Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 23

ஜாதக பொது விதிகள்

பாவாதிபதிகள்
*ஒன்றாம் பாவாதிபதி (கேந்திரம்) குரு
*இரண்டாம் பாவாதிபதி (பணபரம்) செவ்வாய்
*மூன்றாம் பாவாதிபதி (ஆபோக்லிமம்) சுக்கிரன்
*நான்காம் பாவாதிபதி (கேந்திரம்) புதன்
*ஐந்தாம் பாவாதிபதி (திரிகோணம்) சந்திரன்
*ஆறாம் பாவாதிபதி (ஆபோக்லிமம்) சூரியன்
*ஏழாம் பாவாதிபதி (கேந்திரம்) புதன்
*எட்டாம் பாவாதிபதி (பணபரம்) சுக்கிரன்
*ஒன்பதாம் பாவாதிபதி (திரிகோணம்) செவ்வாய்
*பத்தாம் பாவாதிபதி (கேந்திரம்) குரு
*பதினொன்றாம் பாவாதிபதி (பணபரம்) சனி
*பன்னிரண்டாம் பாவாதிபதி (ஆபோக்லிமம்) சனி

கிரக சேர்க்கைகள்
சந்திரன்,செவ்வாய்,கேது, சேர்க்கை
சூரியன்,மாந்தி, சேர்க்கை

மறைவு ஸ்தானங்கள்
ஒரு ஜாதகத்தில் 3,6,8,12 ஆகிய இடங்கள் மறைவு ஸ்தானங்கள் அல்லது துர்ஸ்தானங்கள் எனப்படும்.
இந்த இடங்களில் சுப கிரகங்கள் எனப்படும் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் நின்றால் சுப பலன்களை
தரமாட்டார்கள். மாறாக் 3,6,8,12 ம் இடங்களில் பாவ கிரகங்கள் எனப்படும் சூரியன், செவ்வாய், சனி,
ராகு - கேது நின்றால் ஜாதகருக்கு எந்த விதமான கெடு பலன்களையும் தராது.

இந்த ஜாதகத்தில் மறைவு ஸ்தானத்திலுள்ள கிரகங்கள்


சந்திரன் லக்னத்துக்கு 3 இல் மறைவு ஸ்தானத்தில் உள்ளது
புதன் லக்னத்துக்கு 8 இல் மறைவு ஸ்தானத்தில் உள்ளது

உபசய ராசிகள்
ஒவ்வொரு ராசியிலிருந்தும் 3,6,10,11 வது ராசிகள் உபசய ராசிகள். இவைகளில் இருக்கின்ற
கிரகங்களின் பலன் இயற்கை பலனுக்கு அதிகமாகவே இருக்கும். 6-வது பாவம் சுபக்கிரகங்களுக்கு
ஸ்வஷேத்திரமாக இருந்தால் மட்டும் உபசயம், இல்லாவிட்டால் இல்லை. ஒவ்வொரு ராசியிலிருந்தும்
உபசய ராசிகளில் இருக்கின்ற கிரகங்களின் பலத்தைக் கொண்டு அந்தந்த ராசிகளின் பலத்தை
அறியலாம். இந்த ஜாதகத்தில் உபசய ராசிகள் (பாவங்கள்) "ரிஷபம்","சிம்மம்","தனுசு","மகரம்" ஆகும்.

ராசிகளுக்குக் கேந்திரபலம்
மிதுனம், கன்னி, துலாம், தனுசின் முற்பகுதி, கும்பம் இவைகள் மனுஷ்ய ராசிகள்.
மேஷம், ரிஷபம், சிம்மம், தனுசின் பிற்பகுதி மகரத்தின் முற்பகுதி இவைகள் மிருக ராசிகள்
விருச்சிகம், கடகம், மகரத்தின் பிற்பகுதி, மீனம் இவை ஜல ராசிகள்.

மனுஷ்ய ராசிகள் லக்னத்திலும், மிருக ராசிகள் பத்தாம் பாவத்திலும் விருச்சிக ராசியானது 7-வது
பாவத்திலும், ஜல ராசிகள் 4-வது பாவத்திலும் பலமுள்ளவை.

இராசிகளுக்கு காலபலன்
மனுஷ்ய ராசிகளுக்கு உச்சி காலத்தில் முழுபலம் உண்டு. அர்த்த ராத்திரியில் பலம் இல்லை. நடுநிசி
முதல் உச்சி காலம் வரை பலம் அதிகமாகிக்கொண்டே வந்து உச்சி காலத்தில் பூரணமாகும். உச்சிகாலம்
முதல் நடுநிசி வரை குறைந்துக் கொண்டே வந்து நடுநிசியில் சூன்யமாகும்.

மிருக ராசிகளுக்கு நடுநிசியில் பூர்ணபலம். உச்சிக்காலத்தில் பலம் சூன்யம். மீதியான ராசிகளுக்கு


சூரியோதைய காலத்திலும், சூரிய அஸ்தமன காலத்திலும் பூர்ணபலம். சூரியோதைய காலம் மதல்
குறைந்து கொண்டே வந்து உச்சிக்காலத்தில் சூன்யமாகும். சூரிய அஸ்தமன காலம் முதல் குறைந்துக்
கொண்டே வந்து நடுநிசியில் சூன்யமாகும். உச்சிக்காலத்திலிருந்தும், நடுநிசியிலிருந்து வளர்ந்துக்
கொண்டே வந்து சூரிய அஸ்தமன காலத்திலும், சூரியோதய காலத்தில் பூரணமாகும்.

ராசிகளுக்கு நட்பு, பகை ராசிகள்


சர ராசிகளுக்கு ஸ்திர ராசிகளும், ஸ்திர ராசிகளுக்கு சர ராசிகளும் மித்ர ராசிகள். சர-ஸ்திர
ராசிகளுக்கு இருதன்மை ராசிகள் சத்ரு இராசிகள். இந்த மூன்று ராசிகளுக்கும் அந்தந்த ராசிகளே
அதிமித்ர ராசிகள். ஒவ்வொரு இராசிக்கும் அதிமித்ர ராசிகள் மிக அனுகூலமாகவும், மித்திர ராசிகள்
கொஞ்சம் அனுகூலமாகவும், சத்ரு இராசிகள் விரோதமாகவும் இருக்கும்.

ஜாதகத்தில் கிரகங்களின் வீடுகள்


புதன் நட்பு வீட்டில் உள்ளதுசுக்கிரன் பகை வீட்டில் உள்ளதுசனி பகை வீட்டில் உள்ளது
கிரகங்களின் தற்கால நட்பு
ஒவ்வொரு கிரகத்திற்கும் தாங்கள் இருக்கின்ற இராசியிலிருந்து 2,3,4,10,11,12 ஆகிய ராசிகளில்
இருக்கின்ற எல்லா கிரகங்களுடன் தற்கால நட்பு உண்டு. அந்த கிரகங்களுக்கும், இவைகளுடன் தான்
தற்கால நட்பு உண்டு. இது தற்காலிக அந்நியோன்ய நட்பு என்று சொல்லப்படுகிறது.

கிரகங்களின் அதிமித்ரத்தன்மையில் பாகுபாடு


கிரகங்களுக்குத் தமக்குள் நட்பும், சமத்தன்மையும் பகைமையும் இயற்கையாகவும் தற்காலிகமாகவும்
சொல்லப்பட்டிருக்கிறது. இயற்கை நண்பனே தற்காலிக நண்பனாகிவிட்டால் அதிமித்ரன் என்றும்,
இயற்கை சமத்தன்மை உடைய கிரகம் தற்காலிக நண்பனென்றும், இயற்கை பகைமையுடைய கிரகம்
தாற்காலிக நண்பன் ஆனாலும் இயற்கை நட்புடைய கிரகம் தாற்காலிக பகைவனானாலும் சமன் என்று
கூறப்படுகிறது. இயற்கை சமத் தன்மை உடைய கிரகம் தற்கால சத்ருவாகிவிட்டல் சத்ரு என்றும்,
இயற்கை பகை கிரகம் தற்கால பகைவனானால் அதிசத்ரு (முழு பகைவன்) என்றும் சொல்வார்கள்.

கிரக பார்வைகள்
கிரகங்களுக்கெல்லாம் பார்வைகள் உண்டு. அந்தப் பார்வைகள், பலன்களை அடியோடு
மாற்றிவிடுகின்றன. ஜோதிடத்தில், கிரகங்களை நல்லவை, கெட்டவை என பிரிதுது, நல்ல கிரகங்களின்
பார்வைகள் நல்லது பயப்பன என்றும், கெடுதல் செய்யும் கிரகங்களின் பார்வைகள்
கேடுவிளைவிப்பவை என்றும் கூறுவர்.

கிரகங்களில் குரு, வளர்பிறைச் சந்திரன், பாபர் சம்மந்தப்படாத புதன், சுக்கிரன், ஆகியோர்


இயற்கையிலேயே சுபர் என்றும், சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோர் பாபர் என்றும் ஜோதிட
சாஸ்திரம் கூறுகிறது. அத்துடன், சுபகிரகங்களின் பார்வைகள் நல்லது செய்யும் என்றும், தீய
கிரகங்களின் பார்வை தீமை செய்யும் என்றும் கூறுகின்றது.

எல்லா கிரகங்களும் தான் இருக்கும் இடத்திலிருந்து ஏழாம் இடத்தைப் பார்க்கின்றன. இந்தப்


பார்வையைத் தவிர, சில கிரகங்களுக்கு விசேஷப் பார்வையும் உண்டு. சந்திரன், புதன் ஆகிய
கிரகங்களுக்கு சிறப்பு பார்வைகள் கிடையாது. சூரியனுக்கு,சுக்கிரனுக்கு சிறப்பு பார்வைகள்
கிடையாது. சிலர் சூரியனுக்கு - 3 , 10 ஆம் பார்வைகளும் ; சுக்கிரனுக்கு - 4 , 8 - ஆம் பார்வைகளும்
உண்டு என்று கூறுவர்.

செவ்வாய்க்கு - 4 , 8 ஆம் பார்வைகளும் உண்டு.


குருவுக்கு - 5 , 9 ஆம் பார்வைகளும் உண்டு.
சனிக்கு - 3 , 10 ஆம் பார்வைகள் உண்டு.
நிழல் கிரகங்களான ராகு, கேதுவுக்கும் பார்வைகள் கிடையாது. (சிலர ராகு , கேது - 3 , 11 ஆம்
பார்வைகளும் உண்டு என்றும் கூறுவர்).

குறிப்பு : நமது மூலநூல்களில் ஒரு கிரகம், மற்றொன்றை பத்து டிகிரிக்குள் பார்வையிட்டால் மட்டுமே
அதனைப் பார்வை என்று சொல்ல வேண்டும். இரண்டு கிரகங்களுக்குமான பார்வைக் கோணம் பத்து
டிகிரியை விட்டு விலகி இருந்தால் அங்கே பார்வை என்பது இருக்காது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அதாவது மேம்போக்காக பார்க்கும் போது ராசிக்கட்டத்தில் பார்வை இருப்பதுபோல தோன்றினாலும்,
உண்மையில் பார்வையின் பலன் இருக்காது. இந்த பொது பலனில் டிகிரிக்குள் பார்வையிடுவது
கருதப்படவில்லை.

சூரியன் பார்வையுள்ள குரு


சூரியன் கன்னி ராசியில் இருந்துக் கொண்டு, ( ஏழாம் பார்வையாக )மீனம் ராசியை பார்க்கிறார்.

சந்திரன் பார்வையுள்ள ராகு


சந்திரன் ரிஷபம் ராசியில் இருந்துக் கொண்டு, ( ஏழாம் பார்வையாக )விருச்சிகம் ராசியை பார்க்கிறார்.

செவ்வாய் பார்வையுள்ள சுக்கிரன்,ராகு


செவ்வாய் ரிஷபம் ராசியில் இருந்துக் கொண்டு,நான்காம் பார்வையாக சிம்மம் ராசியையும், ( எட்டாம்
பார்வையாக )தனுசு ராசியை பார்க்கிறார். ( ஏழாம் பார்வையாக )விருச்சிகம் ராசியை பார்க்கிறார்.

புதன் பார்வையுள்ள ராசி


புதன் துலாம் ராசியில் இருந்துக் கொண்டு, ( ஏழாம் பார்வையாக )மேஷம் ராசியை பார்க்கிறார்.

குரு பார்வையுள்ள சனி,ராகு,சூரியன்


குரு மீனம் ராசியில் இருந்துக் கொண்டு, ஐந்தாம் பார்வையாக கடகம் ராசியையும், ( ஒன்பதாம்
பார்வையாக )விருச்சிகம் ராசியை பார்க்கிறார். ( ஏழாம் பார்வையாக )கன்னி ராசியை பார்க்கிறார்.

சுக்கிரன் பார்வையுள்ள ராசி


சுக்கிரன் சிம்மம் ராசியில் இருந்துக் கொண்டு, ( ஏழாம் பார்வையாக )கும்பம் ராசியை பார்க்கிறார்.
சனி கடகம் ராசியில் இருந்துக் கொண்டு,மூன்றாம் பார்வையாக கன்னி ராசியையும், ( பத்தாம்
பார்வையாக )மேஷம் ராசியை பார்க்கிறார். ( ஏழாம் பார்வையாக )மகரம் ராசியை பார்க்கிறார்.

சனி பார்வையுள்ள சூரியன்


சனி கடகம் ராசியில் இருந்துக் கொண்டு,மூன்றாம் பார்வையாக கன்னி ராசியையும், ( பத்தாம்
பார்வையாக )மேஷம் ராசியை பார்க்கிறார். ( ஏழாம் பார்வையாக )மகரம் ராசியை பார்க்கிறார்.

கிரக பரிவர்த்தனை
கிரகங்கள் பரிவர்த்தனை பெறுவது ஒருவகை யோகமாகும். பரிவர்த்தனை பெறுவதால் இரண்டு
கிரகமும் ஸ்தான பலம் பெறுவதோடு அவை அளிக்கும் பலனிலும் மிகையாகிறது. அதனால் ஜாதகரின்
மேலான பலன்களுக்கு பரிவர்தனை துணை புரியும். ஆனால் அந்த பலனை பெற பரிவத்தனை
பெற்றுள்ள கிரகங்களின் தசை நடை முறைக்கு வரவேண்டும். இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று
இடம் மாறி வீற்றிருப்பது பரிவர்த்தனை ஆகும். இதனை பரிவர்த்தனை யோகம் என்று கூறுவார்கள்.
இதில் 3 வகையான பரிவர்த்தனை உள்ளது. சுபர்/சுபர், சுபர்/பாவர் மற்றும் பாவர்/பாவர் பரிவர்தனை.
லக்கினத்திற்கு நன்மை செய்யும் இரு கிரகங்கள் தங்கள் வீடுகளை மாற்றி கொண்டால் அது
ஜாதகருக்கு மிகுந்த நன்மை. சுபர்/பாவர் மற்றும் பாவர்/பாவர் பரிவர்த்தனை நன்மைகளுக்கு பதிலாக
அதிக தீமை செய்யும் அமைப்பு உருவாகும் அந்த கிரகத்தின் திசா புத்தி காலத்தில். எப்போதும்
கிரகங்கள் நட்பு நிலைக்கு கீழ் செல்லும் பொழுது மட்டுமே கெடுபலன்கள் தரும் அமைப்பில் இருக்கும்.
எனவே இரு கிரகங்கள் தங்கள் வீடுகளை பறிமாரிக்கொள்ளும் அமைப்பு பரிவர்த்தனை யோகம்
என்றே கூறப்பட்டுள்ளது.. இந்த ஜாதகத்தில் எந்த ஒரு கிரக பரிமாற்றமும் இல்லை.

ராசி கட்டம் பொது பலன்கள்


ஜனனி ஜன்ம சௌக்யானம், வர்த்தினி குல சம்பதம்
பதவீம் பூர்வ புண்யானாம், லிக்யதே ஜன்ம பத்ரிகா

- இந்த ஜன்மத்தில் ஒருவர் அடையக்கூடிய நன்மை, தீமைகள், அவன் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவ
புண்ணியங்களின் அடிப்படையில் கணிக்கப்பட்டு ஜாதகக் கட்டத்தில் கிரகங்களின் அமைப்பில்
சந்கேதமாகக் குறிக்கப்பட்டுள்ளது என்பது பொருள்.

