
இடமாற்றத்தைக் குறிப்பதால் விற்று விடலாம் என பதில் தரலாம்.
 அதே கேள்வி காலை 6.32 க்கு கேட்கப்பட்டால் நிமிடம் 32 ஐ 3+2 5 எனக் கொண்டு 5 ஐப்
பார்க்கையில் அது அன்பு நோய் குணமாதலைக் குறிப்பதால், விற்றால் பணம் தேறாது, தற்போது
விற்பது அவ்வளவு நல்லதல்ல என சொல்ல வேண்டும்.
 காலை 8.15 க்கு பெண் பார்க்கப் போகலாமா? இந்தத் திருமணம் நடக்குமா? என்ற கேள்வி வருகிறது.
நிமிடம் 15 ஐ கூட்ட 6 வருகிறது. குறிப்பில் 6 பணத்தைக் காட்டுகிறது. திருமணம் என்றால் 7
11

வரவேண்டும். ஆனால் 6 வந்திருக்கிறது. 6 என்பது 7 க்கு 12 ல் வருகிறது. 7 க்கு 6 12 ல் வருகிறது. 12


தோல்வி அவமானத்தைக் குறிக்கிறது. ஆகவே இது சாதகமாக அமையாது எனலாம்.
 இதே கேள்வி காலை 7.07 க்கு கேட்டால் நிமிடம் 7 திருமணத்தைக் காட்டுவதால் அமையும்
எனலாம்.
 1 3 5 7 9 11 ஆகிய அனத்துமே அன்புக்கு முதலிடம் தருபவை 2 4 6 8 10 12 இவை அனைத்துமே
முடிந்தவரை பணத்திற்கு முக்கியத்துவம் தருபவை.
 இரவு 12.05 க்கு மீளாத கடனில் சிக்கித் தவிப்பவர் கேட்கிறார் என் கடன் தீருமா? தீராதா? நிமிடம்
5 ஐ காட்டுகிறது. பணம், கடன் ஆகியவற்றைக் குறிப்பது 6. 5 ஐ நேரம் காட்டுவதால் கடன் தீரும்
என்று பதில் தரலாம்.
 இதே 12.05 க்கு என் சொந்தக்காரர் ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம்,
குணமாவாரா? என்று கேட்டால் எண் 6 நோயையும் 5 குணமாவதையும் குறிப்பதால் நலமடைவார்,
அழைத்துச் செல்லுங்கள் என்று கூறலாம்.
 காலை 10.16 க்கு கொடுத்த கடன் மீளுமா? கேள்வி. 7 அன்பு+ பணம்; ஆகவே பாதி கிடைக்க
வாய்ப்புண்டு என்று கூறலாம். இதே கேள்வி காலை 10.22 க்கு; நிமிடம் 2+2 4 ஐக் காட்டுவதால் 4
பணத்தை குறிப்பதால் பணம் கிடைக்கும் என்றே சொல்லலாம்.
 இதே கேள்வி காலை 10.32 க்கு; எண் 5 அன்பைக் குறிப்பது, எனவே பணம் வராது என்றே கூறலாம்.
இதே கேள்வி பகல் 1.08 க்கு; 8 பிரச்னை, தோல்வி, அவமானம் ஆகியவற்றைக் காட்டுவதால்
இவற்றை சந்தித்து ஒருவேளை கொஞ்ச பணம் பெற வாய்ப்பு உண்டு. மதியம் 1.48 க்கு இப்படி
கேள்வி வந்தாலும் இதே பதில் தான்.
 இந்த பிரசன்னத்தை அனைவரும் கையாளலாம்.

நட்பு, பகை, சமம் 96882 07070 99657 48565 புதுக்கோட்டை

 பொதுவாக யாரிடம் பகை வருகிறது என்று பார்த்தால் இளைய சகோதரம் 3, விரோதிகள் 6,


மனைவி 7, தொழில் 10, நண்பர்கள், மூத்த சகோதரம் 11.
 பகை ஸ்தானங்கள் 3 6 7 10 11. மீதமுள்ள 1 2 4 8 9 12 இடங்கள் நட்பு;
 விதிகள் ஒரு உச்சம் ஒரு நட்பு என்றால் நட்பு, உச்சம் + பகை = சமம்; நட்பு + பகை = சமம்; நீசம் +
நட்பு = நட்பு; நீசம் + பகை = சமம்; பகை + பகை = பகை.
 மூலத்திரிகோணம் சூரியன் – சிம்மம், சந்திரன் – ரிஷபம், செவ்வாய் - மேஷம் புதன் – கன்னி, குரு –
தனுசு, சுக்கிரன் – துலாம், சனி – கும்பம் ;
 புதன் கிரகம் கன்னி ராசி பெண் ராசியில் மூலத்திரிகோணம் பெறும். மற்ற சூரியன், சுக்கிரன்,
சந்திரன், செவ்வாய், குரு, சனி ஆகிய கிரகங்கள் ஆண் ராசிகளில் மூலத்திரிகோணம் பெறும்.
(ராகுவிற்கு - கன்னி கேதுவிற்கு – மீனம்)

8 நட்பு 9 உச் 10 பகை 11 சமம்


நட்பு

7 பகை பகை 3 6 7 10 11 12 சமம்


நட்பு 1 2 4 5 8 9 12

6 பகை சூரியன்
சூரியன்
மூலத்
ஆட்சி 1
12

5 நட்பு 4 நட்பு 3 நீசம், 2 சமம்

 2 ஆமிடம் புதன் 2 ல் நட்பு 11 ல் பகை நட்பு + பகை = சமம் சூரியனுக்கு புதன் சமம்.
 3 ஆமிடம் சுக்ரன் 3 ல் நீசம் 10 ல் பகை நீசம் + பகை = சமம்; சூரியனுக்கு சுக்ரன் சமம்.
 4 ஆமிடம் செவ்வாய் 4 ல் நட்பு 9 ல் உச்சம் உச்சம் + நட்பு = நட்பு, சூரியனுக்கு செவ்வாய் நட்பு.
 5 ஆமிடம் குரு 5 மற்றும் 8 ல் நட்பு சூரியனுக்கு குரு நட்பு.
 6 ஆமிடம் சனி 6 மற்றும் 7 ல் பகை சூரியனுக்கு சனி பகை.
 12 ஆமிடம் சந்திரன் நட்பு ஆனாலும் ஞானிகள் அதை சமம் என்று குறித்துள்ளனர் - விதிவிலக்கு

11 சமம் 12 சமம் உச்சம் 1 2 நட்பு


சந் மூல

10 சமம் பகை 3 6 7 10 11 3 ஆட்சி


நட்பு 1 2 4 5 8 9 12

9 சமம் 4 நட்பு
சந்திரன்

8 சமம் 7 நீசம் 6 சமம் 5 நட்பு

 சந்திரன் மூலத்திரிகோணம் அடைவது ரிஷபத்தில் ஆகவே அது 1 வது இடம்.


 2 ஆமிடம் புதன் 2, 5 க்குரியவர்; 2 லும் 5 லும் நட்பு சந்திரனுக்கு புதன் நட்பு.
 4 ஆமிடம் சூரியன் விதிப்படி 4 ஆமிடம் நட்பு சந்திரனுக்கு சூரியன் நட்பு.
 6 ஆமிடம் சுக்ரன் 1 6 க்குரியவர் 1 ல் உச்சம் 6 ல் பகை உச்சம் + பகை = சமம். ஆறாமிடம் சமம்.
 7 ஆமிடம் செவ்வாய், 7 12 க்குடையவர், 7 ல் பகை 12 ல் நட்பு, பகை + நட்பு = சமம்.
 8 ஆமிடம் குரு, 8 11 க்குரியவர், 8 ல் நட்பு, 11 ல் பகை, பகை + நட்பு = சமம்.
 9 ஆமிடம் சனி, 9 10 க்குடையவர் 9 ல் நட்பு, 10 ல் பகை, பகை + நட்பு = சமம்

7 நீசம் 8 சமம் 9 நட்பு 10 ஆ


சமம்

6 சமம் பகை 3 6 7 10 11 11
நட்பு 1 2 4 5 89 சமம்

5 சமம் 12 12
புதன் நட்பு

4 சமம் 3 சமம் 2 நட்பு 1 உச்


ஆட்சி
மூல

 புதன் கிரகத்தின் மூலத்திரிகோணம் கன்னி ராசி ஆகவே அது 1 வது இடம்.


 2 ஆமிடம் சுக்ரன், 2 9 க்குரியவர் 2 லும் 9 லும் நட்பு ஆகவே 2 9 நட்பு
 3 ஆமிடம் செவ்வாய் 3 8 க்குரியவர், 3 ல் பகை 9 ல் நட்பு, பகை + நட்பு = சமம்.
 4 ஆமிடம் குரு, 4 7 க்குரியவர், 4 ல் நட்பு, 7 ல் பகை. பகை + நட்பு = சமம்.
 5 ஆமிடம் சனி, 5 6 க்குடையவர், 5 ல் நட்பு, 6 ல் பகை, பகை + நட்பு = சமம்.
 12 ஆமிடம் சூரியன், 12 ஆமிடம் நட்பு.
 11 ஆமிடம் சந்திரன், 11 ல் பகை
13

12 நட்பு 1 மூல 2 சமம் 3 பகை


ஆட்சி

11 சமம் பகை 3 6 7 10 11 4 நீசம்


நட்பு 1 2 4 5 8 9 12

10 உச்ச 5 நட்பு
செவ்வாய்
சமம்

9 நட்பு 8 ஆட்சி 7 சமம் 6 பகை

 2 ஆமிடம் சுக்ரன், 2 7 க்குரியவர், 2 ல் நட்பு, 7 ல் பகை, நட்பு + பகை = சமம்.


 3 ஆமிடம் புதன், 3 6 க்குரியவர், 3 மற்றும் 6 ல் பகை, ஆகவே பகை.
 4 ஆமிடம் சந்திரன் நீசம்.
 5 ஆமிடம் சூரியன் நட்பு,
 9 ஆமிடம் குரு 9 12 க்குரியவர், 9 ல் நட்பு, 11 ல் பகை, நட்பு + பகை = சமம்.
 10 ஆமிடம் சனி, 10 11 க்குரியவர், 10 ல் உச்சம், 11 ல் பகை, உச்சம் + பகை = சமம்.

6 உச் 7 சமம் 8ஆ 9 நட்பு


சமம்

5 நட்பு பகை 3 6 7 10 11 10 பகை


நட்பு 1 2 4 5 8 9 12

4 நட்பு சுக்ரன் 11 பகை

3 சமம் 2 சமம் 1 சு ஆ 12 நீச


மூல நட்பு

 2 ஆமிடம் செவ்வாய், 2 7 க்குரியது, 2 ல் நட்பு, 7 ல் பகை, நட்பு + பகை = சமம்.


 3 ஆமிடம் குரு, 3 6 க்குரியது, 3 ல் பகை, 6 ல் உச்சம், பகை + உச்சம் = சமம்.
 4 ஆமிடம் சனி, 4 5 க்குரியது, 4 ல் நட்பு, 5 ல் நட்பு, ஆகவே நட்பு.
 9 ஆமிடம் புதன், 9 12 க்குரியது, 9 ல் நட்பு, 12 ல் நீச்சம், நட்பு + நீச்சம் = நட்பு.
 10 ஆமிடம் சந்திரன், 10 ல் பகை

4ஆ 5 நட்பு 6 பகை 7 பகை

3 சமம் பகை 3 6 7 10 11 8 உச்


நட்பு 1 2 4 5 8 9 12

2 சமம் குரு 9 நட்பு


நீச்

1 மூல 12 நட்பு 11 பகை 10 பகை


 2 ஆமிடம் சனி, 2 3 க்குரியது, 2 ல் நட்பு, 3 ல் பகை, நட்பு + பகை = சமம்.


 5 ஆமிடம் செவ்வாய், 5 12 க்குரியது, 5 12 இரண்டிலும் நட்பு.
 6 ஆமிடம் சுக்ரன், 6 11 க்குரியது, இரண்டிலும் பகை.
 7 ஆமிடம் புதன், 7 10 க்குரியது, இரண்டிலும் பகை.
14

2 சமம் 3 நீ சமம் 4 நட்பு 5 நட்பு

1 மூல பகை 3 6 7 10 11 6 பகை


ஆ நட்பு 1 2 4 5 8 9 12

12 ஆ சனி 7 பகை

11 சமம் 10 சமம் 9 உச் 8 நட்பு


நட்பு

 2 ஆமிடம் குரு, 2 11 க்குரியது, 2 ல் நட்பு, 11 ல் பகை, நட்பு + பகை = சமம்.


 3 ஆமிடம் செவ்வாய், 3 10 க்குரியது, 3 ல் நீச்சம், 10 ல் பகை, நீச்சம் + பகை = சமம்.
 4 ஆமிடம் சுக்ரன், 4 9 க்குரியது, 4 9 இரண்டிலும் நட்பு.
 5 ஆமிடம் புதன், 5 8 க்குரியது, 5 8 இரண்டிலும் நட்பு.
 6 ஆமிடம் சந்திரன், 6 ல் பகை.
 7 ஆமிடம் சூரியன், 7 ல் பகை.

அஸ்தங்கம்
சூரியனிலிருந்து சந்திரன் பனிரெண்டு, செவ்வாய் பதினேழு, புதன் பதின்மூன்று, குரு பதினொன்று,
சுக்கிரன் ஒன்பது, சனி பதினைந்து பாகைக்குள் வரும்போது அஸ்தங்கம் அடையும்.

கிரக யுத்தம்
சூரியன் சந்திரனைத் தவிர்த்து மற்ற கிரகங்கள் ஒன்றுக்கொன்று ஒரு பாகைக்குள் வரும்போது யுத்தம்
அடையும். மற்ற கிரகங்களில் வடக்கில் உள்ள கிரகம் வெற்றி அடையும்.

பலன் கூற தெரிந்துக் கொள்ள வேண்டியவை


1. ஒரு ஜாதகர் அளித்த பிறப்பு குறிப்புகளின்படி, ஜாதகக் கட்டங்களை அமைத்து, அது ஆண் / பெண்
ஜாதகமா என அறிதல்.
2. ராசி, அம்சம், சர்வாஷ்டக ஜாதக கட்டம் அமைத்தல்.
3. குலதெய்வம் சாதாரண அபிஷேக ஆராதனை செய்து கும்பிடும் தெய்வமா, குலதெய்வம், பலிகவர்
தெய்வமா, குலதெய்வம், பொங்கல் வைத்து படையல் போடும் தெய்வமா என அறிதல்.
4. யோகாதிபதி, பாக்கியாதிபதி, ரோகாதிபதி, பாதகாதிபதி, மாரகாதிபதி அறிதல்.
5. D -16 எனும் சோதாம்ச சக்கரம் மூலம், ஜாதகர் அணியும் ஆடையின் நிறம், மற்றும் வண்டி / வாகன நிறம்
அறிதல்.
6. யோகமான நட்சத்திரம் மற்றும் அவயோகமான நட்சத்திரம் அறிதல்.
7. அஸ்தங்கம், வக்கிரம், வர்கோத்தமம், உச்சம், நீச்சம் போன்ற கிரக நிலைகளை அறிதல்.
8. சர்வாஷ்டக நிலை அறிதல்... அறிந்து, பொதுவான ஜாதகர் குணாதிசயம், மற்றும் இப்பிறவியில் ஜாதகர்,
பெறும் நன்மை, தீமைகள் அறிதல்.
9. எந்தெந்த வருடங்கள் சிறப்பாக இருக்கும். எந்தெந்த வருடங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என
அறிந்து தெரிவித்தல்.
15

10. ஆணாக இருப்பின் பீஜ ஸ்புடம் மூலம், மலட்டுத் தன்மை அறிதல்.


11. பெண்ணாக இருப்பின் குழந்தை பெறும் நிலை உள்ளதா என, ஷேத்திர ஸ்புடம் மூலம் அறிதல்.
12. கிரகங்களின் ஷட்பலம் அறிதல்.
13. கிரகங்களின் சரியான, அவை வீற்றிருக்கும் பாகை அறிதல்.
14. கிரகங்கள் நிற்கும் நக்ஷத்திர பாத சாரங்கள் அறிந்து, அவற்றின் நவாம்ச நிலையை அறிதல்.
15. ஜாதகம் பார்க்கும்போதுள்ள, கிரகங்களின் கோசார நிலை அறிதல்.
16. நடக்கும், தசை / புத்தி அறிந்து அவை, ஜாதகருக்கு சாதகமா அல்லது பாதகமா என அறிதல்.
17. பல்வேறு ஜோதிட விதிகளைக் கொண்டு, திருமணம் நேரம் அறிதல்.
18. கால சக்கரம் அமைப்பு மூலம், ஜாதகருக்குண்டான தெய்வ சாபம், மரண / கண்டம் தரும் கிரகங்களை
அறிதல்.
19. கால சக்கரம் மூலம், ஜாதகர் பெறும் சிரமங்கள், அலைச்சல்கள் தரும் கிரகங்களை அறிதல்.
20. ஜாதகரை வழிநடத்தும், ஆத்மகாரகர்கள் மற்றும் அமித்திய காரகர் அறிதல்.
21. லக்கினம் நிற்கும் திரேக்காண பலன் அறிதல்.
22. நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டா / இல்லையா என சதுர் ஸ்புடம் மூலம் அறிதல்.
23. இது தவிர, ஜாதகரின் கேள்விகளுக்கு ஏற்ப தகுந்த பதில் அளிக்க, ஜோதிட விதிகளை ஆராய்தல், பாவ
தொடர்புகள் நிலை மூலம் அறிதல். மேற்சொன்ன அத்தனைக்கும் தேவையான பரிகார முறைகளை
அளித்தல்.

ஜோதிடம் பலிக்காது –யாருக்கு?


நவக்கிரகங்களில் ஐந்து கிரகங்கள் ஒன்று சேர்ந்து ஏதாவது ஒரு பாவத்தில் நின்றால், அவர்களுக்கு
ஜாதகம் பலிதமாகாது.
* ஐந்து அல்லது ஆறு கிரகங்கள் நீசம் பெற்று இருந்தால், வாழ்வில் பிச்சையெடுத்துக் கொண்டு, சாலை
ஓரங்களில், சாக்கடை ஓரங்களில் வாழும் நிலை உண்டாகும். இத்தகைய அமைப்பு உள்ளவர்களுக்கும்
ஜோதிடம் பலிக்காது..
* ஐந்து அல்லது ஆறு கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தாலும், ஜோதிடம் பலிக்காது.
* லக்னத்துக்கு பாதகாதிபதியின் நட்சத்திர சாரத்தில் 5 அல்லது 6 கிரகங்கள் என்று இருந்தால் வாழ்வில்
வறுமை நிலையே நீடிக்கும். இவர்களுக்கு ஜோதிடம் பலிக்காது.
* கேதுவுடன் நான்கு கிரகங்கள் சேர்ந்து, ராகுவுடன் மூன்று கிரகங்கள் சேர்ந்து இருந்தாலும் வாழ்வில்
கஷ்டம் தவிர, சுகம் அனுபவிக்க முடியாத நிலையே உருவாகும். இவர்களுக்கும் ஜாதகம் சொன்னால்
பலிதம் ஆகாது.
இவர்களுக்கு நல்ல வாக்கு, நல்ல அறிவுரைகள் என எது சொன்னாலும் கேட்க மாட்டார்கள். ஏன்,
முறையான வசதி வாய்ப்புகளைச் செய்து கொடுத்தால்கூட பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.
* அஷ்டமி திதியில் பிறந்து, சூரியன்-சந்திரன்-குரு-செவ்வாய்-சனி ஆகிய ஐந்து கிரகங்கள் ஒரே பாவத்தில்
நின்று இருந்தாலும், அல்லது இவர்கள் அனைவரும் ராகு கேது நட்சத்திர சாரம் பெற்றாலும், இவர்களுக்கு
ஜோதிடம் பலிதம் ஆகாது.

சர்வாஷ்டக பரல்கள்
உலகில் அனைவருக்கும் உள்ள மொத்த சர்வாஷ்டக பரல்கள் 337 மட்டுமே அதை 12 ஆல் (ராசிகளால்)
வகுத்தால் சராசரியாக 28 வரும். சராசரிக்கும் மேலே கூடுதலாக இரண்டு பரல்களுடன் - அதாவது 30
பரல்கள் மூன்று வீடுகளில் (லக்கினம், 5 ஆம் வீடு, 9 ஆம் வீடு... ) - அல்லது ஒன்றிலாவது இருத்தல் நல்லது.
16

அதோடு ஒரு கிரகத்தின் தனிப்பட்ட வலிமைக்குரிய பரல்கள் எட்டு. நான்கு என்பது சராசரி. 4 ற்கு மேற்பட்ட
பரல்களுடன் அந்த கிரகம் (அதிபதி) இருந்தால் நல்லது.

1. நவாம்ச சக்கரத்தில், சனி அம்சமாகிய மகர, கும்பங்களில் ஒன்றில் சனி இருந்தாலும், அல்லது
இராசியிலுள்ள சந்திரனை சனி பார்த்தாலும், பிரசவ அறை இருட்டாக இருக்கும். ஆனால் இக்காலத்தில்,
மேற்கூறப்பட்டவாறு அமைந்தாலும், அவசரக்கால விளக்குகள் அல்லது மாறுதிசை மின்னோட்டம் (INVERTER)
பயன்படுத்தினாலும் அந்த அறையானது, இயற்கையிலேயே, நிச்சயம் இருள் கவ்வியதாக இருக்கும்.

2. குழந்தையின் பிறப்பின் நிலையை அறிய முடியும். எந்த லக்கினத்தில் குழந்தை பிறந்ததோ, அந்த
லக்கினத்தின் தொடக்கத்தில் 10 பாகைக்குள் இருந்தால், அக்குழந்தையின் பிரசவ காலத்தில், எந்தவிதமான
துன்பமும் இல்லாமல் பிறந்திருக்கும் எனலாம். அதே சமயம் அந்த லக்கினத்தின் 29-30 பாகைக்குள்
குழந்தை பிறந்திருந்தால், அக்குழந்தை பிறக்கும் போது பிரசவம் கடினமானதாக இருக்கும்.

