Professional Documents
Culture Documents
இந்தியாவில்
இந்தியாவில்
1977ல் இவர் இந்தியாவின் குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.அது இந்திரா காந்தியின் அவசர நிலை பிரகடன
காலம். விஜயலட்சுமி பண்டிட் அப்போது இந்திரா காந்திக்கு எதிராக குரல் கொடுத்தார். எனவே அவர் ஜனாதிபதியாக வெற்றி பெற
முடியவில்லை. அதன்பிறகு அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
டேராடூனில் உள்ள இல்லத்தில் அவர் ஓய்வுக் காலத்தை கழித்தார். அப்போது தனது வாழ்க்கை வரலாற்றை எழுதத் தொடங்கினார். "த
ஸ்கோப் ஆப் ஹேப்பினஸ் : ஏ பெர்சனல் மிமோயர்" என்ற பெயரில் அவரது வாழ்க்கை வரலாறு நூல் வெளியானது. இந்த நூலை எழுத
12 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். 1990ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி இயற்கை எய்தினார்.
சரோஜினி நாயுடு - இந்தியாவின் நைட்டிங்கேல்
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஓங்கி
ஒலித்த பெண் குரல் சரோஜினி நாயுடு. அன்றைய கால கட்டத்தில்
முக்கியமான அரசியல் செயல்பாட்டாளராகவும் கவிஞராகவும் விளங்கினார்.
1947: ஆகஸ்ட் 15, 1947ல், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தப் பின்னர், உத்தர பிரதேச ஆளுநர் ஆனார்.
நேரு மறைவிற்கு பிறகு லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அவரது அமைச்சரவையில் இந்திரா காந்தி
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால், லால்பகதூர் சாஸ்திரி திடீரென காலமாகவே
நாட்டின் இடைக்கால பிரதமராக குல்சாரிலால் நந்தா பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத்தொடர்ந்து, நாட்டின் 3வது
பிரதமராக, முதல் பெண் பிரதமராக இந்திரா காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார்.
1967, 1971 மற்றும் 1980-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மூன்று பொதுத் தேர்தல்களிலும் இந்தியாவின் பிரதமர் பதவியை
அலங்கரித்தார். வங்கிகளை தேசியமயமாக்கியது, மன்னர்களுக்கு மானியம் வழங்கும் நடைமுறையை ஒழித்தது, நிலச்
சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது, பசுமைப் புரட்சியின் மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்தது,
சிக்கிம் பகுதியை இந்தியாவோடு இணைத்தது, வங்க தேசத்திற்கு படை அனுப்பி, அந்நாட்டிற்கு விடுதலையை பெற்றுத்
தந்தது, அணு ஆயுத சோதனை நடத்தி இந்தியாவை அணு ஆயுத பலம் வாய்ந்த நாடாக உலகிற்கு பிரகடனம் செய்தது,
வெளியுறவுக் கொள்கையில் புதிய பாதையை வகுத்தது என இந்திரா காந்தியின் 15 ஆண்டுகால ஆட்சியில் அவரது
சாதனைகளை பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும்.
இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் அவசர நிலைப் பிரகடனம் ஒரு கரும்புள்ளியாக பார்க்கப்பட்டது. ஆனால் தவறை உணர்ந்து
மன்னிப்பு கேட்கிற நேர்மையும், அவசர நிலைப் பிரகடனத்தை ரத்து செய்துவிட்டு தேர்தலைச் சந்திக்கிற தைரியமும் இந்திராவுக்கு
இருந்தது. தேர்தலில் தோல்விக்குப் பிறகும் மூன்றே ஆண்டுகளில் மக்களிடம் இழந்த நம்பிக்கையை மீட்டெடுத்தார் அவர்.
1980 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி 374 இடங்களில் மகத்தான வெற்றியடைந்தது. ஆனால்
அச்சமயத்தில் இந்திரா காந்தி புதிய சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. பஞ்சாபில் சீக்கியர்கள் தனியாக காளிஸ்தான் கோரி
கிளர்ச்சி தொடங்கினார்கள். தேசத்தின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் பெரிய சவாலாக அந்த இயக்கம் வளர்ந்து வருவதாக
கருதியது அரசு.
