Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 54

புவியில் வாழும் தாவரம் முதலான உயிரினங்கள் யாவும் ஒன்றுக்கொன்று

பயன்படுவனவாக வாழ்கின்றன. மனிதன் மட்டுந்தான்

வேறு எந்த உயிரினத்திற்கும்

பயன்படாத படைப்பாக வாழ்கிறான்.

மனிதன் இல்லையேல்

புவியில் உள்ள எல்லா உயிர்களும் மகிழ்ச்சியாக வாழும். ஆனால்

மனிதன் வாழ்வதற்கு

புவியில் உள்ள எல்லாப் படைப்புகளும் பயன்படுகின்றன.

எல்லாவறையும் அனுபவிக்கும் ஏகபோகத் தகுதியுடன் மனிதன்

படைக்கப்பட்டுள்ளதால்

அவன் கண்டிப்பாக

அந்த உரிமையின் உட்பொருளை

உணர்ந்து வாழ்வதே நீதி.

ஆதலால் இறைவனுடைய பிரதிநிதியாக

இந்தப் புவியையும் புவிவாழ் உயிரினங்களையும் காப்பாற்ற வேண்டிய

தார்மீகக் கடன்

தன்னுடையது என எவன் உணர்கிறானோ

அவனே மனிதன் - அவன் மட்டுமே மனிதன்

அவன் மட்டுந்தான் இப்புவியில் வாழும் தகுதி உள்ளவன்.


Guruvarul

கடவுள் ஏன் புலப்படுவதற்கு அரிய ஒன்றாக இருக்கிறார்?

அன்பே சிவம். அன்பெனப்படுவது மூன்று தன்மைகளைத் தன்னுள்


அடக்கியிருக்கும்.

1. தன்னை முன்னிலைப்படுத்தாமை

2. தொடர்ச்சி

3. துணிச்சல்

என்னிடத்தில் தன்னுடைய துன்பத்தை எடுத்துக் கூறிய ஒருவருக்கு


நான் 100 ரூபாய் கொடுக்க விரும்பினேன். அதை என்னுடைய
நண்பனிடம் கொடுத்து கொடுக்கச் சொன்னேன். “நான் அவரைக்
கூப்பிடுகிறேன். நீங்களே கொடுங்கள்” என்றான் நண்பன்.
“வேண்டாம் நீயே கொடுத்து விடு” என்றேன். “நீங்கள் கொடுத்ததாகச்
சொல்லிக் கொடுக்கட்டுமா” என்றான். வேண்டாம் நீ
கொடுப்பதாகவே கொடுத்து விடு” என்றேன்.

ஏனென்றால் அந்த 100 ரூபாயை நான்தான் கொடுத்தேன் என்பதை


வெளிப்படுத்தி, அதன் மூலம் பெருமை தேடுவதோ அல்லது
எதிர்காலத்தில் அவரால் ஏதும் பயன் பெறலாம் என்ற எண்ணமோ;
நன்றி எனும் விலங்கிட்டு அவரை அடிமைப்படுத்துவதோ
என்னுடைய நோக்கம் இல்லை.

இதுபோலத்தான் இறைவனும் கேட்டதை எல்லாம் கொடுக்கிறான்.


அதே சமயம் கொடுப்பவன் தான் என்பதை வெளிப்படுத்தாமல்
மறைந்தே இருக்கிறான். எவன் ஒருவன் அவனைக் கண
விரும்புகிறானோ அவனிடம் மட்டுமே தன்னை
வெளிப்படுத்துகிறான்.
இதனால்தான் மாணிக்கவாசகர் திருவாசகத்தில் சிவபெருமானைப்
பற்றிக் கூறுகையில், “புறத்தார்க்குச் சேயோன்” எனவும், “தன்
பெருமை தானறியாத் தன்மையான்” எனவும் பாடியுள்ளார்.

எப்போதும் நம்மோடு இருந்துகொண்டேயிருக்கும் ஒன்றை


நாமறிவது கடினம். வயிறு எனும் ஒன்று நம்மோடு இருப்பதை நாம்
எப்போது அறிகிறோம். பசி அல்லது வலி வந்தால்தான் வயிறு என்று
ஒன்று இருப்பது நமக்குத் தெரிய வருகிறது.

இதேபோல இறைவனும் எப்போதும் நம்முடன் இருந்துகொண்டே


இருக்கிறான். ஆன்மா தோன்றியது முதல் தொடர்ந்து
அதனோடிருந்து அதைக் காப்பாற்றிக் கொண்டேயிருக்கிறான்
இறைவன். எவ்வாறெனில் புதிதாக நடக்கப் பழகும் குழந்தை
விழுந்துவிடாமல் இருபுறமும் தன் கைகளை குழந்தைமேல்
படாமல் பிடித்தவாறு பின்னே செல்லும் தாயைப்போல் தானே
நடப்பதாகக் குழந்தை நினைத்து நடக்குமாறு நடக்கவிட்டுத்
தவறினால் தாங்கிக் கொள்வதற்குத் தன் கரங்களைத் தயாராக
வைத்தவாறு தாய் தன் குழந்தையைத் தொடர்ந்து காப்பது போலவே
சிவபெருமானும் உயிர்களைக் காக்கிறார் என்பதைத்
திருவாசகத்தில் மாணிக்கவாசகர் “புறம் புறம் திரிந்த செல்வனே
சிவபெருமானே” எனச் சிறப்பித்துப் பாடியுள்ளார். எப்போதும்
நம்முடனே இருக்கும் அந்தச் சிவம் வயிறு போல் துன்பத்தை
அதாவது வலியை ஒருபோதும் ஏற்படுத்தாமல் எப்போதும் நலமே
செய்வதால் நாம் அதை அறிவது அரிதாகிவிடுகிறது.

மனம் எது போன்றது?

மனம் என்பது ஒன்றைப் பற்றிக்கொள்ளும் அறிவுறுப்பு (Intellectual


Organ) ஆகும். ஆயிரம் பொருள் இருக்கும் அரங்கத்தில் நம் கவனம்
குறிப்பிட்ட ஒரு பொருள் மேல் செல்கிறது அல்லவா; அவ்வாறு
கவனம் செல்லும் பொருளே நம் மனம் பற்றிக் கொண்ட
பொருளாகும். ஒருவனுடைய கவனம் நல்லன மேல் சென்றால்
அதுவே அவன் செய்த நல்வினைப் பயனாகும்; தீயன மேல்
சென்றால் அதுவே அவன் செய்த தீவினைப் பயனாகும்.
நல்வினையும், தீவினையும் வேறெதுவுமல்ல. நம் மன விருப்பு
வெறுப்பே ஆகும்.

எங்கும் நிறைந்து விளங்கும் சிவம் மனதால் பற்றிக்கொள்ள


முடியாத ஒன்றாக இருக்கிறது. அதனால் அது விருப்பு
வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருக்கிறது. இதனாலே
சிவம் என்பதைச் சிலர் பரவெளி என்றும் வெட்டவெளி என்றும்
கூறுவர்.

சைவ நீதி

மனிதர்களைக் காப்பது பற்றியது மனு நீதி. எல்லா உயிர்களையும்


காக்கும் ஜீவகாருண்யம் பற்றியது உயிர் நீதி. அண்டசராசரங்கள்
முழுவதையும் காப்பது பற்றியது சைவநீதி.

ஆழிப்பேரலை போன்ற இயற்கைச் சீற்றங்களால் அப்பாவி


மனிதர்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்படுவது எவ்வாறு
நீதியாகும் எனப் பலரும் கேட்பதுண்டு.

நம்முடைய நோயை குணப்படுத்தும்போது குடலின் ஒரு


பகுதியையோ கருப்பையையோ அறுவைச் சிகிச்சை மூலம்
அகற்றுகிறோம். அவ்வாறு செய்யும்போது அந்த உறுப்புகளில்
வாழும் பல நுண்ணுயிர்கள் இறந்துபோகின்றன.

அதேபோலத்தான், பூமியைக் காப்பாற்றும் நீதியில் இறைவன்


செயல்படும்போது இயற்கைச் சீற்றங்களும், பேரழிவுகளும்
உண்டாகின்றன. இதேபோல் சூரியக் குடும்பத்தைக் காப்பதற்காக பூமி
போன்ற கோள்களையும் அண்டங்களை எல்லாம் காப்பதற்காக சில
சூரியக் குடும்பங்களையும் கூட அழிப்பதுண்டு.

இவ்வாறு அண்டசராசரங்களையும் காக்கும் நடு நீதிமானாகவே


சிவபெருமான் விளங்குகிறான். அவனுடைய நீதியே சைவ நீதி
ஆகும்.
அற்ப அறிவுள்ள மனிதர்கள் தாமே முதன்மையானவர் என்ற
கர்வத்தில் தம்மைக் காப்பது மட்டுமே கடவுளின் கடன் என
நினைந்து மேலே கூறியது போன்ற வினாக்களை எழுப்புகின்றனர்.

மனிதன் தான் வளர்ச்சி அடைவதாகக் கூறிக் கொள்கிறான். ஆனால்


அது மெய்யல்ல. வளர்ச்சி என்றால் எல்லா வளங்களும் வளர
(பெருக) வேண்டும். ஆனால் மனிதனுடைய வளர்ச்சியில் பூமியில்
உள்ள நிலத்தடி நீர் முதலான வளங்கள் யாவும் தீர்ந்து வருகின்றன.
மனித வளமாவது வளர்ந்திருக்கிறதா என்றால் அதுவும்
வளரவில்லை. மனித மனங்களில் மனக்கவலையும் உடலில்
நோய்களும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

அழகான பூமி எனும் வீடு கட்டி அதனுள் கடலும் குளமும் காடும்


மலையும் விலங்குகளும் பறவைகளும் தாவரங்களும் படைத்து
அங்கே வாடகை இல்லாமல் வாழ மனிதனைப் படைத்தான்
இறைவன். அவன் மனிதனைப் படைத்த போது எந்த நிபந்தனையும்
விதிக்கவில்லை. எந்த வளத்தையும் இது உனக்கு, இது அவனுக்கு
எனப் பங்கிட்டுக் கொடுக்கவில்லை; எந்த மண்ணையும் கோடிட்டுப்
பிரிக்கவில்லை.

மனிதனே அள்ளிக் கொண்டான் இது என்னுடையது;


என்னுடையதை நீ எடுக்கக் கூடாது. உன்னுடையதை நான்
எடுக்கமாட்டேன் என ஒழுக்க விதிகளை உருவாக்கினான். அவை
சம்பிரதாயமாக, சாத்திரமாக, சட்டமாக வளர்ந்தது. மனிதன் வகுத்த
நெறிகளைத் தாண்டும் மனிதனை இறைவன் குற்றவாளி என்றோ
பாவி என்றோ தீர்ப்பிடுவதில்லை. ஒவ்வொரு மனிதனின் மனதிலும்
உள்ள குற்ற உணர்வே அவனைத் தீர்ப்பிடுகிறது.

இந்த உண்மை அறியாதவர்களே பாவிகளை இறைவன்


இரட்சிக்கிறான் என்றும் நல்லோரை இறைவன் சோதிக்கிறான்
என்றும் கூறுகின்றனர்.
மனிதன் தன்னுடைய அறிவினால் அறியக்கூடியதை மட்டுமே
ஏற்றுக்கொள்பவனாக இருக்கும் வரை அவனால் இறைவனை
அடைய முடியாது.

மனிதன் தன்னுடைய சிறுமையை உணர்வது மிக மிக அவசியம்.


உலகிலுள்ள எல்லா உயிரினங்களும் ஒன்றுக்கொன்று
உணவாகியும், ஒன்று வாழ இன்னொன்று ஆதாரமாகியும் உணவுச்
சங்கிலியாகவும், உறவுச் சங்கிலியாகவும் ஒன்றனுக்கு
இன்னொன்று பயன்படுகின்றது. மனிதன் வாழ்வதற்கு தாவரங்கள்,
விலங்குகள் எல்லாம் தேவை. ஆனால் மனிதனால் எந்தவொரு
உயிரினத்திற்கும் பயனில்லை. மனிதன் என்றொரு உயிரினம்
இல்லாவிட்டால் இவ்வுலகில் வாழும் எல்லா உயிரினங்களும்
மகிழ்ச்சியாக வாழும். பூமியின் தன் வளங்குன்றாமல் விளங்கும்.

மனிதனைத் தவிர மற்ற விலங்குகள் நடப்பதால் அந்த வழியில்


வளரும் புற்கள் இறப்பதில்லை. மனிதன் மிதிப்பதால் அத்தடத்தில்
புல் பூண்டு முளைக்காமல் போய் பாதை உண்டாகிறது.

இவை போன்ற சிறுமைகளை உணர்ந்து பூமி வளம் பெருக வாழ்வதே


மேலென எண்ணும் மனப்போக்கு மனிதனிடம் வளரவேண்டும்.
வியாபாரப் போக்கு மனதைவிட்டு விலக வேண்டும். முக்திப்
பேரின்பமே வாழ்வின் இலக்காக மாற வேண்டும்.

எங்கும் நிறைந்த கடவுளுக்கு எப்படி ஓர் உருவம் வந்தது?

தலைச் சுற்றும் வாந்தியும் வந்தால் ஓர் எலுமிச்சம் பழத்தை


மணக்கிறோம்; மணந்ததும் நோய் குணமடைகிறது; எப்படி?
மனக்குழப்பத்தில் இருக்கும்போது ஒரு பூங்காவுக்கு அல்லது
கடற்கரைக்குச் செல்கிறோம்; மனம் இலேசாகிறது; எப்படி? சிலரைப்
பார்த்து, பேசிப் பழகினால் மனம் பாரமாகிறது; வேறு சிலரைப்
பார்த்து பேசிப் பழகினால் மனம் இலேசாகிறது; எப்படி? சிலதை
நினைத்தால் இனிக்கிறது; வேறு சிலதை நினைத்தால் கொதிக்கிறது;
எப்படி?
நாம் ஒவ்வொன்றையும் அனுபவிப்பதன் மூலம் இன்பத்தையும்,
துன்பத்தையும் அடைகிறோம். இன்பத்தையும், துன்பத்தையும்
சுற்றியுள்ள உறவும், உடலும் ஏற்படுத்தினாலும் அனுபவிப்பது
எப்போதும் மனமாகவே உள்ளது. நாவால் உண்டாலும், கண்ணால்
கண்டாலும், செவியால் கேட்டாலும் இனிமை மனதால்தான்
அனுபவிக்கப்படுகிறது. மனம் அனுபவிக்கும் இன்பத்தினாலும்
துன்பத்தினாலும் வினைகள் தீர ஆன்மா விடுதலை அடைகிறது
என்பது சைவசித்தாந்தம். சிலவற்றை அனுபவிப்பதால் ஆன்மா
விடுதலை அடைகிறது; வேறு சிலவற்றை அனுபவிப்பதால் ஆன்மா
கட்டுண்டு போகிறது (அடிமைப்படுகிறது).

ஆன்மா விடுதலை அடையக் காரணமான உருவைத் தன்


உருவாக்கித் தந்ததே எருதேறி வரும் அம்மை அப்பர் வடிவமும்,
கூத்தப் பெருமான் வடிவமும் ஆகிய சிவபெருமானின்
திருவுருவங்கள் ஆகும்.

இதுபற்றிக் கூறுகையில் திருவாசகத்தில் மாணிக்கவாசகப்


பெருமான் “ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ” எனப் பாடுகிறார்.

காரணமும் விளைவும்

காரணமும் விளைவும் பற்றிக் கூறுகையில் நாம் அது பற்றி ஆழ்ந்து


சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது. எடுத்துக்காட்டாக "காகம்
இருந்ததால் பனம் பழம் விழுந்தது" என்பதை எடுத்துக்கொள்வோம்.

1. காகம் இருக்கும்போது பனம் பழம் விழுந்ததா

2. பனம் பழம் விழும்போது காகம் இருந்ததா

3. இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தனவா

4. காகம் இருந்ததால் பனம் பழம் விழுந்ததா


இந்த நான்கில் எதன் வழி நாம் சிந்தையைச் செலுத்துவது 1. காகம்
இருக்கும் போதெல்லாம் பனம் பழம் விழுவதில்லை. 2. பனம் பழம்
விழும்போதெல்லாம் காகம் இருப்பதில்லை இவ்வாறிருக்கையில்
இந்த இரண்டையும் எவ்வாறு தொடர்புபடுத்துவது. எனவே காகம்
இருந்ததால் பனம்பழம் விழுந்தது எனக் காரணம் கூறாமால்
இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது எனக் கருதுவதே பொருத்தமாக
இருக்கும்.

காரணம் விளைவு (Cause and Effect) எனும் அடிப்படையில் அமைந்த


அறிவியல் விதிகளின் பயன்பாடு எப்போதும் அதேபோல்
செயல்பட்டாலும், குறிப்பிட்ட பண்பு நிலை (Inertia Frame) எனும்
நிபந்தனைகயில் மட்டுமே செயல்படுகிறது என்பதைக் கருத்தில்
கொள்ள வேண்டும். அறிவியல் என்பது இருப்புகள் பற்றிய
கல்வியாக இல்லாமல் இருப்புகளால் உண்டாகும் விளைவுகள்
பற்றிய கல்வியாகவே உள்ளது. (Science is the study of effects facts and not the
study of facts or existences)இதனால்தான் விளைவுகளை மாற்றும்
அறிவியல் கண்டுபிடிப்புகளின் பயன்பாட்டால் எதிர் விளைவுகள்
புவிச் சூழலில் உண்டாகின்றன. எதிர்விளைவுகள் முழுமையான
அண்டசராசரம் தன்னைச் சமனிலையில் பேணுவதற்காக
ஏற்படுத்தும் மாற்றம் ஆகும்.

முழுமையால் ஏற்படுத்தப்படும் மாற்றம் இன்றைய அறிவியல்


கண்டுபிடிப்புகள் பலிதமாகும் பண்புநிலை நிபந்தனையை
முழுமையாக மாற்றவும் செய்யலாம் இதன் மூலம் அறிவியல்
கண்டுபிடிப்புகள் முழுதும் பயனற்றதாக போகும். எனவே கூர்த்த மதி
உடையோர் அறிவியல் பயன்பாட்டை குறைக்கப் பாடுபடுவதன்
மூலம் புவியைக் காக்க முன்வர வேண்டும்.

ரோசாப்பூ தன் வாசனையை இழந்தது போல், டைனோசோர்


முதலான பண்டைப் பெரு விலங்குகள் அழிந்தது போல் சூழலைக்
கட்டுப்படுத்தும் புவியீர்ப்பு முதலான அறிவியல் விதிகளின்
பயன்பாட்டு நிபந்தனைப் பண்புநிலையில் ஏற்படும் மாற்றத்தால்
அறிவியல் கண்டுபிடிப்புகள் முற்றிலுமாக செயலிழந்து போக
வாய்ப்புண்டு எனவே எந்திரத் திறனை நம்பி மனிதன் தன் திறனை
இழந்தால் ஒருநாள் எந்தத் திறனும் இல்லாமல் நிற்கும் அவலநிலை
மனிதனுக்கு உண்டாகலாம் என்பதை மறந்து விடக்கூடாது.

பலரும் விரும்பிப் பின்பற்றும் அறிவியல் ரீதியாக ஆன்மிகத்தை


விளக்கும் ஒரு குருவின் உரையை நான் கேட்க நேரிட்டது. அந்த
உரையின் முடிவில் நான் தனியாக அவரைச் சந்தித்துப் பேசினேன்,
அந்த உரையாடலை பகிர்ந்துகொள்கிறேன்.

கபிலனார் : நீங்கள் மதம் என்பதைக் கல்வியாக மாற்றினால்


மதத்தின் பேரால் நிகழும் மோதல்களையும் மூட
நம்பிக்கைகளையும் தவிர்க்கலாம் எனக் கருதுகிறீர்களா அல்லது
அறிவியல் மூலம் இறை நெறியை விளக்கவேண்டும் எனக்
கருதுகிறீர்களா?

அவர் : அறிவியல் மூலம் இறை நெறியை விளக்க வேண்டும் என்றே


கருதுகிறேன்.

கபிலனார் : அறிவியல் என்பது முழுமையான ஒன்று அல்லவே; Big


Bang எனும் பிரபஞ்சத் தோற்றம் பற்றி அறிவியல் இன்னும்
கண்டறியவில்லை. இவ்வாறு இருக்கையில் இறை எனும் முழுமை
பற்றி அறிவியல் எனும் முழுமையற்ற ஒன்றால் எவ்வாறு விளக்க
முடியும். இது வானத்திற்குக் குடைபிடிக்கும் முயற்சி போல்
அல்லவா உள்ளது.

அவர் : You are right. நாங்கள் முழுமையாக விளக்கவில்லை.


ஆன்மிகம் பற்றி எந்த ஈடுபாடும் இல்லாதவர்களுக்கு அதன்பால்
ஈடுபாட்டை உருவாக்கவே அறிவியல் விளக்கம் சொல்கிறோம்.
அவ்வாறில்லாமல் நேரடியாக இறைவனை நம்பி, சரணடைய
முடியும் என்றால், உங்களைப் போன்றவர்களுக்கு இந்த விளக்கம்
தேவையில்லை.
கபிலனார் : அப்படியானால் அறிவியல் என்னும் கண்ணாடி அல்லது
நுண்பொருள்காட்டி (Microscope) மூலம் நீங்கள் மதக் கருத்துகளை
நோக்குகிறீர்கள் அப்படித்தானே!

அவர் : ஆமாம், You are perfectly correct.

கபிலனார் : அப்படியானால் நான் உங்களை ஒரு Scientific critic of


Religions என்று கூறலாமா?

அவர் : No, அப்படியில்லை, We don’t criticise, we are giving scientific


Explanations to religious concepts and believes.

கபிலனார் : பஞ்ச பூதங்களையும் தனித்தனியாக வழிபட்ட மனிதன்


அவற்றை ஒரே இடத்தில் வழிபட உருவாக்கிய வடிவமே விநாயகர்;
அவர் சிவ சக்தியின் குமாரர் என்றீர்கள். முருகன், வள்ளி,
தெய்வானை என்பது தெய்வ உருவங்கள் அல்ல தெய்வானை
என்பது பெற்றோர் வழி வரும் சஞ்சித கர்மம், வள்ளி என்பது நாமே
தேர்ந்தெடுக்கும் பிராரப்த கர்மம் எனக் குறிப்பிட்டீர்கள். பிள்ளையார்
பற்றிக் கூறுகையில் பஞ்சபூதக் கருத்தில் ஆரம்பித்து புராணத்தில்
முடித்தீர்கள். முருகன் பற்றிக் கூறுகையில் புராணத்தில் ஆரம்பித்து
வினைக் கருத்தில் முடித்தீர்களே. முன் பின் முரணாக உள்ளதே
உங்கள் அணுகுமுறை.

அவர் : இவையெல்லாம் வெறும் விளக்கங்களே! மக்கள் புரிந்து


கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறோமேயன்றி; புரிதல்
என்பதை தாண்டி எமக்கு வேறு நோக்கமில்லை.

கபிலனார் : இந்த முழுமையற்ற முரண்பாடான தன்மை பற்றி


நீங்கள் அறிந்து கொண்டு பேசுகிறீர்களா அறியாமல் பேசுகிறீர்களா
என்று அறிவதற்கே இந்த ஐயங்களைக் கேட்டேன். As you are aware of the
state where you are and what you are doing, I am Satisfied.

அவர் : இந்த வினாக்களை வெளிப்படையாகக் கேட்டதற்கு மிக்க


நன்றி. உங்களுடைய பெயரையும் முகவரியைவும் தாருங்கள். (என
எழுதிச் சென்றார்).
உடம்பிலே ஒரு வலி ஏற்பட்டால் அதை குணப்படுத்த மருத்துவரிடம்
செல்கிறோம். ஆனால் சிலர் அவ்வாறு செல்லாமல் தமக்குத் தெரிந்த
அல்லது தமது சுற்றத்தினர் கூறும் கை மருந்துகளை உண்டு
குணமாவதும் உண்டு, நோய் வலுத்து இறந்துபோவதும் உண்டு.

மனதிலே வலி என்றால் யாரிடம் செல்கிறோம்? யாரிடமும்


செல்லாமல் நமக்குத் தெரிந்த அல்லது நம் சுற்றத்தினர் கூறும் வழி
முறைகளில் அந்த வலியைப் போக்க முயல்கிறோம். கோபம்,
வெறுப்பு, பொறாமை, காமம் போன்ற மனவலிகளுக்கு மருந்து
என்ன? எல்லாவற்றையும் அடக்கச் சொல்கிறார்கள். எவ்வளவு
வலியைத்தான் பொறுக்க முடியும், அல்லது அடக்க முடியும்,
இல்லையேல் தியானம் அல்லது யோகம் பழக ஒரு குருவிடம்
செல்லச் சொல்கிறார்கள். இவ்வாறு செல்வதால் மனக் கவனம்
திரும்புமே அல்லாமல் மனக்கவலை தீராது.

மனவலியால் புகைப்பழக்கம், மதுப்பழக்கம், பாலுறவுப் பழக்கம்,


பிறரைத் துன்புறுத்தும் பழக்கம் போன்றவை உருவாகின்றன.
பல்வேறு பழக்கங்களுக்கும் அடிமையாவதால் அவற்றைத்
தொடர்ந்து அடைவதற்குப் பணம் தேவைப்படுகிறது. இதனால் பணம்
இருந்தால் எல்லாக் குறையும் நிவர்த்தியாகிவிடும் என நம்மில்
பலரும் நினைத்துக்கொண்டு வாழ்கிறோம்; ஆனால் இது
உண்மையல்ல. பணம் இருந்தால் நம் பழக்கங்களுக்குத் தீனி
போடலாமேயன்றி நம்மை அடிமைப்படுத்தும் பழக்கங்களைத்
தொடர்ந்து செய்யும் அடிமை நிலையிலிருந்து விடுபட முடியாது
மனப்பழக்கம் எனும் அடிமை நிலை தொடரும் வரை துன்பங்களும்,
நோய்களும் தொடரவே செய்யும்.

கவலை இல்லாத மனம், நோய் இல்லாத உடல், மரணம் இல்லாத


வாழ்வு ஆகிய மூன்றையும் அடைய வேண்டுமெனில் எல்லாம்
வல்ல சிவபெருமான் திருவருளைப் பெற்றாலன்றி அது
சாத்தியமாகாது. இதையே திருக்குறள்
'தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது'
எனக் கூறுகிறது.

ஆதலால் மனக்கவலை போக்க நீங்கள் கண்டறிந்த வழிமுறைகள்


பயன்படாது என்பதை உணருங்கள், உங்களுக்கு ஆலோசனை
சொல்பவரின் தகுதியையும் பக்குவ நிலையையும்
எண்ணிப்பாருங்கள். மனப் பழக்கத்தைப் பூர்த்தி செய்யும்
வழிகளைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களே அல்லாமல்
பழக்கங்களிலிருந்து விடுபட விரும்பவில்லை என்பதை
உணருங்கள்.

மனக்கவலையை மாற்றவல்ல ஒரு மருத்துவரை அதாவது குருவை


நாடுங்கள். ஏற்கனவே நீங்கள் எந்தப் பழக்கங்களில்
சிக்கியுள்ளீர்களோ அவற்றிலிருந்து உங்களைத் திசை திருப்பி
யோகம், தியானம் எனச் சில புதிய பழக்கங்களில் உங்களைச்
சிக்கவைப்பவர்களாகவே இன்றைய குருமார் உள்ளனர். இவர்களால்
உங்களுக்கு விடுதலையை வாங்கித் தர முடியாது. குன்றிலும்,
குகையிலும் ஒழிந்து வாழும் சித்தர்களும் யோகியரும் கூட
இதுபோலச் சிக்குண்டவரே அல்லாமல் ஜீவன் முக்தி எனும்
விடுதலையை அடைந்தவர்கள் அல்ல என்பதை மனதில்
நிறுத்துங்கள்.

ழவேண்டும் யான் உருண்டு புரண்டழுது தொழவேண்டும்


ஐயன் உந்தன் அடியை வந்து சேரும்வரை அழவேண்டும்

அடியார்க்கு அருள் செய்ய சிவம் இறங்கி நடந்து வந்த


தென்னாட்டு மண்ணெங்கும் உருண்டு புரண்டழ வேண்டும்

பிட்டுக்கு மண் அள்ளிப் பிரம்படி பட்டவைகை


ஆற்றங் கரைமணலில் உருண்டு புரண்டழ வேண்டும்

அடியேன் இறங்கிவந்து தாயகத்தில் கால்பதித்த


சிராப்பள்ளி மண்மீது உருண்டு புரண்டழ வேண்டும்

அடியெடுத்து நடந்துவந்து கோவணத்தை எடைபோட்ட


திருநல்லூர் மண்ணில் யான் உருண்டு புரண்டழ வேண்டும்
உச்சிமுதல் பாதம் வரை உடல் மண்ணில் பொருந்துமாறு
அத்தன் எனக்கு அருள்செய்த பெருந்துறையில் புரளவேண்டும்

புகலூரின் மண்ணைத் தொட்டு நெற்றியிலே பூசவேண்டும்


புண்ணியனார் நடனமாடும் தில்லை மன்ணைத் தின்னவேண்டும்

விழவேண்டும் திருவதிகை மண்மேல் யான் விழவேண்டும்


திருவையாறில் விழுந்தெழும்பி மண்தேய்த்து முழுகவேண்டும்

திருவாரூர் மண்ணை அள்ளி தலை மேலே சுமக்க வேண்டும்


தீண்டத்தீண்ட இன்பம் தரும் கச்சி மண்ணை அளைய வேண்டும்

திருவொற்றியூர் மண்ணையள்ளி சிவலிங்கம் பிடிக்க வேண்டும்


தீரும் வரை செய்த பாவம் மதுரையிலே உருள வேண்டும்

இந்த மண்ணில் மடியவேண்டும் மடிந்து சாம்பல் ஆகவேண்டும்


சுடுகாட்டுப் பொடியணியும் சிவன் அதை அள்ளிப் பூசவேண்டும்
வாழ்தலே வழிபாடு

மெய்யாலானது இவ்வுலகு,

பொய்யாலானது இவ்வுலக வாழ்க்கை.

மெய்யால் இவ்வுலகுக்கு மேலும் எழில் கூடவும்,

பொய்யாலான இவ்வுலக வாழ்வின்

துன்பங்களைக் களையவும்,

வேண்டிய புதிய வழிகளைக் கண்டறிந்து,

அவ்வழியே வாழ்ந்து காட்ட,

எல்லாம் வல்ல சிவபெருமான் அருளால்

பணிக்கப்பட்டுள்ளேன் என்பது

என் வாழ்வின் நெறி.

அவ்வண்ணம்

வாழ்தலே வழிபாடு!
குழந்தை பிறந்ததும் முதலில் செய்யும் செயல் என்ன? அழுவது; ஆம்
அழும்போதுதான் குழந்தை மூச்சு விட அதாவது சுவாசிக்க
ஆரம்பிக்கிறது. அதுவரை கருவறையினுள் கர்ப்ப நீரில்
மூழ்கியிருந்த குழந்தை தானே சுவாசிப்பது கிடையாது;
கருவறையில் வாழும் வரை தாயின் சுவாசத்திலேயே குழந்தை
உயிர் வாழ்கிறது. அதுபோலவே பூமி என்பது மனிதர்களின் கருவறை
ஆகும். பூமிக் கருவறையில் வாழும் உயிர்களுக்கு தாய் சந்திரன்,
தந்தை சூரியன் ஆகும். இதனால்தான் ஜோதிட சாத்திரங்கள்
ஒருவரின் தாய் பற்றி சந்திரன் இருக்கும் நிலை அடிப்படையிலும்,
தந்தை பற்றி சூரியன் இருக்கும் நிலை அடிப்படையிலும் எதிர்வு
கூறுகின்றன.

மனிதன் தான் விடும் மூச்சை 1. ஒழுங்குபடுத்தல் 2. கட்டுப்படுத்தல் 3.


அடக்குதல் ஆகிய மூன்றையும் யோகம் எனப் பயில்கிறான்.

இந்த யோகப் பயிற்சியின் மூலம் 1. ஞானேந்திரியம் 2.


கன்மேந்திரியம் 3. அந்தக்கரணம் ஆகியவற்றின் செயல்பாடுகளை
1.ஒழுங்குபடுத்தவும் 2.கட்டுப்படுத்தவும் 3. அடக்கவும் செய்கிறான்.

ஆன்ம போதம்

ஞானேந்திரியங்களாவன மூக்கு, நாக்கு, கண், தோல், செவி ஆகிய


ஐம்பொறிகள் ஆகும்.

கன்மேந்திரியங்களாவன கருவாய், மலவாய், கை, கால், நாக்கு


ஆகிய ஐந்தாகும்.

ஞானேந்திரியங்கள் வாயிலாக மனிதன் நிலம், நீர், தீ, காற்று,


ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களையும் அறிகிறான்.

 மூக்கு + மண் = மணம்


 நாக்கு + நீர் = சுவை
 கண் + தீ = உருவம்
 தோல் + காற்று = தொடுகை
 செவி + ஆகாயம்= ஓசை

ஐம்பொறிகள் ஐம்பூதங்களை ஐம்புலன்களாக உணர்கின்றன.

ஐம்புல உணர்வுகள் உடலோடு இணையவே கன்மேந்திரியங்கள்


வாயிலாக உடல் கீழ்வருமாறு செயல்பட ஆரம்பிக்கிறது.

1. கருவாய் + மண் = விந்து வெளிப்படல்


2. மலவாய் + நீர் = கழிவு வெளிப்படல்
3. கை + தீ = கொடுத்தல், வாங்கல்
4. கால் + காற்று = போதல், வருதல்
5. நாக்கு + ஆகாயம் = பேச்சு

நாக்கு ஞானேந்திரியமாக சுவையை அறியும், கன்மேந்திரியமாக


பேசவும் செய்கிறது.

இந்தச் செயற்பாடுகளால் இன்னதென்று உணரக்கூடிய ஆனால்


இருக்குமிடம் சுட்டிக் காட்ட முடியாத அறிவுறுப்புகள் (Intellectual organs)
எனும் மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய அந்தக்கரணங்கள்
நான்கும் தோன்றிச் செயல்பட ஆரம்பிக்கின்றன.

மனம்

பலவகைக் காட்சி அல்லது பொருட்கள் சூழ்ந்திருக்கும் நிலையில்


எதுமேல் ஒருவனுடைய கவனம் பதிகிறது (லயிக்கிறது) என்பதைத்
தீர்மானிப்பது மனம் ஆகும்; அதாவது மனம் என்பது ஒன்றைப்
பற்றிக்கொள்கிறது.

புத்தி
மனம் பற்றிக்கொண்டது எதை என்பது பற்றி புத்தி ஆராயும்.
எடுத்துக்காட்டாக மின்னும் இந்தப் பொருள் தங்கமா, செம்பா என
ஆராய்வதைக் குறிப்பிடலாம்.

அகங்காரம்

புத்தி ஆராய்ந்த பொருள் இன்னது தான் என்ற முடிவை அகங்காரம்


செய்கிறது. எடுத்துக்காட்டாக இது செம்பல்ல தங்கமே எனச் செய்யும்
முடிவைக் குறிப்பிடலாம்.

சித்தம்

அகங்காரம் செய்த முடிவைப் 1. பலமுறை எண்ணி மகிழ்வதும் 2.


அந்த முடிவு தனதென அதிகாரம் செய்வதும் 3. அந்த முடிவை
வைத்து அடையக்கூடிய நன்மை, தீமை மற்றும் இலாப நட்டம் பற்றி
கணக்கிடுவதும் சித்தம் செய்யும் செயல்களாகும்.

ஞானேந்திரியம் 5, பூதங்கள் 5, புலன்கள் 5, கன்மேந்திரயம் 5,


அந்தக்கரணங்கள் 4, ஆகிய 24 உம் ஆன்மதத்துவங்கள் ஆகும்.

ஆன்மா தனக்கு உடையாகத் தன் மேல் போர்த்தியுள்ள இந்த


ஆன்மதத்துவங்கள் 24 ஐயும் ஒழுங்குபடுத்தவும், கட்டுப்படுத்தவும்,
அடக்கவும், யோகம் வழி காட்டுகிறது.

இந்த தத்துவங்கள் தம்மை அறியமாட்டா; ஆன்மாவே அறியும்


தன்மை உள்ளது. எடுத்துக்காட்டாகச் சொன்னால் உணவு சுவையை
அறியாது, உண்ணும் நாவும் சுவையை அறியாது (எவ்வாறெனில்
இறந்தவன் நாவில் உணவை வைத்தால் அது சுவையை அறியாது)
உயிரான ஆன்மாவே சுவையை அறிகிறது.

இந்த வகையில் 24 ஆன்ம தத்துவங்களையும் ஆள்வதன் மூலம்


ஆன்மாவை ஆள்வதாக யோகியர் பலரும் கருதுகின்றனர். இது
எவ்வளவு தூரம் உண்மை என்பது கேள்விக்குரிய ஒன்றாகவே
உள்ளது.
ஆன்மா இல்லையேல் எதையும் அறிய முடியாத நிலையில் உள்ள
தத்துவங்களை ஆள்வதன் மூலன் ஆன்மாவை அடைக்க முடியுமே
அல்லாமல் விடுவிக்க முடியாது என்பதே உண்மை.

உடலில் வழங்கும் உறுப்புகளை நாம் கீழ்வருமாறு பகுக்கலாம்:

1. இச்சை செயலால் கட்டுப்படுத்தக் கூடிய உறுப்புகள்

எ-டு : கை, கால், வாய் முதலியன

2. இச்சைச் செயலால் கட்டுப்படுத்த முடியாத உறுப்புகள்

I. இன்னதென்று கண்டறியக் கூடியவை

எ-டு : ஈரல், இதயம் முதலான உடலுறுப்புகள்

II. இன்னதென்று கண்டறிய முடியாதவை

எ-டு : நாடி, வாய்வு, குண்டலினி போன்றவை

மேலே கூறிய மூவகை உடலுறுப்புகளையும் ஒழுங்குபடுத்தலும்,


கட்டுப்படுத்தலும், அடக்குதலுமே யோகம் எனவும் யோகம்
விளக்கப்படுகிறது.

பூமிக் கருவறையில் வாழும் உயிர் காற்று எனும் கர்ப்ப நீரில் சந்திரத்


தாயின் சுவாசத்திலே உயிர் வாழுமாறு தன்னுடைய மூச்சை அடக்கி
வாழும் கருநிலை, சமாதி எனப்படுகிறது. இந்தக் கருநிலைச்
சமாதியை ஆன்ம விடுதலை எனக் கருதுவது எந்த வகையிலும்
பொருத்தமற்ற ஒன்றே ஆகும்.

கருவறையில் எந்த உயிரும் எவ்வாறு நிரந்தரமாக வாழ முடியாதோ


அது போலவே பூமிக் கருவறையில் சமாதி நிலையிலும் யாரும்
தொடர்ந்து வாழ முடியாது. ஜீவசமாதி என்பது பிறர் போற்ற வேண்டி
ஒருவன் செய்து கொள்ளும் தற்கொலையே ஆகும்.
ஆன்ம தத்துவங்களை அறிந்து அவற்றிலிருந்து விடுபட்டு ஆன்மா
பற்றி அறிவது ஆன்மபோதம் ஆகும்.

பஞ்சாட்சரம்

மூச்சை பஞ்சாட்சரத்தோடு (நமச்சிவாய) இணைப்பதன் மூலம்


காற்றான மூச்சை திருவருளாக மாற்றுவதே நமச்சிவாய எனும்
பஞ்சாட்சரம்.

தியானம் என்பது எப்போதும் ஒன்றில் லயித்தல் எனப் பொதுவாக


விளக்கப்படும். சத்து பொருட்களின் மேல் உண்டாகும் லயத்தில்
செயற்பாடுகள் ஒடுங்குவதும், அசத்து பொருட்களின் மேல்
உண்டாகும் லயத்தில் செயற்பாடுகள் அதிகரிப்பதும் இயல்பே. சத்து
பொருட்கள் அறிவுள்ளவை, அசத்து பொருட்கள் அறிவற்றவை.
முழுமுதல் கடவுளான சிவபெருமான் திருவருளில் லயிப்பதற்கு
வழிகாட்டுவதே பஞ்சாட்சரம் ஆகும்.

பரபோதம்

வித்தியா தத்துவங்கள் 7 உம் பிரபஞ்ச உறுப்புகள் (Universal Organs)


ஆகும். இந்த உறுப்புகளே ஆன்மாவை பிரபஞ்சத்தின் ஒரு கூறாக
இயங்கச் செய்கிறது.

காலம் என்பது தோன்றியது முதல் மறையும் வரை என்ற எல்லை


உணர்வாகும். இது பிரபஞ்சம் பற்றி தத்துவங்கள் வாயிலாக ஆன்மா
அறிந்து கொள்ளும் ஓர் அருவப் பொருளாகும்.

நியதி என்பது காலம் எனும் எல்லை பற்றி வரும் வரிசை


உணர்வாகும். எல்லை இருப்பதால் ஒவ்வொன்றும் முன், பின் என்ற
வரிசைக்கு ஆளாகி எண்களால் வரிசைப்படுத்தும் அறிவைத்
தோற்றுவிக்கிறது. இந்த தோற்ற மாற்ற நிகழ்வுகளின் வரிசையை
ஆன்மா கட்டுப்படுத்த முடியாததாகவே உள்ளது. பிரபஞ்ச இயக்கமே
இந்த வரிசையைத் தீர்மானிக்கிறது. இதனால் முன் செய்த வினைப்
பயன் பின்னரும் பின் செய்த வினைப் பயன் முன்னழும் கூடத்
தோன்றும்.

தன்னைக் கட்டுப்படுத்தும் (துன்பத்தைத் தரும்) செயல்களை ஓர்


ஆன்மா செய்யத் தூண்டுவது கலை ஆகும். கட்டுப்பட்ட
நிலையிலிருந்து தன்னை விடுவிக்கும் (ஞானத்தைத் தரும்)
செயல்களைச் செய்யத் தூண்டுவது வித்தை ஆகும். கலை
என்பதைக் கிரியாசக்தி எனவும், வித்தை என்பதை ஞானசக்தி
எனவும் அழைக்கலாம். ஆசையைத் தூண்டும் இச்சா சக்தியை
ஆன்மாவுக்கு அளிப்பது அராகம் ஆகும்.

மேலே கூறிய காலம், நியதி, கலை, வித்தை, அராகம் ஆகிய ஐந்து


உறுப்புகளை சட்டை போல் அணிந்து செயல்படும் தன்மையை
ஆன்மாவுக்கு அளிப்பது புருடன் ஆகும்.

காலம், நியதி, கலை, வித்தை, அராகம் ஆகிய 5 பிரபஞ்ச


உறுப்புகளையும் அணிந்து புருடன் ஆடும் புருட நாடகத்தின் மெய்த்
தன்மையை அறிய முடியாமல் ஆன்மாவைக் குழப்பத்தில்
ஆழ்த்துவது மாயை ஆகும்.

வித்தியா தத்துவங்களை உணர்வதன் மூலம் ஆன்மா என்பது


முழுதில் ஒரு பகுதி என்ற அறிவு உதயமாகச் சிவம் பற்றிய சிந்தை
தோன்றிச் சிறப்பது பரபோதம் ஆகும்.

சிவபோதம்

அறிவு உறுப்புகளான (Intellectual Organs) 24 ஆன்மதத்துவங்களையும்


பிரபஞ்ச உறுப்புகளான (Universal Organs) 7 வித்தியா தத்துவங்களையும்
ஆடையாக அணிந்து ஆன்மா ஆடும் ஆன்ம நாடகத்தின் தன்மை
அடிப்படையில் அவற்றை 5 வகையான சிவ தத்துவங்களாகப் பகுத்து
உரைக்கலாம்.

ஞானசக்தி அதிகமாகவும் கிரியாசக்தி குறைவாகவும் இருக்குமாறு


நிகழும் ஆட்டம் சுத்த வித்தை ஆகும். கிரியாசக்தி அதிகமாகவும்
ஞானசக்தி குறைவாகவும் இருக்குமாறு நிகழும் ஆட்டம் ஈசுரம்
அல்லது மகேசுரம் ஆகும். கிரியாசக்தியும் ஞானசக்தியும் சம
அளவில் இருக்குமாறு நிகழும் ஆட்டம் சதாக்கியம் அல்லது
சதாசிவம் ஆகும். முழுதும் கிரியா சக்தியாக இருக்குமாறு நிகழும்
ஆட்டம் சக்தி ஆகும். முழுதும் ஞான சக்தியாக இருக்குமாறு நிகழும்
ஆட்டம் சிவம் ஆகும். இந்த ஆட்டத்தை அறிவதன் மூலம்
தன்னிலையையும் சிவத்தையும் உணர்ந்து சிவத்தோடு ஐக்கியமாக
வேண்டிச் சரணடைவது சிவபோதம் ஆகும். சிவபோதத்தால்
விளையும் ஐக்கியமே முக்தி ஆகும்.

முக்திப் பேரின்பம்

அறிவெனப்படுவது ஒன்றாயிருக்கையில் இறைவனோடு


ஒத்திருக்கும். ஓரறிவு உள்ளவை தாவரங்கள் ஆகும். இதனால் தான்
தாவரங்களின் இலைகளையும் பூக்களையும் தனக்கு உகந்தவையாக
இறைவன் ஏற்றுக்கொள்கிறான். இறைவனின் இயல்பில் இருப்பதால்
தாவரங்கள் நிர்க்குணத்தை நெருங்கியிருக்கின்றன. தாவரங்களே
பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு அடிப்படையாகவும் அமைகின்றன.
இந்த ஓரறிவு 2,3,4,5 எனப் பெருகி ஆறறிவாக உள்ளவனே மனிதன்.
மனிதன் கன்மேந்திரியம் வரையுள்ள (ஞானேந்திரியம், பூதம், புலன்,
கன்மேந்திரியம்) 20 தத்துவங்களை மட்டும் உடையவனாக
இருக்காமல் அந்தக்கரணமும் (மனம், புத்தி, அகங்காரம், சித்தம்)
உடையவனாக இருப்பதன் மூலம் பிற உயிரினங்களிலிருந்து
வேறுபடுகிறான். இதுவே இறைவனை உணர்ந்து வீடுபேறு அல்லது
முக்தி எனும் பேரின்ப சுகத்தை அடையவும் காரணமாகிறது.

முக்தி எனும் பேரின்ப சுகம் பற்றிப் பல்வேறு மதத்தினரும்


பலவிதமாக விளக்குவர். கலவி இன்பமே முக்தி என்பர்
உலோகாயதர்; ஐம்புலன்களின் ஒடுக்கமே முக்தி என்பர் பௌத்தர்;
மூவகை குணங்களின் அடக்கமே முக்தி என்பர் சமணர்; கன்மம்
மறைதலே முக்தி என்கிறது பிரபாகரமதம்; ஆணவம் மறைதலே
முக்தி என்பர் பேதவாதிகள்; உடல் அழியாது இருத்தலே முக்தி
என்பர் சில சிவசமயவாதிகள்; பிரகிருதியையும் புருஷனையும்
ஆய்ந்தறிதலே முக்தி என்பர் சாங்கியர்; ஆன்மா கெடுதலே முக்தி
என்பர் பாஸ்கரியர்; அட்டமா சித்திகளை அடைவதே முக்தி என்பர்
சித்தர்கள்; உயிரைக் கல் போலக் கிடக்கச் செய்தலே முக்தி என்பர்
பாஷாணவாதிகள். உயிரானது ஆணவம், கன்மம், மாயை ஆகிய
மூன்று மலங்களும் நீங்கப் பெற்று கூடவே இறைவன்
திருவருளையும் பெற்று நிற்பதே உண்மையான முக்தி நிலை ஆகும்.
முக்தி இன்பம் என்று ஒன்றில்லை எனப் பலரும் இன்று பேசியும்
நம்பியும் வருகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல.
அறிவில் குறையுடையவரே முக்தி இன்பம் என்றொரு இன்பம்
இல்லை என்பர். இந்த உண்மையை உணர்வதற்கு அறிவியல்
மாயையிலிருந்து நாம் விடுபடவேண்டும். இதற்காக அறிவியல்
கோட்பாடுகளும் காலமும் பற்றிப் பொதுவாகக் கொஞ்சம் அறிந்து
கொள்வோம்.

அறிவியலும் காலமும் பற்றி இங்கு வழங்கப்படும் விளக்கத்திற்கு


அடிப்படையான ஆய்வினை பல வருடங்களாக முன்னெடுத்துவரும்
பெருமதிப்பிற்குரிய அருட் செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம்
அவர்களுக்கு நன்றியாக என்னுடைய இதயத்தில் ஓர்
இடமளிக்கிறேன் இன்று அவரோடு இணைந்து அந்த ஆய்வின்
விளைவான 'நமசிவாய வானியல் (நவா) கோட்பாட்டை
வடிவமைப்பதால் எனக்கு ஏற்பட்ட இறை தத்துவம் பற்றிய
தெளிவையே இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இந்த
நமசிவாய வானியல் தத்துவங்களைத் தொடர் கட்டுரையாக
வெளியிட்ட 'ஓம் சக்தி' மாத இதழுக்கும் அதன் பொறுப்பாசிரியர்
மதிப்பிற்குரிய பெ. சிதம்பரநாதன் அவர்களுக்கும் என்னுடைய
உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய
ஆன்மிகப் பயணத்தில் காலம் பற்றி தெளிவை ஏற்படுத்தக்
காரணமாக அமைந்த அருட்செலவர் டாக்டர் நா. மகாலிங்கம்
அவர்களை நான் 'அந்த இடைமருதில் ஆனந்தத் தேன் இருந்த
பொந்து' என மாணிக்கவாசக சுவாமிகள் பாடிய திருவிடை மருதூர்
மகாலிங்க சுவாமியாகவே கருதுகிறேன்.

புதிய கண்டுபிடிப்பும் பழைய சொல்லும்

இயற்பியலார் கண்டுபிடித்த அணு (Atom) பற்றிப் பலரும் அறிவோம்.


'ஆட்டம்'(Atom) எனும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்
மொழிபெயர்ப்புச் சொல்லாக 'அணு' என்ற சொல்லைப்
பயன்படுத்துகிறோம். ஆனால் தொன்றுதொட்டு தமிழர்
வழக்கிலிருந்த 'அணு' எனும் சொல் குறிக்கும் பொருள் இயற்பியலார்
கண்டறிந்த 'அணு' எனும் சொல் குறிக்கும் பொருளாக இருக்க
வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு பாரம்பரியச் சொற்களைத்
தற்காலக் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடப் பயன்படுத்துவதால்
அச்சொல்லின் மரபுவழிப் பொருண்மை மறைக்கப்படுகிறது. எனவே
புதிய கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுவதற்கு பழைய தமிழ்ச்
சொற்களைப் பயன்படுத்துவதை விடப் புதிய தமிழ்ச் சொற்களை
உருவாக்கிப் பயன்படுத்துவதே சிறப்பான வளர்ச்சிக்கு வழிகோலும்
என்பதைக் கருத்தில்கொண்டு அறிவியலைத் தமிழாக்கம் செய்வோர்
செயல்படவேண்டும்.

அறிவியலார் கண்டறிந்த 'அணு'

'அணு' என்று அழைக்கப்படும் சடப்பொருளின் அடிப்படை ஆக்கக்


கூறு எவ்வாறு முதலில் கண்டறியப்பட்டது எனக் காண்போம்.

இரண்டு சமமான எடையுள்ள சோதனைக் குழாய்கள்


எடுக்கப்படுகின்றன. இரண்டினுள்ளும் சமமான எடையுள்ள
தீக்குச்சிகள் வைக்கப்படுகின்றன. காற்று வெளியேறாதவாறு
இரண்டு சோதனைக் குழாய்களும் அடைக்கப்படுகின்றன. ஒரு
சோதனைக் குழாயில் உள்ள தீக்குச்சி முற்றாக எரிந்து
சாம்பலாகுமாறு சூடாக்கப்படுகிறது.

இரண்டு குழாய்களும் மீண்டும் எடை போடப்படுகின்றன. எடையில்


எந்த மாற்றமும் இல்லை. இதிலிருந்து லவோசியர்(Lavoisier) எனும்
விஞ்ஞானி கீழ்வரும் விதியை அனுமானிக்கிறார்.
லவோசியர்(Lavoisier)

ஒரு தாக்கத்தின் முன் உள்ள தாக்கிகளின் எடை, தாக்கத்தில்


உருவான விளைவுகளின் எடைக்கு சமமாகும்'

இந்த விதி திணிவுக்காப்பு விதி (Law of conservation of mass) என


இயற்பியலில் அழைக்கப்படுகிறது.

இதிலிருந்து டால்டன்(Dalton) எனும் இயற்பியல் விஞ்ஞானி


கீழ்வருமாறு ஊகித்து அறிகிறார். தாக்கத்தின் முன்னும் தாக்கத்தின்
பின்னும் எடை மாறாததால் தாக்கத்தின் முன் உள்ள பொருட்கள்
யாவும் பின்னும் உள்ளன. ஆனால் வடிவம் குச்சி மற்றும் சாம்பல்
என மாறுபட்டுள்ளது. எனவே நமது கண்ணிற்குப் புலப்படாத
அடிப்படைக் கூறு தாக்கிகளிலும் விளைவுகளிலும் மாறாமல் இருக்க
வேண்டும்; அதனால்தான் எடை மாறவில்லை என உய்த்தறிகிறார்.
அந்த அடிப்படைக் கூறே அணு (Atom) என வரையறுக்கிறார். இந்த
வரையறையின் அடிப்படையில் டால்டன் ஓர் அணுக்கொள்கையை
உருவாக்குகிறார்.

டால்டன்(Dalton)

டால்டனின் அணுக்கொள்கை

1. சடப்பொருள் யாவும் அணு எனும் பிரிக்க முடியாத அடிப்படைத்


துகள்களால் ஆக்கப்பட்டுள்ளது.

2. ஒரு தனிமத்தில் உள்ள அணுக்கள் ஒரே தன்மை


உடையனவாகவும் வெவ்வேறு தனிமங்களில் உள்ள அணுக்கள்
வேறுபட்ட தன்மை உள்ளனவாகவும் இருக்கும்.
3. அணுக்களை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.

இந்த அணுக்கொள்கையின் வழி அணுவின் வடிவம் எத்தகையது


என்ற ஆய்வில் இறங்குகிறார் இரதபோர்ட் (Rutherford) என்ற
விஞ்ஞானி. இவருக்கு முன் வாழ்ந்த தாம்சன்(Thomson) எனற
விஞ்ஞானி அணு அணுத்துகள்களால் ஆனது என முன்மொழிகிறார்.
அணு எனபது நேர் ஏற்றமுள்ள ஒரு உருண்டை எனவும் அதில் எதிர்
ஏற்றமுள்ள இலக்ட்ரோன்கள் ஆங்காங்கே சாத்துக்குடியில்
விதைபோலப் பதிந்துள்ளது எனவும் கூறுகிறார்.

தாம்சன்(Thomson)

இரதபோர்ட் சோதனை

கதோட்டுக் குழாய் எனும் குழாயினுள் மெல்லிய பொன்னாலான


இலை ஒன்றை அமைத்து அதன் மீது அல்பா கதிர்களை
மோதவிடுகிறார்.

1. மையத்தில் உள்ள கதிர்கள் சென்ற வழியே திரும்பி வந்தன.

2. அதற்கு அருகில் உள்ள கதிர்கள் சிறிய விலகலுடன் சென்றன.

3. மையத்திலிருந்து அதிக தூரத்தில் சென்ற கதிர்கள் விலகலின்றி


நேர்கோட்டில் சென்றன.
இரதபோர்ட்(Rutherford)

இதனால் இந்த அவதானங்களிலிருந்து இரதபோர்ட் கீழ்வரும்


முடிவுகளுக்கு வருகிறார்.

1. அல்பா கதிர்கள் நேர் ஏற்றம் உள்ளதால் அவற்றை விலகச்


செய்யும் மையப்பகுதியில் நேர் ஏற்றம் உள்ள துகள்கள் உள்ளன.
(ஏனெனில் ஒத்த ஏற்றங்கள் ஒன்றை ஒன்று தள்ளும்)

2. மையத்து கதிர்கள் மோதி திரும்புவதால் அங்கு வலிமையான ஒரு


பகுதி இருக்க வேண்டும். அதுவே அணுக்கரு (Nucleus) ஆகும்.

3. அணுக்கருவைச் சுற்றியுள்ள பகுதியில் எதிர் ஏற்றமுள்ள துகள்கள்


கருவைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

இந்த ஊகங்களின் அடிப்படையில் அணுவின் அமைப்பு பற்றிய


கோட்பாட்டைக் கீழ்வருமாறு விளக்குகிறார்.

அணுவின் மையத்தில் அணுக்கரு உள்ளது. அணுக்கரு


திண்மையான நியூட்ரான் (Nutron) எனும் நடு நிலையான ஏற்றமற்ற
அணுத்துகள்களினாலும் நேர் (Positive) ஏற்றமுள்ள புரோட்டன் (Proton)
எனும் அணுத்துகள்களாலும் ஆக்கப்பட்டுள்ளது. அதைச் சுற்றி
புரோட்டன்களின் ஏற்றத்திற்கு சமமான எதிர்மறை ஏற்றமுள்ள
இலக்ட்ரோன் (Electron) எனும் துகள்கள் வலம் வருகின்றன.
ஒவ்வொரு அணுவிலும் உள்ள புரோட்டன்களினதும்,
இலக்ட்ரோன்களினனும் எண்ணிக்கை சமமாகும்.
இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் அணுவின் அமைப்பைக்
கீழ்வருமாறு படமாகக் காட்டலாம்.

எ-டு: ஹீலியம் (He) அணு

அணுவெண் (Atomic Number) = 2

கோட்பாடும் பயன்பாடும்

மேலே கூறிய அணுக்கோட்பாட்டின் அடிப்படையில் அணுக்கள்


இணைந்து மூலக்கூறுகள் (Molecules) உண்டாவதையும் (எ.டு; O + O =
O2) வேதியல் தாக்கங்களையும் (Na + Cl = Nacl) விளக்க முடிந்தது.

இதுபோன்ற மாற்றங்களைத் திருத்தமாக விளக்குவதற்காக


இலக்ட்ரோன்கன் பயணிக்கும் பாதையின் (Orbit) அமைப்பு
கீழ்வருமாறு திருத்தி அமைக்கப்பட்டது. ஒவ்வொரு பாதையிலும்
உட்பிரிவுகளும் அவைமுன் பின்னாக அமைவதும்
கண்டறியப்பட்டது.
1,2,3,4........... என்பது இலக்ட்ரோன் பயணிக்கும் முதன்மைப் பாதைகள்
(Main Orbits) ஆகும். s,p,d,f ஆகியன துணைப் பாதைகள் (Sub Orbits)
ஆகும். ஒவ்வொரு முதன்மைப் பாதையிலும், துணைப்பாதையிலும்
வழங்கக் கூடிய இலக்ட்ரோன்களின் அதிகபட்ச எண்ணிக்கை
வருமாறு.

துணைப் பாதை

s - 2, p - 6, d - 10, f - 14

முதன்மைப் பாதை

பாதை 1 - 2, பாதை 2 - 8, பாதை 3 - 18 என அமையும். அதாவது 2(n2)


என்ற சமன்பாட்டல் இந்த எண்ணிக்கையை அறியலாம். இங்கு n
என்பது எத்தனையாவது முதன்மைப் பாதை என்பதைக் குறிக்கும்.