3. ஜென்ம லக்கினம் முதல் சந்திரன் இருக்கும் வீடு வரை எண்ணி அவற்றில் எத்தனை கோள்கள்
இருக்கிறதோ அத்தனை பேர் பிரசவம் ஆகும் நேரத்தில் அருகில் இருப்பார்கள்.

4. லக்கினத்தை, நற்கோள்கள் பார்த்தால், தாய்க்கு எவ்வித துன்பமும் இன்றி குழந்தை பிறந்திருக்கும்.


அதேசமயம், லக்கினத்தை, சனி, செவ்வாய் பார்த்தால், தாய் துன்புற்றுக் குழந்தை பெற்றிருப்பாள் எனலாம்.

5. ஒரு குழந்தையின் ஜனன லக்கினத்திற்கும், சந்திரனுக்கும் இடையில் / நடுவில் சனி இருந்தாலும்,


பார்த்தாலும் தலை நரைத்துப்போன, கருத்த நிறத்துடையவள், தாய் பிரசவிக்கும் காலத்தில் அருகே
இருப்பாள். அதே சமயம், செவ்வாய் இருந்தாலும், பார்த்தாலும், சிவப்பு நிறமான இளம் வயதுடைய
விதவைப்பெண் அருகில் இருப்பாள்.

ஒருவர் பிறந்து ஜாதகம் பார்ப்பதற்கு 12 வருடங்களுக்குப் பிறகு பார்த்தால் தான் சரியாக இருக்கும்.
ஏனென்றால் 12 வயதில்தான் ஜனன கால ஜாதகத்தில் இருக்கும் குருவோடு கோச்சார குரு சேர்வார். (12
ராசிகளைக் கடந்து ஜனன கால குருவோடு, கோச்சார குரு சேர்வார்.) எனவே பனிரெண்டு வயதிலே தான்
மிக முக்கியமான நிகழ்வுகள் நிகழும். அதற்கு முன்னதாக அவசியம் பார்க்க வேண்டுமானால், அந்த
குழந்தை (ஜாதகர்), ஏதேனும் நோய்வாய்ப்பட்டிருந்தாலோ அல்லது பிரச்னை ஏதேனும் இருந்தாலோ,
ஜாதகம் பார்க்கலாம். அது பாலாரிஷ்டம் சம்பந்தம் உள்ளதாக இருக்கக்கூடும்.

இவை அனைத்தும் ரிஷிகளால், கூறப்பட்டு அதற்கடுத்து வந்த ஜோதிட விற்பன்னர்களால் ஆய்வு


செய்யப்பட்டு, நமது மனித சமுதாயத்திற்கு நலம் சேர்க்க வந்தவை என்றால், அது மிகை ஆகாது. இது
போன்ற தகவல்கள், ஒருவரின் ஜாதகத்தைத் துல்லியமாக அறிந்து மேற்கொண்டு பலன் காண
வழிவகுக்கும்.

புத்திர பாக்யம்

ஜனன ஜாதகத்தில் இலக்னத்தில் இருந்து / சந்திரனில் இருந்து 5 ஆம் இடம், பஞ்சமாதிபதி, அவரின் பலம்,
காரகர் குருவின் நிலை, ஆணுக்கு பீஜ ஸ்புடமும், பெண்ணுக்கு க்ஷேத்திர ஸ்புடமும் மற்றும் பார்வை
நிலைகளும் ஆராயப்பட வேண்டும். குழந்தைப் பேறுக்கான காலத்தை தசா/புத்தி, கோசார நிலைகளை
ஆராய்ந்து அறிவித்தல் வேண்டும்.
17

புத்திர பாக்கியத்துக்கான காரணிகள் –

1. 5 ஆம் வீடு, பஞ்சமாதிபதி மற்றும் குரு, சுபரின் பார்வை.


2. பலம் மிக்க இலக்னதிபதி. 5 ல் அமரவும்
3. பலம் மிக்க காரகர் குரு, பஞ்சமாதிபதி ஆகியோர் பலம்மிக்க இலக்னாதிபதியால் பார்க்கப்படவும்.
4. குரு மற்றும் பஞ்சமாதிபதி பத்து வர்க்கக் கட்டங்களில் இருக்கும் வைஷேஷிகாம்ச நிலையும்.
5. இலக்னாதிபதி மற்றும் பஞ்சமாதிபதிகளின் இணைவு, பரஸ்பர பார்வை, பரிவர்த்தனை நிலைகள்.
6. இலக்னாதிபதி மற்றும் பஞ்சமாதிபதி கேந்திரங்களில் இருக்கவும், 5 ஆம் அதிபதி பலம்
கொண்டவராய் ஐந்தாமிடத்தில் இருக்கவும்
7. பஞ்சமாதிபதியின் நவாம்சாதிபதி நல்ல நிலையில் இருக்க, நல்ல பார்வை பெற.
8. இலக்னாதிபதியும, பாக்கியாதிபதியும், களத்திர பாவத்தில் இருக்கவும், குடும்பாதிபதி இலக்னத்தில்
இருக்கவும்.
9. களத்திர பாவாதிபதியின், நவாம்சாதிபதி ஆனவர், இலக்னாதிபதி, பாக்கியாதிபதி அல்லது
குடும்பாதிபதியால் பார்க்கபடுதலும் ஆகியவை குழந்தைப் பிறப்புக்கான நல்ல நிலைகள் ஆகும்.
பலதீபிகாவில் பீஜ ஸ்புடம் மற்றும் க்ஷேத்திர ஸ்புடங்களைக் கணக்கிடும் வழிமுறைகள்
கொடுக்கப்பட்டுள்ளன. பெண்ணைப் பொறுத்தவரை, அவர்கள் ஜாதகத்திலுள்ள சந்திரனின், செவ்வாயின்,
குருவின் ஸ்புடங்களைக் கூட்டி 360 ஆல் வகுத்துக்குக் கிடைக்கும் மீதி இரட்டைப்படை இராசி,
இரட்டைப்படை நவாம்சத்தில் அமைந்தால் பெண்ணுக்கான புத்திர பாக்கிய / உற்பத்தி தகுதி உறுதி
செய்யப்படுகிறது. ஆனால், இவை இராசியில் ஆண் இராசியாகவும், நவாம்சத்தில் பெண் இராசியாகவும்
மாறி அமைந்தால், மிகுந்த சிரமங்களுக்குப் பிறகே அவள் புத்திர பாக்கியத்தை அடைவாள்.
பீஜ ஸ்புடம் காண – (ஆண்கள்) ஆணின் ஜாதகத்தில் சூரியன், சுக்கிரன், குரு ஆகியவர்களின்
ஸ்புடங்களைக் கூட்டி 360 ஆல் வகுத்துக்குக் கிடைக்கும் மீதி ஒற்றைப்படை இராசி, ஒற்றைப்படை
நவாம்சத்தில் அமைந்தால் ஆணுக்கான புத்திர பாக்கிய / உற்பத்தி தகுதி உறுதி செய்யப்படுகிறது. ஏதாவது
ஒன்று மாறி அமைந்தால் மிகுந்த சிரமங்களுக்குப் பிறகே அவன் புத்திர பாக்கியத்தை அடைவான்.

ஆணுக்கான பீஜமும், பெண்ணுக்கான க்ஷேத்திரமும் பலம் குறைந்து காணப்பட்டால் தாமதப்படும்.


அதற்கான மருத்துவ உதவி, பரிகாரச் செயல்பாடுகள் அவசியப்படலாம்.

பீஜ ஸ்புடமும், க்ஷேத்திர ஸ்புடமும் கணக்கிடும் போது முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய


நிலைகள் – எந்த இராசியில் இந்த ஸ்புடங்கள் விழுகிறதோ, அதற்கு இணையான இராசிகளை
நவாம்சத்திலும், சப்தாம்சத்திலும் பார்ப்பது இதற்கான சாதக நிலைகளை அதிகரிக்கும் எனக் கொள்ளலாம்.
இந்த ஸ்புட நிலைகள் 6, 8, 12 அல்லது நீச, அஸ்தமன, பாப கர்தாரி நிலைகள், அல்லது அசுபரால்
பாதிக்கப்பட்ட நிலைகள் இருப்பின் அது குழந்தைப் பேற்றுக்கு நல்லதல்ல. இந்த ஸ்புடங்கள் விழுந்துள்ள
இடங்களின் அதிபதிகள், இந்த இராசிகளைப் பார்க்கின், அது நல்ல நிலையாகக் கருதலாம்.

உதாரண ஜாதகம் – 1 –

பீஜ ஸ்புட கணிதம். ஜாதகரின் திருமண நாள் – ஜூலை 2008 – புத்திரன் பிறந்த்து – ஜூன் – 2016.
சூரியன் + சுக்கிரன் + குரு பாகைள் = 323º . 50’ + 296º . 58’ + 125º . 23’ = 746º . 11’ – இதை 360 ஆல் வகுக்க மீதி
26º.11’ = மேஷம் – பரணி – 4 ஆம் பாதம்.

சப்தாம்சத்திலும், நவாம்சத்திலும் பீஜ ஸ்புடமானது முறையே துலாத்திலும், விருச்சிகத்திலும்


விழுகின்றன.
18

இராசிக் கட்டத்தில் பீஜ ஸ்புடம் ஒற்றைபடை இராசியான மேஷத்தில் இருப்பது நல்லது. நவாம்சத்தில்
இரட்டைப் படை இராசியான விருச்சிகத்தில் அமைவது நல்லதல்ல. சப்தாம்சத்தில் (துலாம்)
ஒற்றைப்படை இராசியில் இருப்பது நல்லதே.

சனி,செவ் சந் இராகு சந்


ராகு

சூரி கணவன்.7 மாரச்1968 செவ் லக்//


323º.50’ 11-43 இரவு.பால்காட் சூரி
சப்தாம்சம்
சுக்-296º.59’ இராசி குரு புத,சுக்
புத 125º.23’ சனி

லக்// கேது குரு


கேது

இராகு குரு,சூரி

செவ் நவாம்சம்

சனி லக்//,சந்
புத,கேது,சுக்.

இராசிக் கட்டத்தில் இலக்னாதிபதி செவ்வாய் 5 ஆம் வீட்டிலும், பாக்கியாதிபதி சந்திரன் உச்ச


நிலையிலும் உள்ளனர். நவாம்சத்தில், களத்திர பாவாதிபதி சுக்கிரனுக்கு இடம் கொடுத்தவன் புதன் ஆவார்.
9 ஆம் அதிபதி சந்திரனால் இலக்னம் பார்க்கப்படுகிறது. நவாம்சத்தில் இலக்னாதிபதி புதன் சுபரோடு
இருக்கிறார். சப்தாம்சத்தில் இலக்னாதிபதி சந்திரன் உச்சம். பீஜ ஸ்புடம் இராசிக் கட்டத்திலும்,
சப்தாம்சத்திலும் ஒற்றைப்படை இராசியில் இடம்பெற்றுள்ளது. எனவே, இது தாமதமான குழந்தைப்
பிறப்புக்குக் காரணமாகிறது. பரிகாரம் மற்றும் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகே குழந்தை பிறந்தது. சனி
மகா திசா, சுக்கிர புக்தியில் – கோசார குரு, ஜாதக குருவைக் கடந்த போது புத்திரன் பிறந்தான்.

மனைவி ஜாதகம் – க்ஷேத்திர ஸ்புட கணிதம் –

சந்திரன்+ செவ்வாய் + குரு பாகைகள் கூட்ட 110º.18’ + 02º.25’ + 282º.29 = 395º.12’. இதை 360 ஆல் வகுக்க
மீதி 35º.12’. இது ரிஷப இராசியில் (இரட்டைப்படை) விழுகிறது. கார்த்திகை – 3 ஆம் பாதம். சப்தாம்சம்
மற்றும் நவாம்சத்தில் முறையே தனுசுவிலும், கும்பத்திலும் விழுகிறது.

லக்// ச சுக்,செ சந்,


செவ் னி வ் சூரி
கே
து
19

இராசி சந் புத கே


மனைவி- து
16-11-1973
கு ரா ச
05-12
சப்தாம்சம்
ரு கு னி
மாலை
கும்பகோ
ணம்

சுக் சூரி புத லக்


ரா //
கு கு
ரு

இராசிக் கட்டத்தில் க்ஷேத்திர ஸ்புடம் இரட்டைப்படை இராசியான ரிஷபத்தில் விழுவது நல்லது.


நவாம்சத்தில் ஒற்றைப்படை இராசியான கும்பம் – நல்லதல்ல. சப்தாம்சத்தில் ஒற்றைப்படை இராசியான
தனுசு – நல்லதல்ல

இராசிக் கட்டத்தில் பஞ்சமாதிபதி 8 இல் உள்ளார். குரு நீசமாகி உள்ளார். நவாம்சத்தில் க்ஷேத்திர
ஸ்புட அதிபதி சனி தனது சுய வீடான 4 ஆம் வீட்டில் உள்ளார்.

புத செவ்,குரு ராகு

நவாம்சம் சூரி

சனி சந்

கேது லக்// சுக்

சப்தாம்சத்தில் க்ஷேத்திர ஸ்புட அதிபதி குரு இலக்னத்தில் பலம் பெற்று அமர்ந்துள்ளார்.

எனவே, மனைவியின் ஜாதகத்தில் இலக்னாதிபதி, இலக்னத்திலேயே பலமுடன் உள்ளதாலும்,


நவாம்சத்தில் அவர் குருவுடன் இணைந்து வர்க்கோத்தமத்தில் உள்ளதாலும் குழந்தை பாக்கியம் நிச்சியம்
உண்டென்றாலும், புத்திர பாக்கிய நிலையில் தாமதத்தையே காட்டுகிறது. எனவே, 8 ஆண்டுகள்
வைத்தியத்திற்குப் பிறகே குழந்தை வரம் கிடைத்தது. இந்தக் கட்டுரை பயனுள்ளதாக இருந்திருக்கும் என
எண்ணி முடிக்கிறேன். வாழ்க வளமுடன்

யோகி அவயோகி :
20

ஜோதிடத்தில் யோக ஸ்புடம் , அவயோக ஸ்புடம் என இரண்டு கணித ஸ்புடம் உண்டு. யோக ஸ்புடம்
எந்த நட்சத்திரத்தை குறிக்கிறதோ அந்த நட்சத்திர அதிபதி யோகி எனப்படுகிறார். யோக ஸ்புட நட்சத்திர
அதிபதிக்கு ஆறாவது நட்சத்திர அதிபதி அவயோகியாவார்.
யோக ஸ்புடம் = சூரிய ஸ்புடம் + சந்திர ஸ்புடம் + 93 பாகை 20 கலை.
உதாரணமாக
சூரிய ஸ்புடம் 256 பாகை 15 கலை 07 விகலை
சந்திர ஸ்புடம் 126 பாகை 40 கலை 34 விகலை
+ 93 பாகை 20 கலை 00 விகலை
−−−−−−−−−−−−−−−−−−−−
476 பாகை 25 கலை 41 விகலை .
யோக ஸ்புடமானது 360 பாகைக்கு மேல் இருப்பதால் 476 பாகை 25 கலை 41 விகலையை
360 பாகையிலீருந்து கழிக்க வேண்டும். கழித்து வருவது 116 பாகை 25 கலை 41 விகலை வருகிறது.
இந்த பாகை அளவானது கடக ராசியில் ஆயில்யம் நட்சத்திரத்தில் வருகிறது.
ஆயில்யம் நட்சத்திர அதிபதி புதன் ஆவார். புதனே யோகியாவார். ஆயில்யத்திற்கு ஆறாவது வரும்
நட்சத்திரம் சித்திரை யே அவயோகி நட்சத்திரமாகும். இதன் அதிபதி செவ்வாயாகும்.
யோகியாக வரும் கிரகம் ஒருவர் தன்னிச்சையாக தானே விரும்பி தனிபட்ட விசயங்களில் ஈடுபாடு
இருக்கும்.அவயோகியாக வரும் கிரக காரகங்களில் முழுமையான ஈடுபாடு இருக்காது.
யோகி கிரகம் புதனின் தன்மைகள் ஜாதகருக்கு அதிக நன்மைகளையும் அது சார்ந்த காரக பலன்களில்
அதிக ஈடுபாடு கொள்வதோடு ஜோதிடம் , கணக்கு வேலை, தணிக்கை, பச்சை நிறம் , தாய்மாமன்
உறவுநிலை மேம்படும்,இது போன்ற காரகங்கள் மேம்படும். அவயோகியாக வரும் செவ்வாயின் காரக
பலன் கெடு பலனாக அமையும். அதாவது உடன் பிறந்த சகோதரருடன் கருத்து வேறுபாடுகள், சண்டை
சச்சரவுகள், ரத்தம் சம்பந்தபட்ட நோய்கள், பூமி மண் மனை பிரச்சனைகள் போன்ற பலன்களில் தடைகள்
ஏற்படும்.
ஒவ்வொறு யோகி கிரகத்திற்கும் ஒரு அவயோகி கிரகம் உண்டு . அவையாவன.
# சூரியன் யோகி − சனி அவயோகி.
# சந்திரன் யோகி − புதன் அவயோகி.
# செவ்வாய் யோகி −கேது அவயோகி.
# ராகு யோகி − சுக்கிரன் அவயோகி.
# குரு யோகி − சூரியன் அவயோகி.
# சனி யோகி − சந்திரன் அவயோகி.
# புதன் யோகி − செவ்வாய் அவயோகி.
# கேது யோகி − ராகு அவயோகி.
# சுக்கிரன் யோகி − குரு அவயோகி.
குறிப்பு :
ஜாதக ரீதியாக யோகத்தை செய்யும் கிரகம் அவயோகி கிரகமாக வந்தால் நிச்சயமாக யோகத்தை
செய்யாது.
ஜாதக ரீதியாக தீமை செய்யும் கிரகம் யோகியா வந்தால் நிச்சயம் நன்மையை செய்யும்.

கே பி ஆளும் கிரகங்கள்:
 நாள் அதிபதி M ராஜதுரை முன்னாள் ஒருங்கிணைப்பாளர் – ஜோதிடவியல்
 ராசி அதிபதி சாஸ்திரா பல்கலை, தஞ்சை. 92453 40338

 நட்சத்திர அதிபதி srivarysastrologyresearchinstitute.com


21

 லக்ன அதிபதி
 லக்ன நட்சத்திர அதிபதி
21.01.2020 காலை 10.00 மணி

நாள் அதிபதி செ செவ்வாய் கிழமை


ராசி அதிபதி செ விருச்சிகம்
நட்சத்திர அதிபதி புதன் கேட்டை
லக்ன அதிபதி குரு மீனம்
லக்ன நட்சத்திர அதிபதி சனி உத்திரட்டாதி
 ஒரு கேள்வி கேட்ட நேரத்தில் உள்ள ஆளும் கிரக அமைப்பு திரும்பவும் கூடுகிற நேரத்தில் அந்த
கேள்விக்கான செயல் முடிவடையும் என்பதே ஆளூம் கிரகம் கோட்பாடு.
 ஒரு நாளுக்குள் நடக்கும் செயல்களுக்கு லக்னத்தை, லக்ன நட்சத்திராதிபதியை ஆராய வேண்டும்.
லக்னம் நான்கு நிமிடத்தில் ஒரு பாகையைக் கடக்கும்.
 ஒரு மாதத்தில் நடக்கும் செயல்களுக்கு ராசியை சந்திரனை வைத்து பார்க்க வேண்டும்.ஏனெனில்
சந்திரன் ஒரு மாதத்தில் ஒரு சுற்று முடிப்பவர்.
 ஒரு ஆண்டில் நடப்பை சூரியன் மூலம் அறியலாம், பனிரெண்டு ராசிகளையும் ஒராண்டில் வலம்
வருபவர் சூரியன்.
 அடுத்த 12 ஆண்டுகளில் நடப்பவற்றுக்கு குருவை பார்க்கலாம், அவர் பனிரெண்டு ஆண்டுகளில்
ஒரு சுற்று முடிப்பவர்.
 நீண்ட கால சிக்கல்களுக்கு சனியை பார்க்கவேண்டும்.
 ஒரு நாளுக்கு லக்னம், ஒரு மாதத்திற்கு சந்திரன், ஒராண்டுக்கு சூரியன், பனிரெண்டு ஆண்டுக்கு
குரு, முப்பது ஆண்டுக்கு சனி ஆக்யவற்றைப் பார்த்து பதில் சொல்ல வேண்டும்.