1984-ம் ஆண்டில் பொற்கோவிலில் ஆயுதங்களை குவித்துக்கொண்டு பதுங்கியிருந்த சீக்கிய பிரிவினைவாதிகளை ‘ஆபரேஷன் புளு
ஸ்டார்’ என்ற பெயரில் ராணுவத்தினர் பொற்கோயிலுக்குள் நுழைந்து தாக்கியதன் மூலம் சீக்கியத் தீவிரவாதம் முடிவுக்கு வந்தது.
ஆனால் பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பியது சீக்கியர்கள் மத்தியில் சர்ச்சைகளையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
இந்திராவின் சீக்கியப் பாதுகாவலர்களால் அவரது உயிருக்கு ஆபத்து என்று உளவுத்துறை எச்சரித்தது. உயிரையே இழக்க
நேர்ந்தாலும் மதத்தின் அடிப்படையில் தனது பாதுகாவலர்களை மாற்ற இந்திரா காந்தி மறுத்துவிட்டார். இச்சூழலில், பொற்கோயில்
தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, இந்திரா காந்தியின் இரு சீக்கிய மெய்காவலர்களால் 1984ஆம் ஆண்டு அக்டோபர்
31ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். தேசம் பிளவுபட்டு விடக்கூடாது என்பதற்காக 66 வயதில் தனது உயிரையே அர்ப்பணித்தார்
இந்த 'இரும்புப் பெண்மணி'.
கிரண் பேடி
1989 ஆம் ஆண்டில் கிரண் பேடி நவஜோதி இந்தியா அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்..இந்த
தொண்டு நிறுவனம் போதைப் பொருள் அடிமைகள்,பெண்கள் அதிகாரம் போன்ற பிற சமூக பிரச்சனைகள் சந்திதுவந்தன....இந்தியாவின்
விஷன் ஃபவுண்டேஷனைத் தொடங்கினார..அது போலிஸ் சீர்திருத்தங்கள் ,சிறை சீர்திருத்தங்கள் ,பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும்
கிராம்ப்புற மற்றும் சமூக வளர்ச்சிக்கீக பணியாற்றி வந்தார்.2011 ஆகஸ்ட் மாதம் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தலமையிலான ஊழலுக்கு
எதிரான இந்தியாவில் கிரண் பேடி சேர்ந்தார்.அர்விந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து முக்கிய பிரமுகராக இருந்தார்.
சாதனை:
மாணவப் பருவத்தில் கவிதை ஓப்பிதல் ,நாடகம்,விவாத மேடை,பல பரிசுகளை வென்றுள்ளார்..அமிர்தசரஸ் கல்சா மகளிர் கல்லூரியில்
விரிவுரையாளாராக 2ஆண்டுகள் பணியாற்றினார்.இந்தியா காவல்துறையின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாக 1972ல் பணியில் சேர்ந்தார்
டேராடூன் அடுத்து மசூரியில் காவல்துறை பயிற்சியைத் தொடங்கினார் அந்த பிரிவில் பயிற்சி பெற்ற 80பேரில் இவர் ஒருவர்தான் பெண்.
சிறந்த டென்னிஸ் வீராங்களையும் கூட டென்னிஸ் போட்டியில் ஆசிய அளவிலும்,தேசிய அளவிலும் ஏராளமான பரிசுகள்,பதக்கங்களை
வென்றுள்ளார்.போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரியாக இருந்தபோது வீதி மீறி நிறுத்தப்பட்டிருந்த பிரதமர் இந்திரா காந்தியின் காரையே
கிரேன் வைத்து அப்புறப்படுத்திய அசாத்திய துணிச்சல் படைத்தவர் இவர் பணிபுரிந்த இடங்களில் குற்றங்கள் குறைந்தன.காவல்
துறையினறுக்கு பல்வேறு வசதிகளைப் செய்துதந்தார்..20ஆண்டுகளுக்கு மேல் காவல்துறையில் சேவையாற்றியுள்ளார்..சர்வதேச அளவில்
பேரும் புகழும் பெற்றார்.ஐ.நா சபையின் சிவிலியன் போலிஸ் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.போதை பொருள் தடுப்பு மற்றும்
ஓடுக்கப்பட்ட மக்கள் மேம்பாடுகளுக்காக இந்தியா விஷன்,நவஜோதி ஆகிய அமைப்புகளை நிறுவியுள்ளார்.
கிரண்பேடி கடந்துவந்த பாதை:
கிரண்பேடிஎழுதிய நூல்கள்: