வழிநடத்துவோரை அரசியல் தலைவர்கள் என்கிறோம், உலக அரசியலை அலசிப் பார்த்தால் பல தலைவர்கள் தங்கள் நாட்டை வழிநடத்துவதற்குப் பதிலாக சொந்த வீட்டை மட்டும் வழிநடத்திக் கொண்ட அவலம் தெரிய வரும் சுயநலத்துக்காகவும் புகழுக்காகவும் அரசியலை அசிங்கப்படுத்தும் அது போன்ற தலைவர்களுக்கு மத்தியில் அத்திப் பூத்தாற்போல்தான் ஒருசில பெரும் தலைவர்கள் தோன்றுகின்றனர். பொதுநலத்தை உயிராகப் போற்றி தங்கள் பணியை செவ்வெனச் செய்கின்றனர். தொடக்கப்பள்ளி வரை கல்விகற்ற ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரான கதையைக் கேட்டிருக்கிறீர்களா! அவர் ஆங்கிலம் தெரியாமல் அரசியல் நடத்தியவர்.
'கல்வியே தேசத்தின் கண்களைத் திறக்கும்' என்று கூறி பட்டித்
தொட்டிகளெல்லாம் பள்ளிக்கூடங்களைக் கட்டியவர் ஏழைப் பிள்ளைகளும் பள்ளிக்கு வரவேண்டும் என்பதால் புரட்சிக்கரமான மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தவர். தாம் முதலமைச்சராக இருந்தபோதும் வறுமையில் வாடிய தன் தாய்க்கு சிறப்புச் சலுகைகள் எதையும் தராதவர், சினிமாவில்தான் இதுபோன்ற கதாப்பாத்திரங்களைப் பார்க்க முடியும் என்று சொல்லுமளவுக்கு தமிழகத்தில் நம்ப முடியாத நல்லாட்சியைத் தந்து இறவாப் புகழ்பெற்ற அந்த உன்னத தலைவர் கர்ம வீரர் காமராஜரைப் பற்றி இங்கு காண்போம்.
1903 ஆம் ஆண்டு ஜீலை 15-ஆம் நாள் தமிழ்நாட்டின் விருதுநகரில்
குமாரசாமி நாடார் சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் காமராஜர், ஏழ்மையான குடும்ப ஏழ்மையின் காரணமாகவும், படிப்பு ஏறாத காரணத்தினாலும் அவரால் ஆறு ஆண்டுகள்தான் கல்வி கற்க முடிந்தது. 12-ஆவது வயதில் தனது தாய்மாமனின் துணிக்கடையில் வேலைப் பார்த்தார். அப்போது இந்தியா முழுவதும் சுதந்திரத் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அவருக்கு 15 வயதான போது ஜாலியன் வாலாபாக் படுகொலைப் பற்றிய செய்தி அவரின் காதுக்கு எட்டியது. அதே நேரம் காந்தி விடுத்த ஒத்துழையாமை இயக்க அழைப்பை ஏற்று தனது 16-ஆவது வயதில் அவர் காங்கிரஸ் கட்சியில் முழுநேர உறுப்பினராக சேர்ந்தார். அன்றிலிருந்து பல ஆண்டுகள் சவுகர்யம், பதவி, வசதி என்று பாராமல் கட்சிக்காக கடுமையாக உழைத்தார்
காமராஜர் பிறந்த பொழுது இந்திய நாடு ஆங்கிலேயரின் ஆட்சிக்கு
உட்பட்டிருந்த காலம் என்பதால் தனது இளம் வயது முதலே இந்திய விடுதலை போராட்டங்களில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். இதனால் தன்னுடைய 16 வது வயதில், அதாவது 1919 ஆம் ஆண்டு அப்பொழுது இந்திய விடுதலைக்கு போராடிக் கொண்டிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்.உணவில் சேர்க்கும் உப்புக்கு ஆங்கிலேயர்கள் வரி விதித்ததால் 1930 ஆம் ஆண்டு ராஜாஜி என அழைக்கப்படும் திரு. இராஜகோபாலாச்சாரி அவர்களின் தலைமையில் தமிழ்நாட்டின் வேதாரண்யம் பகுதிக்கு உப்பு காய்ச்ச செல்லும் பேரணியில் பங்கேற்ற காமராஜர், ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு 1931 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் கையெழுத்தான காந்தி- இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் காமராஜர் உட்பட அனைத்து சுதந்திரப்போராட்ட கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்திய நாடு விடுதலை பெற்ற பிறகு
தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற முதலமைச்சர்களில் திரு. “காமராஜர்” பல்வேறு வகையில் தனி சிறப்புகளை கொண்ட ஒரு மனிதராகவே பெரும்பாலான மக்களால் பார்க்கப்படுகிறார். தமிழகத்தில் காமராஜர் செய்த 9 ஆண்டு கால ஆட்சி தான் “தமிழகத்தின் பொற்காலம்” என எல்லோராலும் போற்றப்படுகின்றது. அந்த வகையில் நான் விரும்பும் தலைவர் என்ற வகையில் பெருந்தலைவர் காமராஜர் குறித்த ஒரு சிறப்பான கட்டுரையை (Kamarajar katturai in Tamil) இங்கு பார்ப்போம் வாருங்கள். காமராஜர் தோற்றம் கல்வி விடுதலை போராட்டம் கட்சி தமிழக முதலமைச்சர் திட்டங்கள் கிங்மேக்கர் இறப்பு நான் விரும்பும் தலைவர் காமராசர் தோற்றம் – காமராஜர் கட்டுரை Kamarajar katturai in Tamil: 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி தமிழ்நாட்டின் விருதுநகரில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார் காமராசர்(Kamaraj). பெற்றோர் இவருக்கு முதலில் காமாட்சி என பெயர் வைத்தனர். அந்தப் பெயரை பின்பு “காமராஜர்” என மாற்றினர். கல்வி கற்க முடியாத காரணம் காமராஜர் தனது ஆரம்பகால பள்ளிப்படிப்பை விருதுநகரில் சத்திரிய பாடசாலையில் படித்தார். 6 ஆம் வகுப்பு படிக்கும் போது யாரும் எதிர்பாராதவிதமாக, அவரது தந்தை இறந்து போனார். தன் வறுமைநிலை காரணமாகவும், குடும்பப் பொறுப்பை சுமக்க வேண்டிய காரணமாகவும் காமராஜர் தனது மேற்படிப்பை தொடர முடியாமல் போனது. பள்ளிக் கல்வியை தொடர முடியாத காமராசர், தனது மாமா சொந்தமாக வைத்திருந்த துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்து பணிபுரிய தொடங்கினர். இந்திய விடுதலை போராட்ட காமராஜர் பிறந்த பொழுது இந்திய நாடு ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலம் என்பதால் தனது இளம் வயது முதலே இந்திய விடுதலை போராட்டங்களில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். இதனால் தன்னுடைய 16 வது வயதில், அதாவது 1919 ஆம் ஆண்டு அப்பொழுது இந்திய விடுதலைக்கு போராடிக் கொண்டிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார். - உணவில் சேர்க்கும் உப்புக்கு ஆங்கிலேயர்கள் வரி விதித்ததால் 1930 ஆம் ஆண்டு ராஜாஜி என அழைக்கப்படும் திரு. இராஜகோபாலாச்சாரி அவர்களின் தலைமையில் தமிழ்நாட்டின் வேதாரண்யம் பகுதிக்கு உப்பு காய்ச்ச செல்லும் பேரணியில் பங்கேற்ற காமராஜர், ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கல்வியின் நாயகன் காமராஜர் :
தன் சிறு வயதில் வறுமை காரணமாக கல்வி கற்க முடியாமல் போனதை எண்ணி எப்போதும் வருந்திய காமராஜர், தனக்கு ஏற்பட்ட இந்த நிலை வேறு எந்த குழந்தைக்கும் ஏற்படக் கூடாது எனக் கருதி தமிழகத்தின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி மொத்தம் 17,000திற்கும் மேற்பட்ட பள்ளிகளை திறந்தார். அத்தோடு மட்டுமில்லாமல் அன்றைய காலத்தில் வறுமையின் காரணமாக சரியாக உணவு சாப்பிட முடியாமல் அவதிப்பட்ட பள்ளி குழந்தைகள் சாப்பிட, “மதிய உணவு திட்டம்” எனும் அற்புதமான திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தியாவில் இதுவரை தொடங்கப்பட்ட திட்டங்களில் சிறந்தது இது தான் என போற்றப்படுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் தமிழகத்தில் கல்வி கற்றோரின் எண்ணிக்கை 7 சதவீதமாக இருந்தது. காமராஜர் பள்ளி கல்வி துறையில் எடுத்த புரட்சிகரமான நடவடிக்கையால் கல்வி கற்றோரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. இதன் காரணமாக காமராஜர் “கல்வி கண் திறந்த காமராஜர்” என சிறப்பு பட்டதோடு அனைவராலும் அழைக்கப்படுகிறார்.
முடிவுரை
முறையான கல்விகூட இல்லாத ஒருவர் நாட்டின் நலனை மட்டுமே
குறிக்கோளாக கொண்ட ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகி இவ்வுளவும் செய்திருக்கிறார் என்றால் “துணிந்தவனால் எதையும் செய்ய முடியும் என்றுதானே பொருள்”