பிறந்த நேரத்தை சரி செய்வது எப்படி? கே பி முறை ராஜதுரை

கரூர் ஜோதிடர் சங்கத் தலைவர்

 உப நட்சத்திராதிபதியைக் கொண்டு கணிக்கப்படுகிறது


30.12.2020 பகல் 12.15 மணி ஜாதகம் பார்க்கும் நேரம்
ஆளும் கிரகங்கள் சந்திரன், ராகு, நட் சனி, உப நட் குரு, உ ஊநட் சனி
23 ஜூன் 2021 காலை
ராகு, கேது பற்றி
 லக்னத்தில் ராகு – ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் அழகாக இருப்பார்கள். கருப்பாக
இருந்தாலும் களையாக இருப்பார்கள்.
 2 ல் ராகு – அவர்களது தசா புத்தி நடக்கையில் எங்கே போறேன்னு கேட்டா வெளங்காது.
 3 ல் ராகு – ஒருக்களித்தே படுத்துத் தூங்குவர்.
 4 ல் ராகு – தூக்கப் பிரியர், காலை 10 மணிக்கே எழுவர்.
 5 ல் ராகு – அழுத்தமான ஆள், உண்மையை வாங்க முடியாது. 5 ல் ராகு இருந்து 5 க்குடைய ராகு
சாரத்திலிருந்தால் பிறக்கும் குழந்தை கொடிமாலை சுற்றிக் கொண்டுதான் பிறக்கும். 5 க்கு
உடையவன்கேது சாரத்திலிருந்தால் பிறக்கும் குழந்தை குறைப் பிரசவத்தில் தான் பிறக்கும்.
 6 ல் ராகு, கேது – பூர்வீக வீட்டின் இரு பக்கங்களிலும் நல்ல ரோடு இருக்கும், அவ்வளவு சீக்கிரம்
கடன் வாங்க மாட்டார்கள்.
22

 ராகு, கேது 8 க்குடையவன் சாரத்திலிருந்தால் நிச்சயமாக அவர்களது புத்தியில் விஷக்கடி உண்டு,


பூரான், தேள், பாம்பு, நாய் எதோ ஒன்று கடிக்கும்.
 ராகு, கேது வெளி நாட்டுக்கு அனுப்பும் கிரகங்கள், குறிப்பாக 12 ல் ராகு இருந்தால் தூக்கம் கெடும்.
கெட்ட கனவுகள் வரும், ரயில் பயணம் செய்வார்கள்.
 ராகு, கேது புத்தி எப்போது வந்தாலும் வாகனத்தில் டயர் மாற்றுவார்கள்.
 பூர்வ ஜன்மத்தில் என்ன தசாபுத்தி அந்தரத்தில் உயிர் பிரிந்ததோ அதே தசாபுத்தி அந்தரத்தில் தான்
அடுத்த பிறப்பு இருக்கும். 5 ஆம் வீட்டுக்கு 8 ஆம் இடத்தை ஆய்வு செய்து பார்த்தால் விளங்கும்.
லக்னம் சரியாக வருகிறதா என்று அறியலாம்.
 தசா புத்தி சாரத்திற்கு மட்டுமே பலன் பார்ப்பது சரியாகவே வருகிறது. கோச்சாரத்திற்கு
முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.
 எப்போதுமே லக்னத்திற்கு என்ன தசை என்ன புத்தி என்ன சாரம் இது தான் பேசும்.
 மேஷ லக்னமா சூரியன் குரு மட்டும் தான், மேஷ லக்னத்திற்கு தர்ம கர்மாதிபதி வேலை
செய்யாது, சனி பத்து மட்டுமல்ல, பாதகாதிபதி – குரு ஒன்பது மட்டுமல்ல விரயாதிபதி. மேஷ
லக்னத்திற்கு நிச்சயமாக வேலை செய்யாது.
 ரிஷப லக்னத்திற்கு புதன் சனி – நல்ல சாரத்திலிருந்தால்,
 மிதுன லக்னத்திற்கு சுக்ரன் புதன்
 கடக லக்னத்திற்கு செவ்வாய் மட்டுமே
 சிம்ம லக்னத்திற்கு செவ்வாய் சுக்கிரன் இணைப்பு
 கன்னி லக்னத்திற்கு புதன் சுக்ரன் கூடணும்
 துலா லக்னத்திற்கு சனி புதன்
 வேலை கிடைக்குமா என்பதற்கு விடையளிக்க லக்னத்தை மட்டும் பார்த்தால் போதாது, 10
ஆமிடத்திற்கு 9 10 பார்க்கவேண்டும். 10 ஆம் இடத்திற்கு 6 8 கூடியிருந்தால் வேலை போய்விடும்.
 எந்த லக்னமாக் இருந்தாலும் 4 12 3 க்குடையவன் புத்தியில் இடம் விற்கும். 4 6 கூடினால் சொத்தின்
மீது கடன் வரும்,
 4 ஆமிடத்திற்கு 6 8 கூடி 4 ல் இருந்தால் அடமானம் வைத்தவற்றை மீட்க இயலாது, கைவிட்டுப்
போகும்.

குழந்தை ஆணா, பெண்ணா என அறிவது எப்படி தேவகுரு ஜோதிடம் 8825451397

 ஒரு நட்சத்திரத்தின் ஒன்று மூன்று ஆகிய பாதங்களில் லக்னம் விழுந்தால் குழந்தை ஆண்.
 ராசி சக்கரத்தில் மேஷம் ஆண், ரிஷபம் பெண் தொடர்ந்து 1 3 5 7 9 11 ஆண் எனவும் 2 4 6 8 10 12 பெண்
எனவும் கொள்ளப் படும்
 நவாம்சத்தில் லக்னம் வரும் இடத்தின் மூலம் இதை அறியலாம்.
 தற்போது அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பதால் நேரம் புரியாமல் லக்னம் சரியாக
கணிக்க முடிவதில்லை.
 சுகப் பிரசவத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கே இது முறையாக சொல்ல முடியும்.

குழந்தை ஆணா, பெண்ணா என அறிவது எப்படி திருமயம் 80980 25125

 லக்னம் ஒன்றைக் கொண்டே குழந்தை ஆணா, பெண்ணா என அறிந்துக் கொள்ள முடியும்.


 ராசிக் கட்டத்தின் 1 3 5 7 9 11 கட்டங்கள் ஆண் என்றும் 2 4 6 8 10 12 ஆகியவை பெண் ராசி ஆகவும்
வரையறை செய்யப்பட்டுள்ளது.
23

 ஒரு ராசியின் 30 பாகைகளை 1 பாகை 25 கலை என்ற விகிதத்தில் 24 பகுதிகளாக பகுத்து ஆண்
ராசியின் முதல் 1 பாகை 25 கலை ஆண் குழந்தை, அடுத்தது பெண் குழந்தை எனவும் பெண்
ராசியின் முதல் பகுதி பெண் தொடர்ந்து ஆண் என குறிக்கப்படுகிறது.
 லக்னம் துலா ராசி 16 பாகையில் உள்ளது, துலா ராசியின் முதல் 1 ¼ பாகை ஆணைக் குறிப்பது,
இவ்வகையில் 15 பாகைக்குள் 12 பகுதிகள் அடங்குகின்றன, 16 பாகையில் லக்னம் அமைந்து
இருப்பதால், அது 13 வது பகுதியைக் காட்டுகிறது. ஆகவே ஆண் குழந்தை என அறியலாம்.
 அடுத்து மீன ராசியின் 7 பாகையில் லக்னம் என்றால், அது பெண் ராசியாகையால் முதல் 11/4
பாகை பெண், அடுத்த 1 ¼ பாகை ஆண், 5 – 6 ¼ பெண், ஆகவே 7 பாகை என்பது ஆணைக்
குறிக்கும் என அறியலாம்.

குழந்தை ஆணா, பெண்ணா சொல்வாக்கு ஜோதிடர்' ஜெயம் சரவணன்

 ஐந்தாமிடம் பூர்வ புண்ணியம், குல தெய்வம், புத்திர பாக்யம், காதல் உணர்வு, அன்பு, இரக்கம்,
பிறர்க்கு உதவுதல், ஆழ்மன எண்ண ஓட்டம், சுகபோகங்கள் மற்றும் குழந்தைகளால் பெறும்
நன்மை தீமை ஆகியவற்றைக் குறிப்பிடும்.
 ஐந்தாமிடம் வலுப்பெற்று, ஒன்பதாமிடம் உச்சமானால் சுயசம்பாத்யம் இல்லாமலேயே
சுகபோகவாழ்க்கை கிட்டும்.
 ஐந்தாமிடத்தில் அமரும் கிரகங்கள், அதைப் பார்க்கும் கிரகங்கள் தான் குழந்தையின் பாலினத்தை
நிர்ணயிக்கின்றன.
 ஒருவருடைய ஜாதகத்தின் ஐந்தாமிடத்தில் சூரியன், குரு, ராகு ஆகிய கிரகங்கள் இருந்தால்
நிச்சயமாக ஆண் குழந்தை பிறக்கும்.
 மனைவியின் ஜாதகம் ஐந்தாமிடம் வலுத்திருந்து அது பெண் எனக் காட்டினால் அப்போது பெண்
குழந்தையே பிறக்கும்.
 ஐந்தில் குரு தனித்திருந்தால் புத்திர பாக்யம் தடைப்படும்/ தாமதமாகும். இல்லாமலே கூட போகும்.
 ஐந்தில் சூரியன் மட்டும் தனித்திருந்தால் 99 சதவிதம் ஒரே ஒரு ஆண் குழந்தை பிறக்கும்.
 ஐந்தில் செவ்வாய் நின்றால் இரண்டு குழந்தைகள் பிறக்கும்.
 ஐந்தில் புதன் தனித்து அம்ர்ந்தால் பெண் குழந்தையே, ஆண் பிறந்தாலும், பெண் தன்மை
கொண்டதாக கூச்ச சுபாவம் உள்ளதாக அமையும். சனி நின்றாலும் இதே பலன் தான்.
 ஐந்தில் சுக்ரன் அல்லது சந்திரன் நின்றால் பெண் குழந்தை மட்டுமே என்பது உறுதி.
 ஐந்தில் ராகு இருந்தால் அளவற்ற ஆண் குழந்தைகள் உண்டு.
 ஐந்தில் கேது அமர்ந்தால் ஆண் குழந்தை உண்டு, ஆனால் வேறு எங்காவது விடுதிகளில் அல்லது
உறவினர் வீட்டில் வளர்ந்து, பின் வெளிநாடுகளில் பணியமர்ந்து உங்களுக்குப் பயன் படாது.
உங்களோடு சேர்ந்து வாழ வாய்ப்பிருக்காது, அடிக்கடி நோய் தாக்கும்.

குழந்தை ஆணா, பெண்ணா சித்தர் ஜோதிடம் கழுகாசலம் 9994388077

 ஐந்தாமதிபதி ஐந்தாமிடத்திலேயே நின்றால் புத்திரபாக்யம் உண்டு. அது சுபத்துவமாக இருந்தால்


சற்புத்திரர்கள் பிறப்பார்கள்.
24

 சந்திரனுடைய வீடு, சுக்கிரனுடைய வீடு, குருவின் வீடு, புதனுடைய வீடு ஆகியவை


சுபகிரகங்களுடைய வீடுகள். இவற்றில் எதாவது ஒன்று ஐந்தாமிடமாகி அதில் ஸ்தானபதி நிற்க
சற்புத்திரன் தோன்றுவான்.
 அசுப கிரக்ங்களாகிய சூரியன், சனி, செவ்வாய் வீடுகள் ஐந்தாமிடமாகி அதில் ராகு கேது ஆகிய
அசுப கிரகங்கள் நின்றால் புத்திர தோஷம் உண்டு, கருத்தரிக்காதிருப்பது, கரு கலைந்து போவது,
குழந்தை இறந்து போவது இவை அனைத்தும் புத்திர தோஷமே.
 அசுபர் வீடு ஐந்தாமிடமாகி அதில் அந்த வீட்டுக்குடையோன் நிற்க பிள்ளைகள் உண்டு, அவர்களால்
நல்ல பேர் வராது, ஒழுக்கமற்றவரு இருப்பார்கள்.
 ஐந்தாமிடத்தில் கிரகங்கள் இல்லாதிருந்து, ஐந்துக்குடையோன் லக்னம், கேந்திரம், திரிகோணம், 11
ஆகிய ஒன்றில் வலுப்பெற்றிருந்தால் புத்திர பாக்யம் உண்டு.
 ஐந்தாமிடத்தில் நீச கிரகம் இருந்து ஐந்துக்குடையோன் வக்ரமாகி அஸ்தமனம் பெற்றிருந்தால்
பிள்ளைப்பேறு இருக்க வாய்ப்பில்லை.
 ஐந்தாமிடத்தில் ராகு நிற்க காலதாமதமான பிள்ளைப் பேறு கிட்டும்.
 ஐந்தாமிடக் கேது புத்திர பாக்யத்தைக் கெடுக்கும்.

02nd July ‘21

பாதகஸ்தானம்
 மேஷத்திற்கு ஆறாமிடம் கன்னி, கன்னிக்கு கும்பம் ஆறாமிடம், ஆகவே மேஷத்திற்கு
பதினொன்றாமிடமான கும்பம் பாதகஸ்தானம்.
 ரிஷபத்திற்கு ஐந்தாமிடம் கன்னி, கன்னிக்கு ஐந்தாமிடம் மகரம். ஆகவே ரிஷபத்திற்கு
ஒன்பதாமிடமான மகரம் பாதகஸ்தானம்.
 மிதுனத்திலிருந்து நாலாமிடம் கன்னி, கன்னிக்கு நாலாமிடம் தனுசு. ஆகவே மிதுனத்திற்கு
ஏழாமிடமாகிய தனுசு பாதகஸ்தானம்.
 இந்த அடிப்படையில் தான் சரராசிக்கு 11 ம் ஸ்திர ராசிக்கு 9 ம் உபய ராசிக்கு 7 ம் பாதக்
ஸ்தானங்களாக சொல்லப்பட்டுள்ளன. கன்னி ராசியை அடிப்படையாக வைத்துத்தான் இது முடிவு
செய்யப்பட்டிருக்கிறது.
 கன்னி ராசி தனுசு ராசிக்கு பத்தாவது ராசி, கன்னி ராசி மகரத்திற்கு ஒன்பதாவது ராசி, கன்னி ராசி
மிதுனத்திற்கு நாலாவது ராசி,
 கால புருஷனுக்கு தர்ம வீடாகிய ஒன்பதாவது வீடாகிய தனுசுக்கு கன்னி பத்தாம் வீடு,
 கால புருஷனுக்கு கர்ம வீடாகிய பத்தாவது வீடாகிய மகரத்திற்கு கன்னி ஒன்பதாம் வீடு –
தர்மத்திற்கு கர்மம், கர்மத்திற்கு தர்மம். ஆகவே கன்னி ராசி குறியாக கொள்ளப்பட்டது.

லக்னாதிபதி
 உங்கள் லக்னாதிபதி எந்த ராசியில் நீச்சமடைகிறாரோ அந்த ராசி சுட்டும் பாவம் / உறவினிடம்
அனுசரணையாகப் பழகி அவரது ஆதசீர்வாதம் பெற வேண்டும். இது உங்களை உயர்த்தும்.
 2 ஆம் வீடு சுட்டும் உறவு பெரியம்மா, பெரிய மாமா, 12 ஆம் வீடு சுட்டும் உறவு அம்மாவின்
அப்பா, அப்பாவின் அம்மா, 5 ஆம் வீடு தாத்தா, குரு மற்றும் குழந்தைகளைச் சுட்டும்.

மகா தசை
 தசைகளை கட்டுப்படுத்தும் கிரகங்கள், ஒருவரது வாழ்வில் வரும் ஒன்பது தசைகள் 1.ஜென்ம
தசை – சூரியன். 2.சம்பத்து தசை- புதன், 3.விபத்து தசை- ராகு, 4.ஷேம தசை- குரு, 5.சத்யக் தடை
25

தசை- கேது, 6.சாதக தசை- சந்திரன், 7.வதை தசை- சனி, 8.மைத்ர தசை- சுக்ரன், 9.பரம மைத்ர தசை-
செவ்வாய்

பஞ்சாங்கம்
 நாள் அதிபதி குரு தட்சணாமூர்த்தி
 நட்சத்திரம் அதிபதி செவ்வாய் முருகன்
 திதி யதிபதி சுக்ரன் மகாலஷ்மி
 யோகம் அதிபதி புதன் விஷ்ணு
 கரணம் அதிபதி சனி

9th July 12.12 Noon Astro Brindha 73730 92818


பிறந்த காரணம் – பிறப்பின் லட்சியம்
 உங்களுடைய லக்னம் அமர்ந்த ராசி நட்சத்திரம், அந்த நட்சத்திர அதிபதி நின்ற பாவம் – அந்த
பாவம் தான் உங்களது கடந்த பிறவியின் கர்மாவையும் இப்பிறவியின் நோக்கம் அல்லது
லட்சியத்தையும் சொல்லும்.
 உதாரண ஜாதகம் –துலா லக்னம்- கால புருஷனின் ஏழாம் பாவம் – சமூகம், எதிர் பாலினம்
கணவன் அல்லது மனைவி, பகிர்தல், வியாபாரம், உடலுறவு இவற்றை குறிப்பது துலா லக்னம்.
 துலா லக்னத்தில் உங்கள் நட்சத்திரம் செவ்வாயாக இருந்தால், அதன் அதிபதி செவ்வாய், அதன்
வீடு 2, 7 அது குடும்பம் வருமானம் மற்றும் கணவன் மனைவி வாழ்க்க இன்பம் ஆகியவற்றை
சுட்டுகிறது. செவ்வாய் அமர்ந்த இடம் பத்தாம் வீடானால் அது கர்மம் (தொழில்) காட்டுகிறது.
இதுவே பிராப்தம், அனுபவித்து கழிக்க வேண்டியது.
 இதை எப்படி அனுபவிக்கப்போகிறோம் என்பதை சந்திரன் நின்ற லக்னாதிபன், அவனுக்குறிய வீடு
சந்திரன் அமர்ந்த வீடு ஆகியவை சுட்டும் பாவ காரகங்கள் மூலம் அறியலாம்.
 ஆறாம் பாவம் அடுத்தவரின் வலியை வேதனையை காசாக்குவது gaining from other’s pain, service
oriented profession, i.e Doctors, Lawyers, Astrologers, Veterinary Doctors
 அதோடு சூரியனும் சேர்ந்திருந்தால் அரசியல் வழியிலும் அவர் செயல் படுவார்.

என்ன கர்வாவை சுமந்து வந்திருக்கிறோம்? பிருந்தா

 லக்னம் ரிஷபம், நிற்கும் நட்சத்திரம்


சூ, சுக் புதன் ல/ சந்
ரோகிணி, ரோகிணி 1 ல் நிற்பதால்
ரா மா
இது ஒரு ஆண் ஜாதகம். சந்திரனும்
அபினேஷ் 5.4.84 9.15 காலை லக்னம்-
ரோகிணி 1 சந்திரன்-கார்த்திகை 3 ரிஷபத்தில் சூரியனது கார்த்திகை 3 ல்
சூரியன்-ரேவதி 2 சுக்கிரன்-பூரட்டாதி 4 நிற்கிறார்
புதன் தோஷம் 2 5 12
செவ்வாய் தோஷம் 7 12 லக்னம் – மதி; சந்திரன் – விதி; லக்னம் நிற்கும்
சூரிய தோஷம் 4 11
ரோகிணி நட்சத்திராதிபதி சுக்ரன் – கதி
கு கேது செ சனி செவ்வாய் 7 ல் நிற்க செவ்வாய் தோஷம்,
கார்த்திகை, பூரம், மூலம், ரேவதி இந்த 4
நட்சத்திரங்களும் செவ்வாயின் சாபத்தைப்
பெற்றவை. திருமணவாழ்வு, தொழில் இரண்டிலும் சிக்கல் தந்தே தீரும்.

ஆறாம் பாவகம் மருத்துவ ஜோதிடம்


26

ஜாதகருக்கு 6, 8, 12 இடங்கள் காற்று ராசியாக இருந்தால் ஆயுள் குறைவு உண்டு.


கிரக நோய்கள்
சூரியன்
இருதய நோய், எலும்பு முறிவு, ஒற்றைதலைவலி, மஞ்சள் காமாலை, ஜுரம், நெருப்பினால் ஏற்படும் புண்,
வெட்டுக்காயம், தோலில் ஏற்படும் குஷ்டம், பித்த உடல், கண்பார்வை குறைவு, மனநோய், மாறுதல்,
செரிமான கெடுதல், வயிற்றுப்போக்கு, தலைவலி, இமேஜ் எல்லாம் சூரியனுடைய நோய்கள்
சூரியன் சூரியன் சாரத்தில் இருந்தால் கட்டாயம் காய்ச்சல் வரும், தாங்கமுடியாத எரிச்சல் உடம்பில்
இருக்கும் ,ஆறாத புண் இருக்கும், எப்பவும் சொறிந்து கொண்டே இருப்பார்கள்.
சூரியன் சந்திரன் சாரத்தில் இருந்தால் தன்னம்பிக்கை இருக்காது. ஜாதகர் உணர்ச்சி வசப்படுவார்.
சூரியன் செவ்வாய் சாரத்தில் இருந்தால் ரத்தசோகை இருக்கும் ரத்த அழுத்தம் இருக்கும் அல்லது low bp,
high bp இருக்கும், தலைசுற்றல் வரும், இவர்கள் ராட்டினம் ஏறக்கூடாது, உயரமான மாடியில் இருந்து
எட்டி பார்க்க கூடாது.
சூரியன் புதன் சாரத்தில் இருந்தால் ஒற்றை தலைவலி வரும்.
சூரியன் சுக்கிரன் சாரத்தில் இருந்தால் நீர்த்தாரையில் பிரச்சனை இருக்கும்.
சூரியன் சனி சாரத்தில் இருந்தாள் ஓ பி பி வரும்.
சூரியன் ராகு சாரத்தில் இருந்தால் மனநோய் இருக்கும். சோம்பல் இருக்கும். தன்னை மறந்து இருப்பார்.
சூரியன் கேது சாரத்தில் இருந்தால் ரத்தக் குறைவு, இருக்கும்.
குருவும் சூரியனும் பலம் குறைந்தால் பாதிப்பு இருக்கும் high bp வரும்.
சனி சூரியன் பாதிப்படைந்தால் லோ பிபி வரும்.
செவ்வாய் சூரியன் பாதிப்படைந்தால் ஒற்றைத் தலைவலி, இருதய நோய், வயிற்று பிரச்சனை இருக்கும்.
சூரியன் கும்பத்தில் இருந்தால் இருதய நோய் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
சூரியன் ராகு இணைவு உயர் ரத்த அழுத்தம், கண் நோய் இருக்கும்.
சூரியன் செவ்வாய் இணைவு பெண்கள் ஜாதகத்தில் இருந்தால், லக்னத்தில் இருந்தாலும், கருக்கலைப்பு
கண்டிப்பாக இருக்கும்.
லக்னத்தில் சூரியன் செவ்வாய் இருக்க செவ்வாய் திசையில் பன்றி காய்ச்சல் வரும்.
நீர் ராசியில் சூரியன் சுக்கிரன் சேர்க்கை இருந்தால் ஜாதகர் குடிகாரனாக இருப்பான்.
சூரியனுக்கு சுக்கிரன் மூன்று டிகிரிக்குள் இருந்தால் உடலுறவில் அதிக நாட்டம் இருக்கும்.
சூரியன் சனி இணைவு காசநோய் வரும்.
சந்திரன் நோய்கள்
இருதயம், நுரையீரல், ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு, காசநோய், சர்க்கரை வியாதி, மஞ்சள் காமாலை,
குடல் வால்வு நோய், மாதவிடாய் கோளாறு, நரம்பு தளர்ச்சி, ரத்தம் கெட்டுப் போவது, தோல் நோய்,
இரத்தசோகை, செரிமான கோளாறு, இருமல், கண்புரை, கண் குறைபாடு, கண் பார்வை குறைவு,
தலைசுற்றல், உடலுறவு நோய், கருவுறுதல், இவையெல்லாம் வரும்.
சந்திரன் சூரியன் சாரத்தில் இருந்தால் ஜாதகர் உணர்ச்சிவசப்பட்டு கொண்டே இருப்பார்.
சந்திரன் சந்திரன் சாரத்தில் இருந்தால் நல்ல கற்பனை வளம் இருக்கும். கவலையற்ற வாழ்க்கை
வாழ்வார்.
சந்திரன் செவ்வாய் சாரத்தில் இருந்தால் தோல் நோய், யூரியனில் ரத்தம் வரும்.
சந்திரன் புதன் சாரத்தில் இருந்தால் கற்பனைவாதி, எப்போதும் மன கவலை இருந்து கொண்டே இருக்கும்.
சந்திரன் குரு சாரத்தில் இருந்தால் உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
சந்திரன் சுக்கிரன் சாரத்தில் இருந்தால் நோய் எதிர்ப்பு ஜாதகருக்கு குறைவாக இருக்கும். பாலியல் நோய்
வரும். மோசமான உடல் நலம் இருக்கும்.
சந்திரன் சனி சாரத்தில் இருந்தால் மனநோய் இருக்கும். தன்னம்பிக்கை இல்லாதவராக இருப்பார்.
27

