Professional Documents
Culture Documents
ஜாதக பொது விதிகள்
ஜாதக பொது விதிகள்
பாவாதிபதிகள்
*ஒன்றாம் பாவாதிபதி (கேந்திரம்) குரு
*இரண்டாம் பாவாதிபதி (பணபரம்) செவ்வாய்
*மூன்றாம் பாவாதிபதி (ஆபோக்லிமம்) சுக்கிரன்
*நான்காம் பாவாதிபதி (கேந்திரம்) புதன்
*ஐந்தாம் பாவாதிபதி (திரிகோணம்) சந்திரன்
*ஆறாம் பாவாதிபதி (ஆபோக்லிமம்) சூரியன்
*ஏழாம் பாவாதிபதி (கேந்திரம்) புதன்
*எட்டாம் பாவாதிபதி (பணபரம்) சுக்கிரன்
*ஒன்பதாம் பாவாதிபதி (திரிகோணம்) செவ்வாய்
*பத்தாம் பாவாதிபதி (கேந்திரம்) குரு
*பதினொன்றாம் பாவாதிபதி (பணபரம்) சனி
*பன்னிரண்டாம் பாவாதிபதி (ஆபோக்லிமம்) சனி
கிரக சேர்க்கைகள்
சந்திரன்,செவ்வாய்,கேது, சேர்க்கை
சூரியன்,மாந்தி, சேர்க்கை
மறைவு ஸ்தானங்கள்
ஒரு ஜாதகத்தில் 3,6,8,12 ஆகிய இடங்கள் மறைவு ஸ்தானங்கள் அல்லது துர்ஸ்தானங்கள் எனப்படும்.
இந்த இடங்களில் சுப கிரகங்கள் எனப்படும் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் நின்றால் சுப பலன்களை
தரமாட்டார்கள். மாறாக் 3,6,8,12 ம் இடங்களில் பாவ கிரகங்கள் எனப்படும் சூரியன், செவ்வாய், சனி,
ராகு - கேது நின்றால் ஜாதகருக்கு எந்த விதமான கெடு பலன்களையும் தராது.
உபசய ராசிகள்
ஒவ்வொரு ராசியிலிருந்தும் 3,6,10,11 வது ராசிகள் உபசய ராசிகள். இவைகளில் இருக்கின்ற
கிரகங்களின் பலன் இயற்கை பலனுக்கு அதிகமாகவே இருக்கும். 6-வது பாவம் சுபக்கிரகங்களுக்கு
ஸ்வஷேத்திரமாக இருந்தால் மட்டும் உபசயம், இல்லாவிட்டால் இல்லை. ஒவ்வொரு ராசியிலிருந்தும்
உபசய ராசிகளில் இருக்கின்ற கிரகங்களின் பலத்தைக் கொண்டு அந்தந்த ராசிகளின் பலத்தை
அறியலாம். இந்த ஜாதகத்தில் உபசய ராசிகள் (பாவங்கள்) "ரிஷபம்","சிம்மம்","தனுசு","மகரம்" ஆகும்.
ராசிகளுக்குக் கேந்திரபலம்
மிதுனம், கன்னி, துலாம், தனுசின் முற்பகுதி, கும்பம் இவைகள் மனுஷ்ய ராசிகள்.
மேஷம், ரிஷபம், சிம்மம், தனுசின் பிற்பகுதி மகரத்தின் முற்பகுதி இவைகள் மிருக ராசிகள்
விருச்சிகம், கடகம், மகரத்தின் பிற்பகுதி, மீனம் இவை ஜல ராசிகள்.
மனுஷ்ய ராசிகள் லக்னத்திலும், மிருக ராசிகள் பத்தாம் பாவத்திலும் விருச்சிக ராசியானது 7-வது
பாவத்திலும், ஜல ராசிகள் 4-வது பாவத்திலும் பலமுள்ளவை.
இராசிகளுக்கு காலபலன்
மனுஷ்ய ராசிகளுக்கு உச்சி காலத்தில் முழுபலம் உண்டு. அர்த்த ராத்திரியில் பலம் இல்லை. நடுநிசி
முதல் உச்சி காலம் வரை பலம் அதிகமாகிக்கொண்டே வந்து உச்சி காலத்தில் பூரணமாகும். உச்சிகாலம்
முதல் நடுநிசி வரை குறைந்துக் கொண்டே வந்து நடுநிசியில் சூன்யமாகும்.
கிரக பார்வைகள்
கிரகங்களுக்கெல்லாம் பார்வைகள் உண்டு. அந்தப் பார்வைகள், பலன்களை அடியோடு
மாற்றிவிடுகின்றன. ஜோதிடத்தில், கிரகங்களை நல்லவை, கெட்டவை என பிரிதுது, நல்ல கிரகங்களின்
பார்வைகள் நல்லது பயப்பன என்றும், கெடுதல் செய்யும் கிரகங்களின் பார்வைகள்
கேடுவிளைவிப்பவை என்றும் கூறுவர்.
குறிப்பு : நமது மூலநூல்களில் ஒரு கிரகம், மற்றொன்றை பத்து டிகிரிக்குள் பார்வையிட்டால் மட்டுமே
அதனைப் பார்வை என்று சொல்ல வேண்டும். இரண்டு கிரகங்களுக்குமான பார்வைக் கோணம் பத்து
டிகிரியை விட்டு விலகி இருந்தால் அங்கே பார்வை என்பது இருக்காது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அதாவது மேம்போக்காக பார்க்கும் போது ராசிக்கட்டத்தில் பார்வை இருப்பதுபோல தோன்றினாலும்,
உண்மையில் பார்வையின் பலன் இருக்காது. இந்த பொது பலனில் டிகிரிக்குள் பார்வையிடுவது
கருதப்படவில்லை.
கிரக பரிவர்த்தனை
கிரகங்கள் பரிவர்த்தனை பெறுவது ஒருவகை யோகமாகும். பரிவர்த்தனை பெறுவதால் இரண்டு
கிரகமும் ஸ்தான பலம் பெறுவதோடு அவை அளிக்கும் பலனிலும் மிகையாகிறது. அதனால் ஜாதகரின்
மேலான பலன்களுக்கு பரிவர்தனை துணை புரியும். ஆனால் அந்த பலனை பெற பரிவத்தனை
பெற்றுள்ள கிரகங்களின் தசை நடை முறைக்கு வரவேண்டும். இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று
இடம் மாறி வீற்றிருப்பது பரிவர்த்தனை ஆகும். இதனை பரிவர்த்தனை யோகம் என்று கூறுவார்கள்.
இதில் 3 வகையான பரிவர்த்தனை உள்ளது. சுபர்/சுபர், சுபர்/பாவர் மற்றும் பாவர்/பாவர் பரிவர்தனை.
லக்கினத்திற்கு நன்மை செய்யும் இரு கிரகங்கள் தங்கள் வீடுகளை மாற்றி கொண்டால் அது
ஜாதகருக்கு மிகுந்த நன்மை. சுபர்/பாவர் மற்றும் பாவர்/பாவர் பரிவர்த்தனை நன்மைகளுக்கு பதிலாக
அதிக தீமை செய்யும் அமைப்பு உருவாகும் அந்த கிரகத்தின் திசா புத்தி காலத்தில். எப்போதும்
கிரகங்கள் நட்பு நிலைக்கு கீழ் செல்லும் பொழுது மட்டுமே கெடுபலன்கள் தரும் அமைப்பில் இருக்கும்.
எனவே இரு கிரகங்கள் தங்கள் வீடுகளை பறிமாரிக்கொள்ளும் அமைப்பு பரிவர்த்தனை யோகம்
என்றே கூறப்பட்டுள்ளது.. இந்த ஜாதகத்தில் எந்த ஒரு கிரக பரிமாற்றமும் இல்லை.
- இந்த ஜன்மத்தில் ஒருவர் அடையக்கூடிய நன்மை, தீமைகள், அவன் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவ
புண்ணியங்களின் அடிப்படையில் கணிக்கப்பட்டு ஜாதகக் கட்டத்தில் கிரகங்களின் அமைப்பில்
சந்கேதமாகக் குறிக்கப்பட்டுள்ளது என்பது பொருள்.
ராகு கேதுவால் பெரும் யோகம் (எஸ்.பி சுப்பிரமணியன் எழுதிய ஜோதிட சித்தர்களின் நுட்பங்கள்
பக்கம் 35 - 36 இல் இருந்து)
ராகு - கேதுவிற்கு சொந்த வீடுகள் இல்லை. ஆனால் அவர் இருக்கும் ராசியின் பலத்தையும், அவர்
இருக்கும் நட்சத்திராதிபதியின் பலத்தையும் பெற்று பார்க்கும் கிரகமான குருவின் பார்வையையும்
பொறுத்து பலன் தருவார்கள். கேது - நாம் சென்ற பிறவியில் செய்த நல்வினை - தீவினைகளைத்
தருபவர். ராகு - இப்பிறவியில் அனுபவிக்கும் நன்மை தீமையை தெரிவிப்பவர்கள். இவர்கள் இருவரும்
கர்மாவைத் தெரிவிக்கும் கிரககங்களாவார்கள். கேது இருக்கும் ராசிக்கதிபதி ஒருவர் சென்ற
பிறவியில் எவ்வித அளவிற்கு நன்மை செய்தார், எவ்வித அளவிற்கு தீமை செய்தார் என்பதை
தெரிவிக்கும் கிரகமாகும். ராகு இருக்கும் வீட்டின் அதிபதி இப்ப்பிரவியில் கர்மவினையை எவ்விதம்
எந்த அளவு நன்மை தீமையை அனுபவிக்கலாம் என்பதை என்பதை தெரிவிக்கும் கிரகமாகும். மேலும்
அவரவர் ஜாதகத்தில் யோகம் தரும் கிரகங்களின் நட்சத்திரத்தில் இருந்தால் அதன் தசா புத்தியில்
யோகம் தருவார்கள்.
கோச்சார நிலையிலும் ராகு 3-4-10-11 இல் வரும் காலமும் 1-4-5-7 இல் வரும் காலமும் நன்மை தருவார்.
பதவி, பதவி உயர்வு, தொழிலால் லாபம், இவைகளைத் தருவார். மேலும் மேஷம் ரிஷபம், மிதுனம், கடகம்,
மகரத்தில் ராகு இருந்துஅந்த பாவம் 3-6-10-11 ஆம் பாவமாக அமைந்து குருவின் சம்பந்தம்
பெருமானால் ராகு தசை யோகம் தரும். கேது வாழ்வின் இறுதிகால வாழ்வின் நிலையை அதாவது
நிம்மதியானதா அதாவது நிம்மதியானதா அல்லது துன்பங்கள் நிறைந்ததா என்பதைக் தெரிவிக்கும்
கிரகமாகும்.இறுதிக் காலத்தில் உருவாகும் வியாதிக்கு கேதுவே காரணமானவர். அவரது நிலையைப்
பொறுத்தே இறுதிக் கால வாழ்க்கை அமைகிறது.
ராகு கொடுப்பவர் என்றும் கேது எடுப்பவர் என்பதும் பல ஜோதிட அறிஞ்ர்களின் கருத்தாகும். இறுதிக்
கால இறப்புக்கு கேதுவின் நிலையே காரணம்.
பாம்பின் உருவம் பெற்ற கிரகமாகும். ராகு பாம்பின் தலையையும், கேது பாம்பின் வாலையும்
பெற்றிருப்பவர்கள். இவை அனைவருமே பாம்பை வாகனமாகவும் மாலையாகவும் கொண்டிருப்பார்களே.
ராகு நன்மை தருபவர் என்பதும் ஜோதிட வித்தகர்களின் கருத்தாகும்.
பராசர ஹோரையில் மகரிஷி பராசரர் ராகுவிற்கு ரிஷபம் உச்சவீடு, கடகம் மூலத்திரிகோணம், கன்னி
ஆட்சி வீடு என்று கூறுகிறார். மகரிஷி காளிதாசரும் தனது உத்தர காலாம்ருதத்தில் ராகுவிற்கு ரிஷபம்
உச்ச வீடு என்கிறார். ஆனால் பெரும்பாலான தென்னிந்திய மூல நூல்களில் ராகுவிற்கு விருச்சிகம்
உச்சம் ரிஷபம் நீசம், மற்றும் கேதுவிற்கு விருச்சிகம் நீசம் ரிஷபம் உச்சம் என்றே சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த ஜாதகம் ராகுவிற்கு ரிஷபம் நீசம், கேதுவிற்கு விருச்சிகம் உச்சவீடு என்பதாக
கணிக்கப்பட்டுள்ளது.
வர்கோத்தமம்
வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில்
இருப்பதைக் குறிக்கும்! ஒரு கிரகம் வர்கோத்தமம் பெற்றால் அது வலிமை உடையதாக ஆகிவிடும்.
அந்த அமைப்பு ஜாதகருக்கு அதிகமான அளவு நன்மையான பலனைக் கொடுக்கும்! இயற்கையில்
தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும். இது தவிர,
வர்கோத்தமம் பெறும் கிரகம், ஜாதகத்தில் அது எந்த பாவத்திற்கு/வீட்டிற்கு உரியதோ, அந்த
வீட்டிற்கான பலன்களை உரிய நேரத்தில் வாரி வழங்கும் . உங்கள் ஜாதகத்தில்
சந்திரன், ரிஷபம் ராசியில் வர்கோத்தமம் பெற்றுள்ளது
சந்திரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகருக்கு அதீத மன வலிமையைக் கொடுக்கும். எதையும்
சட்டென்று புரிந்து கொள்ளும் தன்மையைக் கொடுக்கும். சந்திரன் வர்கோத்தமமானால் கவர்னர்
அல்லது மந்திரி ஆவார்.
ஐந்தாமதிபதி ஆட்சி அல்லது வர்கோத்தமமானால் பூர்வீக சொத்து கிட்டாது. பெண் எனில் அபார்ஷன்
பிரச்சினை இருக்கும்
புதன், துலாம் ராசியில் வர்கோத்தமம் பெற்றுள்ளது
புதன் வர்கோத்தமம் பெற்றால்
ஜாதகருக்கு அதீத பேச்சுத் திறமையைக் கொடுக்கும். புதன் வர்கோத்தமமானால் யோகபலன் உண்டு.
பளிங்கு வீடு கட்டுவார்.
ஒரு வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீட்டால் ஜாதகனுக்குப் பெரிய
(நல்ல) பலன்கள் இருக்காது. இந்த ஜாதகத்தில்
மேஷம் (2 ம்) வீட்டில் 21 பரல்கள் உள்ளது
கன்னி (7 ம்) வீட்டில் 21 பரல்கள் உள்ளது
விருச்சிகம் (9 ம்) வீட்டில் 21 பரல்கள் உள்ளது
ஒரு வீட்டில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், அந்த வீட்டால் ஜாதகனுக்கு மிகவும்
நன்மையான பலன்கள் உண்டாகும். ஜாதகன் ஒரு வீட்டின் முழுப் பலனையும் அடைய
வேண்டுமென்றால் அந்த வீட்டில் 30 ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருக்க வேண்டும். இந்த
ஜாதகத்தில்
மீனம் (1 ம்) வீட்டில் 38 பரல்கள் உள்ளது
மிதுனம் (4 ம்) வீட்டில் 32 பரல்கள் உள்ளது
கடகம் (5 ம்) வீட்டில் 31 பரல்கள் உள்ளது
தனுசு (10 ம்) வீட்டில் 31 பரல்கள் உள்ளது
மகரம் (11 ம்) வீட்டில் 31 பரல்கள் உள்ளது
இரண்டாம் வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் எப்போதும் பணப் பிரச்சினை
இருக்கும். வரவிற்கு மேல் செலவாகும். சுருக்கமாகச் சொன்னால் கையில் காசு தங்காது. ஓட்டைக்கை
என்று சொல்லுவார்கள். இந்த ஜாதகத்தில் 2 ம் (மேஷம்) வீட்டில் 21 பரல்கள் உள்ளது.
நான்காம் வீட்டில் 30 ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருந்தால்தான் நல்ல, அன்பான, பரிவான,
பாசமுள்ள தாய் அமைந்திருப்பாள். இந்த ஜாதகத்தில் 4 ம் (மிதுனம்) வீட்டில் 32 பரல்கள் உள்ளது.
எட்டாம் வீட்டில் 25 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், வாழ்க்கையில் பெரும் கஷ்டங்கள்,
பிரச்சினைகள் வராது. இந்த ஜாதகத்தில் 8 ம் (துலாம்) வீட்டில் 27 பரல்கள் உள்ளது.
பித்ருகாரகன், ஆத்மகாரகன் சூரியன் அவனுடைய சுயவர்க்கத்தில் 2 பரல்களுடன் உள்ளார்.
மனகாரகன் சந்திரன் அவனுடைய சுயவர்க்கத்தில் 5 பரல்களுடன் உள்ளார்.
பூமிகாரகன், சகோதிரகாரகன் செவ்வாய் அவனுடைய சுயவர்க்கத்தில் 3 பரல்களுடன் உள்ளார்.
வித்யாகாரகன் புதன் அவனுடைய சுயவர்க்கத்தில் 6 பரல்களுடன் உள்ளார்.
புத்திகாரகன், தனகாரகன் குரு அவனுடைய சுயவர்க்கத்தில் 6 பரல்களுடன் உள்ளார்.
களத்திரகாரகன் சுக்கிரன் அவனுடைய சுயவர்க்கத்தில் 4 பரல்களுடன் உள்ளார்.
கர்மகாரகன் சனி அவனுடைய சுயவர்க்கத்தில் 6 பரல்களுடன் உள்ளார்.
பாடல் 46 - வியாழன் 4,7,10,1,5,9,2,11 ல் தரும் யோகம் - புலிப்பாணி ஜோதிடம் 300 பாரப்பா பரகுரு
நாலேழ்பத்து
பகருகின்ற கோணமுடன் தனமும்லாபம்
சீரப்பா சென்மனுக்கு யோகம் செப்பு
செந்திருமால் தேவியுமே பதியில்வாழ்வன்
கூறப்பா குடிநாதன் கண்ணுற்றாலும்
குவலயத்தில் வெகுபேரை ஆதரிப்பன்
ஆரப்பா ஆரெட்டு பன்னிரெண்டு
அறைகின்றேன் அதன்பலனை அன்பால்கேளே வியாழ பகவான் என விளம்பப்படும் குருபகவான் 4,7,10
மற்றும் 1,5,9 இன்னும் 2,11 ஆகிய இடங்களில் இருந்தால் இச்சாதகனுக்கு யோகம் மிகவும் உண்டென்று
கூறுவாயாக! செந்திருமால் தன் தேவியுடன் இவன் மனையில் வாழ்வார்கள். இன்னும்
இரண்டாமிடத்ததிபதி இவனைக் காணில் இப்பூமியில் வெகு பேரை ஆதரிப்பான். இனி 6,8,12 ஆகிய
இடங்களில் நின்றால் எத்தகைய பலன் விளைவிப்பான் என்பதனையும் கூறுகிறேன். இதனை நீயும்
அன்புடனே கேட்பாயாக!
பாடல் 49 - சுக்கிரன் 12,3,6,8 ல் தரும் பாதகம் - புலிப்பாணி ஜோதிடம் 300 பாரப்பா பனிரெண்டு
மூன்றாரெட்டில்
பலமுள்ள அசுரகுரு அதனில் தோன்ற
வீரப்பாவிதிகுறைவுவெதர்நோய்வாதம்
விளங்குகின்ற செம்பொன்னும்மனையும் நஷ்டம்
கூறப்பா குழவிக்கு மகோதரமும் பாண்டு
கொற்றவனே குன்மமொடு சயமும்சோகை
சீரப்பா ஈராறில் சுங்கன் ஆட்சி
சிவசிவா சயனசுகம் யோகஞ்சொல்லே. ஒரு சாதகனுக்கு 12,3,6,8 ஆகிய இடங்களில் அசுர குருவான
சுக்ராச்சாரியார் பலமுடன் சஞ்சாரம் செய்வாரானால் அச்சாதகனுக்கு ஆயுள் குறைவதுடன், மர்ம
உறுப்புகளில் [பீசத்தில்] நோயுறுதலும்,வாதநோய் ஏற்படுவதும் மிகவும் விளக்கம் பெற்ற செம்பொன்
மற்றும் வாழ்மனையும் நஷ்டமாம். மேலும், மகோதரம்,பாண்டு ஆகிய நோய் மட்டுமல்லாமல் குன்மம்,
சயம், சோகை ஆகிய நோய்களும் ஏற்படும். ஆயினும் 12 ஆம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றால்
சிவபரம்பொருளின் பேரருளால் சயன சுகமும் நல்ல யோகமும் ஏற்படும் எனக் கூறுவாயாக.
திருமண தடை
ஜாதகத்தில் 6,7,10 ஆகிய இடங்களில் சுக்கிரன் இருந்தால் பலருக்கு திருமணம் நடைபெற தடை
ஏற்படலாம்.
சந்திரன் மூன்றில் நல்ல நிலையில் இருந்தால் உடல் வலிமையையும் ஆற்றலையும் தருவார். சகோதர
சகோதரிகளை ஆதரிப்பார் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். மூன்றாவது வீடாக இருப்பதால்
அடிக்கடி குறுகிய பயண செய்ய வைப்பார். வாகனம் வசதி கிடைக்கும் சந்திரன் கெட்டால் அனைத்தும்
எதிர்மறையாக இருக்கும். மூன்றில் சந்திரன் இருந்தால் மாமன் விரோதம் என்பார்கள். சில நேரங்களில்
மித மிஞ்சிய தைரியம், சில நேரங்களில் இனம் புரியாத பயம் அலைக்கழிக்கும்.
செவ்வாய் 3-ம் வீட்டில் இருந்தால் நல்ல தைரியசாலியாக இருப்பார், சகோதர வகையில் பிரச்சனை
இருக்கும். காதில் தொந்தரவு இருக்கும். செல்வம் நிறைய கிடைக்கும். நல்ல அறிவாற்றல் கிடைக்கும்.
உடம்பு நல்ல உறுதியாக இருக்கும். இளைய சகோதரருக்கு கெடுதல் செய்யும். சிலபேருக்கு இளைய
சகோதர, சகோதரிகள் இருக்க மாட்டார்கள். 3 ஆம் வீட்டில் செவ்வாய் பலம் பெற்றால் நல்ல வாழ்க்கை
அமையும். 3 ஆம் வீட்டு செவ்வாய் மூலம் தாய்நலம் கெடும்.
புதன் 8 ஆம் வீட்டில் இருந்தால் கல்வியில் தடை ஏற்படும். மாமன் இருக்கமாட்டார் அப்படியே மாமன்
இருந்தாலும் அவர் மூலம் எந்த பயனும் இருக்காது. புதன் நல்ல முறையில் இருந்தால் உயில் மூலம்
சொத்து வரும். ஜாதகனுக்குப் பல விஷேச குணங்கள் இருக்கும்.எல்லோரையும் அனுசரித்துப்போகும்
தன்மை இருக்கும். யாரையும் சமாளிக்கும் அல்லது வளைத்துப்போடும் தன்மை இருக்கும். செல்வம்
பலவழிகளில் வந்து சேரும். ஜாதகனும் தன் சொந்த முயற்சியில் பொருள் ஈட்டுவான். சுருக்கமாகச்
சொன்னால் செல்வந்தனாக இருப்பான் . அதிகம் கற்றவனாக இருப்பான். பண்டிதனாக இருப்பான்.
எல்லா விஷயங்களும் தெரிந்தவனாக இருப்பான். அதிக நாள் உயிரோடு இருப்பார். அதே நேரத்தில்
ஆசாமி நோஞ்சான் வடிவத்தில் இருப்பார்
சுக்கிரன் 6 ஆம் விட்டில் இருந்தால் செல்வ வளம் குன்றும். எதிரிகள் தொந்தரவு இருக்கும்.
பெண்களால் பிரச்சினைகள் இருக்கும். மர்ம பாகங்களில் நோய் வரும். பெண்களால் ஏமாற்றப்படுவார்.
சண்டை என்று வந்தால் முதலில் பெண்கள் வழியில் தான் ஆரம்பம் ஆகும். கடன் பிரச்சினை இருக்கும்
குரு லக்னத்தில் அமையப் பெற்றால் ஜாதகர் ஆசீர்வதிக்கப்பட்டவர். இவருக்கு ஜாதகம் பார்த்து பலன்
சொல்ல வேண்டியதில்லை. நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை. .அந்த இரண்டு
சூழ்நிலைகளிலும், குரு கை கொடுப்பார். வாழ்வில் நல்ல உடல் அமைப்பு (தடித்த உருவம்) கொண்டு
இருப்பர். மேலும் இவர் அழகான நீண்ட கருங் கூந்தலை உடையவர். மற்றவர்களிடம் பழகும்போது
இனிமையாகப் பேசும் சுபாவமும் இருக்கும்.
