ஆத்மாவின் சுயசரிதம் 1-30

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

ஆத்மாவின் சுயசரிதம் - முகவுரை

பிரார்த்தனை 1:
தினமும் காலை, மாலை சூரிய உதயத்தின் போதும், சூரிய அஸ்தமனத்தின் போதும்
ஆதவனை துதித்து நமக்குத் தேவையான ஆற்றல்களைப் பெற வேண்டும்.
அணுக்களின் மும்மலம்- அத்தியாயம் 3 - பக்கம் 7
பிரார்த்தனை 2:
ஆதிபராசக்தியைப் பணிந்து வேண்டி மாயையை விலக்குங்கள் தாயே என்றும், ஈசனிடம்
சேர உதவுங்கள் என்றும் பிரார்த்தனை செய்யுங்கள்.
அணுக்களும் முப்பெரும் தேவியரும்- அத்தியாயம் 8 - பக்கம் 31
பிரார்த்தனை 3:
சரஸ்வதிதேவியின் கடாக்க்ஷம் பெற்ற உள்மூளை அணுக்களுக்கும் நன்றி உரைக்க
வேண்டும்.
அணுக்களும் முப்பெரும் தேவியரும் - அத்தியாயம் 8 - பக்கம் 32
பிரார்த்தனை 4:
நல்ல உணவினை உண்ணும்பொழுது 'இவ்வுணவானது என் உடல் முழுவதும் பரவி
நினைவாற்றலைப் பெருக்கித்தர கலைமகளை (சரஸ்வதி) வேண்டுங்கள்.
அணுக்களும் முப்பெரும் தேவியரும் – அத்தியாயம் 8 - பக்கம் 33, 39
பிரார்த்தனை 5:
துணை அணுக்களின் துணைக் கொண்டு நம்பிக்கையோடு இக்கனிகள் எனக்கு நல்ல
சக்தினை மட்டுமே கொடுக்கும் என்று முழு நம்பிக்கையோடு உட்கொண்டால் தீய
அணுக்களின் வீரியம் குறையும். கணையம் முழு திறமை கொண்டு வேலை செய்யும்.
நீங்களும் உணர்ந்து மற்றவர்களுக்கும் உணர்த்துங்கள். செயற்கை இனிப்பினை மட்டுமே
தவிர்த்தால் போதுமானது.
"நான் உண்ணும் இக்கனியானது என் அணுக்களுக்கு நல்ல ஆற்றலை மட்டுமே தர
வேண்டும்"."இதன் ஆற்றல்கள் யாவும் நன்றாக குருதியில் கலந்து அணுக்களைச்
சென்றடைய வேண்டும்". அதற்கு வாயு பகவான் உதவிட வேண்டும் என்று பிரார்த்தனை
செய்யுங்கள்.
உணவு முறை
1. உணவினை நேர் செய்து, சூரியனின் கீழ் நிற்க பழகினால் மட்டுமே பல மாந்தர்கள்
உய்வுறுவார்கள்.
அணுக்களின் பெருக்கம் - அத்தியாயம் 9 - பக்கம் 39
பிரார்த்தனை 6:
விநாயகரைப் பணிந்து, ஆதிபராசக்தியை வழிபட்டுப் "பின் நல்ல சத்துக்களை எல்லா
அணுக்களுக்கும் எடுத்துச் செல்லக் குருதிக்கு உதவ வேண்டும் என்று பிரார்த்தனை
செய்யுங்கள்.
உணவு முறை
2. உள்வட்ட அணுக்கள் வரை குருதி பாய பிராணவாயு அவசியம். துளசி நீரில்
அதிகமான பிராணவாயு கலந்திருப்பதால் அவை பருக வேண்டும்.
அணுக்களின் பெருக்கம் - அத்தியாயம் 9 - பக்கம் 39
பிரார்த்தனை 7:
நாளும் அகத்தியர் ஆற்றும் செயலுக்கு நன்றி உரைத்த வண்ணமே இருக்க வேண்டும்.
அணுக்களின் பெருக்கம் - அத்தியாயம் 10 - பக்கம் 42
பிரார்த்தனை 8:
மகாலட்சுமியின் துணையினை நாடி, வெல்லம் என்னும் இனிப்பு வகையில் உணவினைத்
தயார் செய்து, தேவியை மந்திரங்களால் வாழ்த்தி அவளுக்கு உணவளித்து பின்னர்
அவற்றை உண்டு வாருங்கள். அவை பணவரவினைத் தூண்டும்.