சந்திரன் ராகு சாரத்தில் இருந்தாள் கற்பனை வளம் அதிகமாக இருக்கும். மன குழப்பம் இருக்கும்.
சந்திரன் கேது சாரத்தில் இருந்தால் ஜாதகர் எரிச்சலான பேச்சு பேசிக்கொண்டே இருப்பார். முடிந்தவரை
மற்றவர்களை எதிர்த்து பேசுவார்கள், முடியாத நிலையில் காலில் விழுந்து விடுவார்கள்.
அமாவாசையில் பிறந்தால் உடல்நிலை குறைவு உண்டு 3 இல் சந்திரன் பலம் குறைந்தால் மனச்சிதைவு
ஏற்படும் ஆறில் சந்திரன் இருந்தால் உடல் நலம் கெடும், சக்தி குறைவு.
எட்டில் சந்திரன் இருந்தால், சிறுநீரக கோளாறு கணவன் மற்றும் தாயின் ஆயுள்காலம் கெடும்.
மேஷத்தில் சந்திரன் இருந்தால் சகிப்புத்தன்மை இருக்காது.
விருச்சிகத்தில் சந்திரன் இருந்தால அகண்ட மார்பகம் இருக்கும். பால் இருக்காது. மிகுந்த உணர்ச்சி
வசப்படுவார்கள்.
மீனத்தில் சந்திரன் இருந்தால் மன நோய் தாக்கும், குடிப்பழக்கத்திற்கு கொண்டுசெல்லும், போதைக்கு
அடிமையாவார்கள், இவர்களுக்கு கற்பனை வளம் அதிகமாக இருக்கும், எந்த விஷயத்திற்கும் இவர்கள்
ஒத்துப்போக மாட்டார்கள்.
சுக்கிரனுக்கு திரிகோணத்தில் சந்திரன் இருந்தால் ஜாதகருக்கு கண் நோய் வரும், தாய்ப்பாசம்
இல்லாதவராக இருப்பார், மாற்று தாய் உடையவராக இருப்பார்.
6, 8, 12 ல் சந்திரன் இருந்தால் அல்லது சம்பந்தம் இருந்தால் மனசு பலவீனமாக இருக்கும். பயந்த சுபாவம்
ஆக இருப்பார்.
செவ்வாய் சனிக்கு நடுவில் சந்திரன் இருந்தால் மூச்சு திணறல் கண்டிப்பாக இருக்கும்.
பாதிக்கப்பட்ட பலமிழந்த சந்திரன் இருந்தால் ஜாதகரின் தாய் படுத்த படுக்கையாக இருப்பார்.
சந்திரன் செவ்வாய் சம்பந்தப்பட்டால் உடல்நிலை பலமற்றதாக இருக்கும் ரத்த சம்பந்தமான நோய்,
புற்றுநோய் இருக்கும்,
பலமற்ற சந்திரன் எட்டில் இருக்க அந்த நபர் நீரில் மூழ்கி இறக்க வாய்ப்புண்டு.
எட்டாம் பாவத்தில் சந்திரன் கேது இருக்க பைல்ஸ் வரும்.
எட்டில் பலமற்ற சந்திரன் இருக்க சிறுவயதில் உடல்நிலை மோசமாக இருக்கும்.
லக்னத்தில் சந்திரன் செவ்வாய் இருக்க தன்னை கட்டுப்படுத்த முடியாதவராக இருப்பார். முன் கோபியாக
இருப்பார். திடகாத்திரமான மனசு உள்ளவராக இருப்பார்.
சந்திரன் புதன் பாதிக்கப்பட்டால் அதிகமாக பேசிக்கொண்டே இருப்பார்கள். தாழ்வுமனப்பான்மை இருக்கும்.
சந்திரன் சுக்கிரன் சேர்ந்து 7, 11 ல் இருந்தால் எப்போதும் பெண்கள் சூழ்ந்து இருப்பார்கள்.
சனி சந்திரன் தாழ்வு மனப்பான்மை, கவலை இருக்கும்.
செவ்வாய் நோய்கள்
வெட்டுக் காயங்கள், கொப்பளம், காயங்கள், எலும்பு முறிவு, சுட்ட புண், எரிச்சல், மஞ்சள் காமாலை,
ரத்தம் வடிதல், ரத்த கொதிப்பு, காக்கா வலிப்பு, கட்டிகள், ஆசனவாய் நோய், பல்நோய் ஆகும்.
செவ்வாய் சூரியன் சாரத்தில் இருந்தால் ரத்தசோகை இருக்கும்.
செவ்வாய் சந்திரன் சாரத்தில் இருந்தால் தோல் வியாதி வரும்.
செவ்வாய் செவ்வாய் சாரத்தில் இருந்தால் உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
செவ்வாய் புதன் சாரத்தில் இருந்தால் மன சிதறல் இருக்கும்.
செவ்வாய் சுக்கிரன் சாரத்தில் இருந்தால் பாலியல் நோய் வரும்.
செவ்வாய் சனி சாரத்தில் இருந்தால் தற்கொலை எண்ணம் தரும்.
செவ்வாய் ராகு சாரத்தில் இருந்தால் தற்கொலை எண்ணம் தரும்.
செவ்வாய் கேது சாரத்தில் இருந்தால் HIGH பி பி பொறுமை இல்லாதவர்கள்.
செவ்வாய் குரு சாரத்தில் இருந்தால் உடல்நலம் சிறப்பு. லக்னத்தில் சூரியன், செவ்வாய் இருந்தால்
ஜாதகருக்கு அடிக்கடி காய்ச்சல் வரும்.
லக்னத்தில் செவ்வாய் சந்திரன் இருந்தால் கொப்பளம் வீக்கம், ரத்தப்போக்கு இருக்கும்.
28

லக்னத்தில் செவ்வாய் புதன் இருந்தால் வயிற்றுப்போக்கு, நரம்புத்தளர்ச்சி இருக்கும்.


லக்னத்தில் செவ்வாய், குரு இருந்தால் ஜாதகருக்கு எலும்பு உடையும்.
லக்னத்தில் செவ்வாய் சுக்கிரன் இருந்தால் பாலியல் வியாதி வரும்.
லக்னத்தில் செவ்வாய் சனி இருந்தால் மனைவி ஓடிவிடுவார், சூதாட்டத்தில் விரயம் இருக்கும், பொய்
பேசுவார்கள், இவர்களுக்கு sex ஆர்வம் அதிகமாக இருக்கும்.
3 இல் செவ்வாய் இருந்து கெட்டுப்போனால் சிறு விபத்து இருக்கும். தொண்டை நோய், காது சம்பந்தமான
நோய் இருக்கும்.
ஆறில் செவ்வாய் இருந்து கெட்டுப்போனால் வண்டியில் விபத்து ஏற்படும். தீக்காயம் இருக்கும்.
சூரியன் செவ்வாய் சேர்ந்து பாவிகளின் பார்வையில் இருந்தால் விபத்து அல்லது வெட்டுக்காயம் ஏற்படும்.
சந்திரன் செவ்வாய் எங்கிருந்தாலும் பாவிகளின் சம்பந்தம் இருந்தால் ரத்தப் போக்கு, விபத்து இருக்கும்.
குரு செவ்வாய் கெட்டு ஏழாம் பாவத்திற்கு தொடர்பு இருந்தால் விரை வீக்கம், குடல் வால் நோய்
இருக்கும்.
ஒன்பதில் செவ்வாய் இருந்து கெட்டுப்போனால் வெளிநாட்டில் அல்லது வெளி மாநிலத்தில் விபத்து
இருக்கும்.
12 ல் செவ்வாய் இருந்து கெட்டுப்போனால் அறுவை சிகிச்சை உண்டு.
செவ்வாய் விருச்சிகத்தில் கெட்டால் ஆசனவாயில் கொப்பளங்கள் கட்டாயம் இருக்கும்.
கெட்டுப் போவது என்பது திதி சூன்யம், பாதகம் இவையெல்லாம் பார்த்து ஆறு, எட்டு தொடர்பு பார்த்து
பின்புதான் பலன் எடுக்க வேண்டும்.
செவ்வாய் குரு சேர்க்கை குறைந்த ரத்த அழுத்தம் ரத்தசோகை இருக்கும்.
செவ்வாய் எட்டாம் அதிபதியாகி ஐந்தில் இருந்தால் சந்திரனுடன் தொடர்பும் இருந்தால் மனநோய் உண்டு.
செவ்வாய், சனி லக்னத்தில் இருந்தால் பொய் பேசுவது, அவனுக்கு அவனே எதிரி. நட்பு பாவம் கெடும்.
உடலில் ஏற்படும் தோல் நோய் இருக்கும்.
புதன் நோய்கள்
மூளையில் ஏற்படும் மாறுதல்கள், மனநோய், பேச்சு குழறுதல், நரம்பு தளர்ச்சி, ஆண்மை தன்மை இழப்பு,
சொறி, சிரங்கு, எலும்பு முறிவு, டைபாய்டு, அதிகமான வியர்வை வருதல், அதிர்ச்சி, கண், காது, மூக்கு
நோய், வெண்குஷ்டம், செரியாமை, கல்லீரல், வயிறு, குடல் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கும்.
புதன், சூரியன் சாரத்தில் இருந்தால் நரம்பு சம்பந்தமான வியாதி. அதிக வியர்வை வருதல்.
புதன் சந்திரன் சாரத்தில் இருந்தால் மிகுந்த கற்பனை வியாதி இருக்கும்.
செவ்வாய் சாரத்தில் இருந்தால் தலைவலி, மன சிதறல் இருக்கும்.
புதன், புதன் சாரத்தில் இருந்தால் ஜாதகர் தன்னம்பிக்கை மிகுந்தவர், மனக்கட்டுப்பாடு இருக்கும்.
புதன், குரு சாரத்தில் இருந்தால் மிகுந்த சக்தி உடையவர்.
புதன், சுக்கிரன் சாரத்தில் இருந்தால் தோலில் ஏற்படும் வியாதிகள்.
புதன், சனி சாரத்தில் இருந்தால் மனநோய் இருக்கும். புதன், ராகு சாரத்தில் இருந்தால் தாழ்வு
மனப்பான்மை இருக்கும்.
புதன், கேது சாரத்தில் இருந்தால் மனநோய் இருக்கும்.
புதன், ஆறாம் அதிபதியுடன் சம்பந்தப்பட்டு லக்னத்தில் இருந்தால் ஜாதகர் அலியாவார்.
மூன்று 11 இல் சந்திரனுடன் புதன் சேர்ந்தால் காது நோய் வரும்.
புதன் ஏழாம் அதிபதியுடன் சம்பந்தப்பட்டால் நரம்புத் தளர்ச்சி வரும்.
புதன் 6 ல் இருந்தால் சோம்பேறி பலவித நோய் வரும், மோசமான நடத்தை உடையவர், இவர்கள் உடல்
நிலையில் அதிக கவனம் தேவை.
புதன் 6, 8, 12 ல் இருந்தால் அக்கி கட்டி வரும்.
புதன் 6, 8, 12 ஆம் இடத்தை பார்த்தாலும் அக்கி கட்டி வரும்.
29

மேஷத்தில் புதன் இருந்தால் வாதாடுபவர் ஆக இருப்பார்கள். தேவையில்லாமல் வாக்குவாதம்


செய்வார்கள். சூதாடுவார்கள், மனநோய் மனஅழுத்தம் உடையவராக இருப்பார்கள், ஆசனவாய் நோய்
இருக்கும்.
புதன் ஆறாம் அதிபதியுடன் சேர்ந்தால் இருதயம் பாதிக்கப்படும்.
புதன் 6, 8, 12 க்கு சம்பந்தப்பட்டால் நரம்புத் தளர்ச்சி வியாதி கட்டாயம் இருக்கும்.
புதன் சனி சேர்ந்திருந்தால் அடுத்தவர்களை ஏமாற்றுவார்கள், சொன்ன சொல் கேட்க மாட்டார்கள். தாழ்வு
மனப்பான்மை இருக்கும் தன்னம்பிக்கை இல்லாதவர்கள்.
குரு நோய்கள்
கல்லீரல், கணையம், நுரையீரல், தொடைகள், கொழுப்பு, மூளை, நாக்கு, காது, சர்க்கரை வியாதி, மஞ்சள்
காமாலை, ரத்தசோகை, உடல் வலிகள், மனக்குழப்பம், வயிறு, வயிற்றுக் கோளாறு, காது, நுரையீரல்,
மர்ம உறுப்புகளில் நோய், தலைச்சுற்றல், காய்ச்சல், மயக்கம், விரை வீக்கம், மூளை நோய், கண்புரை,
உடல் உறுப்புக்கள்.
குரு சூரியன் சாரத்தில் இருந்தால் தொற்றுநோய், காய்ச்சல், செரிமானமின்மை, உணவு குறைத்து
சாப்பிடுவது.
குரு சந்திரன் சாரத்தில் இருந்தால் நல்ல உடல் நிலை இருக்கும்.
குரு செவ்வாய் சாரத்தில் இருந்தால் நீர்த்தாரையில் கல் இருக்கும், குடலில் நோய் வலி இருக்கும்.
குரு புதன் சாரத்தில் இருந்தால் விரைவீக்கம், ஆசனவாய் நோய் இருக்கும்.
குரு குரு சாரத்தில் இருந்தால் நல்ல உடல் நிலை இருக்கும்.
குரு சுக்கிரன் சாரத்தில் இருந்தால் தலைசுற்றல், வாந்தி, மஞ்சகாமாலை, உடல் உறவில்
நாட்டமில்லாமல் இருப்பார்.
குரு சனி சாரத்தில் இருந்தால் நோய் குணமாக நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும்.
குரு ராகு சாரத்தில் இருந்தால் வயிற்றுப் போக்கு இருக்கும்.
குரு கேது சாரத்தில் இருந்தால் கல்லீரல் வீங்குதல், தொற்று நோய்கள் வரும்.
குரு கெட்டுப்போய் ஆறாம் இடத்தை பலமற்று பார்த்தால் சர்க்கரை நோய் வரும்.
குரு கெட்டுப்போய் எட்டாம் பாவத்தை பார்த்தால் ஆசனவாய் நோய் இருக்கும்.
மூன்று, எட்டாம் அதிபதிகள் சேர்ந்து பலமற்று, குரு சம்பந்தம் பெற்றால், பேசுவதில் பிரச்சனை இருக்கும்.
நாலாமிடம் ஒருவருக்கு கடக ராசியாக இருந்து அதில் குரு பலமற்று அமர இருமல் இருக்கும்.
எட்டில் குரு நல்ல சாவு.
6 ல் குரு சில நோய்களில் உடல்நிலை கோளாறு ஏற்படும்.
மகரத்தில் பலமற்ற குரு இருந்தால் புத்திர சோகத்தை கொடுக்கும்.

சுக்கிரன் நோய்கள்
பாலியல் நோய், சர்க்கரை வியாதி, மூத்திரப்பைகள், கண்புரை, மயக்கம், வலிப்பு ,பிறப்புறுப்பு நோய்,
வெண்குஷ்டம், அதிகமான பாலியல் நாட்டம், அதிக வெள்ளைப்படுதல், பெண்களுக்கு மாதவிடாய்
கோளாறு.
சுக்கிரன் சூரியன் சாரத்தில் இருந்தால் கண் குறைபாடு நோய்.
சுக்கிரன் சந்திரன் சாரத்தில் இருந்தால் பிறப்புறுப்பில் குறைகள் இருக்கும்.
சுக்கிரன் செவ்வாய் சாரத்தில் இருந்தால் பாலியல் வெறி உணர்வு இருக்கும்.
சுக்கிரன் புதன் சாரத்தில் இருந்தால் தோலில் புள்ளிகள் இருக்கும்,
தோல் வியாதி இருக்கும், எரிச்சல் இருக்கும்.
சுக்கிரன் சுக்கிரன் சாரத்தில் இருந்தால் நல்ல உடல் நிலை இருக்கும்.
சுக்கிரன் சனி சாரத்தில் இருந்தால் பாலியல் நோய் இருக்கும்.
30

சுக்கிரன் ராகு சாரத்தில் இருந்தால் நரம்புத் தளர்ச்சி இருக்கும், பாலியல் சம்பந்தமான நோய் இருக்கும்.
சுக்கிரன் கேது சாரத்தில் இருந்தால் பாலியல் நோய், கண்நோய், விந்து கோளாறு,
ரத்தத்தில் அணுக்கள் குறைவு,
சுக்கிரன், செவ்வாய், சனி, ஆறாம் அதிபதி சம்பந்தம் பெற்றால் பித்தம் சம்பந்தமான நோய் ஏற்படும்.
சுக்கிரன் சனியால் பாதிக்கப்பட்டால் முகம் அழகு கெடும், முகத்தில் கொப்பளம் தரும்.
சுக்கிரன் மூத்திரத்தை குறிக்கும் மேலும் விந்து, கண்பார்வை இவைகளையும் குறிக்கும்.
சுக்கிரன் லக்னத்தில் இருந்தால் மூத்திர பையை மட்டும் குறிக்கும்.
சுக்கிரன் பலம் பெற்று புதன் சனியால் சம்பந்தப்பட்டால் உடலுறவு ஈடுபாட்டில் குறைவு ஏற்படும்.
ஆறில் சுக்கிரன் இருந்தால் ஆண்மையற்றவர், உடலுறவில் திருப்தி படுத்த முடியாதவராக இருப்பார்கள்.
சுக்கிரன் சனி ராகுவிற்கு நடுவில் இருந்தால் தாம்பத்தியம் இல்லை.
ஆறாமிடம் நீர் ராசியாகி சுக்கிரன் இருந்தால் மதுவிற்கு அடிமையாக இருப்பார்கள்.
சுக்கிரன் கடகத்தில் இருந்து எட்டாவது பாவமாக இருந்து செவ்வாய் அல்லது ராகு பார்க்க மூத்திர
பையில் நோய் வரும்.
சுக்கிரன் பாபர் ஆனால் போதை சர்க்கரை வியாதி வரும்.
8 ல் சனி சுக்கிரன் இருந்தால் லோ பிபி, காம வாழ்க்கையில் பிரச்சனை இருக்கும்,
சனி நோய்கள்
சுற்றுச்சூழல் மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள், மனச்சிதைவுகள், வயிறு, உணவு செரியாமை, குடலில்
ஏற்படும் மாறுபாடுகள், வெட்டுக்காயம், சிராய்ப்பு, கைகால்களை கிழித்தல், மனநோய், கண்நோய், கட்டிகள்,
சுரப்பிகளில் ஏற்படும் நோய், புற்று நோய், பக்கவாதம், மூட்டு தளர்வு, காது கேட்காமல் இருப்பது. மிக
நீண்டகாலமாக குணமாகாத வியாதிகள். சனி காலம் கடத்துதல், தடைகள், தடங்கல், துன்பம், கஞ்சத்தனம்,
இவையெல்லாம் சனி நோய்கள்.
சனி சூரியன் சாரத்தில் இருந்தால் கண் நோய், காசநோய்.
சனி சந்திரன் சாரத்தில் இருந்தால் மாதவிடாய் பிரச்சனை, எதிர்காலத்தை பற்றி பயம், கடின உழைப்பாளி.
சனி செவ்வாய் சாரத்தில் இருந்தால் அடிக்கடி ஏற்படுகின்ற காய்ச்சல் கொப்புளங்கள், கட்டிகள், ரத்தம்
சம்பந்தமான நோய்கள், வயிற்றுவலி.
சனி புதன் சாரத்தில் இருந்தால் ஞாபக சக்தி குறைவு, தன்னம்பிக்கை குறைவு, நரம்புத்தளர்ச்சி, வரும்.
சனி குரு சாரத்தில் இருந்தால் சோம்பேறி, எப்போதும் தூங்கிக்கொண்டு இருப்பார்கள், உயர் ரத்த அழுத்தம்
இருக்கும், மஞ்சக்காமாலை, அதிக அளவு உணவு உன் கொள்பவர்களாக இருப்பார்கள்,
சனி சுக்கிரன் சாரத்தில் பாலியல், கண், உணவுப்பை இதில் நோய்.
சனி சனி சாரத்தில் இருந்தால் மிக சிறப்பான உடல்நலம்.
சனி ராகு சாரத்தில் இருந்தால் கண்டுபிடிக்க முடியாத நோய், அவ நம்பிக்கை உடையவர்,
ஆண்மை யில்லாதவன்.
சனி கேது சாரத்தில் இருந்தால் நீர்வற்றி போகுதல், வெற்றுப்பு, சுரப்பிகள் மாற்றம் இருக்கும்.
சனி புதன் கெட்டால் பய உணர்வு நிரந்தரமாக இருக்கும்.
சனியால் குரு கெட்டால் ஆண்தன்மை ஆண் தன்மையை பாதிக்கும்.
சனி சூரியன் இருவரும் பாவிகளின் பார்வை இருந்தால் பாலியல் நோய், பீதிநோய்,
நீண்ட நோய்களுக்கு காரணம்
சனி சனியால் புதன் கெட்டு மிதுனம் கன்னியில் இருந்தால் நரம்பு தளர்ச்சி வரும்.
லக்னத்தில் சனி இருந்து ஏழில் குரு பாவி இருக்க ஜாதகன் ஆண்மை அற்றவர்,
உடலுறவில் மகிழ்ச்சி இருக்காது.
சந்திரனுக்கு கேந்திரத்தில் சனி நிற்க மனத் தளர்ச்சி, சோர்வு இருக்கும்.
சுக்கிரனுக்கு இரண்டில் சனி இருக்க மிகவும் வேகமானவர்.
31

கோச்சாரசனி வக்கிரம் பெற்று ஆறில் இருக்கும் கிரகத்தின் மீது வரும் போது நோய் வரும்.
சனி, ராகு, கேது பலம் பெற்று லக்னாதிபதியை பார்த்தால் சர்க்கரை வியாதி வரும்.
சனி, செவ்வாய், ராகு, கேது, ஆறு, எட்டு பன்னிரெண்டில் இருக்க அந்த ராசிகள் நீர் ராசியானால் சர்க்கரை
நோய் உண்டு.
ராகு நோய்கள்
ராகு கேது என்றால் நிழல் கிரகங்கள் சாயா கிரகங்கள்.
ராகு சந்திரன் சேர்க்கை சுபர் பார்வை இல்லாமல் இருந்தால் ஹிஸ்டீரியா என்ற நோய் வரும், மனநோய்
இருக்கும், பைத்தியம் பிடித்தல், மதவெறி வரும், இதுவே விருச்சிக லக்னத்திற்கு பொருந்தி வராது.
புதனுக்கு ராகு கேது சேர்க்கை இருந்தால் என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியாது.
ராகு கேதுவுடன் சுக்கிரன் சேர்ந்து இருந்தால் விபரீத காமம் இருக்கும், ஒழுக்கத்தை கடைபிடிக்க
மாட்டார்கள்.
ராகு கேதுவுடன் சனி சம்பந்தம் இருந்தால் இதை குரு பார்த்தால் யோகம் இல்லை என்றால் தற்கொலை
முயற்சி இருக்கும், கொடூரமானவராக இருப்பார், மரியாதை தெரியாதவர்களாக இருப்பார்கள்,
ஆண்மையற்றவர்,விபத்து இருக்கும்.
ராகு கேதுவுடன் செவ்வாய் சேர விரைவீக்கம், மூத்திரம் கோளாறு இருக்கும். பெண்கள் ஜாதகத்தில்
லக்னம் நவாம்ச லக்னம் ராகு அல்லது கேது இருப்பின் குழந்தையை அறுவை சிகிச்சை செய்து
எடுப்பார்கள்.
ராகு கேதுவுடன் செவ்வாய் இருந்தால் அடிக்கடி விபத்து இருக்கும்.
லக்னத்தில் ராகு உடல் நலம் கெடும்.
ஐந்தில் ராகு இருந்து பாவிகளின் பார்வை இருப்பின் மறதி, புத்தி பேதலிப்பு.
ஆறில் ராகு கைகால் மூட்டுவலி, நரம்புகள் இயங்காமல் இருக்கும்.
12 ல் ராகு தொழுநோய், என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியாத நோயாக இருக்கும்.
ராகு குரு இனைவு எட்டில் இருக்க வயிற்றில் பிரச்சனை,செவ்வாய் சம்பந்தம் பெற்றால் வயிற்றில்
அறுவை சிகிச்சை உண்டு.
சந்திரனுக்கு ஐந்தில் ராகு இருக்க அடிக்கடி விபத்து நீரினால், அபாயம் இருக்கும்.
ஜாதகத்தில் ராகு கேது 6, 12 ஆக இருந்தால் நிச்சயமாக அந்தக் கிரகத்தின் திசா புத்தியில் நரம்பு
சம்பந்தமான வியாதி இருக்கும்.
சனி லக்னாதிபதியாகி செவ்வாய் அல்லது கேது சம்பந்தம் பெறுவது எப்போது காமத்தைப் பற்றியே
சிந்தனை இருக்கும்.
சனி அல்லது ராகு லக்னத்தில் இருப்பது காமம்அதிகமாக இருக்கும்.
சனி ராகு சந்திரன் சேர்ந்திருப்பது எட்டாம் அதிபதி சனி ராகு நடுவில் இருப்பது காமம் அதிகம்.
ராகு சந்திரன் இருப்பது மனக்கோளாறு இருக்கும், பேச்சை மாற்றி பேசிக்கொண்டு இருப்பார்கள்.
ராகு லக்னாதிபதியோ அல்லது சந்திரனோ தொடர்பு இருந்தால் உடல் முழுவதும் அரிப்பு இருக்கும்.
ராகுவின் நோய் இதன் ஆளுகை கால்பாதம், சுவாசம் ஸ்பீரியஸ், அர்டினி சுரப்பிகள், குடல் நோய், அறிவு
குறைபாடு, குடல்புண், கொப்பளங்கள், குஷ்டம், தோல் நோய், எரிச்சல் தன்மை, கண்டுபிடிக்க முடியாத
நோய், மேலே இருந்து கீழே விழுவது இவையெல்லாம் வரும். பண்பு, வைராக்கியம் உள்ளவர்கள்,
குணமாக எடுப்பவர்கள் வெளிநாடு செல்வார்கள்.
கேது நோய்கள்
மண்ணீரல் வீங்குதல், கண் புரை, விரை வீக்கம், நுரையீரல் பாதிப்பு, காய்ச்சல், வயிற்றுவலி, உடலில்
வலி, எந்த காரணத்தால் வியாதி என்று புரியாமல் இருக்கும், வாந்திபேதி இருக்கும், அடிக்கடி காய்ச்சல்
வரும், வெட்டுக்காயம், அரிப்பு, படை, கொப்பளங்கள், கால் பாதம் எரிவது, குஷ்டம், தற்கொலை எண்ணம்,
இவையெல்லாம் கொடுக்கும்.
32

கேது சனி 7 இல் இருக்க கொப்புளங்கள் வரும்.


லக்னத்தில் கேது உடல் நலம் இல்லாமல் இருக்கும், தொடர்ந்து மருந்து சாப்பிட்டுக் கொண்டே
இருப்பார்கள்.
11-ல் கேது இருந்தால் நோய் தரும்.
கேது புதன் மிதுனம் கன்னியில் இருந்தால் முதுகுத்தண்டு, பற்களில் பிரச்சனை வரும்,
ஆறில் கேது இருந்து சனி பார்த்தால் சனி கேது புக்தியில் நோயிருக்கும்.
லக்னத்தில் கேது உடல்நல கோளாறு, வாயுக் கோளாறு, இருக்கும் ஆசனவாய் நோய் இருக்கும், மனம்
ஒரு நிலையில் இல்லாமல் இருக்கும்.
மூன்றில் கேது கை, தோள்பட்டையில் பிரச்சனை, இருக்கும்.
ஐந்தில் கேது வயிற்றில் பிரச்சனை, வாயுகோளாறு, மனப்போராட்டம் அதிகமாக இருக்கும்.
ஏழில் கேது கீழ்ஜாதி பெண்களுடன் சேர்க்கை இருக்கும் சிறுநீர் தாரையில் நோய் இருக்கும், மீறினால்
ஆபத்து, பயம் இருக்கும்.
எட்டில் கேது மோசமான உடல்நிலை, மர்ம இடத்தில் நோய் இருக்கும்.
பத்தில் கேது வாயுத் தொல்லை இருக்கும், கேது மிதுனத்தில் இருந்தாலும் வாயுத் தொல்லை இருக்கும்.
கேது துலாத்தில் இருந்தால் தோல் நோய் இருக்கும்.
கேது கன்னியில் இருந்தால் உணவு செரிமான கோளாறு இருக்கும். இதில் கிரகம் ஆதிபத்தியம், பார்க்கும்
கிரகங்கள் அனைத்தும் பார்த்துதான் பலன் எடுக்க வேண்டும்.
ஜனன ஜாதகத்தில் லக்னம் முதல் திரிகோணம் ஆனால் பித்தம் தொடர்பான நோய் வரும்.
இரண்டாவது திரிகோணம் ஆனால் கபம் சம்பந்தமான நோய் இருக்கும்.
மூன்றாவது திரிகோணம் ஆனால் காற்று சம்பந்தப்பட்ட நோய் வரும்
ஆறாம் பாவகம்
ஆறாம் இடத்தை சுபர்கள் பார்த்தால் அது உபஜெய ஸ்தானம் ஆக வேலை செய்யவில்லை என்றால் அது
துர் ஸ்தானமாக தான் வேலை செய்யும்.
பாப கிரகங்கள் 6 ல் இருந்தால் ஆயுள் காலம் அதிகமாக இருக்கும். உடல்நலம் கெடும்.
ஆறாம் பாவத்தில் செவ்வாய் ராகுவும் இருக்க குடல்வால் நோய் இருக்கும்.
லக்னாதிபதி 6 ல் இருக்க ஆறாம் அதிபதி லக்னத்தை பார்க்க உடல் நலம் கெடும்.
சந்திரனிலிருந்து ஆறாம் வீட்டில் ராகு இருக்க மூட்டு வலி வரும்.
ஆறாம் அதிபதி லக்னத்தில் இருக்கும் ராகு ஆறில் இருக்க உடல் நலம் கெடும்.
சனி இராகு ஆறிலிருந்து ஒரு பார்வை இல்லையென்றால் நோய்வரும்.
பலமற்ற சுபர் ஆறில் இருந்தால் நோய் வரும்.
ஆறாம் வீடு ஆறாம் வீடு நெருப்பு ராசியாகி சூரியன் செவ்வாய் அதில் இருந்தால் தீ மின்சாரம்
வெடிமருந்து இவைகளால் விபத்து ஏற்படும்.
சூரியன் செவ்வாய் ஆறில் இருந்து அது காற்று ராசி ஆனால் முதல் விமானம் போன்ற விபத்து இருக்கும்.
ஆறாம் இடத்தை சுக்கிரனுடன் சேர்ந்து ஒன்று அல்லது எட்டில் இருந்தால் கண் பார்வை கெடும்.
கேதுவுடன் சேர்ந்தால் முகத்தில் பரு தோன்றும்.
சந்திரன் 6-ல் இருக்க சனி, செவ்வாய் சம்பந்தம் பெற கணக்கில்லாமல் நோய் வரும்,
ரத்த அழுத்தம் வரும்.
சந்திரன் சனியுடன் செவ்வாய் சம்பந்தம் பெற ஆசனவாயில் அறுவை சிகிச்சை வரும்.
புதன் ஆறில் இருக்க சனி சம்பந்தம் பெறுவது காது கேளாமை பிரச்சனை இருக்கும்.
6 ல் கேது இருக்க ஆறாம் அதிபதி கேது பார்க்க அல்லது 6 ல் கேது, செவ்வாய், சனி சம்பந்தம் பெறுவது
அல்லது 1, 3, 7 வீடுகளுக்கு இரண்டாம் வீட்டோடு செவ்வாய், சூரியன் சம்பந்தம் பெறுவது செவ்வாய்
33

லக்னத்தில் பாவ கிரகத்தோடு சம்பந்தம் பெறுவது அல்லது செவ்வாய் 1 ஏழு எட்டில் இருக்க சூரியன்
பார்க்க நெருப்பு ராசி எனில் நீரினால் அபாயம் இருக்கும்.
சந்திரனை ஒரு லக்னத்திலிருந்து பார்க்க பலமற்ற செவ்வாய் அல்லது நீசம் பெற்ற செவ்வாய் எட்டில்
இருக்க அந்த ராசி நீர் ராசி எனில் ஜாதகருக்கு நீரினால் அபாயம் ஏற்படும்.
கிரகங்கள் பாதிக்கப்பட்டு ஆறாம் பாவத்தோடு தொடர்பு ஏற்பட்டால்
சூரியன் பாதிக்கப்பட்டு ஆறாம் வீட்டோடு அல்லது அதன் அதிபதிக்கு தொடர்பு கொண்டால் கொப்பளங்கள்,
தலைவலி, காச நோய், ரத்த அழுத்தம், கால் கட்டைவிரலில் அசுத்தம் பெரும்.
சந்திரன் பாதிக்கப்பட்டு ஆறாம் பாவம் அல்லது அது அதிபதிக்கு தொடர்பு கொண்டால் உணவு செரியாமை,
வயிற்று பிரச்சனை, ரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி ,சர்க்கரை வியாதி, ரத்தக்குழாயில் நோய், இருக்கும்.
செவ்வாய் பாதிக்கப்பட்டு ஆறாம் பாவம் அல்லது அதன் அதிபதிக்கு தொடர்பு ஏற்பட்டால் காய்ச்சல்,
எரிச்சல், தசைகளில் பிரச்சனை, தோல்நோய், விரைவீக்கம், குடலிறக்கம், ஆசன நோய் இருக்கும்.
புதன் ஆறாம் பாவம் அல்லது அதன் அதிபதிக்கு தொடர்பு கொண்டால் நரம்பு சம்பந்தமான நோய்,
மனநோய், மனச்சோர்வு, கவலை, மூச்சுத் திணறல், தலைவலி, சளி, மூட்டு வலி, கை கால் வலி
இருக்கும்.
குரு பாதிக்கப்பட்டு ஆறாம் பாவம் அல்லது அதன் அதிபதிக்கு தொடர்புகொண்டால் கல்லீரல், வயிறு, கை
கால் வலி இருக்கும்.
சுக்கிரன் பாதிக்கப்பட்டு ஆறாம் பாவம் அதன் அதிபதிக்கு தொடர்பு கொண்டால் சர்க்கரை நோய், சிறுநீரக
பாதிப்பு, கருப்பை பாதிப்பு இருக்கும்.
சனி பாதிக்கப்பட்டு ஆறாம் பாவம் அதன் அதிபதிக்கோ தொடர்பு கொண்டால் நரம்பு சம்பந்தமான நோய்
இருக்கும், கை கால்கள் வலி, மூட்டுவலி, காக்காவலிப்பு இருக்கும்.
ராகு பாதிக்கப்பட்டு ஆறாம் பாவம் அல்லது அதன் அதிபதிக்கு தொடர்பு கொண்டால் காக்கா வலிப்பு,
சின்னம்மை, குஷ்டம் வரும்.
கேது பாதிக்கப்பட்டு ஆறாம் பாவம் அல்லது அதன் அதிபதிக்கு தொடர்பு கொண்டால் காக்காவலிப்பு,
அம்மை, குடல் நோய், செரிமான கோளாறு இருக்கும் இவை அனைத்தும் ஆறாமிட தசா புத்தியில்தான்
நடக்கும்.
கிரக இணைவுகளால் வரும் நோய்கள்
செவ்வாய் ராகு ஆறில் இருந்தால் விரைவீக்கம்.
செவ்வாய், ராகு, சனி நினைவு குடலிறக்கம்.
குரு, ராகு லக்னத்தில் இருந்தால் குடலிறக்கம். செவ்வாய், ராகு ஏழில் இருந்தால் மாதவிடாய் கோளாறு.
கேது 6 அல்லது ஏழாம் அதிபதியோடு சேர்ந்து இருந்தால் நெஞ்சில் கோளாறு, நுரையீரல் பிரச்சனை
இருக்கும்.
ஆறாம் அதிபதி ஏழில் இருந்தால் கைகால் கிழிப்பு வரும்.
சுக்கிரன், சந்திரன் 6 ல் இருந்தால் மாலைக்கண் நோய் வரும்.
லக்னாதிபதி சூரியன் சுக்கிரன் 6 ல் இருந்தால் பார்வை இழப்பு.
ஆறாம் அதிபதி ஏழில் இருந்து செவ்வாய் தொடர்பு இருந்தால் சின்னம்மை நோய் வரும்.
எட்டாம் அதிபதி 6 ம் அதிபதியோடு சேர்ந்திருந்தால் ஆயுள் குறைபாடு இருக்கும்.
எட்டாம் அதிபதி லக்னாதிபதி யோடு ஆறில் இருந்தால் ஆயுள் குறைவு.
லக்னாதிபதி சூரியன் 6 ல் இருந்தால் கொப்புளம் காய்ச்சல் வரும்.
லக்னாதிபதி சந்திரன் 6 ல் இருந்தால் தண்ணீர் கொப்பளம்.
லக்னாதிபதி செவ்வாய் 6 ல் இருந்தால் சுரப்பிகள் பிரச்சனை, காயம் ஏற்படும்.
லக்னாதிபதி புதன் 6 ல் இருந்தால் ஆசன நோய் இருக்கும்.
லக்னாதிபதி குரு ஆறில் இருந்தால் வயிற்றுப்போக்கு இருக்கும்.
34

லக்னாதிபதி சுக்கிரன் 6 ல் இருந்தால் வெள்ளைப்படுதல், சுக்கிலம் கெடுதல்.


செவ்வாய் சனி ராகு அல்லது செவ்வாய் சூரியன் சனி 6 ல் இருந்தால் நோய் அதிகமாக இருக்கும்.
சனி ராகு 6 ல் இருந்தால் கழுத்து வீங்குதல், குடல்புண் இருக்கும்.
பாவ கிரகம் ஆறில் அல்லது கன்னியில் இருந்தால் வயிற்றில் பிரச்சினை இருக்கும்.
ஆறாம் அதிபதி சூரியன் சேர்ந்து லக்னத்தில் இருந்தால் தலைக்காயம் வரும்.
ஆறாம் அதிபதி சந்திரன் சேர்ந்து லக்னத்தில் இருந்தால் வாய், குதம் இதில் நோய் வரும்.
ஆறாம் அதிபதி செவ்வாய் லக்னத்தில் இருந்தால் கழுத்தில் நோய் வரும்.
ஆறாம் அதிபதி புதன் லக்னத்தில் இருந்தால் இருதய நோய் வரும்.
ஆறாம் அதிபதி குரு சேர்ந்து லக்னத்தில் இருந்தால் அடிவயிறு பிரச்சனை நோய் இருக்கும்.
ஆறாம் அதிபதி சுக்கிரன் சேர்ந்து லக்னத்தில் இருந்தால் கண் பார்வை, கோளாறு வரும்.
ஆறாம் அதிபதி சனி சேர்ந்து லக்னத்தில் இருந்தால் கால் பாதங்களில் நோய் வரும்.
ஆறாம் அதிபதி ராகு அல்லது கேது சேர்ந்து லக்னத்தில் இருந்தால் உதட்டுப்பிளவு வரும்.
ஆறாம் வீட்டில் சந்திரன் இருந்தால் அஜீரண கோளாறு இருக்கும், கவலையற்ற தன்மை இருக்கும்.
நவாம்சத்தில் விருச்சிகத்தில் உள்ள கிரகம் வியாதியை சொல்லும்.
நவாம்ச விருச்சிக ராசியில் ராகுவுடன் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகம் இருந்தால் மாற்று உறுப்பு
பொருத்துவார்கள்.
உடலில் ஒரு உறுப்பு எடுத்துவிட்டு வேறு உறுப்பு பொருத்துவார்கள்

ஆறாம் பாவம்
ஒருவருக்கு ஏற்படும் வியாதி, அதனால் ஏற்படும் பாதிப்பு, பகைவர்களால் ஏற்படும் துன்பம், ஆயுதங்களால்
ஏற்படும் ஆபத்து, காயங்கள், தாயின் உறவினர்களுடன் ஏற்படும் வழக்குகள், சண்டையிடுதல், யுத்தம்
செய்தல், வீண் வம்பிற்கு செல்லுதல், திருடர்களால் ஆபத்து, பொருட்கள் களவாடப்படுதல், தண்ணீரால்
ஆபத்து, பெண்களால் உண்டாகும் வீண் வம்புகள், அதனால் அடையும் துன்பம், பாம்புகளால்-விஷத்தால்
ஆபத்து, சந்தேகம், சோம்பேறித்தனம், ஒருவரை தூசித்தல், பாவமான காரியங்களை செய்தல், நோய்,.
சிறைபடுதல், உயர் பதவி பெறுதல், கால்நடைகளை பற்றி அறிதல் இவை ஆறாம் பாவம் குறிக்கும்
காரகங்களாகும்.

நமக்கு வங்கியிலிருந்து பணம் கடனாகப் பெறவேண்டும். எப்படிப் பதில் சொல்வது?