ராகு 9 ஆம் வீட்டில் இருந்தால் கடுமையான பித்ரு தோஷம் ஏற்படும். எடுத்த அனைத்து காரியங்களும்
தடை ஏற்படும். பெரியவர்களின் சாபங்கள் இருக்கும். தந்தை நலம் பாதிக்கப்படும். உயர்கல்வி படிக்க
இயலாது. ஆன்மீக ரீதியில் புண்ணிய காரியங்கள் செய்வார்கள். சொத்துக்கள் வாங்கும் போது
கவனம் தேவை.
கேது 3 ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகர் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார். சாதனைகளைச்
செய்யக்கூடியவர். எதிரிகளை ஒழித்துக் கட்டக்கூடியவர். எல்லாவிதமான சுகங்களையும்
அனுபவிக்கக் கூடியவர். தான் உண்டு தான் வேலை உண்டு என்று இருக்கமாட்டார்கள் இவர்களால்
பிரச்சினை உருவாகிக்கொண்டே இருக்கும். இளைய சகோதர சகோதரிகள் இருக்கமாட்டார்கள்.
அப்படி இருந்தாலும் பிரச்சினை தான். கல்வியில் விருப்பம் இருக்காது. காமத்தின் மீது தீவிர ஈடுபாடு
இருக்கும். நல்ல துணிவுடன் இருப்பார். எந்த காரியத்திலும் தடைகள் இருந்து கொண்டே இருக்கும்.
பரிகாரம் ராமேஸ்வரம் தான்.
5 இல் சனி இருந்தால் காதலில் தோல்வி ஏற்படும். கடுமையான புத்திர தோஷம் ஏற்படும். வருமான
குறைவு ஏற்படும். மனதில் நிம்மதி இருக்காது. ஐந்தில் சனி இருப்பவர் வில்லங்க பார்ட்டியாக
இருப்பார்கள். உணர்ச்சி வசப்படகூடியவர்கள். ஐந்தாம் வீடு புத்திர ஸ்தானத்தை குறிப்பதால் புத்திர
தோஷம் ஏற்படும். திருமணத்திற்கு முன்பும் பின்பும் ராமேஸ்வரம் செல்ல வேண்டும்.சிலர் நபர்களை
நீங்கள் பார்த்து இருக்கலாம். தங்கள் பிள்ளைகளுக்கு கொள்ளி போடுவார்கள். அவர்களின்
ஜாதகங்களில் எல்லாம் ஐந்தாம் வீட்டுடன் சனி சம்பந்தப்பட்டு இருப்பார். இதற்க்கு தகுந்த பரிகாரம்
ராமேஸ்வரம் தான். ஐந்தாம் வீடு குலதெய்வத்தை குறிப்பதால் கிராம தேவதையை வணங்கலாம். இந்த
ஜாதகருக்கு ஆண் குழந்தைகளால் பலனில்லை. 5 ல் சனி இருந்தால் கடுமையான திருமணத்தோஷம்
என்றும் கூறுவார்கள்.
கன்னி ராசியில் சூரியன் இருக்கும் ஜாதகர்கள், தரணி மெச்சப் புகழ் பெற. அதிலும் முக்கியமான
ஸ்திரிவர்க்கத்தினரால் மெச்சப்பட ஆசைப்படுவார்கள். அதற்காக அதிகமாக உழைத்து
நாகரிகப்பொருட்களையும். சுக சௌக்கியமான பொருட்களையும் சேர்ப்பார்கள். சூரியனோடு
அஸ்தங்கதமான கிரஹம் சேர்ந்திருந்தால், (இந்த ஜாதகத்தில் எப்படி என்று ஜோதிடரை அணுகி
தெரிந்துக் கொள்ளவும்) வாழ்வின் ஒரு காலத்தில் நீண்ட கால நோய் வாய்ப்படுவார்கள். ஜாதகரின்
தந்தை புத்திசாலித் தனத்திற்காக பிறரால் அறியப்பட்டவர். எல்லோரது ஆதரவையும்
பெற்றவராயிருப்பார். ஜாதகரும் இது போல் வளமும், பிறரின் உதவியும் ஆதரவும் பெறுவார்.
சந்திரன் 3-ல் இருந்தால் நல்ல நிலையில் இருந்தால் உடல் வலிமையையும் ஆற்றலையும் தருவார்.
சகோதர சகோதரிகளை ஆதரிப்பார் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். மூன்றாவது வீடாக
இருப்பதால் அடிக்கடி குறுகிய பயண செய்ய வைப்பார். வாகனம் வசதி கிடைக்கும் சந்திரன் கெட்டால்
அனைத்தும் எதிர்மறையாக இருக்கும்.
குரு வக்கிரம்
குரு வக்கிரம் பெற்றால் பல இன்னல்கலைத்தரும் பாதக, மாரகாதிபதியாகியிந்தால் மாரகத்தையும்.
அரசு வகை தண்டனைகள் கிட்டும். தெழில்வகை யில் பல சங்கடங்கலைத் தருவர். கோட்சாரத்தில்
குரு வக்கிரம் பெறும் காலத்தில் மிக எச்சரிக்கையு டன் இருப்பது அவசியம். சுய கௌரவம் பாதிக்கும்.
மறைமுக விஷயங்கள் அம்பலம் ஆகும். பிழைப்பிற்காக வெளியூர் செல்ல நேரிடும். ஜாதகரின்
எதிர்பார்ப்புக்கு ஏற்றது போல் குழந்தைகள் இருக்க மாட்டார்கள். நெருக்கடியான நேரத்தில் ஜாதகரின்
குழந்தைகள் பிரிந்து செல்வார்கள். இல்லற வாழ்க்கைக்கு பிறகே ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும்.
உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது. கிடைத்தாலும் தாமதமாக கிடைக்கும். தன்னுடைய குருவிடம்
இருந்து வித்தையை முழுமையாக கற்றுக் கொள்ள முடியாது. எந்த ஒரு விஷயத்திலும் பல முறை
யோசித்த பிறகே வெற்றி கிடைக்கும். குழந்தை பிறப்பு தாமதமாக கிடைக்கலாம். ஜாதகருக்கு மதிப்பு,
மரியாதை,சற்று குறைவாகவே கிடைக்கும். ஜாதகரும் மற்றவருக்கு மதிப்பு,மரியாதை,உபசரிப்பு
போன்றவற்றை சற்று குறைவாகவே தருவார்.
வக்கிரம் பெற்று தீமையான பலனை செய்தால் ஜாதகர் தனது வாழ்க்கையை தானே கெடுத்துக்
கொள்ளும் நிலை ஏற்படும். நேர்மையான வழியில் நடப்பதை விட்டு விட்டு குறுக்கு வழியை தானே
தேர்ந்தெடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார். தனிமையை விரும்பும் சூழ்நிலைக்கு வந்து விடுவார்.
மனதில் உள்ளதை வெளியே சொல்லவும் தெரியாது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகும்
சூழ்நிலை வரும். எதையும் போராடி பெரும் நிலை வரும். வளரும் சூழ்நிலை சிறப்பாக இருக்காது.
சிந்தனை செய்யாமல் செயல்களை செய்துவிட்டு பிறகு வருந்தும் தன்மை ஏற்படும். நல்ல நண்பர்கள்
அமைய மாட்டார்கள்.
சனிக்கு 5-ல் ராகு நின்றாலும் , ராகுவிற்கு 5-ல் சனி நின்றாலும் ராஜ யோகம் அமையும்
சந்திரனுக்கு 4-ல் சுக்கிரன் நின்றால் பொருள் கிட்டும் ,கன்று காலிகள் ,வாகனம் கிட்டும் .
லக்னாதிபதி லக்னத்தில் அல்லது 2 ல் அல்லது 3 ல் முதலில் ஆண் குழந்தை என்பது பொது விதி.
லக்னாதிபதியுடன் புதன் கூடினால் ஜாதகரின் தலைச்சன் கபெண்ணாக இருக்கும் என்பதையும்
கருத்தில் கொள்ள வேண்டும். ஜாதகத்தில் லக்னாதிபதியே பலம் வாய்ந்தவர். துள்ளியமான
கணிப்புக்கு ஜாதகரின் வாழ்க்கைத் துணை ஜாதகத்தையும் கொண்டு தான் கணிக்க வேண்டும்.
துலாம் புதன்
வக்கீல்,பிஸினஸ்மேனேஜ்மெண்ட்,டெக்ஸ்டைல்,ஆட்டோமொபைல், நகை வடிவமைப்பு.
செவ்வாயின் சுபத்தன்மை
செவ்வாய் இயற்கையில் கொடியவனானாலும் ரிஷபத்தில் பூர்ணமதியுடன் சேந்து இருந்தால்
சுபனாவான்.
ராகு திருடன், தாழ்ந்த ஜாதியில் பிறந்தவன், கருப்பு நிறமுடையவன், கால், அபஸ்மார ரோகம், சர்ப்ப
பயம், இவைகட்குக் காரகன். அற்பனுமாவான், குஷ்ட ரோகம், சிரை, பேதி, வைசூரி, பண்டங்களில்
உருசியின்மை, புழு, பூச்சிக்களால் நோய் இவைகளைக் கொடுப்பவன். யானை ராகுவின் திசையிலோ,
புத்தியிலோ அல்லது கோச்சார காலங்களிலோ, பிற்பகுதியில் (பலனை) ஐஸ்வரியத்தை கொடுப்பார்.
ஒருவருடைய ஜாதகத்தில் ராகு பலமுடையவானாகி இருந்தால் சக்ரவர்த்தியாய் இருத்தல் முதலிய
மேன்மையை அளிப்பவனாவான்.
தனுசு, மீனம் ஜனன லக்கினமாக அந்த ஸ்தானத்தில் குருபகவனிருந்தால், வெகு பொருள் சேகரித்து
யோகவானா யிருப்பான் என ஜம்புமகாரிஷி வாக்கியம் நூலில் கூறப்பட்டுள்ளது
விருச்சிக வியாழனைப் போல கடக, மீன ராசிகளில் உள்ள வியாழன் பலன்கள் தருவதில்லை. (கடகம்
வியாழனின் உச்சவீடாக இருந்த போதிலும்.). கடக, விருச்சிக, மீன ராசிகளில் வியாழன் இருக்கப்
பிறந்தவர்களைப் புற்றுநோய் தாக்கும் அபாயமுண்டு.
குலதெய்வ குற்றம்
பொது கருத்து: ஜனன ஜாதகத்தில் மேஷம், சிம்மம், விருச்சிகம், மீனம் ராசிகளில் சுக்கிரன் இருக்கப்
பிறந்தவர்கள் குலதெய்வ குற்றத்தை சுமந்து பிறந்தவர்கள். முன்னோர்களால் குலதெய்வ வழிபாடு
இடைநிறுத்தம் செய்யப்பட்டதால் தெய்வத்தின் பரிபூரண ஆசி கிடைக்காமல் சுக்ரனின் காரகத்துவ
மாகிய சுகபோகம் உட்பட எந்தவொரு பலன்களும் கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருப்பர். உடன்
உடல்பலம் மனபலம் குன்றிய வாரிசுகள் சங்கிலித்தொடராக பிறந்துகொண்டிருக்கும். குலதெய்வத்தை
தேடிச்சென்று மீண்டும் வழிபாட்டினை தொடரும் குடும்பங்கள் குலதெய்வ குற்றம் மாறி சுபிட்சமான
வாழ்வு வாழ ஆரம்பிப்பதைக் கண்கூடாக பார்க்க முடியும்.
ராம தயாளுவின் சங்கீத நிதி என்னும் நூலில் இருந்தும், எஸ்.பி. சுப்ரமணியம் எழுதிய ஜோதிட
சித்தர்களின் நுட்பங்கள் பக்கம் 68 இல் இருந்தும்
இரண்டாம் அதிபதி மூன்றில் இருப்பது: தைரியமிக்கயவர், நற்குணமுடையவர் - முன்னேற வேண்டும்
என்ற ஆவல் உள்ளவர். அனைவராலும் கவரப்படுபவர். பெண் என்றால் ஆண்களாலும், ஆண் என்றால்
பெண்களாலும் விரும்பப்படுவார்கள். மூன்றாம் அதிபதி இரண்டில் இருப்பது உறுதியான, உயரமான உடல்
வாகுடையவர். சோம்பேறி, செல்வம் சேரும், பெண்களால் நன்மை பெறுபவர்.
ஏழில் சூரியன்
ஜென்ம லக்கினத்த்ற்கு 7-ல் சுரியநிருந்தால் தகப்பனைவிடக்க்காமி அபயசசு முதலியன உடைய தாரம்
வாய்க்கும் . ஜாதகன் பிறந்த ஜன்ம லக்கினத்திற் கேழில் சூரியனிருந்தால் அதமத்தன்மை ,
அபகீர்த்தி , தகப்பனைவிட அதிககியாதி , சிவாத சியாமள வர்ண சரீரம் : சிவந்த தலைமயிர் ; சிவந்த
கண் ; ரத்தபித்த சரீரம் அல்லது முகரோகமுடைய தன்மை மேலும் சபல சித்தம் வெகு பேச்சு , சம
இடை , சம ஸ்தனம் சீக்கிர ச்கலனம் ,வெகு சல்லியம் , ராஜஸ குணம் ,பான்சித்தியம் பிதுரு சுகம்
இவைகளுடைய களத்திரம் வாய்க்கும்
பிதுர் லக்னம்
பிதுர்லக்னம் ஒன்பதாவது வீடாகிய சிம்மம் ஆகும்.
எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் செவ்வாய் நீச்சமாகி 6,8,12 ஆகிய இடங்களில் இருக்க வேண்டும்.
அதேபோல் 6,8,12 ஆகிய கிரகங்களுடன் சேராமலும் இருக்கவேண்டும்.
சிம்மத்தில் இருந்தால் மனைவி மூலம் நிறைய வருமானம் வரும்.இவரை விட இவர் மனைவி
புகழ்பெற்றவராக இருப்பார்.பெண் குழந்தைகள் பிறக்க வாய்ப்பு அதிகம்.
ஜனன ஜாதகத்தில் கேது பகவான் நீசம் பெற்றிருந்தால் ஜாதகர் மாந்தீரிக தொல்லை் தாய் வழி உறவில்
நன்மை உண்டாகாது ஆன்மீக பணியில் ஈடுபட்டு ஆன்மீக துறையில் தலைமை பதவி சில காலம்
உண்டாகும்.
சுக்கிரனுக்கு 4 ல் இராகு இருந்தால் சோர கற்பம் உண்டாக காரணமாக இருக்கிறது.
செவ்வாய், சனி சேர்க்க பெற்றவர்கள் ரத்த தானம் செய்வது நல்ல பலன்களை அளிக்கும். அதேபோல்
அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு முதலுதவி அளிப்பது போன்ற செயல்களில்
ஈடுபடலாம்.உயிர்ப்பலியை எதிர்க்கும் பிரசாரங்கள், அமைப்புகள், தன்னார்வத் தொண்டு
நிறுவனங்களில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்படலாம். ஆஞ்சநேயர், சரபேஸ்வரர் வழிபாடு
ஆகியவை செவ்வாய், சனி சேர்க்கையால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும். உண்மையிலேயே
ஞானியாக வாழ்ந்து, மக்கள் நலனில் அக்கறை கொண்டு, அவர்கள் துயரைப் போக்க செயலாற்றிய
சித்தரின் ஜீவ சமாதிக்கு சென்றும் வழிபடலாம்.
சூரியன், சந்திரன், செவ்வாதன், குரு, சுக்கிரன், சனி இவர்களுக்கு மாத்திரம் மேஷம், ரிஷபம்,
மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனமென்னும்
பன்னிரண்டு ராசிவீட்டில் அவரவர்க்கிசைந்த ஷேத் ண்டு. ஆனால் இராகு, கேதுக்களுக்கு மாத்திரம்
சொந்த ராசி வீடில்லை. ஆகையால், அவ்விருவரும் தாங்களிருந்த இச்தானபலனும்
தங்களுடனிிரகங்களின் சேர்க்கை பலனும் என்னென்ன விதமா இருக்கின்றதோ அந்த விதமாக சுப
பலனையோ அசமயோசிதமாய்த் தருவார்கள். இந்த ஜாதகத்தில் ராகுருச்சிகம் ராசியிலும், கேது
ரிஷபம் ராசியிலும் உள்ளது.
ஒரு தம்பதியினருக்குக் குழந்தை பிறக்குமா? பிறக்காதா? இதனை சப்தாம்சம் (D-7) எனும் சக்கரத்தால்
அறியலாம்.
ஒற்றை படை ராசி வீட்டில் உள்ள கிரகம் , ஒற்றைப்படை ராசியில் இருந்து துவங்கும். அதன் இரட்டை
படை வீட்டில் உள்ள கிரகம் அந்த ராசியின் 7-வது இடத்தில் இருந்து துவங்கும்.
சப்தாம்சத்தின் 7 ரசங்கள் :-
கசப்பு, பால், தயிர், நெய், கரும்பு, தேன், தூய நீர், ஆகியன சப்தாம்சத்தின் 7 ரசங்கள். இவைகள்
முறையே, இந்த வரிசையில் தான் சப்தாம்சத்தின் ஒற்றைப்படை ராசியில் இவை துவங்கும்.
இரட்டை படை ராசியில் இந்த 7 ரசங்கள் தலைகீழ் வரிசையாக வரும், அதாவது, தூய நீர், தேன்,
கரும்பு, நெய், தயிர், பால், கசப்பு என்ற வரிசையில் வரும்.
முதல் குழந்தையை 7-க்கு 11-ஆம் வீடான 5-ஆம் வீட்டை கொண்டு அறிய முடியும். களத்திரம் (7),
அதன் மூலம் அடையும் லாபம் (11) குழந்தை(5). இது முதல் மனைவி மூலம் பெறும் குழந்தைக்கான விதி,
இரண்டாவது மனைவி என்பது 2-ஆம் வீட்டைக் கொண்டு காணலாம். இரண்டாவது மனைவி மூலம்
பெறும் முதல் குழந்தையை 2-க்கு 11-ஆம் வீடான 12-ஆம் வீட்டை கொண்டு அறிய முடியும்.
புதன், சனி மற்றும் / அல்லது சுக்கிரன், சப்தாம்ச லக்கினத்தில் இருப்பின் குழந்தை பிறப்பு மறுக்கப்படும்
அல்லது பழங்கால பேரின்பம் (PORGENIC BLISS) எனப்படும். கடந்த பிறவியில் எந்த கர்ம வினையையும்
கொண்டு வராதவர்கள் / கர்ம வினை இல்லாதவர்கள் இவரே ஆவர். புதன், சனி, கேது இவை அலி /
திருநங்கை கிரகங்கள், இவை D-7 லக்கினத்தில் இருப்பின் குழந்தை பிறப்பு மறுக்கப்படும். இவற்றுடன்,
சுக்கிரன் D-7 லக்கினத்தில் அல்லது அதன் திரிகோண இடத்தில் இணையும் போது, அந்த ஜாதகர்,
அதிகப்படியான பாலியல் சந்திப்புகளில் மூழ்கியதால் அவருக்கு சந்ததி உருவாவதற்கான வாய்ப்பு
குறையும்.
ஒரு ஜாதகத்தில், பெண்களுக்கு 9 ஆம் வீடும், ஆண்களுக்கு 5 ஆம் வீடும் மட்டும் தான் பிறப்பின்
மகத்தான வெற்றியை பறைசாற்றும். 9-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் மற்றும் குரு இருப்பின் நிறைய
குழந்தை பாக்கியம் உண்டென்பதை கொள்ளலாம். இவைகளே ஆண் வாரிசை அளிக்கும் கிரஹங்கள்
ஆகும். குழந்தை தரும் கிரகங்களும், குழந்தை மறுப்பு கிரகங்களும் D-7 லக்கினத்தில் இருப்பின்,
சிறிது கால தாமதத்திற்குப் பின் குழந்தை பாக்கியம் பெறும் நிலை உண்டென்று அறியலாம்.
சப்தாம்சம் எனும் D-7 சார்ட்டின் , 9-ஆம் வீட்டில் சனி மற்றும் செவ்வாய் இருப்பின்:-
1. இம்மாதிரி அமைப்பு, ஒரு தத்து புத்திரர் உண்டு என்றுதான் சுட்டி காட்டப் படுகிறது.
3. மேலும் இவ்வமைப்பு, இந்த ஜாதகரின் மூலம் அல்லாது வேறு ஒரு உறவினர் மூலம் குழந்தை
பிறக்க வாய்ப்பு ஏற்படும். அதற்கு இவரின் சந்ததி உருவாகும் நிலை பெறாமல் இருப்பதாலோ
அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்தினாலோ அது அவ்வாறு அமையும்.
ஆண் ஜாதகருக்கு 5-ஆம் இடமும், பெண் ஜாதகருக்கு 9-ஆம் இடமும் குழந்தைகளை கட்டுப்படுத்தும்
வீடுகளாகும். இவற்றிற்கு முறையே வரும் 6- ஆம் வீடும், 10-ஆம் வீடும் விரைய பாவமான, மாரக
வீடாகும். இதன் அதிபதிகள் 5 மற்றும் 9-ஆம் வீட்டுடன் முறையே தொடர்பு கொள்கையில், பிறக்கும்
குழந்தைக்கு மாரகம் எனும் அரிஷ்டம் ஏற்படும். அதாவது முறையே 5-க்கு 6-ம், 6-க்கு 7-ம் மற்றும் 9-க்கு
10-ம் போன்ற அமைப்புகளால், பால அரிஷ்டம் ஏற்படும் நிலை உருவாகும்.
ஒருவரின் ஜாதகத்தில், சப்தாம்சம் எனும் D-7 இன் 11-ஆம் வீடு பாவிகளால் கெட்டுப்போய் இருப்பின்,
அவரின் சந்ததி கிடைக்கும் வாய்ப்பை மற்றவர்களின் பொறாமையால் மறுக்கப்படும்.
ஒருவரின் ஜாதகத்தில், சப்தாம்சம் எனும் D-7 இன் 11-ஆம் வீடு ராகுவால் பாதிப்பு அடைந்திருந்தால்,
அவர் மிகவும் எச்சரிக்கையுடன் இருத்தல் நன்று. கெட்ட கண் திருஷ்டி, பொறாமை போன்றவை நீங்க ,
காளி மாதாவிற்கு பூசணிக்காயை பலி தருதல் அவசியம். ஒவ்வொரு வருடமும், உத்தராயணகாலத்தில்
ஒருமுறையும், தக்ஷிணாயனக் காலத்தில் ஒரு முறையும் பலி கொடுப்பது அவசியம்.
ஒருவரின் ஜாதகத்தில், சப்தாம்சம் எனும் D-7 இன் 11-ஆம் வீடு சூரியனால், பாதிப்பு அடைந்திருந்தால்,
அவர் குழந்தையை ஏதேனும் ஒரு நோய் தாக்கக்கூடும். அதற்கு, சூரிய எந்திரம் அணிவது நல்லது.
1) பதினோரு லக்னங்களில் ஏதேனும் ஒன்றில் பெண் பிறந்திருந்தால் (மேஷம் தவிர,) துலாம் ராசியில்
சனி 7 ஆம் வீட்டில் சூரியன் மற்றும் செவ்வாய் மற்றும் சந்திரன் மற்றும் ராகு 1 ஆம் வீட்டில் இருந்தால்
ஜாதககியின் வாழ்க்கையில் எல்லா வசதிகளையும் பெறுவாள். மேஷ லக்னத்துடன், முடிவுகள்
தலைகீழாக மாறும்.
2.) 7 ஆம் வீட்டில் சந்திரனும் ராகுவும் பெண்ணை புத்திசாலியாக்கும் மற்றும் வியாழன் 8 ஆம் வீட்டில்
இருந்தால், அவளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
3 ) 4 ஆம் வீட்டில் கேது, வியாழன் மற்றும் சுக்கிரன்; பெண் அனைத்து வார்த்தை சுகங்களையும்
அனுபவிப்பாள், ஆனால் அவள் இறக்கும் நேரத்தில், அவளுக்கு உயிருடன் இரத்த உறவு இருக்காது.
4.) ஒரு பெண் ஜாதகத்தில் கேது - செவ்வாய் இணைவது ஒரு சிறந்த யோகமாக கூறப்பட்டுள்ளது,
ஏனெனில் கேது, ஆன்மீக மற்றும் மத கிரகமாக இருப்பதால், செவ்வாய் கிரகத்தின் அனைத்து தீய
விளைவுகளையும் நீக்குவார்.
5.) சிம்மம் லக்னத்தில் பிறந்த பெண் ராகுவைக் கொண்டு, கவர்ச்சியாகவும், அழகாகவும், சுகமான
திருமண வாழ்க்கையை அனுபவிப்பர்கள்.
6.) ராகு & கேதுவுடன் கூடிய சூரியன் / சந்திரன் விளைவு எப்பொழுதும் பாதிப்பையோ தரும்.(
அனுபவத்தில் கணவனால் அதிக துன்பங்களைத் தருகிறது. ) ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7 ஆம்
வீட்டில் சூரியன் - ராகு அதிக தீமையைத் தருவதில்லை. குறிப்பாக வடக்கு முனையாகவும், ராகு
மற்றும் சூரியன் சிம்மத்தில் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருப்பதன் மூலம் சேர்க்கை சாதகமாக
உள்ளது. 5 வது அல்லது 12 ஆம் வீட்டில் இணைவது சிறப்பானது. உயர் அந்தஸ்தில் உள்ளவரை
திருமணம் செய்து கொள்வார். ஆரோக்கியத்தையும் அனுபவிப்பாள். சிம்மத்தில் ராகு மற்றும் சூரியன்
இந்த சூரியன்-ராகு இணைவு 1, 3 ல், 2-4-8-9 அல்லது 11 ஆம் வீட்டில் இருப்பாது நல்லது.
7.) 1, 7 அல்லது 9 ஆம் வீட்டில் புதன் /ராகுவுடன் பிறந்த பெண்ணுக்கு செல்வம் அந்தஸ்து பெற்ற
கணவருக்கு திருமணம் நடக்கும்.
8.) லக்னத்தில் உள்ள ராகு நல்ல துணையை உருவாக்குகிறார், 2 ஆம் வீட்டில் ராகு ஒரு புத்திசாலி
துணையை உருவாக்குகிறார். 7-ல் ராகு இருப்பதால், வாழ்க்கையில் திருமணம் தாமதமாக நடக்கும்,
ஆனால் திருமணமாகாமல் வாழ முடியாது. 9-ல் உள்ள ராகு அவளை மதவாதியாக மாற்றும்.
9.) மேஷத்தில் சுக்கிரன் மற்றும் 10 ஆம் வீட்டில் அல்லது 10 ஆம் ராசியில் (மகரம்) ராகுவுடன் பிறந்த
பெண்; பல முறை திருமணம் செய்து கொள்வர்கள்
10.) சூரியன், செவ்வாய் மற்றும் புதன் (மூன்றும்) ராகு அல்லது கேதுவுடன் இணைந்து, 7 ஆம் வீட்டில்,
அவர் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பார்கள்.
11.) சூரியன், புதன், செவ்வாய் மற்றும் வியாழன் (நான்கும்) ராகு அல்லது கேதுவுடன் 4 ஆம் வீட்டில்
அல்லது 7 ஆம் வீட்டில் இணைந்திருப்பது பெண்ணை விதவை அல்லது விபச்சாரியாக மாற்றும்.
12.) மேஷம் அல்லது விருச்சிகத்தில் 7 ஆம் வீட்டில் ராகு நன்மையான அம்சங்கள் இல்லாதிருந்தால்,
விதவையின் அறிகுறியாகும்.
14.) 8-ல் உள்ள செவ்வாய் விதவை & கேது 8 ஆம் வீட்டில் இருக்கும்போதும் இதே நிலைதான். செவ்வாய்
மற்றும் கேது (இருவரும்) 8 ஆம் வீட்டில் இருந்தால், வலுவான பலன் வாழ் நாள் வரை பாதிப்பு
உறுதியானது. அவள் ஒரு விஷ்கன்யா யோகம். (ஒரு விஷப் பெண்).
16.) கணவருடன் மகிழ்ச்சியான நல்லுறவுக்கு 7 ஆம் வீட்டில் ராகு அல்லது கேது சாதகமாக இல்லை. 7
ஆம் வீட்டில் ராகு அல்லது கேதுவுடன் யுரேனஸ் இணைந்திருப்பது விதவையின் அறிகுறியாகும்.
17 ) ஏழாம் வீட்டில் ராகு அல்லது கேது இணைந்தால் இரண்டாவது திருமணம், ராகு அல்லது கேதுவின்
சேர்க்கை 9 ஆம் வீட்டின் அதிபதியான செவ்வாய் அல்லது திருமணம் இல்லாமல் இருக்கலாம்.
18.) 12 ல் உள்ள கேது ஒரு பெண்ணுக்கு பிரசவ நேரத்தில் பாதிப்பைத் தரும். 9-ல் உள்ள கேதுவும்
மோசமானவர் மற்றும் தந்தையின் மகிழ்ச்சியை பாதிக்கிறார். அதேபோல 4 ல் உள்ள கேதுவும்
நன்மையை தருவதில்லை - தாய்மை மகிழ்ச்சி. சில சந்தர்ப்பங்களில், அவள் மாற்றாந்தாய் கையால்
பாதிக்கப்படலாம்.
20.) 8 ல் உள்ள ராகு மோசமான நிதி நிலையுடன் கூடிய பெரிய குடும்பத்தைக் குறிக்கிறது. அவளுக்கும்
பிரச்சனைகள் இருக்கலாம் (செக்ஸ் - சாத்தியம்)
21.) சந்திரன், செவ்வாய் மற்றும் சனியுடன் ராகு இணைந்த பெண் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளைப்
பெற்றெடுக்கும்.
24. ) 5 ல் உள்ள ராகு சேர்க்கை சனியால் கர்ப்பப்பை நோய்கள் உண்டாகும், குழந்தைப்பேறு இருக்காது.
கருப்பையில் அழிக்கப்பட்ட கருத்தரிப்புகளின் எண்ணிக்கையை இவ்வாறு அறியலாம்: சுக்கிரன் - 6;
வியாழன் - 5 ; புதன் - 4 , செவ்வாய் - 3 சந்திரன்- 2; மற்றும் சன் - 1 . கருவை அழிக்கும்
25.) துலாம் லக்னம், மேஷத்தில் ராகு. செவ்வாய் துலாம் அல்லது மேஷத்தில், பெண் தனது முதல்
கணவனை விட்டு வெளியேறி, இரண்டாவது திருமணம் செய்துகொள்வர், ஒழுக்க ரீதியாக
பாதிப்பைத் தரும்.
26.) சந்திரன், வியாழன் மற்றும் ராகு ரிஷப திரிகோணத்தில் நெப்டியூன், அல்லது மிதுனத்தில் ராகு
சூரியன் மற்றும் யுரேனஸ் அல்லது மிதுனத்தில் ராகு, கடகத்தில் சுக்கிரன் மற்றும் 7 ஆம் அதிபதி
வியாழன் திரிகோணம் 7 ஆம் வீட்டின் உச்சத்தில் சனி அல்லது மகரத்தில் ராகு சுக்கிரன் மற்றும்
நெப்டியூன். அல்லது சிம்ம கேந்திரத்தில் ராகு செவ்வாய் மற்றும் சதுரு ஆனால் வியாழன் 7 ஆம் வீட்டு
அதிபதி சூரியன், சுக்கிரன் & வியாழன் லக்னத்தில் இருந்தால் பெண்ணுக்கு திருமணம் மகிழ்ச்சியாக
அமையும்.
27.) கடகத்தில் ராகு, நெப்டியூன் அல்லது, 7 ஆம் வீட்டில் இருந்தால் விதவையாவள், தனுசு
கேந்திரத்தில் ராகு சனியும், அல்லது 7 ஆம் அதிபதி வியாழன் 8 ல் , பெண் திருமணமான சிறிது
காலத்திலேயே விதவையாவள். சனியின் தட்சத்திரம் அனுசம் உள்ள ராகு விதவையை
ஏற்படுத்துகிறது. சிம்மத்தில் ராகு சந்திரன், அல்லது 7 ஆம் அதிபதி செவ்வாய் கேந்திரத்தில் சனி,
நெப்டியூன் 7 ஆம் வீடு அல்லது மகரத்தில் சந்திரன் சேர்க்கை வியாழன் மிகவும் இளம் வயதிலேயே
விதவையாகி விடுவார். கன்னி கேந்திரத்தில் ராகு சூரியன் மற்றும் சனி அல்லது 7 ஆம் வீட்டின்
ஆட்சியாளர் செவ்வாய் மற்றும் சனி மற்றும் யுரேனஸ் இணைந்து: தாமதமான திருமணம் ஆனால் நல்ல
ஒழுக்க குணம்.
28.) துலாத்தில் சூரியன் சனி ராகு அல்லது 7 ஆம் அதிபதி கேந்திரத்தில் செவ்வாய் சுக்கிரன் மற்றும்
யுரேனஸ் இணைந்திருந்தால் தாமதமாக திருமணம் ஆனால் நல்ல தர்ம குணம் உள்ளவர்கள்.