குறிப்பு : இவை அனைத்தும் ஜாதக பொது விதிகள். எல்லோருக்கும் எல்லாமுமே பொருந்தாது.


தனிப்பட்ட கிரக நிலை வைத்து பலன் சொல்வது துல்லியமாக இருக்காது. மற்ற கிரகங்களின் பார்வை
சேர்க்கை பொறுத்து பலன்கள் வேறுபடலாம் முரண்பாடான கருத்துக்களுக்கு தகுந்த ஜோதிடரிடம்
ஆலோசனை பெற்றுக் கொள்ளவும். அவர்கள் தான் 12 ராசிகள், 9 கிரகங்கள், 27 நட்சத்திரங்கள், திசை
புத்தி அந்தரம் கலந்த கூட்டு பலனாக சொல்வார்கள்.

செவ்வாய் தோஷம் நிர்ணயம்


ஒவ்வொரு ஜாதகத்திலும்‌செவ்வாய்‌தோஷத்திற்கு மிகவும்‌முக்கியத்துவம்‌கொடுக்கப்படுகிறது‌.
திருமண பொருத்தம்‌பார்க்கும்பொழுது செவ்வாய்‌கிரகத்தினுடைய நிலை முக்கியத்துவம்‌
பெறுகிறது. செவ்வாய்‌லக்கினத்திலிருந்து 2,4,7,8,12 இடங்களில் இருந்தால் அந்த ஜாதகத்தில்
செவ்வாய் தோஷம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஜாதகத்தில் லக்கினத்திலிருந்து செவ்வாய் 3
ம் இடத்தில் இருப்பதால் செவ்வாய் தோஷம் இல்லை.
ஆனால் சில நூல்களில் செவ்வாய் சந்திரன் அமர்ந்திருக்கும் வீடு (ஜென்ம ராசிக்கு) அல்லது
சுக்கிரன் அமர்ந்திருக்கும் வீட்டிற்கு இரண்டு, நான்கு, ஏழு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில்
அமர்ந்தால் தோஷம் என்பதன் படி பார்த்தாலும் இந்த சாதத்தில் செவ்வாய் தோஷம் இல்லை. (ஸ்வாமி
முருகானந்தாவின் செவ்வாய் தோஷம் விளக்கமும் பரிகாரங்களும் பக்கம் 142). ( ஸ்வாமி
முருகானந்தாவின் செவ்வாய் தோஷம் விளக்கமும் பரிகாரங்களும் பக்கம் 46). இது பொது விதி. ஆண்
ஜாதகத்தில் 2,7,8 வீட்டில் செவ்வாய் இருந்தால் மட்டுமே செவ்வாய் தோஷம். இது சிறப்பு விதி. (ஜோதிட
தென்றல் S.அன்பழகன் நவீன வேத ஜோதிடம் பக்கம் 140)

ரிஷபானந்தர் எழுதிய அதிர்ஷ்ட ஜோதிட களஞ்சியம் பக்கம்


ஜாதகத்தில் ஒரு கிரகம் ஆட்சி பெற்றிருந்தால் தன் குடும்பத்தில் சமமான அந்தஸ்த்துடன் திகழ்வார்.
இரண்டு கிரகம் ஆட்சி பெற்றிருந்தால் குடும்பத்தாரால் போற்றப்படுவார். மூன்று கிரகம் ஆட்சி
பெற்றிருந்தால் உற்றார் உறவினருக்கு இனியவராய், மதிக்கத்தக்கவராய் இருப்பர். நான்கு கிரகம் ஆட்சி
பெற்றிருந்தால் செல்வந்தராக இருப்பர். ஐந்து கிரகம் ஆட்சி பெற்றிருந்தால் செல்வத்தோடு சுக
போகமாக வாழ்வர். ஆறு கிரகம் ஆட்சி பெற்றிருந்தால் பலரும் மதிக்கும் உயர் பதவி வகிப்பார். ஒரு
கிராமத்துக்கோ அல்லது நாட்டுக்கோ அதிகாரியாகவோ அல்லது நாட்டை ஆள்பவராகவோ இருப்பர்.
இந்த ஜாதகத்தில் 1 கிரகங்கள் ஆட்சியில் உள்ளது.

ரிஷபானந்தர் எழுதிய அதிர்ஷ்ட ஜோதிட களஞ்சியம் பக்கம் 45


கிரகங்கள் யாவும் ஒரு ஜாதகத்தில் நட்பு ராசிகளிலேயே இருக்குமானால் பூருவீக
சொத்துள்ளவராகவும் சுயமாக சம்பாதிக்கும் ஆற்றல் பெற்றும் திகழ்வர். ஒரு நாட்டையோ, ஒரு
பகுதியையோ ஆளும் யோகம் உண்டாகும். தயாள குணம் கொண்டவராக இருப்பர். ஆறு கிரகங்கள்
நட்புப் பெற்றிருந்தால் உயர் பதவி வகிப்பார். ஐந்து கிரகங்கள் நட்பு பெற்றிருந்தால் ஒரு கூட்டத்துக்கு
தலைவராக இருப்பர். மூன்று அல்லது நான்கு கிரகங்கள் நட்பு பெற்றிருந்தால் சகோதிரர்களால் நன்மை
பெறுவர். இரண்டு கிரகங்கள் நட்பு பெற்றிருந்தால் நண்பர் உதவி புரிவர். ஒரு கிரகம் நட்பு பெற்றிருந்தால்
பிறருடைய சொத்தை கொண்டு பிழைப்பர். இந்த ஜாதகத்தில் 1 கிரகங்கள் நட்பில் உள்ளது.

ராகு கேதுவால் பெரும் யோகம் (எஸ்.பி சுப்பிரமணியன் எழுதிய ஜோதிட சித்தர்களின் நுட்பங்கள்
பக்கம் 35 - 36 இல் இருந்து)
ராகு - கேதுவிற்கு சொந்த வீடுகள் இல்லை. ஆனால் அவர் இருக்கும் ராசியின் பலத்தையும், அவர்
இருக்கும் நட்சத்திராதிபதியின் பலத்தையும் பெற்று பார்க்கும் கிரகமான குருவின் பார்வையையும்
பொறுத்து பலன் தருவார்கள். கேது - நாம் சென்ற பிறவியில் செய்த நல்வினை - தீவினைகளைத்
தருபவர். ராகு - இப்பிறவியில் அனுபவிக்கும் நன்மை தீமையை தெரிவிப்பவர்கள். இவர்கள் இருவரும்
கர்மாவைத் தெரிவிக்கும் கிரககங்களாவார்கள். கேது இருக்கும் ராசிக்கதிபதி ஒருவர் சென்ற
பிறவியில் எவ்வித அளவிற்கு நன்மை செய்தார், எவ்வித அளவிற்கு தீமை செய்தார் என்பதை
தெரிவிக்கும் கிரகமாகும். ராகு இருக்கும் வீட்டின் அதிபதி இப்ப்பிரவியில் கர்மவினையை எவ்விதம்
எந்த அளவு நன்மை தீமையை அனுபவிக்கலாம் என்பதை என்பதை தெரிவிக்கும் கிரகமாகும். மேலும்
அவரவர் ஜாதகத்தில் யோகம் தரும் கிரகங்களின் நட்சத்திரத்தில் இருந்தால் அதன் தசா புத்தியில்
யோகம் தருவார்கள்.

பொதுவாக ராகு-கேது உபயச்தானமான 3-6-10-11 இல் இருந்தாலும் கேந்திர - திரிகோணங்களில்


இருந்தாலும் நன்மை தருவார்கள். வாழ்வில் உயர்நிலை பெறுவார்கள்.

கோச்சார நிலையிலும் ராகு 3-4-10-11 இல் வரும் காலமும் 1-4-5-7 இல் வரும் காலமும் நன்மை தருவார்.
பதவி, பதவி உயர்வு, தொழிலால் லாபம், இவைகளைத் தருவார். மேலும் மேஷம் ரிஷபம், மிதுனம், கடகம்,
மகரத்தில் ராகு இருந்துஅந்த பாவம் 3-6-10-11 ஆம் பாவமாக அமைந்து குருவின் சம்பந்தம்
பெருமானால் ராகு தசை யோகம் தரும். கேது வாழ்வின் இறுதிகால வாழ்வின் நிலையை அதாவது
நிம்மதியானதா அதாவது நிம்மதியானதா அல்லது துன்பங்கள் நிறைந்ததா என்பதைக் தெரிவிக்கும்
கிரகமாகும்.இறுதிக் காலத்தில் உருவாகும் வியாதிக்கு கேதுவே காரணமானவர். அவரது நிலையைப்
பொறுத்தே இறுதிக் கால வாழ்க்கை அமைகிறது.

ராகு கொடுப்பவர் என்றும் கேது எடுப்பவர் என்பதும் பல ஜோதிட அறிஞ்ர்களின் கருத்தாகும். இறுதிக்
கால இறப்புக்கு கேதுவின் நிலையே காரணம்.

பாம்பின் உருவம் பெற்ற கிரகமாகும். ராகு பாம்பின் தலையையும், கேது பாம்பின் வாலையும்
பெற்றிருப்பவர்கள். இவை அனைவருமே பாம்பை வாகனமாகவும் மாலையாகவும் கொண்டிருப்பார்களே.
ராகு நன்மை தருபவர் என்பதும் ஜோதிட வித்தகர்களின் கருத்தாகும்.

பராசர ஹோரையில் மகரிஷி பராசரர் ராகுவிற்கு ரிஷபம் உச்சவீடு, கடகம் மூலத்திரிகோணம், கன்னி
ஆட்சி வீடு என்று கூறுகிறார். மகரிஷி காளிதாசரும் தனது உத்தர காலாம்ருதத்தில் ராகுவிற்கு ரிஷபம்
உச்ச வீடு என்கிறார். ஆனால் பெரும்பாலான தென்னிந்திய மூல நூல்களில் ராகுவிற்கு விருச்சிகம்
உச்சம் ரிஷபம் நீசம், மற்றும் கேதுவிற்கு விருச்சிகம் நீசம் ரிஷபம் உச்சம் என்றே சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த ஜாதகம் ராகுவிற்கு ரிஷபம் நீசம், கேதுவிற்கு விருச்சிகம் உச்சவீடு என்பதாக
கணிக்கப்பட்டுள்ளது.

நர்மதா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியனின் ஜோதிட சித்தர்களின் நுட்பங்கள்


நூலில் பக்கம் 39 ல்
கேது ஒருவரின் இறுதிக் காலத்தில் எதனால் எவ்விதமான வியாதியால் இறப்பு ஏற்படும் என்பதை
உணர்த்தும் கிரகமாகும். எந்தப் பாவத்தில் இருக்கிறதோ அந்தப்பாவம் குறிப்பிடும் வியாதியில் இறப்பும்
ஏற்படும்.

நவாம்சம் பொது பலன்கள்


நவாம்சத்தில் சொந்த அல்லது உச்ச வீட்டில் இருக்கும் குரு, ஜாதகனுக்கு நல்ல, ஸ்திரமான
செல்வத்தைக் கொடுக்கும். பணப்புழக்கத்தைக் கொடுக்கும். வயதாக வயதாகப் பண இருப்பு
அதிகமாகிக் கொண்டே போகும்.
வெள்ளியன்று மீன லக்கனத்திலே குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்கு லக்கன தோஷம்
பற்றிக்கொள்கிறது.
லக்கனதோஷம் அடைந்த ஜாதகரை ஊரிலே குடிகொண்டிருக்கும் பெருமாளிடம் சென்று, மனமுருக
அவரிடம், என்னை உங்களின் தத்துப்பிள்ளையாக எடுத்துக் கொள்ளுங்கள் பெருமாளே" நான் இனி
உங்களின் பிள்ளை, இன்றிலிருந்து உங்கள் மீதுதான் நான் அர்ச்சனை செய்வேன், என்று எழுத்து
மூலமாகவோ, அல்லது வாய்வழிமூலமாகவோ அங்கே, அவரிடம் சொல்லிவிடுங்கள். இதன்மூலம்
உங்களைத் தாக்க வருகின்ற நவக்கிரக கதிர்கள் விலகிவிடும். ஏனென்றால், பெருமாளின்
திருமகனாக, திருமகளாக நீங்கள் மாறிவிட்டீர்கள்.

பிருகு-நந்தி நாடி முறைப்படி ஆண் ஜாதகத்தில் மனைவியைக்குறிக்கும் கிரகம் சுக்கிரனாகும். ஒருவர்


ஜாதகத்தில் சுக்கிரன் பன்னிரண்டு ராசிகளில் எந்த ராசியில் நிற்கிறாரோ அதைக்கொண்டு அந்த
ஜாதகருக்கு வரும் மனைவியைப்பற்றி சில விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
சிம்மத்தில் சுக்கிரன் நின்றால் ஜாதகருக்கு வரும் மனைவி நிர்வாக திறமை உடையவளாகவும், பிறந்த
வீட்டில் ராணி போலவும் இருப்பாள். மனைவி தந்தை வழி உறவினளாக இருக்க வாய்ப்புண்டு. பிறந்த
வீட்டில் உள்ளவர்களை நன்றாக வேலை வாங்குவாள். பெற்ற பிள்ளைகளை பராமரிக்க மாட்டாள்,
பிள்ளைகளை தாய் வீட்டில் விட்டு வளர்ப்பாள். தன்னை எல்லோரும் தலைவி போல் பாவிக்கவேண்டும்
என விரும்புவாள். தந்தை வழி சொத்துக்கள் தனக்கே கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பாள்
அல்லது தாய் வீட்டிலிருந்து எப்பொழுதும் எதையாவது எடுத்துக்கொண்டு போவதை வழக்கமாக
வைத்திருப்பாள். மனைவி பிறந்த ஊர் ஜாதகன் பிறந்த ஊருக்கு தெற்கு திசையில் இருக்கும்.
மனைவியின் வீடு கிழக்கு மேற்கு வீதியில் வடக்கு பக்கம் வாசல் உள்ள வீடாக அமைந்திருக்கும்.
உங்கள் ஜாதகப்படி உங்கள் மனைவி அல்லது கணவரின் பிறப்பு நட்சத்திரம், ராசி, லக்னம், மாதம்,
தேதி,கிழமை அமையும் வாய்ப்புகள்

லக்னத்திற்கு 7 ம் வீட்டு அதிபதிக்கு 1 ல் புதன் இருப்பதால் உங்களுக்கு வரும் வாழ்க்கைத்துணை


1.ஆனி/புரட்டாசி மாதம் பிறந்தவராகவோ
2.மிதுனம் & கன்னி ராசி /மிதுனம் & கன்னி லக்னத்தில் பிறந்தவராகவோ
3.ஆயில்யம்,கேட்டை,ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவராகவோ
4.பிறப்பு ஆங்கில தேதி எண் 5,14,23 கொண்டவராகவோ
5.புதன் கிழமையில் பிறந்தவராகவோ
6.பெயரின் முதலெழுத்து E,H,N,X,DA,DI,DU,DE,NO,YA,YI,YE,CHA,CHI கொண்டவராகவோ
7.கணிதம்,சட்டம்,தகவல் தொடர்பு, நடனம், எழுத்து,வியாபாரம் இவை சார்ந்த துறைகளில்
தொடர்புடையவராகவோ
8.புகழ் பெற்ற விஷ்ணு கோவில் சார்ந்த ஊர்களில் பிறந்தவராகவோ வசிப்பவராகவோ
9.பெயரில் விஷ்ணு,பெருமாள், மால்,யுவன், யுவதி, இளமை,மொழி,துளசி போன்ற புதனின் காரகமுள்ள
பெயர்கள் அமையும் வாய்ப்பு உண்டு*

உங்கள் பிறப்பு லக்னத்திற்கு 7 ம் வீட்டு அதிபதிக்கு 2 ல் ராகு இருந்தால் உங்களுக்கு வரும்