7-ம் வீடு நாம் ஒருவருடன் செய்யும் Transaction-ஐக் குறிக்கிறது. அதாவது 7-ம் வீடு வங்கியைக் குறிக்கிறது.
நமக்குப் பணம் கொடுப்பதென்றால் வங்கியின் பணம் குறைகிறது அல்லவா? நமது பணம் இருப்புக்
கூடுகிறது. 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு வங்கியின் பண இழப்பையும் 11-ம் வீடு அல்லது 2-ம் வீடு நாம் பணம்
பெறுதலையும் குறிக்கிறது.
6-ம் வீட்டு அதிபதி 2-ம் வீட்ட்டிலோ அல்லது 2-ம் வீட்டின் அதிபதி 6-ம் வீட்டிலோ இருக்குமேயாகில்
ஒருவருக்கு வங்கியிலிருந்து பணம் கிடைக்குமெனக் கூறலாம்.
நாம் இத்துடன் 6-ம் வீட்டைப் பற்றி நிறுத்திக் கொள்வோம். 6-ம் வீடு நம்முடைய எதிரிகளைக் குறிக்கிறது
அல்லவா?
அதில் பாப கிரகங்கள் இருப்பார்களேயாகில் எதிரிகள் ஓரளவிற்குக் குறைவாகவே இருப்பர். நல்ல
கிரகங்கள் இருந்தால் எதிரிகள் அதிகம் இருப்பர்.
6-ம் வீட்டில் சூரியன் இருந்தால் ஒருவர் அரசியலில் பெயர் வாங்க முடியும். 6-ம் வீடு எதிராளியின்
தோல்வியைக் குறிக்கும் வீடல்லவா? சூரியன் அரசியலுக்குண்டான கிரகம்.
6-ம் வீட்டிலுள்ள சூரியனை சனி பார்த்தால் இருதய சம்மந்தமான நோய் வரக் கூடும்.
35

6-ம் வீட்டில் சந்திரன் இருந்தால் இளம் வயதில் உடல் உபாதை நிறைய இருக்கும். அது சிலருக்கு
பாலாரிஷ்டமாகக் கூட இருக்கும். சமையல்கலையில் வல்லவராக இருப்பர்.
6-ம் வீட்டில் செவ்வாய் இருந்தால் எதிரிகளை எளிதாக வெல்லுவர்.
6-ம் வீட்டில் புதன் இருந்து ராகு, சனி, செவ்வாய் போன்ற கிரகங்களின் சேர்க்கையோ அல்லது
பார்வையோ இருக்குமேயாகில் நரம்புசம்மந்தமான வியாதிகளோ, சித்தப் பிரமையோ ஏற்படக் கூடும்.
6-ம் வீட்டில் குரு இருந்தால் மரியாதைக் குறைவு ஏற்படும். சிலர் துர்தேவதைகளை வசியம் செய்வதில்
ஈடுபடுவர்.
6-ம் வீட்டில் சுக்கிரன் இருந்து கெட்ட கிரகங்களின் சேர்க்கையோ அல்லது பார்வையோ இருக்குமேயாகில்
பிற பெண்களுடன் தொடர்பு இருக்கும்.
6-ம் வீட்டில் சனி இருந்தால் இவருக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள்.
6-ம் வீடு செய்யும் வேலையையும் குறிக்கிறது அல்லவா?
6-ம் வீட்டில் சனி இருந்தால் இரும்புத் தொழில், சுரங்கவேலைகள் ஆகியவற்றில் வேலை செய்வர்.
6-ம் வீட்டில் ராகு பாபியருடன் சேர்ந்து இருந்தால் அந்தரங்க உறுப்புக்களில் வியாதி இருக்கும். ராகுவுடன்
சனியும், சந்திரனும் சேர்ந்து இருந்தால் ஹிஸ்டீரியா நோயினால் அவதிப் படுவர்.
கேது 6-ம் வீட்டில் இருப்பது அவ்வளவு கெடுதல் இல்லை.
6-ம் வீட்டிற்கதிபதி லக்கினத்தில் லக்கினாதிபதியுடன் இருப்பாரேயாகில் அந்த ஜாதகர் நோயினால்
அவதிப்படுவர். அவர்களுடன் ராகுவும் சேர்வாரேயாகில் அந்த ஜாதகர் வீட்டில் களவு போகும்.
6-ம் வீட்டிற்கதிபதி 3-ம் வீட்டில் இருந்தால் அந்த ஜாதகருக்கும் அவர் இளைய சகோதரத்திற்கும் நல்லுறவு
இருக்காது. காது, தொண்டை சம்மந்தமான வியாதி இருக்கும்.
பொதுவாக 6-ம் வீட்டை வைத்துத்தான் ஒருவருக்கு வரக்கூடிய வியாதிகளைச் சொல்ல வேண்டும்.
6-ம் வீடு என்பது நாம் செய்யும் அடிமைத்தொழிலைக் குறிக்கிறது. வேலைக்குச் செல்பவர் எல்லோரும்
அடிமைத் தொழிலாளர்தான்.
ஆக 6-ம் வீடு நாம் செய்யும் தொழிலைக் குறிக்கிறது.
6-ல் ஒரு கிரகம் இருக்கிறது எனக் கொள்ளுங்கள். அதன் தசா புக்தி காலங்களில் ஒருவருக்கு வேலை
கிடைக்கும். அல்லது பதவி உயர்வு கிடைக்கும். இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்து இருக்கும்.
6-ம் வீட்டில் உள்ள ஒரு கிரகத்தின் தசா, புக்தி காலத்தில் ஒருவருக்கு வேலை கிடைக்குமா அல்லது
உடல் நிலை பாதிக்கப் படுமா? எப்படிக் கூறுவது?
6-ம் வீட்டில் உள்ள கிரகம் லக்கினமாகிய முதல் வீட்டுடன் சம்மந்தப் பட்டால்தான் உடல் நிலை
பாதிக்கும். முதல் வீட்டுடன் சம்மந்தப் படவில்லையானால் உடல்நிலை பாதிக்காது.
லக்கினாதிபதியும், 6-ம் வீட்டில் உள்ள கிரகமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளலாம்; அல்லது
சேர்ந்து இருக்கலாம். அவ்வாறு 6-ம் வீடும் 1-ம் வீடும் சம்மந்தப் பட்டால்தான் ஒருவரின் உடல்நிலை
பாதிக்கப்படும்.
அடுத்ததாக ஒருவரின் வேலையாட்களைக் குறிப்பதும் இந்த வீடுதான்.
6-ம் வீட்டில் சுபர்கள் இருந்தால் வேலையாட்கள் மூலமாக ஒருவர் பயனடைவார். பாப கிரகங்கள்
இருந்தால் அவர்களால் செலவுதான். பயன் இருக்காது.
6-ம் வீடு நமக்குப் பிரியமான சாப்பாட்டையும் குறிக்கிறது. ஒருவரின் 6-ம் வீட்டில் சனியிருந்தால்
போஷாக்கற்ற உணவுவகைகளை உட்கொள்ளுவார். போதுமான அளவு சாப்பாடும் கிடைக்காது.
6-ம் வீட்டில் சுக்கிரன் இருக்குமேயாகில் வகை வகையான உணவுவகைகளை உட்க்கொள்ளுவர்.
ஒரளவிற்கு மதுபானத்திலும் பிரியம் இருக்கும்.
6-ம் வீட்டில் சந்திரன் ஒரு நீர்க்கிரகம் அல்லவா? நீர்சம்மந்தப்பட்ட உணவுவகைகளை விரும்பி
உட்கொள்ளுவார். அதுவும் 6-ம் இடம் நீர்ராசிகளாகிவிட்டால் கேட்கவே வேண்டாம். மதுபானப் பிரியராக
இருப்பார். அதைத் தவிர பாட்டில்களில்வரும் குளிர்பானங்களையும் விரும்பிச் சாப்பிடுவார்.
36

6-ம் வீட்டில் குரு இருக்குமேயாகில் நல்ல உணவுவகைகளை உட்கொள்ளுவார்.


6-ம் வீட்டில் செவ்வாய் இருந்தால் தேவைக்கு அதிகமாக உட்கொள்வர். இவ்வாறாக கிரகங்களின்
குணாதிசயங்களை வைத்துப் பலன் சொல்லவேண்டும்.
6-ம் வீடு கடன் என்றும் கூறுவார்கள்.
6-ம் வீட்டின் அதிபதி 8-ம் வீட்டில் இருப்பாரேயானால் ஒருவருக்குக் கடன் தொல்லைகள் அதிகம்
இருக்கும்.
6-ம் வீட்ட்டின் அதிபதி 11-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் கொடுத்த கடன் திரும்பி வரும். அல்லது
உத்தியோகத்தில் பதவி உயர்வு தேடிவரும்.
6-ம் வீடு 12-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் நாம் வாங்கிய கடனைக் கொடுப்போம். அதாவது 6-ம் வீடு
கடனைக் குறிக்கிறது. 12-ம் வீடு செலவைக் குறிக்கிறது. 6-ம் 12-ம் சேர்ந்தால் நாம் வாங்கிய
கடனைத்திருப்பிக் கொடுப்போம்.
ஆறாம் இடத்தில் சூரியன் இருந்தால்
கண்நோய்,தந்தையோடு கருத்து வேறுபாடு இருக்கும்.தந்தையின் உறவு சரி இருக்காது. தந்தையால் கடன்
உண்டு. வயிறு தொடர்பான நோய் இருக்கும். காய்ச்சல், தலைவலி இருக்கும். அரசு வேலை உண்டு.
அதிகாரம் செய்யும் வேலை அமையும். மருத்துவம். அரசாங்க ஆவணங்களை கவனமாக வைத்துக்கொள்ள
வேண்டும். தலைமை தாங்குவார்கள். சூரிய சக்தி, சூரியன் சார்ந்த தொழில் செய்யலாம். தைரியம்
மிக்கவர். குழந்தைகளை பிரிந்து வாழ்வார்கள். VRS எண்ணம் இருக்கும். விரைவில் தலை வழுக்கை
விழும்.
6-ல் சந்திரன் இருந்தால்
கண் நோய் இருக்கும். தாயாரால் அல்லது தாயாருக்கு கடன் இருக்கும். தாயுடன் கருத்து வேறுபாடு
இருக்கும். சொந்த தொழில் செய்யக்கூடாது. மார்க்கெட்டிங் செய்யலாம். அடிக்கடி இடமாற்றம் உண்டு.
சளித் தொந்தரவு இருக்கும்.
ஏழில் சந்திரன் இருந்தால் கடன் வாங்கக்கூடாது சுவாசக்கோளாறு உண்டு, பெண்கள் இவர்களுக்கு
எதிரியாக இருப்பார்கள், 3, 6 ,10 ,11 இல் சந்திரன் இருந்தால் அடிக்கடி இடமாற்றம் செய்வார்கள்
ஆறில் செவ்வாய் இருந்தால்
நிர்வாகத் திறமை உண்டு. ஒன்றுக்கும் மேற்பட்ட சொத்துக்கள் உண்டு. மருத்துவம், காவல்துறை, வண்டி
தொழில் செய்யலாம். அடிக்கடி விபத்து இருக்கும். ரத்தம் சம்பந்தமான தொழில் இருக்கும். இறைச்சி
அல்லது கோழி கடை வைக்கலாம்.
இவர்கள் அதிகமாக கோபப்படக்கூடாது. ரத்த அழுத்தம் உண்டு.
இவர்கள் ரத்ததானம் செய்யலாம். பிளட் பேங்க் டொனேஷன் செய்யலாம். இவர்கள் எலுமிச்சை பழத்தை
இரண்டாக வெட்டி சிவப்பு குங்குமம் தடவி அதை பிழிந்து விடுவது நல்லது.
ஆறில் புதன் இருந்தால்
ஆவணங்களை சரியாக வைத்துக்கொள்ளவேண்டும். வெளிநாட்டு வருமானம் உண்டு. சீட்டு, கமிஷன்,
வட்டி, தரகு, ஜோதிடம் இந்த வேலைகளைச் செய்யலாம். ஜோதிடம் அருமை. 8 12 தொடர்பு இல்லாமல்
ஜோதிடம் கிடையாது. இன்சென்டடிங் வேலை செய்யலாம். பத்திரம், காலிமனையில் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும். வழக்கு வரும்.
ஆறில் புதன் திதி சூன்யம் ஆனால் ஐ பி கொடுப்பார்கள். கடனுக்காக தலைமறைவு ஆவார்கள். பல
வித்தைகள் செய்வார்கள். வித்தை காரர்களாக இருப்பார்கள். நரம்பு தோல் நோய் வரும். வயது
குறைவான பெண்கள் தான் இவர்களுக்கு எதிராக இருப்பார்கள். இவர்கள் ஜாமீன் போடக்கூடாது. ஜாமீன்
பெறவும் கூடாது. இரண்டுமே ஆகாது. இவர்களுக்கு தந்திரம் அதிகமாக இருக்கும். ஏமாளி, நரித்தந்திரம்
உள்ளவர்களாக இருப்பார்கள்.
37

ஆறில் குரு இருந்தால் குழந்தை தாமதம். குரு ஆறு, எட்டு, பன்னிரெண்டில் இருந்தால் சுபகாரியம் தடை.
பொருளாதார தடை கொடுக்கும். பொருளாதாரம் வரவுக்கும், செலவுக்கும் சரியாக இருக்கும். எதிரி
வசதியானவராக இருப்பார். எதிரி கௌரவமான நபராக இருப்பார். எதிரி ஆச்சார மாணவராக இருப்பார்.
எதிரி பதவியில் உள்ளவராக இருப்பார். அந்தனர், பூஜாரி, ஜோதிடர் இவர்கள் எதிரியாக இருப்பார்கள். இதே
தொழிலை ஜாதகர் செய்வார். உறவுகள் முறியும். கடன் பெருகும். இவரே இவருக்கு எதிரி. வயிறு
பிரச்சனை, மஞ்சக்காமாலை நோய் இருக்கும்.
ஆறில் சுக்கிரன் இருந்தால்
வாகன தொழில். அழகு தொழில் செய்யலாம். கலைத்துறையில் வேலை செய்யலாம். திருமணத்தடை
இருக்கும். பொருளாதார தடை இருக்கும். இரண்டு மணம் இருக்கும் அல்லது மணம் தடை. வீடு கட்ட
தடை. வீடு கட்ட கடன் கிடையாது. கண் நோய், யூரியன் பிரச்சனை இருக்கும். சுகர் இருக்கும். ஆறில்
சுக்கிரன் இருந்து அது நீர் ராசி ஆனால் குடிப்பழக்கம் இருக்கும். இவர் இருக்கும் வரை அனுபவிக்க
வேண்டும் என்ற சிந்தனை இருக்கும். கலைகளில் வெற்றி உண்டு. சாஸ்திரம் குணம் இருக்கும்.
அரசனுக்கு கூட ஜோதிடம் பார்க்க இவர்களுக்கு திறமை இருக்கும். மந்திர தந்திரங்களில் ஈடுபாடு
அதிகமாக இருக்கும்.
ஆறில் சனி இருந்தால்
வேலை ஆளே எதிரியாக இருப்பார். வேலையாட்கள் மூலம் தொல்லை அதிகமாக இருக்கும்.
வேலையாட்கள் இவர்களுக்கு ஆகாது. கீழ்மட்ட மனிதர்களால் அதிக தொல்லை இருக்கும். வேலைக்கு
போவது இவர்களுக்கு நல்லது. கடின வேலை செய்வது நல்லது. மூட்டு வலி இருக்கும். ஒன்பதில்
பரல்கள் அதிகமாகி பத்தில் பரல்கள் குறைந்தால் நோகாமல் வருமானம் வரும். ஒன்பதில் பரல்கள்
குறைந்து பத்தில் பரல்கள் அதிகமானால் வேலை அதிகமாக இருக்கும். சனியும் கேதுவும் ஆறில்
இருக்கக்கூடாது. இவர்களுக்கு நேர்மை இருக்கும். இரும்பு ஏற்றுமதி இறக்குமதி செய்வார்கள். தார் ரோடு
போடுவது, கழிவுநீர் தொட்டி கிளீன் செய்வது, 6 ல் சனி, சந்திரன் இருந்தால் சாக்கடை, கக்கூஸ் அருகே
உணவு தொழில் அமையும். பக்கவாதம் அதிகமாக வரும்.
ஆறில் ராகு இருந்தால்
வெளிநாட்டு வேலை அல்லது வெளிநாட்டு மூலம் வருமானம் இருக்கும். மருந்து, மருத்துவ தொடர்பான
தொழில் இருக்கும். விஷ மருத்துவ தேர்ச்சி இருக்கும். தற்கொலை எண்ணம் அதிகமாக இருக்கும். வட்டி
தொழில், அடகு, மாந்திரீகம், போதைப் பழக்கம் இருக்கும். ஏதாவது ஒரு எதிரி இருந்துகொண்டே
இருப்பார்கள். எக்ஸ்ரே ஸ்கேன் தொழில் செய்யலாம். வெளிநாடு செல்லலாம். பணம் மாற்றம் தொழிலும்
செய்யலாம்.
6 ,9 இல் ராகு இருப்பது லக்ஷ்மியோகம்.
இதற்கு ஜீவசமாதி வழிபாடு நல்லது. அம்மன் வழிபாடு, ஈடுபாடு இருப்பது நல்லது. அம்மன்
கோவில்களுக்கு பயணம் செய்வது நல்லது. இவையெல்லாம் செய்தால் லஷ்மி கடாக்ஷம் கிடைக்கும்.
ஆறில் கேது இருந்தால்
மருத்துவம், சட்டம், ஜோதிடம் செய்யலாம். சட்டத்தின் உள்ளே ஒரு நாளாவது சென்று வருவார்கள்.
யூனிஃபார்ம் போடாத போலீசாக இருப்பார். செவ்வாய் கேது 3-ஆம் இட கேது உணவு தொழில் செய்யலாம்.
லக்ன கேது யூனிஃபார்ம் போடாமல் வண்டி ஓட்டுவார்கள். சுக்கிரன், கேது ஒன்றுவிட்ட மச்சினி அல்லது
ஒன்றுவிட்ட சகோதரன் என்று எடுக்கலாம். நேரத்திற்கு சாப்பிடாமல் வயிற்றுப் பிரச்சனை இருக்கும்.
இவர்கள் இடத்தில் சுவர் வேலி போட்டால் பிரச்சனை வரும். வழக்கு இருக்கும். உறவில் விரிசல் உண்டு.
உத்தியோகம் நல்லா இருக்கும்.

டிப்ஸ்
38

சுக்கிரன் நீசம் ஆனால் நாய்கடி உண்டு. நவாம்சத்தில் சுக்கிரன் நீசம் ஆனால், மனைவிக்கு நாய்க்கடி
உண்டு. ஆறாம் அதிபதி எங்கு இருந்தாலும் அந்த வீட்டு அதிபதி அங்கு இருந்தால் பெரும் பாதிப்பு
இருக்கும். ஆறாம் அதிபதி எங்கு இருந்தாலும் 8, 12- க்கு உடையவரோடு சேரக்கூடாது.
ஒரு உப ஜெய ஸ்தானாதிபதி மற்றொரு உப ஜெய ஸ்தானாதிபதியும் மாறி மாறி இருப்பது உயர்வான
பொருளாதார வாழ்வு கொடுக்கும்.
குரு, சுக்கிரன், புதன் உப ஜெயத்தில் இருந்தால் அது வசுமதி யோகம். சொத்து மதிப்பு உண்டு.
பாவிகளுக்கு உபஜெய ஸ்தானம் நல்லது 3, 6, 10, 11 இதில் இருந்து திசை நடத்தினால் யோகம் இருக்கும்.
ஆறாம் அதிபதி மீது கோசார கேது வரும்போது கடன், வழக்கு, நோய் வரும்.
ஆறாம் அதிபதிக்கு அடுத்து பதினொன்றாம் அதிபதி இருந்தால் கடன், நோய், வழக்கு தீரும்.
தனுசு மிதுனம் லக்னகாரர்களுக்கு 6, 11 க்கு ஒரே கிரகம் வருவதால் கடன் அடைபடும்.
ரிஷபம், விருச்சிகம் வழக்கு வெல்லும் ராசி.
கும்பம் ராசி, ஆறாம் அதிபதி, ஆறாம் பாவம் திதி சூனியத்தில் இருந்தால் கடனால் அவமானம் இருக்கும்.
லக்ன பாகையும் ஆறாம் அதிபதி பாகையும் நெருக்கம் ஆனால் கடன் இருக்கும். ஆனால் நல்ல வேலை
கிடைக்கும்.
ஆறாம் அதிபதி ஐந்தில் இருந்தால் வெல்வார்கள்.
ஆறு ஐந்து 6, 9 வழக்கில் சாட்சி சொல்வார்கள். வழக்குக்கு ஆதாரம் கிடைக்காமல் ஓய் வெற்றி
கிடைக்கும்.
ஜாதகருக்கு 6 ஆம் அதிபதியும் 11 ஆம் அதிபதியும் வலுகுன்றி இருந்து யாராவது ஒருவர் புதன்
நட்சத்திரத்தில் இருந்தால் I P கொடுப்பார்கள்.
ஆறாம் அதிபதிக்கு செவ்வாய், ராகு தொடர்பு அல்லது ராகு சாரம் பெற்ற கிரகத்தை ஆறாம் அதிபதியும்,
செவ்வாயும் பார்த்தால் நாய் கடி நிச்சயம்.
திதி சூன்யம் பாதகாதிபதி தொடர்பு நாய்க்கடி நிச்சயம்.
நாலாம் இடமாக வந்தால் வீட்டு நாய் கடிக்கும்.
ஏழாம் இடமாக வந்தால் எதிர் வீட்டு நாய் கடிக்கும்.
நாய்க்கடி நட்சத்திரம் திருவாதிரை இதிலுள்ள கிரகத்திற்கும் நாய்க்கடி உண்டு.
ஆறாம் அதிபதி வக்கிரம், பத்தாம் அதிபதி வக்ரம் என்றாலும் 6, 10 க்கு வக்ரகிரக தொடர்பு என்றாலும் பல
இடங்களில் பணியாற்றுவார்கள். பதவி உயர்வுக்கு தடை இருக்கும்.
ஒரு பாவத்திற்கு ஒரு கிரகத்திற்கு 3, 6, 10, 11 இல் உள்ள கிரகம் அந்த பாவத்திற்கு அந்த கிரகத்திற்கு
வலுவை கூட்டுகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் 3, 6, 10, 11 இல் இருப்பது ஜாதகருக்கு எதிர்பாராத வளர்ச்சி இருக்கும்.
விபரீத ராஜயோகம் செயல்படும்.
இதை 40, 45 வயது உள்ளவர்களுக்கு சொல்ல வேண்டும் என் வாழ்வு நன்றாக இருக்கும் ஒரு இழப்பை
சந்தித்து மீண்டும் ஒரு நல்ல நிலைக்கு வருவார்கள்.
உப ஜெயத்தில் இயற்கை பாவர்கள் இருப்பது மிக மிக நன்மை.
ஆறாம் பாவத்திற்கு ஆறாம் அதிபதிக்கு கேது தொடர்பு இருந்தால் கட்டாயம் வழக்கு இருக்கும்.
ஆறாம் அதிபதி நின்ற பாகையில் முன்பின் மூன்று பாகையில் கேது நின்றால் வழக்கு இருக்கும். ஆறாம்
பாவத்திற்கு கேது தொடர்பு அகால போஜனம்.
ஆறாம் அதிபதிக்கு அடுத்து ராகு, கேது, சந்திரன், செவ்வாய், சனி தொடர்பு எனில் இவர்களில் இருவர்
அல்லது மூவர் இருந்தால் தேவையற்ற கடன் வரும். தன் தேவைக்கு தொடர்பில்லாத கடன் வரும்
ஆறாம் அதிபதி பன்னிரெண்டாம் இடத்தை பார்த்தால் இவர்களுக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்
செய்யலாம். இரவு தொழில் செய்யலாம்.
39