சிறிது வெல்லத்தை தேவிக்குப் படைத்து உண்டாலுமே போதுமானது. உத்தரவினை
அணுக்களுக்கு இடாது உண்ணுதலும் பலன் அளிக்காது ஏனெனில், முதல் வட்ட
அணுக்கள் உறிஞ்சு விடும் வாய்ப்புள்ளது. இரண்டாம் வட்ட அணுக்களையே சென்றடைய
வேண்டும் என உத்தரவிட்டு உண்ணுங்கள்.
அணுக்களின் அடுக்குகள் - அத்தியாயம் 10 - பக்கம் 42, 43
பிரார்த்தனை 9:
அத்தியாயம் 19 துவங்கும் பொழுது தொடர்ந்து 18 நாட்களுமே வெல்லத்தினால் செய்த
இனிப்பு வகை உணவுகளைத் உண்டு, இதன் சத்துக்கள் மகாலட்சுமியின் கீழ் இயங்கும்
அணுக்களுக்கு மட்டுமே செல்லக் கடவது என்று உத்தரவினை அணுக்களுக்குச்
செலுத்தி பின் உண்ண வேண்டும்.
உணவு முறை
3. விநாயகரை கலியுகத்தில் முக்கிய கடவுள். அவர் ஏற்கும் உணவுகள்
அனைத்தையும், அவருக்கு படைத்து மனித குலம் யாவரும் தீய அணுக்களின்
ஆற்றல் அற்றுப்போக வேண்டும் என்று எண்ணி அதனை உட்கொள்ள வேண்டும்.
ஆத்மாவின் சுயசரிதம் - அத்தியாயம் 10 - பக்கம் 44
பிரார்த்தனை 10:
பெண்கள் அனைவரும் நல்ல உணவினைப்படைத்து நல்ல எண்ணங்களோடு, “இவை
உண்ணும் அனைவருக்கும் நல்ல அணுக்களின் ஆற்றலுக்கே செல்ல வேண்டும் என்று
பிரார்த்தனை செய்யுங்கள்”.
அணுக்களின் அற்புத ஆற்றல் - அத்தியாயம் 11 - பக்கம் 49
பிரார்த்தனை 11:
நவராத்திரி விரதம்
அறியாமல் வெளீயே ஆற்றும் செயல்களுக்கே தேவியர் மகிழ்ந்து பலன் அளிப்பர் எனில்,
அறிந்தே ஆற்றும் செயல்களுக்கு இரட்டிப்புப் பலன் உண்டு. எனவே, நவராத்திரியின்
போது கீழுள்ள பிரார்த்தனைகளை கடைப்பிடியுங்கள்.
முதல் மூன்று நாட்கள்:
“ஆணவ அணுக்களை அழித்து அன்பெனும் நல்லணுக்களைப் பெருக்கிடுங்கள் தாயே”
என்று ஆதிபராசக்தியிடம் வேண்டுதல் வேண்டும்.
இரண்டாம் மூன்று நாட்கள்:
“நல்ல கர்மங்களின் பலன்களை நல்கிடும் செல்வ வளம் தரும் அணுக்களின் ஆற்றலைப்
பெருக்கிடுங்கள்” என்றும் தீய வினைப்பயன்களை அடக்கி ஆளும் அணுக்களை
அழித்துவிடு தேவி மகாலட்சுமி தாயே”.
மூன்றாம் மூன்று நாட்கள்:
கடைசி மூன்று நாட்களும் கலைமகளிடம், மாயை நீக்கி நல்ல அணுக்களின்
ஆற்றல்களை பெருக்கிடுங்கள் தாயே என்று பணிய உரைத்திடுங்கள்.