வாழ்க்கைத்துணை
1.ராகு இருக்கும் ராசிக்குறிய மாதத்தில் பிறந்தவராகவோ
2.ராகு இருக்கும் ராசியை லக்னமாக கொண்டு பிறந்தவராகவோ
3.திருவாதிரை,ஸ்வாதி,சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவராகவோ
4.பிறப்பு ஆங்கில தேதி எண் 4,13,22,31 கொண்டவராகவோ
5.ராகு காலத்தில் பிறந்தவராகவோ
6.பெயரின் முதலெழுத்து MU,KA,GNA,RU,RE,RO,SA,SI,SU கொண்டவராகவோ
7.அரசு ஒப்பந்தம்,நவீன தொழில்நுட்பம்,இணையதளம், வெளிநாடு குறிப்பாக இஸ்லாமிய அரபு
நாடுகள் இவற்றில் தொடர்புடையவராகவோ
8.இஸ்லாமியர்கள்,மசூதிகள்,துர்க்கை வேற்று மொழி மக்கள் அதிகம் வாழும் ஊர்கள் இவற்றில்
பிறந்தவராகவோ வசிப்பவராகவோ
9.துர்கா,காளி,பொருளில்லாத பெயர்கள், இஸ்லாமிய, நாத்தீக ராகு கிரக காரகமுள்ள பெயர்கள்
அமையும் வாய்ப்பும் உண்டு*

வர்கோத்தமம்
வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில்
இருப்பதைக் குறிக்கும்! ஒரு கிரகம் வர்கோத்தமம் பெற்றால் அது வலிமை உடையதாக ஆகிவிடும்.
அந்த அமைப்பு ஜாதகருக்கு அதிகமான அளவு நன்மையான பலனைக் கொடுக்கும்! இயற்கையில்
தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும். இது தவிர,
வர்கோத்தமம் பெறும் கிரகம், ஜாதகத்தில் அது எந்த பாவத்திற்கு/வீட்டிற்கு உரியதோ, அந்த
வீட்டிற்கான பலன்களை உரிய நேரத்தில் வாரி வழங்கும் . உங்கள் ஜாதகத்தில்
சந்திரன், ரிஷபம் ராசியில் வர்கோத்தமம் பெற்றுள்ளது
சந்திரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகருக்கு அதீத மன வலிமையைக் கொடுக்கும். எதையும்
சட்டென்று புரிந்து கொள்ளும் தன்மையைக் கொடுக்கும். சந்திரன் வர்கோத்தமமானால் கவர்னர்
அல்லது மந்திரி ஆவார்.
ஐந்தாமதிபதி ஆட்சி அல்லது வர்கோத்தமமானால் பூர்வீக சொத்து கிட்டாது. பெண் எனில் அபார்ஷன்
பிரச்சினை இருக்கும்
புதன், துலாம் ராசியில் வர்கோத்தமம் பெற்றுள்ளது
புதன் வர்கோத்தமம் பெற்றால்
ஜாதகருக்கு அதீத பேச்சுத் திறமையைக் கொடுக்கும். புதன் வர்கோத்தமமானால் யோகபலன் உண்டு.
பளிங்கு வீடு கட்டுவார்.

நான்காமதிபதி ஆட்சி அல்லது வர்கோத்தமமானால் தாயார் அன்பு கிடைக்காது


எழாமதிபதி ஆட்சி அல்லது வர்கோத்தமமானால் மிக அழகான வாழ்க்கைத் துணை அமையும்
குரு, மீனம் ராசியில் வர்கோத்தமம் பெற்றுள்ளது
குரு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகருக்கு அதீத புத்திசாலித்தனத்தைக் கொடுக்கும். குரு
மீனத்தில் வர்கோத்தமமானால் அலாஸ்கா தொடர்பு உண்டு, தனுசில் வர்கோத்தமமானால்
ஆப்பிரிக்கத் தொடர்பு உண்டு.
லக்னாதிபதி லக்னத்தில் வர்கோத்தமமானால் ஜாதகர் மன உறுதியுடன் இருப்பார்
லக்னாதிபதி வர்கோத்தமமானால் திட்டமிட்ட காரியம் வெற்றி பெரும் வாய்ப்பு உண்டு.
பத்தாமதிபதி ஆட்சி அல்லது வர்கோத்தமமானால் பொருளாதார மேன்மை, சிறப்பான தொழில் அல்லது
வேலை அமையும்

கிரகங்கள் சரராசியில் வர்கோத்தமம் பெற்றால் எண்ணங்கள் நிறைவேறும். ஜாதகர்


நேர்மையானவர்களாகவும், பிரபலமானவர்களாகவும் இருப்பார். பரிவர்த்தனை தரும் யோகம் சுப.
சுப்பிரமணியன் பக்கம் 31
கிரகங்கள் ஸ்திரராசியில் வர்கோத்தமம் பெற்றால் தசா புத்தியில் ஒரே இடத்தில் இருக்கும் நிலையைத்
தரும். பிரயாணத்தில் ஆர்வம் ஏற்படும். பரிவர்த்தனை தரும் யோகம் சுப. சுப்பிரமணியன் பக்கம் 31
கிரகங்கள் உபயராசியில் வர்கோத்தமம் பெற்றால் பல இடங்களுக்கு பிரயாணம் செய்யும் என்னத்தை
உருவாக்கும். சொந்த ஊரில் அதிக காலம் இருக்கும் நிலையை தராது. விட்டுக் கொடுத்து வாழ்வார்.
வர்கோத்தமம் பெரும் கிரகம் 29-30 பாகையில் இருந்தால் நன்மையையும் குறைவாகும். பரிவர்த்தனை
தரும் யோகம் சுப. சுப்பிரமணியன் பக்கம் 31
கிரகங்கள் நில ராசியில் வர்கோத்தமம் பெற்றால் அந்த தசா புத்திகளால் நன்மை தருவார். அவர் 6,8,12
ம் அதிபதியாகி வர்கோத்தமம் பெற்றால் அதன் ஆதிபத்ய பலன் அதிகமாகும். அயல் நாட்டின் யோகம்
பெரும் நிலையாகும். பல திருத்தலங்களுக்கு சென்று வருவார்கள். பரிவர்த்தனை தரும் யோகம் சுப.
சுப்பிரமணியன் பக்கம் 31

நீச்ச கிரகங்களும், அது பாதிக்காத ஜாதி / மதம் / குலங்களும்


* சூரியன் - வேளாளர், முதலியார், வேடர்கள், மலைவாசிகள் (இந்த ஜாதகத்தில் சூரியன் சமம்)
* சந்திரன் - வன்னார்,செம்படவர் (இந்த ஜாதகத்தில் சந்திரன் உச்சம்)
* செவ்வாய் - குயவர், கருமன் (இந்த ஜாதகத்தில் செவ்வாய் சமம்)
* புதன் - செட்டியார், வாணியர், கோமுட்டி (இந்த ஜாதகத்தில் புதன் நட்பு)
* குரு - பிராமணர்,சேட்டு,ஜனர்கள் (இந்த ஜாதகத்தில் குரு ஆட்சி)
* சுக்கிரன் - வேசிகள்,நட்டுவனர்,கோனார்,மந்திரி,இடையர் (இந்த ஜாதகத்தில் சுக்கிரன் பகை)
* சனி - அரிஜனம் (இந்த ஜாதகத்தில் சனி பகை)
* ராகு முகமதியர்கள் (இந்த ஜாதகத்தில் ராகு உச்சம்)
* கேது - கிருஸ்துவர்கள், (இந்த ஜாதகத்தில் கேது நீச்சம்)
* மேற்கண்டவர்களுக்கு கிரகநீசத்தினால் பாதிப்பு இல்லை

சரவாஷ்டக வர்க்கப்பரல்களின் பலன்கள்


மொத்தப் பரல்கள் 337. ராசிகள் 12 வகுத்தால் சராசரியாக ஒரு ராசிக்கு 28 பரல்கள் வரும். ஒரு வீட்டில்
(அதாவது ஒரு ராசியில்) சராசரிக்கும் குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீடு வலிமையாக,
சிறப்பாக இல்லை என்று பொருள். கிரகங்கள் ஜாதகத்தில் உச்சமாக இருந்தாலும் அல்லது கேந்திர,
திரிகோண வீடுகளில் இருந்தாலும், அல்லது சொந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டில் சராசரிக்கும்
குறைவான பரல்கள் இருந்தால், அந்தக் கிரகங்கள் முழுமையாகச் செய்லபடாது.கிரகங்கள்
ஜாதகத்தில் நீசமடைந்திருந்தாலும் அல்லது எதிரி வீட்டில் குடியிருந்தாலும் அல்லது 6 ஆம் வீடு,
8 ஆம் வீடு அல்லது 12 ஆம் வீடு போன்ற தீய ஸ்தானங்களில் அமர்ந்திருந்தாலும் அந்த வீட்டில்
சராசரிக்கும் அதிகமான பரல்கள் இருந்தால் அவைகள் முழுமையாகச் செயல்பட்டு ஜாதகனுக்கு
நன்மைகளை செய்வார்கள்

ஒரு வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீட்டால் ஜாதகனுக்குப் பெரிய
(நல்ல) பலன்கள் இருக்காது. இந்த ஜாதகத்தில்
மேஷம் (2 ம்) வீட்டில் 21 பரல்கள் உள்ளது
கன்னி (7 ம்) வீட்டில் 21 பரல்கள் உள்ளது
விருச்சிகம் (9 ம்) வீட்டில் 21 பரல்கள் உள்ளது

ஒரு வீட்டில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், அந்த வீட்டால் ஜாதகனுக்கு மிகவும்
நன்மையான பலன்கள் உண்டாகும். ஜாதகன் ஒரு வீட்டின் முழுப் பலனையும் அடைய
வேண்டுமென்றால் அந்த வீட்டில் 30 ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருக்க வேண்டும். இந்த
ஜாதகத்தில்
மீனம் (1 ம்) வீட்டில் 38 பரல்கள் உள்ளது
மிதுனம் (4 ம்) வீட்டில் 32 பரல்கள் உள்ளது
கடகம் (5 ம்) வீட்டில் 31 பரல்கள் உள்ளது
தனுசு (10 ம்) வீட்டில் 31 பரல்கள் உள்ளது
மகரம் (11 ம்) வீட்டில் 31 பரல்கள் உள்ளது

ஒரு வீட்டில் 26 முதல் 29 பரல்கள் சுமாரான பலன்களை உண்டாகும். இந்த ஜாதகத்தில்


ரிஷபம் (3 ம்) வீட்டில் 26 பரல்கள் உள்ளது
சிம்மம் (6 ம்) வீட்டில் 29 பரல்கள் உள்ளது
துலாம் (8 ம்) வீட்டில் 27 பரல்கள் உள்ளது
கும்பம் (12 ம்) வீட்டில் 29 பரல்கள் உள்ளது

லக்கினத்தில் இருப்பதைவிட ஏழாம் வீட்டில் பரல்கள் குறைவாக இருந்தால், ஜாதகருக்கு, அவர்


நினைப்பைவிட, விருப்பதைவிட, தகுதியைவிட குறைவான அமைப்பை உடைய துணையே அமையும்.
இந்த ஜாதகத்தில் 7 ம் (கன்னி) வீட்டில் 21 பரல்கள் உள்ளது. இந்த ஜாதகத்தில் 1 ம் (மீனம்) வீட்டில் 38
பரல்கள் உள்ளது.

இரண்டாம் வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் எப்போதும் பணப் பிரச்சினை
இருக்கும். வரவிற்கு மேல் செலவாகும். சுருக்கமாகச் சொன்னால் கையில் காசு தங்காது. ஓட்டைக்கை
என்று சொல்லுவார்கள். இந்த ஜாதகத்தில் 2 ம் (மேஷம்) வீட்டில் 21 பரல்கள் உள்ளது.

நான்காம் வீட்டில் 30 ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருந்தால்தான் நல்ல, அன்பான, பரிவான,
பாசமுள்ள தாய் அமைந்திருப்பாள். இந்த ஜாதகத்தில் 4 ம் (மிதுனம்) வீட்டில் 32 பரல்கள் உள்ளது.

எட்டாம் வீட்டில் 25 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், வாழ்க்கையில் பெரும் கஷ்டங்கள்,
பிரச்சினைகள் வராது. இந்த ஜாதகத்தில் 8 ம் (துலாம்) வீட்டில் 27 பரல்கள் உள்ளது.
பித்ருகாரகன், ஆத்மகாரகன் சூரியன் அவனுடைய சுயவர்க்கத்தில் 2 பரல்களுடன் உள்ளார்.
மனகாரகன் சந்திரன் அவனுடைய சுயவர்க்கத்தில் 5 பரல்களுடன் உள்ளார்.
பூமிகாரகன், சகோதிரகாரகன் செவ்வாய் அவனுடைய சுயவர்க்கத்தில் 3 பரல்களுடன் உள்ளார்.
வித்யாகாரகன் புதன் அவனுடைய சுயவர்க்கத்தில் 6 பரல்களுடன் உள்ளார்.
புத்திகாரகன், தனகாரகன் குரு அவனுடைய சுயவர்க்கத்தில் 6 பரல்களுடன் உள்ளார்.
களத்திரகாரகன் சுக்கிரன் அவனுடைய சுயவர்க்கத்தில் 4 பரல்களுடன் உள்ளார்.
கர்மகாரகன் சனி அவனுடைய சுயவர்க்கத்தில் 6 பரல்களுடன் உள்ளார்.

பாடல் 41 - சூரியன் 2, 3, 4, 7, 5 ல் தரும் பாதகம் - புலிப்பாணி ஜோதிடம் 300


கூறேநீ ஈராறும் ரெண்டுரெண்டு
கொற்றவனே பாக்கியமும் யேழோடஞ்சில்
ஆரேனீ ஆதித்த னிருந்தானானால்
அப்பனே அங்கத்தில் காந்தலுண்டு
சீரேனீ சொற்பனமும் சிரங்குகண்ணோய்
சிவசிவா சிந்தித்த தெல்லாமாகும்
கூறேனீ போகருட கடாக்ஷத்தாலே
கொலையீனார் பகையது வருகுஞ்சொல்லே

சூரியபகவான் 2,3,4,7,5 ஆகிய இடங்களில் இருப்பாரேயானால் [இலக்கினத்திலிருந்தது]


அச்சாதகனுக்கு உடலில் காந்தல் உண்டென்றும் சொற்ப அளவிற்கே சீர் பெறுவான் என்றும்,
சிவனருளால் சிரங்கு, கண்ணோய் முதலியன ஏற்படும் என்றும் நின்று இதந்தரும் என் குருநாதரான
போகரது கருணா கடாக்ஷத்தாலே இம் மகனுக்கு, வஞ்சித்துக் கொலை செய்யும் ஈனர்களின் பகையும்
வரும் என்று கிரகநிலையை நன்கு ஆய்ந்தறிந்து பலன் கூறுவாயாக.

இப்பாடலில் சூரியன் இலக்கினத்திலிருந்து 2,3,4,7,5 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப்


பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

பாடல் 45 - செவ்வாய் 6,8,12,3,7,10,9 ல் தரும் பாதகம் - புலிப்பாணி ஜோதிடம் 300


சொல்லப்பா ஆறெட்டு பன்னிரண்டும்
சுகசப்த கேந்திரமும் பாக்கியம் ரெண்டில்
அல்லப்பா அத்தலத்தில் ஆரல்நிற்க
அப்பனே அகம் பொருளும் நிலமும் நஷ்டம்
குள்ளப்பா குடும்பமது சிதறிப்போகும்
கொற்றவனே குருவுக்கு தோஷமுண்டாம்
வல்லப்பா போகருட கடாக்ஷத்தாலே
வளமாகப் புலிப்பாணி வசனித்தேனே.

இன்னுமொன்றும் சொல்லுகிறேன் கேட்பாயாக. இச் செவ்வாய், சேய், பவுமன் என்றும்


உரைக்கப்படுபவன். இவன் 6,8,12,3,7,10,9-இல் நிற்க நிலமும் பொருளும் மனையும் சேதமாகும்;
குடும்பமானது சிதறிப்போகும் இதனைச் செவ்வாய் [குரு] தோடம் என்றும் கூறுவார்கள் வல்லவராகிய
என் சற்குரு போக மாமுனிவரின் கருணையாலே வன்மையுடன் புலிப்பாணி முனிவராகிய நான்
கூறினேன்.