லக்னம் லக்னாதிபதிக்கு ஆறாம் அதிபதி தொடர்பு இருந்தால், தொடர்ந்து கடன் இருந்து கொண்டே
இருக்கும். கோபம் அதிகமாக இருக்கும்.
ஆறாம் பாவத்திற்கு செவ்வாய், சுக்கிரன் தொடர்பு இருந்தால் விபத்து இருக்கும் செவ்வாய்க்கு அடுத்து
அல்லது ஆறாம் அதிபதி க்கு அடுத்து எந்த கிரகம் இருக்கிறதோ அந்த காரக உறவுக்கு விபத்து இருக்கும்.
கிருத்திகை நட்சத்திர சாரத்தில் ஒரு கிரகம் இருந்து அதற்கு ஒரு விபத்து நடந்தால் அவர் பிழைத்துக்
கொள்வார்.
திருவாதிரையில் நின்றால் அது இறந்துவிடும்.
ஆறாம் அதிபதி 5, 9 இல் இருந்தால் உத்தியோகம் தேடி வரும்.
ஆறாம் அதிபதி 5, 9, 11, 12 இல் இருந்தால் கடன் ஜாதகர் பெறுவார்.
ஆறாம் பாவகம் நிர்வாகத் திறனை குறிக்கும்.
சூரியன் ராசி அம்சத்தில் பலம் பெற்றால் மருந்து மாத்திரை இல்லாமல் நோய் குணமாகும். பெரும்
மருத்துவம் தேவை இருக்காது.
ஆறாம் அதிபதி பார்வை பெற்ற கிரகத்திற்கு சூரியன் செவ்வாய் பார்வை பெற அந்த உறவு பெரிய
பதவியில் இருக்கும்.
ஆறாம் அதிபதி நெருப்பு ராசிகள் இருந்தால் வெப்பநோய் இருக்கும்.
ஆறாம் அதிபதி நீர் ராசியில் இருந்தால் வலிப்பு, நீர் நோய், நரம்பு நோய் இருக்கும்.
ஆறாம் அதிபதி நில ராசியில் இருந்தால் தோல் நோய் இருக்கும்.
ஆறாம் அதிபதி காற்று ராசியில் இருந்தால் மாரடைப்பு, சுவாசநோய், விக்கல், ஏப்பம், கேஸ் சம்பந்தப்பட்ட
பிரச்சனை இருக்கும்.
ஆறாம் அதிபதி சர ராசியில் இருந்தால் நோய் வரும், ஆனால் நோய் போய் விடும்.
ஆறாம் அதிபதி ஸ்திர ராசியில் இருந்தால் நோய் வருவதற்கு லேட் ஆகும் நோய் போவதற்கும் லேட்
ஆகும்.
ஆறாம் அதிபதி உபய ராசியில் இருந்தால் ஒருமுறை வந்த நோய் இரண்டு முறை வரும் இரண்டு ஊசி
போட வேண்டும்.
நவாம்ச விருச்சிகத்தில் கிரக சேர்க்கை பலன் குரு கேது நவாம்ச விருச்சிகத்தில் இருந்தால் உடம்பில்
கட்டி அதிகமாக இருக்கும்.
சந்திரன் சுக்கிரன் நவாம்ச விருச்சிகத்தில் இருந்தால் வெண்குஷ்டம் வரும்.
சந்திரன் புதன் நவாம்ச விருச்சிகத்தில் இருந்தால் வெண்குஷ்டம், மறதி, மனநிலை பாதிப்பு இருக்கும்.
புதன் சனி நவாம்ச விருச்சகத்தில் இருந்தால் வலிப்பு, வெரிகோஸ் ப்ராப்ளம் இருக்கும்.
சூரியன் + கேது, சந்திரன்+கேது நவாம்ச விருச்சிகத்தில் இருந்தால் ஆஞ்சியோ பிளஸ் பண்ணுவார்கள்.
ராசி கட்டத்தில் கடகத்துக்கு கேது தொடர்பான ஆஞ்சியோ பிளஸ் பண்ணுவார்கள்.
நீச சனி இரண்டை பார்த்தால் பேச்சு அசிங்கமாக இருக்கும்.
சனி செவ்வாயுடன் ஒரு கிரகம் இருந்தால் இருந்த கிரக உறுப்பு வெட்டி எடுக்கப்படும். விருச்சிக
நவாம்சத்தில் கிரகம் இல்லாமல் இருப்பது நல்லது.
பத்தாமிட புதனும் கர்ம ஸ்தானாதிபதியும் லக்னாதிபதி யுமான புதன் நாலாம் இட சுகஸ்தானத்தில் குரு
புதன் இருவரும் தோஷத்தில் உள்ளார்கள்
மூன்று எட்டுக்குடைய செவ்வாய் மூன்றாம் இடத்தில் ஆட்சி பெற்று திதி சூன்ய ராசி கிரகமும் செவ்வாய்
அதனால் ரத்தக் குறைபாடு வீரியத்தன்மை மற்றும் ரத்த அணுக்கள் குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது
அந்த செவ்வாயும் சனி சாரத்தில் சனி 5 6-க்குடையவர் அதிபதி வக்கிரம்
லக்னாதிபதி நீசம் அட்டமாதிபதி குடும்பஸ்தானத்தில் குடும்ப ஸ்தானாதிபதி நாளில் அமர்ந்து கேது
மாந்தியுடன் இணைவு திருமணம் தாமதப்படும்
ஆறாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் என்ன பலன்
40

மூச்சுத்திணறல் கட்டாயம் இருக்கும். கோபம் அதிகமாக இருக்கும். கோபத்தை இவர்கள் குறைத்துக்


கொள்ள வேண்டும் அதுதான் நல்லது. தலைமை தாங்கும் பண்பு இருக்கும். இதை செவ்வாய் அல்லது
சூரியன் பார்த்தால் அரசு அதிகாரியாக இருப்பார் அல்லது மருத்துவராக இருப்பார். உடம்பில் வெட்டுக்
காயம், தழும்பு இருக்கும். இவர்கள் எதிரிகளை வெல்பவர்கள். முன்னேற்றத் தடை இருக்கும். தடையை
மீறி தான் முன்னேறவேண்டும். வெற்றி நிச்சயம். தாமத திருமணம் இருக்கும்
ஆறாம் அதிபதி இரண்டில் இருந்தால் என்ன பலன்
வெளிநாட்டு வருமானம் உண்டு. குடும்பத்தில் சண்டை சச்சரவு பிரிவினை இருக்கும். கண் பல்
தொடர்பான மருத்துவ செலவு இருக்கும். பொருளாதாரரீதியாக ஒரு அவச்சொல் இருக்கும். கெமிக்கல்
தொழில் நன்று. உணவுத் தொழில் மூலம் வருமானம் உண்டு. பேச்சால் வருமானம் நல்லது.
கட்டப்பஞ்சாயத்து இருக்கும். இளமையில் வறுமை இருக்கும். வாக்குறுதி இவர்கள் மற்றவர்களுக்கு
கொடுக்கக்கூடாது. துவக்க கல்வி தடை இருக்கும். படிக்கும்போதே வேலை இருக்கும். நேரத்திற்கு
சாப்பிடுவார்கள். ஆறுமுகம் என்ற பெயர் கொண்டவர் வீட்டருகில் அல்லது நண்பராக இருப்பார்.
குடும்பத்தில் சில சலசலப்பு இருக்கும். குடும்பத்தை விட்டு ஒரு நாளாவது பிரிந்து வாழ்வார்கள். உணவுத்
தொழில் நன்று. வக்கீல் தொழில், வட்டி வருவாய், சீட்டு கம்பெனி, வேலை நன்றாக இருக்கும். இரவு
வேலை நன்று. ஆறாம் அதிபதி இரண்டில் இருந்து ஏழாம் இடம் கெட்டால் அவர்களுக்கு தாரம்
இரண்டு.செவ்வாய் சனி எந்த மாதிரி பெயர்கள் அமையும் சுப்பிரமணி சரவணன் செந்தில் இப்படி சாமியில்
முடியும் பெயர் அமையும். செவ்வாய் சுயசாரத்தில் இருந்தால் பிரபு பிரபாகர். மதுரைக்காரன்,
பாண்டிச்சேரிகாரன் இவர்கள் அருகில் இருப்பார்கள். குரு இருந்தால் குமாரராஜா, சேகர் என் பெயர்
கொண்டவர்கள் பக்கத்தில் இருப்பார்கள்.
ஆறாம் அதிபதி 3 ல் இருந்தால்
3, 6 செவ்வாய் தொடர்பு இருந்தால் காவல்துறை இராணுவம் இருக்கும். சகோதரர்களுடன் கருத்து
வேறுபாடு அதிகமாக இருக்கும். சகோதரனால் கடன் படுவார். பிறரை அடக்கி ஆளும் எண்ணம் இருக்கும்.
Ent பிரச்சனை இருக்கும். கைவிரலில் காயம் இருக்கும். பக்கத்து வீட்டாருடன் சண்டை சச்சரவு இருக்கும்.
போகத்தில் தடை இருக்கும். சிலருக்கு வீரிய குறை இருக்கும். மூன்றாம் இடம் கெட்டால் கண்டிப்பாக
இதை உறுதி செய்யலாம். ஆறாம் அதிபதி மூன்றில் இருந்து ஒன்பதை பார்த்தால் கம்யூனிகேஷன்
மார்க்கெட்டிங் செய்யலாம்
ஆறாம் அதிபதி நான்கில் இருந்தால்
கல்வித்தடை இருக்கும். வேலை செய்துகொண்டே படிப்பார்கள். தாயாருக்கு உடல்நிலை சிறிது பாதிப்பு
இருக்கும்.தாயாருடன் கருத்து வேறுபாடு இருக்கும். வீட்டிலேயே உணவு தொழில் செய்வார்கள். வீட்டின்
மீது கடன் இருக்கும். அடிக்கடி இடமாற்றம் இருக்கும். பிறந்த இடத்தை விட்டு வெளியே போவார்கள்.
வாடகை வீட்டில் வசிப்பார்கள். நீர் தொடர்பான தொல்லை இருக்கும். தாயார் வர்க்கத்தில் தண்ணீரில்
விழுந்தவர்கள் யாராவது இருப்பார்கள். இவர்கள் இரவில் வீட்டுக்கு வந்துவிடும் எண்ணம் இருக்கும்.
வீட்டின் மீது வழக்கு இருக்கும்.
வீடு கட்ட தாமதம் இருக்கும். ஆறாம் அதிபதி 4 ல் இருந்தாலோ எட்டாம் அதிபதி நான்கில் இருந்தாலோ
அது நீர் ராசியாக இருக்கும் பட்சத்தில் வீட்டிற்குள் தண்ணீர் வரும்.
எந்த பாவம் என்றாலும் செவ்வாய் சந்திரன் அல்லது சந்திரன் சுக்கிரன் மழை பெய்தால் வீட்டைப் பற்றிய
நினைவு வரும்.
மழை பெய்தால் நேரத்தில் வீட்டிற்கு எப்போ போவோம் என்று வீடு நனைந்து விடுமோ என்ற எண்ணம்
இருக்கும்.
தாயார் உறவு பாதிக்கும். உறவுகளில் பகை இருக்கும். இவர்கள் போர் போட்டால் தண்ணீர் கிடைப்பது
கஷ்டம் போருக்காக அதிக செலவு செய்வார்கள்.
41

ஆறாம் அதிபதி நாலில் இருந்தால் பள்ளியில் வேலை.பள்ளிக்கூடத்தில் சமையல் வீட்டருகே வேலை.


வீட்டின் அருகே எதிரி இருப்பார்கள். படிப்புக்காக கடன் வாங்குவார்கள். படித்த இடத்திலேயே
உள்ளூரிலேயே வேலை கிடைக்கும். தாயார் கால்நடை தொழிலில் இருப்பார்.
ஆறாம் அதிபதி ஐந்தில் இருந்தால் என்ன பலன்
குழந்தையோடு கருத்து வேறுபாடு இருக்கும்.பூர்வீகத்தில் வழக்கு இருக்கும். குலதெய்வ வழிபாடு
தடையாக இருக்கும். குழந்தை தாமதம், குழந்தைக்கு புத்திர தாமதம். குழந்தைக்கு மருத்துவ செலவு
இருக்கும். குழந்தைக்கு விரைவில் வேலை கிடைக்கும்.மேல்படிப்புக்காக கடன் வாங்குவார்கள். குழந்தை
வெளிநாட்டில் இருக்கும். கடன் வழக்கு அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வழக்கு இவர்களை தேடி
வரும் அதே வேகத்தில் வழக்கு போய்விடும். கோவிலில் வேலை கிடைக்கும்.
ஜோதிட பணி செய்யலாம். மத ஈடுபாடு அதிகமாக இருக்கும். சூரியன் செவ்வாய் தொடர்பு நல்லது.
சூரியன் செவ்வாய் இராசியை பார்தால் அரசுவேலை அரசியல் ஈடுபாடு இருக்கும். பதினொன்றாம் அதிபதி
தொடர்பு கிடைத்தால் சொகுசான வேலை கிடைக்கும். மறதி இருக்கும் மகப்பேறு மருத்துவமனையில்
வேலை செய்யலாம். மனநல மருத்துவமனையில் வேலை செய்யலாம். குழந்தையை பிரிந்து இருப்பது
நல்லது. குழந்தை என்ற பெயர் உள்ளவர்கள் வீட்டில் இருப்பார்கள், இல்லையென்றால் நண்பர்கள்
இருப்பார்கள்
ஆறாம் அதிபதி ஆறில் இருந்தால் என்ன பலன்
இது ஹர்சி யோகம்.அழகான உடல்வாகு இருக்கும்.
செல்வந்தராக இருப்பார்கள். நீண்ட ஆயுள் இருக்கும் எதிலும் வெற்றி இருக்கும். எப்போதும் எதிரி உண்டு.
சண்டையிடுதல், வாக்குவாதம் இருக்கும். போலீஸ் ராணுவ வேலை நல்லது.
ஆறாம் அதிபதி ஏழில் இருந்தால் என்ன பலன்
கூட்டுத்தொழில் ஆகாது. திருமண வாழ்க்கையில் தடை இருக்கும். திருமணத்தால் கடன் இருக்கும்.
திருமணத்தன்று ஒரு சண்டை இருக்கும். மனைவிக்கு நோய் உண்டு. வேலைக்கு செல்லும் மனைவி
அமைவார் அதிலும் சண்டை போடும் மனைவியாக அமைவார். ஜாதகருக்கு முதலில் வேலை அதன்
பின்பு தான் திருமணம் நடக்கும்.வேலை செய்யும் இடத்தில் பெண் கிடைக்கும். ஆறாம் அதிபதியை
தாண்டி ஏழாம் அதிபதி இருந்தால் முதலில் வேலை பின்பு திருமணம நடக்கும்.
ஏழாம் அதிபதியை தாண்டி ஆறாம் அதிபதி இருந்தால் முதலில் திருமணம் பின்பு தான் வேலை
அமையும்.
ஏழில் சனி இருந்தால் மணமான பின் ஒரு கர்மம் இருக்கும்.
ஏழில் சனி இருந்து பத்தாம் அதிபதி பன்னிரண்டாம் அதிபதி இருந்தால் தொடர்புகள் திருமணம்
பேசியவுடன் ஒரு கர்மம் இருக்கும்.
மணநாளன்று ஒரு கர்மம் மண மேடை அருகே நடக்கும் அல்லது அந்தத் தெருவில் ஒரு பிணமாவது
போகும்.
வெளிநாடு சென்றால் ஆவணங்களை சரியாக இருக்க வேண்டும். நண்பருடன் பகை இருக்கும்.
மனைவியோடு சண்டை சச்சரவு இருக்கும். தாம்பத்திய சுகத்தில் தடை இருக்கும். இரவு வேலை நன்று.
வேலைக்காக வெளியூர் வெளிநாடு செல்வார்கள்.கூட்டுறவுத் துறை, பொதுப்பணித் துறையில் வேலை
கிடைக்கும். தன் அறிவு தொண்டு நிறுவன வேலையில் இருக்கலாம்.திருமண வேலை இவர்களுக்கு
நல்லது, ஆனால் திருமண நிலையம் நடத்தக் கூடாது.
ஆறாம் அதிபதி எட்டில் இருந்தால் என்ன பலன்
வேலை தடை இருக்கும். பார்த்த வேலையை விட்டுவிட்டு நிரந்தர வேலை என்று சொல்ல முடியாத
நிலையில் இருப்பார். எல்ஐசி, இன்ஷூரன்ஸ் வேலை நல்லது. தூக்கம் கெடும் நேரத்திற்கு சாப்பிடாததால்
வாயுத் தொல்லை இருக்கும். விபத்து வழக்கு உண்டு. குறுக்கு வழியில் வருவாய் கிடைக்கும். எதிர்பாராத
அதிர்ஷ்டம் இருக்கும் 6, 8, 12 பரிவர்த்தனை அல்லது அங்கேயே இருப்பது விபரீத ராஜயோகம். இவருடன்
42

யார் இருக்கிறாரோ அவருக்கு யோகம்.ரகசிய தொழில், ஜோதிட தொழில் நல்லது. பின்னாடி இருந்து
இயக்குவது. சுரங்கம், குவாரி வேலை, லாட்டரி, ரேஸ், உணவு தொழில் இவை எல்லாம் ஆகாது.
டிடெக்ட்டிவ் ஏஜென்ட் சிறப்பு.
ஆறாம் அதிபதி ஒன்பதில் இருந்தால் என்ன பலன்
வேலை தேடி வரும். தந்தைக்கு சிறு விபத்து உண்டு. தந்தையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். கடன்
வாங்கினால் பெருகிவிடும். பயணம் சார்ந்த வேலை இருக்கும். டிராவல் ஏஜென்ட். சாஸ்திர தொடர்பான
வேலை இருக்கும். கோவில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. தந்தை வகையில் கோவிலை
பராமரித்தவர்கள் இருப்பார்கள். தந்தையின் வேலை இருக்கும். ஆசிரியருடன் பகை இருக்கும். தந்தையை
பிரிக்கும், தந்தைக்கு கண்டம். இவர்கள் பாக்கியத்தை அனுபவிக்க தடை இருக்கும்.தந்தையின் சொத்தை
அனுபவிக்க முடியாது. சொத்தில் வழக்கு இருக்கும். ஜாமீன் யாருக்கும் போடக்கூடாது. தந்தைக்கு வாயுத்
தொல்லை இருக்கும். தந்தைக்கே மடத்தில் வேலை பார்க்கும் வேலை அல்லது பரம்பரை வேலை
இருக்கும்.
ஆறாம் அதிபதி பத்தில் இருந்தால் என்ன பலன்
சிறுதொழில் நன்று. சூரியன் அல்லது செவ்வாய் தொடர்பு இருந்தால் மருத்துவம் வரும். இருவருடன்
தொடர்பு இருந்தால் மத்திய அரசு டாக்டர் வரும். சொந்தத் தொழில் செய்யக்கூடாது. மாமியாருடன்
கருத்து வேறுபாடு இருக்கும். வெளி நாட்டு வருமானம் உண்டு. உணவு தொழில் வேலை நல்லது.
இவர்களுக்கு வேலை கிடைத்தவுடன் ஒரு கர்மம் உண்டு. பல கிளைகள் உள்ள இடத்தில் வேலை
அமையும். இரவு உணவகம் நல்லது. அயன சயனத்தை அனுபவிக்க தடை இருக்கும். வேலை செய்யும்
இடத்தில் தங்குவார்கள். வயிறு தொடர்பான நோய் இருக்கும். தூக்கத்தில் பேசிக்கொண்டு இருப்பார்.
உயரமான இடத்தில் வேலை இருக்கும் உயரமான இடத்தில் வேலை இருக்கக்கூடாது. பனிரெண்டாமிடம்
உயரமான இடம். பயணம் செய்து வேலைக்கு போவது நல்லது. வெளியூரில் வழக்கு வெளியூரிலிருந்து
வழக்குக்காக உள்ளுருக்குவருவது. வழக்குக்காக பயணம். கடின வேலை கடன் கட்ட வேலைக்கு போவது.
கால் பாதத்தில் இவர்களுக்கு நோய் வரும். இவர்கள் உணவு தொழில் ஏற்றுமதி செய்யலாம்.
நடைபயணம், நடைபயிற்சி ஆர்வம் அதிகமாக இருக்கும். காண்ட்ராக்ட் வேலை சீசன் வேலை நல்லது.
கிரகம் வக்கிரம் ஆனால் அடிக்கடி இடமாற்றம் உண்டு. புரமோஷன் தாமதமாக கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் எதிரி போட்டி இருக்கும்.வேலை அதிகமாக இருக்கும். தாம்பத்திய சுகம்
குறைவு, மணவாழ்வு பாதிக்கும்.ஆறாம் பாவகம் தொழில் எல்லாம் செய்யலாம். வீட்டில் தொழில்
செய்வது, வீடு கட்டி வாடகைக்கு விடுவது. கருமம் செய்வதற்கு இவர்களுக்கு தடை இருக்கும்.
ஆறாம் அதிபதி பதினொன்றில் இருந்தால் என்ன பலன்
இவர்களுக்கு நண்பனே எதிரியாக இருப்பார். பணிபுரியும் இடத்தில் எதிரி இருப்பார். வழக்கு வெற்றி
இருக்கும். கடன் இருக்கும். உத்தியோகம் நல்லது. இவர்களுக்கு எந்த நோய் வந்தாலும் சீக்கிரம்
குணமாகும்.மூத்த சகோதரத்துடன் கருத்து வேறுபாடு இருக்கும்.மூத்த சகோதரனால் கடன் இருக்கும்.
மூத்த சகோதரனுக்காக கடன் வாங்கக்கூடாது. மாமனுக்கு மணவாழ்க்கை சரியில்லை. மாமனுக்கு
இரண்டு மனைவி உண்டு. சித்தப்பாவுடன் கருத்து வேறுபாடு உண்டு. ஒரு உபஜெய ஸ்தானாதிபதி
இன்னொரு உபஜெய த்தில் இருந்தால் நல்லது தந்தைக்கு வளர்ச்சி உண்டு.
ஆறாம் அதிபதி பன்னிரெண்டில் இருந்தால் என்ன பலன்
வெளிநாட்டு வேலை கிடைக்கும். இரவு வேலை நல்லது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் நன்று. ஜோதிடம்
பார்க்கலாம். மருத்துவத்துறையில் இருக்கலாம். சாப்பிட்டவுடன் தூக்கம் வரும். சாப்பிட்டவுடன் டாய்லெட்
போவார்கள். தூக்கம் கெடும். கடன் நோய் வழக்குக்காக இவர்கள் பணம் விரையம் செய்வார்கள்.
வெளிநாட்டு செல்லும்போது ஆவணங்களை சரியாக உள்ளதா என்று பார்த்து போகவேண்டும்.
உயர்பதவி கிடைக்கும் துணை தொழில் செய்யலாம். வேலை பார்த்துக்கொண்டே சைடு பிசினஸ்
செய்யலாம்.
43