29.) மகரம் அல்லது கடகத்தில் ராகு யுரேனஸ் அல்லது 7 ஆம் வீட்டில் அல்லது யுரேனஸில் சந்திரன், 7
வீட்டில் செவ்வாய் சந்திரன் யுரேனஸ் கேந்திரத்தில் சூரியன், புதன் மற்றும் சனி திருமணம்
அமைவதில்லை. ரிஷபம் அல்லது துலாம் லக்கினங்களுக் மட்டுமே சாத்தியமாகும்.
30 ). மகர ராசியில் ராகு, கடகத்தில் சந்திரன், 7 ஆம் அதிபதியும் வியாழன் 6 ஆம் வீட்டில் இருந்தால் -
மாதவிடாய் பிரச்சனையால் குழந்தை பிறக்காது.
31.) தனுசு ராசியில் சந்திரன் செவ்வாய் மற்றும் ராகு யுரேனஸ் மிதுனத்தில் சேர்ந்திருந்தால் இளம்
வயதிலேயே திருமணம் செய்துகொள்வார், ஆனால் கணவனால் கைவிடப்படுவார்.
32.) மகர ராசியில் உள்ள ராகு 7 ஆம் வீட்டில் சனி வாழ்க்கையில் பிற்காலத்தில் திருமணம்.
33.) தனுசு ராசியில் ராகு, சூரியன் திரிகோணம் நெப்டியூன், கேந்திரத்தில் செவ்வாய் சந்திரன்,
சேர்க்கை , 7 ஆம் வீட்டு அதிபதி கடகத்தில் கணவனின் குறையால் திருமண சுகம் மறுக்கப்படும்.
34.) ரிஷப லக்னம் லக்கினத்தில் சனி, விருச்சிகத்தில் ராகு, சிம்மத்தில் சூரியன் மற்றும் சுக்கிரன், கும்ப
ராசியில் 7 ஆம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய் சனி, மகிழ்ச்சியற்ற திருமண வாழ்க்கை,
ஒழுக்கக்கேடு. நிலையான சண்டைகள்
35.) மகர லக்னம், ரிஷபத்தில் செவ்வாயுடன் ராகு, பெண்மணிக்கு கர்ப்பப்பை தொந்தரவுகள் ஏற்படலாம்,
இதன் விளைவாக அவள் கர்ப்பமாக இருக்க மாட்டாள். வியாழனால் பார்க்கப்பட்ட அல்லது
தொடர்புடைய, அவள் குழந்தைகளைப் பெறலாம், ஆனால் அவர்கள் அனைவரும் இறக்கக்கூடும்,
இதனால் அவளுடைய வாழ்கை மகிழ்ச்சியற்றது. ராகுவிற்குப் பதிலாக கேது இருந்தால், குழந்தை
பிறப்பு மறுக்கப்படாது, ஆனால் குழந்தைகள் மகிழ்ச்சிக்கு பதிலாக மகிழ்ச்சியற்றவர்களாக
இருப்பார்கள். 5 ஆம் வீட்டில் ராகு மற்றும் செவ்வாய் இருந்தால் அல்லது செவ்வாயின் நட்சத்திரத்தில்
ராகு இருந்தாலும் பெண்மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் ஏற்படும்.
36.) பெண் ஜாதகம், மகர லக்னம். வியாழனுக்கு 5-ல் சந்திரனும், சந்திரனுக்கு 5-ல் ராகுவும் இருந்தால்
குழந்தை பிறப்பு மற்றும் விஷயங்களின் வாத நோயை ஏற்படுத்தும்.
அஸ்தங்கதம்
சூரியன் மற்ற கிரஹத்துடன் இணையும் போது ஏதேனும் ஒரு விளைவினை ஏற்படுத்தவே செய்கிறது.
சூரியன், சந்திரன் இருவரும் ராகு அல்லது கேது, இவ்விருவரில் ஏதேனும ஒரு கிரஹத்துடன் இணையும் பொழுது
கிரஹங்களாகும்.
இந்த அஸ்தங்கதபாகையினை எல்லாம் எவ்வாறு ஞாபகம் வைத்துக்கொள்வது?
இதற்கு அடியேன் ஒரு தீர்வு கொடுக்க இருக்கிறேன்.
உட்ச வீட்டினை காணவேண்டும். 9 பாகையில் தொடங்கி வரிசையாக இரண்டு இரண்டாக கூட்ட வேண்டும்.
அவ்வளவே!!
அதாவது மீனத்திற்கு அடுத்து கடகம் அடுத்தது கன்னி அடுத்ததாக துலாம் கடைசியாக மகரம் ஆகும்.
இந்த ராசிகளில் உட்சம் அடையும் கிரஹத்தினை வரிசையாக கொண்டு 9 பாகையிலிருந்து இரண்டு இரண்டாக
கூட்ட அஸ்தங்கத கிரஹமும், பாகையும் கிடைக்கும்.
மீனம் – சுக்கிரன் – 9 பாகை
கடகம் – குரு– 11 பாகை
கன்னி – புதன் – 13 பாகை
துலாம் – சனி– 15 பாகை
மகரம் – செவ்வாய் – 17 பாகை
அஸ்தங்கம் பற்றிய குறிப்புகள்.
1. மேலே கூறப்பட்ட பாகைகளில் சூரியனுக்கு முன்னும் பின்னும் கிரஹங்கள் சஞ்சரிக்கும் போது அஸ்தங்கதம்
பாதிப்பு உண்டாகிறது.
4. மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் லக்கினங்களுக்கு செவ்வாய், குரு அஸ்தங்கத்தினால் அதிகம்
பாதிப்பு தருவதில்லை.
5. சூரியனை விட அஸ்தங்கதம் அடைந்த கிரஹம் அதிக பாகையில் இருந்தால் பாதிப்பு அதிகம் தருவதில்லை.
6. அஸ்தங்கதம் அடைந்த கிரஹம் ஆட்சி, உட்சம் பெற்றாலும், திக்பலத்தில் இருந்தாலும், சுபர்
தருகிறது.
11. சூரியனும் அஸ்தங்கம் அடைந்த கிரஹமும் வேறு வேறு ராசிகளில் இருந்து அஸ்தங்கம் அடைந்தாலும் அதில
பாதிப்பு தருவதில்லை.
12. சந்திரன் 12 பாகைக்குள் ( ஒரு திதி அளவு) இருந்தாலும் அஸ்தங்கம் அடைந்ததாக சில நூல்கள்
குறிப்பிடுகின்றன.
13. சனி அஸ்தங்கம் அடைந்தாலும் ஜாதகருக்கு ஆயுளை நிர்ணயிப்பதில் அஸ்தங்கத்தினை
எடுத்துக்கொள்ளகூடாது.
14. அஸ்தங்கதம் அடைந்த கிரஹம் ஏதேனும் ஒரு வழியில் பலம் பெற்றால் அதிக பாதிப்பினை தருவதில்லை.
அஸ்தங்கம் அடைவதினால் கிரஹங்கள் தன் இயல்பு நிலையிலிருந்து மாறி சில மாற்றங்களை உண்டாக்கிறது.
வழுக்கை விழுதல்
கண் நோய் பாதிப்பு உண்டாகுதல்
மற்றும் பல.,
மற்றும் பல.,
சூரியனுடன் சுக்கிரன் சேர்ந்து அஸ்தங்கம் அடையும் போது
மனநிறைவையே பிராதனமாக கொண்டிருத்தல்
வேடிக்கை விளையாட்டில்ஆர்வத்துடன் இருத்தல்
உறவுகளிடமே தன்முனைப்பாக இருத்தல்
புகழுடனே இருக்கவேண்டும் என விரும்புதல்
பிறரின் வாழ்க்கை ரகசியங்களை அறிய ஆர்வமாக இருத்தல்
அளவிற்கு அதிகமாக பிறருடன் ஒத்துப்போகுதல்
சிறுநீர் பிரச்சினைகளை சந்தித்தல்
தொற்றுநோயினால் அவதிப்படுதல்
மற்றும் பல,
பொதுவாக அஸ்தங்கம் அடையும் கிரஹம் தன்னுடைய பாவ பலனை சூரியனிடம் இழந்து விடும். சூரியன்
என்பது ஆத்மாவாக கூறப்பட்டுள்ளதால் ஆத்மாவிற்கு அப்பாவ பலனை அடைய பாக்கியம் இல்லை எனவும்
தீர்மானிக்கலாம். எனினும் தெய்வ பக்தி, சூரிய நமஸ்காரம், சிவ வழிபாடு போன்றவற்றின் மூலமும் நாம்
அஸ்தங்கதம் அடைந்த கிரஹத்தின் பலனை சூரிய தசா புத்திகளில் அடையமுடியும்.