இப்பாடலில் செவ்வாய் இலக்கினத்திலிருந்து 6,8,12,3,7,10,9 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த


ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

பாடல் 46 - வியாழன் 4,7,10,1,5,9,2,11 ல் தரும் யோகம் - புலிப்பாணி ஜோதிடம் 300 பாரப்பா பரகுரு
நாலேழ்பத்து
பகருகின்ற கோணமுடன் தனமும்லாபம்
சீரப்பா சென்மனுக்கு யோகம் செப்பு
செந்திருமால் தேவியுமே பதியில்வாழ்வன்
கூறப்பா குடிநாதன் கண்ணுற்றாலும்
குவலயத்தில் வெகுபேரை ஆதரிப்பன்
ஆரப்பா ஆரெட்டு பன்னிரெண்டு
அறைகின்றேன் அதன்பலனை அன்பால்கேளே வியாழ பகவான் என விளம்பப்படும் குருபகவான் 4,7,10
மற்றும் 1,5,9 இன்னும் 2,11 ஆகிய இடங்களில் இருந்தால் இச்சாதகனுக்கு யோகம் மிகவும் உண்டென்று
கூறுவாயாக! செந்திருமால் தன் தேவியுடன் இவன் மனையில் வாழ்வார்கள். இன்னும்
இரண்டாமிடத்ததிபதி இவனைக் காணில் இப்பூமியில் வெகு பேரை ஆதரிப்பான். இனி 6,8,12 ஆகிய
இடங்களில் நின்றால் எத்தகைய பலன் விளைவிப்பான் என்பதனையும் கூறுகிறேன். இதனை நீயும்
அன்புடனே கேட்பாயாக!

இப்பாடலில் வியாழன் இலக்கினத்திலிருந்து 4,7,10,1,5,9,2,11 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த


ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

பாடல் 49 - சுக்கிரன் 12,3,6,8 ல் தரும் பாதகம் - புலிப்பாணி ஜோதிடம் 300 பாரப்பா பனிரெண்டு
மூன்றாரெட்டில்
பலமுள்ள அசுரகுரு அதனில் தோன்ற
வீரப்பாவிதிகுறைவுவெதர்நோய்வாதம்
விளங்குகின்ற செம்பொன்னும்மனையும் நஷ்டம்
கூறப்பா குழவிக்கு மகோதரமும் பாண்டு
கொற்றவனே குன்மமொடு சயமும்சோகை
சீரப்பா ஈராறில் சுங்கன் ஆட்சி
சிவசிவா சயனசுகம் யோகஞ்சொல்லே. ஒரு சாதகனுக்கு 12,3,6,8 ஆகிய இடங்களில் அசுர குருவான
சுக்ராச்சாரியார் பலமுடன் சஞ்சாரம் செய்வாரானால் அச்சாதகனுக்கு ஆயுள் குறைவதுடன், மர்ம
உறுப்புகளில் [பீசத்தில்] நோயுறுதலும்,வாதநோய் ஏற்படுவதும் மிகவும் விளக்கம் பெற்ற செம்பொன்
மற்றும் வாழ்மனையும் நஷ்டமாம். மேலும், மகோதரம்,பாண்டு ஆகிய நோய் மட்டுமல்லாமல் குன்மம்,
சயம், சோகை ஆகிய நோய்களும் ஏற்படும். ஆயினும் 12 ஆம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றால்
சிவபரம்பொருளின் பேரருளால் சயன சுகமும் நல்ல யோகமும் ஏற்படும் எனக் கூறுவாயாக.

இப்பாடலில் சுக்கிரன் இலக்கினத்திலிருந்து 12,3,6,8 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப்


பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

பாடல் 53 - புலிப்பாணி ஜோதிடம் 300 பாரப்பா திரராசி செனித்தபேர்க்கு


பாங்கான பாக்கியாதி பதியுமாகா
கூறப்பா கோணத்தில் மேவினாலும்
கொற்றவனே பலனளிப்பன் அரசன் லாபம்
வீறப்பா மற்றயெடந் தனிலே நிற்க
வெகுபயமாம் பலனில்லை வினையில் துன்பம்
சீரப்பா போகருட கடாக்ஷத்தாலே
சிறப்பாக புலிப்பாணி செப்பினேனே. ஸ்திர ராசியில் தோன்றிய ஐன்மனுக்கு நன்மை செய்யும்
பாக்கியாதிபதியான 9 க்குடையவனும் தீமையே செய்வான். ஆனால் இப்பாக்கியாதிபதி
திரிகோணமான (1,5,9 ஆகிய) பாவங்களில் நிற்பின் அரசனால் இலாபம் போன்ற நற்பலன்களை
அளிப்பார். மற்ற இடங்களில் நின்றால் வெகுவான பயமே ஏற்படும். நற்பலன்கள் ஏற்படுவதில்லை.
செய்கின்ற காரியத்தில் தொழிலில் விக்கினங்கள் உண்டாகும். சிறப்புமிக்க போக மகாமுனிவரான என்
குருநாதர் அருளாணையால் புலிப்பாணியாகிய நான் இப்பலனைக் கூறினேன்.

லக்னாதிபதி குரு லக்னதிலேயே இருந்தால் நீண்ட ஆயுளுள்ளவர். எப்பொழுதும் சுகமான வாழ்வு


அமைகிறது. நல்ல உழைப்பாளியகவும் இவர் விளங்குகின்றான். இவருக்கு இரண்டு மனைவிகள்
அமைவதற்கு இடமிருக்கிறது.

திருமண தடை
ஜாதகத்தில் 6,7,10 ஆகிய இடங்களில் சுக்கிரன் இருந்தால் பலருக்கு திருமணம் நடைபெற தடை
ஏற்படலாம்.

சந்திரன் மூன்றில் நல்ல நிலையில் இருந்தால் உடல் வலிமையையும் ஆற்றலையும் தருவார். சகோதர
சகோதரிகளை ஆதரிப்பார் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். மூன்றாவது வீடாக இருப்பதால்
அடிக்கடி குறுகிய பயண செய்ய வைப்பார். வாகனம் வசதி கிடைக்கும் சந்திரன் கெட்டால் அனைத்தும்
எதிர்மறையாக இருக்கும். மூன்றில் சந்திரன் இருந்தால் மாமன் விரோதம் என்பார்கள். சில நேரங்களில்
மித மிஞ்சிய தைரியம், சில நேரங்களில் இனம் புரியாத பயம் அலைக்கழிக்கும்.

செவ்வாய் 3-ம் வீட்டில் இருந்தால் நல்ல தைரியசாலியாக இருப்பார், சகோதர வகையில் பிரச்சனை
இருக்கும். காதில் தொந்தரவு இருக்கும். செல்வம் நிறைய கிடைக்கும். நல்ல அறிவாற்றல் கிடைக்கும்.
உடம்பு நல்ல உறுதியாக இருக்கும். இளைய சகோதரருக்கு கெடுதல் செய்யும். சிலபேருக்கு இளைய
சகோதர, சகோதரிகள் இருக்க மாட்டார்கள். 3 ஆம் வீட்டில் செவ்வாய் பலம் பெற்றால் நல்ல வாழ்க்கை
அமையும். 3 ஆம் வீட்டு செவ்வாய் மூலம் தாய்நலம் கெடும்.
புதன் 8 ஆம் வீட்டில் இருந்தால் கல்வியில் தடை ஏற்படும். மாமன் இருக்கமாட்டார் அப்படியே மாமன்
இருந்தாலும் அவர் மூலம் எந்த பயனும் இருக்காது. புதன் நல்ல முறையில் இருந்தால் உயில் மூலம்
சொத்து வரும். ஜாதகனுக்குப் பல விஷேச குணங்கள் இருக்கும்.எல்லோரையும் அனுசரித்துப்போகும்
தன்மை இருக்கும். யாரையும் சமாளிக்கும் அல்லது வளைத்துப்போடும் தன்மை இருக்கும். செல்வம்
பலவழிகளில் வந்து சேரும். ஜாதகனும் தன் சொந்த முயற்சியில் பொருள் ஈட்டுவான். சுருக்கமாகச்
சொன்னால் செல்வந்தனாக இருப்பான் . அதிகம் கற்றவனாக இருப்பான். பண்டிதனாக இருப்பான்.
எல்லா விஷயங்களும் தெரிந்தவனாக இருப்பான். அதிக நாள் உயிரோடு இருப்பார். அதே நேரத்தில்
ஆசாமி நோஞ்சான் வடிவத்தில் இருப்பார்

சுக்கிரன் 6 ஆம் விட்டில் இருந்தால் செல்வ வளம் குன்றும். எதிரிகள் தொந்தரவு இருக்கும்.
பெண்களால் பிரச்சினைகள் இருக்கும். மர்ம பாகங்களில் நோய் வரும். பெண்களால் ஏமாற்றப்படுவார்.
சண்டை என்று வந்தால் முதலில் பெண்கள் வழியில் தான் ஆரம்பம் ஆகும். கடன் பிரச்சினை இருக்கும்

குரு லக்னத்தில் அமையப் பெற்றால் ஜாதகர் ஆசீர்வதிக்கப்பட்டவர். இவருக்கு ஜாதகம் பார்த்து பலன்
சொல்ல வேண்டியதில்லை. நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை. .அந்த இரண்டு
சூழ்நிலைகளிலும், குரு கை கொடுப்பார். வாழ்வில் நல்ல உடல் அமைப்பு (தடித்த உருவம்) கொண்டு
இருப்பர். மேலும் இவர் அழகான நீண்ட கருங் கூந்தலை உடையவர். மற்றவர்களிடம் பழகும்போது
இனிமையாகப் பேசும் சுபாவமும் இருக்கும்.

ராகு 9 ஆம் வீட்டில் இருந்தால் கடுமையான பித்ரு தோஷம் ஏற்படும். எடுத்த அனைத்து காரியங்களும்
தடை ஏற்படும். பெரியவர்களின் சாபங்கள் இருக்கும். தந்தை நலம் பாதிக்கப்படும். உயர்கல்வி படிக்க
இயலாது. ஆன்மீக ரீதியில் புண்ணிய காரியங்கள் செய்வார்கள். சொத்துக்கள் வாங்கும் போது
கவனம் தேவை.

கேது 3 ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகர் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார். சாதனைகளைச்
செய்யக்கூடியவர். எதிரிகளை ஒழித்துக் கட்டக்கூடியவர். எல்லாவிதமான சுகங்களையும்
அனுபவிக்கக் கூடியவர். தான் உண்டு தான் வேலை உண்டு என்று இருக்கமாட்டார்கள் இவர்களால்
பிரச்சினை உருவாகிக்கொண்டே இருக்கும். இளைய சகோதர சகோதரிகள் இருக்கமாட்டார்கள்.
அப்படி இருந்தாலும் பிரச்சினை தான். கல்வியில் விருப்பம் இருக்காது. காமத்தின் மீது தீவிர ஈடுபாடு
இருக்கும். நல்ல துணிவுடன் இருப்பார். எந்த காரியத்திலும் தடைகள் இருந்து கொண்டே இருக்கும்.
பரிகாரம் ராமேஸ்வரம் தான்.

5 இல் சனி இருந்தால் காதலில் தோல்வி ஏற்படும். கடுமையான புத்திர தோஷம் ஏற்படும். வருமான
குறைவு ஏற்படும். மனதில் நிம்மதி இருக்காது. ஐந்தில் சனி இருப்பவர் வில்லங்க பார்ட்டியாக
இருப்பார்கள். உணர்ச்சி வசப்படகூடியவர்கள். ஐந்தாம் வீடு புத்திர ஸ்தானத்தை குறிப்பதால் புத்திர
தோஷம் ஏற்படும். திருமணத்திற்கு முன்பும் பின்பும் ராமேஸ்வரம் செல்ல வேண்டும்.சிலர் நபர்களை
நீங்கள் பார்த்து இருக்கலாம். தங்கள் பிள்ளைகளுக்கு கொள்ளி போடுவார்கள். அவர்களின்
ஜாதகங்களில் எல்லாம் ஐந்தாம் வீட்டுடன் சனி சம்பந்தப்பட்டு இருப்பார். இதற்க்கு தகுந்த பரிகாரம்
ராமேஸ்வரம் தான். ஐந்தாம் வீடு குலதெய்வத்தை குறிப்பதால் கிராம தேவதையை வணங்கலாம். இந்த
ஜாதகருக்கு ஆண் குழந்தைகளால் பலனில்லை. 5 ல் சனி இருந்தால் கடுமையான திருமணத்தோஷம்
என்றும் கூறுவார்கள்.

கன்னி ராசியில் சூரியன் இருக்கும் ஜாதகர்கள், தரணி மெச்சப் புகழ் பெற. அதிலும் முக்கியமான
ஸ்திரிவர்க்கத்தினரால் மெச்சப்பட ஆசைப்படுவார்கள். அதற்காக அதிகமாக உழைத்து
நாகரிகப்பொருட்களையும். சுக சௌக்கியமான பொருட்களையும் சேர்ப்பார்கள். சூரியனோடு
அஸ்தங்கதமான கிரஹம் சேர்ந்திருந்தால், (இந்த ஜாதகத்தில் எப்படி என்று ஜோதிடரை அணுகி
தெரிந்துக் கொள்ளவும்) வாழ்வின் ஒரு காலத்தில் நீண்ட கால நோய் வாய்ப்படுவார்கள். ஜாதகரின்
தந்தை புத்திசாலித் தனத்திற்காக பிறரால் அறியப்பட்டவர். எல்லோரது ஆதரவையும்
பெற்றவராயிருப்பார். ஜாதகரும் இது போல் வளமும், பிறரின் உதவியும் ஆதரவும் பெறுவார்.

ஐந்தாம் விட்டுக்கு அதிபதி மூன்றாவது வீட்டில் இருந்தால் பல நல்ல குழந்தைகள் பிறப்பார்கள்.

சந்திரன் உச்சம் அல்லது ஆட்சி


சந்திரன் உச்சமாகவும், ஆட்சியாகவும் நிற்கும் ஜமாநில, மத்திய, அரசு அலுவலங்கள், அவற்றின் பொது
நிறுவனங்களில் வேலை வாய்ப்பு மிகவும் பிரகாசம். சாதகர்கள் யூ.பி.எஸ்.சி, டி.என்.பி.எஸ்.சி போன்ற
போட்டித் தேர்வுகளில் பங்கு பெறலாம். அரசியல் வாய்ப்பும் அமோகம். அலுவலகம், வியாபாரம், தொழில்
செய்யும் ஜாதகர்கள் சந்திரன் பலமாகி பத்தாம் வீட்டில் நின்றால், தனது இருக்கையை தென் கிழக்கு
முகமாக பார்த்து அமைத்துக் கொள்ளலாம். தென்கிழக்கு திசையில் உள்ள தொழில் நிறுவனங்கள்,
மாநிலங்கள், நாடுகளுடன் தொழில் ரீதியான தொடர்பு அனுகூலமாகும். (ஜோதிட தென்றல்
S.அன்பழகன் நவீன வேத ஜோதிடம் பக்கம் 133)

சந்திரன் கேது இணைவு


சந்திரன் கேது இணைவு மன அழுத்தம், மன இறுக்கம், மன நிலை தடுமாற்றம் போன்றவற்றை
ஏற்படுத்தும். இந்த இணைவு ஜாதகரை தனிமையை நோக்கி பயணப்பட வைக்கிறது. மனம் தெளிவற்ற
நிலையில் எப்போதும் செல்ல வைக்கிறது. கடும் உடல்நல கோளாறுகளை உண்டாக்குகிறது. (ஏன் எனில்
சந்திரன் கால புருஷ தத்துவத்தின் படி 4 ஆம் அதிபதியான சுக ஸ்தான அதிபன் என்பதால்). ஒரு
சிலருக்கு இந்த இணைவு தற்கொலை எண்ணத்தை தூண்டுகிறது. கேன்சர் போன்ற கடும்
நோய்களை நிச்சயம் அளிக்கிறது.இதனை சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் என்றும் கூறுவர்.

சூரியன் கேந்திரத்தில் இருந்தால்


லக்கின கேந்திரத்தில் சூரியன் இருந்தால் இயக்க ஆற்றல் உடல் பலம் பெற்றவராகவும் தந்தையின்
தன்மையைக் கொண்டவராகவும், தந்தை வழி யோகத்தைப் பின் பற்றுபவராகவும் தொழில் திறன்
பெற்றவராகவும் ஜாதகர் திகழ்வார்.

சந்திரன் 3-ல் இருந்தால் நல்ல நிலையில் இருந்தால் உடல் வலிமையையும் ஆற்றலையும் தருவார்.
சகோதர சகோதரிகளை ஆதரிப்பார் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். மூன்றாவது வீடாக
இருப்பதால் அடிக்கடி குறுகிய பயண செய்ய வைப்பார். வாகனம் வசதி கிடைக்கும் சந்திரன் கெட்டால்
அனைத்தும் எதிர்மறையாக இருக்கும்.

குரு வக்கிரம்
குரு வக்கிரம் பெற்றால் பல இன்னல்கலைத்தரும் பாதக, மாரகாதிபதியாகியிந்தால் மாரகத்தையும்.
அரசு வகை தண்டனைகள் கிட்டும். தெழில்வகை யில் பல சங்கடங்கலைத் தருவர். கோட்சாரத்தில்
குரு வக்கிரம் பெறும் காலத்தில் மிக எச்சரிக்கையு டன் இருப்பது அவசியம். சுய கௌரவம் பாதிக்கும்.
மறைமுக விஷயங்கள் அம்பலம் ஆகும். பிழைப்பிற்காக வெளியூர் செல்ல நேரிடும். ஜாதகரின்
எதிர்பார்ப்புக்கு ஏற்றது போல் குழந்தைகள் இருக்க மாட்டார்கள். நெருக்கடியான நேரத்தில் ஜாதகரின்
குழந்தைகள் பிரிந்து செல்வார்கள். இல்லற வாழ்க்கைக்கு பிறகே ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும்.
உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது. கிடைத்தாலும் தாமதமாக கிடைக்கும். தன்னுடைய குருவிடம்
இருந்து வித்தையை முழுமையாக கற்றுக் கொள்ள முடியாது. எந்த ஒரு விஷயத்திலும் பல முறை
யோசித்த பிறகே வெற்றி கிடைக்கும். குழந்தை பிறப்பு தாமதமாக கிடைக்கலாம். ஜாதகருக்கு மதிப்பு,
மரியாதை,சற்று குறைவாகவே கிடைக்கும். ஜாதகரும் மற்றவருக்கு மதிப்பு,மரியாதை,உபசரிப்பு
போன்றவற்றை சற்று குறைவாகவே தருவார்.

ஜாதகத்தில் குரு வக்ரமானால் தட்சிணாமூர்த்திக்கு குரு ஓரையில் பூஜை செய்யலாம். தேய்பிறை


அஷ்டமியன்று காலபைரவருக்கு சிறப்பு பூஜை செய்யலாம்.

லக்னாதிபதி வக்கிரம் அடைந்தால்


லக்கினாதிபதி வக்கிரம் பெற்றால் உடல் பலம் குறையும் தோற்றத்தில் பாதிப்பு எற்படும். லக்கின
காரகங்கள் பதிக்கும். வக்கிரம் பெற்று நன்மையான பலனை செய்தால் ஜாதகருக்கு நிகர் ஜாதகர்
மட்டுமே. ஜாதகரை பகைத்து கொள்பவர்களின் சொத்து இவருக்கு வந்து சேரும். எந்த காரியத்தை
தொட்டாலும் பொன்னாகும். வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். விரைவான முன்னேற்றம், ரகசிய
வழியில் பணம் வருவது, திடீர் அதிர்ஷ்டம் போன்ற அமைப்புகள் ஜாதகருக்கு அமையும். சொத்து சுக
சேர்க்கை குறுகிய காலத்தில் அடைந்து விடும்தன்மை ஜாதகருக்கு ஏற்படும். ஒன்றுக்கு மேற்பட்ட
மனைவிகள் ஜாதகருக்கு அமையும் வாய்ப்பை பெறுவார். உடல் நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். பல
நல்ல பலன்களே ஜாதகருக்கு நடக்கும். பொதுவாக லக்னாதிபதி வக்கிரம் பெற்றால் அந்த ஜாதகரின்
மனது கல் மனது என்று தெளிவாக சொல்லிவிட முடியும். அது நன்மையாகவும் இருக்கலாம்,
தீமையாகவும் இருக்கலாம். நல்ல ஜோதிடரின் உதவியுடன் ஜாதக அமைப்பை கொண்டு நிரணயம்
செய்ய இயலும்.

வக்கிரம் பெற்று தீமையான பலனை செய்தால் ஜாதகர் தனது வாழ்க்கையை தானே கெடுத்துக்
கொள்ளும் நிலை ஏற்படும். நேர்மையான வழியில் நடப்பதை விட்டு விட்டு குறுக்கு வழியை தானே
தேர்ந்தெடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார். தனிமையை விரும்பும் சூழ்நிலைக்கு வந்து விடுவார்.
மனதில் உள்ளதை வெளியே சொல்லவும் தெரியாது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகும்
சூழ்நிலை வரும். எதையும் போராடி பெரும் நிலை வரும். வளரும் சூழ்நிலை சிறப்பாக இருக்காது.
சிந்தனை செய்யாமல் செயல்களை செய்துவிட்டு பிறகு வருந்தும் தன்மை ஏற்படும். நல்ல நண்பர்கள்
அமைய மாட்டார்கள்.

4-7-10-ஆம் அதிபதிகள் வக்ரம்


4-7-10-ஆம் அதிபதிகள் வக்ரம் பெற்றால் தீர்மானமாக. எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது. இவர்கள்
பிறரை சார்ந்தே இருக்கும் நிலை எற்படும். நல்ல அல்லது தீய செயல்களை செய்யக்கூடியவராய்
இருப்பார்கள்.திருமண வாழ்வில் பிரச்சனைகள் எற்படும்.

செவ்வாய் 3 ம் வீட்டில் இருந்தால் நல்ல தைரியசாலியாக இருப்பார். காதில் தொந்தரவு இருக்கும்.


செல்வம் நிறைய கிடைக்கும். உடம்பு நல்ல உறுதியாக இருக்கும். இளைய சகோதரருக்கு கெடுதல்
செய்யும். சில பேருக்கு இளைய சகோதிரற, சகோதிரிகள் இருக்க மாட்டார்கள். 3 ஆம் வீட்டில்
செவ்வாய் பலம் பெற்றால் நல்ல வாழ்க்கை அமையும். 3 ஆம் வீட்டு செவ்வாய் மூலம் தாய் நலம் கெடும்.
முன்றில் செவ்வாய் இருந்தால் சகோதர நாசம் என்பார்கள்.

சனிக்கு 5-ல் ராகு நின்றாலும் , ராகுவிற்கு 5-ல் சனி நின்றாலும் ராஜ யோகம் அமையும்

சந்திரனுக்கு 1-4-7-10-ல் 5-ஆம் அதிபதி அமைந்தால் உயா்தரா வாகனங்களும் பாவாரங்களும் நிறைந்த


புகழ் பெற்ற அரச யோகம் .

சந்திரனுக்கு 4-ல் சுக்கிரன் நின்றால் பொருள் கிட்டும் ,கன்று காலிகள் ,வாகனம் கிட்டும் .

லக்கினாதிபதிக்கு ஏழில் இரண்டாம் அதிபதியும் ,ஏழாம் அதிபதியும் இருந்தால் இளமையில்


திருமணம் .

தாதுற சாமிக்கு ஏழில் தனத்தோன்கா


மத்தோன் நிற்கின்
மாதுகேள் வாலிபத்தில் வரும்விவாகம்தான்
என்பா்

லக்னத்தில் குரு இருக்க பிறந்தவ குணமுடையவனாக விளங்குவான்

லக்னாதிபதி இருக்கும் பாவத்திற்கு பனிரெண்டாம் அதிபதி;லக்னாதிபதிக்கு சத்ருவானாலும் அல்லது


நீச்சமானாலும் (அ)பலவீனமானாலும், ஜாதகன் அந்நிய தேசத்திற்கு போய்விடுவான்

லக்னாதிபதி லக்னத்தில் அல்லது 2 ல் அல்லது 3 ல் முதலில் ஆண் குழந்தை என்பது பொது விதி.
லக்னாதிபதியுடன் புதன் கூடினால் ஜாதகரின் தலைச்சன் கபெண்ணாக இருக்கும் என்பதையும்
கருத்தில் கொள்ள வேண்டும். ஜாதகத்தில் லக்னாதிபதியே பலம் வாய்ந்தவர். துள்ளியமான
கணிப்புக்கு ஜாதகரின் வாழ்க்கைத் துணை ஜாதகத்தையும் கொண்டு தான் கணிக்க வேண்டும்.

ஏழாவது இடத்தில சூரியன்


ஏழாவது இடத்தில சூரியன் இருக்கப் பிறந்த ஜாதகருக்கு களத்திர தோஷம் மற்றும் தாமதத்
திருமணம் ஏற்படும். சிலர் பெண்கள் மூலம் பொருள் அடைவார். சாஸ்திரங்களின் ஆராய்ச்சியில்
ஈடுபடுவார். அயல்வீடுகளில் புசிக்க இச்சையுள்ளவர். பெண்களுடைய வார்த்தையைக் கேட்க பிரியம்
உள்ளவராவார். சிலர் மனைவிக்கு நோயும், பிற மாதர் தொடர்பும் ஏற்படும்.

துலாம் புதன்
வக்கீல்,பிஸினஸ்மேனேஜ்மெண்ட்,டெக்ஸ்டைல்,ஆட்டோமொபைல், நகை வடிவமைப்பு.

செவ்வாயின் சுபத்தன்மை
செவ்வாய் இயற்கையில் கொடியவனானாலும் ரிஷபத்தில் பூர்ணமதியுடன் சேந்து இருந்தால்
சுபனாவான்.

ராகு திருடன், தாழ்ந்த ஜாதியில் பிறந்தவன், கருப்பு நிறமுடையவன், கால், அபஸ்மார ரோகம், சர்ப்ப
பயம், இவைகட்குக் காரகன். அற்பனுமாவான், குஷ்ட ரோகம், சிரை, பேதி, வைசூரி, பண்டங்களில்
உருசியின்மை, புழு, பூச்சிக்களால் நோய் இவைகளைக் கொடுப்பவன். யானை ராகுவின் திசையிலோ,
புத்தியிலோ அல்லது கோச்சார காலங்களிலோ, பிற்பகுதியில் (பலனை) ஐஸ்வரியத்தை கொடுப்பார்.
ஒருவருடைய ஜாதகத்தில் ராகு பலமுடையவானாகி இருந்தால் சக்ரவர்த்தியாய் இருத்தல் முதலிய
மேன்மையை அளிப்பவனாவான்.

தனுசு, மீனம் ஜனன லக்கினமாக அந்த ஸ்தானத்தில் குருபகவனிருந்தால், வெகு பொருள் சேகரித்து
யோகவானா யிருப்பான் என ஜம்புமகாரிஷி வாக்கியம் நூலில் கூறப்பட்டுள்ளது

கேதுபகவான் லக்கினத்திற்கு மூன்றாறில்


கெம்பீரமாயிருந்தால் சுபயோகங்கள்
ஓதரியஞானமும் பெரியோர்சேர்க்கை
ஒழுங்காகவேயமைந்து சுகமாய் வாழ்வார்
நீதியாயிவர் திசையில் சனியில் புத்தி
நிதானமாய்சுக்கிரன்புத்தி தனிலும் நல்ல
காதலுள்ளகன்னி சுகம் திரவ்யலாபம்
கெளரவமாய்ஜாதகர்க்கு கிடைக்கும்பாரே . (106)

உரை : கேதுபகவான் இலக்கினத்திற்கு மூன்று ஆறாமிடத் திலிருந்தால் நல்ல யோகபலனைத் தருவார் .


அன்றியும் , பெரியோர் சேர்க்கை , ஞானமும் சந்கீதக்யானமும் நல்ல கீர்த்தியையும் தருவார் . இந்த
கேது திசையில் சுக்கிரபுத்தி சனிபுத்திகளில் நற்குணமுள்ள கன்னியர் சேர்க்கையும் திரவிய லாபமும்
சுகபோக பாக்க்கியநுண் ஜாதகர்க்கு உண்டாகும் .
ஜென்ம லக்கினத்த்ற்கு 7-ல் சுரியநிருந்தால் தகப்பனைவிடக்க்காமி அபயசசு முதலியன உடைய தாரம்
வாய்க்கும் .

விருச்சிக வியாழனைப் போல கடக, மீன ராசிகளில் உள்ள வியாழன் பலன்கள் தருவதில்லை. (கடகம்
வியாழனின் உச்சவீடாக இருந்த போதிலும்.). கடக, விருச்சிக, மீன ராசிகளில் வியாழன் இருக்கப்
பிறந்தவர்களைப் புற்றுநோய் தாக்கும் அபாயமுண்டு.

ஏழுக்குடையவன் எட்டில் இருக்கும்போது இரண்டு தார யோகம் சம்பவிக்கின்றது.

குலதெய்வ குற்றம்
பொது கருத்து: ஜனன ஜாதகத்தில் மேஷம், சிம்மம், விருச்சிகம், மீனம் ராசிகளில் சுக்கிரன் இருக்கப்
பிறந்தவர்கள் குலதெய்வ குற்றத்தை சுமந்து பிறந்தவர்கள். முன்னோர்களால் குலதெய்வ வழிபாடு
இடைநிறுத்தம் செய்யப்பட்டதால் தெய்வத்தின் பரிபூரண ஆசி கிடைக்காமல் சுக்ரனின் காரகத்துவ
மாகிய சுகபோகம் உட்பட எந்தவொரு பலன்களும் கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருப்பர். உடன்
உடல்பலம் மனபலம் குன்றிய வாரிசுகள் சங்கிலித்தொடராக பிறந்துகொண்டிருக்கும். குலதெய்வத்தை
தேடிச்சென்று மீண்டும் வழிபாட்டினை தொடரும் குடும்பங்கள் குலதெய்வ குற்றம் மாறி சுபிட்சமான
வாழ்வு வாழ ஆரம்பிப்பதைக் கண்கூடாக பார்க்க முடியும்.

மூன்றாம் அதிபதிகள் பரிவர்த்தனை


ராம தயாளுவின் சங்கீத நிதி என்னும் நூலில் இருந்தும், எஸ்.பி. சுப்ரமணியம் எழுதிய ஜோதிட
சித்தர்களின் நுட்பங்கள் பக்கம் 68 இல் இருந்தும்
மூன்றாம் அதிபதிகள் பரிவர்த்தனையானால் நற்குணங்கள் பலவும் ஏற்படும். தீமைகள் குறைவாகும்.

ராம தயாளுவின் சங்கீத நிதி என்னும் நூலில் இருந்தும், எஸ்.பி. சுப்ரமணியம் எழுதிய ஜோதிட
சித்தர்களின் நுட்பங்கள் பக்கம் 68 இல் இருந்தும்
இரண்டாம் அதிபதி மூன்றில் இருப்பது: தைரியமிக்கயவர், நற்குணமுடையவர் - முன்னேற வேண்டும்
என்ற ஆவல் உள்ளவர். அனைவராலும் கவரப்படுபவர். பெண் என்றால் ஆண்களாலும், ஆண் என்றால்
பெண்களாலும் விரும்பப்படுவார்கள். மூன்றாம் அதிபதி இரண்டில் இருப்பது உறுதியான, உயரமான உடல்
வாகுடையவர். சோம்பேறி, செல்வம் சேரும், பெண்களால் நன்மை பெறுபவர்.

ஏழில் சூரியன்
ஜென்ம லக்கினத்த்ற்கு 7-ல் சுரியநிருந்தால் தகப்பனைவிடக்க்காமி அபயசசு முதலியன உடைய தாரம்
வாய்க்கும் . ஜாதகன் பிறந்த ஜன்ம லக்கினத்திற் கேழில் சூரியனிருந்தால் அதமத்தன்மை ,
அபகீர்த்தி , தகப்பனைவிட அதிககியாதி , சிவாத சியாமள வர்ண சரீரம் : சிவந்த தலைமயிர் ; சிவந்த
கண் ; ரத்தபித்த சரீரம் அல்லது முகரோகமுடைய தன்மை மேலும் சபல சித்தம் வெகு பேச்சு , சம
இடை , சம ஸ்தனம் சீக்கிர ச்கலனம் ,வெகு சல்லியம் , ராஜஸ குணம் ,பான்சித்தியம் பிதுரு சுகம்
இவைகளுடைய களத்திரம் வாய்க்கும்

திருமணமும் ஜோதிடமும் - Dr.வடிவேல், பக்கம் 78 : 7 ம் இடத்தில் சூரியன் இருக்கப் பிறந்தவர்கள்


பெண்களை வெறுப்பவர். கோபமுடையவர். வெறுப்பவர்

பிதுர் லக்னம்
பிதுர்லக்னம் ஒன்பதாவது வீடாகிய சிம்மம் ஆகும்.

எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் செவ்வாய் நீச்சமாகி 6,8,12 ஆகிய இடங்களில் இருக்க வேண்டும்.
அதேபோல் 6,8,12 ஆகிய கிரகங்களுடன் சேராமலும் இருக்கவேண்டும்.

லக்கினம் உபய ராசி


உபய ராசிக்காரர்கள் (Persons born in dual signs) இவர்களுடைய தன்மைக்குக் கடிகாரத்தின்
பெண்டூலத்தை உதாரணமாகச் சொல்லலாம். ஊசலாடும் தன்மையை உடையவர்கள். வளைந்து
கொடுத்துச் செல்லக்கூடியவர்கள். புத்திசாலிகள். இரக்கமுடையவர்கள். உணர்ச்சிமிக்கவர்கள்.
எதிலும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். நிலையான செயல்பாடுகள் இல்லாதவர்கள். வாழ்க்கையை
அதன் போக்கிலேயே வாழ விரும்புபவர்கள். எந்தவிதமான குறிக்கோள்களும் இல்லாதவர்கள்.
போராடும் மனப்பான்மை இல்லாதவர்கள். எதிலுமே நிலையானதொரு ஈர்ப்பு இல்லாதவர்கள். They tend to
wander aimlessly and seldom work towards a fixed objective. Thus the sign ascending in the eastern horizon at the time of
the birth of an individual tells the qualities with which he is born. He can be trained suitably and given suitable job when he
grows up according to his natural inclination

சிம்மத்தில் இருந்தால் மனைவி மூலம் நிறைய வருமானம் வரும்.இவரை விட இவர் மனைவி
புகழ்பெற்றவராக இருப்பார்.பெண் குழந்தைகள் பிறக்க வாய்ப்பு அதிகம்.

ஜனன ஜாதகத்தில் கேது பகவான் நீசம் பெற்றிருந்தால் ஜாதகர் மாந்தீரிக தொல்லை் தாய் வழி உறவில்
நன்மை உண்டாகாது ஆன்மீக பணியில் ஈடுபட்டு ஆன்மீக துறையில் தலைமை பதவி சில காலம்
உண்டாகும்.
சுக்கிரனுக்கு 4 ல் இராகு இருந்தால் சோர கற்பம் உண்டாக காரணமாக இருக்கிறது.

செவ்வாய் 3,6,10,11 தவிர வேறு இடங்களில் இருந்து நீசம்/பகை பெறுதல்


இவருக்கு சிறுவயதில் அம்மை, கட்டிகள் போன்ற பிரச்சினைகள் வந்திருக்கலாம் அ உயரமான
இடத்திலிருந்து தவறி விழுதல், மாடு முட்டுதல் , எலக்ட் ரிக் ஷாக், தீவிபத்து போன்றவையும்
நடந்திருக்கலாம். இவர் பிறந்த பிறகு மாடு கன்று நஷ்டமாதல், நிலம் பறி போதலும் நடந்திருக்கலாம்.

முருகன் கோவிலுக்கு எரியும் பொருட்களை அன்பளித்தல். (உம்: பல்பு , விளக்கு. விளக்காயின்


செம்பாகில் உத்தமம். செம்பு பூஜா பாத்திரங்களும் தரலாம் அ உடல் அங்கம் அறுபட்டவர்கள், தீவிபத்தில்
சிக்கியவர்களுகு உதவலாம்)

செவ்வாய், சனி சேர்க்க பெற்றவர்கள் ரத்த தானம் செய்வது நல்ல பலன்களை அளிக்கும். அதேபோல்
அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு முதலுதவி அளிப்பது போன்ற செயல்களில்
ஈடுபடலாம்.உயிர்ப்பலியை எதிர்க்கும் பிரசாரங்கள், அமைப்புகள், தன்னார்வத் தொண்டு
நிறுவனங்களில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்படலாம். ஆஞ்சநேயர், சரபேஸ்வரர் வழிபாடு
ஆகியவை செவ்வாய், சனி சேர்க்கையால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும். உண்மையிலேயே
ஞானியாக வாழ்ந்து, மக்கள் நலனில் அக்கறை கொண்டு, அவர்கள் துயரைப் போக்க செயலாற்றிய
சித்தரின் ஜீவ சமாதிக்கு சென்றும் வழிபடலாம்.

தெய்வ வழிபாடு: ஆஞ்சநேயர், சரபேஸ்வரர் வழிபாடு ஆகியவை செவ்வாய், சனி சேர்க்கையால்


ஏற்படும் பாதிப்புககும். உண்மையிலேயே ஞானியாக வாழ்ந்து, மக்கள் நலனில் அக்கறை கொண்டு,
அவர்கள் துயரைப் போக்க செயலாற்றிய சித்தரின் ஜீவ சமாதிக்கு சென்றும் வழிபடலாம்.

மூன்றாம் பாவத்தில் ராகு/கேது/சனி/சூரியன்,செவ்வாய், இருந்தால்:


சகோதர சகோதிரிகள் (இருந்தால்) ,மனைவி, வாழ்வு கோடை நதியாகவே இருக்கும் .போக போக
அவர்களின் அழகு, கவர்ச்சி ஆரோக்கியம் குறைந்து வரும்..ஜாதகருக்கு புஜம் /தோள் பகுதியில்
முறிவு, காயம் ஏற்படலாம். செவிட்டுத்தன்மை கூட ஏற்படலாம்.

சந்திரன்,கேது சேர்க்கையுடன் குழந்தை பிறந்தால் தாய்க்கு பாதிப்பு உண்டாகலாம்

சந்திரன்,செவ்வாய் இணைவு விவசாயத்தில் நல்ல அதிர்ஷ்டம்,லாபம் உண்டு.

செவ்வாய் பூமிக்காரகன். சகோதரக்காரகன். இம்சை செய்யும் கிரகம். சந்திர மங்கள யோகம்


உருவாகும். தாயார் விரோதம், தாயாதிகள் பகை என்றாகலாம். சந்திரன் மனோகாரகன் என்பதால்
செவ்வாயின் கிலேசம் தரலாம்.

செவ்வாய் கேதுவுடன் சேர்ந்தால், நன்மையை விட தீமையைச் சந்திக்க வைப்பான். கேதுவும்


ஆக்னேய கிரகம். சகி என்று அவனுக்கு பெயர் உண்டு. சகி என்றால் நெருப்பு என்று பொருள். சகி, நிழல்
கிரகம். அதனுடன் இணைந்த செவ்வாய், தனது ரஜோ குணத்தை முற்றிலும் இழந்து, மனத்தெளிவை
ஏற்படுத்தி வைப்பான். வலுவுடன் இணைந்த செவ்வாய்-கேதுவின் சேர்க்கையில் ஆசைகளை
அழிக்கும் விஷயத்தில் சுறுசுறுப்பு பெற்று கர்மவினை முழுவதையும் வெப்பத்தால் அழியவைத்து,
அறிவாளியாக மாற வைப்பான். கேதுவை மோஷகாரகன் என்கிறது ஜோதிடம். மோஷம் என்றால்
துயரத்திலிருந்து விடுத
இன்பமாக சப்த கிரகங்கள் நீங்க
இராகு கேதுக்களுக்கு சுகவீடில்லை
என்னென்ன கிரகத்தோடே சேர்ந்தாலும்
எந்தெந்த வீட்டிலிருந் தாலுமந்த
தன்மையாய் ஷேத்திரபலன் கொடுப்பதோடு
தன்னுடனே சேர்ந்த கிரகபலன்கொடுப்பார்
இன்னின்ன விதமாக சுபாசுபங்கள்
இனிதுடனே தருவாரென் றியம்புவீரே - ஜம்புமகாரிஷி வாக்கியம், பாடல் 48

சூரியன், சந்திரன், செவ்வாதன், குரு, சுக்கிரன், சனி இவர்களுக்கு மாத்திரம் மேஷம், ரிஷபம்,
மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனமென்னும்
பன்னிரண்டு ராசிவீட்டில் அவரவர்க்கிசைந்த ஷேத் ண்டு. ஆனால் இராகு, கேதுக்களுக்கு மாத்திரம்
சொந்த ராசி வீடில்லை. ஆகையால், அவ்விருவரும் தாங்களிருந்த இச்தானபலனும்
தங்களுடனிிரகங்களின் சேர்க்கை பலனும் என்னென்ன விதமா இருக்கின்றதோ அந்த விதமாக சுப
பலனையோ அசமயோசிதமாய்த் தருவார்கள். இந்த ஜாதகத்தில் ராகுருச்சிகம் ராசியிலும், கேது
ரிஷபம் ராசியிலும் உள்ளது.

ராசியில் துலாம், எட்டாம் இடமாக இருந்தால் எட்டாமிடம்


எட்டாம் இடம் ஆயுள், துயரம், மரணம் முதலியவற்றைக் குறிப்பது என அறிவோம்.
துலாம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் மருந்தின் மூலம் அல்லது நாற்கால் பிராணிகளின்
மூலம், பெரும்பாலும் இரவு நேரத்தில் மரணம் அடைகின்றான். உபவாசம் அல்லது உண்ணாவிரதம்
இருப்பதினால் கூட உயர் பிரியக் கூடும். பிறரது வஞ்சனையினாலும் இந்த ஜாதகருக்கு சாவு நேரிடலாம்.
சித்திரை மாதமோ, பஞ்சமி திதியிலோ, திருவாதிரை நட்சத்திரத்திலோ, வியாழக்கிழமையிலோ,
மாலையில் மரணமடையலாம்.

D-7 சப்தாம்ச சக்கரம்

ஒரு தம்பதியினருக்குக் குழந்தை பிறக்குமா? பிறக்காதா? இதனை சப்தாம்சம் (D-7) எனும் சக்கரத்தால்
அறியலாம்.

ஒரு தம்பதியினருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கான, வாய்ப்பு பற்றியும், அவர்களின் வளம், செழிப்பு


போன்றவற்றை துல்லியமாக காண சப்தாம்சம் என்னும் D7 சக்கரத்தை கொண்டு ஆராய முடியும்.

இந்த சக்கரத்தில், 30 பாகைகள் கொண்ட ஒவ்வொரு ராசியும் 7 பாகங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு


பாகமும் 4 பாகை 17 கலை என்று அளவில் இடம்பெற்று இருக்கும்.

ஒற்றை படை ராசி வீட்டில் உள்ள கிரகம் , ஒற்றைப்படை ராசியில் இருந்து துவங்கும். அதன் இரட்டை
படை வீட்டில் உள்ள கிரகம் அந்த ராசியின் 7-வது இடத்தில் இருந்து துவங்கும்.

சப்தாம்சத்தின் 7 ரசங்கள் :-

கசப்பு, பால், தயிர், நெய், கரும்பு, தேன், தூய நீர், ஆகியன சப்தாம்சத்தின் 7 ரசங்கள். இவைகள்
முறையே, இந்த வரிசையில் தான் சப்தாம்சத்தின் ஒற்றைப்படை ராசியில் இவை துவங்கும்.

இரட்டை படை ராசியில் இந்த 7 ரசங்கள் தலைகீழ் வரிசையாக வரும், அதாவது, தூய நீர், தேன்,
கரும்பு, நெய், தயிர், பால், கசப்பு என்ற வரிசையில் வரும்.

முதல் குழந்தையை 7-க்கு 11-ஆம் வீடான 5-ஆம் வீட்டை கொண்டு அறிய முடியும். களத்திரம் (7),
அதன் மூலம் அடையும் லாபம் (11) குழந்தை(5). இது முதல் மனைவி மூலம் பெறும் குழந்தைக்கான விதி,

இரண்டாவது மனைவி என்பது 2-ஆம் வீட்டைக் கொண்டு காணலாம். இரண்டாவது மனைவி மூலம்
பெறும் முதல் குழந்தையை 2-க்கு 11-ஆம் வீடான 12-ஆம் வீட்டை கொண்டு அறிய முடியும்.

புதன், சனி மற்றும் / அல்லது சுக்கிரன், சப்தாம்ச லக்கினத்தில் இருப்பின் குழந்தை பிறப்பு மறுக்கப்படும்
அல்லது பழங்கால பேரின்பம் (PORGENIC BLISS) எனப்படும். கடந்த பிறவியில் எந்த கர்ம வினையையும்
கொண்டு வராதவர்கள் / கர்ம வினை இல்லாதவர்கள் இவரே ஆவர். புதன், சனி, கேது இவை அலி /
திருநங்கை கிரகங்கள், இவை D-7 லக்கினத்தில் இருப்பின் குழந்தை பிறப்பு மறுக்கப்படும். இவற்றுடன்,
சுக்கிரன் D-7 லக்கினத்தில் அல்லது அதன் திரிகோண இடத்தில் இணையும் போது, அந்த ஜாதகர்,
அதிகப்படியான பாலியல் சந்திப்புகளில் மூழ்கியதால் அவருக்கு சந்ததி உருவாவதற்கான வாய்ப்பு
குறையும்.

ஒரு ஜாதகத்தில், பெண்களுக்கு 9 ஆம் வீடும், ஆண்களுக்கு 5 ஆம் வீடும் மட்டும் தான் பிறப்பின்
மகத்தான வெற்றியை பறைசாற்றும். 9-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் மற்றும் குரு இருப்பின் நிறைய
குழந்தை பாக்கியம் உண்டென்பதை கொள்ளலாம். இவைகளே ஆண் வாரிசை அளிக்கும் கிரஹங்கள்
ஆகும். குழந்தை தரும் கிரகங்களும், குழந்தை மறுப்பு கிரகங்களும் D-7 லக்கினத்தில் இருப்பின்,
சிறிது கால தாமதத்திற்குப் பின் குழந்தை பாக்கியம் பெறும் நிலை உண்டென்று அறியலாம்.

சப்தாம்சம் எனும் D-7 சார்ட்டின் , 9-ஆம் வீட்டில் சனி மற்றும் செவ்வாய் இருப்பின்:-

1. இம்மாதிரி அமைப்பு, ஒரு தத்து புத்திரர் உண்டு என்றுதான் சுட்டி காட்டப் படுகிறது.

2. மேலும், இம்மாதிரி அமைப்பு ஒரு ஜாதகருக்கு இருப்பின் அவருக்கு ஒரு விதவைப்


பெண்ணையோ அல்லது விவாகரத்து ஆன பெண்ணையோ மணக்க வேண்டிவரும். அந்த
பெண்ணிற்கு ஏற்கெனவே நடந்த முதல் திருமணத்தில் ஒரு குழந்தை பெற்றவளாய் இருப்பாள்.

3. மேலும் இவ்வமைப்பு, இந்த ஜாதகரின் மூலம் அல்லாது வேறு ஒரு உறவினர் மூலம் குழந்தை
பிறக்க வாய்ப்பு ஏற்படும். அதற்கு இவரின் சந்ததி உருவாகும் நிலை பெறாமல் இருப்பதாலோ
அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்தினாலோ அது அவ்வாறு அமையும்.

D-7 சக்கரத்தில், 9-ஆம் வீடு ஒற்றைப்படை ராசியாகின் பல குழந்தைகளும், இரட்டைப்படை ராசியாகின்


சில குழந்தை மட்டும் தான் பிறக்கும் என அறியவும்.
ஆண் ஜாதகத்தில் முதல் குழந்தைக்கு 5-ஆம் வீட்டையும், அதற்கடுத்த குழந்தைகளுக்கு 5 ன் 3 ஆம்
வீடுகளான 7, 9, 11 என தொடரும். இவ்வாறு 3-ஆம் வீடு வரை தொடரும். அதற்கடுத்தது 5-ல்
துவங்கினால் மறுபடி 4-இல் இருந்து துவங்கிடல் வேண்டும்.

பெண்களுக்கு அவர்களின் ஜாதகத்தில் முதல் குழந்தைக்கு 9 ஆம் வீட்டையும், அதற்கடுத்த


குழந்தைகளுக்கு 9 ன் 3 ஆம் வீடுகளான 7, 5, 3 என பின்னோக்கி தொடரும்.