எ.டு : 8 ஆவது முதன்மைப் பாதையில் வழங்கக் கூடிய அதிகபட்ச


இலக்ட்ரோன்களின் எண்ணிக்கை வருமாறு.

2(82) = 2(64) = 128

தாக்கத்திலீடுபடும் இலக்ட்ரோன் ஒழுங்கு 1,2,3...... என அமையாமல்


மேலே உள்ள படத்தில் அம்புக்குறியால் காட்டியவாறு 1s2, 2s2, 2p6, 3s2,
3p6, 4s2, 3d10, 4p6, 5s2, 4d10, 5p6, 6s2, 4f14…… என அமையும்.

வானியல் கோட்பாடு
'அணு' எனும் உட்துகள் பற்றிய ஊகத்திலிருந்து இயற்பியல் மற்றும்
வேதியல் விஞ்ஞான விளக்கம் வளர்ந்தது போலவே இரவு, பகல்,
அமாவாசை, பௌர்ணமி, ஆயணம் (உத்திராயணம்,
தெட்சணாயணம்) ஆகியவற்றிலிருந்து வானியல் கோட்பாட்டை
நமது முன்னோர் வரையறை செய்தனர்.

வானில் உள்ள கிரகங்களைப் பொறுத்தவரை Observation என


ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அவதானத்தை நம் முன்னோர்
எப்படிச் செய்தனர் என்பதே வியப்பான வினாவாக உள்ளது. ஆனால்
அதைச் செய்துள்ளனர். அதிலிருந்து கிரகநிலை, பருவகாலம்,
அமாவாசை, பௌர்ணமி மற்றும் சூரிய, சந்திர கிரகணங்களை
அறியும் வானியல் கோட்பாடுகளை உருவாக்கியுள்ளனர் என்பது
மறுக்க முடியாத உண்மை.

கோட்பாடுகளின் வளர்ச்சி

அணுக்கொள்கை டால்டனில் ஆரம்பித்து தாம்சன், இரதபோர்ட்,


முதலானோர் ஊடாக தேவைக்கேற்ப திருத்தி அமைக்கப்பட்டது.
ஆல்பர்ட் அயின்ஸ்டீன் (Albert Einstein) அணுவைப் பிளந்து சக்தியை
எடுக்கலாம் என நிரூபித்த போது டால்டனின் அணுக் கொள்கை
பொய்த்தே போயிற்று.

ஆல்பர்ட் அயின்ஸ்டீன் (Albert Einstein)

இது போல நமது பரம்பரிய வானியல் கணிதமும் சூரிய சித்தாந்தக்


கோட்பாடு, வேதாந்த ஜோதிடக் கோட்பாடு முதலான பல
கோட்பாடுகளாகப் பரிணாமவளர்ச்சி அடைந்து வந்துள்ளது.

அறிவியல் கோட்பாடுகளின் தோற்றம்


திணிவுக்காப்பு விதிச் சோதனையின் நோக்கலை (observation)
விளக்குவதற்காக டால்டன் ஒரு அணுக் கோட்பாட்டை
வடிவமைத்தார்.

பொன் இலையில் ஆல்பா கதிர்களை மோதவிடும் கதோட்டுக்குழாய்


சோதனையில் அறியப்பட்ட கதிர்விலகும் நோக்கலை
விளக்குவதற்காக இரதபோர்ட் அணுக் கோட்பாட்டை திருத்தி
அமைத்தார்.

ஒரு பொருளின் மேல் தாக்கும் விசையை அதிகரித்தால் அப்பொருள்


செல்லும் வேகமும் அதிகரிக்கும் என்பது நியூட்டனின் இயக்க விதி.
ஆனால் 'ஒரு இலக்ட்ரோன் மேல் தாக்கும் விசையை பலமடங்கு
அதிகரித்த போதும் அது செல்லும் வேகம் ஒளியின் வேகத்தை
தாண்டி அதிகரிக்கவில்லை.' இந்த நோக்கலை விளக்குவதற்காக
ஆல்பர்ட் அயின்ஸ்டைன் உருவாக்கியதே சார்பியல் கோட்பாடு
(Thoery of Relativity)ஆகும்.

காலம்

சார்பியல் கோட்பாட்டினால் 'காலம்' என்பது புதிய


கண்ணோட்டத்தை பெற்றது. அதுவரை கடிகார முள்ளின்
ஓட்டத்தால் அளக்கப்படும் ஓர் அலகே காலம் என்று கருதப்பட்டது.
ஆனால் அயின்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு காலம் என்பது
சுருங்கவும் விரியவும் கூடியது (Time Contracts and Expands) என
நிறுவியது. இதனால் காலம் என்பது கடிகாரத்தின் ஓட்டத்தால்
அளந்தறியப்படும் ஓர் அலகு என்பதைத் தாண்டி சிந்தித்து அறிய
வேண்டிய ஒன்று என்ற நிலை உண்டாயிற்று. அதற்கு உதவியாக
காலம் பற்றி அறிவதற்கு உதவும் கருத்து ஒன்றைக் கீழே
வைக்கிறேன்.

காலம் என்பது கடிகாரத்தாலோ, காலண்டரினாலோ,


பஞ்சாங்கத்தாலோ, கிரக நிலைகளாலோ, பூமியின் சுழற்சியாலோ,
பூமி வலம் வரும் கணக்கினாலோ அறியப்படும் ஒன்றல்ல. காலம்
என்பது ஒரு கற்பனை. ஏதோ ஒரு பொருள் தொடர்ந்து
இயங்கிக்கொண்டே இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.
'மாறாத ஒரு சீரான வேகத்தில் இடையறாமல் ஒரு திசை நோக்கி
இயங்கிக் கொண்டிருக்கும், அந்தக் கற்பனை இயக்கமே காலம்
ஆகும்'. அந்தக் கற்பனை இயக்கத்தின் வேகமே நொடி, நிமிடம், மணி
எனக் கடிகார முள்ளின் இயக்க அலகால் அளவிடப்படுகிறது.

உலகில் எந்த இயக்கம் நிகழ்ந்தாலும், அதைக் காலம் எனும்


கற்பனை இயக்கத்தோடு பொருத்தியே அளந்தறிகிறோம். அவ்வாறு
அறியப்பட்ட கருத்துகளே மனதில் பதியப்பட்டுள்ளன.

இவ்வாறு காலம் எனும் கற்பனை இயக்கத்தின் வேகத்தோடு


ஒளியின் வேகத்தை ஒப்பிட்டு அளக்கையில் ஒளியின் வேகம் 3x108
மீட்டர்/நொடி என்று அறியப்படுகிறது.

சார்புவேகம்

ஒரு வண்டி 30 கி.மீ/மணி என்ற வேகத்தில் செல்கிறது. இன்னொரு


வண்டி அதே வேகத்தில் (30 கி.மீ/மணி) எதிர்த்திசையில் இந்த
வண்டியைக் கடக்கிறது. ஓடும் வண்டியின் உள்ளே இருந்து
பார்ப்பவரைப் பொறுத்தவரை கடந்து சென்ற வண்டி 60 கி.மீ/மணி
(30+30)வேகத்தில் செல்வதாகத் தோன்றும் என்பது சார்பு வேகக்
(Relative Velocity)கோட்பாடு ஆகும்.

உண்மையில் இங்கு எந்த வண்டியும் 60 கி.மீ/மணி வேகத்தில்


செல்லவில்லை. இரண்டு வண்டிகளும் 30 கி.மீ/மணி வேகத்திலேயே
சென்றன, காண்பவரைப் பொறுத்தவரை கற்பனையான ஒரு
இயக்கம் 60 கி.மீ/மணி வேகத்தில் நிகழ்ந்துள்ளது.

ஆனால் ஒளியின் வேகத்தில் (3x108 மீ/நொடி) இரண்டு வண்டிகள்


மேலே கூறியவாறு எதிர்த்திசைகளில் பயணித்தால் அங்கு
வெளிப்படும் சார்பு வேகம் (3x108)+(3x108) என இரட்டிக்காது. அந்த
சார்பு வேகம் 3x108 மீ/நொடி எனும் தனி வேகமாகவே இருக்கிறது.
அதாவது ஒளியின் வேகத்தில் சார்பு வேகக் கோட்பாடு
மாறுபடுகிறது. இந்த மாற்றத்திற்குக் காரணம் என்ன?

சார்பியல் கோட்பாடு

இதன் காரணத்தை விளக்குவதே ஆல்பர்ட் அயின்ஸ்டீனின்


சார்பியல் கோட்பாடாகும். சார்பியல் கோட்பாட்டின் கணித
நிறுவலைத் தவிர்த்துவிட்டு அதன் விளைவு பற்றிய அறிவினால்
அதைப் புரிந்து கொள்ள முயல்வோமாக.

இரட்டையராகப் பிறந்த குழந்தைகளில் ஒன்று ஒளியின் வேகத்தில்


செல்லும் விமானத்தில் வளர்கிறது. மற்றக் குழந்தை பூமியில்
வளர்கிறது. நாற்பது வருடங்களின் பின் இருவரும் சந்திக்கின்றனர்.
புவியில் வளர்ந்த குழந்தைக்கு வயது 40 ஆகியிருக்கும். ஆனால்
ஒளியின் வேகத்தில் பயணித்த குழந்தை பிறந்த நிலையிலேயே
இருக்கும். இந்த இரட்டையர் பற்றிய சார்பியல் உண்மையை
ஆங்கிலத்தில் Twin Paradox எனக் கூறுவர்.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளக் கூடியது யாதெனில் காலம் எனும்


கற்பனை ஓட்டம் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் போது பூச்சியம்
ஆகிவிடுகிறது என அறியலாம்.

அதாவது காலம் எனும் கற்பனை இயக்கத்தின் ஓட்டத்தை நாம்


தெரிந்தோ தெரியாமலோ ஒளியின் வேகத்தை ஒத்த வேகமாகவே
கொள்கிறோம் எனக் கருதவேண்டியுள்ளது. இதனால் ஒளியின்
வேகத்தில் செல்லும்போது காலம் பூச்சியமாகிறது அதாவது
இல்லாமல் போகிறது; ஒளியின் வேகத்தைத் தாண்டிச் செல்லும்
போது காலம் சுருங்குகிறது. இவை யாவும் நோக்கும் மனிதனின்
மனதில் தோன்றும் தொடர்பு வேகம் போன்ற கற்பனை இயக்கங்களே
அல்லாமல் மெய்யாக நிகழ்வன அல்ல. அதாவது காலம்
சுருங்குவதும், விரிவதும், இல்லாமல் போவதும் மனதில்
நிகழ்வனவே அல்லாமல் புறத்தில் நிகழ்வன அல்ல என நாம்
அறியலாம். இந்த நிலையைத் தாண்டி அடுத்த நிலைக்கு செல்ல
முடியாமல் அறிவியலின் ராணி(Queen of Science) என்றழைக்கப்படும்
இயற்பியல் நிற்பதும் குறிப்பிடத்தக்கது.

வானியல் கோட்பாடுகளின் தோற்றம்

ஒவ்வொரு நாளிலும் உள்ள இரவு, பகல் ஆகிய பொழுதுகளின்


அளவை சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை கவனித்து
அளவிடும் போது பெரும்பாலான நாட்களில் இரவுப் பொழுதும், பகல்
பொழுதும் சம அளவாக இருக்கவில்லை. இரவுப் பொழுதும், பகல்
பொழுதும் சம அளவாக இருக்கும் நாட்களை ஆயண நாட்கள்(Equinox
Days)என அழைப்பர். இந்திய மரபில் இவ்விரண்டு சம பொழுது
நாட்களையும் உத்திராயணம், தெட்சணாயணம் என அழைப்பர்.

ஓர் உத்திராயணத்திலிருந்து மறு உத்திராயணம் வரையுள்ள


நாட்களின் எண்ணிக்கை ஒரு வருடம் என அறியப்பட்டது. இந்த ஒரு
வருடம் என்பது 365 நாட்களுக்கு ஒரு முறை வருகிறதா என்றால்
அவ்வாறு வரவில்லை. ஒரு உத்திராயணத்திலிருந்து மறு
உத்திராயணம் வரையுள்ள நாட்களின் எண்ணிக்கை
மாறிக்கொண்டே வந்தது. இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன? என
ஒரு சாரார் ஆய்ந்தனர். இந்த மாற்றத்தை எவ்வாறு காலண்டரில்
குறிப்பிடுவது? என இன்னொரு சாரார் ஆய்ந்தனர்.

காலண்டரில் எவ்வாறு குறிப்பிடுவது என்ற ஆய்வில் மேலைத்தேச


மரபில் மதகுருமாரும் மன்னர்களும் ஈடுபட்டனர். காரணம் என்ன
என்ற அறிவியல் ஆய்வில் வானியலார்(Astronomers)ஈடுபட்டனர்.

பூமி சூரியனைச் சுற்றி வரும்போது ஒரே பாதையில் தொடர்ந்து


சுற்றாமல் 360 டிகிரியையும் சுற்றி முடிப்பதற்கு முன் அடுத்த
சுற்றுக்கான பாதை மாற்றத்தில் இறங்குவதால் இந்த விலகல்
உண்டாகிறது என விளக்கினர். எது எவ்வாறிருப்பினும் அந்த
விலகல் அளவை இன்றுவரை துல்லியமாகக் கணக்கிட முடியாமல்
திணறிக் கொண்டே உள்ளனர் என்பது கவனத்தில் கொள்ள
வேண்டிய ஒன்றாகும்.

இந்த விலகலால் உண்டாகும் கணிதச் சிக்கலை இந்தியப் பாரம்பரிய


முறையில் அமைந்த வானியல் கணித முறைப்படி தீர்த்து வைக்கும்
ஆய்வில் பேராசிரியர் கே. சீனிவாசராகவன் பல வருடங்களாக
ஈடுபட்டு வந்தார். இந்த ஆய்வை அகலப்படுத்தும் நோக்கில்
அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் அவர்களின் முயற்சியால்
1979 ல் சென்னை எத்திராஜ் கல்லூரியில் 'வரலாற்றுக்கு உதவும்
வானியல்'(Astronomy as Aid to History) என்ற தலைப்பில் ஒரு
கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கைத் தொடர்ந்து வி.
ஜி. இராமச்சந்திரன், ஜி. எஸ். சம்பத் ஐயங்கார், என். பி. இராமதுரை
ஆகியோர் வாயிலாக அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம்
அவர்கள் இந்த ஆய்வினை முன்னெடுத்து வருகிறார்.

இந்திய அறிவியல் பாரம்பரியம்

விளைவுகளின் (Effects) அடிப்படையில் கோட்பாடுகளை


உருவாக்குவது இந்திய அறிவியல் பாரம்பரியம் ஆகும். இது
விளைவில் இருந்து அதை ஏற்படுத்தும் உருவைக் கண்டறியும் (From
Effects to Existence ) மரபாகும்.

பூமியின் மேல் அதைச் சுற்றியுள்ள விண்ணுருக்கள் (Astronomical


Bodies)ஏற்படுத்தும் தாக்கத்தை விளக்குவதற்காக பன்னிரு
பாகங்களாகப் பகுக்கப்பட்ட ஒரு கட்டத்தினால் கிரக நிலைகளை
விளக்கும் வானியல் கணித முறை ஒன்றினை நம் முன்னோர்
உருவாக்கினர்.

மேலை தேச அறிவியல் மரபில்

1. பூமியும் பிற கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன.

2. தானே ஒளிரும் விண்ணுருக்கள் நட்சத்திரம்(Star)ஆகும். எனவே


சூரியனும் ஒரு நட்சத்திரமே.
3. தானே ஒளிராது தனக்கென ஒரு பாதையில் சூரியனைச் சுற்றும்
விண்ணுருக்கள் கோள்(Planet)ஆகும்.

4. தானே ஒளிராது சூரியனைச் சுற்றுவதோடு இன்னொரு


கோளையும் சுற்றிவரும் விண்ணுருக்கள் துணைக்கோள் ஆகும்.
எனவே சந்திரன் ஒரு துணைக்கோள் ஆகும்.

இவ்வாறு உருக்களை வரையறை செய்து கொண்டு வானிலிருந்து


உண்டாகும் மாற்றங்களைக் கணிக்க முயல்கின்றனர் அறிவியலார்.
இந்த அறிவியல் மரபு உருக்களில் இருந்து விளைவுகளை (From
Existence to Effect)கணிக்கும் மரபாகும்.

ஆனால் இந்திய மரபுப்படி அறிவியலார் வரையறுக்கும் நட்சத்திரம்,


கோள், துணைக்கோள் ஆகிய யாவும் பூமியில் ஏற்படுத்தும் விளைவு
என்ற நோக்கிலேயே வானியல் ஆய்வுக் கோட்பாடு
வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன்,


வெள்ளி, சனி ஆகிய ஏழு கிரகங்களும் பூமியில் ஏற்படுத்தும்
தாக்கத்தை அளந்தறியும் கட்டம் பூமியை மையத்திலும் மேலே
கூறிய ஏழு கிரகங்களும் பூமியைச் சூழ இருப்பதாகவும் கருதி
வடிவமைக்கப்பட்டுள்ளது.

சூழவுள்ள 360 டிகிரி வட்டப்பாதை 12 பாகங்களாக அதாவது


ஒவ்வொரு பாகமும் 30 டிகிரி எனப் பகுக்கப்பட்டுள்ளது. இந்த 12
பாகங்களே 12 ராசிகள் எனப் பெயரிடப்பட்டுள்ளன.
இந்த 12 பாகங்களும் ஒவ்வொரு ராசியும் 9 பாதங்கள் என மேலும் 108
பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அந்த 108 பாகங்களும்
நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள் என 27 நட்சத்திரங்களும் வரையறை
செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு நட்சத்திரமும் பல நட்சத்திரங்களின்
கூட்டமாகும். அந்தக் கூட்டத்தின் தோற்றத்தை ஒட்டியே அவை
பெயரிடப்பட்டுள்ளன. அவையே அசுபதி (அஸ்வினி) முதலாக
ரேவதி வரையுள்ள 27 நட்சத்திரங்கள் ஆகும்.

பூமியைச் சுற்றியுள்ள நட்சத்திரங்களையும் கோள்களையும்


வானத்தில் கண்கொண்டும் தொலைநோக்கி முதலான அறிவியல்
கருவிகள் கொண்டும் காணலாமேயன்றி அவற்றை இந்திய
வானியல் மாதிரியுரு(Model)விளக்குவது போல் பூமியை மையமாக
வைத்து இயங்குவதைக் காண முடியாது. விண்ணில் அவை
சூரியனை மையமாக வைத்தே இயங்குகின்றன.

வானியலும் ஜோதிடமும்

இவ்வாறு விண்ணில் கண்டறியப்படும் ஒழுங்கிலிருந்து மாறுபட்டு


அமைந்ததால் நமது இந்தியப் பாரம்பரிய முறையில் அமைந்த
மாதிரியுருவை வானியல் கோட்பாடு என அறிவியலார்
ஏற்றுக்கொள்வதில்லை. இதைப் போலி விஞ்ஞானம்(Pseudo
Science)எனச் சிலர் வரையறுப்பர்.

ஆனால் கிரக நிலைகளை அளந்தறிவதில் நமது முறை நேர்த்தியாக


அமைந்துள்ளதை யாராலும் மறுக்க முடியவில்லை. இதனால் இந்த
வானியல் கோட்பாட்டை ஜோதிடவியல்(Astrology) கோட்பாடு என
வகைப்படுத்திக் கூறுவர். அதன் பின்னரும் ஜோதிடவியலை
அறிவியல் என ஏற்றுக்கொள்வதா கூடாதா என்ற வாதம் தொடர்ந்து
கொண்டேயிருக்கிறது. அதாவது 'உருக்களிலிருந்து விளைவு(From
Existence to Effects)என்பது மேலைத்தேச அறிவியல் மரபாகவும்,
'விளைவுகளிலிருந்து உருக்கள் (From Effects to Existence)' என்பது
இந்திய பாரம்பரிய அறிவியல் மரபாகவும் இருப்பதாலேயே இந்த
மறுப்பு நீடிக்கிறது. இன்று இந்தக் கடுமை ஒரளவு தளர்ந்து
உலகெங்கும் உள்ள பல பல்கலைக்கழகங்கள் இந்திய
பாரம்பரியத்தில் வந்த வானியல் கோட்பாட்டை ஜோதிடவியல்
என்ற பெயரில் தனித்துறையாக கல்வியில்
சேர்த்துக்கொண்டுள்ளன.

டால்டனின் அணுக்கொள்கை, தாம்சனின் அணுக்கொள்கை ஆகியன


பொருத்தமற்றவை என இன்று புறந்தள்ளப்பட்டுவிட்டன. வெறும்
கற்பனையாக அமைந்த இந்த விளக்கக் கோட்பாடுகளை அறிவியல்
என ஏற்றுக் கொண்டு பின்னர் பொய் என மறுக்கும் அறிவியல்
உலகம் ஏன் இந்தியப் பாரம்பரியத்தில் வந்த பஞ்சாங்க கணித
முறைகளை மட்டும் முழுமையாக மறுதலிக்க வேண்டும் என்பது
புதிராகவே உள்ளது. இந்திய மரபை தனியொரு அறிவியல் மரபாக
மேலைத்தேச அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்ள வகை செய்யுமாறு
அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் தலைமையில்
ஆய்ந்தறியப்பட்ட நமசிவாய வானியல் (நவா)
வடிவமைக்கப்பட்டுள்ளது.

அறிவியலில் வழங்கும் காலம் என்பது சுருங்கவும் விரியவும்


கூடியது எனக் கண்டோம். இதனால் அறிவியல் காலம் (Scientific time)
என்பதை பரிமாணக் காலம் (Dimensional time) என வரையறுக்கலாம்.
இதுபோல் காலம் என்பது பல்வேறு துறைகளிலும் மாறுபட்ட
பொருள் வரையறையில் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்து
கொள்வது 'வானியலில் காலம்' என்பதைப் புரிந்து கொள்ள
அவசியமாகிறது. பல்வேறு துறைகளிலும் வழங்கும் மாறுபட்ட
காலங்களில் சில வருமாறு.

1.கடிகாரக் காலம் (Clock time)


தொடக்க காலத்தில், ஒரு சூரியோதயம் தொடங்கி அடுத்த
சூரியோதயம் வரையுள்ள காலத்தை அளப்பதற்கே கடிகாரம் எனும்
கருவி உருவாக்கப்பட்டது. காலப்போக்கில் பயன்பாட்டு நோக்கில்
காலம் என்பது ஒரு நள்ளிரவு முதல் அடுத்த நள்ளிரவு வரை எனக்
கருதப்பட்டது; பின்னர் ஒரு குறிப்பிட்ட நேரம் முதல் அடுத்துவரும்
அக்குறிப்பிட்ட நேரம் வரையுள்ள 24 மணி நேர அளவு ஒரு நாள் எனக்
கருதப்பட்டது. இன்று சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலும்
வழங்கும் பகல், இரவோடு 24 மணிநேர அளவு மாறுபடுவதால்
நள்ளிரவு 12 மணியை '00' மணி எனக்கொண்டு தொடரும் கடிகார
நேரத்தை 23;59;59 (23 மணி 59 நிமிடம் 59 செக்கண்ட்) வரை
தொடர்ச்சியாக குறிப்பிடுகிறோம்.

ஆதலால் கடிகாரக்காலம் என்பதை நாம் 'நடைமுறையில்


செயல்பாடுகளை வரிசைப்படுத்திக் கொள்வதற்கு உதவியாகப்
பயன்படும் ஒரு சீரான வேகத்தில் இயங்கும் ஒரு கருவியின்
இயக்கம்' எனப் புரிந்து கொள்ளலாம்.

2.காலண்டர் காலம் (Calendar time)

ஒரு உத்திராயணத்திலிருந்து (Spring Equinox) அடுத்துவரும்


உத்திராயணம் (Spring Equinox) வரையுள்ள நாட்களின் எண்ணிக்கை
எனக் காலண்டர் காலக்கணிப்பு ஆரம்பமானது. இந்த நாட்களின்
அளவு ஓர் ஆண்டு என வரையறுக்கப்பட்டது.

ஓர் ஆண்டில் வழங்கும் நாட்களின் எண்ணிக்கை மாறாமல்


இருக்குமாறு காலண்டர் பயன்படுத்தப்படுகையில் ஆயணம் (Equinox)
உருவாகும் நாள் அதே தேதியில் தொடரவில்லை என்பது
அறியப்பட்டது. அதாவது வருடத்தில் 2 நாட்கள் இரவுப் பொழுதும்
பகல் பொழுதும் சமஅளவில் வழங்கும் ஆயண நாட்களாக (Equinox
days) அமைகிறது. இந்த ஆயண நாளில் ஒன்று மார்ச் 21 (Spring Equinox)
அன்றும் மற்றது செப்டம்பர் 21 (Autumn Equinox) அன்றும் நிகழ்ந்தது.
ஜூலியன் காலத்தில் மேலே கூறியவாறு உண்டான ஆயண நாட்கள்
கிரிகோரியன் காலத்தில் முறையே மார்ச் 11 எனவும் செப்டம்பர் 11
எனவும் மாறுபட்டு அமைந்தன. இதனால் கிரிகோரியன் ஆயண
நாட்கள் மார்ச் 21 ஆகவும், செப்டம்பர் 21 ஆகவும் அமையுமாறு
காலண்டரில் வழங்கும் நாள் வரிசையை மாற்றி அமைத்தார்.
இதற்காக 15 நாட்களின் எண்ணிக்கையை காலண்டரிலிருந்து
குறைத்தார்.

கிரிகோரியன்

இந்த மாற்றத்தினால் தொடர்ச்சியாக வரும் நாட்களின்


எண்ணிக்கையை அளவிடுவதற்குப் பயன்படும் கருவியாக
காலண்டர் இல்லாமல் போனது. அதாவது, காலண்டர் காலத்தால்
ஒரு வரலாற்று நிகழ்வு குறிக்கப்பட்டாலும் அது இன்றிலிருந்து
எத்தனை நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்தது என்பதை காலண்டரில்
உள்ள நாட்களை எண்ணி சரியாகக் கணிக்க முடியாது. இதற்கு
அவ்வப்போது காலண்டரில் செய்யப்பட்ட சீரமைப்புக்
கணிப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

ஆதலால் காலண்டர் காலம் என்பது பூமி சூரியனை ஒருமுறை சுற்றி


வர எடுக்கும் நாட்களின் எண்ணிக்கை அடிப்படையில் அமைந்தது
எனலாம். ஆயினும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் லீப் வருடக்
கணக்கினால் 366, 365 என ஓர் ஆண்டில் வழங்கும் நாட்களின்
எண்ணிக்கை மாறுபடுகிறது.

எனவே முடிந்த முடிவாகக் கூறுகையில் காலண்டர் காலம் என்பது


நாம் 'நடைமுறையில் செயல்பாடுகளை வரிசைப்படுத்திக்
கொள்வதற்கு உதவியாகப் பயன்படும் ஒரு நாள்ஒழுங்கு' என்றே
கொள்ள வேண்டியுள்ளது.
இந்த நாள்ஒழுங்கு நாள், வாரம், மாதம், ஆண்டு எனும் அலகுகளால்
காலத்தை அளவிடுகிறது. ஒரு நாளில் வழங்கும் உட்பொழுதை
செக்கண்ட், நிமிடம், மணி என கடிகாரம் அளவிடுகிறது.

3.ஜோதிட காலம் (Astrological time)

ஜோதிடத்தில் காலம் என்பது ஒருவன் பிறந்த நேரம் அன்றைய


சூரியோதய நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் அன்றைய
கிரகநிலை மற்றும் லக்னம் ஆகியவற்றைக் கணித்து அவனுடைய
வாழ்க்கை பற்றி எதிர்வுறுவதற்கு (Predict) ஏற்றவாறு
வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்பவே தெசா, புத்தி முதலான
காலங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.

இதனால் ஜோதிடவியல் காலம் என்பதை எதிர்வு கூறும் காலம்


(Prediction time) எனத் தனியாக வரையறுத்துக் கொள்ள
வேண்டியுள்ளது. இந்த ஜோதிடவியல் காலம் கிரகநிலை
என்னுமளவில் வானியல் காலத்துடனும் (Astronomical time) பிறந்த
நேரம் என்னுமளவில் காலண்டர் காலம் (Calendar time) மற்றும்
கடிகாரக் காலம் (Clock time) ஆகியவற்றுடனும்; t தெசா, புத்தி
என்னுமளவில் தனக்கே உரிய தனிப்பட்ட காலக்கணிப்புடனும்
(Prediction time) இணைந்த ஒன்றாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

4.பஞ்சாங்க காலம் (Pechanga time)

பஞ்சாங்கம் என்பது 1. நட்சத்திரம் 2.திதி 3.யோகம் 4.கரணம் 5.வாரம்


ஆகிய 5 உறுப்புகளின் அடிப்படையில் காலத்தைக் கணிக்கிறது.
இந்தக் கணிப்பு சமயச் சடங்குகளை (Religious rituals) முக்கியமாக
இந்து மதச் சடங்குகளை (Hindu rituals) நிகழ்த்துவதற்கு உகந்த
காலத்தைக் கணிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இதனால்
பஞ்சாங்கக் காலம் என்பதை சடங்குக் காலம் (Ritual time) என
வரையறுக்கலாம்.

5.மொழிக் காலம் (Language time)


மொழியில் காலம் என்பது நிகழ்வுகளின் வரிசையையும்,
தன்மையையும் குறிப்பதாக அமைந்துள்ளது.

நிகழ்காலம் என்பதை ஆங்கிலச் சொல்லான Present என்பது குறிக்கும்


பொருளில் கொள்ளக்கூடாது. 'நிகழ்' அதாவது ஒரு செயல் நிகழும்
காலம் என்றே பொருள் கொள்ள வேண்டும். அந்த நிகழும் காலம்
ஒருவன் ஒன்றைப் பற்றி எடுத்துப் பேசும் காலமாகவோ அதற்கு
முந்திய காலமாகவோ இருக்கலாம். அந்த நிகழ் காலத்தின்
எல்லையையும் பேசுபவன் விரும்பியவாறு வரையறை செய்து
கொள்ளலாம். எவ்வாறெனில் 'நான் உண்பதற்கு முன் அவன்
சென்றுவிட்டான்' என்பதில் 'உண்ணும் பொழுது' எனும் சில
மணித்துளிகள் நிகழ்காலம். 'நான் வாழ்வதற்கு முன் அவன்
வாழ்ந்தான்' என்பதில் 'வாழும் பொழுது' எனும் நீண்ட வயதுப்
பொழுது நிகழ்காலம்.

தொடக்கம் - தொடர்ச்சி - முடிவு ஆகிய மூன்று தன்மைகளும்


மொழியில் காலக் குறிகளால் வெளிப்படுத்தப்படுகின்றன.

அவன் விளையாடிக் கொண்டிருக்கிறான்' என்பதில் உள்ள


'கொண்டிரு' என்பது தொடர்ச்சியைக் குறிக்கிறது. 'அவன்
விளையாடிக் கொண்டிடேயிருக்கிறான்' என்பதில் உள்ள
'கொண்டேயிரு' என்பது தொடர்ச்சியோடு அந்தச் செயல் தொடங்கிய
காலம் பற்றிய உணர்வையும் குறிப்பால் உணர்த்துகிறது.

ஆதலால் மொழிக்காலம் என்பதை வெளிப்படுத்தப்படும் நிகழ்வின்


வரிசை மற்றும் தன்மை (Expressive Order and Nature of the Event) என
வரையறுக்கலாம்.

6.வரலாற்றுக் காலம் (Historical time)

வரலாறு என்பது தொடர்ச்சியான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தத்


தொடர்ச்சி முன்னோக்கியும் பின்னோக்கியும் முடிவில்லாமல்
செல்லக் கூடியது. இந்த வரிசையை வெளிப்படுத்த இயேசுநாதர்
பிறந்த வருடத்திலிருந்து கி.மு (கிறிஸ்துக்கு முன்) மற்றும் கி.பி
(கிறிஸ்துக்கு பின்) என முறையே முன், பின் வரிசைகளை
வகுத்துள்ளனர். இதற்கெனத் தமிழ் மரபில் திருவள்ளுவரை
மையமாக வைத்து ஒரு வரிசையை ஏற்படுத்தியுள்ளனர்.
உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றுக் காலக்கணிப்பு
வரிசையாக கி.மு - கி.பி முறையே வழங்கி வருகின்றன.

அருட்செல்வர். டாக்டர்.நா.மகாலிங்கம்

ஆதலால் வரலாற்றுக்காலம் என்பதை 'முன்வரிசை தொடங்குமிடம்


பின்வரிசை' என அமையும் தொடர் வரிசை என வரையறுக்கலாம்.
பொதுவாக இந்த வரிசையை அளந்தறியும் கருவியாக காலண்டர்
காணப்படுகிறது. ஆனால் இந்த வரலாற்றுக் கால வரிசையை
அளந்தறியும் கருவியாக வானியல் காலத்தை (Astronomical time)
பயன்படுத்துவது பற்றிய ஆய்வு பல வருடங்களாக அருட்செல்வர்.
டாக்டர்.நா.மகாலிங்கம் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு
வருகிறது; இந்த ஆய்வின் பயனாக 'வானியல் மூலம் வரலாறு
காண்போம்' என்ற தலைப்பில் என்.பி.இராமதுரை அவர்கள் எழுதிய
நூலொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

7.வானியல் காலம் (Astronomical time)

வானியல் காலம் பற்றிய அறிவில்லாமல் சூரிய கிரகணம், சந்திர


கிரகணம் போன்ற வானியல் நிகழ்வுகள் பற்றியும் பூமியில் ஏற்படும்
காலநிலை மாற்றங்கள் பற்றியும் அறிந்து கொள்ள முடியாது.
கெப்லர்

வானியல் காலம் என்பது சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள்,


துணைக்கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில்
அறியப்படும் ஓர் இயக்க ஒழுங்கு (Functional Order) ஆகும்.

இந்த இயக்க ஒழுங்கை தொலைநோக்கி (Telescope),


செயற்கைக்கோள் (Satellite) முதலான கருவிகள் வாயிலாக அறிந்து
சூரியனை மையமாக வைத்துக் கணிப்பது மேலைத்தேச வானியல்
மரபு (Western Astronomical Tradition) ஆகும்.

மாறாக இந்த இயக்க ஒழுங்கு பூமியில் ஏற்படுத்தும் தாக்கத்தை


அறியும் பொருட்டு பூமியை மையமாக வைத்துக் கணிப்பது இந்திய
ஜோதிடவியல் மரபு (Indian Astrological Tradition) ஆகும்.

கலிலியோ

தொடக்க காலத்தில் மேலைத்தேசங்களிலும் ஜோதிடவியல் மரபே


காணப்பட்டது. கலிலியோ மற்றும் கெப்லர் ஆகியோரின்
வருகைக்குப் பின்னரே சூரியனை மையமாகக் கருதும் வானியல்
(Astronomy) ஆய்வு ஆரம்பமானது. ஆக, வானியல் என்பதே
ஜோதிடவியலின் அடிப்படையிலிருந்து பிரிந்த ஓர் ஆய்வுத்
துறையாக விளங்குகிறது என்றே கருத வேண்டியுள்ளது.

அதேசமயம் வானியல் காலம் என்பது ஜோதிடவியல் காலம்


என்பதிலிருந்து மாறுபட்டது என்பதையும் நாம் கவனத்தில்
கொள்ளவேண்டியுள்ளது.

வானியல் காலம் என்பது பூமி முழுவதையும் தன்னுள்


அடக்கியதால் பூமியைப் பொறுத்தவரை சார்பில்லாத் தனிநிலைக்
காலமாக விளங்குகிறது. மற்றக் காலங்களை எல்லாம் கடந்த
உயர்நிலைக் காலமாகவும் வானியல் காலம் அமைகிறது.

தனிநிலை, உயர்நிலை ஆகிய இரண்டு தன்மைகளாலும் வானியல்


காலத்தை அடிப்படையாக் கொண்டு செய்யும் கணிப்புகள்
நேர்த்தியில் சிறந்தவையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

எனவே வானியல் காலம் என்பதை நாம் கணித்தறியக் கூடிய


உயர்நிலை மற்றும் தனிநிலை காலம் (The Highest and Independent level
time) என வரையறுக்கலாம். உயர்நிலை என்பது தனிநிலையாகவும்
இருக்கிறது என்ற நிலையில் அறிவு தொடர்பான பல அடிப்படைச்
சிக்கல்களுக்கு தெளிவான விடை பெறவும் இந்த வானியல் காலம்
பற்றிய உணர்வு கண்டிப்பாக வழிகாட்டும்.

சைவசித்தாந்தம் போன்ற தத்துவத்துறைகளிலும் மேலாண்மை


(Management) போன்ற பிற துறைகளிலும் காலம் என்பது தனித்தனிப்
பொருள்களில் வரையறுக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே எந்தவொரு துறை அறிவையும் முழுமையாகப் பெறுவதற்கு


அத்துறையில் காலம் என்பது என்ன பொருளில்
பயன்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது
அவசியமாகிறது.

காலம் எனும் கூறு எல்லாத் துறைகளிலும் நேரடியாகக்


குறிப்பிடப்படாவிட்டாலும் காலம் எனும் கூறு இல்லாத துறை
இல்லை என்றே கூறலாம். எனவே எந்தத் துறை அறிவையும்
எளிதாகவும் தெளிவாகவும் பெற்றுக்கொள்ள அவ்வத் துறைகளில்
வழங்கும் காலம் என்பதன் பொருளைத் துல்லியமாகப்
புரிந்துகொள்வது பெருந்துணையாக அமையும்.

நவா

வானியல் காலம் என்பதை ஒரு குறிப்பிட்ட கிரகநிலையிலிருந்து


மறுபடி அதே கிரகநிலை தோன்றும் வரையுள்ள காலம் என
'நமசிவாய வானியல் (நவா)' வரையறை செய்துள்ளது. இந்தக் கால
அளவு 12,160 ஆண்டுகள் என அருட்செல்வர் ஐயா தலைமையில்
நிகழ்த்திய ஆய்வின் பயனாக என்.பி.இராமதுரை அவர்கள்
கண்டறிந்துள்ளார். இந்த 12,160 ஆண்டுகள் என்பது ஒரு மகாயுகம் என
இந்திய வேத மரபினை ஒட்டி வரையறை செய்யப்பட்டுள்ளது.

முழுச்சுற்றும் முழுமுதல் சுற்றும்

ஒத்த கிரகநிலை என்பது 12,160 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும்.


இந்தக் கால அளவை முழுமுதல் சுற்றுக்காலம் என அழைக்கலாம்.
அதாவது ஒரு முறை 360 டிகிரி சுற்றிவர எடுக்கும் காலத்தை
முழுச்சுற்றுக் காலம் எனவும் ஒத்த நிலை மீண்டும் உண்டாகும்
வரையுள்ள சுற்றுக்காலத்தை முழுமுதல் சுற்றுக்காலம் எனவும்
வரையறுக்கலாம்.

முழுமுதல் சுற்று எனும் நிலை வானில் உண்டாகும் கோள்களின்


சுற்று தொடர்பானது. ஆனால் முழுமுதல் சுற்றுக்கு ஆகும் காலத்தை
அளவிடும் கடிகார நேரம், காலண்டர் நேரம் ஆகியவை பூமி, சந்திரன்,
சூரியன், ஆகிய மூன்றின் சுற்று தொடர்பாகவே
வரையறுக்கப்படுகிறது.

ஒரு சூரியோதயம் முதல் அடுத்த சூரியோதயம் வரையுள்ள காலம்


ஒரு நாள் ஆகும். ஒரு நாள் என்பது 24 மணி நேரம் எனவும்; 1 மணி
என்பது 60 நிமிடம் எனவும்; 1 நிமிடம் என்பது 60 நொடி எனவும்
வரையறை செய்யப்பட்டுள்ளது. பூமி தன்னைத் தானே ஒரு முறை
சுற்றி முடிப்பதற்கு எடுக்கும் காலம் (60x60x24) 8640 நொடிகள் ஆகும்.

கால அளவுத்திட்டம்

இவ்வாறு கடிகாரக் காலமும், காலண்டர் காலமும் நொடி, நிமிடம்,


மணி, நாள், வாரம், மாதம், ஆண்டு ஆகிய அலகுகளால் தொடர்புற
அளவிடப்படுகின்றன. அந்த அளவீட்டு முறை வருமாறு

60 நொடி = 1 நிமிடம்
60 நிமிடம் = 1 மணி
24 மணி = 1 நாள்
7 நாள் = 1 வாரம்
4 வாரம் = 1 மாதம்
12 மாதம் = 1 வருடம்

வாரம் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி


எனத் தொடர்ந்து வரும். ஒரு மாதத்தில் 4 வாரங்கள் இருப்பினும் (7x4)
ஒவ்வொரு மாதமும் 28 நாட்கள் கொண்டதாக வரையறை
செய்யப்படுவதில்லை. மாதம் என்பது ஒரு பௌர்ணமியிலிருந்து
அடுத்த பௌர்ணமி வரையுள்ள நாட்களின் எண்ணிக்கை என்றே
அளவிடப்படுகிறது. ஆயினும் ஒவ்வொரு மாதத்திலும் வழங்கும்
நாட்களின் எண்ணிக்கை 29 முதல் 32 வரை மாறுபட்டு அமைகிறது.

இதேபோல் ஆண்டு என்பதும், 12 சம அளவு நாட்களை உடைய


மாதங்களின் பெருக்கமாக இல்லாமல் ஒரு உத்திராயணத்திலிருந்து
மறு உத்திராயணம் வரையுள்ள நாட்களின் எண்ணிக்கை அளவு
என்றே கணக்கிடப்படுகிறது.

கால அளவுத்திட்டத்தின் அடிப்படை

நொடி, நிமிடம், மணி என்பது கடிகாரச் சுற்றின் அடிப்படையிலும்;


நாள் என்பது பூமி தன்னைத் தானே சுற்றும் புவிச்சுற்று
அடிப்படையிலும்; மாதம் என்பது சந்திரன் பூமியைச் சுற்றும் சந்திர
பூமிச் சுற்றின் அடிப்படையிலும்; ஆண்டு என்பது பூமி சூரியனைச்
சுற்றும் சூரிய பூமிச் சுற்றின் அடிப்படையிலும் கணக்கிடப்படுகிறது.
வாரம் மட்டும் 7 நாட்களுக்கொரு முறை வழங்கும் தனிச் சுற்றின்
அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இதில் கவனத்திற்கொள்ள
வேண்டியது யாதெனில், கடிகாரச் சுற்றும், வாரச்சுற்றும் கணிப்பு
முறையில் கிரகங்களின் சுழற்சியோடு தொடர்புபடாத
தனிச்சுற்றுகள் என்பதே ஆகும்.

மேலே கூறிய கால அளவுகளுக்கெல்லாம் அடிப்படையாக


அமைவது நாள் எனும் அலகே ஆகும். நாள் என்பது பூமி
தன்னைத்தானே ஒரு முறை சுற்றி வர எடுக்கும் கால அளவாகும்.
இக்கால அளவே நுண்ணலகாக (Micro unit) பின்னோக்கி கடிகாரக்
காலமென்ற அளவீட்டிலும், பேரலகாக (Macro unit) முன்னோக்கி
வாரம், மாதம், வருடம் என்ற அளவீடுகளிலும் அளவிடப்படுகிறது.
இதிலிருந்து நாள் எனும் புவிச் சுழற்சியே கால அளவீட்டின்
அடிப்படையாக அமைவதை அறியலாம்.

காலம் எனும் அச்சு

காலம் என்பது ஒரு கருத்துமை (Abstract) பொருள் எனவும், அது


பல்வேறு துறைகளிலும் பல்வேறு வகையாக
வரையறுக்கப்படுகிறது எனவும், சென்ற இதழில்
விளக்கப்பட்டுள்ளது. இதை இன்னும் தெளிவாகக் கீழ்வருமாறு
புரிந்து கொள்ளலாம்.

காலம் என்பது தொடர்ச்சியைப் பேணும் முதுகெலும்பாகவும்


விளங்குகிறது.

நமது வாழ்வை எடுத்துக்கொண்டால் நாம் கருவான அல்லது பிறந்த


நாள் முதல் ஒவ்வொரு நொடியும் நிகழ்ந்தவற்றை காலத்தோடு
தொடர்புபடுத்தி வரிசையாகப் பதிவு செய்துள்ளோம். இந்தக்
காலவரிசைப்படி அமைந்த நிகழ்வுப் பதிவுகளின் தொகுப்பே மனம்
ஆகும். இந்த மனப் பதிவுகள், புலன் வழி வந்தவையாகவும், புதிய
சிந்தனைகளாகவும் ஏற்படுகின்றன.
இதேபோல் நமது உடலை எடுத்துக்கொண்டால் தொடர்ச்சியாக
நிகழும் இயக்கமான மூச்சை அதன் காலம் எனலாம். மூச்சுகளின்
எண்ணிக்கையாகவே உடலின் ஆயுளை சித்தர்கள்
கணித்தறிந்தார்கள் என்பது பலரும் அறிந்ததே.

எந்தவொரு இயக்கத்தையும் முதுகெலும்பாக எடுத்துக்கொண்டு பிற


செயல்பாடுகளை எல்லாம் அந்த ஒன்றோடு தொடர்புபடுத்திக்
கருதுவோமானால் அந்தப் பொது இயக்கமே குறிப்பிட
செயல்பாட்டுத் தொகுதியின் காலம் அல்லது அச்சு எனக் கருதலாம்.

பொருளாதாரத்தை எடுத்துக்கொண்டால் அங்கு நிகழும் எல்லாச்


செயல்பாடுகளையும் நாம் பணம் என்பதோடு தொடர்புபடுத்தி
இலாபமா, நட்டமா என்றே பார்க்கிறோம். இதனால் பணம்
பொருளாதாரத்தில் காலமாக அமைகிறது. இந்தக் காலத்தை
அளவிடும் கடிகாரத்தைப் பொறுத்தவரை இங்கிலாந்து கடிகாரம்
ஸ்டர்லிங் பவுண்ட் இந்தியக் கடிகாரம் ரூபாயை விட வேகமாக
இயங்குகிறது. இதனால், இங்கிலாந்து பணத்தின் மதிப்பு இந்தியப்
பணத்தின் மதிப்பை விட அதிகமாக உள்ளது. இந்தப் பண மதிப்பு
உலக நாடுகளின் பொருளாதாரக் கடிகாரக் காலங்களை
ஒன்றிணைப்பதன் மூலமே சர்வதேச அளவில்
நிர்ணயிக்கப்படுகிறது. இந்தப் பொருளாதாரக் காலங்களின்
இணைப்புக்கும், மதிப்புக்கும் காரணமான அடிப்படைகளை
ஆய்ந்தால் இன்றைய பொருளாதாரப் போக்கு பற்றிய பல புதிய
கண்டுபிடிப்புகளை நாம் செய்ய முடியும்.

இந்தப் பொருளாதார முள்ளந்தண்டுடன் சர்வதேச அளவில் இந்தியப்


பொருளாதாரம் பொருந்தாமல் தனித்து இருந்தமையால்
அண்மையில் உலகெங்கும் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்கம்
இந்தியப் பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதிக்கவில்லை.
இதனால் வளர்ந்த நாடுகள் இந்திய பொருளாதாரக் காலத்தைத் தமது
பொதுக்கால முதுகெலும்புடன் இணைத்துக்கொள்ள இன்று தீவிர
முயற்சி செய்கின்றன. உலகமயமாக்கலின் நோக்கமும் இதுவே
ஆகும். பொதுக்கால இணைப்பு என்பது நாடுகளின் பொருளாதார
ஏற்றத்தாழ்வை தாமே தீர்மானிக்க பன்னாட்டு நிறுவன
முதலாளிகளுக்கு வழி வகுக்கிறது.

புவிச்சுற்றே காலத்தின் அச்சு

புவிச்சுற்றின் அடிப்படையிலமைந்த நாள் என்பது கால அளவின்


முதுகெலும்பாக அமைவதால் புவியின் இயக்கத்தை மையமாகக்
கொண்டே வானியலில் காலம் அளந்தறியப்படுகிறது என
அறியலாம்.

இதனால் பூமியை மையமாக வைத்தே பிற கிரகங்களின் (சூரியன்


உட்பட) இயக்கங்களும் அளந்தறியப்படுகிறது எனக் கருதுவதில்
தவறில்லை. அது எவ்வாறெனில் புவிச்சுழற்சி எனும் ஒன்று
தடைப்படுமானால் நாம் கணக்கிடும் காலக்கணக்கு முழுவதும்
தடைப்படும். இன்னும் தெளிவாகக் கூறினால் புவிச் சுழற்சியில்
ஏற்படும் மாற்றம் வானியல் காலக்கணிப்பிலும் மாற்றத்தை
ஏற்படுத்தும். அதாவது புவிச்சுழற்சி வேகத்தில் ஏற்படும்
மாற்றத்தால் நாள் அளவு மாறுவதால் பிற காலக் கணிப்புகளும்
மாறும். அதே சமயம் இந்த மாற்றம் எல்லாக் கணிப்புகளிலும் ஒரே
மாதிரி அமைவதால் கண்டறிய முடியாத ஒன்றாகிப்போகிறது.
கடிகார வேகத்திலும் இந்த மாற்றம் புவியீர்ப்பு மாற்றத்தின் வழி ஒரு
சீரான மாற்றத்தை ஏற்படுத்துகிறது எனக் கருதவும் இடமுண்டு.
இதனால் காரணம் அறியப்படாத பல புவியியல் மாற்றங்களுக்கு
நம்மால் அறிய முடியாத மேலே கூறிய புவிச் சுழற்சி மாற்றம்
காரணமாகலாம் என ஊகிக்க இடமுண்டு எல்லா அளவுகளுக்கும்
இதுவே (நாள்) அடிப்படையாவதால் இந்தச் சுழற்சி மாற்றத்தைப் பிற
கிரகச் சுழற்சியோடு ஒப்பிட்டும் அளந்தறிய முடியாது.

கணிப்பொறியில் வழங்கும் எல்லாப் பதிவுகளும் அதனுள்ளே


இயங்கிக் கொண்டிருக்கும் கடிகாரக் காலத்தை முதுகெலும்பாகக்
கொண்டே நினைவில் (Memory) வைக்கப்படுகின்றன. நாள், மாதம்,
ஆண்டு என்ற கால வரிசையில் ஆண்டு என்பதை இறுதி இரண்டு
எண்களால் குறிப்பிட்டு கணியத்தில் கணக்குகளை
முன்னெடுத்தனர். இதனால் இறுதி எண்கள் 00 என வரும்போது
கணியம் அதை 1900 எனக் கருதுமா. 2000 எனக் கருதுமா என்ற சிக்கல்
உண்டானது. இதையே Y2K சிக்கல் எனப் பெயரிட்டு சரி செய்த
வரலாறு உலகறிந்த ஒன்றாகும்.

இதுபோல் இந்தப் பிரபஞ்சம் பிறந்த நாள் முதல் எவ்வாறு உள்ளது


என்பதைத் தொடர்புபடுத்திப் பார்க்கும் முதுகெலும்பாக இந்துக்கள்
பிரணவத்தை கருதுகின்றனர். பிரணவம் என்பது பிரபஞ்சம்
தோன்றிய கால முதல் வழங்கும் ஓர் ஒலித் தொடராகும். இந்த
ஒலித்தொடரையே ஓம் என்ற ஓசையாகக் கருதுகின்றனர். நாதத்தின்
எல்லையான நாதாந்தம் எனும் பிரணவத்தைக் கடந்து இருக்கும்
கடவுள் எனச் சிவபெருமான் கருதப்படுகிறார்.
Vazyvum meium

முக்தி இன்பம் எனும் பேரின்பத்தை நாடாத மனித வாழ்வு எவ்வாறு


இருக்கும் என்பதைப் பிறவிக்குக் காரணமாகும் மனப்போக்கின்
அடிப்படையில் திருவாசகத்தில் மாணிக்கவாசகர் விளக்கி உள்ளார்.

புவியோடு படியப் படைக்கப்பட்ட 'புல்' எதை விரும்பும். சற்றுப்


பூமியிலிருந்து உயர்வாகித் தன் தனித்துவத்தை வெளிப்படுத்த
விரும்பும்; அதனால் 'பூண்டு' ஆகும். பூண்டாகித் தனித்துவத்தை
வெளிப்படுத்திய பின் அது எதை விரும்பும்? தன் தனித்துவத்தைப்
பல இடங்களுக்கும் சென்று பலருக்கும் காட்ட விரும்பும்; அதாவது
ஒரே இடத்தில் நில்லாமல் பல இடங்களுக்கும் நகர்ந்து செல்ல
விரும்பும்; அதனால் அது 'புழு' ஆகும். புழுவாகி நகரும் போது
வெள்ளத்தில் அள்ளுண்டு போக நேர்வதால் இயற்கை
மாற்றங்களால் அசைக்க முடியாதவாறு இருக்க வேண்டும் எனப் புழு
விரும்பும்; அதனால் அசைக்க முடியாத உறுதியான 'மரம்' ஆகும்.
மரம் ஒரே இடத்தில் அசையாமல் நிற்பதால் அது மீண்டும் நகரவும்
உறுதியாக இருக்கவும் வல்ல ஒரு வடிவத்தை விரும்பும்; அதனால்
'விலங்கு' ஆகும். விலங்கு பல இடங்களுக்கும் நகர்ந்து செல்லும்
போது தாண்ட முடியாத ஆறு, கடல், மலை எல்லாம் தாண்டி நகர
ஆசைப்படும்; அதனால் 'பறவை' ஆகும். பறவையாகிப் பறந்து
திரியும் சுதந்திரத்தை அடைந்த பின் தனக்கு பிடிக்காத எதிரிகளைக்
கொல்லவும் பழிவாங்கவும் ஆசைப்படும்; அதனால் 'பாம்பு' ஆகும்.
பாம்பாகத் தான் பிறரைத் தாக்குவதால் பிற உயிரினங்களும் அதைத்
தாக்கும்; இதனால் யாராலும் தாக்கி அழிக்க முடியாத வடிவத்தை
எடுக்க விரும்பும்; அதனால் அது பெரிய மலை எனும் 'கல்' ஆகும்.
ஓடி, ஆடி, தாக்கி, தாக்கப்பட்டு எனப் பல நிலை உணர்வில்
இன்புற்றும், துன்புற்றும் வாழ்ந்த நிலை மாறி அசையாத கல்லாக
இருக்கிறேனே என்று எண்ணும்போது இவற்றுக்கெல்லாம் காரணம்
யாதென அறிய விரும்பும்; அதனால் 'மனிதன்' ஆகும். மனிதன்
ஆனதும் எல்லையில்லாமல் ஆசைகளை அனுபவிக்க விரும்பும்.
அதனால் 'பேய்' ஆகும். பேயாகி அனுபவிப்பதோடு நிற்காமல் தனக்கு
அடுத்தவர் மேல் செலுத்தும் அதிகாரமும் வேண்டும் என விரும்பும்;
அதனால் 'கணம்' ஆகும். பூத கணமாகிச் சிவபெருமானோடு
இருப்பதால் தனி அதிகாரம் இல்லையே எனக் கருதி தனக்குத் தனி
அதிகாரம் வேண்டும் என விரும்பும்; அதனால் 'அசுரர்' ஆகும்.
அசுரனாகி மிரட்டி ஆள்வதால் பெயர் கெட்டுப்போவது கண்டு
அதிகாரம் மட்டும் இருந்தால் போதாது பலரும் தன்னை விரும்பிப்
பணியும் அற்புத சக்தி இருக்க வேண்டும் என விரும்பும்; அதனால்
'முனிவர்' ஆகும். முனிவராகப் பலரும் பணியும் அற்புத சக்தியோடு
விரும்பியோர்க்கு அருளவும் வேண்டாதவர்க்கு சாபமிடவும்
முடிந்தால் மட்டும் போதாது, தன்னைப் பலரும் தெய்வமாகவும்
வணங்கவும் வேண்டும் என விரும்பும்; அப்போது அது 'தேவர்' ஆகும்.

இதையே சிவபுராணத்தில் மாணிக்கவாசகர்

"கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்"

எனப் பாடியுள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து பிறந்துழல்கிறேனே சுவாமி எனக்கு


விமோசனமே கிடையாதோ என்று எண்ணும்போது மீண்டும்
'மனிதன்' ஆவான். அவ்வாறு ஆகும்போது அவன் விடுதலை
அடைந்து சிவனார் திருவருளைப் பெற்று முக்திப் பேரின்பத்தில்
திளைத்திருப்பான் இதையே மாணிக்கவாசக சுவாமிகள்

"செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்"

என சிவபுராணத்தில் பாடியுள்ளார்.
இதையே நாம் எல்லோரும் இன்றும் நம் வாழ்வில்
செய்துகொண்டிருக்கிறோம் 'புல்' போல ஆதரவற்ற நிலையில்
கொஞ்சம் பணம் கிடைத்தால் 'பூண்டு' போல ஒரு 'குடிசை'
கட்டுவோம். பின் 'புழு' போல போய் வர ஒரு 'மிதிவண்டி' கேட்போம்.
பின் 'மரம்' போல உறுதியாக ஒரு 'கல்வீடு' கட்டுவோம். பின்
'விலங்கு' போல போய்வர ஒரு 'மகிழுந்து' கேட்போம். பின் 'பறவை'
போலப் பறந்து செல்ல 'விமானம்' கேட்போம். பின் 'பாம்பு' போல்
பகைவரைத் தாக்க 'காவலர்' கேட்போம். பின் பகைவன்
தாக்காதிருக்க 'கல்' போல் பெரிய அரண்மதில் மற்றும் காவலுடன்
கூடிய 'பங்களா' கட்டுவோம். பின் ஏன் தான் இப்படி இருக்கிறோம்
என்று சிந்திக்க ஆரம்பிக்கையில் 'மனிதன்' ஆவோம். ஆசை தீர
அனுபவிக்க ஐந்து நட்சத்திர விடுதி சென்று மது, மாது என
மூழ்குகையில் 'பேய்' ஆவோம். நமக்கு அதிகாரத்துடன் கூடிய பதவி
வேண்டும் எனத் தேடுகையில் 'கணம்' ஆவோம். அதிகாரம்
நம்முடைய விரும்பம் போல் கட்டுப்பாடின்றி இருக்க வேண்டும் என
விருபும்போது 'அசுரன்' எனும் உள்ளூர் போக்கிரி ஆவோம். போக்கிரி
எனும் கெட்ட பெயரை மாற்ற ஆன்மிக சக்தியைத் தேடி ஒரு
குருவிடமோ சாமியிடமோ செல்லும்போது 'முனிவன்' ஆவோம்.
நமக்குப் பின்னரும் நம்மை நாலுபேர் போற்ற வேண்டும் எனச் சில
புண்ணிய காரியங்களைச் செய்யும்போது 'தேவர்' ஆவோம்.
இவ்வாறு மாறி மாறி உழல்வோமே அல்லாமல் 'கண்டின்று
வீடுற்றேன்' என முக்திப்பேரின்பத்தைத் தேடாமலே சாவோம்,
தேடினால் உய்வோம்.

You might also like