அணுக்களின் அற்புத ஆற்றல் - அத்தியாயம் 13 - பக்கம் 59
உணவு முறை :
4. தெய்வங்கள் யாவும் மனிதனின் மூளையில் ஆளும் அணுக்கள் எத்தகையது,
அதற்கு என்ன உணவு தேவை என நிர்ணயம் செய்தனர். கனிகள், காய்கள் மற்றும்
மூலிகைத் தாவரங்களையும் படைத்திட்டனர். நாமும் இவைகளை இறைவனுக்கு
படைத்து உட்கொள்ள வேண்டும்
அணுக்களின் அற்புத ஆற்றல் - அத்தியாயம் 13 - பக்கம் 59
பிரார்த்தனை 12:
விநாயகர், மகாவிஷ்ணு, மகாலட்சுமி, பிரம்மா, கலைமகள் (சரஸ்வதி), சிவன்,
ஆதிபராசக்தி - அந்தந்த தெய்வகள் ஏற்ற உணவுகளை படைத்து, அகத்தியரை
வணங்கி, பிரம்மாவிடம் பணிந்து நல்ல ஆற்றல்களைத் தேவியின் மூலம் தந்தருளுங்கள்
என்று வேண்டி உண்ண வேண்டும்.
“காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்”, என்று உங்கள் அணுக்களுக்கு ஆணை
பிறப்பியுங்கள். எனில் அகத்தியர் அளிக்கும் காற்று வேகத்தின் துணைக் கொண்டு
குருதியோட்டமானது எல்லாவித அடுக்கு அணுக்களுக்கும் சென்று சேரட்டும்.
ஆத்மாவின் சுயசரிதம் - அத்தியாயம் 14 - பக்கம் 63
உணவு முறை :
5. மா, பலா, வாழை, நன்கு சமைக்கப்பட்ட தானியங்கள் காய்கறிகள் மற்றும்
இலைகள், நல்லெண்ணத்தோடு சுத்தமாக சமைத்து உண்டு நல்ல
அணுக்களுக்குத் தொடர்ந்து உணவளியுங்கள். “நல்ல அணுக்களுக்கு இதன்
சத்துக்கள் சென்று சேரவேண்டும் தாயே” என மகாலட்சுமி, மகாவிஷ்ணு மற்றும்
தேவிகளை பிரார்த்தித்து உண்ணக் வேண்டும்.
ஆத்மாவின் சுயசரிதம் - அத்தியாயம் 18 - பக்கம் 78
அறிவுசார் கல்வி 1:
எந்தவித சிரமமும் இன்றி ஒவ்வொருவறின் புறவாழ்வு தானாகச் சீர்படும். ஆயினும் அக
வாழ்வு நேர்பட நல்ல குருவானவர் ஒவ்வொரு மானுடனுக்கும் அமைய வேண்டும்.
ஆனால் புறவாழ்வு அவரவர் கையில் உள்ளதால் அவரவர் தானே தன் வாழ்வைச் சீர்
செய்வதன் மூலம் அகம் தேடி இறைவனை அடைய முடியும்.
பலவித கனிமங்களின் பற்றாக்குறையுமே நோயினை உருவாக்கிடும். அவற்றைப்
போதுமான அளவு உண்டு வர நோய்விலகிடும்.
அணுவின் ஆற்றல் - அத்தியாயம் 19 - பக்கம் 81
பிரார்த்தனை 13:
முழுமையாக அகத்தியரைச் சரணடைந்து போற்றி நின்றால் உங்களுக்கு பொன் தேகம்
வழங்கிடுவார். யாவரும் இயன்ற அளவு அகத்தியர் நாமம் போற்றியே அனுதினமும்
நில்லுங்கள்.
அனுதினமும் 108 முறை “ஓம் ஸ்ரீ அகத்தியரே போற்றி” என்று பணிந்து அன்போடு
உரைக்க வேண்டும். மகாலட்சுமியை வணங்கி அவருக்கு அவ்வுணவினைச் சமர்ப்பணம்
செய்து உண்பது நலம் பயக்கும்.
உணவு முறை :
6. மா பலா வாழை இவற்றை உணவோடு கலந்து தேவியரை வேண்டி அணுக்களுக்கு
கட்டளையிட்டுமா உட்கொள்ள வேண்டும்.
கசப்பு மற்றும் துவர்ப்பு கொண்ட காய், கனிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்
இவை தீய அணுக்களை அழிக்கும்.
ஆத்மாவின் சுயசரிதம் - அத்தியாயம் 20 - பக்கம் 88
பிரார்த்தனை 14:
இனி பிறவியென்று ஒன்று இல்லை என்பதால், “மகாவிஷ்ணு, மகாலட்சுமியிடம் பணிந்து
வணங்கி அவரவர் சேர்த்து வைத்துள்ள செல்வங்கள் யாவும் இப்பிறவியிலேயே
முழுமையாக வெளிப்பட்டுவிட வேண்டும் என்றே வேண்டுங்கள்”.