மருத்துவத்துறை
ஆறாம் பாவகம் மருத்துவர் ஆகும் யோகம். ஆக்சிஜன் தருபவர் சூரியன்,
ஒளிக்கதிர்களால் சக்தியை தருபவர் சூரியன், மருத்துவத்துறையில் வெற்றியை கொடுப்பவர் சூரியன்.
மருந்து கிரகம் என்றால் சூரியன். செவ்வாய் என்றால் தைரியம். தசைநார்கள், காயங்கள், விபத்து,
அறுவை சிகிச்சை இதற்கு காரணகர்த்தா.கதிர்வீச்சு, ஹீமோதெரபி,
ராகு கேது குரு நோயை குணப்படுத்தும் கைராசி டாக்டர் என்ற பெயருக்கு காரணகர்த்தா. மக்கள் சக்தி
மருத்துவமனை அமைக்க பணியாற்ற.
தீராத வலி வேதனை இதெல்லாம் சனியை குறிக்கும். சனி பார்வை பட்ட கிரக நோய், கிரகத்தினால்
உண்டாகும் நோய் குணமாக நீண்ட நாள் ஆகும்.
ராகு கேது தொற்று நோய், கிருமி, ஸ்கேன், எக்ஸ்ரே. இவையெல்லாம்.
மருத்துவ நட்சத்திரம் அஸ்வினி, மகம், மூலம், மிருகசீரிடம், திருவாதிரை, சித்திரை, சுவாதி, உத்திராடம்,
அனுஷம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி.
இதில் அஸ்வினி மகம் மூலம் மிருகசீரிடம் அனுஷம் சதயம் ரேவதி இவர்கள் பேமஸ் டாக்டர் ஆக
இருப்பார்கள்.
துல்லியமாக பார்த்தால், சதயம் நட்சத்திரம் கொண்டவர்கள் டாக்டராக ரொம்ப பிரபலமானவராக
இருப்பார்.
மருத்துவர்கள் சிம்மம், விருச்சிகம். சிம்ம ராசியாக வருவது நல்லது.
சிம்ம லக்கினமாக வருவது நல்லது.
பத்தாம் இடமாக வருவது விருச்சிக ராசி அல்லது லக்னமாக வருவது அல்லது பத்தாம் இடமாக வருவது.
ஆறாம் பாவம் நோயை குறிக்கும். இதன் காரகர் சனி.
செவ்வாய் மருத்துவராக பணியாற்றுவதை குறிக்கும்.
எட்டாம் பாவம் மருத்துவமனை மருந்து, தாய்சேய் நலவிடுதி, இறப்பு, இறப்பின் தன்மை, தீராத
வியாதியை குறைக்கும்.
பனிரெண்டாம் இடம் மருத்துவத்தில் நீண்ட காலம் பணியாற்றுவது பெயர் பெறுவது
லக்னம் அல்லது லக்னாதிபதி 6, 8, 12 தொடர்பு மருத்துவத்துறை 8, 12 சூரியன் செவ்வாய் தொடர்பு
இருந்தால், ஆறு எட்டு பாபங்களும் அல்லது சூரியன் செவ்வாய் குரு இவர்கள் பலம் பெற்றால்
மருத்துவத்துறையில் பெயர் வாங்க முடியும்.
புதனுக்கு அடுத்து ராகு அல்லது சூரியன் இருக்க மருத்துவ படிப்பு.
இரண்டாம் அதிபதிக்கு அடுத்து சூரியன் செவ்வாய் கேது மருத்துவத்துறையில் வருமானம் இருக்கும்.
இரண்டாம் அதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் இருப்பது தொழில்.

சோதிடத்தில் சிற்றின்பம்
உங்களுடைய பிறப்பு ஜாதகம் என்பது உங்களுடைய வாழ்க்கையின் அம்சங்களுக்கான கண்ணாடியாகும்,
இதில் சீரான அல்லது (சமநிலையற்ற) ஒழுங்கற்ற அல்லது விருப்பம் போன்ற உங்களின் பாலியல்
தூண்டுதலும் அடங்கும். உங்கள் குணாதிசயங்களை அறிந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சியான திருமணம்
மற்றும் பாலியல் வாழ்க்கைக்கு வளமாக உங்களை வடிவமைக்கவும். பாலியல் நடத்தை மற்றும்
மனோபாவம் ஒரு நபர் எந்த ராசிடன் இணைக்கப்பட்டுள்ளது. செவ்வாய் மற்றும் சுக்கிரன் கிரகங்கள் ஒரு
நபரின் பாலியல் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஜோதிடத்தில் களத்திரம் என்பது ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் பெண் ஜாதகத்தில் செவ்வாய்
குறிக்கிறது. இவை முக்கியத்துவம் வாய்ந்தவை அல்லது காராகர்கள் என்று அழைக்கப்படுகின்றன, எனவே
44

காராககிரகம் பிற கிரகங்களுடனான நிலை, வலிமை, உறவுகள் ஆண்கள் மற்றும் பெண்களின் பாலியல்
வாழ்க்கையை அளவிட மிகவும் முக்கியம். பெண்களுக்கு சூரியன் மற்றும் செவ்வாய் மற்றும்
ஆண்களுக்கு சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகியவை முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன.
பெண்னின் கணவரின் இறப்பு மற்றும் திருமண மகிழ்ச்சியைக் குறிக்கும் 8 ஆம் வீட்டைத் தவிர ஆண்
மற்றும் பெண் ஜாதகங்களுக்கு இடையே அதிக வித்தியாசம் இல்லை. 7 ஆம் வீடு பெண் ஜாதகத்தில்
கணவனுக்கும், ஆணின் ஜாதகத்தில் மனைவிக்கும். எனவே பாலினத்திற்கான விதிகள் காரகம் அல்லது
முக்கியத்துவத்தை மாற்றுவதைத் தவிர இருவருக்கும் பொருந்தும், ஆனால் பெண்களுக்கும் சில
குறிப்பிட்ட யோகங்கள் உள்ளன.
பெண்களைச் சேர்ப்பது பெண்ணின் உளவியல் ரீதியான அலங்காரத்தின் காரணமாகும், எனவே 4 ஆம்
வீடு சங்கம் மற்றும் கற்பு, 5 மற்றும் 9 ஆம் வீடுகள் குழந்தைகளுக்கு, கணவன் மற்றும் கவர்ச்சியை 7
முதல், 8 ஆம் வீடு சுபம் அல்லது வாழ்க்கையில், உயர்வு, 2 ஆம் வீடு போன்றவற்றைக் குறிக்கிறது.
எனவே 1 ஆம் வீடு 5, 7 ஆம் வீடும் மற்றும் 11 ஆம் வீடுகள் 12 வது வீடு உட்பட பாலியல்
தொடர்புடையவைகள்.
வேத ஜோதிடம் நட்சத்திராதின் அடிப்படையில் யோனியை (பாலியல் உறுப்புகளின் அளவு மற்றும்
பாலியல் நடத்தை) வகைப்படுத்தியுள்ளது.
பாலியல் நடத்தை மற்றும் சூரிய ராசிகள்
1. மேஷம் , சிம்மம் , தனுசு ஆகியவை மிகைப்படுத்தப்பட்டவை.
2. ரிஷபம் , கன்னி , மகரம் பாலியல் நடத்தையில் நிதானமானவை.
3. மிதுனம் , துலாம் , கும்பம் பாலியல் மீது ரகசிய விருப்பம் கொண்டவை ஆனால் ஒருபோதும்
அவர்களின் பாலியல் உணர்வுகளை வெளிப்படுத்துவதில்லை.
4. கடகம் , விருச்சிகம் , மீனம் ஆகியவை மிகவும் கவர்ச்சியானவை அல்ல, ஆனால் மிகுந்த
உணர்ச்சிகளைக் காட்டுகின்றன.

(விண்மீன்கள்:) நட்சத்திரம்
i) அஸ்வினி, மிருகாஷிரிசம், மகம், உத்திரம், அனுசம், மூலம், சதையம் ஆகியவை உயர் பாலியல்.
ii) பரணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, அவிட்டம், பூராடம் ரேவதி ஆகியோர் பாலியல்
பழக்கவழக்கங்களில் மிதமானவர்கள்.
iv) மீதமுள்ளவர்கள் பாலுறவில் ஏங்கினாலும் அவர்களின் உணர்வுகளை மறைக்கிறார்கள்
பாலியல் உறுப்புகளின் அளவுஆண்
மனிதன் ஆண்குறியின் அளவிற்கு ஏற்ப மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளார்
1 மான்-மனிதனுக்கு 4 "நீளமுள்ள குறுகிய ஆண் உறுப்புகள் உள்ளன.
2 காளை மனிதனுக்கு நடுத்தர ஆண் உறுப்பு 6 "நீளம் உள்ளது.
3 குதிரை மனிதனுக்கு 8 "நீளமுள்ள ஆண் உறுப்புகள் உள்ளன.
ஆண்குறியின் சுற்றளவு நீளத்திற்கு ஏற்ப இருக்கும், ஆனால் அது விகிதாசாரமாக இருக்காது.
பெண்
பெண் யோனியின் ஆழத்திற்கு ஏற்ப மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
1 மான் பெண்ணுக்கு 4 "நீளமான குறுகிய யோனி பாதை உள்ளது.
2 முயல் பெண்களுக்கு நடுத்தர யோனி பாதை 6 "நீளம் கொண்டது.
3 யானைப் பெண்ணுக்கு 8 "நீளமான யோனி பாதை உள்ளது.

சுற்றளவு யோனி நீளத்திற்கு விகிதத்தில் உள்ளது, ஆனால் அதை நீண்ட அளவுக்கு நீட்டலாம்.
பாலியல் ஒழுக்கக்கேடு / விபச்சாரம் / அதிகப்படியான பாலினத்தின் கிரக சேர்க்கைகள்
45

1. 7 ல் பாதிக்கப்பட்ட சூரியன்.
2. 7 ல் சனி செவ்வாய் சந்திரன்.
3. செவ்வாய் மற்றும் சுக்கிரன் இணைந்த பாதிப்பு.
4. 9 ஆம் அதிபதி அஸ்தமனம், நீச்சம் அல்லது 9-ல் நீச்ச கிரகம் இருந்தாலும்.
5. கரகாம்சத்திற்கு 9 இல் கேது.
6. 2 அல்லது 12 ஆம் வீடுகளில் 7 ஆம் அதிபதி மற்றும் பலம் குறைந்திருந்தால்
7. சுக்கிரன் செவ்வாய் மற்றும் சனியின் வர்கத்தில் இருந்தால்
8. சுக்கிரன் செவ்வாய் அல்லது சனியின் வீட்டில் இருக்க வேண்டும், அல்லது மோசமாக
பாதிக்கப்படிறுந்தால்.
9. 12 ல் 9 ஆம் அதிபதி ; 2 ஆம் இடத்தில் 12 ஆம் அதிபதி 3 ஆம் இடத்தில் ஒரு ஆண் கிரகம் இருந்தால்
10. செவ்வாய் சுக்கிரன் ராசியில்
சனி / செவ்வாய் நவாம்ச மற்றும் சுக்கிரன் செவ்வாய் ராசியில் ஆனால் சனி / சுக்கிரன் நவாம்சத்தில்.
11. 2 ஆம் இடத்தில் சனி மற்றும் 7 ஆம் அதிபதி இருந்தால்
12. லக்கினாதி 6 ஆம் அதிபதி ஆண் கிரகங்களுடன் இணைந்திருந்தால்
13. மேஷம், ரிஷபம் அல்லது கும்பத்தில் உள்ள சுக்கிரனை செவ்வாய் கிரகத்தால் பார்க்கப்பட்டால்
14. கன்னியில் சுக்கிரன் அல்லது சனியால் .
15. ராகு அல்லது கேதுவுடன் 7 ஆம் அதிபதி ஆண்மைக் கோளாறு.
16. பலவீனமான சந்திரன் 7 ல் , 7 ஆம் அதிபதியுடன் லக்னத்தில் ஆண்மையுடன்.
17. 10 ல் 2, 7, 10 ஆம் அதிபதிகளின் இணைவு
18. 4 ஆம் இடத்தில் 7 ஆம் அதிபதி, 1, 2 அல்லது 7 ஆம் இடத்தில் லக்கினாதிபதி இருந்தால்
19. 3 ஆம் இடத்தில் 2 ஆம் அதிபதி மற்றும் 12 ஆம் அதிபதி 9 ஆம் அதிபதி இருந்தால் அல்லது வியாழன்
இருந்தால்
20. 7 ஆம் அதிபதியும் மற்றும் 11 ஆம் அதிபதி இடையே வலுவான சம்பந்தம் இருந்தால்
21. 7 ல் 9 ஆம் அதிபதியும் 4 ஆம் இடத்தில் 7 ஆம் அதிபதி இருந்தால்
22. சிம்மத்தில் சுக்கிரன் புதனால் பார்க்கப்பட்டால்
23. செவ்வாய் மிதுனத்தில் அல்லது கன்னியில் சுக்கிரன்.
24. மேஷம் / விருச்சிகத்தில் 2 ஆம் அதிபதி / சுக்கிரன் தொடர்புபொற்றால்
25. மேஷம் / விருச்சிகத்தில் சுக்கிரன் 10 ஆம் அதிபதி அல்லது சனி அல்லது சுக்கிரன் பார்க்கப்பட்டால்
26. மேஷம் / விருச்சிகம் சுக்கிரன் தொடர்புடைய சனி.
27. 4 ஆம் இடத்தில் செவ்வாய், 7 ல் ராகு மற்றும் சூரியன் சனி எந்த ராசியிலும் சேர்ந்திருந்தால்
28. ராகு அல்லது சூரியன் 7 ல் மற்றும் செவ்வாய் 4 ல் அல்லது 7 ல்.
29. 7 ல் 1, 2 அல்லது 6 ஆம் அதிபதி இருந்தால்
30. வியாழன் புதன் அல்லது சுக்கிரன் சந்திரன் அல்லது சூரிய ராகு அல்லது சனி ராகு அல்லது சனி
கேது 7 ல் இருந்தால்
31. 6 மற்றும் 7 ஆம் அதிபதிகள் 9 ஆம் வீட்டில் இருந்தால் ஆண்மையுள்ளவர்.
32. 3 ஆம் வீடு மோசமாக பாதிக்கப்பட்டிருந்தால் மற்றும் ஜாதகத்தில் சந்திரன் மிகவும் பலவீனமாக
இருந்தால்
33. தலைக் கோடு வீசுதல் மற்றும் இதயக் கோடு சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளது, (உள்ளங்கையில்).
34- செவ்வாய் மூன்று, ஏழாம் வீடுகளின் அதிபதி மற்றும் சுக்கிரன் ஆகிய மூவரும் இணைந்திருந்தால்
35. 7 ஆம் மற்றும் 12 ஆம் வீடுகளின் அதிபதிகளுக்கு இடையில் பரிமாற்றம் இருந்தால்
36. 7 ல் புதன் சுக்கிரன் ரகசிய (கள்ளத்தானம்) இன்பங்களை நாடுகிறான்.
37. 7 ல் செவ்வாய் புதன் சுக்கிரன் ஒருவரை மிகவும் உணர்ச்சிவசப்படுத்துகிறது.
46

38.சந்திரன் மேஷத்தில் ஒருவரை மனரீதியாக உணர்ச்சிவசப்படுத்துகிறது; விருச்சிகத்தில் உடல் ரீதியான


உணர்ச்சி.
39. 7 ஆம் அதிபதி ஒரு ஆண் இணைந்திருக்கிறார், அல்லது 6 ஆம் அதிபதி இணைந்த லக்கினாதிபதி
ஒருவரை லாபகரமாக்குகிறார்
கிரக சேர்க்கைகள் (பெண் ஜாதகம்)
1. செவ்வாய் மற்றும் கேது பார்வையில் லக்கினாதிபதி மற்றும் சனி.
2. லக்னத்தில் ராகு சனி, அல்லது நவாம்சத்தில் சம்பத்தம்
3. ராகு சனி சேர்க்கை சேர்க்கை.
4. செவ்வாய் கிரகத்தில் இருந்து 4 அல்லது 10 ஆம் வீடுகளில் சனி சந்திரன்.
5. சனி ராகு அல்லது சனி கேது 8 ஆம் இடத்தில் கன்னி அல்லது மிதுனம் ராசியில் இருந்தால்
6. ராகுவுக்கும் சனிக்கும் இடையில் 8 ஆம் அதிபதி இருந்தால்
7. சனி கேது அல்லது சனி செவ்வாய் சந்திரனை பாதிப்படைந்திருந்தால்
8. செவ்வாய் அல்லது கேது ஆகியோரால் லக்கினாதிபதி சனி பார்த்திருந்தால்

பாலியல் செயல்களில் மிருகத்தன்மை / விபரீதத்திற்கான கிரக சேர்க்கைகள்:

1. ஆண் கிரகங்கள் ஆண் ராசியில் இருந்தால் அல்லது அம்சத்தால் பாதிக்கப்பட்டிருந்தால்


2. கேந்திரங்களில் ஆண் கிரகங்கள் இருந்தால்
3. சனி ஒரு தீங்கிழைக்கும் அல்லது குலிகாவை இணைக்கிறது.
4. 4 வது இடத்தில் சனி சூரிய செவ்வாய்.
5. 7 ல் ராகு மற்றும் 4 வது இடத்தில் செவ்வாய்.
6. பலவீனத்தில் லக்னேஷ் அல்லது 2 வது ஆண்டவர்.
7. சுக்கிரன் செவ்வாய் கிரகத்துடன் இணைகிறது அல்லது செவ்வாய் கிரகத்தின் அமாசங்களில் விழுகிறது.
8. சனி 2 வது அதிபதி மற்றும் சந்திரனை இரண்டையும் இணைக்கிறது

ஆண்மைக் குறைவு /பெண்மைக்குறைவு யோகங்களுக்கான கிரக சேர்க்கைகள்


இந்தச் சேர்க்கைகள் பாலியல் உறுப்புகளில் தீர்வு காணாத பிறவி உடற்கூறியல் குறைபாடுகளுக்கு
பின்வரும் சேர்க்கைகள் உள்ளன. அவர்கள் இரு-பாலியல் அல்லது ஹெர்மாஃப்ரோடைட்டுகளாக
இருக்கலாம். இந்த நிகழ்வுகளில் பாலியல் உறுப்புகள் இல்லாதது, மலட்டுத்தன்மையுள்ள பாலியல்
உறுப்புகள், தூண்டுதல் அல்லது காஸ்ட்ரேட்டட் உறுப்புகள் இல்லாத ஹைபர்டிராஃபி உறுப்புகள்
போன்றவை அடங்கும்.

1 . சனி சுக்கிரன் 8 அல்லது 10 ஆம் வீட்டில் இணைந்திருந்தால் எந்த நன்மையும் இல்லை.


2. 10 ல் சுக்கிரனும், சனி லக்னத்தில் அல்லது 5 ஆம் இடத்திலும்.
3. எந்த நன்மையும் இல்லாமல் 6 அல்லது 12 ஆம் வீடுகளில் சனி நீர் ராசியில் இருந்தாலௌ
4. 7 ஆம் அதிபதி முழுமையாக நெருப்பு ராசியில் அல்லது நீச்சம் அல்லது "6 அல்லது 8 ஆம் இடத்தில்
ஒரு ஆண் கிரகம் 7 ல் ஒரு பாதிக்கப்பட்ட கிரகம்.இருந்தால்
5. 7 ஆம் வீடு மற்றும் 7 ஆம் அதிபதி நீச்சம் பெற்று பலவீனமாக இருந்தால்
6. லக்கினாதிபதி பலவீனமாக மற்றும் பலவீனமான கிரகம் 7 ஆம் அபதி 6 ஆம் வீட்டில் அல்லது நீச்சம்
பெற்றால்
7. 7 ஆம் அதிபதி 6 ல் அல்லது 8 ல் அல்லது மற்றொரு நெருப்பு கிரகத்திற்கு சொந்தமான வீட்டில்
இருந்தால்
47

8. லக்கினாதிபதி சந்திரன் சுக்கிரன் அனைத்தும் நவாம்ச நவாம்சத்தில் ஒற்றைப்படை ராசிகளில்


இருந்தால்
9. செவ்வாய் தன்னுடைய ராசியில் மற்றும் சந்திரன் மற்றும் லக்கினாதிபதி ஒற்றைப்படை ராசிகளில்
இருந்தால்
10. சந்திரன் ஒற்றைப்படை ராசியில் மற்றும் செவ்வாய் கிரகத்தால் பார்வை & சேர்க்கைகள் பூர்வீகத்தை
பெண்மைக்குறைவு ஏற்படும்.
ஒருவருடைய (துணைவியார் ) மனைவியைப் பொறுத்தவரை, 7 ஆம் அதிபதி 6 ஆம் அதிபதியுடன்
சுக்கிரன் மற்றும் கேது ஆகியோரின் தொடர்பைப் பெற்றால், அவள் ஒருபால் சத்து குறைவுள்ள
பெண்களாக மாறுகிறாள், அதாவது பாலியல் விருப்பம் இல்லாதவர்கள்.

பகை 3 6 7 10 11
நட்பு 1 2 4 5 8 9 12

பகை 3 6 7 10 11
நட்பு 1 2 4 5 8 9 12

பகை 3 6 7 10 11
நட்பு 1 2 4 5 8 9 12
48

1. மாயா நயன்தாரா
2. உரியடி 2019
3. வி ஐ
4. கேம் ஓவர்
5. மெஹந்தி சர்க்கஸ்
6. இன்று நேற்று நாளை
7. தடம்
8. மெட்ரோ
9. மரகத நாணயம்
10. கொலைகாரன்
11. டிமாண்டி காலனி
12. வெள்ளைப் பூக்கள்
13. மாநகரம்
14. இரவுக்கு ஆயிரம் கண்கள்
15. ராஜ தந்திரம்
16. குற்றம் 23
17. மாயவன்
18. இரும்புதிரை
19. 8 தோட்டாக்கள்
20. துருவங்கள் பதினாறு

You might also like