சூரியன், குரு, செவ்வாய் - ஆண் கிரகங்கள்

சுக்கிரன், சந்திரன், ராகு - பெண் கிரகங்கள்

சனி, புதன், கேது - அலி அல்லது திருநங்கை கிரகங்கள்

ஆண் ஜாதகருக்கு 5-ஆம் இடமும், பெண் ஜாதகருக்கு 9-ஆம் இடமும் குழந்தைகளை கட்டுப்படுத்தும்
வீடுகளாகும். இவற்றிற்கு முறையே வரும் 6- ஆம் வீடும், 10-ஆம் வீடும் விரைய பாவமான, மாரக
வீடாகும். இதன் அதிபதிகள் 5 மற்றும் 9-ஆம் வீட்டுடன் முறையே தொடர்பு கொள்கையில், பிறக்கும்
குழந்தைக்கு மாரகம் எனும் அரிஷ்டம் ஏற்படும். அதாவது முறையே 5-க்கு 6-ம், 6-க்கு 7-ம் மற்றும் 9-க்கு
10-ம் போன்ற அமைப்புகளால், பால அரிஷ்டம் ஏற்படும் நிலை உருவாகும்.

D-7 சப்தாம்சத்தின் வீடுகளில் முக்கியமாக 11-ஆம் வீட்டில் அமரும் கிரகத்தினால் விளையும்


தீமையும் அதன் பரிகாரம் பற்றிய சிலவற்றை காணலாம்.

ஒருவரின் ஜாதகத்தில், சப்தாம்சம் எனும் D-7 இன் 11-ஆம் வீடு பாவிகளால் கெட்டுப்போய் இருப்பின்,
அவரின் சந்ததி கிடைக்கும் வாய்ப்பை மற்றவர்களின் பொறாமையால் மறுக்கப்படும்.

ஒருவரின் ஜாதகத்தில், சப்தாம்சம் எனும் D-7 இன் 11-ஆம் வீடு ராகுவால் பாதிப்பு அடைந்திருந்தால்,
அவர் மிகவும் எச்சரிக்கையுடன் இருத்தல் நன்று. கெட்ட கண் திருஷ்டி, பொறாமை போன்றவை நீங்க ,
காளி மாதாவிற்கு பூசணிக்காயை பலி தருதல் அவசியம். ஒவ்வொரு வருடமும், உத்தராயணகாலத்தில்
ஒருமுறையும், தக்ஷிணாயனக் காலத்தில் ஒரு முறையும் பலி கொடுப்பது அவசியம்.

ஒருவரின் ஜாதகத்தில், சப்தாம்சம் எனும் D-7 இன் 11-ஆம் வீடு சூரியனால், பாதிப்பு அடைந்திருந்தால்,
அவர் குழந்தையை ஏதேனும் ஒரு நோய் தாக்கக்கூடும். அதற்கு, சூரிய எந்திரம் அணிவது நல்லது.

சந்திரன், பாதிப்பு அடைந்திருந்தால், அவர் வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் பாதிப்படைவர்.

புதன், பாதிப்பு அடைந்திருந்தால், அவர் வீட்டில் உள்ள ஆண் குழந்தைகள் பாதிப்படைவர்.

சுக்கிரன், பாதிப்பு அடைந்திருந்தால், அவரின் மனைவி பாதிப்படைவார்.

குரு, பாதிப்பு அடைந்திருந்தால், அவரின் பெற்றோர்கள் பாதிப்படைவர்.

சனி, பாதிப்பு அடைந்திருந்தால், அவரின் வீட்டில் உள்ள வயதானவர்கள், பாதிப்படைவர்.

பெண் ஜாதகத்தில் ராகு & கேது

1) பதினோரு லக்னங்களில் ஏதேனும் ஒன்றில் பெண் பிறந்திருந்தால் (மேஷம் தவிர,) துலாம் ராசியில்
சனி 7 ஆம் வீட்டில் சூரியன் மற்றும் செவ்வாய் மற்றும் சந்திரன் மற்றும் ராகு 1 ஆம் வீட்டில் இருந்தால்
ஜாதககியின் வாழ்க்கையில் எல்லா வசதிகளையும் பெறுவாள். மேஷ லக்னத்துடன், முடிவுகள்
தலைகீழாக மாறும்.

2.) 7 ஆம் வீட்டில் சந்திரனும் ராகுவும் பெண்ணை புத்திசாலியாக்கும் மற்றும் வியாழன் 8 ஆம் வீட்டில்
இருந்தால், அவளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

3 ) 4 ஆம் வீட்டில் கேது, வியாழன் மற்றும் சுக்கிரன்; பெண் அனைத்து வார்த்தை சுகங்களையும்
அனுபவிப்பாள், ஆனால் அவள் இறக்கும் நேரத்தில், அவளுக்கு உயிருடன் இரத்த உறவு இருக்காது.

4.) ஒரு பெண் ஜாதகத்தில் கேது - செவ்வாய் இணைவது ஒரு சிறந்த யோகமாக கூறப்பட்டுள்ளது,
ஏனெனில் கேது, ஆன்மீக மற்றும் மத கிரகமாக இருப்பதால், செவ்வாய் கிரகத்தின் அனைத்து தீய
விளைவுகளையும் நீக்குவார்.

5.) சிம்மம் லக்னத்தில் பிறந்த பெண் ராகுவைக் கொண்டு, கவர்ச்சியாகவும், அழகாகவும், சுகமான
திருமண வாழ்க்கையை அனுபவிப்பர்கள்.
6.) ராகு & கேதுவுடன் கூடிய சூரியன் / சந்திரன் விளைவு எப்பொழுதும் பாதிப்பையோ தரும்.(
அனுபவத்தில் கணவனால் அதிக துன்பங்களைத் தருகிறது. ) ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7 ஆம்
வீட்டில் சூரியன் - ராகு அதிக தீமையைத் தருவதில்லை. குறிப்பாக வடக்கு முனையாகவும், ராகு
மற்றும் சூரியன் சிம்மத்தில் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருப்பதன் மூலம் சேர்க்கை சாதகமாக
உள்ளது. 5 வது அல்லது 12 ஆம் வீட்டில் இணைவது சிறப்பானது. உயர் அந்தஸ்தில் உள்ளவரை
திருமணம் செய்து கொள்வார். ஆரோக்கியத்தையும் அனுபவிப்பாள். சிம்மத்தில் ராகு மற்றும் சூரியன்
இந்த சூரியன்-ராகு இணைவு 1, 3 ல், 2-4-8-9 அல்லது 11 ஆம் வீட்டில் இருப்பாது நல்லது.

7.) 1, 7 அல்லது 9 ஆம் வீட்டில் புதன் /ராகுவுடன் பிறந்த பெண்ணுக்கு செல்வம் அந்தஸ்து பெற்ற
கணவருக்கு திருமணம் நடக்கும்.

8.) லக்னத்தில் உள்ள ராகு நல்ல துணையை உருவாக்குகிறார், 2 ஆம் வீட்டில் ராகு ஒரு புத்திசாலி
துணையை உருவாக்குகிறார். 7-ல் ராகு இருப்பதால், வாழ்க்கையில் திருமணம் தாமதமாக நடக்கும்,
ஆனால் திருமணமாகாமல் வாழ முடியாது. 9-ல் உள்ள ராகு அவளை மதவாதியாக மாற்றும்.

9.) மேஷத்தில் சுக்கிரன் மற்றும் 10 ஆம் வீட்டில் அல்லது 10 ஆம் ராசியில் (மகரம்) ராகுவுடன் பிறந்த
பெண்; பல முறை திருமணம் செய்து கொள்வர்கள்

10.) சூரியன், செவ்வாய் மற்றும் புதன் (மூன்றும்) ராகு அல்லது கேதுவுடன் இணைந்து, 7 ஆம் வீட்டில்,
அவர் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பார்கள்.

11.) சூரியன், புதன், செவ்வாய் மற்றும் வியாழன் (நான்கும்) ராகு அல்லது கேதுவுடன் 4 ஆம் வீட்டில்
அல்லது 7 ஆம் வீட்டில் இணைந்திருப்பது பெண்ணை விதவை அல்லது விபச்சாரியாக மாற்றும்.

12.) மேஷம் அல்லது விருச்சிகத்தில் 7 ஆம் வீட்டில் ராகு நன்மையான அம்சங்கள் இல்லாதிருந்தால்,
விதவையின் அறிகுறியாகும்.

13 ) 4 ஆம் வீட்டில் ராகு திருமண வாழ்க்கைக்கு பாதிப்பில்லை , ஆனால் பாதிக்கப்பட்ட ராகு


மூதாதையர் சொத்துக்களை அழிக்கிறார் அல்லது மூதாதையர் வீட்டில் பாதிப்பை ஏற்படும் .
திருமணத்திற்கு முன் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும், திருமணத்திற்குப் பிறகுதான்
7 ஆம் வீடும் 7 ஆம் அதிபதியும் சாதகமாக பலமாக இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பாள்.

14.) 8-ல் உள்ள செவ்வாய் விதவை & கேது 8 ஆம் வீட்டில் இருக்கும்போதும் இதே நிலைதான். செவ்வாய்
மற்றும் கேது (இருவரும்) 8 ஆம் வீட்டில் இருந்தால், வலுவான பலன் வாழ் நாள் வரை பாதிப்பு
உறுதியானது. அவள் ஒரு விஷ்கன்யா யோகம். (ஒரு விஷப் பெண்).

15.) சூரியனும் கேதுவும் 1, 2, 3, 4, 5, 8, 9, 11 அல்லது 12 ஆகிய இடங்களில் இணைவது அவளது நடுத்தர


வாழ்க்கையில் கணவரின் மரணத்தை ஏற்படுத்தலாம். இந்த வெளிப்பாட்டின் தீமை 10 ஆம் வீட்டில்
குறைகிறது. 6 ல் & 8 ல் அல்லது 7 வது வீட்டில் இருக்கும் கேதுவால் பாதிப்பில்லை.

16.) கணவருடன் மகிழ்ச்சியான நல்லுறவுக்கு 7 ஆம் வீட்டில் ராகு அல்லது கேது சாதகமாக இல்லை. 7
ஆம் வீட்டில் ராகு அல்லது கேதுவுடன் யுரேனஸ் இணைந்திருப்பது விதவையின் அறிகுறியாகும்.

17 ) ஏழாம் வீட்டில் ராகு அல்லது கேது இணைந்தால் இரண்டாவது திருமணம், ராகு அல்லது கேதுவின்
சேர்க்கை 9 ஆம் வீட்டின் அதிபதியான செவ்வாய் அல்லது திருமணம் இல்லாமல் இருக்கலாம்.

18.) 12 ல் உள்ள கேது ஒரு பெண்ணுக்கு பிரசவ நேரத்தில் பாதிப்பைத் தரும். 9-ல் உள்ள கேதுவும்
மோசமானவர் மற்றும் தந்தையின் மகிழ்ச்சியை பாதிக்கிறார். அதேபோல 4 ல் உள்ள கேதுவும்
நன்மையை தருவதில்லை - தாய்மை மகிழ்ச்சி. சில சந்தர்ப்பங்களில், அவள் மாற்றாந்தாய் கையால்
பாதிக்கப்படலாம்.

19 ) செவ்வாய் ராகு சேர்க்கை 5-ல், பெண்ணுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது அதிகப்படியான


மாதவிடாய் ஏற்பட வாய்ப்புள்ளது. 3 ல் ராகு-செவ்வாய் இணைவதால், இடது காலில் பாதிப்பைத் தரும்.
அல்லது அந்தக் காலில் ஊனம் அடையாளமும் இருக்கலாம்.

20.) 8 ல் உள்ள ராகு மோசமான நிதி நிலையுடன் கூடிய பெரிய குடும்பத்தைக் குறிக்கிறது. அவளுக்கும்
பிரச்சனைகள் இருக்கலாம் (செக்ஸ் - சாத்தியம்)

21.) சந்திரன், செவ்வாய் மற்றும் சனியுடன் ராகு இணைந்த பெண் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளைப்
பெற்றெடுக்கும்.

22. ) பெண் வியாழன் 9 ல் பதினொரு குழந்தைகளைப் பெற்றெடுக்கும், ஆனால் ஐந்து மட்டுமே


உயிர்வாழும்.
23. ) சந்திரன், வியாழன் மற்றும் ராகு ஆகிய கிரகங்களுக்கு இடையில் திரிகோணம் இருந்தால்,
பிரசவத்தில் அதிக சிரமங்கள் இருக்கும் மற்றும் குழந்தைகள் துரதிர்ஷ்டவசமாக இருப்பார்கள்.

24. ) 5 ல் உள்ள ராகு சேர்க்கை சனியால் கர்ப்பப்பை நோய்கள் உண்டாகும், குழந்தைப்பேறு இருக்காது.
கருப்பையில் அழிக்கப்பட்ட கருத்தரிப்புகளின் எண்ணிக்கையை இவ்வாறு அறியலாம்: சுக்கிரன் - 6;
வியாழன் - 5 ; புதன் - 4 , செவ்வாய் - 3 சந்திரன்- 2; மற்றும் சன் - 1 . கருவை அழிக்கும்

25.) துலாம் லக்னம், மேஷத்தில் ராகு. செவ்வாய் துலாம் அல்லது மேஷத்தில், பெண் தனது முதல்
கணவனை விட்டு வெளியேறி, இரண்டாவது திருமணம் செய்துகொள்வர், ஒழுக்க ரீதியாக
பாதிப்பைத் தரும்.

26.) சந்திரன், வியாழன் மற்றும் ராகு ரிஷப திரிகோணத்தில் நெப்டியூன், அல்லது மிதுனத்தில் ராகு
சூரியன் மற்றும் யுரேனஸ் அல்லது மிதுனத்தில் ராகு, கடகத்தில் சுக்கிரன் மற்றும் 7 ஆம் அதிபதி
வியாழன் திரிகோணம் 7 ஆம் வீட்டின் உச்சத்தில் சனி அல்லது மகரத்தில் ராகு சுக்கிரன் மற்றும்
நெப்டியூன். அல்லது சிம்ம கேந்திரத்தில் ராகு செவ்வாய் மற்றும் சதுரு ஆனால் வியாழன் 7 ஆம் வீட்டு
அதிபதி சூரியன், சுக்கிரன் & வியாழன் லக்னத்தில் இருந்தால் பெண்ணுக்கு திருமணம் மகிழ்ச்சியாக
அமையும்.

27.) கடகத்தில் ராகு, நெப்டியூன் அல்லது, 7 ஆம் வீட்டில் இருந்தால் விதவையாவள், தனுசு
கேந்திரத்தில் ராகு சனியும், அல்லது 7 ஆம் அதிபதி வியாழன் 8 ல் , பெண் திருமணமான சிறிது
காலத்திலேயே விதவையாவள். சனியின் தட்சத்திரம் அனுசம் உள்ள ராகு விதவையை
ஏற்படுத்துகிறது. சிம்மத்தில் ராகு சந்திரன், அல்லது 7 ஆம் அதிபதி செவ்வாய் கேந்திரத்தில் சனி,
நெப்டியூன் 7 ஆம் வீடு அல்லது மகரத்தில் சந்திரன் சேர்க்கை வியாழன் மிகவும் இளம் வயதிலேயே
விதவையாகி விடுவார். கன்னி கேந்திரத்தில் ராகு சூரியன் மற்றும் சனி அல்லது 7 ஆம் வீட்டின்
ஆட்சியாளர் செவ்வாய் மற்றும் சனி மற்றும் யுரேனஸ் இணைந்து: தாமதமான திருமணம் ஆனால் நல்ல
ஒழுக்க குணம்.

28.) துலாத்தில் சூரியன் சனி ராகு அல்லது 7 ஆம் அதிபதி கேந்திரத்தில் செவ்வாய் சுக்கிரன் மற்றும்
யுரேனஸ் இணைந்திருந்தால் தாமதமாக திருமணம் ஆனால் நல்ல தர்ம குணம் உள்ளவர்கள்.