காணிக்கையாக (ஏதாவது ஒரு மகாவிஷ்ணுவின் ஆலயத்தில்), அதாவது இவ்வளவு
காலம் காத்து நின்றதற்காக ஒரு சிறு செல்வத்தை, அதாவது சில நாணயங்களை
அவருக்கு வட்டிபோல் எண்ணி நன்றி பல உரைத்துச் செலுத்து விடுங்கள்.
ஆத்மாவின் சுயசரிதம் - அத்தியாயம் 20 - பக்கம் 89
பிரார்த்தனை 15:
அணுக்களின் உள் ஆற்றலைப் பிரிக்க சூடான காற்று தேவைப்படுகிறது. எனவே தூய
காற்றினை நல்கும் துளசி இலையையும் வெல்லத்துடன் படைத்து உண்ணுங்கள். இதனை
அகத்தியரை வணங்கி, மகாலட்சுமியையும் மகாவிஷ்ணுவையும் போற்றி உண்ணக்
கடவது.
அணுக்களின் தீர்மானம் - அத்தியாயம் 21 - பக்கம் 91
பிரார்த்தனை 16:
“நான் மேற்கொண்ட பற்பல பிறவிகளில் திரும்பி வராது என்று எண்ணி விட்டுச் சென்ற
செல்வங்களும், விரும்பாமல் அளித்து நின்ற தான தர்மங்களும் உடன் வெளிக்கிளம்பி
வரட்டும்”, என்றே ஆணையைப் பிறப்பியுங்கள். ஏனெனில் அவை அணுவின் உள்ளே
ஆழமாய் பதிந்துள்ளது.
அணுக்களின் பொற்காலம் - அத்தியாயம் 22 - பக்கம் 95
பிரார்த்தனை 17:
 எது வேண்டும் என்று எண்ணி அவர்கள் செயல்களைப் புரிகின்றனரோ அதை
அவர்கள் அச்செயல் முடிவடையும் வரை முழுமையாய் எண்ணியிருக்க வேண்டும்.
அவ்வாறாக எண்ண்ச் செயலாற்ற, அவர்களின் என்னத்தை நிறைவேற்றித்தரும்
ஆற்றல் கொணட அணுக்கள் யாவும் உள்ளிருந்து உந்தி வெளிவரும்.
 குடும்பத்தில் வசிப்பவர்கள் ஒருவருக்காக மற்றவர் பிரார்த்திக்கலாம் எனினும்
முழுமையாக அவை பலன் அளிக்காது. அவரவர் பசிக்கு அவரவரே உணவருந்த
வேண்டும். ஆனால் விதிவிலக்காக ஒரு தாயின் வேண்டுதல் மட்டும்
பிள்ளைகளுக்குப் பலனளிக்கும்.
 கூட்டுப் பிரார்த்தனை என்று மேற்கொள்ளும் பொழுது அனைவரும் ஒரே
எண்ணத்தோடு ஒரு செயல் நிறைவேற பிரார்த்தனை செய்வதால் அவர்கள்
அனைவரின் எண்ண அழுத்தமானது யாருக்காக, எதற்காகப் பிரார்த்திக்கின்றனரோ
அவருடைய அச்செயலை ஆற்றும் அணுவிற்குள் சென்று அழுத்தம் கொடுத்து உள்
அணுவைப் பிரித்து எடுக்கின்றது.

ஆத்மாவின் சுயசரிதம் - அத்தியாயம் 30 - பக்கம் 136


பிரார்த்தனை 18:
எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பதனையும், இறைவனை அடைவதே ஒவ்வொரு
மானிடனுக்கும் உண்மையான புகழைச் சேர்க்கும் என்பதனையும் சிறு பிராயம் தொட்டு
மானிடர்கள் கற்க வேண்டும்.
ஆத்மாவின் சுயசரிதம் - அத்தியாயம் 30 - பக்கம் 138
உணவு முறை :
7. மானிடர்கள் முதலில் நிதானமாகத் தரையில் ஆசனம் இட்டு அமர்ந்து, வாழை
இலை பரப்பி, அறுசுவை சாத்வீக உணவினை உண்டானேயானால் அவன்
கட்டாயமாக இறைவனை அடைவான் என்பதே நியதி.

You might also like