29.) மகரம் அல்லது கடகத்தில் ராகு யுரேனஸ் அல்லது 7 ஆம் வீட்டில் அல்லது யுரேனஸில் சந்திரன், 7
வீட்டில் செவ்வாய் சந்திரன் யுரேனஸ் கேந்திரத்தில் சூரியன், புதன் மற்றும் சனி திருமணம்
அமைவதில்லை. ரிஷபம் அல்லது துலாம் லக்கினங்களுக் மட்டுமே சாத்தியமாகும்.

30 ). மகர ராசியில் ராகு, கடகத்தில் சந்திரன், 7 ஆம் அதிபதியும் வியாழன் 6 ஆம் வீட்டில் இருந்தால் -
மாதவிடாய் பிரச்சனையால் குழந்தை பிறக்காது.

31.) தனுசு ராசியில் சந்திரன் செவ்வாய் மற்றும் ராகு யுரேனஸ் மிதுனத்தில் சேர்ந்திருந்தால் இளம்
வயதிலேயே திருமணம் செய்துகொள்வார், ஆனால் கணவனால் கைவிடப்படுவார்.

32.) மகர ராசியில் உள்ள ராகு 7 ஆம் வீட்டில் சனி வாழ்க்கையில் பிற்காலத்தில் திருமணம்.

33.) தனுசு ராசியில் ராகு, சூரியன் திரிகோணம் நெப்டியூன், கேந்திரத்தில் செவ்வாய் சந்திரன்,
சேர்க்கை , 7 ஆம் வீட்டு அதிபதி கடகத்தில் கணவனின் குறையால் திருமண சுகம் மறுக்கப்படும்.

34.) ரிஷப லக்னம் லக்கினத்தில் சனி, விருச்சிகத்தில் ராகு, சிம்மத்தில் சூரியன் மற்றும் சுக்கிரன், கும்ப
ராசியில் 7 ஆம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய் சனி, மகிழ்ச்சியற்ற திருமண வாழ்க்கை,
ஒழுக்கக்கேடு. நிலையான சண்டைகள்

35.) மகர லக்னம், ரிஷபத்தில் செவ்வாயுடன் ராகு, பெண்மணிக்கு கர்ப்பப்பை தொந்தரவுகள் ஏற்படலாம்,
இதன் விளைவாக அவள் கர்ப்பமாக இருக்க மாட்டாள். வியாழனால் பார்க்கப்பட்ட அல்லது
தொடர்புடைய, அவள் குழந்தைகளைப் பெறலாம், ஆனால் அவர்கள் அனைவரும் இறக்கக்கூடும்,
இதனால் அவளுடைய வாழ்கை மகிழ்ச்சியற்றது. ராகுவிற்குப் பதிலாக கேது இருந்தால், குழந்தை
பிறப்பு மறுக்கப்படாது, ஆனால் குழந்தைகள் மகிழ்ச்சிக்கு பதிலாக மகிழ்ச்சியற்றவர்களாக
இருப்பார்கள். 5 ஆம் வீட்டில் ராகு மற்றும் செவ்வாய் இருந்தால் அல்லது செவ்வாயின் நட்சத்திரத்தில்
ராகு இருந்தாலும் பெண்மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் ஏற்படும்.

36.) பெண் ஜாதகம், மகர லக்னம். வியாழனுக்கு 5-ல் சந்திரனும், சந்திரனுக்கு 5-ல் ராகுவும் இருந்தால்
குழந்தை பிறப்பு மற்றும் விஷயங்களின் வாத நோயை ஏற்படுத்தும்.

அஸ்தங்கதம்
சூரியன் மற்ற கிரஹத்துடன் இணையும் போது ஏதேனும் ஒரு விளைவினை ஏற்படுத்தவே செய்கிறது.
‍‍
சூரியன், சந்திரன் இருவரும் ராகு அல்லது கேது, இவ்விருவரில் ஏதேனும ஒரு கிரஹத்துடன் இணையும் பொழுது

கிரஹணம் ஏற்படுவது நாம் அறிந்ததே‌.


‍‍
மற்ற கிரஹங்களான செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி கிரஹங்களை பொறுத்தவரை சூரியனுடைய

அதிவெப்பத்தின் காரணமாக அஸ்தங்கதம் அடையும் என்பது ஜோதிஷத்தில்‌ஹோரா நூல்களில் மட்டும் அல்ல

சூரிய சிந்தாந்தம் போன்ற கணித நூல்களிலும் கூறப்பட்டுள்ளது.


‍‍
அஸ்தங்கம் என்பதனை மெளட்யம் எனவும், விகல எனவும் ஜோதிஷ நூல்களில் கூறப்பட்டுள்ளது. அஸ்தங்கத

பாகையினை பொறுத்து தக்த, சர்வதா, தக, அஸ்த போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.


‍‍
அஸ்தங்கத பாகை

சூரியனிலிருந்து முன் பின் பாகைகளில்
‍‍
செவ்வாயானது 17 பாகையில் இருந்தாலும்,
‍‍
புதனானது 13 பாகையில் இருந்தாலும்,
‍‍
குருவானது 11 பாகையில் இருந்தாலும்,
‍‍
சுக்கிரனானது 9 பாகையில் இருந்தாலும்,
‍‍
சனியானது 15 பாகையில் இருந்தாலும்,
‍‍
கிரஹங்கள் ஆனது அஸ்தங்கம் அடையும்.சுக்கிரனும் புதனுமே அடிக்கடி அஸ்தங்கதம் அடையும்

கிரஹங்களாகும்.
‍‍
‍‍
இந்த அஸ்தங்கத‌பாகையினை எல்லாம் எவ்வாறு ஞாபகம் வைத்துக்கொள்வது?
‍‍
‍‍
இதற்கு அடியேன் ஒரு தீர்வு கொடுக்க இருக்கிறேன்.

இந்த 5 கிரஹங்களையும் அதனுடைய உட்ச வீட்டில் அமைக்கவும்.


‍‍
‍‍
இப்பொழுது சுக்கிரன் உட்ச வீடான மீனத்திலிருந்து வரிசையாக மற்ற கிரஹங்களின் ( குரு, புதன், சனி, செவ்வாய்)

உட்ச வீட்டினை காணவேண்டும். 9 பாகையில் தொடங்கி வரிசையாக இரண்டு இரண்டாக கூட்ட வேண்டும்.

அவ்வளவே!!
‍‍
அதாவது மீனத்திற்கு அடுத்து கடகம் அடுத்தது கன்னி அடுத்ததாக துலாம் கடைசியாக மகரம் ஆகும்.
‍‍
இந்த ராசிகளில் உட்சம் அடையும் கிரஹத்தினை வரிசையாக கொண்டு 9 பாகையிலிருந்து இரண்டு இரண்டாக
கூட்ட அஸ்தங்கத கிரஹமும், பாகையும் கிடைக்கும்.
‍‍
‍‍
மீனம் – சுக்கிரன் – 9 பாகை
‍‍
கடகம் – குரு– 11 பாகை
‍‍
கன்னி – புதன் – 13 பாகை
‍‍
துலாம் – சனி– 15 பாகை
‍‍
மகரம் – செவ்வாய் – 17 பாகை
‍‍‍‍
‍‍
அஸ்தங்கம் பற்றிய குறிப்புகள்.
‍‍
‍‍
1. மேலே கூறப்பட்ட பாகைகளில் சூரியனுக்கு முன்னும் பின்னும் கிரஹங்கள் சஞ்சரிக்கும் போது அஸ்தங்கதம்

அடைகிறது. எனினும் இப்பாகைகளில் பாதி பாகையே அதிக பாதிப்பினை தருகிறது.


‍‍
‍‍
‍‍
2. சூரியன் 8, 12 ம் பாவத்தில் அமர்ந்து அஸ்தங்கம் தந்தால் அதிக பாதிப்பு உண்டாகிறது.
‍‍
‍‍
‍‍
3. ரிஷப, மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் லக்கினங்களுக்கு எந்த கிரஹம் அஸ்தங்கம் அடைந்தாலும்

பாதிப்பு உண்டாகிறது.
‍‍
‍‍
4. மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் லக்கினங்களுக்கு செவ்வாய், குரு அஸ்தங்கத்தினால் அதிகம்

பாதிப்பு தருவதில்லை.
‍‍
‍‍
‍‍

5. சூரியனை விட அஸ்தங்கதம் அடைந்த கிரஹம் அதிக பாகையில் இருந்தால் பாதிப்பு அதிகம் தருவதில்லை.
‍‍
‍‍
‍‍
6. அஸ்தங்கதம் அடைந்த கிரஹம் ஆட்சி, உட்சம் பெற்றாலும், திக்பலத்தில் இருந்தாலும், சுபர்

பார்த்தாலும், நவாம்சத்தில் பலமாக இருந்தாலும் பாதிப்பு அதிகம் தருவதில்லை.


‍‍
‍‍
‍‍
7. அஸ்தங்கதம் அடைந்த கிரஹம் வக்கிரம் பெற்றாலும் பாதிப்பு தருவதில்லை. இது மிகவும் அரிதாகும்.
‍‍
‍‍
‍‍
8. சூரியன் வலிமை இழந்து அஸ்தங்கம் தந்தாலும் பாதிப்பு இல்லை.
‍‍
‍‍
9. அஸ்தங்கம் அடைந்த கிரஹத்தின் ஆதிபத்திய பாவ பலனை தன் தசா புத்தியில் கொடுப்பதில்லை. மாறாக சூரிய

தசா, புத்திகளிலே அப்பலன் நடைபெறுகிறது.


‍‍
‍‍
10. சூரியன் இருந்த வீட்டின் அதிபதி அல்லது நக்‌ஷத்திர அதிபதி அஸ்தங்கம் அடைந்தால் அதிக பாதிப்பினை

தருகிறது.
‍‍
‍‍
11. சூரியனும் அஸ்தங்கம் அடைந்த கிரஹமும் வேறு வேறு ராசிகளில் இருந்து அஸ்தங்கம் அடைந்தாலும் அதில

பாதிப்பு தருவதில்லை.
‍‍
‍‍
12. சந்திரன் 12 பாகைக்குள் ( ஒரு திதி அளவு) இருந்தாலும் அஸ்தங்கம் அடைந்ததாக சில நூல்கள்

குறிப்பிடுகின்றன.
‍‍
‍‍
13. சனி அஸ்தங்கம் அடைந்தாலும் ஜாதகருக்கு ஆயுளை நிர்ணயிப்பதில் அஸ்தங்கத்தினை

எடுத்துக்கொள்ளகூடாது.
‍‍
‍‍

14. அஸ்தங்கதம் அடைந்த கிரஹம் ஏதேனும் ஒரு வழியில் பலம் பெற்றால் அதிக பாதிப்பினை தருவதில்லை.
‍‍
‍‍

அஸ்தங்கம் அடைவதினால் கிரஹங்கள் தன் இயல்பு நிலையிலிருந்து மாறி சில மாற்றங்களை உண்டாக்கிறது.

அவற்றின் பலன் ஆனது.


‍‍
‍‍
‍‍
சூரியனுடன் செவ்வாய் சேர்ந்து அஸ்தங்கம் அடையும் போது
‍‍
எதற்கும் போட்டி போடுதல்
‍‍‍‍
பிறரின் மீது அதிக ஆதிக்கம் செலுத்துதல் மற்றும் உதாசீனப்படுத்துதல்.
‍‍‍‍
பிடிவாதமாக இருத்தல்
‍‍‍‍
அவ்வளவு சீக்கிரம் சமரசம் ஆகாதிருத்தல்
‍‍
தானே பெரியவன் என்ற எண்ணத்துடன் இருத்தல்
‍‍

வலுவான மன உறுதி கொண்டிருத்தல்


‍‍
ஆணாதிக்கமும், முரட்டு தைரியமும் கொண்டிருத்தல்
‍‍
தேவையற்ற ஆர்வமும், ஆற்றலும் கொண்டிருத்தல்
‍‍‍‍
அதீத பித்த தேகத்துடன் இருத்தல்

வழுக்கை விழுதல்
‍‍‍‍
கண் நோய் பாதிப்பு உண்டாகுதல்
‍‍
மற்றும் பல.,
‍‍

சூரியனுடன் புதன் சேர்ந்து அஸ்தங்கம் அடையும் போது


‍‍‍‍
படபடப்புடன் இருத்தல்
‍‍
எவ்வளவு மன அழுத்ததினையும் தாங்குதல்
‍‍
தான் நினைப்பதனை வெளியில் கூறாதிருத்தல்
‍‍
தன்னைப்பற்றியே அதிகம் யோசித்தல், பேசுதல்.
‍‍
நரம்பு பலவீனமாக இருத்தல்
‍‍
பித்தப்பையினால் வயிற்றில் நோய் உண்டாதல்
‍‍
மற்றும் பல.,
‍‍
‍‍
சூரியனுடன் குரு சேர்ந்து அஸ்தங்கம் அடையும் போது
‍‍
பழமையில் நம்பிக்கையாக இருத்தல்
‍‍
எதனையும் செய்ய முடியும் என அதீத கர்வத்துடன் இருத்தல்
‍‍
அளவுக்கு மீறிய வாக்குறுதிகளை கொடுத்தல்
‍‍
தடங்கலில் தடுமாறி மீளாமல் இருத்தல்
‍‍
தம்மால் மட்டுமே நீதியினை நிலைநாட்டமுடியும் என்று இருத்தல்
‍‍
ஒழுக்கமானவராக தன்னை காட்டிக்கொள்ளுதல்
‍‍
நியாபகமறதி அதிகம் இருத்தல்
‍‍
உடல் வலி, வாயு தொல்லைகளினால் அவதிப்படுதல்

மற்றும் பல.,
‍‍‍‍
‍‍
சூரியனுடன் சுக்கிரன் சேர்ந்து அஸ்தங்கம் அடையும் போது
‍‍
மனநிறைவையே பிராதனமாக கொண்டிருத்தல்
‍‍
வேடிக்கை விளையாட்டில்‌ஆர்வத்துடன் இருத்தல்
‍‍
உறவுகளிடமே தன்முனைப்பாக இருத்தல்
‍‍
புகழுடனே இருக்கவேண்டும் என விரும்புதல்
‍‍
பிறரின் வாழ்க்கை ரகசியங்களை அறிய ஆர்வமாக இருத்தல்
‍‍
அளவிற்கு அதிகமாக பிறருடன் ஒத்துப்போகுதல்
‍‍
சிறுநீர் பிரச்சினைகளை சந்தித்தல்
‍‍

தொற்றுநோயினால் அவதிப்படுதல்
‍‍
மற்றும் பல,
‍‍
‍‍

சூரியனுடன் சனி சேர்ந்து அஸ்தங்கம் அடையும் போது


‍‍
அதீத சுயகட்டுப்பாடுடன் இருத்தல்
‍‍
எவருடனும் அவ்வளவு சீக்கிரமாக நெருங்கி பழகாமல், எச்சரிக்கையுடன் இருத்தல்
‍‍
கடின உழைப்பில் நம்பிக்கையாய் இருத்தல்
‍‍
பிறருடைய உணர்விற்கு தன்னை ஆட்படுத்தி கொள்ளாதிருத்தல்
‍‍
இளமையிலேயே முதிர்ந்த பக்குவம் அடைதல்
‍‍
வயதிற்கு மீறிய அனுபவத்துடன் இருத்தல்
‍‍
எந்த வேலையையும் தாமதமாகவே செய்தாலும் சரியாகவே செய்கிறோம் என நம்புதல்
‍‍
உடல் வலியினால் அவதிப்படுதல்
‍‍
தொடைக்கு கீழே உள்ள உடல் உறுப்பில் பலம் குன்றி இருத்தல்
‍‍
மற்றும் பல.,
‍‍

பொதுவாக அஸ்தங்கம் அடையும் கிரஹம் தன்னுடைய பாவ பலனை சூரியனிடம் இழந்து விடும். சூரியன்

என்பது ஆத்மாவாக கூறப்பட்டுள்ளதால் ஆத்மாவிற்கு அப்பாவ பலனை அடைய பாக்கியம் இல்லை எனவும்

தீர்மானிக்கலாம்‌. எனினும் தெய்வ பக்தி, சூரிய நமஸ்காரம், சிவ வழிபாடு போன்றவற்றின் மூலமும் நாம்
அஸ்தங்கதம் அடைந்த கிரஹத்தின் பலனை சூரிய தசா புத்திகளில் அடையமுடியும்.
‍‍‍‍

You might also like